<?xml version="1.0" encoding="UTF-8"?>        <rss version="2.0"
             xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
             xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
             xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
             xmlns:admin="http://webns.net/mvcb/"
             xmlns:rdf="http://www.w3.org/1999/02/22-rdf-syntax-ns#"
             xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/">
        <channel>
            <title>
									பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம் - Praveena Thangaraj - onlinetamilnovels.com Forum				            </title>
            <link>https://onlinetamilnovels.com/community/%e0%ae%aa%e0%af%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80%e0%ae%af%e0%af%86%e0%ae%a9%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%9c%e0%ae%a9%e0%af%8d/</link>
            <description>onlinetamilnovels.com Discussion Board</description>
            <language>en-US</language>
            <lastBuildDate>Fri, 11 Sep 2026 11:05:37 +0000</lastBuildDate>
            <generator>wpForo</generator>
            <ttl>60</ttl>
							                    <item>
                        <title>பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்-14</title>
                        <link>https://onlinetamilnovels.com/community/topicid/358/</link>
                        <pubDate>Fri, 11 Sep 2026 01:06:05 +0000</pubDate>
                        <description><![CDATA[அத்தியாயம்-14 
   மதியம் சாரதி பேருந்தில் ஏறிய லாவண்யாவோ, அவனையோ விழுங்க, சாரதி அவளிருந்த பக்கம் கூட திரும்பி பார்க்கவில்லை. 
  ஆனால் அவள் அண்ணாநகரில் ஏறிய பொழுது கவனித்தான். பேருந்தின் கட...]]></description>
                        <content:encoded><![CDATA[<p>அத்தியாயம்-14 </p>
<p>   மதியம் சாரதி பேருந்தில் ஏறிய லாவண்யாவோ, அவனையோ விழுங்க, சாரதி அவளிருந்த பக்கம் கூட திரும்பி பார்க்கவில்லை. </p>
<p>  ஆனால் அவள் அண்ணாநகரில் ஏறிய பொழுது கவனித்தான். பேருந்தின் கடைசி பின்னிருக்கையில் அமரவும் அந்தபக்கமே திரும்பாது தவிர்த்தான். </p>
<p>லாவண்யா தான் அவனையே பார்த்து 'பார்க்கவே மாட்டேங்கறார்.‌ ரொம்ப காயப்படுத்திட்டேனோ?' என்று தவித்து தேவியிடம் கேட்டாள். </p>
<p>"அம்மா தாயே... நீயும் அந்தண்ணாவும் பேசறதையே என்னால இன்னும் ஜீரணிக்க முடியலை. இதுல அவரை நீ விரும்பற மாதிரி இருக்கு. எனக்கு என்ன சொல்லறது தெரியலை. </p>
<p>  பிராக்டிகல்லா ஒன்னு சொல்லவா? நீ டிகிரி படிச்சு முடிக்க இந்த காலேஜ்ல படிக்க வந்திருக்க. ஆனா அவர்... கண்டெக்டர். இதை நான் சொல்லலைடி... நீ தான் நேத்து... அவரை சொன்ன. ஆப்ட்ரால் கண்டெக்டர்னு குறிப்பிட்ட. இப்ப என்னடான்னா... காலையில இருந்து ஒரு மார்க்கமா யோசிக்கற. </p>
<p>   இப்ப இப்படி பார்க்கற." என்றதும், "அவர் அதனால தான் என்னை கவனிக்காத மாதிரி நடிக்கறார். </p>
<p>  நான் அவரிடம் பேசணும்" என்றாள்.‌</p>
<p>தேவியோ "உதைப்பட போற... முதல்ல இது சரிப்பட்டு வருமானு யோசி." என்றாள். </p>
<p>  லாவண்யாவோ 'இதுல யோசிக்க என்னயிருக்கு. நான் அவரை கவனிச்சதுல இருந்து, நல்ல கேரக்டரா தான் தெரியறார்.' என்று மனதில் கூறிக் கொண்டாள். </p>
<p>டிப்போ வரும் வரை சாரதியையே பார்வையிட, அவன் திரும்பாமல் இருந்தான். "பின்னாடி யாராவது டிக்கெட் வாங்கணும்னா கொடுத்து விடுங்க." என்று குரல் கொடுத்தான். </p>
<p>   "பஸ் பாஸ் இருக்கறவங்க நீங்களே டிக் பண்ணிக்கோங்கம்மா" என்று அடுத்து அதையும் தெரிவிக்க, இறக்கும் நேரம் கடைசியில் இறங்க முடிவெடுத்தாள். </p>
<p>  "ஏங்க.. என்னங்க" என்று லாவண்யா கூப்பிட, தேவியோ "லாவண்யா என்ன பண்ணற. பஸ்லயிருந்து எல்லாரும் இறங்கிட்டாங்க. இறங்கு" என்று கூற, "முத்து அண்ணா‌... ஸ்மோக் பண்ண போறிங்களா... எனக்கு தொண்டை கட்டியிருக்கு.. ஒரு தூதுவளை மிட்டாய் வாங்க வர்றேன்" என்று கூடவே சென்றான். </p>
<p>  "வேண்டுமின்னே அவாய்ட் பண்ணறார்" என்று லாவண்யா வருந்திட, "இவ வேற... வாடி" என்று லாவண்யாவை இழுத்துக் கொண்டுச் சென்றாள். </p>
<p>  லாவண்யா சோகமாய் வரவும், "உங்க வீட்ல துப்பட்டா இல்லாத சுடிதாரே வாங்க மாட்டாங்க. அப்படி துப்பட்டா போடாம ஆம்பள எதிர வந்தா, உங்கம்மா அதுக்கே அடி வெளுத்துடுவாங்கனு சொல்வ. காதலிக்கறதுக்கு மட்டும் திட்ட மாட்டாங்களா? ஒரு தடவைக்கு இரண்டு தடவை யோசி." என்று தேவி அவள் வீட்டிற்கு சென்றிட, லாவண்யா வீட்டிற்கு வந்தப்பொழுது தாத்தா ஆவுடையப்பன், டிவியை பார்த்தபடி இருந்தார். </p>
<p>இஷிதா இன்னமும் பள்ளியிலிருந்து வர தாமதமாகும். இலக்கியாவோ நாளை சமையலுக்கு என்று, முருங்கை கீரையை ஆய்ந்துக் கொண்டிருந்தார்.</p>
<p>   லாவண்யா வந்ததும் டிபன் பாக்ஸை கிச்சனில் கழுவி வைத்து விட்டு, முகமலம்பினாள். </p>
<p>நைட்டியை மாற்ற நினைத்தவள், ஏதோ தோன்றவும், அப்படியே சுடிதாரே இருக்கட்டுமென வெளிவந்தாள். </p>
<p>  "நான் கீரையை ஆயட்டுமா சித்தி" என்று கேட்க, "முடிஞ்சுதும்மா." என்று எந்திரித்தாள். </p>
<p>  பெரும்பாலும் லாவண்யா அவளது உடையை காலையிலேயே துவைத்து விடுவாள். இலக்கியாவுக்கு உதவியாக சமையலில் காய்கறி நறுக்கி தந்து, உதவுவாள். பாத்திரம் கழுவுவாள். </p>
<p>   வீட்டை பெருக்கி கூட்டி, இஷிதாவுக்கு தலைவாறி என்று இலக்கியாவுக்கு பாதி வேலையை குறைத்து விட்டிருந்தாள். </p>
<p>   கல்லூரியிலிருந்து வந்ததும், மாடியில் தேவியோடு பேசியபடி துணியையும் மடித்து வைத்திடுவாள். அத்துடன் லாவண்யா வந்ததிலிருந்து, இஷிதாவும் அவளோடு உறங்குவதால், இலக்கியா சுரேஷுற்கும் தனிமை கிடைக்கின்றது என்று‌கூட சொல்லலாம்.</p>
<p>  லாவண்யா ஏதேதோ யோசிக்க தேவி வந்து நின்றாள். </p>
<p>  "சித்தி மாடில துணி எடுத்துட்டு மடிச்சிட்டு வந்துடறேன்." என்று இருவரும் சென்றார்கள்.</p>
<p>  இலக்கியாவோ "ஏன்டி.. காலையிலருந்து இப்பவரை சேர்ந்து பேசிட்டு திரியறிங்க. அப்படி என்ன தான் பேசுவிங்க" என்று சலித்திட தேவியோ "பிரெண்ட்ஸ்னா ஆயிரம் இருக்கும். பேசவா கன்டென்டுக்கு பஞ்சம்." என்று சிரித்து மாடிக்கு நடந்தார்கள். </p>
<p>  "முடிவு பண்ணிட்டேன் தேவி." என்றாள். தேவியோ "என்னனு." என்று குழம்ப, "பார்க் போகலாமா? நான் அவரிடம் பேசணும்." என்று துணைக்கு அழைத்தாள். </p>
<p>தேவியோ "விளையாடறியா?" என்று கேட்டு மறுக்க, "ப்ளீஸ் ஒரே ஒரு‌முறை‌ நான் அவரிடம் சாரி மட்டுமாவது கேட்டுடறேன்." என்றாள்.</p>
<p>  "உன் சாரியை டிப்போல பஸ் ஏறுறப்ப சொல்லு. 'அண்ணா அண்ணா.. நான் அன்னிக்கு 'ஆப்ட்ரால் கண்டெக்டர்'னு பேசிட்டேன்.‌ அதை மனசுல வச்சிக்காதிங்கனு சொல்லு. சொல்லணும்னு கூட அவசியமில்லை.... நீ பாட்டுக்கு பஸ்ல ஏறினமா படிக்க வந்தம்மானு இரு." என்று கூற, லாவண்யாவோ "நான் சாரதியை அண்ணானு எல்லாம் சொல்ல மாட்டேன். நான் அவரை அண்ணாவா பார்க்கலை" என்றாள் தலைகுனிந்து. </p>
<p>தேவியோ லாவண்யாவின் கண் கலங்க நின்ற கோலத்தை கவனித்து "அண்ணாவா பார்க்கலையா... ஜோலி முடிஞ்சுது... வந்து தொலையறேன். உங்க சித்தியிடம் பார்க் போயிட்டு வர்றேன்னு சொல்லு" என்றாள்‌.</p>
<p>  லாவண்யா தலையாட்டி நடக்க, "இ...இஷிதாவை அனுப்புவாங்களே" என்று தேவி லாவண்யாவிடம் கேட்க, "அவளுக்கு டெஸ்ட் இருக்கு. சித்தி தமிழ் சொல்லி கொடுக்கறப்ப இரண்டடி போடுவாங்க. நான் தடுப்பேன். அதனால படிக்கறப்ப நான் அவளுக்கு சப்போர்ட் பண்ணிட கூடாதுனு சொல்லிட்டு கிளம்பலாம்" என்றாள் லாவண்யா. </p>
<p>'காதலிச்சா பொய் பேசுவாங்கனு சொல்வாங்க. இப்ப தான் பார்த்துட்டு இருக்கேன்.' என்று முனங்கி தேவி நடக்க, லாவண்யாவோ ''சித்தி இஷிதாவுக்கு தமிழ் சொல்லி தரப்போறிங்களா? எனக்கு எக்ஸாம் முடிந்ததால தேவியோட பார்க் மட்டும் போய் நடந்துட்டு வர்றோம்" என்றாள். </p>
<p>''ஏன்டி தேவி.. உங்க அக்கா தானே ஜிம்முக்கு போறா... நீ என்ன பார்க்குல நடக்குற. நீயும் ஜிம்ல சேர்ந்துக்க வேண்டியது தானே?" என்றார் இலக்கியா. </p>
<p>"அவ வேலைக்கு போய் பணம் வச்சிருக்கா ஆன்ட்டி. எனக்கு அப்படியா. அதுவும் இல்லாம கதையடிக்க போறேன். நான் ஏன் உடம்பை குறைக்கணும். அவ குறைக்கணும்னா அது அவ தலையெழுத்து" என்றாள்.</p>
<p>தேவி லாவண்யா பார்க் போவதாக சொல்லவும், இஷிதாவோ தமிழ் புத்தகத்தை வைத்து பாவமாக பார்த்து வைத்தாள். </p>
<p>  லாவண்யா தேவி இருவருமே பார்க்கிற்கு செல்லாமல் வெளியே உள்ள இடத்தில் நின்றியிருந்தனர். </p>
<p>  "இப்படி தேவையில்லாம இந்த ரோட்ல நிற்பேன்னு கனவுல கூட நினைக்கல" என்று தேவி போவோர் வருவோரை வேடிக்கை பார்த்தாள். </p>
<p>   "இந்த நேரம் தானே டூயூட்டி முடிஞ்சு அவர் போவாரு? ஏன் இன்னும் காணோம்'' என்று லாவண்யா தேவியிடம் கேட்க, "அந்தண்ணா எப்ப போகும் வரும்னு நான் எங்கடி தெரிந்து வச்சிருந்தேன். ஏதோ பேசறப்ப கவனிச்சேன் சொன்னேன்." என்றாள். </p>
<p>தேவியிடம் எது பேசினாலும் அலுத்துக் கொள்வதை லாவண்யாவுக்கு புரிந்தது.   </p>
<p>   தான் தவறான பாதையில் செல்கின்றோமோ? அதனால் கோபப்படுகின்றாளா? என்று கூட கேட்டாள். </p>
<p>"ஆங்." என்று முறைத்துக் கொண்டிருக்க, "அவர் வர்றார்." என்று சாலையில் பார்த்தாள். </p>
<p>   சாரதி பைக்கில் தான் வந்துக் கொண்டிருந்தான். </p>
<p>   தேவி லாவண்யாவை கண்டதும், மெதுவாக வண்டியை விடுத்தான். லாவண்யா ஏதோ பேச வருவது போல தயங்க, சாரதி நிற்காமல் சென்றான். </p>
<p>  ஏதேனும் நின்று அவளிடம் கேட்டு, அவள் தங்கை அங்கே விளையாடியபடி இருந்தாள். இந்த அவமானம் உனக்கு தேவையா?' என்று மனசாட்சியே கேட்குமென அவளை தாண்டி வண்டியை இயக்கி சென்றான். </p>
<p>தேவியோ ''அப்பாடி அவர் போயிட்டார். நீ இங்க நிற்கவும் அவரும் எப்படி இங்க நின்று உன்னிடம் பேச வருவார்.   </p>
<p>   நீ அவரை தான் பார்க்க வந்தேன்னு கூட அவருக்கு தெரியாது. இதுக்கு தான் சொன்னேன். பஸ் ஏறுறப்ப சாரி சொல்லி பேசிடுனு." என்று கூற லாவண்யாவோ தலைகுனிந்து வாடினாள். </p>
<p>   உண்மை தானே.. நானாக அவரிடம் பேச வந்ததை அவருக்கு எப்படி தெரியும்? என்று கலக்கத்துடன் ஒரெட்டு முன்னே வைக்கும் நேரம் சாரதியின் பைக் மீண்டும் யூடர்ன் போட்டு திரும்புவதை தேவி கவனித்தாள். </p>
<p>லாவண்யாவின் புஜத்தை சுரண்டி, சாரதியை சுட்டிக் காட்டினாள். </p>
<p>  சாரதி லாவண்யாவை கண்டு பூங்காவினுள் செல்ல வண்டியை நிறுத்தினான். லாக் போடப்பட்டுள்ளதா என்று நன்றாக சரிப்பார்த்துக் கொண்டு, பூங்காவுக்குள் நுழைந்தான். </p>
<p>   பைக் நிறுத்தியதற்கு நேராக உள்ள சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்து பைக்கை பார்த்து லாவண்யாவையும் கவனித்தான். </p>
<p>   லாவண்யா ''அவருக்கு நான் அவரிடம் பேச வந்திருக்கேன்னு புரிந்துடுச்சு" என்று தேவியை அழைத்து பூங்காவினுள் வந்தாள். </p>
<p>தேவிக்கும் ஆச்சர்யம் தான்‌. இந்த அண்ணா வந்து நிற்கின்றாரென. </p>
<p>   லாவண்யா தேவி இருவரும் சாரதிக்கு நேர் எதிரில் உள்ள சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்தார்கள். </p>
<p>  லாவண்யா அவனை ஏறிட்டு, ''சாரி... ஆப்ட்ரால் கண்டெக்டர்னு உங்களை சொன்னது தப்பு தான். நீங்க டிரைவர் பிரேக் போட்டு என்‌ மேல விழுந்த அன்னிலயிருந்து தான், இந்த மாதிரி அந்த எருமை மாடு என்‌ முதுகு தோளை உரசியிருக்கான். என் இடுப்புல கையை வச்சியிருக்கான். நீங்க  அன்னிக்கு ஈவினிங்கே சில்லரையை என்‌ டிரஸ்குள்ள போட்டதும், தப்பா புரிஞ்சு நடந்த எல்லா தப்பும் நீங்களே செய்திருப்பிங்களோனு உங்களை யோசிக்காம திட்டிட்டேன்.</p>
<p>   அடுத்து அவன் தான் தட்டினான்னு புரியவும், அவனை கண்டிச்சு  கத்திட்டேன். என்னயிருந்தாலும், கோபத்துல ஆப்ட்ரால் கண்டெக்டர்னு திட்டியது ரொம்ப தப்பு. ப்ளீஸ் என்னை மன்னிச்சிடுங்க." என்றாள்.‌</p>
<p>"மன்னிச்சு... என்ன செய்ய என் மனகாயம் ஆறுமா?" என்று கேட்டவன், லாவண்யா கண்கள் கலங்கவும், அதை கண்டு, "சரி... மன்னிச்சிட்டேன் போதுமா. நான் போறேன்" என்று வெடுக்கென எழுந்தான். </p>
<p>  "சாரி கேட்க மட்டும் வரலை" என்று கூற சாரதி கால்கள் அடுத்த அடி நடக்காமல் அசையாது நின்றது. "நா...நா..நான்... உங்களை விரும்பறேன். அதை தெரியப்படுத்தவும் வந்தேன்." என்று கூறினாள். அந்த நேரம் பூங்காவில் உள்ள செக்கியூரிட்டியின் விசில் சத்தம் கேட்டது.</p>
<p>   பெரும்பாலான திறந்தவெளி பூங்கா மற்றும் மாநகராட்சி பூங்காவின் மூடப்படும் நேரம் எட்டு அல்லது ஒன்பது மணி கூட இருக்கும். </p>
<p>  விதிவிலக்காக பூங்காவில் மிகக் குறைவான விளக்கு வசதிகள் இருந்தால், பாதுகாப்பு கருதி ஏழு மணிக்கு பூங்கா சீக்கிரம் மூடலாம். அல்லது சில குறிப்பிட்ட அசோசியேட் விதிமுறையின் அமைதிக்காகவும் சீக்கிரம் மூட முடிவு செய்திருப்பார்கள். </p>
<p>  இங்கே இந்த பார்க் குறைவான மின்விளக்கு வசதியால் ஏழுமணிக்கு மூடப்படவும், மக்களும் குழந்தைகளும் வெளியேறினார்கள்</p>
<p>  சாரதி லாவண்யாவை கண்டு, "லூசுத்தனமா யோசிக்காம பேசாத. தப்பா நினைச்சிட்டோமேனு நீ மன்னிப்பு கேட்கறது ஓகே.. அதுக்காக காதலிக்கறேன்னு சட்டுனு சொல்லாத. போய் ஆகற வேலையை பாரு. </p>
<p>   நீ சொன்னது தப்பாவே இருந்தாலும்... நிஜம்‌.. நான் ஒரு ஆப்ட்ரால் கண்டெக்டர் தான். படிக்க வந்த இடத்துல படிக்கற வழியை பாரு.</p>
<p>   தங்கச்சி.... லாவண்யாவுக்கு புரியவையுங்க.. கிளம்புங்க" என்று தேவியிடமும் கடைசியாக கூறி சென்றான்.‌</p>
<p>   பைக்கில் சாவியை போட்டு திருகி அவன் ஒரு புறம் செல்ல, லாவண்யாவோ, கண்ணீரை உகுத்தினாள். அதை யாரும் காணாத வகையில் துடைத்துக் கொண்டாள். </p>
<p>தேவியோ சாரதியையும் லாவண்யாவையும் மாறி மாறி பார்த்து அமைதியாக நடந்தாள். </p>
<p>லவாண்யா சித்தி வீடு வரவும், தேவியோ "லாவண்யா... எதை பத்தியும் யோசிக்காத. இனனிக்கு தானே காதலை சொல்லிருக்க, அவகாசம் கொடு. அதுவரை காத்திரு." என்று கூறினாள்.</p>
<p>லாவண்யாவோ மனபாரத்துடன் சரியென தலையாட்டினாள். </p>
<p>  சாரதியோ வீட்டுக்கு வந்து பைக்கிற்கு கவரை போட்டுவிட்டு, அன்னை தந்த டீயை பருகினான். </p>
<p>   சாரதி இதயத்தில் அந்த டீயின் சுவை இதமாக தான் இருந்தது. லாவண்யா இவனை நேசிப்பதை அவளாக கூறியதை கேட்டு தடுமாறினாலும், ஒரு பெண் அவளாக வந்து, இரண்டு முறை சூழ்நிலை தவறாக சித்தரித்து இருந்தாலும், காதலிப்பதாக இவனிடமே கூறியிருக்கின்றாள் என்றால் அவனுக்கு இதமாக இருக்காதா? ஆனால் அவனுக்குள்ளும் தான் கண்டெக்டர், அந்த பொண்ணு அண்ணாநகர் கல்லூரியில் படிக்கின்றாள் என்றதே முரணாக தெரிந்தது. </p>
<p>அதனால் தொலைக்காட்சியில் சீரியல் பார்த்துக் கொண்டிருந்த அன்னை மடியில் வந்து படுத்துக் கொண்டான்.</p>
<p>சாரதி இப்படி அன்னை மடியில் படுப்பது வழக்கமென்பதால் அவன் சுருட்டை முடியை கோதி டிவியை பார்த்தார் காஞ்சனா. </p>
<p>அன்னையிடம் லாவண்யாவை பற்றி கூறலாமா என்று மனதில் தேன்றியது. நானே அவளோட காதலை ஏற்கலை. பிறகு</p>
<p>ஏன்‌ அம்மாவிடம் சொல்லணும். எதுவும் தெரியாம போகட்டும்' என்று முடிவெடுத்தான்.‌</p>
<p>    -தொடரும். </p>
<p>-பிரவீணா தங்கராஜ்.</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p>‌</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>]]></content:encoded>
						                            <category domain="https://onlinetamilnovels.com/community/%e0%ae%aa%e0%af%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80%e0%ae%af%e0%af%86%e0%ae%a9%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%9c%e0%ae%a9%e0%af%8d/">பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம் - Praveena Thangaraj</category>                        <dc:creator>Praveena Thangaraj</dc:creator>
                        <guid isPermaLink="true">https://onlinetamilnovels.com/community/topicid/358/</guid>
                    </item>
				                    <item>
                        <title>பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்-13</title>
                        <link>https://onlinetamilnovels.com/community/topicid/353/</link>
                        <pubDate>Thu, 10 Sep 2026 01:28:31 +0000</pubDate>
                        <description><![CDATA[அத்தியாயம்-13அடுத்த நாள் பேருந்துக்குள் மயான அமைதி என்பார்களே அப்படித்தான் இருந்தது.பேருந்தில் லாவண்யா, தேவி, சாரதி மூவரும் இருந்தும், வழக்கமாக அவர்களுக்குள் இருக்கும் சின்னச் சின்ன பார்வைகள...]]></description>
                        <content:encoded><![CDATA[<p>அத்தியாயம்-13<br /><br />அடுத்த நாள் பேருந்துக்குள் மயான அமைதி என்பார்களே அப்படித்தான் இருந்தது.<br /><br />பேருந்தில் லாவண்யா, தேவி, சாரதி மூவரும் இருந்தும், வழக்கமாக அவர்களுக்குள் இருக்கும் சின்னச் சின்ன பார்வைகளோ, புன்னகைகளோ, சாரதியின் விசில் சத்தத்தோடு கலந்த விளையாட்டுத்தனமோ எதுவுமே இல்லை.<br /><br />சாரதியின் முகத்தில் குதூகலமோ, புன்னகையோ, சந்தோஷமோ எதுவும் இல்லை.<br /><br />மாறாக... அவனது முகத்தில் நேற்று நடந்தவற்றின் வேதனை மட்டும் அப்பட்டமாகத் தெரிந்தது.<br /><br />அவன் பயணிகளிடம் டிக்கெட் வாங்கி, இயந்திரமாக டிக்கெட்டைக் கிழித்து கொடுத்துக் கொண்டிருந்தான்.<br /><br />"ஸ்கூல் பசங்க கொஞ்சம் உள்ளே போங்க... காலேஜ் பசங்க படியில நிக்காதீங்க..." என்று வழக்கம்போல் பயணிகளைக் கவனித்துக் கொண்டிருந்தாலும், அவனது குரலில் கூட முன்பிருந்த உற்சாகம் இல்லை.<br /><br />ஒவ்வொரு நிறுத்தத்திலும் விசில் அடித்தபடி முன்னும் பின்னுமாகச் சென்று கொண்டிருந்தான்.<br /><br />லாவண்யாவும் தேவியும் அருகருகே நின்று கொண்டிருந்தனர். அன்று லாவண்யாவுக்கு உட்கார இடமும் கிடைக்கவில்லை.<br /><br />சாரதி அவளைக் கடந்து செல்லும் நேரத்தில், அவள் செவிகளை மூடிக் கொள்வாள் என்பது அவனுக்குத் தெரியும்.<br /><br />எப்போதும் அவளுக்கு அருகில் வந்து விசில் கருவியால் விசிலை அடித்தால் அப்படி தான். அதிலும் கடைசியாக ஒருமுறை "அறிவில்லை..." என்று முறைத்துப் பார்த்திருக்க, அதனால் இந்த முறை அவளைத் தொந்தரவு செய்யக் கூடாது என்று நினைத்தவன், விசிலை வாயில் வைக்காமல், வலது கையின் விரல்களை உதட்டில் குவித்து விசில் சத்தம் எழுப்பினான்.<br /><br />ஆனால் அந்த நேரத்தில் யாரோ தன்னுடைய பின்பக்கத்தில் தட்டியது போல லாவண்யா உணர்ந்தாள். அவள் சட்டென்று திரும்பினாள்.<br /><br />அங்கே சாரதிதான் நின்றிருந்தான். "எ.. என்னாச்சு?" என்று மனம் கேளாமல் சாரதி புரியாமல் கேட்டான். லாவண்யா பதில் சொல்லவில்லை. அவள் இமை மூடியபடி அப்படியே நின்றாள்.<br /><br />அவளது மனதில் நேற்று நடந்த சம்பவங்கள் ஒன்றன்பின் ஒன்றாக ஓடின.<br /><br />அவளைத் தீண்டிய கை, வலது கை. அதே நேரத்தில் சாரதி விசில் சத்தம் எழுப்பப் பயன்படுத்தியதும் வலது கை. அப்படியென்றால் சாரதி தன்னை இவ்வாறு செய்யவில்லை என்பது நூறு சதம் உறுதியானது. <br /><br />அவளுடைய பார்வை சட்டென்று பேருந்தில் இருந்த ஆண்களை நோக்கிச் சென்றது.<br /><br />அப்போது அவளது நினைவுக்கு வந்தது. சில நாட்களுக்கு முன்பு பேருந்து ஏறியதும், தன்னிடம் காதலைச் சொல்லி ஒரு கடிதம் கொடுத்தவன்.<br /><br />அந்தக் கடிதத்தைத் தன்னிடம் இருந்து தேவி வாங்கிப் படித்துவிட்டு கிழித்துப் போட்டிருந்தாள்.<br /><br />அந்தப் பையன்... பேருந்தில் தன்னைத் தாண்டி வரும்போதெல்லாம் பார்த்திருக்கின்றாள்.<br /><br />ஒருமுறை ஒரு பெண்ணின் உடலைப் பார்த்துக் கொண்டு, "குண்டு... குண்டு..." என்று கேலி செய்தவனும் அவன்தான்.<br /><br />லாவண்யாவின் கண்கள் கோபத்தில் சிவந்தன. "இடியட்..."<br />என்று பற்களைக் கடித்தவள், தேவியை நோக்கி திரும்பினாள்.<br /><br />"தேவி.." என்று கூப்பிட,<br /><br />"என்னடி?"<br /><br />"பஸ்ல இத்தனை நாளா என்னை இடுப்புல தொட்டது... முதுகுல உரசியது... சாரதி இல்லை." என்றாள். தேவி அதிர்ச்சியுடன் பார்த்தாள்.<br /><br />"அப்ப யாரு?"<br /><br />"அந்த லெட்டர் தந்த எருமை." சாரதி அந்தப் பேச்சைக் கேட்டுவிட்டான். அவன் சட்டென்று திரும்பிப் பார்த்தான்.<br /><br />அவனுடைய முகத்தில் முதலில் குழப்பம். பிறகு.. அனைத்தும் புரிந்தது.<br /><br />"அந்தப் பையனா?" தேவியின் பார்வை உடனே அந்த இளைஞனைத் தேடியது.<br /><br />அவன் தான் சில நாட்களாக லாவண்யா தன்னை ஏன் வெறுப்புடன் பார்த்தாள் என்பதற்கான விடை இப்போது சாரதிக்கு கிடைத்துவிட்டது.<br /><br />தான் செய்யாத குற்றத்திற்காக... இத்தனை நாட்களாக அவள் தன்னை குற்றவாளியாக நினைத்திருக்கிறாள்.<br /><br />அவனது மனம் ஒரு நொடி வலித்தது. <br /><br />அவளை அத்துமீறி தொந்தரவு செய்தவன் மீது கோபமும் வந்தது. "திருமங்கலம்... இ.பி. ஆபீஸ் இறங்குங்க..." என்று அடுத்த நிறுத்தத்தை அறிவித்தபடி அவன் தன்னுடைய வேலையைத் தொடர்ந்தான்.<br /><br />தேவியோ அந்தப் பையனை நோக்கி பார்த்துக் கொண்டிருந்தாள். "அண்ணா..." சாரதி திரும்பிப் பார்த்தான். "அந்த பையன்தான் லாவண்யாவிடம் அத்துமீறி இருக்கான்." சாரதியின் முகம் இறுகியது.<br /><br />  "ஏன்மா?" என்ற சாரதி, லாவண்யாவை ஒரு நொடி பார்த்துவிட்டு, "நேத்தே என்னை லெஃப்ட் ரைட் வாங்கணும்னு குதிச்சாளே. இப்ப அதே கோபத்தை அவன்கிட்ட காட்டச் சொல்லு." என்றான். தேவியோ பேச்சற்று தலை கவிழ்ந்தாள்.<br /><br />"ஏன்மா கேட்க முடியாதா" சாரதியின் குரலில் வேதனை கலந்த கோபம். "ஆப்ட்ரால் கன்டெக்டர்னா என்ன வேண்டும்னாலும் பேசலாம். அதே காலேஜ் பையன், நல்ல டிரஸ் போட்டு, வசதியானவனா தெரிஞ்சிருந்தா... அவனை கத்தவோ திட்டவோ யோசிச்சிக்க வேண்டியதா இருக்குல்ல?" என்றதும், லாவண்யா அந்த வார்த்தைகளைக் கேட்டாள்.<br /><br />அவனுடைய குரலில் இருந்த கசப்பு அவளது மனதைத் தொட்டது.<br /><br />நேற்று தான் அவனை எவ்வளவு காயப்படுத்தி விட்டோம் என்று அவளுக்குத் தோன்றியது. ஆனால் அடுத்த நொடியே... அந்தப் பையன் மீண்டும் அவளை நெருங்கி வந்தான்.<br /><br />லாவண்யாவின் கோபம் மீண்டும் தலைதூக்கியது. சாரதி தேவியிடம் பேசிக் கொண்டிருந்த நேரத்தில், யாரும் எதிர்பார்க்காதபடி அவள் கையில் இருந்த காம்பஸை எடுத்துக் கொண்டு அந்தப் பையனின் கையில் குத்தினாள்.<br /><br />"ஆ..." என்று அவன் அலறினான். பேருந்தில் அங்கே  அவனை சுற்றியிருந்த அனைவரும் சட்டென்று திரும்பிப் பார்த்தனர்.<br /><br />"வலிக்குதா?" லாவண்யாவின் குரல் நடுங்கியது.<br /><br />"வலிக்குதாடா?" அவள் மீண்டும் காம்பஸை உயர்த்தினாள். "அன்னிக்கு முதுகுல உரசியது இந்த கைதானே?" அவன் பயந்து பின்னால் நகர்ந்தான்.<br /><br />"நேத்து காலையில இடுப்புல அழுத்தியது இந்த கைதானே?" என்றாள் காளி அவதாரமாக.<br /><br />"நான்..." என்று தடுமாறினான். <br /><br />"இப்ப பிட்டத்தின் பின்னாடி தட்டினதும் இந்த கைதானே?" என்றாள். அவன் பதில் சொல்ல முடியாமல் நின்றான். மறுத்தால் காம்பஸ்ஸால் நெஞ்சில் குத்திடுவாளோ என்ற பயம்.<br /><br />"இப்ப தட்டு! தட்டுடா!" அவளுடைய கோபக் குரல் பேருந்துக்குள் முழங்கியது.<br /><br />அன்று சற்று பருமனாக இருந்த பெண்ணும் "என்னை குண்டுனு சொல்லி கேலி பண்ணுவான். ஆனா நான் அவனை தாண்டி வர்றப்ப எல்லாம் சகட்ட மேனிக்கு இடிப்பான். இன்னிக்கு இந்த பொண்ணு கொடுக்கற தண்டனை சுகமா இருக்கா" என்றாள்.<br /><br />அருகில் இருந்த சில பெண்களும் உடனே, "இவனுங்களுக்கு இதே வேலையா போச்சு. நாமளே கஷ்ப்பட்டு படிக்கவும் வேலைக்குன்னும் கூட்ட நெரிசல்ல இடிபாட்டுல வந்தா, இந்த தடிமாடுங்க வேற இடிச்சிட்டு இளிச்சிட்டு இருப்பானுங்க. நல்லா நாலு போடும்மா!" என்று சில பெண்கள் ஆதரவாகப் பேசினார்கள்.<br /><br />முத்து பேருந்தை ஓரமாக நிறுத்தினார்.<br /><br />நிலைமை பெரிதாகாமல் சாரதியும் அந்தப் பையனை கீழே இறங்க கூற, அவனும் கீழே இறங்கினான்.<br /><br />லாவண்யாவின் கையால் காம்பஸ் கீறலோடு, அவன் முகத்தில் விழுந்த அறையும் சேர்ந்து அவனது கோபத்தை மேலும் அதிகப்படுத்தியது.<br /><br />இறங்கிச் செல்லும் முன் அவன் லாவண்யாவையும், சாரதியையும் மாறி மாறிப் பார்த்தான்.<br /><br />அந்தப் பார்வையில் பழிவாங்கும் கோபம் தெரிந்தது.<br /><br />ஆனால் பேருந்து புறப்பட்டுவிட்டது. லாவண்யா நீண்ட பெருமூச்சு விட்டாள்.<br /><br />"இன்னிக்கு சீட் கிடைக்காம நிக்கற மாதிரி இருக்கேன்னு நினைச்சேன்..." தேவி அவளைப் பார்த்தாள்.<br /><br />"ஆனா அதுவும் நல்லதுதான்." லாவண்யா முகத்தில் இப்போது நிம்மதி.<br /><br />"அந்த ராஸ்கல் நெருங்கவும் அடக்கிட்டேன். இப்பதான் நிம்மதியா இருக்கு." சாரதி கம்பியில் சாய்ந்து நின்றிருந்தான்.<br /><br />அவனது முகத்தில் இன்னமும் நேற்று நடந்தவற்றின் சுமை இருந்தது. "ட்வெல்த் மெயின் ரோட்... இறங்குங்க." என்று பயணிகளுக்கு அறிவித்தான்.<br /><br />பிறகு அடுத்த நிறுத்தம் வந்ததும், "அண்ணா நகர்... அண்ணா நகர்..." என்று குரல் கொடுத்தான்.<br /><br />வழக்கம்போல் விசில் அடிக்காமல், வலது கையை உதட்டருகே குவித்து மெதுவாக விசில் சத்தம் எழுப்பினான்.<br /><br />லாவண்யா அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள். நேற்று தப்பி தவறி, டிப்போவிலோ அல்லது, அவன் அன்னையிடமோ அவசரப்பட்டு புகார் செய்திருந்தால், இவர் நிலை என்ன? அதிலும் அறிவில்லையா? கண்டெக்டர் தானே என்று குறைத்து மதிப்பிட்டு பேசினாளே.<br /><br />"என்ன பார்க்கற? இறங்கு." என்றான் சாரதி.<br /><br />அந்த வார்த்தையில் ஒருமை இருந்தாலும், கோபம் இல்லை.<br /><br />ஒருவிதமான விலகல் மட்டுமே இருந்தது. லாவண்யாவும் தேவியும் இறங்கினர்.<br /><br />பேருந்து புறப்பட்டுச் சென்றது. சில நொடிகள் இருவரும் அமைதியாக நடந்தனர்.<br /><br />பிறகு தேவி திடீரென்று லாவண்யாவின் கையைப் பிடித்தாள்.<br /><br />"எப்படிடி இவ்வளவு தைரியமா காம்பஸ் வச்சி குத்தின?"<br /><br />"அவன் செய்தது தப்புதானே?"<br /><br />"அது சரி. நாளைக்கு ஏதாவது பிரச்சனை வந்தா?"<br /><br />லாவண்யா தயக்கமே இல்லாமல் சொன்னாள்.<br /><br />"அதான் சாரதி இருக்காரே." தேவி அப்படியே ஸ்தம்பித்து நின்றாள்.<br /><br />"என்ன?"<br /><br />"ம்ம்ம. சாரதி பார்த்துக்குவான்." என்று அழுத்தமாய் உரைத்தாள் புன்கையுடன். <br /><br />தேவியின் முகத்தில் குழப்பம். 'அவர் என்னடான்னா 'என்ன பார்க்கற இறங்கு'னு ஒருமையில பேசுறார். சரி... ஏதோ இவ அவரை முன்னாடி எவ்வளவு பேசினதால, மரியாதை கொடுக்கப் பிடிக்கலைன்னு நினைச்சேன்.<br /><br />இவ என்னடான்னா.. 'அதான் சாரதி இருக்காரேன்னு சொல்றா.'<br /><br />'எந்த உரிமையில பேசுறாங்க. அவளால் ஒன்றும் புரிந்து கொள்ள முடியவில்லை. கூடுதலாக துருவி பேச்சை கூட்டவில்லை. கல்லூரியில் வகுப்பும் வந்துவிட்டது காரணமாக இருக்கலாம். <br /><br />ஆனால் லாவண்யாவோ அன்றைய நாள் முழுவதும் வேறு எந்த விஷயத்திலும் மனதைச் செலுத்த முடியவில்லை.<br /><br />அவளுடைய மனதிற்குள் ஒரே ஒரு விஷயம்தான் சுற்றிக் கொண்டிருந்தது.<br /><br />சாரதி அவனிடம் தான் தவறாகப் புரிந்து கொண்டுவிட்டோம் என்பது இப்போது தெளிவாகிவிட்டது.<br /><br />நேற்று அவன் எவ்வளவு வேதனைப்பட்டிருப்பான்?<br /><br />'எங்கப்பா மேல பிராமிஸ்... நான் அப்படி செய்யலை.' அந்த வார்த்தை மீண்டும் மீண்டும் காதுக்குள் ஒலித்தது.<br /><br />அவன் கண்களில் தெரிந்த வலி... அம்மாவைப் பற்றி அவன் கொண்டிருந்த அக்கறை... தன்னைத் தண்டிக்கச் சொல்லியும், தன் அம்மாவை காயப்படுத்த வேண்டாம் என்று கேட்ட விதமும்... எல்லாமே நினைவுக்கு வந்தது.<br /><br />அவள் மெதுவாகத் தன் நெஞ்சின் மீது கை வைத்தாள்.<br /><br />இதுவரை சாரதி மீது இருந்தது வெறும் மதிப்பு தானா? அவனுடைய சிரிப்பு பிடித்தது. அவன் குழந்தைகளிடம் பேசும் விதம் பிடித்தது. வயதானவர்களிடம் காட்டும் மரியாதை பிடித்தது. பயணிகளிடம் பொறுமையாக நடந்து கொள்வது பிடித்தது.<br /><br />அவன் விசில் சத்தம் கூட தனக்காகவே என்று தோன்றிய நாட்கள் இருந்தன.<br /><br />இப்போது... அவள் தன்னையே கேட்டுக் கொண்டாள். 'தனக்கும் அவருக்குள்ளும் என்ன பந்தம்' என்று. அந்தக் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் அவள் முகம் சிவந்தது.<br /><br />ஆம். அவள் மனம் ஏற்கனவே அந்த முடிவுக்கு வந்துவிட்டது.<br /><br />ஆனால்... அதை இனி சாரதியிடம் எப்படி சொல்வது? அவன் ஏற்றுக் கொள்வானா?<br /><br />இத்தனை தவறான புரிதல்களுக்குப் பிறகு... 'நான் உன்னை காதலிக்கிறேன்' என்று சொன்னால் அவன் தன்னைப் பற்றி என்ன நினைப்பான்?<br /><br />'நேத்து என்னை குற்றவாளியா பார்த்தவ... இன்னிக்கு காதலிக்கிறேன்னு சொல்றாளே?' என்று கேலி செய்வானா? தன்னை நிராகரித்துவிட்டால்?<br />தன் மனம் தாங்குமா? அதையும் தாண்டி தேவி... அவளிடம் இதை எப்படி சொல்வது?<br /><br />தேவி தன்னை என்னவென்று நினைப்பாள்? வீட்டில் அம்மாவும் அப்பாவும் படிக்க அனுப்பி வைத்திருக்கிறார்கள்.<br /><br />'காதல் எல்லாம் எதுக்கு?' என்று கேட்பார்களா? எத்தனை கேள்விகள்... எத்தனை பயங்கள்... ஆனால் அவற்றை எல்லாவற்றையும் விட பெரியதாக இருந்தது ஒரே ஒரு உணர்வு.<br /><br />சாரதியை இழக்கக் கூடாது.<br />அதே நேரம்... பேருந்துக்குள் சாரதியின் மனதிலும் ஒரு சிறிய நிம்மதி பிறந்திருந்தது.<br /><br />'அப்படின்னா... அந்தச் சம்பவங்களெல்லாம் நான் இல்லன்னு அவளுக்குப் புரிஞ்சிடுச்சு.' அது மட்டும் அவனுக்கு போதுமானதாக இருந்தது.<br /><br />ஆனால் அடுத்த நொடியே அவன் மனம் மீண்டும் அவனைத் துன்புறுத்தியது. <br /><br />'அவ என்ன நினைச்சிருப்பா? என்ன இருந்தாலும் சில்லரையை அவ டிரஸ்குள்ள போட்டது நான் தான். தெரியாம போட்டாலும் தப்பு தானோ? அதை நினைச்சு வருத்தப்படுவாளோ?"<br />அவனுடைய மனம் மீண்டும் அவளைச் சுற்றியே சுழன்றது.<br /><br />கொஞ்ச மாதங்கள் கடந்திருக்க, ஒரு வருடம் கூட ஆகவில்லை. அந்த லாவண்யா பேருந்தில் பயணம் செய்து. அதிலும் இந்த இரண்டு நாளில், தன்னுடைய மனதை இப்படி புரட்டிப் போட்டு விட்டாள். அவளை கண்டால் என் மனம் தத்தி தாவுகின்றது. இது.. அது தானோ? என்று தடுமாறினான்.<br /><br />மாலை நேரத்தில் டிரைவர் இருக்கையில் இருந்த முத்து அவனைப் பார்த்தார்.<br /><br />"சாரதி..."<br /><br />"ஆங் அண்ணா?" என்றான்.<br /><br />"என்னடா ஆச்சு?" சாரதி புரியாமல் பார்த்தான்.<br /><br />"எதுவுமில்லையே அண்ணா."<br /><br />"எதுவும் இல்லையா?"<br /><br />முத்து அவனைப் பார்த்து சிரித்தார். "இரண்டு மூனு நாளா தனியா பீல் பண்ற... தனியா என்னத்தடா யோசிக்கற." சாரதி உடனே முகத்தை மாற்றிக் கொண்டான்.<br /><br />"அதெல்லாம் ஒண்ணுமில்லை அண்ணா.."<br /><br />"என்னத்த ஒண்ணுமில்லையோ" என்று அவர் அதன்பிறகு கேட்கவில்லை. <br /><br />'ஒண்ணுமில்லைன்னா ஒண்ணுமில்லை தான்.' என்று சொல்லிவிட்டு டிக்கெட் பையைச் சரி செய்தான்.<br /><br />ஆனால் அவனது உதட்டின் ஓரத்தில் வந்து மறைந்த அந்தச் சிறிய நிம்மதியான புன்னகையை முத்துவால் தவறவிட முடியவில்லை.<br /><br />சாரதியோ அந்தப் புன்னகைக்குக் காரணம் யார் என்று அவனுக்குத் தெரிந்திருந்தது.<br /><br />லாவண்யா அவளுக்குத் தெரியுமா? அவன் மனதிலும் இப்போது அவள் மட்டும் தான் இருக்கிறாள் என்று.<br /><br />  அவளிடம் கூற முடியுமா? நேற்று அவள் பேசிய போது, 'ஆப்ட்ரால் கன்டெக்டர்' என்ற வார்த்தையை விட்டதும் லாவண்யா தான் என்று புரிய அவசரப்படாதே சாரதி என்று மனதிடம் கூறிக் கொண்டான். தன்னிலையும் அவளது நிலையும் யோசி என்றது மனம். தானாக ஆசைப்பட்ட நெஞ்சம் மீண்டும் கூட்டுக்குள் அடைப்பட்டது.<br /><br />-தொடரும். <br />-பிரவீணா தங்கராஜ்.<br /><br /></p>]]></content:encoded>
						                            <category domain="https://onlinetamilnovels.com/community/%e0%ae%aa%e0%af%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80%e0%ae%af%e0%af%86%e0%ae%a9%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%9c%e0%ae%a9%e0%af%8d/">பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம் - Praveena Thangaraj</category>                        <dc:creator>Praveena Thangaraj</dc:creator>
                        <guid isPermaLink="true">https://onlinetamilnovels.com/community/topicid/353/</guid>
                    </item>
				                    <item>
                        <title>பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்-12</title>
                        <link>https://onlinetamilnovels.com/community/topicid/352/</link>
                        <pubDate>Wed, 09 Sep 2026 01:18:47 +0000</pubDate>
                        <description><![CDATA[அத்தியாயம்-12
சாரதிக்கு ஏன் லாவண்யா தன்னை முறைத்துப் பார்க்கிறாள் என்பதே புரியவில்லை.
பேருந்தில் முன்பு நடந்தது தவறுதலானது என்பது அவனுக்குத் தெரியும். ஆனால் அதற்குப் பிறகு அவள் பார்வையில் ...]]></description>
                        <content:encoded><![CDATA[<p>அத்தியாயம்-12</p>
<p>சாரதிக்கு ஏன் லாவண்யா தன்னை முறைத்துப் பார்க்கிறாள் என்பதே புரியவில்லை.</p>
<p>பேருந்தில் முன்பு நடந்தது தவறுதலானது என்பது அவனுக்குத் தெரியும். ஆனால் அதற்குப் பிறகு அவள் பார்வையில் தெரிந்த கோபம். அவனை உள்ளுக்குள் உறுத்திக் கொண்டே இருந்தது.</p>
<p>அதற்குமேல் டிப்போவில் அவள் பேசிய விதம் வேறு. "ஆப்ட்ரால் ஒரு கன்டெக்டர்..." அந்த வார்த்தை இன்னமும் அவன் காதுக்குள் ஒலித்துக் கொண்டிருந்தது.</p>
<p>தான் வேண்டுமென்றே எதையும் செய்யவில்லை என்பதை அவளிடம் சொல்லிவிட்டான். இருந்தாலும் அவள் தன்னை நம்பினாளா இல்லையா என்பதே தெரியவில்லை.</p>
<p>அந்தக் குழப்பத்தோடும் மனக்கஷ்டத்தோடும் மீண்டும் தன்னுடைய டியூட்டிக்குச் சென்றான்.</p>
<p>மாலை வரைக்கும் அவனுடைய மனம் அமைதியாகவில்லை.</p>
<p>அதே நேரம்... தேவியும் லாவண்யாவும் மாடியில் பேசிக்கொண்டே நின்றிருந்தனர். அவள் கண்ட மோசமான அனுபவமாக சாரதியை பற்றி கூறினாள். தேவிக்கு என்ன செய்வதென்று புரியாமல் "சரி... இப்ப என்ன செய்யணும்?" என்று தேவி கேட்டபோது, இலக்கியா வந்தார். மாலதி நிச்சயதார்த்தம் வரவும், லாவண்யா சேலை கட்டுவதற்கு, தைக்கக் கொடுக்க வேண்டியிருந்த பிளவுஸ் துணியை லாவண்யாவின் கையில் கொடுத்திருந்தார்.</p>
<p>"இந்த பிளவுஸை தைக்கக் கொடுத்துட்டு வந்துடுங்க. பார்க் தாண்டி இரண்டு தெரு போனா... ஐந்தாவது வீடு. அங்கே காஞ்சனா அப்படின்னு கேளுங்க. அவங்கதான் தைப்பாங்க." என்றார் இலக்கியா. ஏற்கனவே இதை பற்றி பேசி கூறியதால், "சரி சித்தி..." என்றாள். </p>
<p>தேவி தான் லாவண்யாவை அழைத்துக்கொண்டு கிளம்பினாள்.</p>
<p>இருவரும் நடந்து சென்று கொண்டிருந்தபோது, ஒரு பைக் வந்தது.</p>
<p>லாவண்யாவின் பார்வை தன்னையும் அறியாமல் அந்தப் பக்கம் சென்றது.</p>
<p>அது சாரதி. அவளைத் தாண்டிச் செல்லும் அந்த நொடி, சாரதியும் அவளை கவனித்தான்.</p>
<p>ஆனால் முன்பைப் போல அவன் முகத்தில் புன்னகை இல்லை. அவளை நோக்கிய பார்வையில் ஒரு தயக்கம். அதனுடன் சிறு வருத்தமும் இருந்தது.</p>
<p>தேவி இருவரையும் மாறி மாறிப் பார்த்தாள். 'இவங்க ரெண்டு பேருக்கும் என்ன பிரச்சனை? ஏன் இந்த திடீர் சம்பவம்.' அவளுக்குப் புரியவில்லை.</p>
<p>சாரதி வீட்டுக்கு வந்ததும் பைக்கை வாசலில் நிறுத்தினான்.</p>
<p>பைக்கை வாங்கிய நாளே காஞ்சனா தன் கையால் தைத்துக் கொடுத்திருந்த அழகான கவரை எடுத்தான்.</p>
<p>வீட்டில் தையல் வேலை செய்வதால், மீதமாகும் துணிகளில் பைக் கவர், ஃப்ரிட்ஜ் கவர், வாஷிங் மெஷின் கவர் என்று தேவையானவற்றை காஞ்சனா தைத்துக் கொடுப்பது வழக்கம்.</p>
<p>ஆனால் சாரதிக்காக மட்டும் அவள் ஒரு அழகான சேலையை வைத்து பைக் கவர் தைத்திருந்தார். சைக்கிளுக்கும் அப்படித்தான்.</p>
<p>அந்தக் கவரை மெதுவாக பைக்கின் மீது போர்த்திவிட்டு வீட்டுக்குள் வந்தான். "சாரதி... டீ போடவாப்பா?" என்று கேட்டார் காஞ்சனா.</p>
<p>"நா... நான் போட்டுக்கறேன்மா. நீங்க வேலை பாருங்க." என்று முகத்தைக் கழுவிக் கொண்டவன், சட்டையைக் கழற்றி ஹேங்கரில் மாட்டிவிட்டு சமையலறைக்குச் சென்றான்.</p>
<p>பால், சர்க்கரை, டீத்தூள் என தேவையான அளவு போட்டுத் தண்ணீரை ஊற்றி அடுப்பில் வைத்தான்.</p>
<p>அப்போது வெளியிலிருந்து ஒரு பெண்ணின் குரல் கேட்டது.</p>
<p>"மனசே ஆறமாட்டேங்குது தேவி..." சாரதியின் கை வடிக்கட்டியை எடுத்த பொழுது, சட்டென்று நின்றது.</p>
<p>அந்தக் குரல்... லாவண்யா! அவனுடைய இதயம் ஒரு நொடி திடுக்கிட்டது. "அவ இங்க எதுக்கு வந்திருக்கா?"</p>
<p>அடுத்த நொடி அவன் மனதில் வேறொரு பயம் எழுந்தது. 'கம்ப்ளைன்ட் பண்ணப் போறேன்னு சொன்னாளே... இங்கே அம்மாகிட்ட ஏதாவது சொல்லிடுவாளா?' அவனுடைய உள்ளங்கையில் வியர்வை படர்ந்தது. தான் செய்யாத ஒன்றுக்காக தன்னுடைய குணத்தைத் தவறாகச் சித்தரித்துவிட்டால்?</p>
<p>அம்மா என்ன நினைப்பார்? தன்னுடைய அப்பாவைப் பற்றி இந்த ஊரில் இருந்த நல்ல பெயர் என்ன ஆகும்?</p>
<p>எல்லாமே அவன் மனதுக்குள் ஒன்றன் பின் ஒன்றாக ஓடியது.</p>
<p>அப்போது, "ஆன்ட்டி... இங்க காஞ்சனா அப்படின்னு டிரஸ் தைக்கறவங்க நீங்கதானே?" என்று தேவி கேட்ட குரல் கேட்டது.</p>
<p>"ஆமாம்மா... என்னம்மா?" என்று காஞ்சனா கேட்டார்.</p>
<p>"அம்மா... டீ..." என்று சொல்லிக் கொண்டு சாரதியும் சமையலறையிலிருந்து அவசரமாய் வெளியே வந்தான்.</p>
<p>வாசலில் லாவண்யாவையும் தேவியையும் பார்த்ததும் அவன் அப்படியே நின்றுவிட்டான்.</p>
<p>லாவண்யாவுக்கும் அவனைப் பார்த்ததும் பேச்சே வரவில்லை.</p>
<p>'இவர் வீட்டுக்கா வந்திருக்கோம்?' அவள் பார்வை தன்னையும் அறியாமல் வீட்டைச் சுற்றிப் பார்த்தது.</p>
<p>"உட்காருங்கம்மா..." என்று காஞ்சனா இரண்டு பேர் அமரக்கூடிய திண்டு வைத்திருந்த இருக்கையைக் காட்டினார்.</p>
<p>தேவியும் லாவண்யாவும் அமர்ந்தனர். "டீ குடிக்கறீங்களாம்மா?" என்று காஞ்சனா கேட்க,  "ஆங்... வேண்டாம் ஆன்ட்டி." என்று தேவி மறுத்தாள்.</p>
<p>"சாரதி... டீ இருந்தா ஊத்திட்டு வா." அவனுக்கு மீண்டும் ஒரு கலக்கம்.</p>
<p>சைக்கிள் தொலைந்தபோது இருந்த பதற்றம் போலவே இப்போதும் உள்ளுக்குள் ஏதோ உருண்டது.</p>
<p>'இவங்க முன்னாடி நான் இப்படியா இருக்கணும்?' அவன் அமைதியாக உள்ளே சென்று டீயை ஊற்றிக் கொண்டிருந்தான்.</p>
<p>"அளவு பிளவுஸ் இருக்காம்மா?" என்று காஞ்சனா கேட்டார்.</p>
<p>"இல்ல ஆன்ட்டி. பிளவுஸ் தைக்கணும். ஆனா அளவு பிளவுஸ் கொண்டு வரல."</p>
<p>"சரிம்மா. இந்த டீ குடிங்க. இதை முடிச்சதும் அளவு எடுத்துக்கலாம். கன்டினியூ மிஸ் ஆகிடும். இரண்டு நிமிஷம் தான்." சாரதி அவசரமாக டீயை ஊற்றி எடுத்துக்கொண்டு வந்தான்.</p>
<p>அவசரத்தில் டீ கொஞ்சம் சூடாகவே இருந்தது.</p>
<p>லாவண்யா டம்ளரை வாங்கி ஒரு மிடறு வைத்ததும், "ஸ்ஸா..." என்று உதட்டைச் சுருக்கினாள்.</p>
<p>அதே நேரம் சாரதியும் தன் கையில் கொதிக்கும் டீ பட்டிருந்ததை உணர்ந்து, கையை லேசாக ஊதிக் கொண்டிருந்தான்.</p>
<p>அதைப் பார்த்த லாவண்யா ஒரு நொடி அவனைப் பார்த்தாள். 'எனக்கு கொதிக்கும் டீ ஊற்றிக்கொண்டு, அவர் கையிலும் ஊத்திக்கிட்டிருக்காரு.' அவளுடைய கோபத்தின் நடுவே ஒரு சிறிய குற்றவுணர்வு வந்து தொட்டது.</p>
<p>"என்னப்பா... நீ போய் உன் வேலையைப் பாரு. அம்மா டீ குடிச்சிடுவேன்." சாரதி அங்கேயே நின்றான்.</p>
<p>"நேரத்துக்கு எதுவும் சாப்பிட மாட்டேன்னு பக்கத்துலயே இருந்து குடிக்க வச்சி சாப்பிட வச்சுட்டுத்தான் வேற வேலை பார்ப்பான்.'' என்று பொதுவாய் இரு பெண்களிடம் கூறிவிட்டு,  "சூடா இருக்கு சாரதி. நீ போ. அம்மா குடிச்சிடுவேன்." என்றார்.</p>
<p>"சரிம்மா." அவன் மெதுவாக அறைக்குள் சென்றான். ஆனால் கதவை மூடவில்லை.</p>
<p>ஜன்னல் வழியாக அவனது பார்வை வெளியே சென்றது. தேவியும் லாவண்யாவும் காஞ்சனாவுடன் பேசிக் கொண்டிருந்தனர்.</p>
<p>'டிப்போல கம்ப்ளைன்ட் பண்ணப் போறேன்னு சொன்னவ... இப்ப அம்மாகிட்ட என்ன சொல்லப் போறாளோ?' அவன் மீண்டும் பதற்றமடைந்தான்.</p>
<p>"டீ நல்லாயிருக்குல்ல?" என்று தேவி மெதுவாக லாவண்யாவிடம் கிசுகிசுத்தாள்.</p>
<p>"ம்ம்..." என்றாள் லாவண்யா. இங்கே டீ குடிக்கவா வந்தோமென சலிப்பும் கூடியது.</p>
<p>அதைக் கேட்ட காஞ்சனா புன்னகைத்தார்.</p>
<p>"அவன் எல்லாமே செய்வான்மா. சமையல் கூட நல்லா பண்ணுவான். எனக்கு மேலுக்கு முடியாத நேரத்துல சமையல் பொறுப்பையே கையில எடுத்துக்குவான். டீ, காபி எல்லாம் சில நேரம் அவன் தான்." மகனைப் பற்றி பெருமையாகப் பேசினார்.</p>
<p>லாவண்யாவின் மனதுக்குள் ஏதோ அசைந்தது. சில நிமிடங்களில் அளவு எடுக்கத் தொடங்கினர் காஞ்சனா. "கை தூக்கும்மா..." லாவண்யா கையை உயர்த்தினாள்.</p>
<p>"கை இவ்வளவு போதுமா? இன்னும் கொஞ்சம் இடுப்பு இறக்கம் வைக்கவா?" </p>
<p>"இவ்வளவு போதும் ஆன்ட்டி."</p>
<p>"முதுகு இவ்வளவு வைக்கலாமா?"</p>
<p>"ம்ம்... ஓகே ஆன்ட்டி." என்றாள். </p>
<p>பிறகு காஞ்சனா நெக் டிசைன் அட்டை ஒன்றைக் காட்டினார்.</p>
<p>"இதுல எது பிடிச்சிருக்கு? சொல்லுங்க. அதையே வச்சிடலாம்." என்று இருவரும் பேசிட, "இது ஓகே ஆன்ட்டி." பணம், எப்போது வந்து வாங்க வேண்டும் என்பதையெல்லாம் கேட்டுக் கொண்டாள்.</p>
<p>காஞ்சனா துணியின் ஒரு சிறிய துண்டை வைத்துக் கொண்டு, பெயர், அலைபேசி எண்ணையும் குறித்து வைத்தார்.</p>
<p>"தைத்ததும் கால் பண்ணறேன்மா." என்றார்.</p>
<p>"சரிங்க ஆன்ட்டி." தேவியும் லாவண்யாவும் எழுந்தனர்.</p>
<p>"சரி ஆன்ட்டி... நாங்க கிளம்பறோம்." என்றாள். </p>
<p>"பத்திரமா போயிட்டு வாங்கம்மா." அவர்கள் வெளியே வந்தனர்.</p>
<p>ஜன்னல் வழியாக அதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த சாரதிக்கு, ஒரு நொடி நிம்மதி வந்தது.</p>
<p>'லாவண்யா எதுவும் சொல்லலை..' ஆனால் அடுத்த நொடியே இன்னொரு எண்ணம்.</p>
<p>'இப்ப அவளிடம் பேசாம விட்டுட்டா... இந்தப் பிரச்சனை தீராது.' என்றது புரிய, அவன் சட்டென்று ஹேங்கரில் இருந்த வேறு ஒரு சட்டையை எடுத்துப் போட்டுக் கொண்டான்.</p>
<p>தலையை இரு கைகளாலும் கோதிவிட்டு, பைக் சாவியை எடுத்தான். "அம்மா... நான் இப்ப வந்துடறேன்."</p>
<p>"எங்கப்பா"</p>
<p>"சும்மா... இப்ப வந்துடறேன்மா."</p>
<p>"பார்த்து பத்திரம்யா!" அவன் பதில் சொல்லாமல் பைக்கை எடுத்துக் கொண்டு புறப்பட்டான்.</p>
<p>பார்க்கைத் தாண்டி லாவண்யாவும் தேவியும் நடந்து சென்று கொண்டிருந்தனர்.</p>
<p>"இவர் வீட்டுக்கே போய் நிற்போம்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கலை" என்றாள் லாவண்யா. தேவியும், எனக்கு இவர் வீடு இந்த பக்கம்னு தெரியும். இந்த வீடுனு தெரியாது.'' என்றாள்.</p>
<p>திடீரென அவர்கள் முன்னால் பைக்கை வந்து நிறுத்தினான் சாரதி. </p>
<p>லாவண்யா திகைத்தாள். "உன்கிட்ட பேசணும்." தேவி இருவரையும் மாறி மாறிப் பார்த்தாள்.</p>
<p>"நீங்க பேசுங்க. நான்..." என்று செல்லப் போனாள் தேவி.</p>
<p>"தேவி... நானும் வர்றேன்." என்றாள் லாவண்யா‌ நழுவும் பொருட்டு.</p>
<p>"லாவண்யா..." சாரதியின் குரலில் இருந்த வேதனை அவளை நிறுத்தியது.</p>
<p>"நான் என்ன தப்பு பண்ணேன்னு எனக்கே புரியல." லாவண்யா அமைதியாக அவனைப் பார்த்தாள்.</p>
<p>"ஆனா... இரண்டு நாளா நீ என்னை ஒரு குற்றவாளி மாதிரி பார்க்கற. உன் பார்வையே என்னை எரிச்சலடைய வைக்குது." அவன் குரல் உடைந்தது.</p>
<p>"என்னால அதைத் தாங்க முடியல. நாம சரியா பேசினதே இல்ல. ஆனா இதே இடத்துல உன்னைப் பார்த்தப்போ... என்னைப் பத்தி கொஞ்சமாவது புரிஞ்சிருப்பேன்னு நினைச்சேன். ஆனா நீ என்னை அறிவில்லாதவன்னு கூட சொல்லற அளவுக்கு வந்துட்ட." அவன் ஒரு பெருமூச்சு விட்டான். "நான் பஸ்ல இருந்தப்ப பிரேக் போட்டதும் தெரியாம தான் இடிச்சேன். இன்னிக்கு நடந்ததும் அப்படி தான். உனக்குத் தெரியலையா?" என்று தவித்தபடி கூறினான். </p>
<p>"நீங்க இரண்டு முறைன்னு சாதாரணமா சொல்றிங்க..." என்றாள் லாவண்யா குழப்பமாக.</p>
<p>"ஆமா. இரண்டு முறை." தேவி உடனே இடையில் வந்தாள்.</p>
<p>"அண்ணா... இரண்டு முறை இல்ல. நாலு முறை." சாரதி புரியாமல் பார்த்தான்.</p>
<p>"முதல்ல பிரேக் போட்டப்போ அவ மேல உரசினிங்க." என்று தேவி லிஸ்ட் போட, </p>
<p>  "அது தெரியாம நடந்ததும்மா.. முத்து அண்ணா பிரேக் போட்டார். நான் கொஞ்சம் பேலன்ஸ் பண்ணாம நின்றுட்டேன்" என்றான் சாரதி. </p>
<p>"சரி. அடுத்து டிக்கெட் கொடுக்கும்போது முதுகுல கைப்பட உரசினிங்க." என்றதும் சாரதியின் முகம் மாறியது.</p>
<p>"நா... நானா?"</p>
<p>"ஆமா."</p>
<p>"ஒரு நிமிஷம்..."</p>
<p>அவன் தலையைப் பிடித்துக் கொண்டான்.</p>
<p>"எனக்கு ஞாபகமே இல்ல. எத்தனையோ பேர் டிக்கெட் வாங்க பணத்தை நீட்டியிருக்காங்க. அவங்களை தொட்டு தடவி ரசிக்கற அளவுக்கு நான் கீழ்த்தரமானவன் இல்லை" என்றான். </p>
<p>தேவி தொடர்ந்தவளாக, "அதுக்கப்புறம் இன்னைக்கு காலையில அவ இடுப்புல கை வச்சு அழுத்தினிங்களாம்." என்று பெரியளவில் குற்றச்சாட்டினாள்.</p>
<p>"என்ன?" சாரதியின் முகத்தில் உண்மையான அதிர்ச்சி. அவன் மறுப்பாய் தலையாட்டினான். </p>
<p>"இன்னிக்கு ஈவினிங் சில்லரையை இவ சுடிதாருக்குள்ள போட்டிருக்கிங்க." என்றதும் சாரதி "நான் சில்லரை வேண்டுமின்னே போடலயே. அது நழுவிப் போச்சு. அதோட அவ தான் முன்ன வந்தா, ஆக்சிடெண்டா அவ ஸ்கின்ல பட்டதும் கை பதறி இழுத்தேன்." என்றான்.‌</p>
<p>"அதெல்லாம் தப்பும் தவறுமா  இவளுக்கு நடந்தது தானே?" சாரதி சில நொடிகள் பேசாமல் நின்றான்.</p>
<p>"இங்க பாரு லாவண்யா.." என்று லாவண்யாவை நோக்கிப் பார்த்தான்.</p>
<p>"பிரேக் போட்டப்போ உன் மேல உரசியது தற்செயல். அதுக்கு நான் அன்னிக்கே  சாரி கேட்டேன். இன்னைக்கு சில்லரை பாட்டி கேட்டதும் எடுத்துக் கொடுக்கும்போது... எதிரே யாரும் இல்லைன்னு நினைச்சு கையை நீட்டினேன். நீ முன்னாடி வந்துட்ட. காயின் நழுவிடுச்சு. வேண்டும்னே நான் எதையும் உள்நோக்கத்தோட பண்ணல." அவன் குரல் பதற்றமடைந்தது.</p>
<p>"ஆனா... இடுப்பை நான் தொடவே இல்லை." லாவண்யா அமைதியாக அவனைப் பார்த்தாள்.</p>
<p>"உன் முதுகை என் கையால உரசியதாவும் எனக்கு ஞாபகம் இல்லை." என்றான். லாவண்யா சந்தேகமாய் நிற்கவும் சாரதி திடீரென, "எங்கப்பா மேல பிராமிஸ்... நான் அப்படி செய்யலை." என்றான். </p>
<p>  அந்த வார்த்தையில் இருந்த உண்மை லாவண்யாவின் மனதைத் தொட்டது.</p>
<p>அவள் சில நொடிகள் பேசாமல் நின்றாள். "லாவண்யா..." அவள் மெதுவாக நிமிர்ந்து பார்த்தாள்.</p>
<p>"புகார் தர்றதா இருந்தாலும்... எங்கம்மாகிட்ட எதுவும் சொல்லி அவங்களை காயப்படுத்தாத." அவன் குரல் மிகவும் மென்மையாகியது.</p>
<p>"எதுவா இருந்தாலும் என்னிடமே சொல்லு. என்னைத் தண்டிக்கணும்னா... தண்டனை கொடு. ஆனா என் அம்மாவை இந்த விஷயத்துக்குள்ள கொண்டு வராத." லாவண்யாவின் பார்வை மாறியது.</p>
<p>"என்னை குழப்பாதிங்க." சாரதி அமைதியாக நின்றான்.</p>
<p>"ஒரு பொண்ணுக்கு ஒரு தீண்டல் தப்பா... சரியானதா... தெரியாம இருக்காது. அந்த இரண்டு தீண்டலும் எனக்கு தப்பான தீண்டல் தான்." என்றாள் உறுதியாக.</p>
<p>சாரதியின் முகம் வெளிறி இறுகியது. "ஆனா..." அவள் தயங்கினாள். "நீங்க தொடவே இல்லைன்னு சொல்லும்போது... உங்களை நம்பாமலும் இருக்க முடியலை." சாரதி அவளைப் பார்த்தான்.</p>
<p>"ஏன்னா... இதே இடத்துல அன்னிக்கு உங்களைப் பார்த்திருக்கேன். பஸ்ல கூட... சில நேரம் உங்களோட சின்ன சின்ன அசைவுகள், செய்கைகள், குழந்தைகளிடம் பேசுற விதம். வயசானவங்களுக்கு உதவுற விதம்... அதெல்லாம் நான் கவனிச்சிருக்கேன்." அவள் ஒரு நொடி அவனைப் பார்த்தாள்.</p>
<p>"அதனால நீங்க வேண்டும்னே இப்படிச் செய்திருக்க மாட்டீங்கன்னு என் மனசு இப்பவும் சொல்லுது." சாரதியின் கண்களில் ஒரு சிறிய நிம்மதி தோன்றியது. ஆனால் அவள் அடுத்த வார்த்தை அந்த நிம்மதியை முழுமையாக வரவிடவில்லை."ஆனா... அந்தத் தீண்டல் என்னை எரிச்சல்படுத்துதே." அவன் அமைதியாக நின்றான்.</p>
<p>"இப்போதைக்கு... நான் போறேன் என்னை யோசிக்க விடுங்க." தேவியின் கையைப் பிடித்துக் கொண்டு லாவண்யா நடந்தாள்.</p>
<p>சாரதி அங்கேயே நின்று கொண்டிருந்தான். அவளைத் தடுக்க அவனுக்கு மனம் இல்லை.</p>
<p>அவள் தன்னை முழுமையாக நம்பவில்லை. ஆனால் முழுமையாகத் தவறாகவும் நினைக்கவில்லை.</p>
<p>அதுவே இப்போதைக்கு அவனுக்கு கிடைத்த ஒரே ஆறுதல். அவள் சில அடிகள் சென்ற பிறகு ஒருமுறை திரும்பிப் பார்த்தாள்.</p>
<p>சாரதி இன்னும் அதே இடத்தில் நின்றிருந்தான். அவன் பார்வையும் அவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தது.</p>
<p>இருவருக்கும் நடுவே ஒரு உறவுக்கான பாலம் கட்டத் தொடங்கியிருந்த நேரத்தில், அதைத் தாண்டிச் செல்ல வேண்டிய பாதையில், ஒரு சிறிய பிரிவு வந்து நின்றது.</p>
<p>அந்தப் பிரிவு எவ்வளவு நாள் நீடிக்கும் என்று அவர்களுக்குத் தெரியவில்லை. இருவருடைய மனதிலும் ஒருவரைப் பற்றிய எண்ணம் மட்டும் நாளுக்கு நாள் பெரிதாகிக் கொண்டிருந்தது.</p>
<p>-தொடரும்</p>
<p>-பிரவீணா தங்கராஜ்</p>
<p>&nbsp;</p>]]></content:encoded>
						                            <category domain="https://onlinetamilnovels.com/community/%e0%ae%aa%e0%af%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80%e0%ae%af%e0%af%86%e0%ae%a9%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%9c%e0%ae%a9%e0%af%8d/">பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம் - Praveena Thangaraj</category>                        <dc:creator>Praveena Thangaraj</dc:creator>
                        <guid isPermaLink="true">https://onlinetamilnovels.com/community/topicid/352/</guid>
                    </item>
				                    <item>
                        <title>பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்-11</title>
                        <link>https://onlinetamilnovels.com/community/topicid/350/</link>
                        <pubDate>Tue, 08 Sep 2026 01:16:03 +0000</pubDate>
                        <description><![CDATA[அத்தியாயம்-11   சாரதி புது பைக்கிலிருந்து பார்வையை அகற்றி அத்தெரு வாசலில் யாரையோ தேடுவதாக தெரிய, காஞ்சனா வந்ததும், &quot;யாரை சாரதி தேடற &quot; என்றார்.     &quot;அது வந்து மா.&quot; என்று லாவண்யாவை பற்றி கூற வ...]]></description>
                        <content:encoded><![CDATA[<p>அத்தியாயம்-11<br /><br />   சாரதி புது பைக்கிலிருந்து பார்வையை அகற்றி அத்தெரு வாசலில் யாரையோ தேடுவதாக தெரிய, காஞ்சனா வந்ததும், "யாரை சாரதி தேடற " என்றார்.<br />  <br />   "அது வந்து மா." என்று லாவண்யாவை பற்றி கூற வந்தவன், ஏனோ தயங்கி ஒன்னுமில்லைமா" என்றான். <br /><br />  சைக்கிள் தொலைந்த பொழுது சந்தித்த பெண்ணை பார்த்தேன் என்று கூறவா முடியும்? அதற்கு முன்னரே லாவண்யாவை பார்த்ததால் கூற தயங்கினான். மேலும், இப்பொழுது தான் பைக் வாங்கி உள்ளது. இந்த நேரம் பெண் என்று ஆரம்பித்தால் எங்கே பொறுப்பற்ற பேச்சு என்று நினைத்தாலும் கஷ்டம். காஞ்சனா அவ்வாறு நினைப்பவர் அல்ல.. ஆனாலும் தவிர்த்தான். <br /><br />  லாவண்யா பின்னால் திரும்பி திரும்பி பார்த்து நடக்கவும் இலக்கியாவுமே, "என்னடி முன்னால பார்க்காம பின்னால பார்க்கற?" என்றார். <br /><br />"இல்லை சித்தி.. இஷிதா மயங்கி விழுந்தப்ப ஒருத்தர் உதவி செய்தார். ஆனா அவரோட சைக்கிள் தொலைந்துடுச்சுனு சொன்னேன்ல.‌‌.. அவருக்கு சைக்கிள் கிடைச்சிடுச்சு. பைக் வேற வாங்கவும் செய்திருக்கார் போல வெளிய இருந்தது. அதை பார்த்துட்டு சந்தோஷமா இருந்தார். நீங்க ஏதாவது நினைப்பிங்களோனு பேசாம வந்துட்டேன்" என்றாள்.<br />  <br />  "ஏன்டி இஷிதா மயங்கினப்ப உதவினார். என்னை கூப்பிட்டுருந்தா நன்றி சொல்லியிருப்பேன். ஏன் தப்பா நினைக்க போறேன். இங்க பாரு உங்கம்மா அளவுக்கு நான் தப்பா நினைக்க மாட்டேன். ஆம்பள பசங்களிடம் பேசினாவே தப்புனு சொல்லலை" என்று பேசவும், லாவண்யா தவறை உணர்ந்தாள். <br /><br />இலக்கியாவோ ''மறுபடியும் எங்கயாவது பார்த்தா சுட்டிகாட்டு பேசுவோம்." என்று முன்னால் நடந்தாள்.<br /><br />   லாவண்யாவோ இலக்கியாவின் பேச்சால் கலவரம் குறைந்து ஏதோ ஆனந்தமாய் வந்தாள். <br /><br />     வீட்டில் ஆவுடையப்பன் சுரேஷ் பேசிக் கொண்டிருந்தார்கள். மாலதியை பொண்ணு பார்க்க வரும் போது சொந்தமென யாராவது இருக்க வேண்டுமென்று சித்தப்பா ஆவுடையப்பன் மற்றும் சுரேஷ் இலக்கியாவை தான் அழைத்திருந்தார். ஏனெனில் புருஷோத்தமனும் தந்தைக்கு ஓரே பையன், ஆவுடையப்பன் சித்தப்பாவுக்கும் சுரேஷ் ஒரே பையன் என்பதால் உறவென இருப்பவர் தானே செல்ல வேண்டும்.   <br />  இங்கு ஆவுடையப்பன் பெரும்பாலும் இருக்குமிடம் தெரியாமல் இருப்பவர்.   <br />   வயதான காலத்தில் அலைச்சல் வேண்டாமென வருவதை தவிர்க்க, சுரேஷ் இலக்கியா செல்ல பேசினார்கள். <br /><br />  ஆவுடையப்பனுக்கு சாப்பாடு என்று பேச்சு அடிப்படும் போது, லாவண்யாவோ 'எனக்கு சமைக்க தெரியும் சித்தி. நான் பார்த்துக்கறேன்." என்றாள். <br />"அப்படியா.. செமஸ்டர் வேற. படிச்சிட்டு எழுதிட்டு இருப்ப, இதுல சமையல் வேற, வேலை கூடுமே" என்றாள். <br /><br />"அதெல்லாம் ஒரா நாள்ல சமாளிச்சிடுவேன் சித்தி" என்றாள். <br /><br />   அதனால் அடுத்து வேலூருக்கு செல்ல முடிவெடுத்தார்கள் சுரேஷ் இலக்கியா. <br /><br />  அன்றைய நாள் இனிதாக கழிய, அடுத்த நாள், சைக்கிளில் தான் டிப்போவிற்கு வந்தான் சாரதி. <br /><br />  காஞ்சனா கூட, ஏன் சாரதி பைக்ல போகலாமே. வீட்ல சும்மா வாங்கி வச்சி அழகு பாராக்கவா வாங்கியது" என்று கேட்க, "அப்படியில்லைம்மா... இத்தனை நாள் சைக்கிள்ல வந்தது, சட்டுனு பைக்னா.. ஒரு‌மாதிரி அசௌகரியமா இருக்கு. நான் பைக்கை எங்கயாவது வேற விஷயத்துக்கு கொண்டு போய் சுத்தறேன். கொஞ்சம் நாள் கழிச்சு டிப்போவுக்கு போக உபயோகிக்கறேன்" என்றான். <br /><br />'உன் இஷ்டம்யா' என்றதும் சைக்கிளில் வந்து அதன் இருப்பிடத்தில் வைத்துவிட்டு அங்கே நிர்வாகிக்கும் ஆளிடம் சைக்கிளை பத்திரமாக பார்த்துக்க கூறி, கையெழுத்து போட்டு நடத்துனர் இருக்கையில் அமர, அவனுக்கு முன்னே இருந்தது லாவண்யா தேவி தான். <br /><br />  ஒரு சிநேக புன்னகை சிந்தி, "முத்து அண்ணா ரைட்" என்றான். <br /><br />   தேவியிடம் லாவண்யா, "மாலதி அக்காவை பொண்ணு பார்க்க சுரேஷ் சித்தப்பாவையும், இலக்கியா சித்தியும் போறாங்க. இஷிதாவை கூட கூட்டிட்டு போறாங்க. நானும் சின்ன தாத்தா மட்டும் தான். ஏதாவது ஈஸியா சமைக்க டிப்ஸ் கொடு" என்றாள். <br /><br />தேவியோ "மேகி பாஸ்தா பாக்கெட்டை வாங்கி சுடுதண்ணில போட்டு கொண்டு வா. எனக்கெல்லாம் ரொம்ப பிடிக்கும்" என்றாள். <br /><br />"அய்ய... மூனு வேளை செய்ய கேட்டா ஒரு வேளைக்கு சொல்லற. உன்னை மாதிரி ஆளுக்கு தான் எல்லாமே பாக்கெட்ல விற்கறது வந்துடுச்சு." என்று கடிந்தாள். <br /><br />சாரதி பேசியதை கேட்டு லேசாக சிரிக்க, லாவண்யா சாரதி சந்திப்புகள் 'தெரிந்தவர்', என்ற ரீதியில் தான் பயணித்தது. <br /><br />  அப்படியென்றும் இலக்கியா இல்லாத நாளில் லாவண்யா பயந்து போகவில்லை‌ காலையில் உப்புமா, மதியம் பூண்டு குழம்பு அப்பளம் என்று வைத்தாள். <br /><br />தேவி கூட "நான் எதுக்கோ உனக்கும் சேர்த்து எங்கம்மாகிட்ட டிபன் வாங்கிட்டு வந்தேன்" என்றாள்.<br /><br />  "உப்புமாவை டேஸ்ட் பண்ணி பாரு" என்றாள். பேருந்தில் சின்னதாக இருந்த டிபன்‌பாக்ஸை திறந்து, சீனியை தொட்டு சாப்பிட்ட தேவியோ "இருக்கறதிலயே எனக்கு பிடிக்காத புட் உப்புமா. ஆனா அதையே செய்து என்னை சாப்பிட வச்சி, செமையா இருக்குனு சொல்ல வச்சிட்ட. உனக்கு வர்றவன் பொழைச்சிப்பான்" என்றாள்‌.<br /><br />"உன்னை.." என்று தோளில் இடித்து டிபன் பாக்ஸை மூடினாள். சாரதி அதெல்லாம் கவனித்தவனாக முறுவலிட்டான். <br />   சில நேரம் தான், இதே போன்ற பயணியர்களோடு சிரிப்பும் பேச்சும் கேட்டு ரசிப்பது. <br />  பெரும்பாலும் குழந்தைகள் முன்ன வந்து நின்றால் அந்த நேரம் முகத்தை உற்றென்று‌ மாற்றி சிரிக்க வைப்பான். அதிலும் விசிலை வைத்து ஓசையெழுப்பி, அது போல லாவண்யாவை கவனிப்பதையும் வாடிக்கையானது. <br />  <br />கல்லூரி முடிந்து வீடு திரும்பிய பொழுதும் வீடு பெருக்கி, சுத்தம் செய்து தாத்தாவுக்கு டீயை போட்டு தந்தாள். <br />   தேவியிடம் பேசியபடி இரவு சப்பாத்தி செய்து தந்தாள். தேவியுமே அன்று அங்கு தான் சாப்பிட்டாள். <br />  <br />  நேரமாகவும், தேவி சென்றப்பின் உறங்க போனாள். <br />  ஆவுடையப்பனோ "லாவண்யா... கதவை நல்லா தாழ்போடு..‌ மறந்துட போற.. அப்பறம் கேஸ் ஆப் பண்ணிட்டியா? ஒருக்கா பார்த்துக்கோ. அந்த ஜன்னல் கதவு அதையும் சாத்திடு. இல்லைன்னா ஏதாவது பூச்சிகிச்சி வந்துடும்" என்று ஒவ்வொன்றாக கூற, "கேஸ் ஆப் பண்ணிட்டேன் தாத்தா. லாக் பண்ணிட்டேன்." என்று கூறியவள் இரவு அக்கா மாலதியிடம் வீடியோ காலில் 'மாப்பிள்ளையை பார்த்தியா? உனக்கு பிடிச்சிருக்கா? மாமா எப்படியிருக்கார்" என்றெல்லாம் கேட்டாள். <br /><br />"அம்மா அப்பாவுக்கு பிடிச்சிருக்கு. எனக்கும் பிடிச்சிருக்கு. நகை பத்தி பேசினாங்க. வரதட்சனை எவ்வளோ கேட்டதா சித்தி சொன்னாங்க. அப்பா எல்லாம் போடறதா சொன்னார். <br />  நீ கூட இல்லையேனு வருத்தமா இருந்தது" என்றாள் மாலதி. <br /><br />   "எனக்கும்... அங்கிருந்தா உன் கூட சண்டை போட்டுட்டு சுத்திட்டு இருந்தேன். இப்ப இங்க வந்தப்பிறகு உன்னை ரொம்ப மிஸ் பண்ணறேன். அதுவும் உனக்கு கல்யாண தடை ஆகுதுனு அம்மா ஒரு வருஷமா புலம்பவும், நான் சாமிகிட்ட கூட வேண்டினேன். அக்காவுக்கு பிடிச்சவனா வந்து கல்யாணம் நடக்கணும்னு." என்றாள் லாவண்யா. என்னயிருந்தாலும் அக்கா தங்கை உறவு என்பது அடித்தாலும் அணைத்துக் கொள்ளும் அல்லவா. <br /><br />"சரி.. இப்ப.. பொண்ணு பார்க்க தான் வரலை. கல்யாணத்துக்கு எந்த எக்ஸாம் இருந்தாலும் வரணும். எப்படியும் செமஸ்டர் டேட் எல்லாம் பார்த்து தான் அப்பா நிச்சயம், கல்யாணம் வைப்பார்." என்று பேச, லாவண்யா ஆமென்றாள். <br /><br />அப்படியே அன்னை அலமேலுவோ, "சாப்பிட்டியா இல்லையாடி." என்று கேட்டார். <br /><br />"சப்பாத்தி சாப்பிட்டாச்சும்மா." என்றாள்.<br /><br />"லாவண்யா... பூனை நடுராத்திரி வரும் அதனால ஜன்னலை சாத்திடு" என்றாள். <br /><br />"பூனை உள்ள வருமா சித்தி. பாலை சூடுபடுத்தி ப்ரிட்ஜில வச்சிட்டேனே." என்றாள்.<br /><br />   "அட பால் இல்லைன்னாலும் கிச்சனை உருட்ட வரும்" என்றார். <br /><br />"அவ தூங்கிட்டா நடுவுல எந்திரிக்கவே மாட்டா" என்று அலமேலு கூற, "அம்மா.. குறை சொல்லறதிலயே இரும்மா. சித்தி ஜன்னலும் லாக் பண்ணிடறேன் சித்தி." என்றாள் லாவண்யா.<br /><br />  அன்னை அலமேலு, அக்கா மாலதி, அப்பா புருஷோத்தமன், சித்தப்பா சுரேஷ்யிடம் எல்லாம் பேசிவிட்டு இஷிதாவை பற்றியும் கேட்டுவிட்டு திரும்ப, ஆவுடையப்பன் தாத்தா எப்பொழுதே உறங்கியிருந்தார்.<br /><br />  நைஸாக தேவியிடம் போனில்  பேசிக் கொண்டிருந்தாள். பிறகு நேரம் கழித்து உறங்கினாள். <br />  <br />  அடுத்த நாள் மதியமே இலக்கியா வந்துவிடுவார் என்றாலும் பருப்பும் அவரை பொரியலும் சமைத்து வைத்து கிளம்பினாள். <br /><br />  இரண்டு மூன்று முறை அடுத்தடுத்த நாட்கள் சாரதி நட்பாக தான் புன்னகைத்தான். <br /><br />  லாவண்யாவுமே... அப்படி தான். ஏன் கூடவந்த தேவியும் நட்பு ரீதியில் புன்னகைத்து ஏறுவார்கள். <br /><br />அப்படி சென்றுக் கொண்டிருக்கும் தருணம், அன்று தேவி ஏறிவிட்டு, லாவண்யா ஏறினாள். <br /><br />  தேவிக்கு இடம் கிடைக்கவும் அமர்ந்துவிட்டாள். ஆனால் லாவண்யாவுக்கு இடம் கிடைக்காமல் நின்றுக் கொண்டு வந்தாள். <br /><br />   சாரதி பின்னிருக்கையிலிருந்து முன்னே கொஞ்சம் கொஞ்சமாய் முன்னேறி, டிக்கெட் பணம் வாங்கி கிழித்து டிக்கெட் கொடுத்தபடி, ஆங்காங்கே நின்று விசிலடித்து முன் நோக்கி வந்தான். <br />   <br />   லாவண்யாவை கடக்கும் போது முத்து அண்ணா சிக்னல் என்று வண்டியை சட்டென நிறுத்த, லேசாக இடித்து விட்டான் சாரதி. ஆனால் பதட்டத்துடன் 'சாரி." என்று கூற, லாவண்யாவோ அங்கும் இங்கும் பார்த்து மௌனமாய் தன் துப்பட்டாவை சரிசெய்துக் கொண்டாள். <br /><br />  சாரதிக்கு அவளது செய்கையால் பகீரென்றது. லாவண்யா தோளை தான் உரசியபடி மேலே சாய்ந்தான். இத்தனை நாள் நட்பாக பேசிய பெண் மீது எதிர்பாராமல் உரசியதை கண்டு அவனுமே பதறினான்.‌<br /><br />  அடுத்தடுத்து டிக்கெட் கிழிப்பதில் கூட கவனம் சிதறியது. லாவண்யா ஸ்டாப் இறங்கும் போது, லாவண்யா சாரதியை காண அவனோ கஷ்டத்துடன் 'சாரி' என்ற முகவாட்டத்துடன் தான் பார்த்தான்.‌<br /><br />  லாவண்யா தெரியாமல் நடந்திருக்கும் என்று அன்றைய நாளை கடந்தாள்‌. பிறகு மதியம் கூட அவன் பேருந்தில் வந்தாலும், அவனது பார்வையை தவிர்த்து கொண்டாள். <br /><br />   சாரதியும் காலையில் தெரிந்து உரசியதால் அவள் பார்வை தவிர்ப்பதாக புரிந்துக் கொண்டான்.‌<br /><br />இரண்டு நாள் கழித்து சாரதி டிக்கெட் கிழித்து கம்பியில் கை வைக்க, சட்டென திரும்பிய லாவண்யாவோ முதுகில் தட்டி விட்டாள். <br /><br />சாரதிக்கோ தெரியாம கை பட்டுடுச்சா? என்று தான் குழம்பினான். <br />  ஏனோ லாவண்யா முறைத்து தள்ளுவது போல சாரதிக்கு தோன்றியது. <br /><br />அடுத்த இரண்டு நாளும் பார்வைகள் தவிர்த்தாள் லாவண்யா. <br />   ஆனாலும் அதே வழக்கமான ஏழு மணி பஸ்ஸை தவிர்க்க இயலாது சோர்ந்தாள். <br />    சாரதி காது பக்கம் வந்து விசிலடித்து தொலைக்க, லாவண்யா வெடுக்கென முறைத்தாள்.<br /><br />  "அறிவில்லை... பக்கத்துல வந்து.. இப்படியா?" என்று பல்லை கடித்தாள். <br /><br />   சாரதியோ அக்கம் பக்கம் பார்த்து, என்ன நடந்ததென புரியாமல், தவிர்த்து அடுத்து வாயிலேயே விசில் சப்தம் எழுப்பினான். <br />  ஏன் தன்னிடம் அறிவில்லையா?' என்ற அளவு அனைவர் மத்தியிலும் திட்டினாளென்று சாரதிக்கு புரியவில்லை. <br /><br />அதே நேரம் கல்லூரியில் லாவண்யாவால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. தேவி எவ்வளவோ என்னவென கேட்டும் மௌனமாய் சொல்லாமல் மறுத்தாள். <br /><br />சாரதி சமீபத்தில் பேருந்து பிரேக் அடித்ததும் தன் மீது வந்து மோதி, தள்ளி சென்ற நாளிலிருந்து நினைத்து பார்த்து, பேருந்து பயணத்தையே கிட்டதட்ட வெறுத்தாள். <br /><br />  ஆனாலும் கல்லூரி முடியவும் இம்முறையும் பேருந்தில் தானே பயணம் செய்ய வேண்டியதாயிருந்தது. <br /><br />சாரதி பேருந்து வரவும், லாவண்யா தேவியிடம், "தேவி.. அடுத்த பஸ்ல போகலாமா?" என்று ஏறாமல் கேட்டாள். <br /><br />தேவியோ "என்ன விளையாடறியா? நேரத்துக்கு வீட்டுக்கு வந்து தொலைக்கலை அங்க எங்கம்மா ஏன் எதுக்கு லேட்டுனு கேட்டு தொலைப்பாங்க. என்ன தான் பிரச்சனைனு கேட்டாலும் சொல்ல மாட்டேங்கற" என்று பேருந்து படிக்கட்டில் ஏறினாள்.<br /><br />  "நீ வர்றியா வரலையா?" என்று கேட்க, சாரதியை பார்த்து வேண்டாவெறுப்பாக ஏறினாள். <br /><br />சாரதிக்கு லாவண்யா கோபமாக இருப்பதை ஒரளவு யூகித்திருந்தான். அவனுக்கும் அவளது பார்வை மாறிய விதத்தை வைத்து, யோசித்து பார்த்து, தான் அவள் மீது மோதியதில் இருந்து, இந்த எரிச்சலுடன் தன்னை காண்பதை யூகித்துக் கொண்டான். <br /><br />சிநேக புன்னகை வீசியது கடவுளுக்கு கூட பொறுக்கவில்லை போலும். அதனால் பயணியராகவே கடந்து செல்ல முயன்றான்.<br /><br />  அம்பத்தூர் எஸ்டேட் வந்ததும் டிப்போவில் வண்டி நின்றது. பயணிகள் எல்லோரும் விழுந்தடித்து இறங்குவதை கண்டாள்.<br /><br />தேவியும் அவசரமாய் இறங்க போனவளிடம், "இருடி... இந்த கூட்டத்துல இடிச்சிட்டு இறங்க வேண்டாம். எல்லாரும் இறங்கினப் பிறகே இறங்கலாம்." என்று லாவண்யா கூற, தேவியும் சரியென மற்றவர் இறங்க காத்திருந்தனர்.‌<br /><br />அந்த நேரம், ஒரு வயசான பெண்மணியோ "தம்பி பிராட்வேல ஏறினப்ப, மீதி சில்லரை இறங்கறப்ப கேளுங்க தர்றேன்னு சொன்னியே" என்றதும், "சாரி பாட்டி... ஏதேதோ யோசனையில மறக்க பார்த்தேன் இருங்க" என்று ஐம்பது ரூபாய் நோட்டும் இருபது ரூபாய் நோட்டை எடுத்தான். கூடவே ஏழு ரூபாயுக்கு சில்லரை தேடினான். லாவண்யாவின் மாற்றத்தை புரிந்துக்கொள்ள இயலாத சிந்தனை தான் அது. <br /><br />  பையில் ஐந்து ரூபாய் காயினும், இரண்டு ரூபாய் காயினும் எடுத்து நீட்டும் நேரம் முகம் நிமிராமல் கையை நீட்ட சாரதியின் கை அந்த நேரம் பார்த்து, லாவண்யா குறுக்கே அவசரமாய் இறங்க போகவும், அவள் கழுத்தில் தீண்டியது. <br />  லாவண்யா பதறி பின்னால் நகரும் முன், சாரதியோ நாணயத்தின்‌ பிடியை நழுவ விட, ஐந்து ரூபாய் நாணயமோ அவளது ஆடைக்குள் சென்றது. சாரதியும் ரூபாய் தாளை பாட்டியிடம் தந்தவன், பதட்டத்துடன் மீண்டும் ஐந்து ரூபாய் சில்லறை காயினை அவசரமாக எடுத்து பாட்டியிடம் தந்தான். <br /><br />   அனைவரும் முட்டி மோதி இறங்கி முடிக்க, லாவண்யாவோ  "அப்ப அவ்ளோ திட்டிட்டேன்னு இப்ப பழிவாங்கிட்டல்ல? அதுவும் காயினை எங்க போடற? நான் என்ன போஸ்ட் பாக்ஸா? இல்லை உண்டியலா? அறிவில்லை உனக்கு? உனக்கு இதே வேலையா?" என்று கத்த, கூட வந்த தேவியோ "என்னடி ஆச்சு?" என்று கேட்டாள். <br /><br />சாரதி கை தன் கழுத்துக்கு கீழ் வந்து தீண்டி, சில்லரை வேறு தன் மார்புக்கு மத்தியில் சிக்கிக் கொண்டதை கூற தயங்கினாள். <br /><br />சாரதியோ, லாவண்யாவை பார்த்து, "இங்க பாரு.. நான் எதையும் வேண்டுமின்னே பண்ணலை. நான் உன்னை கவனிக்கலை. தேவையில்லாம கத்தாத. நான் கன்டெக்டரா நாலு வருஷம் சர்வீஸ்ல இருக்கேன்.. இந்த மாதிரி எப்பவும் நடந்ததில்லை. ஏன் தான் உன்னிடம் இப்படி மாட்டிக்கிட்டேன்னு சத்தியமா தெரியலை. தயவு செய்து பெருசுப்படுத்தாத." என்றான். <br /><br />"ஏது... இப்ப நடந்ததை பெருசுப்படுத்தக் கூடாதா? அத சொல்ல நீயாருடா. ஆப்ட்ரால் ஒரு கண்டெக்டர்." என்று லாவண்யா கத்தவும், டிரைவர் முத்துவோ "என்னப்பா சாரதி அங்க என்ன பிரச்சனை?" என்று வந்தார். <br /><br />"அதெல்லாம் ஒன்னுமில்லை அண்ணா." என்று கூறியவன். லாவண்யாவிடம் மென்குரலில், "தயவு செய்து ஏதாவது சொல்லி நீயே உன்னை பேசுப்பொருளா மாத்தாத." என்றான் அவசரமாய். <br /><br />"சீ.. உன்னிடம் பேசறதே அசிங்கம். இதுல நடந்ததை மறைக்க சொல்லறல்ல" என்று நின்றாள். <br /><br />தேவியோ "என்னடி நடந்துச்சு? கொஞ்ச நாளா நீ அப்செட்டாவே பஸ்ல டிராவல் பண்ணற. கேட்டா சொல்ல மாட்டேங்கற" என்று கேட்டாள். <br /><br />லாவண்யாவோ அதே கோபத்தில் நிற்க, சாரதியோ, "உனக்கு என்கூட சண்டை போடணுமா.. அங்க டிப்போவுக்குள்ள இருப்பேன். ஏதாவது புகார் தந்துட்டு, நீயே சண்டை போட வா. இப்ப என்னை விடு" என்று அவசரமாய் இறங்கி டிப்போவுக்குள் சென்றான். <br /><br />மதிய நேர உணவு நேரமென்பதால் நிறைய கண்டெக்டர் டிரைவர் இருந்தார்கள். சாரதிக்கு இந்த நேரம் அந்த பெண் இங்கு வந்து தவறுதலாக நடந்ததை கூறி என்னை தவறாக நினைக்க வைத்தால்?' என்று பயந்தான். இத்தனை நாள் வாங்கி வைத்த நல்ல பெயரும், தந்தைக்கு உண்டான மதிப்பும் நொடியில் அழிந்துடுமோ என்று பயந்தான். <br /><br />  ஆனால் என்ன தான் நடந்தது? இப்பொழுது நடந்ததும், முன்பு அவள் மீது மோதியதும் தவறு தானே என்று சாட்சி கடிந்தது. <br /><br />சாரதி வேதனையின் உச்சத்தில் நின்றான்.<br /><br />-தொடரும். <br />-பிரவீணா தங்கராஜ்‌<br /><br /><br /></p>]]></content:encoded>
						                            <category domain="https://onlinetamilnovels.com/community/%e0%ae%aa%e0%af%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80%e0%ae%af%e0%af%86%e0%ae%a9%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%9c%e0%ae%a9%e0%af%8d/">பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம் - Praveena Thangaraj</category>                        <dc:creator>Praveena Thangaraj</dc:creator>
                        <guid isPermaLink="true">https://onlinetamilnovels.com/community/topicid/350/</guid>
                    </item>
				                    <item>
                        <title>பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்-10</title>
                        <link>https://onlinetamilnovels.com/community/topicid/349/</link>
                        <pubDate>Mon, 07 Sep 2026 01:26:06 +0000</pubDate>
                        <description><![CDATA[அத்தியாயம்-10
போலீஸ் ஸ்டேஷனில் சாரதியின் சைக்கிளைத் திருடியவன், ஒரு குற்றவாளியைப் போல அல்லாமல், அங்கே வந்திருந்த விருந்தாளியைப் போல நாற்காலியில் அமர்ந்திருந்தான்.
அவனுடைய பெயர் கோவிந்தன். ...]]></description>
                        <content:encoded><![CDATA[<p>அத்தியாயம்-10</p>
<p>போலீஸ் ஸ்டேஷனில் சாரதியின் சைக்கிளைத் திருடியவன், ஒரு குற்றவாளியைப் போல அல்லாமல், அங்கே வந்திருந்த விருந்தாளியைப் போல நாற்காலியில் அமர்ந்திருந்தான்.</p>
<p>அவனுடைய பெயர் கோவிந்தன். அந்த ஏரியாவில் அவனைத் தெரியாதவர்கள் குறைவு. ஆளுங்கட்சியிலும் சரி, எதிர்க்கட்சியிலும் சரி அவனுக்கு வேண்டிய ஆட்கள் இருந்தார்கள்.</p>
<p>அதனால் போலீஸ் ஸ்டேஷனுக்குள்ளேயே அவனுடைய குரல் ஓங்கிக் கேட்டுக் கொண்டிருந்தது.</p>
<p>"யோவ்... நான் எல்லாம் பலானதைத் திருடி பெரிய சம்பவம் பண்ணுவேன். எத்தனையோ கேஸ் என் மேல இருக்கு. இப்போ... ஒரு சைக்கிளுக்காக சிசிடிவி வச்சு என்னை இங்க வரவழைச்சிருக்கீங்க!" என்று கையை விரித்தான்.</p>
<p>"என்னை மாதிரி ஒரு ஆளுனு சொல்லிட்டா போயிட்டே இருப்பேனா? என்னய்யா பிரச்சனை? பணம் வேணுமா? எந்தக் கட்சி ஆளுகிட்ட வேணும்னாலும் வாங்கித் தர்றேன். இல்ல... வேற ஏதாவது வேணுமா? சொல்லுங்க."என்று திமிராகப் பேசிக்கொண்டிருந்தான்.</p>
<p>எதிரில் இருந்த போலீஸ் அதிகாரியோ அவனை அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.</p>
<p>அப்போது ஒரு கான்ஸ்டபிள் உள்ளே வந்து, "சார்... அந்தப் பையன் வந்துட்டான்." என்றான்.</p>
<p>"வரச்சொல்லு." சில நொடிகளில் சாரதி உள்ளே வந்தான்.</p>
<p>அவனது பார்வை முதலில் போலீஸ் அதிகாரியிடம் சென்றது. பிறகு அங்கே இருந்த கோவிந்தனைப் பார்த்தது</p>
<p>கோவிந்தனோ அவனை மேலிருந்து கீழ்வரை பார்த்தான். "எவன் அவன்?" என்றான்.‌</p>
<p>"சைக்கிள் திருட்டுப் போச்சுன்னு கம்ப்ளைன்ட் கொடுத்த பையன்." என்றார் அதிகாரி.</p>
<p>கோவிந்தன் உதட்டைச் சுழித்தான். "ஏன்டா... பெருசா BMW காரையா திருடிட்டேன்? சிசிடிவி எல்லாம் வச்சு ஆதாரம் காட்டி என்னை இங்க கூட்டிட்டு வந்திருக்கீங்க. என்னடா வேணும்?" சாரதி ஒரு நொடி கூட யோசிக்கவில்லை.</p>
<p>அவன் நேராக கோவிந்தனருகில் சென்று, அடுத்த நொடி அவனது கால்களைப் பிடித்துக் கொண்டான்.</p>
<p>"அண்ணா.." என்றவனது குரலில் கோவிந்தனே அதிர்ந்து போனான்.</p>
<p>அங்கே இருந்த போலீஸ்காரர்களும் ஒரு நொடி ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். "என் சைக்கிளை எனக்குத் தந்துடுங்க அண்ணா." என்றான். </p>
<p>"டேய்... என்னடா இது? எழுந்திரு!" </p>
<p>"ப்ளீஸ் அண்ணா..." சாரதியின் குரல் உடைந்து போயிருந்தது. "அது எங்கப்பா பயன்படுத்தின சைக்கிள். அவர் இறந்ததுக்கப்புறம்... அவரோட கடைசி நினைவா நான் அதை மட்டும் தான் வச்சிருக்கேன். உங்ககிட்ட சண்டை போடவோ, பெரிய ஆளுன்னு காட்டிக்கிட்டு என் பொருளை வாங்கிக்கவோ நான் வரலை அண்ணா. அது எனக்கு வேணும். அவ்ளோதான்." என்று கேட்டான். </p>
<p>கோவிந்தன் அவனை வெறித்துப் பார்த்தான். அவன் எதிர்பார்த்தது வேறு. 'என் பொருளைத் திருடிட்டியே... கொடு' என்று சத்தம் போட்டு, கழுத்தில் சட்டை காலரை பிடித்து சண்டை போடுவான். ஜம்பமாக என்ன செய்ய முடியுமோ போடா' என்றுதான் கூற நினைத்திருந்தான்.</p>
<p>ஆனால்... இவன் தன்னுடைய காலில் விழுந்து கெஞ்சிக் கொண்டிருக்கிறான் என்று ஆச்சரியமாய் பார்த்தான்.</p>
<p>"டேய்... என்னடா நெஞ்சை நக்கற?" என்று கேட்டாலும் அவன் குரலில் இருந்த திமிர் சற்றுக் குறைந்திருந்தது.</p>
<p>சாரதி எழுந்து நின்றான். "சென்டிமென்ட்டா பேசறேன்னு நினைக்காதீங்க அண்ணா. அதான் உண்மை. என்னிடம் வேற எதுவும் இல்லை. அதனாலதான் உங்களிடம் வந்து கேட்கிறேன்." என்று பணிவாக கேட்டான்.</p>
<p>கோவிந்தன் அவனை மீண்டும் உற்றுப் பார்த்தான். ஆள் வாட்டசாட்டமாகத்தான் இருந்தான் சாரதி.</p>
<p>வயதுக்கேற்ற உடற்கட்டும் இருந்தது. எப்படியும் அடிக்க வேண்டுமென்று நினைத்தால் நிச்சயம் மலையோடு கூட மோதும் வல்லமை இருக்கின்றவனாக தான் சாரதி தெரிந்தான். ஆனால்... இப்படி கெஞ்சிக் கொண்டிருப்பது அவனுடைய தோற்றத்துக்கே முரணாக இருந்தது.</p>
<p>"பேஜாரா இருக்கியேடா..." என்று முணுமுணுத்தவன், "சரி... உன் சைக்கிளை ஏன் திருடினேன்னு தெரியுமா?" சாரதி அமைதியாக நின்றான்.</p>
<p>"நீ வச்சிருந்த சைக்கிள் நல்லா இருந்துச்சு. எண்ணெய் போட்டு பளிச்சுனு வச்சிருந்த. புதுசு மாதிரி கண்ணுல பட்டுச்சு. அதான் தூக்கிட்டேன்."</p>
<p>சிறிது நேரம் அமைதியாக இருந்தவன், "ரொம்ப நாளாச்சு.. சின்னதா திருடி... அதான் திருடி விலைக்கு விற்க நினைச்சு வேற இடத்துக்கு அனுப்பிட்டேன். இப்ப அது எங்க இருக்குன்னு..." என்று சொல்லிக் கொண்டிருந்தபோதே 'ஒரு நிமிஷம்' என்று அவனது அலைபேசி எடுத்து விற்க கூறியவனிடம் பேசினான்.</p>
<p>"டேய் நேத்து விற்க சொல்லி தந்தேனே... ஆங்... அந்த சைக்கிளை எடுத்துட்டு நம்ம ஏரியா ஸ்டேஷனுக்கு வந்துடு. ஆமா... அந்த சைக்கிளை உடனே எடுத்துட்டு வா. விற்க வேண்டாம்... பணம் வாங்கிட்டியா.. இல்லை இல்லை கொண்டா.. ஆமா... காரணமாத்தான். சீக்கிரம்." என்று கூறி அழைப்பைத் துண்டித்தான் கோவிந்தன்.</p>
<p>சாரதியின் முகத்தில் முதல் முறையாக சிறிய நம்பிக்கை தெரிந்தது.</p>
<p>கோவிந்தன் அதை கவனித்தான். "உன்னைப் பார்த்தா பாவமா இருக்கு. என்னடா வேலை பார்க்க?" என்று கேட்டான். </p>
<p>"கண்டெக்டரா இருக்கேன் அண்ணா." என்றான்</p>
<p>"கண்டெக்டராவா?"</p>
<p>"ஆமா."</p>
<p>"காக்கி டிரஸ் போட்டிருக்கியே..."</p>
<p>"அது கண்டெக்டர் யூனிஃபார்ம் அண்ணா."</p>
<p>"ஓ..." கோவிந்தன் தலையசைத்தான்.</p>
<p>"உங்கப்பா என்ன பண்ணாரு?"</p>
<p>"அவரும் கண்டெக்டர்தான். அவர் வேலை பார்த்த இடத்திலேயே எனக்கும் வேலை தந்தாங்க" என்றான் சாரதி. </p>
<p>"உங்கப்பா பெயர்?"</p>
<p>"சண்முகம்."</p>
<p>கோவிந்தன் சில நொடிகள் அமைதியாக இருந்தான்.</p>
<p>"சண்முகமா?"</p>
<p>"ஆமா அண்ணா."</p>
<p>"கூடப்பிறந்தவங்க இருக்காங்களா?"</p>
<p>"இல்ல. அம்மா மட்டும் அண்ணா."</p>
<p>"சொந்த வீடு இருக்கா" என்றார். </p>
<p>"ஆமா அண்ணா... ஆனா பெருசா இல்லை. ஒரு பெட்ரூம், ஹால், கிச்சன் அவ்ளோதான்." என்று விவரித்தான். </p>
<p>"அம்மா என்ன பண்றாங்க?"</p>
<p>"வீட்டுலேயே தையல் மெஷின்ல அக்கம் பக்கத்துல மட்டும் துணி தச்சி தருவாங்க. அப்பா இருந்தப்ப இருந்த வீட்டை கொஞ்சம் மாற்றி இருக்கு." என்றான்.</p>
<p>கோவிந்தன் அவனைப் பார்த்தபடி மெதுவாகத் தலையசைத்தான்.</p>
<p>"ம்ம்..." அப்போது வெளியே ஒரு ஆட்டோ வந்து நின்ற சத்தம் கேட்டது.</p>
<p>சில நொடிகளில் ஒரு ஆள் உள்ளே வந்து, ''அண்ணா... இதுதானே?" என்று சைக்கிளை நீட்டினான்.</p>
<p>சாரதி திரும்பிப் பார்த்தான். அவனது கண்கள் விரிந்தன.</p>
<p>"இதான் எங்கப்பா சைக்கிள்.." என்று முணுமுணுத்தவனின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழிந்தது.</p>
<p>இரண்டு நாட்கள் தூசி படிந்திருந்த அந்தச் சைக்கிளை பார்த்தவுடனேயே, அவன் ஓடிச் சென்று அதைத் தொட்டுப் பார்த்தான்.</p>
<p>ஹேண்டிலை வருடினான், சீட்டைத் தொட்டான், பிறகு சைக்கிளின் பெல்லை அழுத்திப் பார்த்தான். டிரிங்... அந்த ஓசை அவனுக்குள் 'அப்பா உன்னிடமே வந்துட்டேன் கண்ணா' என்று கூறி மனதை மீண்டும் உயிர்ப்பித்தது. </p>
<p>கண்களை மூடிக் கொண்டவன், சைக்கிளின் ஹேண்டிலைப் பிடித்தபடி சில நொடிகள் நின்றான்.</p>
<p>கோவிந்தன் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தான்.</p>
<p>"என்னய்யா இது..." என்று அருகில் இருந்த போலீஸ்காரரிடம் மெதுவாகக் கேட்டான்.</p>
<p>"சைக்கிள் கிடைச்ச சந்தோஷத்துல அழறான் இவன் சண்டை போடுவான், கத்துவான், பேஜார் பண்ணுவான்னு நினைச்சா... இப்படி இருக்கான்." போலீஸ் அதிகாரி லேசாகச் சிரித்தார்</p>
<p>"ம்ம்... எல்லா நேரமும் இப்படித்தான் இருப்பான் போல." என்றார் அவர். சாரதி தன்னுடைய கண்ணீரைத் துடைத்துக் கொண்டான்.</p>
<p>பிறகு கோவிந்தனருகில் வந்து, "ரொம்ப தேங்க்ஸ் அண்ணா." என்று கூறி, தன்னுடைய கையில் இருந்த மோதிரத்தைக் கழற்றினான்.</p>
<p>"இதை வச்சுக்கோங்க." என்றான்</p>
<p>கோவிந்தன் அவனைப் பார்த்தான்.</p>
<p>"என்னாதிது?"</p>
<p>"சைக்கிள் வாங்கித் தந்ததுக்காக..." என்று கூறினான்</p>
<p>"ஏய்... என்னை என்ன பைத்தியக்காரன்னு நினைச்சியா?" என்று கோவிந்தன் கத்தினான்.</p>
<p>சாரதி திகைத்தான். "ஒன்னும் வேண்டாம். நான் திருடினதை திருப்பிக் கொடுத்தேன். அதுக்கு நீ எனக்கு பணமோ, பொருளோ தர்றது எனக்கு வேண்டாம். எதுனாலும் திருடி எடுத்துக்கறது தான் என் ஸ்டையில். நீயா தந்தா வாங்கமாட்டேன். புரிதா." என்றான்.</p>
<p>"அண்ணா..."</p>
<p>"மோதிரத்தை நீயே வச்சுக்கோ." என்று அவனது கையை மூடி வைத்தான்.</p>
<p>பிறகு அவனது தோளில் தட்டியபடி, "என்னமோ தெரியலடா... உன்னைப் பிடிச்சிருக்கு." சாரதி அமைதியாக அவனைப் பார்த்தான்.</p>
<p>"ஏதாவது உதவி வேணும்னா... கோவிந்தன்னு கேட்டு என்னை தேடி வா. என்னால முடிஞ்சதை பண்ணறேன்." என்றான். </p>
<p>"தேங்க்ஸ் அண்ணா." சாரதி மனதாரக் கூறினான்.</p>
<p>பிறகு போலீஸ் அதிகாரியிடம் திரும்பி, "சார்..."</p>
<p>"என்ன?"</p>
<p>"உங்களுக்கும் ஏதாவது காசு தரணுமா சார்?" என்று தயக்கத்துடன் கேட்டான்.</p>
<p>"என்ன?" என்று அதிகாரிகள் கடுப்பானார்கள்.</p>
<p>"இப்ப என்கிட்ட பணம் இல்லை சார். இந்த மோதிரம் மட்டும் இருக்கு. இதை நீங்க வச்சுக்கோங்க." என்று மீண்டும் மோதிரத்தை நீட்டினான்.</p>
<p>போலீஸ்காரர் அவனைப் பார்த்து சிரித்தார். "ஏன்டா... திருடனே உன்னை பார்த்து மோதிரத்தை வாங்காம திருட்டு போன பொருளையும் தந்துட்டு போனா போகட்டும்னு விட்டுட்டுப் போறான். எங்களை களவாணியா மாத்தப் பார்க்கிறியா?" என்றார். </p>
<p>சாரதி உடனே கையைப் பின்னால் இழுத்துக் கொண்டான்.</p>
<p>"சாரி சார்."</p>
<p>"போ... போ. இனிமே எதையும் தொலைக்காத."</p>
<p>"சரிங்க சார்."</p>
<p>"அப்புறம்... மோதிரம், காசு எதுவும் கழட்டிக் கொடுக்காத. உழைச்சு சம்பாதிச்சது. அதை நீயே வச்சுக்க." என்றார். </p>
<p>"சரிங்க சார்." சாரதி மீண்டும் சைக்கிளை ஒருமுறை பார்த்தான்.</p>
<p>அவனது முகத்தில் இப்போது நிம்மதி மட்டுமே இருந்தது.</p>
<p>"தேங்க்ஸ் சார்." என்று கூறிவிட்டு சைக்கிளை எடுத்துக் கொண்டு வெளியே வந்தான். எப்படியும் ஏதாவது வாங்கிக்கொண்டு தான் சைக்கிளை எடுக்க முடியுமோ என்ற அர்த்தத்தில் தான் மோதிரத்தை நீட்டினான். நல்லவேளை யாரும் அப்படி ஏதும் கட்டளையிடவில்லை.</p>
<p>சைக்கிளை மிதித்தபடி, வீட்டின் வாசலுக்கு வந்ததும், 'டிரிங்... டிரிங்..' என்று சைக்கிளின் பெல்லை அழுத்தினான்.</p>
<p>அந்தச் சத்தத்தைக் கேட்டதும் வீட்டுக்குள் இருந்த காஞ்சனா அவசரமாக வெளியே ஓடி வந்தார்.</p>
<p>வாசலில் மகனுடன் நின்றிருந்த சைக்கிளைப் பார்த்ததும் அவரது முகம் மலர்ந்தது.</p>
<p>"அட.. சைக்கிள் கிடைச்சிடுச்சா?"</p>
<p>"ம்ம் ஆமா அம்மா."</p>
<p>"எனக்குத் தெரியும் சாரதி.. கஷ்டப்பட்டு தேடினது எதுவும் சும்மா போகாது. எப்படியாவது கிடைச்சிடும்னு எனக்கு நம்பிக்கை இருந்துச்சு. அதுவும் இல்லாம இது உங்கப்பாவோடது. நம்மை விட்டு அவர் தொலைய விரும்ப மாட்டார்" என்று சைக்கிளைத் தொட்டு பார்த்தார்.</p>
<p>சாரதி பெருமூச்சு விட்டான். "அம்மா... இப்பதான் நிம்மதியா இருக்கு."</p>
<p>அந்த நேரமே அவன் முத்து அண்ணாவுக்கு போன் செய்தான். "அண்ணா... சைக்கிள் கிடைச்சிடுச்சு."</p>
<p>அங்கிருந்து வந்த சந்தோஷக் குரலைக் கேட்டபடி சாரதியும் சிரித்தான். போனை வைத்ததும் காஞ்சனா அவனைப் பார்த்தார்.</p>
<p>"இனி இந்த சைக்கிளை எடுக்காதய்யா." என்றார் காஞ்சனா. சாரதி திடுக்கிட்டான்.</p>
<p>"ஏன்மா?" என்று பதறினான். ஒரு முறை தொலைத்ததால் இப்படி சொல்கின்றாரோ? என்று. </p>
<p>காஞ்சனா வீட்டுக்குள் சென்று கொஞ்சம் பணத்தை எடுத்துக் கொண்டு வந்தார்.</p>
<p>அதை மகனது கையில் வைத்தார். "இனி நீ எங்கயாவது போகணும்னா... பைக்குல போ. ரகுமான் பாயிடம் பேசி வச்சிருக்கேன். இந்த பண்ததை முன் பணமா தந்துட்டு சாவி வாங்கிட்டு உனக்கு பிடிச்ச வண்டியை வாங்கிக்கோ." என்றார்.</p>
<p>"என்ன பைக்கா?''</p>
<p>"ம்ம்ம பைக்குக்கு தான்" என்றார்.</p>
<p>அவன் அதிர்ச்சியுடன் அம்மாவைப் பார்த்தான்.</p>
<p>"என்னம்மா சொல்லற?" என்று விழித்தான்.</p>
<p>"நம்ம இன்ஸ்டால்மென்ட்ல பொருட்கள் வாங்கற ரகுமான் பாய்கிட்ட பைக் பத்தி சொல்லி வச்சிருக்கேன். இன்னைக்கு சாயங்காலம் போய் பார்த்துட்டு எடுத்துட்டு வாய்யா." என்றார்.</p>
<p>"ஏன்மா? எதுக்கும்மா? தேவையில்லாத செலவு" என்றான்.</p>
<p>காஞ்சனா மகனின் முகத்தைப் பார்த்தார். "எம்புள்ள இப்படிக் கலங்கி நிக்கறதை இனிமே நான் பார்க்கக்கூடாது. சைக்கிளும் உபயோகிச்சிக்கோ. பைக்கும் தேவைக்கு உபயோகிச்சிக்கோ.''  சாரதியின் கண்கள் கலங்கின.</p>
<p>"எல்லாம் உங்கப்பா இருந்தப்பவே நீ கேட்டது தான்யா." சிறிது நேரம் அமைதியாக இருந்தவர்,</p>
<p>"அப்போ உங்கப்பா இருந்தாரு. 'இப்ப முடியல... கொஞ்சம் நாள் கழிச்சு வாங்கித் தர்றேன்'ன்னு அவரும் சொல்லிட்டே இருந்தாரு. இப்ப..." அவரது குரல் உடைந்தது. "இப்ப அம்மா இருக்கேன்ல?" சாரதி தலையைக் குனிந்தான்.</p>
<p>"நம்மகிட்ட பெருசா எதுவும் இல்லன்னு எனக்குத் தெரியும். ஆனா... புள்ளைங்க சந்தோஷமா இருக்கணும்னு நினைக்கறது அம்மாவோட பெரிய ஆசை." என்றார். </p>
<p>"அம்மா..."</p>
<p>"நீயும் இந்த நாலு வருஷமா வேலை பார்த்துட்டு இருக்க? உன் காசுலதான் இந்த வீட்டுக்கு எத்தனையோ நடந்திருக்குது. அதுல கொஞ்சம் உனக்காக செலவு பண்ணினா என்ன? இது நீ சம்பாரிச்சதுல தான் பணம் கட்டறேன். என்ன இன்ஸ்டால்மெண்ட்"</p>
<p>"ஆனா..."</p>
<p>"பத்து வருஷத்துக்கு லோன் கட்டணும்னு இருந்தாலும் பரவாயில்லை." என்று புன்னகைத்தார்.</p>
<p>"என் புள்ளை இனிமே சைக்கிள் திருட்டுப் போயிடுச்சுன்னு நெஞ்சைப் பிடிச்சிட்டு நிக்கக்கூடாது. பைக்குல போகணும். அதுதான்." சாரதியால் அதற்கு மேல் எதுவும் பேச முடியவில்லை.</p>
<p>அவன் பணத்தை கையில் இறுகப் பற்றிக் கொண்டு,</p>
<p>"அம்மா..." என்று அழைத்தபடியே தாயை அணைத்துக் கொண்டான்.</p>
<p>காஞ்சனாவும் மகனது தலையை வருடினார்.</p>
<p>"எம்புள்ள ராஜா கணக்கா இருக்கணும்னு சொல்ல மாட்டேன். நீ எனக்கு ராஜா தான்யா'' என்று கூறியபோது சாரதியின் கண்களில் மீண்டும் கண்ணீர் வழிந்தது.</p>
<p>ஆனால்... இந்த முறை அந்தக் கண்ணீரில் வலி இல்லை. அம்மாவின் அன்பு இருந்தது. </p>
<p>"சரி போய் நல்ல நேரத்தில பைக்கை வாங்கிட்டு வர்ற வழில கோவில்ல வச்சி ஒரு பூஜை முடிச்சிட்டு வந்துடுவோம்" என்றார். </p>
<p>  சரிம்மா.. இரண்டு நிமிஷத்துல வந்துடறேன்" என்று ஓடினான். </p>
<p>   ரகுமான் பாயிடம் பைக்கை வாங்கினான். சில பத்திரத்தில் கையெழுத்தும் போட்டான். </p>
<p>  பக்கத்திலேயே கோவில் என்பதால் அங்கு வண்டியை தள்ளிக் கொண்டு வந்து நிறுத்தினான். </p>
<p>காஞ்சனா பூவை வாங்கி பைக்கில் போட்டு, அர்ச்சனை செய்ய அர்ச்சனை தட்டு வாங்கினார். </p>
<p>அதே கோவிலில் தான் இலக்கியா இஷிதாவுடன் லாவண்யா வந்திருந்தாள்‌. லாவண்யாவின் அக்கா மாலதிக்கு நல்லபடியாக இந்த பெண் பார்க்கும் நிகழ்வு நடந்தேறி, இதே வரன் திருமணத்தில் முடிய வேண்டுமென வேண்டிக்கொள்ள வந்திருந்தாள். </p>
<p>    சாரதியின் பெயரில் அர்ச்சை செய்ய காஞ்சனா கூறினார். சாரதி வாசலில் இருந்த பைக்கை கவனித்து புன்னகை பூக்க, அந்த நேரம் லாவண்யா கோவிலை முதல் சுற்று சுற்றிக் கொண்டிருந்தாள். கொடிமரத்தை தொட்டு கும்பிட்டு மேலே விழியை பார்வையிட்டாள். </p>
<p>சாரதிக்கு லாவண்யாவை பார்த்ததும், ஏதோ ஒரு சிறு புன்னகை உதட்டில் வந்தது. அதே நேரம் கோவில் மணி அடித்திட, இளைஞருக்கே உரித்தான ரசனையான பார்வையை அவள் மீது பதித்தான். </p>
<p>   லாவண்யா மூன்று‌முறை சுற்றும் சிந்தனையில் சாரதியை கவனிக்கவில்லை. </p>
<p>   தீபாராதனை காட்டி சாரதி முன் நீட்ட, அவசரமாய் தொட்டு கும்பிட்டவன், "அம்மா.. வெளிய பைக்கை பார்த்துக்கறேன். நீங்க எனக்காக கோவிலை சுற்றிட்டு வாங்க." என்று பறந்தான்.</p>
<p>காஞ்சனா சரியென்றிட, சாரதி அவசரமாய் லாவண்யா முன் வந்தான். இஷிதாவோ "அக்கா... நானும் அம்மாவோட பிரசாதம் வாங்க அவங்க கூட போறேன்" என்று கையை விடுத்து இலக்கியாவுடன் செல்லவும், லாவண்யா தனியாக நின்றாள். </p>
<p>சாரதி முன்னே வரவும், இவரா' என்று தான் திகைத்தாள் சாரதியோ "ஸ்டேஷன்ல சைக்கிள் கிடைச்சிடுச்சுங்க. ஆனாலும் அம்மா பைக் வாங்கி தந்திருக்காங்க. பைக் வெளிய நிற்கு." என்றான். </p>
<p>லாவண்யா பதட்டமாய் அங்கும் இங்கும் சித்தி பார்த்து விடுவாரோ என்று பயந்திட, "அடையாளம் தெரியலையாங்க. நான் சாரதி. பஸ் கன்டெக்டர்" என்று கூற, "அய்யோ.. தெரியும்ங்க. சித்தி கூட வந்தேன்.. அவங்க என்னை தப்பா" என்று கூற வருவதை விழுங்கி பயப்பட, "சாரிங்க." என்று நகர்ந்தான். </p>
<p>"லாவண்யா.. இஷிதாவிடம் உனக்கு பிரசாதம் தந்திருக்கேன் அதை வாங்கிடு. இல்லைன்னா அவ டிரஸ்லே சிந்தி சாப்பிடுவா‌" என்று கூற, சாரதியோ 'லாவண்யா... பெயரை நினைவு வச்சிக்கணும்' என்று சாரதி தள்ளி சென்றிருந்தான். </p>
<p>காலமோ தள்ளி செல்ல வைக்கலாமா?! அல்லது நெருக்கத்தை கூட்டுமா?! என்று கற்சிலையாக இருந்த கடவுள் அவர்களை கவனித்தார்.</p>
<p>-தொடரும். </p>
<p>-பிரவீணா தங்கராஜ்</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>]]></content:encoded>
						                            <category domain="https://onlinetamilnovels.com/community/%e0%ae%aa%e0%af%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80%e0%ae%af%e0%af%86%e0%ae%a9%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%9c%e0%ae%a9%e0%af%8d/">பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம் - Praveena Thangaraj</category>                        <dc:creator>Praveena Thangaraj</dc:creator>
                        <guid isPermaLink="true">https://onlinetamilnovels.com/community/topicid/349/</guid>
                    </item>
				                    <item>
                        <title>பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்-9</title>
                        <link>https://onlinetamilnovels.com/community/topicid/348/</link>
                        <pubDate>Sun, 06 Sep 2026 13:07:17 +0000</pubDate>
                        <description><![CDATA[அத்தியாயம்-9

லாவண்யா கல்லூரியிலிருந்து புறப்படும் நேரம், &quot;எனக்கென்னவோ இன்னைக்கி முழுக்க அந்த கன்டெக்டர் நினைப்பாதான் இருந்துச்சு.&quot; என்று சொல்லிக்கொண்டே வர, தேவி கையில் இருந்த சாக்லேட்டை ப...]]></description>
                        <content:encoded><![CDATA[<p>அத்தியாயம்-9</p>
<hr />
<p><br />லாவண்யா கல்லூரியிலிருந்து புறப்படும் நேரம், "எனக்கென்னவோ இன்னைக்கி முழுக்க அந்த கன்டெக்டர் நினைப்பாதான் இருந்துச்சு." என்று சொல்லிக்கொண்டே வர, தேவி கையில் இருந்த சாக்லேட்டை பிரித்துக் கடித்து சுவைத்தவள், லாவண்யாவை வினோதமாகப் பார்த்தாள்.<br /><br />"இல்ல... பாவம்யா அவர். இஷிதா மயங்கி விழுந்தப்போ, அவர் ஓடி வந்து உதவி பண்ணாரு. உதவி பண்ணின மனுஷருக்கு அடுத்த நிமிஷமே சைக்கிள் திருட்டுப் போச்சுன்னா... மனசுக்கு கஷ்டமா இருக்காதா?" என்று சொல்லியவள் அவளுக்கான சாக்லேட்டை பையிலேயே வைத்துக் கொண்டாள்.<br /><br />தேவி லாவண்யாவையே சில நொடிகள் பார்த்தாள்.<br /><br />"அட... இதையே நினைச்சிட்டு இருப்பியா? வேற வேலையே இல்லையா உனக்கு?" என்றாள்.<br /><br />"அதெப்படி தேவி? கஷ்டப்பட்டு நல்லது செய்யறவங்களுக்கு இருக்கறதும் போகறதைப் பார்த்துட்டு பீல் பண்ணாம இருக்க முடியுமா?" என்று லாவண்யா மனிதரின் மனதை படித்தவளாக கூறினாள்.<br /><br />"சரி... சரி... உன் நல்ல மனசுக்கு அளவே இல்ல." என்று தேவி சலித்துக் கொண்டாள்.<br /><br />அதே நேரம் தூரத்தில் பேருந்து வருவது தெரிய, "பஸ் வருது... ஏறு." என்றாள்.<br /><br />இருவரும் அவசரமாக பேருந்தில் ஏறினர். உள்ளே ஏற்கனவே பயணிகள் கூட்டம் இருந்தது.<br /><br />சாரதி நடத்துனர் இருக்கையில் இருந்தான். ஆனால் லாவண்யா ஏறியதை அவன் முதலில் கவனிக்கவே இல்லை.<br /><br />காலை பார்த்தபோது இருந்த இறுக்கம் அவன் முகத்தில் இல்லை. சைக்கிள் கிடைக்கும் என்ற நம்பிக்கையோ, போலீஸ் ஸ்டேஷனில் இருந்து கிடைத்த தகவலோ அவன் மனதுக்குள் கொஞ்சம் தெளிவைத் தந்திருந்தது.<br /><br />அவன் வழக்கம்போல தன் வேலையில் இருந்தான்.<br /><br />"டிக்கெட்..." என்று கேட்டு, பணத்தை வாங்கி, டிக்கெட்டை கிழித்துக் கொடுத்துக் கொண்டிருந்தான்.<br /><br />லாவண்யாவுக்கும் தேவிக்கும் பின்புறத்தில் கடைசி இருக்கையில் இடம் கிடைத்தது.<br /><br />அமர்ந்ததும் லாவண்யாவின் பார்வை தன்னையும் அறியாமல் முன்னே சென்றது.<br /><br />   சாரதி பயணிகளிடம் டிக்கெட் கொடுத்துக் கொண்டிருந்தான்.<br /><br />அவனை இப்படி கவனித்து பார்த்ததே இல்லையே என்று அவளுக்கே தோன்றியது.<br /><br />முன்பு அவன் பேருந்தில் இருந்தால் கூட, அவன் இருப்பதே தன்னுடைய கவனத்திற்குள் வராது.<br /><br />இன்று மட்டும் ஏன்? காரணம் தெரியும். அவனுடைய சைக்கிள் இஷிதாவால் பறிப்போனது. அதுவும் வெறும் சைக்கிள் இல்லை என்று நேற்று அவன் முகத்தில் தெரிந்த வேதனை...<br /><br />லாவண்யாவின் பார்வை மீண்டும் அவன் முகத்தில் பதிந்தது. அவன் ஒருமுறையாவது தன்னைப் பார்ப்பானா? என்று தெரியாமல் காத்திருந்தாள்.<br /><br />ஆனால் சாரதி அவளைப் பார்க்கவே இல்லை. டிக்கெட்டை சரிபார்த்தான். பயணிகள் கொடுத்த பணத்தை எண்ணிப் பார்த்தான்.<br /><br />பஸ் ஏறும் ஒவ்வொருவரும் பாதுகாப்பாக ஏறுகிறார்களா என்று பார்த்தான். இறங்கும் போது யாராவது அவசரமாக இறங்குகிறார்களா என்றும் கவனித்தான்.<br /><br />பஸ் நகர்வதற்கு முன்பு படிக்கட்டில் யாரும் இல்லை என்பதை உறுதி செய்துக்கொண்டான்.<br /><br />அவனுடைய ஒவ்வொரு செயலையும் லாவண்யா கவனித்துக் கொண்டிருந்தாள்.<br />'இவரு எப்பவும் இப்படித்தானா இருப்பாரு?' என்று நினைத்தாள்.<br /><br />முன்னால் இருந்தால் ஒருவேளை இவ்வளவு கவனித்திருக்க மாட்டாள். ஆனால் கடைசி இருக்கையில் அமர்ந்திருந்ததால், சாரதி அவளது கண்களுக்கு மீண்டும் மீண்டும் வந்து கொண்டிருந்தான்.<br /><br />"சாக்லேட் சாப்பிடல?" என்று தேவி கேட்டாள்.<br /><br />"இல்ல."<br /><br />"ஏன்?"<br /><br />"இஷிதாவுக்குக் கொண்டு போய் தர்றேன்." என்றாள் லாவண்யா. இஷிதா சிறுமி என்பதால் இந்த சலுகை..<br /><br />பிறகு ஜன்னலுக்கு வெளியே பார்ப்பது போல சாரதியை கவனிதாதாள்.. "என்ன? ஜன்னல் சீட் கிடைக்கலன்னு ஏக்கமா லுக் விடறியா?" என்று தேவி கிண்டலாகக் கேட்டாள்.<br /><br />"பச்..." என்று முகத்தைச் சுளித்தாள் லாவண்யா.<br /><br />"எக்ஸாம் வேற வருது. படிக்கணும். நீ எல்லாம் படிச்சியா?" என்றதும் தலையாட்டினாள். <br /><br />முதல் செமஸ்டர். நன்றாகப் படிக்க வேண்டும். அதுதான் இப்போது முக்கியம்.<br /><br />ஆனால் புத்தகத்தின் பக்கங்களைப் புரட்டினாலும், சில நிமிடங்களுக்கு ஒருமுறை அவளது கண்கள் தானாகவே முன்னால் சென்றன.<br /><br />அவன் இன்னும் தன்னைப் பார்க்கவில்லை.<br /><br />"வாவின் ஸ்டாப்.... யாராவது இருக்கீங்களா? நீங்க இறங்கணும்." என்று சாரதி குரல் கொடுத்தான்.<br /><br />லாவண்யா திடுக்கிட்டு அவனைப் பார்த்தாள். 'என்னையா சொல்றாரு?' என்று விழித்தாள்.<br /><br />அவன் அவளைப் பார்த்துக் கொண்டிருக்கவில்லை. அருகில் குழந்தையைத் தூக்கிக் கொண்டு நின்றிருந்த ஒரு பெண்ணைச் சுட்டிக் காட்டினான்.<br /><br />"அவங்க."<br /><br />"நீங்க வாவின் வந்தா சொல்ல சொன்னிங்களே." என்றதும் குழந்தையை தூக்கக வைத்திருந்த பெண்மணி, 'ஆமா..." என்றார். <br />"வாங்க... வந்துடுச்சு" என்றதும் அந்தப் பெண் அவசரமாக எழுந்தாள்.<br /><br />"இருங்கம்மா... இருங்க. பொறுமையா இறங்குங்க. குழந்தையை வச்சிருக்கீங்க." என்று சாரதி சொல்லிக்கொண்டே படிக்கட்டருகே சென்றான்.<br /><br />அந்தப் பெண்ணிடம் இருந்த லக்கேஜை பார்த்தவன், "அதை நான் இறக்கறேன். நீங்க குழந்தையை பத்திரமா பிடிச்சுக்கிட்டு இறங்குங்க." என்றான்.<br /><br />குழந்தை மிகவும் குட்டியாக இருந்தது. தலையைத் தானாக நிறுத்த முடியாத அளவுக்கு சின்னக் குழந்தை. அதனால் சாரதி கவனமாக அந்தப் பெண்ணை இறங்க உதவினான்.<br /><br />"தேங்க்ஸ்ங்க."<br /><br />"பரவாயில்லம்மா." என்று புன்னகைத்தான்.<br /><br />அந்தப் புன்னகையைப் பார்த்த லாவண்யாவின் உதட்டிலும் தானாகவே ஒரு புன்னகை மலர்ந்தது.<br /><br />அந்தப் பெண்ணும் சாரதியைப் பார்த்து நன்றி சொல்லும் விதமாக புன்னகைத்தாள்.<br /><br />அதைப் பார்த்த அடுத்த நொடியே... லாவண்யாவின் வாய் தன்னையும் அறியாமல் சற்று கோணியது.<br /><br />'ச்சே...' என்று அவளுக்கே தன் செயல் பிடிக்கவில்லை.<br /><br />'ஏன் இப்படி பண்ணினேன்?' என்று உள்ளுக்குள் கேட்டுக் கொண்டாள். அந்தப் பெண் திருமணமானவர். கையில் குழந்தையும் இருக்கிறது. அப்படி இருந்தும் ஏதோ ஒரு சிறிய பொறாமை... அவளுக்குள்ளிருந்து எங்கிருந்தோ வந்து அவளைத் தொட்டுச் சென்றது.<br /><br />அதன் காரணம் அவளுக்குத் தெரியவில்லை. தெரிந்திருந்தால் கூட... அதை ஒத்துக் கொண்டிருப்பாளா என்பதும் தெரியாது.<br /><br />பேருந்து மீண்டும் நகர்ந்தது. சில நொடிகளில் சாரதியின் பார்வை பின்புறம் வந்தது. அவனது கண்களில் லாவண்யா பதிந்தாள்.<br /><br />இந்த முறை அவன் அவளைத் தவிர்க்கவில்லை. லாவண்யாவும் அவனைப் பார்த்தாள். காலை முழுவதும் மனதில் வைத்திருந்த ஒரு கேள்வி. 'சைக்கிள் கிடைச்சுதா?' என்று கேட்க வேண்டும் போலத் தோன்றியது. ஆனால் நேரடியாகப் பேச லாவண்யாவுக்கு தயக்கமாக இருந்தது.<br /><br />ஏற்கனவே தேவி "க்கு" வைத்துப் பேசியிருந்தாள். அதையும் தாண்டி எதையாவது பேசினால்... என்ன நினைப்பாள்? என்று அவள் மனம் தயங்கியது.<br /><br />அந்த நேரத்தில் அவளது அலைபேசி ஒலித்தது. அன்னை அலமேலு தான் அழைத்திருந்தார்.<br /><br />"ஆ அம்மா... சொல்லுங்க.. எக்ஸாம் வருதும்மா..." என்று லாவண்யா பேச ஆரம்பித்தாள்.<br /><br />சாரதியின் பார்வை மீண்டும் வேறு பக்கம் திரும்பியது.<br /><br />அவன் தன் வேலையில் மூழ்கிவிட்டான். "ஆமாம்மா... நல்லா படிக்கறேன்."<br /><br />"தேவியோட தான் போறேன். வீடு விட்டா காலேஜ்... காலேஜ் விட்டா வீடு... இப்படித்தான் வந்துடுவேன்மா." என்றாள்.<br /><br />"ஏன்மா பயப்படற?" என்று சிரித்தவள், அடுத்த நொடி,<br /><br />"அட... அக்காவை பிடிச்சிருக்குனு சொல்லிட்டாங்களா?" என்று உற்சாகமானாள்.<br /><br />"சூப்பர்மா!" <br />  "பொண்ணு பார்க்க வர்றாங்களா? வாவ்..." சிறிது நேரம் கேட்டுக் கொண்டிருந்தவள் முகம் மாறியது.<br /><br />"எப்பம்மா?"<br /><br />"அய்யோ... எனக்கு அப்ப செமஸ்டர் ஆச்சே."<br /><br />"ஆங்... சரிம்மா. பரவாயில்லை. அக்காவுக்கு செட்டானா போதும்." சில நொடிகள் அமைதியாக இருந்தாள்.<br /><br />"ம்ம்... சரிம்மா. ஒழுங்கா சாப்பிடறேன்." என்று சொல்லி அழைப்பைத் துண்டித்தாள்.<br /><br />தேவி உடனே "என்னடி அம்மாவிடம் ரொம்ப நேரம் பேசின" என்று கேட்டாள்.<br /><br />"அக்காவை வரன் பார்த்தாங்கள்ல.. அதுல ஒருத்தருக்கு அக்காவை பிடிச்சிருக்காம். பொண்ணு பார்க்க வர்றாங்களாம்." என்றாள். <br /><br />"அட சூப்பர்ல!" என்று தேவி கூறினாள். <br /><br />"ஆமா... ஆனா செமஸ்டர் வருது. அதனால நான் போக மாட்டேன். சித்தி போக வாய்ப்புண்டு." என்று கூறியபடி ஜன்னல் வழியாக வெளியே பார்த்தாள்.<br /><br />பேருந்து எஸ்டேட்டை நெருங்கிக் கொண்டிருந்தது.<br /><br />எஸ்டேட்டில் பயணிகள் டிப்போ வந்ததும் எல்லாரும் இறங்கத் தொடங்கினார்கள். சாரதி படிக்கட்டருகே நின்று கொண்டிருந்தான்.<br /><br />முத்து டிப்போவிற்குள் இறங்கி நடந்து கொண்டிருந்தார்.<br /><br />"முத்து அண்ணா..." என்று சாரதி அழைத்தான்.<br /><br />"என்னப்பா?"<br /><br />"நான் போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் போயிட்டு வந்துடறேன். சைக்கிளைத் திருடினவனைப் பற்றி விவரம் தெரிஞ்சு கூட்டிட்டு வரச் சொல்லிருக்காங்க."<br /><br />முத்துவின் முகத்தில் மகிழ்ச்சி தெரிந்தது.<br /><br />"நல்லதுப்பா. பார்த்தியா... காலையில இருந்து உன் மூஞ்சியே சரியில்லை. இப்பதான் கொஞ்சம் பளிச்சுனு இருக்கு." சாரதி லேசாகப் புன்னகைத்தான்.<br /><br />"கவலைப்படாத. சைக்கிள் கிடைச்சிடும். அது உங்கப்பா நினைவுன்னு எனக்குத் தெரியும்." முத்து அவனது தோளில் தட்டினார்.<br /><br />"போயிட்டு வா. எதுவானாலும் எனக்கு போன் பண்ணு." என்று கூறி, அவசரமாக மாற்று கன்டெக்டரை வரவழைத்து அடுத்த பயணத்திற்கான ஏற்பாடுகளை ஏற்கனவே போனில் கேட்டு செய்திருந்தான்.<br /><br />"சாரதி... எதுனாலும் போன் பண்ணுடா!" என்று முத்து மீண்டும் கத்தினார்.<br /><br />"சரிண்ணா." என்று சாரதி திரும்பினான்.<br /><br />அந்த நேரம்... லாவண்யாவின் உதடுகள் மெதுவாக அசைந்தன.<br /><br />'சா...ரதி.' அவள் தன்னையும் அறியாமல் அவன் பெயரை உச்சரித்தாள். இதுவரை அவளுக்குத் தெரியாமல் இருந்த அவனது பெயர். இப்போது தெரிந்துவிட்டது.<br /><br />"லாவண்யா...." என்று தேவி அழைத்தாள்.<br /><br />"லாவண்யா..." என்றவாறு தேவி அழைக்க, "அட இவ ஒருத்தி..." என்று சலித்துக் கொண்டாள்.<br /><br />சாரதி அந்தக் குரலைக் கேட்டு திரும்பிப் பார்த்தான்.<br /><br />லாவண்யா காலையில் பார்த்த அதே பெண். சமீபகாலமாக சந்திக்கின்ற கண்களுக்கு சொந்தக்காரி. அவன் ஒரு நொடி தடுமாறினான்.<br /><br />அவளைப் பார்த்தவுடன் அப்படியே கடந்து செல்லவும் முடியவில்லை. அதே சமயம் நீண்ட நேரம் பார்த்துக் கொண்டிருக்கவும் முடியவில்லை.<br /><br />அவன் பார்வை அவளிடம் நின்றது. தேவி முன்னால் நடந்து கொண்டிருந்தாள்.<br /><br />லாவண்யா மட்டும் இன்னும் சில அடிகள் பின்னால் வந்து, "சைக்கிள் கிடைச்சிடுச்சா அண்ணா" என்றாள் தேவி. <br /><br />சாரதியின் பார்வை லாவண்யாவிடம் இருந்து தேவியிடம் சென்றது.<br /><br />"ஸ்டேஷன் போறேம்மா. சைக்கிளைப் பத்தி விவரம் தெரியும். கிடைச்சிடும்னு நம்பிக்கைதான்." என்றான்.<br /><br />"ஓ... சரி அண்ணா. நேத்துலயிருந்து இவ அவ சித்திப்பா பொண்ணால உங்க சைக்கிள் போச்சுனு புலம்பிட்டா. ஏன்.. காலேஜ்லயிருந்து கிளம்பறப்ப கூட புலம்பினா" என்று தேவி பேசினாள்.<br /><br />  "கிடைச்சிடும்னு நம்பறேன்மா. அது எங்கப்பா உபயோகிச்ச சைக்கிள். அவர் இப்ப உயிரோட இல்லை. அவரோட நினைவா நான் வச்சியிருந்தது. கிடைச்சிடும்" என்று நம்பிக்கையாக பேசினான்.<br /><br />"ஓ.. ஓகே அண்ணா... உங்க பெயர் சாரதியா?" என்று தேவி கேட்டாள்.<br /><br />சாரதி லாவண்யாவை ஒரு கணம் பார்த்தான். பிறகு இருவரிடமும் பொதுவாகப் பேசுவது போல, "ஆமா." என்றான்.<br /><br />  ''சரிங்கண்ணா.. நாங்க கிளம்பறோம்" என்று தேவி முன்னால் நடந்து செல்ல, லாவண்யா அவளைப் பின்தொடர்ந்தாள்.<br /><br />ஆனால் இரண்டு அடிகள் சென்றதும்... திரும்பிப் பார்த்தாள். சாரதி அங்கேயே நின்றிருந்தான்.<br /><br />அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். லாவண்யா உடனே முன்னால் திரும்பிக் கொண்டாள்.<br /><br />'பார்க்காதே... அவனை பார்க்காதே' என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டாள்.<br /><br />ஆனால் இன்னும் இரண்டு அடிகள் சென்றதும், மீண்டும் திரும்பிப் பார்த்தாள்.<br /><br />இந்த முறை சாரதியும் திரும்பிப் பார்த்தான். அவன் ஒரு ஆட்டோவை நிறுத்தி ஏறுவதற்காகச் சென்றான்.<br /><br />கதவைத் திறக்க முனைந்தவன், ஏதோ நினைத்தது போல மீண்டும் திரும்பினான்.<br /><br />லாவண்யாவின் கண்களும் அதே நேரத்தில் அவனைத் தேடி திரும்பியது.<br /><br />இருவரின் பார்வையும், முன்பு எதர்ச்சையமாக சந்தித்தது. இன்று முதல் முறையாக நேருக்கு நேர் பார்க்க வேண்டுமென்ற நோக்கத்தில்  சந்தித்தது.<br /><br />இருவரின் மனதிலும் ஏதோ ஒன்று சத்தமில்லாமல் விழித்துக் கொண்டிருந்தது. லாவண்யாவின் பார்வை முதலில் விலகிக் கொண்டாள். <br /><br />சாரதியின் உதட்டில் மெல்லிய புன்னகை தோன்றியது. அவள் முன்னால் நடந்து சென்றாள்.<br /><br />அவனும் ஆட்டோவில் ஏறினான். ஆனால் இருவருடைய மனதிலும், அந்த ஒரு பார்வை லேசாக ஆக்கிரமித்தது.<br /><br />  அப்பொழுது கூட சாரதி பாவம் அவங்க சித்தப்பா பொண்ணால் என் சைக்கிள் தொலைந்ததாக வருந்துகின்றாளென எண்ணினான். <br /><br />லாவண்யாவுமே 'சே... அவரோட அப்பா இறந்துட்டார் போல அவரோட நினைவா சைக்கிள் வச்சிருந்திருக்கார். ஆனா அது தங்களால் தொலைந்து களவாடப்பட்டுள்ளது எப்படியும் திரும்ப வாங்கிட்டேனென நாளை கூறினால் ஆனந்தமாக இருக்குமென நடந்தாள். <br /><br />சைக்கிள் கிடைக்கின்றதோ இல்லையோ... இனி இருவர் மனதிலும் இதயத்தை தொலைத்திட வாய்ப்புண்டு என்று பிரம்மன் நகைத்தான். <br /><br />-தொடரும்<br />-பிரவீணா தங்கராஜ்.<br /><br /></p>]]></content:encoded>
						                            <category domain="https://onlinetamilnovels.com/community/%e0%ae%aa%e0%af%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80%e0%ae%af%e0%af%86%e0%ae%a9%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%9c%e0%ae%a9%e0%af%8d/">பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம் - Praveena Thangaraj</category>                        <dc:creator>Praveena Thangaraj</dc:creator>
                        <guid isPermaLink="true">https://onlinetamilnovels.com/community/topicid/348/</guid>
                    </item>
				                    <item>
                        <title>பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்-8</title>
                        <link>https://onlinetamilnovels.com/community/topicid/346/</link>
                        <pubDate>Sun, 06 Sep 2026 13:02:45 +0000</pubDate>
                        <description><![CDATA[அத்தியாயம்-8
   சாரதி பூங்காவில் உள்ள சிசிடிவி கேமிரா பதிவை சுட்டிக்காட்டி, போலீஸ் ஸ்டேஷனில், &quot;இதான் சார்... எங்கப்பாவோட சைக்கிள். இவர் தான் சார் திருடிட்டு போயிருக்கார். சார் சார்.. யார் எ...]]></description>
                        <content:encoded><![CDATA[<p>அத்தியாயம்-8</p>
<p>   சாரதி பூங்காவில் உள்ள சிசிடிவி கேமிரா பதிவை சுட்டிக்காட்டி, போலீஸ் ஸ்டேஷனில், "இதான் சார்... எங்கப்பாவோட சைக்கிள். இவர் தான் சார் திருடிட்டு போயிருக்கார். சார் சார்.. யார் என்னனு பார்த்து பிடிச்சி என் சைக்கிளை வாங்கி தாங்க சார்" என்று போலீஸிடம் கொஞ்சிக் கொண்டிருந்தான் நாயகன்.</p>
<p>   போலீஸோ சிசிடிவியை பார்த்து பொறுமியவாறு, "டேய்... தம்பி... இந்தாளு லோக்கல் ரவுடி டா. நிறைய திருட்டு கேஸ் இருக்கறவன் தான்‌. உன் சைக்கிளை தூக்கிட்டு போன சாட்சிக் கூட இருக்கு. நான் அவனை கூப்பிட்டு கேட்கலாம். ஆனா...." என்று இழுத்தார்.</p>
<p>"என்ன சார் ஆனா..?" என்று அவரையே நோட்டமிட, "யோவ் கான்ஸ்டேபிள்.. வந்து புரியவையா" என்று கூற, கான்ஸ்டேபிளும் சாரதியை பார்த்து, "தம்பி... இவனுக்கு ஆளுங்கட்சி எதிர்கட்சி இரண்டு பேருக்குமே தெரிந்தவன். இவனிடம் போய் நின்னா... மதிக்கவே மாட்டான். உன்னோடதாவது ஆஃப்ட்ரால் சைக்கிள். சிலரிடம் நகை ராயல்பீல்ட் வண்டினு திருடியே ஏப்பமிட்டவன்பா. திரும்ப வரும்னு நம்பிக்கையில்லை." என்றார். </p>
<p>சாரதியோ "சார் அவரை சந்திக்க முடிந்தா நானே கேட்டு வாங்கிக்கறேன் சார். ஜஸ்ட் அவரை முன்ன நிறுத்துங்க போதும்" என்று கேட்டுநின்றான். </p>
<p>  காஞ்சனாவோ தொடர்ச்சியாக அலைப்பேசியில் சாரதியை அழைத்த வண்ணம் இருந்தார். எடுக்கவே தயங்கி இப்பொழுது வரை தவிர்க்கின்றான். </p>
<p>  மணி ஒன்பதாகவும், "சரிப்பா... ட்ரை பண்ணறோம். நீ இப்ப கிளம்பு" என்றதும் தான் அரை மனதாய் புறப்பட்டான்.</p>
<p>   மனம் முழுக்க அன்னையிடம் சைக்கிளை பற்றி எவ்வாறு விவரிப்பதென தவித்தவனாக தான் பொடி நடையாக வந்தான்.</p>
<p>   தெருவை பார்த்தது போல இருக்கும் அறையில் தையல் மிஷினுடன் தைத்துக் கொண்டிருக்க வேண்டிய  காஞ்சனா மகன் தன் அழைப்பை ஏற்காமல் போகவும், வாசலில் அமர்ந்து மகனது வரவை எதிர்பார்க்க, சாரதி துவண்டபடி நடந்து வரவும், பதற்றத்துடன் "ஏன்யா.. என்ன இப்படி வர்ற. சைக்கிள் எங்க? என் இப்படி வேர்த்து நடந்துட்டு வர்ற" என்று சேலையால் சாரதி முகத்தை கழுத்தை துடைத்து விட்டார். தையல் மிஷன் முன் தைக்க இருக்கும் இருக்கையில் அவனை உட்கார வைத்தார்.</p>
<p>  "அம்மா... அம்மா.. அப்பா சைக்கிள் தொலைந்து போச்சும்மா." என்று அழுதான். </p>
<p>இவ்வளவு நேரம் அடக்கி வைத்த அழுகை வெடித்தது. காஞ்சனாவின் இடையை கட்டிக்கொண்டு சிறு குழந்தை போல கூறினான். </p>
<p>"எய்யா.. என்னாச்சு. முதல்ல அழாத. நீ அழறதை பார்க்க கஷ்டமாயிருக்கு" என்று கண்ணீரை கையால் துடைத்து விட்டார். </p>
<p>     "நம்ம ஏரியா புட்பால் கிரவுண்ட் வரை போயிருந்தேன்மா‌ கொஞ்ச நேரம் விளையாடலாம்னு. அங்கிருந்து வீட்டுக்கு வர்றப்ப, நம்ம ஏரியா பார்க்குக்கு முன்ன ஒரு பாப்பா மயங்கி விழுந்துச்சு. சைக்கிளை நிறுத்திட்டு அந்த பாப்பாவை பார்த்து தண்ணி எல்லாம் தந்தேன். பேசிட்டு திரும்பினா சைக்கிளை யாரோ திருடிட்டாங்கம்மா. </p>
<p>  ரொம்ப நேரம் நாலைந்து தெருவுல போய் தேடினேன். </p>
<p>  அப்பறம் பார்க் பக்கம் இருக்கற சிசிடிவியில ஏதாவது பதிவாகியிருக்குமானு அதை தேடி போனேன். அப்பறம் அந்த சிசிடிவி பதிவை தந்தாங்க. போலீஸ் ஸ்டேஷன்ல போய் எப்.ஐ.ஆர் கொடுத்தேன். ஆனா கிடைக்குமானு அப்பவும் சந்தேகமா சொல்லறாங்க‌. ஆனா ஆளை வரச்சொன்னா பேசி பார்க்கறதா அனுப்பிட்டாங்க. இவ்வளவு நேரம் சைக்கிளை தேடிட்டே இருந்தேன்மா‌. அதனால தான் போன் எடுக்க முடியலை. உன்கிட்ட பேசினா உடைஞ்சிடுவேன்மா. அப்பா.. அப்பா‌வோட சைக்கிள்மா" என்றான். </p>
<p>காஞ்சனாவோ மகனது அழுகையை நிறுத்தி, "சரிய்யா.. சரிய்யா.. அழாதய்யா. புரிது.‌ சைக்கிள் தானயா. கிடைச்சிடும் கிடைச்சிடும். நீ ஏன்யா அதுக்குன்னு போனை எடுக்கலை. அம்மாக்கு பயமா போச்சுல. உனக்கு ஏதாவது ஆகிடுச்சோனு பெத்த வயிறு பதறிடுச்சுயா. எப்பவுமே அம்மா போனை எடுக்காம இருக்காதையா." என்று கூறினார்.‌</p>
<p>  தான் போன் எடுக்காமல் போனதில் அன்னை எந்தளவு பதறியிருப்பாரென புரியவும், "சரிம்மா..." என்றான். </p>
<p>"என்ன காஞ்சனாக்கா.. பையன் ஏன் அழுவறான். என்னாச்சு." என்று கேட்க, "சைக்கிள் திருட்டு போச்சும்மா." என்றார்.</p>
<p>"அதுக்கா அழுவறான். கல்யாண வயசுல இருந்துட்டு அழுதுட்டு. அட களவாணி ஊர்ல சைக்கிளை ஒத்த கையால தூக்கிட்டு போவாங்க. இதுக்கெல்லாமா அழுவாங்க" என்றார். </p>
<p>காஞ்சனாவோ "ராசா.. சாரதி.. உள்ளாற வா" என்று அழைத்து செல்ல, சாரதி வீட்டுக்குள் நுழைந்தான். </p>
<p>காஞ்சனாவோ முதல் வேலையாக, "இங்க பாரு ராசா.. எது நடந்தாலும்... உன் வாழ்க்கையில நீ அம்மா எதிர கலங்கிட்டு நிற்காதய்யா. சும்மா கல்லூ மாதிரி இருக்கணும். நீ அழுதா அசிங்கம்னு சொல்ல மாட்டேன். ஆனா பெத்தவ எதிர பிள்ளைங்க அழுதா, பெத்தவங்க அதை பார்த்துட்டு சும்மா இருக்க முடியுமா? </p>
<p>  எந்த அம்மைக்கு அப்பனுக்கும் புள்ளைங்க ராஜா கணக்கா இருக்கணும். நம்மகிட்ட எது இல்லைன்னாலும் பரவாயில்லை. அம்மைக்கு பிள்ளை ராசா தான். அதனால இந்த ராசா என் முன்னாடி அழவே கூடாது."‌ என்று கூற தலையாட்டினான். </p>
<p>"சைக்கிள் தானே‌.. உங்கப்பாவே ஏதாவது சூழ்நிலையை உருவாக்கி உன்னிடம் ஒப்படைக்கற வழியை காமிப்பாரு" என்று கூறவும், சாரதி லேசாக தெளிந்தான். வலியுடன் கூடிய அழுகை குறைந்தது. ஆனால் லேசான தெளிவு பிறந்தது. </p>
<p>அதன் பின் காஞ்சனா கையால் உணவை விழுங்கி படுத்துவிட்டான். </p>
<p>காஞ்சனாவோ சைக்கிள் எப்பொழுதும் நிறுத்தியிருக்கும் இடத்தை ஏக்கமாய் பார்த்து உறங்க முற்பட்டார். </p>
<p>  அடுத்த நாள் காலை எழுந்த போது சாரதிக்கு அப்படியொன்றும் பொழுது புலர்ந்தது போல இல்லை. மனதில் இறுக்கம் இன்னமும் நெஞ்சில் இறுகியிருந்தது. </p>
<p>பல் தேய்த்து முடிக்க, பக்கத்து அறையில் இருந்த காஞ்சனா டீயை ஆற்றியபடி வந்தார். </p>
<p>"சாரதி... டீ" என்று நீட்டவும் வாங்கி பருகினான். </p>
<p>  முகத்தில் சிறு மலர்ச்சி கூட இல்லை. காஞ்சனா மகனது சோகத்தை களைய முடியாத வருத்தத்தில் இருந்தார். </p>
<p>  கூழை காய்ச்சியிருக்க அதை சொம்பில் ஊற்றிவிட்டார். மதியத்திற்கு பூண்டு குழம்பை செய்து வைத்திருந்தார் அவிச்ச முட்டை என்று பேக் செய்ய, குளித்துவிட்டு வந்த சாரதி 'கிளம்பறேன் மா" என்று சைக்கிள் சாவியை வைக்கும் இடத்தில் கையை கொண்டு சென்றான். </p>
<p>  சைக்கிள் தான் தொலைந்து விட்டதே என்ற எண்ணம் வந்து, வார் செருப்பை மாட்டி, புறப்பட்டான். </p>
<p>காஞ்சனா மகன் நடந்து செல்ல, தவிப்பாய் கதவோரம் நின்று பார்த்தார். வேகமாய் நடந்தால் தான் ஏழு மணிக்குள் கையெழுத்து போட்டு வண்டியில் டிக்கெட் கொடுக்க முடியும். நேரம் கழித்து சென்றால் அது வேறு அவஸ்தை. அதனால் நடையிலே ஓட்டமிருந்தது.</p>
<p>   இங்கு வேகமாய் வந்தவன், அவசரமாய் டிப்போவில் கையெழுத்து போடவும் வேர்த்து கிடந்தான். </p>
<p>  டிப்போவில் கூட்டமும் கூடியிருக்க, ஆர்வமின்றி படிக்கட்டில் ஏறினான்.</p>
<p>  டிக்கெட் கொடுக்க பயணிகள் நீட்டவும், சத்தமின்றி விசிலடித்து டிக்கெட்டை நீட்டினான். </p>
<p>  எப்பவும் 'டிக்கெட் டிக்கெட்' என்றவனது குரலே ஒருவிதமான புத்துணர்சியை முத்துக்கு தருவிக்கும். முத்துவோ கண்ணாடி வழியாக சாரதியை கண்டவன், ஏதோ சரியில்லையே... சரி பிராட்வே போய் கேட்டுப்போம் என்று வண்டியை இயக்கினார். </p>
<p>ஏற்கனவே தேவி லாவண்யா பேருந்தில் தான் இருந்தனர். </p>
<p>யார் முகத்தையும் பாராமல் டிக்கெட் தந்துக் கொண்டிருந்தவனிடம், "சை..சைக்கிள் கிடைச்சுதா?" என்ற குரலில் நிமிரிந்தான். </p>
<p>  லாவண்யா தான் மனம் கேளாது கேட்டுவிட்டாள். </p>
<p>"இ..இல்லைங்க.. போலீஸ் கம்பிளைன் தந்திருக்கேன். பார்க் சிசிடிவில ஒருத்தன் சைக்கிளை தூக்கிட்டு ஓடியிருக்கான். அவன் கிடைச்சா தகவல் சொல்வாங்க" என்று கூறிவிட்டு பஸ்பாஸில் டிக்கும் அனுப்பிவிட்டு அடுத்து முன்னேற, கழுத்தை திருப்பி மறுபுறம் சாரதி இருக்கும் பக்கமாக பார்த்து, "இஷிதாவுக்கு உடனடியா உதவ வந்ததுக்கு சித்தி தேங்க்ஸ் சொல்ல சொன்னாங்க. நானுமே நேத்தே தேங்க்ஸ் சொல்ல முடியாம போச்சு" என்றாள். </p>
<p>சாரதியோ டிக்கெட் என்று பயணிகள் பலரும் சில்லறையை நீட்டி கேட்டதற்கு காசை வாங்கி டிக்கெட்டை கிழித்து தந்தவன், "பரவாயில்லை" என்று நகர்ந்தான். </p>
<p>தேவியோ பேருந்து கம்பியை பிடித்து, லாவண்யா பேசியதை கவனித்தவளாக, "என்ன மேடம்.. சாரி தேங்க்ஸ் எல்லாம் சொல்லியாச்சா?" என்று கேட்க லாவண்யா தலையாட்டினாள். </p>
<p>அதற்குள் இரண்டு பேர் பேருந்தில் இருந்து இறங்கவும், தேவி அமர்ந்துக் கொண்டாள். </p>
<p>"என்ன சொல்லு... வீட்லயிருந்து சேர்ந்து வர்றப்ப புலம்பி தள்ளிட்ட. இப்ப ஹாப்பி தானே" என்றாள். </p>
<p>லாவண்யாவோ "பச்... அவரோட சைக்கிள் கிடைக்கலையேடி. இஷிதாவால சைக்கிள் போயிடுச்சு." என்றாள். </p>
<p>அதற்கு தேவியோ "அட பழைய சைக்கிள்மா. புதுசா இருந்தா கூட பரவாயில்லை." என்று சலித்தாள். </p>
<p>"எனக்கு பழசா தெரியலை. எண்ணெய் போட்டு நல்லா துடைச்சி புதுசா வச்சிருந்தார்" என்றாள். </p>
<p>தேவியோ "ஆஹ்ஹ் அது பழைய சைக்கிள். இப்ப அந்த சைக்கிளே மானுபேக்சர் பண்ணலை. அந்த ஆளே மறந்திருப்பான். நீ வேற.. சதா நொய் நொய்னு. முதல்ல டெஸ்டுக்கு படிச்சியா?" என்று கேட்க லாவண்யா படித்ததாக தலையாட்டினாள். </p>
<p>   அதற்குள் சாரதி முன்னே டிக்கெட் எல்லாம் தந்துவிட்டு நடத்துனர் சீட்டில் வந்து அமர்ந்தான். லாவண்யா நின்றுக் கொண்டு வந்ததால் அடிக்கடி சாரதியை பார்த்து வைத்தாள். </p>
<p>  எதையோ இழந்த வேதனை என்பார்களே, அப்படி தான் அவன் முகமிருக்க கண்டாள்.</p>
<p>   'சாதாரண சைக்கிளுக்கு ஏன் இப்படி பண்ணறார்.' என்று எண்ணினாள். </p>
<p>  "லாவண்யா.. வழிவிடு.. இங்க உட்காரு" என்று தேவி கூறவும் தான் வழிவிட்டு, அமர்ந்தாள். அப்படி அமர்ந்தாலும் அடிக்கடி கழுத்தை திருப்பி, சாரதியை பார்த்தாள். </p>
<p>  அண்ணா நகர் வந்ததும் அவள் இறங்க, சாரதியோ யார் ஏறினால் எனக்கென்ன? யார் இறங்கினால் எனக்கென்ன? என்று தான் வேலையில் இருந்தான். </p>
<p>  தன்னை ஒருத்தி பாவமாக பார்ப்பதை அவன் அறியவில்லை. </p>
<p>   அன்றைய பயணம் முடிந்து லாவண்யா இறங்கியப்பின்னும் கல்லூரி சென்றப்பின்னரும் கண்டெக்டர் நினைவுடனே இருந்தாள். அவன் பெயரையும் அவள் இன்னமும் அறியாதவள் தானே? </p>
<p>   பிராட்வே சென்று டிப்போவில் வண்டி நின்றதும் முத்து வந்து தோளில் கைவைத்து முகம் வாடி இருப்பதை கேட்டார். சைக்கிள் களவு போன கதையை கூறினான். </p>
<p>'என்ன சாரதி.. பைக் ஏதாவது வாங்கிக்கோனு சொல்லியும், அப்பா சைக்கிள்னா.. அப்பா நினைவா வச்சியிருக்கேன்னு சொல்லிட்டு இருந்த. இப்ப அது களவு போச்சா? ஆமா... யார் களவான்டது? போலீஸ் என்ன சொல்லிருக்கு." என்று கேட்க விஷயத்தை கூறினான்.</p>
<p>  ''இதுவேறையா... இந்த போலீஸுங்க பவர் இருக்க தட்டி வாங்கி தருவானுங்கனு பார்த்தா, அவனுங்களே களவானி கூட்டத்துல தான் கெஞ்சிட்டு இருக்கானுங்க. என்னவோ.. சைக்கிள் திரும்ப கிடைச்சா பார்ப்போம். எனக்கென்னவோ நீ ஏதாவது பைக் வாங்கிக்கோப்பா‌. உங்கப்பா இருக்கறப்பவே சொல்வான். பையன் வேற பைக் கேட்டுட்டு இருக்கான் முத்து. வாங்கி தரணும்.. ஏதாவது கடன்கிடன் தர்றவங்களை தெரியுமானு கேட்பான். கடன் வாங்க ஆளெள்ளாம் கூட பார்த்து வச்சான். என்ன பண்ணறது... தனியா தவிக்க விட்டுட்டு போயிட்டான்.'' என்று கூடுதலாக தான் சாரதியின் மனதில் தந்தை நினைவை பிழிந்துவிட்டு சென்றார் முத்து. </p>
<p>    பிராட்வே டூ எஸ்டேட், மீண்டும் எஸ்டேட் டூ பிராட்வே சென்ற நேரம், சாரதிக்கு ஒரு எண்ணிலிருந்து அழைப்பு வந்தது. </p>
<p>"ஏம்பா... அந்த சைக்கிள் காணோம்னு சொன்ன பைய தானே?" என்று கேட்க, ஆ..ஆமா சார்." என்றான்.‌</p>
<p>"அந்த சைக்கிளை களவாடியவனை சார் பார்க்க ஏற்பாடு பண்ணிட்டார். நீ வந்து நீயாச்சு அந்த திருட்டு பயலாச்சு. அவ்ளோ தான் பேவர் பண்ண முடியும். நீயே சைக்கிளை பத்தி கேட்டுக்கோ. இப்ப வர்றியா?" என்று கேட்டார்.‌</p>
<p>''சர்ர் சார்... நான் கன்டெக்டரா டூயூட்டில இருக்கேன் சார். ஈவினிங்கா ஷிப்ட் முடிஞ்சு வரட்டுமா." என்று கேட்க, "சைக்கிள் கிடைக்குமோ கிடைக்காதோ.. அந்த ஆளிடம் நீ வர்றதை சொல்லிடறேன். வா" என்று அணைத்தார். </p>
<p>சாரதிக்கு இதுவே ஒரு பெரிய நிம்மதியாக இருந்தது.</p>
<p>எப்படியாவது சைக்கிளைத் திரும்ப வாங்கிவிட வேண்டும் என்ற நம்பிக்கை அவனுக்குள் மீண்டும் சிறிதாக முளைத்தது.</p>
<p>முத்து அண்ணனிடம் விஷயத்தைச் சொல்லிவிட்டு, மாலை டூட்டி முடிந்ததும் நேராக அந்த ஆளைச் சந்திக்க வேண்டும் என்று முடிவு செய்தான்.</p>
<p>முத்து ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்திருந்ததால், அவனிடம் சொல்லுவதற்காக சாரதி எழுந்து முன்னால் சென்றான்.</p>
<p>அவனது முகத்தில் பல மணி நேரத்திற்குப் பிறகு ஒரு சிறிய நம்பிக்கை தெரிந்தது.</p>
<p>ஆனால்... அந்த நம்பிக்கை உண்மையிலேயே அவனுடைய அப்பாவின் சைக்கிளை அவனிடம் மீண்டும் கொண்டு வந்து சேர்க்குமா?</p>
<p>அல்லது... அவனே எதிர்பாரத அவனுடைய வாழ்க்கையில் வேறொரு புதுவிதமான வழியை காட்டப் போகிறதா? என்று இனி‌தான் அறிவான். </p>
<p>-தொடரும். </p>
<p>-பிரவீணா தங்கராஜ்.</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>]]></content:encoded>
						                            <category domain="https://onlinetamilnovels.com/community/%e0%ae%aa%e0%af%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80%e0%ae%af%e0%af%86%e0%ae%a9%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%9c%e0%ae%a9%e0%af%8d/">பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம் - Praveena Thangaraj</category>                        <dc:creator>Praveena Thangaraj</dc:creator>
                        <guid isPermaLink="true">https://onlinetamilnovels.com/community/topicid/346/</guid>
                    </item>
				                    <item>
                        <title>பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்-7</title>
                        <link>https://onlinetamilnovels.com/community/topicid/345/</link>
                        <pubDate>Fri, 04 Sep 2026 02:24:42 +0000</pubDate>
                        <description><![CDATA[அத்தியாயம்-7சாரதி சைக்கிளை ஓரமாக நிறுத்திவிட்டு, வேகமாக அவர்களை நோக்கி ஓடி வந்தான்.அவனை அப்படி திடீரென ஓடி வருவதைக் கண்ட லாவண்யா பகீரென்று ஒரு அடி பின்னால் நகர்ந்தாள்.ஆனால் சாரதியின் பார்வை ...]]></description>
                        <content:encoded><![CDATA[<p>அத்தியாயம்-7<br /><br />சாரதி சைக்கிளை ஓரமாக நிறுத்திவிட்டு, வேகமாக அவர்களை நோக்கி ஓடி வந்தான்.<br /><br />அவனை அப்படி திடீரென ஓடி வருவதைக் கண்ட லாவண்யா பகீரென்று ஒரு அடி பின்னால் நகர்ந்தாள்.<br /><br />ஆனால் சாரதியின் பார்வை அவளைத் தாண்டி பின்னால் சென்றது.<br /><br />அங்கே இஷிதா தரையில் சரிந்து கிடந்தாள். "பாப்பா.. பாப்பா" என்று பதறியவன் உடனே அவளருகில் மண்டியிட்டான்.<br /><br />"என்னம்மா பண்ணுது? பாப்பா... கண்ணைத் திறம்மா." என்று இஷிதாவை மெதுவாக உலுக்கிய போதுதான் லாவண்யாவுக்கும் பின்னால் விழுந்து கிடந்த இஷிதாவே கண்ணில் பட்டாள்.<br /><br />"இஷிதா... ஏய்... என்னாச்சு?" என்று பதறியவள் அவளருகில் குனிந்தாள்.<br /><br />இஷிதாவின் முகத்தில் சோர்வு தெரிந்தது. கண்களைத் திறக்கவே அவளால் சிரமப்பட முடிந்தது. "த... தண்ணி இருக்கா?" என்று சாரதி அவசரமாகக் கேட்டான்.<br /><br />லாவண்யா உடனே தன்னுடைய பையைத் தேடினாள். இல்லை.<br /><br />"இல்ல..." என்று தலையசைத்தாள்.<br /><br />"சைக்கிள் கெரியர்ல வாட்டர் பாட்டில் வச்சிருக்கேன். அந்த பாட்டிலை எடுங்க." என்று சாரதி கையால் சைக்கிளை சுட்டிக் காட்ட, தேவி ஓடிச்சென்று பாட்டிலை எடுத்துக் கொண்டு வந்தாள்.<br /><br />"இந்தாங்க." என்றதும் சாரதி பாட்டிலை வாங்கி, சிறிது தண்ணீரை இஷிதாவின் முகத்தில் தெளித்தான்.<br /><br />"பாப்பா... கண்ணை நல்லா திற." இஷிதா மெல்லக் கண்களைத் திறக்க முயன்றாள்.<br /><br />"தண்ணி குடு." பாட்டிலை அவளது வாயருகே வைத்ததும், இஷிதா மடக் மடக்கென்று சப்பி தண்ணீர் குடித்தாள்.<br /><br />"மெதுவா குடி... அவசரப்படாத.". சில மடக்குகள் குடித்த பிறகு அவளது முகத்தில் சற்று தெளிவு வந்தது.<br /><br />"இப்ப எப்படிம்மா இருக்கு?" என்றான் கருணையோடு.<br /><br />"அப்பவே தாகமெடுத்தது அண்ணா..." என்று மெதுவாகச் சொன்னாள் இஷிதா. "வாட்டர் பாட்டில் கொண்டு வரலை. வீடு கிட்டதானே இருக்கு... வீட்டுக்குப் போய் தண்ணி குடிக்கலாம்னு நினைச்சேன். ஆனா... மயக்கம் மாதிரி வந்து கீழ விழுந்துட்டேன்." என்றாள். <br /><br />"என்கிட்ட கேட்டிருந்தா நான் கடையிலயாவது தண்ணி, ஜூஸ் வாங்கித் தந்திருப்பேன்ல." என்று லாவண்யா வருத்தத்துடன் சொன்னாள்.<br /><br />"வீடுகிட்ட இருக்குனு தண்ணி கேட்கலை அக்கா." என்றாள் இஷிதா.<br /><br />"இப்ப பாரு... நடுரோட்ல மயங்கி விழுந்திருக்க. சித்தி சித்தாப்பாவுக்கு தெரிந்து இதை பார்த்தா என்னைத் திட்டுவாங்க." என்றாள். இல்லையா பின்னே லாவண்யாவை நம்பி அல்லவா இஷிதாவை இலக்கியா அனுப்பியது. அந்த பொறுப்பில் இந்த தவறு நிகழ்ந்த கோபம். <br /><br />"குழந்தையை ஏன் திட்டறீங்க?" என்று சாரதி மெதுவாகக் கேட்டான்.<br /><br />அவன் குரலில் இருந்த கண்டிப்பு லாவண்யாவை அமைதியாக்கியது.<br /><br />"வீடு கிட்ட இருக்குன்னு நினைச்சு தண்ணி கேட்காம இருந்திருப்பா. சின்ன குழந்தைதானே." என்று பரிவாய் இஷிதாவை பார்த்தவன், "இப்ப பரவாயில்லையாமா?" என்றான்.<br /><br />"ம்ம்..." என்று தலையசைத்தாள் இஷிதா.<br /><br />"சரி. கொஞ்சம் நிதானமா போ. உடம்பு முடியலன்னா கூட வந்த பெரியவங்களிடம் சொல்லணும். சரியா?" என்றதும் இஷிதா தலையாட்டினாள்.<br /><br />"சரி... பார்த்துப் போ பாப்பா." என்று சாரதி எழுந்து நின்றான். அப்போதுதான் அவன் சுற்றிலும் பார்த்தான்.<br /><br />அவன் சைக்கிள் நிறுத்தியிருந்த இடம் வெறுமையாக இருந்தது. ஒரு நொடி அவனுக்கு எதுவுமே புரியவில்லை.<br /><br />"அச்சோ..." அவனது முகம் மாறியது. "எ.. என்னாச்சு?" என்று லாவண்யா கேட்டாள்.<br /><br />"சைக்கிளை காணோம்ங்க." என்றவன் சுற்றிலும் பார்த்தான்.<br /><br />"பச் யாரோ திருடியிருக்காங்க" சைக்கிளைக் காணோம்." என்றாள்.<br /><br />தேவி உடனே, "இங்கதானே வச்சிருந்தீங்க?"<br /><br />"ஆமா... தண்ணி எடுக்கறப்ப இங்கதான் இருந்தது." என்றான். <br /><br />சாரதி நான்கு பக்கமும் பார்த்தான்.<br /><br />சாலை பெரும்பாலும் வெறிச்சோடியிருந்தது.<br /><br />"நாலு தெருவும் காலியா இருக்கு... அதுக்குள்ள யார் களவாடியது?" என்று தேவி அதிர்ச்சியுடன் கேட்டாள்.<br /><br />சாரதி பதில் சொல்லவில்லை. அவன் பார்வை அந்த வெற்றிடத்திலேயே நிலைத்திருந்தது.<br /><br />"சாரி..." என்று லாவண்யா மெதுவாகச் சொன்னாள். "எங்களால தானே நீங்க சைக்கிளை தொலைச்சுட்டு நிற்கிறீங்க." சாரதியின் காதில் அந்த வார்த்தை விழுந்ததா இல்லையா என்பதே தெரியவில்லை.<br /><br />அவன் அப்படியே துவண்டு நின்றான். அது வெறும் சைக்கிள் இல்லை. அது அவனுடைய அப்பா சண்முகம் பயன்படுத்திய சைக்கிள்.<br /><br />ஒரு காலத்தில் அந்தச் சைக்கிளை அவன் வெறுத்திருக்கிறான்.<br /><br />சாரதிக்கு பதினெட்டு வயது ஆனதும், "அப்பா... எனக்கு ஒரு பைக் வாங்கித் தாங்க." என்று எத்தனை முறை கேட்டிருப்பான்.<br /><br />ஒவ்வொரு முறையும் சண்முகம் சிரித்தபடி, "அடப்போடா... இப்ப அதான் குறை. நானே சைக்கிள்லதான் போறேன். நீ சம்பாதிச்சு பைக் வாங்கு. அவ்ளோதான் உங்கப்பா வசதி." என்று சொல்லிவிடுவார்.<br /><br />அந்த வயதில் அது அவனுக்கு கோபமாக இருக்கும். அப்பாவின் சைக்கிளை கடந்து செல்லும் போதெல்லாம் வேண்டுமென்றே சைக்கிளை எட்டி உதைத்து, தன்னுடைய கோபத்தை தீர்த்துக் கொண்ட நாட்களும் உண்டு.<br /><br />ஆனால்... அப்பா இறந்த பிறகு?<br /><br />அதே சைக்கிள் அவனுக்கு அப்பாவைப் போலவே நெருக்கமானதாகி விட்டது.<br /><br />அதைப் பார்த்தாலே தந்தை சண்முகம் நினைவுக்கு வருவார். சைக்கிளில் தந்தையின் நெருக்கத்தை கண்டவன்.<br /><br />அந்த சைக்கிளை இழந்துவிட்டால், அப்பாவின் கடைசி நினைவுகளில் ஒன்றையும் இழந்துவிடுவது போல இருந்தது.<br /><br />சாரதியின் கண்கள் கலங்கின. அவன் மெதுவாக மண்டியிட்டு ஓரமாக அமர்ந்தான்.<br /><br />சுற்றியிருந்த சாலை, கடைகள், மனிதர்கள்... எல்லாமே அவனுக்கு வெறுமையாகத் தெரிந்தது. போவோர் வருவோர் வேடிக்கை பார்த்தவர்களும் கிளம்பியிருந்தனர். புதிதாக அவனை காண்போர் என்ன இது' நடுரோட்டில் இப்படி அமர்ந்திருக்கின்றான் என்று சாடும் அளவிற்கு அவன் நிலையின்றி அமர்ந்திருந்தான்.<br /><br />"கடவுளே..." அவனது உதடுகள் நடுங்கின.<br /><br />"முதல்ல எங்கப்பாவை என்னிடமிருந்து பிரிச்ச... இப்ப அவர் நினைவையும் என்னிடமிருந்து பிரிக்கப் பார்க்கறியா?" என்று மனதிற்குள் கண்ணை மூடி கதறினான்.<br /><br />"எனக்கு அந்த சைக்கிள் வேணும்.. எங்கிருந்தாலும் கொண்டுட்டு வா.." அது ஒரு வேண்டுதலாக மாறியது.<br /><br />ஆனால் வேண்டிக் கொண்டால் மட்டும் தொலைந்த சைக்கிள் திரும்பி வந்துவிடுமா?<br /><br />இல்லையே...<br />    பத்து... பதினைந்து நிமிடங்கள் மனதுக்குள் போராடியவன், இறுதியில் கண்களைத் துடைத்துக் கொண்டு எழுந்தான்.<br /><br />"எங்காவது இருக்கணும்..." என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டவன், அக்கம் பக்கமாகத் தேட ஆரம்பித்தான்.<br /><br />அவனுடைய நிலையைப் பார்த்த லாவண்யாவின் மனம் மேலும் கனத்தது.<br /><br />தேவி அவளது கையைப் பிடித்தாள்.<br /><br />"நாம போகலாம் லாவண்யா." லாவண்யா கையை உதறினாள்.<br /><br />"இல்லைடி. அவர்." என்று  சாரதியை சுட்டிக்காட்ட "என்ன இல்லை? அவர் லைப் அவர் பார்த்துப்பார்' என்று அழைத்தாள். <br /><br />"அவர் இஷிதாவுக்காக சைக்கிளை நிறுத்திட்டு தண்ணி எடுக்கப் போனாரு. இஷிதாவை கவனிச்சதும் தான் சைக்கிள் காணோம்னு பார்த்தாரு. இப்ப நாம ஒரு தேங்க்ஸ் கூட சொல்லாம போயிட்டா... அவர் என்ன நினைப்பாரு?"<br /><br />"அதுக்கு நாம என்ன செய்ய முடியும்? சைக்கிளை நாம எடுக்கலையே." என்றாள். <br /><br />"அது தெரியும். ஆனா... அவர் உதவி செய்தாரே." என்றாள் லாவண்யா.<br /><br />"லாவண்யா... அங்க பாரு. அவர் பாட்டுக்கு தலையைப் பிடிச்சிட்டு உட்கார்ந்துட்டாரு. இதுக்கு மேல நாம என்ன செய்ய? உங்க சித்தி வேற பூங்கா மூடறதுக்கு முன்ன இஷிதாவைக் கூட்டிட்டு வரச் சொன்னாங்க. ஏற்கனவே லேட்." என்றாள். <br /><br />இஷிதாவும் மெதுவாக லாவண்யாவின் கையைப் பிடித்தாள்.<br /><br />"அக்கா... வீட்டுக்குப் போகலாமா? படுக்கணும் போல இருக்கு." என்று லாவண்யா அவளைப் பார்த்தாள்.<br /><br />மனம் போக மறுத்தது. உதவி செய்தவரை விட்டு இப்படி தனியாகத் தவிக்கும் ஒருவரை விட்டுவிட்டுச் செல்வது சரியாகத் தோன்றவில்லை.<br /><br />ஆனால் தேவி இஷிதாவையும் அழைத்துக் கொண்டு அவளை இழுத்துச் சென்றாள்.<br /><br />சாரதியோ அவர்கள் சென்றதையே கவனிக்கவில்லை.<br /><br />அவன் இன்னும் சைக்கிளைத் தேடிக் கொண்டிருந்தான்.<br /><br />---<br /><br />வீட்டிற்கு வந்ததும் இஷிதாவை கவனித்த இலக்கியா, அவளுக்கு சோர்வாக இருப்பதையும் உடலில் தண்ணீர் சத்து குறைந்திருப்பதையும் புரிந்து கொண்டார்.<br /><br />முகம் அலம்பச் சொல்லி, கொஞ்ச நேரம் படுத்திருக்க வைத்தார்.<br /><br />பிறகு எலுமிச்சைப் பழத்தில் உப்பும் சர்க்கரையும் கலந்து கொடுத்தார்.<br /><br />இஷிதா அதை மெதுவாகக் குடித்துக் கொண்டிருக்க, லாவண்யா மட்டும் அமைதியாக இருந்தாள்.<br /><br />"என்னம்மா லாவண்யா ஏன் இப்படி இருக்க. எல்லாம் ஒழுங்கா சாப்பிடாம இருந்து இழுத்து வைக்கறா." இலக்கியாவின் கேள்விக்கு அவள் நடந்ததை எல்லாம் சொல்லி முடித்தாள்.<br /><br />கேட்டுக் கொண்டிருந்த இலக்கியாவின் முகமும் மாறியது.<br /><br />"தப்பு தானேம்மா" என்றார் இலக்கியா<br /><br />"என்ன சித்தி?"<br /><br />"அந்த பையன் உதவி பண்ணியிருக்கான். இஷிதாவை கவனிச்சிருக்கான். நம்மளால அவன் சைக்கிள் வேற போயிருக்கு. ஒரு தேங்க்ஸ் கூட சொல்லாம வந்துட்டீங்கன்னா... நன்றி கெட்ட மனுஷங்கன்னு அவன் நினைக்க மாட்டானா?" என்றார்.<br /><br />லாவண்யா தலை குனிந்தாள். "அதான் எனக்கும் மனசு கஷ்டமா இருக்கு சித்தி. தேவி நேரமாகுதுனு இழுத்துட்டு வந்துட்டா" என்றாள்‌ லாவண்யா.<br />"அவர் இந்த ஏரியாதான்னு தேவி சொன்னாளே?" என்று இலக்கியா கேட்க,<br /><br />"ஆமா சித்தி."<br /><br />"அப்ப மறுபடியும் பார்த்தா மன்னிப்பு கேட்டு, சைக்கிள் போனதுக்கும் வருத்தம் தெரிவிச்சுக்கோ." என்றார் மாற்று யோசனையாக.<br /><br />"ம்ம்..."<br /><br />"நீங்க தினமும் போற பஸ் கன்டெக்டர்னு சொல்னியே" லாவண்யா சற்றுத் தயங்கினாள்.<br /><br />"ஆமா..."<br /><br />"அப்ப நன்றி சொல்லி சைக்கிளை பற்றி கேட்டு விசாரிச்சுக்கலாம். அவ்ளோதான்" என்றார்.<br /><br />"அதெல்லாம்..." என்று ஆரம்பித்தவள் அப்படியே நிறுத்திக் கொண்டாள்.<br /><br />'தவிக்கிற நேரத்துக்குத்தான் கூட இருக்கணும். எல்லாம் முடிஞ்சதும் கூட இருந்தா என்ன அர்த்தம்?' என்ற எண்ணம் அவளது மனதை உறுத்தியது.<br /><br />"நாளைக்கு காலையில பேசிக்கலாம்..." என்று தனக்குத்தானே முடிவு செய்தாள்.<br /><br />ஆனாலும் மனம் மட்டும் அமைதியாகவில்லை.<br />--<br />அன்றிரவு படுக்கச் சென்ற பிறகும் லாவண்யாவின் மனம் அமைதியாகவில்லை.<br />கண்களை மூடினாலும், மயங்கி விழுந்த இஷிதாவின் முகம்தான் முதலில் நினைவுக்கு வந்தது. அதற்குப் பிறகு அவளை பதறிப் போய் கவனித்த சாரதியின் முகம்.<br />தண்ணீர் பாட்டிலை எடுத்துக் கொண்டு அவசரமாக ஓடி வந்தது.<br />"குழந்தையை ஏன் திட்டறீங்க?" என்று தன்னைப் பார்த்துக் கண்டித்தது. அதையெல்லாம் தாண்டி...<br />சைக்கிளைக் காணாமல் போனபோது அவன் முகத்தில் தெரிந்த அந்த வெறுமை.<br />அந்த முகத்தை நினைத்ததும் லாவண்யாவின் நெஞ்சுக்குள் ஏதோ வலித்தது.<br />'எங்களால தானே அவருக்கு இப்படி ஆகிடுச்சு...'<br />என்று நினைத்தவள் புரண்டு படுத்தாள்.<br />அவனை விட்டுவிட்டு வந்தது சரியா? தேவி சொன்னது போல, 'அவர் பார்த்துப்பார்' என்று விட்டுவிட வேண்டிய விஷயம் என்றாலும் மனம் ஒத்துக்கொள்ளவில்லை.</p>
<p>     சட்டென்று கண்களைத் திறந்தவள், மேலே பார்த்தபடி படுத்திருந்தாள்.<br />அடுத்த நொடி, அவளுக்கே தெரியாமல் உதடுகள் அசைந்தன.<br />'கடவுளே... அந்த கன்டெக்டருக்கு சைக்கிள் கிடைச்சிடணும்.' சில நொடிகள் அமைதியாக இருந்தவள் மீண்டும் கண்களை மூடினாள்.<br />'அது அவரோட அப்பாவோட சைக்கிளாம்... அவருக்கு ரொம்ப முக்கியமா இருக்கும்னு தோணுது. எப்படியாவது அவருக்குத் திரும்பக் கிடைக்கணும்.'</p>
<p>அவளுக்குத் தெரிந்தவரை, அது ஒரு சைக்கிள்தான். ஆனால்... அந்த சைக்கிள் சாரதிக்கு எவ்வளவு முக்கியமானது என்று அவள் அறியவில்லை. அவள் அறியாத அந்த வலிக்காகத்தான் அன்று இரவு, பெயர்கூட சரியாகத் தெரியாத ஒரு மனிதனுக்காக மனதார வேண்டிக் கொண்டாள். அதன்பிறகுதான் அவளது மனம் சற்று அமைதியடைந்தது.<br />ஆனால் தூக்கம் வருவதற்கு முன்பும் கடைசியாக அவள் நினைத்தது... 'நாளைக்கு அவரைப் பார்த்ததும் முதல்ல சைக்கிளைப் பற்றி கேட்கணும்.' என்பதைத்தான்.<br /><br />இன்னொரு முறை நினைத்தவள், ஏனோ அந்த இரவு முழுவதும் அவளால் அந்த எண்ணத்தைத் தள்ளிவிட முடியவில்லை. தன்னால் அவருக்கு கஷ்டமானதா என்று வருந்தினாள். பெயருக்கு இரண்டு தேசை சுட்டு சாப்பிட்டு விட்டு தனக்கான அறையில் லாவண்யா படுக்கும் முன் கண்டெக்டர் நினைவுடன் தான் உறங்கினாள். அவளுக்கு அவனது பெயரும் தெரியாதே. <br /><br />-தொடரும். <br />-பிரவீணா தங்கராஜ்.</p>]]></content:encoded>
						                            <category domain="https://onlinetamilnovels.com/community/%e0%ae%aa%e0%af%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80%e0%ae%af%e0%af%86%e0%ae%a9%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%9c%e0%ae%a9%e0%af%8d/">பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம் - Praveena Thangaraj</category>                        <dc:creator>Praveena Thangaraj</dc:creator>
                        <guid isPermaLink="true">https://onlinetamilnovels.com/community/topicid/345/</guid>
                    </item>
				                    <item>
                        <title>பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்-6</title>
                        <link>https://onlinetamilnovels.com/community/topicid/344/</link>
                        <pubDate>Thu, 03 Sep 2026 01:23:24 +0000</pubDate>
                        <description><![CDATA[அத்தியாயம்-6 
  சாரதியின் தினசரி பணியும், லாவண்யாவின் கல்லூரிக்கு செல்லும் பயணமும், இரண்டு மாதங்களை நெருங்கியிருந்தது. 
   அதிலும் லாவண்யா தேவி டிப்போவிலிருந்து ஏறுவது சாரதிக்கு பரிச்சயமாக...]]></description>
                        <content:encoded><![CDATA[<p>அத்தியாயம்-6 </p>
<p>  சாரதியின் தினசரி பணியும், லாவண்யாவின் கல்லூரிக்கு செல்லும் பயணமும், இரண்டு மாதங்களை நெருங்கியிருந்தது. </p>
<p>   அதிலும் லாவண்யா தேவி டிப்போவிலிருந்து ஏறுவது சாரதிக்கு பரிச்சயமாக தான் இருந்தது. </p>
<p>  பொதுவாக தினசரி ஏறும் கல்லூரி பெண்கள் மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் காணவும், பேசி பழகாவிட்டாலும், இன்னார் இந்த கல்லூரியில் இந்த ஸ்டாப்பில் இறங்குகின்றனர் என்ற யூகத்தின் அடிப்படையில் அறிந்திடலாம். அது போல தான்‌ சாரதி அறிந்திருந்தான். மற்றபடி அவனாக பேசி பழகியது எல்லாம் இன்னமும் சம்பவிக்கவில்லை. </p>
<p>அதே போல லாவண்யாவுக்கும், அதே கன்டெக்டர் டிரைவர், ஏழுமணி பஸ், அரக்கபரக்க, ஏறுவதும், காலி இருக்கையில் டிப்போவிலேயே அமர்ந்துக் கொள்வதுமென பழகியிருந்தது. </p>
<p>   பெரும்பாலும் லாவண்யா அமர்வது, முன் படிக்கட்டில் ஏறியதும் அமரும் முன்னிருக்கையாக இருக்கும், அல்லது பின்படிக்கட்டில் சாரதிக்கு முன்னால் இருக்கும் இருக்கையில் அமர்வதற்கு இடம் கிடைக்கும். </p>
<p>  அதை தாண்டி சில நேரம் ஐந்து நிறுத்தம் நின்றுக்கொண்டு வர, பின்னரே பாதி வழியில் அமர்வதற்கு இருக்கை கிடைக்கும். இது தினசரியாக இருக்க, கல்லூரியில் சென்று வருவதால் ஸ்டூடண்ட் கன்ஸென்ஸஸ் பாஸ் கிடைத்தது. </p>
<p>  அதாவது பாயிண்ட் டூ பாயிண்ட் செல்லும் பஸ் பாஸ். சலுகை முறையில் டிப்போவில் ரெனிவெல் செய்துக் கொள்ளலாம். </p>
<p>  அன்று "டிக்கெட்" என்று சாரதி கேட்டு கையை நீட்ட, "காலேஜ் பஸ் பாஸ் இருக்கு" என்றாள். </p>
<p>''பஸ் பாஸ் தந்துட்டாங்களா? காட்டுங்க" என்றான். </p>
<p>லாவண்யாவும் தேவியும் எடுத்து நீட்ட, அதில் ஒரு மாதத்திற்கான தேதியுடன் இருந்தது. </p>
<p>அதில் சின்னதாக பேனாவினால் டிக் போட்டு தந்தான். </p>
<p>  'ஓ.. டிக் பண்ணணுமா?' என்று லாவண்யா அவளை பார்த்து, அறியாமல் கேட்டுவிட, "ஆமா.." என்று பதில் தந்து பேனாவை செவிமடலுக்கு பின்னால் வைத்து விசிலை அடித்தான். </p>
<p>  லாவண்யா அவளது செவியை மூடவும், அதை கவனித்தான். </p>
<p>   அடுத்த நிறுத்தத்தில் பஸ் நின்றுவிட்டது. பயணிகள் ஏறியதும், வண்டியை மீண்டும் இயக்குவதற்கு விசிலை எடுத்து வாயுக்கு கொண்டு சென்றவன், லாவண்யா அவளதுசெவியை இரு கையால் பொத்திக் கொள்ள, சாரதியோ விசிலை அப்படியே விடுத்து, வாயை குவித்து  விசிலடித்தான். </p>
<p>  இம்முறை விசிலடிக்கும் கருவி மூலமாக வரும் சத்தத்தை விட, சாரதியின் இரண்டு விரலில் உதட்டை வைத்து அடித்த விசிலின் சத்தம் சற்று குறைவாக தான் செவியை பாதித்தது. </p>
<p>முத்துவிற்கு விசில் சத்தம் கேட்டதும், வண்டியை இயக்க, சாரதி அங்கும் இங்கும் பார்த்து, டிக்கெட் தந்தான். </p>
<p>  லாவண்யா மெதுவாக செவியிலிருந்து கையை எடுத்துவிட்டு, சாரதியை ஓரவிழியில் கவனித்தாள். </p>
<p>  பெரும்பாலும் லாவண்யா யாரையும் ஏறிட்டு பார்க்கும் வழக்கமில்லை. ஊரை விட்டு ஊர் வந்து படிப்பதால், பயமும் எந்த வம்பிற்கும் போகக் கூடாதென்ற எண்ணமும் தான் இருக்கும். அதனாலேயே பஸ்ஸில் பயணிக்கும் எந்த ஆண்மகனையும் நேருக்கு நேர் பார்த்தது இல்லை. லாவண்யா இதே பேருந்தில் வந்ததிலிருந்து, குண்டு பெண்ணென கேலி செய்த ஆடவன் கூட லாவண்யாவை கவனித்து ஒருதலையாக காதலிக்க துவங்கினான்.</p>
<p>  அந்த விவரம் கூட லாவண்யா அறியாததே. </p>
<p>  தேவி தான் "அடப்பக்கி அந்த பயப்புள்ள உன்னை தான் பார்க்கு, அங்க பார்றேன்" என்று சுட்டிக்காட்டினாள். </p>
<p>அதை கூட பார்க்காமல் தவிர்த்துவிட்டு, தான் உண்டு தன் வேலையுண்டு படிப்புண்டு என்று தான் இருப்பாள். ஏனோ மெதுவாக தனக்காக விசில் ஊதும் கருவியை விடுத்து தான் இறங்கும் வரை வாயை குவித்து சாரதி சத்தம் எழுப்பியது சற்று இதமாக இருந்தது. </p>
<p>  லாவண்யா இறங்கியதும், மீண்டும் விசில் கருவியால் தான் சத்தம் கொடுத்தான். </p>
<p>  மனதிற்குள் பரவாயில்லை 'புரிந்து நடந்துக்கற பெர்ஸன்' என்று மெச்சுதலாக பாராட்ட கூட செய்தாள். </p>
<p>ஆனால் கல்லூரி வந்ததும் மீண்டும் பேருந்தையோ கன்டெக்டரையோ நினைவேட்டில் இல்லாமல் பாடம், பாடம் நடத்தும் ஆசிரியர், தோழிகள், படிப்பு புத்தகம் என்று லாவண்யா மாறிவிடுவாள். </p>
<p>   மீண்டும் கல்லூரியிலிருந்து திரும்பும் நேரம் சாரதி வண்டியே வரவும் நேரத்தை பார்த்து இந்த பஸ் இந்த நேரத்தில் வருமென்று புரிந்துக் கொண்டாள். </p>
<p>  லாவண்யா அவளாக சாரதி பின்னால் சுற்றவில்லை. அதே போல அவன் பேருந்தில் தான் செல்ல வேண்டுமென மற்ற பேருந்தையும் அவள் தவிர்க்கவில்லை. எல்லாம் தானாக.. இயல்பாக, விதி நிகழ்த்தியது. </p>
<p>  அதே போல சாரதியுமே லாவண்யாவை பின்தொடரவில்லை. ஆனால் தேவி லாவண்யா இருக்கும் பகுதியில் தான், அவர்களை தாண்டி மிதிவண்டியில் பயணித்து செல்வான். </p>
<p>இரண்டு மாதம் நெருங்க, சாரதி அவ்வழியில் செல்வதை ஒரு நாள் தேவி லாவண்யா வீட்டு மாடியில் இருந்து பேசும் போது கவனித்து, "ஏய் லாவண்யா.. அந்த அண்ணா இப்படி தான் போறார். நான் சொன்னேன்ல இந்த ஏரியானு" என்று மாடியில் பேசும் போது சுட்டி காட்டினாள்.  </p>
<p>மாடியில் நின்று பேசும் நிகழ்வு கூட தேவிக்கும் லாவண்யாவுக்கும் தினசரி வழமையாக இருந்தது.</p>
<p>  சில நேரம் புத்தகம் எடுத்துக் கொண்டு வந்து  மாடியில் கதை அளந்தபடி வாசிப்பார்கள்‌. அதாவது படிப்பார்கள். வேடிக்கை பார்த்தபடி, எழுதுவது படிப்பது எல்லாம் நடக்கும். </p>
<p>   சிலர நேரம் ஊர் சுற்ற தேவி கூப்பிடுவான். லாவண்யா மறுப்பாள். இலக்கியாவின் மகள் இஷிதா ஐந்தாம் வகுப்பு படிப்பதால் லாவண்யாவை அதிகம் தொல்லை தரமாட்டாள். ஆனால் அதே பகுதியில் தேவி லாவண்யா ஊர்சுற்ற போனால் மட்டும் கூடவே ஒட்டிக் கொள்வாள் இஷிதா. அப்படி இஷிதாவை அழைத்துக் கொண்டு நடந்து சொன்றால் இலக்கியா கூட, ஏன்‌ போற? எங்க போற? என்று தடையிட மாட்டார்கள். </p>
<p>  லாவண்யா இஷிதா கைப்பிடித்து, தேவியிடம் பேசியபடி, நடந்தார்கள். </p>
<p>  பக்கத்தில் பூங்காவிற்கு தான் இஷிதாவை அழைத்து சென்று விளையாட விட்டு, கூடவே வழக்கத்திற்கு மாறாக மாடிக்கு பதில், பூங்காவில் கதை அளப்பார்கள் தோழிகள். </p>
<p>  "நம்ம காலேஜ் போரடிக்குப்பா. பேசாம கோ எஜிக்கேஷன் சேர்ந்திருக்கலாம்" என்றாள் தேவி. </p>
<p>"லாவண்யாவோ கோஎஜிகேஷன் காலேஜா இருந்தா எங்கம்மா இந்த காலேஜ்லயே சேர்த்திருக்க மாட்டாங்க." என்றாள் லாவண்யா. </p>
<p>  "உங்கம்மா ரொம்ப தான் டெரரா இருக்காங்க" என்று தேவி சலித்திட, லாவண்யாவோ சிரித்துவிட்டு, "நல்லவங்களா கெட்டவங்களானு கணிச்சு சொல்லவே முடியாது. அப்படியொரு கேரக்டர். எங்கக்காவை படிக்க வச்சது அப்பாவா இருக்கலாம். ஆனா வேலைக்கு போகாதனு அப்பா சொல்லறதை மீறி, வேலைக்கு போக அனுமதி கொடுத்தது எங்க அம்மா தான்." என்றாள். </p>
<p>"வேலைக்கு போனா பணம் வருது. அதோட சும்மாவே வீட்ல இருந்தா உங்கக்காவை திட்டலாம். இதுன்னா வரன் அமையற வரை வேலைக்கு போறானு பெருமையா சொல்லிக்கலாம்னு விட்டு வச்சாங்களோ என்னவோ" என்றாள் தேவி. </p>
<p>  "தெரியலை.. ஆனா அப்பா வேலைக்கு போகாதனு ஆயிரம் தடை போட்டதுக்கு அம்மா எல்லாத்தையும் உடைச்சிட்டு வேலைக்கு போன்னு சொன்னாங்க. அதுக்காக ஆம்பள பசங்க படிக்கற காலேஜ்ல சேர்க்க கேட்டிருந்தா நீ ஒன்னும் படிக்கவே போக வேண்டாம்னு சொல்லிருப்பாங்க. நான் தப்பிச்சிட்டேன். அக்கா மாலதி தான் மாட்டிக்கிட்டா." என்றாள். </p>
<p>"உங்கக்காவை பத்தி நீ பெருசா பேசியதில்லை. போன் எல்லாம் பேசுவியா?" என்றாள் தேவி. </p>
<p>"நான் என்ன சண்டை போட்டு பிரிஞ்சா இங்க படிக்க வந்திருக்கேன். அதெல்லாம் ஈவினிங் அம்மாவிடம் கால் பண்ணி பேசுவேன். நைட்டு அக்காவோட கால் பண்ணி பேசுவேன். அப்பா கூட காலையில பேசுவேன். ஓரே நேரத்துல மூன்று பேரிடம் பேசறது கிடையாது. </p>
<p>  அக்காவை வீட்ல வச்சி ஒருத்தன் நிறம் குறைவா இருப்பதா சொல்லி இருக்கானாம். அவ ரொம்ப வருத்தப்பட்டு எனக்கு கல்யாணமே வேண்டாம்னு கத்திட்டு இருக்க. </p>
<p>   ஏன் தேவி... கலரா இருந்தா தான் மாப்பிள்ளை கொத்திட்டு போவாங்களா. கருப்பா நிறம் குறைச்சாலா இருந்தா பொண்ணு நிறமா இல்லையேனு காதுபட சொல்லிட்டு ஓடறாங்க. </p>
<p>  அப்பா கருப்பா இருப்பார். நீ தான் பார்த்திருக்கியே. அம்மா நல்ல நிறம். அக்கா அப்பா மாதிரி வந்துட்டா. நான் அம்மா மாதிரி வந்துட்டேன். </p>
<p>   இதுக்காகவே என்னை இங்க நான் படிக்க போகட்டானு கேட்டதும் வீட்ல சரினு சொல்லிருப்பாங்க‌." என்று வாடியபடி கூறவும், தேவி "அதென்னவோ நிறம் பார்த்து வரன் தட்டி போறது நிஜம் தான் வாவண்யா. இவனுங்க இந்த பொண்ணு அப்படி, அந்த பொண்ணு இப்படினு தட்டி கழிப்பானுங்க. எவளாவது ஒருத்தி, அந்த ஆளையே சம்பளம் அதிகமில்லை, சொந்த வீடு இல்லை, படிப்பு குறைச்சல்னு நாலு பொண்ணுங்க தட்டி கழிச்சா தன்னால ஏதோ கல்யாணம் ஆனா போதும்னு கருப்போ சிவப்போ, களையான முகமோ, வத்தலோ, தொத்ததலோ பொண்ணு கிடைச்சா போதும்டா சாமினு ஒரு கட்டத்துல நிற்பானுங்க. </p>
<p>  இவனுங்க நேரா வந்து பொண்ணு நிறம் கம்மியா இருந்தா என்ன? நிறம்னு ஒன்னு உடம்பை மூடற தோலோட நிறம் மட்டும் தான்னு புரிஞ்சுக்கவே, நம்மளை காலம் அழவச்சிடும். </p>
<p>  எங்கக்கா சரிகாவுக்கு கூட வரன் பார்த்தாங்க. ஆனா அவ இப்ப நாட் இன்ட்ரஸ்ட் மேல படிக்கணும்னு சொல்லிட்டா. அதோட அவளும் சப்பியா இருப்பா. இப்ப வெயிட் லாஸ் பண்ணிட்டு கல்யாணத்தை பத்தி யோசிக்கலாம்னு தினமும் ஜிம்முக்கு போறா." என்று கூறவும், லாவண்யா தேவி பேச்சு தங்கள் அக்காக்களை பற்றி இருந்தது. </p>
<p>இதில் சரிகாவை லாவண்யா பார்த்திருக்கின்றாள்‌. அப்படியொன்றும் அதிகப்படிய சதையாக தெரியவில்லை. சிலருக்கு எல்லாம் மரபு ரீதியாக உடல் பருமனாக இருக்கலாம் என்றெல்லாம் யோசித்தவளுக்கு, 'உருவ கேலி பண்ணறவனுங்க அவனவன் கண்ணாடில அவனுங்க மூஞ்சியை பார்த்துக்கணும்‌' என்றவளின் நினைப்பிற்குள், 'ஏம்பா படிக்கற பசங்க உருவ கேலி செய்யறது தப்பில்லை' என்றவனது ஆண் குரல் செவியில் கேட்டது. இதை யார் சொன்னா?' என்று இமை மூடி யோசிக்க லாவண்யாவுக்கு நினைவு வரவில்லை. 'பச்.. யாரோ ஒருத்தர் கொஞ்ச நாளைக்கு முன்ன இதை சொன்னார்' என்று நினைவேட்டில் மெல்ல மெல்லக்குரலை மீண்டும் ரீவைன்ட் செய்தாள்‌. யார் அப்படி கூறியதென்ற விழிப்பு மூளைக்குள் வரவில்லை. </p>
<p>அந்த நேரம் பூங்காவில் நேரம் ஆகவும், விசிலடித்து, கதவை பூட்டுவதாக செக்கியூரிட்டி கடிகாரத்தை பார்த்து, 'நேரமாச்சு நேரமாச்சு பூங்காவை பூட்டணும் கிளம்புங்க" என்றதும் 'கண்டெக்டர்' என்று விசில் சத்தம் மனதில் இருந்து நினைவுப்படுத்தவும் உச்சரித்தாள்.</p>
<p>  தேவியோ லாவண்யாவை கவனிக்காது, உச்சரித்த பெயரையும் கவனிக்காமல், "சரி நாம கிளம்பலாம் பார்க் பூட்ட போறாங்களாம். உங்க சித்தி பொண்ணை கூப்பிடு" என்றதும், 'ஆங்.' என்று இஷிதாவை தேடினாள். </p>
<p>இஷிதாவோ தன்னை லாவண்யா அக்கா தேடம் வேலை கொடுக்காமல் மூச்சு வாங்க முன் வந்து நின்றாள். </p>
<p>   "போலாம் அக்கா" என்று மூவரும் நடந்து செல்ல, பூங்காவை தாண்டி ரோட்டில் நடந்து வரவும், லாவண்யா தேவி இருவரும் முன்னால் வர, இஷிதா பின்னால் வந்தாள். </p>
<p>   அதேநேரம் கண்டெக்டர் சாரதி மிதிவண்டியில் இவர்களுக்கு முன் கடந்து வந்தவன், லாவண்யாவை பார்த்து, 'ஏய்..ஏய்" என்று கத்திவிட்டு சைக்கிளை நிறுத்தி அவசரமாய் இறங்கி ஓடிவந்தான். </p>
<p>-தொடரும். </p>
<p>-பிரவீணா தங்கராஜ்.</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>]]></content:encoded>
						                            <category domain="https://onlinetamilnovels.com/community/%e0%ae%aa%e0%af%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80%e0%ae%af%e0%af%86%e0%ae%a9%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%9c%e0%ae%a9%e0%af%8d/">பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம் - Praveena Thangaraj</category>                        <dc:creator>Praveena Thangaraj</dc:creator>
                        <guid isPermaLink="true">https://onlinetamilnovels.com/community/topicid/344/</guid>
                    </item>
				                    <item>
                        <title>பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்-5</title>
                        <link>https://onlinetamilnovels.com/community/topicid/343/</link>
                        <pubDate>Wed, 02 Sep 2026 01:12:17 +0000</pubDate>
                        <description><![CDATA[அத்தியாயம்-5அதிகாலை நேரம் அலாரம் அடிப்பதற்கு முன்பே சாரதி கண்விழித்து விட்டான்.சில நொடிகள் படுக்கையிலேயே அமர்ந்திருந்தவனுக்கு, நேற்று இரவு அம்மா சொன்ன வார்த்தை நினைவுக்கு வந்தது.&#039;நிஜம்டா... ...]]></description>
                        <content:encoded><![CDATA[<p>அத்தியாயம்-5<br /><br />அதிகாலை நேரம் அலாரம் அடிப்பதற்கு முன்பே சாரதி கண்விழித்து விட்டான்.<br /><br />சில நொடிகள் படுக்கையிலேயே அமர்ந்திருந்தவனுக்கு, நேற்று இரவு அம்மா சொன்ன வார்த்தை நினைவுக்கு வந்தது.<br /><br />'நிஜம்டா... ஒருத்தி வருவா.' என்ற வார்த்தையை நினைத்தவனுக்கு சிரிப்பு வந்தது.<br /><br />எழுந்து குளித்து கண்ணாடியில் தன்னை கவனித்தான்.‌ கையில் பிரஷுடன், கண்ணாடியில் தன்னை கண்டான்.‌ வலது கையால் தாடையின் வலது இடதென தொட்டு பார்த்து, முன் நெற்றியில் இருந்த முடியை கோதி, பெருமூச்சை வெளியிட்டான்.<br /><br />'அவ எங்க இருந்தாலும் என்னைத் தேடி வந்து நிப்பாளாம்' என்று அம்மா சொன்னதை நினைத்துப் பார்த்தவன், தனியாக சிரித்துக் கொண்டான்.<br /><br />'இந்த அம்மாவுக்கு வேற வேலையே இல்ல. நேத்து ஏதோதோ பேசி, இப்ப என்னை கிறுக்கன் மாதிரி கண்ணாடியை பார்த்து சிரிக்க வச்சிட்டாங்க. இப்ப காலையிலேயே கல்யாணம், பொண்ணு என்றதே மண்டைக்குள்ள ஓடுது. இவங்களிடம் ஏதாவது பேசினா மருமகன்னு ஆரம்பிச்சுடுவாங்க.' என தனக்குத்தானே முணுமுணுத்துக் கொண்டான்.<br /><br />அறையிலிருந்து வெளியே வந்தபோது, காஞ்சனா ஏற்கனவே விழித்திருந்தார்.<br /><br />"எழுந்துட்டியா ராஜா?" என்றதும் ''ஆமா அம்மா." என்றான்.<br />‌<br />"டீ போட்டு வச்சிருக்கேன். குடிச்சுட்டு போ." என்று டம்ளரை நீட்டினார்.<br /><br />"நீங்க எப்ப எழுந்தீங்க?" என்றான்<br /><br />"நான் எப்ப எழுந்தாலும் உனக்கு என்ன? நீ முதல்ல டீயைக் குடி."<br /><br />"சரி மா." என்று வாங்கியவன், சுவரில் சாய்ந்தபடி சூடான டீயை மெதுவாகக் குடித்தான்.<br /><br />காஞ்சனா சமையலறைக்குள் சென்று வேலையைப் பார்க்க ஆரம்பித்தார்.<br /><br />டீ முடித்த சாரதி டம்ளரை வைத்துவிட்டு, "நான் குளிச்சிட்டு வர்றேன்மா." என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றான்.<br /><br />அவன் குளித்து முடித்து வெளியே வருவதற்குள், காஞ்சனா சமையலை கிட்டத்தட்ட முடித்து விட்டிருந்தார். அடுப்பில் இட்லி பாத்திரம் ஆவியெழுப்பிக் கொண்டிருந்தது. கத்திரிக்காய் சாம்பார் கொதித்துக் கொண்டிருந்தது. மற்றொரு பாத்திரத்தில் வெண்டைக்காய் பொரியல்.<br /><br />சாரதி சமையலறை வாசலில் நின்றபடி பார்த்தான்.<br /><br />"என்னம்மா... இவ்வளவு சீக்கிரமா எல்லாம் ரெடி பண்ணிட்டீங்க?" என்று ஆச்சரியப்பட்டான்.<br /><br />"நீ சாப்பிட்டு கிளம்பணும்ல. அதான். நேத்து கூட சாப்பாடு கட்டிக்கொடுக்கலை" என்றதும் <br /><br />"நேத்து தெரியாம போச்சு. இன்னைக்கு தெரிஞ்சதால பொறுமையா கூட பண்ணலாமே" என்று சாதாரணமாகச் சொல்லிவிட்டு, ஏறிட, இட்லிகளை தட்டில் மகன் சாப்பிட எடுத்து வைத்தார்.<br /><br />சாரதி சிரித்தபடி அமர்ந்தான். "சரி... சாப்பிடலாம்." மூன்று நான்கு இட்லிகளைத் தட்டில் போட்டுக் கொண்டவன், மேலே கத்திரிக்காய் சாம்பாரை ஊற்றிக் கொண்டு சாப்பிட ஆரம்பித்தான்.<br /><br />"ம்மா... சாம்பார் நல்லா இருக்கு."<br /><br />"ம்ம்... சாப்பிடு."<br /><br />"வெண்டைக்காய் பொரியலும் நல்லா இருக்கு." என்று சாரதி சிரித்துக் கொண்டே சாப்பிட்டான்.<br /><br />சில நிமிடங்களில் தட்டிலிருந்த இட்லிகள் காலியாகின.<br /><br />"ம்மா... இன்னும் கொஞ்சம் சாம்பார்." என்று கூறியவன் எழுந்து சமையலறைக்குள் சென்றான். "சாம்பார் அடுப்புல இருக்கு. கொஞ்சம் கரண்டி எடுத்து ஊத்திக்கோயா." பாத்திரத்தை எடுக்கச் சென்றவன், அங்கிருந்த இட்லி பாத்திரத்தை கவனித்தான்.<br /><br />அதில் ஒரு தட்டு மட்டுமே இருந்தது. சாரதியின் புருவம் சுருங்கியது.<br /><br />"ம்மா..." என்று அழைக்க "என்ன?" என்று திரும்பினார்.<br /><br />"நீங்க உங்களுக்காக இட்லி ஊத்திக்கலையா?" என்றான்.<br /><br />காஞ்சனாவோ "நான் தோசை ஊத்திக்கிறேன் டா." என்று மழுப்பினார். <br /><br />"சரி." என்று சொல்லிவிட்டு மீண்டும் தன் தட்டைக் கொண்டு வந்தவன், சாப்பிடத் தொடங்கினான். ஆனால் அவனுடைய பார்வை மட்டும் அந்த இட்லி பாத்திரத்தின் மீதே இருந்தது.<br /><br />சாப்பிட்டு முடித்து கைகளை அலம்பச் சென்றபோது, அருகில் இருந்த காலியான மாவு பாத்திரம் அவன் கண்ணில் பட்டது. அவன் அப்படியே நின்றுவிட்டான்.<br /><br />'மாவே இல்லையே. எதுல தோசை ஊத்தப் போறாங்க?' என்றவனுக்கு உடனே புரிந்துவிட்டது.<br /><br />அன்னை நேற்று போல சரியாக சாப்பிடப் போவது இல்லையென.<br /><br />என்ன சாப்பிடப் போறீங்க என்று கேட்டால், எதாவது பண்ணிக்கறேன், என்று சொல்லிவிட்டு சமையலறையை உருட்ட செல்வார்கள் என்பது சாரதிக்கு புரிந்தது. <br /><br />அவனுக்கு எரிச்சலா... வருத்தமா... என்ன உணர்வு என்று புரியவில்லை.<br /><br />பிறகு அவசரமாய் சட்டையை மாட்டிக் கொண்டவன், 'அம்மா... இதே வந்துட்டுறேன்." என்று சொல்லிவிட்டு சைக்கிளை எடுத்துக் கொண்டு வெளியே சென்றான்.<br /><br />'எங்க போறான்' என்று பார்வையிட அன்னையின் பார்வையால் "வந்துடறேன்மா!" என்று மட்டும் குரல் கொடுத்துவிட்டு சைக்கிளை வேகமாக மிதித்தான்.<br /><br />காஞ்சனா வாசலில் நின்று பார்த்துக் கொண்டிருந்தார். "இந்த நேரத்துல இவன் எங்க போறான்?" என்று யோசித்தபடி வீட்டுக்குள் சென்றார்.<br /><br />சாரதி போகும் வழியிலிருந்த சிறு டிபன் கடையை நோக்கி வேகமாக மிதித்தான். அங்கே பூரி ஒரு செட் வாங்கிக்கொண்டு, சில நிமிடங்களில் கையில் ஒரு பொட்டலத்துடன் திரும்பி வந்தான்.<br /><br />அவன் மூச்சு வாங்கியபடி சைக்கிளை நிறுத்தினான்.<br /><br />"என்னய்யா... ஏன் எங்க போன?" என்று காஞ்சனா பதறியபடி கேட்டார்.<br /><br />சாரதி கையில் இருந்த பொட்டலத்தை அவரிடம் நீட்டினான்.<br /><br />"பூரி மசாலா." என்றான்.<br /><br />"எதுக்குயா?" என்று காஞ்சனா கேட்க<br /><br />"மாவு காலின்னு சொல்ல மாட்டீங்களாம்மா?" என்று கடிந்தான்.<br /><br />"அதுக்காகவா இவ்வளவு அவசரமா போன?" என்றார்.<br /><br />"நேத்த மாதிரியே சாப்பிடாம இருந்துடுவீங்கன்னு நினைச்சேன். கொஞ்சம் உங்களையும் கவனிங்கம்மா. ஏதோதோ கல்யாணம் மருமக.. எனக்குனு ஒருத்தி வருவானு பேசறிங்க. அதெல்லாம் பார்க்க வேண்டாமா? என் பையனோ பொண்ணோ வந்து உங்க கையால சாப்பிட வேண்டாமா. அதுக்கு நீங்க உங்க உடலை கவனிக்கணும்" என்று கூறியவன் பொட்டலத்தைத் திறந்து ஒரு பூரியை எடுத்து அவரிடம் நீட்டினான்.<br /><br />"பிடிங்க." என்றான். காஞ்சனாவின் முகம் மலர்ந்து பின்னர் சற்றே வாடியது. மகன் கூறியதை கேட்டு முகம் மலர்ந்தது. கல்யாணம் பேரன் பேத்தி குழந்தை என்றவரை பேசியதால்... அடுத்த நிமிடம் இந்த கவலையும் தன் நெஞ்சில் அழுத்திக் கொண்டே உள்ளதே. <br /><br />அவனுக்கென ஒருத்தியை தேடி பிடித்து அவள் கையில் சாரதியை ஒப்படைக்க வேண்டிய பொறுப்பு. தனக்கு பின் சாரதிக்கு யார் உள்ளார் என்ற வருத்தம் நொடியில் நெசஞ்சில் அழுத்தியது.<br /><br />"இதுக்காகத்தான் நீ இவ்வளவு அவசரமா ஓடினியா?" என்று மனதில் நினைத்ததை மறைத்து கேட்டார்.<br /><br />"நேரமாகுது மா. ஒழுங்கா சாப்பிடுங்க" என்று டிபன் பாக்ஸ் பையை எடுத்துக் கொண்டான்.<br /><br />'எனக்குன்னு நீ இருக்கேடா... உனக்குனு ஒருத்தியை பார்க்க வேண்டாமா?' என்று மெதுவாகச் சொன்னவர், மகனையே பார்த்தார்.<br /><br />"நீ உடம்பை நல்லபடியா பார்த்துக்கோ. தினமும் இப்படி ஓடி ஓடி என்னை கவனிக்காத." சாரதி சிரித்தான்.<br /><br />"அதெல்லாம் நான் பார்த்துக்கறேன். நீங்க சாப்பிடுங்க. நான் கிளம்பறேன்." சைக்கிளைத் திருப்பியவன், மீண்டும் வீட்டை நோக்கிப் பார்த்தான்.<br /><br />"பூரி முழுசும் சாப்பிடணும்."<br /><br />"சாப்பிடறேன்."<br /><br />"சொல்லாதீங்க. செய்யுங்க" என்றான்.<br /><br />"சரி ராஜா." என்று காஞ்சனா சிரித்தார்.<br /><br />சாரதி சைக்கிளை மிதித்தபடி டகப்போ சென்றான். அவன் தலை மறையும் வரை பார்த்துக் கொண்டிருந்த காஞ்சனாவின் கண்களில் பெருமிதம் கலந்த ஈரம்.<br /><br />'இந்த காலத்துல இப்படியொரு பையன் அம்மாவுக்காக யோசிப்பானா?' என்று தனக்குத்தானே கேட்டுக் கொண்டவர், 'இவன் இப்படி இருக்கறதாலதான்... இவனுக்குன்னு ஒருத்தியை நான் இருக்கும் போதே கட்டி வைக்கணும்.' என்றபடி வானத்தைப் பார்த்தார்.<br /><br />"எங்க இருக்காளோ... எப்ப நல்லது நடக்குமோ..." என்று முணுமுணுத்துவிட்டு வீட்டுக்குள் சென்றார்.<br /><br />சாரதி டிப்போவை அடைந்தபோது, முத்து ஏற்கனவே பேருந்தருகில் நின்றிருந்தார்.<br /><br />"என்னப்பா... இன்னைக்கு லேட்டா?" என்று மணியை கவனிக்க, "இல்லண்ணா. சரியா தான் இருக்கு. வீட்டுல ஒரு சின்ன வேலை." என்று சொல்லியபடி அவசரமாய் டிப்போவில் அவன் கையெழுத்து போட்டுவிட்டு பணப்பையையும் டிக்கெட் பையையும் வாங்கிக் கொண்டு அவசர அவசரமாக, சாப்பாட்டுப் பையை முத்துவின் கால் அருகில் வைத்தான்.<br /><br />"அட... இன்னைக்கு வீட்டுல சாப்பாடு கட்டிட்டாங்களா?" என்றார் டிரைவர் முத்து.<br /><br />"ஆமா. அதுவும் ஒரு பெரிய கதையண்ணா." என்று சிரித்தவன், தன் டிக்கெட் பையை எடுத்துக் கொண்டான்.<br /><br />பேருந்துக்குள் ஏற்கனவே சில பயணிகள் ஏறி அமர்ந்திருந்தனர். சாரதி தன் இடத்தில் நின்றபடி, "டிக்கெட்... டிக்கெட் வாங்கிக்கோங்க." என்று குரல் கொடுத்துக் கொண்டே ஒவ்வொருவரிடமும் டிக்கெட் வாங்கத் தொடங்கினான்.<br /><br />அன்று காலை வழக்கத்தைவிட கூட்டம் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. பேருந்து நகரத் தொடங்கியதும், விசில் சத்தம் அவ்வப்போது பேருந்துக்குள் ஒலித்துக் கொண்டே இருக்க, சாரதி ஒரு மூலையிலிருந்து இன்னொரு மூலைக்குச் சென்று டிக்கெட் கிழித்துக் கொண்டிருந்தான்.<br /><br />கூட்ட நெரிசலில் யாரையும் தேவையில்லாமல் இடிக்காமல், ஆண், பெண் என்று வேறுபாடு பார்த்து நிற்கும் இடத்தைத் தேர்ந்தெடுத்து, பேருந்து குலுங்கும்போதும் தன்னை சமநிலைப்படுத்திக் கொண்டு வேலை பார்த்தான்.<br /><br />அந்த அனுபவம் அவனுக்கு ஒரே நாளில் வந்ததல்ல. முதல் ஆறு மாதங்கள் அவனுக்கு இதெல்லாம் மிகவும் கஷ்டமாக இருந்தது.<br /><br />யார் எங்கே நிற்பார்கள்? எப்படி கூட்டத்துக்குள் செல்வது? எந்த நேரத்தில் விசில் அடிக்க வேண்டும்? எப்போது வண்டியை நிறுத்தச் சொல்ல வேண்டும்? எல்லாவற்றையும் கற்றுக் கொண்ட பிறகுதான் இந்த வேலை அவனுக்கு இயல்பாகிப் போயிருந்தது.<br /><br />அந்த நினைவு வந்ததும் சாரதி சின்னதாகச் சிரித்தான்.<br /><br />அப்போது ஒரு பெண் பேருந்தில் ஏறினார். அவரைப் பார்த்த கல்லூரி மாணவர்கள் சிலர் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு, "ஏய்... மலை வருது! மலை வருது! வழிவிடுங்கடா!" என்று சத்தமாகச் சிரித்தனர்.<br /><br />அருகில் இருந்த மாணவர்களும் சிலரும் சிரித்தனர். அதே நேரத்தில் வெளியே மழை தான் வருகின்றதா என்று இவர்கள் மலை மழை என்ற குழப்பத்தில் திரும்பி ஜன்னல் புறம் பார்த்தனர். அதில் லாவண்யாவும் தேவியும் கூட திரும்பி பார்த்து மழையா எங்க?' என்பது போல குழம்பினார்கள்.<br /><br />சாரதி அந்த மாணவர்களைப் பார்த்து, "ஏன் தம்பிகளா.. பாடி ஷேமிங் பண்ணிக்கிட்டு இருக்கீங்களா? அவங்க பேருந்துல ஏறுறதுக்கு கஷ்டமா இருக்கலாம். அதுக்காக இப்படி கிண்டல் பண்ணறது சரியா? படிக்கற பசங்க தானே. ஒருத்தரோட உருவத்தை பார்த்து கிண்டல் கேலி செய்யக்கூடாதுனு தெரியாது" என்று கேட்டான்.<br /><br />அவனுடைய குரல் சற்று உரக்க இருந்ததால், அருகில் இருந்த பயணிகளின் காதிலும் விழுந்தது.<br /><br />ஒரு மாணவன் சிரிப்பை அடக்கிக் கொண்டு, "அட அவங்களை சொன்னா நீங்க கோபப்படறிங்க. கன்டெக்டர் பயணியரிடம் லவ்ஸ் விடறதா பேசிக்கறாங்களே.. இதான்டா அது. கேரளா போல தமிழ்நாடும் அடுத்து நியூஸ்ல சொல்வாங்க" என்றான்.<br /><br />சாரதி அமைதியை கைவிடுத்து அந்த மாணவனை பார்த்து கோபமாக ஏறிட்டு பல்லைக் கடிப்பது மற்றொரு மாணவன் கவனித்தான். <br /><br />அவனோ பேசிய மாணவனை அடக்கி, "சும்மாயிருடா.. கோச்சிக்காதிங்க அண்ண... சும்மா ஜாலிக்கு தானே?" என்றான்.<br /><br />"உங்களுக்குப் ஜாலியா இருக்கலாம்பா. கிண்டலில் சிக்கிட்டு இருக்கற அவங்களுக்கு எப்படி இருக்கும்?" என்று சாரதி அமைதியாகக் கேட்டான்.<br /><br />மாணவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.<br /><br />"சரி அண்ணா. சாரி" என்று ஒருவன் மெதுவாக அப்பெண்ணிடமும் சொன்னான்.<br /><br />"சரி... உள்ள போங்க. படியில நிக்காதீங்க. நான் டிக்கெட் தர்ற பஸ்ல படில நிற்கவோ, மத்தவங்களை கேலி கிண்டல் செய்துட்டு பொண்ணுகளிடம் ஏதாவது கைவரிசை காட்டினா போலீஸ் ஸ்டேஷன்ல தான் வண்டியை நிறுத்த சொல்வேன்." என்று கூறிவிட்டு சாரதி மீண்டும் டிக்கெட் பையைத் திறந்தான்.<br /><br />   அந்த பருமனான பெண்ணோ நன்றியுடன் சாரதியை நோக்கினாள். <br /><br />அந்தச் சம்பவத்தை அருகில் நின்ற லாவண்யா கவனித்துக் கொண்டிருந்தாள்.<br /><br />அவளுக்கு சாரதியைப் பற்றி மனதில் ஏதோ ஒரு எண்ணம் உயர்வாக தோன்றியது.<br /><br />நேற்று காலையில் துப்பட்டாவைச் சரி செய்யச் சொன்னவன். இப்போது யாரையும் கிண்டல் செய்யக் கூடாது என்று சொல்லும் அதே மனிதன்.<br /><br />அவள் அவனைப் பார்த்துக் கொண்டிருக்க, சாரதி அடுத்த பயணியிடம் டிக்கெட் கேட்டுக் கொண்டிருந்தான்.<br /><br />தேவியிடம் லாவண்யா திரும்பி, "நேத்து போன பஸ்லயும், இதே டிரைவர் இதே கன்டெக்டர் தானே இருந்தாங்க." என்று கேட்டாள். <br /><br />தேவி கன்டெக்டரான சாரதியை திரும்பி பார்த்து, "அட நேத்தும் இதே பஸ்ல தான் வந்தோம். ஏழு மணி பஸ் இது. அதனால அதே டிரைவர் அதே கன்டெக்டர்." என்றாள். <br /><br />லாவண்யாவோ 'ஓ... அதான்.' என்று ஏதோ சிந்திக்க, "இவர் நம்ம ஏரியா தான். நம்ம வீட்டை தாண்டி தான் அவர் வீட்டுக்கு போவார். ஆனா வீடெல்லாம் தெரியாது." என்று உபரி தகவல் தந்தாள். <br /><br />'ஓ... ஆனா.. நேத்து காலையில ஓகே... மதியமும் பார்த்த மாதிரி இருக்கே. கீழே இறங்கினப்பவும் இவரை தான் பார்த்தேன். நேத்து போறப்பவும் வர்றப்பவும் ஒரே பஸ்ல தான் வந்தேனா? என் துப்பட்டா தரையில தரையில இருப்பதை சுட்டிக் காட்டினார். இப்ப ஒரு பொண்ணை ஆம்பள பசங்க குண்டுனு கேலி செய்யவும் கேலி செய்யாதிங்கனு சொல்லறார்.' என்று சிந்தித்தாள். <br /><br />''அங்க என்னம்மா யோசிக்கற.. கோல்டன் ஜுப்ளி பிளாட்ஸ் வந்துடுச்சு.. சட்டுனு இறங்குங்க'' என்றான்.<br /><br />'என்னத்த யோசிக்கறேன்... ஒன்னும் யோசிக்கலையே' என்று லாவண்யா பேந்த பேந்த விழித்தாள். கன்டெக்டரோ தன் பணியாக, இறங்குமிடம் வந்ததும் மற்ற பயணியை இறங்க கூறி கத்துவதை அறிந்தாள். <br /><br />தலையை உலுக்கிக் கொண்டு, ஜன்னலை நோக்கி பார்வையை மாற்றிக் கொண்டாள். <br /><br />-தொடரும்.<br />-பிரவீணா தங்கராஜ்.<br /><br /></p>]]></content:encoded>
						                            <category domain="https://onlinetamilnovels.com/community/%e0%ae%aa%e0%af%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80%e0%ae%af%e0%af%86%e0%ae%a9%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%9c%e0%ae%a9%e0%af%8d/">பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம் - Praveena Thangaraj</category>                        <dc:creator>Praveena Thangaraj</dc:creator>
                        <guid isPermaLink="true">https://onlinetamilnovels.com/community/topicid/343/</guid>
                    </item>
							        </channel>
        </rss>
		