நீர் பருகு
தண்ணீர் என்பது இந்த உலகத்தில் அதிகம் உள்ள ஒன்று. அதே போல நம் உடலிலும் அதிகமாக தேவைப்படுவதும் தண்ணீர் தான்.
தினமும் தண்ணீர் குடிப்பதை மறக்ககூடாது.
நம் உடலின் பல்வேறு செயல்பாடுகளுக்கு தண்ணீர் ம்டடுமே மிகவும் அவசியம். தாகம் எடுக்கும் வரை காத்திருக்காமல், நாள் முழுவதும் சிறிது சிறிதாக ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை, தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
*காலை எழுந்ததும் ஒரு டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். அது மிகவும் முக்கியம். வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது உடலை சுத்தப்படுத்தும்.
*வேலை செய்யும்போதும் இடையிடையே தண்ணீர் குடிக்க வேண்டும். பள்ளி குழந்தைகளும் ஒவ்வொரு வகுப்பு முடியவும் தவறாது நீரை பருக வேண்டும்.
*அதிக வெயில் அல்லது உடற்பயிற்சி இருக்கும் நாட்களில் திரவத் தேவையை கவனித்து அதற்கேற்றவாறு நீரை பருக வேண்டும்.
* அதிக சர்க்கரை உள்ள குளிர்பானங்களுக்கு பதிலாக தண்ணீர் அல்லது சர்க்கரை சேர்க்காத பானங்களைத் தேர்வு செய்வதும் தண்ணீரை பருகுவதற்கு சமம்.
சிறிய பழக்கம் என்றாலும், உடலுக்கு பெரிய பயன் என்பார்கள்.
எந்த உணவும் அதிக காய்கறியும் வீட்டில் இல்லாத சித்தாள் பணி செய்யும் மனிதர்கள் ஆரோக்கியமாக உடல்வலுவுடன் கற்களை சுமப்பது, தண்ணீரை அதிகம் பருகும் காரணம் மட்டுமே.
அதனால் நீரின்றி அமையாது உலகு மட்டுமில்லை. நம் உடலும்.
- 25 Forums
- 330 Topics
- 1,588 Posts
- 0 Online
- 420 Members
