<?xml version="1.0" encoding="UTF-8"?>        <rss version="2.0"
             xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
             xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
             xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
             xmlns:admin="http://webns.net/mvcb/"
             xmlns:rdf="http://www.w3.org/1999/02/22-rdf-syntax-ns#"
             xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/">
        <channel>
            <title>
									முதலாம் சந்திப்பில்...-Praveena Thangaraj - onlinetamilnovels.com Forum				            </title>
            <link>https://onlinetamilnovels.com/community/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-praveena-thangaraj/</link>
            <description>onlinetamilnovels.com Discussion Board</description>
            <language>en-US</language>
            <lastBuildDate>Mon, 27 Jul 2026 03:37:38 +0000</lastBuildDate>
            <generator>wpForo</generator>
            <ttl>60</ttl>
							                    <item>
                        <title>முதலாம் சந்திப்பில்-15 (முடிவுற்றது)</title>
                        <link>https://onlinetamilnovels.com/community/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-praveena-thangaraj/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-15-%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f/</link>
                        <pubDate>Tue, 23 Jun 2026 14:06:51 +0000</pubDate>
                        <description><![CDATA[அத்தியாயம்-15
கூரை பட்டுயுடுத்தி கோவிலில் மருதாணி கால்கள் அடியெடுத்து வைக்க, நிலா நடந்து வந்தாள். 
அந்த கோவிலுக்கு வருவோர் போவோர் முதல், நிலாவை திரும்பி பார்த்து, &#039;கல்யாண பொண்ணு அழகா இருக்...]]></description>
                        <content:encoded><![CDATA[<p data-p-id="15559b3bbcd89831af7adaa0bd29b300"><span style="font-size: 14pt"><b>அத்தியாயம்-15</b></span></p>
<p data-p-id="d69aca9d3d779e80eff0482d2e2d28a9"><span style="font-size: 14pt">கூரை பட்டுயுடுத்தி கோவிலில் மருதாணி கால்கள் அடியெடுத்து வைக்க, நிலா நடந்து வந்தாள். </span></p>
<p data-p-id="83b95c4b04f56ffa2563aeb6e76c21d1"><span style="font-size: 14pt">அந்த கோவிலுக்கு வருவோர் போவோர் முதல், நிலாவை திரும்பி பார்த்து, 'கல்யாண பொண்ணு அழகா இருக்கா' என்று பேசி செல்வதை கண்டு அபிராமி மனம் நிறைந்தது என்றால் அது மிகையில்லை.</span></p>
<p data-p-id="ce487256ec0d80884283cc1b7251503d"><span style="font-size: 14pt">அதே போல நெற்றியில் கங்கணம் கட்டிக்கொண்டு பட்டுவேஷ்டி சட்டையில் முழுக்கை பாதி மடித்து விட்டு, கையில் பூங்கொத்து வைத்து நொடிக்கு ஒரு முறை வாட்ச் பார்க்கும் ரூபனை சிவாவை</span><br /><span style="font-size: 14pt">''டேய் ஒரு செகண்ட்க்கு ஒரு முறை டைம் பார்த்தால் அது அதிகமா காட்டாதுடா... உனக்கு அவசரம் என்றால் தாலி எடுத்துக்கிட்டு நிலா இருக்கும் இடம் போயிடு. அங்க போய் கூட தாலி கட்டு'' என்று மணமகன் தோழனாக சிவா கேலி செய்தான். </span></p>
<p data-p-id="e859a85d839f4cb9397d812917445c0e"><span style="font-size: 14pt">''பேசுவ டா பேசுவ. அன்னிக்கே உனக்கு காட்டின பொண்ணை கல்யாணம் செய்யலைனு ஒரு வார்த்தை சொல்லி இருந்தா மும்பை பக்கமே போயிருக்க மாட்டேன்." என்றான் ரூபன். </span></p>
<p data-p-id="10d9cbd9e03040dca11bc2b223e2439f"><span style="font-size: 14pt">"ஆமா நீ ஈகோ பார்க்காம நிலாவை பிடிச்சு இருக்குனு சொல்லி இருந்தா கூட இவ்ளோ நாள் ஆகிருக்காது" என்று சிவா அவன் பங்கிற்கு வாறினான்.   </span><br /><br /><span style="font-size: 14pt">''கடுப்ப ஏத்தாதடா... இந்த ஐயர் வேற புகையை உருவாக்கிக்கிட்டு'' என்று புகையை கையால் காற்றோடு முகத்திலிருந்து அனுப்ப மெனக்கெடுத்தான். </span><br /><span style="font-size: 14pt">''இங்க பாருங்கோ இது இப்படி தான் புகை வரும் அதெல்லாம் அட்ஜஸ்ட் பண்ணிக்கணும். பாக்கியம் பையன் தானே... அவா எல்லாம் கோவில், சாமி என்று பக்தியா இருப்பா.. எப்படி தான் அவாளுக்கு பிறந்துட்டு பிரணான வாங்கறிங்களோ...'' என ஐயர் கடுகடுக்க, ரூபன் அதை எல்லாம் பொருட்படுத்தது நிலா வருகையினை விழியகற்றாமல் கண்டான். </span></p>
<p data-p-id="0acdf780584467b0a35332895aa2f26f"><span style="font-size: 14pt">''தம்பி மந்திரத்தை திருப்பி உச்சரிக்கணும். அங்க என்ன பார்வை?'' என்றதும் ரூபன் அவர் கூறியதை திருப்பி படித்தபடி இருக்க, நிலா அடிக்கண்ணில் ரூபனை காண, அவனும் அதே நேரம், அதே போல செய்ய இருவரின் கண்கள் சந்தித்தது. </span></p>
<p data-p-id="c01fdad1b444097369a88d076b0d858c"><span style="font-size: 14pt"> ரூபன் கண் சிமிட்டியதும் நிலா கண்கள் விலகி கொண்டது.</span></p>
<p data-p-id="1ced52ab1dc96ac7636d895c738c309c"><span style="font-size: 14pt">'கடவுளே இவனை பார்க்கவே கூடாது... எப்படி சேட்டை செய்யுறான்.' என தனக்குள் சொல்லி கொண்டவள், அதன் பிறகு அவனை பார்க்காமல் இருக்க, அவனோ இவள் பார்ப்பாள் என மீண்டும் பார்த்து பார்த்து ஏமாந்தான்.</span></p>
<p data-p-id="46ffde090fc4818e6f0cd3832c9e569a"><span style="font-size: 14pt">கிருத்திகா நிறைமாசம் என்பதால் சிவா அவளை அழைத்து வரவில்லை.</span></p>
<p data-p-id="9e2e23d6da17d929037abda381efd294"><span style="font-size: 14pt"> இனிமையாக பாக்கியம் அபிராமி தாமஸ் சிவா இவர்களோடு ரூபனின் மேலதிகாரி, மற்றும் கூட வேலை செய்யும் ஆட்கள் என்று வந்திருந்தனர். அதே போல நிலாவின் மருத்துவ மனையில் உள்ள டாக்டர் சித்திக், மற்றும் நிலாவோடு வேலை செய்யும் மாலினி, வேணி, சுந்தரி, மற்றும் சொந்த பந்தம், நட்பு என்று திருமணத்திற்கு வந்திருந்தனர். ஒரே குறை தந்தை உயிரோடு இருந்து தன் திருமணத்தை காண முடியாமல் சென்றதை நிலா இந்த கணமும் நினைத்து பார்த்து கண்ணீர் வடித்தாள். </span></p>
<p data-p-id="c27efd4528020fcfdc549979d853e962"><span style="font-size: 14pt">"உங்க அப்பா உயிரோட இருக்கும் பொழுதே என்னை போட்டோவில் பார்த்திருப்பார் நிலா. அவருக்கு என்னை பிடிக்கும்னு தாமஸ் அங்கிள் சொல்வார். அதனால் உங்க அப்பா ஆசி நமக்கு இருக்கும். அவர் மனசு சந்தோஷப்படும்" என்று ரூபனே நிலா மனதை சாந்தப்படுத்தினான். </span></p>
<p data-p-id="8bf631de4b29374b7f153ae5694d131a"><span style="font-size: 14pt">கோவிலிலிருந்து ரூபன் வீட்டில் விளக்கேற்றி முடிக்க, தாமஸ் அங்கிள் மட்டும் தவிர்த்து எல்லோரும் அங்கே கல்யாண சாப்பாட்டு சாப்பிட்டு கிளம்பினார்கள்.</span></p>
<p data-p-id="428fe5ebd8f02ece48961fcfa7dc7aaf"><span style="font-size: 14pt">தாமஸ் அங்கிள் அவரோ ''ஒரு வார்த்தை அப்பவே என்னை பார்த்து தனியா நிலாவை பிடிச்சிருக்கு. கொஞ்சம் அவளோட விளையாடி அப்பறம் கல்யாணம் செய்துக்கறேன் சொல்லி இருந்தா கூட , அப்பவே கல்யாணம் நடந்து இருக்கும் எல்லாம் பகவான் எப்போ எது நடக்கணும் என்று விதி எழுதி முடிச்சு இருக்காரோ நல்லதே நடந்துடுச்சு'' என்றார் அவரும்.</span></p>
<p data-p-id="358fa15da105332a9dac1a8558d97930"><span style="font-size: 14pt">நிலா ரூபன் இருவரும் அவர் பேச ஒருவருக்கொருவர் பார்த்து விழித்தார்கள். இப்படி தான் நடக்கவேண்டும் என்று விதி போல.</span></p>
<p data-p-id="ac0ac196136eb5aacb18a864e210deac"><span style="font-size: 14pt">நேரம் நகர, இரவு, மிக எளிமையாக அலங்கரித்த கட்டிலில் ரூபன் அமர்ந்து இருக்க, நிலா கையில் பாலினை திணித்த பாக்கியமோ, "கல்யாணம் தான் ஒரு வருஷத்துக்கு தள்ளி போட்டுட்டிங்க. ஆனா எனக்கு ஒரு பேரனோ பேத்தியோ மட்டும் தள்ளி போடாம பெற்று கொடுங்க. அதை நாங்க இருவரும் வளர்த்து ஆளாக்க காத்திருக்கோம்"என்றதும் நிலா அமைதியாக தலையை ஆட்டினாள். </span></p>
<p data-p-id="229c900f5975d966d3f26f76a2b70a9c"><span style="font-size: 14pt">''என்னடா இந்த அத்தை இப்படி ரூமுக்கு போறதுக்கு முன்னாடி கேட்கறேன்னு கோபித்து கொள்ளாத. </span></p>
<p data-p-id="0a1b07d4167205ba3153158f5bf572d5"><span style="font-size: 14pt"> உங்க மாமா இறந்த பிறகு அவன் ஒருத்தனை வளர்த்து ஆளாக்கி வளர்க்கறது மட்டும் தான் வாழ்க்கை என்று ஆகிடுச்சு. இவனும் கொஞ்சம் வளர்ந்ததும், எனக்கு இந்த வீட்டில் வேலையும் இல்லை, வாழ்க்கை இல்லை. ரொம்ப சுவாரசியமா லைப் இல்ல. அதான் நீ ஒரு குழந்தை பெற்று கொடு. அது முழுக்க எங்க பொறுப்பில் இருக்க, எங்களுக்கும் அதுல ஒரு நிறைவு வரும்'' என்றதும் அபிராமி நிலா கையினை பற்ற, தாயும் அதே தான் எதிர் பார்க்கின்றார்கள் என புரிந்தது.</span></p>
<p data-p-id="6e57221cd882ba4210192ebd960ed583"><span style="font-size: 14pt">மெல்ல சம்மதமாய் தலை மட்டும் அசைத்து கொண்டாள்.</span></p>
<p data-p-id="d928bd9d4085f45c00cbaa52545dcaca"><span style="font-size: 14pt">ரூபனின் அறைக்குள் அடியெடுத்து செல்ல, அங்கே ரூபன் கைகளை கட்டி கொண்டு நின்றான்.</span></p>
<p data-p-id="319bdaad83f3d348bb3785bbbbcaa851"><span style="font-size: 14pt">"அன்னிக்கு இனி என் அறைக்குள் வரணும்னா, விரைவா மனைவி ஸ்தானம் கொடுப்பேன்னு சொன்னேன் கொடுத்துட்டேன்" என அவளிடம் சொல்ல, அவளோ காலில் தொட உணர்வு பெற்றவன்.</span></p>
<p data-p-id="f1c1ebb9a412456c920a4387858526ae"><span style="font-size: 14pt">''ஏய் இப்போ என்ன செய்த?'' என்றான்.</span></p>
<p data-p-id="f7194d6ab8ac000360bf255c3ba23178"><span style="font-size: 14pt">''அத்தை அம்மா இப்படி தான் காலில் விழ சொன்னாங்க விழுந்தேன்'' என பாலை நீட்ட வாங்கி பருகியபடி, பதிலுக்கு நீட்ட மறுக்காமல் மொத்த பாலையும் குடித்து முடித்தாள்.</span></p>
<p data-p-id="f0f15275b1d5323222982ff8807201e6"><span style="font-size: 14pt">''வேற எதுவும் சொல்லலை'' என ரூபன் சிரிக்க,</span></p>
<p data-p-id="d4875e8ea13da7ebf38049687e811f49"><span style="font-size: 14pt">''ஹ்ம்ம சொன்னாங்க. நீ தூங்கும் போது, ரூபன் கை காலை உன் மேல போட்டா, அவன் கன் வச்சி, அவனை சூட் செய்திட சொன்னாங்க'' என்றாள்.</span></p>
<p data-p-id="d2df5fe55100d710b3626fbfee249e72"><span style="font-size: 14pt">''என்ன மேடம் ரொம்ப திமிரா பேசற மாதிரி இருக்கே'' என்றான்.</span></p>
<p data-p-id="035b8e59829496152bdef6c4985a0caf"><span style="font-size: 14pt">''வெளியே பேசியதை ஓட்டு கேட்டுட்டு தானே வந்து, சமத்தா உட்கார்ந்து இருந்திங்க... அப்பறம் என்கிட்ட வேற கேட்கறிங்க'' என்றாள் நிலா. </span></p>
<p data-p-id="8a0d1f8ffcfba6bdc771c6c8eac0c8bf"><span style="font-size: 14pt">''உனக்கு எப்படி தெரியும்''</span></p>
<p data-p-id="f793391db341db4d90a5cf4e27d4cd9c"><span style="font-size: 14pt">''உங்க நிழல் தான் கதவு பக்கத்திலே இருந்தது''</span></p>
<p data-p-id="b58d034a4ebf68e346101e4837b64799"><span style="font-size: 14pt">''அடிப்பாவி ஹ்ம்ம எல்லாம் நோட் பண்ணிட்டு தான் வந்து இடக்கா பேசற.''</span></p>
<p data-p-id="8523d35106f74f6dea8cc1f9f1d45cff"><span style="font-size: 14pt">''பின்ன உங்களை மாதிரி பிராட் வேலை பார்க்குறவங்களை எல்லாம் அப்படி தான் டீல் பண்ணனும்''</span></p>
<p data-p-id="bdbe4f992935fe7772ca367e084d820a"><span style="font-size: 14pt">''நான் என்னடி பிராடு தானம் செய்தேன்...''</span></p>
<p data-p-id="0eb3f5d1cebfc7824b66d970dd6b918e"><span style="font-size: 14pt">''என்ன செய்யலை... யாராவது கல்யாணம் பத்திரிகை அடிச்சு முடிக்கிற வரை கல்யாண பொண்ணுக்கு தெரியாம இருக்குமா? அதுவும் ஒரு வாரத்தில, எனக்கு தெரியாம திடுதிப்னு நீட்டனிங்க.'' என்றதும்,</span><br /><span style="font-size: 14pt">''ஆமா ஐ லவ் யூனு ஒரு வார்த்தை சொன்னியா.? உனக்கு ஒரு வாரம் டைம் கொடுத்தேன் ஆனா மேடம் அதுக்கு ரெஸ்பான்ஸே பண்ற மாதிரி தெரிலை அதான் உனக்கு எல்லாம் அடிதடி ரூட் தான் பெஸ்ட்னு தோணுச்சு. அப்பறம் தான் நியூஸ்ல இருந்த என் போட்டோவை காட்டி காதலை ஒத்துக்கிட்ட'' என்றான். </span></p>
<p data-p-id="f394221fe3d64430b3bbc0138320aaa9"><span style="font-size: 14pt">''ஆமா.. என் மனசில் உங்களுக்கான இடம் இல்லாமல் போனா என்ன செய்து இருப்பிங்க?'' என்று கேட்டாள். </span></p>
<p data-p-id="64acffd5ae72c4871ab24373f53709c7"><span style="font-size: 14pt">''அதான் உன் மனசில் நான் இருக்கேனு நல்லா தெரியுமே. அந்த தைரியம் தான்.'' என்றதும் நிலா புன்னகைத்தாள். </span></p>
<p data-p-id="5aa5d8b8711e545b217754df94010587"><span style="font-size: 14pt"> அதனை கண்டவன் ''ஏய் பிராடு... கேடி... எதுக்குடி இப்படி எல்லாம் பேசி நேரத்தை ஓட்டலாம் என்று நினைக்கற... என்னை முதல் முறை பார்த்து திருடன்னு சொன்னல, இப்ப அதுக்கு தண்டனை அனுபவி'' என அவன் அவளை பிடிக்க, அன்று இதே அறையில் ஓடியது போல நிலா ஓட, ரூபன் துரத்தி பிடித்தான்.</span></p>
<p data-p-id="7058bd8222259453cd5e6a40502340b2"><span style="font-size: 14pt">அங்கே பேச்சுக்கு தடை செய்து, ரூபன் கள்வனாக அவளை களவான்டான். நிலாவும் விரும்பியே அந்த கள்வனிடம் தன்னை தொலைத்தாள்.  </span></p>
<p data-p-id="8561973b31311d7b60e1d122f42e3300"><span style="font-size: 14pt"> நான்கு மாதம் கழிய, நிலா தலை சுற்றல் வாந்தியெடுக்க பாக்கியம், அபிராமி அதனை கண்டு மகிழ்ச்சியில் மிதக்க செய்தார்கள். </span></p>
<p data-p-id="651a88f36485044804d5bb65b906538d"><span style="font-size: 14pt">நிலா சாப்பிட ஏதேனும் செய்து அவளுக்கு ருசி பார்க்க, நேரம் கடக்க அபிராமியும் மகளோடு வந்து, தங்கி, கவனிக்க ஆரம்பித்தார்கள்.</span></p>
<p data-p-id="04172a9303d61fe705d96ab8478d16b8"><span style="font-size: 14pt">ஒரு அன்னைக்கு இரு அன்னைகள் தாங்க, தங்கநிலா சத்தான உணவிலும் தாய்மையிலும் பூரிப்பில் நாட்கள் செல்ல, ரூபனோ மகன் பிறந்தால் இலக்கியன் என்றும், பெண் குழந்தை பிறந்தால் இளந்தளிர் என்று வைக்க முடிவெடுத்தான்.  </span></p>
<p data-p-id="cb24a4f4d65bdcb3db0247467c3ffa44"><span style="font-size: 14pt">ரூபன் கள்வனாக, நிலா கண்ணில் தோன்றி, அவனது காதலியாக நிலா மாறி ஒரு இளந்தளிருக்கு தாயாக மாறினாள்.</span></p>
<p data-p-id="1e672170c8a41346db2bd5c383a0d5b5"><span style="font-size: 14pt">&#x1f499;சுபம்&#x1f499;</span><br /><br /><span style="font-size: 14pt">-பிரவீணா தங்கராஜ்</span></p>
<p data-p-id="1e672170c8a41346db2bd5c383a0d5b5"><span style="font-size: 14pt">தங்கள் விமர்சனத்தை நாவல் discussion பகுதியில் முன் வைக்கலாம். </span></p>
<p data-p-id="1e672170c8a41346db2bd5c383a0d5b5"><span style="font-size: 14pt">https://onlinetamilnovels.com/community/novel-discussion-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a9-%e0%ae%aa%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf/</span></p>]]></content:encoded>
						                            <category domain="https://onlinetamilnovels.com/community/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-praveena-thangaraj/">முதலாம் சந்திப்பில்...-Praveena Thangaraj</category>                        <dc:creator>Praveena Thangaraj</dc:creator>
                        <guid isPermaLink="true">https://onlinetamilnovels.com/community/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-praveena-thangaraj/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-15-%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f/</guid>
                    </item>
				                    <item>
                        <title>முதலாம் சந்திப்பில்-14</title>
                        <link>https://onlinetamilnovels.com/community/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-praveena-thangaraj/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-14/</link>
                        <pubDate>Tue, 23 Jun 2026 14:03:30 +0000</pubDate>
                        <description><![CDATA[அத்தியாயம்-14
அடுத்த நாள் அமைதியாக கிளம்பி மருத்துவமனை சென்றாள் நிலா. 
 மாலினியிடம் ரூபனை பற்றி கூற, அவளோ உள்ளுக்குள் &#039;உனக்கு ரூபன் செய்யறது தான் சரி. இல்லை சேவை அது இது என்று பினாத்தி கொண...]]></description>
                        <content:encoded><![CDATA[<p data-p-id="4c5bdadbd3dee8b99edd5bcf37e57ac7"><span style="font-size: 14pt"><b>அத்தியாயம்-14</b></span></p>
<p data-p-id="0c203c32d46b441c1dee0dcd1efd1d1b"><span style="font-size: 14pt">அடுத்த நாள் அமைதியாக கிளம்பி மருத்துவமனை சென்றாள் நிலா. </span></p>
<p data-p-id="f2929a1c6c56ada3ac032bc4806aa559"><span style="font-size: 14pt"> மாலினியிடம் ரூபனை பற்றி கூற, அவளோ உள்ளுக்குள் 'உனக்கு ரூபன் செய்யறது தான் சரி. இல்லை சேவை அது இது என்று பினாத்தி கொண்டு இருந்தவ. ஐயோ அவருக்கு ஒரு சபாஷ் சொல்லலாம்.'' என நினைத்தாள். </span></p>
<p data-p-id="1335ec6b0b1a193ba61f225a8402f92f"><span style="font-size: 14pt"> சாப்பாட்டில் கோலம் போட்டுக்கொண்டு இருந்த நிலா ஒரு வழியாக உணவு உண்டு முடித்து கை அலம்பி வர எதிரில் வேணி, சுந்தரி வந்தனர்.  </span></p>
<p data-p-id="fba16c8666d70c27877d8012b834dfea"><span style="font-size: 14pt">''என்ன நிலா கல்யாண பத்திரிகை எல்லாம் ரெடி. ஆனா ஒரு வார்த்தை சொல்லாமல் இருக்க.. எனிவே கங்கிராட்ஸ்...'' என வாழ்த்தினார்கள். </span></p>
<p data-p-id="0a90918ca3f83df4ce8b356f0f39d9bb"><span style="font-size: 14pt">''என்ன சொல்லறிங்க?'' என்று கேட்டவளிடம் வேணி புரியாமல் பத்திரிகை நீட்ட, அதனை வாங்கி பார்த்த நிலாவின் கண்கள் அதிர்ச்சியில் தெறித்தது.  அதனை வாங்கிய மாலினி பத்திரிகை பார்த்து சிரிக்க, நிலா சுயநிலை அடைந்து திரும்பினாள்.</span></p>
<p data-p-id="792826482d74b364dcdcfa7b6cb36f78"><span style="font-size: 14pt">''இதை யார் கொடுத்தா?'' என நிலா கேட்க</span><br /><span style="font-size: 14pt">''வேற யாரு உன் ஆளு தான்'' என்று சொல்ல ரூபன் அசால்டாக வந்து கொண்டிருந்தான்.</span></p>
<p data-p-id="2b0b4f1f4dae7218c591405fda0cc481"><span style="font-size: 14pt">''இவனை.... யாரை கேட்டு இப்படி செய்யறான்... ஓவரா அட்வாண்டேஜ் எடுக்காறான் மாலினி'' என சொல்லியவள் அவன் அருகே வந்ததும் பேசாமல் இருந்தாள். </span></p>
<p data-p-id="aed3a68f347fd217d39a9f16e1e4860d"><span style="font-size: 14pt">''ஹாய் மா..லி..னி தானே... இந்தாங்க" என்று நீட்ட "என்ன நீலு சேர்ந்து கொடு...'' என்றதும் நிலா முறைத்து பேச வாய் எடுக்க,</span><br /><span style="font-size: 14pt">''மாலினி கல்யாணதுக்கு வந்துடுங்க... அப்பறம் அடிக்கடி உங்க ப்ரெண்ட் இப்படி முறைக்க வேண்டாம் சொல்லுங்க. அது நல்லதுக்கு இல்லை'' என கூறினான்.  </span></p>
<p data-p-id="3abedc42f5ab2ea8aa813318c31321f0"><span style="font-size: 14pt"> நிலா அவனிடம் பேச தயாராக டாக்டர் சித்திக் வர கண்டு அமைதியாக நின்றாள்.</span><br /><span style="font-size: 14pt">சித்திக் அவரின் அறைக்கு செல்ல, ''ஒய்.... சித்திக் டாக்டருக்கு சேர்ந்து கொடுக்க வா'' என கையை இழுத்து கொண்டு போனான். </span></p>
<p data-p-id="8fb225809eb9312c343257ddc2e0c9ad"><span style="font-size: 14pt">''ஹாய் டாக்டர்''</span><br /><span style="font-size: 14pt">''என்ன ரூபன் இப்ப எப்படி இருக்கு கை மற்றும் காதல்?'' என்று கேட்க நிலா தான் நெளிந்தாள். ஓரளவு நிலாவின் காதல் இவரும் அறிந்து இருந்தார். </span></p>
<p data-p-id="564779879977d5ba586abf47bdd5457b"><span style="font-size: 14pt">''கை சரியாகிடுச்சு டாக்டர். காதல் இதோ இதுல முடியும்'' என்று நீட்டினான். நிலாவை இடிக்க அவளுக்கு தானாக பாத்திரிகையில் கை வைத்தாள். </span></p>
<p data-p-id="bf85cb53ee13871892d7926ac84573f2"><span style="font-size: 14pt">''வாவ் மேரேஜ் ஆஹ் நிலா. சொல்லவே இல்லை...'' என வாங்கி வாழ்த்த,</span><br /><span style="font-size: 14pt">''இல்லை டாக்டர் இது அவளுக்கே தெரியாமல் சர்பிரைஸே தான் அதான் முழிக்கிறா'' என்றான் ரூபன். </span><br /><span style="font-size: 14pt">''எனி வே கங்க்ராட்ஸ்... மை பாய்...'' என்று வாழ்த்த கொஞ்சம் போல பேசிவிட்டு நகர்ந்தார்கள்.</span></p>
<p data-p-id="b86baa35fc5628345fa70b246fe8b3da"><span style="font-size: 14pt">வெளியே வந்ததும் "எதுக்கு இப்படி செய்திங்க?'' என்று வெடித்தாள். </span><br /><span style="font-size: 14pt">''என்னது.. கேள்வி எல்லாம் கேட்கற. ணீ பேசவே பேசாத... பத்திரிக்கை கொடுக்கும் பொழுது அமைதியா நாகரீகம் கருதி வாயை முடினியா.. இப்படியே தாலி கட்டும் வரை சமத்தா இருக்கணும்'' என்றான் காட்டமாக. </span></p>
<p data-p-id="e76f3585bffa829c13c191636bae95c8"><span style="font-size: 14pt">  எதிரில் மாலினி வர அவளிடம் ''கூடவே இருந்து கொஞ்சம் நல்ல புத்தி சொல்லுங்க ரொம்ப பேசினா கட்டாய தாலி தான் அவளுக்கு...'' என்று சொல்லிவிட்டு சிட்டாய் பறந்தான். இங்கு நிலா எரிமலயாக நின்றாள்.</span></p>
<p data-p-id="4fdb1caa3b1dba95aebaf3236851dcd2"><span style="font-size: 14pt">''இவனை எல்லாம் பெற்றார்களா இல்லை செய்தார்களா? நல்லா நெடு நெடுனு வளர்ந்து பேச்சை பாரு...'' என நிலா திட்டி கொண்டு இருக்க மாலினி சிரித்தாள்.</span><br /><span style="font-size: 14pt">''எதுக்கு டி சிரிக்கிற...'' என்று நிலா கேட்க கண்களால் 'திரும்பி பார்' என்றதும், தன் பின்னால் திரும்பி பார்க்க, அங்கே ரூபன் கைகளை இடுப்பில் வைத்து ''நல்லா வக்கணையா பேசற... சொல்ல மறந்துவிட்டேன்.. என் பிரெண்ட் சிவாவோட மனைவிக்கு நாளை மறுநாள் வளைக்காப்பு. ஃபங்சனுக்கு என்னை இன்வைட் பண்ணி இருக்கான் நாளை மறுநாள் நீ என்னோட வர்ற.'' என்றான் கட்டளையாக. </span></p>
<p data-p-id="e623464284139c37b45373ee4f7ff153"><span style="font-size: 14pt">''ஹலோ நான் எங்கயும் வர மாட்டேன்'' என அடம் பிடித்தாள் நிலா. </span></p>
<p data-p-id="2d1b7ae367130f5254e75543aed6715f"><span style="font-size: 14pt">''உன்னை இங்க யாரும் வர்றியா இல்லையா கேட்கலை... வர்ற.. என்று கட்டளை கொடுக்கறேன் புரியுதா?'' என்றான் மிரட்டலாய்.  </span></p>
<p data-p-id="1103efa2b7b099dd49fb2bb001417fb0"><span style="font-size: 14pt"> நிலா அமைதியாக நின்று முறைத்து கொண்டு இருக்க அதனை அலட்சியமாக கடந்து சென்றான்.</span></p>
<p data-p-id="e92e6e996be13b50d7065642ef22afe6"><span style="font-size: 14pt">வெளியே வந்து பைக் ஸ்டார்ட் செய்த பின்பு தான் 'உப்ஸ்... இவளிடம் இப்படி கடினமா நடிக்கறதுக்குள் போதும் போதும் ஆகிடுச்சு.. பதிலுக்கு முடியாது அது இது என்று என்னை கிழிச்சு போட்டுடுவாளோனு பயந்தேன்.</span></p>
<p data-p-id="2d6f6ac5caaa0edeeb0d64306bf780a3"><span style="font-size: 14pt">  குண்டு அடிபட்ட போது கூட இப்படி பயந்து சாகலை டி. உன்கிட்ட கல்யானம் செய்ய இப்படி பேசிட்டு, நீ என்ன ரியாக்சன் கொடுப்பனு தான் பயமா இருக்கு. கடைசியில் என்னை மனைவிக்கு பயப்பட வச்சிட்ட' என கிளம்பினான்.</span></p>
<p data-p-id="6172e6c693b1c91506d18f2e31d5119d"><span style="font-size: 14pt">''பாரு மாலினி அவனா பத்திரிகை கொடுக்கறான். யாரோ ஒருத்தரோட  ஃபங்சனுக்கு வானு சொல்றான். நேற்றில் இருந்து ஒரு மார்க்கமா இருக்கான். அம்மா என்னடா என்றால் அவங்களுக்கு நினைவு வந்தது ரூபனுக்கு தெரியாது. அவரும் உன்னை போல தான் தெரிந்து கொண்டார் அதுவும் நான் வீட்டை விட்டு இங்க வந்ததால் தான் தெரிந்தது...சொல்றங்க....'' என வருந்தினாள். </span></p>
<p data-p-id="c50c95972e60300ff34c209a98b4d7c1"><span style="font-size: 14pt">''கொஞ்சம் யோசிச்சு பாரு இப்படி அடாவடியா கல்யாண பத்திரிகை எல்லாம் அடிச்சு, உன் கையால கொடுக்க வைக்கிறவர், எதுக்கு ஒரே அறையில் உன்னை சந்திக்க பிளான் போடணும்? இது உங்க அம்மா அத்தை பிளான்னா தான் இருக்கும். அதுக்கு போய் ரூபனை நீ குற்றம் சுமத்தற அதான் அவர் அவரோட ஸ்டைல்ல புரியற மாதிரி சொல்றார்.'' என மாலினி ரூபனுக்கு ஆதரவு கரம் நீட்டி பேசினாள். </span></p>
<p data-p-id="5d8714836611de514f5b67d1924782dc"><span style="font-size: 14pt">''அப்போ ரூபன் பண்றது தப்பில்லையா? நான் இந்த கல்யாணம் செய்துக்கனுமா?'' என்று கேள்வி கேட்டாள். </span></p>
<p data-p-id="cad279a80722dbe7abcd26f85436b089"><span style="font-size: 14pt">''ஹ்ம் அது எனக்கு தெரியாதுமா... குறிப்பிட்ட தேதியில் கல்யாணம் நடக்கும் அது மட்டும் புரியுது'' என நமுட்டு புன்னகையோடு நகர்ந்தாள்.</span></p>
<p data-p-id="a9588d5ba3889dc8071523a913ee7ae9"><span style="font-size: 14pt">அடுத்த நாள் தொல்லை செய்யாமல் இருந்தான் அதற்கு அடுத்த நாள் ஞாயிறு வர வீட்டு வாசலில் வந்து நின்றான். நிலாவுக்கு தான் லேசாய் உதறல் எடுத்தது. </span></p>
<p data-p-id="077800544a29f1b703de96d0492c6f87"><span style="font-size: 14pt">வரலை என்று சொன்னா என்ன செய்வான்? என யோசித்து பயந்து அறையில் பதுங்கியிருக்க, அவனோ அபிராமியின் அனுமதியுடன் அறைக்குள் வந்து கதவின் மேல் கையை வைத்து, லூக்கை விட முட்டி கட்டி கொண்டு திரும்பிக் கொண்டாள். </span></p>
<p data-p-id="e96cc55b965cdd5206d045e4cf7227b5"><span style="font-size: 14pt">''அப்போ வர மாட்ட?'' என்று நக்கலாய் கேட்க, ஆமோதிப்பாய் நிலா மௌனம் காத்தாள். </span></p>
<p data-p-id="aa2587da760a94b47d4243dec6962c50"><span style="font-size: 14pt">ரூபனோ கதவை தாழிட்டு இருந்தான். நேராக அவளின் செல்ஃப் கப்போர்ட் திறக்க அதில் மேலேயே மயில் கலர் பச்சை சேலை இருக்க கண்டவன் மனதில் 'ஆஹா மேடம் டிரஸ் எல்லாம் செலக்ட் பண்ணிட்டு தான் உட்கார்ந்து இருக்காளா?' என்றெண்ணியவன், அவளை பார்க்க, அவளோ என்ன சத்தமே இல்லை?' என்று திரும்ப கதவு மூடியிருக்க போயிட்டானா என கவலையோடு மாறினாள். </span></p>
<p data-p-id="b426fb6b4fd73036f5afdcc93c6b8bbd"><span style="font-size: 14pt">''போகலாம் செய்யலை இங்க தான் இருக்கேன்." என்று அவள் பின்னால் குரல் கொடுக்க,</span><br /><span style="font-size: 14pt">''இப்ப எதுக்கு கதவு எல்லாம் அடைச்சு இருக்கிங்க... வெ.. வெளியே போங்க.'' என்று தடுமாறினாள். </span></p>
<p data-p-id="91ff7e6dc2bce4eb1f71ffc84c82ea19"><span style="font-size: 14pt">''பின்ன இங்கயே இருக்க முடியுமா? நீ டிரஸ் சேஞ்ச் பண்ணனுமே. பட் உனக்கு அப்ஜெக்ஷன் இல்லைனா இருக்கேன்'' என குறும்பாய் சிரித்தான். </span></p>
<p data-p-id="1c642f7c68839b2d5e5a552b8385f008"><span style="font-size: 14pt">''நான் எங்கயும் வரலை'' என்று நிலா அவன் சிரிப்பால் கோபம் கொண்டாள். </span></p>
<p data-p-id="c7398c7fefb32876f4967c0fba0a8868"><span style="font-size: 14pt">''வரலை என்றுதான் இந்த சேலை எடுத்து வச்சியிருக்கயா நிலா? நமக்குள் இந்த ஈகோ வேண்டாம்டி. முதல் முறையும் இப்படி தான் எனக்கு நடந்த நிகழ்வில் நீ கேலி செய்து சிரிச்ச'' என்று பழைய நினைவை கிளறினான். </span></p>
<p data-p-id="f4ce2944f9da7bbc2f05caa5f8a13848"><span style="font-size: 14pt">கைகடிக்காரத்தை பார்த்து ''11க்கு ஃபங்சன் நிலா. மணி பத்து ஆகுது'' என சலித்து கொண்டு நின்றான். </span></p>
<p data-p-id="b0a250b6f6136159c904a4f46ed22721"><span style="font-size: 14pt">நிலாவுக்கே பாவமாக போகவும், உடை மாற்றுவதற்காக ''வெளியே போங்க...'' என்றாள். </span><br /><span style="font-size: 14pt">அவனுக்கோ தன்னை ஏற்காமல் வெளியே செல்ல கூறுவதாக நினைத்து, ''என்னடி நானே உனக்கு சேலை கட்டி இழுத்துட்டு போகணும் என்று ஆசையா? பொறுமையா தானே சொல்லறேன். என் ப்ரெண்ட் சிவா வீட்டுக்கு தானே..'' என்று கோவத்தில் பேசி கொண்டே போகவும், </span><br /><span style="font-size: 14pt">''ஐயோ அதுக்கு தான் வெளியே போக சொல்றேன்... சேலை கட்ட வேண்டாம்'' என்றதும்வெளியேறினான்.</span></p>
<p data-p-id="ad9323a54989ca9309ac1d9ae6b8bb2c"><span style="font-size: 14pt">''இவன் இஷ்டத்துக்கு ஆடறான்... இந்த அம்மா வேற நல்லா வேடிக்கை பார்த்துகிட்டு வெளிய இருக்காங்க...'' என அன்னையை திட்டியபடி சேலை மாற்றினாள்.</span></p>
<p data-p-id="15a55b9407bf584bd9962a112d794f62"><span style="font-size: 14pt">மயில் பச்சை சேலையில் கிளம்பி தயாராக, கழுத்து ஒட்டி ஒரு நெக்லஸ் மட்டுமே அணிந்து, சின்ன கம்மலை கழட்டி வைத்து பெரிதாக ஒன்றை அணிந்தாள். </span></p>
<p data-p-id="40495a49a2bc8e4d093628e5698ef430"><span style="font-size: 14pt">  குட்டி பொட்டு வைத்து உதட்டு சாயம் மட்டும், அதுவும் பட்டும் படாமல் உதட்டில் தீட்டி வெளியே வர, மாடியில் இருந்து அபிராமி போணும் கையுமாக வந்திருந்தார்கள்.</span></p>
<p data-p-id="7b66d78d5eeb0685605ca6f7b6374eda"><span style="font-size: 14pt">நிலா மனதில் 'இந்த அம்மா அத்தை கூட சேர்ந்து இங்க இருந்து ரன்னிக் கமெண்ட்ரி கொடுக்குதே இருகட்டும் வந்து பார்த்துக்கலாம்..' என நிற்க ரூபன் தான் உட்கார்ந்த இடத்திலே, இருக்கும் இடம் மறந்து நிலாவை பார்த்துரசித்தான். </span></p>
<p data-p-id="3556189792e4b3a01b0c9d708820a42d"><span style="font-size: 14pt">''மாப்பிள்ளை அவ ரெடியாகிட்டா 11 மணிக்கு தானே கிளம்புங்க'' என்று அபிராமி உலுக்கவும், வழிந்து கொண்டிருந்த நிலை கண்டு கிளம்பினான்.</span><br /><span style="font-size: 14pt">பைக்கில் அவளை ஏற்றி கொண்டு கண்ணாடியில் அவளை பார்த்துக்கொண்டே வண்டியை செலுத்தினான்.</span></p>
<p data-p-id="7f9294210c78d3697c7f71d342421458"><span style="font-size: 14pt">''கொஞ்சம் ரோட்டை பார்த்து வண்டியை ஒட்டுங்க'' என்றாள் நிலா. </span><br /><span style="font-size: 14pt">''என்னைக்கும் இப்படி இல்லாமல் இன்னிக்கு வேற மாதிரி இருக்க அதான்.. பார்த்துக்கிட்டே இருக்கேன்.'' என்றான். </span><br /><span style="font-size: 14pt">''நான் நர்ஸ் இப்படி டெய்லி மேக்அப் பண்ணிட்டு போனா நல்லாவா இருக்கும்.. பேஷண்ட் ரத்ததில் இருப்பான்.. உயிருக்கு போராடிகிட்டு... இருக்கறவங்க, கஷ்டதுல இருக்கும் பொழுது, நான் இப்படி போனா அவங்க என்ன நினைப்பாங்க..'' என்றதும் அவனுக்கு அது புரிந்தது.</span></p>
<p data-p-id="d63d78e740630de5d73f9708223a39c4"><span style="font-size: 14pt">''நல்லா தான் மற்றவங்களை பற்றி யோசிக்கிற... கொஞ்சம் என்னை பற்றியும் யோசி '' என சொல்லியவன் கண்ணாடியில் பார்க்க அங்கே நிலா சத்தமில்லாமல் சிரிப்பதை கண்டவன் மனம் நிம்மதியடைய அதே நேரம் சிவா-கிருத்திகா வீடு வர நிறுத்தினான்.</span></p>
<p data-p-id="0e810f9a96daf1e2590c967ce4092a03"><span style="font-size: 14pt">''டேய் இன்னிக்கு தான் டா யூனிபோர்ம் இல்லாமல் உன்னை பார்க்கறேன் என சிவா ரூபனை கிண்டலடிக்க ''வாங்க'' என நிலாவையும்  அழைத்தான்.</span><br /><br /><span style="font-size: 14pt">சிவா தான் ''என்னடா கல்யாண பத்திரிகை ரிசல்ட் பாசிட்டிவ் போல'' என்றான். </span><br /><span style="font-size: 14pt">''எப்படி சரியா சொல்ற.?''</span><br /><span style="font-size: 14pt">''உன் முகம் தான் பிரகாசமா இருக்கே அண்ட் அவங்களும் இங்க தெரியாத ஃபங்சன் வந்து இருக்க மாட்டாங்க... சோ லவ் இருக்கு டா சரி நீ நிலாவுக்கு கம்பெனி கொடு வந்துடறேன்'' என கிருத்திகவை காண நகர்ந்தான்.</span><br /><span style="font-size: 14pt">கொஞ்ச நேரத்தில் வளைக்காப்பு ஆரம்பமானது. </span></p>
<p data-p-id="51c198c0c8de722d87c2e98ad6fbc137"><span style="font-size: 14pt">ரூபன் நிலா கொஞ்சம் காலி இருக்கைக்கு தள்ளி தனியாக அமர்ந்திருந்தார்கள். </span></p>
<p data-p-id="b669ef7e54f3f157d775d026452de85e"><span style="font-size: 14pt">"நீயும் நானும் தாமஸ் அங்கிளிடம் நமக்குள்ள கல்யாணம் வேண்டாம் பிடிக்கலை என்றதும் அவர் உன் போட்டோவை எடுத்து சிவாவிடம் தந்துட்டார். அவனை சந்திச்சப்ப 'வீட்ல பொண்ணு பார்த்து இருக்காங்கடா. தாமஸ் அங்கிளுக்கு தெரிந்த பொண்ணுனு உன் போட்டோவை கையில வச்சி எனக்கு காட்டினான்." என்றதும் நிலா அதிர்வாய் ரூபனை கண்டாள். </span></p>
<p data-p-id="1c9140c3e3fe5b64481e1ff64ebc77c7"><span style="font-size: 14pt">ரூபனோ சிவா-கிருத்திகாவை பார்த்து, "எனக்கு உன்னை முதல் முறையே பிடிச்சிடுச்சு நிலா. அந்த வானத்து வெளிச்சத்தில் நிலவொளியில், உன் முகம் என் மனசுல ஆழமா பதிந்து போச்சு. நீ என்னை நியூஸ் பேப்பர்ல வந்த செய்தியால சிரிக்கவும் தான் பிடிக்கலனு சொன்னேன். ஆனா என் பிரெண்ட் மனைவியாக போறனு தப்பா நினைச்சு கோழையா மும்பை ஓடினேன். காட் கிரேஸ் அவனுக்கு தாமஸ் அங்கிள் உனக்கு என்னை பார்த்ததை சொல்லவும் ரிஜக்ட் பனண்ணிருக்கான். </span></p>
<p data-p-id="7ed969b85423593bfb0269471326e18d"><span style="font-size: 14pt">மும்பையில இருந்து ரிட்டர்ன் வந்ததும் என் வொய்ஃப் உன்னை பிக்அப் பண்ணிட்டு உன்னோட பேசணும்னு சொல்லி புதிர் போட்டான். மனசுக்குள் உன்னை சிவா மனைவி என்று நினைச்சு தான் ஏர்போர்ட்ல பார்த்தேன். பட் கிருத்திகா வந்து சிலை கடத்தல் பற்றி பேசினாங்க. எனக்கு அப்ப எல்லாம் அப்பாடா நிலா ஸ்டில் மேரேஜ் ஆகாம எனக்காக இருக்கானு சந்தோஷப்பட்டேன்." என்றதும், நிலா கதை கேட்பதில் மௌனமடைந்தாள். </span></p>
<p data-p-id="71a53ae08a4afe40b912c3ec4355879d"><span style="font-size: 14pt">"சிலை கடத்தல் விஷயமா குண்டு பாய்ந்து ஹாஸ்பிடலில் வந்து உன்னை சந்திச்சப்ப லவ் சொல்லலாம்னு பார்த்தேன். உன் அப்பா அம்மா தவறியதா தாமஸ் அங்கிள் சொன்னார். உன்னிடம் என் காதலை சொல்லி உனக்கு ஆறுதலா இருக்க நினைச்சேன். தேங்க் காட் அத்தை உயிரோட இருக்காங்க. பட் பிராமிஸ்ஸா அத்தைக்கு நினைவு வந்தது எனக்கு தெரியாது. என் ரூம்ல உன்னை சங்கடத்துல நான் தள்ளலை." என்றான்.     </span></p>
<p data-p-id="717de52ae1cf75850bfcb2f46f366675"><span style="font-size: 14pt">நிலா எல்லாவற்றையும் கேட்டு அமைதியாக கிருத்திகாவை கண்டாள். ஃபங்சன் வந்துவிட்டு உணர்வை கட்டுக்குள் வைக்க வேண்டுமே!</span></p>
<p data-p-id="eb7aa154a1c173b38c57c0d223bc3321"><span style="font-size: 14pt">அவளது பார்வை கிருத்திகா சிவாவை காண ''ஹ்ம்... நாம எப்ப ஃபேமிலி ஆகறது'' என்றதும் தலை கவிழ்ந்தாள்</span></p>
<p data-p-id="c344cfc50c0c99201c5fb05ca30f323d"><span style="font-size: 14pt">நண்பன் தன்னையே காணவும் சிவா ரூபன் பக்கம் வந்தான். என்னடா ரொமான்ஸ்ஸா?'' என்றான். </span></p>
<p data-p-id="7ce4d7a4c470ae404ff72411ccdd920e"><span style="font-size: 14pt">''விளையாடாதே சிவா. இவளே இன்னிக்கு தான் என்கூட வந்திருக்கா... ஆனா லவ் பற்றி கேட்டா நோ ரெஸ்பான்ஸ்‌.'' என்றான் ரூபன். </span></p>
<p data-p-id="dfee1a2eea9308f3afa09066550773c2"><span style="font-size: 14pt">''என்னம்மா... ஓகே சொன்னா தான் என்னவாம்? அவன் ஸ்டேஷன் ஹாஸ்பிடல்னு உனக்காக நடையோ நடை நடக்கறான்..'' என்றான் சிவா. </span></p>
<p data-p-id="5d22f9f2c2e5937ecf624d32d54bb799"><span style="font-size: 14pt">''ஐயோ அண்ணா அதெல்லாம் ஓகே சொல்லாமல் தான் ஒரு வாரத்தில் கல்யாணம் என்று ஆடறாரா?''</span></p>
<p data-p-id="787ce5402cd9e61838847b5e864cc7dc"><span style="font-size: 14pt">''சிவா அவ வாயலா இன்னும் அக்சப்ட் பண்ணலைடா...'' என ஆரம்பிக்க</span><br /><span style="font-size: 14pt">''அடேய் உங்க பிரச்சனையை நீங்க பேசி முடிவெடுங்க. இப்ப போட்டோ எடுத்துடலாம்" என புகைப்படம் எடுக்க அழைத்து சென்றான் சிவா. </span></p>
<p data-p-id="edb106d50b027ac119b1df7e5f521e98"><span style="font-size: 14pt">கிருத்திகா கூட புகைப்படம் எல்லாம் எடுத்து நட்பு பாராட்டி கொண்டு உணவு உண்ண பந்திக்கு சென்றார்கள். </span></p>
<p data-p-id="81e14a59e66a20142ad0c9ea4b769c8f"><span style="font-size: 14pt"> ''ஏய்.... லவ் பண்றதானாடி அதை நீயா சொல்ல என்னவாம்'' என்றான்.  </span></p>
<p data-p-id="aa860d7edaa8095d19d8b7391177161f"><span style="font-size: 14pt">அவளும் கண்கள் கலங்கி ''லவ் பண்றேன் இப்ப இல்லை... உன்னை போல முதல் முறை பார்த்தப்பவே. ஏன்னா உன் போட்டோவை இப்படி பைத்தியக்காரி மாதிரி கட் செய்து, பர்ஸ்ல வச்சி சுத்திட்டு இருக்க மாட்டேன்" என்று உள் ஜிப்ல இருந்து ATM கொள்ளையை கண்டு பிடித்த அன்று வெளியாகிய பேப்பர் கட்டில், ரூபன் புகைப்படத்தை வைத்திருப்பதை எடுத்து காட்டினாள்.</span></p>
<p data-p-id="aa860d7edaa8095d19d8b7391177161f"><span style="font-size: 14pt">தொடரும் </span></p>
<p data-p-id="aa860d7edaa8095d19d8b7391177161f"><span style="font-size: 14pt">பிரவீணா தங்கராஜ் </span></p>]]></content:encoded>
						                            <category domain="https://onlinetamilnovels.com/community/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-praveena-thangaraj/">முதலாம் சந்திப்பில்...-Praveena Thangaraj</category>                        <dc:creator>Praveena Thangaraj</dc:creator>
                        <guid isPermaLink="true">https://onlinetamilnovels.com/community/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-praveena-thangaraj/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-14/</guid>
                    </item>
				                    <item>
                        <title>முதலாம் சந்திப்பில்-13</title>
                        <link>https://onlinetamilnovels.com/community/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-praveena-thangaraj/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-13/</link>
                        <pubDate>Tue, 23 Jun 2026 14:02:01 +0000</pubDate>
                        <description><![CDATA[அத்தியாயம்-13
அதிகாலையில்ரூபனின் அறைக்கு சென்று தான் குளிக்க சென்றாள் நிலா.  ஆனால் அவளின் பார்வை அவனை தவிர்த்திருந்தது.&#039;செம கோவத்தில் இருக்கா. அடிச்சதுக்கா இந்த கோவம்.. இல்லை அணைச்சதுக்கா? ...]]></description>
                        <content:encoded><![CDATA[<p data-p-id="79c9b95b65ea2d2b2b6cf0195f139a8c"><span style="font-size: 14pt"><b>அத்தியாயம்-13</b></span></p>
<p data-p-id="9e9dd7bfd2cebd6b4ac073d3d60c13af"><span style="font-size: 14pt">அதிகாலையில்ரூபனின் அறைக்கு சென்று தான் குளிக்க சென்றாள் நிலா.  ஆனால் அவளின் பார்வை அவனை தவிர்த்திருந்தது.</span><br /><span style="font-size: 14pt">'செம கோவத்தில் இருக்கா. அடிச்சதுக்கா இந்த கோவம்.. இல்லை அணைச்சதுக்கா? ஐயோ ஒன்றும் புரியலை. இந்த பொண்ணுங்க பற்றி அறிய தனியா ஒரு அகராதி வையுங்க கடவுளே. சரியான ஆங்காரம் பிடிச்சதுங்களா இருக்குங்க.' என்று புலம்பினான். </span></p>
<p data-p-id="10db8f459b57d5afaf406bf8e2953ec5"><span style="font-size: 14pt">நேரம் நகர பணிக்கு கிளம்பினாள் நிலா. அபிராமி ரூபனிடம் சேர்ந்து போக சொல்ல அவளும் அமைதியாக அவனோடவே கிளம்பினாள்.</span><br /><span style="font-size: 14pt">''நீலு.... என் ப்ரபோஸுக்கு என்ன பதில்? எப்போ சொல்லுவ'' என வண்டியை மருத்துவமனை முன்னே நிறுத்தி கேட்டு முடிக்க,  எந்த பதில் இன்றி உள்ளே நுழைந்தாள். இரவு அறைக்கு வருவாள் கேட்டு கொள்வோம் என ரூபனும் சென்றான்.</span></p>
<p data-p-id="28e5beac81577aee505ca824c46ad6df"><span style="font-size: 14pt">மதியம் நேரம் எடுத்து விடுமுறை சொல்லி நிலா கிளம்பினாள். அவசரமாக மருத்துவமனைக்கு அருகில் இருக்கும் ஒரு இடத்தில் வாடகை பணம் எல்லாம் கொடுத்துவிட்டு தாயை காண சென்றாள்.</span></p>
<p data-p-id="534f9d20f654192f957e968b1d3d2f62"><span style="font-size: 14pt">இந்த நேரம் வருவாளென அறியாமல், இரு பெரியவர்கள் பேசியபடி கதை அளந்தனர். </span><br /><span style="font-size: 14pt">''அம்மா கிளம்பு.. போகலாம்'' என்றாள் மொட்டையாக.</span><br /><span style="font-size: 14pt">''எங்கடா ஹாஸ்பிடலுக்கா?'' என்று அபிராமி கேட்க,</span><br /><span style="font-size: 14pt">''ஹாஸ்பிடல் எதுக்கும்மா? உனக்கு தான் நினைவு திரும்பிடுச்சே.. அப்பறம் என்ன? எனக்கு கல்யாணம் ஆகலை என்றதும் நீ தெளிவா புரிந்து கொண்ட.. அதுக்கு மேல என்ன? இனி உடல்நிலை சரியாகிய பின்னரும் இங்க ரூபன் சார், பாக்கியம் ஆன்ட்டி, எல்லோருக்கும் நம்மளால் எதுக்கு கஷ்டம் கிளம்பும்மா'' என்றாள். </span></p>
<p data-p-id="0ea4d2be2b5a40af206978a3761143e2"><span style="font-size: 14pt"> பாக்கியதிடம் ''தேங்க்ஸ் ஆன்ட்டி அம்மா நினைவு தப்பிய சமயம், உங்க மருமகள் மாதிரி, அவங்க பேசியதை எல்லாம் பொருட்படுத்தாது இருந்தீங்க.. சாரும் அவரோட அறையில் இருந்தாலும், அதனை ஏற்று கொண்டார். இனி அந்த கஷ்டம் உங்களுக்கு வேண்டாம் கிளம்பறோம் ஆன்ட்டி'' என்று பேசவிடாமல் செய்தாள்.  </span></p>
<p data-p-id="736a7e33a9679fc3e568652a57a260df"><span style="font-size: 14pt">''இல்லை டா அம்மாவுக்கு இன்னும் க்ளியர் ஆகிடுசச்சு என்று நல்லா தெரியட்டும் அப்பறம் போகலாமே. அதுவும் இல்லாமல் ரூபன் இல்லாத சமயம்..'' என எடுத்துரைத்தார். </span></p>
<p data-p-id="d1db46960440b86382ea09acb4d4cd97"><span style="font-size: 14pt">''அம்மா ரொம்ப தெளிவா தான் ஆன்ட்டி இருக்காங்க... நீங்க அம்மா பேசியதை எல்லாம் கேட்டேன்.. அவங்க தெளிவா தான் உங்க பையன்‌ சொன்னபடி அவர் அறைக்கு அனுப்பி இருக்காங்க. ஆனா இனி வேண்டாம்... ஒரு பொண்ணு மனசில் அவளோட அம்மா உடல்நிலை சரியில்லை என்று எவ்ளோ வருத்ததில் இருப்பா? அவளிடம் போய் அவர்களை வைத்து கல்யாண செய்ய நாடகம் நடத்தியிருக்கார் உங்க பையன். வேண்டாம் ஆன்ட்டி போதும். அவர் என் அம்மாவை கொண்டு வந்து முன்ன நிறுத்தியாதே போதும். இனி நானே பார்த்து கொள்கின்றேன்'' என்றதும்,  ஆபிராமிக்கு மகள் தீவிரமாக முடிவெடுத்து இருக்க கண்டு அமைதியாக கிளம்பினார்.</span></p>
<p data-p-id="410ff64a4fe5c71c1e0389b073a42161"><span style="font-size: 14pt"> இதற்கு மேலும் திருமணம் ஆகாத ரூபனோடு தங்க சொல்லி வற்புறுத்த முடியாது. திருமணம் பற்றிய பேசும் இந்த சூழ்நிலையில், அவள் புரிந்து கொள்ளவும் மாட்டாள் என நிலாவோடு கிளம்பினார்.</span></p>
<p data-p-id="549c5d23b0fd5cd1c0f86469c9d7105d"><span style="font-size: 14pt">நிலா அபிராமி இருவரும் கிளம்பிய நொடியில் பாக்கியம் ரூபனுக்கு போன் செய்து முடித்தார்கள்.</span></p>
<p data-p-id="6020f1353f66e9d8fade149729ea0a88"><span style="font-size: 14pt">கொஞ்சம் வீட்டுக்கு வர சொல்லி, வந்தவுடன் நிலா சென்றதை எல்லாம் சொல்லி முடிக்க ரூபன் தலையில் கை வைத்து சோபாவில் அமர்ந்தான்.</span><br /><span style="font-size: 14pt">''என்னம்மா இப்படி பண்ணி இருக்கிங்க.. ஒன்னு என்கிட்ட அவளை லவ் பண்றியானு நேரா கேட்டு இருக்கணும். இல்லையா அத்தை உடல்நிலை சரியாகிடுச்சு என்றாவது சொல்லி இருக்கணும்...  இது என்ன விளையாட்டு?'' என்றான் கோபமாக.</span></p>
<p data-p-id="66d86a5ac8e1b07d5bec53a90b919de0"><span style="font-size: 14pt">''அது இல்லைடா... ஒரே அறையில் இருந்தா எப்படியும் ரொம்ப நாள் நீ தவிர்க்க மாட்ட கல்யாண பேச்சை எடுப்பனு தான்..'' என்று மகனிடம் திட்டம் போட்டதை தெரிவித்தார். </span></p>
<p data-p-id="3590c1f348bce4031c0abc35b19741e6"><span style="font-size: 14pt">''நான் நிலாவை லவ் பண்றேனு உங்களுக்கு தெரிந்துயிருக்கு அப்பறம் ஒரு வார்த்தை கேட்டு இருக்கலாம் ல...என்னம்மா நீங்க.. அவள் ஏதோ நான் டிராமா ஆடறதா நினைச்சுக்கிட்டு இருப்பா. முதல் சந்திப்பு தான் மோதலா போச்சு இப்பவுமா?'' என்றான். </span></p>
<p data-p-id="79eb38c7310ba9ea103ef4830c338b50"><span style="font-size: 14pt">''இப்ப என்னடா செய்ய? அவங்க எங்க போனாங்க என்றும் தெரியாதே' என்று வருந்தினார். </span></p>
<p data-p-id="202b3eb1b2e23dc3f3b0e256432ffd42"><span style="font-size: 14pt">''அவள் ஒர்க் பன்ற இடத்தில் கேட்டுப்பேன். பிரச்சனை அதில்லை என்னவோ நான் டிராமா ஆடி, என் ரூமுக்கு அவளை அனுப்பியதா மட்டமா நினைப்பா. போங்கம்மா'' என சலித்து டென்ஷனில் இருக்க பாக்கியம் அலைபேசி அடித்தது.</span></p>
<p data-p-id="442f302785a3bb8596f68abf93403c46"><span style="font-size: 14pt">''ரூபன் நிலா போன் டா'' என அட்டேன் பண்ணினான். </span></p>
<p data-p-id="ddf80f0b6ef0e1e7ce821981ba83739e"><span style="font-size: 14pt">''அண்ணி நான் அபிராமி பேசறேன்'' என்றதற்கு,</span></p>
<p data-p-id="1f2d28c50e2345747a53f4135f6a518a"><span style="font-size: 14pt">''அத்தை நான் ரூபன்.. எங்க இருக்கிங்க?''</span></p>
<p data-p-id="db6793d501dfb442ae1a246531bad02c"><span style="font-size: 14pt">''நிலாவுக்கு தெரியாம பேசறேன் மாப்பிள்ளை. இந்த நம்பருக்கு அட்ரெஸ் அனுப்பி இருக்கேன்... பாருங்க அவள் வந்துடுவா நான் அப்பறம் பேசறேன்.'' என சட்டென துண்டித்தார் அபிராமி.  </span></p>
<p data-p-id="44fb62c16883bcc5fc781ca3a1963870"><span style="font-size: 14pt">பாக்கியமோ ''என்னடா நிலா தானே என்ன சொன்னா?'' என்றார். </span></p>
<p data-p-id="aff2251c68afa7516b1675f3626f9ce3"><span style="font-size: 14pt">''நிலா எல்லாம் இல்லைம்மா'' என இன்பாக்ஸ் ஓபன் செய்ய அதில் இருந்த அட்ரெஸ் தனது போனில் போட்டோ எடுத்து விரைந்தான்.</span></p>
<p data-p-id="9dfd22bce57d48acbc3bb15eff0c3b11"><span style="font-size: 14pt">இரும்பு கதவை தள்ளி, ரூபன் அவ்வீட்டினுள் நுழைந்தான்.  </span><br /><span style="font-size: 14pt">''எங்க அத்தை அவ'' என்றான். </span><br /><span style="font-size: 14pt">''இந்த  அறையில" என்று சொல்லி முடிக்கும் முன் அங்கே கதவை திறந்து அவளின் முன் நின்றான்.</span></p>
<p data-p-id="f6146a2733cdad6bc01de2fbc46ff59c"><span style="font-size: 14pt">திறந்த கதவு தானாக மூடிக்கொள்ள ''இப்போ எதுக்குடி அவசர அவசரமா வேற வீட்டுக்கு வந்திருக்க? நான் நேற்று லவ் சொன்னது தப்பா? உன்னை அடிச்சாதாலயா? இல்லை நீ என்னை ஹக் பண்ணி மெய் மறந்து நின்றியே அதனாலயா?</span><br /><span style="font-size: 14pt">நான் உன்னை லவ் பண்றேன் என்று நான் சொல்லாமலே உனக்கு தெரியும். ஏன் நீயும் விரும்பற, இல்லைனா எதுக்குடி எனக்கு குண்டு அடிபட்டதும் ஹஸ்பிடலில், ஹாஸ்டல் கூட போகாம அங்கயே தங்கி கவனிச்ச?</span></p>
<p data-p-id="fea16da71f5b2751f25ee67f9b540c9a"><span style="font-size: 14pt"> அது மட்டுமா எனக்கு ஊசி போட, வேற எந்த நர்ஸ்ஸையும் அனுமதிச்சது இல்லை நீ.. திரும்ப அதுக்கு பேரு மனிதாபிமானம் மண்ணாங்கட்டி, அது இது என்று சொன்ன அவ்ளோ தான்.'' என விரலை நீட்டி எச்சரித்தான். </span></p>
<p data-p-id="14cfba13e7e018e79e7d43637a6857b8"><span style="font-size: 14pt">அவன் வந்ததிலேயே அதிர்ந்து நின்ற நிலா, அவனின் இந்த காதல், அவளின் செய்கை விவரித்து பேச, கொஞ்சம் பதறி போயி, பேசமுடியாமல் நின்றாள்.</span></p>
<p data-p-id="1c4583a52a6b0458ba82a5a8d41d947d"><span style="font-size: 14pt">''அப்பறம் என்ன சொன்ன? என் அம்மாகிட்ட நான் உன்னை கல்யாணம் செய்ய நாடகம் செய்தேனா.? அதுவும்  உன் அம்மாவை வைத்து. அறிவிருக்கா இல்லையா? உங்க அம்மாவுக்கு நினைவு வந்திருக்கு என்றதே எனக்கு கொஞ்ச நேரம் முன்ன தான் தெரியும். அதுவும் நீ இங்க வந்து இப்படி செய்த காரியத்தில் தான்.</span></p>
<p data-p-id="abeb92e85c6eff0477a653ea54a58095"><span style="font-size: 14pt">அப்படியிருக்க எப்படிடி ஏன் மேல இப்படி ஒரு பழியை சுமத்தற? உன் அம்மாவை உடல்நிலை காட்டி தான், உன்னை கல்யாணம் செய்து கொள்வேனு எப்படிடி நினைச்சே.?</span></p>
<p data-p-id="033c806afca43d0a7d9971b498c948b4"><span style="font-size: 14pt">நீ அன்னிக்கு அம்மானு கதறி அழுதப்ப உன்னை நெஞ்சில் சாய்த்தது எல்லாம்,  உன் கஷ்டம் அழுகையை குறைக்கணும் தான்டி துடிச்சேன். என்னை போய் உனக்கு நாடகம் செய்தேனு சொல்ற. </span></p>
<p data-p-id="7f719eb4fe6104314aeeddd904e2570c"><span style="font-size: 14pt">ஆமா.. இங்க நீ தனியா வந்தா, நான் உன்னை விட்டு விலகி போவேனா.? நீ தனியா நின்று தவிக்கும் பொழுதே, உன் அருகாமையில் வச்சிக்கனும் என்றே முடிவெடுத்தவன் நான்.. உன் அழுகை வருத்தம் களைய முயற்சி செய்தவன். உன் மனசில் நீ சொன்னாலும் சொல்லாவிட்டாலும் நான் இருக்கேன்...'' என்றதும் நிலா இவனுக்கு எப்படி என முழித்தபடி பார்த்தாள். </span></p>
<p data-p-id="037a8bea5944c4d393666b8cb44cfd94"><span style="font-size: 14pt">''அன்னிக்கு உங்க அம்மாவை பார்த்து, அவங்க மயங்கி சரிந்ததும், நீ மயங்கி சரிஞ்ச. அப்ப கண்முழிச்சப்ப என் நெஞ்சில் தாண்டி சாய்ந்து ரூபி ரூபினு அழுத. நேற்று அடிச்சப்பவும் என்னையே கட்டி புடிச்சு நின்ற.</span></p>
<p data-p-id="3f67f4779cc4ce66797b56e895760a24"><span style="font-size: 14pt">உனக்கு வேணுமின்னா சுயநினைவு இல்லாமல் போகலாம். எனக்கு இருக்கு... உன் மனசில் நான் இருக்கேன்... இனி கிறுக்குததனமா ஏதாவது நினைச்சு பேசி என்னை கொல்லாதே.'' என்று கத்த தனது முன் ரூபனிடம் தற்பொழுது பேசினால் நிச்சயம் விபரீதம் தனக்கு தான் என புரிந்து அமைதியானாள்.</span></p>
<p data-p-id="cb6e81aac07f486ea63428fb22089249"><span style="font-size: 14pt">''உன்னை இந்த நிமிஷம் கையை பிடிச்சு நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு போகணும் என்று ஆசையிருக்கு. ஆனா நீ இங்க வந்ததும் எனக்கு ஒகே தான் ஊரரிய கல்யாணம் செய்யும் பொழுது பையன் பொண்ணு ஒரே வீட்ல இருக்க கூடாது தானே... ஒரே வாரத்தில் உன் கழுத்தில் தாலி கட்டி நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு போறேன்டி.. ஆனா அதுகுள்ள எனக்கு உன் பதில் வேணும் நீலு'' என வெளியேறினான்.</span></p>
<p data-p-id="fa725daecfaebcec391abc3290b1299a"><span style="font-size: 14pt">நிலா கண்கள் தானாக நீரை சுரந்து நின்றன. அது ஆனந்தத்திலா அல்லது எதனால் என்று அவளுக்கே வெளிச்சம்.</span><br /><span style="font-size: 14pt">வெளியே வந்த ரூபன் ''சாரி அத்தை தெரிந்தோ தெரியாமலோ எனக்கும் நிலாவுக்கும் ஒரு வருஷம் இடைவெளி வந்துடுச்சு. இனி என்னால அவளை விட்டு கொடுக்க முடியாது. நான் ஒரு வாரத்தில் கல்யாணம் செய்ய ஏற்பாடு பண்ணிட்டு வர்றேன். அதுக்குள் அவளா என்னிடம் அவளோட மனசு சொல்லணும். சொல்லுவா வர்றேன் அத்தை'' என கிளம்பினான்.</span></p>
<p data-p-id="1fa657a95cc898976e0ea34f7ce58c5b"><span style="font-size: 14pt">அபிராமிக்கு மனம் இன்று தான் நிம்மதியடைந்தது. ரூபன் மனம் ஒரு வாரத்தில் கல்யாணம் என்றதும் மகளின் திருமணம் ஒன்றே ஆனந்தமென எண்ணி வாழும் தாயிக்கு உள்ளம் உவகை கொண்டது.</span></p>
<p data-p-id="7f74eca722a65bfff5190f26ecdbdf68"><span style="font-size: 14pt">நிலா அறையில் ஜன்னல் வழியாக வந்த வானத்து நிலாவின் வெளிச்சத்தில் ரூபனின் முதல் முறை பார்த்த அன்றைய நிகழ்வில் எண்ணி அப்படியே உறங்கினாள்.</span></p>
<p data-p-id="8f3987cde56bed7c96d02f9e9c82e732"><span style="font-size: 14pt">ரூபனும் தனது காதல் சொல்லி கல்யாணம் பேசி முடித்தும் அவள் அமைதியாக இருந்ததே நிம்மதி தர மகிழ்ந்தான். அவள் மறுத்தால் அவன் யோசிக்கலாம் அவளோ மறுக்காமல் இருக்க அதுவே அவனுக்கு தற்பொழுது உவகை ஆனது.</span></p>
<p data-p-id="8f3987cde56bed7c96d02f9e9c82e732"><span style="font-size: 14pt">தொடரும் </span></p>
<p data-p-id="8f3987cde56bed7c96d02f9e9c82e732"><span style="font-size: 14pt">பிரவீணா தங்கராஜ் </span></p>]]></content:encoded>
						                            <category domain="https://onlinetamilnovels.com/community/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-praveena-thangaraj/">முதலாம் சந்திப்பில்...-Praveena Thangaraj</category>                        <dc:creator>Praveena Thangaraj</dc:creator>
                        <guid isPermaLink="true">https://onlinetamilnovels.com/community/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-praveena-thangaraj/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-13/</guid>
                    </item>
				                    <item>
                        <title>முதலாம் சந்திப்பில்-12</title>
                        <link>https://onlinetamilnovels.com/community/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-praveena-thangaraj/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-12/</link>
                        <pubDate>Tue, 23 Jun 2026 13:59:25 +0000</pubDate>
                        <description><![CDATA[அத்தியாயம்-12இப்படியாக இரு நாட்கள் கழிய.. 
 அன்று நிலா ரூபன் அறையில் அவன் வந்ததை கூட உணராமல் சுவாரசியமாக போனில் கேண்டி கிரஷ் விளையாடினாள். 
 அவனும் என்கவுண்டருக்கு பதுங்கும் விதமாக, மெல்ல ...]]></description>
                        <content:encoded><![CDATA[<p data-p-id="509448d5c5f68c9fd8459db45fa1fe6e"><span style="font-size: 14pt"><b>அத்தியாயம்-12</b></span><br /><br /><span style="font-size: 14pt">இப்படியாக இரு நாட்கள் கழிய.. </span></p>
<p data-p-id="e47f49624d7f7a598518333b4b291b5f"><span style="font-size: 14pt"> அன்று நிலா ரூபன் அறையில் அவன் வந்ததை கூட உணராமல் சுவாரசியமாக போனில் கேண்டி கிரஷ் விளையாடினாள். </span></p>
<p data-p-id="dc840b6d9a9b241d8f58afccdde4eb91"><span style="font-size: 14pt"> அவனும் என்கவுண்டருக்கு பதுங்கும் விதமாக, மெல்ல வந்த சுவடே தெரியாமல் சைலன்ஸர் கொண்ட கன்னை எடுத்து டேபிளில் வைத்தவன், மாற்று உடை எடுத்துக்கொண்டு குளியலறை சென்று, மாற்றி விட்டு வந்தான். </span></p>
<p data-p-id="8ed2fd70fedb668c8096b6c6669688d5"><span style="font-size: 14pt"> அப்பொழுதும் அவள் தீவிரமாக விளையாட்டில் இருக்க, அவனோ எப்பொழுதும் போல அவளை ரசித்தவண்ணம் இருந்தான். அவள் விளையாட்டில் தோற்றதும் உதட்டை பற்களை வைத்து மெல்ல கடித்தாள். </span></p>
<p data-p-id="56b1c09d106f92884e36672ce6bebc26"><span style="font-size: 14pt">'ஐயோ அப்படி எல்லாம் கடிக்காதே டி. எனக்கும் உன் உதட்டை கடிக்கனும் போல தோன்றும்' என்ற அவஸ்த்தையோடு அவளை ஏக்கமாய் பார்த்தான்.  </span></p>
<p data-p-id="4ab59bbc2eae134e4e08c43b0e50683b"><span style="font-size: 14pt"> தன் அருகே நிழல் ஆடுவதை உணர்ந்து நிலா நிமிர அவன் தன்னை சமன் செய்தவாறு ''உட்கார் எதுக்கு எழுந்துக்கற'' என்று அவளுக்கு எதிரே சேரில் அமர்ந்தான். </span></p>
<p data-p-id="995e582c23f06e6e4feb9d9baee50161"><span style="font-size: 14pt"> அவளோ ''எப்போ வந்திங்க சாரி நான் கவனிக்கலை'' என்றாள். </span></p>
<p data-p-id="09ddd8a75abe449f3280164956866d32"><span style="font-size: 14pt">''மேடம் ஏதோ சின்சியர் ஒர்க் பண்ணிட்டு இருக்கீங்க அதான் அமைதியா இருந்துட்டேன்'' என்று மேஜையில் இருந்த உலர் திராட்சை முந்திரியை எடுத்து மென்றான்.</span></p>
<p data-p-id="14fcdd4fcd1e81af527aec5b56b2cffe"><span style="font-size: 14pt">  'இவர் இங்க வந்து அறையில டிரஸ் மாற்றும் வரை நாம கவனிக்காமலா இருந்தோம். இவர் என்ன நினைச்சு இருப்பார்.. அய்யயோ அவர் இங்கயா டிரஸ் மாற்றினார்' என்றே விழி பிதுங்கினாள். </span></p>
<p data-p-id="b35e9494ddfe18248f73b3f6dc23fec4"><span style="font-size: 14pt">அவள் தன் உடையை கவனித்து விழிக்க, ''முட்டை கண்ணை வச்சி முழிக்காத... நான் அங்க டிரஸ் மாற்றிட்டு வந்தேன் அதுவரை அப்படி என்ன விளையாடிட்டு இருக்க?'' என்றான் ரூபன். </span></p>
<p data-p-id="8042ec395cf6ac761766b9f1afa00bc0"><span style="font-size: 14pt">''என் ஃபிரண்ட் கேண்டிகிருஷ்ல என்ன விட 5 லெவல் பிஃபோர்ல இருக்கா. இந்த லெவல் கொஞ்சம் கஷ்டமாயிருக்கு. நாளைக்குள்ள அவளை விட அதிகமாக லெவல் ஜெயிச்சு காட்டனும்'' என்றாள் குழந்தையாக. </span></p>
<p data-p-id="dc4c7d7b6431d0ceb8ca8855ae28990b"><span style="font-size: 14pt">''நீ ஒரு நர்ஸ் இப்படி கேம் விளையாடிட்டு இருக்க?'' என்றான். </span></p>
<p data-p-id="c82288ec7d80cd003f83f9cfef624639"><span style="font-size: 14pt">அதற்கு நிலாவோ ''ஹாஸ்டல் இருக்கும் பொழுது நேரமே போகாது. அதான் இப்படி கேம் விளையாடி நேரத்தை ஓட்டுவேன். இப்பவும் அதேபோல. அம்மா வேறே இங்க இந்த ரூமில் இருக்க சொன்னாங்களா? இங்க என்ன செய்ய?'' என வருந்த அவளின் வருத்தம் போக்கும் விதமாக நெருங்கினான். </span></p>
<p data-p-id="f54ecbc2faca4551737a46b104037d8f"><span style="font-size: 14pt">''கொடு நான் விளையாடி வின் பண்ணி தர்றேன்'' என அவளின் அருகே அமர்ந்து கொள்ள ஒரே கட்டிலில் அருகருகே அமர்ந்து கொண்டு விளையாடியவனின் கவனம், அவளின் அருகாமையில் இருக்க, அந்த லெவல் தோற்று போனான். </span></p>
<p data-p-id="6ab804d90784e207189f6bf3e57558d0"><span style="font-size: 14pt"> அடுத்ததும் விளையாடியும் தோற்கவும் நிலாவோ ''என்ன போலீசோ... ஒரு சின்ன கேம் அதை விளையாடி ஜெயிக்க முடியல.'' என போலியாக சலித்தாள். கூடுதலாக அவன் புஜத்தை உரிமையாய் தட்டினாள். </span></p>
<p data-p-id="2181092d96bbc794c0f3ffcac1ab9807"><span style="font-size: 14pt"> அவனோ அவளது தீண்டலில், "என்ன சொன்ன" என்று விரட்ட அவளோ அந்த அறையிலே ஓட, அவனும் துரத்தினான்.</span></p>
<p data-p-id="5da9db9abd412ac15b486debcf33c227"><span style="font-size: 14pt">அவனின் கையில் ஒரு நேரத்தில் அகபட்டு கொண்டவள் அருகே இருந்த துப்பாக்கி எடுத்து கையில் வைத்து நின்றாள். </span></p>
<p data-p-id="67ae85c71929efd9ae0149dbbcd79805"><span style="font-size: 14pt">''நிலா கன்னை கொடு.'' என பயந்தான்.</span></p>
<p data-p-id="75e6ac75fc63f922adf9289b0341f318"><span style="font-size: 14pt">''நோ கொடுக்க மாட்டேனே.'' என்று விளையாட, அவனோ பயத்தில் அவளின் கையை பற்றி மேலே துப்பாக்கி செலுத்த, அவளது விரல் துப்பாக்கி பிடியில் கைப்பட்டு தோட்டாக்கள் சிதறின.</span></p>
<p data-p-id="d8c3097f1c920b674a7f0f0407c4f377"><span style="font-size: 14pt">அது சைலன்ஸ்சர் செலுத்திய விதமாக இருக்க, துப்பாக்கி சப்தம் வெளியே கேட்காமல் போனது. அப்படியிருந்தும் அதில் இருந்து எழுந்த புகைவாசமும் மேலே இருந்து விழுந்த சுவரும், நிலா கண்ணில்பட, இதயம் துடிக்க மறந்து போனது.</span></p>
<p data-p-id="f1d614ce4a695472f9b187f53419b8e3"><span style="font-size: 14pt">ஒரு நொடிக்குள் நிகழ்ந்த நிகழ்வில் நிலா அதிர்ந்து போக, அடுத்த நொடி</span><br /><span style="font-size: 14pt">ரூபன் நிலாவை அறைந்தான். அவளோ ஏற்கனவே பயத்தின் பிடியிலிருந்தவள் அவனது அடியில் மயங்கி அவன் மீதே சரிந்தாள்.</span></p>
<p data-p-id="9b6f9222b2a4ca9c6f5d258ed063d87f"><span style="font-size: 14pt">துப்பாக்கியை பாதுகாப்பாய் வைத்தவன், அவளை கட்டிலில் கிடத்தி, அங்கே இருந்த நீரை அவளின் மீதே தெளிக்க, இமையை உருட்டி கண்களை திறந்தாள். </span></p>
<p data-p-id="62b6bc2923992d5121f0a802520f72c0"><span style="font-size: 14pt"> ரூபன் நிற்பதை கண்டு ''சாரி ரூபி. அதுல இப்படி கன் ஃபயர் ஆகும்னு நினைக்கலை.'' என அவனை கட்டி கொள்ள, அவனோ அவளின் அணைப்பில் ''சாரி நீலு... கன் உன் மேல பட்டுடும் பயந்து தான் அடிச்சேன்'' என்றான். </span></p>
<p data-p-id="6f69b443e8ecb41530c81caf3a3749f2"><span style="font-size: 14pt"> இருவரின் அணைப்பில் நிலா சற்று நேரத்தில் தன்னிலையுணர்ந்து அவனிடமிருந்து விடுபட, அவளின் விலகல் புரிந்து அவனும் விடுவித்தான்.</span></p>
<p data-p-id="9058a4ff25b2005b9c872ef7d909819a"><span style="font-size: 14pt">''சாரி நீலு இந்த நிமிஷம் சொல்லலாமா இல்லையா எனக்கு தெரிலை... ஆனா எனக்கு வேற சந்தர்பம் அமையுமோ என்னவோ? இந்த சந்தர்பத்தை இழக்க விரும்பலை. ஏற்கனவே ஒரு வருஷம் பட்டது போதும். எனக்கு மறுபடியும் நேரம் கடத்த பிடிக்கலை. </span></p>
<p data-p-id="f6568679921c7c29e90638e811b5b311"><span style="font-size: 14pt">நீலு உன்னை விரும்பறேன்.... இப்ப இல்லை என் மேல பெளர்ணமி நிலவொளியில, மேல வந்து மோதினியே அப்ப.. அப்பதிலருந்தே... </span></p>
<p data-p-id="5d280fc3475f1a4aab5071af5aca846c"><span style="font-size: 14pt">என்ன என் ஈகோவாளா அப்போ உன்னை பிடிக்கலை என்று சொல்லிட்டேன் அது கூட நீ எங்கயும் என்ன விட்டு, எங்க போக போற, அதுகுள்ள லவ் சொல்வேனு இருந்தேன். பட் சூழ்நிலை என்னை கேலியாக காட்டியதில் கோவத்திலே சுத்திட்டேன். இதுல உனக்கு வேற வரன் என் நண்பனையே பார்க்கவும், அது முடியறதா தவறா எண்ணி நார்த் கிளம்பிட்டேன்... இங்க வந்த முதல் நாளே உன்னை ஏர்போர்ட்ல பார்ப்பேனு நினைக்கலை நான் வேற ஒருத்தனின் மனைவி நீ, என்று தான் அப்பவும் நினைச்சு ஒதுங்கி போனேன். இங்க வந்த அடுத்த நாளே தெரிந்தது உனக்கும் என் பிரெண்ட்டுக்கும் கல்யாணம் ஆகலைனு. </span></p>
<p data-p-id="4ee6210483371e860b46247c117ee5ad"><span style="font-size: 14pt"> அப்பவே உன்னிடம் திரும்ப காதல சொல்ல நினைச்சேன் ஆனா உன் அப்பா அம்மா தவறியது தெரிந்தது. கொஞ்ச நாள் போகட்டும்னு இருந்தேன்.</span><br /><span style="font-size: 14pt">இப்ப என் வீட்டுக்கு, என் ரூமில் உன்னை அனுப்பி சூழ்நிலை இப்படி விளையாடும் என்று சத்தியமா நினைச்சு பார்க்கலை... ஸ்டீல் ஐ லவ் யூ நீலு...'' என்று சொல்ல அவளுக்கு அந்த நேரம் எதுவும் பேச நாவரவில்லை. </span></p>
<p data-p-id="2a2d127e439fa7a80b733201019677a6"><span style="font-size: 14pt"> அவளுக்குள்ளும் காதல் உள்ளது தான். ஆனால் இன்று அவனை அணைத்து கொண்டு காதலை பகிர முடியாமல் போனது. கொஞ்ச நேரம் முன் நிகழ்ந்த துப்பாக்கி சூட்டாள். </span></p>
<p data-p-id="203ba4735f62a86c7704bb1631df41f6"><span style="font-size: 14pt">நிலா மனதில் தான் எந்த நிலையென புரியாமால் தவித்து, அவளை நிறுத்தி கேட்கவும் முடியாது நின்றான்.</span></p>
<p data-p-id="4d7ec52c616a4919b9a315447de324ee"><span style="font-size: 14pt">அறையில் இருந்து வேகமாக வந்தவள் பேயறைந்தது போல அமைதியாக அமர்ந்தாள். </span></p>
<p data-p-id="7a033d1cb319372db500a460eaad877a"><span style="font-size: 14pt">அவளுக்குள் ரூபியை அணைத்தது மட்டுமே ஓடி கொண்டிருந்தது. அவனுக்குமே அவளை அணைத்தது மட்டுமே எண்ணி மகிழ்ந்தான். </span></p>
<p data-p-id="0416576c17166c7666c44a49166c01d1"><span style="font-size: 14pt">ரூபன் காதலை சொல்லி விட்டான். விதி ஆடும் இந்த கண்ணாமூஞ்சி ஆட்டத்தில் நிலா தான் ஒரு பதில் தந்து முடிக்க வேண்டும், </span></p>
<p data-p-id="e95cede8af12e3ebbaf2a42ea6b3b896"><span style="font-size: 14pt">எப்படியும் இன்றோ அல்லது நாளையோ காதலை சொல்லுவாள் என்றே ரூபன் நம்பினான். அதனால் இரவு உணவை முடித்து உறங்க சென்றான். </span><br /><span style="font-size: 14pt">நிலா அறைக்கு வருவாளென காத்திருந்தவன். அவள் அன்னை மடியிலே உறங்க கண்டு, அவர்களும் மகளது முகம் யோசனையில் இருக்க, அறைக்கு செல்ல சொல்லாமல், கடத்த, நிலா அன்னை மடியில் உறங்கினாள்.</span></p>
<p data-p-id="b4a7e161a44a0437d3dd6dd396651332"><span style="font-size: 14pt">சொல்ல போனால் உறங்குவது போல நடித்து இமையை மூடினாள். தாயின் மடியில் படுத்தவள் உறங்கிவிட்டாளென அன்னையர்கள் இருவருமே பேச துவங்கினார்கள்.</span></p>
<p data-p-id="bea105c5212c581704b46516e84cfa5c"><span style="font-size: 14pt">''என்ன அண்ணி நிலாவை ரூபன் அறைக்கு போக சொல்லலையா?'' என்று பாக்கியம் கேட்டார். </span></p>
<p data-p-id="89781fcd0dd7500055b36b5fd687c2dd"><span style="font-size: 14pt">''புத்தி பேதளிச்சு இருந்தப்பா சுலபமாக போக சொல்லிட்டேன்.... எப்ப நிலா கல்யாணம் ஆகலை என்று நினைவு தெரிந்ததோ, எனக்கு அந்த அறைக்கு போனு வற்புறுத்த முடியலை.... அதுவும் நிலா கொஞ்சம் யோசனையா இருந்தா'' என்றார் அபிராமி. </span></p>
<p data-p-id="ed8e54f3d788548e9d473bede62ca49d"><span style="font-size: 14pt">''என்ன அண்ணி... அப்பறம் எப்படி இவங்களுக்கு கல்யாணம் செய்ய முடியும்?'' என்றார் பாக்கியம். </span></p>
<p data-p-id="4e283a429217850667e8a218294446d8"><span style="font-size: 14pt">''இன்னிக்கு ஒரு நாள் நிலா என் மடியில் உறங்கட்டும் அண்ணி. வேற ஐடியா யோசிப்போம். கல்யாணம் ஆகாத பொண்ணை அங்க அனுப்ப மனசுக்கு சரியாபடலை'' என சொல்லிவிட்டார். </span></p>
<p data-p-id="f5c879ce26e86a92e8bcad019a8acc24"><span style="font-size: 14pt">உறங்குவதை போல இருந்த நிலாவோ அன்னைக்கு நினைவு நன்றாக தெளிந்துவிட்டது என நிம்மதி அடைந்தாள். ஆனாலும் இவர்கள் இப்படி நடிப்பார்களென்று எண்ணவில்லை... இந்த நடிப்பில் ரூபனும் சேர்த்தியென தவறாக எண்ணி கொண்டாள்.</span></p>
<p data-p-id="fab3a821658b00338614be38af52806c"><span style="font-size: 14pt">தான் தாயின் நிலைக்குறித்து எப்படி கலங்கினாள். இவனோ காதல் என்ற வலைக்குள் தன்னை சிக்கவைக்க, தன் அன்னையும் சேர்த்தே இப்படி செய்ய வைத்து இருக்கின்றான் என்று அவள் மனம் எண்ணியது.</span></p>
<p data-p-id="5e9d9fc7d373ad26df64e8b6fe0d430c"><span style="font-size: 14pt"> எதையும் எழுந்து கேட்க முடியவில்லை... அவளின் மனம் மிகவும் சோர்ந்து போனது. ஆனால் நாளை ஒரு முடிவெடுத்தபடி தான் உறங்கினாள்.</span></p>
<p data-p-id="9434f2f260a67699d463c0dc95895730"><span style="font-size: 14pt">ரூபனோ தவித்து போனான். இப்ப என்ன தான் அந்த மண்டைக்குள்ள யோசிப்பாளோ? இவளை எல்லாம் எப்படி தான் சமாளிக்க போறேனோ... இந்த தாலி மட்டும் கட்டிட்டேனா போதும் மீதியை சமாளிச்சுடுவேன்.' என்றான் மனதோடு. </span></p>
<p data-p-id="9434f2f260a67699d463c0dc95895730"><span style="font-size: 14pt">தொடரும் </span></p>
<p data-p-id="9434f2f260a67699d463c0dc95895730"><span style="font-size: 14pt">பிரவீணா தங்கராஜ் </span></p>]]></content:encoded>
						                            <category domain="https://onlinetamilnovels.com/community/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-praveena-thangaraj/">முதலாம் சந்திப்பில்...-Praveena Thangaraj</category>                        <dc:creator>Praveena Thangaraj</dc:creator>
                        <guid isPermaLink="true">https://onlinetamilnovels.com/community/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-praveena-thangaraj/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-12/</guid>
                    </item>
				                    <item>
                        <title>முதலாம் சந்திப்பில்-11</title>
                        <link>https://onlinetamilnovels.com/community/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-praveena-thangaraj/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-11/</link>
                        <pubDate>Tue, 23 Jun 2026 13:16:00 +0000</pubDate>
                        <description><![CDATA[அத்தியாயம்-11பாக்கியம் அபிராமி இருவரும் என்ன பேசணுமோ எல்லாம் பேசி முடித்து உணவினை தாயார் செய்தனர்.தயங்கி தயங்கியே சாப்பிட அமர அபிராமியோ &#039;&#039;என்ன தங்கம் நீ மாப்பிள்ளை சாப்பிட எடுத்து வைக்காமல் ...]]></description>
                        <content:encoded><![CDATA[<p data-p-id="8c998e746aef4c43eedc0567207ac9fe"><span style="font-size: 14pt"><b>அத்தியாயம்-11</b></span><br /><br /><span style="font-size: 14pt">பாக்கியம் அபிராமி இருவரும் என்ன பேசணுமோ எல்லாம் பேசி முடித்து உணவினை தாயார் செய்தனர்.</span><br /><span style="font-size: 14pt">தயங்கி தயங்கியே சாப்பிட அமர அபிராமியோ ''என்ன தங்கம் நீ மாப்பிள்ளை சாப்பிட எடுத்து வைக்காமல் நீ சாப்பிட உட்காருற முதலில் மாப்பிள்ளைக்கு பரிமாறு'' என்றதும் நிலா ரூபனையும் அபிராமியையும் பார்க்க ரூபனும் ஒரு கணம் அதிர்ந்து பின்னர் மனதிற்குள் சந்தோசப்பட்டு கொண்டான்.</span></p>
<p data-p-id="af2803a4fbe7023e550465761e621f09"><span style="font-size: 14pt">பாக்கியம் ''சாப்பாடு தானே ம்மா பரிமாறு...'' என சொல்லிவிட்டு அபிராமியிடம் ''அவளும் வேலைக்கு போறதால அலுப்புல சாப்பிட உட்கார்ந்தா சம்மந்தி'' என சமாளிக்க, அபிராமி ''ஓஹ்ஹோ'' என உண்ண துவங்கினாள்.</span></p>
<p data-p-id="14fa3e154e8d6f66380026001398b778"><span style="font-size: 14pt">ரூபனுக்கு தயங்கி பரிமாற அவனோ 'இதுக்காக தானே காத்திருந்தேன் ரூபன் நீ கலக்கு டா.' என மனதில் அவன் அத்தை அபிராமிக்கு ஒரு நன்றியை சொல்லி கொண்டான்.</span></p>
<p data-p-id="aa142fb9bd0318748f67bc6d3ec45a33"><span style="font-size: 14pt">அடுத்து நிலாவும் சாப்பிட அமர்ந்தாள். நல்லவேளை இந்த அம்மா அவர் சாப்பிட்ட தட்டில் தான் சாப்பிடணும் என்று என்னை சொல்லல.. இல்லை அவ்ளோ தான் ஆனா அப்படி இருந்தாலும் என் ரூபி சாப்பிட்ட தட்டில் சாப்பிட்டு இருப்பேன்.</span><br /><br /><span style="font-size: 14pt">அபிராமி மாத்திரை விழுங்க அப்பொழுதும் உறங்காமல் பேசிக்கொண்டே இருக்க ரூபன் அவன் அலுவலக கேஸ் பைல்ஸ் பார்த்து, மூடிவைத்து உறங்க அறைக்கு செல்ல அபிராமியோ</span><br /><span style="font-size: 14pt">''தங்கம் மாப்பிள்ளை தூங்க போயிட்டார் நீயும் போ அப்போ தான் காலையில் நீயும் வேலைக்கு போகணும்ல...'' என்றதும் நிலா அதிர்ந்தாள்.</span></p>
<p data-p-id="6d92a1c2a461ad3a2852553da2b68b72"><span style="font-size: 14pt"> பாக்கியமும் அதிர்ந்தாலும் இந்த ஜோடியை சேர்க்க, நிலாவை பார்த்து ''போடா.. அம்மாவை நான் பார்த்துக்கறேன்....'' என கண்களில் தைரியம் மூட்டினர்.</span></p>
<p data-p-id="ad11beff5866063d463ee2b22284b778"><span style="font-size: 14pt">''தங்கநிலா என்ன சும்மா போற குடிக்க தண்ணீர் பாட்டில் எடுத்துக்கிட்டு போ'' என்றதும் பாக்கியம் பக்கத்தில் இருந்த பாட்டில் எடுத்து கண்களில் என்ன செய்ய? என பரிதவிக்க அதனை புரிந்து கொண்ட பாக்கியம்</span><br /><span style="font-size: 14pt">''நீ போ... அவங்க கொஞ்ச நேரத்தில் தூங்கிடுவாங்க அப்பறம் வா... ஒன்னும் பயப்பட வேண்டாம்'' என மென்குரலில் சொல்ல, நிம்மதியோடு ரூபன் அறைக்கு நுழைந்தாள்.</span></p>
<p data-p-id="036bc01c71f3735f0dade50d87278524"><span style="font-size: 14pt">அப்பொழுது தான் குளித்து முடித்து ஷார்ட்ஸ் அணிந்து டவலில் முகத்தை ஒற்றி எடுத்து கொண்டே ரூபன் வர, நிலா அறைக்குள் வந்து கதவை சாற்றியது புரியாமல் பார்த்தான். </span><br /><span style="font-size: 14pt">''அ..அம்.. அம்மா... கல்யாணம் ஆகிடுச்சுனு உங்க ரூமுக்கு போ சொல்லி...'' என அவள் தடுமாற புரிந்தவன்</span><br /><span style="font-size: 14pt">''ஹ்ம்ம்.. இதை எதிர்பார்க்கலை... உட்கார்'' என்றதும் திருதிருவென முழித்தவள் அமர தயங்கினாள். </span></p>
<p data-p-id="37ca7ddea02fbbef379c19988f67c339"><span style="font-size: 14pt">''ஹலோ எவ்ளோ நேரம் இப்படியே கதவு பக்கம் நிற்ப? உட்கார் ஹாலில் என்கூட உட்கார்ந்தல அப்படி தான் இங்கும்'''</span><br /><span style="font-size: 14pt">''இல்.. இல்லை.. அப்போ நீங்க யூனிபார்ம்...'' என தயங்கி பேச அவன் ஆடையை கவனித்தான்.</span></p>
<p data-p-id="e620f545ab5b38e5211c619e577860f7"><span style="font-size: 14pt">வேற்று மார்பில் நீர் துளிகள் நெஞ்சில் பதிந்திருக்க ஷாட்ஸ், அணிந்து இருக்கும் நிலை உணர்ந்து டீ ஷர்ட் எடுத்து அணிந்தான்.</span><br /><span style="font-size: 14pt">''இப்ப ஓகே வா?'' என்றதும் நிமிர்ந்தவள் அவனை முதல் முறையாக டீ ஷர்ட் அணிந்து பார்ப்பதால் அப்படியே பார்க்க கண்கள் இரண்டும் காதல் மொழி பேச தன்னிச்சையாக தலை அசைத்தாள்.</span></p>
<p data-p-id="a496891c9fa45dcfb682d61986ec38d9"><span style="font-size: 14pt">கொஞ்ச நேரம் அமைதியாக இருக்க, ரூபன் பேச வேண்டும் என்றெல்லாம் தோன்றாமல் அவளையே பார்த்து கொண்டு இருந்தான். 'ஹ்ம்ம் கல்யாணம் முடிச்சு என் ரூமில் இப்படி நெளிந்து கொண்டு இல்லாமல் சகஜமா இருக்க வேண்டியவ... அன்னிக்கு பிடிக்கலைனு சொல்லி இப்போ இந்த நிலையில் வந்துடுச்சு.... பட் காட் கிரேட் திரும்ப என்னிடமே கொண்டு வந்து விட்டிருக்கார். இனி அதை எப்படியாவது நல்லவிதமா முடிச்சு கல்யாணத்தில் நிறுத்தணும்' என கணக்கிட்டான். </span></p>
<p data-p-id="67295521a047968448fc11af1cafe841"><span style="font-size: 14pt">அவளோ ''சாரி அம்மா இப்படி எல்லாம் பண்ணுவாங்க என்று எதிர்பார்கலை... அவங்க நிலைமை புரிஞ்சு இருந்தாங்க என்றால் நான் உடனே உண்மை சொல்லிடறேன். அதுவரை மன்னிச்சுடுங்க....'' என முடிக்க ரூபன் நிமிர்ந்து , ''பரவாயில்லை... '' என்றவன் முடிக்க தங்கநிலா அமைதியாக அவ்வறையின் ஒவ்வொரு இடமாக பார்த்து பார்வையை திசைதிருப்ப, என்ன நினைத்தானோ அங்கிருக்கும் இரண்டு ஜன்னல் கதவையும் திறந்தான்.</span><br /><span style="font-size: 14pt">ஜன்னல் கதவை திறந்ததும் காற்று வேகமாக உள்ளே நுழைந்தது. தங்கநிலா தயங்கி தயங்கி</span><br /><span style="font-size: 14pt">''தேங்க்ஸ்....'' என்றாள்.</span></p>
<p data-p-id="e7a847e27c05e9b0deb781c5dc9e61b9"><span style="font-size: 14pt">இது எதுக்கு என்பது போல பார்வை பார்க்க ''அது நீங்க அம்மாவுக்காக அப்ப கூடவே இருந்திங்க ஹாஸ்டல் வந்து விட்டுட்டு போனிங்க.. அப்பறம் ஹாஸ்டல் இருந்த பொழுது பிரச்சனை என்றதும் உடனே வந்திங்க... இப்போ இங்க கூட்டிட்டு வந்ததும் இல்லாமல்.. அம்மாவுக்காக என்னை இங்க சகிச்சுக்கிட்டு இருக்கிங்க.. எல்லாத்துக்கும் தேங்க்ஸ்'' என்றாள் குனிந்தபடி.</span><br /><span style="font-size: 14pt">சகிச்சுக்கிட்டு என்றதும் அவனுக்கு கோவம் வர முறைத்தவன் அவளை திட்ட பார்க்க அவளின் சேலையோ காற்றில் அசைந்து இடையை அவனுக்கு காட்டி கொடுத்தது.</span></p>
<p data-p-id="0a8bf9566360f89800ed290eaeeed270"><span style="font-size: 14pt">கோவம் எல்லாம் மறந்து அதனை ரசித்தவன் பிறகு நிலைமை உணர்ந்து திரும்பினான்.</span><br /><span style="font-size: 14pt">கொஞ்ச நேரம் பேசாமல் போக அம்மா தூங்கிருப்பாங்களா?'' என கவலையோடு கேட்டதும் ரூபனுக்கு அவளின் மனம் புரிந்தது.</span></p>
<p data-p-id="d80209656a3e005a987377e6e642d796"><span style="font-size: 14pt"> திருமணம் ஆகாத ஒருவனோடு ஒரே அறையில் எவ்வளவு நேரம் தான் அவளும் இருப்பாள்.</span><br /><span style="font-size: 14pt">''கொஞ்சம் இரு வர்றேன்." என வெளிய வந்து பார்க்க அங்கே பாக்கியமும் அபிராமியும் உறங்கி கொண்டிருந்தார்கள்.</span><br /><span style="font-size: 14pt">சிரித்தபடி அறைக்கு வந்தவன் "அவங்க இரண்டு பேருமே தூங்கிட்டாங்க... நீ இங்க இருப்பதை மறந்து...'' என்றான். </span></p>
<p data-p-id="ae82baaa2cde00ed99d05763fc08f120"><span style="font-size: 14pt">''நான் அப்போ வர்றேன்'' என நிலா வெளியேறினாள்.</span><br /><span style="font-size: 14pt">'வர்றேன் என்று சொல்லிட்டு போகின்றாள் இன்று சம்பிரதாயமாக.. ஆனால் நிஜமாவே எனக்கானவளா உன்னை இதே அறைக்கு மனைவி ஸ்தானம் கொடுத்து உள்ளே வரவைப்பேன்... அதுக்கு காலம் ரொம்ப தொலைவில் இல்லை நிலா' என ஏக்கமாய் பார்வையிட்டு அனுப்பி வைத்தான். </span></p>
<p data-p-id="9fd7578064ddce7827d111bbf4bc7114"><span style="font-size: 14pt">அதிகாலை எழுந்தவள் நெளிந்து பார்க்க பாக்கியம் சமைத்து கொண்டு இருந்தார். முகம் அலம்பி ப்ரெஷ் செய்து ''சாரி ஆன்ட்டி அது அசதியில் தூங்கிட்டேன்...''</span><br /><span style="font-size: 14pt">''நைட் அம்மா தூங்கியதை சொல்ல மறந்துட்டேன்மா நானும் தூங்கிட்டேன்''</span><br /><span style="font-size: 14pt">''ஹ்ம்ம் பார்த்தோம் ஆன்ட்டி அதான் நானே வெளியே வந்து தூங்கிட்டேன்''</span><br /><span style="font-size: 14pt">''உன் அம்மா எதிர்க்க என்னை ஆன்ட்டி என்று கூப்பிடாதே சரியா?'' என்றார்  பாக்கியம். </span><br /><span style="font-size: 14pt">''சரிங்க அத்தை..'' என்றதும் பாக்கியம் சிரிக்க கூடவே நிலாவும் கலந்தாள்.</span></p>
<p data-p-id="9ea86040005bcc916566ef5a90332545"><span style="font-size: 14pt">காலையில் எழுந்த அபிராமி குளித்து முடித்து அனிச்சையாக குங்குமம் எடுத்து வைக்க செல்ல சட்டென நினைவு வர பதறிவிட்டார் அபிராமி. பின்னர் அங்கிருந்த விநாயகர் படத்தில் வைத்து விட்டு மகளை கண்டார்.</span><br /><span style="font-size: 14pt">மெல்ல மெல்ல பூமி பிளவு கொள்வதாய் தோன்றியது அபிராமிக்கு.... ஏன் என்றால் தங்கநிலா கழுத்தில் சின்ன மெல்லிய செயின் மட்டுமே இருந்தன. அப்படியென்றால் தாலி கொடி எங்கே? என்று அவளிடம் கேட்காமல் அமைதியாக நடப்பதை கண்டார்.</span></p>
<p data-p-id="b846462f22aed18de3a12ea8ffd8f367"><span style="font-size: 14pt">எழுந்ததிலிருந்து தன்னையே சுற்றி இருக்கும் மகள்.. அறையில் அவளின் கிளிப் சீப், பொட்டு என்று ஒன்று கூட இல்லை.... எல்லாம் ஒரு திருமணம் ஆகாத இளைஞன் அறை போல இருப்பதாக தோன்றியது. நேற்று நடந்த நிகழ்வை யோசித்து பார்த்தார் அபிராமி... அப்போ நேற்று வரை நிலா ஹாஸ்டல் தான் இருந்திருக்கா? </span></p>
<p data-p-id="f323aaae5b0286c9f725795db7653ac0"><span style="font-size: 14pt">இன்று எனக்காக இங்கு வந்திருக்கா... அப்போ இவங்களுக்கு திருமணம் ஆகவில்லையென அமைதியாக, அவளிடம் கேட்க முடியாமல் இருந்தார்.</span></p>
<p data-p-id="3f083a5475622c7ce8e4d44c32fe4f51"><span style="font-size: 14pt">கொஞ்சம் கொஞ்சமாக எல்லாம் புரிந்தது. அவள் தனக்கு உடல் நலம் சரியில்லையென எதையோ மறைக்கின்றாள்</span><br /><span style="font-size: 14pt">எப்படியும் முழு உண்மை நிலா தெளிவாக கூற மாட்டாள் பாக்கியம் மட்டுமே சொல்ல வைக்க வேண்டும்...அதற்கு மகள் அலுவலகம் செல்ல தூரிதப்படுத்தினர்.</span><br /><span style="font-size: 14pt">''நீயும் மாப்பிள்ளை கூடவே கிளம்பு நிலா... என் ரிப்போர்ட்ஸ் எல்லாம் உங்க டாக்டர்க்கிட்ட காட்டு அப்படியே பேசிட்டு வா..'' என்றார். </span></p>
<p data-p-id="33ec4e897b8bc8476822717466bbb559"><span style="font-size: 14pt">''இல்லை மா உங்களை இப்போ தானே பார்த்தேன் உங்க கூடவே இருக்கேன்'' என்றாள் மகள்.</span><br /><span style="font-size: 14pt">''இல்லை நீ போய்ட்டு வா...'' என பிடிவாதம் பிடிக்க நிலா கிளம்பினாள்.</span></p>
<p data-p-id="2e75d663897f7b2a83bf532c1e09ccd2"><span style="font-size: 14pt"> அபிராமி சொல்லியது போல அவர்கள் ரிப்போர்ட் எல்லாம் எடுத்து கொண்டு கிளம்ப, ஆனால் குளிப்பதற்கு ரூபன் அறைக்கு அல்லவா செல்ல வேண்டும் என முழித்தாள். </span></p>
<p data-p-id="c5fea2d9599faf52c692515c4639d4e8"><span style="font-size: 14pt">''போ மாப்பிள்ளை ரெடி ஆகறதுக்குள் கிளம்பு அப்போ தானே உன்னை அழைச்சுட்டு போவார்'' என்று சொல்லியதும் அறைக்குள் நுழைந்தாள்.</span><br /><span style="font-size: 14pt">அவளை பார்த்ததும் ஏதோ காரணம் என புரிந்து ''என்ன ஆச்சு?'' என்றான் ரூபன்</span><br /><span style="font-size: 14pt">''அது அம்மா உங்களோடவே வேலைக்கு போக சொல்லிட்டாங்க.."</span><br /><span style="font-size: 14pt">'' ஓகே நோ ப்ரோப்ளம்...'' என்றதும்</span><br /><span style="font-size: 14pt">''நான் குளிக்கணும்'' என்றதும் நிமிர்ந்தவன் அறையின் குளியலறையை பக்கம் கையை கட்டினான்.</span><br /><span style="font-size: 14pt">''அங்க டிரஸ் சேஞ்சு பண்ணிக்கலாம் ஸ்பேஸ் இருக்கு இல்லை நான் வெளியே போகணும் என்றாலும் ஓகே'' என்றான்.</span></p>
<p data-p-id="290e92c9891d8e3de0d6dec48b558289"><span style="font-size: 14pt">குளியலறையை எட்டி பார்த்து விட்டு "இல்லை டிரஸ் மாத்தறதுக்கு இடம் இருக்கு இதே போதும்." என சோப்பை எடுத்தாள். </span></p>
<p data-p-id="21f9763857c2b11e4ad0ecfe090cfd33"><span style="font-size: 14pt">'அதானே பார்த்தேன் எங்கட நம்ம சோப்பு யூஸ் பண்ணுவாளா? என அங்கலாய்க்க, அவளோ டவல், ஆடை எடுத்து கொண்டு கிளம்பினாள்.</span><br /><span style="font-size: 14pt">பதினைந்து நிமிடம் கழித்து வெளியே வர அதற்கு முன்னதாகவே அவளின் வாசம் அவனின் மீது தாக்கியது.</span></p>
<p data-p-id="e4bb9de98984f7b951fed9e65f89910a"><span style="font-size: 14pt">'இப்படி எல்லாம் நடக்கும் என்று கனவுல கூட நினைக்கலை... கடவுளே இதே ரீதியில் போச்சு அவ்ளோ தான்.' என புன்னகைக்க முயன்றான்.</span><br /><span style="font-size: 14pt">அவளோ தலை வாரி முடித்து நின்றாள்.</span></p>
<p data-p-id="7c712b36e8eea28cf99aee37b138f55c"><span style="font-size: 14pt">''தேங்க்ஸ் ரூபன்... அப்பறம் அம்மா ஏதாவது பேசினா மன்னிச்சுடுங்க'' என அறை கதவை திறந்தாள்.</span><br /><span style="font-size: 14pt">அபிராமி இருவரையும் இம்முறை ஆராய நிலா நெற்றியில் குங்குமம் இட சொல்ல நிலா கொஞ்சம் தயங்குவது கண்ணில்பட்டது. ரூபன் அவர்கள் சொல்லியதில் பகீரென உணர்ந்தாலும் அவளுக்கு குங்குமம் இட்டான். நெற்றில் இட சொல்ல ''வேண்டாம் அத்தை அவள் வேலைக்கு செட் ஆகாது" என்றான்.  </span></p>
<p data-p-id="e58dce453dfabdebab1300d7096384b1"><span style="font-size: 14pt">இருவரும் நடிப்பதில் போகட்டும் பிறகு பாக்கியத்திடம் கேட்டு கொள்வோம் என அமைதியாக சாப்பிட்டார்கள்.</span><br /><span style="font-size: 14pt">பின்னர் இருவருமே கிளம்பினார்கள். இருவரும் சென்ற பின்னர் பாக்கியத்திடம் வந்து நின்றார் அபிராமி.</span></p>
<p data-p-id="f6b8c64ff1b5c11e41eb3da77fc08b14"><span style="font-size: 14pt">''எதுக்கு இப்படி குடும்பமா நடிக்கறிங்க? எனக்கு திரும்ப ஏதாவது ஆகிடுமென்றா?'' என்று கேட்க புரியாமல் பாக்கியம் விழித்தார். </span><br /><span style="font-size: 14pt">''என் மகளுக்கு இன்னும் திருமணம் ஆகலைனு புரிஞ்சுக்கிட்டேன். ஆனா ஏன் நடிக்கறிங்க?'' என்றார். </span></p>
<p data-p-id="19751aa476a85965dbb2a53ad4dea379"><span style="font-size: 14pt">''அபிராமி உங்களுக்கு எல்லாம் நினைவுயிருக்கா? உடல்நிலை ஏதும் பாதிப்பு இல்லையே?'' என்று பதற அதே சமயம் தாமஸ் வந்து நின்றார்.</span><br /><span style="font-size: 14pt">''வாங்க அண்ணா... என இருவரும் வரவேற்றார்கள்.</span></p>
<p data-p-id="812a58d1e2da179bed1c0f8034d5d005"><span style="font-size: 14pt">''எப்படி இருக்க அபிராமி... இப்படி ஒரு அதிசயம் நடக்கும்னு நம்ப முடியலை ஆனா ரொம்ப நிம்மதியா இருக்கு...'' என்றார். </span><br /><span style="font-size: 14pt">''அண்ணா என் மகளுக்கும் இவங்க பையனுக்கும் திருமணம் நடக்கலை தானே?'' </span><br /><span style="font-size: 14pt">''இல்லைம்மா'' என்று சொல்ல மனம் வருந்தினாள். கொஞ்சம் கவலையோடு கண்ணீர் துடைத்து பாக்கியத்திடம்</span><br /><span style="font-size: 14pt">''என் மகள் நடிக்கறா அது எனக்காக. உங்க பையன் ஏன் நடிக்கிறார்?அவர் உண்மை சொல்லிட்டு போயிட்டே இருக்கலாமே.. ஏன் சகிச்சுக்கணும்'' என அபிராமி பாக்கியத்திடம் கேட்டார்.</span></p>
<p data-p-id="189af0e23d067ab255e954c8acf48829"><span style="font-size: 14pt">''ஏன்னா ரூபன் பிரகாஷ் நிலாவை விரும்பறான்... ஆனா யாரிடமும் சொல்லலை'' என்று தாமஸ்ஸிடம் இருந்து பதில் வந்தது.</span><br /><span style="font-size: 14pt">''அண்ணா நீங்க சொல்றது உண்மையா ரூபன் நிலாவை விரும்பறானா?'' என பாக்கியம் சந்தோஷமாய் கேட்டார்.</span></p>
<p data-p-id="04a206335f403e0fb49e8672880aadb7"><span style="font-size: 14pt">''ஹ்ம்ம் எனக்கே இன்னிக்கு இப்போ வரும் பொழுது தான் தெரியும் சிவா தான் சொன்னான். ரூபன் ஊரில் இருந்து வந்த அன்று போயி பேசியிருக்கான். அப்போ ரூபனே அவனிடம் சொல்லிருக்கான்'' என்றார் தாமஸ்.</span></p>
<p data-p-id="bdb93334f27febe0f34d9149e30e7dbd"><span style="font-size: 14pt">''ஏன் முன்ன பிடிக்கலை என்று சொன்னான்."</span><br /><span style="font-size: 14pt">''அது ஒன்றுமில்லை அபிராமி அவன் பேப்பரில் வந்த செய்தி பார்த்து நிலா சிரிச்சிருக்கா அதை பார்த்து அப்போ கடுப்பாகி அப்படி பேசிட்டு இருப்பான். இப்போ லவ் என்று சொல்றான் ஏன் பாக்கியம் உங்கிட்ட எதுவும் சொல்லலையா?''</span><br /><span style="font-size: 14pt">''இல்லை அண்ணா ஆனா அவன் குணத்துக்கு எதிரா தான் இருக்கான். இல்லை என்றால் ஒரு வயசு பொண்ணு கூட்டிட்டு வீட்டுக்கு வருவானா? இல்லை நேற்று தனியா அபிராமி சொல்றாங்க என்பதுக்காக அவள் அறைக்கு அனுமதிச்சு இருப்பானா? நீங்க சொல்ற மாதிரி அவனுக்குள் லவ் இருக்கு. ஆனா நிலா மனசில் என்ன இருக்குனு தெரிலை'' என்றார் பாக்கியம்.</span></p>
<p data-p-id="d2dd6087b3634f2a8ebaae39bb4df745"><span style="font-size: 14pt">''அவள் மனசில் கொஞ்சம் மாப்பிளை பற்றி நல்ல அபிப்ராயம் இருக்கும் இல்லை என்றால் நான் புத்தி இல்லாமல் அவர் அறைக்குப்போ என்றதும் தயங்கி போயிருப்பாளா?'' என்றார் அபிராமி.</span><br /><span style="font-size: 14pt">''இப்போ நீங்க என்ன சொல்லிறிங்க அப்போ நேற்று நைட் பேருமே ஒரே அறையில் இருந்தார்களா?'' என்றார் தாமஸ். </span></p>
<p data-p-id="f0cbfc4c8adb58d8202afac82ebd08d6"><span style="font-size: 14pt">''அச்சச்சோ இல்லை அண்ணா... அவன் கொஞ்ச நேரத்தில் வெளிய வந்து பார்த்திருப்பான் போல அதை நிலாகிட்ட சொல்லி இருப்பான். நிலா வெளியே வந்து எங்களோட இருந்தா காலையில் அபிராமி எழுந்ததும் இப்ப தான் எழுந்ததா காட்டிகிட்டா'' என்றார் பாக்கியம்</span><br /><span style="font-size: 14pt">''ஹ்ம்ம் அப்போ அபிராமிக்காக ஒருத்தர் ஒருத்தர் உதவி செய்யறாங்க?'' என்றார் தாமஸ். </span></p>
<p data-p-id="f7ff3bdec92aea9f35fcd63fb06576a8"><span style="font-size: 14pt">''ஏன் அண்ணா இவங்களை என்ன செய்ய மறுபடியும் கல்யாணம் செய்ய பேச்சு எடுக்கலாமா?''</span><br /><span style="font-size: 14pt">''ஹ்ம்ம் எடுத்து என்ன செய்ய அப்போவும் இல்லை என்றே சொல்லுவாங்க.. நீங்க பேசாம அவங்க வாய்ல காதலை சொல்ல வைங்க'' என தாமஸ் ஆலோசனை கூறினார். </span></p>
<p data-p-id="2255f84a58c55fd638f33ee11ae07357"><span style="font-size: 14pt">''அது எப்படி அண்ணா அவங்க வாயால சொல்ல வைக்கறது?'' என்று பாக்கியம் கேட்க, தாமஸ் அபிராமியை பார்த்தார். </span></p>
<p data-p-id="a7a05e2f02e856d8b0c29881a1aeb749"><span style="font-size: 14pt">''இப்போ அவங்க உனக்கு நினைவில்லைனு நாடகமாடுறாங்க அதையே கண்டினியூ பண்ணுங்க. எப்படி ஒரே அறையில் தினமும் நடிக்க முடியும்? ரூபன் அதுக்கு ஒரு முடிவுக்கட்ட செய்வான் தானே?'' என்றதும் பாக்கியம் இது சரி தான் என தலையை அசைக்க அபிராமி யோசித்தார். </span></p>
<p data-p-id="4f2e6bf0a911b904de32bf75d946c323"><span style="font-size: 14pt">''என்ன இருந்தாலும் அவள் பெண்.'' என தயங்க பாக்கியம் முன் வந்து</span><br /><span style="font-size: 14pt">''எந்த சூழ்நிலை என்றாலும் என் மகன் முறை தவற மாட்டான் அண்ணி... நம்புங்க'' என்றதும் அபிராமியும் நாடகத்தில் இணைந்தார்கள்.</span></p>
<p data-p-id="28c4753bec2baac78ded554cc6bda11f"><span style="font-size: 14pt">பாக்கியம் அபிராமி தாமஸ் மூவருக்கும் தங்கள் காதல் தெரிந்து விட்டதை அறியாமல் ரூபன் இதில் தானாகவே நடிக்க ஆரம்பித்தான். என்ன நிலா தான் எதையும் அறியாமல் </span><br /><span style="font-size: 14pt">இதை எல்லாம் அறியாமல் சித்திக்கிடம் நிலா தாயின் ரிப்போர்ட் பார்த்து அவன் கூறுவதை கேட்டாள்.</span></p>
<p data-p-id="1e03d774899cf3c1e3cf597186719337"><span style="font-size: 14pt">அதில் அவளுக்கு கவலையே தந்தது. அன்னைக்கு தானாக நினைவு வந்தால் மட்டுமே தீர்வு உண்டு என்று சொல்லி, மருந்து மாத்திரை மட்டும் அதே எடுத்துக்கொள்ள சொன்னார்.</span><br /><span style="font-size: 14pt">மாலினியிடம் ரூபன் வீட்டுக்கு வந்து இருப்பது வரை சொல்லி முடித்தாள். அதையெல்லாம் கேட்டு முடித்த மாலினிக்கு மனதில் ஒன்று தோன்றியது. </span></p>
<p data-p-id="1b5ffa5480c520f6cd4c13235a3a7d36"><span style="font-size: 14pt"> நிலா-ரூபன் உறவு ஏதோ ஒரு ஜென்மத்தில் பயணிக்கின்றது என்பது மட்டுமே. மாலினிக்கு புரிந்தாலும் நிலாவிடம் சொல்ல தயங்கினாள். அவளே தாயின் நலத்தில் கவலையில் இருப்பதால்...</span></p>
<p data-p-id="9dcacabee34bb56c20041b072a3d4afe"><span style="font-size: 14pt">ரூபனுக்கு மனமெல்லாம் சந்தோஷத்தின் வாசம் வீசியது. நிலா பணி முடித்து தனது வீட்டிற்கு வருவாள் என வழக்கத்துக்கு மாறாக வீடு வந்து சேர்ந்தான் ரூபன் பிரகாஷ்.</span><br /><span style="font-size: 14pt">பாக்கியம் நம்ப முடியாமல் தான் பார்த்தார். இல்லையா பின்ன எப்பொழுதும் பணிக்காரணமாக மணி பதினொன்று வந்து சேரும் அவன் இன்று எட்டுக்கே வந்து நிற்க.</span><br /><span style="font-size: 14pt">நிலாவோ ஏழுக்கு வந்து தாயின் அரவணைப்பில் கட்டு உண்டு இருந்தாள். பாக்கியத்திடம் சிறுசிறு உதவி செய்து முடிக்க ரூபன் வந்ததும் இடம் தெரியாமல் பதுங்கினாள். </span></p>
<p data-p-id="cc1e628e14793dbaa559f4e133cbacc3"><span style="font-size: 14pt">பாக்கியமும் அபிராமியும் ஒருவர் ஒருவர் பார்வையில் பரிமாறி கொண்டார்கள்.</span><br /><span style="font-size: 14pt">''அண்ணி என் பையன் ஸ்பீடா இருக்கான்... எப்பவும் பதினொன்று வருபவன் மருமகளால் எட்டுக்கே வந்திருக்கான்.. மருமக தான் சரியில்லை... பாருங்க பதுக்கி போயிருக்கா.'' என்றார் பாக்கியம். </span><br /><span style="font-size: 14pt">''அதுக்கு நான் என்ன செய்ய அண்ணி. அவள் சுபாவம் அப்படி... என்ன இருந்தாலும் மாப்பிள்ளை ஆம்பள. என் பொண்ணு கூச்சம் பயம் எல்லாம் இருக்குமே''</span><br /><span style="font-size: 14pt">''ஐயோ அண்ணி இப்படி இரண்டும் இருந்தா எப்போ நாம கல்யாண சாப்பாடு சாப்பிடறது. பேரன் பேத்தி எடுக்கறது.? உங்களுக்கு எப்படியோ எனக்கு என் பையனின் வரிசை பார்த்துட்டு தான் நிம்மதி..அதுக்கு குயிக்கா கல்யாணத்தை முடிக்கணும். இதுங்க அவங்க காதலை உணர்ந்து அதுக்கு பிறகு ஒருத்தருக்கு ஒருத்தர் சொல்லுவாங்கனு எனக்கு நம்பிக்கை இல்லை. ஒரு வருஷத்தை வேஸ்ட் பண்ணின ஆட்கள் இவங்க. நம்ம அவங்களை பண்ற டார்ச்சர்ல அவங்களாவே லவ் சொல்லி நம்மகிட்ட கல்யாணம் ஏற்பாடு சொல்ல வைக்கணும்'' என்றதும் அபிராமி அரை மனதாய் ஒப்புக்கொண்டார்.</span></p>
<p data-p-id="e1d84f37956149acd46ada106575fae1"><span style="font-size: 14pt">மெல்ல நடந்து நிலாவிடம் ''மாப்பிள்ளை வந்துட்டார் அவருக்கு தேவையானதை எடுத்துக்கொடு இங்க வந்து நிற்கற'' என்றார் அபிராமி.  அன்னை சொன்னதால் திருதிருவென முழித்து நிலா ரூபன் அறைக்கு  சென்றாள்.</span><br /><span style="font-size: 14pt">கதவை தட்ட போக அபிராமி பார்ப்பதை அறிந்து தட்டவும், முடியாமல் கதவை திறந்தாள்.</span></p>
<p data-p-id="14d6c3180b284709cf5bb3ff8f6f229d"><span style="font-size: 14pt">கடவுளே ரூபன் நேற்று இருந்த கோலம் எல்லாம் இல்லாமல் நார்மலா இருக்கனும் என்ற வேண்டுதலோடு சென்றாள்.</span><br /><span style="font-size: 14pt">நிலா உள்ளே வர மாட்டாள் என கதவை திறந்து ரூபன் வரவும், நிலா அபிராமியை பார்த்தபடி கதவை திறக்க, இருவருமே மோதி நின்றார்கள்.</span></p>
<p data-p-id="acf2901ce9cd5836876ad3c456da8b56"><span style="font-size: 14pt"> நிலாவுக்கு தான் இதயம் வெளியேறிவிடும் அளவும் பயம் கவ்வியது. ரூபன் தவறாக நினைத்து கொண்டாலும் சரி, இல்லை பாக்கியம் ஆன்ட்டி தவறாக எண்ணினாலும் தனக்கு அசிங்கம் என பதறினாள்.</span></p>
<p data-p-id="29a36983d44603847cc15b87502ff1c5"><span style="font-size: 14pt">ரூபனோ ''சாரி நிலா பார்க்கலை.'' என்றவன் அபிராமி இருப்பதை அறிந்து ''கொஞ்சம் தண்ணீர் வேணும் நிலா'' என அதிகாரமாய் உரிமையாய் ஏவல் செய்தான்.</span><br /><span style="font-size: 14pt">ரூபன் மனம் தவறாக எண்ணவில்லை என்ற நிம்மதியோடு கிச்சன் சென்றாள். பாக்கியம் பார்க்க அவனோ</span><br /><span style="font-size: 14pt">''அவன் வேணுமின்னா இடிச்சு இருக்க மாட்டான்.. கவனிக்கலை'' என்றே சொன்னதும் முழு நிம்மதியை அடைந்தாள். </span></p>
<p data-p-id="570b9b63211c2c1d1b9f3d313d2e29fa"><span style="font-size: 14pt">''நானும் பார்த்து நடந்து இருக்கனும் அத்தை அம்மா பார்க்கறாங்க என்ற பயத்தில் முன்னால பார்க்காம கதவை திறந்துவிட்டேன். தப்பு என் மேலயும் தான்'' என நிலா நீரை எடுத்து கொண்டு போனாள்.</span></p>
<p data-p-id="3f93adf50a95a200c5cb3c80091cb8bc"><span style="font-size: 14pt">அவள் அத்தை என்றதுமே பாக்கியம் மனம் குளிர்ந்தது. 'சே இந்த நிலாவை ஏன் இப்படி சோதிக்கற... என் பையன் கூடிய சீக்கரம் காதலை சொல்லிடனும். இப்படி அவர்களை பார்க்க கடினமா இருக்கு' என பெருமூச்சு கொண்டார்.</span></p>
<p data-p-id="df0fc8eb9d9612cadeb278e89cf4b8a2"><span style="font-size: 14pt">ஹாலில் வந்த பாக்கியம் ஏன் டா வெளியே எங்காவது போறியா?'' என்று  கேட்டார். </span><br /><span style="font-size: 14pt">''இல்லைம்மா'' என்றான் ரூபன். </span></p>
<p data-p-id="1e92b4de0a477e8bf77d55aa50063163"><span style="font-size: 14pt">''அப்போ டீ ஷர்ட் போட்டு இருக்க?'' என்றதும் நிலாவை பார்க்க பாக்கியத்திற்கு புரிந்து போனது. இவள் எதிரில் ஷர்ட் போடாம இருக்க கூடாதுனு போட்டு இருக்கானா? நிலாவும் அவனை மெச்சுதலாக எண்ணினாள்.</span></p>
<p data-p-id="2bf9cbfacb4dc89090a67c45a2fbf470"><span style="font-size: 14pt">அபிராமி பாத்ரூம் செல்ல பாக்கியம் இருவரிடம் வந்து ''பிரகாஷ் நிலா அம்மா உங்க அறையில் சென்று நிலா துணியில் சேலை எடுக்க போனாங்க அப்போ உன் திங்க்ஸ் மட்டும் பார்த்து அவளுடையதை கேட்டாங்க பீரோவில் இருக்குனு சமளித்துட்டேன். அதனால அவளோட டிரஸ் உன் பீரோவில் வச்சிடு... அப்பறம் காலையிலே நிலா கழுத்தில் தாலி என்ன மாடல்னு கேட்டாங்க. அதனால இந்த செயின் அவங்க வரதுக்கு முன்ன அவ கழுத்தில் போடு'' என்று நீட்ட ரூபன் குழம்பி போனான்</span></p>
<p data-p-id="2791b3547e0cff11ad5d4ecf22d47246"><span style="font-size: 14pt"> நிலாவோ சிலையாக மாறி போனாள். ஆனால் அபிராமி கதவை திறக்கும் சப்தம் கேட்க இருவருமே சுதாரித்து கொண்டார்கள்.</span></p>
<p data-p-id="17a10ccc703511b01c5f6ffa1116272a"><span style="font-size: 14pt">ரூபன் அவசரமாக அந்த செயின் எடுத்து நிலா கழுத்தில் அணிவித்தான். அணிவித்தவன் அப்படியே அவளையே பார்க்க அவளோ அப்படியே அவனை தான் இமைக்காமல் பார்த்தாள்.</span><br /><span style="font-size: 14pt">கொஞ்சம் ஏதோ உணர்வுக்கு உயிர் கொடுத்த நிம்மதியில் பாக்கியம் நகர அபிராமியும் அமைதியாக கிச்சனுக்கு போனார்.</span><br /><span style="font-size: 14pt">ரூபனோ அத்தைக்கு டவுட் வர கூடாது என்று நிலாவை விலகி விட்டு டிவியில் கண்களை பதித்தான். </span></p>
<p data-p-id="c15aae447b69002942dff4602b8902a6"><span style="font-size: 14pt">நேராக நிலா அறைக்கு சென்று அவனின் உடமைக்கு பக்கத்தில் இவளது சேலையினை சிலது எடுத்து வைத்தாள்.</span><br /><span style="font-size: 14pt">கடவுளே அம்மாவுக்கு விரைவில் நினைவு திரும்பணும்... ரூபன் அருகாமை இருந்து பழகிட்டேன் என்றால் என்னால அப்பறம் தனித்து வாழ முடியாது. அவன் அருகாமை மனசு ஏங்க ஆரம்பிக்கும் என வேண்டினாள். ஏற்கனவே அவனின் அருகாமையில் மனம் படாத பாடுபட்டு கொண்டிருப்பதை உணராமல்....</span></p>
<p data-p-id="c8d049fa786854c37d6386a5b544d0ab"><span style="font-size: 14pt">இரவு உணவையும், நேற்று போலவே ரூபனுக்கு நிலாவே பரிமாற சொல்லிட, அவள் வேறுவழியின்றி பரிமாறினாள். அடிக்கடி ரூபன் பார்க்கும் பார்வை அவள் கவனிக்காமல் போனாள். </span></p>
<p data-p-id="c8d049fa786854c37d6386a5b544d0ab"><span style="font-size: 14pt">தொடரும் </span></p>
<p data-p-id="c8d049fa786854c37d6386a5b544d0ab"><span style="font-size: 14pt">பிரவீணா தங்கராஜ் </span></p>]]></content:encoded>
						                            <category domain="https://onlinetamilnovels.com/community/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-praveena-thangaraj/">முதலாம் சந்திப்பில்...-Praveena Thangaraj</category>                        <dc:creator>Praveena Thangaraj</dc:creator>
                        <guid isPermaLink="true">https://onlinetamilnovels.com/community/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-praveena-thangaraj/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-11/</guid>
                    </item>
				                    <item>
                        <title>முதலாம் சந்திப்பில்-10</title>
                        <link>https://onlinetamilnovels.com/community/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-praveena-thangaraj/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-10/</link>
                        <pubDate>Tue, 23 Jun 2026 13:12:49 +0000</pubDate>
                        <description><![CDATA[அத்தியாயம்-10
          அபிராமி வேறு ஓயாமல் கத்தி கொண்டிருக்க &#039;&#039;அம்மா கொஞ்சம் அமைதியா இருங்க ப்ளீஸ்... அவர் வருவார்&#039;&#039; என நிலா எடுத்துரைக்க &#039;&#039;இப்போ இப்போ வர சொல்லு மாப்பிளையை அப்போ தான் நம்ப...]]></description>
                        <content:encoded><![CDATA[<p data-p-id="3147c95027a9c75048483c1f24654149"><span style="font-size: 14pt"><b>அத்தியாயம்-10</b></span></p>
<p data-p-id="e57a81acd39ac9fe2cf726c439f00f55"><span style="font-size: 14pt">          அபிராமி வேறு ஓயாமல் கத்தி கொண்டிருக்க ''அம்மா கொஞ்சம் அமைதியா இருங்க ப்ளீஸ்... அவர் வருவார்'' என நிலா எடுத்துரைக்க ''இப்போ இப்போ வர சொல்லு மாப்பிளையை அப்போ தான் நம்புவேன்'' என விடாது புலம்பினார். </span></p>
<p data-p-id="e8b9f66a73976b59f9541ab25abbad15"><span style="font-size: 14pt">''அவர் வந்துட்ட அமைதியா இருப்பியா?'' என்று நிலா கேட்க, </span></p>
<p data-p-id="8911ee93818cd5aeffb73552b9603790"><span style="font-size: 14pt">''அவர் வந்துட்டா நம்பறேன்... சொல்றதை கேட்பேன்" என்றார். இதில் ஹாஸ்டலில் புகார் அதிகமாக, நிர்வாகி வேறு நிலாவிடம் வந்து</span><br /><span style="font-size: 14pt">''நிலா உன் நிலைமை புரியுது பட் இங்க இருக்கறவங்க எல்லோரும் ரொம்ப திட்டறாங்க... உங்க அம்மாவை ஏற்கனவே இருக்கற ஆசிரமத்துக்கே அனுப்பலாமே'' என்று ஆலோசனை கூறினார். </span></p>
<p data-p-id="ba07832887209048b12a8bfd839d4399"><span style="font-size: 14pt">நிலா உக்கிரமாக பார்த்து விட்டு போனை எடுத்தாள். தாமஸ் அங்கிள் ஊரில் இல்லை என்றதும் அடுத்து ரூபனுக்கு அழைத்தாள். </span><br /><span style="font-size: 14pt">அவனும் உடனே எடுத்து ''சொல்லு" என்றான்.</span><br /><span style="font-size: 14pt">''ரூபி நான் நிலா.''</span><br /><span style="font-size: 14pt">''ஹ்ம்ம் தெரியுது சொல்லு நிலா என்றான்.</span><br /><span style="font-size: 14pt">''அது அம்மா...''</span><br /><span style="font-size: 14pt">''என்னாச்சு எதாவது பிரச்சனையா?'' என்றான். </span></p>
<p data-p-id="62ac25d666e06b1219d0179f3018b4ba"><span style="font-size: 14pt">''ஹ்ம்ம் அம்மா தூக்கத்தில் அலறி... என்னென்னவோ பேசறாங்க, கத்தாறாங்க.. இங்க ஹாஸ்டல்ல எல்லோரும் அவங்களை கூட்டிட்டு போக சொல்லி ஒரே நச்சரிக்கறாங்க... என்ன செய்ய தெரிலை... தாமஸ் அங்கிள் ஊரில் இல்லை எங்க போறதேன்னு தெரிலை... அம்மாவ எங்கயாவது அனுப்ப சொல்லி பேசறாங்க. எனக்கு கஷ்டமா இருக்கு நான் தாமஸ் அங்கிள் வரும் வரை.. எங்க.. யாவது...'' என்று திணறி பேசினாள். </span></p>
<p data-p-id="fbd5da2f486d84dff984f9a353014022"><span style="font-size: 14pt">''உன் திங்க்ஸ் பேக் பண்ணி இரு வர்றேன்'' என வைத்தான்.</span><br /><span style="font-size: 14pt">''ம்மா இங்க பாரு அவர் வர்றார்.. இப்படி கத்தாதே...'' என்றதும்</span><br /><span style="font-size: 14pt">''என்னது மாப்பிள்ளை வர்றாரா..அப்ப சரி." என அமைதியின் உருவமாக இருந்தார்.</span></p>
<p data-p-id="290952952a130ba6d82c03be5b5689a1"><span style="font-size: 14pt">நிலாவுக்கு என்ன செய்ய என்று புரியவில்லை... ரூபனை என் கணவனாக அல்லவா அம்மா நினைக்கறாங்க... அப்பா இறந்ததை கூட ஏற்றுக்கறாங்க ஆனா ஏன் எனக்கு கல்யாணம் ஆகலை என்றதை ஏற்றுக்க மாட்றாங்க..'' என காத்திருக்க போலீஸ் வண்டி வந்து நின்றது.</span></p>
<p data-p-id="9bf4129f48874a54997e7a4c420dad7f"><span style="font-size: 14pt">காக்கி உடையில் கம்பீரமாக உள்ளே வந்தான். அவனை பார்த்ததும் தான் அபிராமி நிம்மதி அடைந்தார்.</span></p>
<p data-p-id="3cd52ef071ba316e182463b0f0051d53"><span style="font-size: 14pt">''மாப்பிள்ளை இது என்ன இடம் ஏன் என் பொண்ணு உங்க கூட தங்கலை." என்றார். </span></p>
<p data-p-id="0ffc08a894356425d4c23428862e1b1b"><span style="font-size: 14pt">''நீங்க வருவதால் வீடு நீட் பண்ணலை அத்தை அதான் கொஞ்ச நேரம் இங்க இருக்க சொன்னேன். இதோ நம்ம வீட்டுக்கு போகலாம்'' என சமாளித்து சொல்ல தலையை தலையை ஆட்டி கிளம்பினார் நிலா அன்னை.</span></p>
<p data-p-id="0015bdb87299d7ef3822d5363f0c1466"><span style="font-size: 14pt">''அம்மாவுக்கு போன் செய்துட்டேன் நிலா அவங்க உங்களை வரவேற்க இருக்காங்க நாம வீட்டில் போய் பேசிக்கலாம்'' என்றதும் சரியென தலையசைத்து கிளம்பினார்.</span></p>
<p data-p-id="5d8253d579997f563429e3d0af284b41"><span style="font-size: 14pt">இதுவரை அமைதியாக இருந்த ஹாஸ்டல் பெண்மணி ''அப்போ தங்கநிலா கல்யாணம் ஆனவளா? ஏன் இங்க தங்க வச்சிங்க?'' என கேட்டதும் ரூபனோ நிலா அங்கில்லை என்றதும் ''கல்யாணம் ஆனவள் இல்ல.. ஆகா போறவ.'' என் சொல்லிவிட்டு கண்ணாடி அணிந்து கிளம்பினான்.</span></p>
<p data-p-id="e0ac3076780b1849a2f7147b26aeed51"><span style="font-size: 14pt">வண்டியில் பலத்த அமைதி அபிராமிக்கு ரூபனை பார்த்ததும் நிறைவை தர மகளையும் அவனையும் பார்த்து பூரித்தபடி வந்தார்கள்.</span><br /><span style="font-size: 14pt">ரூபன் வீட்டின் கேட் அருகே பாக்கியம் வரவேற்க தயாராகி நின்றார். தனது மகன் முன்பு தாமஸ் அண்ணா பார்த்த பெண்ணோடு, வீட்டுக்கு அவன் அம்மாவோடு வருகின்றான் என்றதும் அவர்களுக்குள் ஒரு மகிழ்ச்சி மகன் சாமானியமாக ஒரு பெண்ணை அழைத்து வர மாட்டான்.</span></p>
<p data-p-id="b71745868f780502c1fe32f6cf149be9"><span style="font-size: 14pt">அப்போ அந்த பொண்ணு பிடிச்சிருக்கா? எதுக்கோ அந்த பெண் வரட்டும் நேரில் இரண்டு பேர் ரியாக்ஷன் பார்த்தாலே கண்டுபிடிச்சுடலாம்.</span><br /><span style="font-size: 14pt">ரூபன் இறங்கி கையை நீட்ட நிலா தயங்கியே கையை கொடுத்தாள். பின்னர் இறங்கி தாயை அழைத்து வந்து கேட்டின் அருகே போக, பாக்கியம் முகம் மலர்ந்து இருந்தது.</span></p>
<p data-p-id="713e280cbc7b2ee7893379a3495ab070"><span style="font-size: 14pt">'இந்த பொண்ணா? இவளை தானே அன்னிக்கு நான் இவனிடம் பேசினேன். அப்போ அவன் முறுக்கிக்கிட்டான். சே அவன் அன்னிக்கு இவளை பார்க்கவே இல்லை... பேர் என்ன சொன்னான் தங்கநிலா.' என்றெண்ணி "வாம்மா....'' வாங்க...'' என இருவரையும் அழைத்து உள்ளே சென்றார்கள்.</span></p>
<p data-p-id="15199c1bf8ae6a62d54a7de28dbe79f4"><span style="font-size: 14pt">தங்கநிலாவுக்கு அன்று வந்துவிட்டு ஓடிய நினைவு வந்தது. இருந்தும் தாயின் நிலை அதற்கு மேல் யோசிக்கவைக்கவில்லை.</span><br /><span style="font-size: 14pt">''ம்மா அது நிலா.. அவங்க அம்மா அபிராமி... போன்ல...''</span><br /><span style="font-size: 14pt">''புரியுது போ.. இனி நான் பார்த்துக்கறேன்... வாங்க எப்படி இருக்கிங்க'' என அபிராமியை தாங்கி கொண்டே அழைத்து வர, நிலா பாக்கியத்தை பயந்து  பார்த்தாள்.</span></p>
<p data-p-id="630e816d7728b381b2f820a1151c920e"><span style="font-size: 14pt">இவங்க நல்லவங்க பட் என்னை இப்படி வீட்டுக்கு கூட்டிட்டு வந்துட்டார் அவங்க அதுக்கு என்ன நினைச்சுக்கிட்டாங்க தெரியலை... அவங்களுக்கு என்னை நினைவு வரலையா? என பம்மினாள். </span></p>
<p data-p-id="b0bca25889105577b524108b77bf7b8d"><span style="font-size: 14pt">''உட்காரு நிலா... அன்னிக்கு மாதிரி ஓடிடமாட்டல இரு காபி கலக்குறேன்.'' என்றதும் அவர்களுக்கு தன்னை தெரிந்து இருக்கு என அம்மாவை பார்த்தாள்.</span><br /><span style="font-size: 14pt">அபிராமி சுற்றி முற்றி எதையோ தேடியபடி யோசிக்க</span><br /><span style="font-size: 14pt">''என்னம்மா பண்ணுது ஏதேனும் வேண்டுமா?'' என நிலா கேட்க</span><br /><span style="font-size: 14pt">''இல்லை உங்க கல்யாணம் அப்போ நான் மருத்துவமனையில் இருந்து இருப்பேன்.. ஆனா கல்யாண போட்டோ இல்லையே வீட்டில்" என்றதும் நிலா அச்சத்தில் பேச்சிழந்து நின்றாள். </span></p>
<p data-p-id="6c5b331dc68b53052a8b8b6bbed716b3"><span style="font-size: 14pt">''அது....அதும்மா''</span><br /><span style="font-size: 14pt">''போட்டோ வீடியோ எல்லாம் உங்க வீட்டில் எறிந்த தீவிபத்தில் அழிஞ்சுடுச்சு அத்தை'' என வெகு இயல்பாய் கூறினான் ரூபன். </span><br /><span style="font-size: 14pt">''என்ன வீடு தீவிபத்து ஆச்சா?''</span><br /><span style="font-size: 14pt">''ஹ்ம்ம் ஆமா அத்தை அதுல உங்க நாத்தனார் ரேவதி அவங்க இறந்துட்டாங்க.. மாமா இறந்த அன்று தான். அதான் நீங்க என்று முடிவு செய்து விட்டோம் இப்போ தான் புரியுது மாமா இறந்த அன்று நீங்க வேற ஆஸ்பத்திரில இருந்து இருக்கிங்க, வீட்டில ரேவதி அவங்க இறந்தது''  </span></p>
<p data-p-id="e1f0be5381689635e2dea8faad6a9767"><span style="font-size: 14pt">''அண்ணன் விட்டுட்டு தங்கை போயி சேர்ந்துட்டாளா? என்னையும் அவர் கூட்டிட்டு போயி இருக்கலாம்'' என்றதும் நிலா அழுதாள்.  </span></p>
<p data-p-id="f2860eea8071fbe1745bd8b7ed2874c4"><span style="font-size: 14pt">''உங்க பொண்ணு நிலா அழுவரா அத்தை அப்படி பேசாதிங்க அவளுக்கு நீங்க தானே ஆதரவு இப்போ'' என்றதும் கண்ணீர் துடைத்து அபிராமி</span><br /><span style="font-size: 14pt">''ஆமாம்மா இனி அப்படி பேசலை... உன் வீட்டுக்கு முதல் முறை வந்து இருக்கேன்... இனி அப்படி பேச மாட்டேன்..'' என நிலாவிடம் கூறி கன்னத்தில் தட்டி கொண்டார்.</span></p>
<p data-p-id="aef22e1d31e498341b995e072a59ea65"><span style="font-size: 14pt">பாக்கியம் இரவென்றாலும் காபி எடுத்து வந்து நீட்ட அபிராமி வாங்கி பருகி "என் மகளை நல்லா பார்த்துக்கிட்டிங்க நன்றிம்மா'' என்றதும் பாக்கியம்</span><br /><span style="font-size: 14pt">''அதுக்கு எதுக்கு நன்றி... நீங்க இனி நல்லா ரெஸ்ட் எடுங்க அப்போ தான நல்லா இருக்கும் உடம்பும் மனசும்'' என்றதும் இருவர் பேசி கொள்ள ரூபனோ கண்களில் நிலாவிடம் தனியாக பேச அழைத்தான்.</span></p>
<p data-p-id="1fb9798e199de88e476587b7ca9be773"><span style="font-size: 14pt">புரியாமல் குழம்பி நிற்க பாக்கியம் சிரித்தபடி நிலா ரூபன் கூப்பிடறான் பாரு போய் என்னனு கேளு" என்றார்.  அவளை அவன் இருக்கும் பக்கம் அனுப்ப பார்க்க அவளோ "நானா? இல்லை..'' என தடுமாற</span><br /><span style="font-size: 14pt">''போ இனி நான் இங்க சம்மந்தியம்மாகிட்ட பேசிட்டு இருக்கேன் நீ மாப்பிளையை கவனி'' என அனுப்ப நிலா மயக்கம் வராதா குறையோடு எழுந்து ரூபன் அருகே போனாள்.</span></p>
<p data-p-id="7bad515532ee8279a76f2b94451c5b6c"><span style="font-size: 14pt">''எதுக்கு என்னைஇப்படி கூட்டிட்டு வந்திங்க?''</span><br /><span style="font-size: 14pt">''என்ன?''</span><br /><span style="font-size: 14pt">''அது கண் அசைத்து...''</span><br /><span style="font-size: 14pt">''ஐயோ தனியா பேசணும் என்றதும் அப்படி கூப்பிட்டேன்... ஏன் நீ என்ன நினைச்ச...?'' என்றான் ஒரு மாதிரி பேச்சால்</span><br /><span style="font-size: 14pt">''நத்திங் சொல்லுங்க...'' என்றாள்.</span></p>
<p data-p-id="1b121f31bb221a6727a6f5b7fb65d1d7"><span style="font-size: 14pt">''ஹ்ம்ம் அது டாக்டர் என்ன சொன்னங்க என்று சொல்ல வந்தேன். அது உங்க அம்மா ரொம்ப டிப்ரஸ்ல இருக்காங்க... ஒரு வருடம் கணவரை இழந்தது பிரம்பை பிடிச்சது போல, உள்மனசு ரொம்ப பதிச்சு இருக்கு... கணவர் கண் எதிரில் விபத்து ஏற்பட்டதால் அதை அவங்க உங்க அப்பா இறந்ததை ஏற்றுக்காரங்க பட் உனக்கு கல்யாணம் பேச்சு எடுத்தது என்னை அவங்க மாப்பிள்ளையா நினைச்சு ஆழ்மனசில் உன் கணவரா பதிய வச்சி இருக்காங்க..</span><br /><span style="font-size: 14pt">அதனால் உடனே இப்போ அப்படி இல்லை கல்யாணம் நடக்கலை என்பது எல்லாம் சொன்ன, மறுபடியும் மனசு உடைஞ்சு முன்ன மாதிரி ஆகா வாய்ப்பு இருக்கு.</span><br /><span style="font-size: 14pt">அதனால கொஞ்சம் நமக்கு கல்யாணம் ஆனதாவே அவங்களிடம் சொல்ல சொன்னார் டாக்டர்... கொஞ்சம் நினைவு முழுசா அவங்க யோசிச்சு தானா கேட்கும் பொழுது உண்மை சொல்ல சொல்லறாங்க... இப்போ என்ன செய்ய என்று நீ தான் சொல்லணும்... பீகாஸ் முடிவு உன்னோடையது... உங்க அம்மா ஏமாற்றி பிறகு உண்மை தெரியறதை விட இப்பயே சொல்லிடறது என்றாலும் ஓகே இல்லையா டாக்டர் சொல்படி, கொஞ்ச நாள் பார்க்கலாம் என்றாலும் ஓகே...?'' என நிறுத்தி அவளை ஏறிட்டான். </span></p>
<p data-p-id="0c2811bc561cf2a4ddc8df22c5410e9d"><span style="font-size: 14pt">''இதனால உங்களுக்கு பிரச்சனை இல்லையா?''</span><br /><span style="font-size: 14pt">''எனக்கு என்ன பிரச்சனை... உனக்கு தான் எதனால் வரலாம்... '' என சொல்ல கொஞ்ச நேரம் அமைதியாக யோசித்தவள்</span><br /><span style="font-size: 14pt">''டாக்டர் சொன்னது போல செய்யலாம் உங்களுக்கு பிரச்சனை இல்லைனா.''</span><br /><span style="font-size: 14pt">''ஹ்ம்ம் ஓகே எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை.. அப்படி டாக்டர் சொல்ற மாதிரி நடக்கணும் என்றால் நீ இங்க தான் இருக்க முடியும்... ஏன்னா அவர்களை பொறுத்தவரை இது உன் புகுந்த வீடு'' என்றதும் நிலா அவனை ஏறிட அவனும் சளைக்காமல் பார்த்தான்.</span><br /><span style="font-size: 14pt">''ஹ்ம்ம்'' என்றாள்.</span></p>
<p data-p-id="552ab5cbb8c766d50eb0eb2bcecaf0d4"><span style="font-size: 14pt">'ஹ்ம்ம்மா? அடிப்பாவி இப்படி இருந்தா என் நிலைமை? சட்டுபுட்டுனு என் லவ் ஓகே சொல்லுடி இது உன் புகுந்த வீடா நிரந்தரமா மற்றறேன் ' என்பது போல மனதோடு பேசினான்.  </span><br /><span style="font-size: 14pt">நிலாவுமே, 'சொன்னாலும் சொல்லலானாலும் மனசில் உன்கூட வாழறேன் ரூபி.... இது என் புகுந்த வீடு தான்' என அவளும் மனதோடு சஞ்சரித்தாள். </span></p>
<p data-p-id="552ab5cbb8c766d50eb0eb2bcecaf0d4"><span style="font-size: 14pt">தொடரும் </span></p>
<p data-p-id="552ab5cbb8c766d50eb0eb2bcecaf0d4"><span style="font-size: 14pt">பிரவீணா தங்கராஜ் </span></p>]]></content:encoded>
						                            <category domain="https://onlinetamilnovels.com/community/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-praveena-thangaraj/">முதலாம் சந்திப்பில்...-Praveena Thangaraj</category>                        <dc:creator>Praveena Thangaraj</dc:creator>
                        <guid isPermaLink="true">https://onlinetamilnovels.com/community/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-praveena-thangaraj/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-10/</guid>
                    </item>
				                    <item>
                        <title>முதலாம் சந்திப்பில்-9</title>
                        <link>https://onlinetamilnovels.com/community/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-praveena-thangaraj/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-9/</link>
                        <pubDate>Tue, 23 Jun 2026 13:09:29 +0000</pubDate>
                        <description><![CDATA[அத்தியாயம்-9
             ரூபன் தன் அலைப்பேசி எண்ணை குறித்ததால், எந்நேரம் என்றாலும், அவன் போன் செய்து பேசுவான் என ஆவலோடு இருந்தாள். நேரம் செல்ல செல்ல &#039;சே அவன் என் நம்பர் எல்லாம் நோட் பண்ணலை...]]></description>
                        <content:encoded><![CDATA[<p data-p-id="fec3273b0f290655e9f23049b25e7f17"><span style="font-size: 14pt">அத்தியாயம்-9</span></p>
<p data-p-id="6b7e77d193af4862170728860970fa7b"><span style="font-size: 14pt">             ரூபன் தன் அலைப்பேசி எண்ணை குறித்ததால், எந்நேரம் என்றாலும், அவன் போன் செய்து பேசுவான் என ஆவலோடு இருந்தாள். நேரம் செல்ல செல்ல 'சே அவன் என் நம்பர் எல்லாம் நோட் பண்ணலை போல நான் தான் கிறுக்குத்தனமா அப்படி யோசிச்சு ஏமாந்துட்டேன்" என வருந்தினாள்.</span></p>
<p data-p-id="c1e96e985d3e782a041fcb93e39ab8a0"><span style="font-size: 14pt">          ஆனாலும் ஒவ்வொரு நாளும் எதிர்பார்த்தாள். அவள் எண்ணத்திற்கு ஏமாற்றம் தராமல், அன்று ரூபன் தங்கநிலாவிற்கு போன் செய்தான்.</span><br /><span style="font-size: 14pt">''நி..நிலா...?'' என்றான் ரூபன்.</span><br /><span style="font-size: 14pt">''ஆமா நீங்க...?'' என்றாள்.</span><br /><span style="font-size: 14pt">''நான் ரூ..ரூபன் பிரகாஷ்.. நீ உடனே கிளம்பி.. நேச இல்லம் வா?'' என்று தயக்கமாய் பேசினான். </span></p>
<p data-p-id="8a3d9cb4f34c2951c8a2fa89259a8b71"><span style="font-size: 14pt">''ஹலோ என் நம்பர் உங்களுக்கு எப்படி கிடைச்சது? எதுக்கு என்ன அங்க வர சொல்றிங்க? நீங்க கூப்பிடற இடத்துக்கு எல்லாம் என்னால வர முடியாது. வைங்க'' என கோபமாக உரைத்தாள். </span></p>
<p data-p-id="cc2e2b0db0a42845423f9376f51ad953"><span style="font-size: 14pt">''நிலா....'' என கத்தியவன். ''தயவு செய்து விளையாடாம சொன்ன இடத்துக்கு வா.. ஒரு முக்கியமான விஷயம்'' என துண்டித்தான்.</span></p>
<p data-p-id="337f3b1faa514f65fa67b1615dbc2136"><span style="font-size: 14pt">அவனின் குரல் ஏன் முதலில் திக்கியது.... பின்னர் ஏதோ சமாளித்து பேசியது போல இருந்தன. நான் வரலை என்றதும் கோவமா பேசி கட்டாயமா வர சொன்னான். என்னவா இருக்கும் என கிளம்பினாள்.</span></p>
<p data-p-id="88049b4e0f1d12ecbf4b1d40d83439f1"><span style="font-size: 14pt">நிலா மனம் ஏதோ ஒரு வித தவிப்போடு தான் இருந்தாள். தன்னவன் குரல் அப்படியிருக்க பதறாமல் இருக்க முடியுமா? வெளியே அவனிடம் கோவமாக முகத்திரை அணிந்து திட்டினாலும் அவள் உள்மனம் அவனை அல்லவா விரும்புகின்றது. அதனால் நேரம் எடுத்துக்கொள்ளாமல் ஆட்டோ பிடித்து விரைந்தாள்.</span></p>
<p data-p-id="3b84f2e3cc354e7471989d7c18992da3"><span style="font-size: 14pt">போகும் இடமெல்லாம் ஆன்ட்டிக்கு ஏதாவது அன்னிக்கு மாதிரி மயங்கிட்டாங்களா? இல்லை அவங்களுக்கு எதாவது ஆபத்தா? ஐயோ கடவுளே... அப்படி எல்லாம் இருக்க கூடாது... நான் தான் அம்மா அப்பா இல்லாமல் கஷ்டம் அனுப்பவிக்கறேன்.. என் ரூபி அப்படி கவலை படக்கூடாது... அவங்க அம்மாவுக்கு உடல்நிலை நல்லா இருக்கனும் கடவுளே என வேண்டினாள்.</span></p>
<p data-p-id="77ea34fc0e6669a5f13d0dbb3c18cfe2"><span style="font-size: 14pt">நேரங்கள் கூட போக்குவரத்து நெரிசலில் காலதாமதம் வேறு ஏற்பட ரூபன் மீண்டும் அழைத்தான்.</span><br /><span style="font-size: 14pt">''எங்க இருக்க நிலா?'' என்றான்.</span><br /><span style="font-size: 14pt">''வந்துட்டே இருக்கேன் ரூபன்.. உங்களுக்கு ஒன்றுமில்லையே...'' என்று கேட்க அவளின் கரிசனம் அவனின் இதயத்தில் இதம் பரப்பியது.</span></p>
<p data-p-id="43fb0b0909efc832c124e8cf4d74532c"><span style="font-size: 14pt">''இல்லை நிலா ஆனா நீ கொஞ்சம் அவசரமா வா''</span><br /><span style="font-size: 14pt">''எதுக்கு வர சொன்னிங்க என்று சொல்லுங்களேன்''</span><br /><span style="font-size: 14pt">''அது நீ வந்து பார்த்து தெரிந்துக்கோ நிலா'' என அணைத்தான்.</span></p>
<p data-p-id="7999c749374d38db051957c5bca18ef1"><span style="font-size: 14pt">போக்குவரத்து நெரிசலில் அவளின் அவசரம் கண்டு வேகமெடுத்தாலும் விதி காலதாமதம் ஏற்படுத்தவே செய்தது. அன்று ரூபனுக்கு குண்டு அடிபட்டு ரத்தமெங்கும் வந்து சேர்ந்ததை எண்ணியெண்ணி அழ துவங்கினாள். அவளின் அழுகை வண்டி ஓட்டும் ஆட்டோ ஓட்டுனருக்கு கூட கவலையைதர வேகமெடுத்தார். சந்து பொந்தில் வண்டியை செலுத்தி ஒரு வழியாக அவ்விடம் வந்து சேர்ந்தார்.</span><br /><span style="font-size: 14pt">பணத்தினை கொடுத்தவள் மீதி பணத்தை பெறாமலே சென்றாள். உடல் ஒரு வித நடுக்கம் வர மூச்சு முட்டியது.</span></p>
<p data-p-id="0e6113e214ecc42c1cc294e79473b897"><span style="font-size: 14pt">வந்த இடத்தை உற்று நோக்கியே நடக்க அவளுக்குள் குழப்பமே வந்தன. எங்கும் சின்ன சிறு மலர்களும் அங்கங்கே முதியவர்களும் இருக்க குழம்பி போனாள். இங்க எதுக்கு ரூபன் வர சொன்னார்.</span><br /><span style="font-size: 14pt">தங்கநிலா தோலை தொட்டு பார்க்க அவளோ யாரென்று அறியாமல் அச்சத்தோடு திரும்ப ரூபன் நின்று இருந்தான்.</span></p>
<p data-p-id="a613d79fafa19e5a2f0f4f221f577df7"><span style="font-size: 14pt">அவனை உச்சி முதல் உள்ளங்கால் வரை பார்வையில் கண்டவள் அவனுக்கு எதுவும் இல்லை என்றதும் பெருமூச்சு விட்டு தன்னை மீட்டெடுத்தாள்.</span><br /><span style="font-size: 14pt">அவனோ அவளிடம் ஏதோ சொல்ல தயங்கி தயங்கி நிற்க பேசமுடியாமல் நின்றான்.</span></p>
<p data-p-id="beced337f3455225bb9c7dcf2d9c52ed"><span style="font-size: 14pt">அப்பொழுது உள்ளே இருந்து ஒரு பணிப்பெண் வந்து ரூபனிடம்</span><br /><span style="font-size: 14pt">''சார் அவங்க மறுபடியும் கத்த ஆரம்பிச்சுட்டாங்க... நீங்க பக்கத்தில் இருந்தா பெட்டரா இருக்கும்'' என்று சொல்ல, வருவதாக தலையசைத்தான்.</span><br /><span style="font-size: 14pt">''யாருக்கு என்ன ஆச்சு? எதுக்கு என்னை இங்க கூட்டிட்டு வந்தீங்க? பதில் சொல்லுங்க என கேள்வி கேட்டு வர ரூபன் ஒரு அறையை கைக்காட்டி போக சொன்னான்.</span></p>
<p data-p-id="a1f57301b22890137fcf8e4decf877e1"><span style="font-size: 14pt">அங்கே பார்க்க ஒரு முதியவள் தலை வீறி கோலமாக ''என் மாப்பிள்ளை எங்க? என் பொண்ணு எங்க? என்னை விடுங்க நான் போறேன்... என் பொண்ணை பார்க்க போறேன்.'' என அதையே திரும்ப திரும்ப சொல்லி கொண்டே இருந்தார். </span></p>
<p data-p-id="1664161770bbc8c815514ac66e1b2873"><span style="font-size: 14pt">நிலா புரியாமல் விழித்து ரூபனை பார்த்து ஏதோ ஒரு தாக்கத்தில் நிற்க அவனோ அவளின் தோளில் கையை வைத்து உள்ளே அழைத்து சென்றான்.</span><br /><span style="font-size: 14pt">ரூபனின் இந்த தொடுகை எதையோ உணர்த்த அவள் அவனிடம் கேள்வி கேட்காமல் அவனோடு அவ்வறைக்குள் நுழைந்தாள்.</span></p>
<p data-p-id="77b2d09af3afdc72a2ba470f7562daf6"><span style="font-size: 14pt">ஒரு நர்ஸ், அம்முதியவளுக்கு ஊசி போடா முயன்று மெல்ல மெல்ல செலுத்த அம்முதியவள் திரும்பி பார்க்க அங்கெ ரூபன் மற்றும் தங்கநிலா இருவரையும் ஒரு சேர கண்டு மனம் மகிழ்ந்து ஆனந்த கண்ணீர் கோடுகள் கன்னத்தில் வழிய புன்னகைக்க, நிலாவிற்கு அப்பொழுது தான் அது யாரென்றே தெள்ள தெளிவாக புரிந்தது.</span></p>
<p data-p-id="ed31c2ee0cc7acb8f3e6cca8ea5d36d2"><span style="font-size: 14pt">''அம்மா.... அ..ம்.. மா........ அம்மா....'' என ஓடியவளை ரூபன் பின்னால் சென்று மெல்ல கையை பிடிக்க ஊசி மயக்கத்தில் அம்முதியவள்</span><br /><span style="font-size: 14pt">''நிலா...வந்துட்டியா.. மாப்பிள்ளையும் நீயும் நல்லா... இருக்.. கி.. '' என்று சொல்லியவாறு மயக்கம் ஆனார். </span></p>
<p data-p-id="bfe4720af6708b1d7632474d0c957a78"><span style="font-size: 14pt"> நிலாவோ மயக்க ஊசி எதுவுமே இல்லாமல் மயங்கி சரிந்தாள். அவளை தாங்கியவன் அருகே இருந்த பெட்டில் படுக்க வைத்தான்.</span></p>
<p data-p-id="0a2a54d4dec65e9e7dbd85bee46dc189"><span style="font-size: 14pt">நிலாவின் தாயார் மற்றும் நிலா என்றிருக்க இங்கு ரூபனோ குழம்பி கொண்டிருந்தான்.</span><br /><span style="font-size: 14pt">இவங்க எதுக்கு என்னை மாப்பிள்ளைனு சொல்லறாங்க? எனக்கும் நிலாவுக்கும் தானே கல்யாணம் நடக்கலையே... பின்ன எப்படி? இவங்க எப்படி உயிரோட இருக்காங்க? அப்போ நிலா வீட்டில் இறந்த பெண்மணி யார்?</span><br /><span style="font-size: 14pt">இப்படியே யோசிக்க பாக்கியம் போன் செய்தார். அவர்களிடம் விஷயம் சொல்லி வர நேரமாகும் என அணைத்தான். </span></p>
<p data-p-id="fdcbc2ea083d4339e97c2495ed9b6860"><span style="font-size: 14pt">நிலா தண்ணீர் தெளித்து மயக்கம் களைய ''ரூபன் அவங்க என் அம்மா அவங்க என் அம்மா அவங்க உயிரோட இருக்காங்க.. நான் அனாதை இல்லை.. எனக்கு என் அம்மா இருக்காங்க ரூபன்....'' என அவனது நெஞ்சில் சாய்ந்து கண்ணீர் வடித்தாள்.</span></p>
<p data-p-id="3e86288e87d0882d2ca38404277c2cbc"><span style="font-size: 14pt">''கூல் டவுன்... நிலா... இங்க ஒரு கேஸ் விஷயமா வந்தேன்... இவங்க ரோட்டில் என்னை பார்த்துட்டு என்னை மாப்பிள்ளைனு சொல்லி, உன்னை கேட்டு இப்படி தான் தொடர்ச்சியா கத்திட்டே இருந்தாங்க... எனக்கு என்ன பண்றதென்னே தெரிலை அதான் உனக்கு இன்போர்ம் பண்ணினேன்.. இவங்க நிஜம்மா உன் அம்மாவா இல்லாமல், நான் உன் அம்மா என்று சொல்லி கூப்பிட்டு உனக்கு ஏமாற்றம் வந்துடுமே என்று தான் எதுவும் சொல்லாமல் அழைச்சேன்.''</span><br /><span style="font-size: 14pt">''என் அம்மா தான் ரூபன்... இவங்க என் அம்மா தான்...'' என அம்மாவின் தலையினை கோதினாள்.</span></p>
<p data-p-id="6b300c845c09b423d849898849597749"><span style="font-size: 14pt">''சரி நீ வந்ததும் உன்னை கூப்பிட்டு வர சொன்னாங்க வா'' என அழைத்து சென்றான்.</span><br /><span style="font-size: 14pt">''அம்மா..'' என் அவள் சொல்ல</span><br /><span style="font-size: 14pt">''இங்க தான் பக்கத்து பிளாக் போய் பேசிட்டு வந்துடுவோம் அதுவரை மயக்கமா தான் இருப்பாங்க'' என்றதும் அவளின் தாயினை முத்தமிட்டு அவனோடு சென்றாள்.</span><br /><span style="font-size: 14pt">''உள்ள வாங்க ரூபன் பிரகாஷ்..இவங்க தான் நிலாவா?'' என்றார் அம்முதியவர்.</span><br /><span style="font-size: 14pt">''ஆமா சார்...''</span><br /><span style="font-size: 14pt">''உட்காரும்மா...'' என்றதும் மூவருமே அமர்ந்ததும் பேச ஆரம்பித்தார்.</span></p>
<p data-p-id="f94600ee5e71463ee8fe7c905608ec44"><span style="font-size: 14pt">''ஒரு வருஷம் முன்ன இருக்கும் நானும் எங்க நேச இல்லம் சேர்ந்தவர்களும் டூர் போயிட்டு வந்துட்டு இருந்தோம். தீடிரென எங்களுக்கு எல்லாம் ரொம்ப தாகமா இருந்தது என்று டீ குடிக்க ஒரு கடையில் நிறுத்தினோம். டீ குடிச்சுக்கிட்டு இருக்கும் பொழுது பக்கத்துல ஒரு பள்ளத்துல இந்த அம்மா உயிருக்கு போராடிகிட்டு இருந்தாங்க... உடனே அவங்களை தூக்கிட்டு எனக்கு தெரிந்த மருத்துவமனைக்கு அழைச்சுட்டு வந்தேன். போலீஸ்ல மிஸ்ஸிங் அப்ப எதுவும் இல்லை.</span><br /><span style="font-size: 14pt">அதனால இவங்களை செக் பண்ணி உடல் நலம் சரி வர ஒரு மாசம் ஆச்சு....</span><br /><span style="font-size: 14pt">அதுவரை அவங்க அன்கான்ஷியஸ்ல இருந்தாங்க அப்பறம் கொஞ்சம் சரியாகிடுச்சு.  ஆனா யாரோடவும் பேசாமல் பிரம்பை புடிச்சு இருந்தாங்க இப்போ கொஞ்ச நாளா திடீரென என் மகள் நிலா வரன் பார்த்தோம் என் மாப்பிள்ளை ரூபன் பிரகாஷ் நான் அவங்களை பார்க்கணும்னு உளறினாங்க.... இதோ இன்னிக்கு இவரை பார்த்ததும் இவர் தான் என் நிலாவோட கணவர் எங்க வீட்டு மாப்பிள்ளைனு ஒரே ரகளை... இத்தனை நாளில் இவங்க இன்னிக்கு தான் இப்படி பீஹவ் பண்ணி இருக்காங்க அதுவும் இவரை பார்த்து ரொம்பவே...'' என்று நிறுத்த ஒரு டாக்டர் வந்து நின்றார்.</span><br /><span style="font-size: 14pt">''இவர் தான் உங்க அம்மாவின் உடல்நிலை பார்த்துகிட்ட டாக்டர்'' என்று அறிமுகப்படுத்தினார்.</span></p>
<p data-p-id="a49848cdfd2bba7bd1dac02757f67603"><span style="font-size: 14pt">''அவங்களுக்கு எப்படி அடிபட்டது என்று தெரியுமா?''</span><br /><span style="font-size: 14pt">''இல்லை டாக்டர் அப்பா அம்மா இரெண்டு பேருமே எனக்கு வரன் பார்த்துகிட்டு இருந்தாங்க. ஒரு நாள் அப்பா பிரெண்ட் தாமஸ் அங்கிள் பார்த்துவிட்டு வருவதா சொன்னாங்க... திரும்ப வரும் பொழுது அப்பா அம்மாவுக்கு விபத்து என்று சொல்லி....'' அழுத்தவளின் கையினை ரூபன் மெல்ல அழுத்த தொடர்ந்தாள்</span><br /><span style="font-size: 14pt">''அப்பா விபத்துல இறந்துவிட்டதா சொன்னாங்க அம்மா கேஸ் வெடிச்சு வீட்டில் இறந்துவிட்டதா தகவல் வந்தது. அதனால தொலைந்து போனதா நான் நினைக்கலை.</span></p>
<p data-p-id="3925a6c3d3280e1bdbf6d34f0299012d"><span style="font-size: 14pt">'அப்போ எப்படி இவங்க...?''</span></p>
<p data-p-id="d24527db3485730daa05a3c1faf9b4c7"><span style="font-size: 14pt">''அது அது ஒரு வேளை என் அத்தை ரேவதியா இருக்கலாம் சார்.  ஏன்னா அவங்களும் அன்றைய தேதில இருந்து நான் பார்க்கலை முதலில் அவங்க மாமாவுக்கு பயந்து எங்கயாவது போயிட்டாங்கனு நினைச்சேன். இப்ப அம்மாவை பார்த்ததும் தான் ஒரு வேளை அவங்க ரேவதி அத்தையா இருப்பாங்களோனு டவுட் ஆகுது.'' என்று தெளிவாக்கினாள்.</span></p>
<p data-p-id="9fcdd412a3f68ff9af777300d9653fbc"><span style="font-size: 14pt">''ஹ்ம்ம் ஓகே ம்மா இவருக்கும் உனக்கும் என்ன சம்பந்தம்?''</span></p>
<p data-p-id="a985fb60a7d08e320295688fb796fee4"><span style="font-size: 14pt">''அவங்க கடைசியா எனக்கும் இவருக்கும் கல்யாணம் நடக்கும் என்று சதா புலம்பிட்டு இருந்தாங்க... இவருக்கும் எனக்கும் தான் திருமணம்னு முடியற நிலையில் இரெண்டு பேருக்கும் பிடிக்காமல் மறுத்துட்டோம்... அதை நான் இவங்ககிட்ட சொல்லலை... தாமஸ் அங்கிள் சொல்லுவார்னு விட்டுட்டேன்... பட் தாமஸ் அங்கிள் சரியா சொல்லலையா என்னனு தெரியலை. அம்மா அதனால் இவருக்கு எனக்கும் கல்யாணம் நடந்திருக்கும்னு நினைச்சுகிட்டே இருந்திருப்பாங்க போல தாமஸ் அங்கிள் வீட்டுக்கு போனதும் அவர் விஷயத்தை சொல்லி இருந்தார்.. வேற வரன் ஒன்றும் பார்த்தா சொல்லி அவர்களுக்கு என் போட்டோ கொடுத்ததா சொன்னார் பட் அம்மா அப்பாவுக்கு அதுல அவ்ளோ இஷ்டம் இல்லை... அப்பறம் விபத்து நடந்து. எல்லாம் பிரிஞ்சுட்டோம் அம்மா அப்பா இரண்டு பேருமே இறந்துட்டாங்க. பட் இப்ப அம்மா.'' என்றே கூறி முடிக்க</span><br /><span style="font-size: 14pt">''ஓகே ம்மா இப்போ உன் அம்மா கண்டிஷன் என்னனா அவங்க இவருக்கும் உனக்கும் கல்யாணம் நடந்ததா ஆழ்மனசில் பதியவச்சி இருக்காங்க அதனால் தான் இவரை பார்த்ததும் மாப்பிள்ளைனு சொல்லிட்டு இருக்காங்க... இருக்கட்டும் அவங்களுக்கு அதே சொல்லி வைங்க இல்லைனா மறுபடியும் மனசு குழம்பி போயிடுவாங்க.. கொஞ்ச கொஞ்சமா அவங்க விபத்து நிகழ்வு நினைவு வரும் அப்போ அவங்களே புரிஞ்சுப்பாங்க... அதுவரை நீங்க கணவன் மனைவினு சொல்லி இருங்க அதுல ஒன்னும் பிரச்சனை இல்லியே...'' என்று முடிக்க நிலா ரூபனை தயங்கி பார்த்தாள்.</span></p>
<p data-p-id="fcc58ad9b6e6e6eb6c114565ac824cb6"><span style="font-size: 14pt">''அப்படி பத்திரமா பார்த்துகிட்டே அவங்க நிலைமை நல்லா ஆகிடுமா?'' என்று ரூபன் கேட்டான்.</span></p>
<p data-p-id="7a0bf7acb32078335eaba31276ef7347"><span style="font-size: 14pt">''சூர்.... அவங்களுக்கா நினைவு வந்தா நல்லது தான்''</span><br /><span style="font-size: 14pt">''நான் அம்மாவை கூட்டிட்டு போகலாமா?'' என்று ஆசையாக நிலா கேட்டாள்.</span></p>
<p data-p-id="4b00bb47e1d53bc5649dfc2f57bd77af"><span style="font-size: 14pt">''தாராளமா கூட்டிட்டு போங்க மருந்து மாத்திரை மட்டும் தவறாம கொடுங்க. அவங்களே ரெக்குர் ஆகிடுவாங்க...'' என்றதும் தாயினை காண சென்றார்கள்.</span></p>
<p data-p-id="5820bc9dc2cddde9fd275dbc54974308"><span style="font-size: 14pt">ரூபன் அருகே இருக்க நிலா அபிராமியை கண்ணும் கருத்துமாக பார்த்து கொண்டாள்.</span></p>
<p data-p-id="7aae4194b41709cd6b79fe79bdbbb698"><span style="font-size: 14pt">கண்ணீர் துளிகள் கன்னத்தில் நிறைக்க தாயின் முகத்தினை பார்த்து கொண்டிருந்தாள்.</span></p>
<p data-p-id="af0a2a1708c03c63c961fbd7eebaabfd"><span style="font-size: 14pt">ரூபனிடம் தான் அபிராமி என் பொண்ணு நல்லா சமைக்கிறாளா உங்க அம்மாவுக்கு பிடிச்ச மாதிரி நடந்துக்கறாளா? அவள் வேலைக்கு போறது உங்களுக்கு ஒன்றும் பிரச்சனை இல்லையே? என்று விடாது கேட்க நிலாவோ</span><br /><span style="font-size: 14pt">''ம்மா கொஞ்ச நேரம் தூங்கு அவரை தொந்தரவு செய்யாதே உனக்கு ஸ்ட்ரைன் பண்ணினா உடல்நிலை பாதிக்கும்'' என்று மடியில் சிறு குழந்தை போல பாதுகாத்தாள்.</span></p>
<p data-p-id="a095805b4530e26b5e86aadd70c9d029"><span style="font-size: 14pt">விடுதி வரும் நேரம் அபிராமி உறங்கி போனார்... மெல்ல பெட்டை ஆண் மருத்துவர் தூக்கி கொண்டு அறைக்கு விட்டுவிட்டு சென்றார்கள்.</span></p>
<p data-p-id="49afc6ef5b4551bbd407adbc43f17fd2"><span style="font-size: 14pt">ரூபன் தான் நிலாவை பார்த்து ''ரொம்ப யோசிச்சு அழுது மனசை போட்டு குழப்பிக்காதே.... அதான் அம்மா வந்துட்டாங்களே.. நிம்மதியா தூங்கு... அப்பறம் எதுனாலும் கால் பண்ணு வர்றேன்... அப்பறம்... அது... சரி கிளம்பறேன்'' என வெளியேறினான்.</span></p>
<p data-p-id="aaa5c67994dc986f6de679f44b7795ef"><span style="font-size: 14pt">நிலாவோ அவன் பேசியத்துக்கு எல்லாம் மெல்ல தலையினை அசைத்தாள். இவனிடம் எப்படி போய் என் துயரம் தீர்க்க அவனின் மார்பில் ஒடுங்கினேன். அவளின் தாயின் பார்த்து இன்னும் நம்ப முடியாமல் இருந்தாள். தாயின் முடியினை கோதி உயிர் போல் பாதுகாக்க செய்தாள்.</span><br /><span style="font-size: 14pt">அரை மணி நேரம் போன பின் எழுந்த அபிராமி ஒரே கூச்சலிட்டபடி அலறி எழுந்து கத்த துவங்கினாள். 'இல்லை... இல்லை... என் பொண்ணுக்கு கல்யாணம் ஆகிடுச்சு... அவர் தான் மாப்பிள்ளை... என் புருஷனுக்கு ஒன்னும் ஆகலை... ஐயோ விபத்து நடந்துச்சே என்ன செய்ய என் புருஷன்... என்று கத்த ஹாஸ்டல் எல்லோரும் அவளின் அறையில் சூழ்ந்தார்கள்.</span><br /><span style="font-size: 14pt">தங்கநிலா சூழ்நிலை சமாளிக்க முடியாமல் தவித்தாள்.</span><br /><span style="font-size: 14pt">''அம்மா இங்க பாரு.. ம்மா நான் சொல்றதை கேளு'' என்றதை அபிராமி கேட்பதாக இல்லை</span><br /><span style="font-size: 14pt">''அப்பா அப்பா இறந்துட்டார் அப்படி தானே.. மாப்பிள்ளை எங்க? ஐயோ மாப்பிள்ளை எங்க என்று விடாது கேட்டார்</span><br /><br /><span style="font-size: 14pt">''அது அது வந்தும்மா வேலைக்கு போய் இருக்கார் வந்துடுவார்...'' என்று சமாளித்து கூறினாள்.</span><br /><span style="font-size: 14pt">தனது தாய்க்கு மீண்டும் அதிர்வு கொடுக்க கூடாது என்று சொல்ல அவர்களோ</span><br /><span style="font-size: 14pt">''எப்போ வருவார் நான் பார்க்கணும்... ஆமா இது என்ன இடம்... உன் வீடா? இல்லை பார்க்க அப்படி இல்லையே... இவங்கல்லாம் யாரு..?''</span></p>
<p data-p-id="9a41b6bf64ed4b7d3007ed55ba17998f"><span style="font-size: 14pt">''ஹாஸ்டல் பெண்மணி எங்க? எதுக்கு பயித்தியம் எல்லாம் தங்க வச்சி எங்களை உயிரை வாங்கறாங்க..'' என்று பலர் பேச ஹாஸ்டல் பெண்மணியோ நிலாவிடம்</span><br /><span style="font-size: 14pt">''என்னாச்சு நிலா அவங்க அமைதியா இருப்பாங்க என்று தானே இருக்க விட்டேன்.. என்ன இப்படி அலறி கத்தறாங்க?''</span></p>
<p data-p-id="7c80684da7a6efffbc96bea864511b82"><span style="font-size: 14pt">''இல்லை மேம் அவங்க நிலைமை தான் சொன்னென்னெ''</span><br /><span style="font-size: 14pt">''சொன்ன ஆனா இப்படி அலறி கத்தினா என்ன செய்ய இங்க படிக்கவும், வேலை செய்யற பெண்களும் தான் அதிகம் இப்படி கத்தினா அவங்களுக்கு தொந்தரவு தானே?'' என்றதும் ஒரு பக்கம் தன் தாய் எப்படி அமைதி படுத்துவது என்று புரியாமல் மறுபக்கம் இந்த கூட்டம் ஹாஸ்டல் பெண்மணி வேறு அன்னையை அனுப்ப கூறிட, செய்வதறியாமல் விழித்தாள்.</span></p>
<p data-p-id="7c80684da7a6efffbc96bea864511b82"><span style="font-size: 14pt">தொடரும் </span></p>
<p data-p-id="7c80684da7a6efffbc96bea864511b82"><span style="font-size: 14pt">பிரவீணா தங்கராஜ் </span></p>]]></content:encoded>
						                            <category domain="https://onlinetamilnovels.com/community/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-praveena-thangaraj/">முதலாம் சந்திப்பில்...-Praveena Thangaraj</category>                        <dc:creator>Praveena Thangaraj</dc:creator>
                        <guid isPermaLink="true">https://onlinetamilnovels.com/community/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-praveena-thangaraj/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-9/</guid>
                    </item>
				                    <item>
                        <title>முதலாம் சந்திப்பில்-8</title>
                        <link>https://onlinetamilnovels.com/community/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-praveena-thangaraj/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-8/</link>
                        <pubDate>Tue, 23 Jun 2026 13:05:54 +0000</pubDate>
                        <description><![CDATA[அத்தியாயம்-8அடுத்த நாள் ரேணுகா சொல்லியதில் மாலினி நிலாவிடம் கேட்க தயங்கி தயங்கி நின்றாள்.&#039;&#039;என்ன மாலு ஒரு மாதிரி முழிச்சுட்டு இருக்க?&#039;&#039;&#039;&#039;அதெல்லாம் ஒன்னுமில்லை... அடுத்த வாரம் என்னை பொண்ணு பார...]]></description>
                        <content:encoded><![CDATA[<p data-p-id="419adb1e12eb00f55a6cf716e497512a"><span style="font-size: 14pt">அத்தியாயம்-8</span><br /><br /><span style="font-size: 14pt">அடுத்த நாள் ரேணுகா சொல்லியதில் மாலினி நிலாவிடம் கேட்க தயங்கி தயங்கி நின்றாள்.</span><br /><span style="font-size: 14pt">''என்ன மாலு ஒரு மாதிரி முழிச்சுட்டு இருக்க?''</span><br /><span style="font-size: 14pt">''அதெல்லாம் ஒன்னுமில்லை... அடுத்த வாரம் என்னை பொண்ணு பார்க்க வர்றாங்க...'' என்றாள்.</span></p>
<p data-p-id="9dfcbb803d41de776c1d85806654a6c0"><span style="font-size: 14pt">''வாவ் மாலினி சூப்பர்... எப்படி தெரிந்தவர்களா?''</span><br /><span style="font-size: 14pt">''இல்லைம்மா உனக்கு பார்த்த மாதிரி தெரிந்தவர் ஒருத்தர் சொல்லி அப்பா ஓகே செய்தது... பொண்ணு பார்க்கறது போர்மாலிட்டீஸ்காக தான்.. அவங்க ஏற்கனவே என்னை பார்த்துட்டாங்களாம் நான் தான் பார்க்கலை'' என்றாள்.</span><br /><span style="font-size: 14pt">நிலாவுக்கு 'தெரிந்தவர் சொல்லி அப்பா ஓகே செய்தது' என்றதும் மனம் ரூபனை எண்ணி கலங்கியது.</span></p>
<p data-p-id="796ead1f97ff0e7d5c5b4203981c1356"><span style="font-size: 14pt">''காங்கிராட்ஸ் மாலினி சீக்கரம் நல்லது நடக்க'' என வாழ்த்தினாள்.</span><br /><span style="font-size: 14pt">''தங்கநிலா... உங்கிட்ட ஒன்னு கேட்கணும்... நேற்று சுந்தரி சிஸ்டர் வேணி சிஸ்டர் பேசியதை பற்றி தான்''</span><br /><span style="font-size: 14pt">''அதுக்கு என்ன அவங்க தெரியாம பேசினாங்க இப்போ புரிஞ்சுக்கிட்டாங்க''</span><br /><span style="font-size: 14pt">''அவங்க தவறா பேசினாங்க நீ கோவப்பட்ட ஓகே ஆனா அவங்க பேசியதை நான் வேற மாதிரி கேட்கறேன் தவறா நீ எடுத்துக்காம எனக்கு பதில் சொல்லு நிலா'' என மாலினி கேட்க நிலா என்ன கேட்க போகின்றாள் என மாலினியை பார்த்தாள். </span></p>
<p data-p-id="4d3eeac2ac42da8771ecf90eea514bcb"><span style="font-size: 14pt">''உன்னை பற்றி எனக்கு தெரியும் நிலா... ரூபன் இங்க அட்மிட் ஆனபொழுது, நீ ரொம்ப அழுத உன் கண்கள் ஆப்ரேஷன் தியேட்டர்ல கலங்கி போச்சு நான் பார்த்தேன். அவரை பிடிக்கலை என்று சொல்லிட்டு எதுக்கு அப்போ அழுத...?''</span><br /><span style="font-size: 14pt">''இதுக்கான பதில் நேற்று நீயே சொன்னியே மாலு...'' என்றதும் புரியாமல் குழம்ப</span><br /><span style="font-size: 14pt">''நீ நேற்று அவர்களுக்கு சொன்னியே என் அம்மா அப்பா பார்த்த வரன் அவன் என்று அந்த அக்கறை மட்டும் தான்''</span><br /><span style="font-size: 14pt">''நிஜமா அது மட்டும் தானா?''</span><br /><span style="font-size: 14pt">''வேற என்ன?'' என்றாள் தங்கநிலா.</span></p>
<p data-p-id="e281185b339d36eb07104699f80dfca9"><span style="font-size: 14pt">''இல்லை அப்பா அம்மா பார்த்த பையன் என்று அவர் மீது உனக்கு கா..த..ல்..'' என்று கூறும் முன் ''அதெல்லாம் இல்லை மாலு ஒருத்தர் பிடிக்கலை என்று கூறியதும் மீண்டும் போய் தொந்தரவு செய்ய முடியாது. அவரவர் வேலையா இருக்கார் நாம நம்ம வேலையில் இருப்போம். எனக்கு இந்த சேவை பண்ணிட்டு இருக்கறது போதும்'' என நகர மாலினி குழம்பி போயிருந்தாள்.</span></p>
<p data-p-id="9df9250b5f1db317a3e4a0a2274e6c1f"><span style="font-size: 14pt">நான் இவளுக்கு காதல் வந்துச்சா என்று தானே கேட்டேன்... இவ அவருக்கு பிடிக்கலை என சொல்லிட்டு போறா அப்போ இவளுக்கு பிடிச்சிருந்தா? இல்லை இன்னும் பிடிக்குதா? ரூபன் பிரகாஷ் பார்த்தால் எவளுக்கு தான் பிடிக்காது...? இங்கயிருந்த வரை எல்லா சிஸ்டரும் அவரை பற்றியே பேசிட்டு இருப்பாங்க... பட் நிலா கொஞ்சம் வித்தியாசம் தான். அவளுக்கு பிடிக்கணும். அவள் இப்போ என்ன மைண்ட்ல இருக்காளே புரியலை.' என வேலையினை கவனித்தாள்.</span></p>
<p data-p-id="2724f516b95b5bc9110851874c913ca7"><span style="font-size: 14pt">இரு தினம் செல்ல, மாலினி நிலா இருவரும் ஹாஸ்பிடல் இருந்து கிளம்பி கொண்டு இருந்தார்கள்.</span><br /><span style="font-size: 14pt">ரூபன் பிரகாஷ் நிலா தனியாக வந்தால் அவளை இழுத்து கொண்டு பேச நேரம் பார்த்தான். அவளோ மாலினியோடு வரவும் அறியாமல் பின் தொடர்ந்தான். ஒரு கட்டத்தில் மாலினி பிரிந்து தானே நிலா போக வேண்டும். ஆனால் பின் தொடர்ந்த கொஞ்ச நேரத்திலே தனக்கு முன் ஒருவன் அவ்விருவரையும் பின் தொடர்வதை கண்டான்.</span></p>
<p data-p-id="48ff128e703faaeb4ed2591acd194d93"><span style="font-size: 14pt">இவன் யாரு? நடுவில அச்சச்சோ நிலா என் மேல இருக்கற கோவத்தில் இந்த இடைப்பட்ட காலத்தில் லவ் எதாவது பண்ணி தொலைச்சிட்டாளா என இதயம் நின்று பின் 'சேசே ஹாஸ்பிடலில் அவள் தன்னை கவனித்துக் கொள்ளும் பொழுது அவள் பார்வை என் மீது ஒரு வித காதலில் இருந்தது' என்று யோசித்தவன் அவனை நிறுத்தி பேச செல்ல, அதே சமயம் மாலினி பைக் அங்கிருந்த போலீஸ் நிறுத்த சொல்ல நிறுத்தினாள். கூடவே நிலா கீழே இறங்க பின்னால் இருந்த அவனும் அப்படியே வண்டியை நிறுத்தினான்.</span></p>
<p data-p-id="cd03c52b0c1be7cbd39d35e7286c6c5f"><span style="font-size: 14pt">ட்ராபிக் போலீஸ் மற்ற பைக் சம்மந்தப்பட்ட எல்லாவற்றையும் சரி பார்க்க ரூபன் முன் வந்தான்.</span><br /><span style="font-size: 14pt">அவன் வருவதை கண்டு நிலா அவனையே பார்க்க மாலினி நிலாவை பார்த்தாள். அவர்களை பின் தொடர்ந்தவனோ மாலினியை பார்க்க ட்ராபிக் போலீஸ் ரூபனை இனம் கண்டு சல்யூட் அடிக்க தலையசைப்பில் ஏற்றவன். அங்கிருந்த காரின் மீது சாய்ந்து</span><br /><span style="font-size: 14pt">''எதுக்கு அவங்களை பாலோவ் பண்ற?'' என்றதும் பின் தொடர்ந்தவன் பேய் முழி முழிக்க மாலினி நிலா அதற்கு மேல் குழம்பி பார்த்தார்கள்.</span></p>
<p data-p-id="19372bd4b32f9df20c48e70f98d5ee42"><span style="font-size: 14pt">அவனோ அமைதியாக பேச பயந்து இருக்க ரூபனோ விடாது</span><br /><span style="font-size: 14pt">''சொல்லு நானும் பார்த்துட்டு இருக்கேன் கால் மணி நேரமா இவங்க பின்னால் வந்துட்டு இருக்க என்ன விஷயம்?'' என்றதும் ட்ராபிக் போலீஸ் எல்லோரையும் பார்த்தார்.</span></p>
<p data-p-id="a4befd2c801775d89fc07f3756ba2c97"><span style="font-size: 14pt">''சார் இவங்களை இவங்களை பெண் பார்த்து எனக்கு முடிவு செய்தாங்க அவங்களுக்கு தெரியாம ஒரு தடவை பார்க்க வந்தேன் அவ்ளோ தான் சார்'' என்றதும் மாலினி தயங்கி தயங்கி ''சரவணன்...?'' என்று கேட்க</span><br /><span style="font-size: 14pt">''ஆமா சரவணன் தான்'' என்று சொல்லியதும் ட்ராபிக் போலீசோ</span><br /><span style="font-size: 14pt">''சார் சந்தேகமா இருந்தா நேம் அட்ரஸ் போன் நம்பர் வாங்கி வச்சிக்கலாம் சார்'' என்றதும் இதுவரை போக சொல்ல முடிவு செய்த ரூபன் அவளின் போன் நம்பர் கிடைக்கும் என்றதும் ''சரி '' என ஒப்புதல் அளித்தான்.</span></p>
<p data-p-id="a91dae28a8bb569100727c1934301d4a"><span style="font-size: 14pt">''பேர் என்னம்மா? என்றதும் மாலினி ரூபனை பார்த்து இவருக்கு தான் என்ன நிலாவை தெரியுமே அப்பறம் ஏன் இப்படி பண்றார்.' என மாலினி வயசு 24 மலர் ஹாஸ்பிடல்ல நர்ஸ் சார்.' என id நீட்ட குறித்துக்கொண்டார். அதே போல சரவணன் வயசு 28 சார் பாரதி ஸ்கூல்ல பிசிக்ஸ் எடுக்கறேன் சார் என போன் நம்பர் தர எழுதி கொண்டார். </span></p>
<p data-p-id="a193764adca40fb16b41e3a829ea8b84"><span style="font-size: 14pt">அடுத்து நிலா முறை வர ''நானும் சொல்லனுமா?'' என கேட்க ரூபனோ 'அடிப்பாவி நீ சொல்ல தாண்டி கேட்டதே' என மனதோடு புலம்பினான்.</span></p>
<p data-p-id="3408ac773d0d10f2bcfb913ab2dc85c4"><span style="font-size: 14pt">பேர் தங்கநிலா.. வயது 23 நானும் மலர் ஹாஸ்பிடல்ல நர்ஸ்ஸா ஒர்க் பண்றேன் இது என் id என காட்டினாள். </span></p>
<p data-p-id="957bf397bfdf0f56ad6be7d4506ec238"><span style="font-size: 14pt">''மூர்த்தி அண்ணா நம்பர் கேட்டுக்கோங்க?'' என்றான். நிலா ரூபனை முறைத்து கொண்டே பத்து இலக்கை சொல்லி முடிக்க அவள் சொல்ல சொல்ல ரூபன் அவனின் போனில் ஏதோ அழுத்துவது மாலினி அறிந்தாள். நிலாவும் தான்.</span><br /><span style="font-size: 14pt">''சார் போகலாமா?'' என சரவணன் கேட்க தலையாட்டினான்.</span></p>
<p data-p-id="50e2c13f1aa15dbc562ba22bada65964"><span style="font-size: 14pt"> மாலினி சரவணன் வண்டியை தள்ளிக்கொண்டே ஏதோ பேசியபடி செல்ல நிலா ரூபனை திரும்பி திரும்பி பார்க்க அவனோ பார்வை அகற்றாமல் அவளையே பார்த்து கொண்டிருந்தான்.</span></p>
<p data-p-id="f586dcdb97d83893bae2f52e2d1d491c"><span style="font-size: 14pt">நிலாவோ வேண்டுமென்றே நிற்க வச்சி என் நம்பர் நோட் பண்ணி இருக்கார். ஆமா எதுக்கு அப்படி செய்தார். இதுல கால் மணி நேரமா இவரும் பாலோவ் பண்ணி இருக்கார்... எதுக்கு? நிலா அவனை பார்த்ததும் இந்த மனசாட்சி உன் பேச்சையே கேட்காது உஷாரா இரு' என்று நடக்க</span><br /><span style="font-size: 14pt">''நிலா... நிலா.. உன்னை தான்'' என மாலினி அழைக்க 'ஙே' என விழித்தாள்.</span><br /><span style="font-size: 14pt">''அவர் என்கூட பேசணுமாம்.. நான் அவரிடம் போகட்டுமா?'' என்றாள். </span></p>
<p data-p-id="7412c365d587085cd8c358827d4bab65"><span style="font-size: 14pt">''முதலில் அதை செய்.. நான் கிளம்பறேன் அண்ணா'' என நிலா வேகமாக விடை பெற்று ஹாஸ்டல் நோக்கி நடை போட்டாள்.</span></p>
<p data-p-id="7412c365d587085cd8c358827d4bab65">தொடரும் </p>
<p data-p-id="7412c365d587085cd8c358827d4bab65">பிரவீணா தங்கராஜ் </p>]]></content:encoded>
						                            <category domain="https://onlinetamilnovels.com/community/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-praveena-thangaraj/">முதலாம் சந்திப்பில்...-Praveena Thangaraj</category>                        <dc:creator>Praveena Thangaraj</dc:creator>
                        <guid isPermaLink="true">https://onlinetamilnovels.com/community/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-praveena-thangaraj/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-8/</guid>
                    </item>
				                    <item>
                        <title>முதலாம் சந்திப்பில்-7</title>
                        <link>https://onlinetamilnovels.com/community/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-praveena-thangaraj/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-7/</link>
                        <pubDate>Tue, 23 Jun 2026 13:04:47 +0000</pubDate>
                        <description><![CDATA[அத்தியாயம்-7
ரேணுகா முன் வந்து ரூபனிடம், &#039;&#039;சார் அவள் இப்படி பேச நாங்க தான் காரணம் நீங்க இங்க இருந்தவரை அவள் உங்களை ரொம்ப அக்கறையா கவனிச்சத்தை நாங்க கொஞ்சம் தவறா பேசிட்டோம். அதை கேட்டுட்டு  ...]]></description>
                        <content:encoded><![CDATA[<p data-p-id="4a06bb3d20dd6e7935b624f2d25fb8ec"><span style="font-size: 14pt">அத்தியாயம்-7</span></p>
<p data-p-id="80b620ec998dc90c547944e11229ed88"><span style="font-size: 14pt">ரேணுகா முன் வந்து ரூபனிடம், ''சார் அவள் இப்படி பேச நாங்க தான் காரணம் நீங்க இங்க இருந்தவரை அவள் உங்களை ரொம்ப அக்கறையா கவனிச்சத்தை நாங்க கொஞ்சம் தவறா பேசிட்டோம். அதை கேட்டுட்டு  நிலா எங்களை ஒன்றும் சொல்லவில்லை. ஆனா உங்களை முகத்தில் அடிச்சது போல பேசறா?'' என சொல்ல சுந்தரியும் வேணியும் ''ஆமா சார்... மன்னிச்சுடுங்க.. அவள் இதுவரை அப்படி யாரிடமும் அக்கறை கொண்டது இல்லை... குழந்தைகளை தவிர்த்து... அதான் நாங்க பேசினோம் அவ ஹர்ட் ஆகிட்டா'' என்றதும்  தன்னவள் எதற்கு அப்படி போனாள் என்று விளங்க புரிந்து கொண்டவன். </span></p>
<p data-p-id="7d371bd09661218237788b586024c217"><span style="font-size: 14pt">அவர்களிடம் ''லுக் சிஸ்டர்... எப்பவும் உண்மை தெரியாம பேசிடாதிங்க அதை திரும்ப எடுக்க முடியாது. அப்படியே எதுனாலும் நீங்க அவளிடம் நேரிடைய ஒரு தோழியா கேட்டு இருக்கலாம் அதை விட்டு... சரி விடுங்க போங்க...'' என நிலாவின் வருகைக்கு காத்திருந்தான்.</span></p>
<p data-p-id="3dc62fee7bf423b5bf3455f0290988fe"><span style="font-size: 14pt">தன்னவள் இன்று எப்படியும் தன்னிடம் பேச மறுப்பாள், அவளிடம் கெஞ்ச கூடாது, அதே சமயம் அவளிடம் பேசாமல் திரும்பினால் அவளுக்கு அதே தாக்கம் வந்திடும் என யோசித்தான்.</span></p>
<p data-p-id="8343a308d890a91c1ed70dd64697a622"><span style="font-size: 14pt">நிலா அறை கதவை திறந்து வர ரூபன் அங்கேயே நிற்க கண்டு வேகமாக நடக்க ''ஒரு நிமிஷம் நிலா...'' என்றான். கோவத்தோடு திரும்ப அங்கே சுந்தரி வேணி ரேணுகா மூவருமே வேலை பார்ப்பது போல இருந்தாலும் நிலா அந்த போலீஸ்காரனிடம் கோவத்தோடு இருப்பதை அறிந்து அமைதியாக திரும்ப</span><br /><span style="font-size: 14pt">''என்ன வேணும்.. உங்களுக்கு... எதுக்கு என் பின்னால வர்றிங்க?'' என்றாள்.  </span></p>
<p data-p-id="4757cf5370dd4533cea2926a2be2e859"><span style="font-size: 14pt">''ஹலோ யாரு பின்னால வர்றாங்க? சித்திக் டாக்டர் உங்ககிட்ட தான் என்னோட ரிப்போர்ட் இருக்கறதா சொன்னார்... அதான் வாங்கிட்டு போக வந்தேன்.'' என்றதும் நிலா வேகமாக அவளின் உடமை வைக்கும் கப்போர்ட திறந்து அவனின் ரிப்போர்ட் எடுத்து கொடுத்தாள்.</span><br /><span style="font-size: 14pt">வாங்கி கொண்டவன் அவளை திரும்பி கூட பார்க்காமல் சொல்லாமல் கொள்ளாமல் கிளம்பினான்.</span></p>
<p data-p-id="5df2dc891d39048907c8c46cfa754933"><span style="font-size: 14pt">நிலா மனதில் 'நினைச்சேன் என்னடா இவன் என்னை பிடிக்கலை என்று தானே போனான் திடீரென தேடி வந்து பேசறானே என்று கொஞ்சம் ஏங்கிட்டேன்... நல்லவேளை சிஸ்டர் எல்லாம் பேசியதால் அவனிடம் கோவமா நடந்தேன்.. இல்லை நான் பேசறதை கண்டு இவங்களை போலவே அவனும் நினைச்சு இருப்பான்' என்று துவண்டாள். </span></p>
<p data-p-id="9970727efe697729a97c7c76415cd605"><span style="font-size: 14pt">ஆனால் உள்மனம் அவன் பிடிக்கலை என்றாலும் அவனோட நியூஸ் பேப்பர் போட்டோ தானே கட் செய்து உன் ஹாஸ்டல் ரூமில் வச்சியிருக்க... அதுக்கு அப்போ என்ன அர்த்தம்? அவனை விரும்பறியா? அப்பறம் எதுக்கு அவனிடம் சொல்லாமல் மறைக்கிற? என்று கேட்டது... அதற்கு அவளோ இல்லை பிடிக்கலை என்றதும் விலகிடனும் நான் தேடி போய் என்றும் பேசக்கூடாது... இருக்கற நல்ல பேர் கெடக்கூடாது.</span><br /><span style="font-size: 14pt">நமக்கு ஹாஸ்பிடல் சர்வீஸ் செய்து இப்படியே காலத்தை ஒட்டிடறது தான் சரி..' என முடிவெடுத்து மனதை வேறுபக்கம் திருப்ப சென்றாள்.</span></p>
<p data-p-id="2ea6b04973970f4d528302bb3a2d5979"><span style="font-size: 14pt">இங்கு ரூபனோ 'போச்சு எல்லாம் போச்சு பிடிக்கலை என்று வாயை விட்டு ஏற்கனவே ஒரு வருஷத்தை வேஸ்ட் பண்ணிட்டேன்.. சரி இப்போ போய் பேசி பழகி லவ் பண்ணலாம் என்றால், எனக்கும் லவ்-க்கும் சுத்தமா செட் ஆகாது போல... ஒரு அடி அவகிட்ட போனாலே பத்தடி தூரமா போறா... எனக்கு இது தேவையா? ஆசை ஆசையா பார்க்க வந்தேன்.. இப்படி ஆகிடுச்சே... இப்போ என்ன செய்ய? நல்ல வேலை என் ரிப்போர்ட் வாங்க வந்தேன் என்று சமாளிச்சு கெத்து காட்டியாச்சு.... ஆனா அவளோட இப்படியே பழகினேன்.. நிச்சயம் என்னை திரும்பி கூட பார்க்க மாட்டாள் அது நல்லாவே தெரியுது.</span></p>
<p data-p-id="b044641de0e5611d51fddf206fd289d3"><span style="font-size: 14pt">மனசு முழுதும் லவ் வச்சிக்கிட்டு அவளை நார்மலா பார்க்கிறதே எனக்கு கஷ்டமா இருக்கு... இதுக்கு என்ன தான் தீர்வு எடுக்க என்றே தெரிலை...</span><br /><span style="font-size: 14pt">பேசாம அம்மாகிட்ட போய் நான் முன்ன பார்த்த பொண்ணு நிலாவை விரும்பறேன் கட்டி வைங்க என்று அம்மாகிட்ட கேட்டா? நிச்சயம் தாமஸ் அங்கிள் கையில் காலில் விழுந்தாவது ஓகே வாங்கிடுவாங்க... அம்மாவுக்கு என் கல்யாணம் அவ்ளோ முக்கியம் ஆனா இது போலீஸ்காரனா இருந்துகிட்டு சின்னப்புள்ள தனமா இருக்கும்... இவ்ளோ நாள் காத்திருந்து இத லவ் மேரேஜ் மாற்றி காட்ட கூட எனக்கு துப்பில்லையா? என்று என் மனசாட்சியே காறி துப்பும்... அவளிடம் இப்போ வேண்டாம் கொஞ்சம் விட்டு பிடிக்கணும்.. ஆனா காலம் போகுதே... ஐயோ ஐயோ இப்படி புலம்ப விட்டுட்டியே நிலா.' என பைக்கில் பறந்தபடி போனான்.</span></p>
<p data-p-id="f0739aca6d2e7689d504f57eeec18f72"><span style="font-size: 14pt">மதியம் ஒன்றாக சாப்பிடும் பொழுது ரேணுகா சுந்தரி வேணி என்று அமர நிலா நிமிராமல் சாப்பிட்டு முடிக்க எழுந்து கொள்ளும் பொழுது கைகளை பற்றி நிறுத்தினாள் ரேணுகா. மாலினி ஒன்றும் புரியாமல் எல்லோரையும் பார்க்க.</span><br /><span style="font-size: 14pt">''சாரி நிலா... நாங்க பேசியது தப்பு தான் நீ நார்மலா இல்லை அந்த போலீஸ்காரன் இங்க இருந்து போற வரை நீ ஏதோ கவலையா தான் இருந்த.. ரொம்ப அக்கறை இருந்துச்சு அதான் அப்படி பேசிட்டோம் பட் தப்பு தான் உங்கிட்ட கேட்டு இருக்கனும்... உன்னை தப்பா பேசியத்துக்கு ரொம்ப சாரி நிலா'' என்றதும் அவளையே மன்னிப்பை வேண்டிட மாலினி அவர்களுக்குள் நடந்தவையை கேட்க சுந்தரி எல்லாம் சொல்லி அவளும் மன்னிப்பு வேண்ட மாலினிக்கு தலைக்கு மேல கோவம் பொங்கியது.</span></p>
<p data-p-id="bfa8e273f7400685916c7ff85a36313b"><span style="font-size: 14pt">''உங்களுக்கு எப்படி இப்படி பேச தோணுச்சு... உங்களுக்கு ஒன்னும் தெரியுமா அந்த ரூபன் தான் நிலாவுக்குனு கல்யாணம் செய்ய, அவளோட அப்பா அம்மா பார்த்த பையன்... அவர் பிடிக்கலை என்று போயிட்டார்.. அதுக்கு பிறகு அடிபட்டு இங்க தான் அவள் பார்த்து இருக்கா.. அவர் பிடிக்கலை என்றாலும் அவருக்கு குண்டு அடிபட்டு பார்த்ததும் கொஞ்சம் கலங்கிட்ட... அவ்ளோ தான்... ஏன் அவள் அப்பா அம்மா பார்த்த பையன் என்ற எண்ணத்தில் கொஞ்சம் மனசு அக்கறை காட்டியது தப்பா சொல்லுங்க.'' என்றதும் நிலா அமைதியாக கண்கள் நீரை சுரந்தன.</span><br /><span style="font-size: 14pt">அப்பொழுது தான் தங்கள் பேசிய உண்மையான காயத்தை உணர்ந்தார்கள். மூவருமே ''ரியலி சாரி'' என்றே கையை பிடிக்க நிலா கண்களை அழுத்த துடைத்து.</span></p>
<p data-p-id="dc99a236a0b8a0934b653a8b1c25ccd2"><span style="font-size: 14pt">''சாரி எல்லாம் வேண்டாம் அக்கா... இனி யாரையும் பேசும் பொழுது யோசிச்சு பேசுங்க...'' என எழுந்து சென்றாள். </span></p>
<p data-p-id="e6cd29ab695361f585871e4c13f99996"><span style="font-size: 14pt">சுந்தரியும் வேணியும் கிளம்ப ரேணுகா மாலினிமுன் நின்று ''நிலாவுக்கு அந்த போலீஸ்காரனை பிடிக்குமோ என்னவோ தெரியாது ஆனா அவளுக்கே தெரியாம அவன் மீது அக்கறை இருக்கு அது உண்மை மாலினி.. நிலா லைப் இப்படியே இருக்க கூடாது நீ உன் ப்ரெண்ட் கூட கேளு... அவர் பார்வை கூட அவளோட பேச வந்த ஆவல் இருந்துச்சு... முன்ன ஏதோ காரணத்துல பிடிக்காம போயிருக்கலாம் ஆனா இப்போ அவங்க மனசில் புதுசா ஏதாவது தோன்றி இருக்கலாம்... என்ன அவர்களுக்கே அது தெரிலையோ என்னவோ... நீ பேசி பாரு அவள் மனசு கஷ்டப்படாம.. ஓகே'' என ரேணுகா நகர்ந்தாள்.</span></p>
<p data-p-id="0aae21fc08b0a49b58cf6064f02fca98"><span style="font-size: 14pt">மாலினிக்கும் தோன்றியது தான் ரூபன் அட்மிட் ஆனதும் ரொம்பவே துடித்தாள். ஹாஸ்டல் கூட போகாமல் இங்கயே இருந்து கண்ணும் கருத்துமாக அவனை பார்த்து கொண்டாள். அவனுக்கு நல்ல உணவாக வாங்கி வர வெளியே சென்றாள். இங்கு இருக்கும் கேன்டீன் போதும் என்று எப்பொழுதும் சாப்பிடும் அவளே தான்.</span></p>
<p data-p-id="9beb0c22d0a14a66d604de035d340abc"><span style="font-size: 14pt">அன்று அவனை டவல் பாத் எடுக்க வைக்கும் பொழுது முதலில் போக மறுத்தவள் பிறகு மற்றவர்களையும் போக விடாமல் தடுத்துவிட்டாள். அவளே செய்த பொழுதும் அவனின் கண்களை கூட பார்க்க மறந்து தவிர்த்து வந்து நின்றாள். டவல் பாத் தான் அதற்கே மூச்சுமுட்டி அறைக்கு வந்து நின்றாள். </span></p>
<p data-p-id="ac7eba8d611ce97e0a4fb497d1995329"><span style="font-size: 14pt">இதுவரை அப்படி அவள் ஆனதே இல்லை. மாலினிக்கு நிலாவிடம் இன்று பேசுவதை விட நாளைக்கு பேசி கொள்ளலாம் என விட்டு பிடித்தாள்.</span></p>
<p data-p-id="9ce645c3c3f417651afc39ec41536c13"><span style="font-size: 14pt">மதியம் விடுமுறை சொல்லிவிட்டு தனது மனம் போன போக்கில் நடக்க தனக்கு முன் சென்று கொண்டிருந்த பெண்மணி தள்ளாடி தள்ளாடி நடக்க கண்டாள். </span></p>
<p data-p-id="19ca3928d52aea84e5c3106881cd4f3a"><span style="font-size: 14pt">ரூபனை பற்றியே எண்ணி கொண்டு வந்தவள் அப்பெண்மணியை கண்டு வேகமாக ஓடினாள்.</span></p>
<p data-p-id="dc92a9bf222f8be6535d057e07d21152"><span style="font-size: 14pt">நிலா அருகே செல்ல அப்பெண்மணி மயங்கி சரிய சரியாய் இருந்தது. நிலா வேகமாக அப்பெண்மணியை தாங்கி பிடித்து ''அம்மா என்னாச்சு...?'' என மடியில் வைத்து கேட்க, கண்கள் சொருக இருந்த பெண்மணியை பார்த்து கையில் இருந்த நீரை முகத்தில் தெளித்து குடிக்க வைத்தாள்.</span></p>
<p data-p-id="a88c9915faa0017be6fc2e0f629810f4"><span style="font-size: 14pt">''லோ சுகர்... அதான்'' என சொன்னதும் பக்கத்தில் இருந்த கடையில் மிட்டாய் ஒன்றை வாங்கி சுவைக்க கொடுத்தாள். அதிலே எழுந்த அப்பெண்மணியை அருகே ஒரு திண்டில் அமர வைத்து கொஞ்ச நேரம் இருக்க வைத்தாள்.</span><br /><span style="font-size: 14pt">''ரொம்ப நன்றி...'' என்றதும்</span><br /><span style="font-size: 14pt">''நன்றி எல்லாம் எதுக்கும்மா. என் அம்மா வயசு உங்களுக்கு... எதுக்கு இப்படி வெயிலில் வெளிய வர்றிங்க... அப்படியே வந்தாலும் துணைக்கு யாரையாவது அழைச்சுட்டு வந்து இருக்கலாமே?'' என கரிசனையாக கூறினாள். </span></p>
<p data-p-id="9d72972e67496ff64cfc5e07e88549f8"><span style="font-size: 14pt">''என் பையனை தவிர்த்து எனக்குன்னு யாருமில்லை மா... அவனும் உத்தியோகம் அது இதுனு சுற்றிட்டு இருப்பான்... இன்னிக்கு கொஞ்சம் அஜாக்கிரதையா இருந்துட்டேன்...அதான்'' என பழக்கூடையை தூக்க முடியாமல் தூக்கிக்கொண்டு நடந்தார். </span></p>
<p data-p-id="aa828fbb9e9b7748c0cbc815c451d9ec"><span style="font-size: 14pt">''கொடுங்க ம்மா நான் தூக்கிட்டு வர்றேன்... நானும் இதே வழி தான்'' என்றதும் அப்பெண்மணி கொடுத்துவிட்டார்.</span><br /><span style="font-size: 14pt">''உனக்கு சிரமம் கொடுத்துட்டேன்...''</span><br /><span style="font-size: 14pt">''அதெல்லாம் பரவாயில்லை மா என் அம்மா வயசு தானே உங்களுக்கும்'' என நடந்து கொண்டு வந்தார்கள். </span></p>
<p data-p-id="16cdf7fd37cbbe364cb84ecd3f3cf78f"><span style="font-size: 14pt">இரு தெரு சென்றதும் ஒரு வீட்டின் முன் கேட்டை திறந்து அப்பெண்மணி நடக்க பழக்கூடை கொண்டு வந்து வைத்தாள்.</span></p>
<p data-p-id="cf96f464dceb6e37ef8d0f2ab049c3e3"><span style="font-size: 14pt">''உள்ள வாம்மா...'' என்றாள் அம்முதியவள்.</span><br /><span style="font-size: 14pt">''இருக்கட்டும் அம்மா நான்......''</span><br /><span style="font-size: 14pt">''இது வரை வந்து உதவி செய்த ஒரு வாய் காபி தண்ணீர் குடிச்சுட்டு போ உள்ள வாம்மா' என அழைக்க நிலா உள்ளே வந்தாள்.</span></p>
<p data-p-id="5644b7691516ab5250bb16a65f71efb7"><span style="font-size: 14pt">கூடவே பழக்கூடை தூக்கி கொண்டு வந்து பிரிட்ஜ் அருகே வைத்தவள் நிமிர்ந்தாள்.</span><br /><span style="font-size: 14pt">அங்கே காக்கி உடையில் கம்பீரமாக போட்டோவில் காட்சி அளித்தது ரூபன் பிரகாஷ் தான். </span></p>
<p data-p-id="c4d8ad96a2c222067bcb0bf86fda7200"><span style="font-size: 14pt">இன்னொரு புகைப்படத்தில் அவனும் இந்த முதியவளும் இருக்க பார்வை அப்படியே அப்பெண்மணியை பார்த்தாள் .</span></p>
<p data-p-id="0b0d17b7a36d86d1ae44696591f929c9"><span style="font-size: 14pt">''அது என் பையன் ரூபன்.... போலீசா இருக்கான்'' என நீரை கொடுக்க வாங்கி பருகினாள்.</span></p>
<p data-p-id="4d4edd4a897181fd80b84466c30385a6"><span style="font-size: 14pt">இனி இங்கு இருப்பது நல்லதல்ல என்று  தோன்றவும்''சரிம்மா நான் கிளம்பறேன்'' என தங்கநிலா ஓட்டமெடிக்காத குறை. </span></p>
<p data-p-id="d2bc7b024fb6b595a72a8f12e104f15f"><span style="font-size: 14pt">''கொஞ்ச நேரம் இரும்மா என் மகனுக்கு போன் பண்ணி இருக்கேன் வந்துடுவான் பார்த்துட்டு போ'' என்றார் பாக்கியம். </span></p>
<p data-p-id="4234c009c46468a0a26405654a610276"><span style="font-size: 14pt">''அய்யயோ... இல்லை ஆன்ட்டி எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு உடனே போகணும்.... உடம்பை பார்த்துக்கோங்க...'' என வெளியேறினாள்.</span><br /><span style="font-size: 14pt">''ஹ்ம்ம் சரிம்மா இதான் விடு ஒரு நாள் நேரம் இருக்கும் பொழுது வா'' என அனுப்ப தங்கநிலா வேகமாக வெளியேறி அவளின் ஹாஸ்டல் வந்து சேர்ந்தாள்.</span></p>
<p data-p-id="477fc3f56cbc0f7a78c9933ae7ed92b4"><span style="font-size: 14pt">உப்ஸ் அது ரூபன் வீடா? இந்நேரம் கல்யாணம் முடிஞ்சு அவனின் மனைவியா இருந்தா இப்போ நான் அங்கயிருந்து இருப்பேன் ரூபி.</span></p>
<p data-p-id="4a68969c9d68d82abdf25be6e588a86b"><span style="font-size: 14pt">அங்கு அவனோ ''அம்மா அம்மா... என்னாச்சு மயங்கிட்டேன்டா கொஞ்சம் வீட்டுக்கு வா சொன்னிங்க'' என பதறி அடித்து வந்தான்.</span></p>
<p data-p-id="2b2ab2c94722357a48184a757be98975"><span style="font-size: 14pt">''ஒன்னுமில்லைடா கொஞ்சமா மயங்கிட்டேன்.. ஒரு பொண்ணு வந்து வீட்டில் விட்டுட்டு போனாள்''</span><br /><span style="font-size: 14pt">''பொண்ணா?''</span><br /><span style="font-size: 14pt">''ஹ்ம்ம் ஐயோ பேரை கேட்டு கூட வச்சிக்கலை... ஒரு தேங்க்ஸ் கூட சொல்லலை''</span><br /><span style="font-size: 14pt">''ஏன் ம்மா வீட்டுக்கு வந்து விட்டுட்டு உதவி செய்து போயிருக்கா ஒரு தேங்க்ஸ் கூட சொல்லையா... என்ன அதிசயம் நீங்க அப்படிப்பட்ட ஆளு இல்லையே''</span><br /><span style="font-size: 14pt">''வந்தவ மகாலட்சுமி மாதிரி இருந்தா.... அவளை பார்த்து ...''</span><br /><span style="font-size: 14pt">''போதும் இனி நான் சொல்லட்டுமா... அவளை என் பக்கத்தில் வச்சி கற்பனை பண்ணி பார்த்து இருப்பிங்க... ஏன்ம்மா இப்படி இருக்கீங்க'' என சலித்து பேசினான். </span></p>
<p data-p-id="3a4791fb652ac139585d66d6ada3b52e"><span style="font-size: 14pt">''பிரகாஷ் அவளை நீ பார்த்தா இப்படி பேசி இருக்க மாட்ட, எப்பவும் உன்னை கல்யாண கோலத்தில் வச்சி ஜாதகம் வந்த பெண்ணை நினைச்சு ஜோடி பொருத்தம் பார்ப்பேன் எல்லாம் கொஞ்சம் கூட பிடிக்காது ஜோடியா சேர்ந்தே நிற்க கூட கற்பனை வராமல் தவிப்பேன்... ஆனா இன்னிக்கு வீட்டுக்கு வந்த அந்த பொண்ணை பார்த்து அப்படியே யோசிச்சேனா.. என்ன அதிசயம் அவளோட நீ மணக்கோலத்தில் பொருத்தமா இருக்க..'' என்றார். </span><br /><span style="font-size: 14pt">''அம்மா.'' என கத்தினான். </span></p>
<p data-p-id="2711b91e497cb2ef3c98e5e36a90e345"><span style="font-size: 14pt">''உண்மையை சொன்னா அவள் தான் உன்னை விட அழகா இருந்தா... அதுல அவள் பேரை கேட்க முடியலை'' </span><br /><span style="font-size: 14pt">''உங்களுக்கு வேற வேலையே இல்லை... எப்ப பாரு கல்யாணம் அது இது என்று''</span><br /><span style="font-size: 14pt">''டேய் சிசி டிவி கேமராவில் அவள் இருப்பா போய் பார்த்து எங்க இருக்கா என்று விசாரிச்சுட்டுவாடா அவளை கல்....''</span></p>
<p data-p-id="e3887f10636939c613e80678a084c744"><span style="font-size: 14pt">''நிறுத்தும்மா...... உனக்கு என்ன என் கல்யாணம் நடக்கணும் அவளோ தானே... பொறுமையா இருங்க என் அடுத்த பிறந்த நாள் வருவதற்குள் குடும்பஸ்தனா உங்க முன் நிற்பேன்.. ஆனா அதுக்காக ரோட்டில் எவ போனாலும் என்கூட கற்பனையில் கல்யாணம் செய்து வைக்காதிங்க...'' என்றே கத்திவிட்டு கிளம்பினான்.</span></p>
<p data-p-id="64d271bcca6e44b7c3bf76a989b64283"><span style="font-size: 14pt">பாக்கியமோ 'இப்போ என்ன சொன்னேன் என்று கத்திட்டு போறான். அம்மா வயசில் ஒருத்தர் நமக்கு ஹெல்ப் பண்ணினா நமக்கு அவர்களை பார்த்தா அம்மாவா தோணும்... ஒரு குழந்தையை பார்த்தா கல்யாணம் ஆனவங்க மனசில் நமக்கும் இப்படி ஒரு குழந்தை இருந்தா நல்லா இருக்கும் நினைப்பாங்க. அதே போல தானே இப்போ என் மனசு கல்யாண வயசில் இருக்கற பொண்ண பார்த்ததும் இவள் என் மகனுக்கு பொருத்தமா இருக்குமானு பார்க்கிறேன். ஏன் இதே ஒரு பொண்ணை பார்த்து நமக்கு வருகின்றவள் இப்படி இருக்கனும்னு சில ஆன் பிள்ளைக்கு தோணுமே அப்படி தானே இதுவும்.</span></p>
<p data-p-id="722365f2c5df62882d9d93e0ae393cf6"><span style="font-size: 14pt">அந்த பொண்ணை பார்த்தேன் ரூபனுக்கு நல்ல பொருத்தமா இருந்தாலே என்று மனசில் பட்டதை அவனிடம் சொன்னேன். என்னைக்கும் இல்லாமல் இன்னிக்கு இந்த குதி குதிச்சுட்டு போறான்... இவன் எப்ப கல்யாணம் செய்து இந்த வீட்டுக்கு மருமகள் ஒருத்தி வந்து, அதுக்கு பிறகு பேரன் பேத்தி எடுக்கறது... ஹ்ம்ம் எல்லாம் இவனை சொல்லணும் சொல் பேச்சை கேட்காம அவன் இஷ்டத்துக்கு வளர்ந்து இருக்கான்'' என புலம்பியபடி பாலை சூடுபடுத்த சமயலறையில் சென்றார் பாக்கியம்.</span><br /><span style="font-size: 14pt">அவர்களுக்கு தெரியவில்லை வீட்டுக்கு வந்த பெண்ணின் பெயரை கேட்டு அவனிடம் சொல்லி இருந்தால் அவனே அவர்கள் பேச்சுக்கு மறுவார்த்தை இன்றி கல்யாணம் செய்ய ஒப்பு கொண்டிருப்பான் என்று.</span></p>
<p data-p-id="722365f2c5df62882d9d93e0ae393cf6"><span style="font-size: 14pt">தொடரும் </span></p>
<p data-p-id="722365f2c5df62882d9d93e0ae393cf6"><span style="font-size: 14pt">பிரவீணா தங்கராஜ்  </span></p>]]></content:encoded>
						                            <category domain="https://onlinetamilnovels.com/community/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-praveena-thangaraj/">முதலாம் சந்திப்பில்...-Praveena Thangaraj</category>                        <dc:creator>Praveena Thangaraj</dc:creator>
                        <guid isPermaLink="true">https://onlinetamilnovels.com/community/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-praveena-thangaraj/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-7/</guid>
                    </item>
				                    <item>
                        <title>முதலாம் சந்திப்பில்-6</title>
                        <link>https://onlinetamilnovels.com/community/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-praveena-thangaraj/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-6/</link>
                        <pubDate>Tue, 23 Jun 2026 13:03:02 +0000</pubDate>
                        <description><![CDATA[அத்தியாயம்-6தனக்கு இப்படி ஆகிவிட்டது என்பதை ரூபன் தாயிடம் மறைத்து இருந்தான். அதையும் சொல்லி இருந்தான் நிலாவிடம்... பாக்கியம் ரூபனுக்கு முழுதும் குணம் ஆனதும் தான் தெரிவித்தான். தன்னை இது போல ...]]></description>
                        <content:encoded><![CDATA[<p data-p-id="4194bf28e56c942714170275300ad6bd"><span style="font-size: 14pt">அத்தியாயம்-6</span><br /><br /><span style="font-size: 14pt">தனக்கு இப்படி ஆகிவிட்டது என்பதை ரூபன் தாயிடம் மறைத்து இருந்தான். அதையும் சொல்லி இருந்தான் நிலாவிடம்... பாக்கியம் ரூபனுக்கு முழுதும் குணம் ஆனதும் தான் தெரிவித்தான். தன்னை இது போல பார்க்க மனம் கலங்கி கொள்வார் என நிலாவிடம்  சொல்லி இருந்தான்.</span></p>
<p data-p-id="68163f63c18e97e87675532e0f523a0a"><span style="font-size: 14pt">அப்பொழுது தாமஸ் அங்கிள் உள்ளே வந்து கொண்டிருந்தார். அவர் வந்ததும் நிலா</span><br /><span style="font-size: 14pt">''வாங்க அங்கிள் என்ன இங்க.... உடம்புக்கு ஏதாச்சும்பண்ணுதா?'' என அக்கறையாய் கேட்டாள். </span></p>
<p data-p-id="bfd576ad11caead38818110c126da0fe"><span style="font-size: 14pt">''அதெல்லாம் ஒன்னுமில்லை மா... நீ ஹாஸ்டல் வராம இங்க ஒர்க் பண்றதா கேள்விப்பட்டேன்... அதான் பார்க்க வந்தேன்... பார்த்தா ரூபன் கூட இருக்க...'' என ரூபனை பார்த்து ''ஏன் ரூபன் உனக்கு இப்படி ஆகிடுச்சுனு அம்மாகிட்ட சொல்லலையா... ஒர்க் அதிகம் என்று சொல்லிட்டு வெளிய இருக்கறதா நம்பிட்டு இருக்காங்க... நீ என்னடா என்றால் கையில் குண்டுபட்டு இங்க இருக்க?'' என்றார். </span></p>
<p data-p-id="51fcf7b68e85184a64a6a1e647cb9782"><span style="font-size: 14pt">''அது போன தடவை அம்மா ஹாஸ்பிடல் வந்து கூடவே இருந்தாங்க ஒரே அழுகை தான் எனக்கு அது கடுப்பா ஆகிடுச்சு அங்கிள். அதான் இந்த முறை தெரிவிக்க கூடாது என்ற முடிவுல இருந்தேன்... பட் இங்க நிலா இருந்தாங்களா அதனால சுத்தமா சொல்ல தோணலை..'' என்றான் அவள் மீது பார்வை அகற்றாமல். </span></p>
<p data-p-id="45d80972bce476ac49a796d3a3b2ba93"><span style="font-size: 14pt">தாமஸ் கவனித்து ''எங்க அவ அப்பா அம்மா போனதுக்கு பிறகு நிறைய நேரம் இங்க தான் இருக்கா... அதான் இப்பவும் அதே போல இருக்களோனு பார்க்க வந்தேன்... அவங்களுக்கு எல்லாமே இவ தான்... என்னை கடைசியா பார்க்க வரும் பொழுது கூட ஜோடியா வந்தாங்க... உயிர் போகும் பொழுதும் ஜோடியா போயிட்டாங்க..'' என்றார். </span></p>
<p data-p-id="50144b9d1655f5f37561c18a9d301f25"><span style="font-size: 14pt">''அங்கிள்.... அவங்க அம்மா வீட்டிலும் அப்பா ரோட் ஆக்சிடேன்ட்லையும் போனதா அம்மா சொன்னாங்க?'' என்று அவள் இருப்பதை எண்ணி நிறுத்தினான். </span><br /><span style="font-size: 14pt">''ஹ்ம்ம் ஆமாம் ப்பா.. திவாகர் வீட்டுக்கும் என் வீட்டுக்கும் 20 நிமிஷ பயணம் தான்... இரண்டு பேரும் ஒண்ணா தான் பைக்ல வந்தாங்க. அப்போ எப்படி அபிராமி வீட்டுக்கு போயிருக்க முடியும் உடனே திவாகர் கிளம்பி இருக்க முடியும்? திவாகர் வண்டி ஓட்டுற வேகத்துக்கு அவங்க இரெண்டு பேருமே ஒரே இடத்தில தான் இருந்து இருக்கனும் ஆனா வீட்டுக்கு எப்படி அபிராமி போனாங்க என்றே புரியல... ஆனா பாரு போனவங்க இரெண்டு பெரும் ஒரேடியா போயிட்டாங்க... கொஞ்சம் இந்த பிள்ளைக்காக ஒருத்தராவது உயிரோட இருந்து இருக்கலாம்'' என்றார். </span></p>
<p data-p-id="a1200bdb46264e0b9db31e3a3b850d70"><span style="font-size: 14pt">''சொந்தம் என்று வேற யாருமில்லையா ?'' என்றான் ரூபன்.</span></p>
<p data-p-id="1533280314ea2d6c8408cb48aeccb5ad"><span style="font-size: 14pt">''திவாகருக்கு ரேவதி என்று தங்கை மட்டும் தான்... அவளும் அவளோட குடிகார கணவனும் தான். ஆனா ரேவதி இவங்க இறந்த செய்தி தெரியாதோ என்னவோ அந்த அம்மாவை காணோம்.... ரேவதி புருஷன் கூட ஏதோ சண்டை போட்டுக்கிட்டு எங்கோ போயிட்டாங்க என்று தகவல் தான் கிடைச்சது.'' என்றார்.</span><br /><span style="font-size: 14pt">நிலா கண்கள் கண்ணீர் எல்லாம் வரவில்லை.. இந்த ஒரு வருடம் எல்லோரும் கேட்டு கண்ணீர் வடித்து எல்லாம் கடந்து இருந்தாள்.</span></p>
<p data-p-id="b57b3b7faf96e2ade35e2f84f3ec750c"><span style="font-size: 14pt">''உங்க மாத்திரை'' என கொடுக்க ரூபன் வாயில் போட்டு, அவள் விழுங்க செய்து நீரை கொடுத்தாள். தாமஸ் அதனை கண்டு இருவரின் நெருக்கத்தை குறித்து கொண்டார். இது பாக்கியத்தின் காதில் சொல்லி முடிவு எடுக்க செய்ய வேண்டும்.</span></p>
<p data-p-id="afa77c7c45c5eb21730e53f3c603390e"><span style="font-size: 14pt">ஏற்கனவே இருவரின் ஜோடி பொருத்தம் கண்டு மனம் நிறைந்தவர்... இந்த முறை இவர்களிடம் கேட்பதற்கு பதில் பாக்கியத்தின் முடிவில் கேட்க வேண்டும் என கிளம்பினார்.</span></p>
<p data-p-id="736e2964193f811024a33d9dd63b90f9"><span style="font-size: 14pt">அவர் சென்றதும் ரூபன் நிலாவிடம் எதையும் கேட்கவில்லை. அவன் அவளின் நிலையை எண்ணி அவளோடு தான் திருமணம் செய்ய கேட்க வேண்டும். போன முறை போல ஏதேனும் மறுப்பில் முடிந்தால் என பொறுத்தான்.</span><br /><span style="font-size: 14pt">ஒரு வருடம் பொறுத்தவனுக்கு இது சாத்தியம் தான்.</span></p>
<p data-p-id="af4bf1c714e104390652ef942460b3e6"><span style="font-size: 14pt">தாமஸ் நேராக சென்றது பாக்கியத்தின் வீட்டிற்கு தான்.</span><br /><span style="font-size: 14pt">''வாங்க அண்ணா... உட்காருங்க...'' என வரவேற்றிட கொஞ்ச நேரத்தில் நிலா பற்றி சொல்லி முடித்தார்.</span></p>
<p data-p-id="be006598377888ffc9a1bfad52cc8dae"><span style="font-size: 14pt">ரூபன் அங்கு இருப்பதையும்... சேர்த்தே.... இதை கேட்டு பாக்கியம் கலங்கி போனார்.</span></p>
<p data-p-id="494a1a81ef7c77d45b00b2d796cf9782"><span style="font-size: 14pt">''பாருங்க அண்ணா அவனை போன முறை இப்படி ஆனப்பவே சொன்னேன்... இந்த வேலையே வேண்டாம் என்று கேட்டானா? அவன் நான் சொல்றதை எதையும் கேட்கறது இல்லை.... பொண்ணு பார்த்தா வேண்டாம் என்று சொல்றான்... வேலையும் விடமாட்றான் ... என் காலத்துக்கு பிறகு அவனை யார் தான் பார்த்துப்பாங்க..?'' என சேலையில் கண்ணீர் அழுத்தி துடைத்தார்.</span></p>
<p data-p-id="98aa10904523566dc2a1f439cd23f656"><span style="font-size: 14pt">''அதுக்கு தான் வந்திருக்கேன் மா... எனக்கு என்னவோ நாம அவனுக்கு முதலில் பார்த்தோமே நிலா அவளையே கட்டி வைக்கறது தான் நல்லதுனுபடுது... மருத்துவமனையில் கூட அவன் கூட அந்த பொண்ணு தான் இருக்கா... எனக்கு என்னமோ அவனுக்கு அவள், அவளுக்கு அவன்னு  கடவுள் எழுதி வச்சி இருப்பதாகவேபடுது. எதுக்கோ நீயும் கொஞ்சம் கட்டாயப்படுத்தி கேட்டு பாரு.'' என்றே கிளம்பினார்.</span></p>
<p data-p-id="4fe847bd029bb662bfb18f0cd3d688ac"><span style="font-size: 14pt">மகன் மருத்துவமனை இருப்பதை கண்டு தாமஸ் கிளம்பும் பொழுதே பாக்கியமும் கிளம்பினார். நேராக வரும் பொழுது ரூபன் எழுந்து அமர்ந்து இருந்தான்.</span><br /><span style="font-size: 14pt">அம்மா.'' என ரூபன் வரவேற்றான். </span></p>
<p data-p-id="64bd946ec131effcde2fcac3c551e5d8"><span style="font-size: 14pt">''அப்படி கூப்பிடதடா நான் எதுக்கு இருக்கேன். இப்படி நீ கட்டிலில் படுத்து கிடைக்கும் பொழுது உனக்கு என்ன ஆச்சு என்று கூட தெரியாம வீட்டில்  இருக்கேன்'' என அழுதார். </span></p>
<p data-p-id="be1132105651e3ee48139d3c0d9fb05f"><span style="font-size: 14pt">''அம்மா தயவு செய்து அழாதீங்க போன தடவை அழுதே எனக்கு செம கடுப்பா இருக்கு...'' என்று கூற பாக்கியம் ஏதோ தேடி பார்க்க</span><br /><span style="font-size: 14pt">''எங்கடா அவ?''</span><br /><span style="font-size: 14pt">''யாரு...?'' என்றான் ரூபன்.</span><br /><span style="font-size: 14pt">''அதான் டா தாமஸ் அண்ணா சொல்லிய பொண்ணு நிலா....'' என்று விசாரித்தார். </span></p>
<p data-p-id="6036f02b40b79c758e6691e752ae3fbf"><span style="font-size: 14pt">''அடிபட்ட நேரம் இருந்து இப்பவரை இங்க தான் இருந்து கவனிச்சா.... எனக்கு கொஞ்சம் சரி என்றதும் ஹாஸ்டல் இப்போ தான் போன ஏன்ம்மா?'' என்றான்.  </span></p>
<p data-p-id="b5b13f26fe586bfef8ff2845eb298ac7"><span style="font-size: 14pt"> பாக்கியமோ ''ஒன்னுமில்லை சும்மா தான் கேட்டேன்'' என சொல்லி கொண்டார். மனதில் 'சே அவளை பார்க்க தான் ஓடி வந்தேன் இப்போ அவள் இல்லையா? ஹ்ம்ம் எனக்கு அவளை பார்க்க கொடுத்து வைக்கலை' என எண்ணி பேச கிளம்பும் நேரமும் வந்தது.</span><br /><span style="font-size: 14pt">ரூபனுக்கு நிலா இருந்தால் சொல்லிவிட்டு செல்ல எண்ணி இருந்தான் ஆனால் அவளோ இந்த நேரம் பார்த்து ஹாஸ்பிடல் இருந்து ஹாஸ்டல் சென்றுள்ளாள்.</span></p>
<p data-p-id="617f1815b250524f03c7dedb750c23aa"><span style="font-size: 14pt">அவனுக்கு தெரியாது இவனுக்கு டிஸ்சார்ஜ் என்றதும் அவன் கிளம்புவதை எண்ணி கலங்கி அவள் இன்று ஹாஸ்டல் சென்றாள்.</span></p>
<p data-p-id="b556fe92548f625c98a9fd17a10b418d"><span style="font-size: 14pt">வீட்டுக்கு வந்ததும் பாக்கியத்திடம் நிலா பற்றி சொல்ல எண்ணி வேண்டாம் என உள்ளுக்குள் நினைத்தான். முதலில் நிலாவிடம் மன்னிப்பு கேட்டு பிறகு காதல் சொல்லி ,அம்மாவிடம் சொல்ல வேண்டும்' என முடிவெடுக்க அவனின் முடிவு செயல்படுமா என்று காலம் முடிவெடுக்கும்.</span></p>
<p data-p-id="93dd940c4137670fab8f7496ce11180a"><span style="font-size: 14pt">இப்படி ஒவ்வொரு மனநிலை எல்லாம் மாற்ற நேரம் கூடி வருமா? ரூபனுக்கு வந்ததும் தீர்க்க வேண்டிய வேலையாக பல இருந்தன. </span></p>
<p data-p-id="3b39af3bd4d93022beebcd5a0dd2463a"><span style="font-size: 14pt">அதை எல்லாம் தாண்டி அவனுக்கு நிலா நினைவு தாக்கியது. எப்பொழுதும் உறக்கத்தில் கனவில் அவள் அன்று முதல் முறை சந்திப்பின் பொழுது அவன் மீது படர்ந்த நிலையும் அவன் அவள் இடை பற்றிய நிலையும் உறக்கம் வராமல் படாத பாடுபடுத்தும். கொஞ்ச நாள் அதன் தாக்கம் தன்னை தீண்டாமல் இருக்க மும்பையில் இரவிலும் டியூட்டி பார்த்தான்.</span></p>
<p data-p-id="e053a79f29049c35ada9341525dcf53f"><span style="font-size: 14pt">இப்பொழுது நிலா திருமணம் ஆகாதவள் என்றதும் மீண்டும் அவளின் நினைவு தாக்கியது. நான்கு நாட்கள் ஆனது. அவன் முன்பு போல தோற்றம் கொள்ள உடை உடுத்தி வழக்கம் போல பணிக்கு தயாரானான்.</span></p>
<p data-p-id="4caf830aa55c496cf761087099d57df6"><span style="font-size: 14pt">''டேய் இப்போ தான் குண்டு அடிபட்டு நல்லாச்சு கொஞ்சம் நல்லானதும் கிளம்பிட்ட?'' என்றார் பாக்கியம்.</span><br /><span style="font-size: 14pt">''ம்மா முக்கியமானவங்களை பார்க்க போறேன் இந்த வேலை ரொம்ப முக்கியம்'' என பீடிகை போட்டு கிளம்பினான்.</span><br /><span style="font-size: 14pt">எப்பொழுதும் தனது அலுவலக வண்டி வந்து காத்திருக்க இன்றோ அவனின் இருசக்கர வாகனத்தை உயிர்பித்தான்.</span></p>
<p data-p-id="3a1a1454418493e425fe36a233aee0b8"><span style="font-size: 14pt">நேராக அந்த வண்டி நின்றது நிலா பணிபுரியும் மருத்துவமனைக்கு தான்.</span><br /><span style="font-size: 14pt">மருத்துவனையில் வந்து சேர்ந்த ரூபனை அங்கிருந்த மற்ற பெண்கள் கண்கள் விழுங்கி பார்க்க, அவனோ நிலாவை தேடியபடி நின்றான்.</span></p>
<p data-p-id="fac7d4072ec1d8e5eb71a451d70da036"><span style="font-size: 14pt">எல்லா நர்ஸ்ஸூம் இருக்காங்க என்னை ஏங்க வைக்கிற அவயெங்க? என்றவன் மனதில் நினைத்து ஒரு பெண் செவிலியிடம் கேட்க, அவனை வினோதமாக பார்த்து இன்னும் எண்ட்ரன்ஸ்புக்ல சைன் இல்லை வரலை போல' என கூறி சென்றாள். ரிசப்ஷன் சேரில் அமர வெளியே பார்வை பதித்தான்.</span></p>
<p data-p-id="9d6bb6e3064a42a6dae78f5ff11988b0"><span style="font-size: 14pt">நர்ஸ் உடை மாற்றும் இடத்தில் சென்ற ஒருவள் மற்றொருவளிடம்</span><br /><span style="font-size: 14pt">''ஏய் அன்னிக்கு நிலா ஒரு போலீஸ்காரனுக்கு விழுந்து விழுந்து கவனிச்சலே அவன் நிலாவை மடக்கிட்டான் போல காலையிலே வந்து அவளை தேடறான்....'' என்றாள் சுந்தரி.</span></p>
<p data-p-id="3c5b3099b3d03d88ad51fc275b4ae377"><span style="font-size: 14pt">''அவன் மட்டுமா மடங்கிட்டான் நிலாவும் தான் ரொம்ப நல்லவள் மாதிரி அமைதியா இருந்தா இப்போ போலீஸ்காரன் என்றதும் என்ன நினைச்சாளோ, அவனை ரொம்ப தான் கவனிச்சா... நான் ஒரு இன்ஜெக்ஷன் தான் போட போனேன் தடுத்து அவளே ட்ரிப்ஸ்ல போட்டுட்டா... அப்பவே எனக்கு ஏதோ தோணுச்சு...'' என்றாள் வேணி.</span></p>
<p data-p-id="5538a00b404de1025f0e1ee0c2959b8a"><span style="font-size: 14pt">''ஏய் என்னப்பா நீங்க அவள் ஒன்னும் அடிக்கடி ஆளை மாற்றும் ஆளும் இல்லை அழகா இருக்கான் என்று வழியறவளும் இல்லை அவர்களுக்குள் வேற என்னவோ.... நிலாவுக்கு ஏற்கனவே அவனை தெரியும் போல... நீங்களா எதையும் தவற பேசா... தி...'' என ரேணுகா முடிக்கும் முன்னே நிலா அங்கிருந்த ஆடை மாற்றும் அறையில் இருந்து அமைதியாக வெளியே வந்தாள். </span></p>
<p data-p-id="6d61fe30e07a9a44b37741cf059d40a5"><span style="font-size: 14pt">அங்கிருந்த யாரின் முகத்தையும் அவள் நேராக பார்க்கவில்லை.... மற்றவர்களும் பேசிய பேச்சுக்கு பயந்து அமைதியாக இருக்க செய்திட, நிலா வெளியேறினாள்.</span></p>
<p data-p-id="d24087083c2125e2bd1b49fe2b1a8077"><span style="font-size: 14pt">''போச்சு எல்லாம் அவள் இருக்கா என்று தெரியாம பேசியாச்சு அவள் நம்மளை புகார் சொல்ல போறா...'' என்றாள் சுந்தரி</span><br /><span style="font-size: 14pt">''சே சே அவள் அப்படி செய்யற ஆள் கிடையாது... மணி அவளிடம் லவ் சொல்லி டார்ச்சர் செய்தப்ப அவனை புகார் செய்யலை... அட்வைஸ் தான் பண்ணி அனுப்பினா...'' என ரேணுகா இம்முறையும் நிலாவுக்கு பரிந்தபடி பேசினாள். </span></p>
<p data-p-id="fec16fe9da064a60631f1d24d36eab25"><span style="font-size: 14pt">''சரி அப்படியே இருந்தாலும் அவள் அந்த போலீஸ்காரனிடம் தனிப்பட்ட அக்கறை செலுத்தினா என்பது உண்மை தானே... ஆபரேஷன் தியேட்டர்ல அவ அழுதா. டாக்டர் சித்திக் கூட அவளிடம் தெரிந்தவரா என்று கேட்டார்... நாமளும் அதே தானே பேசினோம்... அப்போ தப்பு என்ன?'' என்றாள் வேணி.</span></p>
<p data-p-id="2260a7b2f3e13022e8fd3d4deb672cea"><span style="font-size: 14pt">''டாக்டர் கேட்டது வேற, நாம பேசிய முறை வேற அக்கா, என்ன இருந்தாலும் இந்நாள் வர அவளிடம் நல்லா பழகிட்டு நாம பேசியது தப்பு தான். இதை அவளிடமே கேட்டு இருக்கலாம்'' என ரேணுகா செல்ல, சுந்தரி மற்றும் வேணி இருவரும் தவறு தானோ என்றே எண்ணி வருந்தினார்கள். </span></p>
<p data-p-id="f3fcaf218e1af04fa2c0fc05ecdf2aaa"><span style="font-size: 14pt">நிலா ரிசப்ஷன் அருகே வந்து கையெழுத்து போட்டு ரூபனை பார்க்காமல் செல்ல, ரூபனோ அவளை வழி மறித்து நின்றான். அவளோ முறைக்க அவள் எதற்கு முறைக்கின்றாள் என அறியாமல் ரூபன் பேசினான்.</span></p>
<p data-p-id="f6d786e14bff737e9d30e013f2380a0f"><span style="font-size: 14pt">''ஹாய் உனக்காக தான் வெயிட் பண்ணினேன். அன்னிக்கு உங்கிட்ட சொல்லாமல் கிளம்பிட்டேன். தேடினியா? நீ போன கொஞ்ச நேரத்தில் அம்மா வந்தாங்க உன்னை பற்றி கேட்டாங்க உன்னை பார்க்க... ரொம்ப ஆசைபட்டாங்க....'' என்றதும் அவள் கண்கள் கூர்மையோடு பார்க்க ''ஐ மீன் அம்மா என்னை கவனிச்சுக்கிட்ட உன்னை பார்க்க ஆசைபட்டாங்க...'' என நிறுத்தினான்.</span></p>
<p data-p-id="aa645866ccda206c3af202e9b8bacd62"><span style="font-size: 14pt">''ஓகே. இப்ப வழி விடுங்க...'' என எதற்கும் பதில் சொல்லாமல், அதே சமயம் அவன் என்ன பேசினான் என்று பொருட்படுத்தாமல் செல்ல பின்னாடியே வந்தான்.</span></p>
<p data-p-id="d9d39d311ebc613e2798d432b40f88f9"><span style="font-size: 14pt">''என்னாச்சு? தலைவலியா? ஒரு மாதிரி இருக்க?'' என்றான். </span></p>
<p data-p-id="ed3adff2ff66467cd9ac9632e5ed0fff"><span style="font-size: 14pt">அதே நேரம் வேணி சுந்தரி மற்றும் ரேணுகா மூவரும் வந்து நிற்க நிலாவோ ''என்ன சார் வேணும் ஏதோ தெரிந்தவர் அதனால் கூடவே இருந்து பார்த்துக்கிட்டேன். அதுக்கு இப்போ என்னை தேடி வந்து வழிமறிச்சு பேசிட்டு இருக்கிங்க? லுக் எனக்குன்னு யாருமில்லை என்றாலும் ஏதோ நல்ல பேர் சேமித்து வச்சியிருக்கேன். இப்படி பின்னாடி வந்து பேசி அதை ஸ்பாயில் பண்ணிடாதிங்க... நல்ல பேரை ஒரு முறை இழந்தால் திரும்ப அந்த நல்ல பேர் எடுக்க முடியாது.'' என கத்திவிட்டு, அங்கிருந்த அறைக்கு சென்று ஒரு குழந்தைக்கு இன்ஜெக்ஷன் போட போனாள். கூடவே அக்கதவை சாற்றினாள்.</span></p>
<p data-p-id="87ef665f31cd1b5e7098d8e1f2ac09a6"><span style="font-size: 14pt">ரூபனுக்கு ஒன்றும் விளங்கவில்லை அவன் அவளை பிடிக்கவில்லை என்று, அவளிடம் நேரிடையாக சொன்ன அன்று கூட இவ்வாறு முகத்தில் அடித்தது போல பேசவில்லை இன்று ஏன்?</span></p>
<p data-p-id="87ef665f31cd1b5e7098d8e1f2ac09a6"><span style="font-size: 14pt">தொடரும். </span></p>
<p data-p-id="87ef665f31cd1b5e7098d8e1f2ac09a6"><span style="font-size: 14pt">பிரவீணா தங்கராஜ் </span></p>]]></content:encoded>
						                            <category domain="https://onlinetamilnovels.com/community/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-praveena-thangaraj/">முதலாம் சந்திப்பில்...-Praveena Thangaraj</category>                        <dc:creator>Praveena Thangaraj</dc:creator>
                        <guid isPermaLink="true">https://onlinetamilnovels.com/community/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-praveena-thangaraj/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-6/</guid>
                    </item>
							        </channel>
        </rss>
		