<?xml version="1.0" encoding="UTF-8"?>        <rss version="2.0"
             xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
             xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
             xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
             xmlns:admin="http://webns.net/mvcb/"
             xmlns:rdf="http://www.w3.org/1999/02/22-rdf-syntax-ns#"
             xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/">
        <channel>
            <title>
									வால்கனோ பூக்கள் - Jayalakshmi. S - onlinetamilnovels.com Forum				            </title>
            <link>https://onlinetamilnovels.com/community/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%a9%e0%af%8b-%e0%ae%aa%e0%af%82%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-jayalakshmi-s/</link>
            <description>onlinetamilnovels.com Discussion Board</description>
            <language>en-US</language>
            <lastBuildDate>Mon, 27 Jul 2026 04:40:07 +0000</lastBuildDate>
            <generator>wpForo</generator>
            <ttl>60</ttl>
							                    <item>
                        <title>வால்கனோ பூக்கள் அத்தியாயம் - 5</title>
                        <link>https://onlinetamilnovels.com/community/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%a9%e0%af%8b-%e0%ae%aa%e0%af%82%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-jayalakshmi-s/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%a9%e0%af%8b-%e0%ae%aa%e0%af%82%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af-2/</link>
                        <pubDate>Mon, 27 Jul 2026 02:05:40 +0000</pubDate>
                        <description><![CDATA[அத்தியாயம் - 5Dmitri Korenov (டிமிட்ரி கொரேநவ்)சுவிஸ் பெடரல் கவர்மெண்ட்டின் அறிவியல் மற்றும் அது சார்ந்த ஆராய்ச்சியின் டைரக்டர் மற்றும் டெபுட்டி டைரக்டர் ஸ்டேட் செக்ரட்டரி ஃபார் எஜூகேஷன் ரிச...]]></description>
                        <content:encoded><![CDATA[<p>அத்தியாயம் - 5<br /><br />Dmitri Korenov (டிமிட்ரி கொரேநவ்)<br /><br />சுவிஸ் பெடரல் கவர்மெண்ட்டின் அறிவியல் மற்றும் அது சார்ந்த ஆராய்ச்சியின் டைரக்டர் மற்றும் டெபுட்டி டைரக்டர் ஸ்டேட் செக்ரட்டரி ஃபார் எஜூகேஷன் ரிசர்ச் அண்ட் இன்னோவேஷன்(நம்ம ஊர்ல எம்பி மாதிரி)<br />அந்த துறையில் எல்லா அதிகாரமும் மிக்கவர்.<br />அறிவியல் துறை சார்ந்த ஆராய்ச்சிகளுக்கு அனுமதி வழங்குதல் மற்றும் அதற்கான பட்ஜெட்டை ஒதுக்கீடு செய்து கொடுத்தல் மற்றும் ஆராய்ச்சி சம்பந்தப்பட்ட வெளிநாட்டு தொடர்புகளை ஏற்படுத்ததுதல்.<br />இது எல்லாம் அவர் ஒருவர் கையில்தான்.<br /><br />அவரை சந்திக்க அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி இருந்தான் ஆட்ரியன் கிம்.<br />அவரது அலுவலகத்திற்கு வந்து நின்றவன் தான் வாங்கிய அப்பாயிண்ட்மெண்ட்டை காட்டினான்.<br />அவனது ஐடி மற்றும் இதர பொருட்களை செக் செய்த பாதுகாப்பு அதிகாரிகள் அவரை உள்ளே செல்ல அனுமதித்தனர்.<br /><br />அங்கு உள்ளே மாளிகை போன்ற பகுதியில் போடப்பட்டிருந்த இருக்கையில் அமர சொன்னார்கள்.<br />சமத்தாக சென்று அமர்ந்தான் ஆட்ரியன்.<br /><br />(அவங்க ஆங்கிலத்தில் பேசினாலும் நாம தமிழ்லேயே கேட்போம்)<br /><br />“நான் சர்க்கு இன்ஃபார்ம் பன்றேன் சர் கூப்பிடுவாங்க” என்றுவிட்டு ரிசப்ஷனிஸ்ட் சென்றுவிட அந்த மாளிகையை சுற்றி ஒரு தரம் பார்வையை ஓடவிட்டான்.<br />அதன்பின் தன் மொபைலை எடுத்து இன்ஸ்டாகிராம் நோண்ட ஆரம்பித்து விட்டான்.<br />நிறைய ரீல்ஸ் பார்த்தவன் வரிசையாக சிலவற்றை ரீபோஸ்ட் செய்து வைக்க அவனுக்கே அவனது பையித்தியக்காரத்தனத்தை எண்ணி சிரிப்பு தான் வந்தது.<br />இருக்கும் இடம் கருதி தன் புன்னகையை சுருக்கிக்கொண்டான்.<br />பத்து நிமிடங்கள் கழித்து அவனிடம் வந்த டிமிட்ரியின் உதவியாளர் அவனை அழைத்தார்.<br />எழுந்தவன் அவர் கைகாட்டிய திசையில் அவர்பின் நடந்தான்.<br />அது அரச மாளிகை என்பதால் பழையகால மாடல்படி இருந்தது.<br />ஆனால் கிட்டத்தட்ட ஒரு அரை கிலோமீட்டர் நடந்து செல்ல வேண்டி இருக்கும் போல.<br />‘ஏன்டா இதுல நடந்துமா நீங்க இம்மாம் பெருசா இருக்கீங்க? நாம வேணா ரன்னிங் செய்வோமா? இவன் செத்துடுவானே’ என்று எண்ணியபடிதான் நடந்தான்.<br />நேரே நடந்தவர் வலதுபுறம் திரும்பி ஒரு அறையின் வாசலில் நின்று கதவை லேசாக தட்டியவர் திறந்தார்.<br /><br />பிஏ மட்டும் தான் கொஞ்சம் ஃபிட்டாக இருந்தார் டிமிட்ரி இல்லை மற்ற யாருமே அங்கு ஒல்லியாக இல்லை.<br />எல்லாரும் கொஞ்சம் கொழுக் மொழுக்காகவும் டிமிட்ரி ஒரு அயல்நாட்டில் பிறந்தவர் என்பதால் கொஞ்சம் கருப்பாகவும் இருந்தார்.<br />உள்ளே சென்றவனை டிமிட்ரி ஹாய் சொல்லி கை நீட்ட அவனும் கை நீட்டினான் அதை பிடித்து குலுக்கியவர்.<br />“உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி ஆட்ரியன்.<br />நானும் உங்க ஃபேன்ஸ்ல ஒருத்தன்.<br />நீங்க கேஸ் எடுத்து ஹாண்டில் செய்யும் விதம் அவ்ளோ நல்லா இருக்கும்” என்றவர்<br />மேலும் “அதனாலதான் இந்த சிக்கலான கேஸைகூட உங்ககிட்ட கொடுக்க சொல்லி ரிக்குவஸ்ட் கொடுத்தேன்” என்று சொல்ல.<br />‘அப்போ என்னை தூங்கவிடாம செஞ்ச படுபாவி நீதானா? கிராதகா’ என்று மனதில் திட்டியவன் வெளியே லேசான சிரிப்பை உதிர்த்து<br />“ரொம்ப நன்றி சர். ஆனால் இது மருத்துவ ஆராய்ச்சி சம்பந்தப்பட்ட விஷயம் அதான் உங்ககிட்ட கொஞ்சம் டீடெயில்ஸ் கேட்டுட்டு போகலாம்னு வந்தேன்” என்று அவன் நிறுத்த <br />“ஓஓஓ ஷியூர் மிஸ்டர் கிம் ப்ளீஸ் உட்காருங்க” என்று சொன்னவர் தானும் அமர்ந்தார்.<br />“சொல்லுங்க என்ன சாப்பிடுறீங்க?” என்று டிமிட்ரி கேட்க<br />“ஒன் ஐஸ்டு அமெரிக்கானோ ப்ளீஸ் சர்” என்றான் பட்டென்று இதுவரை வந்தவர்கள் யாரும் அவர்முன் இப்படி பேசியதில்லை அதனால் சற்று ஜெர்க் ஆனவர் தன் பிஏவை பார்க்க <br />“எஸ் சர்” என்றபடி நகர்ந்தார்.<br />“சரி சொல்லுங்க ஆட்ரியன் என்கிட்ட இந்த கேஸ்ல என்ன டீடெயில்ஸ் கேட்கணும். உங்களுக்கு யார்மேலயாவது சந்தேகம் வந்து இருக்கா? அதுக்கு நான் ஏதாவது ஹெல்ப் செய்யணுமா? சீக்கிரம் இந்த கேஸை சால்வ் செய்யுங்க ஆபீசர்” என்று கேட்க<br />“எஸ் சர் என்னால முடிஞ்சவரை முயற்சி செய்யுறேன் ஆனா மண்டை சூடாகுறது தான் மிச்சம் இந்த கேஸ்ல ஒரு சின்ன க்ளூ கூட கிடைக்க மாட்டேங்குது சர்” என்று ஆட்ரியன் பேசியபடி அவரை ஓரக்கண்ணால் பார்க்க அவரது முகத்தில் ஒரு ஏளனசிரிப்பு வந்தது.<br />உடனே அதை சோகமாக மாற்றியவர்<br />“எக்ஸ்பெர்ட் போலீஸ் அண்ட் டிடெக்டிவ் நீங்களே இப்படி சொன்னா எப்படி ஆபீசர்?” என்று டிமிட்ரி கேட்க.<br /><br />“ஐயம் ட்ரையிங் மை பெஸ்ட் சர்.<br />இதுல உங்கமேல கூட எங்களுக்கு சந்தேகம் வரலாம் சர் அதான் முன்னமே உங்ககிட்ட தகவல்களை கேட்டு தெரிஞ்சுக்கலாம்னு வந்தேன்” என்று ஆட்ரியன் பேச<br />சற்று அதிர்ந்தவர்<br />“ஓஓ இது என் துறை சம்பந்தப்பட்ட விஷயம் அதுவும் இல்லாமல் இது என் எல்லையில் நடந்த கிட்நாப்னு சந்தேகம் என்மேல வரும்தான் ஒன்னும் செய்யுறதுக்கில்லை.<br />நீங்க என்மேல சந்தேகப்பட்டா கூட அதிகாரமா விசாரிங்க ஆபீசர் கிம் உங்களுக்கு வேண்டிய எந்த தகவலா இருந்தாலும் நான் கொடுக்கிறேன்” என்றார் அவர்.<br /><br />“தேங்க்யூ சர் இந்த வார்த்தை போதும் சர் எப்படியாவது இதை கண்டுபிடிக்க நான் கஷ்டப்படுவேன் சர்.<br />என் முதல் கொஸ்டின்<br />உங்களோட அனுமதியோட என்ன என்ன சயின்ஸ் அண்ட் மெடிக்கல் ஆராய்ச்சி நடக்குதுனு தெரியனும் சர்?” என்று ஆட்ரியன் கேட்க<br />உடனடியாக பதில் கொடுத்தார் டிமிட்ரி.<br />“சயின்ஸ் சம்பந்தமா நாசா விஞ்ஞானிகள் கூட சேர்ந்து நம்ம சேட்டிலைட் ஆராய்ச்சி அண்ட் அணுகுண்டு சோதனைங்க அப்புறம் எஜூகேஷன்ல என்னலாம் புதுமை செய்யலாம் பசங்க ஈஸியா படிக்க என்னலாம் செய்யலாம்னு டிஸ்கஷன்ஸ் போகுது ஆபீசர்.<br />மெடிக்கல் லைன்ல நிறைய லோ பட்ஜெட் மருந்துகள் கண்டுபிடிக்க ஆராய்ச்சி நடக்குது. அண்ட் அகெய்ன் கொரோனா ரேபிஸ் போல கொடிய வியாதிகள் வந்தா அதை எப்படி தடுக்கணும் குறைந்த செலவுல தடுப்பூசிகள் கண்டுபிடிக்கவும் ஆராய்ச்சி நடந்துட்டு இருக்கு ஆபீசர்” என்று அவர் கூறி முடிக்க <br />அந்நேரம் கதவை தட்டிவிட்டு உள்ளே வந்த அவரது பிஏ இருவருக்கும் பானங்களை வழங்கினார். எடுத்து கொள்ளும் படி கைகாட்டிய டிமிட்ரி அவருக்கு மட்டும் தேநீர் எடுத்துக்கொண்டார்.<br /><br />“கென்ரி இவருக்கு நம்ம அப்ரூவல் செஞ்ச ஆராய்ச்சி டீடெயில்ஸ் ஃபைல் கொடுங்க அண்ட் அந்த ஆராய்ச்சி சம்பந்தப்பட்ட சீஃப் டைரக்டர்ஸ் கான்டாக்ட்ஸ்ஸூம் கொடுங்க இதோட நம்ம ஹெட் குவாட்டர்ஸ்ல நடக்குற வேலை டீடெயில்ஸ்ஸூம் கொடுத்துடுங்க அப்படியே என் பர்சனல் நம்பரும் கொடுத்துடுங்க.<br />அண்ட் இவர் எப்போ வந்தாலும் அவரை டைரக்டா என்னை பார்க்க கூட்டிட்டு வாங்க” என்றவர் ஆட்ரியனிடம் திரும்பி<br />“போதுமா சர் வேற ஏதாவது டீடெயில்ஸ் வேணுமா?” என்று கேட்க.<br />ஐஸ்டு காபியை அழகாய் பருகியவன் எழுந்து<br />“எஸ் சர் உங்க அண்டர்ல இருக்குற ஸ்டேட் லிமிட் டீடெயில்ஸ்ம் வேணும் பிகாஸ் அதுக்கு மேல நான் இன்வெஸ்டிகேட் செய்யணும்னா அந்த டைரக்டர் பர்மிஷன் வாங்கணும்ல அதுக்குத்தான் சர்” என்று அவன் விளக்க.<br /><br />“ஓ ஷியூர் ஆபீசர்” என்றபடி தன் பிஏவை பார்த்தவர் <br />“அவர் கேட்ட டீடெயில்ஸ்ம் கொடுத்திடுங்க கென்ரி” என்றபடி தன் டேபிள் மேல் பார்த்தவர் <br />“நான் சொன்ன லெட்டர் ஹெட் குவாட்டர்ஸ்க்கு நீங்களே டைரக்ட்டா கொண்டு போய் கொடுத்திடுங்க கென்ரி.<br />பை தி வே எனக்கு ஒரு அர்ஜெண்ட் மீட்டிங் இருக்கு ஆபீசர் கிம் ஷெல் ஐ லீவ் நவ்?” என்று கேட்க.<br />“ஷியூர் சர் மை ப்ளஷர் ட்டூ மீட் யூ” என்றவன் அந்த பிஏவை பார்க்க ஒரு அட்டை போன்ற பேப்பரை ஒரு கவருக்குள் போட்டுக்கொண்டு இருந்தார் அவர் <br />“ஹான் மிஸ்டர் கென்ரி நான் கேட்ட டீடெயில்ஸ் என் ஆபீஸ்க்கு அனுப்பிடுங்க ப்ளீஸ் ஐ ஹாவ் ட்டூ கோ நவ்” என்று கேட்க<br />“ஷியூர் சர்” என்று சொல்ல <br />“தேங்க்யூ அண்ட் தேங்க்ஸ் ஃபார் யுவர் கோ ஆபரேஷன் சர் பை” என்று விட்டு கிளம்பிவிட்டான்.<br /><br />அவன் சென்றதை உறுதிபடுத்திக்கொண்டு வந்த கென்ரி<br />“ரொம்ப திமிரா அர்ரோகண்ட்டா இருக்காரே சர் இவரையா இந்த கேஸ்ல இன்வால்வ் செஞ்சீங்க?” என்று கேட்க.<br />“அவன் அப்படித்தான் அவனோட திமிராலேயே அவன் நிறைய விஷயங்களை மிஸ் செய்வான் அதுக்குள்ள நாம நம்ம வேலையை முடிச்சுடுவோம் அதுக்குத்தான் அவனுக்கு இந்த வேலை.<br />அவனால இதுல ஒரு சின்ன துரும்ப கூட கண்டுபிடிக்க முடியாது.<br />கேஸை அவனே டிஸ்மிஸ் செய்ய வெச்சுடுவான் பாரு கென்ரி” என்றவர் கிளம்பி கென்ரியோடே சென்றார் இருவரும் சென்றது முதலில் ஹெட் குவாட்டர்ஸ்க்கு அதன்பின் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் Matterhorn glacier பகுதிக்கு சென்றனர்.<br />அங்கு மறைவிடத்தில் ஒரு ஆறு போன்ற பகுதியில் நகர்ந்த ஹெலிகாப்டர் உடனே கிளம்பிவிட்டது.அந்த ஆறு அருவி போல பாயும் அந்த ஆற்றின் குறுக்கே உள்ளே சென்று மறைந்தது.<br />அங்கு தரையிறங்கிய இருவரையும் வந்து வரவேற்றார் ஒரு தமிழ் மருத்துவர்.<br />“வெல்கம் சர்” என்று டிமிட்ரியை வரவேற்றார் அந்த மருத்துவ சயின்டிஸ்ட்.<br />“ம்ம் ஹவ் ஈஸ் தட் கிட்? ஈஸ் தேர் எனிதிங் ஆன் திஸ் கேஸ் எக்ப்ரிமெண்ட்?” என்று கேட்க<br />“நோ சர் அந்த ஒரு பொண்ணு தவிர மத்த பசங்க எல்லாம் சோல்(soul) பிரிஞ்சு திரும்ப சேரக்குள்ள இறந்துடுறாங்க சர் அந்த ஒரு பொண்ணு மட்டும் தான் கோமால இருக்கு” என்று அவர் விளக்க.<br /><br />“ம்ம் பட் சோல் பிரிஞ்சும் அந்த பொண்ணு மட்டும் எப்படி உயிரோட இருக்கு? உங்க ஃபார்முலா எல்லாம் ரிவைஸ் செஞ்சீங்களா? ஒன்ஸ் எல்லாம் செக் செய்யுங்க எனக்கு இது ரொம்ப முக்கியமான ப்ராஜெக்ட் இதை நம்பி என்கிட்ட எத்தனை கண்ட்ரீஸ் இன்வெஸ்ட் செஞ்சு இருக்காங்க தெரியுமா? இது மட்டும் சக்ஸஸ் ஆச்சு ஆல் கண்ட்ரீஸ் என் முன்ன பிச்சை எடுக்கும்.<br />இண்டியன் கேர்ள் கிட் க்கு எவ்ளோ வேல்யூ வரும் தெரியுமா? ஆல்ரெடி பிளாக் மார்கெட்ல இண்டியன் கேர்ள்ஸ் செக்ஸ்க்காக தான் பாப்புலர் இந்த எக்ஸ்பிரீமெண்ட் மட்டும் ஓகே ஆகிட்டா நான் தான் இண்டியன் கேர்ள்ஸ் சப்ளையர்ஸ்க்கு காட் ஃபாதர்” என்றவர் தன் பிஏவை பார்க்க அவர் ஒரு கவரை நீட்டினார்.<br />அதை வாங்கி அவரிடம் நீட்டியவர் <br />“இதுல ஃபார்முலா வேறமாதிரி எழுதி இருக்கு டெஸ்ட் செஞ்சு பார்” என்றவர் உள்ளே செல்ல அருவியின் உள்ளே செல்ல செல்ல பனி சூழ்ந்த பகுதியின் கீழ் அரண்மனை போன்ற கண்ணாடியால் ஆன ஒரு கட்டிடம் இருந்தது.<br />உள்ளே செல்ல அவர் பின்னே அனைவரும் செல்ல அந்த மருத்துவர் கைரேகை வைக்க கண்ணாடி கதவு திறந்தது.<br />உள்ளே சென்றவர்கள் பார்த்தது.<br />அங்கு கண்ணாடி பெட்டிக்குள் தலை முழுவதும் ஒயர்களும் எலெக்ட்ரானிக் டிவைஸ் கருவிகளும் பொறுத்தப்பட்டு சுவாசம் மட்டும் வந்து செல்ல கோமாவில் படுக்க வைக்கப்பட்டு இருந்த ஹனிஷாவை தான்.<br />பக்கத்தில் அதே போன்ற பெட்டில் கிளாரா இருக்க அவள் அப்போது தான் இறந்துவிட்டாள் என்று சுவாச கருவியை அகற்றினர்.</p>]]></content:encoded>
						                            <category domain="https://onlinetamilnovels.com/community/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%a9%e0%af%8b-%e0%ae%aa%e0%af%82%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-jayalakshmi-s/">வால்கனோ பூக்கள் - Jayalakshmi. S</category>                        <dc:creator>Jai</dc:creator>
                        <guid isPermaLink="true">https://onlinetamilnovels.com/community/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%a9%e0%af%8b-%e0%ae%aa%e0%af%82%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-jayalakshmi-s/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%a9%e0%af%8b-%e0%ae%aa%e0%af%82%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af-2/</guid>
                    </item>
				                    <item>
                        <title>வால்கனோ பூக்கள் அத்தியாயம் -4</title>
                        <link>https://onlinetamilnovels.com/community/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%a9%e0%af%8b-%e0%ae%aa%e0%af%82%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-jayalakshmi-s/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%a9%e0%af%8b-%e0%ae%aa%e0%af%82%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af/</link>
                        <pubDate>Mon, 27 Jul 2026 02:04:16 +0000</pubDate>
                        <description><![CDATA[அத்தியாயம் - 4அவளை ரெஸ்ட் எடுக்க சொல்ல அவளால் தூங்க முடியவில்லை.“ஹனி ஹனி” என்று புலம்பியபடியே இருந்தாள்.அருகில் இருந்த டாக்டர் அவளுக்கு லேசான மயக்கமருந்தை செலுத்த அதன் வீரியத்தில் உடனே உறங்க...]]></description>
                        <content:encoded><![CDATA[<p>அத்தியாயம் - 4<br /><br />அவளை ரெஸ்ட் எடுக்க சொல்ல அவளால் தூங்க முடியவில்லை.<br />“ஹனி ஹனி” என்று புலம்பியபடியே இருந்தாள்.<br />அருகில் இருந்த டாக்டர் அவளுக்கு லேசான மயக்கமருந்தை செலுத்த அதன் வீரியத்தில் உடனே உறங்கி போனாள்.<br />அவள் எழும்போதெல்லாம் சுவாசிக்க சிரமம் படுவதால் ஆக்ஸிஜன் ஸ்பீட் கம்மி செய்து அவளுக்கு செலுத்தப்பட்டது.<br /><br />“ஏன் சர் இப்படி இருக்கா?” என்று ஆருத்ரனிடம் அவளது அந்த கொரியன் ப்ரண்ட் கேட்க<br />“தூக்கத்திலேயும் அவளது மூளை ரொம்ப வேலை செஞ்சுட்டு இருந்ததுல அதனால தான் இப்படி இருக்கா நல்லா தூங்கி எழுந்தா சரி ஆகிடுவா ஆனா அவதான் சரியா தூங்குறது இல்லையே அதான் வீக்கா இருக்கா அதுக்குத்தான் அவளுக்கு கம்மியான சடைன் கொடுத்து இருக்கேன் கொஞ்சம் நல்லா தூங்குவா.<br />ஓகே நீங்க போங்க நான் அவளை பார்த்துக்கிறேன்” என்று அவர் சொல்ல <br />“இல்ல சர் நாங்களும் இருக்கோம் ப்ளீஸ்” என்று கேட்க அவள்மீது அவர்களது பாசத்தை உணர்ந்தவர்.<br /><br />“ஓகே வொர்க் ஹியர்” என்று சொல்லி விட்டு அவரும் தன் லேப்டாப்போடு அமர்ந்து விட்டார்.<br />நம் மூளைக்கு போதிய அளவு உறக்கமும் ஆக்ஸிஜனும் கிடைக்காவிட்டால் நம்மால் எந்த வேலையும் செய்ய முடியாது எதையும் சரியாக யோசிக்கவும் முடியாது.<br />அப்படி ஒரு மனநிலையில் தான் இருந்தாள் யாழினி.<br /><br />அதனாலேயே அவளுக்கு மயக்கமருந்து கொடுத்து உறங்க வைத்தனர்.<br /><br />அங்கு,<br />தனக்கு வந்த ஈமெயிலை பார்த்தவனுக்கு இதில் பெரிய தலை ஏதோ வேலை செய்கிறது அதனால்தான் இது இவ்வளவு இரகசியமாக யாருக்குமே தெரியாமல் இருக்கிறது இதை கண்டுபிடிப்பதற்குள் தனக்கு பெரிய பெரிய ஆபத்துகள் வரப்போகிறது என்பதை மட்டும் உணர்ந்தவன்.<br />அவர்கள் வழியாக தான் இன்வெஸ்டிகேட் செய்வதை பார்த்தால் நிச்சயம் இது எல்லோருக்கும் ஆபத்தை விளைவிக்கும் அதனால் அவர்களது வழியை விட்டு வேறு வழியில் தான் விசாரணையை துவக்க வேண்டும் என்று உணர்ந்தவன்.<br />ஒரு பெருமூச்சை விட்டு தனக்கு வந்த மெயிலை டெலீட் செய்தவன் தனது பேக்பேக்கை மாட்டிக்கொண்டு கிளம்பிவிட்டான்.<br />எங்கு என்று பார்த்தால் டிரக்கிங்கும் பங்கி ஜம்ப்பிங்கிற்கும் சென்றுவிட்டான்.<br /><br />அவனது அஸிஸ்டென்ட் அவனுக்கு ஃபோன் செய்ய <br />“ஐயம் சாரி ஜார்ஜ் டோன்ட் கால்மீ ட்டூ டேய்ஸ்(i am sorry George don't call me two days)” என்று கூறினான்.<br />“வாட் ஹாப்பன்ட் சர்? ஆர் யூ கோயிங் ட்டூ இன்வெஸ்டிகேட் திஸ் கேஸ் சம்வேர்?(wat happens sir? Are you going to investigate this case somewhere?)” என்று அவன் கேள்வி கேட்க.<br /><br />“நோ நோ ஐ டுக் மை ஹாலிடேய்ஸ்(no no i took my holidays)” என்று விட்டு கட் செய்துவிட்டான்.<br />ஃபோனை பார்த்த ஜார்ஜ் ‘இவருக்கு பையித்தியம் ஏதாவது புடிச்சுடுச்சா? கேஸ் எவ்ளோ பீக்கா இருக்கு அதை கண்டுபிடிக்காம ஹாலிடேய்ஸ்னு போய்ட்டாரே இவர நம்பி கேஸை கொடுத்து ஏமாந்துட்டாங்களே இந்த ஆபீசர்ஸ்’ என்று தான் எண்ணினான்.<br />நேராக Matterhorn glacier பகுதிக்கு சென்றவன் அங்கு பனிசருக்கு சென்றான்.<br />இரண்டு நாள் டிரக்கிங் ஸ்கேட்டிங் என்று செய்தவன் புத்துணர்ச்சியாக திரும்பி வந்தான்.<br />அவனை விசித்திரமாக பார்த்த ஜார்ஜை பார்த்து கண் அடித்தவன் <br />“எனக்கும் ரிப்ரஷ்மெண்ட் வேணும் ஜார்ஜ்” என்று சொல்லி விட்டு சென்றவனுக்கு புதிய கோணத்தில் இந்த கேஸை பார்க்க ஐடியா கிடைத்தது.<br /><br />இங்கு, <br />நீண்ட நேரம் தூங்கி எழுந்த யாழினிக்கு சற்று தெம்பாக இருந்தது.<br />எழுந்தவள் பார்த்தது அவளது கூட பணியாற்றும் அனைவரும் அவளது டீம் லீடர் ஆருத்ரன் உட்பட எல்லோரும் அவள் அருகிலேயே அமர்ந்து வேலை பார்த்து கொண்டு அப்படியே உறங்கிவிட்டதை தான்.<br />அதை பார்த்தவள் அவர்களை தொந்தரவு செய்யாமல் எழுந்து அமர பார்க்க அவளது அசைவில் அனைவரும் விழித்துக்கொண்டனர்.<br />“ஆர் யூ ஓகே யாழினி யாழ்?” என்ற கேள்விகள் அவளை சூழ <br />“யா ஐயம் ஓகே நீங்கலாம் ரெஸ்ட் எடுக்காம என்ற செய்யுறீங்க?” என்று கேட்டாள் மெதுவாக.<br />“நான் போக சொன்னேன் ஆனா அவங்கதான் போகமாட்டோம் உன்கூடவே இருப்பேன்னு இருந்துட்டாங்கமா” என்றார் ஆருத்ரன்.<br />தான் தனியாக இல்லை என்று உணர்ந்தவளுக்கு கண்கள் கலங்கியது.<br />அதை உணர்ந்தவர் போல அவளது கையை தட்டி கொடுத்தவர்.<br />“ஓகே எல்லாரும் சாப்பிடலாமா?” என்று கேட்க.<br />அனைவரும் ஓகே என்று கூற அவளையும் தங்களோடு அழைத்து சென்றனர் கைதாங்கலாக.<br />அனைவரும் சாப்பிட அமர ஆருத்ரனை பார்த்தவள்<br />“சீஃப் ஏன் எனக்கு இவ்ளோ டயர்டா இருக்கு?” என்றாள்.<br />“அது நீ ஆல்ரெடி வீக் பாடி சடைன் கொடுத்ததால இன்னும் லீன் பாடி ஆகிட்ட அதான் டயர்ட்டா இருக்க” என்று அவளை கிண்டல் செய்ய அனைவரும் சிரிக்க அவளோ ஆவென பார்த்தாள்.<br /><br />“உன் ப்ரெயின நீ ரெஸ்ட்டே இல்லாம ஓவர ஸ்டெரியின் செஞ்சு இப்போ ரெஸ்ட் கொடுக்கவும் அதுக்கு ரெஸ்ட் இன்னும் தேவைப்படுது அதான் டயர்டா இருக்க” என்று சொல்ல <br />அமைதியானவள்<br />“அப்போ ரெக்கார்ட் ஆகலையா சர்?” என்று கேட்க<br />அவளை பார்த்தவர்<br />“நாங்க எப்போ சொன்னோம்?” என்று எதிர்கேள்வி கேட்டார்.<br />அதில் அவரை அதிர்ந்து அவள் பார்க்க<br />“ம்ம் ரெக்கார்ட் செஞ்சு அதை ஏஐ டிகோடிங் செஞ்சு விஷூவலா மாத்தி கொடுத்துடுச்சு நீ சரியான அப்புறம் போட்டு காட்டலாம்னு இருக்கேன்” என்று அவர் சொல்ல அதிர்ந்து எழுந்து அமர்ந்தவள்<br />“சீஃப் எனக்கு உடனே அதை பார்க்கணும்” என்றாள்.<br />“நீ இப்போ நல்லா ரெஸ்ட் எடுக்கணும் யாழினி உன்னோட ப்ரெயின் எந்த விதமான அதிர்ச்சியையும் தாங்க முடியாது அது நிறைய சைட் எபெஃக்ட்டை தரும் யாழினி இன்னைக்கு ஃபுல் ரெஸ்ட் எடு நாளைக்கு பார்க்கலாம்” என்று அவர் கூற <br />“இல்ல எனக்கு இப்பவே பார்க்கணும் சைட் எஃபெக்ட் பத்திலாம் எனக்கு கவலை இல்லை சர் எனக்கு உடனே பார்க்கணும்” என்று அவள் கேட்க.<br />“நீ வேணா உன்னை பத்தி கவலை படாம இருக்கலாம் யாழினி பட் எங்களுக்கு இருக்கு நாளைக்கு தான் அதை உன்னால பார்க்க முடியும் லெட்ஸ் கோ கைய்ஸ்” என்றுவிட்டு அவர் எழுந்து சென்று விட அனைவரும் அவரது பின்னே செல்ல<br />“ஹே ப்ளீஸ்” என்ற அவளது கெஞ்சல்கள் எல்லாம் காற்றோடு கரைந்து போனது.<br />அனைவரும் சென்றுவிட எழுந்து அமர்ந்தவள் தன் மொபைலை எடுத்தாள். <br />அதில் அவள் ரெக்கார்ட் செய்ய கனெக்ட் செய்து இருந்த கேமிராவின் ஆப் இருந்தது.<br />அதை ஓபன் செய்தவள் தனது செட் செய்த கேமிராக்களை திரும்ப வரும்படி செய்தாள் அதன்படி இரண்டு கொசு போன்ற கேமிராக்கள் பறந்து வந்தது அவளிடம்.<br />அதனை கனெக்ட் செய்து எல்லா மெமரியும் மொபைலுக்கு மாற்றியவள் அதனை ஆஃப் செய்தாள்.<br />இரண்டு நாட்கள் தனது மொபைல் வேலை பார்த்துக்கொண்டு இருக்கிறதே என்பதை உணர்ந்தவள் அதனை சார்ஜில் போட்டாள்.<br />அப்படியே அதை ப்ளே செய்தாள்.<br />முதலில் அவளை ஆராய்ச்சி அறைக்கு கொண்டு செல்வது தான் இருந்தது.<br />அப்போது முதல் இப்போது வரை ஆருத்ரன் மற்றும் அவளது நண்பர்கள் அவளுடனே தான் இருந்தனர் என்று தெரிந்து அவளுக்கு கண்கள் கலங்கியது.<br />ஆருத்ரன் அவளை விட்டு நாகராமல் அவளது கையை பற்றியபடி இருந்தது அவளுக்கு அவளது தந்தையே அவளுடன் இருந்தது போல இருந்தது.<br />இருந்தாலும் கலங்கினால் தன்னால் எந்த வேலையும் சரியாக செய்ய முடியாது என்று எண்ணியவள்<br />கலங்கிய கண்களை அப்படியே நீரை உள்ளிழுத்து தன் கண்களை சரி செய்தவள் அதை தொடர்ந்து பார்க்கலானாள்.<br />அதை பார்க்க பார்க்க அவளுக்கு அதிர்ச்சியாக இருந்தது.<br />புகை மண்டலம் போன்ற பகுதி அதில் ஐஸ் மலை அவ்வளவு தான் தெரிந்தது. அதன்பின் தன் அக்கா மகள் ஹனிஷா ஏதோ ஒரு கண்ணாடி பெட்டியில் படுத்து இருப்பது போலவும் ஏதேதோ ஒயர்கள் கனெக்ட் செய்யப்பட்டு அவள் உறங்குவது போலவும் அவளை சுற்றி நிறைய மருத்துவர்கள் இருப்பது போலவும் பக்கத்திலேயே இன்னொரு கண்ணாடி பெட்டியில் வேறு ஒரு ஆள் படுத்து இருப்பது போலவும் அவரும் அதேபோல இருப்பது போலவும் அடிக்கடி ஹனிஷாவின் உடல் தூக்கி போடுவதை பார்த்தவளுக்கு <br />“ஹனிஇஇஇ” என்று அழுகையே வந்துவிட்டது.<br />இதையெல்லாம் பார்த்தவள் முன் அவளது அண்ணன் மகள் ஹனிஷாவின் முகம் வந்தது.<br />எழுந்திரு அத்தை அங்கதான் நான் இருக்கேன் நான் சாகலை அத்த.<br />இன்னும் உயிரோட தான் இருக்கேன் ஆனா என்னால எதையும் டச் பண்ண முடியல கரன்ட் ஷாக் அடிக்கிற மாதிரி இருக்கு வலி ஆனா என்னால எழுந்துக்கவே முடியல.<br />என்னை போல நிறைய பசங்க இங்க இருக்காங்க எல்லாரும் இண்டியன்ஸ் வேற.<br />காப்பாத்து அத்த.<br />நான் உன் பக்கத்திலேயே தான் இருக்கேன் ஆனா பேச முடியல உன் கனவுலதான் பேச முடியுது.<br />என்னோட முகத்துல ஏதோ மார்க் இருக்கு அண்ட் என்று நாக்கை காட்டினாள் அதோடு இவள் ஹனிஇஇஇ என்ற அலறலில் ஹனிஷாவின் உருவம் மறைந்து போனது திரையில்.<br />இவ்வளவும் தான் அவளுக்கு தினம் வரும் கனவு.<br />அதைதான் ஏஐ டிகோடிங் செய்து விஷூவலாக அவளுக்கு மாற்றி கொடுத்து உள்ளது.<br />அதிர்ச்சியில் அப்படியே உறைந்து போனவளுக்கு மண்டையே வலிப்பது போல் ஆனது.<br />அவளது மூளை ரெஸ்ட்டே இல்லாமல் இப்போதும் வேலை செய்ததன் பக்கவிளைவு அவளை மயக்கத்திற்கு தள்ள முற்பட உஷாராக தன் மொபைலை லாக் செய்தவள் அப்படியே மயங்கிவிட்டாள்.<br />ஆருத்ரன் அனுப்பிய அந்த கொரியன் பையன் வந்து பார்த்தபோது மொபைல் சார்ஜில் இருந்தது அவளோ தூங்கி கொண்டு இருக்கிறாள் என்று தான் நினைத்தான்.<br />அதையே போய் சொல்லவும் யோசனையோடு ஆருத்ரன் “மொபைல் சார்ஜ்ல இருந்தது ஓகே ஆனா எந்த பொஷிஷன்ல இருந்தது யாழினி பெட் பக்கத்துலயா? இல்ல அவ கையிலயா?” என்றார் அதற்கு அவன் <br />“அவ கையில் இருந்தது சீஃப்” என்று கூற அவசரமாக எழுந்து சென்றார் அவளது அருகில் சென்றவர் அவளை <br />“யாழினி யாழி” என்று எழுப்ப அவளிடம் தூக்கத்தில் இருக்கும் அசைவுகூட இல்லை என்பதை உணர்ந்தவர் உடனே டாக்டரை அழைத்தார்.<br />அவர் வந்து பரிசோதனை செய்து அவர் வீடியோவை பார்த்தாரா என்று விசாரிக்க<br />இல்லை இன்னும் அவளுக்கு காட்டவே இல்லை என்ற பதில் வர உடனே மருந்தை செலுத்தியவர்<br />“அப்போ அவங்க அகெய்ன் அந்த கனவு கண்டாங்க போல அதான் அவங்க ப்ரெயின் ரொம்ப ஸ்டெரியின் ஆகி இருக்கு நல்லா ரெஸ்ட் எடுக்கட்டும். நார்மலா தூங்க முடியல போல மருந்து கொடுத்து இருக்கேன் நல்லா தூங்கட்டும் நர்ஸ் நீங்க கூடவே இருங்க பல்ஸ் அண்ட் பிபி ட்டூ அவர்ஸ் ஒன்ஸ் செக் செய்ங்க” என்று விட்டு <br />“ரொம்ப வீக்கா இருக்காங்க சர் அவங்க ப்ரெயின் ரெஸ்ட்லெஸ் ஆனா மயக்கம் வரும் சர்.<br />இது இந்த டெஸ்ட்டோட சைட் எஃபெக்ட்ஸ் நான் ஒரு டேப்ளட் தர்றேன் அதை இந்த மாதிரி ஆகுற நேரம் கண்டிப்பா எடுத்துக்க சொல்லுங்க”என்றுவிட்டு அவர் செல்ல.<br />தலையில் கைவைத்து உட்கார்ந்து விட்டார் ஆருத்ரன்.<br />“நான் தான் அவளுக்கு இந்த டெஸ்ட் பத்தி சொல்லி தப்பு செஞ்சுட்டேனோ?” என்று பேச<br />“சர் அவ ரொம்ப ஃபோர்ஸ் பண்ணதால தானே இந்த டெஸ்ட்டே செஞ்சீங்க எல்லா எக்ஸ்பீரிமெண்ட்ஸ்லயும் வர்ற டிராபேக்ஸ் தானே சர் இதுலயும் அவளை நல்லா பார்த்துகலாம் சர் டோண்ட் வொர்ரி” என்று எல்லாம் சேர்ந்து அவருக்கு ஆறுதல் அளிக்க<br />அவளைவிட்டு எங்குமே நகராமல் அமர்ந்து விட்டார் ஆருத்ரன்.<br />மற்றவர்களும் அவரோடே அமர்ந்துவிட்டனர்.<br />அப்படியே எல்லோரும் உறங்கிவிட அவளை நர்ஸ் செக் செய்யும் போதெல்லாம் ஆருத்ரனும் சேர்ந்து செக் செய்தார்.<br />அவளது வைட்டல்ஸ் நார்மலாகவே இருப்பதை உணர்ந்தவர் அதிகாலையில் உறங்கி போனார்.<br />காலையில் எல்லோரும் எழ ஆருத்ரனும் யாழினியும் மட்டும் உறங்கி கொண்டிருந்தனர்.<br />ஷிப்ட் நர்ஸ் வர ஏற்கனவே இருந்தவர் போக கிளம்ப ஆருத்ரனை ஒருவன் எழுப்ப போக<br />“அவர் தூங்கட்டும் சர் அவர் நைட்டு ஃபுல்லா தூங்காம அந்த பொண்ணை செக் செஞ்சுட்டே இருந்தாரு.<br />மார்னிங் ஃபைவ் ஓ கிளாக் தான் தூங்கினார்.<br />இன்னும் கொஞ்சம் தூங்கட்டும்” என்று சொல்லி செல்ல அனைவரும் எழுந்து அங்கிருந்த சேரில் அமர்ந்தனர்.<br />அவர்களுக்குள் அமைதியாக பேசியபடி காஃபி ஆர்டர் செய்துவிட்டு அனைவரும் வேலையை துவங்க நீண்ட நேரம் கழித்தே விழித்தனர் இருவரும்.<br />ஆருத்ரன் எழுந்ததும் யாழினியை செக் செய்ய அவளும் எழுந்தாள்.<br />அவளை பரிசோதனை செய்த டாக்டர் இந்த சைட் எஃபெக்ட் எப்போது வேண்டுமானாலும் வரலாம் அதுபோல் ஆவதற்கு முன் இந்த மருந்தை எடுத்தே ஆகவேண்டும் என்று அறிவுரை வழங்கி அனுப்பினார்.</p>]]></content:encoded>
						                            <category domain="https://onlinetamilnovels.com/community/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%a9%e0%af%8b-%e0%ae%aa%e0%af%82%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-jayalakshmi-s/">வால்கனோ பூக்கள் - Jayalakshmi. S</category>                        <dc:creator>Jai</dc:creator>
                        <guid isPermaLink="true">https://onlinetamilnovels.com/community/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%a9%e0%af%8b-%e0%ae%aa%e0%af%82%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-jayalakshmi-s/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%a9%e0%af%8b-%e0%ae%aa%e0%af%82%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af/</guid>
                    </item>
				                    <item>
                        <title>வால்கனோ பூக்கள் - 3</title>
                        <link>https://onlinetamilnovels.com/community/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%a9%e0%af%8b-%e0%ae%aa%e0%af%82%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-jayalakshmi-s/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%a9%e0%af%8b-%e0%ae%aa%e0%af%82%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-3/</link>
                        <pubDate>Mon, 13 Jul 2026 03:43:33 +0000</pubDate>
                        <description><![CDATA[அத்தியாயம் - 3கனவுகளை ரெக்கார்ட் செய்யும் ஏஐ தொழில்நுட்பம் தற்போது தான் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.இது இன்னும் வழக்கத்திற்கு வரவில்லை அதனால் இது என் கற்பனை மட்டுமே.இதனால் நமக்கு வரும் கனவுகள...]]></description>
                        <content:encoded><![CDATA[<p>அத்தியாயம் - 3<br /><br />கனவுகளை ரெக்கார்ட் செய்யும் ஏஐ தொழில்நுட்பம் தற்போது தான் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.<br />இது இன்னும் வழக்கத்திற்கு வரவில்லை அதனால் இது என் கற்பனை மட்டுமே.<br />இதனால் நமக்கு வரும் கனவுகளை ரெக்கார்ட் செய்து அந்த நேரத்தில் ஏஐ நம் உடலில் ஏற்படும் மாற்றங்களை கண்காணித்து நமக்கு விழிப்பு வந்ததும் அந்த கனவினில் என்னவெல்லாம் நடந்ததோ அதை வீடியோவாக மாற்றி கோடிங் செய்து கொடுக்கும் அதனால் அப்போது என்ற நடந்தது என்று அறிந்து கொள்ளலாம்.<br />இதை தகுந்த பாதுகாப்பு முறையில்தான் டெஸ்ட் செய்வர் அதனால் அதற்கு முன்பே அப்ளை செய்ய வேண்டும்.<br />அதற்கான முறையான காரணமும் சொல்லி இருந்தால்தான் அவர்கள் இந்த டெஸ்ட் மேற்கொள்ள முடியும்.<br />அதனால்தான் அதற்கு உடனே அப்ளை செய்தாள் யாழினி.<br /><br />அங்கு ஆட்ரியன் கிம் காணாமல் போன குழந்தைகளின் பெற்றோர்களை சந்தித்து விவரங்களை சேகரித்து கொண்டு இருந்தான்.<br />இதுவரை கிடைத்த தகவலில் சற்று முரண்பாடாய் இருந்தது ஹனிஷா கேஸ் ஃபைல் மட்டுமே.<br />இதுவரை காணாமல் போன குழந்தைகளின் பாடி கிடைத்தது அதும் வெவ்வேறு இடங்களில் ஒரு குழந்தையின் எலும்பை வைத்துக்கூட அந்த குழந்தையை கண்டு பிடிக்க முடிந்தது ஆனால் இந்த குழந்தையின் எலும்பு கூட கிடைக்கவில்லை அப்புறம் எப்படி இறந்ததாக அறிவித்து கேஸை முடித்தனர் என்றுதான் யோசித்துக்கொண்டு இருந்தான்.<br />குழந்தையின் தாய் அவரது மகள் இறக்கவில்லை என்று புலம்புகிறார் தந்தையோ குழந்தை இறந்ததில் இருந்து மனைவி இப்படி பேசுவதாக சொல்கிறார்.<br />அவர்களது பேக்கிரவுண்ட் கூட பெரியதாக சொல்லிக்கொள்ளும்படி இல்லை.<br />எல்லோரும் இதை சைக்கோ கொலை என்னும் போக்கிலேயே பார்த்துக்கொண்டு இருப்பதால் இதன் உண்மையான காரண காரியங்களை கண்டுபிடிக்க முடியாமல் திணறினான் ஆட்ரியன் கிம்.<br /><br />அவ்வபோது தான் இந்தியா சென்றிருந்த போது பார்த்து வம்பிழுத்த அந்த பெண்ணின் முகம் மட்டும் நினைவு வந்து செல்ல ‘திடீருனு இவ நினைப்பு எதுக்கு வருது’ என்று தலையை குலுக்கிவிட்டு தன் வேலையை தொடர்வான்.(வாட் ஏ கோ இன்சிடன்ட்)<br />முதலில் இறந்த குழந்தை வீட்டிற்கு சென்று விசாரித்ததில் அவள் பள்ளியில் பிக்னிக் அழைத்து சென்றனர் அப்போது காட்டுப்பகுதியில் காணாமல் சென்றவள் தேடி கிடைக்காமல் அடுத்த வாரம் அதே பகுதியில் நடந்த ஆக்சிடென்டில் பற்றிய தீயில் பாதி கருகிய நிலையில் தான் கிடைத்தாள் என்பது ஆட்ரியனுக்கு சிறிது சந்தேக விதையை தூவியது.<br />அதன் விளைவாக அடுத்து அடுத்து என்று விசாரித்தவனுக்கு இதே தகவலே கிடைக்க அதில் உடல் கிடைக்காமல் போனது ஹனிஷாவின் உடல் மட்டுமே அதனால் அதை பற்றி மேலும் விசாரிக்காமல் காவல்துறை அந்த கேஸை காட்டு விலங்குகள் அடித்து சாப்பிட்ட லிஸ்டில் சேர்த்து அவளை இறந்தவளாக அறிவித்து விட்டது.<br />இந்த கேஸ் மட்டும் அவனுக்கு எங்கோ இடிக்க அதை மட்டும் தீவிரமாக கவனித்தான்.<br />ஆனால் அவனுக்கு இதை வேறு கோணத்தில் பார்க்க வேண்டுமோ என்ற எண்ணம் வந்தபடியே இருந்தது.<br />அப்போது அவனது ரகசிய மெயிலுக்கு ஒரு மெயில் வந்திருந்தது.<br />அதை பார்த்தவனுக்கு அதை அனுப்பியது யார் என்பது தெரிந்துவிட்டது.<br />காரணம் இல்லாமல் அந்த நபர் ரகசியமாக மெயில் அனுப்பமாட்டார் என்பதை புரிந்தவன் உடனே அதனை திறந்து பார்த்தான்.<br />பார்த்தவன் மேலும் குழம்பி போனான்.<br />‘இது தான் தடை செய்யப்பட்டது ஆச்சே?’ இதை எப்படி செய்ய இயலும்?’ என்ற குழப்பம்தான் அவனுக்கு.<br />கூடவே இதைப்பற்றி ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கும்வரை இதை பற்றி யாருக்கும் மூச்சு கூட விடக்கூடாது என்று அல்லவா குறிப்பிட்டு இருக்கிறார் என்று யோசித்தவனுக்கு தான் பார்த்துக்கொண்டு இருந்த ஹனிஷா ஃபைலும் இதுவும் ஒரே பாதையில் பயணிக்கிறதோ? என்ற சந்தேகம் மேலும் வலுத்தது.<br />ஏன் நாம் இந்த கோணத்தில் விசாரணையை துவங்ககூடாது என்றும் எண்ணியவன்.<br />இதன் பிண்ணனி பயங்கரமானதாக இருக்கும் என்று மட்டும் புரிந்து கொண்டான்.<br />உடனே அதற்கான வேலைகளில் இறங்கினான்.<br /><br />அங்கு டெக்கார்ட் செய்ய முதலில் யாழினிக்கு ஈசிஜி மிஷின் பொருத்தப்பட்டது.<br />அவள் உறங்குவதற்காக அவளுக்கு மிகவும் லேசான சடைன்(தூக்க மருந்து) செலுத்தப்பட்டது.<br />அவளது ஆக்ஸிஜன் சீராக இருக்கும் படி செய்தவர்கள் ஏ ஐ உதவியுடன் அவளது மூளையின் செயல்பாடு மற்றும் கனவுகளை ரெக்கார்ட் செய்ய ஏற்பாடு செய்தனர்.<br />அவளுக்கு உடல்நலம் ஏதாவது பாதிக்கப்பட்டால் உடனே வையித்தியம் பார்க்கவும் பக்கத்திலேயே இரண்டு மருத்துவர்கள் இருந்தனர்.<br />அதும் இல்லாமல் இதுபோன்ற டெஸ்ட்க்குலாம் அவர் சொந்த விருப்பப்படி தான் இதற்கு ஒத்துக்கொண்டு உள்ளார் இதனால் ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் அதற்கு வேறு யாரும் காரணம் அல்ல என்று குறிப்பிட்டு கையெழுத்து வாங்குவர்.<br />“சர் சப்போஸ் எனக்கு ஏதாவது ஆகிட்டா இந்த ரெக்கார்ட் அண்ட் என் பாடியை என்னோட அண்ணன்கிட்ட ஒப்படைக்குற பொறுப்பை நான் உங்களுக்கு தர்றேன் சர் மறந்துடாதீங்க” என்று விட்டு அந்த ஒப்பந்த படிவத்தில் கையெழுத்திட்டாள்.<br /><br />நம் காணும் கனவுகள் யாவும் பொதுவாக எலக்ட்ரிக்கல் சிக்னல்ஸ் அண்ட் நியூரோ ஆக்டிவிட்டி ஃபார்ம்லதான் ரெக்கார்ட் ஆகும்.<br />இதுல ஏ ஐ வோட வேலை அந்த எலக்ட்ரிக்கல் அண்ட் நியூரோ சிக்னல்ஸ்ல உள்வாங்கி அதை டிகோடிங் செய்து அதை நமக்கு அதுக்கு ஏற்ப விஷூவலாக மாற்றி ரெக்கார்ட் செய்து காட்டும்.<br />ஏற்கனவே ஏ ஐ க்கு அந்த அந்த சிக்னல்ஸ்க்கு ஏற்றவாறு அதை இமேஜினிங் செய்யும் அளவுக்கு ப்ரோக்ராம் செய்யப்பட்டு இருக்கும்.<br />உதாரணமாக அந்த இடத்தில் காடு என்ற சிக்னல் கிடைத்தால் அதை தன் மெமரியில் தேடி அதை ஏதோ ஒரு காடு என காட்டும்.<br />ஆனால் அதே இடம் இப்போது இருப்பதை போலவே காட்டாது.<br />அதனால் இதில் சிறு சிறு சறுக்கல்களும் உண்டு ஆனால் அது காட்டும் விஷூவலை வைத்து ஓரளவுக்கு நாம் கண்டுபிடிக்க வசதியாக இருக்கும்.<br /><br />அதன்படி யாழினி பெட்டில் படுத்ததும் அவளுக்கு சடைன் அவளது ஐவி(iv) வழியாக சிறுக சிறுக செலுத்தப்பட்டது அவளது நெஞ்சில் ஈசிஜி உபகரணங்கள் பொறுத்தப்பட அவளது தலையிலும் அதே போல பொறுத்தப்பட்டு அதை ஏஐ மற்றும் மானிட்டருடன் கனெக்ட் செய்தனர்.<br />மயக்கமருந்தின் விளைவால் லேசாக உறங்க ஆரம்பித்து இருந்தாள் யாழினி.<br /><br />அவளது கரத்தை பற்றியபடி அமர்ந்தார் அவளை மகள்போலவே பார்க்கும் அவளது ஹெட் ஆருத்ரன்.<br />என்னதான் அவளுக்கு இந்த டெஸ்ட் பற்றி செய்ய சொல்லி விட்டாலும் அவருக்கு உள்ளுக்குள் ஒரு பயம் இருந்து கொண்டே தான் இருந்தது.<br />அவளது தாய் தந்தையர் இறந்த நேரம் அவளையும் அவளது அண்ணனையும் அவர்தான் தேற்றினார்.<br />அவரது வழிகாட்டலின்படி தான் யோகேஷ் சுவிட்சர்லாந்து சென்றது.<br />இப்போது அவனும் தன் மகளை இழந்து தவிக்கிறான்.<br />அவனது தங்கைக்கு எதுவும் நேர்ந்துவிடக்கூடாது என்று அவரிடம்தான் அவளை பத்திரமாக பார்த்துக்கொள்ள சொல்லி இருந்தான்.<br />இந்த எக்ப்ரிமெண்ட்டில் யாழினிக்கு ஏதாவது பாதிப்பு வந்துவிடுமோ என மனிதர் அஞ்சினார்.<br />தாய் தந்தைஅண்ணன் மகள் இப்போது தூக்கம் என இழந்து தவிப்பவளை பார்க்கும்போது அவருக்கு மனம் வலிக்கும் அதனாலேயே அவளை இந்த டெஸ்ட் எடுக்க சொன்னார் ஆனால் கனவில் நேருவது நிஜத்தில் இருப்பது போல இருந்து அவளது உயிர் போவது போல இருந்தால் அதான் அவளது கையை பிடித்து அமர்ந்து விட்டார்.<br />அவள் உறங்கியதும் ஏஐ தன் வேலையை ஆரம்பித்தது. அவளது மூளையின் செயல்திறன் அது என்னவெல்லாம் யோசித்து இப்போது கனவு உலகத்திற்கு செல்கிறது என்பதையெல்லாம் டிகோடிங் செய்து அதை விஷூவலாக காட்டியது.<br />சற்று நேரம் ஒரு விதமான அமைதி நிலவ சட்டென யாழினியின் உடல் வேர்க்க ஆரம்பித்து அவளது இதயத்துடிப்பு அதிகம் ஆகியது.<br />‘அத்தை என்னை காப்பாத்து அத்தை என்னை சுத்தி என்ன என்னமோ நடக்குது அத்தை என் ஆத்மாவை பிரிக்குறாங்க அத்தை நான் இப்ப உயிரோட உணர்வு இல்லாம இருக்கிறேன் அத்தை காப்பாத்து அத்தை matterhorn glacierல இருக்கேன் அத்தை என்னைபோல நிறைய பேர் இருக்காங்க அத்தை இது பெரிய காடு அத்தை ஃபுல்லா ஐஸ்ஸா இருக்கு பெரிய பெரிய மிஷின் அதுல என்னை படுக்க வெச்சு என் மண்டையில ஏதேதோ கனெக்ட் செஞ்சு வெச்சு இருக்காங்க அத்தை ரொம்ப வலிக்குது காப்பாத்து’ என்று அதே கனவு வர யாழினியின் உடல் முழுவதும் சிலிர்த்து அடங்கியது.<br />இதயத்துடிப்பின் வேகமும் அவளது மூளை செயல்பாட்டின் வேகமும் அதிகமாக அவளுக்கு பிபியும் ஜாஸ்தி ஆகியது.<br /><br />“ஹனிஇஇஇ… நீ எங்க இருக்க சொல்லு ஹனி?” என்று அவள் கேட்க <br />‘எனக்கு தெரியல நீதான் கண்டுபிடிக்கணும் இப்போ உனக்கு எப்படி தலையில மாட்டி வெச்சு இருக்காங்களோ அதே போல தான் என்னையும் ஒரு கண்ணாடி பாக்ஸ்ல படுக்க வெச்சு போட்டு இருக்காங்க.<br />என்னோட நாக்கு அடியில ஏதோ எழுதினாங்க அது என்னானு கண்டுபிடி சீக்கிரம் எழுந்திரு அத்தே’ என்று பதில் வர அவளது இதயத்துடிப்பு அதிகரிக்கவுமே ஆருத்ரன். <br />“இட்ஸ் எனஃப் அவளுக்கு பிபியும் ஹார்ட்பீட்டும் அதிகம் ஆகுது டாக்டர்” என்று அவர் கத்த உடனே அவளுக்கு முழிப்பு வருவதற்காக ஊசி செலுத்தப்பட்டது.<br />அதே சமயம் அவளது கையை அழுத்தி தலையை தடவி <br />“ஒன்னுமில்லமா ஒன்னுமில்ல” என்று அவளுக்கு ஆறுதல்போல அவர் பேச அவளுக்கு இதயத்துடிப்பு நார்மல் ஆனது அதே சமயம் “ஹனிஇஇஇ” என்றபடி<br />அதிர்ந்து அலறி எழுந்தாள் யாழினி.<br /><br />“நத்திங் யாழினி ஒன்னுமில்ல டென்ஷன் ஆகாதே” என்று அவளை சமாதானம் செய்த ஆருத்ரனை மலங்க மலங்க பார்த்தாள் யாழினி.<br />அப்படியே பார்த்தவள் மயங்கி விட்டாள்.<br />உடனே அவளை செக் செய்த டாக்டர் “இது அதிக டென்ஷன்ல வந்த மயக்கம் சர் கொஞ்ச நேரத்துல சரி ஆகிடும்” என்றுகூறியபடி அவளுக்கு சலைன் ஏற்றிவிட்டு அங்கிருந்து சென்றார்.<br />அவளது கனவை டிகோடிங் செய்து காட்சிகளாக மாற்றியதை ஒரு பெண் டிரைவ்வில் சேமித்து எடுத்து வைத்தார் ஆருத்ரன்.<br />அவளது அருகிலேயே அமர்ந்து இருந்தார் அவர்.<br />கூடவே அவர்கள் டீமில் வேலை செய்து வரும் மற்றவர்களுமே அங்குதான் இருந்தனர்.<br />அவர்களுக்கு தெரியும் தங்கள் டீமிற்கு யாழினி எவ்வளவு ஸ்பெஷல் என்று.<br />அவளது ஆராய்ச்சி விளக்கங்களும் ப்ராஜெக்ட் வேலைகளும் அவ்வளவு சூப்பராக இருக்கும்.<br />முழுதாக ஐந்து மணி நேரம் கழித்து மயக்கம் தெளிந்து கண்விழித்தாள் யாழினி. அவளது அருகிலேயே இருந்த ஆருத்ரன் அவள் கண் விழித்ததும் <br />“யாழினி ஆர் யூ ஓகே?” என்றபடி டாக்டரை பார்க்க இருவரும் அவளை முழுவதும் சோதித்து முடித்து அவளுக்கு எதுவும் இல்லை ஜஸ்ட் சடைன் சைட் எஃபெக்ட் மட்டுமே என்று சொன்னபிறகே அவருக்கு உயிர் வந்தது.<br />“தேங்க் காட்” என்றவர் மயக்கத்தில் மலங்க மலங்க விழித்த யாழினியை பார்த்து<br />“ஒன்னுமில்ல யாழினி மயக்கம் தான் நீ ரெஸ்ட் எடு” என்றுவிட்டு அவளை மீண்டும் படுக்க வைக்க படுத்தவளால் பேச முடியாத அளவுக்கு டயர்ட்டாக இருந்தது.</p>]]></content:encoded>
						                            <category domain="https://onlinetamilnovels.com/community/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%a9%e0%af%8b-%e0%ae%aa%e0%af%82%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-jayalakshmi-s/">வால்கனோ பூக்கள் - Jayalakshmi. S</category>                        <dc:creator>Jai</dc:creator>
                        <guid isPermaLink="true">https://onlinetamilnovels.com/community/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%a9%e0%af%8b-%e0%ae%aa%e0%af%82%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-jayalakshmi-s/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%a9%e0%af%8b-%e0%ae%aa%e0%af%82%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-3/</guid>
                    </item>
				                    <item>
                        <title>வால்கனோ பூக்கள் -2</title>
                        <link>https://onlinetamilnovels.com/community/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%a9%e0%af%8b-%e0%ae%aa%e0%af%82%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-jayalakshmi-s/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%a9%e0%af%8b-%e0%ae%aa%e0%af%82%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-2/</link>
                        <pubDate>Mon, 06 Jul 2026 04:31:41 +0000</pubDate>
                        <description><![CDATA[அத்தியாயம் - 2Regenesis or soul transfer initiative: கூடு விட்டு கூடு பாயும் முறை.பண்டைய காலங்களில் மாய மந்திரம் செய்யும் மாந்திரீக ஆட்கள் தங்கள் ஆன்மாவை அவர்கள் உடலை விட்டு பிரிய வைத்து வேற...]]></description>
                        <content:encoded><![CDATA[<p>அத்தியாயம் - 2<br /><br />Regenesis or soul transfer initiative: கூடு விட்டு கூடு பாயும் முறை.<br />பண்டைய காலங்களில் மாய மந்திரம் செய்யும் மாந்திரீக ஆட்கள் தங்கள் ஆன்மாவை அவர்கள் உடலை விட்டு பிரிய வைத்து வேறு பொருளிலோ அல்லது உயிரிலோ செலுத்தி மீண்டும் தனது உடலிலோ திரும்ப செலுத்தும் முறை இருந்ததாக கூறப்படுகிறது.<br />அதை இன்றைய நவீன மருத்துவ உலகம் ஆராய்ச்சி செய்து அதை சாத்தியம் அற்றது என்றும் மனித உயிரோடு விளையாடும் இத்தகைய ஆராய்ச்சிகள் குற்றமாகும் என தடை செய்யப்பட்டது.<br />அதனால் நிறைய நாடுகள் இந்த ஆராய்ச்சியை செய்ய விருப்பம் இருந்தும் அதற்கான பொருட்செலவு மற்றும் இல்லீகலாக செய்ய இடம் மற்றும் மனிதன் என ஏதாவது ஒன்று இல்லாத காரணங்களால் கைவிடப்பட்டது.<br /><br />சில பேராசைக்கார அதிகாரம் மிக்க ஆட்களால் இதை உண்மை என நம்புவதாலும் மறைமுகமாக இன்றும் இது போன்ற நிறைய ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டுதான் வருகிறது.<br />அதற்கு பலியானோர் எண்ணிக்கை அதிகம். <br /><br />யோகேஷ் அழுதபடி பேச அவன் சொன்ன செய்தியில் அதிர்ந்து மொபைலை கீழே போட்டாள் யாழ்.<br />“யாழ் யாழ்” என்று மறுமுனையில் அவன் அலற கை நடுங்க மொபைலை எடுத்தவள்<br />“எ என்ன அண்ணா சொல்றீங்க? ஹ..ஹனி?” என்று அதற்குமேல் அவளுக்கு பேசக்கூட வரவில்லை.<br />அண்ணனுக்கு குழந்தை பிறக்கும் போது அவள் முதல் ஆளாய் போய் பார்க்கவில்லைதான் அவளது வேலைப்பளு அவளை போகவிடவில்லை ஆனால் அவள் சென்று பார்க்கும் போது அவளது அண்ணன் மகளை சிறு மலராய் சிவப்பு பூவாய் அவளை ஏந்தியவளுக்கு உலகமே அவளது கையில் இருந்தது போல இருந்தது.<br /><br />அத்தை மருமகள் பாசத்தை யாராலும் அடித்துக்கொள்ள முடியாது அதுபோலவே இவர்களது பாசமும்.<br />வேறு வேறு பிரதேசத்தில் வசித்தாலும் நினைத்த நேரத்தில் அவளை பார்க்க பறந்து சென்று விடுவாள் இருவரும் சண்டையிட்டு ஓய்ந்து சமாதானம் ஆகி ஒருவரை ஒருவர் வாயாடி வாரிக்கொண்டு தான் அடங்குவார்கள் அதன்பின் இருவரும் சேர்ந்து செய்யும் அலப்பறைக்கு அளவே இல்லை.<br />தாய் தந்தை இறக்கும் முன் அவளுக்கு பெங்களூரில் வேலை கிடைக்க அங்கு சென்று தங்க வேண்டும் என்று அவள் சொல்ல அவர்கள் தடுக்க அவர்களையே திட்டி தன் அத்தைக்காக சப்போர்ட்டாக பேசியவள் ஹனிஷாதான் அவ்வளவு பாசம் அத்தைமேல்.<br />யாழினிக்கும் அவள் என்றால் அவ்வளவு உயிர்.<br />அப்படிபட்ட அண்ணன் மகள் இப்போது காணவில்லை என்பதும் அவள் உயிர் இருக்கா இல்லையா என தெரியவில்லை பாடி கூட கிடைக்கவில்லை என்று அவளது அண்ணன் கூறுகையில் இது கனவுதான் கனவுதான் என்று கன்னத்தில் அடித்துக்கொண்டவளுக்கு லைனில் அழுதுகொண்டு இருந்த தன் அண்ணனின் கதறல் இது அனைத்தும் உண்மை என நிரூபனம் ஆனது.<br />உடனே கிளம்பி சுவிட்சர்லாந்து சென்றவளுக்கு நிலைகுலைந்து போன அண்ணனும் அண்ணியும் அழுது அழுது ஓய்ந்து போன குழந்தையும்தான் கண்ணில் பட்டனர்.<br />அவர்களை சமாதானம் செய்தவளுக்கு ஆறுதல் சொல்பவர்தான் யாருமில்லை.<br />அவர்களுடனே ஒருவாரம் இருந்தவளுக்கு அவர்களை தேற்றுவது பெரிய சிரமமாய் இருந்தது.<br />அப்படி இப்படி இருக்கும் இன்னொரு குழந்தையை காட்டி அவர்களை சமாதானம் செய்தவள் அங்கு இருந்தால் அவளது ஹனிஷா அவளை அழைப்பது போலவும் ஏதோ உதவி செய் அத்தை காப்பாத்து அத்தை என்று அழுவது போலவும் ஆனால் முகம் மட்டும் வேறு போல தோற்றம் கனவாக வந்து வந்து போக அவளது பிரிவும் அவளையே நினைத்தபடி இருப்பதால் அப்படி தோன்றுகிறது என எண்ணி தூக்கமில்லாமல் இரவை கழித்தவள் உடனே அங்கிருந்து கிளம்பி விட்டாள்.<br /><br />ஆனால் அங்கிருந்து வந்த நாள் முதலே அவளுக்கு ஏதோ அவளுடன் இருப்பது போலவும் அவளிடம் பேச துடிப்பது போலவும் கண்ணை மூடினாலே தன் அண்ணன்மகள் ‘அத்தை என்னை காப்பாத்து காப்பாத்துனு அவங்க என்னை கொல்ல பார்க்குறாங்க காப்பாத்து அத்தை’ என்று <br />அழுவது போலவும் தொடர்ச்சியாக தோன்றிக்கொண்டே இருந்தது.<br />முதலில் அவளது நியாபகமாகவே இருப்பதால் கனவு போல வருகிறது என்று நினைத்த யாழினிக்கு.<br />ஒரே கனவு தொடர்ந்து வருமா? என்ற சந்தேகமும் தோன்ற நேரே சென்று நின்றாள் அவளது மனோதத்துவ மருத்தவரிடம்.<br />அவளது கூற்றை கேட்ட மருத்துவர் <br />“மிஸ் யாழினி நீங்க சரியா தூங்காம உங்க ஆராய்ச்சில இருந்து இருக்கீங்க சரியா ஃபுட்டும் எடுத்துக்கல இதுல இடையில உங்க அண்ணன் பொண்ணோட மரணம் எல்லாம் சேர்ந்து உங்களோட மனநிலையை பாதிச்சு இருக்கு.<br />ரொம்ப ரெஸ்ட்லெஸ்ஸா இருக்கீங்க அதான் இப்படி ஒரு ஒன் வீக் ஆர் டென் டேய்ஸ் லீவ் போட்டுட்டு எங்கேயாவது அவுட்டிங் போய்ட்டு வாங்களேன் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆவீங்க கொஞ்சம் சப்ளிமெண்ட்ஸ் எழுதி தர்றேன் அது உங்களுக்கு ஸ்டெரஸ் கம்மி பண்ண உதவும்” என்று கூறி <br />மருந்தை எழுதி கொடுத்து அனுப்பினார் மருத்துவர்.<br />ஒருவேளை ஹனிஷா பற்றியே யோசிப்பதால் அவளை பற்றி தினமும் கனவாய் வருகிறது போல என்று எண்ணியவள் மருத்துவர் ஆலோசனை படி இரண்டு நாட்கள் விடுமுறை எடுத்து வெளியே சென்று வந்தவள் வேலையில் தன் கவனத்தை செலுத்தினாள்.<br />ஆனால் அந்த கனவு அவளை விடுவதாய் இல்லை.<br />ஒருசில நாட்களில் அவளுக்கு உடம்பெல்லாம் வியர்த்து வழிந்துவிடும் அந்த அளவிற்கு அவளை படுத்தி எடுக்கும் அந்த கனவு.<br /><br />சரி அண்ணனிடம் பேசலாம் என அவள் ஃபோன் செய்ய மறுமுனையில் எடுத்தவனிடம் நலம் விசாரிக்க அவனோ தான் நலம் ஆனால் அண்ணிதான் அவளுக்கு கனவுல ஹனிஷா வந்து காப்பாத்துங்க காப்பாத்துங்க என்னை கொல்லப்பார்க்குறாங்கனு கத்துற போல கனவு வந்துகிட்டே இருப்பதாகவும் அதனால பாப்பா உயிரோட தான் இருக்கிறானு புலம்பிகொண்டே இருக்கிறாள் என்று கூற திக்கென்று ஆனது யாழினிக்கு.<br />அவளுக்கும் அதே தானே கனவாய் வந்து கொண்டு இருக்கிறது. <br />“சரினா பார்த்துக்கோங்க நான் சீக்கிரம் வந்து பார்க்கிறேன் உங்களை” என்று விட்டு ஃபோனை வைத்தவளுக்கு யோசனை தீவிரமாய் ஆனது.<br /><br />அதே நேரம் சுவிட்சர்லாந்தின் பனி சூழ்ந்த மலை நகரமான ஜெர்மத் மற்றும் மேத்தர்ஹார்ன் கிளேசியர்(Zermatt&amp; Matterhorn glacier) பகுதியில் ஐந்தாவதாக காணாமல் போன இந்தியாவை சேர்ந்த கிளாரா என்னும் குழந்தை பள்ளியிலிருந்து கேம்ப்பிங்க்காக கேபிள் காரில் செல்வதற்காக காத்திருந்த வேளையில் இடையில் கேபிள்கார் பழுது என்ற தகவல் வர அங்கு சென்று பார்த்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி அதில் ஆசிரியரும் மற்ற பிரதேசத்தை சேர்ந்த குழந்தைகளும் மயக்கமாகி இருக்க அவர்களோடு இருந்த இந்தியப்பெண் கிளாரா மட்டும் காணவில்லை என்ற ததவல் வர உடனே மற்றவர்களை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல உத்தரவு வந்த நேரத்தில் காணாமல் போன அந்த குழந்தையை தேடும்பணியில் ஈடுபட்டு இருந்தான்.<br />ஆட்ரியன் கிம் (கிரிமினல் போலீஸ் ஆஃப் க்ரைம் பிராஞ்ச் (Adrian Kim - criminal police of crime branch, இந்தோ-கொரிய வம்சாவளியில் பிறந்து தாய் தந்தையின் வேலை காரணமாக பனிரெண்டு வயதிலேயே சுவிட்சர்லாந்து வந்து தங்கி படித்து அந்நாட்டின் ப்ரஜை ஆகி அங்கேயே க்ரைம் ப்ரான்ச்சில் பெரிய பதவியில் பணிபுரியும் இளைய ஆபீசர்)<br />அவனது தாய் தந்தை இருவரும் போலீஸ் துறையில் பணிபுரிந்தவர்கள்.<br /><br />காணாமல் போன அனைத்து குழந்தைகளும் ஒரே வயதுடையவர்கள் அதும் எல்லோரும் இந்தியர்கள் அதும் பெண் பிள்ளைகள் அதும் எல்லோரும் ஓ பாசிட்டிவ் இரத்தவகை.<br />இத்துடன் அந்த பகுதியில் கடந்த ஒரு வருடத்தில் காணாமல் போன ஐவரில் கிளாராவும் ஒருவள்.<br />சுவிஸ் கவர்ண்மெண்ட்டின் ஸ்பெஷல் ரெக்கமெண்டில் தான் இந்த கேஸை விசாரிக்க மாற்றலாகி வந்துள்ளான் ஆட்ரியன் கிம்.<br />இந்தியாவையும் கொரியாவையும் கலந்து செய்த கலவைதான் ஆட்ரியன்.<br />அவனது கண்கள் கோலி உருண்டை போல அழகாக இருக்கும்.<br />அந்த நாட்டில் இருப்பதாலோ இல்லை அவனது தாய் மிகவும் வெள்ளையாக இருந்ததாலோ தெரியவில்லை அவனும் ரொம்ப வெள்ளையாகவே இருந்தான்.<br />அவனது தாய் தந்தையும் ஒரு தீவிரவாதியை பிடிக்க செல்லும் போது அடிப்பட்டதில் இருவரும் இறந்து போயினர்.<br />அம்மா வழி உறவு என்றவர்கள் அவனது பொறுப்பை ஏற்க மறுக்க அப்பா வழியில் உறவென்று யாருமே தெரியாது அதனால் அங்கிருந்த அநாதை ஆசிரமத்தில் வளர்ந்து தந்தையின் பணியையே வாங்கிய ஆட்ரியன் முதன்முதலில் செய்த என்கவுண்டர் அவனது தாய் தந்தையை கொன்ன தீவிரவாதிதான்.<br /><br />தன் வேலையின் ஆபத்தை உணர்ந்தவன் அவனுக்கு நெருக்கமாக யாரையுமே வைத்துக்கொள்ளவில்லை.<br />தனக்கென்று வந்த ஒரு உறவையும் தன் வேலையால் இழந்திருந்தான் அதனால் அவன் அதன்பின் யாரையும் அவனை நெருங்க விடுவதில்லை.<br />“எனி இன்ஃபர்மேஷன் திஸ் கேஸு ஆட்ரியன்?(இந்த கேஸில் ஏதாவது விவரம் தெரிந்ததா ஆட்ரியன்?)” என்று அவனது உயரதிகாரி கேட்க<br /><br />“நோ சர் ஐயம் க்ளூலெஸ் நீட் ட்டூ இன்வெஸ்டிகேட் மோர் பர்சன்ஸ்(இல்ல சர் எனக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை இன்னும் நிறைய பேரை நான் விசாரிக்க வேண்டும்)” என்று ஆட்ரியன் கூற <br />“வாட் எவர் யூ வான்ட் ஐ வில் கிராண்டட் நீட் ட்டூ ஃபைண்ட் அவுட் திஸ் கேஸ் வித்தின் ஒன் மன்த்(உனக்கு என்ன வேணுமஃ செய் அதுக்கான அதிகாரம் தர்றேன் ஆனா இந்த கேஸை ஒரு மாசத்துல கண்டுபிடிச்சே ஆகணும்)” என்று அவர் கூறி செல்ல அங்கிருந்து கிளம்பியவன்.<br />இதற்கு முன் காணாமல் போன குழந்தைகளின் லிஸ்ட் அவர்களது பேக்கிரவுண்ட் அட்ரஸ் என்று அனைத்தையும் சரிபார்த்தவன் <br />முதலில் காணாமல் போன குழந்தையை பற்றி விசாரிக்க கிளம்பினான்.<br /><br />இங்கு யாழினிக்கோ கனவின் தாக்கம் அதிகம் ஆகியது.<br />‘அத்தை என்னை காப்பாத்து உன்னாலதான் என்னை காப்பாத்த முடியும் உடனே கிளம்பி வா அத்தை என் உயிரை என்கிட்ட இருந்து பிரிக்க சதி செய்யுறாங்க நான் சாகலை அத்தை கோமால இருக்கேன்.<br />என்னை போல கடத்தின பொண்ணுங்க எல்லாம் செத்துட்டாங்க அத்தை நான் மட்டும் தான் உயிரோட இருக்கேன்<br />காப்பாத்து அத்தை என்னை நம்பு” என்று அதிகம் அவளுக்கு கேட்க ஆரம்பித்தது.<br />முதலில் கனவு என்று அவள் அதை தவிர்க்க எண்ணி மருத்துவர் கொடுத்த மருந்துகளையும் உண்டாள் ஆனால் பலன் பூஜ்ஜியம்தான்.<br />ஹனிஷாவின் அபயக்குரல் நாளுக்குநாள் அவளுக்கு அதிகம்தான் ஆனது.<br />இதை தவிர்க்க எண்ணி அவளது வேலையில் கவனத்தை செலுத்த எண்ணியவளுக்கு அவளது புரொபசர் சொன்ன செய்தி புதியது.<br /><br />“மார்னிங் யாழினி.<br />என்ன ரொம்ப டல்லா இருக்குற?” என்று அவர் கேட்க<br /><br />“மார்னிங் சர்.<br />என்னால தூங்கவே முடியலை சர் எனக்கு ஒரே இல்யூஷனா இருக்கு” என்று யாழினி சொல்ல <br /><br />“வாட் ஹாப்பன்ட்?” என்று அவர் கேட்க<br />“இல்ல சர் நாளுக்கு நாள் செத்துபோன என் அண்ணன் பொண்ணு என்கிட்ட ஹெல்ப் கேட்கிற அந்த கனவு ஜாஸ்தி ஆகிட்டே இருக்கு.<br />என் உயிரை பிரிக்க பார்க்கிறாங்க காப்பாத்து அத்தைனு” என்று யாழினி சொல்ல<br />சிறிது யோசித்தவர்<br />“எனக்கு தோணுது உன் அண்ணன் பொண்ணு சாகலைனு” என்று அவர் கூற <br />அதிர்ந்து அவரை பார்த்தவள்<br />“சர் அந்த காட்டுல பெரியவங்க தொலைஞ்சாலே அனிமல்ஸ் சாப்பிட்டுடும் இதுல அவ குழந்தை சர் அவ பாடி கூட கிடைக்கல அப்புறம் எப்படி சர் அவ உயிரோட இருக்க முடியும்?” என்று கேட்டாள் யாழினி.<br />“தொலைஞ்சா பரவாயில்லை நீ சொல்றது நடக்க சான்ஸ் இருக்கு பட் யாராவது ஏதாவது ரீசன்க்கு கிட்னாப் செஞ்சு இருந்தா? அவங்க ஏதாவது ஒரு ரீசன்க்கு குழந்தையை கொல்லாம இருந்தா?” என்று அவர் கேட்க அதிர்ந்த யாழினி எழுந்து நின்றாள்.<br /><br />“சர் என்ன சர் சொல்றீங்க?” என்று அவள் அதிர்ந்து கேட்க<br /><br />“இட்ஸ் மை கெஸ் தான் யாழினி.<br />நீ சொல்ற இல்லியூஷனை பத்தி யோசிக்கும் போது எனக்கு தோணுனது இதுதான்.<br />யாராவது உங்க ப்ரோ வோட குழந்தையை கிட்னாப் செஞ்சு அவங்க நாம ஆராய்ச்சி செய்யுறமாதிரி soul detachment experimentக்கு யூஸ் செஞ்சு இருந்தா அவளோட ஆன்மா உன்னை கான்டாக்ட் செய்ய ட்ரை செஞ்சா?” என்று கேள்வி கேட்க<br />“சர் நான் இப்படி யோசிக்கவே இல்லையே ஆனா அப்படி இருந்தா கூட soul detachable ஆனா 7 seconds தானே சர் ரிட்டர்ன் ஆக டைம் எடுக்கும்.<br />அதுக்குள்ள இறந்து இறப்பாங்களே?” என்று கேட்டாள் யாழினி.<br />“ரேர் கேஸஸ் கோமாக்கு போய்டுவாங்க யாழினி.<br />இட்ஸ் ப்ரூவன்.<br />ஒரு கேஸ் அப்படி நடந்து இருக்கு.<br />அவங்க soul அவங்க குடும்பத்தோட தொடர்பு கொள்ள ட்ரை செஞ்சு இருக்கு பட் ஒன் வீக்ல இறந்துட்டாங்க.<br />ஆனா உன் அண்ணன் பொண்ணு கேஸை பொறுத்தவரை எனக்கு என்னமோ அவ இன்னும் உயிரோட இருக்கானு தோணுது.<br />அதனால்தான் ஆறு மாசமா உனக்கு உன் அண்ணிக்குனு தொடர்ந்து அதே கனவு வர்றது போல.<br />பிகாஸ் முழிச்சு இருக்கும்போது ஆன்மாவால நம்மள தொடர்பு கொள்ள முடியாது.<br />இதை பத்தி ஆராய்ச்சி செய்யுற உனக்கு நான் சொல்லி புரியவைக்க வேண்டியது இல்ல நல்லா யோசிச்சு பாரு யாழினி.<br />நான் சொன்னது போலவும் இருக்கலாம்” என்று அவர் கூற குழப்பமாய் பார்த்தவள்<br />“சர் ஆனா யுரோப் கண்ட்ரீஸ்ல இதெல்லாம் இல்லீகல் அங்க அதுக்கான அதிகாரம் யாருக்கும் கொடுக்கலை அண்ட் இது ஏன் யாராவது சைக்கோ கில்லரா இருக்கக்கூடாது?” என்று யாழினி கேட்க<br />“மே பி இருக்கலாம்.<br />ஏன் நம்ம கண்ட்ரில கூட இல்லீகல்தான் பட் நாம முயற்சி எடுத்துட்டு தானே இருக்கோம்.<br />லாஸ்ட் இயர் கூட ஒரு சயின்டிஸ்ட் ட்ரை செஞ்சு அரெஸ்ட் ஆனாரே.<br />பட் மத்த குழந்தைங்க பாடி கிடைச்சுடுச்சு உன் அண்ணன் பொண்ணு பாடி மட்டும் தான் கிடைக்கல அட்லீஸ்ட் காட்டு மிருகங்கள் அடிச்சு சாப்பிட்டு இருந்தா கூட ஒரு எலும்பாவது கிடைச்சு இருக்குமே.<br />அதுவும் தானே நடந்தது.<br />ஒரு குழந்தையோட பாடி காட்டு மிருகங்கள் சாப்பிட்டதுல அந்த குழந்தையோட எலும்பு கிடைச்சதுல?”.என்று அவர் கேள்வி கேட்க அவள் மேலும் குழம்பி போனாள்.<br />“நீ வேணும்னா உன் டிரீம்ஸ் ரெக்கார்ட் செய்யுற டெஸ்ட் செஞ்சு பாரேன் யாழினி உனக்கு ஒரு கிளீயரன்ஸ் கிடைக்கும்” என்று அவர் யோசனை சொல்ல ‘அதுவும் சரிதான் இவர் கூறுவது போலவும் இருந்தால் காலத்தை தாமதிக்காமல் தன் அண்ணன் மகளை காப்பாற்ற முடியுமே?’<br />என்று எண்ணிய யாழினி உடனே அந்த டெஸ்ட்க்கு அப்ளை செய்தாள்.</p>
<div id="wpfa-502" class="wpforo-attached-file"><a class="wpforo-default-attachment" href="//onlinetamilnovels.com/wp-content/uploads/wpforo/default_attachments/1783312301-eiC9ON01869.jpg" target="_blank" title="eiC9ON01869.jpg"><i class="fas fa-paperclip"></i>&nbsp;eiC9ON01869.jpg</a></div>]]></content:encoded>
						                            <category domain="https://onlinetamilnovels.com/community/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%a9%e0%af%8b-%e0%ae%aa%e0%af%82%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-jayalakshmi-s/">வால்கனோ பூக்கள் - Jayalakshmi. S</category>                        <dc:creator>Jai</dc:creator>
                        <guid isPermaLink="true">https://onlinetamilnovels.com/community/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%a9%e0%af%8b-%e0%ae%aa%e0%af%82%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-jayalakshmi-s/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%a9%e0%af%8b-%e0%ae%aa%e0%af%82%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-2/</guid>
                    </item>
				                    <item>
                        <title>வால்கனோ பூக்கள்</title>
                        <link>https://onlinetamilnovels.com/community/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%a9%e0%af%8b-%e0%ae%aa%e0%af%82%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-jayalakshmi-s/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%a9%e0%af%8b-%e0%ae%aa%e0%af%82%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/</link>
                        <pubDate>Mon, 06 Jul 2026 04:10:20 +0000</pubDate>
                        <description><![CDATA[அத்தியாயம் -1 
வால்கனோ பூக்கள்
&nbsp;
அத்தியாயம் - 1
&nbsp;
அத்தை
&nbsp;
சுவிட்சர்லாந்து அரசு மருத்துவமனை: 
&nbsp;
“சோ உங்களுக்கு ப்யூச்சர்ல சுவிட்சர்லாந்து பக்கம் செட்டில் ஆகுற ஐடி...]]></description>
                        <content:encoded><![CDATA[<p>அத்தியாயம் -1 </p>
<p><b>வால்கனோ பூக்கள்</b></p>
<p>&nbsp;</p>
<p><b>அத்தியாயம் - 1</b></p>
<p>&nbsp;</p>
<p><b>அத்தை</b></p>
<p>&nbsp;</p>
<p><b>சுவிட்சர்லாந்து அரசு மருத்துவமனை: </b></p>
<p>&nbsp;</p>
<p><b>“சோ உங்களுக்கு ப்யூச்சர்ல சுவிட்சர்லாந்து பக்கம் செட்டில் ஆகுற ஐடியா ஏதாவது இருக்கா?” என்று அவன் கேட்க.</b></p>
<p>&nbsp;</p>
<p><b>“அண்ணன் பிள்ளைய பலிவாங்க பார்த்த இந்த ஊர்லலாம் நான் செட்டில் ஆவேனா என்ன? வாட் ட்டூ யூ மீன்?” என்று தன் அண்ணனின் இரண்டாவது குழந்தையான ஜோ வை இடுப்பில் தூக்கி வைத்துக்கொண்டு அவனுக்கு உணவு ஊட்டியபடி அவனை பார்க்காமலே பதிலை கொடுத்து கேள்வியும் கேட்டாள் யாழ்.</b></p>
<p><b>அவளது அண்ணனும் அண்ணியும் இருவரையும் தான் பார்த்து கொண்டு இருந்தனர்.</b></p>
<p>&nbsp;</p>
<p><b>“ஐ மீன்… நத்திங் விடுங்க இல்லனா கொரியால கூட செட்டில் ஆகலாம் ரெண்டும் வேணாம் நான் இந்தியா பக்கம் செட்டில் ஆகிடுறேன்” என்று அவன் பதில் பேச </b></p>
<p>&nbsp;</p>
<p><b>“நீங்க?” என்று அவள் அவனை நிமிர்ந்து பார்த்து சந்தேகமாய் இழுக்க </b></p>
<p>&nbsp;</p>
<p><b>“அத்தை ஹீ ஈஸ் ப்ரபோஸிங் யூ. அதுகூட புரியாத மக்கா இருக்கீங்க?” என்று பெட்டில் அமர்ந்தபடி அவளது அண்ணன் மகள் ஹனிஷா கூற அப்போது தான் அவளுக்கு அவன் பேசியதன் சாராம்சம் விளங்கியது.</b></p>
<p><b>அவனை ஆவென அவள் பார்க்க.</b></p>
<p>&nbsp;</p>
<p><b>“எஸ் யா..யா.. சாரி தட் வேர்ட் ஈஸ் அனேபில் ட்டூ ஸ்பெல் ஃபார் மீ சோ ஐ கால்ட் யூ ஆஸ் இனி ஓகே.</b></p>
<p><b>சீ இனி ஐ லவ் யூ அண்ட் ஐ வாண்ட் ட்டூ மேர்ரி யூ” என்று அவன் வெளிப்படையாகவே சொல்லிவிட்டு அவள் பேச வாயெடுக்க அவளது பதிலை கூட கேட்காமல்</b></p>
<p>&nbsp;</p>
<p><b>“ஐ க்நோ உனக்கு இது டிஸிஷன் எடுக்க கஷ்டம்னு பட் யோசிச்சு ஓகேனா கால் மீ அட் எனிடைம் ஐ வில் பீ தேர் ஃபார் யூ ஆல்வேய்ஸ் கீப் இன் டச் பேபி” என்று அவனே பேசிவிட்டு அவளை பேசவே விடாமல் அவனே பேசிவிட்டு</b></p>
<p><b>“ஐ ஹாவ் ட்டூ கோ. ஐ வில் கம் அண்ட் ஃபினிஷ் ஆல் ஃபாராமாலிட்டீஸ் ஆஃப்டர் ஓகே. பாய் ஹனி டேக் கேர் ஆஃப் யுவர் ஹெல்த்” என்று குழந்தையிடம் சொல்லிவிட்டு ஸ்டைலாக தன் கூலிங் கிளாஸை அணிந்தவன் வைப்ரேட் ஆன தன் மொபைலை எடுத்து</b></p>
<p>&nbsp;</p>
<p><b>“எஸ் சார் தட் சைல்ட் ஈஸ் ஆல்ரைட் ஜஸ்ட் நவ் ஐ செக்ட் வித் டாக்டர்ஸ் அண்ட் ஐ ஆல்சோ டாக்ட்டு ட்டூ ஹர்.</b></p>
<p><b>ஆல்ரெடி வீ ஆர் அரெஸ்டட் தோஸ் கேங்க் அண்ட் ஸ்டார்டட் ட்டூ ட்ரேஸ் தேர் லிங்க்ஸ் ஆல்சோ” என்றபடி ஆங்கிலத்திலேயே கம்பீரமாய் பதிலலித்து நடந்தான் அவன் தான் அவளது நாயகனும் நமது நாயகனுமான ஆட்ரியன் கிம்(டிடெக்டிவ் இன்ஸ்பெக்டர் ஃபெடரல் கிரிமினல் போலீஸ்-சைபர் க்ரைம் டிவிஷன். பெர்ன் ஹெச் க்யூ(detective inspector federal criminal police-cyber crime division. Bern HQ)</b></p>
<p><b>(Adrian kim)</b></p>
<p>&nbsp;</p>
<p><b>சாதாரணமாக காதலை சொல்லிவிட்டு எதுவும் நடக்காதது போல பேசிவிட்டு அவன் சென்றுவிட்டான் ஆச்சர்யமாய் நின்றிருந்த யாழினிக்கு தான் என்ன நடந்தது என்ற மனநிலை.</b></p>
<p><b>அவளையே பார்த்தபடி இருந்த அவளது அண்ணன் மகன் ஜோ “தா” என்று அவள் கன்னத்தில் ஒரு அடி கொடுக்க தன் சுயம் வந்தவள் அவனுக்கு உணவை ஊட்டியபடி யோசிக்கலானாள்.</b></p>
<p>&nbsp;</p>
<p><b>அவளது அருகில் வந்த அவளது அண்ணன்</b></p>
<p><b>“அவர் செஞ்சது அவர் வேலையா இருந்தாலும் அவரோட கேரக்டர் அந்த வேலையிலேயே தெரிஞ்சுடுச்சு அவரோட ப்ரபோஸல கொஞ்சம் கன்சிடர் பண்ணுடா. </b></p>
<p><b>எனக்கும் உனக்கு ஒரு நல்லவர் துணையா கிடைச்ச நிம்மதி இருக்கும்.</b></p>
<p><b>நான் மட்டும் குடும்பமா இருக்கேன் உன்னை தனியா பார்க்க ஒரு மாதிரி இருக்குடா. உன் லைஃப்தான் நீதான் முடிவு எடுக்கனும்” என்றுவிட்டு அவளது தலையில் ஆதூரமாய் தடவி விட்டுஅவரது மகளின் அருகில் சென்று அமர்ந்து கொண்டான் அவளது சகோதரன் யோகேஷ்.</b></p>
<p>&nbsp;</p>
<p><span style="font-weight: 400">இவர்களுக்குள் பழக்கமானது எப்போது? எப்படி?</span></p>
<p><span style="font-weight: 400">அதை பார்ப்போம் கதையின் துவக்கத்திலிருந்து.</span></p>
<p>&nbsp;</p>
<p><span style="font-weight: 400">டிசம்பர் 14-2024:</span></p>
<p>&nbsp;</p>
<p><span style="font-weight: 400">சரியாக ஒரு வருடத்திற்கு முன் இரவு பனிரெண்டு மணி.</span></p>
<p>&nbsp;</p>
<p><span style="font-weight: 400">பெங்களூர்.</span></p>
<p><span style="font-weight: 400">Nehru institute வளாகத்தில் அமைந்திருக்கும் கட்டிடங்களின் வரிசையில் இருக்கும் கோர்ட்டர்ஸ்ஸில் ஈ பிளாக்கில் இருந்த அவளது வீட்டின் உள்ளே அவள் நுழையவும் </span></p>
<p><span style="font-weight: 400">கூடவே யாரோ வந்தது போல் உணர்ந்தாள் யாழினி.</span></p>
<p>&nbsp;</p>
<p><span style="font-weight: 400">சட்டென அவள் திரும்பி பார்க்க காற்று மட்டுமே.</span></p>
<p><span style="font-weight: 400">ஏதோவென விட்டவள் கதவை தாழிட்டு உள்ளே சென்று  குளியல் முடித்து விட்டு வந்து சமையல் அறையில் நுழைந்தவளின் கண்ணில் அந்த காரமான இன்ஸ்டன்ட் கொரியன் நூடுல்ஸ் பாக்கெட் தான் கண்ணுக்கு பட்டது.</span></p>
<p>&nbsp;</p>
<p><span style="font-weight: 400">“ஆந்திராகாரன்கூட இவ்ளோ காரம் சாப்பிட மாட்டான் இந்த கொரியன்காரனுங்க எப்படித்தான் சாப்பிடுறானுங்களோ? ட்ரை பண்ணி பாருனு இந்த கூட வேலை செய்யுற கொரியன் குரங்க நம்பி இதை வாங்கிட்டேன். </span></p>
<p><span style="font-weight: 400">இன்னைக்கு பொழுது இவனோட தான் நமக்குனு எழுதி வெச்சுட்டான் போல ம்ம்ம் வேற வழி இந்நேரம்லாம் ஆர்டர் போட்டு அது வர்றதுக்குள்ள நாளைக்கு பொழுது வந்துடும் எனக்கு வேற எக்கசக்க வேலை இருக்கு சீக்கிரமே போகணும்” என்று அவளுக்கு அவளே புலம்பியபடி வெந்நீரை சுடவைத்தவள் அதில் அந்த நூடுல்ஸை சேர்த்து மசாலாவை கொஞ்சமே சேர்த்து கலந்து கூடவே கொஞ்சம் ஒரு முட்டையை ஆம்லெட் போட்டவள் அதில் வைத்து சாப்பிட ஆரம்பித்தாள்.</span></p>
<p><span style="font-weight: 400">கூடவே யாரோ இருப்பது போல உணர்வு வந்தாலும் எதையும் யோசிக்காமல் உண்டவளுக்கு உறக்கம் கண்ணை கவ்வ அதையெல்லாம் அப்படியே போட்டுவிட்டு அங்கேயே அமர்ந்தபடி உறங்கிபோனாள் யாழினி.</span></p>
<p>&nbsp;</p>
<p><b>யாழினி(இந்திய பெண் வளர்ந்துவரும் மருத்துவ சயின்டிஸ்ட் தாய் தந்தை நான்கு வருடங்களுக்கு முன் இறந்து போக தந்தையாய் இருந்த அண்ணனும் அப்போது சுவிஸ் சிட்டிசன் ஆகி இருந்ததால் தனியாகவே இருந்து வந்த இருபத்தி ஒன்பது வயது பெண் மருத்துவ சயின்டிஸ்ட்) </b></p>
<p>&nbsp;</p>
<p><span style="font-weight: 400">கூடுவிட்டு கூடுபாயும் பழைய மன்னர்கால கதையை கேட்டவள் இப்போது ஏன் அதுபோல நடக்கவில்லை என எண்ணியதன் விளைவு அவளை soul-detachment பற்றி படிக்கத்தூண்டியது.</span></p>
<p><span style="font-weight: 400">அதை படித்தாளே தவிர எதையும் ஆராயவில்லை ஏனெனில் அது உலகமெங்கும் தடை செய்யப்பட்ட ஆராய்ச்சி அதனால் அதை பற்றி தெரிந்து மட்டும் வைத்துக்கொண்டால் போதும் என தெரிந்து கொண்டாள்.</span></p>
<p><span style="font-weight: 400">இப்போதைய ஏ ஐ அஸிஸ்டெண்ட் உதவியுடன் அதை செயல்படுத்த முடியும் என அவளது சீனியர் சொன்னது நினைவில் வந்து போனது.</span></p>
<p><span style="font-weight: 400">ஆனால் உண்ட மயக்கம் வர உடனே எல்லாம் மறந்து உறங்கி போனாள் யாழினி.</span></p>
<p>&nbsp;</p>
<p><span style="font-weight: 400">ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவளுக்கு மங்கலாக சில நிகழ்வு வரத்துவங்கியது.</span></p>
<p>&nbsp;</p>
<p><span style="font-weight: 400">ஆறு மாதத்திற்கு முன் அவள் அண்ணனிடம் பேசியது </span></p>
<p><span style="font-weight: 400">நினைவாய் வந்து போனது.</span></p>
<p>&nbsp;</p>
<p><span style="font-weight: 400">“ஹலோ… ஹான் சொல்லுடா அண்ணா இன்னைக்குத்தான் எனக்கு ஃபோன் பண்ண தோணுச்சா உனக்கு? ஒரு மாசம் ஆகுதுடா நீ ஃபோன் பண்ணி எப்படி இருக்கா என் வாயாடி? கூடவே என் சமத்து மருமகன் என்ன பன்றார்?” என்று எதிர்முனையில் இருப்பவனை பேசவே விடாமல் அவளே பேசினாள்.</span></p>
<p>&nbsp;</p>
<p><span style="font-weight: 400">மறுமுனையில் ஆழ்ந்த நிசப்தம்.</span></p>
<p><span style="font-weight: 400">ஜாலியாக பேசுவதை விட்டு </span></p>
<p><span style="font-weight: 400">“அண்ணா அண்ணா என்ன ஆச்சு? ஏதாவது பேசுடா?” என்று அவள் லேசாக பதட்டம் ஆக மறுமுனையில் இருந்த அவன் சகோதரன் யோகேஷ் </span></p>
<p><span style="font-weight: 400">“யாழ் ஹ..ஹனி…. ஹனிஷா” என்று அவன் பேசத்தடுமாற</span></p>
<p>&nbsp;</p>
<p><span style="font-weight: 400">“ஹனி ஹனிஷாக்கு என்ன ஆச்சுடா?” என்று அவள் சத்தமாய் கேட்க அழுகையோடே </span></p>
<p>&nbsp;</p>
<p><span style="font-weight: 400">“ப்ரண்ட்ஸ் கூட ஃபாரஸ்ட் ஏரியாக்கு டூர் போன குழந்தையை காணோம்.</span></p>
<p><span style="font-weight: 400">ப்ரண்ட்ஸ் எவ்ளோ சொல்லியும் கேட்காம டீப் ஃபாரஸ்ட் ஏரியாக்குள்ள போய் இருக்கா அவளை காணவே இல்ல…</span></p>
<p><span style="font-weight: 400">உடனே ஹெல்ப்லைன்க்கும் எங்களுக்கும் தகவல் சொன்னாங்க ஃபாரஸ்ட் ஆபீசர்ஸ் தேடியும் அவ கிடைக்கலை ஒரு இடத்துல அவளோட கால்ல போட்டு போன ஷூ ஃபுல்லா இ..இரத்தமோட கிடைச்சுது கூடவே நாலைந்து ஓநாயோட கால்தடமும் கிடைச்சு இருக்கு.</span></p>
<p><span style="font-weight: 400">நம்ம ஹ..ஹனி ஹனிஷாவை ஓநாய்ங்க துரத்தி கடிச்சு கொன்னு இருக்கும்னு சொல்றாங்கடா.</span></p>
<p><span style="font-weight: 400">கா..காலையில ட்ரோன் வெச்சு தேடினதுல ஒரு இடத்துல கூட்டமா ஓநாய்ங்க இருந்தது வாயெல்லாம் இரத்தமோட நம்ம ஹனி…. ஹனி நம்மளவிட்டு போய்ட்டாடா…குழந்தையோட பாடி கூட கிடைக்கலைடா யாழ்” என்று அவன் அழுதபடியே கூற </span></p>
<p><span style="font-weight: 400">அப்படியே அதிர்ந்து மொபைலை கீழே போட்டாள் யாழ் என்னும் யாழினி.</span></p>]]></content:encoded>
						                            <category domain="https://onlinetamilnovels.com/community/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%a9%e0%af%8b-%e0%ae%aa%e0%af%82%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-jayalakshmi-s/">வால்கனோ பூக்கள் - Jayalakshmi. S</category>                        <dc:creator>Jai</dc:creator>
                        <guid isPermaLink="true">https://onlinetamilnovels.com/community/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%a9%e0%af%8b-%e0%ae%aa%e0%af%82%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-jayalakshmi-s/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%a9%e0%af%8b-%e0%ae%aa%e0%af%82%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/</guid>
                    </item>
							        </channel>
        </rss>
		