<?xml version="1.0" encoding="UTF-8"?>        <rss version="2.0"
             xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
             xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
             xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
             xmlns:admin="http://webns.net/mvcb/"
             xmlns:rdf="http://www.w3.org/1999/02/22-rdf-syntax-ns#"
             xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/">
        <channel>
            <title>
									மதுர ஜில்லா... மச்சானே! -Praveena Thangaraj - onlinetamilnovels.com Forum				            </title>
            <link>https://onlinetamilnovels.com/community/%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0-%e0%ae%9c%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be-%e0%ae%ae%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a9%e0%af%87-praveena-thangaraj/</link>
            <description>onlinetamilnovels.com Discussion Board</description>
            <language>en-US</language>
            <lastBuildDate>Sat, 12 Sep 2026 10:26:39 +0000</lastBuildDate>
            <generator>wpForo</generator>
            <ttl>60</ttl>
							                    <item>
                        <title>மதுர ஜில்லா... மச்சானே-70 (முடிவுற்றது)</title>
                        <link>https://onlinetamilnovels.com/community/topicid/320/</link>
                        <pubDate>Wed, 19 Aug 2026 11:58:52 +0000</pubDate>
                        <description><![CDATA[அத்தியாயம்-70
வீட்டுக்குள் மதுராவும் இனியனும் அணைத்து கொண்டு காதலை வளர்க்க, கீழே இரண்டு குடும்பங்களுக்கும்  கொஞ்ச நேரத்தில் வந்தார்கள். 
&quot;மதுராவுக்கு இப்ப எப்படி இருக்கு?&quot;
&quot;வர்ற வழில டாக்...]]></description>
                        <content:encoded><![CDATA[<p>அத்தியாயம்-70</p>
<p>வீட்டுக்குள் மதுராவும் இனியனும் அணைத்து கொண்டு காதலை வளர்க்க, கீழே இரண்டு குடும்பங்களுக்கும்  கொஞ்ச நேரத்தில் வந்தார்கள். </p>
<p>"மதுராவுக்கு இப்ப எப்படி இருக்கு?"</p>
<p>"வர்ற வழில டாக்டர்கிட்ட கூட்டிட்டு போனியா இனாயா?" </p>
<p>"ஏன் முகம் வேர்த்துடுச்சு. சோர்வா வேற இருந்தா" என்று ஒருத்தர் மாற்றி ஒருத்தர் கேட்டுக் கொண்டே இருந்தார்கள்.</p>
<p>மதுராவுக்கே பதில் சொல்ல முடியாமல் சங்கடமாக அமர்ந்திருந்தாள்.</p>
<p>இனியனும் ஒவ்வொருவருக்கும் பதில் சொல்லிக் கொண்டே,</p>
<p>"அதெல்லாம் சரியாகிடுச்சு சித்தி... மதுரா இப்ப ஓகே தான்." என்று சொல்லிவிட்டு அவளைப் பார்த்தான்.</p>
<p>"அவ.. அவ" அவன் அங்கேயே நிறுத்திக் கொண்டு, மதுராவை நோக்கி, 'நீயே சொல்லு.' என்று கண்களால் சைகை செய்தான்.</p>
<p>மதுரா உடனே மறுத்து தலையசைத்தாள் 'நீங்களே சொல்லுங்க.' அதைப் பார்த்துக் கொண்டிருந்த குடும்பமோ மற்றோரு இனிய விஷயத்தை வெளிப்படுத்தினார்கள். </p>
<p>அந்த நேரம் ராஜாராம் கையில் இருந்த இனிப்புப் பெட்டியைத் திறந்தார்.</p>
<p>"இனியா... இந்தா... ஸ்வீட் எடுத்துக்கோ. மதுராவுக்கும் கொடு." என்றார்</p>
<p>இனியன் அருகில் நின்றிருந்தான். அவன் கையை நீட்டி ஒரு ஸ்வீட்டை எடுக்கப் போனவன், அப்படியே தயங்கி நின்றான். அவன் முகத்தில் ஒரு கணம் பல எண்ணங்கள் ஓடின.</p>
<p>இவ்வளவு சீக்கிரமா? மதுரா கன்சீவா இருந்ததை இவங்களுக்கு எப்படி தெரியும். அம்மாவிடம் ஏற்கனவே சொல்லிட்டாளா? இல்லை.. அத்தையிடம் சொல்லி இவங்களுக்குத் தெரிஞ்சுடுச்சா? ஆனா காவ்யா அப்பா ஏன் ஸ்வீட் தர்றார்' என்று அவனுக்குள் குழப்பம்.</p>
<p>மதுராவோ 'தூரிகாவை பெண் பார்க்க வருவதாக சொன்னார்களே அது நல்லபடியாக முடிந்திருக்குமோ?' என்று எண்ணினாள்.</p>
<p>இனிப்பையே பார்த்த இனியனுக்கும் ஒரு நொடி புரியவில்லை.</p>
<p>காவ்யாவும் அகிலனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.</p>
<p>"என்னடா இனியா ஸ்வீட் எடு." என்று அருளாளன் சொல்ல, அகிலன் இன்னும் தயங்கினான்.</p>
<p>அப்போது காவ்யா மெதுவாக, "அகி... நீங்களே சொல்லி கொடுங்க." என்றாள்.</p>
<p>அவளது குரலில் இருந்த வெட்கத்தைப் பார்த்த ராஜாராம் உடனே சிரித்தார்.</p>
<p>"அடடா... எம்பொண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் வெட்கம் எல்லாம் வருதே!" என்று சொல்லிவிட்டு,</p>
<p>"நானே கொடுக்கிறேன்." என்று இனிப்பை நீட்டி, கூடுதலாக அகிலனின் தோளில் கை வைத்தபடி, "இனியா... நான் தாத்தா ஆகிட்டேன் பா.." என்றார். அந்த ஒரு வார்த்தையில் வீடு முழுவதும் அமைதியானது.</p>
<p>"அகிலனும் காவ்யாவும் அப்பா அம்மா ஆகப் போறாங்க!" என்று இனிப்பை தரவும்,</p>
<p>அகிலன் தலை குனிந்தபடி நின்றான்.</p>
<p>மதுராவின் முந்தைய கர்ப்பம். அந்த மகிழ்ச்சி எப்படி திடீரென்று வலியாக மாறியது.</p>
<p>அதற்குப் பிறகு வீட்டில் நடந்த ஒவ்வொரு நிகழ்வும். எல்லாமே அவனுக்கு நினைவுக்கு வந்தது.இனியன் என்ன நினைப்பானோ? அவனை விட முன்னாடியே எனக்கு குழந்தை வரப்போகுதுனு இனியன் மனசுக்குள்ள என்‌மேல திரும்ப ஏதாவது கசப்பு இருக்குமோ?' என்று ஒரு நொடி பயந்தான்.</p>
<p>ஆனால் கடவுள் தந்த இந்த மகிழ்ச்சியை மறுக்கவும் அவனுக்கு மனம் வரவில்லை.</p>
<p>அதியமானும் மீனாட்சியும் கூட ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.</p>
<p>அவர்களுடைய முகத்திலும் அதே தயக்கம். அப்போது இனியன் சிரித்தபடி மதுராவை நோக்கினான்.</p>
<p>"மது..." என்ற அழைக்க, அவள் அவனைப் பார்த்தாள்.</p>
<p>"நீயும் வீட்டுல செய்த ஸ்வீட்டை கொண்டு வா." என்றான் இனியன். அவளுக்குப் புரிந்ததும் முகம் சிவந்தது.</p>
<p>அவள் மெதுவாக எழுந்து, ஹாலில் இருந்த குளிர்சாதனப் பெட்டியிலிருந்து ஒரு சிறிய பெட்டியை எடுத்துக் கொண்டு வந்தாள்.</p>
<p>அதைப் பார்த்த இனியன் தயக்கத்தை உடைத்தவனாக, "அகிலா" என்றவன் குரலில் இருந்த சந்தோஷம் அகிலனை நிமிர்ந்து பார்க்க வைத்தது "காவ்யா... இரண்டு பேருக்கும் ஹார்ட்டி காங்கிராஜுலேஷன்ஸ்." என்று கூறியவன், "அப்படியே எனக்கும் மதுராவுக்கும் சேம் டூ யூ சொல்லிடுங்க." என்றான் ஆனந்தமாய்.</p>
<p>அகிலன் குழப்பமாக இனியனை பார்த்தான்.</p>
<p>இனியன் அவனை அழைத்துக் கொண்டு கட்டிலருகே வைத்திருந்த அந்த டிரேவை எல்லோருக்கும் காட்டினான்.</p>
<p>நெல் தானியங்களுக்குள் பச்சைப் பசேல் என்று முளைத்திருந்த நாற்றுகள். அதன் நடுவே இரண்டு பறவைகள். அவற்றுக்கிடையில் சிறிய குட்டிப் பறவை. அதைப் பார்த்ததும் அகிலனின் கண்கள் விரிந்தன.</p>
<p>காவ்யாவோ 'சபாஷ்' என்று ஆச்சரியப்பட்டாள். </p>
<p>இனியன் புன்னகைத்து. "நாங்களும் அப்பா அம்மாவாகப் போறோம்." என்றான். </p>
<p>ஒரு நொடி யாராலும் பேச முடியவில்லை. மதுரா மருத்துவமனையில் இருந்து வீம்புடன் முக வாட்டத்துடன் இருந்ததை எல்லாம் யாரும் மறக்கவில்லை. தற்போது அதே மதுரா மீண்டும் கர்ப்பம் என்றதும் மகிழ்ந்தார்கள்.</p>
<p>விஷயம் பகிர்ந்த அடுத்த நொடியே காவ்யா மதுராவை கட்டிப் பிடித்துக் கொண்டாள்.</p>
<p>"ஏய் கள்ளி!" என்று கொஞ்சிட மதுரா சிரித்தாள். "என்கிட்ட இனியன் மச்சானை லவ் பண்றேன்னு மட்டும் சொல்லப் போறேன்னு சொன்னியே! இப்படி ஒரு விஷயத்தை மறைச்சுட்டியே!" என்றதும் மதுரா வெட்கத்துடன் முகத்தைத் தாழ்த்தினாள்.</p>
<p>அதற்குள் தூரிகாவும் ஓடிவந்து, "காவ்யா அண்ணி! உங்ககிட்டாவது இனியன் அண்ணாவை லவ் பண்றேன்னு சொல்லியிருக்கா இந்த மதுரா அண்ணி. என்கிட்ட அதைக்கூட சொல்லலையே!" என்று போலியான வருத்தத்துடன் முகத்தைச் சுளித்தாள்.</p>
<p>"போடி, இதெல்லாம் உன்கிட்ட சொல்லணுமா? உனக்கு கல்யாணம் ஆனப்புறம் இதெல்லாம் பேசலாம்." மதுரா காவ்யாவைப் பார்த்து,</p>
<p>"இப்ப காவ்யாகிட்ட தான்  சொன்னேன்." என்று கூறிவிட்டு,</p>
<p>"ஆமா காவ்யா... நீங்க மட்டும் என்ன? நீங்க கர்ப்பமா இருக்கறதையும் என்கிட்ட சொல்லலையே?" என்று திருப்பிக் கேட்டாள் மதுரவாணி. காவ்யா கைகளை விரித்தாள். "அட... எனக்கே தெரியாதுப்பா!" என்றதும் எல்லோரும் சிரித்தனர்.</p>
<p>"அங்க கோவில்ல கால் வலிக்க நின்னுட்டு இருந்தேன். திடீர்னு ஏதோ வாசனை... அப்படியே குடலைப் புரட்டுச்சு. ஓடிப்போய் வாந்தி எடுத்துட்டேன்.</p>
<p>அப்புறம் என்ன? என்னை ஒரு இடத்துல உட்கார வச்சுட்டாங்க. நம்ம குடும்பமே பயந்துட்டாங்க. அந்த நேரத்துல தான் தூரிகாவைப் பொண்ணு பார்க்க வந்தவர் டாக்டர்னு தெரிஞ்சது.</p>
<p>அவர் என் கையைப் பிடிச்சு பார்த்துட்டு... 'நீங்க கர்ப்பமா இருக்கீங்க'ன்னு சொல்லிட்டாரு." என்று நடந்ததை விவரித்தாள் காவ்யா. </p>
<p>"இதுல தூரிகாவைப் பொண்ணு பார்க்க வந்தவங்க இருந்தாங்க இல்லையா? அவர்களோட பேசி, தூரிகாவுக்கு மாப்பிள்ளையை பிடிச்சிருக்கான்னு தெரிஞ்சிக்கணும். அந்த சந்தோஷத்துல நேரமே போயிடுச்சு." அவள் சிரித்தாள்.</p>
<p>"அப்ப பெரிய மாமாதான் ஸ்வீட் வாங்கிட்டு வரச் சொன்னார். இங்க வந்தா இரண்டு ஸ்வீட் பாக்ஸ் வாங்கியிருக்கலாம் போல!" என்று மதுராவைப் பார்த்து கண் சிமிட்டினாள்.</p>
<p>அருளாளன் இரு பெண்களையும் பார்த்தபடி நெகிழ்ந்தார். "நீ கர்ப்பமா இருக்கேன்னு சொல்லும்போது கூட எனக்கு பொறாமை வரலம்மா. பொறாமை போட்டி இருந்தது எல்லாம் முன்னம்மா. அதெல்லாம் எப்ப முதல் வாரிசு போச்சோ அப்பவே திருந்திக்கிட்டேன்." என்றவரது குரல் சற்று தழுதழுத்தது.</p>
<p>"மனசுல இருந்த அழுக்கை அகற்றியதாலயோ என்னவோ, அந்த ஆண்டவன் என் குடும்பத்துக்கும் வாரிசை நிறுத்திட்டான்." என்று நெஞ்சுருகினார். </p>
<p>அதியமான் உடனே அவருடைய அண்ணன் தோளைத் தட்டினார்.</p>
<p>"அண்ணா... அப்படி சொல்லாதீங்க. நம்ம குடும்பத்துக்கு வாரிசு இல்லாம போயிடும்னு யார் சொன்னது? ஆண்டவன் நேரம் பார்த்து கொடுக்கிறான். இப்ப இரண்டு வீட்லயும் சந்தோஷம் வந்திருக்கு. அதுவே பெரிய விஷயம்." என்றார். </p>
<p>அருளாளன் கண்களைத் துடைத்துக் கொண்டு தம்பி பேச்சுக்கு தலையசைத்தார்.</p>
<p>அந்த நேரம் பேச்சு தூரிகாவின் பக்கம் திரும்பியது.</p>
<p>"சரி... தூரிகாவுக்கு மாப்பிள்ளையை பிடிச்சிருக்கா?" என்று மதுரா கேட்டாள்.</p>
<p>தூரிகா தலையைக் குனிந்தாள். "வீட்ல எல்லாருக்கும் இஷ்டம்னா... எனக்கும் இஷ்டம்."</p>
<p>அவள் சொன்னதும் பெண்கள் எல்லோரும் ஒருவரை ஒருவர் பார்த்துச் சிரித்தனர்.</p>
<p>"அடடா... கல்யாணத்துக்கும் நாள் குறிக்கணும்!" என்று காவ்யா கிண்டலடித்தாள்.</p>
<p>அந்த நேரத்தில் இளையமதி வேகமாக வந்து மதுராவை அணைத்துக் கொண்டார். அவர்கள் வருவதற்கு தாமதமாகிவிட்டது. தூரிகா மூலமாக தற்போது தான் நிலானிக்கு விஷயத்தை பகிர்ந்தனர். ஏற்கனவே பாதி வழியில் வந்தவர்கள் மகள் உண்டானதும் மகிழ்ச்சியுடன் மகளை தேடி வந்து தழுலிக்கொண்டார்கள்.</p>
<p>"அட எம்பொண்ணுக்கு.. குழந்தை வரப்போகுதா?"</p>
<p>அவரது கண்களில் கண்ணீர். என்னங்க... கடவுள் கண்ணைத் திறந்துட்டாரு."</p>
<p>கல்யாணசுந்தரமும் அருகில் வந்து மதுராவின் தலையைத் தடவினார்.</p>
<p>"நல்லபடியா எல்லாம் நடக்கணும்மா." அந்த ஆசீர்வாதத்தைக் கேட்ட மதுராவின் கண்களும் கலங்கின.</p>
<p>நிலானி மெதுவாக மதுராவின் அருகில் வந்து அமர்ந்தாள்.</p>
<p>"அக்கா... நம்ம வீட்டுக்கு குட்டி பாப்பா வரப்போகுதா?" என்றவள் முகத்தில் குழந்தைத்தனமான சந்தோஷம்.</p>
<p>பிறகு மதுரா கொண்டு வந்திருந்த நெல் முளைகளைப் பார்த்தாள்.</p>
<p>"அக்கா... இந்த நெல்லை எல்லாம் எப்ப முளைக்க விட்ட? அழகா வளர்ந்திருக்கே! கர்ப்பத்தை அழகா மாமாவுக்கு சொல்ல யோசிச்சியா? இதுக்கெல்லாம் நல்லா மூளை வேலை செய்யும்" என்றாள் நிலானி. </p>
<p>மதுரா "சில நாளாச்சு.. பின்ன கல்யாண நாள்.. கர்ப்பமா வேற இருக்கேன். என்னனு சொல்லறதாம். என் புத்திக்கு இப்படி தான் செய்ய தோணுச்சு" என்றாள். </p>
<p>"அட இந்த காலத்துல ரீல்ஸ் எடுத்து போட்டு இந்த விஷயத்தை ஊருக்கே சொல்லி அசிங்கப்படுத்திக்கிட்டு சுத்தறாங்க. நீ எவ்ளோ அழகா யோசிச்சிருக்க. ரியலி ப்யூட்டிஃபுல் ஐடியா அக்கா. </p>
<p>  அதுவும் அந்த குட்டிப் பறவை ரொம்ப அழகா இருக்கு." என்று அவள் விரலால் காட்டினாள். அந்தக் கூட்டத்திலிருந்து சற்று விலகி நின்றிருந்த எழிலரசன் மட்டும் முகத்தைச் சுளித்துக் கொண்டிருந்தான்.</p>
<p>"என்னடா பெருமூச்சு விடற?" என்று இனியன் கேட்டான்.</p>
<p>"ரெண்டு அண்ணனுக்கும் குழந்தை பிறக்குறப்பவும் நான் ஊர்ல இருக்க மாட்டேன். நான் இங்கயே மேற்படிப்பு படிக்கறேனே. அமெரிக்காவுல போய் படிக்கச் சொல்வாதிங்க!" என்று புலம்பினான்.</p>
<p>இனியன் அவன் தலையில் தட்டினான். "அதனால என்ன? அமெரிக்காவுல படிச்சு முடிச்சிட்டு வா. குழந்தை எல்லாம் பிறக்கறப்ப நீ என்ன வேலை பார்க்க போற. உன் எதிர்காலத்துக்கு எந்த படிப்பு எங்க போய் படிச்சா உசத்தினு பாரு. படிக்க வாய்ப்பு இருக்கறப்ப படிடா. </p>
<p>  நாளைப்பின்ன என்னை மட்டும் படிக்க அனுப்பினாங்க. உன்னை அனுப்பலைனு யாருக்கும் தோணக்கூடாது" என்று நிதர்சனத்தையும் தெரிவித்தான்.</p>
<p>"அப்படி படிச்சா அப்படியே என் பேச்சை நீங்க எல்லாம் கேட்பிங்களாக்கும்" என்றான் எழிலரசன். </p>
<p>"போய் படி. படிச்சு முடிச்சு, நீ எந்தப் பெண்ணைக் கட்டிக்கணும்னு கேட்டாலும், உனக்காக... நான் தான் முதல்ல பேசுவேன்." என்றதும் எழிலரசன் கண்களை விரித்தான். இனியனோ உனக்கு யார் மீது காதல் பிறந்தாலும் உனக்கு நல்ல நண்பனாக அதை வெற்றியடைய வைப்பேன் என்று இமை மூடி வாக்கு தந்தான் இனியன்.</p>
<p>"உண்மையாவா அண்ணா?" என்றான் எழிலரசன்.</p>
<p>"ஆமா. ஆனா இப்ப படிப்பு மட்டுமே முக்கியம்" என்றான் இனியன்.</p>
<p>"சரி." என்று அவன் தலையசைத்தாலும், அவன் பார்வை தூரத்தில் நின்றிருந்த நிலானியைத் தேடிக் கொண்டிருந்தது. </p>
<p>அந்த நேரத்தில் அகிலன் மட்டும் அமைதியாக காவ்யாவைப் பார்த்துக் கொண்டிருந்தான். ஓரளவு இனியன் பொறாமை போட்டியின்றி தன்னை கடந்து வந்து, அவனும் உறவுமுறை உன்னதத்துடன் வாழ பழகியது அகிலனுக்கு பிடித்தது. </p>
<p>என்ன இத்தனை கூட்டத்தில் காவ்யா கருவுற்றிருக்க, அவளை வீட்டிற்கு அழைத்துச் செல்ல வேண்டும், கொஞ்ச வேண்டுமென்ற அவசரம் அவன் முகத்திலேயே தெரிந்தது.</p>
<p>காவ்யாவோ ஒருவரிடமிருந்து இன்னொருவரிடம் பேசிக் கொண்டிருந்தாள்.</p>
<p>  அடுத்து தூரிகாவை திருவிழாவில் பெண் பார்த்து சென்ற டாக்டர் வசந்த் முறையாக வீடு தேடி வந்து குடும்பமாக பேசுவதாக கூறினார்கள். அதனால் தூரிகா கல்யாணம் அடுத்து நடைப்பெறும். </p>
<p>  அதே போல எழிலரசன் இனியனை போலவே மேற்படிப்புக்கு வெளிநாடு செல்வதாக பேச்சு போனது. </p>
<p>  நிலானியோ மதுரையில் கல்லூரி முதலாமாண்டு என்பதால், இளங்கலை முடியும் வரை அதே ஊர் தான். </p>
<p>   இனியன் மதுரா இருவரும், கூட்டத்தை கண்டு அவஸ்தையுடன் தனிமைக்கு தாவ நினைத்தனர். தனக்கே இந்த நிலை என்றால் கோவிலிருந்து அகிலன் காவ்யாவிடம் தனித்து பேசாமல் தவித்திருப்பானே என்று இனியன் எண்ணி, "ஏய் அகிலா... இவங்க பேசிட்டே தான் இருப்பாங்க. அண்ணன் தம்பி தங்கச்சினு சோர்ந்தாச்சு. நீ நைஸா பை சொல்லிட்டு, வீட்டுக்கு போ. இல்லை.. பிரைவேஸி இப்ப இருக்காது." என்று கிசுகிசுத்தான்.‌</p>
<p>அகிலனோ இனியன் சொல்வதும் புரிய, அன்னை மீனாட்சியிடம் "அம்மா.. நானும் காவ்யாவும் வீட்டுக்கு போகட்டுமா?" என்று உத்தரவு கேட்டான்.‌</p>
<p>மீனாட்சியோ "போப்பா.. பத்திரமா காவ்யாவை கூட்டிட்டு போ. நானும் அப்பாவும், தூரிகா கல்யாண விஷயமா உங்க பெரியப்பா, பெரிம்மா, அத்தை, மாமா, கூட கலந்து பேசிட்டு வர்றோம். தூரிகாவோட" என்றார்கள். </p>
<p>அதியமானும் கிளம்ப கூற, காவ்யா அகிலன் இருவரும் வீட்டில் உள்ளவர்களிடம் கிளம்புவதாக கூறிவிட்டு 'விடு ஜூட்' என்பது போல, அகிலன் காவ்யா புல்லட்டில் பறக்க வாசலுக்கு வந்தார்கள். </p>
<p>இதில் ராஜாராம் வீடும் இங்கே பக்கத்தில் நிலத்தை வாங்கி கட்டுவதால் இங்கே தான் இருப்பார். </p>
<p>  மதுரா காவ்யா இருவருமே யார் குழந்தை முன்ன பிறக்க போகின்றது என்ற போட்டியின்றி, எந்த குழந்தை பிறந்தாலும் நல்லபடியா பிறந்தா போதுமென்ற கொள்கையில் உறுதியாக இருந்தனர்.‌</p>
<p>இனியனோ அகிலனிடம் 'ஆல்திபெஸ்ட்' என்றது போல 'தம்ஸ் அப்' செய்தான். </p>
<p>காவ்யாவோ "வாழ்த்துகள் இனியா-மதுரா. மதுரா.. நல்லா சாப்பிடணும்." என்றாள். </p>
<p>இருவருமே இனி நன்றாக சாப்பிட வேண்டுமென மாறி மாறி சொல்லிக் கொண்டார்கள்.</p>
<p>  இம்முறை அகிலனோ "மதுரா.. ஜாக்கிரதைம்மா" என்று கூறினான்.</p>
<p>"அகிலன் மச்சான்.. காவ்யாவை இந்த நிலையில வச்சிட்டு வண்டியை வேகமா ஓட்டாதிங்க. வீட்டுக்கு போகணும்னு அவசரம் இருக்கும். ஆனா மெதுவா." என்றாள்‌ மதுரவாணி. </p>
<p>அகிலனும் "சரி மதுரா" என்றான். </p>
<p>வண்டியில் செல்லும் பொழுது "காவ்யா.. நான் எவ்ளோ ஹாப்பியா இருக்கேன் தெரியுமா?" என்றான் அகிலன். </p>
<p>"தெரியுதா தெரியுது.. அத்த மக அகிலன் மச்சான்னு கூப்பிடவும் உன் முகத்துல ஒரு பல்பு பிரகாசமா எறிந்ததை பார்த்தேன்." என்றாள் கேலியாக. </p>
<p>"ஓய்.. கேலி பண்ணறியே... பின்ன அது சந்தோஷமில்லையா? புருஷன் பொண்டாட்டிக்கு ஒரு குழந்தை வருவதும், அதனால வீட்ல இருக்கற பெரியவங்க கொண்டாடுறது சந்தோஷமான விஷயம் காவ்யா. </p>
<p>ஆனா உடைந்து போன கண்ணாடி இனி ஒட்டினாலும் நல்லாயிருக்காதுனு கவலைப்பட்டுக்கிட்டு இருக்கறப்ப, ஓட்ட வச்சதே தெரிந்தாலும் அழகா அதுக்கு அலங்கரிச்சு, ஒன்னுக்கு பத்து கண்ணாடியா மாத்தி உறவை பலப்படுத்தறது இருக்கே, அது சந்தோஷமான விஷயம். </p>
<p>மதுரா இனியன் சந்தோஷமா இருப்பதை பார்த்து நாம சந்தோஷமா சுவாசிக்கறது எல்லாம் வேற லெவல் பீல். உறவுமுறையோட கூட்டு குடும்பமா அனுசரித்து சண்டை போட்டாலும், ஒற்றுமையா  வாழறவங்களிடம் கேட்டுப்பாரு.. அந்த பீல் அனுபவிச்சா தான் புரியும்." என்றான். </p>
<p>  "போரடிக்காத மேன். வீடே வந்துடுச்சு." என்றாள். </p>
<p>காவ்யா கதவை திறந்து உள்ளே நுழைய, அகிலன் காவ்யாவை தூக்கி தட்டாமாலை சுற்றினான். </p>
<p>"எவ்ளோ சந்தோஷம் தெரியுமா? அச்சோ... நீ கர்ப்பமா இருக்கனு சொன்னதுலயிருந்து உன்னை தூக்கி சுத்த ஆசைப்பட்டேன்." என்று சுற்றி முடித்து இறக்கினான். </p>
<p>''அகி.. நிறுத்து நிறுத்து. தலை சுத்துது" என்றதும் சோபாவில் அமர வைத்தான். </p>
<p>அகிலனோ காவ்யா மடியில் முகம் வைத்து படுத்தவன், சட்டென வயிற்று பக்கமாக திரும்பி, "நான் துவண்டு போனப்ப எங்கிருந்தோ வந்த, என்னை பிடிச்சிருக்குன்னு சொன்ன. கண்ணை மூடி தறக்கறதுக்குள்ள கல்யாணம் ஆச்சு. இது நமக்கு செட்டாகுமானு யோசிக்கும் முன்ன மனசுல வலியை துரத்திட்டு, சந்தோஷத்தை தந்துட்ட. நான் லவ் பெயிலியர் என்றாலும் கொடுத்து வச்சவன் தான். மனைவியை காதலிக்க கத்துக்கிட்டேன். இப்ப குட்டி பையனா பொண்ணா? எதுனாலும் அப்பாவுக்கு உன் வருகை தான் இம்பார்டன்." என்று வயிற்றில் முத்தமிட, அவனது மீசையோ காவ்யா வயிற்றை குத்தியது. </p>
<p>"டேய்.. அகி.. நான் பேசணும். ஆனா நீ பேசற. அவுச்..மீசை குத்தி கூசுது அகி. இப்ப பேசினா குழந்தைக்கு கேட்காது. முதல்ல குழந்தையா கூட இன்னும் முழுமையா இருக்காது. எனக்கு எத்தனை நாள் டேட் தள்ளி போயிருக்குனு கூட தெரியாது. </p>
<p>  சோ.. நீ இப்ப பேசறது வேஸ்ட். பேபி போர் மந்த் முடியவும் பேசு.. அப்ப பேபி கேட்கும்" என்றாள். </p>
<p>"என் குழந்தை இப்பயிருந்தே என் குரலை கேட்டு வளரும்." என்று காவ்யாவின் வயிற்றில் முத்தமும் கூச்சமும் தந்தவனாக குழந்தையிடம் இப்போழுதே பேசிக் கொண்டிருந்தான். </p>
<p>எப்படியும் 'நிறுத்துங்கடா உங்க அக்கப்போரை' என்று கூறினாலும் இனியன் அகிலன் இருவரும் தங்கள் துணையை தாங்குவதை நிறுத்த போவதில்லை. </p>
<p>*வாழ்க்கையில் யார் யாருக்கென்று மனிதன் முடிவு செய்வதில்லை... ஆண்டவன் வகுத்த கணக்கில், சேர வேண்டியவர்கள் எத்தனை திருப்பங்கள் வந்தாலும் ஒருநாள் சேர்ந்தே தீர்வார்கள்.*</p>
<p>'இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தானே இறைவன் அன்றே....'</p>
<p>-சுபம்.- </p>
<p>-பிரவீணா தங்கராஜ். </p>
<p>கதைகள் பிடிச்சிருக்கா? உங்கள் கருத்து மழை வரவேற்கப்படுகின்றன.</p>
<p> விமர்சனங்கள் வந்தாலும் வரவேற்கப்படுகின்றன. சைட்ல தினமும் வாசித்து சிலர் கமெண்ட்ஸ் பண்ணுவிங்க அவங்களுக்கு எல்லாம் மிக்க நன்றி. உங்க கமெண்ட்ஸ் படிக்கவே அடிக்கடி வருவேன். உங்க ஆதரவு எப்பவும் வேண்டும். வணக்கமும் அன்பையும் உரித்தாக்குகின்றேன்.‌ </p>
<p>லீடர் முடியவும் மௌஹபத் நிக்காஹ் வரும்‌. அது மதம் சார்ந்து எழுதுவதால் ஏதாவது மிஸ்டேக் பண்ணக் கூடாதுனு யோசிக்கவே நேரம் போகுது.  ஆனா முடிப்பேன்.‌</p>
<p>தளத்தில் சின்ன குறுநாவல் 14 முதல் 30 அத்தியாயம் வரை கதைகள் இருக்கு. படிக்காதவங்க படிங்க. Facebook la ஞைம் கேட்டு வாசிக்க வந்தவர்கள் விமர்சனம் உண்டா? அடப்போங்கப்பா... நீங்க ஆள் பார்த்து விமர்சிப்பிங்க. </p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>]]></content:encoded>
						                            <category domain="https://onlinetamilnovels.com/community/%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0-%e0%ae%9c%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be-%e0%ae%ae%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a9%e0%af%87-praveena-thangaraj/">மதுர ஜில்லா... மச்சானே! -Praveena Thangaraj</category>                        <dc:creator>Praveena Thangaraj</dc:creator>
                        <guid isPermaLink="true">https://onlinetamilnovels.com/community/topicid/320/</guid>
                    </item>
				                    <item>
                        <title>மதுர ஜில்லா... மச்சானே!-69</title>
                        <link>https://onlinetamilnovels.com/community/topicid/319/</link>
                        <pubDate>Wed, 19 Aug 2026 02:05:40 +0000</pubDate>
                        <description><![CDATA[அத்தியாயம்-69
மதுரையின் மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாண நாள். இதே நாளில் மதுரா இனியனின் திருமண நாளும் அமைந்திருக்க, காலையிலேயே மதுரா குளித்து முடித்து வரவும், இனியனாவே &quot;இன்னிக்கு நம்ம க...]]></description>
                        <content:encoded><![CDATA[<p>அத்தியாயம்-69</p>
<p>மதுரையின் மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாண நாள். இதே நாளில் மதுரா இனியனின் திருமண நாளும் அமைந்திருக்க, காலையிலேயே மதுரா குளித்து முடித்து வரவும், இனியனாவே "இன்னிக்கு நம்ம கல்யாண நாள் மதுரா. உனக்கு நிச்சயம் இந்த நாள் மறந்திருக்காது. போன வருஷம் நீ இந்த நாளையே வெறுத்திருக்கலாம்.  </p>
<p>  பட்... இது இந்த முதல் வருட நம்ம கல்யாண நாளுக்காக வாங்கிய சீலை. உன்னோட அளவு ப்ளவுஸ் வச்சி அம்மா தைச்சி வச்சிட்டாங்க. கட்டிப்பியா." என்று நீட்டினான். </p>
<p>    பாவடை மட்டும் அணிந்து தலையில் கொண்டயிட்டு, தூங்கிக் கொண்டிருப்பான் என்று வந்தவளுக்கு, இனியன் இன்று அணிய வேண்டிய உடையை கொண்டா வந்து நீட்டவும், நெஞ்சில் கையை வைத்து நின்றவள், மெதுவாக வாங்கிக் கொண்டாள். </p>
<p>"தேங்க்ஸ்.. தேங்க்யூ." என்று கன்னத்தில் முத்தமிட்டு கழுத்தில் கிளர்ச்சியை தந்துவிட்டு, மகிழ்ச்சியை வெளிப்படுத்தி மகிழ்ந்தான். </p>
<p>மதுராவோ மெதுவாக "சேலை கட்ட ஆரம்பித்தாள். </p>
<p>"நீ..நீங்க குளிக்க போங்க‌ இன்னிக்கு கோவிலுக்கு போகணும்னு அத்த சொன்னாங்களே" என்றதும் அவசரமாக அவனும் குளிக்க ஓடினான்.</p>
<p>அன்று மதுரை நகரமே ஒரு பெரிய திருமண வீட்டைப் போல மாறியிருக்குமே.</p>
<p>வைகறையிலேயே வீதிகள் விழித்துக் கொண்டிருந்தது.</p>
<p>கோவிலை நோக்கிச் செல்லும் ஒவ்வொரு தெருவிலும் மக்கள் கூட்டம். பெண்களின் பட்டுப்புடவைகள் கண்ணைப் பறிக்க... ஆண்களின் வேட்டி, சட்டைகள் வெண்மையாக மின்ன... குழந்தைகள் புத்தாடைகளில் ஓடிக்கொண்டிருந்தனர். இனியனுக்கு பட்டு வேஷ்டி எல்லாம் கட்டிக்கொண்டு நெடுநேரம் கூட்டத்தில் நிற்க பயம். அப்படியொன்றும் வேஷ்டி சௌகரியமில்லை என்பான். அதனால் மதுரா சேலைக்கு ஏற்ற பேண்ட் ஷர்ட் தான் அணிந்தான். </p>
<p>  "நீங்க வேஷ்டி கட்டலையா?" என்றாள். </p>
<p>"அய்யோ... இந்த ஓட்டறது கட்டறது கூட நமக்கு செட்டாகாது. கூட்டமா இருக்கும். எனக்கு இதான் சௌகரியம்" என்று கூறிட, மல்லிகை பூவை சூடினாள். </p>
<p>அதன் வாசத்தில் கிறங்கியவன், உடனடியாக கீழே வந்து உணவை முடித்து கோவிலுக்கு கிளம்பினார்கள்.</p>
<p>மல்லிகை மணமும், கற்பூர வாசனையும், சந்தனத்தின் மணமும் கலந்து மதுரை காற்றே மங்களமாக வீசியது. நாதஸ்வரமும் தவிலும் தொலைவிலிருந்தே கேட்க ஆரம்பித்தது.</p>
<p>   மதுரா இனியனுக்கு எழிலரசன் தான் முதலில் வாழ்த்தியது‌. "ஹாப்பி அனிவெர்சரி அண்ணி" என்றான். </p>
<p>மதுர லேசான புன்னகை உதிர்த்தாள். "சேலை ப்ளவுஸ் எல்லாம் சரியா இருக்கா" என்று வேல்விழி கேட்க, "சரியா இருக்கு அத்தை" என்றாள். </p>
<p>"கல்யாண நாள் வாழ்த்துகள் மா." என்றார். </p>
<p>இனியனோ அப்பா அம்மாவை நிறுத்தி காலில் விழுந்தான். </p>
<p>"சீக்கிரம் பேர புள்ளைய பார்த்துடணும். நல்லபடியா சந்தோஷமா இருங்க" என்றார் அருளாளன்.</p>
<p>மதுராவோ இனியனிடம் தவிப்பாக பார்த்தாள். </p>
<p>  ஏற்கனவே குழந்தை போனதால் தன்னை தினுசாக பார்த்து தவிப்பதாக நினைத்து, "கோ..கோவிலுக்கு போலாம்" என்று கைப்பிடித்து அழைத்தான். </p>
<p>மதுராவோ தவிப்பாய் நின்றவள் அவனிடம் காதலை கூற வந்து, எல்லோரும் இருக்க, கூடவே வந்தாள். </p>
<p>திருக்கல்யாணத்திற்கான நேரம் நெருங்க நெருங்க, கோவில் வளாகத்துக்குள் கூட்டம் பெருகிக் கொண்டே சென்றது.</p>
<p>மீனாட்சி அம்மன் மணமகள் அலங்காரத்தில் எழுந்தருளியிருந்தாள். பச்சை நிற பட்டாடை, தலையில் மலர் அலங்காரம், நெற்றியில் குங்குமம், கழுத்தில் நகைகள், காதுகளில் தொங்கிய ஆபரணங்கள் என்று அவளது முகத்தில் இருந்த அந்த அரசி கம்பீரத்துக்குள் கூட, மணமகளுக்கே உரிய மென்மை கலந்திருந்தது.</p>
<p>மதுரையின் அரசியாக இருந்தவள் இன்று மணமகளாகி நின்றாள்.</p>
<p>அவளைச் சுற்றிலும் மலர் மாலைகள், குடைகள், சாமரங்கள் என மங்களமான ஏற்பாடுகள்.</p>
<p>மறுபுறம் சுந்தரேஸ்வரரும் மணமகன் அலங்காரத்தில் எழுந்தருளினார். மீனாட்சியும் சுந்தரேஸ்வரரும் திருக்கல்யாணத்திற்குரிய இடத்தில் அருகருகே எழுந்தருளியதும், சுற்றியிருந்த பக்தர்களின் சத்தம் மெல்ல அடங்கியது.</p>
<p>நாதஸ்வர இசை மட்டும் அந்த இடத்தை நிரப்பியது. வேத மந்திரங்கள் ஒலித்தன. சிவாச்சாரியார்கள் திருமணச் சடங்குகளை முறைப்படி நடத்தத் தொடங்கினர்.</p>
<p>அந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த பெண்கள் சிலர் தங்கள் கழுத்தில் இருந்த தாலியைத் தொட்டுக் கொண்டனர்.</p>
<p>சிலர் கண்களை மூடி வேண்டிக் கொண்டனர். 'அம்மா... என் பொண்ணுக்கும் நல்ல வாழ்க்கை அமையணும்.' 'எங்க தாலி நிலைக்கணும்.' 'எங்க குடும்பத்துல சந்தோஷம் நிலைக்கணும்.' 'என் கணவருக்கு நீண்ட ஆயுளை தா' என்று ஆயிரம் வேண்டுதல்கள் அந்த மணமக்களை நோக்கிப் பறந்தன.</p>
<p>மங்கல நேரம் நெருங்கியது. நாதஸ்வரத்தின் ஓசை உயர்ந்தது. தவில் முழக்கம் அதிகரித்தது. சுற்றிலும் இருந்த கூட்டமும் எதிர்பார்ப்புடன் அந்த ஒரு தருணத்தை நோக்கிக் காத்திருந்தனர்.</p>
<p>மேளதாளங்கள் முழங்கின. மீனாட்சி அம்மனுக்கு அரோகரா!' 'சுந்தரேஸ்வரருக்கு அரோகரா!" என்று கூட்டம் முழங்கியது.</p>
<p>திருக்கல்யாணத்தின் முக்கிய சடங்கு நடைபெற்றது.</p>
<p>அந்த ஒரு கணத்தில், மதுரை முழுவதும் ஒரு திருமண வீடாகவே மாறியது.</p>
<p>அந்த கூட்டத்தின் ஓரத்தில் நின்றிருந்த மதுரா மட்டும் அமைதியாக இருந்தாள். அவளது பார்வை மீனாட்சி அம்மனின் மீது இருந்தது.</p>
<p>மணமகள் அலங்காரத்தில் அம்மனைப் பார்த்தபோது, அவளுக்குள் ஏதோ ஒரு உணர்வு எழுந்தது.</p>
<p>திருமணம் அந்த ஒரு வார்த்தையே அவளது மனதை வருடியது. அவளுடைய திருமணம் இப்படியா இருந்தது?</p>
<p>இல்லை அவளுக்குத் பிடிக்காமலேயே முடிவு செய்யப்பட்ட திருமணம். வேறு வழியின்றி விருப்பமில்லாமல் ஏற்றுக்கொண்ட வாழ்க்கை.</p>
<p>அந்த வாழ்க்கைக்குள் தன்னை இழுத்துக் கொண்ட மனிதன் இனியன்.</p>
<p>ஒரு காலத்தில் வெறுத்த அதே இனியன். இப்போது தினமும் தன்னைப் பார்த்துக் கொண்டிருக்கும் பார்வை, தினமும் காதலைச் சொல்லிக் கெஞ்சிக் கொண்டிருக்கும் குரல். தான் அறியாமலேயே அவனைத் தன் மனமும் தேடுகின்றது.</p>
<p>எல்லாமே ஒன்றாக நினைவுக்கு வந்தது. அவள் அருகில் நின்றிருந்த இனியன் அவளைப் பார்த்தான்.</p>
<p>அவளது கண்கள் அம்மனைப் பார்த்துக் கொண்டிருந்தாலும், அவளுடைய மனம் வேறு எங்கோ ஓடிக் கொண்டிருப்பதை அவனாலும் உணர முடிந்தது.</p>
<p>"மது..." என்று மெதுவாக அழைத்தான். அவள் திரும்பிப் பார்த்தாள். "ம்ம்ம்..." என்று குரல் தந்தாள்.</p>
<p>"என்ன யோசனை?"</p>
<p>"ஒன்னுமில்லை..." என்று தலையசைத்தாள்.</p>
<p>அவன் மீண்டும் அம்மனை நோக்கிப் பார்த்தான்.</p>
<p>திருக்கல்யாணச் சடங்குகள் நிறைவடைந்ததும் மீண்டும் மேளதாளங்கள் முழங்கின. பக்தர்கள் மலர்களைத் தூவி வணங்கினர்.</p>
<p>மணமக்களாக எழுந்தருளிய மீனாட்சியும் சுந்தரேஸ்வரரும் அருள்பாலித்துக் கொண்டிருந்தனர்.</p>
<p>மதுரா இரு கைகளையும் கூப்பி கண்களை மூடினாள்.</p>
<p>"அம்மா..." என்று மனதிற்குள் அழைத்தாள். "எனக்கு இந்த வாழ்க்கை பிடிக்க ஆரம்பிச்சிருக்கு. அவரையும் பிடிக்க ஆரம்பிச்சிருக்கு. இனிமேல் அவரை விட்டு என்னை பிரிக்கிற மாதிரி எந்த சோதனையும் வரக்கூடாது. அவரிடம் என் காதலை சொல்ல எனக்கு தெரியலை தைரியமும் வரமாட்டேங்குது" என்றவள் அவள் கண்களைத் திறந்தாள்.</p>
<p>அவளுக்கு அருகில் இனியன் நின்றிருந்தான்.</p>
<p>இனியன் லேசான கண்ணீரோடு மதுரா உள்ளுக்குள் வெதும்புகின்றாளோ என்று நினைத்தான். அவளோ தள்ளாடி, "மூ..மூச்சடைக்குங்க" என்றாள். </p>
<p>"நம்ம கல்யாணத்தை நினைச்சி பார்த்தியா. சாரிடி. நான் உனக்கு தகுதியில்லாதவன்.. திருத்தமுடியாத தப்பை செய்துட்டு முன்ன இருக்கேன். என்னால உன் வாழ்க்கையை மீட்க என்ன செய்யனு தெரியலை மது" என்று கூறி மன்னிப்பு வேண்டினான். அவள் தங்கள் திருமண நாளை எண்ணி இப்படி ஆகின்றாளென்று நினைத்து பேசினான். </p>
<p> "எ..எனக்கு உங்களை பி..பிடிச்சிருக்கு. நானும் உங்களை காதலிக்கறேன் இனியன் மச்சான்." என்றாள். அங்கே ஒலித்த தெய்வீக மணமும், இசையும், அங்கே உலாவிய நேர்மறை எண்ணமும் கூட அவளை அசைத்துவிட்டது. எப்படியோ கூறிவிட்டாள். </p>
<p>  கண்களில் கண்ணீரோடு இனியன் "டூ யூ லவ் மீ" என்று தவிப்பாய் கேட்க, அதன் அர்த்தம் தெரியாதவளா, இனியன் தான் பலமுறை அவளிடம் கேட்டு கேட்டு மதுரா அமைதியாக நழுவினாளே. இன்றோ ஆமோதிப்பாய்.. தலையாட்டி, "ஆமா.. உங்களை நேசிக்கறேன்." என்று அவனது வலது கையை பிடித்து புஜத்தில் சேர்த்து அணைத்துக் கொண்டு நின்றாள். </p>
<p>  இறைவனின் கோவில் மணியோசை அவனுக்கு இன்பமாக ஒலித்திட, கண்கள் கலங்க, "இதை விட சந்தோஷம் என் வாழ்க்கையில இல்லை மது.. ஆனா எங்க வந்து சொல்லற. உன்னை அள்ளிக்க கூட முடியலை. ஊரோ சுத்தி இருக்கு" என்று அணைத்தபடி நின்றான்.</p>
<p>"எ..என்னால மூச்சுவிட முடியலை‌ த..தண்ணி" என்று கூற அப்போழுது தான் முத்து முத்தாக வேர்த்து, உள்ளங்கையும் ஈரமாக இருக்க மதுராவை கவனித்தான் இனியன். </p>
<p>காதலை சொல்ல இத்தனை தயக்கமா? அல்லது இத்தனை நாள் அடக்கி வைத்த பயமும் நடுக்கமும் வேர்த்து கொட்ட சற்று தள்ளி காற்றோட்டமாக இருக்குமிடம் அழைத்து வந்தான். </p>
<p>அங்கிருந்த தண்ணீரை பருகி முடித்தாள். </p>
<p>  "ஹாஸ்பிடல் போகலாமா?" என்று இனியன் கேட்க மறுப்பாய் தலையசைத்து, "வீ..வீட்டுக்கு போகலாம்" என்று கூற, இனியன் கைப்பிடித்து நடந்தாள். அருளாளனும் வேல்விழியும், என்ன ஏதேன விசாரிக்க அவளது வேர்த்து கொட்டுது மூச்சு முட்டுதாம் என்றான். "சரிப்பா..வீட்ல போய் ரெஸ்ட் எடுக்கட்டும். நாங்க இங்க முடிஞ்சதும் உடனே வந்துடறோம்." என்றார்கள். </p>
<p>  இளையமதியோ "என்னடி பண்ணுது அம்மா வரட்டுமா?" என்று கேட்க மதுராவோ "இல்லை.. நீங்களும் அத்தை கூடவே வாங்க. நான் மட்டும் அவரோட போறேன்" என்று கூறிவிட்டாள். </p>
<p>கல்யாணசுந்தரமும் "ஜாக்கிரதை மாப்பிள்ளை" என்று அனுப்பினார். </p>
<p>   தூரிகாவோ வேகமாக மீனாட்சியை இழுத்துக் கொண்டு "ஏ.. மதுரா அண்ணி.. என்னாச்சு" என்று கேட்க, "ஒன்னுமாகலைடி‌ நீயும் சித்தியும் அம்ம கூட வாங்க" என்றாள். </p>
<p>"நான் வேணும்னா உன் கூட இப்ப வர்றேன். இனியன் அண்ணா கார்ல தானே போவிங்க. நான் வர்றேன்." என்று நிற்க, இனியனோ மதுராவை காண, மதுராவோ சங்கடமாய் பார்த்தாள். </p>
<p>அப்பொழுது வந்த காவ்யாவோ 'சொன்னியா இல்லையா?' என்ற ரீதியில் முறைக்க, மதுராவோ  இனியன் கையை அழுத்திப்பிடித்தி, நின்றாள். மற்றொரு கையும் இனியனின் முழங்கையை தான் பிடித்திருந்தது. இத்தனை நாள் இனியன் தான் அவளை பிடித்து அமர வைப்பான். மதுராவின் கையை பிடித்தி நிறுத்தி பேசுவான். இன்றோ மதுரா பிடித்திருக்க, 'சொல்லிட்டியா?' என்றது போல முகம் மலர காவ்யா கேட்க, மதுரா வெட்கப்பட்டாள். </p>
<p>  "அண்ணா போலாம்" என்று தூரிகா நின்றாள். இதில் கூடுதலாக மதுராவின் கழுத்தில் நெற்றியில் தொட்டு "ஜுரம் ஏதாவது இருக்கா மதுராண்ணி" என்றாள். </p>
<p>காவ்யாவோ தலையிலடிக்காத குறையுடன், 'அகி... உன் தங்கை  கரடி வேலை பார்க்கறாப்பா. அவளை போகாம நிறுத்து. ஓவரா தான் பாசம் பொங்குது' என்று கிசுகிசுக்க, அகிலனோ காவ்யா சொன்னதை கேட்டு இனியனை கண்டான். </p>
<p>  இனியன் சற்றுமுன் அழுது மதுராவை பிடித்ததை ரகு சுட்டிக்காட்டினான். </p>
<p>"ஏன்டா இந்த இனியன் இத்தனை பேர் இருக்க மதுராவை பார்த்து அழறான். அந்த புள்ளையும் ஏதோ கண்ணை கசக்கற மாதிரி இருக்கு' என்று கேட்ட பொழுது கவனித்தானே. அப்பொழுது இனியன் மதுரா முகமாற்றத்தையும் பார்த்ததால், "தூரிகா... இனியன் மதுரா போகட்டும். நீ அம்மாவோட இரு." என்றான். </p>
<p>''அண்ணா... மதுராவுக்கு ஏதோ பண்ணுது." என்று கூற, ''பச்.. தூரிகா..‌. உன்னை இந்த கூட்டத்துல பொண்ணு பார்க்க மாப்பிள்ளை வீட்ல வர்றாங்க. இந்த நேரம் அங்க போனா சரிபடாது. இனியன் மதுரா போகட்டும். இனியன் பார்த்துப்பான். நீ போ இனியன்" என்று கண்காட்டி அனுப்ப, "தேங்க்ஸ்டா" என்று மதுராவை இழுத்துக் கொண்டு ஓடாத குறையுடன் விரைந்தான். </p>
<p>"என்ன அண்ணா இப்ப வந்து சொல்லற. அப்பா அம்மா ஏதும் சொல்லலையே." என்று பதட்டமாய் பதறினாள். அவளை பெண் பார்க்க வந்ததை சொல்லி கூட்டிக்கொண்டு வந்திருக்கலாம் என்ற எண்ணம்.</p>
<p>"அய்யோ.. தரகர் தான் மதுரை திருவிழாவுக்கு நீ இருப்பனு சொன்னதும், திருவிழா அப்ப திருவிழாவை பார்க்கலாம்னு இன்னிக்கு வந்துட்டாங்க. அப்படியே உன்னை பார்க்கலாம்னு. அப்பாவிடம் இப்ப தான் சொன்னேன். நீ அம்மாவோட போயிரு." என்று தூரிகாவை அனுப்பினான். </p>
<p>  காவ்யாவோ "மதுரா இனியனிடம் லவ்வை சொல்லிட்டா போல." என்று குதிக்காத குறையாக காவ்யா மகிழ, "கொஞ்சம் கத்தாம நிற்கறியா." என்றான். தன்னிடம் சொல்ல வராத காதல் எப்படியோ இனியனிடம் கல்யாணமாகி யுதல் வருடத்தில் சொல்கின்றாளென்ற வருத்தத்திற்கு மாறாக சிரிப்பு தான் அகிலனுக்கு வந்தது. </p>
<p>"போடா... நீயும் உங்க ஊரும்." என்று தூரிகாவை தேடி போனாள் காவ்யா. </p>
<p>  இங்கே காரில், "ஏன் வேர்க்குது. ஹாஸ்பிடலே போயிருக்கலாம். நீ என்னடான்னா.. வீட்டுக்கு போன்னு சொல்லற." என்று வண்டியை ஓட்டியபடி அவள் கையை நெஞ்சில் வைத்துக் கொண்டான். </p>
<p>  "உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும். அதனால தான் வீட்டுக்கு போக சொன்னேன்." என்றாள்.‌</p>
<p>"நீ என்னை நேசிப்பது நிஜமா மதுரா." என்று கேட்க, ஆமென்றாள். நொடியில் அவளது நெற்றியில் முத்தமிட்டு காரோட்டுவதிலும் கவனம் செலுத்தினான். </p>
<p>மதுராவுக்கு இன்னமும் வேர்த்து போயிருக்க, "உனக்கு என்னவோ பண்ணுதா.. கார்ல ஏசி ஆன் பண்ணிட்டேன். ஆனாலும் பதட்டமா இருக்க. ஏய் என்ன பண்ணுதுடி. பயமாயிருக்கு. ஏதாவதுனா சொல்லு" என்று கூற, "சொல்லறேன் வீட்டுக்கு போங்க" என்றாள். </p>
<p>வீட்டேக்கு வந்ததும் காரை நிறுத்திவிட, வேகமாய் ஓடி வந்து தண்ணீரை நீட்டினான். </p>
<p>அதை பருகியவாறு, மேலே பார்த்து "நம்ம ரூமுக்கு போகலாம்" என்றாள். </p>
<p>"வேர்க்குது‌ நம்ம ரூமுக்கு எதுக்கு. இங்க இரு. முதல்ல கொஞ்ச நேரம் உட்காரு" என்று கூற, "மச்சான் வாங்கனு சொல்லறேன்ல" என்று கைப்பிடித்து அழைத்து சென்றாள். </p>
<p>  இந்த நேரம் மதுரவாணி காதலை சொல்லவும் ஆசையாக முத்தமிட தோன்றியது. ஆனால் மதுரவாணி முகம் வேர்த்து கொட்டி, ஒருமாதிரி சோர்ந்தவளாக தெரிய, அணைக்கவும் அவசரம் காட்டாமல் இருந்தான் இனியன். இல்லையென்றால் இந்நேரம் அவன் தங்கள் அறைக்கு தூக்கிக் கொண்டு கட்டிலில் அவளை களவாடியிருப்பான். </p>
<p>  அவர்கள் அறை வந்தப்பின்னும், ஏசியை போட்டுவிட்டான். தண்ணீரை தண்ணீரை குடித்தவள், கட்டிலுக்கு கீழே குனிந்து, எதையோ எடுக்க முனைந்தாள். </p>
<p>அவளுக்கு அது எட்டாமல் போகவும், "கீழேயிருப்பதை மெதுவா வெளியே எடுங்களேன்" என்றாள். </p>
<p>இவளென்ன ஹாஸ்பிடல் வேண்டாமென மறுத்துவிட்டு, கீழே ஹாலில் கூட உட்காராமல் மேல வந்ததும் கட்டிலுக்கு அடியில் எதையோ உருட்டுகின்றாளென மதுரா சொன்னதை எடுக்க மண்டியிட்டு கையை நீட்டினான். </p>
<p>அவன் கை நீளமென்பதால் அகப்படவும், வேகமாய் இழுக்க முனைய "மெதுவா..மெதுவா வெளிய எடுங்க" என்று பதறினாள். </p>
<p>மதுராவை பார்த்தவாறு, இழுக்க, ஒரு காய்கறி டிரேவில் நெல் தானியத்தை விதைத்து வளரவிட்டு, அதற்கு மேல தானியத்தில் சிலதை வைத்து, அப்பா குருவி, அம்மா குருவி, இருக்க நடுவே குட்டி குருவியை எப்படியோ ஒட்டி வைத்திருந்தாள். அதற்கு அருகே இரண்டு தட்டில் நீறும் டிரேவை சுற்றி அழகுக்கு சில செடியை நட்டு வைத்திருப்பதை பார்த்தான். </p>
<p>மதுரவாணியோ மென்குரலில், "இன்னிக்கு... நம்ம கல்யாண நாள். தாலி கட்டின அன்னிக்கு எனக்கு அது பிடிக்காத கல்யாணம் தான். ஏன் அதுக்கு பிறவும் என் வாழ்க்கை எனக்கு பிடிக்காம தான் எல்லாமே நடந்துச்சு. </p>
<p>   காலம் நாம நினைச்சிப்பாராத மாற்றத்தை நிகழ்த்திடுச்சு. அதே காலம் தான்.. நீங்க என்னை அன்பா பார்த்துக்கிட்டு, மன்னிப்பு கேட்டு காலப்பிடிச்சப்பவும், காதலிப்பதா சொல்லவும், ஒரு வாய்ப்பு கொடுக்க மனசு சொல்லுச்சு. சமீபகாலமா உங்க அன்புக்கு பதிலா நானும் நேசிக்க ஆரம்பிச்சிட்டேன். அதை சொல்ல தயக்கமிருந்துச்சு. ஒரு இருபது நாளாவே நானும் நேசிப்பதை சொல்ல ஆசைப்பட்டேன். ஆனா திருமண நாளுக்கு ஏதாவது பரிசு தந்து காதலிப்பதை சொல்லலாம்னு இருந்தேன். எனக்கு வேற பரிசு தர தெரியலை. கடவுளுக்கே உங்களுக்கு நான் எந்த பரிசு தந்தா பிடிக்கும்னு தெரிந்து, எ..என் வயித்துல.. உ..உங்க.. உசுரை வளர விட்டுட்டார். அதான்.. எனக்கு தெரிந்த முறையில இப்படி அந்த விஷயத்தை சொல்ல நினைச்சேன்" என்றாள். அவனுக்கு பார்த்ததும் அர்த்தம் புரிய, இதில் மதுரா பேச பேச, இனியன் நெல் முளைத்திருந்த அந்த தட்டையே பார்த்துக் கொண்டிருந்தான்.</p>
<p>இரண்டு பெரிய குருவிகள்...</p>
<p>அவற்றுக்கு நடுவில், மற்ற இரண்டையும் விடச் சிறியதாக ஒரு குட்டிக் குருவி.</p>
<p>அவனுடைய புருவம் சுருங்கியது. </p>
<p>   'குட்டி குருவி?' வேறு இருக்க அதை பற்றி குழப்பத்துடன் அவளை காண மதுரா தயங்கி தயங்கி காதலையும், அவனுக்கான திருமண பரிசாக அவன் இழந்த உயிரையும் மீட்டு தந்தவளாக காதலை வெளிப்படுத்தினாள். </p>
<p>இனியனின் கண்கள் அந்தக் குட்டிக் குருவியிலிருந்து மெதுவாக அவளது வயிற்றை நோக்கிச் சென்றது.</p>
<p>ஒரு நொடி அவனாலும் மூச்சு விட முடியவில்லை.</p>
<p>"மது." அந்த ஒரு வார்த்தைக்குள் அவனுடைய, சந்தோஷமும், காதலும் எல்லாமே கலந்து இருந்தது.</p>
<p>மதுரா மெதுவாகத் தலையசைத்தாள்.</p>
<p>"ஆமா... நம்ம குழந்தை. அடுத்த நொடியே அவன் அவளை தன்னோடு இழுத்து அணைத்துக் கொண்டான்.</p>
<p>ஆனால் இம்முறை அவன் அணைப்பு முன்பைப் போல அவசரமானதாக இல்லை.</p>
<p>அவளுக்குள் வளர்ந்து கொண்டிருக்கும் அந்தச் சிறிய உயிரை நினைத்தபடி, மிகவும் கவனமாக அவளைத் தழுவிக் கொண்டான்.</p>
<p>அவன் கண்களில் இருந்து வழிந்த கண்ணீர் மதுராவின் தோளில் விழுந்தது. இறுக அணைத்தவன் அவள் தாடையை நிமிர்த்தி, முகமெங்கும் முத்தத்தை தந்து, மீண்டும் கட்டிக்கொண்டான்</p>
<p>அங்கே இனியனால் வார்த்தைகள் கோர்த்திட முடியவில்லை. செய்த தவறுக்கெல்லாம் சேர்த்து தண்டனை அனுபவித்து, தற்போது வரம் பெற்ற பாக்கியவனாக தன்னை உணர்ந்தான். </p>
<p>-தொடரும். </p>
<p>-பிரவீணா தங்கராஜ்</p>
<p>&nbsp;</p>
<div id="wpfa-530" class="wpforo-attached-file"><a class="wpforo-default-attachment" href="//onlinetamilnovels.com/wp-content/uploads/wpforo/default_attachments/1787105140-file_0000000079508211bf1c4952002ccfa2.png" target="_blank" title="file_0000000079508211bf1c4952002ccfa2.png"><i class="fas fa-paperclip"></i>&nbsp;file_0000000079508211bf1c4952002ccfa2.png</a></div>]]></content:encoded>
						                            <category domain="https://onlinetamilnovels.com/community/%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0-%e0%ae%9c%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be-%e0%ae%ae%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a9%e0%af%87-praveena-thangaraj/">மதுர ஜில்லா... மச்சானே! -Praveena Thangaraj</category>                        <dc:creator>Praveena Thangaraj</dc:creator>
                        <guid isPermaLink="true">https://onlinetamilnovels.com/community/topicid/319/</guid>
                    </item>
				                    <item>
                        <title>மதுர ஜில்லா மச்சானே-68</title>
                        <link>https://onlinetamilnovels.com/community/topicid/316/</link>
                        <pubDate>Tue, 18 Aug 2026 07:43:46 +0000</pubDate>
                        <description><![CDATA[அத்தியாயம்-68
ஒரு வாரத்திற்கு முன் எப்பவும் போல காவ்யா தங்கள் தொழிற்சாலையில் வேலை செய்தவருக்கு சம்பளம் தரவும், அனைவரும் பெற்றுக் கொண்டார்கள். காவ்யாவோ பார்ட்னர்ஸ் என்ற முறையில் இரண்டு ஷேரை ...]]></description>
                        <content:encoded><![CDATA[<p>அத்தியாயம்-68</p>
<p>ஒரு வாரத்திற்கு முன் எப்பவும் போல காவ்யா தங்கள் தொழிற்சாலையில் வேலை செய்தவருக்கு சம்பளம் தரவும், அனைவரும் பெற்றுக் கொண்டார்கள். காவ்யாவோ பார்ட்னர்ஸ் என்ற முறையில் இரண்டு ஷேரை பிரித்தவள், மூன்றாவது பங்காக மதுராவிடம் நீட்டினாள். </p>
<p>  மதுரா திகைக்க, "என்ன பார்க்கற நானும் இனியன் மச்சானும் இங்கிருக்கற இடத்துல சரிபாதியா பணத்தை ஷேர் பண்ணி ஆரம்பிச்சது. அவர் இங்கிருக்கற வெளிவேலையை பார்த்துக்கறார். நான் அங்க அமெரிக்க பையரிடம் பார்த்துக்கறேன். இதுக்கு நடுவுல உணவு தயாரிப்புல உன் பங்கு இருக்கு. அதுக்கான சம்பளம். இதை நீ எப்படி வேண்டுமென்றாலும் செலவு செய்யலாம். இது நீ சம்பாரிச்சது." என்று நீட்டவும் கட்டுக்கட்டாக பணத்தை வைத்து மதுரா ஆச்சரியமானாள். </p>
<p>  இந்த பணம் தனக்கு கிடைக்குமென்று எல்லாம், அவள் யோசித்து இனியன் பின்னால் அமர்ந்து இங்கு வந்து, இழுத்து போட்டு வேலை செய்யவில்லை. அட ருசி பார்த்து அளவெல்லாம் தெரிந்துக்க நம்மளை கூப்பிடறாங்க. அதோட இனியனுக்கு காவ்யா இருப்பதால, என்னை கூடவே வச்சிட்டு சுத்தறார்' என்று தான் மதுரா நினைத்தாள். </p>
<p>  ஆனால் காவ்யாவோ இனியனிடம் கூட கலந்து ஆலோசிக்காமல் தான் இதை முடிவெடுத்து தந்தாள். இனியனிடம் காலையில் தெரிவிக்க, "உன் இஷ்டம் மதுரா.. இதை எதிர்பார்த்து அவ செய்யலை. ஆனா அவளுக்கு இது தன்னம்பிக்கையை தரும்." என்று கூறினான்.</p>
<p>இனியன் ஆல்திபெஸ்ட் பார்ட்னர்." என்று கைகுலுக்கி சென்றான். மதுராவுக்கோ இனியனிடம் காதலை சொல்ல அத்தனை தயக்கம் இருந்தது.</p>
<p> இதுங்களோ காதலை முறித்துக் கொண்டு எப்படி தான் நடமாடுகின்றனரோ. உண்மையில் காதலை கூட மறைந்து நடமாடிவிடலாம் போல. ஆனால் காதலை நெஞ்சில் சுமந்து தான் நடமாட முடியவில்லை. இனியனை கண்டு சொல்ல முடியாத அவஸ்தை மதுராவை ஞானி ஆக்காத குறை.</p>
<p>  'இது எனக்கு இவ்ளோ கஷ்டமாயிருக்கு. காதலிக்கறேன்னு சொல்ல முடியலை' என்று தவித்தாள்.</p>
<p>அன்று காலை விடியும் முன்பே சில வீதிகளில் விழித்திருக்கும் சத்தம். தெருவோரக் கடைகளில் பொருட்களை அடுக்கும் ஓசை. வண்ணத் துணிகளை தொங்கவிடும் ஆட்களின் பரபரப்பு இருந்தது. </p>
<p>கோவிலைச் சுற்றிய வீதிகளில் கட்டப்பட்டிருந்த தோரணங்கள்.</p>
<p>காற்றில் அசைந்தாடும் வாழைமரங்கள் என்று ஊர்காரர்கள் பேசிக்கொண்டிருந்தனர். </p>
<p>இனியன் வீட்டு வாசலில் மதுராவும் பெரிய வண்ணக் கோலம் போட்டிருந்தாள். </p>
<p>கோவிலுக்குச் செல்ல புத்தாடை அணிந்து தயாராகினார்கள். </p>
<p>  இளைய தலைமுறைகளும் எங்குப் பார்த்தாலும் வட்டமடிப்பார்கள். எழிலரசன் வீட்டிலே இல்லை. அவன் ஊரில் தான் நண்பர்களோடு வட்டமடித்திருந்தான். இதில் அடிக்கடி நிலானியை அங்க பார்த்தேன், இங்க பார்த்தேன் என்று மதுரா அண்ணியிடம் தகவல் வேறு தந்தான். எப்பொழுதும் அவளும் தங்கையும் தான் ஜோடி போட்டு சுத்துவது. இப்பொழுது புகுந்த வீட்டில் வேலையும் இருந்திட, அதை முடித்து தான் செல்ல வேண்டும்.</p>
<p>ஊரில் இருந்து அங்காளி பங்காளி என்று அறிந்தவர் தெரிந்தவர் வந்து பங்கு கொண்டிருக்க, ராஜாராமும் அமெரிக்காவிலிருந்து வந்திருந்தார். அவரை அழைத்துக் கொண்டு அதியமான் தங்கள் ஊரை சுற்றினார்கள். </p>
<p>கோவிலைச் சுற்றியிருந்த கடைகளில் கூட்டம் அதிகரித்திருந்தது.</p>
<p>மல்லிகைப்பூவின் மணமும், சாம்பிராணியின் மணமும், தெருவோர உணவுக் கடைகளில் இருந்து வந்த மசாலா வாசனையும் ஒன்றோடு ஒன்று கலந்து காற்றில் பரவிக் கொண்டிருந்தது. அகிலனோ பஞ்சாய்தது வேலைகளை பார்த்து, மக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் வழிதடத்தை உருவாக்கி மோரும் அன்னதானமும் வழங்கிக்கொண்டிருந்தனர்.</p>
<p>ஒருபக்கம் பஞ்சுமிட்டாய். இன்னொரு பக்கம் கரும்புச்சாறு, அடுத்த கடையில் முறுக்கு, சீடை, அதிரசம்.</p>
<p>குழந்தைகளுக்காக வண்ண வண்ண பொம்மைகள், பலூன்கள், விசில்.</p>
<p>கையில் சுழற்றிக் கொண்டே செல்லும் ஒளி பொம்மைகள் இத்யாதி எல்லாமே ஒவ்வொரு கடைக்காரரும், 'வாங்கம்மா... வாங்க தம்பி...' என்று அழைத்துக் கொண்டிருந்தார்கள்.      </p>
<p>    காவ்யாவோ அகிலனிடம் 'இது வேண்டும் அது வேண்டுமென' பர்ஸிற்கு வேட்டு வைத்துக் கொண்டிருந்தாள்‌.</p>
<p>சிறுவர்கள் ஒரு கடையிலிருந்து இன்னொரு கடைக்கு ஓடிக் கொண்டு தந்தையின் பணத்திற்கு வேட்டு வைத்தாலும், தந்தைமார்களுக்கு அதில் அத்தனை சந்தோஷம் உருவாகுமே அதே நிலை தான் அகிலனுக்கும். </p>
<p>இதில் காவ்யா வளையல்கள் பார்த்துக் கொண்டிருக்க, கூட்ட நெரிசலில் அவளை தவறவிடாமல் பார்த்துக் கொண்டு வளையலும் வாங்கித்தந்தான். </p>
<p>இங்கு சேலை கட்ட பழக வேண்டுமென, தினமும் இரவில், அவளுக்கு சேலை அணிவித்து கட்ட பழகினான். அதை அன்றைய இரவிலேயே கழட்டவும் செய்திடுவான் என்பது தனிக்கதை. </p>
<p>  'டேய் அகி.. நீ சேலை கட்ட கத்துக்கறேன்னு யூடுயூப்ல எவ எவளோ சேலை கட்டுற வீடியோவா பார்த்துட்டு இருக்க. பேட் பாய். இதுக்கே நான் கட்ட கத்துக்கணும் போலயே." என்று கேலி செய்தாள் காவ்யா. </p>
<p>அந்தளவு ஹிஸ்ட்ரி முழுக்க சேலை கட்டுவது எப்படி என்று குவித்திருந்தான். </p>
<p>"நீயா அந்த பொறாமையில சேலை கட்டக்கத்துக்கிட்டல்ல.. அதான் மேட்டர்" என்று சிரிப்பான். </p>
<p>'ஹிஸ்ட்ரியை அழிடா." என்று அவன் போனை வாங்கி பாஸ்வோர்ட் பேட்டர்ன் போட்டு, அவசரமாய் அவளே அழித்தும் முடித்தாள். </p>
<p>'நான் சேலை கட்டக்கத்துக்கிட்டேன். பட்.. பட்.. எப்ப கட்டணும்னாலும். நீ ஹெல்ப் பண்ணணும். ஓகே வாடா." என்று கேட்க, "சரிடி.. உதவிடுவோம்" என்று இடையில் சின்ன அழுத்தம் தருவான் அகிலன்.</p>
<p>இன்றும் அப்படி தான் காவ்யா சேலை கட்டி நடமாடினாள். </p>
<p>இதில் நிலானி போன்ற இளம் பெண்கள் தாவாணி அணிந்த பருவ சிட்டான குமரிகள் நடமாட, அத்தை மகன் மாமன் மகள் என்ற பார்வை பரிமாற்றம் தூள் பறக்கும்.</p>
<p>இதில் உரிமை போராட்டமாக இதை வாங்கி தா. அதை வாங்கி தா' என்று கேட்டு வாங்கும் பொழுது அதில் தனி சந்தோஷம் கிட்டும். அது திருமணமாக விட்டாலும் அல்லது திருமணமாகி வேறொரு இடத்தில் வாக்கப்பட்டிருந்தாலும், எங்க அத்தை பையன் மாமன் மகன் வாங்கி தருவது என்ற பெருமை பேசிக் கொள்வார்கள். கிட்டதட்ட அண்ணன் வாங்கி தந்தால் எப்படி ஆனந்தமோ அதே விகிதம் ஆனால் உறவுமுறைக்கொன்று தனி அழகு அதில் கலந்திருக்கும். </p>
<p>  நிலானிக்கும் அப்படியொரு வாய்ப்பு அமைந்தது. கூட்டத்தில் அவள் வைத்த பூ கீழே விழுந்துவிட, கீழே விழுந்ததை எடுக்க கூடாதென்று, இளையமதியிடம் பூவை கேட்டு நின்றாள். </p>
<p>  "உங்கப்பாவை காணோம்‌ அவரிடம் போய் கேளு. நானே உங்கக்காவை காணோம்னு யோசிச்சுட்டு இருக்கேன்." என்று கடிந்தார்.‌</p>
<p>  எழிலரசனோ இப்பேச்சை கேட்டவனாக நிலானியிடம் மூன்று மொழம் பூவை வாங்கி நீட்டினான். </p>
<p>  முதலில் வாங்க மறுத்து நின்றாள். "ஏ அத்தை மவளே.. இதை வாங்கிட்டா நீ என்னை நினைக்கறேன்னு அர்த்தமில்லை. இது அத்தை மக மாமன் மகன் என்ற அழகான பந்தம். தயவு செய்து ப்யூச்சர்ல கட்டி வஞ்சிடுவாங்கனு பயந்துட்டு நிற்காத. என் மனசுல இப்ப எதுவும் இல்லை. உன்னை பிடிக்கும். என்னாலயோ எங்க குடும்பத்தாலையோ, நீ உன் வாழ்க்கையை தப்பா முடிவெடுக்காத. இது என்ற அத்தை மவளுக்கு உரிமையா வாங்கித்தர்றது." என்று கூறி நீட்டினான். </p>
<p>"நிசமா.. ஏதாவது வில்லங்கத்தோட நீ தரலையே?" என்று கேட்டாள். </p>
<p>"அம்மா சத்தியமா இல்லை தாயே. வாங்கிக்கோ.. உன்னை பிடிக்கும். மதுரா அண்ணியை பிடிக்கும். அது மாதிரி. சப்போஸ்... உன்னை விரும்பினா.. இதே போல ரோஸா பூவை வாங்கிட்டு வந்து நீட்டறேன். அப்ப கத்து கூச்சல் போடா. நாலு திட்டு திட்டு. இப்ப பாவாடை தாவணி கட்டிட்டு பூ இல்லாம என்ற அத்த மக நின்னா நல்லாயிருக்காது." என்றான். </p>
<p>நிலானியோ மல்லியை வாங்கி தலையில் சூடியபடி, "ரோஸா பூ தந்து நீ நீட்டினா, திட்டமாட்டேன்னு நினைக்காத. கத்தி கூச்சல் போட வாய்ப்புண்டு" என்றாள். </p>
<p>எழிலரசனோ லேசான சிரிப்புடன் அவ்விடம் நகர்ந்தான். அவன் இந்த வருடம் படிப்பு முடிந்ததும் அடுத்து இனியன் அண்ணனின் பேச்சை கேட்டவனாக அமெரிக்கா சென்று மேற்படிப்பை படிக்க போவதால் நிலானி மனதில் தான் இன்னும் சண்டைக்காரனாக இருந்து செல்ல பிடிக்காமல் சமரசம் செய்துக் கொண்டான். அதை தான் சில நாட்களாக மறைமுகமாக உறவுமுறையின் உன்னதத்துடன் உரிமையாக பேசுகின்றான்.</p>
<p>நாளை யாருக்கு யாரோ என்று முடிவடைவது நாளை தானே. அதுவரை இந்த பந்தம் உயரியது அல்லவா. </p>
<p>அந்த தெளிவில் அவன் இருந்தான். </p>
<p>  "எங்கடா போன?" என்று வேல்விழி வந்து கேட்டதும், "இங்க தான்மா இருந்தேன். நான் என்ன சின்ன பையனா.. தொலைந்து போக. அதெல்லாம் விழா முடியறவரை என்னை தேடாதிங்கம்மா. மதுரா அண்ணி.. அத்தை உங்களை அங்க தேடினாங்க" என்றான். </p>
<p>"அதுசரி" என்று வேல்விழி அங்கலாய்த்திட, மீனாட்சி அம்மன் கோவிலின் கோபுரத்தைப் பார்த்தவாறு,  அந்தப் பிரம்மாண்டம் மனதை நிறைத்தார். </p>
<p>கோபுரத்தில் வரிசையாக நிற்கும் எண்ணற்ற சிலைகள்.</p>
<p>ஒவ்வொரு சிலையையும் தனித்தனியாக பார்த்துக்கொண்டே நிற்கும் பக்தர்கள் நிறைந்திருந்தனர். </p>
<p>கையில் குழந்தையைத் தூக்கிக்கொண்டு,</p>
<p>"அம்மனை பார்த்தாச்சா?" என்று கேட்கும் பெற்றோரை கண்டு வேல்விழி பார்வை மதுராவை ஏறிட்டது. மதுரா அன்னையை தேடியபடி கூட்டத்தை பார்வையிட்டாள்.</p>
<p>கூட்டத்துக்குள் தொலைந்துவிடாமல் இனியன் மதுராவின் கையை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டான்.</p>
<p>கோவில் மணியோசை கேட்கும் ஒவ்வொரு முறையும் மதுரா நெஞ்சில் ஒரு அமைதி.</p>
<p>அதன்பின் மீண்டும் அதே பரபரப்பு. இந்த சித்திரைத் திருவிழா ஒரு நாள் கொண்டாட்டமல்ல. ஒவ்வொரு நாளுக்கும் ஒரு கதை உண்டு. அந்த நாட்கள் முடியும் முன் இனியனிடம் தன் மனதை திறக்க நேரம் பார்த்துக் கொண்டிருந்தாள். </p>
<p>   அவனிடம் பேச 'நா'உலர்ந்தது. ஏதாவது பேசவே அஞ்சினாள். மேடையில் முதல் முறை ஏறி பேசும் குழந்தை போல அத்தனை தயக்கம் மதுராவுக்கு. </p>
<p>மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் நடந்தது. அம்மன் அரசியாக முடிசூடும் நாள். அன்று மதுரை மக்கள் தங்களுடைய வீட்டில் ஒரு பெண்ணுக்கு திருமணம் நடப்பதைப் போலவே அந்த நிகழ்வை எதிர்பார்ப்பார்கள்.</p>
<p>புதிய ஆடை, பூ, பழங்கள்.பிரசாதம், எல்லாமே தயாராக இருக்கும். அம்மன் பட்டாபிஷேகம் பார்த்துட்டு தான் வீட்டுக்கு திரும்பணும்.' என்று சொல்லிக் கொண்டு குடும்பம் குடும்பமாக கோவிலை நோக்கி நகர்ந்தார்கள்.  </p>
<p>  இன்றும் இனியனிடம் காதலை தெரிவிக்காமல் வீடு திரும்பியதில் மதுரா முகம் வாடியது.</p>
<p>அவளை சுற்றி அம்மா அப்பா தங்கை என்று விழாவில் இருந்தனர். அதே போல வீட்டில் அத்தை மாமா எழிலரசன் என்று நடமாடிக்கொண்டே இருந்தனர். </p>
<p>தனியாக ஒரு நிமிடம் கூட பேச முடியவில்லை. இதில் வீதிக்கு வீதி பாட்டு சத்தம். காதலை பகிர்வது இத்தனை கடினமா? என்று தான் மலைத்தபடி உறங்கினாள்.</p>
<p>அடுத்தடுத்த நாளில் மீனாட்சி அம்மன் திக் விஜயம். மதுரை நகரமே அந்த நிகழ்வுக்காக காத்திருக்கும். வீதிகளில் பக்தர்கள் கூட்டம் பெருகும். அலங்கரிக்கப்பட்ட வாகனங்கள் நகரும். நாதஸ்வரமும் தவில் ஓசையும் வீதியையே நிரப்பும்.</p>
<p>திக் விஜயத்திற்காக அலங்கரிக்கப்பட்டிருந்த மீனாட்சி அம்மன், அன்றைய தினம் மதுரையின் அரசியாகவே காட்சியளித்தாள்.</p>
<p>பச்சை நிற பட்டாடை அவளது மேனியில் பசுமையான வசந்தத்தைப் போலப் படர்ந்திருந்தது. இடையைச் சுற்றி அணிவிக்கப்பட்டிருந்த பொன்னாடையும், மார்பில் அடுக்கடுக்காகத் தொங்கிய முத்து மாலைகளும், கழுத்தை நிறைத்த நகைகளும் அவளது கம்பீரத்தை இன்னும் கூட்டின.</p>
<p>நெற்றியின் நடுவில் மின்னிய குங்குமமும், அதற்கு மேலே இட்டிருந்த திருநீறும் அவளது முகத்திற்கு ஒரு தனி தெய்வீக ஒளியைக் கொடுத்திருந்தது. வளைந்த புருவங்களுக்கு நடுவே பதிந்திருந்த கண்கள்... அவை வெறும் அழகான கண்கள் அல்ல. மதுரையை ஆள வந்த அரசியின் கண்கள்.</p>
<p>மீனாட்சி அம்மனின் நீண்ட விழிகள் ஒரு பக்கம் கருணையைப் பொழிந்தாலும், மறுபக்கம் எதிர்த்து நிற்பவர்களைப் பணிய வைக்கும் வீரத்தைப் பேசின.</p>
<p>காதுகளில் ஆடிய பெரிய குண்டலங்கள் ஒவ்வொரு அசைவுக்கும் ஒளியைச் சிதறடித்தன. மூக்குத்தியின் சிறிய மினுக்கல் கூட அவளது முகத்தின் அழகில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருந்தது. உதடுகளில் மெல்லிய புன்னகை. அந்தப் புன்னகையில் பெண்ணின் நாணமும் இருந்தது; பேரரசியின் அதிகாரமும் இருந்தது.</p>
<p>தலையில் சூட்டப்பட்டிருந்த கிரீடம் அவள் ஒரு அலங்கரிக்கப்பட்ட பெண் மட்டுமல்ல என்பதை நினைவூட்டியது.</p>
<p>அவள் மதுரையின் மீனாட்சி.கையில் ஏந்தியிருந்த வேலும், போருக்குப் புறப்பட்ட வீராங்கனையைப் போன்ற தோற்றத்தைக் கொடுத்தது. பட்டு, பொன், முத்து, மலர் என எத்தனை அலங்காரங்கள் அவளைச் சூழ்ந்திருந்தாலும், பார்வையை முதலில் ஈர்த்தது அவளது முகத்தில் தெரிந்த அந்தக் கம்பீரம்தான்.</p>
<p>அவள் வீதியில் எழுந்தருளிய அந்தக் கணத்தில், பக்தர்கள் கூட்டம் தன்னிச்சையாக கைகளைக் கூப்பியது.</p>
<p>ஒரு பக்கம், "மீனாட்சி அம்மன் அருள்புரிவாள்..." என்று பக்தர்கள் முழங்க, மற்றொரு பக்கம் குழந்தைகள் கூட்டத்தில் தங்களுக்குத் தெரிந்தவர்களைத் தேடிக் கொண்டிருப்பார்கள்.</p>
<p>வெயில் கொளுத்தினாலும் கூட்டம் குறையாது.</p>
<p>தண்ணீர் பாக்கெட்டுகளை வாங்கிக் குடித்துக் கொண்டே மக்கள் காத்திருப்பார்கள்.</p>
<p>அம்மன் புறப்பாடு வரும்போது மட்டும்... அந்தக் கூட்டத்துக்குள் ஒரு இறை பக்திகுண்டான மின்சாரம் பாய்ந்தது போல இருக்கும்.</p>
<p>அனைவருடைய பார்வையும் ஒரே திசையில் திரும்பும்.</p>
<p>கைகள் தானாக கூப்பிடும். மனதுக்குள் வேண்டுதல்கள் ஓடும்.</p>
<p>வேல்விழியோ "மதுராவுக்கு குழந்தை பாக்கியம் அமைய வேண்டும்." என்று வேண்டினார். </p>
<p>மீனாட்சியோ "தூரிகாவுக்கு நல்லபடியா நல்ல வரன் அமைந்து திருமணம் நடக்க வேண்டும்." என்று வேண்டினார்.‌ அகிலனை பற்றி கவலையை காவ்யா வந்தப்பின் விட்டுவிட்டார். இனி அந்த ஜோடி ஒருவருக்கு ஒருவர் புரிதலுடன் வாழுமென்று அன்னைக்கு தெரியாதா!</p>
<p>அருளாளன் அதியமான் எல்லாம் மகன்களின் தொழில் வளர வேண்டும். என்று வேண்டினார்கள். </p>
<p>அகிலனோ "குடும்பத்தில் இருந்த பிரச்சனை முற்றிலும் தீர வேண்டும்." என்று வேண்டினான். </p>
<p>ஒவ்வொருவருக்கும் ஒரு வேண்டுதல் நெஞ்சில் குடியிருந்தது.  </p>
<p>மதுராவுக்கு இனியனிடம் தன் எண்ணத்தை வெளியிட தைரியம் வேண்டி அம்மனிடம் நின்றாள். </p>
<p>காவ்யாவுக்கு வேண்டுதல் எதுவும் இல்லை. அவளுக்கு இதெல்லாம் புதிது. 'நல்லதே நினைத்தால் நல்லதே நடக்கும்' என்ற கோட்பாட்டு பேசுபவள். மீனாட்சிக்காக பக்தியுடன் வேண்டுவாள் அவ்வளவே. </p>
<p>  காவ்யா வந்து மதுராவிடம், "என்ன லவ் சொல்லிட்டியா இல்லையா?" என்றாள். </p>
<p>இனியனை கண்டு உதடு பிதுங்கி இல்லை என்றாள். </p>
<p>  "இந்த கோவில் பங்ஷன் முடியற வரை டைம். அதுக்கு பிறகும் சொல்லாம உள்ளுக்குள்ள தவிச்ச. அப்பறம் நானே இனியன் மச்சானிடம் உன் லவ்வை சொல்லிடுவேன்" என்று மிரட்டினாள்.</p>
<p>  "தூரிகா மாதிரி மிரட்டற. அவளும் இப்படி தான். அகிலன் மச்சானிட." என்றவள் வாயை மூடினாள். </p>
<p>"ம்கூம்.. முழுசா சொல்லு. அகிலன் மச்சானிடம் சொல்ல சொல்லி நீ சொல்லாம இப்ப என் அகி ஆகிட்டார்." என்றாள் காவ்யா. </p>
<p>மதுராவோ "அய்யோ காவ்யா." என்று சிணுங்க, "இனியன் உன்‌ ஹஸ்பெண்ட் தான். எவளும் கொத்திட்டு போக முடியாது. ஆனா அதுக்காக காதலை சொல்லணுமானு இல்லை. </p>
<p>  ஆனா உன் காதலை அவன் ஆசையா எதிர்பார்க்கறான் தானே. அப்பறம் என்ன.? கல்யாண நாள் வேற நாளைக்கு. நாளைக்காவது சொல்லு" என்று கூற மதுரா உம்மென்று சரியென்று தலையாட்டினாள். </p>
<p>அன்று இரவு வீடு திரும்பிய பொழுது அகிலன் கூட காவ்யாவிடம், "மதுராவை என்ன மிரட்டிட்டு இருந்த?" என்று கேட்க, "பார்டா... அத்த மகளை மிரட்டினா எங்கிருந்தாலும் பார்ப்பிங்க போல. பெருசா ஒன்னுமில்லை.. இனியனை காதலிக்கறதை சொல்ல தயங்கிட்டு சுத்தறா. நாளைக்குள்ள சொல்ல சொல்லி மிரட்டினேன்." என்று முடித்தாள்.‌</p>
<p>அகிலனோ 'அவளா இனியனிடம் சொல்ல வாய்ப்பில்ல.' என்று கூறிவிட்டு, மனைவியை கண்டு, "உங்கப்பா ஏதோ வீடு வாங்கறதா சொன்னார். வீடெல்லாம் பார்த்தியா?" என்று கேட்க "திருவிழா முடியவும் பார்க்கலாம்." என்று நெருங்க, "ஒய். உங்கப்பாவை கவனி. என்னையே உரசிட்டு இருக்க" என்று சந்தடி சாக்கில் அவளது புஜத்தை வலிக்காமல் கிள்ளி சென்றான். </p>
<p>"அகி" என்று சிணுங்கியவள் தனியாக படுத்தாள். தந்தையுடன் பேசிக் கொண்டே உறங்க தான் அகிலன் சென்றுவிட்டானே. திருவிழா முடியும் வரை தந்தையுடன் இருப்பதாக கூறிவிட்டான். </p>
<p>&nbsp;</p>
<p>-தொடரும்.</p>
<p>பிரவீணா தங்கராஜ். </p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>]]></content:encoded>
						                            <category domain="https://onlinetamilnovels.com/community/%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0-%e0%ae%9c%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be-%e0%ae%ae%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a9%e0%af%87-praveena-thangaraj/">மதுர ஜில்லா... மச்சானே! -Praveena Thangaraj</category>                        <dc:creator>Praveena Thangaraj</dc:creator>
                        <guid isPermaLink="true">https://onlinetamilnovels.com/community/topicid/316/</guid>
                    </item>
				                    <item>
                        <title>மதுர ஜில்லா... மச்சானே!-67</title>
                        <link>https://onlinetamilnovels.com/community/topicid/314/</link>
                        <pubDate>Mon, 17 Aug 2026 01:11:35 +0000</pubDate>
                        <description><![CDATA[அத்தியாயம்-67
மதுரையே சித்திரைத் திருவிழாவுக்காக மெல்ல மெல்ல விழாக்கோலம் பூண்டு கொண்டிருந்தது.
     ஊரின் முக்கிய வீதிகளில் எல்லாம் புதிதாக தோரணங்கள் கட்டப்பட்டிருந்தன. கடைகளின் முன்புறம் ...]]></description>
                        <content:encoded><![CDATA[<p>அத்தியாயம்-67</p>
<p>மதுரையே சித்திரைத் திருவிழாவுக்காக மெல்ல மெல்ல விழாக்கோலம் பூண்டு கொண்டிருந்தது.</p>
<p>     ஊரின் முக்கிய வீதிகளில் எல்லாம் புதிதாக தோரணங்கள் கட்டப்பட்டிருந்தன. கடைகளின் முன்புறம் வண்ண விளக்குகள் தொங்கின. மாலை நேரம் வந்தாலே வீதியெங்கும் மக்கள் கூட்டம் அதிகரித்தது.</p>
<p>  கோவிலைச் சுற்றிய தெருக்கள் மட்டும் அல்ல. சின்னச் சின்ன தெருக்களிலும் கூட அலங்காரம் ஆர்ப்பாட்டம் என்று ஜோலித்தது. </p>
<p>'இந்த வருஷம் திருவிழா எப்படி இருக்குமோ?'</p>
<p>'தேர் எப்ப கிளம்பும்?'</p>
<p>'கள்ளழகர் எப்ப வைகையில இறங்குறாரு?' </p>
<p>'போன முறை கூட்டம் அதிகம்பா. வெளியூர் ஆட்கள் கூட வந்தாங்க. போலீஸாலையே கூட்டத்தை கட்டுப்படுத்த முடியலை.' </p>
<p>'அன்னதானம் எல்லாம் அப்படி இருந்தது.'</p>
<p>  கடவுள் அலங்காரம் கண்ணுக்கு குளிர்ச்சியா இருந்தது.' </p>
<p>'எங்கப்பா இந்த முறை நான் கேட்கறது எல்லாம் வாங்கி தர்றதா சொல்லியிருக்காரே' என்று பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை சித்திரையைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தனர்.</p>
<p>மதுரையின் அடையாளமாகவே மாறியிருந்த அந்த சித்திரைத் திருவிழா, மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம், திக் விஜயம், திருக்கல்யாணம், திருத்தேர் என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சிறப்புடன் நகரத்தை விழாக்கோலமாக்கும்.</p>
<p>அதிலும் மீனாட்சி அம்மன் திருக்கல்யாண நாளன்று. மதுரை முழுவதுமே ஒரு பெரிய திருமண வீடு போல மாறிவிடும்.</p>
<p>அம்மனுக்கு திருமணம் நடக்கிறது என்ற பக்தி உணர்வோடு, தங்கள் வீட்டுத் திருமணம் போலவே மக்கள் தங்களையும் அலங்கரித்து, புத்தாடை அணிந்து, குடும்பத்தோடு கோவிலுக்குச் செல்வார்கள்.</p>
<p>அதற்குப் பிறகு கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நாளோ இன்னொரு விதமான கொண்டாட்டம்.</p>
<p>மதுரையின் வீதிகள் முழுவதும் மனிதக் கடலாகிவிடும்.</p>
<p>அந்த வருடமும் அதற்கான எதிர்பார்ப்பு ஊரெங்கும் பரவியிருந்தது.</p>
<p>ஆனால்.. அந்த ஆரவாரத்திற்கு நடுவிலும் சில குடும்பங்களின் மனதில் மட்டும் வேறு விதமான நினைவுகள் இருந்தன.</p>
<p>மீனாட்சியின் வீட்டிலும் சித்திரைத் திருவிழாவுக்கான பரபரப்பு தொடங்கியிருந்தது.</p>
<p>புத்தாடைகள் எடுத்துக் கொண்டிருந்தபோது, மீனாட்சி தூரிகாவிடம்,</p>
<p>''போன வருஷம் சித்திரைத் திருவிழா வந்ததும் தெரியல... போனதும் தெரியல. மதுரா கல்யாணம்னு, அந்த நிலைமையில நம்ம வீடே என்னமோ மாதிரி இருந்துச்சு."  என்றார் மீனாட்சி.</p>
<p>தூரிகாவின் முகமும் சோகமானது. "அம்மா... அது மட்டுமா? தீபாவளிக்கே மதுரா ஹாஸ்பிடல்ல உட்கார்ந்திருந்தா. இந்த பொங்கலுக்குக் கூட அகிலன் அண்ணா நம்ம காளையை ஜல்லிக்கட்டுல கலந்துக்காம விட்டுட்டாரு. இப்படி ஒவ்வொரு பண்டிகையும் எதுவுமே தெரியாம போயிடுச்சு. காலம் எவ்வளவு வேகமா ஓடுது பாருங்க." என்று குறைப்பட்டாள். </p>
<p>மீனாட்சி பெருமூச்சு விட்டார். இந்த இடைப்பட்ட காலத்தில் வாழ்க்கை என்னென்ன மாற்றத்தை தந்துவிட்டது. </p>
<p>ஜனவரி மாதம் அகிலன் ஜல்லிக்கட்டு திருவிழாவில் மாட்டை இறக்க சென்றான். அவனேயே மாடு பிடிக்க வைத்தார் பெரியவர் அருளாளன். அவரது கோபம் அங்கு அதிகரித்தித்திருக்கும். அப்பொழுது ஆரம்பித்தது.</p>
<p>பிப்ரவரி மாத்ததின் முதலிலேயே இனியன் ஊருக்கு வந்துவிட்டான்.‌</p>
<p>  அவன் வந்ததும், தேர்தலில்  பிரச்சினைகள் உண்டானது. ஆனால் மார்ச் மாதமே பெண் பார்க்கும் நிகழ்வு, நிச்சயம், கல்யாண ஏற்பாடுகள் என்று வெகு வேகமாய் முன்னேறிவிட்டார்கள். </p>
<p>ஏப்ரல் மாத்ததில் இனியன்–மதுரா திருமணம் நடைப்பெற்றது. அகிலனும் தேர்தலில் வெற்றி கண்டான். ஆனால் அப்பொழுது சித்திரை திருவிழா வந்து ஊரே ஆனந்தப்பட்ட போது தங்கள் வீடு சோகத்திலும், வருத்தத்திலும் அல்லவா இருந்தார்கள்.</p>
<p>மே, ஜூன் ஜீலை எல்லாம்  திருமணத்திற்குப் பிறகான மோதல்கள், அகிலனின் வாடிய வதங்கிய தோற்றம், காவ்யா வருகை, என்று சற்று மனம் அலைகழிந்தே போனது. ஏனோ காவ்யா வந்தப்பிறகு அகிலனின் அவளை கட்டி வைக்க பேசியது என்று நேரங்கள் நகர்ந்தது. </p>
<p>  ஆகஸ்டில் பிற்பாதி தான் காவ்யா அகிலன் திருமணம் பேசி முடித்து, குடும்ப உறவு வலுப்படுவே ஆரம்பித்தது. இதில் செப்டம்பர் மதுரா அபார்ஷன் ஆனதும் ஹாஸ்பிடலில் நாட்கள் கழிந்தது. </p>
<p>அந்த நேரமும் தீபாவளி மின்னல் போல சென்றது.  </p>
<p>அகிலன்–காவ்யா இருவரும் அமெரிக்கா சென்று வந்தப்பிறகு, நவம்பர் மாதம் வந்ததும் தூரிகா, நிலா பிரச்சனை என்று வரிசைக்கட்டி வந்துவிட்டது.</p>
<p>   ஏதோ வருடம் முடிந்தும் நம் வலிகள் வேதனைகளும் முடியும் பொருட்டு, டிசம்பர் மாதர் இரு குடும்பத்து உறவும் சுமூகமாக சென்றது. </p>
<p>   மகா அக்ரோ பிரைவேட் லிமிடெட் தொடங்கும் வேலைகள், ஏற்றுமதி தயாரிப்புகள் என்று மீண்டும் ஜனவரி துவங்கி பிப்ரவரி மார்ச் தொழில் வளர்ச்சி, அமெரிக்கா முதல் ஆர்டர் என்று அகிலன் காவ்யா மற்றும் இனியன் அதில் தங்களை நுழைத்துக் கொண்டார்கள். அகிலன் கூட பொங்கல் அன்று ஜல்லிக்கட்டு விழாவுக்கு செல்லவில்லை. எல்லாமே வீட்டோடு கும்பிட்டு முடித்தார்கள். </p>
<p>  தற்போது இந்த மூன்று மாதமும் ஏற்றுமதி தொழிலில் தான் கவனம் செலுத்திய படி காவ்யா இனியன் இருக்க, அகிலன், தன் பங்கிற்கு ஊர் வளர்ச்சிக்கு தேவையானதை செய்து கொடுத்துக் கொண்டிருந்தான்</p>
<p>இதெல்லாம் நினைத்து பார்த்து மலைத்தார் மீனாட்சி. </p>
<p>தூரிகா சொன்னது போல எந்த விழாவும் கொண்டாடியதாக நினைவில்லை. பொங்கல் உட்பட, அதை எண்ணியவாறு, "ஆமாடி... இந்த வருஷ சித்திரை மட்டும் நம்ம மனசுக்கு எந்த சங்கடமும் தராம சந்தோஷமாவும் நிம்மதியாவும் போனா போதும்." என்று வேண்டிக்கொண்டு சித்திரை திருவிழாவுக்கு புத்தாடை வாங்க ஜவுளிக்கடைக்கு வந்திருந்தனர். </p>
<p>   "இந்த கலர் எடு. நல்லா இருக்கு." என்றார்கள். அம்மாவும் பொண்ணும் ஒருபக்கமிருந்தனர்.</p>
<p>அகிலன் ஒரு சேலையை காவ்யாவிடம் நீட்டினான். "இதெல்லாம் வேண்டாம். எனக்கு ஒரு நல்ல சுடிதார் எடுத்துக்கிறேன்." என்றாள். </p>
<p>"குர்தி, சுடிதார் எதுவும் வேண்டாம். காவ்யா" என்றான்.</p>
<p>"ஏன்? டிரஸ் போட்டுக்க போறது நான். உங்களுக்கு என்ன ஈஸியா சேலை நீட்டறிங்க." என்றாள். </p>
<p>"ஊரே திருவிழா கோலத்துல இருக்கும். பஞ்சாயத்து தலைவரோட பொண்டாட்டி சுடிதார்ல சுத்திட்டு இருந்தா நல்லாவா இருக்கும்?" என்றான்.  </p>
<p>காவ்யா அவனை முறைத்தாள். "அதென்ன பஞ்சாயத்து தலைவர் பொண்டாட்டி? நான் எதுவும் பதவிக்கு போட்டி போட்டு கல்யாணம் பண்ணிக்கலையே! அதுவுமில்லாம நான் அமெரிக்காவுல வளர்ந்த பெண்ணுனு ஊருக்கே தெரியும். அதோட கட்டிட்டு நிற்கற பாடி லாங்வேஜ்லயே எனக்கு சேலை கட்ட வராதுனு தெரிந்துயிருப்பாங்க" என்றாள்.</p>
<p>அந்த நேரம் தூரிகா அருகில் வந்து, "அண்ணி... நீங்க சேலை எடுத்துக்கோங்க. நான் வேண்டுமின்னா கட்டிவிடுறேன்." என்றாள் பெருந்தன்மையாக.</p>
<p>"பாரு தங்கச்சி... கட்டி விடுறேன்னு சொல்லுறா.” அகிலன் உடனே காவ்யாவை சம்மதிக்க முனைந்தான். காவ்யா திருதிருவென முழிக்கவும், "தூரிகா.. உங்க அண்ணன் அண்ணி என்னத்தையோ வாங்கட்டும். நீ உனக்கொரு பட்டு புடவையை பாரு" என்று இழுத்து சென்றார்.</p>
<p>மகன் மருமகளிடம் கெஞ்சுவதை மகள் பார்த்து கேலி செய்யாமலும், மகளை வேறு புறம் இழுத்து சென்றார் எனலாம்.</p>
<p>காவ்யா அதற்கேற்றது போல அகிலனுடைய சட்டையைப் பிடித்து இழுத்தாள். "உன் தங்கச்சி ஒன்னும் கட்டிவிட வேண்டாம். எனக்கு அது அன்கம்பர்டபிளா இருக்கும்" என்றாள்.</p>
<p>"அப்போ அம்மாவை கட்டிவிட சொல்லவா. அவங்க பாட்டி மாதிரி கட்டிவிட்டுட்டாங்கனு சொல்வ." என்று சிசிடிவி இருக்கு என்று நைஸாக கையை விடுவித்திட கூறினான்.</p>
<p>"தங்கச்சி.. இப்ப அம்மாவா.. டேய் அகில்.. நீ கட்டிவிடறேன்னு சொல்லு. சேலை வாங்கறேன்" என்றாள். </p>
<p>அகிலன் மார்க்கமாய் அவளை பார்த்து "சரி... நான் கட்டிவிடுறேன். இப்ப சேலை வாங்கலாமா?" என்று கேட்க, காவ்யா குஷியாக "இப்ப வாங்கலாம்." என்று கூறினாள். </p>
<p>அவர்கள் இருவரையும் தூரத்திலிருந்து பார்த்த தூரிகா சிரித்துக் கொண்டே அங்கிருந்து நகர்ந்தாள்.</p>
<p>அகிலனோ 'டேய் அகிலா? ம்ம்ம் சேலை கட்டி விடவா சொல்லற. நான் பண்ணற அலப்பறையில் நீயே சேலை கட்டி கத்துக்குவடி பாரு' என்று முடிவெடுத்தான். </p>
<p>---</p>
<p>அதே நேரத்தில் மறுபுறம் வேல்விழி இனியனிடம், "ஏன்யா.. இன்னிக்கு காவ்யா வேலைக்கு வரலையா?" என்று கேட்டார்.</p>
<p>"ஆமாம்மா. ஏதோ சித்திரை திருவிழாவுக்கு பர்ஸேஸ் வாங்கணும்னு சித்தி சொன்னாங்களாம்‌ அதனால கடைக்கு போயிருப்பா." என்றான் இனியன்.</p>
<p>  "இனியா... நம்ம வீட்லயும் சித்திரை திருவிழாவுக்கு சேலை எடுக்கணும்யா. உனக்கு வேண்டியது எடுத்துக்கோ. மதுராவுக்கும் ஒரு நல்ல சேலை எடுத்து வை." என்றார்.</p>
<p>"ம்மா..."  இனியன் சற்றுத் தயங்கினான்.</p>
<p>"என்னப்பா?" என்றார்.</p>
<p>"எங்க கல்யாண நாளும் வருதுல்ல." மீனாட்சி அவனைப் பார்த்தார்.</p>
<p>அவனுடைய குரலில் இருந்த தயக்கம் அவருக்குப் புரிந்தது.</p>
<p>"மறக்க முடியுமா? மதுராவுக்கு அந்தக் கல்யாணமே விருப்பமில்லாம நடந்தது. இப்ப அவ மனசுல என்ன ஓடுதோ தெரியாது. அதனால நீயும் அதிகமா எதிர்பார்க்காத. ஆனா... அவளுக்காக ஒரு நல்ல சேலை கல்யாண நாளுக்கும் எடுத்து வை. அவள் அணியணும்னு நினைச்சா அணியட்டும்." இனியன் அமைதியாகத் தலையசைத்தான்.</p>
<p>எப்படியும் மதுரா அந்த நாளை மறந்திருக்கலாம். இல்லையென்றால் அந்த நாளை நினைக்கவே விரும்பாமல் இருக்கலாம்.</p>
<p>ஆனால் தனக்கோ அந்த நாள் மறக்க முடியாத நாள். அதனால் யாரிடமும் சொல்லாமல், மதுராவுக்காக ஒரு அழகான சேலையும், சில சிறிய பரிசுகளையும் தனியாகத் தேர்ந்தெடுத்து வாங்கிட நினைத்தான்.</p>
<p>  இவர்கள் எண்ணியது போல மதுரவாணி அவளது திருமண நாளை மறக்க வில்லையே. </p>
<p>அன்றிரவு படுக்கையில் படுத்திருந்தவள், கண்களை மூட முயன்றும் தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்தாள்.</p>
<p>'இனியன் மச்சானுக்கு என்ன பரிசு வாங்கலாம்?' என்றதே நிமிடத்திற்கு ஒருமுறை யோசித்தாள்.</p>
<p>'வாட்ச் வாங்கலாமா? அவர்கிட்ட ஏற்கனவே எத்தனையோ வாட்ச் இருக்கு! ஷர்ட் வாங்கலாமா? அதுவும் வேண்டாம்... அமெரிக்கால படிச்சவரு. என்ன கலர் பிடிக்கும், என்ன பிராண்ட் பிடிக்கும்... எதுவுமே எனக்கு தெரியாது.</p>
<p>பர்ஃப்யூம்?' அடுத்த நொடியே முகம் சுளித்தாள். 'அதையும் அவரே வாங்கிக்குவாரு.' மீண்டும் தலையணையில் முகத்தைப் புதைத்தாள்.</p>
<p>'சை... எனக்கென்ன பரிசு வாங்கணும்னே தெரியலையே!'</p>
<p>சில நொடிகள் அமைதியாக இருந்தாள்.</p>
<p>பிறகு திடீரென்று எழுந்து உட்கார்ந்தாள்.</p>
<p>'அவருக்கு என்ன பிடிக்கும்?' அவளுக்கே பதில் தெரிந்தது.</p>
<p>'அவருக்கு என்னத்தான் பிடிச்சிருக்கு.' அந்த நினைப்பு வந்தவுடனே அவளுடைய கன்னங்கள் சிவந்தன. 'சீ... வரவர கண்டதும் நினைச்சிட்டு இருக்கேன்!' மீண்டும் தலையணையை எடுத்துத் தலையில் போட்டுக் கொண்டாள்.</p>
<p>'அவருக்கு நான் கொடுக்குற பரிசை விட... நான் அவரை காதலிக்கிறேன்னு சொல்லுறதுதான் அவருக்கு பெரிய விஷயமா இருக்கும். ஆனா பரிசும் அவருக்கு பிடிச்சதா இருந்தா நல்லாயிருக்கும். முதல்ல அவரிடம் தன் காதலை சொல்ல முடியுமா? எப்படி சொல்வேன். அவர் முகத்தை எப்படி ஏறிட்டு பார்ப்பேன்..' என்று  எண்ணம் வந்ததும் இதயம் வேகமாகத் துடிக்க ஆரம்பித்தது.</p>
<p>  காதலை சொல்வது கடினம் தான். ஆனால் கணவனிடம் காதலை பகிர்வது இத்தனை கடினமாக இருக்குமென மதுரா நினைத்ததில்லை. கண்ணை சுற்றி சுற்றி முழிக்க இந்த தூக்கம் வேறு அடிக்கடி வந்து இம்சித்தது. </p>
<p>  'சே.. வரவர நல்லா திண்ணுட்டு திண்ணுட்டு தூக்கமா வருது.' என்று முனங்கி படுத்து உறங்கிவிட்டாள். </p>
<p>இனியன் வந்து பார்க்கும் பொழுது 'இவளுக்கு மட்டும் நல்லா தூக்கம் வருது. மதியமும் பேக்ட்ரிக்கு வரச்சொல்லி இவளை கூடவே வச்சிக்கலாம்னா அம்மா இவ தூங்கிட்டானு சொன்னாங்க‌. சரி மதியம் தூங்கிட்டா நைட்டு வந்து தூங்காம அவளை சீண்டுவோம்னு  வந்தா இப்பவும் தூங்கறா. நாம நெருங்குவோம்னு இப்படி நைஸா தூங்கி நடிக்கறாளா?' என்று மதுரவாணியை கவனித்தான். </p>
<p>  மதுரவாணியோ குழந்தை போல நன்றாக உறங்குவதாக தான் அவனுக்கு தெரிந்தது. .நன்றாக கால்களை குறுக்கி கன்னத்தில் கைவைத்து உறங்குபவளின் காலை நீட்டி படுக்க வைத்து, அவளை நெருக்கிக்கொண்டு படுத்தவனுக்கு, அவளது தாமரை முகத்தை தன் நெஞ்சில் போட்டுக் கொண்டு அவளது கையை தன்னோடு கட்டிக்கொள்வதாக மாற்றி, அவனும் கட்டிக் கொண்டு படுத்துக் கொள்ளவும் தான் நிம்மதியான உறக்கம் வருவதாக இமை மூடினான்.  </p>
<p>-தொடரும்.</p>
<p>-பிரவீணா தங்கராஜ்</p>
<p>&nbsp;</p>]]></content:encoded>
						                            <category domain="https://onlinetamilnovels.com/community/%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0-%e0%ae%9c%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be-%e0%ae%ae%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a9%e0%af%87-praveena-thangaraj/">மதுர ஜில்லா... மச்சானே! -Praveena Thangaraj</category>                        <dc:creator>Praveena Thangaraj</dc:creator>
                        <guid isPermaLink="true">https://onlinetamilnovels.com/community/topicid/314/</guid>
                    </item>
				                    <item>
                        <title>மதுர ஜில்லா... மச்சானே-66</title>
                        <link>https://onlinetamilnovels.com/community/topicid/311/</link>
                        <pubDate>Sun, 16 Aug 2026 01:27:59 +0000</pubDate>
                        <description><![CDATA[அத்தியாயம்-66
அமெரிக்காவுக்கு அனுப்பிய முதல் கண்டெய்னர் கிளம்பி சில நாட்கள் கழித்து, ராஜாராமிடம் இருந்து வீடியோ கால் வந்தது.
&quot;காவ்யா... முதல் பேட்ச் எல்லாம் சேஃபா வந்து இறங்கிடுச்சு. இங்க ...]]></description>
                        <content:encoded><![CDATA[<p>அத்தியாயம்-66</p>
<p>அமெரிக்காவுக்கு அனுப்பிய முதல் கண்டெய்னர் கிளம்பி சில நாட்கள் கழித்து, ராஜாராமிடம் இருந்து வீடியோ கால் வந்தது.</p>
<p>"காவ்யா... முதல் பேட்ச் எல்லாம் சேஃபா வந்து இறங்கிடுச்சு. இங்க இந்தியன் ஸ்டோர்ஸ்ல சாம்பிள் கொடுத்திருக்கேன். ரெஸ்பான்ஸ் ரொம்ப நல்லா இருக்கு. இன்னும் ரெண்டு நாள்ல எக்ஸ்ட்ரா ஆர்டர் கன்ஃபார்ம் ஆகிடும்." என்றதும் காவ்யா சந்தோஷத்தில் குதித்தாள்.</p>
<p>"பெரிய மச்சான் அப்பா பேசியதை கேட்டீங்களா?" என்று அருகில் நின்றிருந்த இனியனை பார்த்தாள்.</p>
<p>ராஜாராமிற்கு இனியனோடு சோர்ந்து காவ்யா தொழில் துவங்குவது முதலில் விருப்பமில்லை‌. அகிலனிடம் கூட, "இதெல்லாம் சிக்கலான உறவுக்குள் பழகணுமா?" என்று கேட்டார். </p>
<p>"மாமா கல்யாணமே பண்ணிருக்கேன். உறவுன்னாலே உன்னதம் தான் மா. இதுல தப்பா போக வாய்ப்பில்லை. இனியனும் சரி காவ்யாவும் சரி இதெல்லாம் புரியாம இல்லை. அவங்களுக்கு அவங்க லிமிட் தெரியும். அதோட உறவும் புரியும். நீங்க பயப்பட வேண்டாம்" என்று தெரிவித்திருந்தான். </p>
<p>  அதன்பின் வந்த காலத்தில் எல்லாம் சரியாக தான் போனதும் ராஜாராமிற்குள் இருந்த பயமும் கூட குறைந்திருந்தது. </p>
<p>காவ்யாவின் ஆர்ப்பாட்டத்தை கண்ட இனியன் சிரித்தபடி, "நான் ஆரம்பத்துலயே சொன்னேன்ல... நம்ம முதல் ஆர்டரே ஹிட் ஆகும்னு." என்று நம்பிக்கையாக கூறினான். </p>
<p>அதற்குள் பின்னால் நின்றிருந்த மதுராவை பார்த்த ராஜாராம், "மதுராம்மா... உன் கைப்பக்குவமும் இந்த பிசினஸ்ல கலந்திருக்குன்னு காவ்யா சொல்லிட்டா. வாழ்த்துக்கள்." என்றதும் மதுரா பதறி, "நா... நான் எதுவுமே பண்ணல" என்று சங்கடப்பட்டாள்.</p>
<p>"அட... உன் மசாலா ரேஷியோ இல்லாம இருந்தா இந்த டேஸ்ட் வந்திருக்காது. நான் ஒரு பேக்கேஜ் வாங்கி சுவைச்சேன். எங்கம்மா பக்குவம் கண் முன்ன கொண்டு வந்துட்ட." என்று கூறவும், காவ்யாவும் "எக்ஸாட்லி எல்லாமே நானும் டேஸ்ட் பண்ணினேன். ஏ ஒன்" என்று மதுராவை பெருமையாகச் சொல்ல, இனியனின் பார்வை முழுவதும் மதுராவின் மீதே நிலைத்தது.</p>
<p>  "தேங்க்யூ சொல்லு" என்று இனியன் கூறவும், "ரொ..ரொம்ப நன்றி சித்தப்பா.. சித்தப்பாவா பெரிப்பாவா?" என்று சந்தேகம் வேறு கேட்டாள். </p>
<p>    "அட காவ்யாவை விட நீ சின்ன பிள்ளை தான்மா. இருந்தாலும் நீ தான் இனியன் பொஞ்சாதியாகிட்டியே‌. உனக்கு எப்படி கூப்பிடணுமோ கூப்பிட்டுக்கோ." என்றார்.‌</p>
<p>"சரி சித்தப்பா" என்றாள். பேசி முடித்து போன் அணைத்திட, காவ்யாவோ வேலை பார்க்க சென்றாள். </p>
<p>மதுராவை இனியன் கனிவுடன் பார்க்க, "எதுக்கு என்னயே பார்க்கறிங்க. வீட்ல தான் இப்படின்னா. இங்கயுமா? வேலை செய்யறவங்க பிறவு கேலி செய்வாங்க" என்று கூற, "ரசிக்காம இருக்க முடியலையே. நாள் முழுக்க உட்கார வச்சி பார்க்கலாம்." என்று பேச, நா... நான் காவ்யா கூட போறேன்" என்று அவனது மையல் பார்வைக்கு பயந்து ஓடினாள். </p>
<p>இனியனோ அவளது நீண்ட ஜடையை கண்டும் பின்னழகிலும் சொக்கியபடி, நிறைவாக உணர்ந்தான். </p>
<p>   தொழிலில் நல்ல முன்னேற்றம் காண ஆரம்பித்தது ஒரு வகையில் மதுரா காரணமென தோன்றியது. சுவை தரமாக இல்லாமல் எப்பேற்பட்ட உணவு தொழிலையும் போகின்ற போக்கில் நடத்திட முடியாதே.</p>
<p>இப்படி தான் மதுராவை அப்படியே தொழில் பக்கம் நகர்த்தியிருந்தான் இனியன். </p>
<p>  அவனுக்கு காவ்யாவோட தனித்து நிற்பதை காட்டிலும், மதுராவும் கூடவே இருக்க தான் முதலில் அழைத்தான். ஆனால் நாளடைவில் மதுரா கைபக்குவம் முழுதாக தன் தொழில் விருத்திக்கு தேவையென புரிய, வேல்விழியிடம் கூட மதுரா என்னோட வந்துட்டா அவளை ஏதும் சொல்லாதிங்க. அவ தான் அங்க மெயினா கலவைக்கு சரியான பக்குவம் சொல்லறா' என்று கூறியிருந்தான். </p>
<p>அன்றும் அப்படி தான். ஒரு பேட்ச் மசாலா அரைக்க தொழிலாளர்கள் தயாரானார்கள். மதுரா தூரத்திலிருந்து பார்த்தவள்,</p>
<p>"அண்ணா.. அண்ணா... கொஞ்சம் நில்லுங்க." என்று ஓடிவந்தாள். கையிலேயே மிளகாயை எடுத்துப் பார்த்தவள், "இதுல இன்னும் லேசா ஈரப்பதம் இருக்கு. இப்ப அரைச்சா தூள் நல்லா வராது. சீக்கிரமே பூஞ்சை பிடிச்சிடும். இன்னும் ஒரு நாள் நல்லா காய வச்சிட்டு அரைச்சா தான் கலரும் மணமும் சரியா இருக்கும்." என்றாள்.</p>
<p>தொழிலாளர்களும் பார்த்து,ஆமாம்மா... மன்னிச்சிடுங்க. அவசரப்பட்டுட்டோம்." என்று உடனே மூட்டைகளை மீண்டும் வெயிலுக்கு எடுத்துச் சென்றார்கள்.</p>
<p>அதை பார்த்த காவ்யா வியப்புடன், "அடடா... இதெல்லாம் எப்படி கண்டுபிடிக்கற மதுரா" என்று கேட்டாள். மதுரா மெதுவாக சிரித்தாள்.</p>
<p>"எல்லாம் அனுபவம் தான் காவ்யா" என்றாள். இந்த இடைப்பட்ட காலத்தில் மதுரா காவ்யா என்று இருவருமே பெயரிட்டு அழைக்கும் அளவிற்கு நட்பை வளர்த்திருந்தனர்.</p>
<p>"நான் தான் படிக்கலையே... இரண்டு மூணு வருஷம் வீட்டில்தான் இருந்தேன் காவ்யா. </p>
<p>'சமையலையாவது கத்துக்கோ'ன்னு அம்மா தினமும் புலம்பி, அடுப்படிக்குள்ள இறக்கிட்டாங்க." என்றதும் காவ்யா கதை கேட்டாள். </p>
<p>"அதுக்கப்புறம் முதல்ல மசாலா எல்லாம் தப்பாத்தான் அரைச்சேன். அம்மா ரொம்ப திட்டுவாங்க. அவங்க திட்டுறதுக்கு மேல நல்லா செய்யணும்னு பிடிவாதம் வந்துச்சு. ஒவ்வொரு மசாலாவும் எந்த பதத்துல அரைச்சா நல்லா இருக்கும்... எந்த வத்தலை எவ்வளவு காய வைக்கணும்... ஊறுகாய்க்கு உப்பு எவ்வளவு... எல்லாமே பார்த்து பார்த்து செய்ய செய்ய கத்துக்கிட்டேன். அதோட அவங்களை விட நான் தான் நல்லா சமைப்பேன்.." என்றவள் ஒரு நொடி அமைதியாக நின்றவள்,</p>
<p>"எங்க வீட்டுல வசதி பெருசா இல்ல காவ்யா. வீட்டுக்குப் பின்னாடி விளைஞ்ச மிளகாய், மல்லி, கறிவேப்பிலை, மாங்காய்... இப்படி விளைச்சல் கொஞ்சம் உண்டு. அதுதான் எங்களுக்கு சொத்து. அதனால ஒவ்வொரு பொருளையும் வீணாக்காம பயன்படுத்த பழகிட்டேன்." என்றாள்.</p>
<p>அவள் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்த காவ்யாவின் முகத்தில் மதுரா மீதான மரியாதை தோன்றியது.</p>
<p>"உண்மையா சொல்றேன் மதுரா... நீ புத்தகத்துல படிக்கலை. ஆனா லைஃப்பை படிச்சிருக்க. உன்னை பார்த்தா பொறாமையா இருக்குப்பா. இந்த சமையல் எனக்கு சுட்டு போட்டாலும் வராது. அகிக்கு எல்லாமே அத்தை தான் சமைக்கறாங்க. ஒருநாள் நானும் உன்னை மாதிரி சமைச்சி அசத்தணும்." என்றாள். </p>
<p>அந்த நேரம் வந்த இனியன்,</p>
<p>"இப்ப எங்க வீட்டுல அம்மாவை விட மதுரா சமையல்தான் எனக்கு ஃபேவரைட் ஆகிடுச்சு" என்று சொல்லிவிட்டு சாதாரணமாக நடந்து சென்றான்.</p>
<p>மதுராவின் கன்னங்கள் சிவந்தன. அதை பார்த்த காவ்யா உடனே சிரித்தாள்.</p>
<p>"ஏய்.. மதுரா.. உன் முகம் வெட்கத்துல சிவக்குது." என்று உன்னிப்பாக கவனித்தாள்.</p>
<p>"இ... இல்லையே." என்று மதுரா தடுமாறி வெட்கத்தை மறைத்திட முயன்றாள். </p>
<p>"பொய் சொல்லாத... நீ இனியன் மச்சானை லவ் பண்ண ஆரம்பிச்சிட்ட." என்றாள். </p>
<p>"அய்யோ... இல்ல..." என்று மறுத்தாள். </p>
<p>"அப்ப ஏன் அவர் புகழ்ந்ததும் இப்படி சிவந்துட்ட? உன்‌முகம் ரோஸ் பவுடர் போட்டது போல இருக்கு. இதுக்கு பேரு வெட்கம். அதுவும் காதலால் ஏற்படுற வெட்கம்" என்றதும் மதுரா பதில் சொல்ல முடியாமல் தலையைக் குனிந்தாள்.</p>
<p>காவ்யா அவள் தாடையைப் பிடித்து நிமிர்த்தினாள்.</p>
<p>"காதலிச்சா காதலிக்கறேன்னு சொல்லு. உன் ஹஸ்பண்ட்கிட்ட சொல்ல என்ன தயக்கம்?" என்றதும் மதுரா மெதுவாக சிரித்தாள்.</p>
<p>"எனக்கே... என்ன நடக்குதுன்னு புரியலை காவ்யா. </p>
<p>   அவர் இங்க வந்தப்ப, என்னை பொண்ணு பார்த்துட்டு போனப்ப எல்லாம், இவருக்கு என்‌மேல காதல் எல்லாம் வருமானு ஆச்சரியப்பட்டிருக்கேன். அதே போல இவரோட கல்யாணத்த அன்னிக்கு தாலி ஏறியதும், இவர் மேல நமக்கு காதல் வருமானு ஒரு காலத்துல நினைச்சிருக்கேன். ஆனா இப்ப அவர் மாறி மன்னிப்பு கேட்டு, பகையை மறைந்து, பாசமா  பழகி, உறவோட மதிப்பு தந்து, தூரிகாவுக்கு, நிலானிக்குனு முன்ன வந்து நின்னப்ப, அகிலன் மச்சனுக்காக உங்களுக்காக இந்த தொழிலை கூட விட்டுட்டு போறதா பேசினப்ப, கொஞ்சம் கொஞ்சமா மதிப்பு உருவாகிடுச்சு. </p>
<p>இதுல சுத்தி சுத்தி வந்து கட்டிப்பிடிச்சு... காதலிக்கறேன்னு சொன்னா.. அதுவும் தினம் தினம் எனக்குன்னு பார்த்து பார்த்து பேசி நல்லபடியா சொன்னா... மனசுக்கு கேட்க நல்லாயிருக்கு. கல்யாணமாகி ஒரு வருஷமாக போகுது காவ்யா. இனியும் தண்டிக்க முடியலை. மன்னிச்சு விட்டு ஒரு வாய்ப்பு தாயேன்னு தான் மனசு அவர் பக்கம் சாயுது." என்று கூறினாள்.   </p>
<p>"இதுல தப்பில்லையே மதுரா. இனியன் மச்சான் அப்படியொன்னும் கெட்டவர் இல்லை. நீ தாராளமா காதலிப்பதை சொல்லு. அதான் ஒரு வருஷமாகுதே.. பேசாம ஏதாவது அசத்து." என்றவாறு காவ்யா கண் சிமிட்ட,</p>
<p>மதுராவும் முதல் முறையாக மனம் விட்டு சிரித்தாள்.</p>
<p>அந்தச் சிரிப்பைப் பார்த்த இனியன், தூரத்தில் நின்றபடியே புன்னகைத்தான். அவளுடைய பேச்சு அவனுக்கு கேட்கவில்லை. ஆனால் அவளது சிர்ப்புக்குண்டான அந்த மாற்றம்... அவன் பல மாதங்களாக காத்திருந்த வெற்றி என்பதை அவன் மட்டும் உணர்ந்தான்.</p>
<p>மதுராவும் இனியன் தன்னிடம் காதலை எதிர்பார்த்து காத்திருப்பதால் ஏதாவது புதுவிதமாக காதலை தெரிவிக்க யோசித்தாள். </p>
<p>  அதனால் கல்யாணமான அந்த நாளை புதிதாக அவனுக்குள் மறக்க முடியாத அளவிற்கு மாற்றிட நினைத்தாள். </p>
<p>அதற்கான நாளுக்காக காத்திருந்தாள். </p>
<p>மறுபக்கம், கல்லூரி முடிந்து மாணவர்கள் பேருந்தில் ஏறிக் கொண்டிருந்தனர். வழக்கம்போல் எழிலரசன், நிலானி அமரும் இருக்கையின் அருகே வந்து அமர்ந்தான்.</p>
<p>நிலானியோ ஜன்னல் பக்கம் திரும்பி அமர்ந்து வெளியே வேடிக்கை பார்த்தாள். அவனருகே வந்து அமர்வது இப்பொழுது எல்லாம் வாடிக்கையாகிவிட்டது. </p>
<p>"ஏன்... ஜன்னல் வழியா எப்பவும் திரும்பிக்கற? யாரையாவது தேடுறியா?" என்று எழிலரசன் குறும்பாகக் கேட்டான்.</p>
<p>அவள் திரும்பியே பார்க்கவில்லை. மாறாக, "யாரை தேடணும். நீ தான் நிழல் போல கூடவேயிருக்கியே. அப்பறம் யார் நெருங்குவா. இல்ல... நான் யாரை தான் தேடுவேன்" என்றவள் உதட்டை சுழித்தாள்.</p>
<p>"பஸ் முழுக்க சீட் இருக்கே... எப்பவும் என் பக்கத்துலதான் உட்காரணுமா?" என்றாள்.</p>
<p>"ஆமா. உன்னை பார்த்துட்டே வரணும்னு தோணுது." என்று இடக்காக கூறிட,  அந்த ஒரு வார்த்தையில் நிலானியின் இதயம் ஒரு நொடி தடுக்கி நின்றது.</p>
<p>ஆனால் வெளியில் காட்டிக்கொள்ளாமல்,</p>
<p>'ரொம்ப பேசறான்' என்று மீண்டும் ஜன்னல் பக்கம் திரும்பிக் கொண்டாள்.</p>
<p>கல்லூரி வாசலில் இறங்கியதும் இதையெல்லாம் கவனித்த தூரிகா, எழிலரசனை அழைத்தாள்.</p>
<p>"டேய். எழில் என்ன நடக்குதுடா?' என்று கேட்டாள். </p>
<p>"என்னக்கா?" என்று பதறினான்.  இதுவரை தூரிகா முன் நிலானியிடம் எதுவும் பேசவில்லை. ஆனா அக்கா ஏதாவது கவனித்தாரா என்று பதறினான்.</p>
<p>"தினமும் அவ பின்னாடியே சுத்துற. அண்ணனுங்க எல்லாம் எங்களை பார்த்துக்க சொன்னார் தான். அதுக்காக அவளை நீ ஓவரா பாதுகாக்கற மாதிரி தெரியுது." என்று புருவம் உயர்த்தினாள். </p>
<p>"அக்கா... அப்படியெல்லாம் இல்லை" என்று நடித்தான்.‌</p>
<p>"உனக்கு அவளை பிடிச்சிருக்கா?" என்று தூரிகா கேட்க எழிலரசன் நழுவ முடியாமல் நின்றான்.</p>
<p>"தெரியலக்கா... ஆனா அவ பக்கத்துல இருந்தா நல்லா இருக்கு." என்றான். </p>
<p>தூரிகா அவன் தோளில் தட்டினாள். "பார்த்துடா... அந்த குடும்பம் காதலை மனசுல வச்சுக்கிட்டு வாயை திறக்காத குடும்பம். அவசரப்படாத. அவ மனசுல என்ன இருக்குன்னு புரிஞ்சிக்கிட்டு அப்புறம் பேசு. பிரபுவை எல்லாம் அவ பாஸிங் க்ளவுடா மறந்திருக்கலாம். ஆனாலும் உன்னை கட்டிக்க பயந்து தான் அந்த மேதாவி கிறுக்குத்தனம் பண்ணுச்சு.." என்று குறிப்பிட்டாள்.‌</p>
<p>"சரிக்கா. புரிது." என்றான்.‌</p>
<p>"முதல்ல படிப்பை முடி. அப்புறம் லவ்வு கிவ்வுனு இருந்தாலும் ஓடு.." என்று தலையில் கொட்டிவிட்டு சிரித்தபடி உள்ளே சென்றாள்.</p>
<p>எழிலரசனும் தூரத்தில் நடந்து சென்ற நிலானியை பார்த்தபடி,</p>
<p>"உண்மை தான்.. என்னை கட்டிக்க தவிர்த்து லூசுத்தனமா நடந்துயிருக்கா. இனியாவது என்‌மேல இருந்த பயத்தை களையணும்.." என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டான்.</p>
<p>-தொடரும். </p>
<p>-பிரவீணா தங்கராஜ்.</p>
<p>&nbsp;</p>]]></content:encoded>
						                            <category domain="https://onlinetamilnovels.com/community/%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0-%e0%ae%9c%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be-%e0%ae%ae%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a9%e0%af%87-praveena-thangaraj/">மதுர ஜில்லா... மச்சானே! -Praveena Thangaraj</category>                        <dc:creator>Praveena Thangaraj</dc:creator>
                        <guid isPermaLink="true">https://onlinetamilnovels.com/community/topicid/311/</guid>
                    </item>
				                    <item>
                        <title>மதுர ஜில்லா மச்சானே-65</title>
                        <link>https://onlinetamilnovels.com/community/topicid/310/</link>
                        <pubDate>Sat, 15 Aug 2026 01:49:53 +0000</pubDate>
                        <description><![CDATA[அத்தியாயம்-65
    முதல் நாளே மகா அக்ரோ பிரைவேட் லிமிடெட் வளாகம் பரபரப்பாக இருந்தது.
பெரிய லாரிகள் ஒன்றன்பின் ஒன்றாக உள்ளே நுழைந்தன. மஞ்சள் மூட்டைகள், மிளகாய், வற்றல், மல்லி, மிளகு, சீரகம்....]]></description>
                        <content:encoded><![CDATA[<p>அத்தியாயம்-65</p>
<p>    முதல் நாளே மகா அக்ரோ பிரைவேட் லிமிடெட் வளாகம் பரபரப்பாக இருந்தது.</p>
<p>பெரிய லாரிகள் ஒன்றன்பின் ஒன்றாக உள்ளே நுழைந்தன. மஞ்சள் மூட்டைகள், மிளகாய், வற்றல், மல்லி, மிளகு, சீரகம்., சோம்பு, உளுந்து, கடலைப்பருப்பு என்று மூட்டை மூட்டையாக பொருட்கள் இறங்கிக் கொண்டிருந்தன.</p>
<p>அவ்வளவு பெரிய அளவில் பொருட்கள் குவிந்து கிடப்பதை பார்த்த காவ்யாவோ, கண்களை பெரிதாக விரித்தபடி சுற்றிலும் பார்த்தாள்.</p>
<p>இவ்வளவு பெரிய பிசினஸா என்று அப்பொழுது தான் மலைத்தாள். இதை எப்படி சமாளிக்க போகின்றோமோ என்று தனக்குத்தானே முணுமுணுத்தவள், உடனே அகிலனுக்கு அழைத்தாள்.</p>
<p>இரண்டாவது ரிங்கில் எடுத்துவிட்டவனிடம், "அகி..." என்றாள். </p>
<p>"சொல்லு காவ்யா." என்றான். </p>
<p>"பெருசா பிசினஸ் ஆரம்பிச்சுட்டேன்ப்பா... ஆனா இவ்வளவு மூட்டை மூட்டையா பொருள் வந்திறங்கவும் பயமாயிருக்கு. நான் எல்லாத்தையும் சரியா பண்ணுவேனா? இனியன் வேற இன்னும் வரல. முதல் முறை அரைக்கறப்பவே உனக்கென்ன தெரியும்னு மனசாட்சி கிண்டலடிக்கு" என்று தன்னிலையை கூற அகிலன் சிரித்தான்.</p>
<p>"ஏய்... அதெல்லாம் போகப் போக பழகிடும். பயப்படாம செய். இனியன் வந்துட்டா அவன்கிட்ட கேளு." என்று தைரியம் தந்தான். </p>
<p>"அப்புறம்..." என்று இழுத்துவிட</p>
<p>"என்ன?" என்றாள் காவ்யா. </p>
<p>"இனியன்னு பேர் சொல்லி கூப்பிடாத. மச்சான்னு கூப்பிடு. யாராவது கேட்டா, 'தம்பி பொண்டாட்டி அண்ணனை பேர் சொல்லி கூப்பிடுறாளே'ன்னு பேசுவாங்க. அது நல்லாயிருக்காது. நான் உனக்கு பலமுறை சொல்லிட்டேன்." என்றதும்</p>
<p>காவ்யா சிணுங்கினாள்.</p>
<p>"மதுராவை நான் சின்ன வயசுல இருந்தே பேர் சொல்லிதான் கூப்பிடுவேன். அதுல இந்த ஊர்க்காரங்க யாரும் தப்பா நினைக்க மாட்டாங்க. ஆனா உனக்கு வேற வழியில்லை. ஒவ்வொருத்தரிடமும் நீ அவனோட ஜூனியர் சீனியர்னு சொல்லி புரிய வைக்க முடியாது‌." என்று அழுத்தமாய் உரைத்தான். </p>
<p>"ஓகே மச்சான்..." என்று வேண்டுமென்றே அழுத்திக் கூறினாள்.</p>
<p>"ஆ..ங் அப்படித்தான்." என்று சிரித்தான். </p>
<p>"அகி." என்று மீண்டும் இழுத்தாள்.</p>
<p>"இப்ப ஒரு லேடி வந்து, 'மேடம்... மிளகாய்த்தூளுக்கு என்ன அளவு? இட்லி பொடிக்கு என்ன ரேஷியோ?'ன்னு கேட்கிறாங்க. எனக்கு ஒன்றுமே தெரியல. போன் பேசிட்டு வர்றேன்னு அனுப்பிட்டேன்.   </p>
<p>  பாஸ்தா, லசானியா, கார்லிக் பிரெட் எல்லாம் சொல்லுவேன். இந்த மசாலா விஷயமே தெரியலப்பா." அவள் புலம்பிக் கொண்டிருக்கும்போதே அலுவலக அறைக்குள் நுழைந்த இனியன்,</p>
<p>"என்னாச்சு? எதுக்கு இவ்வளவு டென்ஷனா போன் பேசிட்டு இருக்க?" என்றான்.</p>
<p>காவ்யா திரும்பிப் பார்த்தாள்.</p>
<p>"டென்ஷனா? நான் பேசுறது அவ்வளவு சத்தமாவா வெளியே கேட்குது?" என்று பதட்டமாய் கேட்டாள்.</p>
<p>"பேச்சுல இல்ல... நான் வர்றப்பவே பார்த்தேன். உன் முகமே டென்ஷனா இருக்கு." என்றான் இனியன்.‌</p>
<p>அதை போனில் கேட்ட அகிலன், "இனியா வந்துட்டானா? போனை அவன்கிட்ட கொடு. நான் பேசுறேன்." என்றான் அகிலன் போனில்.</p>
<p>   இனியனிடம் "அகி பேசுறாரு..." என்று போனை நீட்டினாள். போனை வாங்கிய இனியன் சிரித்தான். 'அகிலன்... 'அகி'யாம்.' என்று வியந்தபடி வாங்கினான். </p>
<p>"சொல்லு அகிலா." என்று இனியன் பேச, அகிலனோ "இனியா... உன் பிரெண்டுக்கு எந்த மசாலாவுக்கு என்ன பொருள் தேவை, எந்தளவு தேவைனு தெரியலையாம்.</p>
<p>பிசினஸ் பீப்பிள்கிட்ட பேச தெரியும். பாஸ்தா, லசானியா, மெக்ஸிகன் ரைஸ் எல்லாம் செய்வா. ஆனா நம்ம ஊர் மசாலா பக்கம் போனதே இல்லை. அதுலயும் இப்ப மூட்டை மூட்டையா பொருட்கள் வந்திறங்கவும் ஏதாவது சொதப்பிடுவேனோனு பயப்படறா." என்றதும் இனியன் சிரித்தான்.</p>
<p>"புரியுது... இவளிடம் பிசினஸ் பேசறப்பவே மீடியாரேட்டர், பையரிடம் தான் இவளை பேச வைக்கணும், இந்த மசாலா அளவு பதம் எல்லாமா எந்தவிகிதம் சேர்க்கறதுனு  அம்மாவிடமோ மதுராவிடமோ கேட்டுக் கால்குலேட் பண்ணிக்கறேன்." என்றான்.‌</p>
<p>"தேங்க்ஸ் டா." என்று அகிலன் கூற சில நொடிகள் அமைதி.</p>
<p>"வேற ஏதாவது பேசணும்னு காவ்யாகிட்ட கேட்டு சொல்லு." என்று அகிலன் போனை வைக்கும் முன் மனைவியிடம் அபிப்பிராயம் கேட்க இனியன் புன்னகையுடன் காவ்யாவைப் பார்த்தான்.</p>
<p>"காவ்யா... உன் அகி, 'வேற ஏதாவது பேசணுமாம்'ன்னு கேக்கறான்." என்றதும் அகிலனோ 'அகினு' கொஞ்சி பேசறதை இனியன் கவனிச்சிருக்கான். அய்யோ என்று அகிலன் வெட்கத்துடன் நினைக்க, காவ்யாவுமே இனியன் அகி என்றதை நோட் செய்து கேலி செய்வதை அறிந்து, "வேற... வேற ஒன்னுமில்லை மச்சான். மச்சான்னு சொல்லிட்டதா சொல்லிடுங்க." என்றாள்.</p>
<p>போன் வைத்ததும், இனியன் கைகளை கட்டிக்கொண்டு அவளைப் பார்த்தான்.</p>
<p>"என்ன பார்க்கறீங்க மச்சான்" என்றாள் காவ்யா.</p>
<p>"ஒன்னுமில்லை. என்னை மச்சான்னு கூப்பிடுனு குச்சி வச்சி விரட்டறானா.. உன்னோட அகி." என்று கேட்க, "நீ..ங்க பெரியவராம். அவரை விட மாசத்துல பெரியவர், நானே இனியன் என்று சொல்லியிருக்கேன். யாரிடமாவது சொல்லறப்ப அவன் இவன்னு பேசியிருக்கேன். ஆனா 'டா' போட்டு பேசியதில்லை. அதனால என்னை உங்களை கூப்பிடறப்ப 'டா' போடக்கூடாதுனா சொல்லிட்டார். அதோட இங்க வந்து பிசினஸ் பண்ணினறதா சொல்லவும், ஊர்க்காரங்க யாராவது இனியன்னு நீ கூப்பிட்டு அதை கேட்க நேர்ந்தா என்னயிது தம்பி பொண்டாட்டி அண்ணனை பெயர் சொல்லுதுனு ஒரு மாதிரி பேசுவாங்களாம். அதனால பெயர் சொல்லியும் கூப்பிடாதனு டியூஷன் எடுக்காத குறை. </p>
<p>   ரியலி... இந்த அகிலன் பாசக்காரன். தேங்க்ஸ் மச்சான்.. இந்த அகியை எனக்கு கண்ணுல காட்டியதுக்கு." என்று உணர்ச்சிபூர்வமாய் உரைத்தாள். </p>
<p>இனியன் புன்னகையோடு தனது மொபைலை எடுத்து மதுராவுக்கு அழைத்தான்.</p>
<p>"மதுரா..." என்று கூப்பிட,</p>
<p>"ஆங்... சொல்லுங்க." என்றாள். </p>
<p>"கொஞ்சம் ரெடியா இரு. ஒரு உதவி வேணும்.அங்க தான் வர்றேன்." என்றான்.</p>
<p>"எ... என்ன உதவி?" என்றாள் மதுரவாணி.</p>
<p>"ரெடியா இரு. வந்து சொல்றேன்." என்றவன் சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்தான்.</p>
<p>வீட்டிலோ மதுரா போனைப் பார்த்தபடியே நின்றாள்.</p>
<p>"இப்பத்தான் 'உன்னை விட்டுப் போகவே மனசில்லை'ன்னு சொல்லி சமையல் செய்ய விடாம பின்னாடியே நின்னாரு. அத்தை வந்ததும் சிரிச்சுட்டு பின்னந்தலையை கோதிட்டு போனாரு. இப்ப திரும்ப ரெடியா இருக்க சொல்றாரு... இவர் மனசுல என்னதான் இருக்கு?" என்று முணுமுணுத்தாள்.</p>
<p>அவள் திரும்பியவுடன் கதவோரத்தில் சாய்ந்து நின்றிருந்த இனியனைப் பார்த்து திடுக்கிட்டாள்.</p>
<p>"எப்ப வந்தீங்க?" என்றாள். </p>
<p>"இப்பத்தான் போலாமா?" என்று கூப்பிட, "எ... எங்க? நான் சமைக்கணும்."என்றாள். </p>
<p>"அய்யோ... சமையலை அம்மா பார்த்துக்குவாங்க. என் கூட வா." என்று அவசரப்படுத்தினான்.</p>
<p>"நான் இன்னும் தலை கூட வாரல... சேலை மாத்தணும்" இனியன் அவளை ரசித்தான்.</p>
<p>"தலை வாரலையா? இரண்டு காதோரமா கொஞ்சம் முடி எடுத்து பின்னி, மிச்சத்தை ஃப்ரீ ஹேரா விட்டிருக்க. ரொம்ப அழகா இருக்கு." என்று நெற்றியில் விழுந்திருந்த ஒரு முடிக்கற்றையை மெதுவாக காதோரம் ஒதுக்கி வைத்தான்.</p>
<p>மதுராவின் இதயம் தடுமாறியது.</p>
<p>"சேலை." என்று அவளது இடுப்பில் சொருகியிருந்த முந்தானையை சற்று நேர்த்தியாக இழுத்துவிட்டான்.</p>
<p>"எந்த சேலையிலும் நீ அம்சமா இருக்க" என்றான்.</p>
<p>"என்ன பண்ணறீங்க? இது கிச்சன். அத்தை... மாமா... உங்க தம்பி யாராவது வந்துடுவாங்க." என்று எட்டி நிறுத்த பார்த்தாள்.</p>
<p>"என் தம்பி காலேஜ் போயிட்டான். அம்மா, அப்பா நம்மளை இப்படி பார்த்தா சந்தோஷப்படுவாங்க. அவங்க கோவில்ல நமக்காக தொட்டில் கட்டினாங்க." என்றான்.</p>
<p>அவள் அவன் சட்டையைப் பிடித்து சற்று தள்ளினாள். </p>
<p>"அது... அவங்க கட்டின தொட்டில்..." அந்த ஒரு வார்த்தையில் இனியனின் முகத்தில் ஒரு நொடி வலி தோன்றியது.</p>
<p>அதை மறைத்தவன் மெதுவாக,</p>
<p>"என்னோட கம்பெனிக்கு வா. காவ்யாவுக்கு குழப்பம். எந்த மசாலாவுக்கு என்ன சேர்க்கணும்னு தெரியல." என்றான்.</p>
<p>"அத்தையை கூட்டிட்டு போங்க." என்று மறுத்தாள்.</p>
<p>"மது..உஉஉஉ." அவன் மெதுவாக அவள் கையைப் பிடித்தான்.</p>
<p>"என் தொழில்ல முதல் முறையா செய்யப் போற வேலை இது. அம்மாவை விட நீ முக்கியம்."</p>
<p>மதுரா அவனைப் பார்த்தாள்.</p>
<p>"'மகா' அக்ரோ... அந்த பேர்ல இருக்குற முதல் எழுத்து யாரோடது தெரியும் தானே?"</p>
<p>அவள் கண்கள் விரிந்தன. மதுராவாணியில் 'ம' என்றல்லவா கூறியிருந்தான்.</p>
<p>அவளை யோசிக்க விடாமல் கையைப் பிடித்தபடி வெளியே அழைத்துச் சென்றான்.</p>
<p>பைக்கில்... மதுரா ஒருபக்கம் கால்போட்டு அமர்ந்திருந்தாள்.</p>
<p>இனியன் அவளது வலது கையை எடுத்து தன் தோளில் வைத்தான்.</p>
<p>"இப்படி பிடிச்சுக்கோ." என்று வைத்தான்.‌ ''போற வழியில எல்லாரும் பார்ப்பாங்க." என்று கையை எடுத்தாள். </p>
<p>"என் பொண்டாட்டிதான் என் தோள்ல கை வைக்கறா. வேற யாருமில்லையே." அவள் வெட்கத்துடன் கையை எடுக்க முயன்றாள்.</p>
<p>இனியன் வேண்டுமென்றே வலது கையை ஹேண்டிலில் இருந்து எடுத்தான்.</p>
<p>"அச்சோ... வண்டியை கையை விட்டு ஓட்டாதீங்க!"</p>
<p>"அப்ப நீ உன் இடது கையில் என் இடுப்பை பிடிச்சுக்கோ. வலது கை தோளில் வை" என்றான்‌.</p>
<p>"நான் வைக்க மாட்டேன்" என்று மதுரா மறுக்க "அப்படின்னா இப்படியே வருவேன்." என்றான்.‌ கையை விட்டு பைக்கில் ஓட்ட, எதிரே அரசு பேருந்து ஒன்று வந்தது. "இனியன் மச்சான்... ப்ளீஸ்... வண்டியை பிடிங்க." பயத்தில் கண்களை மூடிக்கொண்டாள் மதுரவாணி.</p>
<p>  சில நொடிகள் கழித்து கண்களைத் திறந்தபோது, இனியன் இரண்டு கைகளாலும் நன்றாக ஹேண்டிலைப் பிடித்தே ஓட்டிக் கொண்டிருந்தான். மதுரா அவனை முறைத்தாள். இனியன் குறும்பாகச் சிரித்தான்.</p>
<p>மதுரா மெதுவாக அவன் இடுப்பைச் சுற்றி கையை போட்டுக் கொண்டாள்.</p>
<p>அதற்காகத்தான் அவன் செய்த நாடகம் என்பதை புரிந்து கொண்டாலும்... அந்த அணைப்பை விலக்க மனம் வரவில்லை. நேற்றிரவு அவன் அணைப்பில் தன்னை அறியாமலே அமைதி கண்டவளால், இன்று பகலில் மட்டும் அவனை விலக்கி நிற்க முடியவில்லை. அவள் மனம் மெதுவாக அவனை ஏற்றுக்கொள்ள ஆரம்பித்திருந்தது.</p>
<p>   அதை உணர்ந்த இனியனின் உதட்டோரத்தில் திருப்தியான புன்னகை மலர்ந்தது.</p>
<p>மகா அக்ரோ பிரைவேட் லிமிடெட். உள்ளே நுழைந்தவுடன் காவ்யா ஓடிவந்தாள்.. </p>
<p>"காவ்யா... மதுராகிட்ட எல்லா அளவையும் கேட்டுக்கோ. அதை நம்ம புரொடக்ஷனுக்கு ஏத்த மாதிரி நீ கால்குலேட் பண்ணிக்கோ... ஏய் கால்குலேட் பண்ணிப்பியா.. இல்லை அகிலனுக்கு கால் பண்ணி கேட்பியா?" என்றான் கிண்டல் தோணியில். </p>
<p>"மச்சான்.. அதெல்லாம் கெட்டிக்காரி நான். உங்க வேலையை பாருங்க." என்று அதட்டிவிட்டாள்.‌</p>
<p>   "மதுரா... நீ வீட்டுல அரைக்கற மசாலா, ஊறுகாய், வத்தல், வடகம் எல்லாமே சூப்பர்னு எனக்கு தெரியும். உன் பக்குவம் இங்க நமக்கு ரொம்ப யூஸாகும். காவ்யாவிடம் நீ அளவெல்லாம் சொல்லு."என்று சொல்லிவிட்டு கணக்கு பார்க்கும் இடத்துக்கு சென்றான்.</p>
<p>காவ்யாவும் நோட்டுப் புத்தகத்தை எடுத்தாள்.</p>
<p>"மதுரா... பத்து பேருக்கு சாம்பார் பொடி எப்படி? ரசம் பொடி எப்படி? மிளகாய்த்தூள்? இட்லி பொடி? ஒவ்வொன்னும் சொல்லு. நான் அதுக்கு ஏத்த மாதிரி நாங்க எத்தனை பேக்கேட் செய்யணுமோ, அந்த அளவுக்கு கால்குலேட் பண்ணிக்கறேன்" என்று காவ்யா கூற, மதுரா அமைதியாக ஒவ்வொரு பொருளின் அளவையும் சொல்ல ஆரம்பித்தாள்.</p>
<p>அளவெல்லாம் மதுரா கூற கூற காவ்யா தனி தனியாக குறிப்பெடுத்துக் கொண்டாள். இதில் மதுராவோ "இது நைசா அரைக்கணும்... இது கொரகொரப்பா இருந்தாதான் டேஸ்ட். இந்த மிளகாய்க்கு இந்த அளவு தனியா. வெந்தயம் அதிகமா போடக்கூடாது. கசக்கும்." என்று கூற காவ்யா அனைத்தையும் கவனமாக எழுதிக் கொண்டாள்.</p>
<p>சிறிது நேரத்தில், "சூப்பர் மதுரா... இப்போ இதை நான் கிலோ கணக்குல கன்வர்ட் பண்ணிக்கறேன்."என்றாள். அனைத்தையும் சொல்லிவிட்டு மதுரா இயல்பாக இனியனைத் தேடினாள்.</p>
<p>இப்போதுதான் அவள் கவனித்தாள்.. அவன் தன்னை இங்கே கொண்டு வந்துவிட்டு, ஒரு வார்த்தையும் சொல்லாமல் தூரத்தில் நின்று வேலை பார்த்துக் கொண்டிருந்தான்.</p>
<p>ஆனால் அவன் பார்வை மட்டும் அவ்வப்போது அவளைத் தேடி வந்து கொண்டேயிருந்தது.</p>
<p>அந்த பார்வையை உணர்ந்த மதுராவின் உதடுகளில், அறியாமலேயே ஒரு மென்மையான புன்னகை மலர்ந்தது.</p>
<p>-தொடரும்.</p>
<p>-பிரவீணா தங்கராஜ்.</p>
<p>&nbsp;</p>]]></content:encoded>
						                            <category domain="https://onlinetamilnovels.com/community/%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0-%e0%ae%9c%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be-%e0%ae%ae%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a9%e0%af%87-praveena-thangaraj/">மதுர ஜில்லா... மச்சானே! -Praveena Thangaraj</category>                        <dc:creator>Praveena Thangaraj</dc:creator>
                        <guid isPermaLink="true">https://onlinetamilnovels.com/community/topicid/310/</guid>
                    </item>
				                    <item>
                        <title>மதுர ஜில்லா... மச்சானே!-64</title>
                        <link>https://onlinetamilnovels.com/community/topicid/308/</link>
                        <pubDate>Fri, 14 Aug 2026 03:38:43 +0000</pubDate>
                        <description><![CDATA[அத்தியாயம்-64
அதிகாலை நல்ல நேரத்தில் &#039;மகா அக்ரோ பிரைவேட் லிமிடெட்&#039; என்ற பெயர் பலகை புதிய கட்டிடத்தின் முன்பு மின்னிக் கொண்டிருந்தது.
வாசலில் மாவிலைத் தோரணங்கள் கட்டப்பட்டிருந்தன. வண்ணக் கோ...]]></description>
                        <content:encoded><![CDATA[<p>அத்தியாயம்-64</p>
<p>அதிகாலை நல்ல நேரத்தில் 'மகா அக்ரோ பிரைவேட் லிமிடெட்' என்ற பெயர் பலகை புதிய கட்டிடத்தின் முன்பு மின்னிக் கொண்டிருந்தது.</p>
<p>வாசலில் மாவிலைத் தோரணங்கள் கட்டப்பட்டிருந்தன. வண்ணக் கோலங்கள், வாழைமரங்கள், மலர்த் தோரணங்கள் என தொழிற்சாலை முழுவதும் விழாக்கோலம் பூண்டிருந்தது.</p>
<p>அகிலன் குடும்பம், இனியன் குடும்பம், மதுராவின் பெற்றோர், உறவினர்கள் என அனைவரும் ஒன்றாகக் கூடியிருந்தனர்.</p>
<p>பூஜைக்கான ஏற்பாடுகளை ஐயர் செய்து கொண்டிருக்க, மீனாட்சி சுற்றிப் பார்த்தார்.</p>
<p>"காவ்யாம்மா... வா. விளக்கு ஏத்தி பூஜையை ஆரம்பிச்சு வை." என்றதற்கு காவ்யா உடனே இரண்டு கைகளையும் தூக்கினாள்.</p>
<p>   "அய்யோ அத்தை... சாமி விஷயம்னா எனக்கு ஒண்ணும் தெரியாது. நான் ஏதாவது ஏடாகூடமா பண்ணிடுவேன்." அவளது பதிலில் எல்லோரும் சிரித்தனர்.</p>
<p>மீனாட்சி சிரித்தபடி, "அப்போ மதுரா... நீ செய்யும்மா."என்று அழைத்தார்.</p>
<p>மதுரா பதறி, "நா... நானா? இல்ல அத்தை... பெரியவங்க நீங்க அத்தை இருக்கிங்க நீங்களே செய்யுங்க." என்று பின் வாங்கினாள்.</p>
<p>   வேல்விழி அருகே வந்து அவள் தோளைத் தட்டினார்.</p>
<p>"உன் புருஷனும்... உன் மச்சானும் சேர்ந்து தொழில் ஆரம்பிக்கிறாங்க. வீட்டோட மூத்த மருமக நீதான். நீதான் முன்னாடி நின்னு செய்யணும்." என்று மெதுவாக முன்னே தள்ளினார். வேறு வழியில்லாமல் மதுரா விளக்கேற்றி, கற்பூர ஆரத்தி காட்டி, பூஜையை நிறைவு செய்தாள். ஐயர் தீபாராதனையை அவள் கையில் கொடுக்க, ஒவ்வொருவரிடமும் எடுத்துச் சென்றாள்.</p>
<p>முதலில் இனியன் முன் நின்றாள். அவன் புன்னகையுடன் தீயின் வெப்பத்தை ஒற்றிக்கொண்டு கண்களில் ஒத்திக்கொண்டு கும்பிட்டான்.</p>
<p>   அடுத்ததாக வேல்விழி, அருளாளன், மீனாட்சி, அதியமான் என அனைவரும் பக்தியுடன் கும்பிட்டனர். அவரவர் இந்த வியாபாரத்தை ஓரளவு அறிந்து, வியாபாரம் பெருக வேண்டினர்.</p>
<p>மதுரா அகிலன் முன் வந்தபோது தீபத்தின் வெப்பத்தைத் தொட்டு கும்பிட்டவன், மதுராவைப் பார்க்காமல் சட்டென்று காவ்யாவை நோக்கித் திரும்பிவிட்டான்.</p>
<p>அதை கவனித்த மதுரா அமைதியாக அடுத்தவரிடம் நகர்ந்தாள். தன்னை போலவே மச்சானும் தயங்கி பழகுவதை புரிந்தாள். </p>
<p>பூஜை முடிந்ததும் அனைவரும் தொழிற்சாலைக்குள் சென்றனர்.</p>
<p>ஒவ்வொரு இயந்திரத்தையும் காட்டியபடி இனியன் விளக்கிக் கொண்டே வந்தான்.</p>
<p>"இந்த கிரேடிங் மெஷின் மட்டும் பன்னிரண்டு லட்சம். இது கிளீனிங் லைன். அந்த பேக்கிங் யூனிட் முழுக்க ஆட்டோமேட்டிக்''. என்று விளக்க காவ்யாவும் ஆர்வமாக அனைத்தையும் பார்த்தாள்.</p>
<p>"கிளையன்ட்ஸ்கிட்ட பேசிட்டியா?" என்று இனியன் காவ்யாவிடம் கேட்டான். "ம்ம்ம்... எல்லாரும் நம்ம முதல் ஷிப்மென்ட்டுக்காக வெயிட் பண்ணிட்டு இருக்காங்க." என்றாள் அவளும்‌.</p>
<p>அகிலனிடம் உடனே "ஏற்றுமதிக்கான அப்ரூவல், ஃபுட் டிபார்ட்மெண்ட் சர்டிபிகேட்... எல்லாம் வந்துடுச்சுல?" என்று கேட்க, "பக்காவா வந்துடுச்சு. இனிமே வேலை ஆரம்பிச்சுடு." என்று அகிலன் திருப்தியாகச் சொன்னான்.</p>
<p>அந்த நேரம் அருகில் நின்றிருந்த இளையமதி, மதுராவை தனியாக அழைத்து சென்று மெதுவாகக் கேட்டார்.</p>
<p>"ஏன்டி... அவளோடதான் தொழில் ஆரம்பிக்கணுமா? இனியன் பிரெண்ட்னா எப்படி  அகிலனை கட்டிக்கிட்டா எனக்கு புரியலை. </p>
<p>  இதுல அவளும் உன்‌ புருஷனும் இப்போ ரெண்டு பேரும் சேர்ந்து பிசினஸ் வேற." மதுரா அமைதியாக அன்னையை பார்த்தாள்.</p>
<p>"அவங்க என் வீட்டுக்காரரோட சிநேகிதி அம்மா. இங்க வந்த பிறகு அகிலன் மச்சானை விரும்பி கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. இப்ப நண்பர்களா சேர்ந்து தொழில் ஆரம்பிக்கிறாங்க. அதுல என்ன இருக்கு?" என்ற போதும் இளையமதி இன்னும் முணுமுணுத்தாள்.</p>
<p>"முன்னாடி ஆகாதவங்க... இப்போ எப்படி இந்தளவு நெருக்கமா இருக்க முடியும்னு கேட்கறேன்." என்று சந்தேகத்துடன் கேட்டார்.‌ மதுராவோ "ஏன்ம்மா... பெரியமாமா சின்ன மாமா நல்லபடியா பேசி சிரிச்சா உனக்கு பிடிக்கலையா? இரண்டும் உன் அண்ணன்கள் தானே. சொந்தம் ஒன்னு சேர்ந்ததுனு சந்தோஷப்படு. பிள்ளைய வாழ விடாம ஆத்தாக்காரியே கெடுத்தானு பெயர் வாங்காத" என்று படபட பட்டாசு போல பேசி முன்னே சென்றாள். </p>
<p>  கல்யாண சுந்தரமும் மகள் ஏதோ முகமலர்ந்து நடமாடுவதில் நிம்மதி கொண்டார். அதிலும், நிலானி விஷயத்தில் இனியன்‌-அகிலன் என்று இருவரும் வந்து நின்றதும், எதுவானாலும் மாப்பிள்ளைகள் தேவை என்ற ரீதியில் புரிந்துக் கொண்டார். அதனால் அடக்கியே வாசித்தார். </p>
<p>   நிலானியிடம் இளையமதியோ "என்னடி இவ உங்கக்கா இப்படி பேசிட்டு போறா" என்று அங்கலாய்க்க, நிலானியோ "அகிலன் மச்சானுக்கு நல்ல அக்கா கிடைச்சிருக்குன்னு சந்தோஷப்படு. தேவையில்லாம ஏழரை இழுக்காத. காவ்யா அக்கா இனியன்‌ மச்சான் பிரெண்ட்ஸ்னு சொன்னாங்களே அந்த விளக்கம் போதாதா?" என்று அதட்டினாள்.</p>
<p>"ம்கூம்..." என்று இளையமதி முகம் சுளித்துக் கொண்டார்.</p>
<p>பூஜை முடிந்ததும் மதுரா வீட்டில் செய்து கொண்டு வந்த கேசரியை வாழை இலையில் வைத்து அனைவருக்கும் வழங்கினாள்.</p>
<p>வேல்விழி பார்த்துக்கொண்டே அனைவருக்கும் தந்து முடித்தவள் அகிலனுக்கு வழங்க தயங்கினாள். </p>
<p>   "மதுரா.. இது யாருக்கும்மா? இலையில வச்சிட்டு கொடுக்காம இருக்கு"</p>
<p>என்று கேட்டார். அப்போது எழிலரசனுடன் நின்றிருந்த அகிலனைச் சுட்டிக் காட்டி,</p>
<p>"அகிலன் மச்சானுக்கும்... எழிலரசனுக்கும் அத்தை... அத்தை.. நீங்க கொடுங்க." என்றாள்.</p>
<p>"ஏன்மா தயக்கம்... மச்சான்னு சொல்லிக் கொடும்மா." என்று வேல்விழி சொல்ல, மதுரா உடனே திரும்பி திரும்பி பார்த்து கேசரியை அகிலனிடம் நீட்டினாள்.</p>
<p>"அகிலன் மச்சான்..." என்றதும் அவன் திரும்ப கேசரியை நீட்டியபடி தலைகுனிந்தவளை கண்டு புரிந்தபடி வாங்கிக்கொண்டான்.</p>
<p>ஒரு நொடி தயங்கியவன், ம..மதுரா.. உ..உனக்கு... காவ்யாவும் இனியனும் சேர்ந்து தொழில் ஆரம்பிக்கிறதுல எந்தத் தயக்கமும் இல்லையே?" என்று மெதுவாகக் கேட்டான்.</p>
<p>மதுரா அவனை ஒரு நொடி நேராகப் பார்த்தாள். பிறகு சிறிய புன்னகையுடன்,</p>
<p>"இல்ல மச்சான்" என்று மட்டும் தலையசைத்துவிட்டு அடுத்தவர்களுக்கு கேசரி கொடுக்கச் சென்றாள்.</p>
<p>அந்த ஒரு பதிலே அகிலனின் மனதிற்கு ஒரு நிம்மதியைத் தந்தது. அவன் முகத்திலும் மெதுவாக ஒரு புன்னகை மலர்ந்தது.</p>
<p>  இல்லையா பின்னே... நீண்ட நாட்களுக்கு பிறகு மதுராவிடம் நேரிடையாக பேசியிருக்கின்றான். அதுவும் இயல்பாக பேச முனைந்து. இது கூட வீட்டில் மதுராவிடம் கேட்க வேண்டும் என்று‌ உள்ளுக்குள் உறுத்தியதால் கேட்டான். </p>
<p>  அதன்பின் காவ்யாவிடம் வந்தவன், கேசரியை விழுங்க, "உங்க அத்தை பொண்ணிடம் கேட்டாச்சா..? இனியனோட நான் வொர்க் பண்ணப்போறதுல அவங்களுக்கு தயக்கமில்லையே. எல்லாம் ஓகே தானே" என்றதும் அகிலன் புன்னகையுடன் தலையாட்டினான். </p>
<p>  "சோ ஸ்வீட் பாய். கையை கன்னத்தில் தீண்ட சென்றவளிடம், "காவ்யா.. நம்ம ரூம் இல்லை. டிஸ்டன்ஸ் மெயிண்டெயின் பண்ணறியா. பெரிப்பா பெரிம்மா நம்மளையே பார்க்கறாங்க." என்றான். </p>
<p>  "ம்கூம்.. உங்க பெரிப்பா பெரிம்மா மட்டுமா? உங்க அத்தையும் மாமாவும் தான். " என்று கிசுகிசுக்க, "தெரியுதுல்ல தள்ளி போடி" என்றான். </p>
<p>"பார்டா... அகில் மச்சான் 'டி' போட்டு எல்லாம் விரட்டுறதை.‌ ம்ம்ம்.‌ இந்த ஜல்லிக்கட்டு காளை ரூம்ல அடங்கி தானே போகும். அப்ப கவனிச்சிக்கறேன்" என்று மலர்ந்தபடி பேசி செல்லவும் அகிலன் போனை எடுத்து மாமனார் ராஜாராமுக்கு வீடியோ  காலில் அழைத்தான். </p>
<p>  எப்படியும் தொழற்சாலையை வளைத்து வளைத்து காட்டி எல்லாம் நல்லபடியாக முடிந்ததை தெரிவித்தான். </p>
<p>அவருமே வாழ்த்தி முடித்து, முதல் ப்ராஜெக்ட் இங்கு வந்து சேர்ந்து அதை வினியோகம் நடந்ததை கண் குளிர பார்த்துவிட்டு தான் இந்தியா வருவதாக தெரிவித்தார். </p>
<p>  விரைவில் அதற்கான பணி தான் நடைப்பெறும் என்று அகிலன் கூறி அணைத்தான். </p>
<p>   இனியனோ கேசரி கொடுக்க வந்த மதுராவை பிடித்து நிறுத்தி, "மதுரா இடமெல்லாம் எப்படியிருக்கு?" என்று கேட்க, "நான் படிச்சவ கிடையாது. ஏதேதோ மெஷின் லட்சகணக்கில வாங்கி வச்சியிருக்கிங்கனு மட்டும் தெரியுது. நீங்களும் அவங்களும் தொழில்ல நல்லபடியா முன்னேறி நல்லா சம்பாதிக்கணும்." என்றாள். கேசரியை சுவைத்துவிட்டு இலையை ஓரமாய் வைத்தவன், அங்கிருந்த அறையில் குழாயிருக்க கை கழுவி, மதுராவின் சேலை முந்தானையில் ஈரக்கையையும் வாயையும் துடைத்தான். </p>
<p>  அவனிடம் கைக்குட்டை இருந்தும் அவளது சேலை முந்தானையை தான் உபயோகித்தவன் மெதுவாக அவளது வெற்றிடையில் கையை நுழைத்து கட்டிக் கொண்டான்.‌</p>
<p>  "என்னடி வசிய பொடி வச்சியிருக்க? சேலையும்... நீண்ட ஜடையும்.. பூவும்... பொட்டும், ம்ம்ம் காலையில இருந்து இங்கயும் அங்கயும் என் கண் முன்ன அழகா சுத்திட்டு இருக்க. உன்னை தவிர கண்ணு எங்கயும் போக மாட்டேங்குது. </p>
<p>   அதுவும் கையில தீபாராதனை தட்டு வச்சிட்டு முன்ன நின்ன பாரு... அப்படியே தெய்வீக அழகு. இந்த கோவில்ல எல்லாம் ஹீரோயின் விளக்கேத்திட்டு நடந்து வர்ற மாதிரி நடமாடின. அப்படியே அள்ளிக்கணும்னு இருக்கு." என்று கழுத்தில் முத்தமிட முயன்றான்.</p>
<p>  இனியனின் வழுவழுப்பான தாடை அவள் மேனியில் படவும் நெளிந்தவள், "எல்லாரும் இங்க தான் பக்கத்துல இருக்காங்க. நீங்க பாட்டு தனியா அழைச்சிட்டு வந்து இப்படி பேசாதிங்க. தயவு செய்து கையை எடுங்களேன். </p>
<p>   எழிலரசனும் நிலானியும் சின்ன பிள்ளைங்க. ஏதாவது பார்த்து ஏடாகூடமா நினைக்க போறாங்க. கட்டி பிடிக்காம தள்ளி நில்லுங்களேன்" என்று வேண்டாத குறையாக கூறினாள். </p>
<p>   "சரி... இப்ப விடறேன். நைட்... உன்னை இப்படி கட்டிக்கலாமா?" என்று அனுமதி வேண்டி நின்றான்.‌</p>
<p>"இதென்ன புதுசா அனுமதி கேட்கறிங்க" என்றாள்.</p>
<p>  "இடுப்பை கட்டிக்கிட்டு மடில முகத்தை வச்சி தூங்க கேட்கலை. உன்னை முத்தம் வச்சி தூங்கவிடாம செய்ய.. 'அதுக்கு' அனுமதி கேட்கறேனாக்கும். எத்தனை நாள் கோபமா இருப்ப. மன்னிக்க தோணலையா?'' என்றான்.</p>
<p>"அதெல்லாம் மன்னிச்சாச்சு. விடுங்க ப்ளிஸ்" என்றாள். </p>
<p>  "நிஜமா... மன்னிச்சிட்டியா" என்று கேட்க "ஆங்" என்றதும் அவளை நெஞ்சில் அணைத்துக் கொண்டான்.‌ லேசாக கண்ணீர் துளிர்க்க, அகிலன் காவ்யா வரும் அரவம் கேட்டது. </p>
<p>சொல்லப் போனால் இனியன் மதுரா நெருங்கி நிற்பதை கண்டு அகிலன், "வா போகலாம்" என்று காவ்யாவை இழுக்க, இனியனோ "ஆங்..அகிலா.. இங்க வாட்டர் பெசிலிட்டி லிமிட்டா தான் இருக்குமா?'' என்று கண்ணை துடைத்து கேட்டான்.‌</p>
<p>  "இப்ப மோட்டார் கனெக்ட் பண்ணியது அரசாங்கத்துடையது. நாம இங்க போர் இறக்கிடலாம். தண்ணி பிரச்சனை வராது." என்று கூறினான். </p>
<p>   இனியன் மதுரா கையை விடாமல் பற்றியதில் அவளோ செல்ல துடித்தாள். </p>
<p>"மன்னிச்சிட்டனு சொல்லிட்டு ஓடறதுலயே இருக்க, கூடவேயிருடி. இது என்னோட கனவு. கனவு நிறைவேறும் போது நீ என் கையை பிடிச்சிரு" என்றான். </p>
<p>மதுரா தயங்கியபடி காவ்யாவை கண்டு நெளிய, காவ்யாவோ "கையை பிடிச்சிக்கிட்டு இருங்க. ஏன் பயப்படறிங்க யாரும் எதுவும் தப்பா பேசமாட்டாங்க.  உங்கத்தை தானே பேபி கேட்டாங்க.. இல்லை நிஜமாவே அவங்களுக்கா?" என்று காவ்யா கேட்க, "அய்யோ காவ்யா.. அத்தை அது எங்களுக்கு புள்ளய பிறக்க கட்டியது. உங்களால அவங்க தான் பயந்து போறாங்க. செத்த இப்படி பேசாதிங்க. பாவம் அவங்க"  என்று மதுரா சிரிக்க, அங்கே நால்வருமே புன்னகை அரும்ப நின்றனர். </p>
<p>  -தொடரும். </p>
<p>-பிரவீணா தங்கராஜ்.</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>]]></content:encoded>
						                            <category domain="https://onlinetamilnovels.com/community/%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0-%e0%ae%9c%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be-%e0%ae%ae%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a9%e0%af%87-praveena-thangaraj/">மதுர ஜில்லா... மச்சானே! -Praveena Thangaraj</category>                        <dc:creator>Praveena Thangaraj</dc:creator>
                        <guid isPermaLink="true">https://onlinetamilnovels.com/community/topicid/308/</guid>
                    </item>
				                    <item>
                        <title>மதுர ஜில்லா... மச்சானே!-63</title>
                        <link>https://onlinetamilnovels.com/community/topicid/306/</link>
                        <pubDate>Thu, 13 Aug 2026 03:20:53 +0000</pubDate>
                        <description><![CDATA[அத்தியாயம்-63
மதுரை மீனாட்சி அம்மன் கோவில்... காலை நேரம் என்பதால் கோவில் முழுவதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தனர். மணியோசை... நாதஸ்வர இசை... கற்பூர வாசனை... &quot;மீனாட்சி தாயே...&quot; என்று பக...]]></description>
                        <content:encoded><![CDATA[<p>அத்தியாயம்-63</p>
<p>மதுரை மீனாட்சி அம்மன் கோவில்... காலை நேரம் என்பதால் கோவில் முழுவதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தனர். மணியோசை... நாதஸ்வர இசை... கற்பூர வாசனை... "மீனாட்சி தாயே..." என்று பக்தர்கள் உச்சரிக்கும் நாமம்... எங்கும் பக்தி நிறைந்த சூழலாக காட்சியளித்தது. </p>
<p>மீனாட்சி அம்மன் சன்னதியில் காவ்யாவோ வாயை பிளந்து நின்றாள். </p>
<p>  பொங்கல் வைக்குமிடத்தில், மீனாட்சி குடும்பமும், வேல்விழி குடும்பமும் எதிர்பாராவிதமாக சந்தித்துக் கொண்டனர்.</p>
<p>"அட மீனாட்சி... எங்க இந்தப்பக்கம்" என்று வேல்விழி அழைக்க, "வாங்க அக்கா.. நம்ம அகிலனுக்கு நல்ல பொண்ணு அமைந்து திருமணம் நல்லபடியா முடிந்தா, வர்ற மருமகளோட எடைக்கு எடை நவதான்யம் கொடுக்கறதா வேண்டுதல் வச்சேன். அதான் பொங்கல் வச்சிட்டு நிறைவேத்திடலாம்னு வந்தேன். நீங்க அக்கா" என்று மீனாட்சியும் புன்னகையுடன் கூறி கேட்டார்.</p>
<p>  "அதுவா... மதுரா நல்லபடியா ஹாஸ்பிடலில் இருந்து வந்ததும் பொங்கல் வைப்பதா வேண்டினேன்மா. நானும் மருமவளுக்காக தான் வந்தது." என்றார் வேல்விழி. </p>
<p>காவ்யா சுற்றி சுற்றி கோவிலை ரசித்துக் கொண்டிருந்தாள்.</p>
<p>"வாவ்... இவ்வளவு அழகா இருக்கும் என்று நான் நினைக்கவே இல்ல." என்றாள். </p>
<p>"இது எங்க மதுரை பெருமைம்மா. மதுரை என்றாலே முதல்ல நினைவு வர்றது இந்த மீனாட்சி கோவில் தான்" என்று மீனாட்சி பெருமையுடன் கூறினார்.</p>
<p>அப்போது அர்ச்சகர், "துலாபாரத்துக்கு வாங்க..." என்று அழைத்தார்.</p>
<p>"பொங்கல் வச்சிட்டாச்சு. தூரிகாவும் மதுராவும் கதை பேசியபடி பொங்கல் பானையுடன் பின்தொடர "காவ்யா... வாம்மா." என்று மீனாட்சி அழைத்துச் சென்றார்.</p>
<p>"என்ன அத்தை இது?" என்று கேட்டவளை, "சொன்னேனே.. கல்யாணமானா மருமகளை.. அதாவது உன்னோட எடைக்கு எடை தானியம் சாமிக்கு தர்றதா நான் வேண்டிக்கிட்டிருந்தேன். அது நிறைவேற்ற தான் உட்காரு." என்றார்.</p>
<p>  "அகிலா வாப்பா" என்றதும் தூரத்தில் இருந்தவன் தானியத்தை எல்லாம் மூட்டையோடு கொண்டு வந்தான்.   </p>
<p>    மதுரா வேல்விழி வேடிக்கை பார்க்க, தூரிகாவும் காவ்யாவுக்கு உதவும் பொருட்டு, எடைத்தராசில் ஏறவும், சேலையை ஓதுக்கி நிறுத்தினாள். </p>
<p>  "சுடிதாரே போட்டிருப்பேன். எங்கங்க சேலையை பிடிக்கணும்னு கூட தெரியலை" என்று மெதுவாக அமர்ந்தாள்.</p>
<p>மறுபுறம் அரிசி, துவரம் பருப்பு, பச்சைப் பயறு, கோதுமை என்று தானியங்கள் ஒன்றன்பின் ஒன்றாக அகிலன் வைத்தான்.‌</p>
<p>  "அகில்... இதெல்லாம் என்ன பண்ணுவாங்க?" என்று காவ்யா தான்யத்தை எடுத்து வைத்தவனிடம் கிசுகிசு, "உஸ்.. பேசாத..." என்றான்.</p>
<p>"சொல்லுப்பா.. இதை வச்சி என்ன பண்ணுவாங்க?' என்றதும், "அன்னதானத்துக்கு போகும்." என்று மதுரா பக்கமிருந்து பதில் கூற, "ஓ... நாட் பேட்." என்று காவ்யா மனதார மகிழ்ந்தாள்.</p>
<p>  அகிலன் "பச்.. காவ்யா.. இது ஒன்னும் வீட்டு ஊஞ்சல் இல்லை. அமைதியா உட்காரு." என்று அதட்டவும் செய்ய, மதுரா வேடிக்கை பார்த்தவளாக லேசான கண்ணீர் துளிர்த்திட, அவ்விடம் விட்டு அகன்றாள். </p>
<p>  இனியனுக்கோ அமைதியாக மதுராவை பின் தொடரும் வேலையை செய்தான். </p>
<p>  மதுரா மனதில் என்ன‌ உள்ளது அவள் மனம் விட்டு பேசினால் தனக்கு நன்றாக இருக்குமென அவளையே வட்டமிட்டு வந்தான்.</p>
<p>காவ்யாவின் எடைக்கு எடை போட்டிருந்த அகிலனிடம், மீனாட்சியோ, "இன்னமும் தானியம் தேவைப்படுமோ நீ என்னப்பா கொண்டு வரலையா?" என்று கேட்டார்.‌</p>
<p>"அம்மா... இதுவே எழுபது கிலோ இருக்கும். உம் மருமவ அறுபத்தி அஞ்சு தான் இருப்பா" என்றான் கணிப்புடன். அவன் கூறியது போல சரியாக இருக்க மகனை மெச்சிக் கொண்டார். </p>
<p>வேல்விழி மீனாட்சியை அழைத்துக் கொண்டு கோவிலின் மற்றொரு பகுதியில் சென்றார். அங்கு மரத்தில் ஏராளமான சிறிய மரத்தொட்டில்கள் கட்டப்பட்டிருந்தன.</p>
<p>வேல்விழியும் பூஜை செய்து, ஒரு சிறிய தொட்டிலை எடுத்துக் கட்ட ஆரம்பித்தார்.</p>
<p>அதைப் பார்த்த மதுராவின் முகம் மாறியது. அவளது மனதில் ஒரு குற்ற உணர்வு எழுந்தது. அது அவளுக்கு தேவையற்ற குற்றவுணர்வே. ஆனால் தவிர்க்க முடியவில்லை. அப்போதுதான் அங்கு வந்த காவ்யா ஆச்சரியமாக கேட்டாள்.</p>
<p>"இதென்ன... மதுரா?" என்று காவ்யா கேட்கவும் மதுரா மெதுவாகச் சொன்னாள்.</p>
<p>"தொட்டில் கட்டினா... குழந்தை பிறக்கும்னு சொல்வாங்க." என்றாள் வருத்தத்துடன்.‌</p>
<p>காவ்யா உடனே வேல்விழியைப் பார்த்தாள். "ஓ... அத்தைக்கு டூ பாய் பேபியா இருக்காங்கனு,  கேர்ள் பேபி வேணும்னு வேண்டிக் கட்டறாங்களா?" என்று சாதரணமாக கூற, வேல்விழி 'ஆத்தி" என்று நெஞ்சை பிடிக்க, அடுத்த நொடியே மதுரா பதறினாள்.</p>
<p>"அய்யோ... இல்ல... இல்லங்க..." அவள் தடுமாறுவதைப் பார்த்த தூரிகா சிரித்தாள். மதுரா சோகத்தை பதட்டமாக மாற்றிய பெருமை காவ்யாவை சேருமே.</p>
<p>"காவ்யா... அது அவங்களுக்காக இல்லம்மா." என்றார் மீனாட்சி எப்பவும் போல மருமகளின் சந்தேகம் தீர்க்க வந்து விட்டார்.‌</p>
<p>"அப்போ யாருக்கு?" என்றாள். </p>
<p>"மதுராவுக்காக." அந்த ஒரு வார்த்தை மதுராவை அமைதியாக்கியது.</p>
<p>"இவ சீக்கிரம் நல்ல செய்தி சொல்லணும்னு வேண்டிக்கிட்டுதான் தொட்டில் கட்டுறாங்க. கடவுள் அருள் இருந்தா மதுரா-இனியனுக்கு நல்லபடியா அடுத்த குழந்தை தங்கணும்னு ஆசைப்படறாங்க" என்றதும் மதுரா சங்கடமாய் பார்த்து புன்னகைத்தாள்.</p>
<p>  "ஓ... அப்ப அத்தை.. நீங்களும் கட்டுவிங்களா?" என்று மீனாட்சியை கேட்க, மீனாட்சியோ மகனை கண்டார்.‌</p>
<p>  மகனுக்கும் காவ்யாவுக்கும் நடந்த திருமணத்தில் அவன் எந்தளவு காவ்யாவிடம் பழகுகின்றானென தெரியாமல் அவசரம் காட்டிட முடியாதே. ஆனால் மருமகளின் எடையை எல்லாம் நன்றாக தான் அறிந்து வைத்திருக்கின்றான் என்றதும் தொட்டில் கட்டும் ஆசை உண்டானது. </p>
<p>   "அத்தை.. எனக்கும் அதோ அந்த பாப்பா இருக்கற தொட்டிலை கட்டுங்க. காட் கிரேஸ் இருக்கானு பார்க்கலாம்" என்றாள். </p>
<p>  காவ்யாவை பார்த்து, "நிஜமா.. கட்டவா? உனக்கு சங்கடமா இருக்காதே?" என்று கேட்டுவிட, "நோ பிராப்ளம்... கட்டுங்க. அகில் மச்சான்..‌ என்ன ஓகேவா" என்று கட்டைவிரலை காட்டி கேட்க, அவனோ இனியன், அம்மா, தூரிகா, மதுரா, பெரிம்மா இருக்க, வெட்கத்துடன் தலைகோதி நெளிந்தான்.‌</p>
<p>  'என்னவோ பண்ணு' என்று நழுவ முற்பட்டான்.‌</p>
<p>  மீனாட்சியோ மகனை பிடித்து நிறுத்தி, "நீயும் மருமகளும் சேர்ந்து கட்டுங்க." என்று தொட்டிலை வாங்கி கையில் தர, சங்கடம் பெற்றவனோ 'இனியனுக்கு முன்ன நான் குழந்தை பெத்துட்டா... அதுவும் சரியா இருக்காது. அதனால இனியன் மதுராவுக்கு குழந்தை பிறந்தப்பிறகு எனக்கு நல்லது நடந்தா சரி' என்றவாறு அகிலன் நினைத்து கட்டினான்.</p>
<p>காவ்யாவோ ஏதோ வித்தியாசமான சடங்கு போல செய்து நின்றாள். </p>
<p>   பொங்கலை சாமிக்கு வைத்துவிட்டு கும்பிட்டுவிட்டு வெளியே வந்ததும் "பொசுக்குனு எனக்கு பொம்பள பிள்ளை வேண்டும்னு நான் ஆசைப்பட்டதா கட்டினேன்னு கேட்குறா. என்ன‌ மீனாட்சி எப்படி சமாளிக்கற?" </p>
<p>என்று சிரிக்க, மீனாட்சியோ "அதொன்னவோ சில நேரம் வெடிக்குண்டு பேச்சுக்கா.  முதல்லயிருந்தே இப்படி  மகிழ்ச்சியா எசக்கு பிசகா மாத்தி பேசிடறதுல நாங்களும் பழகிட்டு இருக்கோம்" என்று கூற, மதுரா கண்கள் காவ்யாவையே கண்டாள்.</p>
<p>   "நானும் மதுராவிடம் ஒன்னும் மண்ணுமா பழக முயற்சி பண்ணறேன்.‌ ஒன்னும் வேலைக்கு ஆகலை. மாமியாரா நிறைய முறை வாய் பேசாம இனியன் இஷ்டத்துக்கும், இனியன் அப்பா இஷ்டத்துக்கும் விட்டு வேடிக்கை பார்த்துட்டேன். இப்ப ஏதாவது பேசலாம்னா கூட முடியலை‌. இந்த தொட்டில் கூட நானா என் ஆசைக்காக கட்டறேன். அவ மனசுல என்ன ஓடுதோ. முன்ன மாதிரி கூட இனியன் நடந்துக்கறதில்லை." என்றார்.‌</p>
<p>  தூரிகாவுமே மதுராவிடம், "பெரிம்மாவுக்கு பெண் குழந்தை  பிறக்கும்னு கேட்டா பாரு மதுரா. இந்த லூசு அண்ணியை என்ன செய்ய?" என்று சிரிக்க, 'பச் லூசு அண்ணினு சொல்லாதடி. தெரியாம தானே கேட்கறாங்க" என்றாள். </p>
<p>காவ்யாவையே உற்றுஉற்று பார்த்தவள், "அகிலன் மச்சானுக்கு நல்ல ஜோடி தான். நல்லா அழகாயிருக்காங்க. நல்லா பேசறாங்க. சிரிச்ச முகமா, பெரிய படிப்பெல்லாம் படிச்சி. உங்க குடும்பத்துலயும் ஒன்னுமண்ணுமா ஆகிட்டாயில்ல?" என்று விசாரிக்க தூரிகாவோ "என்ன‌ சொல்லு. எங்க இனியன் அண்ணனோட பொண்டாட்டி கூட நல்ல ஜோடி தான் நல்ல அழகு. சிரிச்ச முகம், நல்லா பேசும், படிப்பு கொஞ்சம் தான். ஆனா ஒன்னும் மண்ணுமா பழகும்." என்று உன்னையும் நீ குறை கூறிக்கொள்ளாதே என்றது போல தூரிகா பேசினாள். </p>
<p>மதுரா தூரிகாவுடனும் காவ்யாவுடனும் நழுவ,  கோவிலின் பிரகாரத்தை சுற்றி நடந்து கொண்டிருந்தனர் இனியனும் அகிலனும்.</p>
<p>இருவரின் பேச்சும் மீண்டும் பிசினஸைச் சுற்றியே இருந்தது.</p>
<p>"கம்பெனி ரெஜிஸ்ட்ரேஷன் முடிஞ்சதும் அடுத்த ஸ்டெப் ஈசியா போயிடும்." என்றான் இனியன்.</p>
<p>அகிலன் "எனக்கு ஏற்றுமதியெல்லாம் பெருசா ஆர்வமில்லை. எல்லாம் அவளா ஆரம்பிக்கறா.</p>
<p>  அங்க அமெரிக்கால ஸ்கூல் படிக்கிற பசங்க கூட சம்பாதிக்க ஆரம்பிச்சிடுவாங்க... நான் அதனால என் தேவைக்கு உன்  பின்னாடி வர மாட்டேன்னு கிளாஸ் எடுத்துட்டா." என்றதும் இனியன் சிரித்தான்.</p>
<p>சில அடிகள் நடந்த பிறகு இனியன் குறும்பாகக் கேட்டான்.</p>
<p>"உனக்கு காவ்யாவோட குடும்பம் நடத்துறது கஷ்டமா இல்லையா?" என்றான்.</p>
<p>"ஏன்?" என்று அகிலன் முழித்தான். </p>
<p>"ரொம்ப பெமினிசம் பேசுவாளே" என்றதும் அகிலன் சிரித்துவிட்டான்.</p>
<p>"உன்னை கூட 'டா' போட்டுத்தான் பேசுறா. அதை மாத்திக்கோனு சொல்லிட்டேன்</p>
<p>ஆனா திரும்ப சம்டைம் பெயரிட்டு சொல்லறா. 'டா' போடறா அதெல்லாம் தான் பக்குனு இருக்கு. ஊருல நாலு பேர் நோட் பண்ணறதுக்குள்ள பேச்சை மாத்தணும்." என்று காவ்யாவின் பேச்சுக்கும் தனக்கும் கூட சம்பந்தமில்லை என்று தெரிவித்தான். </p>
<p>''அதெல்லாம் மாத்தற கேரக்டர் இல்லை. வாய்க்கு வந்ததை தான் பேசுவா." என்றவன் தயங்கி தயங்கி, "மோஸ்டா லிமிட்டோட தான் பழகியிருக்கேன் அகிலன். அதுல பிசினஸ் தான் அதிகம்."  என்று இனியன் இலைமறைவாய் நாங்கள் எல்லை மீறி பழகியது கிடையாதென தெரிவிக்க முனைந்தான்.</p>
<p>  அகிலன் அமைதியாக கேட்டு நின்றான். இனியன் இருக்கும் நேரமல்லவா மதுரா வீட்டில் அவளது இடையை பிடித்தோம். அதை இனியன் தவறாக நினைப்பானா? என்று அகிலன் பயந்தான். இங்கு அகிலனுமே மதுராவிடம் எல்லை மீறி பழகவில்லை என்றாலும் அதை கூறினால் அந்த சம்பவத்தை வைத்து தவறாக எண்ணினால்? அகிலனின் தவிப்பை கண்டு, இனியன் கண்ணை மூடி 'என்னடா பேசற, எவ்விதமாகவும் இந்த பேச்சே வேண்டாம்' என்ற நிலைக்கு சென்று "லைசன்ஸ் குயிக்கா வாங்கியதுக்கு தேங்க்ஸ்." என்றான் இனியன்.</p>
<p>"அட இங்க எல்லாரும் தெரிந்தவங்க. நாம போய் முன்ன நின்னா மடமடனு வேலை ஆகும். நமக்கான பத்திரம் சரியா இருக்க.‌‌.. உடனே வேலை முடிந்தது." என்றான்.‌</p>
<p>"எனக்கு இது பாஸ்ட் தான். தனியா இடம் பார்த்து எல்லா விஷயமும் பேசறப்ப ரொம்ப டிலே ஆச்சு. நீ சட்டுனு போற முடிச்சிட்டனு சொல்லற. ஒருவிதத்ததில குயிக்க முடிக்க நீ ஒரு காரணம். ஊர்ல நிறைய பேரை தெரிந்து வச்சியிருக்க." என்று பாராட்டினான். </p>
<p>  "அதெல்லாம் இங்க படிச்சி சுத்தறதால தெரியும். நீ அமெரிக்கா போனதால தெரியாம இருக்கலாம். இது பெரிய விஷயமா?" என்றான் அகிலன்.‌</p>
<p>இவர்கள் இவ்வாறு பேசி செல்ல, மதுரா இருவரையும் பின் தொடர்ந்தவளாக நடந்தாள். </p>
<p>  'தூரிகா.. இந்த பானையை பிடிடி" என்றதும் "ஆங்.. வர்றேன்மா." என்று நழுவ, காவ்யாவோ மதுராவிடம், "பெரிய அத்தை தொட்டில் எல்லாம் கட்டினாங்க. நானும் எனக்கு ஒன்னு கட்டினேன். </p>
<p>ஆக்சுவலி இது... ஹஸ்பெண்ட் அண்ட் வொய்ப் சேர்ந்து கட்டுவாங்களா.. இல்லை யாருனாலும் கட்டலாமா? எனக்கு இப்பவும் டவுட் இருக்கு. வேல்விழி அத்தைக்கு கேர்ள் பேபி ஆசையா இருக்குமோனு." என்று கேலியுடன் கேட்டாள்.‌</p>
<p>மதுரா சிரித்தபடி, "அச்சோ.. அத்தைக்கு இந்த வயசுல ஏன்ங்க இந்த ஆசை. அவங்க எனக்கு ஒரு குழந்தை வேண்டும்னு தான் கட்டினாங்க. நீங்க வேற கிண்டலடிச்சிட்டு... அவங்க பையனுக்கு ஒரு பையனோ பொண்ணோ.. வர ஆசைப்படறாங்க." என்றாள்.</p>
<p>"இனியனுக்கா? என்றதும் மதுரா அமைதியாகவும், "நான் ஒன்னு கேட்கவா?" என்றாள் காவ்யா.‌</p>
<p>மதுரா மெதுவாக காவ்யாவை ஏறிட, ''உனக்கு தாலி கட்டியது விருப்பமில்லாம நடந்தது‌னு எனக்கு தெரியும். </p>
<p>குழந்தையை அபார்ஷன் செய்ததும் உன்னோட பாயிண்ட் ஆஃப்யூல ரைட், இப்ப மறுபடியும் அத்தை தொட்டில் கட்டறாங்களே.. உனக்கு ஏதாவது அகைன்ஸ்டா இருந்தா... அஸ் எ பிரெண்டா நீயே அவங்களிடம் ஷேர் பண்ணி நோ சொல்லலாமே." என்றதும் மதுரா, தான் செய்த காரியத்தின் வீரியத்தை யாரிடமாவது கேட்க எண்ணி, காவ்யாவிடம் "நான் குழந்தையை அழிச்சது தப்பில்லையா? ரைட்டுனு சொல்லறிங்க" என்று கேட்டாள். </p>
<p>  காவ்யா புரியாது மதுராவை நோக்கவும், மதுராவே, "இல்லை... ஒரு உயிரை கொன்றது எனக்குள்ள குற்றவுணர்வை ஏற்படுத்துது. என்னால இயல்பா இருக்க முடியலை. ஏதோ செய்யக் கூடாததை செய்தது போல கஷ்டமாயிருக்கு" என்றவள் கண்ணீரை உகுத்தினாள்.‌</p>
<p>காவ்யாவோ, "இதுல குற்றவுணர்வுல நீ துடிக்க அவசியம் என்ன? குழந்தை பிற்காலத்தில பிறந்து வளர்ந்து என்ன செய்யனு நீ பேசியது ரொம்ப கரெக்ட். பெத்துட்டு அப்பா ஒரு பக்கம், அம்மா ஒரு பக்கம்னு அலையவிடாம, இப்பவே தெளிவா முடிவெடுத்து குழந்தையை தடுத்திருக்க. எனக்கு இது தப்பா தோணலை மதுரா. குழந்தை எப்ப பெத்துக்கணும்னு நீ ஆசைப்படறியோ அப்ப பெத்துக்கறது தான் ரைட். ஏன்னா... குழந்தையை வளரும் போது அன்போட வளர்க்கணும். அம்மாவோட மைண்ட் செட் ரொம்ப முக்கியம். ஆனா திரும்ப எல்லாம் கலைச்சி கலைச்சி விளையாடாத. உன்னோட ஹெல்த் பாதிக்கும். இதை மட்டும் நினைவு வச்சிக்கோ. உனக்கு பிடிக்காம எதுவும் பண்ணாத. உனக்கு ஓகேன்னா.. குழந்தைக்கு எஸ் சொல்லலாம். பட் உனக்கு வேண்டாம்னா... எத்தனை காலம்னாலும் நீ தவிர்க்கலாம்‌. இது உன்னோட சாய்ஸ். கேர்ஸ் எப்பவும் நோ சொல்லலாம். அது ஹஸ்பெண்டா இருந்தாலுமே... இதுல குற்றவுணர்வுக்கு இடமேயில்லை." என்றாள் ஆதுரமாக. </p>
<p>மதுராவோ "அவுக ஆசைப்பட்டா.." என்று கேட்டுவிட்டு இனியனை பார்த்தாள். </p>
<p>  "அவனா சுமக்க போறான். டென் மந்த் மதுரா... டென் மந்த் ஈஸியில்ல.. நீ தானே சுமக்கணும். சோ நீ இதுல முக்கியமா டிசைட் பண்ணணும். அவன் புஷ் பண்ணினா.. நோ சொல்லு. ஏய்.. அவன் இப்பவும் புஷ் பண்ணறானா?" என்று கேட்க மதுரா இல்லை என்று வேகமாய்  தலையாட்டினாள்.‌</p>
<p>   "ம்ம்ம். சாரி கேட்டானா?" என்று துளையிட்டபடி காவ்யா கேட்க, மதுரா ஆமென்று தலையாட்டி, "ஹாஸ்பிடல்ல இருந்து வீட்டுக்கு வந்ததும் நிறைய பேசினார்... திட்டினார்... அழுதார்.. சாரி கேட்டார். இப்பவரை என்னை தீண்டாம, எட்டியிருந்து ரசிக்கறார். கா... காதலிப்பதா.. சொல்லறார். என்னால தான் நம்ப முடியலை.</p>
<p>   படிச்ச நீங்க எங்க.. உங்களை அவ்ளோ சீக்கிரம் மறந்து என்னை ஏத்துக்க முடிந்ததா?'' என்று பேசிவிட்டு உதட்டை பல்லால் அழுத்தினாள்.</p>
<p>  "அழகா பொம்ம மாதிரி தலையாட்டற. இதுக்கே இனியன் சொக்கி விழுந்திருப்பான்." என்று பேச, மதுரா ஆச்சரியமாய் பார்த்தாள். </p>
<p>"என்ன அப்படி பார்க்கற? உன் புருஷனை அவன் இவன்னு சொல்லறேன்னா?" என்றதும், இல்லையென தலையாட்டினாள். </p>
<p>  "மதுரா.. வாயை திறந்து பேசு. என் நாத்தனார் கூட மட்டும் தான் வாயாடுவியா? ஆனா அவளிடம் இந்த டாபிக் பேச முடியாதே" என்றதும், மதுரா, "தூரிகா என்னயிருந்தாலும் நாத்தனாராச்சே. அண்ணனை பத்தி தங்கச்சியிடம் என்னத்த பேச?" என்றாள்.‌</p>
<p>"தென்... யாரிடம் தான் பேசுவ?" காவ்யா கேட்டதும் மதுரா திருதிருவென முழிக்க, "அழகா முழிக்கறிங்க" என்று தாடை பிடித்து கொஞ்சாத குறையாக தீண்டினாள்.‌</p>
<p>"அச்சோ" என்று பின்னகரும் நேரம், ''இங்க பாரு... எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாம வர்றது லவ். எங்களுக்குள்ள முன்ன வந்தது எதிர்பார்ப்பு இருந்த காதலா கூட இருக்கலிம். இல்லை.... அதாவது நீயும் நானும் லவ் பண்ணி நான் அங்க எக்ஸ்போர்ட் பண்ணி, நீ இங்க இருக்கற செல்வாக்கில் அதை வினியோகம் செய்னு பிளான் செய்து, பிசினஸ் மூலமா வந்த காதல். அப்படின்னாலும் அது உண்மையா தான் நேசித்தோம். பட்... இப்ப அந்த காதல்... சுத்தமா இல்லை. நீ நம்பலைன்னாலும் அதான் நிஜம். </p>
<p>  என் சீனியரோட நான் பார்ட்னர்ஷிப்பா வொர்க் பண்ண போறேன். போனஸா அவர் என் அகிலோட பிரதர் அவ்ளோ தான். இதை தான் அகிலிடமும் சொல்லியிருக்கேன். </p>
<p>  அகில் என்னை புரிந்துக்கிட்டார்னு நினைக்கறேன். அதனால தான் இனியனோட பிசினஸ் பண்ண தடுக்கலை. </p>
<p>  இனியனுக்கும் என்னை நல்லா தெரியும். இதுல உன்னை வேற காதலிக்க ஆரம்பிச்சிட்டான்னு அவன் கண்ணுல உனக்கான காதல் தெரியுது. அப்படியிருக்க லைப் நமக்குள் ஸ்மூத்தா கொண்டு போகணும். </p>
<p>  அகில் உன்னை கண்டா தடுமாறி பேச மாட்டேங்கறார். </p>
<p>நீ அவரை பார்த்தாலே முகம் திருப்பிக்கற, நார்மலா பேசு... அகிலன் உன்னோட மச்சான் தானே. இந்த உலகத்துல மாமன் மகனையே கட்டிக்காத அத்தை பொண்ணும் இருக்கா. நீங்க அந்த பேட்டர்ன்ல போயாச்சு. மச்சான் என்ற உரிமை எப்பவும் இருக்கும் மதுரா. அந்த உரிமையை விட்டுடாத." என்று கூறினாள்.‌</p>
<p>மதுராவோ "அகிலன் மச்சானை நிமிர்ந்து பார்க்க முடியலைங்க. அவரை நானும் ஏசிவிட்டுட்டேன். இப்ப எந்த முகத்துல பேசறது. இயல்பா பார்க்கற நாளுக்கு நானும் ஏங்கறேன்.. ஏன்... நானே இயல்பாகணும்னு தான் நினைக்கேன் முடியலை‌. அதுக்காக மனசுல இருக்காரானு கேட்காதிங்க. என்னோடதும் உண்மையான காதல் தான். ஆனா இப்ப அந்த காதல் சுத்தமா இல்லை." என்றாள். </p>
<p>காவ்யாவோ கட்டி பிடித்து "ஓ புவர் கேர்ள். எல்லாமே சரியாகிடும் பீ ஸ்ட்ராங்" என்று தட்டி கொடுத்தாள்.‌</p>
<p>-தொடரும். </p>
<p>-பிரவீணா தங்கராஜ். </p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>]]></content:encoded>
						                            <category domain="https://onlinetamilnovels.com/community/%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0-%e0%ae%9c%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be-%e0%ae%ae%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a9%e0%af%87-praveena-thangaraj/">மதுர ஜில்லா... மச்சானே! -Praveena Thangaraj</category>                        <dc:creator>Praveena Thangaraj</dc:creator>
                        <guid isPermaLink="true">https://onlinetamilnovels.com/community/topicid/306/</guid>
                    </item>
				                    <item>
                        <title>மதுர ஜில்லா... மச்சானே!-62</title>
                        <link>https://onlinetamilnovels.com/community/topicid/298/</link>
                        <pubDate>Wed, 12 Aug 2026 01:50:16 +0000</pubDate>
                        <description><![CDATA[அத்தியாயம்-62
   இனியனோ மதுராவைப் பார்த்து, &quot;மதுரா... மாம்பழம் கட் பண்ணி கொண்டா. என்ன மசமசன்னு பார்த்துட்டு இருக்க?&quot; என்றான்.
இதுவரை காவ்யாவையே பார்த்துக் கொண்டிருந்த மதுரா, சட்டென்று சுயந...]]></description>
                        <content:encoded><![CDATA[<p>அத்தியாயம்-62</p>
<p>   இனியனோ மதுராவைப் பார்த்து, "மதுரா... மாம்பழம் கட் பண்ணி கொண்டா. என்ன மசமசன்னு பார்த்துட்டு இருக்க?" என்றான்.</p>
<p>இதுவரை காவ்யாவையே பார்த்துக் கொண்டிருந்த மதுரா, சட்டென்று சுயநினைவுக்கு வந்து, "இ... இதோ..." என்று அவசரமாக சமையலறைக்குள் ஓடினாள்.</p>
<p>சிறிது நேரத்தில் மாம்பழத்தை அழகாக நறுக்கி, கூடவே ஆப்பிளையும் சேர்த்து ஒரு தட்டில் அடுக்கி எடுத்து வந்து அனைவரின் முன்னும் வைத்தாள்.</p>
<p>  திரும்பிச் செல்ல முயன்றவளின் கையை மெதுவாகப் பிடித்த இனியன், "எங்க போற?" என்று கேட்டபடி தன் அருகிலேயே அமர வைத்தான்.</p>
<p>எதிர்பாராத அந்த நெருக்கத்தில் மதுரா சங்கடமாக நெளிந்தாள். அவளது பார்வை தன்னிச்சையாக காவ்யாவைத் தேடிச் சென்றது.</p>
<p>ஆனால் காவ்யாவோ மாம்பழத் துண்டை வாயில் போட்டதும் கண்களை விரித்தாள்.</p>
<p>"ஹம்மி...! செம டேஸ்ட்."</p>
<p>மதுரா உடனே சிரித்தாள்.</p>
<p>"அம்மா வீட்ல காய்ச்ச மாங்காய் ஊறுகாய் போடறேன். ஆனா இந்த மாம்பழம் மட்டும் எப்பவுமே இவ்வளவு இனிப்பாதான் இருக்கும்."</p>
<p>"ஓஹோ..." என்று இன்னொரு துண்டை எடுத்துக் கொண்ட காவ்யா, "சூப்பரா இருக்கு."</p>
<p>சில நொடிகள் அமைதியாக இருந்தவள், மதுராவை ஆர்வமாகப் பார்த்தாள்.</p>
<p>"எப்பவுமே சேலைதான் கட்டுவீங்களா?" தன் சேலையை ஒரு முறை குனிந்து பார்த்த மதுரா, "ம்ம்ம்..." என்று வெட்கத்துடன் தலையாட்டினாள்.</p>
<p>அதைக் கவனித்த வேல்விழி சிரித்தபடி, "ஏம்மா... உனக்கு சேலை பிடிக்காதா?" என்று காவ்யாவிடம் கேட்டார்.</p>
<p>"பிடிக்கும் அத்தை... ஆனா கட்டத் தெரியாது. எல்லாம் இவரோட தங்கச்சிதான் கட்டிவிடுவாங்க. எனக்கு ஜீன்ஸ், டாப்ஸ்தான் கம்ஃபர்டபிள். இவரைக் கட்டிக்கப் போறேன்னு அப்பா தான், 'கொஞ்ச நாளைக்கு குர்த்தி, சுடிதார் மாதிரி போடு'ன்னு ஆர்டர் போட்டுட்டாரு." என்றாள் சிரித்தபடி.</p>
<p>"எங்க அகிலன் எதுவும் சொல்ல மாட்டாரே?" என்று வேல்விழி கேட்டார்.</p>
<p>"ம்கூம்... அதட்டிப் பேசவே வராது அத்தை. அநியாயத்துக்கு சாஃப்ட். பட்..." என்று அகிலனைப் பார்த்தவள் குறும்பாக சிரித்தாள். "ஐ லைக் ஹிம்." என்று காவ்யாவின்  பார்வையை உணர்ந்த அகிலன், "என்ன?" என்பது போல புருவம் உயர்த்திப் பார்த்தான்.</p>
<p>அதைப் பார்த்த வேல்விழி சிரித்தார். "என்னப்பா அகிலா... காவ்யா இருந்தா பேசவே மாட்ட போல."</p>
<p>"இனியன் இருந்தா, இவங்க..." என்று மதுராவைக் காட்டி "...இவங்களும் சைலண்ட் ஆயிடுறாங்க." அனைவரின் பார்வையும் தன் மீது விழுந்ததும் மதுரா சங்கடமாகச் சிரிக்க முயன்றாள்.</p>
<p>அகிலனும் அவளை ஒரு நொடி பார்த்தான். ஆனால் மதுரா சட்டென்று தலைகுனிந்து விட்டாள். அந்த ஒரு செயல் அகிலனின் மனதை எதையோ குத்தி சென்றது.</p>
<p>சூழ்நிலையை மாற்ற நினைத்தவள், "ப... பஜ்ஜி ஏதாவது போட்டுட்டு வர்றேன்." என்று எழ முயன்றாள்.</p>
<p>இனியன் மெதுவாக அவள் கையை அழுத்திப் பிடித்தான். 'நீ என் பக்கத்துல இரு' என்ற உரிமை இருந்தது.</p>
<p>  "அய்யோ.. இதுவே வயிறு நிரம்பிடுச்சு. இன்னொரு நாள் சாப்பிடவே வர்றேன்" என்று காவ்யா கூற மதுராவும் மீண்டும் அமைதியாக அமர்ந்தாள்.</p>
<p>சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்த பிறகு காவ்யா எழுந்தாள்.</p>
<p>"சரிங்க அத்தை... ஓகே மாமா... கிளம்பறோம்." பிறகு இனியனைப் பார்த்து குறும்பாக கையை நீட்டினாள்.</p>
<p>"ஹலோ... பெரிய மச்சான். ஏதாவது வேலை பேலன்ஸ் இருந்தா சொல்லுங்க." அகிலனும் எழுந்து,</p>
<p>"பெரியப்பா... போயிட்டு வர்றேன். பெரியம்மா... வர்றேன். இனியா... கம்பெனி ரெஜிஸ்ட்ரேஷன், டாக்குமெண்ட்ஸ் ஏதாவது இருந்தா சொல்லு. தெரிஞ்சவங்க இருக்காங்க. ஹெல்ப் பண்ணுவாங்க." என்றான்.</p>
<p>இனியன் மெதுவாகப் புன்னகைத்தான்.</p>
<p>"ம்ம்... இப்போ பார்ட்னராச்சே. தேவைப்பட்டா கண்டிப்பா ஹெல்ப் கேப்பேன்." என்றான் அவனும். </p>
<p>"சரி." காவ்யாவோ எல்லாரையும் பார்த்து கையை அசைத்தாள்.</p>
<p>"பை அத்தை... பை மாமா... பை பார்ட்னர்... பை மதுரா..." என்றாள். </p>
<p>"பை..." என்று மதுராவும் புன்னகையுடன் கையசைத்தாள்.</p>
<p>வீட்டை விட்டு வெளியே வந்த இருவரும் புல்லட்டில் ஏறினார்கள்.‌</p>
<p>சில நிமிடங்கள் அமைதியாகவே பயணம் சென்றது. பிறகு காவ்யா மெதுவாகக் கேட்டாள்.</p>
<p>"ஏன் அகில்... இனியன்கிட்ட நான் நார்மலா பேசுறது ஓகே. நீயும் மதுராகிட்ட நார்மலா பேசலாமே. ஏன் இவ்வளவு தயங்குற?" என்றாள். அகிலன் ஒரு பெருமூச்சு விட்டான்.</p>
<p>"தெரியல காவ்யா... அவ கண்ணைப் பார்த்து நேரா பேச முடியல." சிறிது இடைவெளிக்குப் பிறகு மெதுவாகத் தொடர்ந்தான்.</p>
<p>"அவளுமே முன்ன மாதிரி பேச மாட்டேங்கறா. முன்னாடி 'மச்சான்... மச்சான்...'ன்னு வாய்நிறைய கூப்பிடுவா. இப்போ முகத்தைப் பார்க்கவே தயங்குறா." அவன் சிரிக்க முயன்றாலும், அந்தச் சிரிப்புக்குள் வருத்தம் இருந்தது.</p>
<p>"என்னோட வேண்டுதலெல்லாம் ஒண்ணுதான். இனியனும்... மதுராவும் நல்லபடியா வாழணும். சந்தோஷமா இருக்கணும். அது மட்டும் போதும்." காவ்யா அமைதியாக அவன் தோளில் சாய்ந்தாள்.</p>
<p>"ஏய்... உனக்கு ஓகே தானே? இனியன் கூட பார்ட்னர்ஷிப்..." </p>
<p>"ம்ம்..."</p>
<p>"வேலையில மட்டும் பார்ட்னரா இரு. என்கிட்ட கத்துற மாதிரி அவன்கிட்ட கத்திடாத."</p>
<p>அதைக் கேட்ட காவ்யா சிரித்தாள்.</p>
<p>"அகி..."</p>
<p>"ம்ம்ம்..."</p>
<p>"நிஜமாவே உனக்கு கோபம் வரலையா?" அவள் இன்னும் கொஞ்சம் அவன் தோளில் சாய்ந்தாள். உடனே அகிலன் பதறினான்.</p>
<p>"அம்மா தாயே... தோள்ல சாயாம ஒழுங்கா உட்காரு. ரோட்ல போறவங்க பார்த்தா, நான் எடுத்துவச்ச நல்ல பேரு கெட்டுடும்." என்றான்.‌</p>
<p>"அகி..." என்று குழந்தை போல உதட்டைச் சுழித்தாள்.</p>
<p>"என்ன?"</p>
<p>"ஐ லவ் யூ." புல்லட்டை ஓட்டிக் கொண்டிருந்த அகிலனின் உதட்டோரம் தானாக ஒரு புன்னகை மலர்ந்தது.</p>
<p>"அதை வீட்டுக்குப் போயும் சொல்லலாம்." என்றான். </p>
<p>"இப்ப சொல்லணும் போல இருந்துச்சு." அகிலன் சிரித்தபடியே தலையசைத்தான்.</p>
<p>தோளை விட்டு விலகி, இடுப்பைச் சுற்றி மெதுவாகக் கையை கோர்த்துக் கொண்டாள். அகிலனும் சிரித்தபடியே புல்லட்டின் வேகத்தை வீட்டை நோக்கி விரைந்திட சற்றுக் கூட்டினான்.</p>
<p>வீட்டு வாசலிலேயே அதியமானும் மீனாட்சியும் காத்திருந்தனர்.</p>
<p>கேட் திறக்கும் சத்தம் கேட்டு வெளியே வந்த மீனாட்சி,</p>
<p>"என்னம்மா... என்னாச்சு? எங்க போயிருந்தீங்க?" என்று ஆவலாகக் கேட்டார்.</p>
<p>அகிலன் புன்னகையுடன் காவ்யாவைப் பார்த்துவிட்டு,</p>
<p>"இனியன்கிட்ட பேசிட்டு வந்தோம்மா. காவ்யாவோட பிசினஸை இனியனோட பார்ட்னர்ஷிப்ல ஆரம்பிக்க முடிவு பண்ணிட்டோம்."‌ என்றவன் தொடர்ந்தான்.</p>
<p>"கம்பெனி பேரு கூட வச்சாச்சு... மகா அக்ரோ பிரைவேட் லிமிடெட்." என்றான்.‌</p>
<p>"அப்படியா!" என்று மீனாட்சியின் முகம் மலர்ந்தது.</p>
<p>அதியமான் மட்டும் மகனை ஆழமாகப் பார்த்தார்.</p>
<p>"ஏதும் பிரச்சனை ஆகலையேப்பா?" அகிலன் மெதுவாகச் சிரித்தான்.</p>
<p>"இல்லப்பா... ஆனா இனியன் பேசுறத பார்த்தா... இன்னும் அவனுக்குள்ள பயம் இருக்கு. மறுபடியும் எந்தப் பிரச்சனையும் வரக்கூடாதுன்னு ரொம்ப கவனமா இருக்கான்." சிறிது இடைவெளி விட்டவன்,</p>
<p>"இந்த பார்ட்னர்ஷிப்... சொந்தம்னு இல்லப்பா. நண்பர்களா சேர்ந்து வேலை பாக்குற மாதிரிதான் ஆரம்பிக்கப் போற. அது சரியா வரும்." என்று கூறிவிட்டு, அருகில் நின்ற காவ்யாவைப் பார்த்து சிரித்தான்.</p>
<p>"அதோட உங்க மருமக கேடி. பேசிப் பேசியே கவுத்துட்டா." என்றான்.‌</p>
<p>"ஹலோ..." என்று அவன் தோளில் செல்லமாக ஒரு குத்து வைத்தாள் காவ்யா.</p>
<p>அதைப் பார்த்து மீனாட்சியும் அதியமானும் சிரித்தனர்.</p>
<p>"சரிப்பா... எல்லாம் நல்லபடியா நடந்தா அதைவிட சந்தோஷம் வேற என்ன இருக்கு?" என்றார் அதியமான்.</p>
<p>மீனாட்சியும், "ஆமாம்பா... நல்ல காரியம்தான்." என்று மனநிறைவுடன் தலையசைத்தார்.</p>
<p>  அன்றைய நாளில் அகிலன் காவ்யா இருவரும் ஜோடி பறவைகள், காதலோடு கரைந்திருந்தனர்.</p>
<p>இனியன் வீட்டில்.. மதுரா சமையலறையில் ஊறுகாய் ஜாடியை மூடி வைத்துக் கொண்டிருந்தாள்.</p>
<p>தங்கள் அறைக்குள் மதுரா நுழைய,  இனியன்,</p>
<p>"ஊறுகாய் எல்லாம் போட்டாச்சா?" என்று கேட்டான்.</p>
<p>"ஆச்சு..." என்றவள் கைகளைத் துணியில் துடைத்தபடி கதவை தாழிட்டு, அவனை தாண்டி செல்ல முனைந்தாள்.</p>
<p>எதுவும் பேசாமல் அவளைப் பார்த்துக் கொண்டிருந்த இனியன், திடீரென அவளைத் தன் கரங்களுக்குள் இழுத்து அணைத்துக் கொண்டான்.</p>
<p>அந்த அணைப்பில் அவசரமும் இல்லை. வேகமும் இல்லை.</p>
<p>வெறும் அன்பான தீண்டல் மட்டுமே. மதுராவும் எதிர்க்கவில்லை. அவனது மார்பில் முகம் புதைத்தபடியே சில நொடிகள் அப்படியே நின்றாள்.</p>
<p>இரவு நேரமென்பதால் இருவரும் படுக்கையில் அமர்ந்தனர்</p>
<p>மதுரா வழக்கம்போல் ஒரு பக்கம் திரும்பிப் படுத்துக் கொண்டாள். ஆனால் இனியனின் பார்வை முழுவதும் அவள் மீதே இருந்தது.</p>
<p>அதை உணர்ந்தவள் மெதுவாகத் திரும்பிப் பார்த்தாள். "ஏதாவது வேணுமா?" என்று கேட்டாள்.</p>
<p>இனியன் மெதுவாக, "நீ வேணும்... மதுரா" என்று கேட்க, அந்த ஒரு வார்த்தையில் மதுராவின் இதயம் வேகமாகத் துடித்தது.</p>
<p>அவள் மெதுவாக அவனருகே நெருங்கினாள். இனியன் தன் வலது கையால் அவளது கீழ் உதட்டை மெதுவாக வருடினான். அவள் கண்களை மூடிக் கொண்டாள்.</p>
<p>அடுத்த நொடி... அவளது இதழ்களில் மிகவும் மென்மையான ஒரு முத்தத்தைப் பதித்தான்.</p>
<p>சில நொடிகள் மட்டுமே... அதன்பிறகு தானாகவே விலகினான்.</p>
<p>மதுரா எழுந்து சேலையை அகற்ற முனைய,  அப்போது அவளது கையைப் பிடித்த இனியன் மெதுவாகத் தடுத்தான்.</p>
<p>"நான் 'நீ வேணும்'ன்னு சொன்னது... .உடம்பை கேட்டு இல்ல." அவளது கண்களை நேராகப் பார்த்தான்.</p>
<p>"மனசை." மதுராவின் விழிகள் அவனை விட்டு விலகவில்லை.</p>
<p>"நீ எப்ப என்னை முழு மனசோட மன்னிக்கிறியோ.."</p>
<p>அவன் குரல் இன்னும் மென்மையாயிற்று.</p>
<p>"எப்ப உன்னோட விருப்பத்தால... உன்னை என்கிட்ட கொடுக்கணும்னு நினைக்கிறியோ..." அவளது நெற்றியில் முத்தமிட்டவன்,</p>
<p>"அப்பதான் நான் உன்னை முழுசா ஏத்துக்கறேன்." மதுராவின் கண்கள் கலங்கின.</p>
<p>இனியன் மெதுவாகச் சிரித்தான்.</p>
<p>"நான் உன்னை காதலிக்கிற மாதிரி..." என்று அவள் கன்னத்தை வருடியவன், "நீயும் என்னைக் காதலிக்கிறேன்னு ஒருநாள் உன் வாயால சொல்லணும்." சிறிது இடைவெளி... "அந்த நாளுக்காக நான் எவ்வளவு நாள் வேணும்னாலும் காத்திருப்பேன்." என்று கூறி மீண்டும் அவளை அணைத்துக் கொண்டான்.</p>
<p>அதற்குப் பிறகு எந்த எல்லையையும் மீறவில்லை.</p>
<p>அவளை அணைத்தபடியே கண்களை மூடினான்.</p>
<p>ஆனால்... மதுராவுக்கு மட்டும் உறக்கம் வரவில்லை. அவனது ஒவ்வொரு வார்த்தையும் அவள் மனதுக்குள் எதிரொலித்துக் கொண்டே இருந்தது. "உடம்பால இல்ல... மனசால நீ வேணும்..." அந்த வார்த்தைகள் அவளது இதயத்தை மெதுவாக உருக்கின.</p>
<p>இத்தனை நாள்... தன் அருகில் இருந்த மனிதன் ஒரு கணவன் என்றதை தாண்டி 'ஆண்' என்று மட்டுமே நினைத்திருந்தாள். ஆண் என்பதால் தான் தன்னை அடைந்து ஆசை தீர்க்க முனைகின்றான் என்று.</p>
<p>இன்று... முதன்முறையாக... அவளை மனதால் நேசிக்கும் ஒரு காதல்</p>
<p>கணவனாகத் தெரிந்தான். அவனது மார்பில் சாய்ந்தபடி படுத்திருந்த மதுராவின் இதயம்... அவள் அறியாமலே அவனை நோக்கி ஒரு அடி முன்னேறியது.</p>
<p>-தொடரும். </p>
<p>-பிரவீணா தங்கராஜ்.</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>]]></content:encoded>
						                            <category domain="https://onlinetamilnovels.com/community/%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0-%e0%ae%9c%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be-%e0%ae%ae%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a9%e0%af%87-praveena-thangaraj/">மதுர ஜில்லா... மச்சானே! -Praveena Thangaraj</category>                        <dc:creator>Praveena Thangaraj</dc:creator>
                        <guid isPermaLink="true">https://onlinetamilnovels.com/community/topicid/298/</guid>
                    </item>
				                    <item>
                        <title>மதுர ஜில்லா... மச்சானே!-61</title>
                        <link>https://onlinetamilnovels.com/community/topicid/296/</link>
                        <pubDate>Tue, 11 Aug 2026 03:28:37 +0000</pubDate>
                        <description><![CDATA[அத்தியாயம்-61
அகிலன் பேசி முடித்ததும் காவ்யா முகத்தைத் திருப்பிக் கொண்டு நின்றாள். அவளருகே வந்தவன், மெதுவாக அவள் தாடையைத் தொட்டு தன்னைப் பார்க்க வைத்தான்.
&quot;அவன்... இவன்னு நீ பேசறதே தப்பு க...]]></description>
                        <content:encoded><![CDATA[<p>அத்தியாயம்-61</p>
<p>அகிலன் பேசி முடித்ததும் காவ்யா முகத்தைத் திருப்பிக் கொண்டு நின்றாள். அவளருகே வந்தவன், மெதுவாக அவள் தாடையைத் தொட்டு தன்னைப் பார்க்க வைத்தான்.</p>
<p>"அவன்... இவன்னு நீ பேசறதே தப்பு காவ்யா. என்னை என்ன வேணும்னாலும் சொல்லு." என்றான்.</p>
<p>   "போடா..." என்று முகத்தைச் சுளித்தவள், "இது என்னோட பிசினஸ். நான் எவ்வளவு கனவு கண்டேன் தெரியுமா?" என்றாள் கோபமாக.</p>
<p>அகிலன் அமைதியாக அவளைப் பார்த்தான்.</p>
<p>"நெஞ்சைத் தொட்டு சொல்லு காவ்யா... இது உன்னோட கனவா? இல்ல இனியனோட கனவா?</p>
<p>     நீ அமெரிக்காவுல வளர்ந்த பொண்ணு. இந்தியாவுல... அதுவும்... மதுரை மாதிரி ஊர்ல இருந்து ஏற்றுமதி பிசினஸ் பண்ணணும்னு நீ யோசிச்சிருப்பியா?</p>
<p>இந்த ஐடியாவே இனியனோடது. அவன் பல நாளா இதுக்காக ஓடிட்டு இருக்கான். கல்யாணத்துக்கு முன்னாடியே எல்லா ஏற்பாடும் பண்ணிட்டான். இப்போ பேங்க் லோனும் சேன்ஷன் ஆயிருக்கு.</p>
<p>இப்ப நாம இதே நேரத்துல இதே பிசினஸ் ஆரம்பிச்சா... அவன் மனசுல என்ன தோணும்? கோபம் வராதா? பழி வாங்க தோணாதா?</p>
<p>அதனாலதான் நான் சொல்றேன்... நாம கொஞ்சம் சைலண்ட்டா விலகி வழி விட்டுடலாம்." காவ்யா உடனே மறுத்தாள்.</p>
<p>"என்னால எப்படி சும்மா இருக்க முடியும் அகில்? இந்த ஊர் ரொம்ப அழகுதான். பசுமை, அமைதி... எல்லாமே பிடிக்கும். ஆனா ஒரு கட்டத்துக்கு மேல என்னால சுயமா சம்பாதிக்காம இருக்க முடியாது.</p>
<p>    உனக்கே தெரியும்... அமெரிக்காவுல ஸ்கூல் படிக்கறப்பவே பார்ட் டைம் ஜாப் பாக்க ஆரம்பிச்சிடுவாங்க. நான் பதினாலு வயசுல இருந்து சம்பாதிச்சு பழகியவ.</p>
<p>என்னால பின்னாடி போக முடியாது." என்று படபடவென கூற, அகிலன் ஆழமாக மூச்சை இழுத்தான்.</p>
<p>"அப்ப இனியன் மட்டும் பின்னாடி போவானா? அவன் இடம் பார்த்துட்டான்... லோன் வந்துடுச்சு... இது தெரிஞ்சதும் அவன் எவ்வளவு உடைஞ்சிருப்பான் தெரியுமா?</p>
<p>ஏற்கனவே மதுராவுக்காக அவன் வாழ்க்கை எவ்வளவோ கஷ்டப்பட்டிருக்கு.</p>
<p>   இப்போ நம்மால ஒரு பிரச்சனை முளைக்கக் கூடாது காவ்யா. ப்ளீஸ்..." இருவருமே தங்கள் முடிவில் உறுதியாக இருந்தனர்.</p>
<p>ஒருவர் மீது ஒருவர் கோபம் கொள்ளாமல், ஆளுக்கொரு பக்கம் சென்று அமர்ந்தனர்.</p>
<p>மதியம் மீனாட்சி சாப்பிட அழைத்தபோது, இருவரும் முகத்தைத் தூக்காமல் வந்து அமர்ந்தனர்.</p>
<p>"என்னப்பா? என்னாச்சு?" என்று மீனாட்சி கேட்டதும், காவ்யா நடந்ததை எல்லாம் மளமளவென்று சொல்லிவிட்டாள்.</p>
<p>அதியமான் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தவர், "பையன் சொல்றதும் சரிதானேம்மா..." என்றார்.</p>
<p>அந்த பதில் காவ்யாவுக்குப் பிடிக்கவில்லை.</p>
<p>எதுவும் பேசாமல் சாப்பிட்டு முடித்தவள் நேராக அறைக்குள் சென்றுவிட்டாள்.</p>
<p>மீனாட்சியும் அதியமானும் அகிலனைப் பார்த்து,</p>
<p>"ஏய்யா... சண்டை பெருசாகாம பார்த்துக்கோ. பொறுமையா புரியவை." என்றார்.</p>
<p>"சரிம்மா..." என்றவன் அறைக்குள் வந்தான்.</p>
<p>மெத்தையில் படுத்தபடி நகத்தை கடித்துக் கொண்டிருந்தாள் காவ்யா.</p>
<p>அமைதியாக அருகில் அமர்ந்த அகிலனின் கை, அவள் இடையை மெதுவாக வருடியது.</p>
<p>அதைத் தட்டிவிட மனம் வரவில்லை. குறுகுறுப்பாக நெளிந்தவள், திடீரென்று அவன் கன்னத்தில் வெறித்தனமாக கடித்து வைத்தாள்.</p>
<p>  "அய்யோ... வலிக்குது காவ்யா." என்று சிரித்தபடியே வலியைத் தாங்கினான். அவள் கோபம் தீரும் வரை அமைதியாக அந்தக் கடியை வாங்கிக் கொண்டிருந்தான். சில நொடிகள் கழித்து அவனை விட்டவள் அவனை கூடுமானளவு முறைத்து விட்டு திரும்பினாள். </p>
<p>  அகிலன் கன்னத்தை தேய்த்து, வலியை தாங்கியிருக்க, காவ்யா அகிலன் முன் வந்தாள். "என் கூட வாங்க." என்றாள்.</p>
<p>"எங்க?" என்றான் புரியாமல். </p>
<p>"பெரிய மச்சான்கிட்ட பேசணும்." என்றாள். </p>
<p>"காவ்யா..." என்று மறுக்க முயன்றான் அகிலன்.</p>
<p>"பெரிய மச்சான்னு மரியாதையா தான் பேசுறேன். எந்தப் பிரச்சனையும் பண்ண மாட்டேன். நீங்க கூட வந்தா மட்டும் போதும்." அவள் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டே வெளியே வந்தாள்.</p>
<p>   எப்படியும் மருத்துவமனையில் அகிலனிடம் முதிர்ந்தவளாக தான் பேசினாள். அதே போல நிலானி வீட்டிலும் இனியன் இருந்த போதும் ஏதும் பிரச்சனை இல்லாமல் போனதை நம்பி இங்கும் அழைத்து செல்ல புறப்பட்டான். </p>
<p>வேறு வழியில்லாமல் அகிலனும் புல்லட்டை எடுத்தான். அவன் ஏறி அமர்ந்ததும், இருபுறமும் கால் போட்டு அவன் பின்னால் ஏறி அமர்ந்தாள் காவ்யா.</p>
<p>"ஆங்... அவன் வீட்டுக்கு போங்க..." என்று கூற, அகிலன் கண்ணாடியில் பார்க்க ''ஸப்பா... பெரிய மச்சான் வீட்டுக்கு போங்க." என்று திருத்திக் கொண்டாள்.</p>
<p>அகிலனுக்குள் லேசான புன்னகை பிறந்தது.</p>
<p>இனியன் வீட்டை நெருங்கிய பொழுது, புல்லட்டின் சத்தம் கேட்டதும் மதுரா கிச்சனில் இருந்தவாறு 'அகிலன் மச்சான் வண்டி. அடுத்த நொடியே தலையசைத்தாள்.</p>
<p>'இல்ல... அவர் இங்க வர மாட்டாரு.' என்று நினைத்தவள், மாங்காய் ஊறுகாய்க்கு தேவையான பொருட்களை எடுத்துக் கொண்டிருந்தாள்.</p>
<p>ஆனால் சில விநாடிகளில் புல்லட் வீட்டின் முன் நின்ற சத்தம் கேட்டது.</p>
<p>கூடத்தில் அமர்ந்திருந்த இனியனும் எழுந்து நின்றான்.</p>
<p>அகிலனும் காவ்யாவும் உள்ளே வந்தனர். "வாய்யா அகிலா... வாம்மா..." என்று வேல்விழி வரவேற்றார்.</p>
<p>அருளாளனும் உள்ளிருந்து வெளியே வந்தார்.</p>
<p>காவ்யா சிறிது பதட்டத்துடன்,</p>
<p>"நல்லாயிருக்கேன் பெரிய அத்தை... நான்... பெரிய மச்சான்கிட்ட பேச வந்திருக்கேன் அத்தை" என்றாள். அந்தச் சூழலின் இறுக்கம் கொஞ்சம் தளர்ந்தது.</p>
<p>அப்போது உள்ளிருந்து வந்த மதுராவிடம், "ஐஸ் வாட்டர் கொஞ்சம் கொண்டு வா." என்றான் இனியன்.</p>
<p>மதுரா உடனே ப்ரிட்ஜ் தண்ணீரை எடுத்து வந்து கொடுத்தாள்.</p>
<p>'காவ்யாவுக்கு கொடு.' என்றது போல கண்ணசைக்க "தேங்க்யூ..." என்று வாங்கிக் குடித்தாள் காவ்யா.</p>
<p>"உட்காருங்க..." என்று அகிலனை அமர வைத்தான் இனியன். அனைவரும் அமைதியாக அமர்ந்ததும்,</p>
<p>"என்ன பேசணும்?" என்று கேட்டான்.</p>
<p>அகிலன் காவ்யாவைப் பார்த்தான். அவளே பேச ஆரம்பித்தாள்.</p>
<p>காவ்யாவே மெதுவாகத் தொண்டையைச் செருமிக் கொண்டு பேச ஆரம்பித்தாள்.</p>
<p>"நான் இந்தியாவுக்கு வந்து கல்யாணம் பண்ணிட்டு இங்கேயே செட்டில் ஆனதும், ஒரு பிசினஸ் ஆரம்பிக்கணும்னு முடிவு பண்ணியிருந்தேன்.       அமெரிக்காவுல ரிசப்ஷனுக்கு வந்த சில பிசினஸ்மேன்கள்கிட்ட கூட பேசினேன். அவங்ககிட்ட இருந்து ஆர்டரும் வாங்கியிருக்கேன்.</p>
<p>அதுக்கப்புறம் இடம், மெஷின், லோன் எல்லாத்தையும் பார்த்து ஆரம்பிக்கலாம்னு யோசித்தது. </p>
<p>   ஆனா... நாங்க பார்க்க நினைச்ச அதே இடத்தை..." என்று பேசிக் கொண்டிருந்தவள் ஒரு நொடி அகிலனைப் பார்த்தாள்.</p>
<p>அகிலன் கண்களாலேயே, 'மெதுவா பேசு...' என்று சைகை செய்தான். "அதே இடத்தை... நீங்க விலைக்கு கேட்டிருக்கீங்கள்னு தெரிஞ்சுச்சு. பாதி அமௌன்ட் கூட கொடுத்தாச்சுனு சொன்னார்." அவள் பேசி முடிக்கவும், இனியன் அமைதியாக தலையசைத்தான்.</p>
<p>"ஆமா... பாதி பேமெண்ட் கொடுத்துட்டேன். லுக் அது உங்களுக்குப் போட்டியா இல்லை. நான் ஏற்கனவே முடிவு பண்ணி, அதுக்கான எல்லா வேலையும் முடிச்சிட்டிருந்தேன்.</p>
<p>உண்மையைச் சொல்லணும்னா. நீயும் இதே பிசினஸை இங்கே ஆரம்பிக்கப் போறேன்னு நான் எதிர்பார்க்கவே இல்ல.</p>
<p>   இப்பவும் சொல்றேன்...</p>
<p>எனக்கு யார்கிட்டயும் போட்டி போடணும்னு இப்ப தோணலை.</p>
<p>பிரச்சனை வளர்க்கணும்னும் இல்லை. என்னோட வாழ்க்கையை... மதுராவோட நிம்மதியா வாழணும்.</p>
<p>அவ்வளவுதான்." அவன் பேச்சு முடிந்ததும் சில நொடிகள் அமைதி நிலவியது.</p>
<p>காவ்யா அவனை நேராகப் பார்த்தாள். "நானும் போட்டிக்காக இதை பண்ணல பெரிய மச்சான். எனக்கும் பிசினஸ் ஆரம்பிக்கணும்னு ஆசை. அதைதான் சொல்ல வந்தேன். ஆனா..." என்று இழுத்தாள்.</p>
<p>"ஆனா...?" என்று இனியன் கேட்டான். காவ்யா ஆழமாக மூச்சை இழுத்தாள். "நாம தனித்தனியா ஆரம்பிக்கறதுக்கு பதிலா... முன்னாடி பேசியது மாதிரி... பாதி இன்வெஸ்ட்மெண்ட் நீங்க...</p>
<p>பாதி இன்வெஸ்ட்மெண்ட் நான்... இரண்டு பேரும் சேர்ந்து ஆரம்பிக்கலாமா?" என்றாள். </p>
<p>அவள் கேட்ட அந்த ஒரு கேள்வியில் அறையே அமைதியாகிப் போனது.</p>
<p>அகிலன் கூட அதிர்ச்சியுடன் அவளைப் பார்த்தான்.</p>
<p>"காவ்யா..." என்று அவன் மெதுவாக அழைத்தான்.</p>
<p>"நான் பேசிட்டு இருக்கேன் அகில்..." என்று கையை நீட்டி அவனை அமைதிப்படுத்தினாள்.</p>
<p>பிறகு மீண்டும் இனியனைப் பார்த்தாள்.</p>
<p>"அமெரிக்கா சைட்ல இருக்கிற ஆர்டர்ஸ், கிளையன்ட்ஸ், மார்க்கெட்டிங்... அதை நான் பார்த்துக்கறேன்.</p>
<p>   இங்க தயாரிப்பு, விவசாயிகள், பேக்கிங், வேலைகள்..</p>
<p>அதை நீங்க பார்த்துக்கோங்க.</p>
<p>ரெண்டு பேருக்கும் தெரிஞ்ச விஷயத்தை ரெண்டு பேரும் சேர்ந்து பண்ணலாமே." இனியன் பதில் சொல்லாமல் அகிலனைப் பார்த்தான்.</p>
<p>அகிலனோ சங்கடமாக பார்வையிட்டு "நான் எவ்வளவோ சொல்லிட்டேன். இந்த பிசினஸே வேண்டாம்னு..</p>
<p>கேட்கவே இல்ல. இதுல பார்ட்னரா ஆரம்பிக்க இங்க வந்து பேசறா. நீ வேண்டாம்னு சொன்னா... அதுக்கேத்த மாதிரி சமாதானப்படுத்தி கூட்டிட்டு போயிடுவேன்." என்றான் இனியனிடம். </p>
<p>இனியன் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தான். அப்போது தான் அகிலனின் கன்னத்தில் லேசாக இருந்த பல் தடம் அவன் கண்ணில்பட்டது.</p>
<p>ஒரு நொடி புருவத்தை உயர்த்திப் பார்த்தவன்,</p>
<p>இனியனுக்கு லேசாக புரிந்தது. ஏற்கனவே காவ்யா அகிலன் சொல் பேச்சை மீற, அகிலன் தடுத்து, அதற்கு கடித்து வைத்து அழைத்து வந்திருப்பது.</p>
<p>அகிலனுக்கும் இனியன் பார்வையையும் காவ்யா செய்த வேலையை யூகித்திட்டானென உடனே புரிந்துவிட்டது. அவன்</p>
<p>அறியாமலே கையை எடுத்துக் கன்னத்தைத் தடவினான்.</p>
<p>அப்போதுதான் பல்தடம் இன்னும் அழியாமல் இருப்பதை உணர்ந்தவன், சட்டென்று கன்னத்தை மூடிக் கொண்டான்.</p>
<p>அதைப் பார்த்த இனியனின் உதட்டோரம் வெளிப்பட்ட சிரிப்பு அடக்கினான்.</p>
<p>அறையில் இருந்த இறுக்கம் கொஞ்சம் தளர்ந்தது.</p>
<p>சிறிது நேரம் யோசித்த இனியன், மீண்டும் காவ்யாவை நோக்கிப் பார்த்தான். "எனக்கு எக்ஸ்போர்ட் சைட்ல ஆட்கள் இன்னும் ரெடியா இல்லை. உன்னோட பார்ட்னரான </p>
<p>அந்த வேலை குறையும். ஆனா... இந்த காம்பினேஷன் சரியா வருமா?" என்று மலைத்தான்.‌</p>
<p>"ஏன் வராது?" என்று உடனே கேட்டாள் காவ்யா.</p>
<p>இனியன் மெதுவாகத் தலையசைத்தான்.</p>
<p>"ஏற்கனவே நிறைய கெட்ட பேரை வாங்கிட்டேன்.</p>
<p>போட்டிக்காரன்... பொறாமைக்காரன்... என்னென்னவோ....இப்ப சேர்ந்து ஆரம்பிச்சிட்டு நாளைக்கு ஏதாவது சின்ன பிரச்சனை வந்தாலும்... அது மறுபடியும் என் வாழ்க்கையையே பாதிக்குமோன்னு இருக்கு." அவன் இதுவரை காவ்யாவைப் பார்த்துப் பேசிக் கொண்டிருந்தவன், இம்முறை மெதுவாக மதுராவைப் பார்த்தான். "ஏற்கனவே நான் இழந்ததை... திரும்பக் கிடைக்கும்னு நம்பி இப்போ தான் வாழ ஆரம்பிச்சிருக்கேன்.</p>
<p>மறுபடியும் எந்த பழியும்... எந்த அவப்பேரும்... என் வாழ்க்கை மேல விழுந்தா...அதை என்னால தாங்க முடியாது..." என்று மெதுவாகக் கூறினான்.</p>
<p>அவன் பார்வையை சந்தித்த மதுரா அமைதியாக நின்றாள்.</p>
<p>அவன் மனதில் இருந்த பயம் அவளுக்குப் புரிந்தது.</p>
<p>அறையில் மீண்டும் சில நொடிகள் அமைதி நிலவியது. </p>
<p>இனியன், மெதுவாக நிமிர்ந்து காவ்யாவைப் பார்த்தான்.</p>
<p>"நான் பெர்சனலை நுழைக்க எனக்கு எதுவுமில்லை. இது பிசினஸ்" என்றாள் காவ்யா.</p>
<p>"அப்ப... சேர்ந்து ஆரம்பிக்கலாம்னு சொல்லறியா?" என்றான் இனியன்.</p>
<p>"அதுக்குத்தான் இவ்வளவு தூரம் வந்து பேசிட்டு இருக்கேன்  பெரிய மச்சான்." என்றாள் காவ்யா புன்னகையுடன்.</p>
<p>அகிலன் இன்னும் நம்ப முடியாமல் இருவரையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தான்.</p>
<p>"அப்போ... கம்பெனிக்கு என்ன பேர் வைக்கலாம்?" என்று இனியன் கேட்டான்.</p>
<p>அந்தக் கேள்வி வந்ததும் காவ்யா ஒரு நொடி அமைதியானாள்.</p>
<p>முன்பு காதலர்களாக பேசிக் கொண்டிருந்தபோது, 'இனிகவி' என்று பெயர் வைத்தால் நன்றாக இருக்கும் என்று இருவரும் பேசியது நினைவுக்கு வந்தது.</p>
<p>இப்போது அந்தப் பெயர் பொருந்தாது. சில நொடிகள் யோசித்த காவ்யா மெதுவாக "பெயரையும் நீயே வச்சிடு" என்றாள். </p>
<p>அகிலனோ அருகிலிருந்து "நீங்க" என்று சட்டென திருந்தினான்.</p>
<p>"பெயரை... நீங்களே சூஸ் பண்ணுங்க பெரிய மச்சான்." என்றாள் காவ்யா.</p>
<p>இனியன் அருகில் நின்றிருந்த மதுராவைப் பார்த்தான்.</p>
<p>அவளோ புரியாமல் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள். சில நொடி மடமடவென கணக்கிட்டு, "மகா அக்ரோ பிரைவேட் லிமிடெட்..." என்று மெதுவாக உச்சரித்தான்.</p>
<p>"மகா...?" என்று காவ்யா புருவம் உயர்த்தினாள். இனியன் புன்னகைத்தான்.</p>
<p>"Ma... மதுராவோட முதல் எழுத்து... Kaa... காவ்யாவோட முதல் எழுத்து...இரண்டையும் சேர்த்தா 'MaKaa'. நான் ஆல்ரெடி மதுரா அக்ரோ பிரைவேட் லிமிடெட் தான் பிளான் பண்ணினேன். பட் பாட்னரா இருந்தா ஒரு பக்கமா நேம் சார்ந்திடும்ல. இப்பன்னா.. உன்னோட நேம் கலந்திருக்கும்" என்றான்.</p>
<p>  "தமிழ்ல படிச்சா 'மகா'."வேல்விழி உடனே முகம் மலர்ந்தார்.</p>
<p>"அட... மகாலட்சுமி பேராச்சே! ரொம்ப நல்லா இருக்கு பா." என்றார். அருளாளனும் வேடிக்கை பார்த்தவராய் நின்றார்.‌</p>
<p>  அப்பெயரை கேட்டுக் காவ்யா ஆங்கிலத்தில் மனதிற்குள் எழுத்துகளை வரிசைப்படுத்திப் பார்த்தாள்.</p>
<p>"MaKaa...? H போடாம K போட்டிருக்கிங்களா?" என்று சிரித்தபடி கேட்டாள்.</p>
<p>"ஆமா..." என்று இனியன் தலையசைத்தான்.</p>
<p>"தமிழ்ல 'மகா'ன்னு வரணும். ஆங்கிலத்துல கொஞ்சம் வித்தியாசமா, டிரெண்டா இருக்கட்டும்னு MaKaaன்னு யோசனை. அதோட... அம்மா சொன்ன மாதிரி மகாலட்சுமி பேரும் வந்த மாதிரி இருக்கும். சாமி பெயருல" என்றான்.</p>
<p>"நைஸ்..." என்று காவ்யா மனதாரப் பாராட்டினாள்.</p>
<p>"எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு." என்றாள்.‌</p>
<p>அகிலனும் மெதுவாகச் புன்னகைத்தான். "பேரே அருமையா இருக்கு." என்றாள் காவ்யா. </p>
<p>இனியன் உடனே, "அப்போ... பார்ட்னர்ஷிப் அக்ரீமெண்ட் ரெடி பண்ணலாம். கம்பெனி ரெஜிஸ்ட்ரேஷன், ஜிஎஸ்டி, ஐஇசி, எக்ஸ்போர்ட் லைசென்ஸ் ஒண்ணொண்ணா ஆரம்பிச்சிடலாம்." என்று கேட்க, "டன்." என்று காவ்யா உடனே கையை நீட்டினாள்.</p>
<p>இனியனும் புன்னகையுடன் அவள் கையைப் பற்றிக் குலுக்கினான்.</p>
<p>அந்தக் கை குலுக்கலில் இரண்டு பேரின் பிசினஸ் ஒப்பந்தம் மட்டுமல்ல... இரண்டு குடும்பங்களுக்கு இடையே இருந்த மனக்கசப்பும் கொஞ்சம் கொஞ்சமாகக் கரையத் தொடங்கியது.</p>
<p>-தொடரும். </p>
<p>-பிரவீணா தங்கராஜ்.</p>
<p>&nbsp;</p>]]></content:encoded>
						                            <category domain="https://onlinetamilnovels.com/community/%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0-%e0%ae%9c%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be-%e0%ae%ae%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a9%e0%af%87-praveena-thangaraj/">மதுர ஜில்லா... மச்சானே! -Praveena Thangaraj</category>                        <dc:creator>Praveena Thangaraj</dc:creator>
                        <guid isPermaLink="true">https://onlinetamilnovels.com/community/topicid/296/</guid>
                    </item>
							        </channel>
        </rss>
		