<?xml version="1.0" encoding="UTF-8"?>        <rss version="2.0"
             xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
             xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
             xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
             xmlns:admin="http://webns.net/mvcb/"
             xmlns:rdf="http://www.w3.org/1999/02/22-rdf-syntax-ns#"
             xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/">
        <channel>
            <title>
									onlinetamilnovels.com Forum - Recent Posts				            </title>
            <link>https://onlinetamilnovels.com/community/</link>
            <description>onlinetamilnovels.com Discussion Board</description>
            <language>en-US</language>
            <lastBuildDate>Mon, 27 Jul 2026 03:42:38 +0000</lastBuildDate>
            <generator>wpForo</generator>
            <ttl>60</ttl>
							                    <item>
                        <title>RE: தகிக்கும் நிலவொன்று-17</title>
                        <link>https://onlinetamilnovels.com/community/%e0%ae%a4%e0%ae%95%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%b5%e0%af%8a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-praveena-thangaraj/%e0%ae%a4%e0%ae%95%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%b5%e0%af%8a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-17/#post-782</link>
                        <pubDate>Mon, 27 Jul 2026 03:20:44 +0000</pubDate>
                        <description><![CDATA[சூப்பர். .. சத்ரியன் வரனும்... இந்த ருத்ரா யதுநந்தன் இரண்டு பேரும் வேண்டாம். .. ஷ்ரத்தாவுக்கு ஜோடினா அது சத்ரியன் தான்]]></description>
                        <content:encoded><![CDATA[<p>சூப்பர். .. சத்ரியன் வரனும்... இந்த ருத்ரா யதுநந்தன் இரண்டு பேரும் வேண்டாம். .. ஷ்ரத்தாவுக்கு ஜோடினா அது சத்ரியன் தான்</p>]]></content:encoded>
						                            <category domain="https://onlinetamilnovels.com/community/"></category>                        <dc:creator>kothaihari</dc:creator>
                        <guid isPermaLink="true">https://onlinetamilnovels.com/community/%e0%ae%a4%e0%ae%95%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%b5%e0%af%8a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-praveena-thangaraj/%e0%ae%a4%e0%ae%95%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%b5%e0%af%8a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-17/#post-782</guid>
                    </item>
				                    <item>
                        <title>RE: தகிக்கும் நிலவொன்று-17</title>
                        <link>https://onlinetamilnovels.com/community/%e0%ae%a4%e0%ae%95%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%b5%e0%af%8a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-praveena-thangaraj/%e0%ae%a4%e0%ae%95%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%b5%e0%af%8a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-17/#post-781</link>
                        <pubDate>Mon, 27 Jul 2026 03:18:56 +0000</pubDate>
                        <description><![CDATA[தகிக்கும் நிலவொன்று.. !!எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்(அத்தியாயம் - 17)
நினைச்சேன், கார்த்திகா ஒண்ணுசத்ரியன் ஏற்பாடு பண்ணின ஆளா இருக்கணும், இல்லையாவினோத் ஏற்பாடு பண்ணின ஆளா இருக்கணும்ன்னு...எ...]]></description>
                        <content:encoded><![CDATA[<p dir="ltr">தகிக்கும் நிலவொன்று.. !!<br />எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்<br />(அத்தியாயம் - 17)</p>
<p dir="ltr">நினைச்சேன், கார்த்திகா ஒண்ணு<br />சத்ரியன் ஏற்பாடு பண்ணின ஆளா இருக்கணும், இல்லையா<br />வினோத் ஏற்பாடு பண்ணின ஆளா இருக்கணும்ன்னு...<br />என்னோட யூகம் சரியாயிடுச்சு.</p>
<p dir="ltr">அட ராமா ! சத்ரியன் ஹரிணியை கெடுத்ததே ஒரு கேவலம், இதுல அவனோட ரூபத்தை அப்படியே நியாபகம் வைச்சிருந்து ஷ்ரத்தா ராயனோட அவனோட உருவத்தை வைச்சு வரைந்ததா வேற சொல்லுறாள் ஹரிணி. இதை எப்படி எடுத்துக்கிறதுன்னே தெரியலை போங்க.</p>
<p dir="ltr">சேகரனையும் போட்டுத் தள்னிட்டாங்களா, அவனை எதுக்கு போட்டுத் தள்ளினாங்கன்னுத்<br />தெரியலையே ?</p>
<p dir="ltr">&#x1f60a;&#x1f60a;&#x1f60a;<br />CRVS (or) CRVS 2797</p>]]></content:encoded>
						                            <category domain="https://onlinetamilnovels.com/community/"></category>                        <dc:creator>CRVS2797</dc:creator>
                        <guid isPermaLink="true">https://onlinetamilnovels.com/community/%e0%ae%a4%e0%ae%95%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%b5%e0%af%8a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-praveena-thangaraj/%e0%ae%a4%e0%ae%95%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%b5%e0%af%8a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-17/#post-781</guid>
                    </item>
				                    <item>
                        <title>RE: தகிக்கும் நிலவொன்று-17</title>
                        <link>https://onlinetamilnovels.com/community/%e0%ae%a4%e0%ae%95%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%b5%e0%af%8a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-praveena-thangaraj/%e0%ae%a4%e0%ae%95%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%b5%e0%af%8a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-17/#post-780</link>
                        <pubDate>Mon, 27 Jul 2026 03:01:52 +0000</pubDate>
                        <description><![CDATA[Super sis nice epi semmaiya pogudhu story &#x1f44d; &#x1f44c; &#x1f60d; kutti paiyan nalla valandhutaney chathriyan vaarisu avana mathiri semma &#x1f970; &#x1f970;]]></description>
                        <content:encoded><![CDATA[<p>Super sis nice epi semmaiya pogudhu story &#x1f44d; &#x1f44c; &#x1f60d; kutti paiyan nalla valandhutaney chathriyan vaarisu avana mathiri semma &#x1f970; &#x1f970; </p>]]></content:encoded>
						                            <category domain="https://onlinetamilnovels.com/community/"></category>                        <dc:creator>Dharsinipriya</dc:creator>
                        <guid isPermaLink="true">https://onlinetamilnovels.com/community/%e0%ae%a4%e0%ae%95%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%b5%e0%af%8a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-praveena-thangaraj/%e0%ae%a4%e0%ae%95%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%b5%e0%af%8a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-17/#post-780</guid>
                    </item>
				                    <item>
                        <title>RE: மதுர ஜில்லா... மச்சானே!-46</title>
                        <link>https://onlinetamilnovels.com/community/%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0-%e0%ae%9c%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be-%e0%ae%ae%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a9%e0%af%87-praveena-thangaraj/%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0-%e0%ae%9c%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be-%e0%ae%ae%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a9%e0%af%87-46/#post-779</link>
                        <pubDate>Mon, 27 Jul 2026 03:01:45 +0000</pubDate>
                        <description><![CDATA[மதுர ஜில்லா மச்சானே !!எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்(அத்தியாயம் - 46)
அவரை நினைச்சு உரலை இடிச்ச கதையா, இனியன் மேல இருக்கிற கோபத்துல குழந்தையை கலைச்சிட்டா. இனியன் சொன்ன மாதிரி தண்டனை கொடுக்கணு...]]></description>
                        <content:encoded><![CDATA[<p dir="ltr">மதுர ஜில்லா மச்சானே !!<br />எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்<br />(அத்தியாயம் - 46)</p>
<p dir="ltr">அவரை நினைச்சு உரலை இடிச்ச கதையா, இனியன் மேல இருக்கிற கோபத்துல குழந்தையை கலைச்சிட்டா. இனியன் சொன்ன மாதிரி தண்டனை கொடுக்கணும்ன்னு நினைச்சிருந்தால், அவனுக்கு மட்டும் கொடுத்திருக்கணும்.<br />இப்ப கருவையும் கலைச்சிட்டு குற்றவுணர்ச்சியில ரெண்டு பேருமே புழுங்கிட்டிருக்காங்க.<br />வேகம் இருக்கிற அளவுக்கு ரெண்டு பேருக்குமே விவேகம் கிடையாது, ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டுங்கிற மாதிரி எல்லாம் நடந்திடுச்சு. இப்ப இதெல்லாத்தையும் ரெண்டு பேருமே சரி பண்ணனும். சரி பண்ண முடியாத தப்புன்னு எதுவும் இல்லைத்தானே. உட்கார்ந்து பேசினால் எல்லா விஷயத்துக்கும் ஒரு தீர்வு நிச்சயமா கிடைக்கும், இருக்கும்.</p>
<p dir="ltr">&#x1f600;&#x1f600;&#x1f600;<br />CRVS (or) CRVS 2797</p>]]></content:encoded>
						                            <category domain="https://onlinetamilnovels.com/community/"></category>                        <dc:creator>CRVS2797</dc:creator>
                        <guid isPermaLink="true">https://onlinetamilnovels.com/community/%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0-%e0%ae%9c%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be-%e0%ae%ae%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a9%e0%af%87-praveena-thangaraj/%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0-%e0%ae%9c%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be-%e0%ae%ae%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a9%e0%af%87-46/#post-779</guid>
                    </item>
				                    <item>
                        <title>தகிக்கும் நிலவொன்று-17</title>
                        <link>https://onlinetamilnovels.com/community/%e0%ae%a4%e0%ae%95%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%b5%e0%af%8a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-praveena-thangaraj/%e0%ae%a4%e0%ae%95%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%b5%e0%af%8a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-17/#post-778</link>
                        <pubDate>Mon, 27 Jul 2026 02:10:27 +0000</pubDate>
                        <description><![CDATA[அத்தியாயம்-17
   ஆஷா மெதுவாக ஷ்ரத்தாவை நோக்கி நகர்ந்தாள். அவளது சேலையின் மடிப்புக்குள் மறைத்து வைத்திருந்த கூர்மையான கத்தி விரல்களுக்குள் நழுவியது.
&#039;இன்னும் இரண்டு அடி..&#039; நெருங்கினால் போது...]]></description>
                        <content:encoded><![CDATA[<p>அத்தியாயம்-17</p>
<p>   ஆஷா மெதுவாக ஷ்ரத்தாவை நோக்கி நகர்ந்தாள். அவளது சேலையின் மடிப்புக்குள் மறைத்து வைத்திருந்த கூர்மையான கத்தி விரல்களுக்குள் நழுவியது.</p>
<p>'இன்னும் இரண்டு அடி..' நெருங்கினால் போதும். குழந்தையோடு இருந்த ஷ்ரத்தாவை ஒரே குத்தில் முடித்துவிடலாம்.</p>
<p>அந்த நேரம் "ஆஷா." என்ற கார்த்திகாவின் குரல் பின்னால் ஒலித்தது. ஆஷா திடுக்கிட்டு திரும்பினாள்.</p>
<p>ஒரு நொடி பதறியவள், எதுவும் தெரியாதது போல கத்தியை மறைக்க முயன்றாள்.</p>
<p>ஆனால் கார்த்திகாவின் கண்கள் அதற்குள் அதை பார்த்துவிட்டிருந்தது.</p>
<p>"என்ன மறைக்கிற?" என்று மெதுவாக நடந்து வந்தாள்.</p>
<p>ஆஷா ஒரு கணம் தயங்கினாள்.</p>
<p>அடுத்த நொடியே அட்டம்ட் பெயிலானால் அதுவேறு தனக்கு இழிவென, கார்த்திகாவை புறம் தள்ளி 'சாவுடி!" என்று கத்திக்கொண்டு நேராக ஷ்ரத்தாவை நோக்கி பாய்ந்தாள்.</p>
<p>அவள் எதிர்பார்க்காத ஒன்று நடந்தது. அடுத்த நொடியில் மூன்று பெண் கைதிகள் ஒரே நேரத்தில் ஷ்ரத்தாவின் முன்னால் சுவராக வந்து நின்றனர். கிட்டதட்ட அரணாக.</p>
<p>ஒருத்தி ஆஷாவின் கையை முறுக்கினாள். மற்றொருத்தி அவளது இடுப்பில் ஓங்கி உதைத்தாள். மூன்றாவது கைதி அவளது கால்களை வாரிவிட,</p>
<p>ஆஷா சமநிலை இழந்து தரையில் விழுந்தாள். எழுந்திருக்க முயன்றவளை மூவரும் சேர்ந்து மண்டியிட வைத்தனர். அவளது கையில் இருந்த கத்தி தரையில் விழுந்து உருண்டது.</p>
<p>அந்த நேரம் கார்த்திகா மெதுவாக அருகில் வந்தாள்.</p>
<p>அவளது முகத்தில் கோபமோ பதற்றமோ எதுவுமில்லை.</p>
<p>மாறாக பதட்டமில்லாத அமைதி மட்டும் இருந்தது.</p>
<p>ஆஷாவின் முகத்தை பார்த்தவள் மெதுவாக குனிந்தாள். "என்ன போட்டு தள்ள வந்தியா?" என்று கேட்டாள்.</p>
<p>ஆஷா மாட்டிக் கொண்டதற்கிணங்க நிற்க "முதல்ல.. இந்த ஜெயிலுக்குள்ள யாரை கொல்ல வர்றேன்னு தெரிஞ்சிட்டு வரணும். ஆங்" என்று அதட்டினாள்.</p>
<p>பிறகு அந்த மூன்று கைதிகளையும் பார்த்து கண் காட்டியபடி, "பாத்ரூம்ல... கால் தடுக்கி கீழ விழுந்து... பின்மண்டை உடைஞ்சு செத்திருக்கணும். டெத் ரிப்போர்ட் எடுத்தா.. அப்படித்தான் வரணும். காட் இட்" என்றதும் மூவரும் அமைதியாக தலையசைத்தனர்.</p>
<p>ஆஷாவின் வாயை இறுக பொத்தி இழுத்துச் சென்றனர்.</p>
<p>ஆஷா இதற்கு தண்டனை தான் வரும பார்த்தால் மரணமா? என்று பயந்தாள். ஆனால் கதறல் கூட வெளியில் கேட்கவில்லை.</p>
<p>அத்தனை நேரமும் தள்ளி நின்றபடி ராயனுக்கு பால் புகட்டிக் கொண்டிருந்த ஷ்ரத்தா மட்டும் ஒன்றும் நடக்காதது போல அமைதியாக இருந்தாள்.</p>
<p>குழந்தை பால் குடித்து முடித்ததும், அவனை தோளில் போட்டுத் தட்டிக் கொடுத்தபடி கார்த்திகாவை நோக்கி நடந்தாள்.</p>
<p>"தேங்க்ஸ்..." என்றாள். கார்த்திகா திரும்பிப் பார்த்தாள்.</p>
<p>"எதுக்கு?" என்று புருவம் சுருக்கினாள். </p>
<p>"எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம் இருந்தது. இன்னைக்கு புது கைதி ஆஷா வந்து அதை தீர்ந்து வச்சிட்டாங்க." என்றாள். </p>
<p>"நீங்க... வினோத் அண்ணா மூலமா... என்னை பார்த்துக்கணும்னு இங்க வேலைக்கு வந்தவங்க தானே? நீங்க... அந்த மூணு கைதிகளும், அதே காரணத்துக்காகத் தானே உள்ள இருக்கிங்க." என்று கேட்டாள்.</p>
<p>கார்த்திகா சில நொடிகள் அமைதியாக இருந்தாள்.</p>
<p>பிறகு தலையிலிருந்த தொப்பியை சரி செய்தவள்</p>
<p>"சாரி டூ சே... வினோத் சாரை... இப்ப யாராலயும் பார்க்க முடியாது. அவரை தொடர்பு கொள்ள முடியாத நிலையில இருக்கார்னு. ஹரிணி சொன்னாங்க. அதுக்கு மேல... எனக்கும் எதுவும் தெரியாது."</p>
<p>சிறிது இடைவெளி விட்டாள் "ஆனா... எங்க குடும்பத்தோட செட்டில்மெண்ட்... மாத வருமானம்... எல்லாமே முன்கூட்டியே ஏற்பாடு செய்யப்பட்டிருக்கு... அது யாருனு தனியா சொல்ல தேவையில்ல.. அதனால‌‌.. உங்களையும் உங்க குழந்தையையும் பாதுகாப்பா வைத்திருக்கறது. எங்க பொறுப்பு." என்று குரலை சற்றுக் கடினப்படுத்தினாள்.</p>
<p>"இதை அட்வான்டேஜா எடுத்துட்டு... என்னை கேள்வி கேட்டு தொந்தரவு பண்ணாதிங்க.. மத்தவங்களுக்கு எங்க மேல சந்தேகம் வராம இருக்கறதும்,  எங்க வேலைதான். சோ... நீங்க தள்ளியே நில்லுங்க மேம். நாங்க.. தள்ளி போகமாட்டோம். என்று கூறிவிட்டு திரும்பிச் சென்றாள்.</p>
<p>அவள் சென்ற பின்பும், ஷ்ரத்தா அங்கேயே நின்றாள்.</p>
<p>தன்னையோ, தன் குழந்தையையோ, கொல்ல வந்தவர்கள் இங்கே இருப்பது கூட அவளுக்கு புதிதல்ல.</p>
<p>ஆனால் அவர்களை தடுக்க, ஏற்கனவே இத்தனை பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டிருப்பது.</p>
<p>இன்று தான் முழுமையாக புரிந்தது. இதை செய்ய சத்ரியன் எந்தளவு யோசித்திருப்பான். ஐரீனை காப்பாற்ற முற்படும் முன்பே அதற்கு பின்னால் நேரும் ஆபத்தும் இழப்பும் அறிந்தவனாக பாதுகாப்பு செய்து விட்டு சென்றவனை எண்ணி வியந்தாள்.</p>
<p>அதன்பிறகு ராயனை வளர்ப்பதில் இருந்த பயம் மெதுவாக குறைய ஆரம்பித்தது. அவனை மற்றவர்களிடம் கொடுத்து விட்டு சில நேரமாவது நிம்மதியாக தூங்க கற்றுக்கொண்டாள்.</p>
<p>அடுத்த நாள் பேப்பரில் ஆஷா என்ற கைதி பாத்ரூமில் வழுக்கி விழுந்து மரணம் என்ற சின்னதான கட்ட செய்தியுடன் ஆஷா சேப்டர் முடிவடைந்தது.</p>
<p>நாட்கள்.. மாதங்களாக மாறின.</p>
<p>ராயன்... சின்ன சின்ன சிரிப்புகளை சிரிக்க ஆரம்பித்தான். கால்களை எட்டி உதைத்து விளையாடினான். குப்புற படுத்து தலையை தூக்க முயன்றான். அவன் செய்த ஒவ்வொரு அசைவும்...</p>
<p>ஷ்ரத்தாவுக்கு வாழ வேண்டிய காரணமாக மாறியது.</p>
<p>எல்லாருக்கும் அவன்...</p>
<p>'ராயன்.' என்றாலும் ஷ்ரத்தாவுக்கு மட்டும்...</p>
<p>'ரியன்.' ஆனான். சத்ரியனின் பெயரின் கடைசி ஒலி.</p>
<p>அவள் உயிராய் நேசித்த மனிதனின் நினைவு.</p>
<p>"ரியன்..." என்று அழைத்தாலே... சத்ரியனையே அழைப்பது போல இருந்தது.</p>
<p>அப்படியே... ராயன் உட்கார கற்றுக்கொண்டான்.</p>
<p>தவழ்ந்தான். பிறகு மெல்ல மெல்ல எழுந்து நிற்க முயற்சி செய்தான்.</p>
<p>ஒவ்வொரு நாளும அவன் சிறைக்குள்ளே வளர்ந்தான். அவனோடு ஷ்ரத்தாவின் தாய்மையும் வளர்ந்தது.</p>
<p>யதுநந்தன் மாதம் இரண்டு முறை தவறாமல் வந்தான். குழந்தைக்கு தேவையான பொருட்களை வாங்கி வந்து கொடுத்தான்.</p>
<p>ஷ்ரத்தா எடுத்த புகைப்படங்களை ஹரிணிக்கு அனுப்பிக் கொண்டிருந்தான். ஹரிணி அதற்கெல்லாம் பதில் கூட அனுப்பவில்லை. </p>
<p>ருத்ரன் கூட வாரமிரு முறை வந்தான். ஆனால் ஷ்ரத்தா ருத்ரனிடம் அதிகம் பேசவில்லை. "கீர்த்தனா அம்மா வரலையா?" என்று மட்டும் கேட்பாள்.</p>
<p>கீர்த்தனா தான் ருத்ரனின் விருப்பம் தெரிந்து ஷ்ரத்தாவின் பெயரையே அவர் நினைவிலிருந்து மீட்க நினைத்தார். அதனால் சிறைக்கு வந்து பார்ப்பதை அறவே விட்டுவிட்டார்.‌</p>
<p>ருத்ரன் ஷ்ரத்தா கேட்கவும் "ரிலேட்டிவ் ஃபங்க்ஷனுக்கு போயிருக்காங்க."</p>
<p>"உடம்பு சரியில்ல."</p>
<p>"உன்னை பார்த்துட்டு வர சொல்லியிருந்தாங்க."</p>
<p>என்று ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு புது காரணம் சொல்லி சமாளித்தான்.</p>
<p>வாரம் ஒரு முறை ருத்ரனும், மாதம் இரண்டு முறை</p>
<p>யதுநந்தனும், இருவரும் மாறி மாறி வந்து சென்றனர்.</p>
<p>கீர்த்தனா மட்டும் வரவே இல்லை. அது ஷ்ரத்தாவுக்கு சிறிய சந்தேகத்தை கொடுத்தாலும். அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.</p>
<p>குழந்தை ராயன் அவளது உலகம். அவனது உலகை காக்கா அங்கே மூன்று பெண் கைதி இருக்க, கார்த்திகா இருக்க சிறைசாலைக்குள்ளே அவளது வீடாக உணர்ந்தாள். </p>
<p>ஒருநாள் கார்த்திகா கேட்டதற்கிணங்க, ஹரிணி மட்டும் வந்தாள். ஷ்ரத்தாவின் முதல் கேள்வியே... "வினோத் அண்ணா எங்க ஹரிணி?" என்று ஆசையாக கேட்க, ஹரிணியின் கண்கள் கலங்கின.</p>
<p>மெதுவாக 'ஒரு நாள் வெளியே போனார். அதுக்குப் பிறகு திரும்ப வரலை. அதனால தான் அவர் இல்லாம நான் வர தயங்கியது' என்ற வாசகத்தை தட்டச்சு செய்து காட்டினாள். </p>
<p>  அந்த ஒரு வார்த்தை ஷ்ரத்தாவின் இதயத்தை மீண்டும் உடைத்தது.</p>
<p>பேச்சை மாற்றுவதற்காக ஹரிணியே, ஒரு தூரிகை புகைப்படத்தை எடுத்து நீட்டினாள் ஹரிணி.</p>
<p>அதில் ஷ்ரத்தா. ராயன் அவர்களுக்கு அருகில். </p>
<p>சத்ரியன். உயிரோடு நின்றது போல தத்ரூபமாக வரையப்பட்டிருந்தான்.</p>
<p>"எப்படி வரைஞ்ச?" என்று அதிர்ச்சியுடன் கேட்டாள் ஷ்ரத்தா. ஹரிணி மெதுவாக விரக்தியாக சிரித்தாள்.</p>
<p>"சத்ரியன்... என்னை நெருங்கினப்ப, என்னால கத்த முடியல. ஆனா... அவரை பார்த்துக்கிட்டே இருந்தேன். ஒரு உருவத்தை... பத்து நிமிஷத்துக்கு மேல பார்த்தா... அதை அப்படியே வரைய முடியும். அதான்... அவரோட உணர்வையும் இதுல வரைஞ்சேன்." என்று போனில் தட்டச்சு செய்து கூறினாள். </p>
<p>ஷ்ரத்தா அந்த ஓவியத்தை மார்போடு அணைத்துக் கொண்டாள்.</p>
<p>அதே நேரம்... ஹரிணியிடம் சத்ரியன் அத்துமீறிய நினைவும்... வினோத் மீண்டும் வருவாரா இல்லையா.. என்ற கேள்வியும் ஷ்ரத்தா மனதை மீண்டும் நொறுக்கியது.</p>
<p>ஹரிணி சென்ற பிறகு. அந்த ஓவியத்தை தனது உடமைகள் வைக்கப்பட்டிருந்த இடத்தில் பாதுகாப்பாக வைக்கச் சொல்லி சிறை அதிகாரியிடம் தந்துவிட்டாள். </p>
<p>ராயனின் கையை பிடித்தபடி,</p>
<p>மெதுவாக சிறைக் கம்பிகளை நோக்கி நடந்தாள்.</p>
<p>  இன்னமும் அவளது தண்டனை காலம் இருக்கின்றதே..!</p>
<p>நாட்கள் நகர, வெளியுலகில் ருத்ரனை வீட்டில் இறக்கிவிட்டு திரும்பிய சேகர், டிரான்ஸ்பார்மரில் மோதி விபத்தில் இறந்துவிட்டதாக தகவல் வந்தது. </p>
<p>ராயன் கொஞ்சம் வளர்ந்திருந்தான்.</p>
<p>சிறைக்குள் இருந்தாலும்...</p>
<p>அவன் சிரிப்பு மட்டும் அந்த இடத்தின் இருளையே விரட்டும் அளவுக்கு இருந்தது.</p>
<p>"ரியன்... ஓடாத!" என்று ஷ்ரத்தா கத்தினாள். ஆனால் அவனோ இப்பொழுது எல்லாம் கேட்பது போலவே இல்லை.</p>
<p>சிறை வளாகம் முழுக்க தளதளவென்று ஓடிக் கொண்டிருந்தான்.</p>
<p>பின்னால் இரண்டு பெண் கைதிகள், "டேய் குட்டி... நில்லுடா!" என்று சிரித்தபடி துரத்திக் கொண்டிருந்தனர்.</p>
<p>ராயன் மட்டும் கலகலவென்று சிரித்தபடி ஓடினான்.</p>
<p>நேராக கார்த்திகாவின் முன்னால் வந்து நின்றான்.</p>
<p>"கார்த்தி." என்று அவன் அழைக்க, "மேம் சொல்லு." என்று கம்பீரமாக முகத்தை வைத்துக் கொண்டு கேட்டாள் கார்த்திகா.</p>
<p>"இல்ல." என்று தலையாட்டியவன், சட்டென்று அவளது போலீஸ் தொப்பியை எடுத்து தன் தலையில் போட்டுக் கொண்டான்.</p>
<p>"நான் போலீஸ்!" என்று கத்தினான். அங்கிருந்த அனைவரும் சிரித்தனர்.</p>
<p>"அடேய்... ராயன் என் தொப்பியை குடு." என்று கார்த்திகா பிடிக்க வர, "என்னை பிடிக்கவே முடியாது." என்று மீண்டும் ஓடினான்.</p>
<p>ஓடிக்கொண்டே, "எல்லாரும் லைன்ல நில்லுங்க..." என்று கார்த்திகாவை போல கையை காட்டி கட்டளை போட்டான்.</p>
<p>பெண் கைதிகளும் அவனுக்காக வரிசையாக நின்றனர். "சார்... இப்போ போதுமா?" என்று ஒருவர் கேட்க,</p>
<p>ராயன் கம்பீரமாக கைகளை பின்னால் கட்டிக் கொண்டு நடந்தான்.</p>
<p>ஒவ்வொருவரையும் பார்த்து, நல்ல பிள்ளையா இருக்கணும். காட் இட்" என்று அறிவுரை சொல்ல, அந்த இடமே சிரிப்பில் மூழ்கியது.</p>
<p>அதே நேரம் கார்த்திகா பின்னாலிருந்து மெதுவாக வந்து, அவனை அப்படியே தூக்கிக் கொண்டாள்.</p>
<p>"அய்யோ... பிடிச்சிட்டாங்க! அம்மா" என்று ராயன் கத்த,</p>
<p>"போலீஸ்கிட்டயே போலீஸ் விளையாட்டு விளையாடுறியா?" என்று அவன் கன்னத்தை கிள்ளினாள்.</p>
<p>"தொப்பி..." என்று அவள் கையை நீட்ட, "முத்தம் குடுத்துட்டு எடுத்துக்கோங்க." என்று பேரம் பேசினான்.</p>
<p>"அப்படியா?" என்று சிரித்த கார்த்திகா, அவன் இரு கன்னங்களிலும் மாறிமாறி முத்தமிட்டாள். உடனே தொப்பியை கழற்றி அவளது தலையில் வைத்தான்.</p>
<p>"குட் பாய்." என்று கார்த்திகா சொல்ல, "நான் குட் பாய் இல்ல..." என்று தலையசைத்தான்.</p>
<p>"அப்ப?"</p>
<p>"நான்... சத்ரியன் அப்பாவோட லிட்டில் பாய்!" என்று பெருமையாக சொல்லிவிட்டு சிரித்தான்.</p>
<p>அந்த ஒரு வார்த்தை ஷ்ரத்தாவின் கண்களை கலங்க வைத்தது. அவளுக்கே தெரியாமல் கண்கள் ஈரமானது.</p>
<p>கார்த்திகாவும் சில நொடிகள் அமைதியாக ராயனை பார்த்தாள்</p>
<p>அவனுக்கு தான் தந்தையின் முகமே தெரியாது.</p>
<p>ஆனால் தன் தாயின் வாயிலிருந்து தினமும் கேட்ட அந்த பெயரை மட்டும் பெருமையாக சொல்லக் கற்றுக் கொண்டிருந்தான்.</p>
<p>-தொடரும். </p>
<p>-பிரவீணா தங்கராஜ்.</p>
<p>&nbsp;</p>]]></content:encoded>
						                            <category domain="https://onlinetamilnovels.com/community/"></category>                        <dc:creator>Praveena Thangaraj</dc:creator>
                        <guid isPermaLink="true">https://onlinetamilnovels.com/community/%e0%ae%a4%e0%ae%95%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%b5%e0%af%8a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-praveena-thangaraj/%e0%ae%a4%e0%ae%95%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%b5%e0%af%8a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-17/#post-778</guid>
                    </item>
				                    <item>
                        <title>வால்கனோ பூக்கள் அத்தியாயம் - 5</title>
                        <link>https://onlinetamilnovels.com/community/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%a9%e0%af%8b-%e0%ae%aa%e0%af%82%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-jayalakshmi-s/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%a9%e0%af%8b-%e0%ae%aa%e0%af%82%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af-2/#post-777</link>
                        <pubDate>Mon, 27 Jul 2026 02:05:40 +0000</pubDate>
                        <description><![CDATA[அத்தியாயம் - 5Dmitri Korenov (டிமிட்ரி கொரேநவ்)சுவிஸ் பெடரல் கவர்மெண்ட்டின் அறிவியல் மற்றும் அது சார்ந்த ஆராய்ச்சியின் டைரக்டர் மற்றும் டெபுட்டி டைரக்டர் ஸ்டேட் செக்ரட்டரி ஃபார் எஜூகேஷன் ரிச...]]></description>
                        <content:encoded><![CDATA[<p>அத்தியாயம் - 5<br /><br />Dmitri Korenov (டிமிட்ரி கொரேநவ்)<br /><br />சுவிஸ் பெடரல் கவர்மெண்ட்டின் அறிவியல் மற்றும் அது சார்ந்த ஆராய்ச்சியின் டைரக்டர் மற்றும் டெபுட்டி டைரக்டர் ஸ்டேட் செக்ரட்டரி ஃபார் எஜூகேஷன் ரிசர்ச் அண்ட் இன்னோவேஷன்(நம்ம ஊர்ல எம்பி மாதிரி)<br />அந்த துறையில் எல்லா அதிகாரமும் மிக்கவர்.<br />அறிவியல் துறை சார்ந்த ஆராய்ச்சிகளுக்கு அனுமதி வழங்குதல் மற்றும் அதற்கான பட்ஜெட்டை ஒதுக்கீடு செய்து கொடுத்தல் மற்றும் ஆராய்ச்சி சம்பந்தப்பட்ட வெளிநாட்டு தொடர்புகளை ஏற்படுத்ததுதல்.<br />இது எல்லாம் அவர் ஒருவர் கையில்தான்.<br /><br />அவரை சந்திக்க அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி இருந்தான் ஆட்ரியன் கிம்.<br />அவரது அலுவலகத்திற்கு வந்து நின்றவன் தான் வாங்கிய அப்பாயிண்ட்மெண்ட்டை காட்டினான்.<br />அவனது ஐடி மற்றும் இதர பொருட்களை செக் செய்த பாதுகாப்பு அதிகாரிகள் அவரை உள்ளே செல்ல அனுமதித்தனர்.<br /><br />அங்கு உள்ளே மாளிகை போன்ற பகுதியில் போடப்பட்டிருந்த இருக்கையில் அமர சொன்னார்கள்.<br />சமத்தாக சென்று அமர்ந்தான் ஆட்ரியன்.<br /><br />(அவங்க ஆங்கிலத்தில் பேசினாலும் நாம தமிழ்லேயே கேட்போம்)<br /><br />“நான் சர்க்கு இன்ஃபார்ம் பன்றேன் சர் கூப்பிடுவாங்க” என்றுவிட்டு ரிசப்ஷனிஸ்ட் சென்றுவிட அந்த மாளிகையை சுற்றி ஒரு தரம் பார்வையை ஓடவிட்டான்.<br />அதன்பின் தன் மொபைலை எடுத்து இன்ஸ்டாகிராம் நோண்ட ஆரம்பித்து விட்டான்.<br />நிறைய ரீல்ஸ் பார்த்தவன் வரிசையாக சிலவற்றை ரீபோஸ்ட் செய்து வைக்க அவனுக்கே அவனது பையித்தியக்காரத்தனத்தை எண்ணி சிரிப்பு தான் வந்தது.<br />இருக்கும் இடம் கருதி தன் புன்னகையை சுருக்கிக்கொண்டான்.<br />பத்து நிமிடங்கள் கழித்து அவனிடம் வந்த டிமிட்ரியின் உதவியாளர் அவனை அழைத்தார்.<br />எழுந்தவன் அவர் கைகாட்டிய திசையில் அவர்பின் நடந்தான்.<br />அது அரச மாளிகை என்பதால் பழையகால மாடல்படி இருந்தது.<br />ஆனால் கிட்டத்தட்ட ஒரு அரை கிலோமீட்டர் நடந்து செல்ல வேண்டி இருக்கும் போல.<br />‘ஏன்டா இதுல நடந்துமா நீங்க இம்மாம் பெருசா இருக்கீங்க? நாம வேணா ரன்னிங் செய்வோமா? இவன் செத்துடுவானே’ என்று எண்ணியபடிதான் நடந்தான்.<br />நேரே நடந்தவர் வலதுபுறம் திரும்பி ஒரு அறையின் வாசலில் நின்று கதவை லேசாக தட்டியவர் திறந்தார்.<br /><br />பிஏ மட்டும் தான் கொஞ்சம் ஃபிட்டாக இருந்தார் டிமிட்ரி இல்லை மற்ற யாருமே அங்கு ஒல்லியாக இல்லை.<br />எல்லாரும் கொஞ்சம் கொழுக் மொழுக்காகவும் டிமிட்ரி ஒரு அயல்நாட்டில் பிறந்தவர் என்பதால் கொஞ்சம் கருப்பாகவும் இருந்தார்.<br />உள்ளே சென்றவனை டிமிட்ரி ஹாய் சொல்லி கை நீட்ட அவனும் கை நீட்டினான் அதை பிடித்து குலுக்கியவர்.<br />“உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி ஆட்ரியன்.<br />நானும் உங்க ஃபேன்ஸ்ல ஒருத்தன்.<br />நீங்க கேஸ் எடுத்து ஹாண்டில் செய்யும் விதம் அவ்ளோ நல்லா இருக்கும்” என்றவர்<br />மேலும் “அதனாலதான் இந்த சிக்கலான கேஸைகூட உங்ககிட்ட கொடுக்க சொல்லி ரிக்குவஸ்ட் கொடுத்தேன்” என்று சொல்ல.<br />‘அப்போ என்னை தூங்கவிடாம செஞ்ச படுபாவி நீதானா? கிராதகா’ என்று மனதில் திட்டியவன் வெளியே லேசான சிரிப்பை உதிர்த்து<br />“ரொம்ப நன்றி சர். ஆனால் இது மருத்துவ ஆராய்ச்சி சம்பந்தப்பட்ட விஷயம் அதான் உங்ககிட்ட கொஞ்சம் டீடெயில்ஸ் கேட்டுட்டு போகலாம்னு வந்தேன்” என்று அவன் நிறுத்த <br />“ஓஓஓ ஷியூர் மிஸ்டர் கிம் ப்ளீஸ் உட்காருங்க” என்று சொன்னவர் தானும் அமர்ந்தார்.<br />“சொல்லுங்க என்ன சாப்பிடுறீங்க?” என்று டிமிட்ரி கேட்க<br />“ஒன் ஐஸ்டு அமெரிக்கானோ ப்ளீஸ் சர்” என்றான் பட்டென்று இதுவரை வந்தவர்கள் யாரும் அவர்முன் இப்படி பேசியதில்லை அதனால் சற்று ஜெர்க் ஆனவர் தன் பிஏவை பார்க்க <br />“எஸ் சர்” என்றபடி நகர்ந்தார்.<br />“சரி சொல்லுங்க ஆட்ரியன் என்கிட்ட இந்த கேஸ்ல என்ன டீடெயில்ஸ் கேட்கணும். உங்களுக்கு யார்மேலயாவது சந்தேகம் வந்து இருக்கா? அதுக்கு நான் ஏதாவது ஹெல்ப் செய்யணுமா? சீக்கிரம் இந்த கேஸை சால்வ் செய்யுங்க ஆபீசர்” என்று கேட்க<br />“எஸ் சர் என்னால முடிஞ்சவரை முயற்சி செய்யுறேன் ஆனா மண்டை சூடாகுறது தான் மிச்சம் இந்த கேஸ்ல ஒரு சின்ன க்ளூ கூட கிடைக்க மாட்டேங்குது சர்” என்று ஆட்ரியன் பேசியபடி அவரை ஓரக்கண்ணால் பார்க்க அவரது முகத்தில் ஒரு ஏளனசிரிப்பு வந்தது.<br />உடனே அதை சோகமாக மாற்றியவர்<br />“எக்ஸ்பெர்ட் போலீஸ் அண்ட் டிடெக்டிவ் நீங்களே இப்படி சொன்னா எப்படி ஆபீசர்?” என்று டிமிட்ரி கேட்க.<br /><br />“ஐயம் ட்ரையிங் மை பெஸ்ட் சர்.<br />இதுல உங்கமேல கூட எங்களுக்கு சந்தேகம் வரலாம் சர் அதான் முன்னமே உங்ககிட்ட தகவல்களை கேட்டு தெரிஞ்சுக்கலாம்னு வந்தேன்” என்று ஆட்ரியன் பேச<br />சற்று அதிர்ந்தவர்<br />“ஓஓ இது என் துறை சம்பந்தப்பட்ட விஷயம் அதுவும் இல்லாமல் இது என் எல்லையில் நடந்த கிட்நாப்னு சந்தேகம் என்மேல வரும்தான் ஒன்னும் செய்யுறதுக்கில்லை.<br />நீங்க என்மேல சந்தேகப்பட்டா கூட அதிகாரமா விசாரிங்க ஆபீசர் கிம் உங்களுக்கு வேண்டிய எந்த தகவலா இருந்தாலும் நான் கொடுக்கிறேன்” என்றார் அவர்.<br /><br />“தேங்க்யூ சர் இந்த வார்த்தை போதும் சர் எப்படியாவது இதை கண்டுபிடிக்க நான் கஷ்டப்படுவேன் சர்.<br />என் முதல் கொஸ்டின்<br />உங்களோட அனுமதியோட என்ன என்ன சயின்ஸ் அண்ட் மெடிக்கல் ஆராய்ச்சி நடக்குதுனு தெரியனும் சர்?” என்று ஆட்ரியன் கேட்க<br />உடனடியாக பதில் கொடுத்தார் டிமிட்ரி.<br />“சயின்ஸ் சம்பந்தமா நாசா விஞ்ஞானிகள் கூட சேர்ந்து நம்ம சேட்டிலைட் ஆராய்ச்சி அண்ட் அணுகுண்டு சோதனைங்க அப்புறம் எஜூகேஷன்ல என்னலாம் புதுமை செய்யலாம் பசங்க ஈஸியா படிக்க என்னலாம் செய்யலாம்னு டிஸ்கஷன்ஸ் போகுது ஆபீசர்.<br />மெடிக்கல் லைன்ல நிறைய லோ பட்ஜெட் மருந்துகள் கண்டுபிடிக்க ஆராய்ச்சி நடக்குது. அண்ட் அகெய்ன் கொரோனா ரேபிஸ் போல கொடிய வியாதிகள் வந்தா அதை எப்படி தடுக்கணும் குறைந்த செலவுல தடுப்பூசிகள் கண்டுபிடிக்கவும் ஆராய்ச்சி நடந்துட்டு இருக்கு ஆபீசர்” என்று அவர் கூறி முடிக்க <br />அந்நேரம் கதவை தட்டிவிட்டு உள்ளே வந்த அவரது பிஏ இருவருக்கும் பானங்களை வழங்கினார். எடுத்து கொள்ளும் படி கைகாட்டிய டிமிட்ரி அவருக்கு மட்டும் தேநீர் எடுத்துக்கொண்டார்.<br /><br />“கென்ரி இவருக்கு நம்ம அப்ரூவல் செஞ்ச ஆராய்ச்சி டீடெயில்ஸ் ஃபைல் கொடுங்க அண்ட் அந்த ஆராய்ச்சி சம்பந்தப்பட்ட சீஃப் டைரக்டர்ஸ் கான்டாக்ட்ஸ்ஸூம் கொடுங்க இதோட நம்ம ஹெட் குவாட்டர்ஸ்ல நடக்குற வேலை டீடெயில்ஸ்ஸூம் கொடுத்துடுங்க அப்படியே என் பர்சனல் நம்பரும் கொடுத்துடுங்க.<br />அண்ட் இவர் எப்போ வந்தாலும் அவரை டைரக்டா என்னை பார்க்க கூட்டிட்டு வாங்க” என்றவர் ஆட்ரியனிடம் திரும்பி<br />“போதுமா சர் வேற ஏதாவது டீடெயில்ஸ் வேணுமா?” என்று கேட்க.<br />ஐஸ்டு காபியை அழகாய் பருகியவன் எழுந்து<br />“எஸ் சர் உங்க அண்டர்ல இருக்குற ஸ்டேட் லிமிட் டீடெயில்ஸ்ம் வேணும் பிகாஸ் அதுக்கு மேல நான் இன்வெஸ்டிகேட் செய்யணும்னா அந்த டைரக்டர் பர்மிஷன் வாங்கணும்ல அதுக்குத்தான் சர்” என்று அவன் விளக்க.<br /><br />“ஓ ஷியூர் ஆபீசர்” என்றபடி தன் பிஏவை பார்த்தவர் <br />“அவர் கேட்ட டீடெயில்ஸ்ம் கொடுத்திடுங்க கென்ரி” என்றபடி தன் டேபிள் மேல் பார்த்தவர் <br />“நான் சொன்ன லெட்டர் ஹெட் குவாட்டர்ஸ்க்கு நீங்களே டைரக்ட்டா கொண்டு போய் கொடுத்திடுங்க கென்ரி.<br />பை தி வே எனக்கு ஒரு அர்ஜெண்ட் மீட்டிங் இருக்கு ஆபீசர் கிம் ஷெல் ஐ லீவ் நவ்?” என்று கேட்க.<br />“ஷியூர் சர் மை ப்ளஷர் ட்டூ மீட் யூ” என்றவன் அந்த பிஏவை பார்க்க ஒரு அட்டை போன்ற பேப்பரை ஒரு கவருக்குள் போட்டுக்கொண்டு இருந்தார் அவர் <br />“ஹான் மிஸ்டர் கென்ரி நான் கேட்ட டீடெயில்ஸ் என் ஆபீஸ்க்கு அனுப்பிடுங்க ப்ளீஸ் ஐ ஹாவ் ட்டூ கோ நவ்” என்று கேட்க<br />“ஷியூர் சர்” என்று சொல்ல <br />“தேங்க்யூ அண்ட் தேங்க்ஸ் ஃபார் யுவர் கோ ஆபரேஷன் சர் பை” என்று விட்டு கிளம்பிவிட்டான்.<br /><br />அவன் சென்றதை உறுதிபடுத்திக்கொண்டு வந்த கென்ரி<br />“ரொம்ப திமிரா அர்ரோகண்ட்டா இருக்காரே சர் இவரையா இந்த கேஸ்ல இன்வால்வ் செஞ்சீங்க?” என்று கேட்க.<br />“அவன் அப்படித்தான் அவனோட திமிராலேயே அவன் நிறைய விஷயங்களை மிஸ் செய்வான் அதுக்குள்ள நாம நம்ம வேலையை முடிச்சுடுவோம் அதுக்குத்தான் அவனுக்கு இந்த வேலை.<br />அவனால இதுல ஒரு சின்ன துரும்ப கூட கண்டுபிடிக்க முடியாது.<br />கேஸை அவனே டிஸ்மிஸ் செய்ய வெச்சுடுவான் பாரு கென்ரி” என்றவர் கிளம்பி கென்ரியோடே சென்றார் இருவரும் சென்றது முதலில் ஹெட் குவாட்டர்ஸ்க்கு அதன்பின் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் Matterhorn glacier பகுதிக்கு சென்றனர்.<br />அங்கு மறைவிடத்தில் ஒரு ஆறு போன்ற பகுதியில் நகர்ந்த ஹெலிகாப்டர் உடனே கிளம்பிவிட்டது.அந்த ஆறு அருவி போல பாயும் அந்த ஆற்றின் குறுக்கே உள்ளே சென்று மறைந்தது.<br />அங்கு தரையிறங்கிய இருவரையும் வந்து வரவேற்றார் ஒரு தமிழ் மருத்துவர்.<br />“வெல்கம் சர்” என்று டிமிட்ரியை வரவேற்றார் அந்த மருத்துவ சயின்டிஸ்ட்.<br />“ம்ம் ஹவ் ஈஸ் தட் கிட்? ஈஸ் தேர் எனிதிங் ஆன் திஸ் கேஸ் எக்ப்ரிமெண்ட்?” என்று கேட்க<br />“நோ சர் அந்த ஒரு பொண்ணு தவிர மத்த பசங்க எல்லாம் சோல்(soul) பிரிஞ்சு திரும்ப சேரக்குள்ள இறந்துடுறாங்க சர் அந்த ஒரு பொண்ணு மட்டும் தான் கோமால இருக்கு” என்று அவர் விளக்க.<br /><br />“ம்ம் பட் சோல் பிரிஞ்சும் அந்த பொண்ணு மட்டும் எப்படி உயிரோட இருக்கு? உங்க ஃபார்முலா எல்லாம் ரிவைஸ் செஞ்சீங்களா? ஒன்ஸ் எல்லாம் செக் செய்யுங்க எனக்கு இது ரொம்ப முக்கியமான ப்ராஜெக்ட் இதை நம்பி என்கிட்ட எத்தனை கண்ட்ரீஸ் இன்வெஸ்ட் செஞ்சு இருக்காங்க தெரியுமா? இது மட்டும் சக்ஸஸ் ஆச்சு ஆல் கண்ட்ரீஸ் என் முன்ன பிச்சை எடுக்கும்.<br />இண்டியன் கேர்ள் கிட் க்கு எவ்ளோ வேல்யூ வரும் தெரியுமா? ஆல்ரெடி பிளாக் மார்கெட்ல இண்டியன் கேர்ள்ஸ் செக்ஸ்க்காக தான் பாப்புலர் இந்த எக்ஸ்பிரீமெண்ட் மட்டும் ஓகே ஆகிட்டா நான் தான் இண்டியன் கேர்ள்ஸ் சப்ளையர்ஸ்க்கு காட் ஃபாதர்” என்றவர் தன் பிஏவை பார்க்க அவர் ஒரு கவரை நீட்டினார்.<br />அதை வாங்கி அவரிடம் நீட்டியவர் <br />“இதுல ஃபார்முலா வேறமாதிரி எழுதி இருக்கு டெஸ்ட் செஞ்சு பார்” என்றவர் உள்ளே செல்ல அருவியின் உள்ளே செல்ல செல்ல பனி சூழ்ந்த பகுதியின் கீழ் அரண்மனை போன்ற கண்ணாடியால் ஆன ஒரு கட்டிடம் இருந்தது.<br />உள்ளே செல்ல அவர் பின்னே அனைவரும் செல்ல அந்த மருத்துவர் கைரேகை வைக்க கண்ணாடி கதவு திறந்தது.<br />உள்ளே சென்றவர்கள் பார்த்தது.<br />அங்கு கண்ணாடி பெட்டிக்குள் தலை முழுவதும் ஒயர்களும் எலெக்ட்ரானிக் டிவைஸ் கருவிகளும் பொறுத்தப்பட்டு சுவாசம் மட்டும் வந்து செல்ல கோமாவில் படுக்க வைக்கப்பட்டு இருந்த ஹனிஷாவை தான்.<br />பக்கத்தில் அதே போன்ற பெட்டில் கிளாரா இருக்க அவள் அப்போது தான் இறந்துவிட்டாள் என்று சுவாச கருவியை அகற்றினர்.</p>]]></content:encoded>
						                            <category domain="https://onlinetamilnovels.com/community/"></category>                        <dc:creator>Jai</dc:creator>
                        <guid isPermaLink="true">https://onlinetamilnovels.com/community/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%a9%e0%af%8b-%e0%ae%aa%e0%af%82%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-jayalakshmi-s/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%a9%e0%af%8b-%e0%ae%aa%e0%af%82%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af-2/#post-777</guid>
                    </item>
				                    <item>
                        <title>வால்கனோ பூக்கள் அத்தியாயம் -4</title>
                        <link>https://onlinetamilnovels.com/community/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%a9%e0%af%8b-%e0%ae%aa%e0%af%82%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-jayalakshmi-s/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%a9%e0%af%8b-%e0%ae%aa%e0%af%82%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af/#post-776</link>
                        <pubDate>Mon, 27 Jul 2026 02:04:16 +0000</pubDate>
                        <description><![CDATA[அத்தியாயம் - 4அவளை ரெஸ்ட் எடுக்க சொல்ல அவளால் தூங்க முடியவில்லை.“ஹனி ஹனி” என்று புலம்பியபடியே இருந்தாள்.அருகில் இருந்த டாக்டர் அவளுக்கு லேசான மயக்கமருந்தை செலுத்த அதன் வீரியத்தில் உடனே உறங்க...]]></description>
                        <content:encoded><![CDATA[<p>அத்தியாயம் - 4<br /><br />அவளை ரெஸ்ட் எடுக்க சொல்ல அவளால் தூங்க முடியவில்லை.<br />“ஹனி ஹனி” என்று புலம்பியபடியே இருந்தாள்.<br />அருகில் இருந்த டாக்டர் அவளுக்கு லேசான மயக்கமருந்தை செலுத்த அதன் வீரியத்தில் உடனே உறங்கி போனாள்.<br />அவள் எழும்போதெல்லாம் சுவாசிக்க சிரமம் படுவதால் ஆக்ஸிஜன் ஸ்பீட் கம்மி செய்து அவளுக்கு செலுத்தப்பட்டது.<br /><br />“ஏன் சர் இப்படி இருக்கா?” என்று ஆருத்ரனிடம் அவளது அந்த கொரியன் ப்ரண்ட் கேட்க<br />“தூக்கத்திலேயும் அவளது மூளை ரொம்ப வேலை செஞ்சுட்டு இருந்ததுல அதனால தான் இப்படி இருக்கா நல்லா தூங்கி எழுந்தா சரி ஆகிடுவா ஆனா அவதான் சரியா தூங்குறது இல்லையே அதான் வீக்கா இருக்கா அதுக்குத்தான் அவளுக்கு கம்மியான சடைன் கொடுத்து இருக்கேன் கொஞ்சம் நல்லா தூங்குவா.<br />ஓகே நீங்க போங்க நான் அவளை பார்த்துக்கிறேன்” என்று அவர் சொல்ல <br />“இல்ல சர் நாங்களும் இருக்கோம் ப்ளீஸ்” என்று கேட்க அவள்மீது அவர்களது பாசத்தை உணர்ந்தவர்.<br /><br />“ஓகே வொர்க் ஹியர்” என்று சொல்லி விட்டு அவரும் தன் லேப்டாப்போடு அமர்ந்து விட்டார்.<br />நம் மூளைக்கு போதிய அளவு உறக்கமும் ஆக்ஸிஜனும் கிடைக்காவிட்டால் நம்மால் எந்த வேலையும் செய்ய முடியாது எதையும் சரியாக யோசிக்கவும் முடியாது.<br />அப்படி ஒரு மனநிலையில் தான் இருந்தாள் யாழினி.<br /><br />அதனாலேயே அவளுக்கு மயக்கமருந்து கொடுத்து உறங்க வைத்தனர்.<br /><br />அங்கு,<br />தனக்கு வந்த ஈமெயிலை பார்த்தவனுக்கு இதில் பெரிய தலை ஏதோ வேலை செய்கிறது அதனால்தான் இது இவ்வளவு இரகசியமாக யாருக்குமே தெரியாமல் இருக்கிறது இதை கண்டுபிடிப்பதற்குள் தனக்கு பெரிய பெரிய ஆபத்துகள் வரப்போகிறது என்பதை மட்டும் உணர்ந்தவன்.<br />அவர்கள் வழியாக தான் இன்வெஸ்டிகேட் செய்வதை பார்த்தால் நிச்சயம் இது எல்லோருக்கும் ஆபத்தை விளைவிக்கும் அதனால் அவர்களது வழியை விட்டு வேறு வழியில் தான் விசாரணையை துவக்க வேண்டும் என்று உணர்ந்தவன்.<br />ஒரு பெருமூச்சை விட்டு தனக்கு வந்த மெயிலை டெலீட் செய்தவன் தனது பேக்பேக்கை மாட்டிக்கொண்டு கிளம்பிவிட்டான்.<br />எங்கு என்று பார்த்தால் டிரக்கிங்கும் பங்கி ஜம்ப்பிங்கிற்கும் சென்றுவிட்டான்.<br /><br />அவனது அஸிஸ்டென்ட் அவனுக்கு ஃபோன் செய்ய <br />“ஐயம் சாரி ஜார்ஜ் டோன்ட் கால்மீ ட்டூ டேய்ஸ்(i am sorry George don't call me two days)” என்று கூறினான்.<br />“வாட் ஹாப்பன்ட் சர்? ஆர் யூ கோயிங் ட்டூ இன்வெஸ்டிகேட் திஸ் கேஸ் சம்வேர்?(wat happens sir? Are you going to investigate this case somewhere?)” என்று அவன் கேள்வி கேட்க.<br /><br />“நோ நோ ஐ டுக் மை ஹாலிடேய்ஸ்(no no i took my holidays)” என்று விட்டு கட் செய்துவிட்டான்.<br />ஃபோனை பார்த்த ஜார்ஜ் ‘இவருக்கு பையித்தியம் ஏதாவது புடிச்சுடுச்சா? கேஸ் எவ்ளோ பீக்கா இருக்கு அதை கண்டுபிடிக்காம ஹாலிடேய்ஸ்னு போய்ட்டாரே இவர நம்பி கேஸை கொடுத்து ஏமாந்துட்டாங்களே இந்த ஆபீசர்ஸ்’ என்று தான் எண்ணினான்.<br />நேராக Matterhorn glacier பகுதிக்கு சென்றவன் அங்கு பனிசருக்கு சென்றான்.<br />இரண்டு நாள் டிரக்கிங் ஸ்கேட்டிங் என்று செய்தவன் புத்துணர்ச்சியாக திரும்பி வந்தான்.<br />அவனை விசித்திரமாக பார்த்த ஜார்ஜை பார்த்து கண் அடித்தவன் <br />“எனக்கும் ரிப்ரஷ்மெண்ட் வேணும் ஜார்ஜ்” என்று சொல்லி விட்டு சென்றவனுக்கு புதிய கோணத்தில் இந்த கேஸை பார்க்க ஐடியா கிடைத்தது.<br /><br />இங்கு, <br />நீண்ட நேரம் தூங்கி எழுந்த யாழினிக்கு சற்று தெம்பாக இருந்தது.<br />எழுந்தவள் பார்த்தது அவளது கூட பணியாற்றும் அனைவரும் அவளது டீம் லீடர் ஆருத்ரன் உட்பட எல்லோரும் அவள் அருகிலேயே அமர்ந்து வேலை பார்த்து கொண்டு அப்படியே உறங்கிவிட்டதை தான்.<br />அதை பார்த்தவள் அவர்களை தொந்தரவு செய்யாமல் எழுந்து அமர பார்க்க அவளது அசைவில் அனைவரும் விழித்துக்கொண்டனர்.<br />“ஆர் யூ ஓகே யாழினி யாழ்?” என்ற கேள்விகள் அவளை சூழ <br />“யா ஐயம் ஓகே நீங்கலாம் ரெஸ்ட் எடுக்காம என்ற செய்யுறீங்க?” என்று கேட்டாள் மெதுவாக.<br />“நான் போக சொன்னேன் ஆனா அவங்கதான் போகமாட்டோம் உன்கூடவே இருப்பேன்னு இருந்துட்டாங்கமா” என்றார் ஆருத்ரன்.<br />தான் தனியாக இல்லை என்று உணர்ந்தவளுக்கு கண்கள் கலங்கியது.<br />அதை உணர்ந்தவர் போல அவளது கையை தட்டி கொடுத்தவர்.<br />“ஓகே எல்லாரும் சாப்பிடலாமா?” என்று கேட்க.<br />அனைவரும் ஓகே என்று கூற அவளையும் தங்களோடு அழைத்து சென்றனர் கைதாங்கலாக.<br />அனைவரும் சாப்பிட அமர ஆருத்ரனை பார்த்தவள்<br />“சீஃப் ஏன் எனக்கு இவ்ளோ டயர்டா இருக்கு?” என்றாள்.<br />“அது நீ ஆல்ரெடி வீக் பாடி சடைன் கொடுத்ததால இன்னும் லீன் பாடி ஆகிட்ட அதான் டயர்ட்டா இருக்க” என்று அவளை கிண்டல் செய்ய அனைவரும் சிரிக்க அவளோ ஆவென பார்த்தாள்.<br /><br />“உன் ப்ரெயின நீ ரெஸ்ட்டே இல்லாம ஓவர ஸ்டெரியின் செஞ்சு இப்போ ரெஸ்ட் கொடுக்கவும் அதுக்கு ரெஸ்ட் இன்னும் தேவைப்படுது அதான் டயர்டா இருக்க” என்று சொல்ல <br />அமைதியானவள்<br />“அப்போ ரெக்கார்ட் ஆகலையா சர்?” என்று கேட்க<br />அவளை பார்த்தவர்<br />“நாங்க எப்போ சொன்னோம்?” என்று எதிர்கேள்வி கேட்டார்.<br />அதில் அவரை அதிர்ந்து அவள் பார்க்க<br />“ம்ம் ரெக்கார்ட் செஞ்சு அதை ஏஐ டிகோடிங் செஞ்சு விஷூவலா மாத்தி கொடுத்துடுச்சு நீ சரியான அப்புறம் போட்டு காட்டலாம்னு இருக்கேன்” என்று அவர் சொல்ல அதிர்ந்து எழுந்து அமர்ந்தவள்<br />“சீஃப் எனக்கு உடனே அதை பார்க்கணும்” என்றாள்.<br />“நீ இப்போ நல்லா ரெஸ்ட் எடுக்கணும் யாழினி உன்னோட ப்ரெயின் எந்த விதமான அதிர்ச்சியையும் தாங்க முடியாது அது நிறைய சைட் எபெஃக்ட்டை தரும் யாழினி இன்னைக்கு ஃபுல் ரெஸ்ட் எடு நாளைக்கு பார்க்கலாம்” என்று அவர் கூற <br />“இல்ல எனக்கு இப்பவே பார்க்கணும் சைட் எஃபெக்ட் பத்திலாம் எனக்கு கவலை இல்லை சர் எனக்கு உடனே பார்க்கணும்” என்று அவள் கேட்க.<br />“நீ வேணா உன்னை பத்தி கவலை படாம இருக்கலாம் யாழினி பட் எங்களுக்கு இருக்கு நாளைக்கு தான் அதை உன்னால பார்க்க முடியும் லெட்ஸ் கோ கைய்ஸ்” என்றுவிட்டு அவர் எழுந்து சென்று விட அனைவரும் அவரது பின்னே செல்ல<br />“ஹே ப்ளீஸ்” என்ற அவளது கெஞ்சல்கள் எல்லாம் காற்றோடு கரைந்து போனது.<br />அனைவரும் சென்றுவிட எழுந்து அமர்ந்தவள் தன் மொபைலை எடுத்தாள். <br />அதில் அவள் ரெக்கார்ட் செய்ய கனெக்ட் செய்து இருந்த கேமிராவின் ஆப் இருந்தது.<br />அதை ஓபன் செய்தவள் தனது செட் செய்த கேமிராக்களை திரும்ப வரும்படி செய்தாள் அதன்படி இரண்டு கொசு போன்ற கேமிராக்கள் பறந்து வந்தது அவளிடம்.<br />அதனை கனெக்ட் செய்து எல்லா மெமரியும் மொபைலுக்கு மாற்றியவள் அதனை ஆஃப் செய்தாள்.<br />இரண்டு நாட்கள் தனது மொபைல் வேலை பார்த்துக்கொண்டு இருக்கிறதே என்பதை உணர்ந்தவள் அதனை சார்ஜில் போட்டாள்.<br />அப்படியே அதை ப்ளே செய்தாள்.<br />முதலில் அவளை ஆராய்ச்சி அறைக்கு கொண்டு செல்வது தான் இருந்தது.<br />அப்போது முதல் இப்போது வரை ஆருத்ரன் மற்றும் அவளது நண்பர்கள் அவளுடனே தான் இருந்தனர் என்று தெரிந்து அவளுக்கு கண்கள் கலங்கியது.<br />ஆருத்ரன் அவளை விட்டு நாகராமல் அவளது கையை பற்றியபடி இருந்தது அவளுக்கு அவளது தந்தையே அவளுடன் இருந்தது போல இருந்தது.<br />இருந்தாலும் கலங்கினால் தன்னால் எந்த வேலையும் சரியாக செய்ய முடியாது என்று எண்ணியவள்<br />கலங்கிய கண்களை அப்படியே நீரை உள்ளிழுத்து தன் கண்களை சரி செய்தவள் அதை தொடர்ந்து பார்க்கலானாள்.<br />அதை பார்க்க பார்க்க அவளுக்கு அதிர்ச்சியாக இருந்தது.<br />புகை மண்டலம் போன்ற பகுதி அதில் ஐஸ் மலை அவ்வளவு தான் தெரிந்தது. அதன்பின் தன் அக்கா மகள் ஹனிஷா ஏதோ ஒரு கண்ணாடி பெட்டியில் படுத்து இருப்பது போலவும் ஏதேதோ ஒயர்கள் கனெக்ட் செய்யப்பட்டு அவள் உறங்குவது போலவும் அவளை சுற்றி நிறைய மருத்துவர்கள் இருப்பது போலவும் பக்கத்திலேயே இன்னொரு கண்ணாடி பெட்டியில் வேறு ஒரு ஆள் படுத்து இருப்பது போலவும் அவரும் அதேபோல இருப்பது போலவும் அடிக்கடி ஹனிஷாவின் உடல் தூக்கி போடுவதை பார்த்தவளுக்கு <br />“ஹனிஇஇஇ” என்று அழுகையே வந்துவிட்டது.<br />இதையெல்லாம் பார்த்தவள் முன் அவளது அண்ணன் மகள் ஹனிஷாவின் முகம் வந்தது.<br />எழுந்திரு அத்தை அங்கதான் நான் இருக்கேன் நான் சாகலை அத்த.<br />இன்னும் உயிரோட தான் இருக்கேன் ஆனா என்னால எதையும் டச் பண்ண முடியல கரன்ட் ஷாக் அடிக்கிற மாதிரி இருக்கு வலி ஆனா என்னால எழுந்துக்கவே முடியல.<br />என்னை போல நிறைய பசங்க இங்க இருக்காங்க எல்லாரும் இண்டியன்ஸ் வேற.<br />காப்பாத்து அத்த.<br />நான் உன் பக்கத்திலேயே தான் இருக்கேன் ஆனா பேச முடியல உன் கனவுலதான் பேச முடியுது.<br />என்னோட முகத்துல ஏதோ மார்க் இருக்கு அண்ட் என்று நாக்கை காட்டினாள் அதோடு இவள் ஹனிஇஇஇ என்ற அலறலில் ஹனிஷாவின் உருவம் மறைந்து போனது திரையில்.<br />இவ்வளவும் தான் அவளுக்கு தினம் வரும் கனவு.<br />அதைதான் ஏஐ டிகோடிங் செய்து விஷூவலாக அவளுக்கு மாற்றி கொடுத்து உள்ளது.<br />அதிர்ச்சியில் அப்படியே உறைந்து போனவளுக்கு மண்டையே வலிப்பது போல் ஆனது.<br />அவளது மூளை ரெஸ்ட்டே இல்லாமல் இப்போதும் வேலை செய்ததன் பக்கவிளைவு அவளை மயக்கத்திற்கு தள்ள முற்பட உஷாராக தன் மொபைலை லாக் செய்தவள் அப்படியே மயங்கிவிட்டாள்.<br />ஆருத்ரன் அனுப்பிய அந்த கொரியன் பையன் வந்து பார்த்தபோது மொபைல் சார்ஜில் இருந்தது அவளோ தூங்கி கொண்டு இருக்கிறாள் என்று தான் நினைத்தான்.<br />அதையே போய் சொல்லவும் யோசனையோடு ஆருத்ரன் “மொபைல் சார்ஜ்ல இருந்தது ஓகே ஆனா எந்த பொஷிஷன்ல இருந்தது யாழினி பெட் பக்கத்துலயா? இல்ல அவ கையிலயா?” என்றார் அதற்கு அவன் <br />“அவ கையில் இருந்தது சீஃப்” என்று கூற அவசரமாக எழுந்து சென்றார் அவளது அருகில் சென்றவர் அவளை <br />“யாழினி யாழி” என்று எழுப்ப அவளிடம் தூக்கத்தில் இருக்கும் அசைவுகூட இல்லை என்பதை உணர்ந்தவர் உடனே டாக்டரை அழைத்தார்.<br />அவர் வந்து பரிசோதனை செய்து அவர் வீடியோவை பார்த்தாரா என்று விசாரிக்க<br />இல்லை இன்னும் அவளுக்கு காட்டவே இல்லை என்ற பதில் வர உடனே மருந்தை செலுத்தியவர்<br />“அப்போ அவங்க அகெய்ன் அந்த கனவு கண்டாங்க போல அதான் அவங்க ப்ரெயின் ரொம்ப ஸ்டெரியின் ஆகி இருக்கு நல்லா ரெஸ்ட் எடுக்கட்டும். நார்மலா தூங்க முடியல போல மருந்து கொடுத்து இருக்கேன் நல்லா தூங்கட்டும் நர்ஸ் நீங்க கூடவே இருங்க பல்ஸ் அண்ட் பிபி ட்டூ அவர்ஸ் ஒன்ஸ் செக் செய்ங்க” என்று விட்டு <br />“ரொம்ப வீக்கா இருக்காங்க சர் அவங்க ப்ரெயின் ரெஸ்ட்லெஸ் ஆனா மயக்கம் வரும் சர்.<br />இது இந்த டெஸ்ட்டோட சைட் எஃபெக்ட்ஸ் நான் ஒரு டேப்ளட் தர்றேன் அதை இந்த மாதிரி ஆகுற நேரம் கண்டிப்பா எடுத்துக்க சொல்லுங்க”என்றுவிட்டு அவர் செல்ல.<br />தலையில் கைவைத்து உட்கார்ந்து விட்டார் ஆருத்ரன்.<br />“நான் தான் அவளுக்கு இந்த டெஸ்ட் பத்தி சொல்லி தப்பு செஞ்சுட்டேனோ?” என்று பேச<br />“சர் அவ ரொம்ப ஃபோர்ஸ் பண்ணதால தானே இந்த டெஸ்ட்டே செஞ்சீங்க எல்லா எக்ஸ்பீரிமெண்ட்ஸ்லயும் வர்ற டிராபேக்ஸ் தானே சர் இதுலயும் அவளை நல்லா பார்த்துகலாம் சர் டோண்ட் வொர்ரி” என்று எல்லாம் சேர்ந்து அவருக்கு ஆறுதல் அளிக்க<br />அவளைவிட்டு எங்குமே நகராமல் அமர்ந்து விட்டார் ஆருத்ரன்.<br />மற்றவர்களும் அவரோடே அமர்ந்துவிட்டனர்.<br />அப்படியே எல்லோரும் உறங்கிவிட அவளை நர்ஸ் செக் செய்யும் போதெல்லாம் ஆருத்ரனும் சேர்ந்து செக் செய்தார்.<br />அவளது வைட்டல்ஸ் நார்மலாகவே இருப்பதை உணர்ந்தவர் அதிகாலையில் உறங்கி போனார்.<br />காலையில் எல்லோரும் எழ ஆருத்ரனும் யாழினியும் மட்டும் உறங்கி கொண்டிருந்தனர்.<br />ஷிப்ட் நர்ஸ் வர ஏற்கனவே இருந்தவர் போக கிளம்ப ஆருத்ரனை ஒருவன் எழுப்ப போக<br />“அவர் தூங்கட்டும் சர் அவர் நைட்டு ஃபுல்லா தூங்காம அந்த பொண்ணை செக் செஞ்சுட்டே இருந்தாரு.<br />மார்னிங் ஃபைவ் ஓ கிளாக் தான் தூங்கினார்.<br />இன்னும் கொஞ்சம் தூங்கட்டும்” என்று சொல்லி செல்ல அனைவரும் எழுந்து அங்கிருந்த சேரில் அமர்ந்தனர்.<br />அவர்களுக்குள் அமைதியாக பேசியபடி காஃபி ஆர்டர் செய்துவிட்டு அனைவரும் வேலையை துவங்க நீண்ட நேரம் கழித்தே விழித்தனர் இருவரும்.<br />ஆருத்ரன் எழுந்ததும் யாழினியை செக் செய்ய அவளும் எழுந்தாள்.<br />அவளை பரிசோதனை செய்த டாக்டர் இந்த சைட் எஃபெக்ட் எப்போது வேண்டுமானாலும் வரலாம் அதுபோல் ஆவதற்கு முன் இந்த மருந்தை எடுத்தே ஆகவேண்டும் என்று அறிவுரை வழங்கி அனுப்பினார்.</p>]]></content:encoded>
						                            <category domain="https://onlinetamilnovels.com/community/"></category>                        <dc:creator>Jai</dc:creator>
                        <guid isPermaLink="true">https://onlinetamilnovels.com/community/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%a9%e0%af%8b-%e0%ae%aa%e0%af%82%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-jayalakshmi-s/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%a9%e0%af%8b-%e0%ae%aa%e0%af%82%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af/#post-776</guid>
                    </item>
				                    <item>
                        <title>RE: மதுர ஜில்லா... மச்சானே!-46</title>
                        <link>https://onlinetamilnovels.com/community/%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0-%e0%ae%9c%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be-%e0%ae%ae%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a9%e0%af%87-praveena-thangaraj/%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0-%e0%ae%9c%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be-%e0%ae%ae%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a9%e0%af%87-46/#post-775</link>
                        <pubDate>Mon, 27 Jul 2026 01:55:08 +0000</pubDate>
                        <description><![CDATA[Super sis nice epi &#x1f44c; &#x1f60d; iniyan eppo evlo pesuravan edhu ellathukum kaaranam avan dhan nu purinjikkanum&#x1f644; madhurakum edhala periya vali dhan atleast iniyavudhu thirundhi...]]></description>
                        <content:encoded><![CDATA[<p>Super sis nice epi &#x1f44c; &#x1f60d; iniyan eppo evlo pesuravan edhu ellathukum kaaranam avan dhan nu purinjikkanum&#x1f644; madhurakum edhala periya vali dhan atleast iniyavudhu thirundhi vaazha parkanum&#x1f9d0;&#x1f914;</p>]]></content:encoded>
						                            <category domain="https://onlinetamilnovels.com/community/"></category>                        <dc:creator>Dharsinipriya</dc:creator>
                        <guid isPermaLink="true">https://onlinetamilnovels.com/community/%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0-%e0%ae%9c%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be-%e0%ae%ae%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a9%e0%af%87-praveena-thangaraj/%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0-%e0%ae%9c%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be-%e0%ae%ae%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a9%e0%af%87-46/#post-775</guid>
                    </item>
				                    <item>
                        <title>RE: மதுர ஜில்லா... மச்சானே!-46</title>
                        <link>https://onlinetamilnovels.com/community/%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0-%e0%ae%9c%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be-%e0%ae%ae%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a9%e0%af%87-praveena-thangaraj/%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0-%e0%ae%9c%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be-%e0%ae%ae%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a9%e0%af%87-46/#post-774</link>
                        <pubDate>Mon, 27 Jul 2026 01:41:41 +0000</pubDate>
                        <description><![CDATA[இன்னும் தன்னோட பக்கமே பேசறானே அவளுக்கும் அது எவ்வளவு வலி தரும் யாரும் யோசிக்கல]]></description>
                        <content:encoded><![CDATA[<p>இன்னும் தன்னோட பக்கமே பேசறானே அவளுக்கும் அது எவ்வளவு வலி தரும் யாரும் யோசிக்கல</p>]]></content:encoded>
						                            <category domain="https://onlinetamilnovels.com/community/"></category>                        <dc:creator>kothaihari</dc:creator>
                        <guid isPermaLink="true">https://onlinetamilnovels.com/community/%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0-%e0%ae%9c%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be-%e0%ae%ae%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a9%e0%af%87-praveena-thangaraj/%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0-%e0%ae%9c%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be-%e0%ae%ae%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a9%e0%af%87-46/#post-774</guid>
                    </item>
				                    <item>
                        <title>மதுர ஜில்லா... மச்சானே!-46</title>
                        <link>https://onlinetamilnovels.com/community/%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0-%e0%ae%9c%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be-%e0%ae%ae%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a9%e0%af%87-praveena-thangaraj/%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0-%e0%ae%9c%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be-%e0%ae%ae%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a9%e0%af%87-46/#post-773</link>
                        <pubDate>Mon, 27 Jul 2026 01:29:03 +0000</pubDate>
                        <description><![CDATA[அத்தியாயம்-46
     மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட மதுரா மெதுவாக நடந்து வெளியே வந்தாள். உடல் சற்று தேறியிருந்தாலும், மனம் இன்னும் வெறுமையோடு இருந்தது.
&quot;மதுரா... நம்ம வீட்டுக...]]></description>
                        <content:encoded><![CDATA[<p>அத்தியாயம்-46</p>
<p>     மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட மதுரா மெதுவாக நடந்து வெளியே வந்தாள். உடல் சற்று தேறியிருந்தாலும், மனம் இன்னும் வெறுமையோடு இருந்தது.</p>
<p>"மதுரா... நம்ம வீட்டுக்கு வந்துடு மா. அங்கேயே போகலாம்." என்று இளையமதி கெஞ்சினார்.</p>
<p>மதுரா மெதுவாக தலையசைத்தாள். ''இல்லம்மா... இப்பவே நான் அப்பா வீட்டுக்கு வந்துட்டேன்னா, 'வாழாவெட்டியா வந்துட்டா'ன்னு ஊரே பேசும். இன்னும் கொஞ்சம் நாள் போகட்டும். ஒரு வருஷம் எப்படியாவது முடிச்சிட்டு வர்றேன்." என்றாள். </p>
<p>"ஏன்டி... தூரிகா சொல்றா... இனியனிடம் வெற்று பத்திரத்துல கையெழுத்து போட்டுக் கொடுத்திருக்கியாமே. அவன் அதை விவாகர்தது பத்திராமா மாத்திப்பான்னு பேசியிருக்கான்.‌</p>
<p>அப்படியிருக்க அங்கே எதுக்குடி வாழப் போற?" என்று இளையமதி வேதனையோடு கேட்டார்.</p>
<p>மதுரா அவரைப் பார்த்து சிரிக்க முயன்றாள்.</p>
<p>"நீங்க கட்டிக் கொடுத்த வீடும்மா அது. அனுபவிக்க வேண்டியதை அனுபவிச்சுட்டு வர்றேன்." அந்த பதிலைக் கேட்ட இளையமதி கல்யாண சுந்தரம் இருவரும் கண்கலங்கிப் போனார்.</p>
<p>"துறுதுறுன்னு சுத்திக்கிட்டு இருந்த பொண்ணை இப்படி மாத்திட்டானே... இதுல வீட்டுக்கு வாடின்னா கூட இவளும்  வரமாட்டேங்கற. நமக்குக் கிடைச்ச தண்டனைன்னு நம்மளையும் பழி வாங்குறா." என்று அழுதார்.</p>
<p>கல்யாணசுந்தரம் மனைவியின் தோளைத் தட்டினார்.</p>
<p>"ஆசைப்பட்டோம்ல... பெரிய பொண்ணு நல்ல இடத்துல வாழணும்னு. இப்ப விதி என்ன எழுதியிருக்கோ அதைத்தான் அனுபவிக்கறோம்." அதற்கு மேல் யாராலும் பேச முடியவில்லை.</p>
<p>அந்த நேரத்தில் இனியன் காரை கொண்டு வந்து நிறுத்தினான்.</p>
<p>மதுரா எதுவும் பேசாமல் பின்பக்க இருக்கையில் அமர்ந்தாள். அவனுமே அத்தை மாமா பேசியதை செவிக்கொடுக்கவில்லை. அவன் மரம் போல மறித்து இருந்தான். இளையமதி கல்யாண சுந்தர் ஒரு பக்கம் நிலானி வீட்டில் இருக்க அவளையாவது நன்றாக வளர்க்க முனைந்து சென்றனர்</p>
<p>தூரிகாவும் மதுரா இனியனுடன் ஏறினாள். சிறிது தூரம் சென்றபின் மதுரா கண்ணாடி வழியாக, "உன்னை வேண்டும்னா வீட்டுல இறக்கிடவா?" என்று தூரிகாவிடம் கேட்டாள்.</p>
<p>"வேண்டாம் அண்ணி. முதல்ல உங்களை வீட்டுல விட்டுட்டு ரெஸ்ட் எடுக்க வச்சிட்டு அப்புறம் நான் போறேன்."‌ என்றாள்.</p>
<p>மதுரா அதற்குபின் வற்புறுத்தவில்லை. </p>
<p>வீட்டிற்கு வந்ததும் வேல்விழி ஆரத்தி எடுத்துக் கொண்டு உள்ளே அழைத்துச் சென்றார்</p>
<p>"காபி குடிச்சிட்டு படுத்துக்கோ மா." என்று அன்போடு கூறினார். மதுரா அமைதியாகக் காபியைக் குடித்துவிட்டு அறைக்குள் சென்றாள்.</p>
<p>அருளாளனும் வேல்விழியும் அவள் ஓய்வெடுக்கட்டும் என்று வெளியேறினர்.</p>
<p>இனியன் மட்டும், "தூரிகாவை வீட்டுல விட்டுட்டு வர்றேன்." என்று சொல்லிவிட்டு மீண்டும் காரை எடுத்தான்.</p>
<p>தூரிகா காபி குடித்துவிட்டு இனியனுடன் காரில் பயணித்தாள்.‌</p>
<p>"அண்ணா..." என்று இனியனை அழைக்க, கார் ஓட்டியபடி  திரும்பிப் பார்த்தான்.</p>
<p>மதுரா அண்ணியை கஷ்டப்படுத்தாதீங்க அண்ணா." என்றதும் அவன் புருவம் சுருங்கியது. சின்ன பெண் அறிவுரை வேறு கூறப் போகின்றாளென்று.</p>
<p>"அது ரொம்ப நல்ல பொண்ணு அண்ணா. நான் அகிலன் தங்கச்சியா சொல்லலை. எப்படி எடுத்துச் சொல்றதுன்னு தெரியல... ஆனா மதுரா மனசுக்கு இவ்வளவு கஷ்டம் கடவுள் கூட தரக்கூடாது அண்ணா. நாங்க உங்களை எப்பவும் போட்டியாவோ, உங்களை மீறி வளர்ந்து உங்களை மட்டம் தட்டணும்னோ அப்பா நினைச்சதில்லை. அகிலன் அண்ணன் கூட நினைக்கலை. இந்த காவ்யாவை கல்யாணம் கட்டிக்கிட்டது கூட அவங்க தான் அகிலன் அண்ணன் முன்ன வந்து கேட்டுச்சு. அப்ப கூட அண்ணன் மறுத்ததுக்கு என்னென்னவோ சொல்லிடுச்சு‌.</p>
<p>பெரிப்பாவுக்கு என்ன கோபமோ, உங்களுக்கு என்ன கோபமோ, எதையாவது மனசுல வச்சி மதுராவை காயப்படுத்தாதிங்க." என்றதற்கு இனியன் அமைதியாகவே இருந்தான்.</p>
<p>"தயவு செய்து... அண்ணியை அத்துவிடாதீங்க. நல்லா பார்த்துக்கோங்க." இனியன் பதில் சொல்லவில்லை.</p>
<p>ஒரு கணம் தூரிகாவைப் பார்த்தவன், அகிலன் வீட்டிற்கு முன்காரை நிறுத்தினான். தூரிகா பேசியதற்கு எவ்வித பதிலும் உரைக்கவில்லை. </p>
<p>அகிலன் வீட்டில் தேங்காய் மூட்டைகளை எடைபோடும் மின்னணு தராசின் முன் நின்று ஒரு பெட்டியை எடுத்து வைத்து பார்த்துக் கொண்டிருந்தாள் காவ்யா.</p>
<p>"அத்தை... இருபது கிலோ இருக்கு. இன்னும் ஐந்து கிலோ ஏத்தலாமா? வேற ஏதாவது மூட்டை வைக்கணுமா?" என்றதும் மீனாட்சி சிரித்தார்.</p>
<p>"அகிலனைக் கேளும்மா." என்றார் அவர்.‌</p>
<p>"ஏங்க... ஏங்க..." என்றவள், 'பச்..  கூப்பிட்டா அலாவுதீன் பூதம் கணக்கா முன்னாடி வர்றதில்லை.' என்று முனங்கிவிட்டு "அகிலா." என்றாள்.‌</p>
<p>உள்ளிருந்து அகிலன், "ஏலம் விடாத காவ்யா.. வந்துட்டேன்." என்று வந்தான்.</p>
<p>தராசைப் பார்த்தவன், "இருபது கிலோ போதும். அதுக்கு மேல வைக்க வேண்டாம். எல்லா ஊரில் இப்ப எல்லாம் கிடைக்குது. அதோட பத்து நாள் தானே." என்று கடிந்தான்.</p>
<p>தூரிகாவை இறக்கிவிட்டு கிளம்பும் முன் இனியன் இதை காண நேர, தூரிகாவோ கார் கிளம்பாமல் இருக்கவும்,</p>
<p>"இனியன் அண்ணா... நாளை மறுநாள் அகிலன் அண்ணாவும் காவ்யா அக்காவும் வெளிநாடு கிளம்புறாங்க. அங்க அவங்க நாட்ல ரிசப்ஷன் முடிஞ்சு பத்து நாள்ல திரும்பிடுவாங்க. காவ்யா அக்காவோட அப்பா மட்டும் அங்க இருக்கற வேலைகளை முடிச்சுட்டு கொஞ்ச மாசம் கழிச்சு வருவாராம். </p>
<p>  இனியன் அண்ணா.. வீட்டுக்கு வந்துட்டுப் போறீங்களா?" என்று கேட்டாள்.</p>
<p>இனியன் சோர்வாகத் தலையசைத்தான்.</p>
<p>"அப்புறமா வர்றேன்மா... மனசு சரியில்லை. உங்க மதுரா அண்ணி மேல இனி‌ காயப்படுத்தற‌ மாதிரி எதுவும் செய்யமாட்டேன்" என்றான்</p>
<p>அவ்வளவுதான். கார் மீண்டும் மதுரா இருக்கும் வீட்டை நோக்கிப் புறப்பட்டது.</p>
<p>  'அட யார் காரு. இனியன் வந்தானா? அவனை இருக்க சொல்லி காபி டீ போடலாம்ல" என்று மீனாட்சி அப்பொழுது தான் கவனித்து கூற, தூரிகாவோ "பச் அவர் டீ காபி குடிக்கற மூட்ல இல்லை." என்று சின்ன அண்ணனை கண்டு முகம் திருப்பி சென்றாள். </p>
<p>  "இனியன் அண்ணா மூட் சரியில்லைனு அவனிடம்.. சாரி.. சாரி அவரிடமெல்லாம் பேசிட்டு போறா உங்க தங்க. இங்க நீங்களும் தான் அவ பேசலைனு முகம் வாடி இருக்கிங்க. இதெல்லாம் கண்ணுக்கு தெரியாதா? இருந்தாலும் இந்த நாத்தனார் பார்ஷியாலிட்டி பார்க்குதுப்பா" என்று அகிலனிடம் கூறினாள். </p>
<p>  "நாம அதுக்கு ஒன்னும் பண்ண‌ முடியாது. சில நேரம் நாம எதுவும் செய்யாம இருந்தாலே நல்லது நடக்கும்னு சொல்வாங்களே. அது போல விட்டுடணும்" என்றான் அகிலன்.‌</p>
<p>'ம்கூம்.. ஒன்னும் செய்யாம பேபிக்கு தர்ற முத்தம் மாதிரி தந்து எஸ்கேப் ஆகறது. இருடி.. அமெரிக்கால ரிஸப்ஷன் மட்டுமில்ல.. பஸ்நைட்டே கொண்டாடிட்டு தான் திரும்பறது' என்று முடிவெடுத்தவளாக நின்றாள் காவ்யா. </p>
<p>"ஏதாவது சொன்னியா?" என்றான் அகிலன். இல்லை என்று காவ்யா தலையாட்ட அகிலனோ 'ஏதாவது முனங்கிட்டே கிடக்கறது. கேட்டா ஒன்னுமில்லைனு தலையாட்டறது' என்று அவனும் முனங்கினான்.‌</p>
<p>இந்த மூன்று‌ நாட்களாக நன்றாக தான் இருவரும் பேசிக் கொள்கின்றார்கள். அகிலனிடம் செல்லம் கொஞ்சி, சிணுங்கி, அவனை தொட்டு பேசி, அணைத்து கொள்வதெல்லாம் காவ்யா அவளிஷ்டம் போல செய்ய, அகிலன் அவளது கை பிடித்து, தோளில் சாய்த்து, முத்தத்திற்கு பதில் முத்தம் எல்லாம் தந்து அவனால் முடிந்த முதலடிகளை எடுத்து வைத்து முயல்கின்றான். ஆனாலுமே அதை தாண்டி இருவருமே அடியெடுத்து வைக்கவில்லை.</p>
<p>---</p>
<p>  இங்கே வீட்டுக்குள் நுழைந்த இனியன், மதுரா இருந்த அறைக்கதவை மெதுவாகத் திறந்தான்.</p>
<p>   மெத்தையில் சாய்ந்து, ஜன்னல் வழியே வெளியே பார்த்துக் கொண்டிருந்த மதுரா, இனியன் காலடி சத்தம் கேட்டு மெதுவாகத் திரும்பினாள்.</p>
<p>இருவருக்கும் இடையே சில நொடிகள் அமைதியே பேசிக் கொண்டிருந்தது.</p>
<p>   இனியனே பேச்சை ஆரம்பித்தான். "உடம்பு பரவாயில்லையா?" என்று கேட்டான்.</p>
<p>"ம்." என்று மட்டும் தலையசைத்தாள். சில நிமிடம் அவன் உடலை பற்றி கேட்கவும், "ஒன்னா இருக்கறதுக்கு இன்னும் ஒரு மாசம் ஆகட்டும்னு டாக்டர் சொன்னாங்க" என்றாள். </p>
<p>திடீரென்று இனியன் சிரித்தான்.</p>
<p>அந்தச் சிரிப்பில் சந்தோஷம் இல்லை. வலி மட்டுமே இருந்தது.</p>
<p>"ஏன்.. மறுபடியும் ஏதாவது குழந்தை உருவானா அழிக்கணுமா? அவ்வளவு ஆர்வமா" என்றதும் மதுரா அவ்வார்த்தையில் துடித்தாள்.</p>
<p>"அன்னிக்கு கிச்சன்ல ரத்த வெள்ளத்தில இருந்தியே டி. அப்பவே என் பாதி உயிர் போயிடுச்சு. இதுல டாக்டர்... 'குழந்தைய காப்பாத்த முடியல'ன்னு சொன்னப்ப..." என்றவன் குரல் தடைப்பட்டது.</p>
<p>"என் காதுல எதுவுமே விழல. செத்துட்டேன்டி.. செத்துட்டேன்" என்றவன் கண்களை மூடி நின்றவன், "என்னோட குழந்தை..." என்று சொல்லிவிட்டு சுவரில் தன் கையை வைத்து குத்துவிட்டான்.‌</p>
<p>  சுவரில் அவன் கை முஷ்டி இடிபோல இடித்ததை கண்டு பயந்தாள்.</p>
<p>"என்னோட ரத்தத்துல உதிக்கும் என்ற ஒரே காரணத்துல அழிச்சிட்டியே" என்றான். </p>
<p>அவன் குரல் கரகரத்தது.</p>
<p>"ஒரு தடவையாவது... ஒரே ஒரு தடவையாவது... அந்த குழந்தை பிறந்து வளர்ந்தா எப்படி இருந்திருக்கும்னு யோசிச்சியா? அந்த குழந்தை பொண்ணா.. பையனா...? என் மூக்கு மாதிரி இருக்குமா? உன் கண் மாதிரி இருக்குமா ஏதாவது யோசிச்சியா? இந்த உலகத்துல உன்னையும் என்னையும் மாதிரி அப்பா அம்மா கிடைப்பாங்கனு தெரியாமலேயே ரத்தத்தோட ரத்தமா அனுப்பிட்ட." என்று தலையைப் பிடித்துக் கொண்டான்.</p>
<p>அவன் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது. அந்த அழுகையைப் பார்த்த மதுராவின் விரல்கள் நடுங்கின. இனியனுக்கும் அவனது குடும்பத்துக்கும் தரப்படும் தண்டனை என்று தான் மதுரா நினைத்தது. ஆனால் அவளுக்கு டி.என்.சி செய்தப் பொழுது அவளுக்கு காட்டப்பட்ட சிறு உருவமற்ற வட்டவடிவ உயிரை கண்டு அவளுமே துடித்துவிட்டாள். </p>
<p>அந்த வலியும் வேதனையும் அனுபவித்த வலியினால் எதுவும் பேசவில்லை.</p>
<p>சில நொடிகளுக்குப் பிறகு இனியன் முகத்தைத் துடைத்துக் கொண்டான்.</p>
<p>"உன்னை மட்டும் திட்டணும் கொல்லணும்னு மனசு சொல்லுது. ஆனா... நீ இப்படி ஆகற அளவுக்கு காரணம் யாருன்னு யோசித்தா நானும் தானே குற்றவாளி. உன்னை ஒவ்வொரு நாளும் வார்த்தையால கொன்றிருக்கேன், பயமுறுத்தி இருக்கேன்.. உனக்குனு என் மேல நம்பிக்கையே இல்லாம நடந்திருக்கேன். உ..உன்.. உன்னை கற்பழிச்சிருக்கேன் ரைட்.. அதனால தானே நீ.. எனக்கு பெரிய தண்டனை தந்துட்ட... என் கு..குழந்" என்றவனால் அந்த வார்த்தையைச் சொல்ல முடியவில்லை.</p>
<p>திடீரென்று கண்களைத் திறந்தான். இனியன் பார்வை மீண்டும் கடினமாயிற்று. வேகமாக பீரோவை திறந்து அன்று இவளிடம் வெத்து பத்திரத்தில் வாங்கிய கையெழுத்தை கொண்டு வந்து சுக்குநூறாக கிழித்து அவள் கண்ணெதிரே வீசினான். </p>
<p>"பாரு... ஒன்னுமே எழுதாத பத்திரம். வெத்து பத்திரம். இதுல கையெழுத்து வாங்கியதால உன்னை விட்டுடுவேன்னு முடிவே கட்டிட்டல்ல.. நான் தான் அப்படி பேசியது. உன்னிடம் முரட்டுத்தனமா நடந்தது. நீயா முரண்டு பிடிக்காம வந்தப்பிறகு, நான் ஏதாவது உன்னை அடிச்சேன்? காயப்படுத்தினேன்? டீயை ஊத்தியதும் உங்கப்பா போலீஸை அழைச்சிட்டு வந்ததும் அதுக்கு பிறகு நான் உன்னிடம் கேவலமா நடந்துக்கிட்டேன்னு எனக்கே புரியவும் அந்த மாதிரி ஆக்டிவிட்டிஸை குறைச்சிட்டேனே. </p>
<p>  அதெல்லாம் நீ யோசிக்கவேயில்லை. உன்னை கட்டிக்கிட்ட முறை பழிவாங்க என்றதாலும், உன்னிடம் முதல்ல சில நாள் முரட்டுத்தனமா நடந்துக்கிட்டதாலும் மட்டும் தண்டிச்சிட்ட. என்னை தண்டிச்சிட்ட.. இல்லை.. நம்ம குழந்தையை ஏன்டி தண்டிச்ச?உனக்கு என் மேல கோபமிருந்தா, வெறுப்பிருந்தா, பழிவாங்கற எண்ணம் உருவாகினா, என்னை தண்டிக்க, எவ்வளவோ வழி இருக்கே. என்னை உங்கப்பா கூட்டிட்டு வந்த போலீஸ்ல மாட்டி விட்டு கம்பி என்ன வச்சியிருக்கலாமே. இல்லை நீயே போலீஸ் ஸ்டேஷன் போய் கம்பிளைன் பண்ணிருக்கலாம். </p>
<p>எனக்கு சோத்துல விஷம் வச்சிருக்கலாமே. இல்லையா.. வாழவெட்டியா நீ மட்டுமா இருக்க போற. எனக்கும் அதே பெயர் பொண்டாட்டி விட்டுட்டு போயிட்டானு பெருமையா சொல்லற மாதிரி மாத்தியிருக்கலாமே.</p>
<p>  ஒரு தப்பும் செய்யாத நம்ம குழந்தையை ஏன்டி பலியாக்கின? அந்த உயிரை உருத்தெரியாம பண்ண வேண்டிய அவசியம் என்ன?" என்றதும், மதுராவின் கண்களிலும் கண்ணீர் வழிந்தது.</p>
<p>"நா..நான்..." என்று தொடங்கினாள் மதுரா.</p>
<p>இனியன் உடனே கையை நீட்டி தடுத்தான். "வேண்டாம். இப்ப எந்த விளக்கமும் வேண்டாம். என்னால கேட்க முடியாது. உன் மேல கோபப்படணும்னு தோணுது. அதே நேரம்... உன்னை இந்த நிலைக்கு கொண்டு வந்தது நான் என்பதால் அதையும் பண்ண முடியலை. என்னையே நான் வெறுக்க ஆரம்பிச்சிட்டேன் டி" என்றான்.‌</p>
<p>இனியன் மெதுவாக கதவை நோக்கி நடந்தான். கைப்பிடியில் கை வைத்தபடியே நின்று, "இப்ப நீ செய்த தப்புக்கு உன்னை மன்னிக்கிற நிலையிலையும் நான் இல்ல... உன்னை தண்டிக்கிற மனநிலையிலையும் நான் இல்ல. நான் செய்த தப்புக்கா நீ தந்த தண்டனையை தாங்கமுடியாம, இப்ப என்னையே புரிஞ்சிக்க முடியாமவும் நிக்கறேன்." என்று சொல்லிவிட்டு வெளியேறினான்.</p>
<p>மதுரா அப்படியே அமர்ந்திருந்தாள். அவன் சென்ற கதவையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவளது கண்ணீர் மட்டும் அமைதியாக வழிந்தது.</p>
<p>உண்மை தானே.. ஒரு பாவமும் அறியாத குழந்தையை ஏன் தண்டித்தோம். தனக்கே தண்டனையாக அல்லவா இந்த வலி உணர்த்தி விட்டதேயென துடித்தாள். </p>
<p>-தொடரும். </p>
<p>-பிரவீணா தங்கராஜ்</p>
<p>Kindly Register Login To Read. </p>
<p>Thank u Readers </p>]]></content:encoded>
						                            <category domain="https://onlinetamilnovels.com/community/"></category>                        <dc:creator>Praveena Thangaraj</dc:creator>
                        <guid isPermaLink="true">https://onlinetamilnovels.com/community/%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0-%e0%ae%9c%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be-%e0%ae%ae%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a9%e0%af%87-praveena-thangaraj/%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0-%e0%ae%9c%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be-%e0%ae%ae%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a9%e0%af%87-46/#post-773</guid>
                    </item>
							        </channel>
        </rss>
		