<?xml version="1.0" encoding="UTF-8"?>        <rss version="2.0"
             xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
             xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
             xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
             xmlns:admin="http://webns.net/mvcb/"
             xmlns:rdf="http://www.w3.org/1999/02/22-rdf-syntax-ns#"
             xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/">
        <channel>
            <title>
									மொஹபத் முதல் நிக்காஹ் வரை - Praveena Thangaraj - onlinetamilnovels.com Forum				            </title>
            <link>https://onlinetamilnovels.com/community/%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b9%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0/</link>
            <description>onlinetamilnovels.com Discussion Board</description>
            <language>en-US</language>
            <lastBuildDate>Mon, 27 Jul 2026 03:37:38 +0000</lastBuildDate>
            <generator>wpForo</generator>
            <ttl>60</ttl>
							                    <item>
                        <title>மொஹபத் முதல் நிக்காஹ் வரை-8</title>
                        <link>https://onlinetamilnovels.com/community/%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b9%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0/%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b9%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0-8/</link>
                        <pubDate>Sun, 19 Jul 2026 03:52:50 +0000</pubDate>
                        <description><![CDATA[அத்தியாயம்-8      காலை ஹோட்டல் கிச்சன் வழக்கம்போல் பரபரப்பாக இருந்தது. காய்கறிகள் நறுக்கும் சத்தம். பாத்திரங்கள் உரசும் ஓசைகள்.  ஆர்டர்கள் மழையாக வந்து கொண்டேயிருந்தன.ஆனால் பிரணவின் மனம் மட்...]]></description>
                        <content:encoded><![CDATA[<p>அத்தியாயம்-8<br /><br />      காலை ஹோட்டல் கிச்சன் வழக்கம்போல் பரபரப்பாக இருந்தது. காய்கறிகள் நறுக்கும் சத்தம். பாத்திரங்கள் உரசும் ஓசைகள்.  ஆர்டர்கள் மழையாக வந்து கொண்டேயிருந்தன.<br />ஆனால் பிரணவின் மனம் மட்டும் வேலைக்குள் முழுவதுமாக செல்லவில்லை.<br /><br />கையில் கத்தி காய்கறியை நறுக்கிக் கொண்டிருந்தாலும், அவன் பார்வை சில நிமிடங்களுக்கு ஒருமுறை சுவரில் இருந்த கடிகாரத்தைத் தேடிச் சென்றது. 'இன்னும் எவ்வளவு நேரம்?' அவனுக்கே அவனை நினைத்து சிரிப்பு வந்தது.<br /><br />'என்னடா பிரணவ்... இப்படி ஆயிட்டியே...' என்றபடி தியானாவின் முகம் நினைவில் வந்துவந்து மறைந்தது.<br /><br />அவள் அனுப்பியிருந்த கீதை உபதேசம். இவனை போலவே இனிய காலை வணக்கம் பிரணவ்." என்ற அந்த ஒரு வரி...<br />அவன் மனதை நாள் முழுவதும் துரத்திக் கொண்டே இருந்தது.<br /><br />அந்த நேரம் அருகில் இருந்த செஃப் ஒருவர், "பிரணவ்..." என்று அழைத்தார்.<br /><br />"யெஸ் செஃப்."<br />"என்னாச்சு? டைம் மட்டும் பார்த்துட்டே இருக்க?" பிரணவ் சிரித்தான்.<br /><br />"ஒன்னுமில்லை செஃப்." என்றாலும் லாபியில் தியானாவை பார்க்கும் ஆசையில் திளைத்தான்.<br /><br />இதில் மற்றொரு சீனியர் செஃப் தயாரித்திருந்த முக்கியமான டிஷ், சர்வீஸுக்கு சென்ற சில நிமிடங்களில் திரும்பி வந்தது.<br />"கார்னிஷ் எல்லாம் கலைஞ்சிருக்கு. டேபிள் டுவெல்வ் கம்ப்ளைன். இதை யார் பிரிப்பர் செய்தது" என்று செஃப் கேட்டதும், அடுத்த நொடியே முழு கிச்சனும் அமைதியானது.<br /><br />அந்த சீனியர் செஃப் கடும் கோபத்தில், "யார் இதை பிளேட் பண்ணினது?" என்று கத்தினார்.<br /><br />பதறியபடி ஒரு இளம் செஃப் முன்வந்தான். "சாரி செஃப்... நா..நான் தான்" என்றதும், <br />அவ்வளவு மேலதிகாரி "சாரியா? பைவ் ஸ்டார் ஹோட்டல்ல 'சாரி' சொல்லி வேலையை காப்பாத்த முடியுமா?" என்று சீறினார்.<br /><br />அங்கே இருந்த அனைவரும் அமைதியாக நின்றனர். "இங்க நம்மள தேடி வேலைக்கு எடுத்தது ஏன் தெரியுமா? சம்பளம் நல்லா தர்றாங்க. வசதி தர்றாங்க. விசா தர்றாங்க. அதுக்கெல்லாம் காரணம்...<br />நாம செய்யுற வேலை! ஒரு பிளேட் வெளியே போகும் முன் முன்னாடி நூறு தடவை செக் பண்ணணும். இது ஒன்னும் சாதாரண ஹோட்டல் இல்ல. பைவ் ஸ்டார் ஹோட்டல்.<br />  இங்க ஒரு கஸ்டமர் பணம் கொடுக்கறது சாப்பாட்டுக்கு மட்டும் இல்ல. எல்லாவிதமான பெர்பெக்ஷனுக்கும் தான். அவங்களுக்கு மோசாமான அனுபவமா அமைந்தா, அடுத்து இங்க வருவாங்களா?" என்று கத்தினார்.‌<br />இதுவரை அமைதியாக இருந்து கனிவாக பேசி காரியத்தை நையமாக கையாளும் செஃப் தான்‌ இன்று குரல் உயர்த்தி கடிந்தார்.<br /><br />தவறு செய்தவனோ தலைகுனிந்து நிற்க, "உங்கள்ல பாதி பேர் சம்பளம் வாங்கின மறுநாளே வீட்டுக்கு அனுப்புறிங்க. கடன் அடைக்கறீங்க. EMI கட்டுறிங்க. உங்க குடும்பம் உங்களை நம்பி காத்திருக்குது. அப்படி இருக்கும்போது... வேலை செய்யுற இடத்துல கவனக்குறைவா? இந்த கிச்சன் நமக்கு வெறும் வேலை செய்யுற இடமா? இது நம்ம கோவில்! இங்க உள்ளே வந்ததும் வெளியுலகத்தையே மறந்துடணும். மனம் முழுக்க ருசியா சமைக்கறதுல மட்டும் இருக்கணும்." என்றதும் முழு கிச்சனும் அமைதியானது.<br /><br />ஏனோ பிரணவும் தலை குனிந்தான். செஃப் வேறு ஒருவரைத் திட்டிக் கொண்டிருந்தார்.<br />ஆனால்... ஒவ்வொரு வார்த்தையும்... தன்னையும் பார்த்து சொல்வது போல இருந்தது.<br /><br />  'ஊரில் அம்மா... அண்ணன்... தனக்காக எவ்வளவு கஷ்டப்பட்டு பணம் சேர்த்து அனுப்பியிருக்க, இங்க வந்து தான் தியானாவை நினைத்துக் கொண்டு இருக்கின்றோமே..' என்று அவனுக்கே அவன் மீது கோபம் வந்தது.<br /><br />அந்த நிமிடமே ஒரு முடிவு எடுத்தான். 'இல்ல... இனி இப்படி போகக்கூடாது. வேலை தான் முதல்ல. மத்ததெல்லாம் அப்புறம்.' என்று மனதார உறுதி எடுத்தான். <br /><br />புயல் அடித்து ஓய்ந்தது போல அன்றைய நாள் முழுக்க சமையல் செய்யுமிடத்தில் மயான அமைதி. யாரும் யாரிடமும் அதிகம் பேசவில்லை. லேசான கேலி கிண்டல் கூட அறவே ஒழிந்தது. மேலும் தவறு செய்த செஃப்பை தனியாக அழைத்து மேனேஜரை பார்த்து முடித்தப்பின்னே மற்ற வேலையில் தொடரலாமா அல்லது எவ்வாறென கூறுவதாக முடித்து விட்டார்.‌<br /><br />அன்று மாலை ஷிப்ட் முடிந்தவுடன் யாருக்காகவும் தியானாவுக்காகவும், பிரணவ் காத்திருக்கவில்லை.<br />நேராக டாக்ஸி நிறுத்தத்தில் நின்று, திர்ஹாம் கொடுத்து,<br />அக்கமோடேஷனுக்கு கிளம்பிவிட்டான்.<br /><br />தியானா தான் வழக்கம்போல் டாக்ஸி நிறுத்தத்திற்கு வந்தாள்.<br />அவளது கண்கள், தானாகவே பிரணவைத் தேடின.<br /><br />இடது பக்கம், வலது பக்கம் என்று பிரணவை தேடி அவனில்லை என்றதும் . 'இன்னிக்கு சீக்கிரமா போயிட்டாரா...?' என்று சிறிது ஏமாற்றத்துடன் நின்றாள்.<br /><br />டாக்ஸியில் ஏறிய பிறகும்,<br />அவள் பார்வை ஜன்னல் வழியாக அவனைத் தேடியது.<br />சில நேரம் நடந்து செல்வதாக அல்லவா கூறுவான். <br />   <br />  பிரணவிடம் எங்கே இருக்கின்றான்‌? சென்று விட்டானா? என்றறியும் விதமாக பேசும் எண்ணம் எழுந்தது. ஆனால் சற்று கையை கட்டுப்படுத்திக் கொண்டாள். <br /><br />வீட்டிற்கு வந்த பிறகும், நஸீர் இல்லாமல் போக, உம்மாவும் இரவு சமைக்க வேண்டுமென காரியத்தில் கண்ணாக இருக்க, தங்கையும் படிப்பில் மூழ்கியிருக்க, தலைவலி என்று உம்மாவிடம் சொல்லிவிட்டு அறைக்கு வந்து தாழிட்டு விட்டாள். <br />தைலம் தேய்த்து படுத்திருப்பதாக உம்மாவிடம் சொல்விவிட்டே இருந்தாலும், பொய் சொன்னதை விட, பிரணவிடம் பேசாததே அவ்வெண்ணமே மனதில் ஓடியது. <br /><br />இறுதியில்... அவளே கைபேசியை எடுத்தாள்.<br />சில நொடிகள் தட்டச்சு செய்து அழித்தாள். மீண்டும் எழுதினாள். "எங்க இருக்கிங்க?" என்றதை எழுதியும்<br />அனுப்பவில்லை. மீண்டும் அழித்தாள். இறுதியாக மனம் கேளாமல் "குயிக்கா போயிட்டீங்களா? இன்னிக்கு உங்களை காணோம்..."<br />என்று அனுப்பிவிட்டாள்.<br /><br />அந்த மெசேஜ் வந்தபோது<br />பிரணவ் அறையில் அமைதியாக அமர்ந்திருந்தான்.<br /><br />திரையைப் பார்த்ததும்<br />உதட்டில் தானாக சிரிப்பு வந்தது. <br />    அவனும் தன்‌ மனக்கட்டுப்பாட்டை விதித்து போனை வெறித்தபடி தங்குமிடம் வந்துவிட்டான். ஏனோ சுவாசிக்க மறந்தவனாக உள்ளம் தவித்தது. தியானா தற்போது அனுப்பியது, உலகம் இயங்கியதாக, சில விநாடிகள் கழித்தே பதில் அனுப்பினான்.<br /><br />"ரொம்ப டயர்டா இருந்துச்சு. கொஞ்சம் உடம்பும் முடியல. அதான் சீக்கிரம் வந்துட்டேன் தியானா." என்றான்.<br /><br />‌அடுத்த நொடியே பதில் வந்தது.<br />"ஏன்? என்னாச்சு? உடம்புக்கு என்ன?" என்று அன்பான அக்கறை.<br /><br />"லைட்டா பீவர். இப்ப பரவாயில்லை." அதன்பிறகு சில நொடிகள் அமைதி.<br /><br />திடீரென்று... தியானா கேட்டாள்."ஆமா... உங்களுக்கு குர்ஆன் வசனங்கள் எல்லாம் எப்படி தெரியும்?"<br /><br />பிரணவ் சிரித்தான். "அது நமக்கு பிடிச்ச விஷயத்தை தெரிஞ்சிக்கற ஆர்வம் தியானா." என்றான். <br /><br />  "ஆமா... உங்களுக்கு எப்படி கீதை உபச்சாரம் தெரியும்?" என்றான்.‌<br /><br />"உங்களை மாதிரி தான். பிடிச்ச விஷயத்தை தெரிந்துக்கற ஆர்வம்." என்றாள்.<br /><br />பிரணவ் உடனே, "வாட்...? நீங்க முஸ்லிம் பொண்ணு. கீதையில என்ன ஆர்வம்?" என்று கேட்டான்.<br /><br />சில நிமிடங்கள் தியானாவிடம் பதில் வரவில்லை. பிறகு...<br />மெதுவாக தட்டச்சு செய்தாள்.<br /><br />"நான் நிறைய புத்தகங்கள் வாசிப்பேன் பிரணவ். குர்ஆன்... நபிமொழிகள். எங்க மதத்தோட பெருமை பேசுவதை அறிந்திருக்கேன். அதே போல பொதுவுடைமை நூல்களான திருக்குறள், ஐம்பெருங்காப்பியம், பகவத் கீதை... எல்லாமே படிப்பேன்."<br />பிரணவ் ஆச்சரியமடைந்தான்.<br /><br />"புக்ஸ் படிப்பீங்களா?" என்றான்<br /><br />"ம்ம்ம்... ஸ்கூல் படிக்கும்போதே வாசிக்க பிடிக்கும். <br />அதோட கதைகள் எழுத ஆரம்பிச்சேனா எல்லாவிதமான விஷயமும் அறிந்து கொள்ள வாசிப்பேன்." என்றாள். <br /><br />பிரணவின் விரல்கள் நின்றுவிட்டன. பிறகு "உண்மையாவா? கதை எழுதுவிங்களா?" என்றான்.‌<br /><br />"ம்ம்ம கவிதை கதை... வீட்ல யாருக்கும் தெரியாது." என்றாள். <br /><br />"என்ன பெயர்ல எழுதுறீங்க?"<br />என்று கேட்டான்.<br /><br />அடுத்த பதிலுக்காக அவன் ஆவலுடன் காத்திருந்தான்.<br /><br />"தியா நாவல்ஸ்." என்றாள்.  அந்த பெயரை இரண்டு முறை மெதுவாக உச்சரித்தான்.<br />"தியா... நாவல்ஸ்..." அடுத்த நொடியே கூகுளைத் திறந்தான்.<br />தேடுவதற்கு முன்பே... தியானாவிடமிருந்து இன்னொரு மெசேஜ் வந்தது.<br /><br />"ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கணும்னா... அவங்களோட மதம்... மொழி... கலாச்சாரம்... வாழ்க்கை முறை... எல்லாத்தையும் படிச்சு ஓரளவென்ற அளவிலாவது தெரிஞ்சிக்கணும்னு நம்புவேன். அதனால்தான் குர்ஆனோட சேர்த்து திருக்குறள்... பகவத் கீதை... வேறு நிறைய புத்தகங்களும் படிப்பேன்."<br />பிரணவின் முகம் முழுக்க புன்னகை.<br /><br />"தியா-ன்னா.. விளக்கு, ஒளின்னு இல்லைங்க அர்த்தம். அத்தோட அது இந்து பெயர் மாதிரில்ல இருக்கு. உங்க வீட்ல.. ஓ.. சாரி சாரி. உங்க வீட்ல நீங்க எழுதுவதே தெரியாதுனு சொன்னிங்கள்ல. மறந்துட்டேன்." என்றான்.<br /><br />  "ஆக்சுவலி இந்து பெயர் மாதிரி தான் வச்சிக்கிட்டேன். இங்க ரைட்டர்ஸ் பெரும்பாலும் முஸ்லீமா இருந்தாலும் இந்து பெயரை தான் அடையாளமா வச்சிப்பாங்க. அதென்னவோ அது தான் தமிழ்நாட்டு வாசகர்கள் வந்து படிக்காங்க. முஸ்லீம் ரைட்டர் அதுவும் லங்கைனா கொஞ்சம் யோசிக்கறாங்கனு எங்க சைட்ல சொல்லிருந்தாங்க. இதே தமிழ் நேம் இந்து பெயர்னா சப்போர்ட் அதிகமா கிடைக்கும்னு சொன்னாங்க." என்றாள். <br /><br />  பிரணவிற்கு எழுத்தாளரை பற்றி எல்லாம் ஒன்றும் தெரியாதே. அதனால் அந்த பேச்சை விரிவாக கேட்கவில்லை. மாறாக, 'உங்க பெயரை போட்டு... சர்ச் பண்ணிட்டேன்..  எதுவும் காட்டலை. எப்படிங்க படிக்க.. லிங்க் அனுப்புங்க. நான் கண்டிப்பா படிப்பேன்." என்றான். <br /><br />தியானாவின் இதயம் வேகமாக துடித்தது.<br /><br />"சரி... லிங்க் அனுப்புறேன். படிச்சுட்டு... எப்படி இருக்குன்னு நேர்மையா சொல்லணும். அப்பறம்... படிச்சிட்டு என்னை தப்பா நினைக்க கூடாது. என் தமிழ் கொஞ்சம் அப்படியிப்படி இருக்கலாம். " அவள் அனுப்ப "லிங்க் கொடுங்க." என்று சிரிக்கும் எமோஜியை தட்டிவிட்டான். <br /><br />தியானா லிங்கை எடுத்து தந்தாள். ஒரு எழுத்தாளரின் எதிர்பார்ப்பும், ஒரு பெண்ணின் தயக்கமும், இரண்டும் கலந்திருந்தன. அவளது உள்ளத்தில்.. மேலும் உடம்பை பார்த்துக்கோங்க." என்று கணிவுடன் கூறினாள். <br /><br />  பிரணவிற்கோ பதினொன்று மணியிலிருந்து இருந்த மனப்பாரம் தியானாவிடம் பேசக்கூடாது என்ற திட்டம் முடிவு எல்லாம் அவளாக குறுஞ்செய்தி அனுப்பியதும் வீட்டு நினைப்பு கூட மறந்தே போனான்.‌<br />  <br />  தியானா அனுப்பிய லிங்கை தொட்டான். <br />   முதல் முதலாக நாவல் உலகத்திற்குள் கதை படிக்க வந்த ஆச்சர்யம். இதற்கு முன் வேதங்கள், உபநிஷதங்கள் கூட எல்லாம் படித்திருக்கின்றான்.‌ அத்துடன் சுஜாதா, கல்கி, சாண்டில்யன், ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர், கி.ரா, சுபா, ஜெகாந்தன், ஜெயமோகன், இந்திரா சௌந்திராஜன்,  கதைகள் எல்லாம் அத்துப்படி. பெண் எழுத்தாளர்களின் எழுத்துபணியை பருகியது குறைவே. <br /><br />அதனால் ஒருவிதமான எதிர்பார்ப்பில் ஆசையாக அந்த லிங்கில் சென்று கதையை பார்த்தான். சைட்டே பளபளப்பாக வண்ணங்களுடன் காட்சியளித்தது. பல்வேற எழுத்தாளர்கள் எழுதுவதை கவனித்தான்.‌ 'தியா நாவல்ஸ்' என்றதை கவனித்தான்‌.<br />  <br />  அதில் முகப்பு படமே அவனை ஈர்த்தது. அந்த கண்ணை காதலனாகவும் கணவனாகவும் மனதால் ஏற்று வாழும் மீராவின் ஓவியப் புகைப்படம். அதுவும், கழுத்தில் துளசி மாலையும், கையில் தம்பூராவை ஏந்தி, கண்ணனின் நாமத்தைப் பாடிய பக்தையான மீராவின் புகைப்படம் இருந்தது. <br /><br />அதில் தியாவின் பயோடெட்டா வேறு கொஞ்சம் போல இருந்தது. <br />  அதை வாசிக்க ஆரம்பித்ததும், "என்ன பிரணவ் இன்னிக்கு ரொம்ப குயிக்கா வந்துட்டியா என்ன?" என்று சூர்யா வரவும, தற்காலிகமாக போனை இறக்கிவிட்டு "ஆமா" என்றான் பிரணவ்.<br /><br />  பிரணவோ சடசடவென சூர்யாவிடம் ஒப்பிக்க மனம் உந்தியது. ஆனால் ஏதாவது சொன்னால் ஏற்றி விடும் விதமாக பேசுவான். இப்பொழுது தானே போன் இலக்க எண்ணையே பெற்றது. இதில் இவனிடம் கூறினால் என்ன ஏதென தன்னை தோண்டி துருதுருவென, ''இ-புக் படிக்கறேன் சூர்யா. நீங்க வாசிக்கறாங்களா?" என்று பொய்யாக கேட்டான்.  <br /><br />சூர்யாவும் மறுத்துவிட்டு குளிக்கத் தேவையான துணிகளை எடுத்துக்கொண்டு பாத்ரூமுக்குள் சென்றான். 'அப்பாடா...' என்று மனதிற்குள் நினைத்த பிரணவ், மீண்டும் கைபேசியை எடுத்தான்."<br /><br />-தொடரும்.<br />பிரவீணா தங்கராஜ்.<br /><br />   <br /><br /></p>]]></content:encoded>
						                            <category domain="https://onlinetamilnovels.com/community/%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b9%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0/">மொஹபத் முதல் நிக்காஹ் வரை - Praveena Thangaraj</category>                        <dc:creator>Praveena Thangaraj</dc:creator>
                        <guid isPermaLink="true">https://onlinetamilnovels.com/community/%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b9%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0/%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b9%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0-8/</guid>
                    </item>
				                    <item>
                        <title>மொஹபத் முதல் நிக்காஹ் வரை-7</title>
                        <link>https://onlinetamilnovels.com/community/%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b9%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0/%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b9%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0-7/</link>
                        <pubDate>Sat, 18 Jul 2026 05:03:39 +0000</pubDate>
                        <description><![CDATA[அத்தியாயம்–7
அறைக்குள் நுழைந்த சூர்யா இன்னும் பிரணவ் சொன்னதை நம்ப முடியாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தான்.
&quot;டேய்... நிஜமா தான் சொல்லறியா?&quot;
&quot;ம்ம்ம&quot;
&quot;ஒரு பொண்ணு... அதுவும் அவளாவே உன்கிட...]]></description>
                        <content:encoded><![CDATA[<p><span style="font-size: 14pt">அத்தியாயம்–7</span></p>
<p><span style="font-size: 14pt">அறைக்குள் நுழைந்த சூர்யா இன்னும் பிரணவ் சொன்னதை நம்ப முடியாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தான்.</span></p>
<p><span style="font-size: 14pt">"டேய்... நிஜமா தான் சொல்லறியா?"</span></p>
<p><span style="font-size: 14pt">"ம்ம்ம"</span></p>
<p><span style="font-size: 14pt">"ஒரு பொண்ணு... அதுவும் அவளாவே உன்கிட்ட போன் நம்பர் கொடுத்திருக்கா."</span></p>
<p><span style="font-size: 14pt">பிரணவ் தண்ணீர் பாட்டிலை மூடி வைத்து அவனைப் பார்த்தான்.</span></p>
<p><span style="font-size: 14pt">"ஆமா." என்றான் பிரணவ். </span></p>
<p><span style="font-size: 14pt">"உனக்கு இது சாதாரணமா தெரியுதா?" என்று சூர்யா ஆச்சரியப்பட்டான்.‌</span></p>
<p><span style="font-size: 14pt">"இதுல என்னடா?" என்று மழுப்ப முயன்றான் பிரணவ். </span></p>
<p><span style="font-size: 14pt">"என்னடாவா? எனக்கு தெரிஞ்ச வரைக்கும் பொண்ணுங்க நம்பர் தர்றதுக்கு முன்னாடி நூறு தடவை யோசிப்பாங்க. அதுவும் வெளிநாட்டுல வேலை பார்க்கற பொண்ணு. அவளே வந்து தந்திருக்கா." என்று பெரிதாக கூறினான்.</span></p>
<p><span style="font-size: 14pt">பிரணவ் லேசான புன்னகையுடன் "அதுக்காக?" என்று கேட்டான். </span></p>
<p><span style="font-size: 14pt">"மச்சி... இப்பவே ஒரு 'ஹாய்' அனுப்பு." என்றான். </span></p>
<p><span style="font-size: 14pt">"வேண்டாம்." என்று மறுத்தான். </span></p>
<p><span style="font-size: 14pt">"ஏன்?" என்று சூர்யா திகைத்தான். </span></p>
<p><span style="font-size: 14pt">"இப்ப எதுக்கு?"</span></p>
<p><span style="font-size: 14pt">"எதுக்கா? அதுக்குத்தான் நம்பர் கொடுத்திருப்பா." என்று தியானாவை பற்றி தவறாக எண்ணினான். </span></p>
<p><span style="font-size: 14pt">பிரணவ் மெதுவாக தலையசைத்தான். "இல்லடா சூர்யா... அவ என்னை நம்பி தான் நம்பர் கொடுத்திருக்கா. அந்த நம்பிக்கையை நான் உடனே போன் பண்ணி, மெசேஜ் பண்ணி, டிஸ்டர்ப் பண்ணி கெடுக்க விரும்பல." என்று மறுத்தான். </span></p>
<p><span style="font-size: 14pt">சூர்யா சிரித்தான். "டேய்... ஒரு பொண்ணு நம்பர் கொடுத்தா அதுக்கு என்ன அர்த்தம் தெரியுமா?" என்று கேட்டான். </span></p>
<p><span style="font-size: 14pt">"என்ன?"</span></p>
<p><span style="font-size: 14pt">"அவளுக்கு உன்னை பிடிச்சிருக்கு." பிரணவ் உடனே சிரிப்பை நிறுத்தினான்.</span></p>
<p><span style="font-size: 14pt">"ஏத்திவிடாத சூர்யா" என்று மறுத்தான். </span></p>
<p><span style="font-size: 14pt">"டேய்... சீரியஸா சொல்றேன்."</span></p>
<p><span style="font-size: 14pt">அவன் குரல் மென்மையாக இருந்தாலும் உறுதியாக இருந்தது.</span></p>
<p><span style="font-size: 14pt">"ஒரு பெண் ஒரு ஆண்கிட்ட போன் நம்பர் கொடுக்கறதுன்னா... அந்த ஆளை நம்பறானு அர்த்தம். அவ்வளவு தான்." சூர்யா அமைதியாக அவனைப் பார்த்தான்.</span></p>
<p><span style="font-size: 14pt">    "அந்த நம்பிக்கைக்கு தகுந்த மாதிரி நடந்துக்கணும். அதுக்கு முன்னாடியே தப்பா ஏதும் சொல்ல ஆரம்பிச்சா... அது அவளை அவமானப்படுத்துற மாதிரி ஆயிடும்." என்றான்.‌</span></p>
<p><span style="font-size: 14pt">"ஹும்..." என்று சூர்யா பெருமூச்சு விட்டான். </span></p>
<p><span style="font-size: 14pt">"எனக்கு அவளை பிடிக்கும்." சூர்யா கண்களை பெரிதாக்கினான்.</span></p>
<p><span style="font-size: 14pt">"பிடிக்கும்...ன்னா?" என்று ஆர்வமாய் கதை கேட்டான்.</span></p>
<p><span style="font-size: 14pt">"நல்ல பொண்ணுனு பிடிக்கும். பேசுற விதம் பிடிக்கும். மரியாதை பிடிக்கும். வேறென்ன  இன்னும் எனக்கே தெரியலை." சில நொடிகள் அறை முழுக்க அமைதி.</span></p>
<p><span style="font-size: 14pt">"அதனால கொஞ்ச நாள் இப்படியே இருக்கட்டும். இந்த நட்பு எங்க கொண்டு போகுதுன்னு பார்ப்போம்." என்று கூற சூர்யா மெதுவாக அவன் தோளைத் தட்டினான்.</span></p>
<p><span style="font-size: 14pt">"சரி மச்சி... நான் எதுவும் சொல்லலை."</span></p>
<p><span style="font-size: 14pt">அப்படியே சாப்பிடற வேலையை பார்ப்போம்‌." என்றனர்</span></p>
<p><span style="font-size: 14pt">--</span></p>
<p><span style="font-size: 14pt">அதே நேரம்... தியானா வீட்டுக்குள் நுழைந்ததும்,</span></p>
<p><span style="font-size: 14pt">"அஸ்ஸலாமு அலைக்கும்." </span></p>
<p><span style="font-size: 14pt">"வஅலைக்கும் சலாம் மொளே."</span></p>
<p><span style="font-size: 14pt">பாதிமா சமையலறையிலிருந்து வெளியே வந்தார்.</span></p>
<p><span style="font-size: 14pt">"கைகளை கழுவிட்டு வா."</span></p>
<p><span style="font-size: 14pt">"சரிம்மா." என்றாள். அந்த நேரம் நஸீரும் வேலை முடித்து வந்திருந்தார்.</span></p>
<p><span style="font-size: 14pt">சஹ்ராவும் புத்தகத்தை மூடிவிட்டு ஓடி வந்தாள்.</span></p>
<p><span style="font-size: 14pt">"அக்கா... இன்னிக்கு சீக்கிரம் வந்துட்ட."</span></p>
<p><span style="font-size: 14pt">"ஆமாம்." என்றவள் முகம் அலம்பி உடை மாற்றி வந்தாள்.</span></p>
<p><span style="font-size: 14pt">நால்வரும் டைனிங் மேசையைச் சுற்றி அமர்ந்தனர்.</span></p>
<p><span style="font-size: 14pt">நஸீர் தட்டுகளை அருகே இழுத்துவைத்து,</span></p>
<p><span style="font-size: 14pt">"பிஸ்மில்லாஹ்." என்று மெதுவாகச் சொல்லி உணவை உண்ண ஆரம்பித்தார்.</span></p>
<p><span style="font-size: 14pt">மற்றவர்களும் அதையே சொல்லிவிட்டு சாப்பிட ஆரம்பித்தனர்.</span></p>
<p><span style="font-size: 14pt">"இன்னிக்கு ஹோட்டல் வேலை எப்படி இருந்தது?" என்று நஸீர் கேட்டார்.</span></p>
<p><span style="font-size: 14pt">"வழக்கம் போலவே வாப்பா."</span></p>
<p><span style="font-size: 14pt">"கெஸ்ட் அதிகமா?" ம்ம்ம்... கொஞ்சம் ரொம்ப நேரம் நிற்கறது கால் வலிக்கு." என்றாள் </span></p>
<p><span style="font-size: 14pt">சஹ்ரா நடுவில், "அக்கா... நாளைக்கு என் ப்ராஜெக்டுக்கு ஹெல்ப் பண்ணணும்." என்றாள்.</span></p>
<p><span style="font-size: 14pt">"சரி." என்று சிரித்தாள். </span></p>
<p><span style="font-size: 14pt">பாதிமா தியானாவை பார்த்து "உனக்கு சோர்வா இருந்தாலும், இவளுக்கு மட்டும் இல்லன்னு சொல்ல மாட்ட." என்று பெருமைப்பட்டார்.‌</span></p>
<p><span style="font-size: 14pt">"என் தங்கச்சி தானே உம்மா." என்று கொஞ்சினாள். </span></p>
<p><span style="font-size: 14pt">வீட்டில் சின்னச் சின்ன பேச்சுகள் மேலும் நீண்டது.</span></p>
<p><span style="font-size: 14pt">"கிடங்குல வேலை எப்படி போகுது வாப்பா? மேனேஜருக்கு மேலுக்கு முடியலைனு சொன்னிங்க'' என்று தியானா கேட்டாள்.</span></p>
<p><span style="font-size: 14pt">"இன்னிக்கு ஒரு ஷிப்மெண்ட் வந்துச்சு. அதான் லேட்டாச்சு. மேனேஜர் உடம்புக்கு இப்ப பரவாயில்லை." என்றார்.</span></p>
<p><span style="font-size: 14pt">"நீங்களும் உடம்பை பார்த்துக்கோங்க வாப்பா. இப்பலாம் அதிகம் மேலுக்கு முடியலைன்னு சொல்லறிங்க" என்றாள் அக்கறையாக.</span></p>
<p><span style="font-size: 14pt">"அல்லாஹ் இருக்கான்." என்று அவர் மேலே கைகாட்டினார்.</span></p>
<p><span style="font-size: 14pt">பாதிமா இடையில், "நாளைக்கு மார்க்கெட் போகணும். சஹ்ராவுக்கு சில புத்தகமும் வாங்கணும்."</span></p>
<p><span style="font-size: 14pt">    தியானா அமைதியாக கேட்டுக்கொண்டே சாப்பிட்டாள்.</span></p>
<p><span style="font-size: 14pt">    இன்று மட்டும் ஏனோ அவள் மனம் அந்த மேசையில் இல்லை.</span></p>
<p><span style="font-size: 14pt">எப்போதாவது கைபேசியின் குறுஞ்செய்தி ஒலி கேட்டதா என்று அவளது செவிகள் கவனித்துக்கொண்டே இருந்தன.</span></p>
<p><span style="font-size: 14pt">இரவு அறையில். சஹ்ரா ஏற்கனவே தூங்க ஆரம்பித்திருந்தாள்.</span></p>
<p><span style="font-size: 14pt">தியானா மட்டும் படுக்கையில் திரும்பித் திரும்பி படுத்தாள்.</span></p>
<p><span style="font-size: 14pt">அவள் தலையணைக்கு அருகே இருந்த அலைபேசியை எடுத்தாள். திரை ஒளிர்ந்தது.</span></p>
<p><span style="font-size: 14pt">எந்த அறிவிப்பும் இல்லை.</span></p>
<p><span style="font-size: 14pt">அவள் ஒரு நொடி அமைதியாக பார்த்தாள். மீண்டும் வைத்தாள். 'நல்லவேளை...' என்று நினைத்தாள்.</span></p>
<p><span style="font-size: 14pt">     'வாப்பா கண்ணுல பட்டிருந்தா... தேவையில்லாம கேள்வி கேட்பாங்க.' ஒரு நிம்மதி உருவானது.</span></p>
<p><span style="font-size: 14pt">இரண்டு நிமிடம் கடக்கவும், மீண்டும் கை அலைபேசியைத் தேடியது.</span></p>
<p><span style="font-size: 14pt">திரையைத் திறந்தாள். இப்போதும் எதுவும் இல்லை.</span></p>
<p><span style="font-size: 14pt">இந்த முறை உதட்டில் இருந்த சின்ன புன்னகை மெதுவாக மறைந்தது.</span></p>
<p><span style="font-size: 14pt">'ஏன்... ஒரு ஹாய் கூட அனுப்பலையே...?' என்றது அவள் மனம். அடுத்த நொடியே அவள் தன்னையே கடிந்துகொண்டாள்.</span></p>
<p><span style="font-size: 14pt">'நான் ஏன் எதிர்பார்க்கறேன்?'</span></p>
<p><span style="font-size: 14pt">'நான்தானே நம்பர் கொடுத்தேன்... அதுக்காக உடனே மெசேஜ் பண்ணணும்னு எந்த விதியும் இல்ல. அவர் அப்படி பண்ணாதது நல்ல விஷயம் தானே.' அந்த எண்ணம் அவளுக்கு நிம்மதியைத் தந்தது. வாப்பா உம்மா கவனித்தால் திட்டு விழுமே. </span></p>
<p><span style="font-size: 14pt">ஆனால்... அதே நிம்மதிக்குள் ஒரு சின்ன ஏமாற்றமும் ஒளிந்து கிடந்தது. 'அப்படின்னா... எனக்கு ஏன் இந்த ஏமாற்றம்...?' என்றவளுக்குள் பதில் இல்லை.</span></p>
<p><span style="font-size: 14pt">பிரணவ் முகம் மட்டும் நினைவுக்கு வந்தது. அவன் பதட்டமாக சிரிப்பது... தன்னை "தியானா" என்று அழைத்தது...</span></p>
<p><span style="font-size: 14pt">போன் நம்பர் சேமிக்கும்போது அவன் கையில் இருந்த லேசான நடுக்கம்... எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக மனதில் ஓடியது.</span></p>
<p><span style="font-size: 14pt">"யா அல்லாஹ்..." என்று மெதுவாக முணுமுணுத்தவள்,</span></p>
<p><span style="font-size: 14pt">"இது என்ன உணர்வுன்னு எனக்கே புரியல..." என்று கண்களை மூடிக் கொண்டாள்.</span></p>
<p><span style="font-size: 14pt">இவளை போலவே பிரணவும், ஸ்டாப் அக்கமோடேஷனில்,</span></p>
<p><span style="font-size: 14pt">பிரணவின் அலைபேசியிலும் தியானாவின் பெயர் அமைதியாக ஒளிர்ந்து கொண்டே இருந்தது.</span></p>
<p><span style="font-size: 14pt">இருவரிடமும் அவரவர் அலைப்பேசி எண் இருந்தது. ஆனால்... முதலில் யார் பேசுவது என்ற தயக்கமோ, அவர்களுக்கிடையே அமைதியாக பாலம் கட்டிக் கொண்டிருந்தது.</span></p>
<p><span style="font-size: 14pt">முக்கியமாக பிரணவ் அவசரம் காட்டவில்லை. </span></p>
<p><span style="font-size: 14pt">   அன்னையிடம் சாதாரணமாக பேசிவிட்டு அணைத்து விட்டான். </span></p>
<p><span style="font-size: 14pt">  இன்றே தியானாவிடம் பேச ஆரம்பித்தால் நம்பர் கிடைத்ததும் வழிகின்றான் என்ற அவபெயர் வந்துவிடுமோ, அதுவும் தியானாவிடமிருந்து என்று தவித்தான். தியானாவிடம் அத்தகைய அவப்பெயரை அவன் வாங்க விரும்பவில்லை‌. சூர்யாவிடம் இல்லை இல்லையென மறுத்தாலும், ஏதோவொன்று தியானாவிடம் ஈர்க்கின்றது‌ அது அவனது மனசாட்சியிடம் மறைக்க முடியவில்லை. </span></p>
<p><span style="font-size: 14pt">   இது தொடர்ந்தால் ஆபத்தும் வலியும் பிரணவிற்கு உண்டென நன்கறிவான். </span></p>
<p><span style="font-size: 14pt">  அதைமீறி தியானாவின் ஹிஜாப்பை தாண்டி அவளது கண்கள் அவனை ஆர்வமாக கவனிப்பது பிடித்திருந்தது. </span></p>
<p><span style="font-size: 14pt">  லேசான கொட்டாவி வரவும் போனை தூரவைத்து உறங்கினான்.‌</span></p>
<p><span style="font-size: 14pt">அதிகாலை பாங்கு ஒலி காதில் விழுந்ததும், தியானா கண்களைத் திறந்தாள். உளூ செய்து தொழுகை விரிப்பை விரித்தவள், ஃபஜ்ர் தொழுகையை அமைதியாக நிறைவேற்றினாள். தொழுகை முடிந்ததும், குர்ஆனில் சில வசனங்களை வாசித்து, குடும்பத்திற்கும், தன் வாழ்க்கைக்கும், உலக நன்மைக்கும் இறைவனிடம் துஆ செய்தாள்.</span></p>
<p><span style="font-size: 14pt">நஸீர் பள்ளிவாசலுக்குச் சென்று ஃபஜ்ர் தொழுகையை நிறைவேற்றினார். வீட்டில் பாத்திமாவும் தியானாவும் தங்களுக்கான தொழுகையை தொழுதுவிட்டு, காலை வேலைகளைத் தொடங்கினாள்.</span></p>
<p><span style="font-size: 14pt">   பிரணவ் எழுந்ததும், ஒரு குர்ஆன் மெஸேஜை தேடி பிடித்து அனுப்பினான். </span></p>
<p><span style="font-size: 14pt">'அறிந்தவர்களும் அறியாதவர்களும் சமமா? </span></p>
<p><span style="font-size: 14pt">    -குர்ஆன் 39:9</span></p>
<p><span style="font-size: 14pt">இனிய காலை வணக்கம் தியானா' என்று அனுப்பியிருந்தான்.</span></p>
<p><span style="font-size: 14pt">தியானா சாப்பிட்டு முடித்ததும் "அல்ஹம்துலில்லாஹ்" என்று அல்லாஹ்வுக்கு நன்றி கூறிவிட்டு வாயை துடைத்து போனை பார்த்தாள்.</span></p>
<p><span style="font-size: 14pt">சிறு புன்னகை வந்து உதட்டில் ஒட்டிக் கொண்டது. </span></p>
<p><span style="font-size: 14pt">  அதை வாப்பா உம்மா காணுவதற்குள் மறைத்தாள். </span></p>
<p><span style="font-size: 14pt">சஹ்ராவோ "அக்கா பை" என்றதும் அவளுக்கு மை சஹ்ரா" டாட்டா காட்டிவிட்டு தனக்கான டிபன்பாக்ஸை எடுத்தாள். </span></p>
<p><span style="font-size: 14pt">வாப்பா சஹ்ராவை அழைத்து சொன்றுவிடுவதால் உம்மாவிடம் முத்தம் வைத்து, "போயிட்டு வர்றேன் உம்மா என்று நடந்து சென்றவளுக்கு வழியெல்லாம் ஒரு மலர்ச்சி.</span></p>
<p><span style="font-size: 14pt"> அறிந்தவர்களும் அறியாதவர்களும் சமமா? </span></p>
<p><span style="font-size: 14pt">    -குர்ஆன் 39:9 என்று அனுப்பியிருந்தான். </span></p>
<p><span style="font-size: 14pt"> வெளிப்படையாக பார்த்தால், இதில் "அறிந்தவர்கள்" என்பது கல்வி கற்றவர்கள், அனுபவம் பெற்றவர்கள், உண்மையை உணர்ந்தவர்கள், இறை அறிவு பெற்றவர்கள் என்ற பொருள் விளங்கும். </span></p>
<p><span style="font-size: 14pt">நம் அலைபாயும் நெஞ்சமதுவோ, பிரணவ் இவளுக்கு ஸ்பெஷலா அல்லது சாதாரண நட்பா என்று கேட்டதாக பதிய, பிரணவை மனதில் மெச்சிக் கொண்டாள். </span></p>
<p><span style="font-size: 14pt">  உண்மையில் இந்த குழப்பம் வந்தப்பின் தான் அவளுமே எண்ணை தாரை வார்த்தாள். </span></p>
<p><span style="font-size: 14pt">  பிரணவ் அனுப்பிய குறுஞ்செய்தியை எத்தனை முறை பார்த்தாலென்று அவளுக்கே தெரியாது. எத்தனை முறை படித்தாலென்றும் அவளுக்கு கணக்கில்லை. </span></p>
<p><span style="font-size: 14pt">  வீட்டிலிருந்து ஜப்ரான் ஹோட்டல் செல்லும் பாதையில் எல்லாம், பிரணவ் அனுப்பிய குறுஞ்சொய்தியை பார்த்கால், உதட்டில் சிரிப்பை கூட்டினால், போனை கீழே இறக்கினாள்‌. சற்று வினாடி கூட கடந்திராது மீண்டும் அதையே பார்வையிட்டாள். </span></p>
<p><span style="font-size: 14pt">  பிரணவ் அனுப்பியதில் பதிலுக்கு ஏதேனும் அனுப்ப கை துறுதுறுவென ஆனது. ஆனால் என்ன பதில் அனுப்புவதென்று அவளுக்கு புரிப்படவில்லை‌. </span></p>
<p><span style="font-size: 14pt">  யோசித்து யோசித்தா பார்த்து நேரங்கள் கரையவும், ஜப்ரான் ஹோட்டல் வேறு வந்துவிடுமென்று அவன் அனுப்பிது போலவே குர்ஆனில் ஏதாவது பதிலுக்கு காலை வணக்கம் அனுப்ப சென்றுவிட்டாள். </span></p>
<p><span style="font-size: 14pt">  ஆனால் பிரணவ் முஸ்லீம் இல்லையே.. அத்துடன் அவன் தனக்கு குர்ஆன் செய்தியை அனுப்பியது போல அவன் இந்து மதத்தில் அனுப்பினால் நன்றாக இருக்குமென யோசித்தாள். பொதுவாக குர்ஆன் நபிகள் நாயகத்தின் பொன்மொழியையும், தங்கள் மதத்தையும் தவிர்த்து சில நேரம் கீதை உபச்சாரம் வாசித்தது உண்டு. அதற்கு காரணம் உம்மா வாப்பாவுக்கு தெரியாமல் அவள் மற்றொரு காரியம் செய்கின்றாள். </span></p>
<p><span style="font-size: 14pt">  அதனால் கீதை உபச்சாரத்தின் ஒரு வாசகம் மூளையில் உதிக்க, சட்டென்று அதை பிரணவிற்கு அனுப்பி வைத்தாள். </span></p>
<p><span style="font-size: 14pt">காலையிலிருந்தே தியானாவிடமிருந்து ஏதாவது பதில் குறுஞ்செய்தி வருமா வராதா என்ற ஆவலுடன் பிரணவ் ஏக்கத்துடன் அவன் போனையே பார்த்திருக்க, 'டிங்' என்ற சப்தத்துடன் கேட்டதும், அதுவும் தியானாவிடமிருந்து வந்த குறுஞ்செய்தி என்றதும் ஆவலாக திறந்தான்.‌</span></p>
<p><span style="font-size: 14pt">'நீ எனக்கு மிகவும் பிரியமானவன், ஆகையால் உனக்கு நன்மையானதைச் சொல்கிறேன். </span></p>
<p><span style="font-size: 14pt">     -பகவத் கீதை 18:64</span></p>
<p><span style="font-size: 14pt">இனிய காலை வணக்கம் பிரணவ் என்று அனுப்பியிருக்க, இதுவும் பகவத் கீதையில் கிருஷ்ணர் அர்ஜுனனிடம் கூறும் வசனம். ஆனாலும் நேசம் கொண்ட உள்ளம், சொல்வது போலவும் தோன்றியது. </span></p>
<p><span style="font-size: 14pt">    'அய்யோ.. இந்த நேரம் சூர்யா இல்லையே.' என்று ஆனந்தப்பட்டுக் கொண்டான்</span></p>
<p><span style="font-size: 14pt">-தொடரும்</span></p>
<p><span style="font-size: 14pt">-பிரவீணா தங்கராஜ்.</span></p>
<p>&nbsp;</p>]]></content:encoded>
						                            <category domain="https://onlinetamilnovels.com/community/%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b9%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0/">மொஹபத் முதல் நிக்காஹ் வரை - Praveena Thangaraj</category>                        <dc:creator>Praveena Thangaraj</dc:creator>
                        <guid isPermaLink="true">https://onlinetamilnovels.com/community/%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b9%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0/%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b9%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0-7/</guid>
                    </item>
				                    <item>
                        <title>மொஹபத் முதல் நிக்காஹ் வரை-6</title>
                        <link>https://onlinetamilnovels.com/community/%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b9%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0/%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b9%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0-6/</link>
                        <pubDate>Sun, 05 Jul 2026 04:13:30 +0000</pubDate>
                        <description><![CDATA[அத்தியாயம்-6
உண்மையிலே தொழுகை தீமையைத் தடுக்கிறது.-குர்ஆன் 29:45
அன்பு இல்லாத இடத்தில் நன்மை இல்லை.    -நபிகள்.
அடுத்த நாள் கிச்சன் முழுக்க வழக்கம்போல பரபரப்பாக இருந்தது. இன்று பிரணவ் மனம...]]></description>
                        <content:encoded><![CDATA[<p dir="ltr"><span style="font-size: 14pt"><b>அத்தியாயம்-6</b></span></p>
<p dir="ltr"><span style="font-size: 14pt"><b>உண்மையிலே தொழுகை தீமையைத் தடுக்கிறது.</b></span><br /><span style="font-size: 14pt"><b>-குர்ஆன் 29:45</b></span></p>
<p dir="ltr"><span style="font-size: 14pt"><b>அன்பு இல்லாத இடத்தில் நன்மை இல்லை.</b></span><br /><span style="font-size: 14pt"><b>    -நபிகள்.</b></span></p>
<p dir="ltr"><span style="font-size: 14pt">அடுத்த நாள் கிச்சன் முழுக்க வழக்கம்போல பரபரப்பாக இருந்தது. இன்று பிரணவ் மனம் வேறொரு இடத்தில் ஓடிக் கொண்டிருந்தது. இன்று என்றல்ல இப்பொழுது எல்லாம் அவனை அறியாமல் காய்கறி வெட்டிக்கொண்டே, அவன் பார்வை அடிக்கடி வால் க்ளாக் பக்கம் சென்றது.</span></p>
<p dir="ltr"><span style="font-size: 14pt">அதை கவனித்த ஒருவர், "பிரணவ் பிரேக் டைம் வர இன்னும் ட்வென்டி மினிட்ஸ் இருக்கு" என்று சிரித்தார்.</span></p>
<p dir="ltr"><span style="font-size: 14pt">பிரணவ் உடனே, "இல்ல செஃப்… ஜஸ்ட் டைம் பார்த்தேன்" என்று சமாளித்தான்.</span></p>
<p dir="ltr"><span style="font-size: 14pt">"ஆஹ்.. நீ எதுக்கு டைமை பார்க்கறேனு தெரியுது. கேப் கிடைச்சா லாபிக்கு போற வழியில் ஒரு விசிட் பண்ணிட்டு வரலாம்னு தானே?" என்று அருகில் இருந்த மற்றொருவர் கேலி செய்ய, அங்கே சிலர் சிரித்தார்கள்.</span></p>
<p dir="ltr"><span style="font-size: 14pt">பிரணவ் முகம் சற்று வெட்கப்பட்டு மாறியது.</span><br /><span style="font-size: 14pt">"அப்படி எதுவும் இல்ல" என்றாலும், அவனது முகத்தில் இருந்த உணர்வுகள் எல்லாவற்றையும் சொல்லிவிட்டது.</span></p>
<p dir="ltr"><span style="font-size: 14pt">  பிரணவ் மனமே லாபிக்கு தானே ஓடி செல்ல துடித்தாய் என்று கேலி பேசியது. பிரேக் டைம் வந்து செஃப் ஆட்கள் மாற்றம் பெற்று, பிரணவிற்கு நேரம் கிடைத்தாலும் இம்முறை மற்றவர்கள் கேலி செய்வதால் லாபியை தவிர்த்து அங்கிருந்த நண்பன் ஒருவனிடம் பேசி நேரத்தை ஓட்டினான்.</span></p>
<p dir="ltr"><span style="font-size: 14pt">     "என்ன பிரணவ் லாபிக்கு போகலை" என்ற  செஃப் ஒருவர் கேட்டு நிற்க, "நோ ஃபாரூக் அடுத்த டிஸ் செய்யணும். சும்மா லாபிக்கு போவாங்களா?" என்று சமாளித்தான்.</span></p>
<p dir="ltr"><span style="font-size: 14pt">   இங்கு வந்து இரண்டு மாதம் கடந்திருக்க, தியானாவை எட்டி பார்க்க லாபிக்கு செல்வதை கூட வேலை செய்யும் பலரும் அறிந்து வைத்திருக்க, பிரணவிற்கு அவர்களிடம் எல்லாம் அப்படியல்ல என்று கூற முற்பட்டு தோற்றான்.</span></p>
<p dir="ltr"><span style="font-size: 14pt">  ஏதோ தனக்கும் தியானாவுக்கும் ஓடுகின்றதென பணிப்புரியும் பலர் மறைமுகமாக கூறத்துவங்கி விட்டார்கள். தனக்கு அதை கேட்கும் பொழுது உள்ளுக்குள் நன்றாக தான் இருக்கின்றது. ஆனால் வெளிப்படையாக கேலியை ஏற்க தான் முடியவில்லை. </span><br /><span style="font-size: 14pt">    </span><br /><span style="font-size: 14pt">   இந்த இரண்டு மாதத்தில் நன்றாக பேசுவதால் நிறைய நட்பை பெற்று விட்டாயிற்று. சம்பளத்தை தனக்கு தேவைக்கு சேமிப்பில் வைத்துவிட்டு, அன்னை மகாலட்சுமிக்கு ஒரு பங்கை அனுப்பிவிட்டான். இதில் இங்கு வருவதற்கு அண்ணன நிர்மல் மூலமாக கடன் வாங்கி வந்திருக்க அவனுக்கும் சம்பள பணத்தில் ஒரு பகுதியை அனுப்பியுள்ளான். </span><br /><span style="font-size: 14pt">   </span><br /><span style="font-size: 14pt">   அப்படியிருக்க தியானா மூலமாக புது பிரச்சனை நேர்ந்திடாமல் கடந்திட முடிவெடுத்தான்.  </span><br /><span style="font-size: 14pt">  </span><br /><span style="font-size: 14pt">மாலை ஷிப்ட் முடிந்து வெளியே வந்தவன், தெரியாமலே பார்வையை அந்த டாக்ஸி வெயிட்டிங் ஏரியா பக்கம் திருப்பினான்.</span><br /><span style="font-size: 14pt">அங்கே தியானா இல்லை.</span><br /><span style="font-size: 14pt">அந்த ஒரு விநாடிக்கு ஏதோ வெறுமை சூழ்ந்தது. </span><br /><span style="font-size: 14pt">'இன்னிக்கு சீக்கிரமா போயிட்டாளா... சே.. இதுக்கு பிரேக் டைம் அப்பயாவது ஒரெட்டு பார்த்துயிருக்கலாம்' </span><br /><span style="font-size: 14pt">என்று நினைத்தவன் நடக்க ஆரம்பித்தான்.</span></p>
<p dir="ltr"><span style="font-size: 14pt">"பிரணவ்… பிரணவ்" என்ற இனிமையான அந்த குரலில் சட்டென திரும்பினான்.</span></p>
<p dir="ltr"><span style="font-size: 14pt">தூரத்தில் இருந்து அவசரமாக நடந்துவந்தாள் தியானா.</span><br /><span style="font-size: 14pt">"அச்சோ… போயிட்டீங்கனு நினைச்சேன்" என்றாள் மூச்சை சரி செய்தபடி.</span></p>
<p dir="ltr"><span style="font-size: 14pt">"நானும் நீங்க போயிடாடிங்களோனு நினைச்சேன்” என்று பிரணவ் சிரித்தான்.</span></p>
<p dir="ltr"><span style="font-size: 14pt">"இன்னிக்கு லேட்டாகிடுச்சு. ஒர் கெஸ்ட் பிராப்ளம் கிரியேட் பண்ணிட்டாங்க. இது அடிக்கடி நடக்கும்" என்றவள், "ஆமா.. கேட்கணும்னு  நினைச்சேன். நீங்க தினமும் இந்த நேரத்துக்கு காத்திருந்து போறதா தெரியுதே... இது தற்செயலா... இல்லை..." என்று புருவம் உயர்த்தினாள்.</span></p>
<p dir="ltr"><span style="font-size: 14pt">பிரணவ் ஒரு நொடி தடுமாறினான். கூட வேலை பார்க்கும் நண்பர்கள் கேலி செய்வது போல பேசியது. இவளும் அதே போல கேட்டால் பதில் கூற தயங்கினான். இப்படியா அப்பட்டமாக தெரிகின்றது? என்று பயந்தான். </span><br /><span style="font-size: 14pt">ஆனாலும் உடனே ஆமோதிக்க இயலுமா?!</span><br /><span style="font-size: 14pt">"துபாய் கிளைமேட் நல்லாருக்கே… அதான் பொறுமையா நடந்துட்டே இருப்பேன். பார்க்கற உங்களுக்கு காத்திருப்பதா தெரியுதோ என்னவோ" என்று சமாளிக்க முற்பட்டான். </span><br /><span style="font-size: 14pt">"ம்ம்ம்… சரி. அந்த நடைபயணம் தினமும் இந்த இடத்துல தான் ஆரம்பிக்குதா?" என்றாள் சிரிப்பை அடக்கிக்கொண்டு.</span></p>
<p dir="ltr"><span style="font-size: 14pt">பிரணவ் இந்த முறை சிரித்தே விட்டான். </span><br /><span style="font-size: 14pt">   "அப்படியில்லைங்க.. உண்மையை சொல்லிடட்டா... இங்க துபாய்ல ஜப்ரான் ஹோட்டலுக்குள் நுழைஞ்சா நிறைய என்னை போல செஃப் நட்பு இருக்கு. அவங்க எல்லாம் அந்த குக் பண்ணற இடம் இந்த ஹோட்டலுக்குள்ளயே பேச்சு முடிவடையுது. அதை தவிர சூர்யா என்ற ரூம்மேட் இருக்கார். ஆப்டர் ரூமுக்கு போனதும் அவனிடம் பேசுவேன்.</span><br /><span style="font-size: 14pt">நடுவுல அம்மாவிடம் கால் பண்ணுவேன். இதுக்கு நடுவுல நீங்க இங்க டாக்ஸிக்கு காத்திருக்கும் போது உங்களிடம் இரண்டு நிமிஷம் பேசுவேன். எல்லாம் நேரம் போகறதுக்கான ஒரு வழி." என்றான் உண்மையாக.</span></p>
<p dir="ltr"><span style="font-size: 14pt">  தியானா அவனுடன் நடந்துக்கொண்டே "ஊர்ல உங்க பிரெண்ட்ஸ் கூட சாட் பண்ணலாமே?" என்று யோசனை தந்தாள்.</span></p>
<p dir="ltr"><span style="font-size: 14pt">பிரணவ் சிரித்துக் கொண்டே, "ஆளாளுக்கு கல்யாணம் செய்து குடும்பஸ்தனா இருக்காங்க. எங்க பேசறது. எல்லா பொண்ணுங்களும் சொல்வாங்க. கல்யாணமான தோழிகளோட டச் போயிடும்னு‌. சில ஆண்களோட நிலைமையும் இதான். அந்த கேட்டகிரி நான்‌" என்றவன், தியானா பேசிக்கொண்டே தன்னுடன் நடந்து வந்ததை அப்பொழுது தான் உணர்ந்தான்.</span></p>
<p dir="ltr"><span style="font-size: 14pt">"அச்சோ... நீங்க பேசிட்டே என்கூட நடந்து வந்துடிங்க. டாக்ஸி பிடிக்கவா?" என்று கேட்டான்.</span></p>
<p dir="ltr"><span style="font-size: 14pt">  "பரவாயில்லை.. அடுத்த டாக்ஸி ஏறுற இடம் வரை நடந்து வர்றேன்.‌" என்றாள்.</span></p>
<p dir="ltr"><span style="font-size: 14pt">  பிரணவிற்கு குதூகலமாக இருந்தது. "ஆமா இங்க வேற ஏதும் பொழுது போகலையா? எஃப்.பி, இன்ஸ்டா, ட்விட்டர்னு போனாலே டைம் ஓடிடுமே" என்றாள்.‌</span></p>
<p dir="ltr"><span style="font-size: 14pt">  "அட இப்ப வெறும் அரசியல் பதிவு தாங்க போகுது. எங்க திரும்பினாலும் ஆளுங்கட்சி எதிர்கட்சினு முட்டிக்கறாங்க. </span><br /><span style="font-size: 14pt">    நானும் ஒரு வாரம் பார்த்தேன். இது இன்னிக்கு முடிஞ்சிடும் நாளைக்கு முடிஞ்சிடும்னு. எங்க..... ஆளுங்கட்சியோட குறைகளை எதிர்கட்சி பேச அதை காபி பேஸ்ட் பண்ண, நம்ம மக்கள் எக்ஸ்ட்ரா பொரி தூவி பொடி போட்டு போஸ்டா வருது. </span><br /><span style="font-size: 14pt">   இல்லையா... எதிர்கட்சி ஆண்ட லட்சணத்தை குறையா அடுக்கி ஆளுங்கட்சி அபிமானிகள் அவங்க பங்குக்கும் போஸ்ட்ல பேசறாங்க. </span><br /><span style="font-size: 14pt">  ஆக மொத்தம் மக்கள் இங்க வேடிக்கை பார்க்க நல்ல எண்டர்டெயின்மெண்ட்.  </span><br /><span style="font-size: 14pt">    என்னவோ எனக்கு அதுல ஆர்வமே போகலை. பேசறவன் செய்ய மாட்டான். செய்யறவன் பேச மாட்டான். </span><br /><span style="font-size: 14pt">   அரசியல் அலைகள் ஓயட்டும்னு அந்த பக்கமே போறதில்லை. </span><br /><span style="font-size: 14pt">   அப்படியே அரசியலை தவிர்த்து எட்டி பார்த்தா இந்த செலிபிரெட்டி சேனல்னு அவனவன் சமைக்கறது கப்பீல்ஸா சேர்ந்து சுத்தறது, அதெல்லாம் கிட்டதட்ட கட்டிலறை காட்சி மாதிரி இருக்கு. இதுல அவனவன் ஒரு சேனல்ல ஒரு நியூஸ் போட்டு ஆத்து ஆத்துனு ஆத்தறாங்க.  </span><br /><span style="font-size: 14pt">  நம்ம நேரம் தாங்க போகுது. நாம என்ன கிழிச்சோம்னு பார்த்தா ஒன்னும் பண்ணிருக்க மாட்டோம். </span><br /><span style="font-size: 14pt">   அதனால ஒரு டைம் வச்சியிருக்கேன். எல்லாத்துக்கும் குறிப்பிட்ட டைம். அந்தந்த அலாரம் அடிக்க அந்தந்த நேரத்துக்கு நீங்க சொன்ன முகநூல் இன்ஸ்டா ட்விட்டர் எல்லாத்திலும் சில நேரம் தான்‌. ஆனாலும் ஏதோ வெறுமை திங்குதுங்க." என்றான்.</span></p>
<p dir="ltr"><span style="font-size: 14pt">  தியானாவோ சம்மந்தமேயில்லாமல் சில எண்ணை உதிர்த்தாள்‌.</span></p>
<p dir="ltr"><span style="font-size: 14pt">  "என்னது..?" என்று புரியாமல் கேட்டான். </span><br /><span style="font-size: 14pt">  "என்னோட போன் நம்பர். ரொம்ப நாளா தரணும்னு இருந்தேன். ஆனா நீங்களா கேட்கற மாதிரி தெரியலை. ஒரே இடத்துல வேலை பார்க்கறோம். சந்திக்க திணற வேண்டாம். இனி... பேசணு..ம்..னா... இதுல கூட சாட் பண்ணுங்க" என்றாள். </span><br /><span style="font-size: 14pt">   </span><br /><span style="font-size: 14pt">  பிரணவ் கூர்மையாக அவளை ஏறிட்டு அவளது எண்ணை தனது போனில் பதிய வைத்துக் கொண்டான். </span><br /><span style="font-size: 14pt">   "நா..நான் டாக்ஸி பிடிச்சி போகலாம்னு இருக்கேன்." என்று கூற தலையாட்டினான்.‌</span></p>
<p dir="ltr"><span style="font-size: 14pt">   டாக்ஸியை நிறுத்தி அதில் ஏறியமர்ந்துக் கொண்டவள், நீங்களும் வர்றிங்கன்னா போகலாம். ஆன் தி வே தானே உங்க அக்கமெண்டேஷன்" என்றாள்.</span></p>
<p dir="ltr"><span style="font-size: 14pt">  பிரணவிற்கு டாக்ஸியில் ஏற தயக்கம் இருந்தது. ஆனால் டிரைவர் ஒரு மாதிரி பார்க்கவும் ஏறினான்.</span></p>
<p dir="ltr"><span style="font-size: 14pt">  தியானாவும் பேசவில்லை‌. போன் நம்பரை அவளாக கொடுத்து விட்டு, காரிலும் ஏற கூறிவிட்டு பிரணவ் என்ன நினைப்பானோ என்று தயக்கமாக தான் பார்வையிட்டாள்.</span></p>
<p dir="ltr"><span style="font-size: 14pt">காரில் பலத்த அமைதியும் நிலவியது. </span><br /><span style="font-size: 14pt">   பிரணவும் எதுவும் பேசாமல் தவித்தான். அவனுக்கும் தியானா தானாக வந்து போன் எண்ணை தந்ததில் வியப்பாக தான் இருந்தது. அவன் கூட சில நேரம் அலைப்பேசி எண்ணை கேட்க நினைத்து தயங்கியிருந்தான். எங்கே தன்னை தவறாக எண்ணிவிடுவாளோ என்று எத்தனை நாள் தவிர்த்திருந்தான். </span><br /><span style="font-size: 14pt">இன்று தியானாவே தரவும் ஆச்சரியம் அடைந்தான். அதில் பேச்சற்றும் போனான்.</span></p>
<p dir="ltr"><span style="font-size: 14pt">   "இங்க தான். பிரணவ்.. நீங்க இறங்க வேண்டிய இடம்" என்று கூற, "சாரி... ஏதேதோ யோசித்து இறங்க வேண்டிய இடத்தை கவனிக்கலை." என்று இறங்கினான்.</span></p>
<p dir="ltr"><span style="font-size: 14pt">    "நான்... அப்ப... கிளம்பறேன்" என்று கூற, தியானாவும் தலையாட்டினாள்.</span></p>
<p dir="ltr"><span style="font-size: 14pt">  அவள் பர்தா உடை உடலில் அணிந்திருக்க, முகத்தில் அணியும் ஹிஜாப் வடிவில் போர்த்தியிருக்க, மனக்கண்ணில் அவளது தலையாட்டலுக்கு, ஒரு ஜிமிக்கி அணிவித்து, நெற்றியில் பொட்டு வைத்தும் அழகு பார்த்து சிரித்தான்.‌</span><br /><span style="font-size: 14pt">  </span><br /><span style="font-size: 14pt">  டாக்ஸி கிளம்பியதால் தியானா நகம் கடித்து சிந்தித்தாள். </span><br /><span style="font-size: 14pt">  பிரணவுக்கு நம்பர் தந்துட்டேன்‌. ஏன் தந்தேன். எப்படி தந்தேன். எதுக்கு தந்தேன். ஒன்னுமே புரியலை. அவன் அடிக்கடி லாபிக்கு தலைக்காட்டி லேசா சிரிச்சிட்டு போவான். இரண்டு வாரமா காணோம்னு எனக்குள்ள ஏன் ஏமாற்றம் வந்துச்சு. அவர் தற்செயலா காத்துட்டு இருக்கார். ஆனா நான் அவர் வெயிட் பண்ணுவதா தான் ஓடறேன். ஏன் இந்த உணர்வு? </span><br /><span style="font-size: 14pt">   இப்ப நம்பர் தந்துட்டு அல்லாடறேன். நான் செய்தது தப்பா சரியா? ஆனா ஒரு நட்பு ரீதியா...' என்று எண்ணும் போதே "டாக்ஸி டிரைவர் இடம் வந்துவிட்டதாக கூறவும் அவசரமாக இறங்கினாள்.</span></p>
<p dir="ltr"><span style="font-size: 14pt">  வீட்டுக்கு வந்தப்போது வாப்பா இருக்கவும் தியானா தலையில் ஹிஜாப் சரிசெய்து உள்ளே நுழைந்தாள்.</span></p>
<p dir="ltr"><span style="font-size: 14pt">  இனி அவளது கனவுலகில் கூட பிரணவ் நுழைய முடியாது. அந்தளவு தந்தையின் கட்டுக்கோப்பில் நேரங்கள் நகரும்.</span></p>
<p dir="ltr"><span style="font-size: 14pt">    இங்கு பிரணவ் தான் தியானா என்ற பெயரை சேமித்து வைத்தபடி, நெஞ்சில் போனை அணைத்து படியில் நடந்தான். </span><br /><span style="font-size: 14pt">   </span><br /><span style="font-size: 14pt">  சூர்யா வரும் முன்னரே வந்துவிட்டான். காரில் பயணமென்பதால் அறைக்கு வரும் நேரம் விரைவானது. அறைக்கதவை திறந்து, சட்டை பட்டனை கழட்டி, குளித்து முடித்து வந்தான்‌. என்ன தான் ஹோட்டலில் நல்ல காற்றோட்டமான ஏசி பேன் வசதி இருந்தாலும், லேசாக குளிப்பது பிரணவ் வழக்கம்.</span><br /><span style="font-size: 14pt">   </span><br /><span style="font-size: 14pt">    நிதானமாக ஷார்ட்ஸ் அணிந்து, தண்ணீரை குடிக்கும் நேரம் சூர்யாவோ "என்னப்பா... கதவு திறந்து இருக்கு. நீ என்ன குயிக்கா வந்துட்ட? எப்பவும் இன்னும் கால் மணி நேரம் ஆகுமே." என்று கேட்டான்.</span></p>
<p dir="ltr"><span style="font-size: 14pt">  "கார்ல வந்தேன்" என்றான் பிரணவ்.</span></p>
<p dir="ltr"><span style="font-size: 14pt">"பார்டா.." என்று சிரித்துவிட்டு, முகம் துடைக்க, உடை மாற்ற சூர்யா ஆரம்பிக்க, நிதானமாக பிரணவ், "தியானா கூட கார்ல வந்தேன். அவ தான் டிராப் பண்ணினா." என்றான்.</span></p>
<p dir="ltr"><span style="font-size: 14pt">சூர்யாவோ தலையில் டீஷர்ட் நுழையாமல் மாட்டிக் கொள்ள, "ஏ... பிரணவ்.‌.. என்னடா சொன்ன?" என்று கேட்க, பிரணவ் சூர்யாவை பார்த்து, "தியானா அவ போன டாக்ஸில என்னை டிராப் பண்ணினா. அதோட போன் நம்பர் தந்திருக்கா" என்று கூற, சூர்யா சட்டென டீஷர்டை இழுத்து தலையில் நுழைக்க பட்டன் பிய்ந்து உதிர்ந்தது.</span></p>
<p dir="ltr"><span style="font-size: 14pt">அதை பொருட்படுத்தாமல், "ஏ... என்னடா சொல்லற?" என்று கேட்க, பிரணவோ "ம்ம்.. நம்பர் கொடுத்தா..." என்று அமைதியின் சொரூபமாக கூறினான்.</span></p>
<p dir="ltr"><span style="font-size: 14pt">-தொடரும்‌ </span><br /><span style="font-size: 14pt">-பிரவீணா தங்கராஜ்.</span></p>
<p dir="ltr"><span style="font-size: 14pt"> </span></p>]]></content:encoded>
						                            <category domain="https://onlinetamilnovels.com/community/%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b9%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0/">மொஹபத் முதல் நிக்காஹ் வரை - Praveena Thangaraj</category>                        <dc:creator>Praveena Thangaraj</dc:creator>
                        <guid isPermaLink="true">https://onlinetamilnovels.com/community/%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b9%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0/%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b9%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0-6/</guid>
                    </item>
				                    <item>
                        <title>மொஹபத் முதல் நிக்காஹ் வரை-5</title>
                        <link>https://onlinetamilnovels.com/community/%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b9%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0/%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b9%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0-5/</link>
                        <pubDate>Sat, 04 Jul 2026 17:04:24 +0000</pubDate>
                        <description><![CDATA[அத்தியாயம்-5
அல்லாஹ் சுமத்தும் சுமை மனிதனால் தாங்கக்கூடியதே.
-குர்ஆன் 2:286
மனிதர்களில் சிறந்தவர் மனிதர்களுக்கு உதவுபவர்.
-நபிகள்
காலை அலாரம் அடித்தவுடன், வழக்கம் போல பிரணவ் கண்களை திறந...]]></description>
                        <content:encoded><![CDATA[<p><span style="font-size: 14pt">அத்தியாயம்-5</span></p>
<p><span style="font-size: 14pt"><strong>அல்லாஹ் சுமத்தும் சுமை மனிதனால் தாங்கக்கூடியதே.</strong></span></p>
<p><span style="font-size: 14pt"><strong>-குர்ஆன் 2:286</strong></span></p>
<p><span style="font-size: 14pt"><strong>மனிதர்களில் சிறந்தவர் மனிதர்களுக்கு உதவுபவர்.</strong></span></p>
<p><span style="font-size: 14pt"><strong>-நபிகள்</strong></span></p>
<p><span style="font-size: 14pt">காலை அலாரம் அடித்தவுடன், வழக்கம் போல பிரணவ் கண்களை திறந்து உடனே எழுந்தான்.</span></p>
<p><span style="font-size: 14pt">சூர்யா இன்னும் பாதி தூக்கத்தில் இருந்தான்.</span></p>
<p><span style="font-size: 14pt">"சூர்யா... எந்திரிக்கலை?" என்று சொல்ல திரும்பிப் படுத்துக் கொண்டே, "எந்திரிக்க முடியலையே.. நேத்து ஒய்ப் கூட ரொம்ப‌ நேரம் சாட் பண்ணினேன். லேட்டா தான் தூங்கினேன். இன்னும் கொஞ்ச நேரம் தூங்கறேன்." என்றதும் பிரணவ் சிரித்துக்கொண்டு தயார் ஆனான். மனைவி குழந்தைகளை விட்டுவிட்டு தனியாக நாட்டில் வேலை பார்க்கும் கணவர்களின் நிலை தான் சூர்யாவுக்கு. இரவெல்லாம் போனில் மணிக்கணக்கில் பேசிவிட்டு கண்ணயர்ந்தான்.</span></p>
<p><span style="font-size: 14pt">நெடுநேரம் தியானாவை பற்றி யோசித்த பொழுது திரும்பி படுத்த சமயம், சூர்யா போனுடன் கொஞ்சிக்கொண்டு சிரித்ததை கண்டவனாயிற்றே. அதனால் உறங்கட்டுமென குளித்து தயாரானான். </span></p>
<p><span style="font-size: 14pt">கிளம்பும் பொழுது தான் மீண்டும் சூர்யாவை எழுப்பிவிட்டு சென்றான்.</span></p>
<p><span style="font-size: 14pt">இம்முறை வொர்க்கர்ஸ் சொல்லும் வழியில், கிச்சன் கதவைத் திறந்தவுடன், அந்த பழக்கமான முகங்கள் யாராவது தென்படுகின்றனரா என்று தேடினான். ஆனால் யாரும் பழகிய முகமாக இல்லை. </span></p>
<p><span style="font-size: 14pt">அவனுக்கு முன்னே சீனியர் செஃப் நடமாடி மற்றவர்களை மேற்பார்வையிட்டவாறு வந்தவரை கண்டு புன்னகையுடன், "குட் மார்னிங் செஃப்" என்று சொன்னான்.</span></p>
<p><span style="font-size: 14pt">"மார்னிங்" என்று சீனியர் செஃப் சொன்னார்.</span></p>
<p><span style="font-size: 14pt">ஏதோ இன்று மற்ற நாட்களை விட கூடுதலாக ஆட்கள் உள்ளதாகவும், விஐபி கெஸ்ட் எல்லாம் வந்திருப்பதாகவும், உணவை ஹோட்டலை தவிர்த்து, அறைக்கு சென்று சர்வ் செய்ய கட்டளைகள் பிறப்பித்தார். </span></p>
<p><span style="font-size: 14pt">அதற்காக சீனியர் செஃப்பே சிலதை அவர் கையால் சமைத்தார். அதுவொரு ஸ்பெஷல் டிஷ்,</span></p>
<p><span style="font-size: 14pt">வெளிநாட்டு விஐபி கெஸ்டிற்கான ஆர்டரில் சீனியர் செஃப் தயாரிக்கும் பொழுது சாஸ் கன்சஸ்டன்ஸி கொஞ்சம் மாறி இருந்தது.</span></p>
<p><span style="font-size: 14pt">ஏதோ சரியில்லை என்று சீனியர் செஃப் எரிந்து விழுந்து எப்படி எப்படியோ சரிசெய்ய முனைய, தோல்வியை சந்தித்தார்.</span></p>
<p><span style="font-size: 14pt">அங்கே சில செஃப் ஏதோ சுவை சரியில்லை என்றதால் சீனியர் செஃப் கோபமாக உள்ளதாக கிசுகிசுத்தார்கள். </span></p>
<p><span style="font-size: 14pt">பிரணவ் அதை கவனித்தான். ஒரு நொடி தயக்கமிருந்தது.</span></p>
<p><span style="font-size: 14pt">'இப்ப சொல்லலனா பிறகு இன்னமும் சுவை மொத்தமாய் கெட்டுவிடுமென யோசித்தான். மேலும் சீனியர் செஃப்புக்கு தான் வந்து, ஏதாவது சொன்னால், அவரது ஈகோ காயமாகுமோ என்றும் பயந்தான். </span></p>
<p><span style="font-size: 14pt">அவன் மெதுவாக சீனியர் செஃப் அருகே சென்றான்.</span></p>
<p><span style="font-size: 14pt">"செஃப்..." என்று அழைக்க, </span></p>
<p><span style="font-size: 14pt">"கீப் கொயிட். ஐ ஹேவ் குக்டு" என்றார்.</span></p>
<p><span style="font-size: 14pt">"சாஸ் கொஞ்சம் திக் ஆகிட்ட மாதிரி இருக்கு... லேசா டிலியூட் பண்ணலாம்னு தோணுது. உங்களுக்கு தெரியாதது இல்ல. பட் நீங்க விஐபி கஸ்டமர்குனு செய்யற பதட்டத்தில் கவனிக்காம இருக்கலாம். ஏதாவது தப்பா சொல்லியிருந்தா சாரி செஃப்" என்று கூறிவிட்டு இரண்டடி பின் நகர்ந்தான்.</span></p>
<p><span style="font-size: 14pt">அங்கே ஏதோ பிரணவ் கூறியதாக சில நொடி அமைதியானது.</span></p>
<p><span style="font-size: 14pt">சீனியர் செஃப் அவனை மேலும் கீழும் பார்த்தார். பிறகு அவர் செய்ததை தனிப்பட்டு ஸ்பூன் எடுத்து உணவை சுவைத்து பார்த்தார். பிரணவ் கூறியது போல தான் இருந்ததை இம்முறை கவனித்தார்</span></p>
<p><span style="font-size: 14pt">சில விநாடிகள் அவர் சின்னதாக தலையசைத்தார். பிரணவ் கூறியதை ஏற்றதாக இருந்தது அவரது செய்கை.</span></p>
<p><span style="font-size: 14pt">விஐபி உணவை சரிசெய்து ருசித்து சரியானதாக கூறி அதை அலங்காரம் செய்ய ஏற்பாடு செய்துவிட்டு பிரணவை கண்டு</span></p>
<p><span style="font-size: 14pt">"குட்" என்றவர் பிரணவ் தோளில் தட்டி அப்ரிசேட் செய்யும் விதமாக நகர்ந்தார்.</span></p>
<p><span style="font-size: 14pt">அந்த ஒரு வார்த்தை, பிரணவ் உள்ளுக்குள் அத்தனை மகிழ்ச்சியை தர, மற்றவர்களுக்கோ ஓர் அறிமுகம் போல விழுந்தது.</span></p>
<p><span style="font-size: 14pt">அவர் அதை சரி செய்து, டிஷ் பைனலிஷ் செய்த பக்கத்தில் இருந்த ஒருவர் மெதுவாக சொன்னார். "Even if you're new to cooking, you need to be meticulous and be a good chef" என்று பாராட்டிட, பிரணவ் சிரித்தான்.</span></p>
<p><span style="font-size: 14pt">ஆம்... புதிதாக வேலைக்கு சேர்ந்தவனாக இருந்தாலும் நல்ல செஃப் என்ற பெயரை புதிதாக ஒருவர் பாராட்டும் படி நடந்துள்ளதில் ஒரு பெருமை.</span></p>
<p><span style="font-size: 14pt">மெல்ல அந்நாள் முழுதும் அந்த இடத்தில், அவனை வேறு மாதிரி பார்த்தார்கள்.</span></p>
<p><span style="font-size: 14pt">பிரணவ் இரும்பவும், யாரோ ஒருவர் தண்ணீர் கொடுத்தார். மற்றொருவர் "பிரேக் எடுக்கலையா?" என்று ஆங்கிலத்தில் "Won't you take a break?" வலிய வந்து கேட்டார்.</span></p>
<p><span style="font-size: 14pt">அவன் இல்லை என்று ஆங்கிலத்தில் கூறிவிட்டு இங்கே தன்னை தற்போது தான் சிலர் நிமிர்ந்து பார்க்க வைத்திருப்பதை உணர்ந்தான்.</span></p>
<p><span style="font-size: 14pt">மாலை களைப்பிற்கு பின் சின்ன எதிர்பார்ப்பு ஓய்வும் தேவைப்பட்டது. </span></p>
<p><span style="font-size: 14pt">ஷிப்ட் முடிந்ததும், பிரணவ் ஸ்டாப் எக்ஸிட் வழியே வெளியே வந்தான்.</span></p>
<p><span style="font-size: 14pt">தினமும் டாக்ஸியில் ஏறும் சிலரும் அங்கே ஏற்கனவே காத்திருந்து சென்றனர். அங்கே பிரணவ் அமைதியாக நின்றான்.</span></p>
<p><span style="font-size: 14pt">தியானாவுக்காக காத்திருந்தானா என்பதே அறியாமல் அங்கேயே நின்றான்.</span></p>
<p><span style="font-size: 14pt">"ஹாய் பிரணவ்" என்றதும்</span></p>
<p><span style="font-size: 14pt">பிரணவ் திரும்பிப் பார்த்தான். அங்கே தியானா. இம்முறை அவள் முழுதாக பர்தா இல்லாமல், சாதாரணமாக வந்திருக்க, முகம் தெளிவாக இருந்தது.</span></p>
<p><span style="font-size: 14pt">"இன்னிக்கு ரொம்ப ஹாப்பியா இருக்கிங்க போல" என்றதும் பிரணவ் சிரித்தான்.</span></p>
<p><span style="font-size: 14pt">"அப்படியா.. என் முகம் மனதை பிரதிபலித்து சொல்லுதா" என்றான்</span></p>
<p><span style="font-size: 14pt">"பின்ன இல்லையா? நேற்று கூட லேசான டென்ஷன்ல இருந்திங்க. இன்னிக்கு முகத்தில் கொஞ்சம் கான்பிடன்ஸ் தெரியுது" என்றாள். தன்னை தன் முகபாவனையை உற்று நோக்கி சொல்லவும், பிரணவ் சிரித்தான்.</span></p>
<p><span style="font-size: 14pt">"மேபீ" என்றவனை பார்த்து, பூரித்தவளாக "யாரோ இன்று உங்களைப் பற்றி நல்லதா பேசினாங்களாமே" என்று பீடிகையுடன் உரைக்க, பிரணவ் புருவம் உயர்த்தினான்.</span></p>
<p><span style="font-size: 14pt">"யாரு?" என்றான்.</span></p>
<p><span style="font-size: 14pt">"கெஸ் பண்ணுங்க.</span></p>
<p><span style="font-size: 14pt">"அய்யோ... அந்தளவு பெரிய ஆளு இல்லை. எனக்கு கிச்சன் மட்டும் தான் உலகம்.. அதோட கிச்சன்ல இருக்கற என்னை பத்தி, ரிசப்ஷன்ல உங்களிடம் யார் சொல்லியிருப்பா?" என்று தன்னடக்கத்துடன் பேசியவன், இன்று நடந்த விஷயம் மறக்காமல், "கிச்சன்ல தானா?" என்று வினாத்தொடுத்தான்.</span></p>
<p><span style="font-size: 14pt">தியானா பதில் சொல்லாமல் சிரித்தாள். "அய்யோ தியானா சொல்லுங்க" என்றான்.</span></p>
<p><span style="font-size: 14pt">"சீனியர் செஃப் நம்ம ஹோட்டல் மேனேஜரிடம், குட் அப்சர்வேஷன் இருக்கற பெர்சன்னு உங்களை பத்தி சொன்னார். நீங்க என்ன நினைச்சிங்க.. ஜப்ரான் ஹோட்டல்ல புதிதா ஆள் எடுத்தாலும் கொஞ்ச நாளாவது உங்களோட அணுகுமுறையை கவனிப்பாங்க. அதை பொறுத்து தான் ப்ரமோஷன் கூடும்" என்று கூற, பிரணவ் கண்கள் லேசா விரிந்தது.</span></p>
<p><span style="font-size: 14pt">"அதுவா.. நினைச்சேன். சீனியர் செஃப் சமைக்கும் போதே மிஸ்டேக் எதுனு கண்டுப்பிடிச்சி சொன்னேன். அவர் என்னை திட்டுவாரோனு பயந்து மெதுவா சொன்னேன். சீனியர் குட்' என்று சொன்னார். அதை தானே சொல்லறிங்க. ஆனா இங்க வேலைக்கு வர்றவங்களை கவனிக்கப்படுவதா சொல்வது நல்லது தான். இனி நான் இன்னும் குட் பாயா நடந்துப்பேன்" என்று சிரித்தான்.</span></p>
<p><span style="font-size: 14pt">"அதுவே தான். ஆமா... சீனியர் செஃப் பாராட்டின ஒரு வார்த்தை போதுமா?" என்று கேட்டாள். </span></p>
<p><span style="font-size: 14pt">"அட வந்ததும் இந்த ஒரு வார்த்தை சொல்லி அப்ரிசெட் பண்ணியதே பெரிய விஷயம் தியானா. அதுவும் மேனேஜரிடம்" என்றான்.</span></p>
<p><span style="font-size: 14pt">"ம்ம்" என்று சிரித்தவள், "நீங்க தினமும் அக்கமண்டேஷனுக்கு லேட்டா போறிங்களா? உங்களுக்கு சௌகரியமா இருக்கா?" என்று கேட்டாள். </span></p>
<p><span style="font-size: 14pt">"அட என்னை மாதிரி ஆட்கள் இங்க அவசரமா டாக்ஸி பிடிச்சி போய் யாரை பார்க்க போறேன். யாரிடம் நேர்ல போய் பேசப்போறேன். அம்மா ஊர்ல இருக்காங்க. இங்க யாருமில்லை. அதனால பொறுமையா லேட்டா போறேன். கொஞ்ச தூரம் வாக் பண்ணறேன் தியானா. துபாயை சுற்றி பார்க்க, அப்பறம் டாக்ஸி பிடிச்சி திர்ஹாம் தந்து போறேன்." என்றான். </span></p>
<p><span style="font-size: 14pt">"ம்ம்ம். அம்மா ஊர்ல இருக்காங்க. மனைவி காதலி இல்லையா?" என்று கேட்டாள். </span></p>
<p><span style="font-size: 14pt">"அச்சோ தியானா எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலை. அதோட எனக்கு காதலியும் இல்லை." என்றவன் அவசரமாய் பதில் தந்து நெளிந்தான். அந்த நேரம் தியானாவை இவன் ரசிக்க அவளுமே அவனது பதட்டத்தை ரசித்தாள். </span></p>
<p><span style="font-size: 14pt">"ஓகே.. ஓகே..என்னோட டாக்ஸி வந்துடுச்சா. பை" என்ற போது, "நீங்க.. எங்க இருக்கிங்க" என்று கேட்டான் பிரணவ். </span></p>
<p><span style="font-size: 14pt">அவளிருக்குமிடத்தை பகிரவும், "ஓ... எனக்கு அது எங்கயிருக்குனு கூட தெரியாது. இதே சென்னைன்னா சட்டுனு தெரியும். எனிவே... நீங்க கிளம்புங்க. இனி துபாயில இருக்கற ஊரையும் ஏரியாவையும் தெரிந்துக்கறேன்" என்று டாக்ஸியில் ஏறிய, தியானாவும் "தெரிந்துக்கோங்க.. தெரிந்துக்கிட்டா எல்லாமே ஈஸி தான்" என்று கூற, அனுப்பி வைத்தான்.</span></p>
<p><span style="font-size: 14pt">பிரணவ் தியானா சென்றதும் கூகுளில் அவள் சொன்ன அட்ரஸை மேப்பில் போட்டு நடந்தான். </span></p>
<p><span style="font-size: 14pt">அவன் செல்லும் அக்கமண்டேஷன் தாண்டி தான் தியானா வீடு இருப்பதாக கூகுள் ஆண்டவர் காட்டினார்.</span></p>
<p><span style="font-size: 14pt">'அட இத்தனை நாள் இது தெரியாம போச்சே.' என்று தியானா செல்லும் வழிதடத்தை கவனித்தான். </span></p>
<p><span style="font-size: 14pt">அவனுக்குள் இந்த தியானா தினம் தினம் புதிதானவளாக தெரிந்தாள். நன்றாக பழகும் அழகான முஸ்லிம் பெண். </span></p>
<p><span style="font-size: 14pt">தனக்கு காதலி மனைவி இருக்கின்றனரா என்று அவள் கேட்ட பொழுது, அவள் முகத்திலுள்ள இருவிழியில் அத்தனை ஆவல். </span></p>
<p><span style="font-size: 14pt">அதையெல்லாம் ரசிக்க இன்னும் நான்கு விழிகள் தேவைப்படும் போல. அந்தளவு கவர்ந்தாள்.</span></p>
<p><span style="font-size: 14pt">இப்படியே பேசினால், அது எதில் போய் முடியுமோ என்ற பயமும் நெஞ்சில் அதிர்வை உண்டாக்கியது. </span></p>
<p><span style="font-size: 14pt">பிரணவ் உடனடியாக அதெல்லாம் எவ்விதமான பயமின்றி நல்ல நட்பில் முடியட்டுமென பிரணவ் கூறிக் கொண்டான். </span></p>
<p><span style="font-size: 14pt">இங்கே நட்பை தாண்டி வேறென்ன வந்துவிடுமென்று பிரணவ் நினைத்தான். </span></p>
<p><span style="font-size: 14pt">டாக்ஸியில் பயணித்த தியானாவோ கொஞ்ச நாள் முன் அறிமுகமானவனிடம் இத்தனை இயல்பாக எப்படி உரையாற்ற முடிகின்றது. தமிழ் மெழி என்ற ஒன்றால் வந்த ஒட்டுதலா? </span></p>
<p><span style="font-size: 14pt">ஆனால் அவனுக்கு காதலி மனைவி இருக்கின்றார்களா என்று ஆர்வமாக கேட்டுவிட்டோமோ? பிரணவ் தவறாக நினைத்துவிட்டால்? ஆனால் அவளொன்றும் மனதில் அப்பழக்கு அற்றே கேட்டு நின்றாள்‌.</span></p>
<p><span style="font-size: 14pt">ஒரு அழகான இளைஞன், வேலைத்தேடி சொந்த ஊரிலிருந்து, சொந்த நாட்டை தாண்டி, கடலை தாண்டி, வேறொரு நாடான துபாயிற்கு தனித்து வந்து சேர்ந்து தடுமாற, தமிழில் பேசுவதாலும், பழக நல்லவனாக, ஒரேயிடத்தில் வேலை என்பதாலும் இந்தளவு பேசி பழகுவதில் தவறில்லை என்றது தியானா மனம். இதே ஒரு பெண் அவ்விடத்தில் இருந்தால் மணமாகி விட்டதா என்று கேட்பது எதார்த்தம் தானே. </span></p>
<p><span style="font-size: 14pt">ஆண் என்பதால் தனக்கு அவனிடம் ஆர்வம் என்று ஏன் எண்ண வேண்டுமென என அவளது நினைப்பிற்கு காரணத்தை அடுக்கினாள் மனசாட்சியிடம். </span></p>
<p><span style="font-size: 14pt">டாக்ஸி டிரைவர் தியானா முன் சொடக்கிட்டு, வெளியே கதவை காட்டி பேச, தனது இடம் வந்துவிட்டதை எண்ணி மன்னிப்பு வேண்டி இறங்கினாள். </span></p>
<p><span style="font-size: 14pt">திர்ஹாம் தந்துவிட்டு அப்படியே நடந்து சென்றாள்‌. எதிரே வருபவர் பார்த்து புன்னகைக்க, வீட்டிற்கு வந்து காலிங் பெல் அழுத்தினாள்.</span></p>
<p><span style="font-size: 14pt">தியானாவின் அன்னை பாதிமா கதவை திறக்க, "தியானா பர்தா போடாம வந்துட்ட? ஏன் என்னாச்சு?" என்று கேட்டதும் தான் முகத்தை தொட்டு பார்த்தாள். </span></p>
<p><span style="font-size: 14pt">"அச்சோ... பர்தா போடலையா?" என்று தியானா அதிர்ந்தாள். </span></p>
<p><span style="font-size: 14pt">'பிரணவ் இதனால தான் என் முகத்தையே இமைக்காம பார்த்தாரா?' என்று எண்ணியவளிடம், "தியானா... என்னாச்சு?" என்றார் நஸீர். </span></p>
<p><span style="font-size: 14pt">"வாப்பா... வேலை முடிச்சி ரெப்ரெஷ் செய்ய ஸ்டாப்ஸ் ரெஸ்ட்ரூம் போனோன். அங்க முகம் அலம்பினதுல பர்தா கழட்டி வச்சேன். மறுபடியும் போட மறந்துட்டேன். சாரி வாப்பா" என்றாள். </span></p>
<p><span style="font-size: 14pt">"நமக்குன்னு கட்டுப்பாடு இருக்கு தியானா. அதை மறக்காம பின் தொடரணும். அப்ப தான் நல்லது" என்று கரடுமுரடான குரலில் உரைத்தார். </span></p>
<p><span style="font-size: 14pt">"சரிங்க வாப்பா." என்று அறைக்குள் சென்று விட்டாள். </span></p>
<p><span style="font-size: 14pt">தந்தை இன்று விரைவில் வந்துவிட்டார். இன்று</span></p>
<p><span style="font-size: 14pt"> பார்த்து பர்தாவை மறந்து விட்டு வந்தது எத்தகைய தவறு. இனி கவனமாக செயல்பட வேண்டுமென இறைவனை தொழுதாள். </span></p>
<p><span style="font-size: 14pt">-தொடரும். </span></p>
<p><span style="font-size: 14pt">பிரவீணா தங்கராஜ். </span></p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>]]></content:encoded>
						                            <category domain="https://onlinetamilnovels.com/community/%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b9%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0/">மொஹபத் முதல் நிக்காஹ் வரை - Praveena Thangaraj</category>                        <dc:creator>Praveena Thangaraj</dc:creator>
                        <guid isPermaLink="true">https://onlinetamilnovels.com/community/%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b9%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0/%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b9%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0-5/</guid>
                    </item>
				                    <item>
                        <title>மொஹபத் முதல் நிக்காஹ் வரை-4</title>
                        <link>https://onlinetamilnovels.com/community/%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b9%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0/%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b9%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0-3/</link>
                        <pubDate>Fri, 03 Jul 2026 02:10:21 +0000</pubDate>
                        <description><![CDATA[அத்தியாயம்-4
அல்லாஹ்விடம் நம்பிக்கை வையுங்கள்; அவனே போதுமானவன்.
  -குர்ஆன் 65:3
மக்களிடம் நன்றி சொல்லாதவன் அல்லாஹ்வுக்கும் நன்றி சொல்லமாட்டான்.
   -நபிகள்ஸ்டாப் அக்கமோடேஷன் அறை கதவை மெது...]]></description>
                        <content:encoded><![CDATA[<p><span style="font-size: 14pt">அத்தியாயம்-4</span></p>
<p><strong><span style="font-size: 14pt">அல்லாஹ்விடம் நம்பிக்கை வையுங்கள்; அவனே போதுமானவன்.</span></strong></p>
<p><strong><span style="font-size: 14pt">  -குர்ஆன் 65:3</span><span style="font-size: 14pt"></span></strong></p>
<p><strong><span style="font-size: 14pt">மக்களிடம் நன்றி சொல்லாதவன் அல்லாஹ்வுக்கும் நன்றி சொல்லமாட்டான்.</span></strong></p>
<p><span style="font-size: 14pt"><strong>   -நபிகள்</strong><br /><br />ஸ்டாப் அக்கமோடேஷன் அறை கதவை மெதுவாகத் தள்ளி உள்ளே வந்தான் பிரணவ்.<br />அறை உள்ளே மங்கலான வெளிச்சம். பேனின் சத்தம் மட்டும். சூர்யா படுக்கையில் நீளமாக படுத்திருந்தான்.<br /><br />'ஹும்' என்று திரும்பிக் கொண்டான். ஆனா முழுமையாகவும் தூங்கவில்லை. பிரணவ் களைப்புடன் வந்து<br />சட்டை பட்டனை கழற்றிக் கொண்டே பெருமூச்சை விட்டான்.<br /><br />"வந்துட்டியா" என்று சூர்யா கண்களை திறக்காமலேயே கேட்டான்.<br />"ம்ம்ம்… இப்ப தான். உடம்பு எப்படியிருக்கு" என்று <br />பிரணவ் நேற்று சூர்யாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் கேட்டான்.<br /><br />"மச் பெட்டர் பிரணவ். முதல் நாள் எப்படி போச்சு?" என சூர்யா மெதுவாக திரும்பி பார்த்தான்.<br /><br />"பயத்தோட போச்சு. இதுக்கு முன்ன சென்னையில் பெரிய ஹோட்டலில் தான் வேலை செய்தேன். ஆனா இந்தளவு  இல்லை. இங்க கூடுதலா ஆட்கள், கரண்டியை கீழே வச்சிட்டு ரிலாக்ஸாகி, தண்ணி கூட குடிக்க முடியலை. ஆர்டர் வந்துட்டே இருக்கு. ஒன்னு மாத்தி ஒன்னு உடனுக்குடன் கண்முன்ன ஸ்பெஷலா செய்யறது இட்ஸ் அமைசிங். எங்க நியூ ஜாயின்னு ஏதாவது சொதப்பி திட்டு வாங்குவேனோனு பயந்தேன். லேசா சொதப்பவும் செய்தேன். சூப்பர் வைசர் பார்த்தார். பட்... ஒன்னும் சொல்லலை. தட்டி கொடுத்துட்டு போயிட்டார். <br /><br />   வெஜிடேரியன் செய்ய எத்தனை பேர் எத்தனை விதமான ஆட்கள். தமிழர்களை தவிர்த்து வேற வேற மொழி பேசற இந்திய மனிதர்கள், வேற நாட்டை சார்ந்தவர்களும் இருந்தாங்க. இத்தனை விதமான ஆட்கள் வெஜிடேரியன் வெரைட்டி சமையல் செய்வதை பார்க்கவே ஆர்வமா இருந்தது. இங்க எல்லா நாட்டு சமையலும் கத்துக்கணும். ஏற்கனவே வெவ்வேறு நாட்டு சமையல் செய்வேன். இருந்தாலும் பேசி பழகி நுணுக்கமா இங்கயும் சிறந்த செஃப்பா கத்துக்கிட்டே இருக்கணும்." என்று பிரணவ் நிறைய  பேசினான். சூர்யா அதற்கெல்லாம் சிரித்தான்.<br /><br />பிரணவ் டிரஸ்ஸை மாற்றிக் கொண்டான். முகம் கழுவி வந்து படுக்கையில் உட்கார்ந்தான்.<br /><br />  "நான் சொன்னேன்ல நீ அட்ஜஸ்ட் ஆகிடுவ" என்று சூர்யா எழுந்து எதிரே அமர்ந்தான். <br /><br />சூர்யா கண்களை சுருக்கிப் பார்த்தான். "ஏதாவது வேற இன்ட்ரஸ்டிங்கா நடந்துச்சா?" என்றதும் பிரணவ் சற்று சிரித்தான்.<br />"ரிசப்ஷன் பொண்ணுக்கிட்ட பேசினேன். நல்லா பேசினா." என்றான்.‌<br />"ஓ.. இதுவேறயா.. நான் ஏதோ வேலை விஷயமா கேட்டேன். ம்ம்ம." என்று ஆர்வமாக சூர்யா கேலி செய்ய, "இல்ல அப்படி எதுவும் இல்ல. இவங்களும் வேலை விஷயமா தான் சொல்ல வந்தேன்." என்று பிரணவ் தலையை அசைத்தான். <br />  சூர்யாவின் உடல்மொழி ஏதோ கேலியாக ஆர்ப்பரித்தது. <br />"சரி… பொண்ணு பேரு?" என்று சூர்யா நேரடியாக கேட்டான்.<br />பிரணவ் "தியானா'' என்றான்.<br />சூர்யா உடனே எழுந்து உட்கார்ந்தான்.<br /><br />"அட சும்மா தான் கேட்டேன். பெயர் தெரியாதுனு சொல்வனு பார்த்தா? இவ்வளவு சீக்கிரமா ஆரம்பிச்சுட்டியா?"<br /><br />"ஏய்… அதெல்லாம் இல்ல ரிசப்ஷன் பெண் என்பதால பேட்ஜ்ல பெயரை பார்த்தேன். அப்பவே பெயரை நோட் பண்ணினேன். அறிமுகம் ஆனதும் இன்னிக்கு பெயரை சொன்னாங்க" என்று <br />பிரணவ் சிரித்தான்.<br /><br />"நேத்து ஓகே.. இன்னிக்கு எப்படி அந்தபக்கம் போன?"<br /><br />"அதுதான் சொல்ல வந்தேன். ஹோட்டல் ரிசப்ஷன்ல இருக்குறவ நேத்து மேனேஜரை பார்க்க பேசினேன்ல, இன்னிக்கு தெரியாம வொர்க்கன்ஸ் எக்ஸிட்ல வராம டிரஸ் மாத்திட்டு லாபி வழியா வந்துட்டேன். அப்பறம் அந்த பக்கம் போகக்கூடாதுனு வொர்க்கஸ் எக்ஸிட் வழியா சுத்தி வந்தேன். அப்ப அவளையும் மறுபுறம் பார்த்தேன். நேத்து பேசினதால<br />இன்னிக்கும் பார்த்து பேசினேன். அவ்ளோ தான்" என்றான் பிரணவ்.<br /><br />"ஹும்" சூர்யா கண்களை குறுகச் செய்தான்.<br /><br />அப்படியே பேசி சிரித்து இரவு உணவை சாப்பிட்டு உறங்கி வழிந்தார்கள். <br /><br />காலை அலாரம் அடிக்கும்போது, இந்த முறை பிரணவ் திடுக்கிடவில்லை.<br />நேற்றைய பயம் இன்னும் இருந்தாலும், அதற்குள் ஒரு தீர்மானம் கலந்திருந்தது.<br /><br />'இன்னிக்கு நிதானமா பண்ணணும்' என்று அவன் மனசுக்குள் சொன்னான்.<br />சூர்யாவும் இன்று வேலைக்கு தயராகிக் கொண்டிருந்தான்.<br /><br />பிரணவும் மெதுவாக எழுந்து ரெடியானான். காலை நேரம் வீண் அரட்டையை தவிர்த்து புறப்படவே சரியாக இருந்தது.<br /><br />ஜஃப்ரான் பேலஸ் ஹோட்டல்<br />இன்றைய காலை அவனுக்கு புதிதாக தோன்றவில்லை.<br /><br />நேற்று பார்த்த அதே வழி… இன்றோ அவன் அங்கே சேர்ந்தவனாக மாறியிருந்தான்.<br /><br />கிச்சன் டோர் திறந்தவுடன்,<br />நேற்றைய அதே சூடு அவனை வரவேற்றது. அதே ஓட்டம் 'ஓடத்தயாராகு' என்று சொல்லாமல் சொன்னது.<br /><br />"குட் மார்னிங் செஃப்…" என்று <br />பிரணவ் மரியாதையாக சொன்னான். சீனியர் செஃப் ஒரு நொடிக்கு அவனை பார்த்தார்.<br /><br />"ஆஹா… நியூ பாய் வந்துட்டானா… லேட் இல்ல… குட்." என்று அவரும் பிரணவை போலவே சுறுசுறுப்பாக உரைத்தார். <br /><br />அந்த ஒரு பாராட்டு வார்த்தை<br />பிரணவ் மனசுக்குள் ஒரு சிறிய நிம்மதியை ஈட்டியது.<br /><br />பிரணவ் கைகளை கழுவினான். க்ளவுஸ் அணிந்து, கத்தியை எடுத்து காய்கறியை வெட்ட ஆரம்பித்தான். <br />இந்த முறை கவனமாக,<br />ஒவ்வொரு வெட்டும் சரியான அளவில் விழ ஆரம்பித்தது.<br />அவன் மூச்சு சமமாக இருந்தது.<br /><br />வேகமாக அதே நேரம் சுத்தமாக செய்பவனை செஃப் தூரத்திலிருந்து கவனித்தார்.<br /><br />பல தரப்பட்ட ஆர்டர்களுக்கும் உதவி செய்தான். பிரணவ் வேகத்தை அதிகப்படுத்தினான்.<br />சில நேரத்திலேயே அவன் தயாரித்த பேஸ் கிரேவி செஃப் முன் வைக்கப்பட்டது.<br /><br />செஃப் ஸ்பூன்ல எடுத்து ருசி பார்த்தார். ஒரு நொடி எந்த எதிர்வினையும் ஆற்றாமல் நின்றார்.  பிரணவ் இதயம் சற்று தடதடத்தது.<br />"ஹும்" அவர் மெதுவாக தலை அசைத்தார். "பெட்டர் டேஸ்ட் பிரணவ்" என்று பாராட்டினார்.<br /><br />பிரணவுக்கு அது ஒரு விருது போல தோன்றியது. புதிதாக வந்த இடத்தில் பாராட்டினால் மகிழாமல் இருக்க முடியுமா?!<br /><br />"தேங்க்யூ செஃப்" என்று நேற்றைய பயம் கொஞ்சம் குறைந்தது. பிரணவிற்கு இங்கே வரும்பொழுது நிறையவே பயமிருந்தது. இன்று இங்கே தானும் பொருந்தி போக முடியும்.' என்ற நம்பிக்கை உள்ளுக்குள் முளைத்தது.<br /><br />நேரம் ஓடிக்கொண்டே இருந்தது.<br />இன்றும் வேலையில் வேகம் குறையவில்லை. இன்று பிரணவ் அந்த ஓட்டத்தோட சேர்ந்து ஓட ஆரம்பித்தான்.<br /><br />இரவு ஷிப்ட் முடிந்து அவன் சோர்வுடன் வெளியே வந்தான். வொர்க்கஸ் வெளியேறும் வழியில் நடந்துக் கொண்டிருக்க அங்கே நேற்று போலவே தியானா இருந்தாள்.<br />அவள் யாரோடோ பேசிக் கொண்டிருந்தாள்.<br /><br />அவன் அருகே வந்ததும்,<br />அவள் கண்கள் ஒரு நொடிக்கு அவனை பார்த்தது.<br /><br />அந்த பார்வை.. இந்த முறை தெரிந்தவர் மீது விசப்படும் பார்வையாக மாறியது.<br /><br />"நேத்தை விட… கொஞ்சம் பெட்டர்ங்க அப்பறம்..." என்றவன் இன்றைய நாளை அவள் கேளாமல் சொல்லிவிட்டு தயங்கி நிற்க, தியானா புருவம் உயர்த்தினாள்.<br /><br />"சொல்லுங்க மிஸ்டர்" என்றதும், "இந்த மிஸ்டர் வேண்டாமே. மொழி தெரியாத ஊர்ல பார்க்கற முக்கால் வாசி பேர் அன்னியமா தான் தெரியறாங்க. தமிழ் பேசறதால ஏதோ சிலரிடம் அன்னியோன்யமா தெரியுது. அதுலயும் நீங்க... நான் இந்த பெரிய லக்ஸரி ஹோட்டலில் சந்தித்த முதல் பெண். தமிழ் பேசற பெண்.. தமிழ்நாட்டு பொண்ணு. பெயர் சொல்லியே என்னை கூப்பிடுங்க மேம்" என்றான்.‌ <br />   <br />   "ரொம்ப தப்பு சார்" என்றாள் தியானா. ஏதாவது தவறாக சொல்லி விட்டோமோ? வந்த இரண்டாவது நாளிலேயே பெயரிட்டு கூப்பிட கூறி கோரிக்கை வைப்பது தவறோ என்று புரிந்து மன்னிப்பு வேண்டும் சமயம், தியானாவோ "நீங்க பெயர் சொல்லி கூப்பிடுனு சொல்லிட்டு என்னை மேம்னு சொன்னா ரொம்ப தப்பு சார்" என்றாள். <br /><br />பிரணவ் உடனடியாக பயம் களைந்திட தியானா அவனது முகமாற்றத்தை கண்டு சிரித்தாள். <br /><br />  "அப்பறம்... பெயரிட்டு சொல்லணும்னா... நீங்களும் என்னை மேம் என்றதை விடணும் மிஸ்டர் பிரணவ்" என்றாள். <br /><br />  "கொஞ்சம் கஷ்டம் தானோ. யாராவது இதை கேட்டு பிரச்சனை வந்துடுமா" என்று நிஜமாகவே கேட்டான். <br /><br />  "கண்டிப்பா.. பிரச்சனை வரலாம். ஏன்னா... நான் தமிழ் பேசற தமிழ் பொண்ணு இல்ல. நான் தமிழ்நாட்டு பொண்ணே இல்லை சார். நான் ஶ்ரீலங்கா பொண்ணு" என்றாள் கூடுதல் தகவலாக. <br /><br />"அட... அப்படியா? சாரி... நீங்க தமிழ் பேசவும் நான் தமிழ்நாட்டு பொண்ணுனு நினைச்சிட்டேன். ஶ்ரீலங்காவா?" என்று குரல் உள்ளுக்குள் சென்றது. <br /><br />  "ஏன் சார்... ஶ்ரீலங்கா பொண்ணு தமிழ் பேசலாமே. சிங்களம் மட்டும் தான் பேசணுமா?." என்றாள். <br /><br />  "அது வேறங்க." என்று வருத்தமானான். <br /><br />"ஏன் என்னாச்சு? சோகமா பேசறிங்க" என்று டாக்ஸி பிடிக்குமிடம் வந்ததும் தனிதனியாக செல்லாமல் நின்று கேட்டாள். <br /><br />"இல்லை... தமிழ்நாட்டு பொண்ணு என்றதும் ஒரு... ஒரு" என்று இழுத்தான் பிரணவ். நெருக்கம் வந்ததே... இன்று இனி அது மிஸ்ஸாகும் என்ற கவலை.<br /><br />"இங்க பாருங்க சார்... தமிழ் பேச தமிழ்நாட்டு பொண்ணு தான் வேண்டும்னு இல்லை. தமிழ் மொழியை, திருவள்ளுவர் எழுதிய திருக்குறளை, பாரதியார் எழுநிய கவிதைகளை, பொன்னியின் செல்வன் எழுதிய கல்கி எழுத்து, இப்படி எத்தனையோ தமிழ்  கதையை கவிதையை வாசித்தா யாராயிருந்தாலும் தமிழ் மேல நேசம் பிறந்திடும். பிறகு எந்த நாட்டை சேர்ந்தவங்கன்னாலும் தமிழ் பேசுவாங்க. <br /><br />அப்படி தமிழ் பரவியதால தான் சிங்கப்பூர், மலேசியா, துபாய், ஆஸ்திரேலியா, கனடா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, பிரான்ஸ், மொரீஷியஸ், தாய்லாந்து இப்படி சொல்லிட்டே போகலாம். <br />  தமிழ் மொழில கூட ஒரு கதை சொல்வாங்க. நல்லவங்களும் நல்லதும் ஒரேயிடத்தில இருக்காது. அது பரவிட்டே இருக்கும்.<br /><br />   தமிழ் அவ்ளோ ஸ்பெஷல் சார். பெரும்பாலும் தமிழ் மொழி என்றதும் ஶ்ரீ லங்கா தமிழ் நல்லாயிருக்கும்னு சொல்வாங்க. பட்... உண்மையில தமிழ்நாட்டில் பேசற பலவிதமான தமிழுக்கும் தமிழ் கவிதை கதைக்கும் எப்பவும் மவுஸ் உண்டு." என்றதும், பிரணவ் வாய் பிளந்து பார்வையிட்டவன், சமாளிக்கும் விதமாக சிரித்தான். <br /><br />"அப்பறம்... நான் கிளம்பட்டுமா பிரணவ்?" என்றதும், பிரணவ் தலையாட்ட, தியானா டாக்ஸியை பார்வையிட "இனி தியானானு கூப்பிடலாமா." என்று பர்மிஷன் கேட்டான்.‌<br /><br />"தாராளமா" என்று புன்னகைத்து சென்றாள். பிரணவிற்கு அதன் பின் கால்கள் தரையில் இல்லை. அறைக்கு வந்து எப்படி சேர்ந்தானென்று கேட்டாலும் அவன் அறிந்திருக்க வாய்ப்பில்லை. <br /><br />   சூர்யாவிடம் தியானாவை பற்றி கூறிட, ஆர்வமாக இருந்தான். <br /><br />  சூர்யா க்ளினிங் வேலை முடித்து அறைக்கு தாமதமாக தான் வந்தான். <br /><br />அவனுக்கு உணவுகளை சமைத்து வைத்து பிரணவ் தயாராக இருக்க, குளித்து விட்டு புத்துணர்வுடன் அமர்ந்தார்கள். <br /><br />"என்ன பிரணவ்... ஹோட்டல் உணவுகள் போல வரிசையா அலங்கரிச்சு வச்சியிருக்கிங்க." என்று கேட்டதற்கு புன்னகை மலர, "தியானா என்னை பெயர் சொல்லி கூப்பிட சொன்னா." என்று கூறினான்.<br /><br />சூர்யா மிகவும் ஆர்வமாக, "அவங்களா பெயர் சொல்லி கூப்பிட சொன்னாங்களா?" என்று கேட்க, "சேசே.. நான் தான் மிஸ்டர் பிரணவ்னு கூப்பிடாதிங்க... பிரணவ்னு பெயர் சொல்லி கூப்பிட ரெக்வஸ்ட் வச்சேன்.‌" என்றதும் 'அதானா' என்று சூர்யா லேசான ஏமாற்றத்துடன் முகம் மாறியது. <br /><br />   "அப்பறம்... அந்த பொண்ணு ஶ்ரீலங்கா பொண்ணு. தமிழ்நாடு கிடையாது" என்று கூறிய பிரணவ் முகம் வாடியது. <br /><br />  "ஆகமொத்தம்.. தமிழ் பேசுது" என்று சூர்யா அங்கலாய்க்க, "ம்ம்" என்றான் பிரணவ். <br /><br />"ஓகே.. சூர்யா... நான் அம்மாவுக்கு கால் பண்ணி பேசிட்டு தூங்கணும். நீ வீட்ல பேசிட்டியா?" என்று கேட்க, குழந்தை சீக்கிரமே தூங்கிடுச்சாம். அதனால ஒய்ஃப் கூட பேசிட்டு தூங்கணும். நீ அம்மாவிடம் பேசு. நான் லேட்டாகும். போன்லயே குடித்தணும் நடத்திட்டு தூங்கறேன்" என்று வெளிநாட்டில் வாழும் ஆணும், அவனே நம்பி ஊரில் வாழும் பெண்ணும் என்று போனில்  பேசி சிரித்து அன்பை பகிர்ந்து, போனிலேயே காதல் காமப்பேச்சை பேசி நேரத்தை கடத்தி உறங்குவதாக சொன்னான். <br /><br />பிரணவும் அன்னையிடம் பேசிவிட்டு, தியானா நினைவுடன் மெத்தையில் விழுந்தான். <br /><br />தமிழ் வச்சி என்னென்னமோ சொல்லுது. முதல்ல முஸ்லிம், இப்ப தமிழ்நாட்டு பொண்ணு இல்லை. தினமொரு தகவல் மாதிரி இருக்கு.' என்று அவளை நினைக்கும் பொழுது எல்லாம் உதட்டில் புன்னகை குடிப்பெயர்வதை அறியாது போனான். <br /><br />-தொடரும். <br />பிரவீணா தங்கராஜ்.<br /></span></p>]]></content:encoded>
						                            <category domain="https://onlinetamilnovels.com/community/%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b9%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0/">மொஹபத் முதல் நிக்காஹ் வரை - Praveena Thangaraj</category>                        <dc:creator>Praveena Thangaraj</dc:creator>
                        <guid isPermaLink="true">https://onlinetamilnovels.com/community/%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b9%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0/%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b9%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0-3/</guid>
                    </item>
				                    <item>
                        <title>மொஹபத் முதல் நிக்காஹ் வரை-3</title>
                        <link>https://onlinetamilnovels.com/community/%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b9%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0/%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b9%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0-4/</link>
                        <pubDate>Sun, 28 Jun 2026 14:03:34 +0000</pubDate>
                        <description><![CDATA[அத்தியாயம்-3
&quot;நன்றி கூறினால் நான் உங்களுக்கு மேலும் அருள் புரிவேன்.&quot; -குர்ஆன் 14:7
&quot;மென்மை இருக்கும் இடத்தில் அழகு இருக்கும்.&quot; -நபிகள் நாயகம் 
துபாயில் பிரணவ் இரவு வைத்த அலாரம் சத்தம் அடு...]]></description>
                        <content:encoded><![CDATA[<p dir="ltr"><span style="font-size: 14pt"><b>அத்தியாயம்-3</b></span></p>
<p dir="ltr"><span style="font-size: 14pt"><b>"நன்றி கூறினால் நான் உங்களுக்கு மேலும் அருள் புரிவேன்." </b></span><br /><span style="font-size: 14pt"><b>-குர்ஆன் 14:7</b></span></p>
<p dir="ltr"><span style="font-size: 14pt"><b>"மென்மை இருக்கும் இடத்தில் அழகு இருக்கும்." -நபிகள் நாயகம் </b></span></p>
<p dir="ltr"><span style="font-size: 14pt">துபாயில் பிரணவ் இரவு வைத்த அலாரம் சத்தம் அடுத்த நாள் காலையிலிருந்த அமைதியை உடைத்தது. பிரணவ் கண்களை மெதுவாக திறந்தான்.</span></p>
<p dir="ltr"><span style="font-size: 14pt">    ஒரு நொடி எங்கே‌ இருக்கின்றோம் என்று புரியாமல் மேலே சீலிங்கை பார்த்தான்.</span><br /><span style="font-size: 14pt">    அடுத்த நொடி "துபாய்ல... அச்சோ வேலைக்கு கிளம்பணும்" என்று மெதுவாக எழுந்தான்.</span></p>
<p dir="ltr"><span style="font-size: 14pt">சூர்யா இன்னும் தூக்கத்தில் இருந்தான். அவனுக்கு அலாரத்தின் அலறல் சத்தம் எல்லாம் கேட்டது போல தெரியவில்லை.</span></p>
<p dir="ltr"><span style="font-size: 14pt">பிரணவ் சூர்யாவின் உறக்கத்தை கெடுக்காமல், அமைதியாக எழுந்து, குளித்து, ரெடியானான்.</span></p>
<p dir="ltr"><span style="font-size: 14pt">முதல் நாள் வேலைக்கு செல்வதால், முதல் இம்ப்ரஸன் முக்கியம் அல்லவா?!</span></p>
<p dir="ltr"><span style="font-size: 14pt">துபாய்யின் காலை நேரம் இன்னும் வேறாக இருந்தது. ஜஃப்ரான் பேலஸ் ஹோட்டல் காலையிலும் பரபரப்பாக தோன்றியது.</span></p>
<p dir="ltr"><span style="font-size: 14pt">இரவின் பிரகாசம் இல்லயென்றாலும், ஒரு விதமான அமைதியை மீட்டெடுத்தது.</span></p>
<p dir="ltr"><span style="font-size: 14pt">ஸ்டாப் செல்லும் வழியில் பிரணவ் உள்ளே சென்றான்.</span><br /><span style="font-size: 14pt">அங்கே புதிதாக இணைந்ததால் இன்னமும் ஐடி தராத பட்சத்தில் தற்காலிக நுழைவு கார்ட் இருந்தது. அதன் மூலமாக பெயர் பதிவு செய்து, கையெழுத்திட்டான்.</span></p>
<p dir="ltr"><span style="font-size: 14pt">"நியூ ஜாயினா?" என்று செக்யூரிட்டி கேட்டான்.</span></p>
<p dir="ltr"><span style="font-size: 14pt">"ஆம்.. அட இங்கயும் தமிழ்" என்று ஆச்சரியப்பட, "கிச்சன் ரைட் சைட்ல இருக்கு" என்று வழிகாட்ட, பிரணவ் உள்ளே நடந்தான்.</span></p>
<p dir="ltr"><span style="font-size: 14pt">கிட்சன் டோர் திறந்த அந்த நொடி, ஒரு உணவிற்கான உலகமாக மாறி இருந்தது.</span></p>
<p dir="ltr"><span style="font-size: 14pt">ஹீட், ஸ்டீம், மெட்டல் சத்தம், என்றதுடன் 'ஆர்டர் ரெடி, பாஸ்ட், மூவ், ஹரிஅப்' என்ற ஓட்டத்திற்கான வார்த்தைகள் செவியில் விழுந்தன.</span></p>
<p dir="ltr"><span style="font-size: 14pt">பிரணவ் ஒரு நொடி அங்கே நின்றான். அவன் இதய துடிப்பு வேகம் எடுத்தது.</span><br /><span style="font-size: 14pt">"ஹே... நியூவா?" என்றதும் சீப் செஃப் வந்தார். பிரணவின் தகுதியை பார்வையிட்டு, "ஓ... இந்தியன் புட், வெஜிடேரியன் ஸ்பெஷல் புட் செய்ய வந்தவனா? அப்ப வெஜிடபிள் செக்ஷன்ல போய் வேலையை ஆரம்பி. முதல்ல முதல் நாள் வெஜிடேபிள் கட் பண்ணு." என்றார். பிரணவ் முழித்து திரும்பிப் பார்த்தான்.</span></p>
<p dir="ltr"><span style="font-size: 14pt">அவர் ஒரு சீனியர் செஃப் தான்‌. </span><br /><span style="font-size: 14pt">"வாட்... என்ன என்‌ முகத்தையே பார்க்கற?" என்று கேட்க, "இல்லை சார்... இங்க இங்கிலிஷ் பேசுவாங்கனு பார்த்தேன். வந்ததிலருந்து தமிழ் பீப்பிளா பார்க்கறேன்" என்று ஆனந்தப்பட்டான்.‌</span></p>
<p dir="ltr"><span style="font-size: 14pt">"ஷிட்.. இங்க இந்தியன் புட் கிச்சன் ரூமுக்கு வந்திருக்க மேன். இந்தியனா இருக்கறப்ப தமிழ் தெரியாம போகுமா? அதுவும் எஸ்ஸ்பெஷலி தமிழ் புட் ப்ரீப்பேர் பண்ண தான் ஆளை தேடி பிடிச்சது. சோ.. இங்க மோஸ்டா தமிழ் பீப்பிள் தான் கிச்சனில் இருங்காங்க. நான்-வெஜிடேபிள் செக்ஷன், அந்த கிச்சன் வேற. அதனால இங்க லாங்வேஜ் உங்க இஷ்டம் போல பேசலாம். ஆனா கஸ்டமர் சர்வீஸ் பண்ணறப்ப, மேனஜர், முந்தைய சீனியர்ஸிடம் பேசறப்ப இங்கிலிஸ் மஸ்ட். அன்டஸ்டாண்ட்..." என்றார்.</span></p>
<p dir="ltr"><span style="font-size: 14pt">"ஓகே. ஓகே..சார்" என்றவனிடம், "வாட் இஸ் யுவர் நேம்" என்று கேட்க "பிரணவ் சார்" என்று கூறினான்.</span></p>
<p dir="ltr"><span style="font-size: 14pt">"ஓகே.. கம் இயர். டைமுக்குள்ள நைஃப் ஹாண்டில் பண்ணி வெஜிடேபிளை கட் பண்ண தெரியுமா?" என்று கேட்டு ஒரு கூர்மையான கத்தியை தந்து, பிரணவ் முன் பல காய்கறிகளை வைத்து, குறிப்பிட்ட நேரத்தில் வெட்டிவிட கூறி கடிகாரத்தை பார்த்தார். பிரணவ் தனக்கான வேகத்தை அறிய கேட்பதால், மடமடவென காய்கறியை நறுக்க முனைந்தான்.</span></p>
<p dir="ltr"><span style="font-size: 14pt">"ஸ்பீட் அப்" என்று செஃப் கூற வேகமெடுத்தான். </span><br /><span style="font-size: 14pt">லேசான பதட்டம், அதனால் ஏதேனும் தப்பும் தவறுமாய் நேர்த்தியின்றி காய்கறி வெட்டப்படக்கூடாதென கவனமாய் இருந்தான்.</span></p>
<p dir="ltr"><span style="font-size: 14pt">ஒரே அளவில், காய்கறி துண்டு, அதே போல எந்த காய்கறி எப்படி நறுக்க வேண்டுமென்று ஆராய்ந்தவனாக சிலதிற்கு குட்டி குட்டியாக, சிலது நீளமாக, சிலதை பெரிதாக என்று வகைப்படுத்தி வெட்டினான்.</span></p>
<p dir="ltr"><span style="font-size: 14pt">"பிரணவ் பாஸ்ட்" என்ற குரலில் அழுத்தம் ஆனது.</span></p>
<p dir="ltr"><span style="font-size: 14pt">புது இடம், புது சூழல், லேசான பதட்டமும் ஒன்றிணங்க, இதில் வெட்பமான காற்று, அதிக</span><br /><span style="font-size: 14pt">நீராவி, இதில் பயத்தில் தாண்டி வியர்வை என பிரணவ் கையை துடைத்தான்.</span></p>
<p dir="ltr"><span style="font-size: 14pt">"போக்கஸ் பிரணவ் இப்படியா கையை துடைப்பாங்க. ஹாண்ட் கர்ச்சீப், ஆர் டிசு பேப்பர்ல துடைக்க வேண்டாம்?" என்று கத்தவும், அந்த நேரம் ஒரு பிளேட் கை தவறி விழும் நிலையில் ஸ்லிப்பானது. </span><br /><span style="font-size: 14pt">பிரணவ் கவனமாய் உடனே பிளேட்டை பிடித்தான்.</span></p>
<p dir="ltr"><span style="font-size: 14pt">"கேர்ஃபுல் பிரணவ்" என்றதும் "சாரி செஃப் லேசான பயம்" என்றதும், "பஸ்ட் டே என்பதால் பேனிக் ஆகாதிங்க. சில்" என்று தட்டிக் கொடுத்து நகர்ந்தார்.</span></p>
<p dir="ltr"><span style="font-size: 14pt">அந்த ஒரு வார்த்தை பிரணவை கொஞ்சம் நிதானிக்க வைத்தது.</span><br /><span style="font-size: 14pt">நேரம் ஓடிக்கொண்டே இருந்தது.</span></p>
<p dir="ltr"><span style="font-size: 14pt">புதியவன் பழைய ஆட்களின்றி வேலைகள் கழுத்துவரை இருக்க, ஆர்டர் வந்தவண்ணம் இருக்கவும், பிரணவிற்கு நிற்க நேரமின்றி வேலைக்கான அழுத்தம் அதிகமானது.</span></p>
<p dir="ltr"><span style="font-size: 14pt">மதிய உணவை கூட ஓய்வின்றி தான் ஸ்டாபிற்கான உணவு மேஜையில் சாப்பிட்டான். பீக் ஹவர்ஸ் என்று மீண்டும் மாலை வேலை கூடியது.</span></p>
<p dir="ltr"><span style="font-size: 14pt">பிரணவ் கைகள் பெரிய பெரிய கரண்டி, பிடித்து அதை வைத்துவிட்டு இளைப்பாறவே முடியவில்லை.</span></p>
<p dir="ltr"><span style="font-size: 14pt">அவன் தலையை தூக்கி சுற்றி பார்த்தான். அவனை போல பலரும் அப்படி தான், இங்கே பணியாற்றினார்கள். அவன் உள்ளுக்குள் சிரித்தான். 'ஓ இதுக்கு தான் அவசரமா விசா ஏற்பாடு செய்து வேலைக்கு எடுத்திருக்காங்க.' என்று புரிந்தது. </span><br /><span style="font-size: 14pt">சீப் செஃப் மற்றவர் உணவை ருசி பார்த்து தட்டில் அலங்கரித்திட சம்மதம் அளித்ததும், தான் உணவு அலங்கரித்து வெளியே சென்றது.</span></p>
<p dir="ltr"><span style="font-size: 14pt">இடையில் பிரேக் டைம் என்று நேரம் கிடைத்திட, நிதானமாய் சுவாசம் விடுத்தான்.</span></p>
<p dir="ltr"><span style="font-size: 14pt">அடுத்து ஷிப் முறையில் ஆட்கள் மாறவும், பிரணவ் முதல் நாள் வேலையை இனிதாக முடித்துவிட்டு வந்தான். இரவு உணவு அவனுக்கு பார்சல் தந்திருக்க, அதையும் பெற்றுக் கொண்டான். செப் உடையை அகற்றி நார்மலாக உடையணிந்துக் கொண்டான்.</span></p>
<p dir="ltr"><span style="font-size: 14pt">தங்கியிருக்கும் அறைக்கு செல்லும் வழியில் ஹோட்டல் லாபியில் பக்கம் நடந்தான்.</span><br /><span style="font-size: 14pt">அங்கே அவள் தியானா.</span><br /><span style="font-size: 14pt">அவள் வழக்கம்போலவே டெஸ்கில் அமைதியாக வீற்றுக்கொண்டு ஹோட்டலில் தங்குவதற்கான மற்ற விஷயத்தை தொகையை விவரித்தாள்.</span></p>
<p dir="ltr"><span style="font-size: 14pt">சட்டென மற்றொரு பெண் வரவும் தியானா அவ்விடம் விட்டு வெளியேறினாள்.</span></p>
<p dir="ltr"><span style="font-size: 14pt">'ஹலோ மிஸ்டர். வொர்க்கர்ஸ் ஏன் இந்த பக்கம் வந்திங்க? இது கஸ்டமர் வர்ற பாதை.' என்று ஆங்கிலத்தில் குரல், தன்னை பார்த்து சத்தமாக வரவும், தன் தற்காலிக அட்டையை மறைத்தபடி, "சாரி சார். தி சேம் மிஸ்டேக் வோண்ட் ஹாப்பன் அகைன்" என்று பணிவாக கூறி மறுபுறம் நடந்தான்.</span></p>
<p dir="ltr"><span style="font-size: 14pt">'ஒரு பொண்ணை பார்க்கணும்னு நினைச்சி அசிங்கப்பட்டது தான் மிச்சம். இது எனக்கு தேவையா? நல்லவேளை அவ பார்க்கலை. ஆனாலும் அசிங்கமா போச்சு' என்று சுணங்கிக் கொண்டு நடந்தவன், அருகே "முதல் நாளே ரொம்ப வேலையா?" என்ற குரல்.</span></p>
<p dir="ltr"><span style="font-size: 14pt">கருப்பு சீருடையில் முகம் மட்டும் தெரிய தலையை கூட மறைத்து நின்ற தியானாவே தான், இந்த முறை பர்தா முழுதா அணிந்து கேட்பதை யூகித்தான்.‌</span></p>
<p dir="ltr"><span style="font-size: 14pt">இவன் கண்ணை தேடவும் முகத்திலிருந்த துணியை தலையில் மேல ஏற்றி வைத்தாள்.</span></p>
<p dir="ltr"><span style="font-size: 14pt">"ஆமாங்க... வேலை அதிகம் தான். வெஜிடேரியனுக்கு இந்த அளவு வரவேற்பு இருக்கும்னு நினைக்கலை. நிதானமா மூச்சு விட்டு நிற்க கூட நேரமில்லாம பரபரப்பா போச்சு" என்று பேசினான்.‌</span></p>
<p dir="ltr"><span style="font-size: 14pt">தியானாவோ "ம்ம்ம்.. அதுக்கு தான் அவசரமா இங்க உங்களை வரவழைச்சி வேலைக்கு சேர்த்தது." என்று புன்சிரிப்பை உதிர்த்தாள்.</span></p>
<p dir="ltr"><span style="font-size: 14pt">பிரணவிற்கு அந்த அழகான புன்னகை ஈர்த்தது.</span></p>
<p dir="ltr"><span style="font-size: 14pt">"நீங்களும் வந்துட்டிங்க?" என்று கேட்டான்.</span></p>
<p dir="ltr"><span style="font-size: 14pt">"டே ஷிப்ட் வேலை சார். நைட் ஷிப்ட் ரிசப்ஷனுக்கு வேறொருத்தங்க வந்துட்டாங்க. கிளம்பிட்டேன். அன்னிக்கு நீங்க வந்தப்பவும் எனக்கு பதிலா வேற ரிசப்ஷன் பொண்ணு இருக்க வேண்டியது. அன்னிக்கு அவங்க லேட்டா வந்ததால் நான் எக்ஸ்ட்ரா நிற்க வேண்டியதா போச்சு. நான் எப்பவும் இதே டைமுக்கு கிளம்பிடுவேன்." என்றாள்.</span></p>
<p dir="ltr"><span style="font-size: 14pt">"இ...இதே டைமா மேம்?" என்றான்.</span></p>
<p dir="ltr"><span style="font-size: 14pt">"எஸ்.. சார்." என்று புறப்பட, பிரணவிற்குள் அவள் செல்லும் வழியை கவனித்தான்.‌</span></p>
<p dir="ltr"><span style="font-size: 14pt">ஒரு டாக்ஸி வந்து அவளை அழைத்து சென்றது. பிரணவ் இரவு நேரம் என்பதால் தனது இடத்திற்கு செல்லும் முன் வேடிக்கை பார்த்துக்கொண்டு கொஞ்சம் தூரம் நடந்தான்.</span></p>
<p dir="ltr"><span style="font-size: 14pt">தியானா டாக்ஸியில் ஏறியவள், 'இவர் டாக்ஸி புக் பண்ணாம நடக்கறார். எங்க நடந்து போறார். அவர் தங்கியிருக்கற இடம் தூரம் ஆச்சே. பச்... இடமெல்லாம் சௌகரியமா இருக்கானு கேட்கவில்லையே.' என்று தோன்றியது.</span></p>
<p dir="ltr"><span style="font-size: 14pt">பிரணவ் ஆள் அழகா இருக்கார். இன்னமும் லேசான பயம் இருக்கு. அது அவர் முகத்தில் தெரியுது. இதுல என்னை குறுகுறுனு பார்க்கறாரோ?' என்று சிந்தித்தாள்.</span></p>
<p dir="ltr"><span style="font-size: 14pt">'அட நாமளும் தான் அவரை அப்படி பார்த்தோம். முதல் முறை ரிசப்ஷன்ல வந்து பேசறப்ப, ஏதோ இந்த ஹோட்டலுக்கே சொந்தக்காரன் போல தோற்றம். அழகான வசீகரிக்கும் முகம். என்னிடம் வந்து பேசறப்ப என் சோர்வை கூட சட்டுனு களைந்து உற்சாகமா பேசினேன். என்ன தான் ரிசப்ஷன் பெண் என்றாலும் முகத்தில் கனிவு இருக்கும். ஆனால் அன்று ஒரு விதமான ஆர்வம் சூழ்ந்ததே.' என்று நினைத்து வரவும், டாக்ஸி நின்றது. தியானாவின் இறங்குமிடமும் வந்ததும், (பணத்தை)டிர்ஹாம் வழங்கிவிட்டு நடந்தாள்.</span></p>
<p dir="ltr"><span style="font-size: 14pt">பல அடுக்கு மாடி கட்டிடத்தில் தான் தியானா வசிப்பது.</span><br /><span style="font-size: 14pt">அவளுக்கென அப்பா அம்மா தங்கை மட்டுமே.</span></p>
<p dir="ltr"><span style="font-size: 14pt">தந்தை நஸீர் ஒரு எண்ணெய் கிடங்கில் சூப்பர்வைஸராக உள்ளார். அம்மா பாதிமா ஹவுஸ் ஒய்ஃப்.</span></p>
<p dir="ltr"><span style="font-size: 14pt">தங்கை தற்போது தான் பன்னிரெண்டாம் வகுப்பில் பயில்கின்றாள். தியானா பிறந்து பல வருடம் கழித்து நீண்ட இடைவெளியில், வயது வித்தியாசத்தில் பிறந்தவள் சஹ்ரா.</span></p>
<p dir="ltr"><span style="font-size: 14pt">லிப்டில் மாடிக்கு வந்து சேர்ந்தாள்.</span><br /><span style="font-size: 14pt">வீட்டு கதவை மெதுவாகத் தள்ளி திறந்து உள்ளே நுழைந்தாள் தியானா.</span><br /><span style="font-size: 14pt">"அஸ்ஸலாமு அலைக்கும்..." என்று தான் வந்துவிட்டதை தெரிவிக்கும் பொருட்டு அன்னை பக்கம் பார்த்து குரல் கொடுத்தாள்.</span><br /><span style="font-size: 14pt">அதுக்குள் சமையலறை பக்கம் இருந்து பாதிமா "வஅலைக்கும் சலாம், மொளே" என்றார் தியானாவின் அம்மா பாதிமா.</span><br /><span style="font-size: 14pt">அந்த ஒரு வார்த்தையிலேயே</span><br /><span style="font-size: 14pt">அம்மாவின் பாசமும் கவலையும் கலந்து இருந்தது.</span><br /><span style="font-size: 14pt">தியானா தனது பேக்கை மெதுவாக சோபாவில் வைத்தாள்.</span><br /><span style="font-size: 14pt">பர்தாவை அவிழ்த்து ஹாங்கரில் தொங்கவிட்டாள்.</span></p>
<p dir="ltr"><span style="font-size: 14pt">"என்ன மொளே இன்னிக்கு லேட்டா வந்துட்டே... வேலை அதிகமா?" தியானா தாய் பாதிமா கேட்டுக்கொண்டே தோளை தீண்டினார்.</span><br /><span style="font-size: 14pt">"ம்ம்ம்மா... ரொம்ப க்ரவுட் உம்மா... ஹோட்டலில் இன்னிக்கு அதிகப்படியான மீட்டிங் என்பதால் ஆட்கள் வந்துட்டே இருந்தாங்க." என்று தியானா சோர்வுடன் சிரித்தாள்.</span><br /><span style="font-size: 14pt">"வா... முதல்ல கைய கழுவிட்டு வா. ஸ்னாக்ஸ் வைக்கிறேன்" என்றார் பாதிமா.</span><br /><span style="font-size: 14pt">"சரி உம்மா..." என்று தியானா பதில் தந்தாள். அவள் கைகளை கழுவி வந்து டைனிங் டேபிள் அருகே அமர்ந்தாள்.</span></p>
<p dir="ltr"><span style="font-size: 14pt">சாதாரண வீடு. சின்ன ஹால்.</span><br /><span style="font-size: 14pt">பக்கத்திலே டைனிங் டேபிள்.</span><br /><span style="font-size: 14pt">சுவரில் ஒரு கடிகாரம் மெல்ல ஒலித்துக்கொண்டே இருந்தது.</span><br /><span style="font-size: 14pt">"சஹ்ரா எங்க?" என்று தங்கையை கேட்டாள்.</span><br /><span style="font-size: 14pt">"அவ உள்ளே படிச்சிக்கிட்டு இருக்கா... நாளைக்கு டெஸ்டாம்" என்றார் பாதிமா.</span></p>
<p dir="ltr"><span style="font-size: 14pt">"சஹ்ரா" என்று தியானா மெதுவாக கூப்பிட்டாள். அதுக்குள் அறையிலிருந்து ஓடி வந்தால் சின்னவள். "அக்கா வந்துட்டாங்களா!" என்றவள் முகத்தில் முழுக்க சந்தோஷம்.</span></p>
<p dir="ltr"><span style="font-size: 14pt">"ஸ்னாக்ஸ் சாப்பிடலாம்னு கூப்பிட்டேன். உட்காரு. இன்னிக்கு ஸ்கூல் எப்படி போச்சு?" என்று கேட்டாள். இது வழக்கமாக முறை தான்‌. அக்கா தங்கை சிறிது நேரம் இன்றைய நாட்களை பற்றி பேசிக்கொள்வார்கள்.</span></p>
<p dir="ltr"><span style="font-size: 14pt">"ஹம்... ஓகே தான் அக்கா. ஆனா மேத்ஸ் கொஞ்சம் கஷ்டமா இருக்கு" என்று சோகமாய் உரைத்தாள். </span><br /><span style="font-size: 14pt">"நான் ஃப்ரி ஆனதும் சொல்லி தர்றேன்" என்று தியானா சிரித்தாள்.</span><br /><span style="font-size: 14pt">பாதிமா பிளேட் வைத்தபடி இருவரையும் பார்த்தார்.</span><br /><span style="font-size: 14pt">"நீங்க இருவரும் முதல்ல சாப்பிடுங்க" என்றார்.</span></p>
<p dir="ltr"><span style="font-size: 14pt">"வாப்பா இன்னும் வரலையா உம்மா?" என தியானா கேட்டாள்.</span></p>
<p dir="ltr"><span style="font-size: 14pt">"இல்ல மொளே... இன்று கிடங்குல வேலை அதிகமா இருக்கும்னு சொல்லிட்டு தான் போனாரு..." என்று உம்மா குரலில் ஒரு சின்ன கவலை.</span><br /><span style="font-size: 14pt">"ஹும்..." தியானா மெதுவாக தலையசைத்தாள்.</span></p>
<p dir="ltr"><span style="font-size: 14pt">சஹ்ரா பேசிக்கொண்டே சிற்றுண்டியை சாப்பிட்டாள்.</span><br /><span style="font-size: 14pt">"அக்கா... நீங்க வேலை பாக்குற ஹோட்டலில் புதுசா என்ன ஸ்பெஷல்" என்றாள்.</span></p>
<p dir="ltr"><span style="font-size: 14pt">"ஸ்பெஷல் என்று எதுவும் இல்லை. ஆனா தமிழ் பேசற ஒருத்தரை சந்திச்சேன்" என்றதும் சஹ்ரா கண்கள் பெரிதானது. பெரும்பாலும் ஆங்கிலத்தில் தான் பேசி மற்றவரிடம் உரையாடுவது தியானா வேலை. தமிழ் ஆட்கள் துபாயில் இருந்தாலும் ரிசப்ஷன் பணியில் ஆங்கிலம் மட்டுமே.</span></p>
<p dir="ltr"><span style="font-size: 14pt">"அவர் ஹோட்டலில் வேலை செய்ய வந்த ஸ்டாப். நேத்து அறிமுகமாகி, இன்னிக்கு வேலையில் முதல் நாள் இணைந்துட்டார். அவரோட தமிழ்ல தான் பேசினேன். அவருக்கு அது சந்தோஷத்தை தந்திருக்கும் போல அவர் முகமே சொல்லுச்சு" என்று தியானா தன்னை அறியாமல் பிரணவ் பற்றி ஆர்வமாக சொன்னாள்.</span><br /><span style="font-size: 14pt">"அப்படியா? ம்ம்ம் வேற வேற நாட்ல இருந்துட்டு நம்ம மொழியை கேட்கும் போது சந்தோஷம் வர்றது இயல்பு தான்." என்றார் பாதிமா.  லங்கையிலிருந்து துபாயில் இருக்கின்றார் தியானா குடும்பத்தகனர். நஸிர் வேலைக்காக வந்து வொர்க் பெர்மிட் ஆனதும் எக்ஸ்பெக்ட் ஆனவர். அதனால் பாதிமா நாட்டை விட்டு இங்கு வந்ததில் வருத்தமாக உரைத்தார்.</span></p>
<p dir="ltr"><span style="font-size: 14pt">"என்ன வேலையில் சேர்ந்தார் அக்கா?" என்று சஹ்ரா கேட்க, "கிட்சன் வேலை பார்க்கறார். செஃப் போல." என்றாள். </span><br /><span style="font-size: 14pt">"நல்லா பேசினாரா?" </span><br /><span style="font-size: 14pt">''ம்ம்ம்ம்மா... தமிழ் தானே.. அதனால ஆர்வமா பேசினார்."</span></p>
<p dir="ltr"><span style="font-size: 14pt">தற்போது பிரணவ் என்ன பேசினான் என்று கேட்டால் தியானா விழிப்பாள். ஏனெனில் அவளுக்கு பிரணவ் பேசியது எதுவும் நினைவில் இல்லை. அவனது வசீகரிக்கும் முகம் மட்டும் கண்ணில் தோன்றி மறைந்தது.</span></p>
<p dir="ltr"><span style="font-size: 14pt">"என்ன மொளே... என்ன யோசிக்கிறே?" என்று பாதிமா</span><br /><span style="font-size: 14pt">உம்மா கேட்டார்.</span><br /><span style="font-size: 14pt">''ஒன்னும் இல்ல உம்மா..." என்று அவசரமாய் மறுத்து சிரித்தாள்.</span><br /><span style="font-size: 14pt">"சாப்பிடு... குளிர்ந்துடும்..." என்று நினைவூட்ட சிற்றுண்டியை விழுங்கினாள்.</span></p>
<p dir="ltr"><span style="font-size: 14pt">சஹ்ரா மீண்டும் புத்தகம் எடுத்து படிக்க அமர்ந்தாள். உம்மா சமையலறை பக்கம் போனார். தியானா சற்று பின்சாய்ந்து அமர்ந்தாள்.</span></p>
<p dir="ltr"><span style="font-size: 14pt">வாப்பா இன்னும் வரவில்லை என்பதால், அவள் கண்களை மூடினாள். உம்மா தந்த சிற்றுண்டியால், ஒரு நாள் முழுக்க இருந்த சோர்வு</span><br /><span style="font-size: 14pt">மெதுவாக உடலை விட்டு வெளியேறியது.</span></p>
<p dir="ltr"><span style="font-size: 14pt">பிரணவ் பற்றி பேசியதில் கூடுதல் உற்சாகம் வந்ததை அறியாதவளாக இருந்தாள் தியானா.</span></p>
<p dir="ltr"><span style="font-size: 14pt">-தொடரும்</span></p>
<p dir="ltr"><span style="font-size: 14pt">‌</span></p>]]></content:encoded>
						                            <category domain="https://onlinetamilnovels.com/community/%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b9%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0/">மொஹபத் முதல் நிக்காஹ் வரை - Praveena Thangaraj</category>                        <dc:creator>Praveena Thangaraj</dc:creator>
                        <guid isPermaLink="true">https://onlinetamilnovels.com/community/%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b9%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0/%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b9%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0-4/</guid>
                    </item>
				                    <item>
                        <title>மொஹபத் முதல் நிக்காஹ் வரை-2</title>
                        <link>https://onlinetamilnovels.com/community/%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b9%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0/%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b9%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0-2/</link>
                        <pubDate>Sat, 27 Jun 2026 13:08:03 +0000</pubDate>
                        <description><![CDATA[அத்தியாயம்-2
&quot;அல்லாஹ்வின் வழிகாட்டுதலைப் பின்பற்றுபவர்களுக்கு பயமில்லை.&quot; -குர்ஆன் 2:38
&quot;உண்மையான செல்வம் மன திருப்திதான்.&quot; -நபிகள் நாயகம் 
   பிரணவ் பதட்டத்தை மறைத்தவனாக &#039;மேனேஜர் அன்வர்&#039; ...]]></description>
                        <content:encoded><![CDATA[<p><span style="font-size: 14pt">அத்தியாயம்-2</span></p>
<p><span style="font-size: 14pt">"அல்லாஹ்வின் வழிகாட்டுதலைப் பின்பற்றுபவர்களுக்கு பயமில்லை." -குர்ஆன் 2:38</span></p>
<p><span style="font-size: 14pt">"உண்மையான செல்வம் மன திருப்திதான்." -நபிகள் நாயகம் </span></p>
<p><span style="font-size: 14pt">   பிரணவ் பதட்டத்தை மறைத்தவனாக 'மேனேஜர் அன்வர்' என்று எழுதிய கதைவை பார்த்து "May I come in, sir?" என்று கதவை மெதுவாக தட்டியபடி பிரணவ் கேட்டான்.</span></p>
<p><span style="font-size: 14pt">"கம் இன்" என்றது ஆளுமையான குரல். பிரணவ் கதவைத் திறந்து உள்ளே நுழைந்தான். அறை முழுக்க நேர்த்தியான அமைப்பு. கண்ணாடி மேசை துடைத்து வைக்கப்பட்டு சுத்தமாக காட்சிக்கு இருந்தது. அதன் மேல் நாலைந்து கோப்புகள் அடங்கியிருந்தது. </span></p>
<p><span style="font-size: 14pt">ஒரு பக்கம் துபாயின் அழகு. தெரிய, அந்த மேசையின் முன்னால் அமர்ந்திருந்தார் மேனேஜர் அன்வர்.</span></p>
<p><span style="font-size: 14pt">மூக்குக்கண்ணாடி கீழே சரிய வைத்தபடி, பிரணவின் அப்பாயின்மெண்ட் லெட்டரை பார்த்துக் கொண்டிருந்தார்.</span></p>
<p><span style="font-size: 14pt">"பிரணவ் ரைட்..."</span></p>
<p><span style="font-size: 14pt">"யெஸ் சார்…"</span></p>
<p><span style="font-size: 14pt">"டேக் யுவர் சீட்" என்றார்.</span></p>
<p><span style="font-size: 14pt">பிரணவ் மெதுவாக நாற்காலியில் அமர்ந்தான். கைகளை ஒன்றாகப் பிடித்தபடி பதட்டத்தை மறைத்தான்.</span></p>
<p><span style="font-size: 14pt">அந்த சில விநாடிகள் பிரணவின் இதயத் துடிப்பு தான் அவனுக்கு கேட்கும் அளவுக்கு இருந்தது. மேனேஜர் பிரணவின் பைலை மூடினார்.</span></p>
<p><span style="font-size: 14pt">"யுவர் பிரப்பைல் இஸ் குட்" என்று ஒரு சின்ன இடைவேளையுடன், "யு ஹேவ் எக்ஸ்பீரியன்ஸ். தட்ஸ் ரியலி குட்." பிரணவ் ஆமென்பது போல தலையசைத்தான்.</span></p>
<p><span style="font-size: 14pt">"பட் பிரணவ்.." என்றவர் பிரணவ் முன் குனிந்து சொன்னார். "டிசிபிளின் இஸ் எவரிதிங். இங்க அதை அதிகமாவே எதிர்பார்ப்போம்." என்ற வார்த்தை சற்று கனமாக விழுந்தது. "இன் அவர் கிட்சன். நம்ம ஹோட்டலில் கஸ்டமருக்கு புட் ரெடிப் பண்ணறதுல டிலேவே இருக்க கூடாது. வேலையில் சுத்தமும் சுகாதாரமும் இருக்கணும். நம்ம சர்வீஸ் தான் நமக்கான கஸ்டமரை தேடி வரவைக்கணும். ஒரு சின்ன பிளாக் மார்க் கூட வராம பார்த்துக்கோங்க. மோஸ்டா துபாய் என்றதும் நான்வெஜ் ஸ்பெஷலா இருக்கும். நம்ம ஹோட்டலில் வெஜ் ப்ரியர்களுக்குனு தேடி தேடி பெஸ்ட் குக்கிங் ஆட்களை தேடி நியமிக்கறோம்." என்று அவரும் தமிழர் என்பதால் தமிழில் கதைக்க, பிரணவ் கவனமாக கேட்டுக் கொண்டிருந்தான்.</span></p>
<p><span style="font-size: 14pt">"இங்க மிஸ்டேக்.. ஆர் நாட் அக்சப்டபிள் அதை மட்டும் எப்பவும் மனசுல பதிய வச்சிக்கோங்க" என்று மீண்டும் கூற பிரணவ் மனசுக்குள் ஒரு அழுத்தத்தை உருவாக்கியது.</span></p>
<p><span style="font-size: 14pt">"கேன் யு ஹாண்டில் தட்?" என்றார் நேரடி கேள்வியாக. பிரணவ் ஒரு நொடிக்கு மூச்சை ஒழுங்குபடுத்திக் கொண்டான்.</span></p>
<p><span style="font-size: 14pt">"எஸ் சார்.. ஐ வில்" என்றதும் </span></p>
<p><span style="font-size: 14pt">மேனேஜர் அவனை ஒரு நொடிக்கு குறைவாக பார்த்தார்.</span></p>
<p><span style="font-size: 14pt">அந்த பார்வை பிரணவை அளந்தது போல இருந்தது</span></p>
<p><span style="font-size: 14pt">"குட்." என்றவர் சற்றே சாய்ந்து அமர்ந்தார்.</span></p>
<p><span style="font-size: 14pt">"டுடே டேக் ரெஸ்ட் பிரணவ். டிராவல் பண்ணி வந்ததில அலைச்சல் உண்டு. டுமாரோ ஜாயின் பண்ணிக்கோங்க. அப்பறம் மத்த பார்மாலிட்டிஸ் எல்லாம் முடிச்சிடுங்க. ஹோட்டல் கம்பெனியே சீனியர் செஃப்னா ரூம் நாங்களே அலார்ட் பண்ணுவோம். பட் நீங்க புதுசு என்பதால  இப்பொழுது ஸ்டாப் அக்கமண்டேஷன்ல ரூம் கிடைக்கும். அதுல தங்குங்க." என்றதும் பிரணவ் கண்களை உயர்த்தி கவனமாய் கேட்டுக் கொண்டான்.</span></p>
<p><span style="font-size: 14pt">"ஓகே சார்" என்று பதிலிட்டான். </span></p>
<p><span style="font-size: 14pt">"வெல்கம் டூ ஜஃப்ரான் பேலஸ் ஹோட்டல்" என்று அதன் பின் வாழ்த்தினார். </span></p>
<p><span style="font-size: 14pt">  முகமலர்ந்து பிரணவும் "தேங்க்யூ சார்" என்று கூறினான். </span></p>
<p><span style="font-size: 14pt">பிரணவுக்கு ஒரு தொடக்கம் கிடைத்திட எழுந்தான். "டூ யுவர் பெஸ்ட்" என்றதும் "சூர் சார்" என்று பிரணவ் மெதுவாக வெளியே வந்தான்.</span></p>
<p><span style="font-size: 14pt">அந்த கதவை மூடிய நொடியில், ஒரு ஆழ்ந்த மூச்சை விட்டான். "ஹூஃப்" அவன் உள்ளுக்குள் சிரித்தான்.</span></p>
<p><span style="font-size: 14pt">தனக்கான வேலை நாளை ஆரம்பமாகுமென தற்போது அவன் மீண்டும் லாபி நோக்கி நடந்தான்.</span></p>
<p><span style="font-size: 14pt">அங்கே அதே ரிசப்ஷன் பெண் தியானா. அவளிடம் அதே அமைதி. அதே மென்மையான முகம்.</span></p>
<p><span style="font-size: 14pt">அவள் வழக்கம் போலவே வேலைக்குள் மூழ்கியிருந்தாள்.</span></p>
<p><span style="font-size: 14pt">கணினியில் கவனமும், எதிரே ஹோட்டலில் வந்து நின்றவருக்கு தகவலும் கூறி சிரித்துப் பேசினாள். </span></p>
<p><span style="font-size: 14pt">அவர்கள் சென்றதும் பிரணவ் அருகே நின்றதும், அவள் தலை தூக்கினாள்.</span></p>
<p><span style="font-size: 14pt">"என்ன சார் எல்லாம் முடிந்ததா?" என்ற உற்சாக குரல். "எஸ் மேம்" என்று பிரணவும் சிரித்தான்.</span></p>
<p><span style="font-size: 14pt">"நாளைக்கு ஜாயின் பண்ண சொல்லிட்டாங்க… இப்ப ரூம் போக சொல்லி ரிலாக்ஸ் பண்ணிட சொன்னாங்க. நாளையிலருந்து வேலை ஆரம்பம்" என்றான். "வெரி குட்" என்றாள்.</span></p>
<p><span style="font-size: 14pt">"அப்பறம் ரொம்ப தேங்க்ஸ்... இங்க வந்ததும் லேசா தயக்கம். நீங்க கனிவா பேசி உதவி பண்ணியதுல ரிலாக்ஸ் ஆச்சு. அதுவும் தமிழ்ல." என்றதும் அவள் ஒரு நொடிக்கு அவனை பார்த்தாள்.</span></p>
<p><span style="font-size: 14pt">"தேங்க்ஸ் எல்லாம் மென்ஷன் பண்ண வேண்டாம் சார். இட்ஸ் மை டூயூட்டி." என்று அவள் மீண்டும் சிரித்தாள்.</span></p>
<p><span style="font-size: 14pt">அந்த சிரிப்பு இம்முறை சற்று இயல்பாக இருந்தது. அதை ரசித்திட, இடைஞ்சலாக பெல்பாய் லக்கேஜை கொண்டு வந்தான். </span></p>
<p><span style="font-size: 14pt">"சார் யுவர் லக்கேஜ்" என்றதும் பிரணவ் திரும்பி பார்த்தான்.</span></p>
<p><span style="font-size: 14pt">"தேங்க்யூ" என்றவன் கைப்பிடியைப் பிடித்தான். இன்று வந்ததிலிருந்து அருமையாக நேரம் செல்கின்றது என்றதும், ஒரு நொடி அவன் தியானாவை பார்த்தான். அவளும் அதே நேரம் அவனை பார்த்தாள்.</span></p>
<p><span style="font-size: 14pt">அந்த பார்வை ஒரு நொடி மட்டும் பிரணவை புரட்டி போட்டது. உடனே அவள் கண்களை கணினி பக்கம் திருப்பினாள்.</span></p>
<p><span style="font-size: 14pt">பிரணவ் மெதுவாக திரும்பி நடந்தான். லாபி கதவை நோக்கி.</span></p>
<p><span style="font-size: 14pt">  இன்று வந்ததும் துபாயில் அறிமுகமான முதல் பெண் பெயர் தியானா. அந்த பெயரை அவன் மனதில் மெதுவாக உச்சரித்து வெளியே நடந்தான். </span></p>
<p><span style="font-size: 14pt">ஜஃப்ரான் பேலஸ் ஹோட்டலின் கண்ணாடி கதவுகள் பின்னால் மூடியது. அவன் அறியாமல்</span></p>
<p><span style="font-size: 14pt">அந்த கதவுக்குள் அவன் வாழ்க்கையின் முக்கியமான கதவு திறக்கப்பட்டது.</span></p>
<p><span style="font-size: 14pt">முதல் இரவு, துபாய் ஜஃப்ரான் பேலஸ் ஹோட்டல் முன் நின்ற கம்பெனி வேனில்</span></p>
<p><span style="font-size: 14pt">பிரணவ் அமைதியாக ஏறினான்.</span></p>
<p><span style="font-size: 14pt">பெல்பாய் காட்டிய வழியில் வேன் இருக்க, 'ஸ்டாப் அக்கமண்டேஷனுக்கு இந்த வண்டில போங்க சார்" என்று கூற பிரணவ் தலையசைத்தான்.</span></p>
<p><span style="font-size: 14pt">நகரத்தின் மின்னும் விளக்குகள் மெதுவாக பின்னால் சென்றது.</span></p>
<p><span style="font-size: 14pt">அந்த லக்ஸரி ஹோட்டல் உலகத்திலிருந்து, இது வேறொரு வாழ்க்கை போல.</span></p>
<p><span style="font-size: 14pt">சில நிமிடங்களில் வேன் ஒரு அப்பார்ட்மெண்ட் பில்டிங் முன் நின்றது.</span></p>
<p><span style="font-size: 14pt">சிம்பிள் பில்டிங், பெரிதாக கிராண்ட் வெளிச்சம் லக்ஸரி என்றில்லாமல் அவனை வரவேற்றது. 'இதுதான் இப்படி தான் அமையுமென' அவன் உள்ளுக்குள் நினைத்தான். அவன் லக்கேஜை தற்போது அவன் எடுத்துக்கொண்டு உள்ளே நடந்தான்.</span></p>
<p><span style="font-size: 14pt">கார்டினரியில் சற்றே அமைதி. சில கதவுகள், சத்தங்கள். ஒரு இடத்தில் சிரிப்பு. மற்றொரு இடத்தில் டி.வி சத்தம். ஒவ்வொன்றாக செவியில் கேட்டபடி, ரூம் நம்பரை தேடி கதவைத் தட்டினான்.</span></p>
<p><span style="font-size: 14pt">டக்… டக்… "யா கம்மிங்" என்று கதவு திறந்து, ஒரு இளைஞன் ஷார்ட்ஸ் டீஷர்ட்ஸ் என்று கேஸுவல் உடையில் வந்தான். </span></p>
<p><span style="font-size: 14pt">யாரென பார்த்து புருவம் சுருக்க, "ஜஃப்ரான் பேலஸ் ஹோட்டல்ல நியூ ஜாயின். ரூம் இங்க தான் தந்திருக்காங்க" என்று பழக்க தோஷத்தில் தமிழில் கூறியவன் அதன்பிறகே ஆங்கிலத்தில் பேச முயல, "ரொம்ப கஷ்டப்பட வேண்டாம். நான் தமிழ் தான். சிவகாசி பக்கம். நீங்க?" என்று லக்கேஜை இழுத்து அறையிலிருந்தவன் வரவேற்றான் சூர்யா.</span></p>
<p><span style="font-size: 14pt">பிரணவ் சிரித்தவன் "பரவாயில்லை வந்ததிலருந்து கஷ்டப்பட்டு இங்கிலிஷை பேசணும்னு வந்தேன். ஆனா பார்க்கற நபர் எல்லாம் தமிழ்‌. சாரி.. என்ன கேட்டிங்க. ஊரா.. நான் சென்னைங்க" என்று கூறினான். </span></p>
<p><span style="font-size: 14pt">"பேர் என்ன?" என்று கேட்க "பிரணவ்... நீங்க?" என்று கேட்டதும், "சூர்யா" என்று நட்புடன் கையை குலுக்கிக் கொண்டார்கள். </span></p>
<p><span style="font-size: 14pt">அறை என்னமோ சின்னதா இருந்தது. இரண்டு மெத்தைகள், ஒரு பொதுவான கப்போர்ட், டேபிள் இருக்க பார்வையிட்டான்.‌</span></p>
<p><span style="font-size: 14pt">"ஆமா நீங்க எந்த டிபார்ட்மெண்ட்?" என்று சூர்யா கேட்க, "செஃப்ங்க... கிட்சன் டிப்பார்ட்மெண்ட்." என்றான் பிரணவ். </span></p>
<p><span style="font-size: 14pt">"ஓ... அப்ப நல்ல சமைப்பிங்க." என்று மகிழ "நீங்க" என்று பிரணவ் சூர்யாவை பார்த்து கேட்டதும், "க்ளீனிங் டிப்பார்ட்மெண்ட்ங்க.. ரூமை நீட்டா வச்சதுலயே தெரியலையா. ஹோட்டலில் ரூம் இன்டீரியர் டிசைனர். அறையெல்லாம் க்ளினிங் பண்ணறவன்" என்று சிரித்தான். </span></p>
<p><span style="font-size: 14pt">  "ஆமா... இன்னிக்கு வேலைக்கு போகலை?" என்று பிரணவ் சூர்யாவை பார்த்து கேட்க, "கொஞ்சம் உடம்பு முடியலைங்க‌ லீவு சொல்லியிருக்கேன்." என்றதும், பிரணவ் தயக்கமாய் தன் உடமையை எடுத்து அடுக்கினான். </span></p>
<p><span style="font-size: 14pt">"ஷையா இருக்கா... அதெல்லாம் அட்ஜெஸ்ட் ஆகிடுவிங்க" என்றதும் ஒரு நெருக்கம் கூடியது. </span></p>
<p><span style="font-size: 14pt">"டின்னர் ஏதாவது சாப்பிட்டிங்களா?" என்று கேட்க, </span></p>
<p><span style="font-size: 14pt">"இல்ல" என்றான் பிரணவ். </span></p>
<p><span style="font-size: 14pt">"ஸ்டாப்கு மெஸ் கீழே இருக்கு. </span></p>
<p><span style="font-size: 14pt">ஆனா இப்ப அன்டைம் நைட்னா டின்னர் ரெடியாயிருக்கும்." என்றான். </span></p>
<p><span style="font-size: 14pt">"பரவாயில்ல… நான் வந்ததும் சாப்பிட கப் நூடுல்ஸ் கொண்டு வந்திருக்கேன். உங்களுக்கு ஓகேன்னா நாம இங்க இப்ப சாப்பிடலாம். வெந்நீர் மட்டும் கொதிக்க வைக்க கெட்டில் யூஸ் பண்ணிடலாம்" என்று கூற சூர்யா சம்மதிக்க பிரணவ் சிரித்தான்.</span></p>
<p><span style="font-size: 14pt">"சரி… ப்ரஷ் ஆகிட்டு வர்றேன்" என்று பிரணவ் குளிக்க ஓடினான்.</span></p>
<p><span style="font-size: 14pt">  அடுத்து பிரணவ் மடமடவென நூடுல்ஸை நீரில் கொதிக்க வைத்து சூடாக கிளறினான். எப்பேற்பட்ட செஃப்பாக இருந்தாலும் பசிக்கின்றது என்றதும் உடனே கையில் எடுப்பது இந்த இரண்டு நிமிட நூடுல்ஸ் வகை தானே. </span></p>
<p><span style="font-size: 14pt">பிரணவ் குளித்து முடித்து வந்து சிம்மை மாற்றிவிட்டு, அன்னை மகாலட்சுமிக்கு தகவல் அளித்தான். இங்கு பத்திரமாக வந்து சேர்ந்துவிட்டதாக. நாளை தினம் வேலைக்கு செல்ல வேண்டும் என்றும் அடிக்கடி பேசாவிட்டாலும் நடுநடுவே அழைத்து பேசுவேன் என்று கூறினான்.</span></p>
<p><span style="font-size: 14pt">அப்படியே அண்ணன் அண்ணியிடம் தெரிவித்திட கூறினான். அதன்பின் போனை வைத்துவிட்டு, சூர்யாவிடம் கதை அளந்தான்.</span></p>
<p><span style="font-size: 14pt">சென்னையில் கேட்டரிங் முடிச்சி நளபாகம் நல்லா வரும்னு பெரிய பெரிய ஹோட்டலில் வேலையில் இருந்ததாகவும், தற்போது துபாயில் ஒருவர் மூலமாக வேலை கிடைத்து, அண்ணன் நிர்மல் உதவியுடன் கடன் வாங்கி இங்கே வந்ததை தெரிவித்தான் பிரணவ்.</span></p>
<p><span style="font-size: 14pt">  சூர்யாவோ சிவகாசியில் இரண்டு தம்பி ஒரு தங்கை இருக்க, சூர்யா இங்கு வேலைக்கு வந்ததாக தெரிவித்தான். பேச்சில் நெருக்கமாக மாறினார்கள். </span></p>
<p><span style="font-size: 14pt">   "நாளைக்கு வேலைக்கு எத்தனை மணிக்கு போகணும்?" என்று சூர்யா கேட்க, "9 மணிக்கு மார்னிங். நேரம் கடத்தாம, சுத்தமா, நேர்மையா இருக்கணும்னு மேனேஜர் அட்வைஸ். லேட்டாகாம பார்த்துக்கணும்." என்று பயந்தான் பிரணவ்.</span></p>
<p><span style="font-size: 14pt">"புது இடம் சிலருக்கு தூக்கம் வராது. பட் பயண களைப்புல தூங்கிடப்போற. எதுக்கும் அலாரம் வச்சி தூங்கிடறது பெட்டர்." என்று சூர்யா அனுபவஸ்தனாக கூறினான். </span></p>
<p><span style="font-size: 14pt">  பிரணவ் அதை ஏற்றவனாக, படுக்கையில் உறங்க சென்றான். </span></p>
<p><span style="font-size: 14pt">சில நிமிடங்களில் களைப்பில் தூங்கிவிட்டான். அறையே அமைதியானது. பேனின் சத்தம் மட்டும் பிரணவ் செவிக்கு கேட்டது. </span></p>
<p><span style="font-size: 14pt">  ஒவ்வொரு ஆண்மகனும் பணத்தை தேடி, திறமைக்கான அங்கீகாரத்தை தேடி அலைகின்றான். தனக்கு மேலுள்ள அதிகார ஆட்களுக்கு அடிப்பணிந்து, அமைதிக்காத்து, தன் பணியை தன் அளவிற்கு சரியாக செய்து ஊதியம் வாங்குகின்றனர். </span></p>
<p><span style="font-size: 14pt">  ஏனோ தனக்கு முன்பு இல்லாத அதிர்ஷ்டம் ஏதோ கூடவே வருவதாக பிரணவ் உணர்ந்தான்.‌</span></p>
<p><span style="font-size: 14pt">    அன்னை மகாலட்சுமி, அண்ணன் அண்ணியோடு, பேரனை கவனித்து கொள்வதில் இருக்கின்றார். </span></p>
<p><span style="font-size: 14pt">தனக்கு ஒரு திருமணம் செய்ய ஆவலாக இருக்கின்றார். ஆனால் இந்த நேரம் இந்த ஆஃபர் வந்து துபாயில் பெரிய பைவ் ஸ்டார் ஹோட்டலில் செஃப்பாக நிற்பதில் பெருமையாக இருந்தான். </span></p>
<p><span style="font-size: 14pt">  எப்படியும் தனது நளபாக திறமைக்கு விரைவில் நல்ல முன்னேற்றம் வருமென நம்பினான்.‌</span></p>
<p><span style="font-size: 14pt">   அப்படி வருவதற்கான அறிகுறியாக தான் இங்கு விமானத்தில் ஏறி இறங்கியதிலிருந்து நல்ல நல்ல மனிதர்களை சந்திக்கின்றான்.‌</span></p>
<p><span style="font-size: 14pt">  முதலில் இமிக்கேரஷன் இடத்தில் ஒருவர், அடுத்து, டிரைவர் அதற்கடுத்து தியானா.. </span></p>
<p><span style="font-size: 14pt">   தியானா.. இன்றைய சந்திப்பில் முதல் பெண். பெயர் தெரிந்து அறிமுகமானவளும் கூட, இதில் கனிவான அழகு, கு</span></p>
<p><span style="font-size: 14pt">ணம், சாந்தமான முக அமைப்பு, என்று இமை மூடியவனுக்குள் தியானா பிம்பம் தெள்ளத்தெளிவாக மனதில் நங்கூரமாக இறங்கியது. </span></p>
<p><span style="font-size: 14pt">-தொடரும். </span></p>
<p><span style="font-size: 14pt">பிரவீணா தங்கராஜ்.</span></p>
<p>&nbsp;</p>]]></content:encoded>
						                            <category domain="https://onlinetamilnovels.com/community/%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b9%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0/">மொஹபத் முதல் நிக்காஹ் வரை - Praveena Thangaraj</category>                        <dc:creator>Praveena Thangaraj</dc:creator>
                        <guid isPermaLink="true">https://onlinetamilnovels.com/community/%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b9%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0/%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b9%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0-2/</guid>
                    </item>
				                    <item>
                        <title>மொஹபத் முதல் நிக்காஹ் வரை-1</title>
                        <link>https://onlinetamilnovels.com/community/%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b9%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0/%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b9%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0/</link>
                        <pubDate>Fri, 26 Jun 2026 06:26:31 +0000</pubDate>
                        <description><![CDATA[&#x2764;&#xfe0f;&#x1f31c;மௌஹபத் முதல் நிக்காஹ் வரை&#x1f31c;&#x1f3b7;
அத்தியாயம்-1
&quot;இந்த உலக வாழ்க்கையே ஒரு சோதனை.&quot; -குர்ஆன் 67:2
&quot;மனிதர்களில் சிறந்தவர் மற்ற மனிதர்களுக்கு உதவுபவரே.&quot; -நபிக...]]></description>
                        <content:encoded><![CDATA[<p><span style="font-size: 14pt">  &#x2764;&#xfe0f;&#x1f31c;மௌஹபத் முதல் நிக்காஹ் வரை&#x1f31c;&#x1f3b7;</span></p>
<p><span style="font-size: 14pt">அத்தியாயம்-1</span></p>
<p><span style="font-size: 14pt">"இந்த உலக வாழ்க்கையே ஒரு சோதனை." -குர்ஆன் 67:2</span></p>
<p><span style="font-size: 14pt">"மனிதர்களில் சிறந்தவர் மற்ற மனிதர்களுக்கு உதவுபவரே." -நபிகள் நாயகம் </span></p>
<p><span style="font-size: 14pt">வானத்தை வெட்டி பறந்த விமானம் மெதுவாக கீழிறங்கத் தொடங்கியது. நாயகன் பிரணவ் ஜன்னல் இருக்கையில் சாய்ந்து அமர்ந்திருந்தான். </span></p>
<p><span style="font-size: 14pt">    கீழே தெரிந்த அந்த துபாய் நகரம் ஒளியில் மூழ்கியிருந்தது.</span></p>
<p><span style="font-size: 14pt">இரவா? இல்லை ஒரு மின்னும் கனவா? அவனுக்கே புரியவில்லை.</span></p>
<p><span style="font-size: 14pt">பொன்னிற விளக்குகள் நீண்ட கோடுகளாகப் பரவி இருந்தது. சரியாக ஸ்கேல் கொண்டு வெட்டிய கோடு போல அமைந்த சாலைகள். அசையாமல் நிற்கும் கட்டிடங்கள் கூட ஒரு ஒழுங்கை காட்டியது.</span></p>
<p><span style="font-size: 14pt">"லேடிஸ் அண்ட் ஜென்டில்மேன், வீ ஆர் நௌவ் லேண்டிங் அட் துபாய் இன்டர்நேஷனல் ஏர்போர்ட்" என அந்த அறிவிப்பு ஒலிக்கும்போது, பிரணவ் இதயத்துடிப்பு சற்று அதிகமானது.</span></p>
<p><span style="font-size: 14pt">துபாய் இன்டர்நேஷனல் ஏர்போர்ட்டில் இறங்கப் போகின்றான் பிரணவ்.</span></p>
<p><span style="font-size: 14pt">  'இது தான் தன் வாழ்விற்கான ஆரம்பமா… இல்ல மாற்றமா?' என்று தன் மனதிற்குள் கேட்டுக் கொண்டான். </span></p>
<p><span style="font-size: 14pt">விமானம் தரையை தொடும் அந்த நொடியில், பிரணவ் வாழ்க்கையும் புதிய நிலையை தொடும் என்பதை தன் உள்ளுணர்வால் உணர்ந்தான்.</span></p>
<p><span style="font-size: 14pt">விமானத்திலிருந்து வெளியே வந்து, பலவிதமான செக்கிங் முடித்து, பொறுமையாக வெளியே வந்தவுடன், குளிர்ந்த ஏர்-கண்டிஷன் காற்று முகத்தில் பட்டது. வெளியே இருந்த வெப்பத்துக்கு மாறாக, இந்த விமான நிலையமே ஒரு உலகம் போல இருந்தது.</span></p>
<p><span style="font-size: 14pt">உயர்ந்த சுவர்கள், மின்னும் தரை, எல்லாம் ஒரு லக்ஸரி பீலாக உணர்ந்தான். </span></p>
<p><span style="font-size: 14pt">பிரணவ் கையில் இருந்த பாஸ்போர்டை பிடித்துக் கொண்டு இமிக்கிரேஷன் குயூவில் நின்றான்.</span></p>
<p><span style="font-size: 14pt">அங்கிருந்த பலரையும் வேடிக்கை பார்த்தபடி, தன் ஆனந்தத்தை, பதட்டத்தை மறைத்தபடி முயன்றான். அங்கே பலத்த அமைதியும் ஒழுங்கும் இருந்தது.</span></p>
<p><span style="font-size: 14pt">அப்படியிருந்தும் ''பஸ்ட் டைமா?" என்று பின்னால் நின்றவர் கேட்டார். பிரணவோ கண்டறிந்து விட்டாரே என்று மென்மையாக சிரித்தான்.</span></p>
<p><span style="font-size: 14pt">"ஆமா சார்.. தமிழா?" என்றான். </span></p>
<p><span style="font-size: 14pt">"எஸ்... தமிழ் தான். இங்க துபாய் என்றதும் நம்ம தமிழ் ஆட்கள் இல்லையேனு பயந்துடாதிங்க. இங்க நிறைய தமிழ் பேசறவங்க உண்டு." என்று பிரணவ்வின் மனவோட்டத்தை புரிந்தவராக பேசினார். </span></p>
<p><span style="font-size: 14pt">  எந்த ஊரிலும் நம் மொழி பேசுபவர் கண்டால் வரும் பூரிப்பும் நிம்மதியையும் ஏற்பட "ஆமா சார் தமிழ் பேசறவங்க நிறைய இருப்பாங்கனு கேள்விப்பட்டிருக்கேன்" என்றுரைத்தான். </span></p>
<p><span style="font-size: 14pt">அவனோட பயமும், ஆசையும், எதிர்பார்ப்பும் எல்லாம் இருந்தது. இமிக்கிரேஷன் முடிந்து பின்னால் இருந்தவரிடம் புன்னகையை பதிலாக தந்து, விடைப்பெற்று, வெளியே வந்தவுடன், ''டாக்ஸி?" என்று ஒருவர் கேட்டார்.</span></p>
<p><span style="font-size: 14pt">துபாயில் பப்ளிக் டிரான்ஸ்போர்ட்  இருந்தாலும், முதல் முறை வந்ததால் லக்கேஜூடன் டாக்ஸியில் செல்வதே சரியென்று "எஸ்." என்று பிரணவ் தலை அசைத்தான்.</span></p>
<p><span style="font-size: 14pt">டாக்ஸி கதவு திறந்தது. "வேர் ஷூட் வீ கோ சார்?" என்று டிரைவர் கேட்க, பிரணவ் தனது போனில் உள்ள அட்ரஸை ஓபன் செய்து வாசித்து காட்டினான்.</span></p>
<p><span style="font-size: 14pt">  "ஜஃப்ரான் பேலஸ் ஹோட்டல்" என்று கூறவும், "பைவ் ஸ்டார் ஹோட்டல்" என்று கூடுதலாக டிரைவர் கேட்க, "எஸ்" என்றான் பிரணவ். </span></p>
<p><span style="font-size: 14pt">  "வெல்கம் டூ துபாய் சார்" என்று கூறி டாக்ஸி மெதுவாக நகர ஆரம்பித்தது. பிரணவ் நிதானமாக இருக்கையில் சாய்ந்தமர்ந்தான். </span></p>
<p><span style="font-size: 14pt">வெளியே பிரணவ் இதுவரை பார்த்ததே இல்லாத ஒரு அழகான நகரத்தின் காட்சிகள். </span></p>
<p><span style="font-size: 14pt">நீண்ட சாலைகள். ஒவ்வொரு இடத்திற்கும் உள்ள ஒழுங்கு. என்ன தான் விமானம் இறங்கும் பொழுது கவனித்தாலும் இன்னும் அதன் நேர்த்தி அவனை ஈர்த்தது. </span></p>
<p><span style="font-size: 14pt">   எங்கும் ஹார்ன் சத்தம் இல்லை. இந்தியா மாதிரி கூச்சல் இல்ல. அதுவே அவனை அன்னியமாக காட்டியது. இதுவே இந்தியாவில் அதிலும் அவன் வாழ்ந்த சென்னையில் இப்படி அமைதியான சூழல் இல்லை என்றாலும், அது என் ஊர், என் மக்கள் என்ற அன்னியோன்யம் இருந்தது. </span></p>
<p><span style="font-size: 14pt">   இன்று துபாய் தூய்மையாக இருந்த போதிலும், அன்னியமாக காட்டி ஆச்சரியமும் மிரட்சியும் படவைத்தது பிரணவை.</span></p>
<p><span style="font-size: 14pt">உயர்ந்த கட்டிடங்கள் இரவிலும் பிரகாசமாக நின்றன. கண்ணாடி பில்டிங் ஒளியை ரெப்லெக்ட் செய்து நின்றது. பிரணவ் ஜன்னலின் அருகில் சாய்ந்து இமைக்க மறந்து பார்த்தான்.</span></p>
<p><span style="font-size: 14pt">'இங்க தான், இந்த நாட்ல தான், நான் வேலை பார்க்க போறேன்' என உள்ளுக்குள் ஒரு சின்ன பெருமை வழிந்தது.</span></p>
<p><span style="font-size: 14pt">டாக்ஸி சாலையில் வழக்கியபடி நகர்ந்தது. ஒரு பக்கம் வெறுமையான பாலைவனம் மாதிரி இடமும் வந்தது. மற்றொரு பக்கம் மாடர்ன் பில்டிங்ஸும் இருந்தது. </span></p>
<p><span style="font-size: 14pt">இந்த இரண்டும் அவனை ஆச்சரியப்படுத்தியது.</span></p>
<p><span style="font-size: 14pt">காரில் "ஆர் யூ ஃப்ரம் இந்தியா?" என்று டிரைவர் கேட்டார். பிரணவின் முகத்தோற்றம் காட்டிக் கொடுத்திருக்க வேண்டும். </span></p>
<p><span style="font-size: 14pt">"எஸ் சென்னை. ஐ ஹேவ் கம் இயர் டூ வொர்க் அட் தி ஜஃப்ரான்  பேலஸ்ல ஹோட்டல்" என்று புன்னகைத்தான். </span></p>
<p><span style="font-size: 14pt">"வாவ்.. சென்னையா... குட் ஆப்சர்நியுட்டி ஹேர் சார்." என்று வாழ்த்தவும், "தேங்க்யூ சார். தமிழ் பேசுவிங்களா?" என்று பிரணவ் அமைதியாக கேட்டு சிரித்தான்.</span></p>
<p><span style="font-size: 14pt">  "தமிழ் பேசுவேன் சார். நானுமே சென்னை தான். வேலைக்காக வந்தது. உங்க முகத்தை பார்த்ததும் லேசா தோணுச்சு. நீங்க எத்தனை நாள் சார் இங்க வேலையில இருப்பிங்க? இல்லை இனி இங்க தானா?" என்று தமிழிலேயே உரையாற்ற, "இனி இங்க தான் சார். வேலை எவ்ளோ நாளோ அவ்ளோ நாள்." என்றவன் அமைதியானான். </span></p>
<p><span style="font-size: 14pt">  "அப்ப குடும்பத்தை மிஸ் பண்ணுவிங்க" என்று டிரைவர் தன் முன்னால் இருந்த புகைப்படத்தை ஏக்கமாய் பார்த்தார். அதில் மனைவி குழந்தையுடன் டிரைவர் இருந்தார்.</span></p>
<p><span style="font-size: 14pt">  "ஆமா சார்.. எனக்குஅப்பா இல்லை. அம்மா மட்டும் தான். அண்ணன் அண்ணி அவங்களுக்கு ஒரு பிள்ளை. ஊரு பிரெண்ட்ஸ் எல்லாம் மிஸ் பண்ணுவேன்" என்று கூறியவன் வார்த்தைகளில் உறவும் ஊரையும் விட்டு வந்தது மனதில் நின்றது.</span></p>
<p><span style="font-size: 14pt">வேலைக்காக ஊரை விட்டு வருவது எல்லாம் கஷ்டம் தான். ஆனால் ஊரிலேயே இருந்தாலும் சிலரால் உச்சம் பெற்று, பொருளாதாரத்தில் ஏற்றம் பெற முடியவில்லை. அதற்காகவாது திரைக்கடல் தேடி திரவியம் தேடி தானே ஆகவேண்டியுள்ளது. </span></p>
<p><span style="font-size: 14pt">சில நிமிடங்களில் டாக்ஸி ஒரு பிரம்மாண்டமான பில்டிங் முன் நின்றது.</span></p>
<p><span style="font-size: 14pt">   டாக்ஸிக்கான வாடகை பணமாக அவ்வூர் திர்ஹம் தந்துவிட்டு, "முடிந்தால் திரும்ப சந்திப்போம் சார்" என்று  இறங்கினான். டிரைவரும் தன்னை போல வேலை தேடி இங்கே பிழைக்க வந்தவர் என்ற எண்ணத்தில் உண்டான சிநேகம். </span></p>
<p><span style="font-size: 14pt">"கண்டிப்பா சார்" என்று டாக்ஸி டிரைவரும் புறப்பட்டார். </span></p>
<p><span style="font-size: 14pt">பிரணவ் முன்னே ஒரு பெரிய நுழைவு வாயில் இருந்தது. அதுவும் கண்ணாடி தடுப்பு கொண்ட கதவுகள். </span></p>
<p><span style="font-size: 14pt">  அங்கிருந்த செக்யூரிட்டி தலைகுணிந்து கதவை திறக்க, பிரணவ் தனது லக்கேஜை தள்ளியபடி உள்ளே நடந்தான்.</span></p>
<p><span style="font-size: 14pt">  லாபியில் அமைதியான ஆடம்பரம். மெல்லிய நறுமண வாசனை. மென்மையான வெளிச்சத்தை உமிழும் விளக்குகள், தரைத்தளமே கண்ணை குளிர்ச்சியாக்கியது. </span></p>
<p><span style="font-size: 14pt">அங்கிருந்த அமைதியும் பிரணவிற்கு புதிதாக இருந்தது.</span></p>
<p><span style="font-size: 14pt">ரிசப்ஷன் டெஸ்கிற்கு அருகே சென்றான். அங்கே ஒரு பெண் ரிசப்ஷனிஸ்ட் நின்றிருந்தாள்.</span></p>
<p><span style="font-size: 14pt">   கருப்பு உடையணிந்த யூனிஃபார்ம். அதை தாண்டி முகத்தை மட்டும் காணும் விதமாக பர்தாவை நேர்த்தியாக கட்டி பின் செய்தியிருந்தாள். </span></p>
<p><span style="font-size: 14pt">   பிரணவ் அவளெதிரே நின்றதும் வேலைக்குண்டான கனிவான புன்னகை முகத்தில் தவழ்ந்தது. </span></p>
<p><span style="font-size: 14pt">    பிரணவிற்கு அந்த புன்னகையை தாண்டி அப்பெண்ணின் சோர்வும் எட்டி பார்த்தது போல பிரம்மை.</span></p>
<p><span style="font-size: 14pt">அடுத்து "குட் ஈவினிங் சார்" என்றவள் குரலில் அவளது வேலைக்கான துள்ளலையும் மென்மையாக வெளிவந்தது. </span></p>
<p><span style="font-size: 14pt">பிரணவ் ஒரு நொடிக்கு தயங்கினான். "ஐ.. ஐ ஹேப் பீன் செலக்டட் ஃபார் தி போஸிட்ஷன் ஆஃப் செஃப் இன் திஸ் ஹோட்டல்‌ திஸ் இஸ் மை அப்பாயின்மெண்ட் லெட்டர். ஐ நீட் டூ சீ தி மேனேஜர்" என்று ஆங்கில வார்த்தையை தேடிக்கொண்டு பேசினான். </span></p>
<p><span style="font-size: 14pt">அவள் உடனே பிரணவை மேலிருந்து கீழாக பார்த்து புரிந்துகொண்டவள் போல "தமிழா.. நியூ ஜாயினிங்கா" என்று கேட்டதும் ஆச்சரியமாக பார்த்தான். "ம்ம்ம் தமிழ் தான்" என்றதும் </span></p>
<p><span style="font-size: 14pt">அவள் சன்னமான சிரித்தாள்.</span></p>
<p><span style="font-size: 14pt">அந்த சின்ன சிரிப்பே, அந்த பெரிய நகரத்தில் அவனுக்கு ஒரு ஆதரவை கொடுத்தது.</span></p>
<p><span style="font-size: 14pt">"உங்க நேம் சார்." என்றாள். </span></p>
<p><span style="font-size: 14pt">"பிரணவ்" என்றான்‌. ரிசப்ஷன் பெண்ணான அவளும்  கணினியில் பிரணவ் பெயரை தேடினாள். </span></p>
<p><span style="font-size: 14pt">"செஃப்-னு சொன்னிங்க ரைட்?" என்று மீண்டும் ஊர்ஜிதப்படுத்த கேட்டாள். "எஸ்..." என்றதும் அவள் ஒரு பைலை எடுத்தாள்.</span></p>
<p><span style="font-size: 14pt">"ஆங்.. உங்க பெயர் இதுல இருக்கு… மேனேஜர் அன்வர் சார் வர இன்னும் ஒன் ஹவர் ஆகும். வெயிட் பண்ணுங்க, வந்ததும் மீட் பண்ண தகவல் சொல்லறேன்." என்று </span></p>
<p><span style="font-size: 14pt">அவள் பேப்பர் கொடுத்தாள்.</span></p>
<p><span style="font-size: 14pt">அவன் எடுத்துக்கொண்டான்.</span></p>
<p><span style="font-size: 14pt">"தேங்க்யூ" என்றவன் திரும்பப் போனான். "மிஸ்டர் பிரணவ்" அவள் அழைத்தாள். அவன் திரும்பிப் பார்த்தான்.</span></p>
<p><span style="font-size: 14pt">  "அந்த லாபில வெயிட் பண்ணுங்க." என்று இடத்தை சுட்டிக்காட்டினாள். அங்கே அமர்வதற்கான இருக்கைகள் இருந்தது.</span></p>
<p><span style="font-size: 14pt">அவனது பெயரை துபாயில் வந்ததும் அழைத்த முதல் பெண்.  அந்த ஒரு வார்த்தை பெயரிட்டு அழைத்து இருந்தாலும், ஒரு தெம்பு கூடியிருந்தது.</span></p>
<p><span style="font-size: 14pt">அவன் பக்கத்தில் சற்று தள்ளி லாபியில் வந்து அமர்ந்து சிரித்தான்.</span></p>
<p><span style="font-size: 14pt">  சுற்றிலும் தொட்டியில் செடிகள் அமைக்கப்பட்டிருந்தது. அதில் செயற்கை ஊற்றும் அங்கே மிதமான நீரோடை சத்தமிட்டு நீரை வழிய விட்டது. </span></p>
<p><span style="font-size: 14pt">இடத்தை கொஞ்சம் கொஞ்சமாய் பார்வையிட்டவனுக்குள், இந்த பைவ் ஸ்டார் ஹோட்டலில், தனக்கு செஃப்பாக பணியாற்றும் வேலை என்றதை இன்னமும் நம்ப முடியவில்லை. ஆனால் கனவெல்லாம் நிஜமாக கண்முன்னே விரிந்திருக்க மகிழ்ந்தான்.</span></p>
<p><span style="font-size: 14pt">  அப்படியே அவள் அந்த ரிசப்ஷன் பெண்ணை எதார்த்தமாக பார்க்கும் வாய்ப்பு வந்தது. </span></p>
<p><span style="font-size: 14pt">   ரிசப்ஷன் என்றாலே பெண்ணை நிறுத்தி விடுகின்றார்கள். அதுவும் அழகான பெண்ணை என்று கண்கள் அவள் புறம் சென்றது‌.</span></p>
<p><span style="font-size: 14pt">  அவள் பெயரை இதயமிருக்கும் பக்கம் பேட்சில் எழுதியிருந்தது. அதை சற்று கூர்ந்து பார்வையிட்டான். </span></p>
<p><span style="font-size: 14pt">'Diyana' என்று எழுதியிருக்க, 'தியானா?' என்று மனதில் உச்சரித்தான். </span></p>
<p><span style="font-size: 14pt">இங்கே துபாயில் மிகவும் கட்டுப்பாட்டுடன் இருக்கவில்லை என்றால் தண்டனை கடுமையானது என்ற விதிமுறை நினைவு வரவும், என்ன தான் தவறான நோக்கத்தில் பார்க்காவிட்டாலும் ஒருவித பயத்தில் தலையை குனிந்தான். </span></p>
<p><span style="font-size: 14pt">அவள் பெயர் தியானா, முகத்தை மட்டும் பார்க்க வைத்து முழுதாக தலை முடியை கூட கவர் செய்திருக்க, முஸ்லிம் பெண் என்றவரை அறிந்தது போதுமென அவள் அழைப்புக்காக காத்திருந்தான்.  </span></p>
<p><span style="font-size: 14pt">  பிரணவ் இங்கேயே பார்த்து முடித்து தலை கவிழ, அதை உணர்ந்தவளாக தியானா பிரணவை கண்டாள். </span></p>
<p><span style="font-size: 14pt">அவள் அவனை ஒரு நொடிக்கு பார்த்தாள். அவன் தலை கவிழ்ந்து ஏதோ யோசித்திருக்க, தியானா மீண்டும் கணினி திரையில் கவனம் செலுத்தினாள். அத்துடன் ரிஸப்ஷன் பெண் என்பதால் வேலையும் அடுத்தடுத்து இருந்தது. </span></p>
<p><span style="font-size: 14pt">   பிரணவ் மீண்டும் தலை நிமிர்ந்து, தான் இங்கு வந்துவிட்டதை தனது வீட்டிற்கு சொல்ல போனை எடுத்தான்‌. 'சிம் வேற மாற்ற வேண்டுமென்பதால் அமைதிக் காத்தான்.</span></p>
<p><span style="font-size: 14pt">  அந்த நேரம் "பிரணவ்.. மிஸ்டர் பிரணவ்." என்ற இனிமையான குரலில் சுற்றம் உணர்ந்து தியானாவை பார்த்தான். </span></p>
<p><span style="font-size: 14pt">"மேனேஜர் சார் வந்துட்டார். நான் அவரிடம் கால் பண்ணி கேட்டுட்டேன். அவர் உங்களை வரச்சொன்னார். அதோ அந்த ரூம்" என்று சுட்டிக்காட்டினாள். </span></p>
<p><span style="font-size: 14pt">"தேங்க்யூ" என்று தள்ளாடி எழுந்தான். லக்கேஜ் அவன் பாதத்தை தட்டியது. </span></p>
<p><span style="font-size: 14pt">"அது இங்க இருக்கட்டும். அதோ பெல் பாய் பார்த்துப்பார். நீங்க போங்க" என்றதும் நன்றியுரைக்கும் புன்னகையுடன் அவ்வறைக்கு சென்றான்.</span></p>
<p><span style="font-size: 14pt">   'பிரணவ்... நைஸ் நேம்' என்று தியானா எண்ணிட, அதே நேரம் 'ஸ்வீட் கேர்ள்.. கனிவான முகம்'  என்று பிரணவும் மனதில் உச்சரித்தான். </span></p>
<p><span style="font-size: 14pt">-தொடரும். </span></p>
<p><span style="font-size: 14pt"> -பிரவீணா தங்கராஜ்</span></p>
<p><span style="font-size: 14pt">மௌஹரம் பண்டிகை வாழ்த்துகள் ரீடரஸ்.‌. இது உங்களுக்கான ஸ்பெஷல் கதையும் </span></p>
<p><span style="font-size: 14pt">கூட. ஏதேனும் தப்பும் தவறுமான பழக்கவழக்கம் இருந்தால் கூறுங்கள் எடிட் பண்ணிடுவோம். இல்லைன்னா உற்சாகமான கமெண்ட்ஸ் தந்து ஆதரவு தரவும். நன்றி. </span></p>
<p>&nbsp;</p>]]></content:encoded>
						                            <category domain="https://onlinetamilnovels.com/community/%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b9%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0/">மொஹபத் முதல் நிக்காஹ் வரை - Praveena Thangaraj</category>                        <dc:creator>Praveena Thangaraj</dc:creator>
                        <guid isPermaLink="true">https://onlinetamilnovels.com/community/%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b9%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0/%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b9%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0/</guid>
                    </item>
							        </channel>
        </rss>
		