<?xml version="1.0" encoding="UTF-8"?>        <rss version="2.0"
             xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
             xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
             xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
             xmlns:admin="http://webns.net/mvcb/"
             xmlns:rdf="http://www.w3.org/1999/02/22-rdf-syntax-ns#"
             xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/">
        <channel>
            <title>
									நின் பார்வை தவமல்லவா!- Praveena Thangaraj - onlinetamilnovels.com Forum				            </title>
            <link>https://onlinetamilnovels.com/community/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%88-%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%ae%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%b5%e0%ae%be-praveena-thangaraj/</link>
            <description>onlinetamilnovels.com Discussion Board</description>
            <language>en-US</language>
            <lastBuildDate>Mon, 27 Jul 2026 04:40:15 +0000</lastBuildDate>
            <generator>wpForo</generator>
            <ttl>60</ttl>
							                    <item>
                        <title>நின் பார்வை தவமல்லவா!-10 (முடிவுற்றது)</title>
                        <link>https://onlinetamilnovels.com/community/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%88-%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%ae%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%b5%e0%ae%be-praveena-thangaraj/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%88-%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%ae%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%b5%e0%ae%be-10-%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f/</link>
                        <pubDate>Fri, 03 Jul 2026 08:30:48 +0000</pubDate>
                        <description><![CDATA[அத்தியாயம்-10
  செழியன் டாக்டர் உடையை எடுத்துக்கொண்டு புறப்படவும், கண்ணில் அவனது அலங்கார தோரணையை நிரப்பி வழியனுப்பி வைத்தார் சுகந்தி.
   வீட்டை சுத்தமாக வைத்திருக்கின்றான். தாங்கள் விரும்ப...]]></description>
                        <content:encoded><![CDATA[<p data-p-id="3147c95027a9c75048483c1f24654149"><span style="font-size: 14pt"><b>அத்தியாயம்-10</b></span></p>
<p data-p-id="73231cba2b80c0035845db08ebaf6ab9"><span style="font-size: 14pt">  செழியன் டாக்டர் உடையை எடுத்துக்கொண்டு புறப்படவும், கண்ணில் அவனது அலங்கார தோரணையை நிரப்பி வழியனுப்பி வைத்தார் சுகந்தி.</span></p>
<p data-p-id="1abafacc8d877a775cae14e2e6eed765"><span style="font-size: 14pt">   வீட்டை சுத்தமாக வைத்திருக்கின்றான். தாங்கள் விரும்பியது போலவே நல்ல மருத்துவனாக வந்துவிட்டான். ஆனால் அவன் பார்வையில் தரம் தாழ்ந்தது சுகந்தி மட்டுமே.‌</span></p>
<p data-p-id="8401aed718d1553ab229a413e70164ca"><span style="font-size: 14pt">   சுகந்தி மனமெங்கும் வர்ஷினியே ஆட்சிப்புரிந்தாள். அவளை சந்திக்கும் வாய்ப்பு அமைந்தால் நன்றாக இருக்கும். நேரில் ஒருமுறை ஒரேமுறை மன்னிப்பு கேட்டு விட்டால் கூட சுகந்தி மனம் நிம்மதியடையும்.</span></p>
<p data-p-id="f086ce12ea9276d7ae84bb2a19c932b7"><span style="font-size: 14pt">   வர்ஷினியை காணும் வாய்ப்பு அமையுமா? என்று காத்திருந்தார்.</span></p>
<p data-p-id="3a2f165e42b97b58fdd8082448caf08b"><span style="font-size: 14pt">   செழியன் டூயூட்டிக்கு வந்து கிடைத்த தனிமையில், "வர்ஷூ" என்று மட்டும் அனுப்ப, "ஹாய்... சொல்லுங்க டாக்டர்" என்று அனுப்பியிருந்தாள்.</span></p>
<p data-p-id="daa3f13ebd9f026064037b0731685343"><span style="font-size: 14pt">  செழியனுக்கு வந்தது கோபம். ஆனாலும் அதை வெளிப்படையாக காட்ட முடியுமா?</span></p>
<p data-p-id="d7d139e970de8be5b22147741bd7a995"><span style="font-size: 14pt">  "டாக்டர் மேடம் சென்னை ரீச் ஆகிட்டிங்களா?" என்று அவனுமே 'டாக்டர்' என்று அழுத்தி கேட்கும் விதமாக பதிலுக்கு அனுப்பினான்.</span></p>
<p data-p-id="5b2499f084fe6ab4d7f355e6420077b7"><span style="font-size: 14pt">   "ஏன் கிண்டல் பண்ணறிங்க. அடுத்த நாளே ரீச் ஆகிட்டேன்‌. உங்களிடம் சொல்ல ஆசைப்பட்டேன். பட்... தேவையில்லாம நான் மெஸேஜ் செய்து உங்களுக்கு தொந்தரவு கொடுக்க வேண்டாமேனு தவிர்த்தேன்" என்று அனுப்பினாள்.</span></p>
<p data-p-id="5b811b23cf5ace0b5ce743cc300a1c81"><span style="font-size: 14pt">அதை செழியன் பார்த்துவிட்டு பதில் அனுப்பவில்லை.</span></p>
<p data-p-id="643808b2998879d68b8d95984395a40b"><span style="font-size: 14pt">'தொந்தரவு' என்றதும் மீண்டும் சினம் துளிர்த்தது. உண்மையில் அவள் நினைப்பை அவனிடம் கிளறிவிட கூடாது என்று வர்ஷினி தவிர்த்தாள். அதை அவனிடம் உரைத்திட முடியுமா?</span></p>
<p data-p-id="43d3fafac1d135c808688f3c862d36eb"><span style="font-size: 14pt">  'என்ன பதிலே வரலை?' என்று அடிக்கடி தொலைப்பேசியை கவனித்து ஏமாந்தாள்.</span></p>
<p data-p-id="0950e11b28535df9052c687c57f82aca"><span style="font-size: 14pt">  காலையில் அனுப்பியதற்கு மதியம் வரை அவனிடமிருந்து எதிர்ப்போ கண்டிப்போ எதுவுமின்றி வாடினாள்.</span><br /><br /><span style="font-size: 14pt">ஏதாவது சொல்வானென்று வஞ்சி மனம் தவித்தது. மாலை டூயூட்டி முடிந்து வெளிவர, எதிரே டீக்கடையில், காரில் சாய்ந்து டீ குடித்திருந்தான்.</span></p>
<p data-p-id="37b7716e4c6c8f6f5ecd78de80a26740"><span style="font-size: 14pt">  தனக்காக தன்னை தேடி வந்துவிட்டானா, என்று ஆர்வமாய் வர, "ஹலோ டாக்டர் மேடம்." என்று தான் வரவேற்றான்.</span><br /><span style="font-size: 14pt"> </span><br /><span style="font-size: 14pt">  "இங்க வருவதா சொல்லவேயில்லை." என்று கூறி செழியனையே பார்த்தாள்.</span></p>
<p data-p-id="2ff89a7b6650ae43780ea16c7c7e96d1"><span style="font-size: 14pt">நாகர்கோவிலில் பார்த்தை விட பளிச்சென்ற புன்னகையில் கவர்ந்தான்.</span></p>
<p data-p-id="1ebe7a1f05eace1a185927f43a41eba1"><span style="font-size: 14pt">  "உங்களிடம் ஏன் சொல்லணும். இங்க என் கிளாஸ்மேட் ஒருத்தனை பார்க்க வந்தேன்" என்று பொய் உரைத்தான்.</span></p>
<p data-p-id="289dc67aa043a711b732a0c29d2857fa"><span style="font-size: 14pt">  'ஓ என்னை பார்க்க வரலையா' என்று வர்ஷினி துவண்டு பிறகு இல்லை இவர் என்னை தான் பார்க்க வந்திருப்பார்' என்று புரிந்துக்கொண்டாள்.</span></p>
<p data-p-id="11686e97c2b48e6e703b43e3d2f16f55"><span style="font-size: 14pt">   "பிரெண்டை பார்த்தாச்சா" என்றதும், "யா... பார்த்து பேசிட்டேன்." என்று கூறியவன் ''உட்காரு.. நான் டிராப் பண்ணறேன்" என்று காரை சுட்டிக்காட்டினான்.</span><br /><span style="font-size: 14pt"> </span><br /><span style="font-size: 14pt">   மறுக்காமல் வர்ஷினி காரில் ஏறினாள்.</span></p>
<p data-p-id="3b06cdb77000f3a5d3a462d8951433e6"><span style="font-size: 14pt">அவனாகவே 'அன்னைக்கு ஹோட்டல்ல இருந்தப்ப அப்பா கால் பண்ணினார். அப்பாவிடம் பேசாம தவிர்க்க மாட்டேன். அப்பா போன்ல அம்மாவுக்கு உடம்பு முடியலை ஹாஸ்பிட்டல்ல சேர்த்துயிருக்கேன். நீ சென்னை போயிட்டியானு கேட்டார். இல்லைன்னு சொல்லவும் என்னை அம்மாவை பார்க்க கூப்பிட்டார். முதல்ல மனசு போகக்கூடாது பேசக்கூடாதுன்னு பிடிவாதம் பிடிச்சது. ஆனா நீ சொன்னியே... ஒருத்தர் இருக்கும் போது அவங்க அருமை தெரியாதுன்னு. அந்த பர்டிகுலர் காரணத்தால் போனேன்." என்று சற்று நிறுத்தினான்.</span></p>
<p data-p-id="473c84de2913eedb77e1904af5a050ef"><span style="font-size: 14pt">  "தப்பில்லை." என்று கூறினாள் வர்ஷினி.</span></p>
<p data-p-id="ad514038a329096cd7f3a3c8d76f9906"><span style="font-size: 14pt">"ம்ம்ம் அங்க போனா எலும்பும் தோலுமா இருந்தாங்க. உடம்புல ரத்தமே இல்லை. வெளிறி போய் ஒல்லியா, அது அவங்களே கிடையாது என்ற ரீதியில் இருந்தாங்க. பார்க்கவே கஷ்டமா இருந்தது.</span><br /><span style="font-size: 14pt">   இதுல ஹாஸ்பிடல் அப்சர்வேஷன்ல நாலு நாள் இருக்க சொன்னதும், அப்பா என் கூட இருய்யானு கெஞ்ச,  நானும் இருந்தேன். உனக்கு ஒரு மெஸேஜ் கூட அனுப்பலை. அவங்களோட இருக்கறப்ப அனுப்ப மனசு வரலை." என்றான்.‌</span></p>
<p data-p-id="12f7d68a35a512bc3587a4d24dadee8f"><span style="font-size: 14pt">  "இட்ஸ் ஓகே.. புரியுது." என்றாள்‌.</span></p>
<p data-p-id="be951aaf88c6117aed52b934f59bd2d5"><span style="font-size: 14pt">  இங்க வந்ததும் அதுவும் ஹாஸ்பிடல் வந்ததும் தான் உனக்கு மெஸேஜ் பண்ணினேன்." என்றவன் மெதுவாக கார் டிராபிக்கில் நின்றதும் "அம்மா அப்பா கூட வந்திருக்காங்க." என்றான்.</span></p>
<p data-p-id="6ea1968f8e96f0606b7cf5d572d09486"><span style="font-size: 14pt">  வர்ஷினி லேசான அதிர்ச்சியோடு சமாளித்தாள்.</span></p>
<p data-p-id="7ef0c38dce4fe062b0b8011c912982fa"><span style="font-size: 14pt">மீண்டும் தன்னோடு பேசுவது அவர்களுக்கு தெரிந்தால் பகரச்சனை கிளம்பும் என்று அவளுகாகு தெளிவானது.</span></p>
<p data-p-id="2c67220c285c88c00d1f8464c71b04c3"><span style="font-size: 14pt">வர்ஷினி எதுவும் பேசாதது செழியன் அவன் பாட்டிற்கு காரை இயக்கினான்.</span></p>
<p data-p-id="fa9a6c21ca87f966cdec40b8ae956f71"><span style="font-size: 14pt">  "என் வீட்டுக்கு வலது பக்கம் போகணும்" என்று கூறினாள்.</span><br /><br /><span style="font-size: 14pt">  செழியனோ "நான் உன்னோட பேசணும்" என்று தெரிவித்தான்.</span></p>
<p data-p-id="20a491be75fc1c7936de48156e2b4c6c"><span style="font-size: 14pt">  ஆக இன்று செழியன் ஏதோ காரணத்தோடு தன்னை காண வந்தது தாமதமாக உரைத்தது.</span></p>
<p data-p-id="aee57a910ebe9e30497d1ac771d8809f"><span style="font-size: 14pt">   அவனாக பேசட்டும் என்று காத்திருந்தாள். ஆனால் செழியன் எதுவும் பேசாமல் அவனது வீட்டுக்கு அழைத்து சென்றான்.</span></p>
<p data-p-id="096cfa55e4579550e3c95a3d54952763"><span style="font-size: 14pt">"செழியன் உங்க வீட்டுக்கா. நோ வே.. நான் எங்க வீட்டுக்கு போகணும்." என்று பயந்தாள். சுகந்தியின் விஸ்வரூபத்தை தான் கல்யாண மண்டபத்தில் கண்டது இன்னமும் கண் முன் தாண்டவமாடியது.</span></p>
<p data-p-id="5f1d20899400af2f1684424919f6d65c"><span style="font-size: 14pt">''உள்ளவா" என்று அழைத்தான் செழியன்.</span></p>
<p data-p-id="a2e3ec3264cd41469037747a756e2809"><span style="font-size: 14pt">   கையை பிசைந்து அரை மனதாய் அவனுடன் வந்தாள்.</span></p>
<p data-p-id="f22910b569f936a6d846ef1a558ff03b"><span style="font-size: 14pt">  ஹாலில் தான் கிருபானந்தன் அமர்ந்திருந்தார்.</span></p>
<p data-p-id="14a52167a6eccf785813d1be9d08d93b"><span style="font-size: 14pt">  "வாப்பா.. வாம்மா.. உன்னை அழைச்சிட்டு வருவதா சொல்லவேயில்லை" என்று அவசரமாய் அவள் அமர இருக்கையை முன் நகர்த்தினார்.‌</span></p>
<p data-p-id="d56ed58d1bfe6365e7ac568627879449"><span style="font-size: 14pt">  வர்ஷினிக்கு தர்மசங்கடமாய் இருந்தது. மாமா என்று உறவு முறை சொல்லி அழைப்பதா? இல்லை அங்கிள் என்று பட்டணத்தில் கூப்பிடுவது போல கூப்பிடுவதா? சார் எதை கூறி அழைப்பது.</span></p>
<p data-p-id="0a783c7a415880c5fd2f07494b6771c2"><span style="font-size: 14pt">சுகந்தியோ "யாருங்க பையன் வந்துட்டானா?'' என்று குரல் கொடுத்தார். ஆவலாக ஹாலுக்கு நடந்தும் வந்தார்.</span></p>
<p data-p-id="967d7b8b7bbc098163a83b037b2ca980"><span style="font-size: 14pt">  "உட்காரு வர்ஷு" என்று செழியன் கூற, சுகந்தி குரலில் பயந்தாள், அடுத்து சுகந்தியை கண்டு ஆடிப்போனாள்.</span></p>
<p data-p-id="80a888ed0279bb2cd379802d1c2c44e3"><span style="font-size: 14pt">  அந்தளவு ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு தேய்ந்து இருந்தார்.‌</span></p>
<p data-p-id="18d28607ce1b5425006d8e58abd063c8"><span style="font-size: 14pt">வர்ஷினியை கண்டதும் "அம்மாடி... வந்துட்டியா? என்னை மன்னிச்சிடு" என்று தான் முதலில் உதிர்த்தார்.</span></p>
<p data-p-id="8aa02213c380a56d0b9effdcc9ae1acb"><span style="font-size: 14pt">வர்ஷினி செழியனை காண, "சில விஷயம் மனதை செல்லா அரிக்கும் வர்ஷு. அந்த நேரம் ஆளே மாறிடுவாங்க. அன்னைக்கு இவங்க செய்த தப்புக்கு நீ என்னிடம் மன்னித்ததா பேசின. பட் அவங்க நேர்ல மன்னிப்பு கேட்டா தான் சரியா வரும்.</span></p>
<p data-p-id="638cbefbd814c74d16f7b3e2a8649165"><span style="font-size: 14pt">  தப்பு செய்தவங்க தண்டனை அனுபவிப்பது நியாயம். அதோட தப்பு செய்தவங்க சம்பந்தப்பட்டவங்களிடம் மன்னிப்பு கேட்கறதும் என்னை பொறுத்தவரை நியாயம் தான். சாரி... உன்னிடம் அனுமதி கூட கேட்காம இங்க கூட்டிட்டு வந்துட்டேன். ஆனா எனக்கு வேற வழி தெரியலை‌" என்றான்.‌</span></p>
<p data-p-id="ce0f9d8d3bf6a40478ece47ccc910a9e"><span style="font-size: 14pt">  காலில் விழ வந்த சுகந்தியை பிடித்து நிறுத்தி உட்கார வைத்த வர்ஷினியோ, "ஏன் இப்படி... அய்யோ என்னை கூனிகுறுக வைக்காதிங்க‌" என்றாள்.</span></p>
<p data-p-id="e8b8507f4c4fcf2eeb18c18a60ad1884"><span style="font-size: 14pt">கண்ணீர் தாரை தாரையாக நடந்தவையை எல்லாம் அசைப்போட வைத்தது.</span></p>
<p data-p-id="e73d76e8d33af86bac1bb3b98d0c660c"><span style="font-size: 14pt">  "உங்க மேல தப்பில்லைம்மா.. அப்பா நிறைய தடவை சொன்னார். படிப்பு பத்தி தெரிய வந்ததும், மாப்பிள்ளை பேசியதை கேட்டு அமைதியா விட்டுடேன்‌. என்னயிருந்தாலும் பெத்தவங்க பக்கம் நின்று யோசித்து அவங்களிடமும் சொல்லியிருக்கணும்னு அடிக்கடி சொல்வார்." என்று தந்தை தன்னிடம் முன்பு பேசியதை தெரிவித்தாள்.</span></p>
<p data-p-id="2cd67200b761b2e37d9fb63cbbb107db"><span style="font-size: 14pt">"நல்ல மனுஷன்மா அவரு. அவங்களை எல்லாம் நிற்க வச்சி அவமானப்படுத்தி, உங்க அம்மா இறப்புக்கு நானும் ஒரு காரணம் ஆகிட்டேன் தாயி. என்னை மன்னிச்சிடு." என்று சுகந்தி மீண்டும் அழுதார்.</span></p>
<p data-p-id="6cc06e961cfe30fdb0b585846a084e72"><span style="font-size: 14pt">   "இல்லை... அம்மாவுக்கு முன்னவே நூரையீரல்ல சுவாசப்பிரச்சனை இருந்திருக்கு. எங்களுக்கு தெரியப்படுத்தாம விட்டிருக்காங்க‌. சொல்லப்போனா அவங்களுக்கு அதோட சீரியஸ்னஸ் தெரியலை.</span><br /><span style="font-size: 14pt">அன்னைக்கு நடந்த கலவரத்தில் அது தீவிரமா ஆகியிருக்கு. சுவாசிக்க கஷ்டப்பட்டு இறந்துட்டாங்க. உங்களால இல்லை. நீங்க மனசு உடைந்து போகாதிங்க" என்று தேற்ற முயன்றாள்.</span></p>
<p data-p-id="7e32f53489ba99664a98d9277d32a380"><span style="font-size: 14pt">"அந்த கலவரத்தை ஏற்படுத்தியது நான் தானே. நான் தானே." என்று ஒப்பாரி வைக்க, "அச்சோ.. முதல்ல இப்படி பிஹேவ் பண்ணாதிங்க. பயமா இருக்கு. என்னால ஏதாவது நடந்தா... என்னால தாங்க முடியாது. இவர் முகத்துல எப்படி முழிப்பேன். உங்களுக்கு வேற இப்ப தான் உடம்புக்கு முடியலைன்னு அவர் சொன்னார். நிதானமா பேசுங்க." என்று மார்பில் அடித்து அழுத சுகந்தியை சாந்தப்படுத்த முயன்றாள் வர்ஷினி.</span></p>
<p data-p-id="4bdac156b2df8ac4ccee7eca6f7ee8e5"><span style="font-size: 14pt">செழியன் இருவரையும் பேசவிட்டு வேடிக்கை பார்த்தான். அம்மா மனதில் உள்ள பாரம் களையட்டும்.</span></p>
<p data-p-id="bed611a53569f7e23d72104d43c19f2f"><span style="font-size: 14pt">முக்கியமாக வர்ஷினி மனதை திறப்பாளா என்று ஆவலாக நின்றான். கிருபானந்தன் தண்ணீரை கொண்டு வந்து மனைவியிடமும், வர்ஷினிக்கும் கொடுத்தார்.</span></p>
<p data-p-id="63d0a6a2cc1ce04395c495bd566107af"><span style="font-size: 14pt">இருவருமே வாங்கி பருகி சமநிலை அடைய நேரம் எடுத்தனர்.</span><br /><br /><span style="font-size: 14pt">   சுகந்தி அவசரவசரமாய் நீரை பருகி, செழியனின் அறைக்கு வர்ஷினியை அழைத்து சென்றார்.‌</span></p>
<p data-p-id="4009dddd9875955f5d645c11566b5610"><span style="font-size: 14pt">அங்கே ரிசப்ஷனில் செழியன் வர்ஷினி எடுத்த புகைப்படம் அவனது பெட்ரூமில் மாட்டப்பட்டிருந்தது.</span><br /><span style="font-size: 14pt"> </span><br /><span style="font-size: 14pt">  "பாரும்மா... நீயே பாரு.. அவன் உன்னையே நினைச்சிட்டு காலம் முழுக்க வாழறான். என் பையனுக்கு வாழ்க்கை கொடு தாயி.  இந்த இடைப்பட்ட காலத்தில் எத்தனையோ பொண்ணுங்க போட்டோவை , டாக்டர் பிள்ளையா காட்டிட்டேன். எனக்கு ம் வர்ஷினிக்கும் கல்யாணமாகிடுச்சுனு போட்டோ கூட பார்க்காம தவிர்த்துட்டான்.</span></p>
<p data-p-id="8403a78729b3e63a00d195cba299db79"><span style="font-size: 14pt">  பத்து வருஷம்... நான் தண்டனை அனுபவிப்பது சரி. எந்த தப்பும் செய்யாம நீயும் என் மகனும் ஏன்மா தண்டனை அனுபவிக்கணும்?</span></p>
<p data-p-id="30565cc6c260a8750b2300d8c1d304c1"><span style="font-size: 14pt">   எல்லாரையும் போல கல்யாணம் செய்து குடும்பமா வாழ்ந்திருந்தா என் பையனுக்கு ஒரு குழந்தையாவது பிறந்திருக்கும். இப்படி இரண்டு பேரோட வாழ்வையும் அழிச்ச பாவிம்மா நான்" என்று கூற, வர்ஷினி கண்களில் தாரை தாரையாக கண்ணீர் மடை திறந்தது போல வெளிவந்தது.</span><br /><br /><span style="font-size: 14pt">  ரிசப்ஷனில் எடுத்த புகைப்படத்தை வைத்து, இன்னமும் நான் எங்கே இருக்கின்றேன், எப்படி இருக்கின்றேன் என்று கூட தெரியாமல் என் நினைவோடு வாழ்கின்றாரா! என்று ஸ்தம்பித்து பார்த்தாள்.</span></p>
<p data-p-id="cd27f93596473061c1096b23ce588442"><span style="font-size: 14pt">  செழியனும் கண் கலங்க கண்ணீரை அடக்க, கிருபானந்தனோ இனி மகனும் அந்த பொண்ணும் பேசி முடிவெடுக்கட்டும் என்று சுகந்தியின் கைப்பிடித்து, "நீ வா. அவங்க பேசட்டும்" என்று அழைத்து சென்றார். கதவையும் சாற்றி தனிமை தந்தார்.</span></p>
<p data-p-id="fdc1d64b9933675cc5bdec5df7461566"><span style="font-size: 14pt">சுகந்தியும் கிருபானந்தனும் செழியனின் வாழ்வு இனிமேல் மலர்ந்திடும் என்று அகமகிழ்ந்தனர்.</span></p>
<p data-p-id="496f95c3feef61432827aa4cfe34bbea"><span style="font-size: 14pt">வர்ஷினி வாய் விட்டு கதறி போட்டோவை கையில் வைத்து அழுது அப்படியே சுவரோடு சரிந்து அமர்ந்தாள்.</span></p>
<p data-p-id="e532b8a4b9f8c7bc0ff47d88725c98d6"><span style="font-size: 14pt">அவளது அழுகை செழியனுக்குள் வலியை கொடுக்க, அவனுமே அவளது அருகே அமர்ந்து, "ஏய்.. வர்ஷு.. வர்ஷு.." என்று தாடை பிடிக்க, அவன் நெஞ்சில் சாய்ந்து தேம்ப ஆரம்பித்தாள்.</span></p>
<p data-p-id="6063072b5834af703afc5b5d6cdaff06"><span style="font-size: 14pt">   செழியனோ அவளை அணைத்துக்கொண்டு, அவனுமே கண்ணீரை சுரக்கவிட்டான். கொஞ்சம் கொஞ்சமாக தன்னை நிதானப்படுத்தி கண்ணீரை துடைத்து, "வர்ஷு... நீயும் தானே என்னையே நினைச்சிட்டு வாழற. நாம பிரியலைம்மா. நினைவால் வாழ்ந்துட்டு தான் இருக்கேன்." என்று கூற, "அன்னைக்கு அம்மா இறந்த அன்னைக்கு நீங்க வந்திங்க. அம்மா இறந்த துக்கத்தில் அந்த நேரம் கோபத்தில் என் முகத்தில முழிக்காத போடானு சொல்லிட்டேன். என்னை மன்னிச்சிடுங்க. என்னை போல தான் நீங்களும் காதல் வலியோட வாழ்விங்கன்னு புரியாம போயிடுச்சு" என்று அழுகையோடு பேசினாள்.</span></p>
<p data-p-id="71b1a6e0f8bf25af919592dcb8ff693a"><span style="font-size: 14pt">   "புரியுதும்மா... நான் பொறுமையா வந்து பேச நினைச்சப்ப மாமா வீடு வாசல் நிலம் வித்துட்டதாக பக்கத்துல சொன்னாங்க. உன்னை அதுக்கு பிறகு சந்திக்கற வாய்ப்பு அமையலை." என்றான்.</span></p>
<p data-p-id="f9787070a3cec9f5345ccca4bf4c5bee"><span style="font-size: 14pt">   "எனக்கும் அப்ப இருந்த கோபத்துல உங்களை தேட தோணலை‌. அப்பா இறந்தப்பின்ன, உங்களை தேட முயன்றேன். நீங்க வேற இடத்துல வேலைக்கு மாற்றல் ஆனதால சட்டுனு கண்டுபிடிக்க முடியலை." என்றாள்.</span></p>
<p data-p-id="31f25f2163f5b8187fe8f14447cf3226"><span style="font-size: 14pt">   "இட்ஸ் ஓகே.. இட்ஸ் ஓகே.." என்று அணைத்து பிறை நெற்றியில்  முத்தமிட்டான்.</span></p>
<p data-p-id="1ac4ce71232bc2b1539c77874b8688c9"><span style="font-size: 14pt">  "கல்யாணம் பண்ணிக்கலாமா?" என்று எதிர்பார்ப்புடன் கேட்டான்.</span></p>
<p data-p-id="63b64987751f66c1cd8c0b8ff0000569"><span style="font-size: 14pt">  வர்ஷினியோ "உங்கம்மா" என்று சொல்ல தயங்க, "அவங்க தான் என்னோட உன்னை தனியா விட்டுட்டு அப்பாவோட வெளியே போயிருக்காங்க. அவங்களுக்கு இந்த மருமக பையனை ஏத்துக்கிட்டா போதும்னு தவம் இருக்காங்க.. உன் விருப்பத்தை சொல்லு.." என  அவளது வாய்மொழி சம்மதம் வேண்டி தவம் கிடந்தான்.</span></p>
<p data-p-id="143f498aaf29e73c973cc1d8845e4716"><span style="font-size: 14pt">  வர்ஷினி மட்டும் என்ன அவனது *நின் பார்வை தவமல்லவா!* என்று செழியனின் மனையாளாக தவமிருக்கின்றாள்.</span></p>
<p data-p-id="81747483673c4f02047b7dd114950fa9"><span style="font-size: 14pt">  விழியில் உறுதியாக அவன் கரம் பற்றும் நாளுக்கு காத்திருப்பதாக தெரிவிக்க இருவரும் மனம் ஒன்றிய காதலர்களாக ரிசப்ஷனில் எடுத்த புகைப்படத்தை தடவி சுவரில் மாட்டி விட்டு அணைத்துக் கொண்டனர்.‌</span></p>
<p data-p-id="4bcd9a321e5a725cd7eab2f1bc382cde"><span style="font-size: 14pt">இருவரின் தவ வாழ்வு இனி முடிவுப்பெற்று, திருமண வாழ்வு மலரும். </span></p>
<p data-p-id="424c4fdf8c464deffe553ff6cd152528"><span style="font-size: 14pt">-சுபம்.</span><br /><span style="font-size: 14pt">பிரவீணா தங்கராஜ்.</span><br /><span style="font-size: 14pt"> </span></p>
<p data-p-id="5907651be2723509000df9e6551be716"><span style="font-size: 14pt">‌Kindly Register &amp; Login to Read </span></p>
<p data-p-id="5907651be2723509000df9e6551be716"><span style="font-size: 14pt">And Share ur Comments Thank U</span></p>]]></content:encoded>
						                            <category domain="https://onlinetamilnovels.com/community/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%88-%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%ae%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%b5%e0%ae%be-praveena-thangaraj/">நின் பார்வை தவமல்லவா!- Praveena Thangaraj</category>                        <dc:creator>Praveena Thangaraj</dc:creator>
                        <guid isPermaLink="true">https://onlinetamilnovels.com/community/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%88-%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%ae%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%b5%e0%ae%be-praveena-thangaraj/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%88-%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%ae%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%b5%e0%ae%be-10-%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f/</guid>
                    </item>
				                    <item>
                        <title>நின் பார்வை தவமல்லவா!-9</title>
                        <link>https://onlinetamilnovels.com/community/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%88-%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%ae%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%b5%e0%ae%be-praveena-thangaraj/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%88-%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%ae%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%b5%e0%ae%be-6/</link>
                        <pubDate>Fri, 03 Jul 2026 08:27:31 +0000</pubDate>
                        <description><![CDATA[அத்தியாயம்-9
  இந்நேரம் வர்ஷினி இரயிலில் ஏறியிருப்பாள். சென்னையில் ஒரகடம் என்னும் இடத்தில் இருப்பதாக அறிந்துக்கொண்டான். அங்கே சென்றால் அவளை மீண்டும் சந்திக்க வேண்டும். ஆனால் எந்த ஒரகடம். செ...]]></description>
                        <content:encoded><![CDATA[<p data-p-id="fec3273b0f290655e9f23049b25e7f17"><span style="font-size: 14pt"><b>அத்தியாயம்-9</b></span></p>
<p data-p-id="687ef321be53dcf2ad12f73f901d2566"><span style="font-size: 14pt">  இந்நேரம் வர்ஷினி இரயிலில் ஏறியிருப்பாள். சென்னையில் ஒரகடம் என்னும் இடத்தில் இருப்பதாக அறிந்துக்கொண்டான். அங்கே சென்றால் அவளை மீண்டும் சந்திக்க வேண்டும். ஆனால் எந்த ஒரகடம். சென்னையில் இரண்டு இடத்தில் உள்ளது. எதுவாயினும் அலைப்பேசியில் கேட்டுக் கொள்வோம் என்ற மகிழ்ச்சி. அதோடு மருத்துவமனை பெயர் போட்டு தேடலாம். </span><br /><span style="font-size: 14pt">   நீண்ட நாளுக்கு பிறகு மனதில் சாந்தமடைவது போல உணர, தன் அன்னை சுகந்தியை மன்னித்து பேச சொல்கின்றாளே வர்ஷினி' என்று வியந்தான். ஏனெனில் அவளது நலனை விட இவன் நலனுக்காக யோசிக்கின்றாளே.</span></p>
<p data-p-id="8f25539be26cb97ab891fca8ef375fd3"><span style="font-size: 14pt">  அதே நேரம் கிருபானந்தன் போனில் "சென்னை போயிட்டியா ஐயா?" என்று கேட்டார். இங்கு வந்ததை அவரிடம் மட்டும் தெரிவித்திருந்தான். அதுகூட மாநாடு முடிந்து கிளம்பிடுவதாக உரைத்திருந்தான்.</span></p>
<p data-p-id="7c15d71eae49c8ec190d81e54213f768"><span style="font-size: 14pt">  "அதுவந்து..‌. பிளைட் கேன்சல் பண்ணிட்டேன்." என்றான்.</span></p>
<p data-p-id="32084b469ef07231c6e20d2e18f72cb8"><span style="font-size: 14pt">ஏன் என்ற கேள்வியை தாண்டி, "இங்க உங்கம்மாவிடம் நீ நம்மூருக்கு வந்துட்டு போனதை சொன்னேன்.</span><br /><span style="font-size: 14pt">என் ராசா வந்ததை ஏன் சொல்லலை. அவன் வரலைன்னா என்ன? நான் போய் பார்த்திருப்பேனேனு ஒரே புலம்பல். மதியத்துலயிருந்து சோறு தண்ணி தொடாம இருந்தா, கொஞ்சம் முன்ன மயங்கி விழுந்துட்டா. ஹாஸ்பத்திரியில சேர்த்திருக்கு." என்று கூறினார்.</span></p>
<p data-p-id="e174ee5e7dd5cd4e56c9a6822a6c369f"><span style="font-size: 14pt">  என்ன தான் அன்னையால் தன் திருமணம் தடைப்பட்டாலும், அன்னையின் உடல்நிலை குறைவு என்றதும் துடிக்காமல் இருக்க முடியுமா "எந்த ஹாஸ்பிடல்ல சேர்த்து இருக்கிங்க?" என்று விவரம் கேட்டான்.</span><br /><br /><span style="font-size: 14pt">  "டவுன்ல தான்‌. நீ சென்னை போக பிளைட் கேன்சல் பண்ணியதா சொல்லற. அப்ப மதியம் சென்னை போனியாப்பா?" என்று மகன் இங்கிருந்து அங்கே பத்திரமாக சென்றானா என்று கிருபானந்தன் அக்கறையில் கேட்டார்‌.</span></p>
<p data-p-id="e0a7c27e9388cef99222c111abefc8ba"><span style="font-size: 14pt">  "இல்லை... நான் இன்னும் நம்மூர்ல தான் இருக்கேன்." என்று அவசரப்பட்டு கூறினான். </span></p>
<p data-p-id="bb5400ea835b316882b73f067a3a427e"><span style="font-size: 14pt">  "ஐயா செழியா..‌‌. ஆஸ்பத்திரிக்கு ஒரெட்டு வர்றியா கண்ணா.'' என்று கேட்டுவிட்டு செழியன் திட்டுவானோ என்று பயந்து, "தப்பு தான் இப்படி கேட்டது. மனசு கேட்கலை தம்பி. தனியாளா இங்க உன் அம்மையோட இருக்கறது ஒரு மாதிரி இருக்கு.  அதனால் அப்படி கேட்டுட்டேன். அதுக்காக என்னிடம் கோச்சிக்கிட்டு பேசாம விட்டுடாதே" என்று கெஞ்சினார்.</span></p>
<p data-p-id="48638e9c67fe73b1e2298aef3e5dc63f"><span style="font-size: 14pt">  செழியன் மெதுவாக போனை துண்டித்து இரவெல்லாம் சிந்தித்தான். செய்த தவறுக்கு இன்னும் தண்டனை கொடுப்பதா? அல்லது தவறு செய்தவர் அன்னை தானே என்று மன்னித்திடலாமா? வர்ஷினியை கூட மன்னித்து பேசுங்கள் என்றாளே.' அதனால் அதிகாலை ஆஸ்பத்திரிக்கு வந்தான்‌.</span><br /><br /><span style="font-size: 14pt">  பேஷன்ட் பெயரை கூறி, சுகந்தி இருந்த வார்ட் வரை வந்துவிட்டு கால்கள் வேரூன்றி நின்றான். தந்தை செழியனை கண்டு "ஐயா... வந்துட்டியா" என்று கட்டி பிடித்து அணைக்க, உள்ளத்தில் தோன்றிய உணர்ச்சியை அடக்கி, மெதுமெதுவாக, அன்னை இருந்த அறைக்குள் நுழைந்தான்.</span></p>
<p data-p-id="5ab82c2325bacf3df26e7c344b0205b4"><span style="font-size: 14pt">   "ஐயா செழியா..." என்று சுகந்தி கையில் மாட்டியிருந்த ஊசியால் மருந்தேறியதை பிச்சி போட்டு மகனை கண்டு இறங்கி தடுமாறி விழ, அவர்களை தாங்கி பிடித்தான்.</span><br /><br /><span style="font-size: 14pt">  "என்ன பண்ணறிங்க நீங்க, முதல்ல பெட்ல படுங்க" என்று அதட்டிவிட்டு கையில் மருந்தேறும் சிரேன்ஜை மீண்டும் இணைத்தான். லேசாக ரத்தம் வெளிவந்திருந்தது. அதை பஞ்சுக்கொண்டு துடைத்தான்.</span></p>
<p data-p-id="cffcc84c5bbc791df7f5fac919aa4aa6"><span style="font-size: 14pt">  ஒரு மருத்துவனாக முதலில் அன்னையை கவனித்தான். "செழியா... செழியா மன்னிச்சிடுயா.. என்னை மன்னிச்சிடுயா. இந்த கூறுகெட்டவளை மன்னிச்சிடுயா. என்னிடம் பேசாம கொள்ளாம போகாதய்யா. ஒருவாய் சோறு இறங்க மாட்டேங்குது. நிம்மதியா தூக்கம் வரமாட்டேங்குது.</span><br /><span style="font-size: 14pt">  தப்பு தான்யா... நான் செய்தது தப்புதான்யா." என்று கதறினார். நீண்ட காலமாக மகனோடு பேச்சு வார்த்தையில்லாததால் படபடப்பாக பேசினார்.</span></p>
<p data-p-id="d4f9fa9822a51be72e7dbeec991d308e"><span style="font-size: 14pt">  "உஸ்ஸஸ... கொஞ்சம் அமைதியா இருங்க." என்று கூறியவன், அவர்களை நிதானப்படுத்தி படுக்க கூறினான்.</span></p>
<p data-p-id="9f06d4e211fcbb9c8b803ba726663242"><span style="font-size: 14pt">   அதற்குள் கிருபானந்தனும் ''ஏதாவது செய்து அப்படியே போயிடபோறன். சும்மா இரு சுகந்தி" என்று சத்தம் போட்டார்.</span></p>
<p data-p-id="835df23de3244b2149ac7d9adfed4520"><span style="font-size: 14pt">சுகந்தி வாயில் கையை வைத்து, 'பேச மாட்டேன்.' என்று தெரிவித்து, மகனை கண்குளிர பார்வையிட்டார். முன்பை விட தலையில் லேசாக தென்பட்ட நரைமுடியை கண்டு மகனின் வயதை எண்ணி உள்ளுக்குள் அழுதார்.</span></p>
<p data-p-id="1aacce88655ab8cac96e7322cc457d0c"><span style="font-size: 14pt">  செழியன் சலனமின்றி, அன்னையின் ரிப்போர்டை பார்வையிட்டான்.</span></p>
<p data-p-id="cddb601c19b8f9f090735e93bd8f4f8c"><span style="font-size: 14pt">   நீண்ட வருடமாக பார்ப்பதையே தவிர்த்ததால் அவனுமே பேசுவதற்கும் தயங்கினான்.‌ இயல்பாக உரையாட அவனால் முடியவில்லை. அவ்வறையில் அங்கே பணிப்புரியும் டாக்டர் வரவும், அவரோடு அன்னை நலனை பற்றி விசாரித்து பேசினான்.</span></p>
<p data-p-id="21ba4627b4d601578b7ef7964f3f3bdb"><span style="font-size: 14pt">   சற்று நேரம் நலனை பற்றி விவரித்தவர், டாக்டர் என்றதும் தொழில்பற்றி பேச்சு வர, இங்கவொரு செமினார் அட்டன் பண்ண வந்தேன்.' என்று கூறினான்.</span></p>
<p data-p-id="58a4db40a422362338327baa844ca72f"><span style="font-size: 14pt">இவ்வாறு பேசிட, "ஏன்ப்பா... பிளைட் கேன்சல் ஆகிடுச்சு?" என்று கிருபானந்தன் கேட்க, பேச்சு வாக்கில் செழியனோ, "வர்ஷூவை பார்த்தேன்ப்பா... அன்னைக்கு அவங்க அம்மா இறந்த நாளுக்கு பிறகு அவளை நேத்து தான் பார்த்தேன். அவளிடம் பேசணும்னு" என்று நெஞ்சில் கைவைத்து பெருமூச்சை விட்டான்.</span></p>
<p data-p-id="601548d34ada6fe167ca21b0352661ea"><span style="font-size: 14pt">  கிருபானந்தன் புரிந்துக்கொண்டார், சுகந்தியோ "அந்த... அந்த பொண்ணு... இப்ப இங்க இருக்காளா? நான் நான் அவளை பார்க்கலாமா? அவளிடம் மன்னிப்பு கேட்கணும். கல்யாணம் கேன்சல் ஆன ஒரு வாரத்துலயே அவங்க அம்மா இறந்துட்டாங்கல்ல, அதுக்கும் நான் தான் காரணம். கல்யாணத்தை நிறுத்தியதுக்கும், அவங்க அம்மா இறந்ததுக்கும் நான் தான் காரணம்" என்று தலையில் தலையில் அடித்து அழுதார்.</span></p>
<p data-p-id="cd5673180361225749f98b7a4cb9232b"><span style="font-size: 14pt">  "கொஞ்சம் இந்த மாதிரி செய்யாம அமைதியா இருக்கிங்களா" என்று மீண்டும் ஊசி சரியாக உள்ளதா என்று பார்வையிட்டான்.</span></p>
<p data-p-id="6e4b2ec21a83402aaf1aa53cc0524607"><span style="font-size: 14pt">   இங்கு வந்ததும் அன்னையை கண்டவன் ஆடிப்போனான். முன்பு குண்டாக இருந்தவர், இன்று ஒல்லியாக காட்சியளித்து, ஹீமோகுளோபின் கூட குறைவாக உள்ளதை ரிப்போர்டில் பார்த்ததால் அன்னையின்  உடல்நிலைக்கு தானும் ஒரு காரணம் என்று புரிந்தது. இன்னமும் இயல்பாக பேசாவிட்டாலும் முகதிருப்புதலை தவிர்த்திருந்தான்.</span></p>
<p data-p-id="440143b00f62e8aff01a994f7b4449b2"><span style="font-size: 14pt">  "அவ இப்ப இங்க இல்லை. நேத்தே டிரையின் ஏறி போயிட்டா. பொத்தம் பொதுவா பேசினோம். உங்களிடம் பேசாததும், சொந்த ஊருக்கு வராததும் பேச்சு வாக்கில் சொன்னேன். அவ தான் முதல்ல உங்க அம்மாவிடம் பேசுங்க. இருக்கும் போது அம்மா அருமை தெரியாது. இல்லாத பொழுது நம்ம மனசு ஏங்கும்னு சொன்னா. அவ போனதும் யோசிச்சிட்டு இருந்தப்ப தான் அப்பா கால் பண்ணினார்.</span><br /><span style="font-size: 14pt">  அந்த நேரம் உடனே வர முடியலை. காலையில் இங்க வந்துட்டேன்.</span></p>
<p data-p-id="89ad22995e130f3643eb4af658570029"><span style="font-size: 14pt">   அவ ஒரகடத்துல தங்கி அங்கவொரு ஹாஸ்பிடல்ல வேலை செய்வதா தெரிந்துக் கொண்டேன். அதனால என்ன யூஸ்" என்றவன் மனவருத்தம் கொள்வதை சுகந்தி கண்டார்.</span></p>
<p data-p-id="b0d621a35922bf02cfca868724cb4269"><span style="font-size: 14pt">  மகனின் தவ வாழ்க்கையை தான் இத்தனை காலம் பார்த்துவிட்டாரே. எந்த பொண்ணை கல்யாணம் செய்துக்கொள்ள கிருபானந்தனிடம் போட்டோ கொடுத்து பேச, போட்டோ பார்க்காமலேயே செழியன் மறுத்துவிடுவதாக உரைத்தாரே.</span></p>
<p data-p-id="77ea6131846e6e4c927c21bdbae478d2"><span style="font-size: 14pt">  கல்யாணம் என்றால் இனி நீங்களும் இங்க வராதிங்கப்பா.' என்று முடிவாக உரைத்துவிட்டு அதை போலவே சாமியாராக வாழ்கின்றான்.</span></p>
<p data-p-id="7f70a074c9a0737d0136e5f87832b2ab"><span style="font-size: 14pt">   "ஏன் கண்ணா... செழியா... நான் வேண்டுமின்னா அந்த பொண்ணிடம் பேசவா' என்று வாய் வரை வந்துவிட்டது. ஆனால் கேட்டு திட்டு வாங்குவோமோ என்று சோர்ந்துவிட்டார்.</span></p>
<p data-p-id="7dd1f2c26bbe62d8497d42275ee5af82"><span style="font-size: 14pt">  "நான் உன்னோட வரவா ராசா'' என்று கேட்டதும், செழியனோ எதுவும் சொல்லாமல் தவிர்த்தான்.</span></p>
<p data-p-id="c8a948b9b680c02929988f3da7c4076f"><span style="font-size: 14pt">   அதோடு மேலும் இரண்டு நாள் விடுப்பு எடுத்துக்கொண்டான். அன்னையோடு மருத்துவமனையில் கூடவேயிருந்தான்.</span></p>
<p data-p-id="461673d39128c98a9ee824a41f8de524"><span style="font-size: 14pt">  அம்மாவோடு இருந்தாலும் வார்த்தைகள் எண்ணி எண்ணி பேசினான்.‌</span></p>
<p data-p-id="e57413e4dc0a7610823679373e853f73"><span style="font-size: 14pt">  வீட்டுக்கு செல்வதற்கு மறுத்துவிட்டான்.</span></p>
<p data-p-id="984caf92a056528029626f8dfa2cc753"><span style="font-size: 14pt">  சென்னை கிளம்புவதாக கூற, சுகந்தி மகனோடு செல்லலாமா என்று கிருபானந்தனிடம் கேட்க, அவருமே செழியனிடம் தயங்கி "அம்மாவும் நானும் உன்னோட வரலாமா?" என்று கேட்க, இத்தனை நாள் எப்படியோ, இன்று மறுக்க இயலாது அடுத்த நாள் விமானத்தில் கூடவே அழைத்து வந்தான்.</span></p>
<p data-p-id="ae89a3eadd287c93e830ff5f6750f5c2"><span style="font-size: 14pt">   அன்னையோடு இருக்கும் நேரம் வர்ஷினிக்கு போனில் தொடர்பு கொள்ளவில்லை. இங்கே வந்து அன்னையை பார்த்ததாக கூற அவனுக்கும் தயக்கம். அவள் சொல்லி தான் இங்கே வந்தாலும், அன்னையோடு இருக்கும் நேரம் அவளோடு பேச ஏதோ தடுத்தது.</span></p>
<p data-p-id="0ec1ce054f91adc8e854da0b20a125d5"><span style="font-size: 14pt">   அவளுமே சென்னை சேர்ந்துவிட்டதாக தகவல் கூட கூறவில்லை. மீண்டும் என்னிடம் பேச அவளுக்கு என்ன தயக்கமோ?</span></p>
<p data-p-id="968f74c24b648d66c42b1488cb4f365b"><span style="font-size: 14pt">  தயக்கங்கள் உடைந்தால் அவளிடம் பேசினால் அடுத்த கட்டம் என்ன?</span></p>
<p data-p-id="3e5b01f7f775fce04712da9d75c5fd24"><span style="font-size: 14pt">  செழியனுக்கு இதே எண்ணம் ஓடியது.</span></p>
<p data-p-id="92556c6bb1f73b0e9fd7579cf578e2a9"><span style="font-size: 14pt">   வர்ஷினிக்கோ இங்கே வந்து ஒரு வாரத்துக்கும் மேலாகியும், தன் இருப்பிடம், வேலை பார்க்கும்  மருத்துவமனை தெரிந்தும் செழியன் தன்னை சந்திக்க வரவில்லை. ஒருவேளை அவருக்கு இந்த இடைப்பட்ட காலத்தில் திருமணம் நடக்காமல் இருக்கலாம். வேறொரா காதல் மலர்ந்திருந்தால்...</span></p>
<p data-p-id="44cb8691a541f9a436d5018635cb1dc4"><span style="font-size: 14pt">வர்ஷினி தப்பும் தவறுமாய் செழியனை பற்றி நினைத்து மனம் துவண்டாள்.</span></p>
<p data-p-id="d72780e1d02c08ae448901ea87db7092"><span style="font-size: 14pt">-தொடரும்.</span></p>
<p data-p-id="d72780e1d02c08ae448901ea87db7092"><span style="font-size: 14pt">பிரவீணா தங்கராஜ் </span></p>]]></content:encoded>
						                            <category domain="https://onlinetamilnovels.com/community/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%88-%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%ae%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%b5%e0%ae%be-praveena-thangaraj/">நின் பார்வை தவமல்லவா!- Praveena Thangaraj</category>                        <dc:creator>Praveena Thangaraj</dc:creator>
                        <guid isPermaLink="true">https://onlinetamilnovels.com/community/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%88-%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%ae%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%b5%e0%ae%be-praveena-thangaraj/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%88-%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%ae%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%b5%e0%ae%be-6/</guid>
                    </item>
				                    <item>
                        <title>நின் பார்வை தவமல்லவா!-8</title>
                        <link>https://onlinetamilnovels.com/community/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%88-%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%ae%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%b5%e0%ae%be-praveena-thangaraj/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%88-%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%ae%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%b5%e0%ae%be-8/</link>
                        <pubDate>Fri, 03 Jul 2026 08:24:53 +0000</pubDate>
                        <description><![CDATA[அத்தியாயம்-8
செழியன் அன்னை தந்தையை விரட்டாத குறையாக நாகர்கோவிலில் துரத்திவிட்டான். அதிலும் சுகந்தி மீது அடக்கப்படாத சினம் துளிர்க்க, &#039;என் வர்ஷூவை மட்டும் எனக்கு அவங்க கட்டிக் கொடுக்கலை. இனி...]]></description>
                        <content:encoded><![CDATA[<p data-p-id="b17dcca89eb8de0db1a12c01658aefa2"><span style="font-size: 14pt"><b>அத்தியாயம்-8</b></span></p>
<p data-p-id="968924617f0c1214d4f342296a116b47"><span style="font-size: 14pt">செழியன் அன்னை தந்தையை விரட்டாத குறையாக நாகர்கோவிலில் துரத்திவிட்டான். அதிலும் சுகந்தி மீது அடக்கப்படாத சினம் துளிர்க்க, 'என் வர்ஷூவை மட்டும் எனக்கு அவங்க கட்டிக் கொடுக்கலை. இனி உங்களிடம் பேச மாட்டேன்" என்று திருநெல்வேலி வந்தான்.</span></p>
<p data-p-id="9a6a8ac22507106a729e592476bfd053"><span style="font-size: 14pt">  கல்யாண வீடோ அலங்கோலமாக காட்சி அளிக்க, "மாமா" என்று அழைத்து வீட்டுக்குள் நுழைய அங்கே ஜானகி பிணமாக நடுக்கூடத்தில் இருந்தார்.</span></p>
<p data-p-id="34cdc4f273b658803d1e2be9a0a0548d"><span style="font-size: 14pt">   வரதராஜன் வர்ஷினி அவனை எதுவும் சொல்லவில்லை. மாறாக அவனை கண்டு வர்ஷினி பிணமாக இருந்த அன்னையை கண்டு அழுதாள்.</span></p>
<p data-p-id="75e2d9f17d1a645022a5020904041383"><span style="font-size: 14pt">  ஊர்காரர்களோ செழியனை திட்டி பேசி, வெளியேற கூறினார்கள்.</span></p>
<p data-p-id="7067f03c1fe0e987fb5337411ae5cfbe"><span style="font-size: 14pt">   ஆளாளுக்கு வெளியே செல்ல கூறி, கத்த, வரதராஜனோ, "நீங்க கிளம்புங்க தம்பி. இனி எல்லாம் முடிஞ்சிடுச்சு. உங்களை மாப்பிள்ளையா அடையற தகுதியை நான் இழந்துட்டேன்." என்று குலுங்கி குலுங்கி அழுதார்.</span></p>
<p data-p-id="c1ccbfed794a06d97db2fcf518417fa8"><span style="font-size: 14pt">   ''ஏன் மாமா இப்படி பேசறிங்க" என்று கூறியவனின் சட்டையை பிடித்து, "ஏன் இங்க வந்திங்க... போங்க... என்‌ அம்மாவை எனக்கு இல்லாம பண்ணிட்டிங்கள்ல. போங்க... எனக்கு நீங்களும் வேண்டாம். கல்யாணமும் வேண்டாம்" என்று அழுதாள்.</span></p>
<p data-p-id="923b2124a40055552797c785227dca2f"><span style="font-size: 14pt">  அங்கிருந்த மூத்த பெண்மணிகள் சிலரோ, வர்ஷினியை அழைத்து வந்து அன்னை அருகே அமர வைக்க, செழியனோ இந்த நிலையில் எது பேசினாலும் தவறாக பதியும் என்று மற்றவர் விரட்ட வெளியேறினான். அப்படி விரட்டினாலும் இடுகாடு வரை வந்து கடைசி ஆளாக தான் சென்றான்.</span></p>
<p data-p-id="302f9cb1adf62b2bfff3ebb8930af1b6"><span style="font-size: 14pt">   ஒரிரு மாதம் வரதராஜனிடமும் , வர்ஷினியிடமும் பேச முயன்றான். வர்ஷினி மருந்துக்கடையை மூடி வைத்து விட்டு உள்ளே உட்கார்ந்து அழ, வெளியே வரும் நேரமும், "ப்ளீஸ்... உங்களை பார்த்தா என்‌ அம்மாவை என்னிடமிருந்து பிரிச்சிங்கன்ற நினைப்பு தான் வருது. என்னை தொந்தரவு பண்ணாதிங்க" என்று அழுத்தமாய் உரைத்தாள்.</span></p>
<p data-p-id="84b91e0a6dc920d625bc64b8e53f540f"><span style="font-size: 14pt">  வரதராஜனிடம் பேசி புரிய வைக்க கல்லூரி சென்றான் செழியன். ''வேண்டாம் தம்பி... என் பொண்ணு இனியும் உங்க வீட்டு மருமகளா என்னால கொடுக்க முடியாது." என்று கூறிவிட்டார்.</span></p>
<p data-p-id="f5618b3167e327a607fac218a7bf0e0a"><span style="font-size: 14pt">செழியன் அங்கும் இங்கும் சில மாதம் நடைப்பிணமாக அவளுக்காக அலைந்தான்.</span></p>
<p data-p-id="c7f4e0d2311a2e04f1b38d27d1a7116b"><span style="font-size: 14pt">  அதோடு நாகர்கோவில் வந்தாலே 'வரதட்சனை கேட்ட மாப்பிள்ளை' என்று அடைமொழி வேறு செய்து சிலர் கேலி செய்தனர். ஊர்காரர்கள் பலரும் ஆங்காங்கே அமர்ந்து இது போல ஊர்கதை பேசினாலும், ஏனோ முற்றிலும் ஊருக்கு வருவதையே தவிர்ந்தான்.</span></p>
<p data-p-id="24af44589618b9e01634e52b5e4cd361"><span style="font-size: 14pt">   மருத்துவ துறையில் தன் மீது தவறில்லை என்று பெண்ணின் அப்பாவே கைப்பட எழுதி தந்ததை வைத்து மீண்டும் இணைந்து கொண்டான். அதோடு அதே மருத்துவமனை வேண்டாமென்று மீனாட்சி மருத்துவமனைக்கு மாற்றம் வாங்கி கொண்டான்.‌</span></p>
<p data-p-id="83dc1f43d417f7f661ce9f018f33f601"><span style="font-size: 14pt">   சுகந்தியோடு அதன் பின் சுத்தமாக பேசுவது கிடையாது. அவராக மகனை பார்க்க வந்தாலும் 'வாங்க என்றோ உபசரிப்போ துளியும் கொடுக்காமல் அறைக்குள் முடங்குவான்.</span><br /><span style="font-size: 14pt"> </span><br /><span style="font-size: 14pt">  ஏதோ சம்பவம் நடக்கும் பொழுது எல்லாம் கிருபானந்தன் இல்லாததாலும், சுகந்தி அளவிற்கு வார்த்தையை நெருப்பாய் வீசாததாலும் தந்தையிடம் மட்டும் பேசுவான் செழியன்.  நாளாக நாளாக தன் வீட்டிற்கும் சுகந்தி கிருபானந்தன் இருவரையும்  வரவிடாமல் தடுத்துவிட்டான்.</span></p>
<p data-p-id="d81885027fb675edaf1f08dcdff98e14"><span style="font-size: 14pt">தன் சொந்த ஊருக்கும் பத்து வருடமாக வருவதில்லை.</span><br /><span style="font-size: 14pt">  ஏதோவொரு இலக்கு இல்லா வாழ்வை வாழ்கின்றான் செழியன்.</span></p>
<p data-p-id="e80aedf83e4caa1ac9fc1ad93bb62ceb"><span style="font-size: 14pt">   இன்று தான் பாலைவனத்தில் மழை பொழிந்தது போல வர்ஷினியை சந்தித்தான். அதுவும் அவளும் இவனை போலவே டாக்டர் என்ற அறிமுகத்துடன் அடையாளமாகவும் பத்து வருடம் அவமானப்பட்டவர்களுக்கு மாற்றம் தந்துள்ளதை கிரகித்தான்.</span></p>
<p data-p-id="a4dd4939a25106d324df5ace9bbdb4ea"><span style="font-size: 14pt">  நண்பன் ஆர்யன் தான் கூறினானே. வரதராஜன் மெடிக்கல் சீட் வாங்கி, வர்ஷினியை சேர்த்துவிட்டு, வீடு வாசல், நிலம், நகை, என்று விற்று டாக்டர் படிக்க வைத்திருப்பதை புரிந்துக் கொண்டான்.</span></p>
<p data-p-id="3e7ac06015542cd8f6308ef3bbc784b6"><span style="font-size: 14pt">   இன்று வர்ஷினியை பார்த்தும் மணமானவளா இல்லையா என்று அறியும் ஆவல் அவனுக்கு தோன்ற, சந்திப்பு அமைவதற்கு காத்திருந்தான். இத்தனை காலம் காத்திருந்தவனுக்கு நொடிகள் நகராமல் நரக வேதனை தர, அறைக்குள் குட்டி போட்ட பூனையாக சுற்றினான்.‌</span></p>
<p data-p-id="fc4dcc58019010c9b53130e1b1938266"><span style="font-size: 14pt">  தன் உருவத்தை கண்ணாடியில் கவனித்து, வெள்ளை நரையை பார்த்து, சலித்தான்.</span><br /><span style="font-size: 14pt">  அவள் காணும் நேரம் தன் தோற்றம் இப்படியா இருக்க வேண்டும் என்ற சலிப்பு. ஆனால் இந்த மருத்துவ மாநாடு மட்டும் இல்லாமல் போனால் இதை விட மோசமாக இருப்பான்.</span><br /><span style="font-size: 14pt">  </span><br /><span style="font-size: 14pt">   இந்த முகத்தில் அவளை மறந்த வலி வேதனை இல்லை என்று எண்ணுவாளோ என சிந்தித்தான்.</span></p>
<p data-p-id="a6b316f44c232aa8a5bc0a52b2378879"><span style="font-size: 14pt">  அவனை அதிகம் காத்திருக்க வைத்தே சூரியன் மறைய துவங்கியது. மாலை வந்ததும் மின்னலாய் தன்னை தயார்படுத்தி, அங்கிருந்த உணவரங்கத்திற்கு வர சென்றான்.</span></p>
<p data-p-id="3ee8ffb6519748e6324f97b7d9375875"><span style="font-size: 14pt">ஹோட்டல் கிரவுண்ட் பிளோரில் கட்டமைத்து இருந்தனர். அதனால் பாதாள உலகம் போல படியில் சென்றான்.</span></p>
<p data-p-id="ee19158dffbfcd3e659690c5e968f31b"><span style="font-size: 14pt">ஏசி காற்று அவனை வரவேற்றது. மெல்லிய விளக்கொளிகள் டேபிளுக்கு மேல தொங்கவிடப்பட்டிருந்தது.</span><br /><span style="font-size: 14pt">  அதில் அவனது தேவதை தனிமையாக பேசுவதற்கு தோதான இடத்தில் அமர்ந்திருந்தாள்.</span></p>
<p data-p-id="453159907edc55f1b6be64b403391298"><span style="font-size: 14pt">  ஆனந்தமாக வந்தவன் "ரொம்ப நேரமாச்சா? சாரி.. இங்க வர தான் டிரஸ் எடுத்தேன்‌. எதை போட என்று கன்பியூஸ். இதுல நேர்த்திய கிளம்ப நேரம் ஓடிடுச்சு." என்று எதிரே அமர்ந்தான்.</span></p>
<p data-p-id="07d948a5ef7a0c6cfd9f8a93011313d4"><span style="font-size: 14pt">  ஏற்கனவே சூடான வெஜ் கார்ன் சூப்பை ஆர்டர் தந்திருக்க அதனை கொண்டு வந்து வெயிட்டர் கொடுத்தார்.</span></p>
<p data-p-id="fc2c02b82ad000833172835bebcdf54c"><span style="font-size: 14pt">  மேலும் என்ன உணவு வேண்டும் என்று கேட்க, எதை ஆர்டர் செய்வதென்று இருவருக்கும் தெரியவில்லை. 'முதலில் எங்களை பேச விடுங்களேன்' என்று இருவர் மனமும் உள்ளே கூச்சலிட்டு கொண்டிருந்தது.</span></p>
<p data-p-id="d5fcbbb6c8c22977f12bcd2c3dc2174c"><span style="font-size: 14pt">  "இங்க ஸ்பெஷல் 'கிழிபரோட்டா' மேடம் கொண்டு வரவா?" என்று வெயிட்டரே கேட்க, அதையே இருவரும் ஆர்டர் தந்து வெயிட்டரை விரட்டினார்கள்.</span></p>
<p data-p-id="57c207ce528dba33a7631de204705a21"><span style="font-size: 14pt">  "இங்கே எத்தனை நாள் ஸ்டே?' என்று கேட்டான்.</span></p>
<p data-p-id="d0d3e595447a89d33e322c9a3c841956"><span style="font-size: 14pt">  "இன்னிக்கு நைட் நைனோ க்ளாக் டிரையின்ல கிளம்பிடுவேன்." என்றாள்.</span></p>
<p data-p-id="b13c576cef6f9e4e37c5182cba23874b"><span style="font-size: 14pt">  லேசாக அதிர்ச்சி, அதனால் தான் அவளே இந்த நேரம் சந்திக்க அழைத்தாளா என்று மனதிற்குள் ஓடியது.</span></p>
<p data-p-id="8b3520fcf3f0506d968cc8d300671e73"><span style="font-size: 14pt">"நீங்க?" என்று கேட்டாள். செழியன் வீடு பக்கம் தானே‌. வீட்டுக்கு செல்வானோ என்று கேட்டாள். "நான் ஆல்ரெடி பிளைட்ல டிராவல் பண்ணி இப்ப சென்னையில் இறங்கியிருக்கணும். ஐ மீன் மாநாடு முடிஞ்சி உடனே கிளம்பறதா புக் பண்ணினேன். பட் சடனா கேன்ஸல் பண்ணிட்டேன்" என்றான் செழியன். அவன் பிளைட்டை கேன்சல் செய்தது அவளுக்காக தானே.</span></p>
<p data-p-id="1af8c99ab16a89f31a4abd3a08391d8f"><span style="font-size: 14pt">   "ஆப்டர்நூன் பேசின மாதிரி இருந்தது‌. ஆனாலும் பேசாதது போல ஒரு மாயை" என்று வர்ஷினி ஆரம்பித்தாள். அவள் ரயிலுக்கு செல்ல வேண்டுமே.</span></p>
<p data-p-id="d4c36ef6bd9c3470ddd2fbe4ca22cc03"><span style="font-size: 14pt">"ஆமா... எவ்ளோ பேசினாலும் பத்தலை." என்றவன் பெண்ணையே பாராதது போல அவளது கண்ணையே கவனித்தான்.</span></p>
<p data-p-id="703ca86faeec01a2def257992c5ec70e"><span style="font-size: 14pt">"எனக்குமே.. ஆக்சுவலி உங்களை எதிர்பார்க்கலை." என்றாள்.</span></p>
<p data-p-id="db610cb9d921f0e11b54530ca657070a"><span style="font-size: 14pt">  "சந்திப்பு அமையும்னு தெரிந்தா இங்க வந்திருக்க மாட்டியா வர்ஷினி" என்று கேட்டான். லேசாக வலிகள் கொண்ட வார்த்தை இருவருக்கும்.</span></p>
<p data-p-id="43e83b821ce2b4bf6da3e31dc30fad19"><span style="font-size: 14pt">"அப்படியில்லை... சந்திக்கவே கூடாதுன்னு நினைச்சா இந்த இடத்துக்கு கால் வச்சியிருக்க மாட்டேன்." என்று பேச, வெயிட்டர் இலையை சுற்றி வந்து 'கிழிபரோட்டாவை' பிளேட்டில் பரிமாற துவங்கினார்.</span></p>
<p data-p-id="47dfb76807720ae12535d2800678b775"><span style="font-size: 14pt">  அந்த நேரம், "நாங்களே சர்வ் பண்ணிக்கறோம்" என்று வர்ஷினி கூற, வெயிட்டர் அங்கே வைத்து அகன்றார்.</span></p>
<p data-p-id="2a1404f6765ed5db0210343753be9fa2"><span style="font-size: 14pt">அந்த நேரம் கழுத்தில் மெல்லிய தங்க சங்கிலி மட்டும் வர்ஷினி அணிந்திருக்க, கவனித்து விட்டான் செழியன்.</span></p>
<p data-p-id="3a5403c2a65aae953799357df2099534"><span style="font-size: 14pt">  செழியன் கண்கள் சென்ற திசையை கவனித்த வர்ஷினியோ, "எனக்கு டிரெயினுக்கு நேரமாகுது. ஏதோ பேச நினைச்சி போன்‌ நம்பர் வாங்கினேன். ஆனா சாரி... என்னால பேச முடியலை." என்றாள்.</span><br /><span style="font-size: 14pt"> </span><br /><span style="font-size: 14pt">"பரவாயில்லை எதுவும் பேசலைன்னாலும், சந்திப்பு அமைந்தது என் பாக்கியம்." என்றான்.</span></p>
<p data-p-id="c629613950b83d8d6e7a8f618288900c"><span style="font-size: 14pt">    "அம்மா இறந்தப் ரொம்ப திட்டி அனுப்பிட்டேன். இப்ப நினைச்சாலும் பீலிங் கில்ட்டி" என்றாள்.</span></p>
<p data-p-id="99a2ffd109df277f49e175f54a27d321"><span style="font-size: 14pt">  "சேசே கில்ட்டியாக அதுல எதுவும் இல்லை. நீ செய்தது சரி.</span><br /><span style="font-size: 14pt">   நடந்தது எல்லாம் விதி..." என்று கையை மேலே காட்டினான்.</span><br /><span style="font-size: 14pt"> </span><br /><span style="font-size: 14pt">  "நான் கிளம்பறேன்" என்று எழுந்தாள்.</span></p>
<p data-p-id="1f0d0168fb00f74396b205050f8f0348"><span style="font-size: 14pt">  "கிழிபரோட்டா.. இதை சாப்பிட்டு போலாமே. ஏன் என்னோட சாப்பிட கூடாதா வர்ஷூ" என்றதும், அமர்ந்துவிட்டாள்.</span></p>
<p data-p-id="16abf9242b579e066dd8e10bd010e9c2"><span style="font-size: 14pt">  அவன் அழைத்த 'வர்ஷூ' வேலைக்காட்டியது.</span></p>
<p data-p-id="55c85a04c95e71bec8e3936035fb4ab5"><span style="font-size: 14pt">   கிழிபரோட்டா சாப்பிட்டவளின் கண்ணீல் மடை திறந்த கண்ணீர்.</span></p>
<p data-p-id="b0071df0b3b27c52b966d221ee245e60"><span style="font-size: 14pt">   "ஏன் அழற?" என்றவனின் வார்த்தையிலும் சிறு கரகரப்பு.</span></p>
<p data-p-id="310915e8a07a9a3a746ceefe17645870"><span style="font-size: 14pt">  "கா..காரம்.‌ வேற ரீசன் இல்லை" என்றவள் டிஸுவை எடுத்து கண்ணீரை துடைத்தாள். தண்ணீரை எடுத்து குடிக்க நீட்டினான்.</span></p>
<p data-p-id="c5d9ac42e624c2923794dfd9703c9687"><span style="font-size: 14pt">   "நீ திருநெல்வேலி போகலையா?" என்று கேட்க, "அப்பா அம்மா இறந்துட்டாங்க. வேற யாரை பார்க்க போறது. டூயூட்டி வீடு இதே சரியா இருக்கு." என்றாள்.</span></p>
<p data-p-id="6b798e8ad1fd2228b4c50e96eeb19acd"><span style="font-size: 14pt">  "நீங்க உங்க வீட்டுக்கு போகலாமே." என்றாள்.</span></p>
<p data-p-id="c0f912ccca0575a6a29f5c5a42d7d07a"><span style="font-size: 14pt">"போக தோணலை. பத்து வருடமா யாரையும் மன்னிக்க மனசு வரலை. படிப்பறிவு இல்லை அதனால் அப்படி செய்தாங்கன்னு ஈஸியா எடுத்துக்க முடியலை. காமராஜர் எல்லாம் படிக்காதவர் தான். ஆனா செயல் மாஸா இருக்கும்ல.</span><br /><span style="font-size: 14pt">   ஆனா இவங்க ஒரு மனுஷங்களா அந்த இடத்துல, இன்னொரு பொண்ணோட நிலைமை என்னாகும்னு யோசித்தாங்களா? பெத்தவங்க மனசு எப்படி துடிக்கும்னு நினைச்சாங்களா? அவங்களே ஒரு பேரண்ட்ஸ் தானே.</span></p>
<p data-p-id="5aa2394e4df6c60768a5916aeea36124"><span style="font-size: 14pt">  அதோட... அவங்க பெத்த மகனான, நான் விரும்பின பொண்ணு, என் மனசு உடையும்னு கூட யோசிக்கலை.</span></p>
<p data-p-id="2808f7677cd55c4641eb3da5947e59ec"><span style="font-size: 14pt">  என்னை விடு... உங்கம்மா... இறந்துட்டாங்களே. என்னென்ன கவலைப்பட்டு மனசு வலியில் இறந்தாங்களோ? என்னை பொறுத்தவரை அது இயற்கை மரணமா எடுத்துக்க முடியலை. கொலை." என்றதும் வர்ஷூ  நிசப்தமாக கேட்டபடி, சிலையாக அமர்ந்தாள். கண்ணீரை துடைக்கும் நிலையை மறந்தாள்.</span></p>
<p data-p-id="bc0a3cf61025628b2156f8bda6079d6a"><span style="font-size: 14pt">  செழியனே கைக்குட்டையால் துடைத்து தங்களை மற்றவர் பார்வையிடுகின்றனர் என்றதும், "ஐ அம் சாரி... ரியலி சாரி.. பழசை மறந்து தேறியிருப்ப. நான் அகைன் ஃபீல் பண்ண வஞ்சிட்டேன்." என்று மன்னிப்பு கேட்டான்.</span></p>
<p data-p-id="942592b901f93d11af6915bd17267dcd"><span style="font-size: 14pt">வர்ஷினியோ, "நீங்க உங்க அம்மாவிடம் அதுக்கு பிறகு பேசலைன்னு தெரியுது? பட் அப்படி இருக்காதிங்க. அவங்களிடம் பேசுங்க.</span></p>
<p data-p-id="dbfe0a7ffb7903304e1db56bb01ca493"><span style="font-size: 14pt">  அவங்க என்ன செய்ய முடியும். அந்த நேரத்துல போலீஸ் வரும் என்று அங்க யாருக்கும் தெரியாது. அதோட சேனல்காரன் நியூஸ் கலெக்ட் பண்ண கேமிராவோட வருவதும் நம்ம யாருக்கும் தெரியாதே. </span><br /><span style="font-size: 14pt">  </span><br /><span style="font-size: 14pt">  அவங்க இரண்டு பேரும் வராம இருந்திருந்தா எப்படியும் கல்யாண மேடையில் கல்யாணம் நடந்திருக்க வாய்ப்புண்டு.</span><br /><span style="font-size: 14pt">‌சோ... நீங்க சொன்ன அதே விதி... அன்னைக்கு கல்யாணமே நடக்க கூடாதுன்னும் நீங்க போலீஸ் சேனல்ல வந்து அவமானப்படணும் என்றும், நாங்க கல்யாணம் நின்று, அம்மாவை இழந்து, டாக்டர் படிக்கணும்னு எழுதியிருக்கு.</span></p>
<p data-p-id="3d9d4100e1f468f96d0167eb3216c6f1"><span style="font-size: 14pt">  அதோட சொந்த ஊர்ல, சொந்தவீட்ல தலை காட்டாம இருந்தா, என்னவோ நீங்க தப்பு செய்ததா ஊரும் பேசும். நீங்க வாழ்ந்த ஊரை பார்த்து நீங்க ஏன் பயப்படணும்." என்றாள்.</span></p>
<p data-p-id="9e24cba25424f02ced0bc52910c3c330"><span style="font-size: 14pt">   செழியனோ "எங்கம்மாவோட நான் பேசணுமா?" என்று ஆச்சரியமாக கேட்டான். வர்ஷினியின் வாழ்க்கையை சின்னபின்னமாக மாறியதே தன் அன்னையால், அப்படியிருக்க அவரிடமே பேச சொல்கின்றாளே என்ற ஆச்சரியம்.</span></p>
<p data-p-id="8394a050a6ed4e389d47de1223aad5c1"><span style="font-size: 14pt">"ஒருத்தங்க இருக்கும் போது அவங்க அருமை தெரியாது. இல்லாத போது தான் தெரியும். அதுவும் அம்மா என்ற உறவு, உணர்வோட வாழறது. முடிஞ்சா பேசுங்க. பிளைட் தான் கேன்சல் பண்ணிட்டதா சொன்னிங்க" என்று ஆலோசனை வழங்கினாள்‌</span></p>
<p data-p-id="2d44c5f0dabf5d9a76b9804deb7c4594"><span style="font-size: 14pt">அவன் யோசிக்கும் முன், "நான் கிளம்பறேன். லேட்டானா டிரெயின் மிஸ் பண்ணிடுவேன். நாளைக்கு ஒரு ஆப்ரேஷன் இருக்கு. நான் சென்னையில் இருக்கணும். வர்றேங்க" என்றாள்.</span></p>
<p data-p-id="a762a728881f6fc5361be5608ec4ed50"><span style="font-size: 14pt">   அவள் சாப்பிட்ட உணவிற்கு பணத்தை வைத்து விட்டு எழுந்தாள்.</span></p>
<p data-p-id="ef7a39a8ae8368337a78a14371adfeeb"><span style="font-size: 14pt">  "என்னை விட்டுட்டு போறியா?" என்று உடைந்திடும் குரலில் கேட்டான் செழியன்.</span></p>
<p data-p-id="f985c852f6d9e1d92be7e0c49b2e30a8"><span style="font-size: 14pt">  "நான் எப்பவோ உங்களை விட்டுட்டு போயிட்டேன். இந்த சந்திப்பு எதார்த்தமா நிகழ்ந்தது. மீண்டும் பிரியறோம். அவ்ளோ தான்" என்று திரும்பி பாராமல் நடந்தாள்.</span></p>
<p data-p-id="cf576f790191c411ae7a84632567e091"><span style="font-size: 14pt">செழியனோ வலியோடு அவளை பார்வையிட்டான்.</span></p>
<p data-p-id="552ddcd3981ef03702a091ff61ef2863"><span style="font-size: 14pt">-தொடரும்.</span><br /><span style="font-size: 14pt"> </span></p>
<p data-p-id="552ddcd3981ef03702a091ff61ef2863"><span style="font-size: 14pt">பிரவீணா தங்கராஜ்</span></p>
<p data-p-id="e62ba595328958d2cc19b82fd014faae"><span style="font-size: 14pt"> </span><br /><span style="font-size: 14pt">‌</span><br /><span style="font-size: 14pt"> </span></p>]]></content:encoded>
						                            <category domain="https://onlinetamilnovels.com/community/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%88-%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%ae%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%b5%e0%ae%be-praveena-thangaraj/">நின் பார்வை தவமல்லவா!- Praveena Thangaraj</category>                        <dc:creator>Praveena Thangaraj</dc:creator>
                        <guid isPermaLink="true">https://onlinetamilnovels.com/community/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%88-%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%ae%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%b5%e0%ae%be-praveena-thangaraj/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%88-%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%ae%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%b5%e0%ae%be-8/</guid>
                    </item>
				                    <item>
                        <title>நின் பார்வை தவமல்லவா!-7</title>
                        <link>https://onlinetamilnovels.com/community/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%88-%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%ae%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%b5%e0%ae%be-praveena-thangaraj/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%88-%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%ae%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%b5%e0%ae%be-7/</link>
                        <pubDate>Fri, 03 Jul 2026 08:22:39 +0000</pubDate>
                        <description><![CDATA[அத்தியாயம்-7
  &quot;என்னங்க அந்தம்மா இப்படி பேசறாங்க&quot; என்று ஜானகி பயந்து போய் கேட்டார். ஏனெனில் மகள் செழியன் மீது உயிரையே வைத்திருப்பது இந்த காலகட்டத்தில் வரதராஜனை விட நேரில் பார்த்தவர் ஆயிற்றே...]]></description>
                        <content:encoded><![CDATA[<p data-p-id="4a06bb3d20dd6e7935b624f2d25fb8ec"><span style="font-size: 14pt"><b>அத்தியாயம்-7</b></span></p>
<p data-p-id="a4bbf33014377238f7b00e2200a0de2a"><span style="font-size: 14pt">  "என்னங்க அந்தம்மா இப்படி பேசறாங்க" என்று ஜானகி பயந்து போய் கேட்டார். ஏனெனில் மகள் செழியன் மீது உயிரையே வைத்திருப்பது இந்த காலகட்டத்தில் வரதராஜனை விட நேரில் பார்த்தவர் ஆயிற்றே.</span></p>
<p data-p-id="b6eb9c007a798463e91f42944cf5859d"><span style="font-size: 14pt">வரதராஜனோ "மாப்பிள்ளையிடம் முதல்லயே சொன்னேன். நான் பார்த்துக்கறேன் மாமானு கோவில்ல வச்சி சத்தியம் பண்ணிருக்கார். அவர் மேல எனக்கு நம்பிக்கை இருக்கு ஜானகி. நீ போய் தூங்கு." என்றார்.</span></p>
<p data-p-id="e7ed6996eb0fa06d2ea6fa569e6939d3"><span style="font-size: 14pt">  "அன்னைக்கே என்னிடம் நீங்க ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம்ல" என்று கேட்க, "சொல்லிருந்தா..‌ நிம்மதியா இருந்திருப்பியா? தினம் தினம் முள்ளுல நடக்கற மாதிரி இருக்கும் ஜானகி. அந்தம்மாவுக்கு தெரிந்தது எனக்கு பெரிய விஷயமா தோணலை. காலையில் நம்ம மக கழுத்துல மாப்பிள்ளை தாலி கட்டினா போதும். மத்தபடி சண்டை சச்சரவு வந்தா கூட பரவாயில்லை" என்று எதிர்கொள்ள தயாரானார்.</span></p>
<p data-p-id="6349ed656600426dc2366dd31bf894e9"><span style="font-size: 14pt">   ஜானகி உறங்கும் மகளை பார்வையிட்டு செழியன் மீது குருட்டு நம்பிக்கை வைத்தபடி அங்கிருந்த சேரில் சாய்ந்தார்.</span><br /><span style="font-size: 14pt">   சுகந்தி காலையில் முகம் சிடுசிடுக்க, அங்கும் இங்கும் அலைந்தார்.</span></p>
<p data-p-id="ed77e4b4e581c46d6346ab3c000010a9"><span style="font-size: 14pt">  காலையில் கணவர் கிருபானந்தனிடம் வர்ஷினி டாக்டர் இல்லை என்றதை கதை கதையாக தெரிவித்தார்.</span></p>
<p data-p-id="47ecfa3fc74f7e5a616abaa20f82a593"><span style="font-size: 14pt">  அதற்குள் செழியன் குளித்து முடித்து  மாப்பிள்ளை கோலத்தில் வந்து நின்றான்.</span></p>
<p data-p-id="18f0399c529361422ca174d765e4cdf1"><span style="font-size: 14pt">  ஜானகியும் மணமகன் தயாராவதை கண்டு வர்ஷினியிடம் எதையும் தெரிவிக்காமல் அவளையும் தயார்படுத்தினார்.</span></p>
<p data-p-id="94abb04eb834745606d956fc83aa6f83"><span style="font-size: 14pt">  இதில் கடுப்பான சுகந்தி, மகனிடம் "இந்த கல்யாணம் நடக்காது. நம்மாளுங்க எல்லாரும் எந்திரிச்சு நம்ம ஊரை பார்த்து கிளம்புங்க" என்று மேடையில் கத்த, "அம்மா ஏன்மா என்னாச்சு" என்று செழியன் வந்தான்.</span></p>
<p data-p-id="70da5bafdada2827163ebd7538abe157"><span style="font-size: 14pt">"என்னடா தெரியாத மாதிரி நடிக்கற, அந்த பொண்ணு டாக்டர் இல்லை. பிறவு எதுக்கு கல்யாணம்." என்று மகனை பிடித்து இழுத்து செல்ல, ''அம்மா... எனக்கு அவ டாக்டர் இல்லைன்னு தெரியும்" என்று பேசினான்.</span></p>
<p data-p-id="1846500f8fb9e7d2260f01835c90d80d"><span style="font-size: 14pt">  "உனக்கு தெரியும்னு எனக்கும் தெரியும். என்ன நெஞ்சழுத்தம் இருந்தா, இந்த சிறுக்கிக்காக பெத்த ஆத்தா அப்பனிடம் கூட கலந்து பேசாம கல்யாணத்துக்கு பத்திரிக்கை தினுசு தினுசா அடிச்சிருப்ப?" என்று கோபமானார்.</span><br /><br /><span style="font-size: 14pt">  "அம்மா...‌ சொன்னா புரிஞ்சுக்கோங்க. கல்யாணம் முடியட்டும். ஒரு டிகிரி தானே. நம்ம வீட்ல நான் டாக்டரா இருப்பது போதும்‌" என்று கூறினான்.‌</span></p>
<p data-p-id="c8c8db0c2435e3728e54bf0227c50a26"><span style="font-size: 14pt">  "சரிடா... ஒரு டாக்டர் போதும். அப்ப நான் கேட்ட நகையை இப்பவே மேடையில் வைக்க சொல்லு. கல்யாணத்துக்கு தாலியை நானே எடுத்து கொடுக்கறேன்." என்றார் தடாலடியாக.</span></p>
<p data-p-id="bf865b8c9fdb64768945acc15acb75a4"><span style="font-size: 14pt">என்ன நகை எத்தனை சவரன் என்று அறியாமல் "அதெல்லாம் தருவாங்க" என்று மேடைக்கு வர, "இல்லைடா.. இப்ப நகையை வைக்க சொல்லு. இல்லைன்னா நீ என் கூட வா. இப்ப நீ வரலை. இந்த விஷத்தை குடிச்சிடுவேன்" என்று கையில் ஒரு விஷபாட்டிலை வைத்து மிரட்டினார்.</span></p>
<p data-p-id="c6fa7808890b8e6e7ec13d1fee420816"><span style="font-size: 14pt">  "என்னம்மா விளையாடறியா?" என்று செழியன் கத்த, அங்கே கல்யாண மேடையும் கல்யாணத்திற்கு ஒவ்வொருத்தராய் வருவதிலும் மண்டபத்தில் ஆட்கள் நிரம்ப ஆரம்பித்தனர்.</span></p>
<p data-p-id="1a1d35241cf0d2a63681289ee2a41a8b"><span style="font-size: 14pt">  "இப்ப நான் செத்து போறேன். நீ கல்யாணம் பண்ணி வாழு" என்று சுகந்தி அழிச்சாட்டியம் செய்ய, "மாமா அம்மாவிடம் பேசிட்டு வர்றேன். வர்ஷினி என்ன ஏதுனு புரியாம அழறா பாருங்க. அவளை பாருங்க" என்று மேடையிலிருந்து அம்மாவை தேடி நடந்தான்.</span></p>
<p data-p-id="0204f3d472c9811a4df0a541cbdf2c1e"><span style="font-size: 14pt">  வர்ஷினிக்கு ஏதோ அபத்தம் புரிய, ஜானகி வேறு நேற்று நடந்தவையை மளமளவென உரைத்திட மணமகள் அறைக்கு அழுதபடி சென்றாள்.</span></p>
<p data-p-id="423b824210055fbbd9337ccf27e18d5c"><span style="font-size: 14pt">கூடவே ஜானகியும் சென்றிட, செழியன் கையில் விலங்கு மாட்டினார்கள் மப்டியில் வந்த போலீஸ். நேற்று சேனல்காரன் தனக்கு தெரிந்த போலீஸிடம் வரதட்சனை கேட்டு கல்யாணம் நடக்கின்றதென்று அறிவிக்க, போலீஸும் அங்கே வந்திருந்தனர். கல்யாணம் கமுக்கமாய் நடந்திருந்தால் வந்த வழியே சென்றுவிடுவதாகவும், அவ்வாறு நடக்காவிட்டால் செழியனை விலங்கிட்டு அழைத்து செல்வதாகவும் கூறினார்கள். சேனல்காரனுக்கு அங்கு நடந்த சம்பாஷனைகள் கேட்டு, வீடியோ கவரேஜ் எடுத்திருந்தான். அது சாட்சிக்கானதாக மாறியது.</span></p>
<p data-p-id="42f46ef6689408edca0f7c8f7d1923a9"><span style="font-size: 14pt">  கல்யாண மண்டபத்தில் திடீரென போலீஸ் வந்து விலங்கு போடுவதை செழியன் அதிர்ச்சி கலந்து பார்வையிட்டான். வரதராஜன் செய்ததாக முடிவு செய்து "மாமா.. என்‌மேல நம்பிக்கை இல்லையா?" என்று கேட்க "எனக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லை" என்று கூறினார்.</span></p>
<p data-p-id="57d4f3c4308da130da4abd1d4c03df8e"><span style="font-size: 14pt">போலீஸுக்கு தேவை வரதட்சனை கேட்பதையும் பேசுவதையும் ஆதாரமாக இருக்க, மேற்படி இழுத்து செல்ல எண்ணினார்கள்.</span></p>
<p data-p-id="64dc7a0fdfbaa96e204690b37fe89ed4"><span style="font-size: 14pt">  போலீஸோ சுகந்திக்கும் விலங்கு போட முயல, "சார்... நான் சொல்லறதை கேளுங்க. நான் வரதட்சனை கேட்கவேயில்லை." என்று கூற அதை செவி சாய்க்க போலீஸ் உடன்படவில்லை‌</span></p>
<p data-p-id="7cda53c0091cb4734f222f4ca5586a95"><span style="font-size: 14pt">நிலைமை கை மீறி போக, "சார் அம்மாவை விட்டுடுங்க. நான் மட்டும் வர்றேன்" என்று கூறினான் செழியன்.</span></p>
<p data-p-id="c80961f29bd4968e64896a876e2faf63"><span style="font-size: 14pt">  அவனுக்கு தன்னை படிக்க வைத்த அம்மாவை போலீஸ் விலங்கு போடுவதில் உடன்பாடு இல்லாததால் அவ்வாறு கூறினான்.</span></p>
<p data-p-id="b30e1971e90ea0447b44555cd18fbdca"><span style="font-size: 14pt">போலீஸும் செழியன் கூறவும் விட்டுவிட்டனார். பெண் கைதி என்றால் பெண் போலீஸ் வேண்டும் இந்த நேரத்தில் அலைய முடியாது என்றதால் அவரை விட்டுவிட்டார்.</span></p>
<p data-p-id="da145c70d47556a12f3fbed083eb45e2"><span style="font-size: 14pt">  வரதராஜனுக்கோ செழியனுக்கு வரதட்சனை கேட்டதாக பழி வேறு வேண்டாம் என்று "நான் மாப்பிள்ளை மீது கேஸ் பைல் ஆகாம பார்த்துக்கறேன். போலீஸ் ஸ்டேஷன் போனா தான் விடுவு கிடைக்கும். பொண்ணை ஜாக்கிரதையா பார்த்துக்கோ" என்று புறப்பட்டார். கிருபானந்தன் மகன் செல்லும் போதே பின்னாடியே சென்றிருந்தார்.</span></p>
<p data-p-id="5229cfa6c352784d41828da4f6d4e1d3"><span style="font-size: 14pt">  வரதராஜன் தலை மறைய சுகந்தியோ வாயுக்கு வந்த வார்த்தைகளை திரட்டி, சாபத்தை வழங்கி வர்ஷினியை அர்ச்சித்தார். தாயுள்ளம் மகளை சபிக்கும் சுகந்தியை கண்டு கூப்பாடு போட, இரண்டு பெண்மணியும் மண்டபம் அதிர கத்தினார்கள்.</span></p>
<p data-p-id="08de5b2bb053587314e740a54494bab4"><span style="font-size: 14pt">  அம்மா அம்மா சும்மாயிரும்மா." என்று வர்ஷினி தன் தாயை பிடிக்க, "இந்தாடி.. இதுக்கு மேலயும் என் பையனை வளைச்சி போடணும்னு பார்த்த, அவ்ளோ தான்" என்று கூற, வர்ஷினியோ சுகந்தியின் புது அவதாரத்தில் ஆடிப்போயிருந்தாள்.</span></p>
<p data-p-id="a0ea26a162147530ade5880056705870"><span style="font-size: 14pt">  ஜானகியோ "எம் பொண்ணை இன்னமும் உன் பையனுக்கு கட்டி வைப்பேன்னு பார்த்தியா? என் கூடவே காலம் முழுக்க வச்சாலும் வச்சிப்பேன். உன் பையனுக்கு கட்டி தரமாட்டேன்" என்று ஜானகி மொழிந்தார்.</span><br /><br /><span style="font-size: 14pt">   அதன்பின் கல்யாண மண்டபத்தில் , சுகந்தியை துரத்தாத குறையாக நடையை கட்ட, ஜானகி மகளிடம் சுகந்தி நேற்று நடந்தவையை விரிவாக வேறு பேசி புலம்பினார்.</span><br /><span style="font-size: 14pt"> </span><br /><span style="font-size: 14pt">   வர்ஷினிக்கு அப்பொழுது தான் செழியன் தன்னை டாக்டர் என்று எண்ணி தன்னுடன் பேசி பழகினாரா?' என்று கவலைக் கொண்டாள்.</span><br /><span style="font-size: 14pt">  வர்ஷினி வீட்டில் தான் அதிர்ந்து பேசுபவள். மற்ற இடத்தில் வாயில்லா பூச்சி. செழியன் தன்னை அவனாக விரும்பி மணப்பதாக கோட்டை கட்டியிருக்க, டாக்டர் என்ற கோணத்தில் தான் கண்ணை மூடி மணக்க சொன்னாரா? இப்பொழுது பழகிய பின் வேறு வழியின்றி மணக்க நினைத்தாரோ?! என்று துவண்டாள்.</span></p>
<p data-p-id="364b872e63a3bee0105f52376c8bd582"><span style="font-size: 14pt">  அதோடு சுகந்தியின் அவதாரம் கண்டதில் பேரதிர்ச்சியில் இருந்தாள்.</span></p>
<p data-p-id="1273dc2dc2cf747fcd42a980ccd3f7ce"><span style="font-size: 14pt">  இப்படியொரு மாமியார் தனக்கு வேண்டவே வேண்டாம் என்றது மனம்.  அந்தளவு பயத்தில் ஆட்கொண்டு இருந்தாள்.</span></p>
<p data-p-id="a5cd0dd645a53b032ff1d99704b3c764"><span style="font-size: 14pt">   போலீஸ் ஸ்டேஷனில் வரதாராஜன் பின்னாலே சென்று, செழியனை சிறைக்குள் தள்ளும் முன், அவர் மேல தப்பில்லைங்க. நான் கம்பிளைன் தராம எப்படி அவரை அழைச்சிட்டு வருவிங்க?" என்று கேட்டார்.</span></p>
<p data-p-id="1fbf42e3153e5a8867a55431b809f81b"><span style="font-size: 14pt">  "சார்... ஆதாரம் எல்லாம் இருக்கு." என்று கூற நேரில் பார்த்ததை கூறுவதாக எண்ணி, "சார் மாப்பிள்ளை ரொம்ப நல்லவர்." என்று ஆரம்பித்து வரிசையாக நடந்ததை விவரித்தார்.</span></p>
<p data-p-id="e9df99b13a81ae768fd0fb5855deaa23"><span style="font-size: 14pt">  'என்னய்யா என்னென்னம்மோ சொல்லற. இப்ப கேஸ் போடவா வேண்டாமா" என்று அலுத்துக்கொள்ள, வேண்டாம் என்று பதில் தந்து எழுதி தந்தார். அப்படியும் செழியனை மொத்தமாய் விடுவிக்க மதியம் ஆனது. கிருபானந்தன் நன்றி தெரிவிக்க வரதராஜனோ செழியனிடம் "என்னை மன்னிச்சிடுங்க தம்பி" என்று கும்பிடு போட்டு வேகமாக சென்றார்.</span></p>
<p data-p-id="89d385eb3bdb3566bdb523010e32ce45"><span style="font-size: 14pt">  "மாமா... மாமா..." என்று பின்னால் செல்ல பார்த்தவனை, "தம்பி இதுல கையெழுத்து போட்டுட்டு உங்க திங்க்ஸை வாங்கிட்டு போங்க" என்று கூறினார் போலீஸ்.</span></p>
<p data-p-id="c64bbd9ae2e90ad885983c8eb81fe12c"><span style="font-size: 14pt">    கேஸ் ஏதும் பதிவாகாமல் செல்ல, செழியன் மெதுவாய் கல்யாண மண்டபம் வர மண்டபமே காலியாக காட்சி அளித்தது.</span><br /><span style="font-size: 14pt"> </span><br /><span style="font-size: 14pt">  இங்கே மருத்துவராய் வேலை செய்வதால் சென்னையில் தங்கிய செழியன் வீட்டுக்கே கிருபானந்தன், சுகந்தி மூவரும் வந்தார்கள். செழியன் கதவை திறந்து வீட்டுக்கு வரும் வரை இடைவிடாமல் வர்ஷினிக்கு, வரதராஜனுக்கு, ஜானகிக்கு என்று போன் போட்டு போட்டு பார்த்தான்.</span></p>
<p data-p-id="4dab1c74291d362f4a19c04a4bb1d81e"><span style="font-size: 14pt">  மூவருமே அனைத்து வைத்து திருநெல்வேலிக்கு செல்வதில் முனைப்பாய் இருந்தனர்.</span></p>
<p data-p-id="65f84abb40434cbe40dba424604a4369"><span style="font-size: 14pt">செழியனின் சென்னை வீட்டில், நிசப்தமான கூடாரத்தில் அந்த தொலைக்காட்சி மட்டும் ஓடிக் கொண்டிருந்தது.</span><br /><span style="font-size: 14pt">‌</span><br /><span style="font-size: 14pt">அதில் பிரபல செய்தி அலைவரிசை சேனலில் 'சென்னை திருமங்கலத்தில், 'வெங்கி கல்யாண மண்டபத்தில்' கல்யாண மேடை வரை வந்து நின்ற திருமணம்.</span><br /><span style="font-size: 14pt">   டாக்டர் மாப்பிள்ளை அதிகபட்ச வரதட்சனை கேட்டதால் திருமணம் நின்றதாக தெரியப்படுகின்றது.</span><br /><span style="font-size: 14pt">     கைது செய்யப்பட்ட டாக்டர் செழியன், திருமங்கலத்தில் மலர் மருத்துவமனையில் டாக்டராக பணிப்புரிபவர். படித்த பண்பான தொழிலில் வேலை செய்பவர்களே வரதட்சனையை பிடித்து தொங்குவது சமூகத்தின் அவலம். இதற்கு சமூக ஆர்வலர்கள் அதிருப்தியான கருத்துகளை வெளிப்படுத்தி செழியனை தண்டிக்க கூறிவருகின்றனர்' என்று அவனை காட்டி ஒளிப்பரப்ப, செழியன் வெகுண்டு எழுந்து, டிவி ரிமோட்டை வீசினான். அந்த ரிமோட் டிவியில் பட்டு தெறித்து விழுந்தது.</span></p>
<p data-p-id="634bc25d358130d7af15064ef466513f"><span style="font-size: 14pt">  அதில் டிவியில் லேசான கோடுகள் வர ஆரம்பித்தது. இனி இந்த டிவியின் நிலையோ பழைய இரும்பு கடைக்கு தான் செல்லும் என்பது பட்டவர்த்தமாய் காட்சியளித்தது.</span></p>
<p data-p-id="ecd8f8d9b12f0cdb2d3391479f7c9c4d"><span style="font-size: 14pt">   அங்கே அனலாய் ரிமோட்டை தூக்கி வீசியெரிந்த செழியனோ, "போதுமா... டிவி சேனல்ல பக்கம் பக்கமா நியூஸ். என்னை பத்தி தான்... பெருமைப்படுங்க.. டாக்டர் படிக்க வச்சி, பட்டம் வாங்கி தந்து, ஊரே கொண்டாடணும்னு பெருமை பேசுவிங்கள்ல..  இப்ப வரதட்சனை கேட்டு டாக்டர் பட்டத்தை விட பெரிய பட்டம் வாங்கி தந்துயிருக்கிங்க. இதுக்கு உங்க கால்ல விழுந்து வணங்கணும்." என்று கிண்டலும் கேலியுமாக, கத்தினான்.‌</span></p>
<p data-p-id="acc829b196a6c12e5ddf787ca6f2515a"><span style="font-size: 14pt">  சற்று முன் ஒளிப்பரப்பான செய்தி அவனை பற்றி தான். ஆனால் துளியும் அந்த செய்திக்கும் அவனுக்கும் சம்பந்தம் உண்டா இல்லையா என்றால், 'இல்லை' என்று கண்ணை மூடி உரைத்திடலாம்.</span></p>
<p data-p-id="14900be6d90d540d168f8850b1c1c7e8"><span style="font-size: 14pt">  உண்மையில் நகை நட்டு கேட்டு செழியன் அந்த திருமணத்திற்கு தலை அசைக்கவேயில்லை. அவனுக்கு வர்ஷினியை போட்டோவில் பார்த்ததும் பிடித்தது. அவளோடு வாழும் ஆசையில், கூடீதலாக அவளும் டாக்டர் என்றதில் மகிழ்ந்தான். அவள் டாக்டர் அல்ல என்று தெரிந்தப்பின்னும் அவன் காதல் சிறிதும் குறையவில்லை.</span></p>
<p data-p-id="f4cec068865037f8486d9caffd832cc9"><span style="font-size: 14pt">  ஆனால் தனக்கு பின் தன் அன்னையாலே, இவ்வாறான வியாபார உக்தி நடக்குமென அறியாது போனான்.</span></p>
<p data-p-id="81efc45323e7878e0a6faaf150de95cb"><span style="font-size: 14pt">   அங்கே தாய் தந்தையரை பார்க்க  பிடிக்காமல், "போங்க... இங்கிருந்து போங்க." என்று கர்ஜித்தான்.</span></p>
<p data-p-id="d72780e1d02c08ae448901ea87db7092"><span style="font-size: 14pt">-தொடரும்.</span></p>
<p data-p-id="f8f0db80333de24b7e440a1ef58a7cfe"><span style="font-size: 14pt">‌‌பிரவீணா தங்கராஜ் </span></p>]]></content:encoded>
						                            <category domain="https://onlinetamilnovels.com/community/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%88-%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%ae%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%b5%e0%ae%be-praveena-thangaraj/">நின் பார்வை தவமல்லவா!- Praveena Thangaraj</category>                        <dc:creator>Praveena Thangaraj</dc:creator>
                        <guid isPermaLink="true">https://onlinetamilnovels.com/community/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%88-%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%ae%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%b5%e0%ae%be-praveena-thangaraj/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%88-%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%ae%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%b5%e0%ae%be-7/</guid>
                    </item>
				                    <item>
                        <title>நின் பார்வை தவமல்லவா!-6</title>
                        <link>https://onlinetamilnovels.com/community/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%88-%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%ae%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%b5%e0%ae%be-praveena-thangaraj/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%88-%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%ae%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%b5%e0%ae%be/</link>
                        <pubDate>Fri, 03 Jul 2026 07:58:02 +0000</pubDate>
                        <description><![CDATA[அத்தியாயம்-6
    செழியனுக்கு பேரதிர்ச்சி என்றாலும், அவன் தற்பொழுது விரும்புவது வர்ஷினி என்பவளை தானே தவிர அவள் டாக்டர் பட்டம் படித்தவள் என்பதற்காக அல்ல.
&quot;மாமா... முதல்ல அழறதை நிறுத்துங்க. எ...]]></description>
                        <content:encoded><![CDATA[<p data-p-id="6217e0a66cf028c8a50f349d7cb1483e"><span style="font-size: 14pt"><b>அத்தியாயம்-6</b></span></p>
<p data-p-id="bc7b81869c4ba404df4c0c9eb6bda570"><span style="font-size: 14pt">    செழியனுக்கு பேரதிர்ச்சி என்றாலும், அவன் தற்பொழுது விரும்புவது வர்ஷினி என்பவளை தானே தவிர அவள் டாக்டர் பட்டம் படித்தவள் என்பதற்காக அல்ல.</span></p>
<p data-p-id="a1c10c7cdd78de086af552d7cf3107bf"><span style="font-size: 14pt">"மாமா... முதல்ல அழறதை நிறுத்துங்க. எல்லாரும் என்ன ஏதுனு சூழ்ந்திட போறாங்க.</span></p>
<p data-p-id="09e133e9cb6bd143f9a07e8792f8c2c5"><span style="font-size: 14pt">  இந்த கல்யாணம் நடக்கும். நான் விரும்பறது உங்க பொண்ணை தான்.</span><br /><span style="font-size: 14pt">   அவ டாக்டர் படிச்சிருந்தா அது எனக்கு எக்ஸ்ட்ரா நிறையா இருக்கும். அதுக்காக ப்ததிரிக்கை வரை அடிக்க வந்துட்டு, கல்யாணத்தை நிறுத்த மாட்டேன். அவளோட வாழ்ந்துட்டு இருக்கேன் மாமா. அபசகுணமா ஏதும் வார்த்தை விடாதிங்க. நிதானமா இருங்க." என்று ஆசுவசப்படுத்தினான்.</span></p>
<p data-p-id="f1a459f81d01d08559b0abe6a6ab6a61"><span style="font-size: 14pt">  அதன் பின் ஜாதகம் மட்டும் டாக்டர் படித்த வர்ஷினி விஸ்வநாதனோடு, வர்ஷினி வரதராஜனின் புகைப்படம் தன்னிடம் உள்ளதை விவரித்தான்.</span></p>
<p data-p-id="096c331a39503e92494a1c4b6d574565"><span style="font-size: 14pt">  வரதராஜனோ, "எம் மக டாக்டர் இல்லை மாப்பிள்ளை‌. நாங்க டாக்டர் மாப்பிள்ளைக்கும் ஆசைப்படலை. நல்லவனா என் மகளை கல்யாணம் செய்தா காலம் முழுக்க காப்பாத்தி அன்பா பார்த்துக்கிட்டா போதும்." என்று தழுதழுத்தார்.</span></p>
<p data-p-id="880618b57d00890ed2624486d99582c8"><span style="font-size: 14pt">  அவர் குரலே மொத்தமாய் மாறிவிட்டது.</span><br /><br /><span style="font-size: 14pt">  "எங்க வீட்ல அம்மா அப்பா டாக்டர் பொண்ணை கல்யாணம் பண்ணப்போறதா கனவு கண்டுட்டு இருக்காங்க. இப்ப போய் நான் இதை சொன்னா அவங்க கல்யாணத்தை நிறுத்த வாய்ப்புண்டு.</span></p>
<p data-p-id="f1dcdbf0b138634c76462ab447a26079"><span style="font-size: 14pt">  நீங்க பேசாம செழியன் எம்.பி.பி.எஸ்.எம்டி. என்றும், வர்ஷினி பி.பார்ம் போட்டும் பத்திரிக்கை அடிங்க.</span></p>
<p data-p-id="b195b3ba26e417f629db2a03c1dc5627"><span style="font-size: 14pt">   எங்க வீட்ல வர்ஷினி படிப்பு பத்தி இப்ப சொல்ல வேண்டாம். கல்யாணம் முடிந்ததும் சொல்லிப்போம்.</span></p>
<p data-p-id="413a3ebad5416faf5df1038c3816196d"><span style="font-size: 14pt">  எங்க வீட்டை பொறுத்தவரை படிப்பு இது தான்னா அதுக்கு அர்த்தம் கூட தெரியாது. ஆனாலும் எம்.பி.பி.எஸ் என்பதை அம்மா மைண்ட்ல பிக்ஸ் பண்ணியதால் அவங்க அடிக்கற பத்திரிக்கையில் அப்படியே போட்டுக்கிடட்டும். எங்க சொந்தக்காரங்க யாரு என்னனு படிப்பை அவ்வளவா கவனிக்க மாட்டாங்க." என்றான்.</span></p>
<p data-p-id="8c493b04ae39fde877d1959b92fe5eac"><span style="font-size: 14pt">  "இது பின்னாடி தெரிந்தா பிராடு தனம்னு சொல்வாங்க மாப்பிள்ளை" என்று மறுத்தார். கல்லூரி பேராசிரியர் அல்லவா.</span></p>
<p data-p-id="b969e86743ca00b1214dcefb3eeccccd"><span style="font-size: 14pt">  "அய்யோ மாமா.. எங்க வீட்ல தெரிந்தா கல்யாணம் நின்றிடும். நான் சொல்லறதை கேளுங்க. என் பிரெண்ட்ஸுக்கு நான் அடிக்கற பத்திரிகையில் நான் பி.பார்ம் என்று போட்டுக்கறேன். என்னைக்காவது பிராடு அதுயிதுன்னா, அம்மா அப்பா தான் கவனிக்காம தப்பா பிரிண்ட் பண்ணிட்டதா நானே சொல்லறேன்." என்றான்.‌</span></p>
<p data-p-id="2af936868242153764f838d1ebbf0fc6"><span style="font-size: 14pt">  அவனுக்கு வர்ஷினியை கரம் பற்றுவது தான் முதல். மற்றவை எல்லாம் அவன் யோசிக்கவேயில்லை.</span></p>
<p data-p-id="59f386edc8fcaa17427feda93559fe7e"><span style="font-size: 14pt">"அதுக்கு முன்ன என் மக டாக்டர் இல்லைன்னு யார் மூலமாவது தெரிந்துவிடும் மாப்பிள்ளை‌" என்றார்.</span></p>
<p data-p-id="751fd616d00082710e2de8c65b1bd43b"><span style="font-size: 14pt">"மாமா... அதெல்லாம் தெரியாது. கொஞ்சம் யோசிங்க.. முன்னனா அது வேற. இப்ப என் மனசுல வர்ஷூ மனைவியா வாழறா. அவ மனசுல நான் புருஷனா நினைக்கறா. இப்ப போய் ஏதாவது காரணத்துல கல்யாணம் சண்டை சச்சரவோட நடந்தா பரவாயில்லை‌... ஆனா கல்யாணம் நின்றுட்டா? என்னாலயும் வர்ஷினியாலையும் தாங்க முடியாது மாமா." என்று கூற, வரதராஜனோ மகளின் மனநிலையில் சிந்தித்தார்.</span></p>
<p data-p-id="d47596a4d215ff1e4e105fd812ca0caa"><span style="font-size: 14pt">  செழியனை கணவனாக எண்ணி கனவில் மிதப்பவளை படுகுழியில் தள்ளிவிடுவது போல அல்லவா மாறும். செழியன் தான் இந்தளவு சொல்கின்றாரே என்று நிதானித்தார்.</span></p>
<p data-p-id="e56c6819eb4c381a4c6854d14378142a"><span style="font-size: 14pt">  "இது சரிவருமா மாப்பிள்ளை." என்று பயந்து கேட்டார்.</span></p>
<p data-p-id="df36d3b6832bf84837f993d6a79bc9ff"><span style="font-size: 14pt">"சரிவரும் மாமா. கோவில்ல வச்சி சத்தியம் பண்ணி சொல்லறேன். இந்த ஜென்மத்துல உங்க பொண்ணு வர்ஷினி தான் என்‌ மனைவி அதை யாராலையும் மாற்ற முடியாது." என்று நம்பிக்கை தந்தான்.</span></p>
<p data-p-id="26aab7689afeda64c73e820407f2d3d7"><span style="font-size: 14pt">  கோவில் மணி அடிக்க வரதராஜனுக்கு செழியனின் இந்த வாக்கு தேவவாக்காக ஏற்றுக்கொண்டார்.</span></p>
<p data-p-id="ecd47b826baa54a3a6294941f5b637c0"><span style="font-size: 14pt">  வரதராஜனுக்கு நம்பிக்கை அளித்து வழியனுப்பினான் செழியன்.</span><br /><span style="font-size: 14pt">  அதன் பின் பேச்சு வாக்கில் 'மெடிக்கல் ஷாப் உன்னோட கடையாச்சே. ஆப்டர் மேரேஜ் என்ன செய்வ?" என்று முதல் முறையாக கேட்க, "இதுவரை அதை பத்தி யோசிக்கலைங்க.. நல்லா வியாபாரம் வரும். அப்படியே விட மனசில்லை. என்‌ பிரெண்ட் ஒருத்தி தற்காலிகமா பார்ட்னரா சேர்த்துக்கலாமானு திட்டம் போட்டு வச்சிருக்கேன்." என்று கூறினாள்.</span><br /><br /><span style="font-size: 14pt">மருத்துவ தொழில் சார்ந்து பேசியிருந்தால் முதல் நாளே வர்ஷினி டாக்டர் இல்லை என்று கண்டறிந்திருக்கலாம். எல்லாம் விதி. ஆனாலும் வர்ஷினியை ஏற்ற இதயம் மற்றவளை நாடாதே.</span></p>
<p data-p-id="fa7879c20a62de0f01ecb2d3ab7ccbf1"><span style="font-size: 14pt">வரதராஜனும் தன் கஷ்டம் தன்னோடு போகட்டும். இந்த விஷயம் ஜானகிக்கோ அல்லது மகளுக்கோ தெரிய வந்தால் திருமணம் நடக்கும் வரை அவர்களும் அனல் மேல் நிற்பது போல தவிப்பார்கள் என்று இயல்பாக நடமாடினார்.</span></p>
<p data-p-id="b097a35a14add8e4977adaff6fd04db3"><span style="font-size: 14pt">அதன்படி அடுத்தடுத்து பத்திரிக்கை கொடுக்க ஆயத்தமானார்கள். இந்த இடைப்பட்ட குழப்பத்தில், செழியனே அவர்கள் வீட்டு சார்பாக, பத்திரிக்கையில் பெயர் அச்சிடும் விவகாரத்தில் அவனே நின்று பத்திரிக்கை அடித்து தந்தையரிடம் கொடுத்துவிட்டான்.</span></p>
<p data-p-id="dee71f359b08b1d2e745a3e9d70c9827"><span style="font-size: 14pt">  எப்படியும் தன் சொந்த பந்தம் டாக்டர் பெண் என்று எண்ணி கொள்வார்கள் தவிர வர்ஷினி பற்றி மணக்கோலத்தில் தானே பார்ப்பார்கள் தாலி கட்டிய நொடி எந்த பிரச்சனை வந்தாலும் பார்த்துக் கொள்ளலாமென தெம்பானான்.</span></p>
<p data-p-id="5e08c55c2edd7cb9628771e6ecc1e552"><span style="font-size: 14pt">   பெரும்பாலும் ஊரில் திருமணம் என்றாலாவது படையே கூடும். சென்னை என்பதால் வீட்டுக்கு ஒருவர் என்று தலை காட்டி செல்லலாம் என்று கணித்தான்.</span></p>
<p data-p-id="4c994b6a31f4063f7945e8f14acfd139"><span style="font-size: 14pt">  ரிஷப்ஷன் அவ்வாறு தான் நடந்தது.</span><br /><span style="font-size: 14pt">  பெரிதாக ஆடம்பரமின்றி அவன் கூட படித்த பெண்கள் ஆண்கள் என்று டாக்டர்கள் வந்து வாழ்த்து கூறி கைகுலுக்கி செல்ல, சுகந்தி எல்லாம் ஒதுங்கி கொண்டார். ஜானகியோடு 'எல்லாம் டாக்டர் படிச்ச ஆட்களா வர்றாங்க‌. நமக்கு யார் என்னனு ஒன்னும் தெரியலை சம்பந்தி" என்று குறைப்பட்டுக்கொண்டார்.</span></p>
<p data-p-id="5540696550a916366e4f90a73ef22f3c"><span style="font-size: 14pt">  சொந்தக்காரர்கள் எல்லாம் ரிஷப்ஷனுக்கு வந்து மலைத்து போட்டோவுக்கு போஸ் தந்து ஒரமாய் கதை அளந்தனர்.</span></p>
<p data-p-id="4a9de217b04022edc31a7804022ee790"><span style="font-size: 14pt">  செழியனோ "பதட்டம் இல்லாம இருங்க மாமா‌. நாளை ஒரு நாள்." என்று செழியன் வரதராஜனுக்கு ஆறுதல் தர, அவருமே நிம்மதியாக சுவாசித்தார்.</span><br /><br /><span style="font-size: 14pt">  அன்றிரவு ரிஷப்ஷன் முடிந்தது. அவரவர் அடுத்த நாள் நடைப்பெறும் திருமணத்திற்கு நேரத்திற்கு எழுந்து தயாராகும் பொருட்டு உறங்கியிருந்தனர்.‌</span></p>
<p data-p-id="fed4043965f2d2d751fa04f2ac4a6d26"><span style="font-size: 14pt">சுகந்தி மட்டும் பத்ரகாளி போல வீற்றிருந்தார்.</span></p>
<p data-p-id="f7e244551de4e706fc0ef6c2d85d65c9"><span style="font-size: 14pt">  "இங்க பாரு சுகந்தி, அந்த பொண்ணு டாக்டர் எல்லாம் இல்லை. பி.பார்ம். அந்த டாக்டர் வர்ஷினி டூயூட்டி பார்க்கற மருத்துவமனைக்கு பக்கத்துல மெடிக்கல் ஷாப் வச்சியிருக்கற மருத்துகடை பொண்ணு.</span><br /><span style="font-size: 14pt">  நீயும் உன் புருஷனும் வேர்வையை சிந்தி, உழைச்சி செழியனை படிக்க வச்சியிருக்கிங்க. இதுல எப்படி கோட்டை விட்டிங்க. செழியன் எல்லாம் இப்பவே அவளை தாங்கு தாங்குன்னு தாங்குறான்.‌ இவ்ளோ தூரம் வந்தாச்சு... கல்யாணம் எல்லாம் நிற்காது. நீ வேண்டுமின்னா வரதட்சனை கேட்டு பாரு. அட்லீஸ்ட் வந்தவரை லாபமா இருக்கும்." என்று போதித்து, வரதராஜன் அடித்த பத்திரிக்கையையும், செழியன் அவனது நண்பனுக்காக கொடுத்த பத்திரிக்கையையும், இவர்களுக்கு செழியன் அடித்து கொடுத்த கல்யாண பத்திரிக்கையையும் மூன்றும் கையில் வைத்து நகர்ந்தார் ஒருத்தர்.</span><br /><span style="font-size: 14pt">'படிக்காத தற்குறின்னு பெத்த பையனே ஏமாத்தறான்.' என்று கிலுக்கி சிரித்து வேறு சென்றனர்.</span></p>
<p data-p-id="695a1ab779a1a361667168707491a5ef"><span style="font-size: 14pt">  சுகந்திக்கு இதற்கு மேல் உறக்கம் வருமா? நேராக பொண்ணு வீட்டு ஆட்கள் முன் வந்து நின்றார்.</span></p>
<p data-p-id="bbc46da126a4521a2568c9c26952b191"><span style="font-size: 14pt">  வர்ஷினியை நேரத்திற்கு படுக்க கூறியதால் அவள் உறக்கத்தில் ஆழ்ந்திருந்தாள்.</span></p>
<p data-p-id="e43b73d304aaefb31e7892d8ef6f3ca3"><span style="font-size: 14pt">  சுகந்தி ஜானகியை எழுப்பி, உங்க மக டாக்டர் படிக்காமலையே டாக்டர்னு பொய் சொல்லி என் மகனுக்கு கட்டி வைக்கறிங்க. உங்களுக்கு எப்படி நிம்மதியா தூக்கம் வருது?" என்று கேட்க, ஜானகி புரியாது விழித்தார்.‌</span></p>
<p data-p-id="c1159515a3d8d73f3177968db595bad9"><span style="font-size: 14pt">  வரதராஜனோ "சம்பந்தி அம்மா... மாப்பிள்ளைக்கு எல்லாம் தெரியும். வர்ஷினி என்ற பெயர் குழப்பத்திலையும், அந்த பொண்ணு ஜாதகம், என்‌ பொண்ணு போட்டோ அதோட இணைந்தில் இந்த அசம்பாவிதம் நடந்தது. பத்திரிக்கை அடிக்கறப்ப மாப்பிள்ளை இதை கவனித்தார். ஆனாலும் வர்ஷினியை கல்யாணம் செய்வதாக வாக்கு தந்தார். நீங்க வேண்டுமின்னா மாப்பிள்ளையை எழுப்பி கேளுங்க" என்று எடுத்துரைத்தார்.‌</span></p>
<p data-p-id="854080692f719168a4a27e5d2d77a35f"><span style="font-size: 14pt">  "எனக்கு அதெல்லாம் தெரியாது. டாக்டர் பையனுக்கு நாங்க டாக்டர் பொண்ணை தான் தேடினோம். இப்படி வந்து ஏமாத்திட்டிங்க. உங்க பொண்ணு அழகு தான். அதான் என் மகனை மயக்கி காரியமா வச்சிக்கிட்டா." என்று எதுவுமே அறியாத வர்ஷினியையும் குற்றம் சுமத்தினார்.</span></p>
<p data-p-id="b454e3857334562bda224f21d87982a3"><span style="font-size: 14pt">"அபாண்டமா பேசாதிங்க. நாங்க எங்க தரப்புல உண்மையா தான் இருக்கோம். நீங்க சம்பந்தியை கூப்பிடுங்க. அவரிடம் பேசிக்கறேன்" என்று வரதராஜன் கிருபானந்தனை கூப்பிட்டார்.</span></p>
<p data-p-id="ce137dfa0d4e4789f9e4c794246984e8"><span style="font-size: 14pt">"இங்க பாருங்க... என் பையன் நல்லவன் தான். உங்க மகளை பிடிச்சிருக்குன்னு கட்டிக்க ரெடியா தான் மேடையில் நிற்கலாம். அதுக்காக பிச்சைக்காரியை எல்லாம் நான் மருமகளா ஏத்துக்க முடியாது." என்று வார்த்தையை விட்டார்.</span></p>
<p data-p-id="00b829c56d90b88a80d8ebcaf85f5df8"><span style="font-size: 14pt">"ஏங்க என் மக ஒன்னும் பிச்சைக்காரி இல்லை. பார்த்து பேசுங்க. அவளை நாங்க ராணி மாதிரி வாழ வச்சிருக்கோம்." என்று சுகந்தி தன் மகளை பற்றி குறைத்து கூறவும் ஜானகி பொங்கினார்.</span><br /><span style="font-size: 14pt"> </span><br /><span style="font-size: 14pt">  "அப்படின்னா உங்க மகளை கூட்டிட்டு இப்பவே நடையை கட்டுங்க. என் மகனுக்கு எங்க சொந்தத்துல கூட கல்யாணம் செய்து வச்சிக்கறேன்." என்று குண்டை தூக்கி போட்டார்.</span></p>
<p data-p-id="46dda7c29d857dd494fd19c3c2bea570"><span style="font-size: 14pt">"என்னம்மா... விளையாடறியா? மாப்பிள்ளையை கூப்பிடுங்க. நாங்க அவரிடம் பேசிக்கறோம். இல்லையா சம்பந்தியை வரச்சொல்லுங்க அவரிடம் விலாவரியா எடுத்து சொல்லறேன்." என்று வரதராஜனும் திடமாய் பேசினார்.</span></p>
<p data-p-id="0684b2e3c7bf0b2e6f25bb1bcaf0058a"><span style="font-size: 14pt">  சுகந்தியோ, "இதெல்லாம் வேலைக்கு ஆகாது. உன் மக என் பையனை மயக்கி வச்சிட்டு, இஷ்டத்துக்கு பேசறிங்க. என் வீட்டுக்காரர் எதுக்கு? ஒன்னு நடையை கட்டுங்க. இல்லையா.... நூறு சவரன் நகையை போடுங்க" என்று சட்டமாய் உரைத்தார். இது தான் முடிவு என்பதாக‌.</span></p>
<p data-p-id="0d7afae5e4f9cd582797667d454be0eb"><span style="font-size: 14pt">பொன் விற்கும் விலைக்கு அவர்கள் எங்கே போவார்கள். அதுவும் நூறு சவரனுக்கு? மகள் டாக்டர் என்று தவறாய் அவர்கள் நினைத்து கொண்டப்போது நாற்பது சவரன் தான் எங்களால் முடியும் என்றபோது அதுவே போதும் என்பதாக மலைத்தார்கள்.</span></p>
<p data-p-id="0129c12c96428122460d93f58895f01d"><span style="font-size: 14pt">  தற்போது நூறு சவரம் என்றால் எப்படி?</span></p>
<p data-p-id="6ab3ace1c2a43a94674f14779ea1a6b8"><span style="font-size: 14pt">    ஜானகி கையிலும் கழுத்திலும் காதிலும் சேர்த்தால் கூட சேராது.</span></p>
<p data-p-id="720776281df514ac7324a82fc71794fe"><span style="font-size: 14pt">"ஏம்மா மனசாட்சி இல்லாம பேசறிங்களே... பையனை பெத்தாவங்கன்னா என்னவேன்னா பேசுவிங்களா? நகை விற்கற விலை தெரியுமா? 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 8,771 ரூபா. ஒரு சவரன் 70,168 ரூபாய் ஆகுது.</span><br /><span style="font-size: 14pt">       </span><br /><span style="font-size: 14pt">   நாங்க இப்ப நாற்பது சவரன் போடுவதே, எம் பொண்ணும் என் வீட்டுக்காரரும் சம்பாரிச்சதை வாயை கட்டி வயிற்றை கட்டி, சிறுக சிறுக சேர்த்து வச்சதும்மா. நீ என்ன அசால்டா பேசற. உனக்கே நியாயமா இருக்கா?</span></p>
<p data-p-id="31912ffee0950ae204e4366040c05dfa"><span style="font-size: 14pt">  உங்க பிள்ளைக்கு தான் என்‌மக டாக்டர் இல்லைன்னு முன்னவே தெரியுமே‌. அப்பவே சொல்லிருந்தா கல்யாணத்தை நானே நிறுத்தியிருப்பேன்.</span><br /><span style="font-size: 14pt">   இப்ப வந்து இரண்டு பேரும் உசுருக்கு உசுரா பேசி பழகிட்ட பிறகு பிரிக்க பார்க்கற." என்று ஜானகி வலியுடன் மகளுக்காக பேசினார்.‌</span><br /><span style="font-size: 14pt"> </span><br /><span style="font-size: 14pt">  வரதராஜனுக்கு எப்படியாவது செழியன் தூக்கத்திலிருந்து கண் திறந்து வந்து இந்த சுகந்தியை அதட்டி இழுத்து சென்றால் தேவலாம் போல தோன்றியது. அல்லது சம்பந்தி வந்தாலாவது நன்றாக இருக்கும்.</span></p>
<p data-p-id="84476f9113192497e7dd93bdd748e335"><span style="font-size: 14pt">  சுகந்தி வாயுக்கு வந்ததை பேசும் போது அதை கேட்க மனதில் தெம்பின்றி துவண்டார்.</span></p>
<p data-p-id="1be783a0923a9c329591def3abc1320a"><span style="font-size: 14pt">"அதெல்லாம் எனக்கு தெரியாது. எனக்கு ஒத்த புள்ள பெத்து ராஜாவாட்டம் வளர்த்து, டாக்டர் படிக்க வச்சியிருக்கேன். நானும் தான் வேர்வை சிந்தி உழைச்சு படிக்க வச்சது." என்று வாதம் புரிந்தார்.</span></p>
<p data-p-id="ba67e491ede762b85979dbb4eff3ea5d"><span style="font-size: 14pt">  "ஓ... அதான் உங்க பிள்ளைக்கு விலை நிர்ணையம் செய்து சந்தையில விற்கறிங்களா? உங்க பையனுக்கு நூறு சவரன் ரேட்டா." என்று ஜானகி கொதித்து எழ, ''ஜானகி.. வாயை மூடு. என்ன பேச்சு பேசற. நாளைக்கு மாப்பிள்ளையா அவர் நம்ம வீட்டுக்கு வந்தார்னா எந்த மூஞ்சை வச்சிட்டு அவருக்கு பரிமாறுவ?</span><br /><span style="font-size: 14pt">  அந்தம்மா தான் படிக்காத தற்குறி இஷ்டத்துக்கு பேசுதுன்னா. நீயுமா? மண்டபத்துக்கு நாமளும் வாடகை தந்திருக்கோம். நீ போய் தூங்கு. எதுனாலும் மாப்பிள்ளை பேசட்டும்." என்று ஜானகியை விரட்டினார்.</span><br /><br /><span style="font-size: 14pt">  கணவர் பேச்சுக்கு கட்டுப்பட்டு அமைதியாக ஜானகி செல்ல சுகந்தியோ, 'எல்லாம் எம்புள்ள கொடுக்குற இடம். இந்த கல்யாணம் எப்படி நடக்குதுன்னு பார்க்கறேன்' என்று கருவியபடி சுகந்தி சென்றார்.</span></p>
<p data-p-id="9200b08b9585abfbfebbd60bc0e47d4c"><span style="font-size: 14pt">  இதெல்லாம் அங்கே மண்டபத்தின் உரிமையாளரின் மகன், தந்தையை சந்திக்க வந்தான். அவன் ஒரு பத்திரிக்கையாளன்மற்றும் சேனல்காரன் என்பதால் சிகரெட்டை பற்ற வைத்து கேட்டுக் கொண்டிருந்தான்.</span><br /><span style="font-size: 14pt">  "ஏன் அப்பா, கல்யாணம் நடக்குமா நடக்காதா?" என்று கேட்க, "தெரியலை டா... நம்ம கல்யாண சத்திரத்துக்கு வாடகை பணம் முழுசா அந்த டாக்டர் பையன் கொடுத்துட்டான். இனி கல்யாணம் நடந்தா என்ன நடக்காட்டி எனக்கென்ன?" என்று மொழிந்தார்.</span></p>
<p data-p-id="b176b5e966d8fd46e79762c153f0438b"><span style="font-size: 14pt">மண்டபத்தின் உரிமையாளர் அவ்வாறு சொல்ல,  மகன் சேனல்காரனாயிற்றே, அவனுக்கான ஆதாயம் கிடைக்குமா என்று யோசித்தான்.</span></p>
<p data-p-id="d0c73ea4d8cbc26485b59d30ffe6c54e"><span style="font-size: 14pt">மின்னலாய் பளிச்சிட, நாளை இந்த குத்தை காண கேமிராவுடன் தயாரானான்.</span></p>
<p data-p-id="31c7feca0cfcea3b3c09b9252a9ce79d"><span style="font-size: 14pt">-தொடரும்.</span></p>
<p data-p-id="31c7feca0cfcea3b3c09b9252a9ce79d"><span style="font-size: 14pt">பிரவீணா தங்கராஜ் </span></p>]]></content:encoded>
						                            <category domain="https://onlinetamilnovels.com/community/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%88-%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%ae%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%b5%e0%ae%be-praveena-thangaraj/">நின் பார்வை தவமல்லவா!- Praveena Thangaraj</category>                        <dc:creator>Praveena Thangaraj</dc:creator>
                        <guid isPermaLink="true">https://onlinetamilnovels.com/community/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%88-%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%ae%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%b5%e0%ae%be-praveena-thangaraj/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%88-%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%ae%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%b5%e0%ae%be/</guid>
                    </item>
				                    <item>
                        <title>நின் பார்வை தவமல்லவா!-5</title>
                        <link>https://onlinetamilnovels.com/community/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%88-%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%ae%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%b5%e0%ae%be-praveena-thangaraj/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%88-%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%ae%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%b5%e0%ae%be-5/</link>
                        <pubDate>Fri, 03 Jul 2026 07:52:28 +0000</pubDate>
                        <description><![CDATA[அத்தியாயம்-5
வீட்டிலிருந்தே செழியன் சொல்லி அழைத்து வந்ததாதால், சுகந்தி வாய் திறவாமல் ஜானகியிடம் முகமலர்ந்து உள்ளே நுழைந்தார்.
    &quot;வீடு ரொம்ப அழகா இருக்கு&quot; என்று சுகந்தி பேச்சை ஆரம்பித்தார...]]></description>
                        <content:encoded><![CDATA[<p data-p-id="0bd721489e0e308f4ed34f1673eea20e"><span style="font-size: 14pt"><b>அத்தியாயம்-5</b></span></p>
<p data-p-id="46db369c88a9a8f7ec4e5302f09fc2f2"><span style="font-size: 14pt">வீட்டிலிருந்தே செழியன் சொல்லி அழைத்து வந்ததாதால், சுகந்தி வாய் திறவாமல் ஜானகியிடம் முகமலர்ந்து உள்ளே நுழைந்தார்.</span></p>
<p data-p-id="bd22ff3c63f53517fd7ff96e862ded64"><span style="font-size: 14pt">    "வீடு ரொம்ப அழகா இருக்கு" என்று சுகந்தி பேச்சை ஆரம்பித்தார்.</span><br /><span style="font-size: 14pt">  வீட்டில் மருத்துவமனைக்கு அருகே மருந்துக்கடை என்பதாலும், சில பொருட்கள் மருந்துக்கடையில் இலவசமாக கிடைக்க பெறும்‌. அதில் சிலதை வர்ஷினி வீட்டில் வைத்திருந்தாள். பஸ்ட் எயிட் பாக்ஸ், பிபி பிரஷர் பார்க்கும் கருவி. ஸ்டதஸ்கோப், காய்ச்சல் காட்டும் தெர்மாமீட்டர் எல்லாம் அவளிடமும் இருந்தது.</span></p>
<p data-p-id="248264879e60c12070db8651675acc15"><span style="font-size: 14pt">   "ஒரு டாக்டர் வீட்ல என்ன இருக்குமோ எல்லாம் இருக்குடா" என்று சுகந்தி பேச, மாப்பிள்ளையாக வரப்போகின்றவன் டாக்டர் என்பதால் அவ்வாறு பேசுவதாக வர்ஷினி நினைத்துக்கொண்டாள்.</span></p>
<p data-p-id="e9a3e0009fac3e1eaa6c52638b925b18"><span style="font-size: 14pt">  பட்டுப்புடவை அணிந்து அடக்கவொடுக்கமாய் எதிரே வீற்றிருந்த செழியனை பார்வையிட தயங்கி தடுமாறினாள்.</span></p>
<p data-p-id="cc4c9fd53c7d110186f6ff4c428899df"><span style="font-size: 14pt">  செழியனோ 'நான் அவங்களிடம் தனியா பேசலாமா?" என்று அவனாக முன் வந்தான்.‌</span></p>
<p data-p-id="e5f4e4e78fcaef349ca24c81bd5dd422"><span style="font-size: 14pt">  சுகந்தியோ முட்டைக்கண்ணை உருட்ட, கிருபானந்தன் "டாக்டருங்க இல்லையா... வேலையை எப்படி மாற்றலாம்னு பேசிக்கவா இருக்கும். நாம மத்ததை பேசலாம்" என்று மைந்தனை தனியாக பேச போக கூறினார்.</span><br /><span style="font-size: 14pt">வரதராஜனும் மகளை "பார்த்தும்மா ஊர்காரங்க பார்த்தா ஏதாவது பேசுவாங்க. நம்ம தோட்டத்து பக்கம் வேப்பமரத்தாண்ட பேசுங்க" என்று அனுப்பினார்.</span></p>
<p data-p-id="003cb8902c2a249734eb503661203402"><span style="font-size: 14pt">   வர்ஷினியை பின் தொடர்ந்து செழியனை பேச வந்தான்.‌</span></p>
<p data-p-id="cf454115feac7e55e24b01e23dd4fb70"><span style="font-size: 14pt">   "என்ன பத்தி உங்கப்பா என்ன சொல்லியிருப்பார்னு தெரியலை. பட் என்னோட தரப்பில் சொல்லிடலாம்னு தான். அதோட எனக்கு உங்க நம்பர் வேண்டும். உங்கப்பா பார்க்க பிரெண்ட்லியா இருக்கார். ஆனா எங்கம்மா அப்பா எதிரே நம்பர் கேட்டா அம்மாவுக்கு பிபி ஏறும். அவங்க பழைய காலத்து ஆளு. பையன் டாக்டர் படிச்சிருக்கான். ஏதோ நல்ல சம்பளம், பட்டினத்துல இருக்கான். டாக்டர்னா மரியாதை மதிப்பு தரணும். அம்மானு இல்லை அப்பாவும் அப்படி தான்‌.</span></p>
<p data-p-id="c6f4cd2654c74e672302f6e9064d3be4"><span style="font-size: 14pt">அதனால் தான் சாதாரணமா ஆர்ட்ஸ் குரூப்பே போதும்னு இருந்த நான் பிளஸ் டூ வந்தப் பிறகு தான் டாக்டர் படிக்கணும்னு முடிவே எடுத்தேன். என்னால முடியும் என்னும் போது டாக்டராக மெனக்கெட்டேன். அவங்களும் உங்க அப்பா மாதிரி தான் கஷ்டப்பட்டு படிக்க வச்சிட்டாங்க.</span><br /><span style="font-size: 14pt">  இப்ப எனக்கு ஊரறிய கல்யாணம் செய்யணும் அவ்ளோ தான் அவங்க ஆசை.</span><br /><span style="font-size: 14pt">  அவங்க கூடவே இருக்கணும்னு கூட எதிர்பார்க்கலை. பிகாஸ்... நான் சென்னையில் டூயூட்டி இருப்பதால் நீயும் அங்க என் கூட வந்து வேலை பார்த்தா போதும் என்பது அவங்க எண்ணம்.</span></p>
<p data-p-id="fe5ca54804b30aeb598182aec1f7d00f"><span style="font-size: 14pt">இந்த கூட்டு குடும்பம், இதே கிராமத்துல நீ இருக்கணும்னு எந்த கட்டாயமும் இல்லை.'' என்று பேசினான். ஏனெனில் டாக்டர் பெண் இதே இடத்தில் கூட்டுகுடும்பமாய் வாழ வேண்டுமா என்று சலிப்படைய கூடாது என்றும், மீதி வாழ்வு செ ன்னையில் தன்னோடு என்பதை புரிய வைக்கும் விதமாக பேசினான்.</span></p>
<p data-p-id="6b7d845cc9a997a3abbd6c53aee32754"><span style="font-size: 14pt">வர்ஷினிக்கு பதிலுக்கு என்ன உரைப்பது என்று அறியாது அவனை தயங்கி பார்வையிட்டவள் மலைத்து போனாள்.</span></p>
<p data-p-id="241227c28915bfeb4a90cc7e3200126b"><span style="font-size: 14pt">  வேப்பங்காற்றில் அசைந்திடும் கேசம், தன்னையே ரசனையாக துளைக்கும் விழிகள், நீண்ட நாசி, நறுக்கிவைத்த மீசையில், இளஞ்சிவப்பு உதடு, ஏற்கனவே ஆறடிக்கு தென்னை மரம் போல நின்றவனின், மிடுக்காக உடையும் அவனை நாளெல்லாம் ரசிக்க தூண்டியது.</span></p>
<p data-p-id="5bd70f7aa8631bf2d30b9a7a7add9db4"><span style="font-size: 14pt">"நீ எதுவும் பேசமாட்டேங்கற? " என்றதும் செழியன் மீது பதித்த பார்வையை தாழ்த்தினாள்.</span></p>
<p data-p-id="b8f141ec0888f86911e0e5a77b639113"><span style="font-size: 14pt">  "ஆக்சுவலி... உன்னை இப்பவே தாலி கட்டி கூடவே அழைச்சிட்டு போயிடலாமானு ஆசையா இருக்கு. நல்லா பொம்மை கணக்கா இருக்க‌. அதிலையும் இந்த பச்சை பட்டுபுடவை  குட்டி குட்டி பிளிட்ஸ் வச்சி, இப்பவே கல்யாண பொண்ணு மாதிரி இருக்க. உனக்கு என்னை பிடிச்சிருக்கா? நான் அதை கேட்கவேயில்லை." என்று வழிந்தான்.</span></p>
<p data-p-id="e1ab4d4a28b2772c51e4b4c3a94a4cc1"><span style="font-size: 14pt">  "உங்களை பிடிக்காம போகுமா?" என்று மட்டும் முத்து போல பேசினாள்.</span></p>
<p data-p-id="d03554c0c2a21bed65170d3e136eddfd"><span style="font-size: 14pt">  "எனக்கு உன்னோட நம்பர் வேண்டும்" என்று கேட்க மடமடவென ஒப்பித்தாள்.</span></p>
<p data-p-id="0c8384f9fe1c7dddb703ab6e5adb8b4b"><span style="font-size: 14pt">"டாக்டர் நிறைய பேச முடியாது அதுயிதுன்னு நிராகரிக்காம கிடைக்கற கேப்ல பேசுவோம்" என்று கூற சம்மதமாய் தலையாட்டினாள்‌.</span><br /><br /><span style="font-size: 14pt">"உங்கம்மா.. எட்டியெட்டி பார்க்கறாங்க. மீதி போன்ல பேசுவோம் வர்ஷு" என்றான்.‌</span></p>
<p data-p-id="df333144b94a69ed9497e15d172d2d1f"><span style="font-size: 14pt">  வெட்கப்பட்டு சரியென்றா வர்ஷினி உரைத்தாள்.</span><br /><span style="font-size: 14pt"> </span><br /><span style="font-size: 14pt">  அறைக்குள் நகை பணம் பற்றிய பேச்சும், யாருக்கு எந்தெந்த கல்யாண செலவும், இந்த நாளை பரிசம் போட்டதாக எடுத்துக் கொண்டு பூவை சூடினார் சுகந்தி.</span><br /><span style="font-size: 14pt"> </span><br /><span style="font-size: 14pt">  செழியனுக்கு லீவு கிடைப்பது அரிதாக, நேரடியாக திருமண நாளை குறித்தனர்.</span></p>
<p data-p-id="faba3298329e2839d20547426360e052"><span style="font-size: 14pt">  சொந்தப்பந்தம் முன்னே பேசுவோமே என்று வரதராஜன் அபிப்ராயம் கூற, கிருபானந்தனோ "ஏற்கனவே பையன் சென்னையில் தனியா ஒண்டி கட்டையா வாழறான். சட்டுபுட்டுனு கல்யாணம் செய்தா பொண்ணுக் கூட குடித்தனம் செய்வான். மருமகளும் வாய்க்கு ருசியா சமைச்சி போடுவாங்க" என்று பேசி முடிவெடுத்திருந்தனர். </span></p>
<p data-p-id="32ba34cd28d680532fa70b3700760a19"><span style="font-size: 14pt">  சுகந்திக்கு பொன் விற்கும் விலைக்கு தங்கள் வசதிக்கு, ஜானகி போடுவதாக சொன்ன நகையே மலைக்க வைத்தது. மேற்படி வேலைக்கு எதில் சென்று வருகின்றாள்? காலையில் கிளம்பும் நேரமும், திரும்பும் நேரத்தையும் கேட்டுக் கொண்டார்கள்.</span><br /><span style="font-size: 14pt"> </span><br /><span style="font-size: 14pt">   பேச்சும் பொத்தம் பொதுவாய், ஹாஸ்பிடல் பக்கத்துல மெடிக்கல் கடை சௌகரியம்' என்று சுகந்தி பேச,  ஜானகி ஆமோதிப்பாய் புன்னகைத்தார்.</span></p>
<p data-p-id="24c3a4934f813b8d74cb7e148caaedff"><span style="font-size: 14pt">இனிப்பும் காரத்தையும் சாப்பிட்டுவிட்டு கொண்டு வந்த மலர்சரத்தை வர்ஷினி தலையில் சூடி கிளம்பினார்கள்.</span></p>
<p data-p-id="8964401184ba913b8139005288677db6"><span style="font-size: 14pt">"கல்யாணத்துக்கு பிறகு நம்ம மக சென்னைக்கு போயிடுவாளாங்க?" என்று ஜானகி வருத்தப்பட, "அட டாக்டர் மாப்பிள்ளை அமையறதே அதிசயம். இதுல நல்ல பையனா இருக்கான். இப்ப எல்லாம் டாக்டர் படிச்ச பசங்களை வச்சி பேரம் நடந்தி வரதட்சனையா எக்கசக்கம் பிடுங்கறாங்க. அந்த தம்பி எங்க வசதி இது தான், அதனால் பொண்ணு எனக்கு பிடிச்சிருக்கு கட்டி வச்சா போதும்னு பேசிட்டு போறார். இதுக்கு மேல வேற என்ன வேண்டும். சென்னை என்ன அடுத்த நாட்டுலயா இருக்கு?" என்று வரதராஜன் ஆறுதல்படுத்தினார்.</span></p>
<p data-p-id="aa3ab3cd175d5de5a17a186059dc9e0f"><span style="font-size: 14pt">ஜானகி அப்படியிருந்தும் முக்குறிந்தார். "அந்தம்மா சுகந்தி நல்லா தான் பழகறாங்க. ஆனாலும் என்னமோ நெருடுதுங்க'' என்று கவலைக் கொண்டார்.</span></p>
<p data-p-id="951db1ed9e4ee46b291c329c3a179ebb"><span style="font-size: 14pt">   "உனக்கு இப்படியொரு கலக்கம் இருந்தா மாப்பிள்ளையை பற்றியும் ஊர்ல அவங்க குடும்பத்தை பத்தியும் விசாரிச்சிடறேன் ஜானகி" என்று கல்லூரி பேராசிரியராக முடிவெடுத்தார்.</span></p>
<p data-p-id="f4159d2f71253991e2eb770055504b83"><span style="font-size: 14pt">    இதே முடிவை கிருபானந்தன் அல்லது சுகந்தி எடுத்திருக்கலாம். ஆனால் டாக்டர் வர்ஷினி எம்.பி.பி.எஸ் என்ற பலகையை தாங்கியதை பார்த்து கடந்து விட்டது அவர்களது அறியாமை.</span></p>
<p data-p-id="d5f18a3b80c57b32f21b0f594227d6a9"><span style="font-size: 14pt">   வரதராஜன் அடுத்த நாளே தனக்கு தெரிந்தவர் மூலமாக செழியனை பற்றி விசாரித்தனர்‌. நல்லவன் பண்பானவன், எளிமையானவன், நல்ல டாக்டர், பழகுவதில் இனிமையானவன் என்று கேட்ட இடத்தில் எல்லாம் தகவல் தந்தனர்.</span></p>
<p data-p-id="7efd1ad5bafe1c321a4d24e3251254bb"><span style="font-size: 14pt">திருநெல்வேலியிலிருந்து நாகர் கோவிலில் உள்ள செழியன் ஊருக்கு வந்து, சுகந்தி கிருபானந்தன் வீட்டிற்கு அருகாமையில் குடும்பத்தை பற்றி விசாரிக்க, "பையன் டாக்டர், அந்தம்மா கொஞ்சம் அப்படியிப்படி, யாராவது உரண்டை இழுத்தா, பதிலுக்கு தெருவே திரும்பி பார்க்கும் விதமா 'லபோதிபோ'னு கத்தும். அந்த பஞ்சாயத்தை எல்லாம், செழியனோட அப்பா கிருபானந்தன், மன்னிப்பு கேட்டு, கலைத்து நல்லவிதமா மாத்தி பொஞ்சாதியை கூட்டிட்டு போயிடுவார். மத்தபடி அவங்க நல்லவங்க' என்று கூறினார்கள்.</span></p>
<p data-p-id="18cf692e27f67646447dc07e6617179a"><span style="font-size: 14pt">சுகந்தி பற்றி சற்று பயம் கவ்வினாலும், மாமியார் என்றாலே சில பிக்கல் பிடுங்கல் உண்டு. அதோடு செழியனோடு சென்னைக்கு சென்றிடுவதால் பெரிதாக தினசரி சண்டைக்கு வாய்ப்பு இருக்காது. என்றாவது தானே அதை மகளே கவனித்துக் கொள்வாள். அதோடு பையன் நல்லவன், டாக்டர் என்பதால் மணமுடிக்க பூரண சந்தோஷத்தோடு கல்யாண வேலையை ஆரம்பித்தார்.</span></p>
<p data-p-id="835ee0f1587ea2683155d7f427f3aa04"><span style="font-size: 14pt">   மறுபக்கம் செழியன் வர்ஷினியோடு காதல் பறவையாக கதை அளந்தான்.‌</span></p>
<p data-p-id="b25c75c2e38907b32a4ce0546853efcc"><span style="font-size: 14pt">  மருத்துவம் பற்றியோ எந்த காலேஜ், ஹாஸ்பிடல்ல பற்றியோ பேசுவதை முதிலிலேயே செழியன் தவிர்த்துவிட்டான்.‌</span><br /><span style="font-size: 14pt">  </span><br /><span style="font-size: 14pt">  நான் மெடிஸன், நீயும் மெடிஸன் பத்தி பேசினா லைப் போர் அடிக்கும். ஹாஸ்பிடல் டாக்டர் மருந்துமாத்திரை இதை தாண்டி பேசலாமா? நாம லவ் பண்ணலாமா?' என்று ஆசையாக கேட்டு அவளையும் மனம் திறக்க வைத்து பேசினான்.</span></p>
<p data-p-id="8e52c7d691aba45c2781753aaa7274fa"><span style="font-size: 14pt">அதன் வெளிப்பாடு, வர்ஷினி மருத்துவம் பயின்றதாகவே செழியன் அறியலில்லை.</span><br /><span style="font-size: 14pt">   நம்ம ஆப்டர் மேரேஜ் வீட்டுக்கு வந்ததும் குளிச்சிட்டு, ஒன்னா சமைச்சி, ஒன்னா சாப்பிட்டு ஒன்னா பிளேட் வாஷ் பண்ணிட்டு ஒன்னா தூங்குவோம்.</span></p>
<p data-p-id="9cc1a0bd5ae4ea3af40cf1a31a796dd2"><span style="font-size: 14pt">  எனக்கு பையன் பொண்ணு இரண்டு குழந்தை வேண்டும்.' என்று பேச, "எத்தனை வயது இடைவெளியில் பையன் முதல்ல பிறக்கணுமா? பொண்ணு முதல்ல பிறக்கணுமா? என்று வர்ஷினியும் கேட்கும் அளவிற்கு குறுகிய கால கட்டத்தில் ஒருமனதாக மாறியிருந்தனர். நீயன்றி நான் இல்லை, நான் இன்றி நீயும் இல்லை என்ற ரீதியில் தான், பத்திரிக்கையில் பெயர் போடும் நாள் வந்தது.</span></p>
<p data-p-id="14159f89006eeba07ed38aec06370390"><span style="font-size: 14pt">    கிருபானந்தனிடம் தான் வரதராஜன் முதலில் வந்து "மாப்பிள்ளை சென்னையில் கல்யாணம் வைக்கறதா சொல்லிருந்தார். வெங்கடாசலம் மண்டபமா வெங்கி கல்யாண மண்டபமா? குழப்பமா இருக்கு?" என்று கேட்க வந்தார்.</span></p>
<p data-p-id="ef51015459ea084a2fb813070c0f5b19"><span style="font-size: 14pt">  செழியன் ஊர்ல தான் இருக்கான். இப்ப வந்துடுவான். நீங்களே கேளுங்க" என்று கூறிவிட்டார்.</span></p>
<p data-p-id="25abf0677b29e77299b5840570a30950"><span style="font-size: 14pt">  அதுவரை அங்கிருக்கும் கோவிலுக்கு செல்வதாக சொல்லிவிட்டு வரதராஜன் சென்றார்.</span></p>
<p data-p-id="bd3982f6f57c8a7bd5c7f9ada58c7da3"><span style="font-size: 14pt">  வரதராஜன் கோவிலில் மகளின் திருமணத்தை நல்லபடியாக முடித்து வைக்கும் பொருட்டு வேண்டினார்.</span></p>
<p data-p-id="dfbeda7a4bc2b6806395fec532d1b425"><span style="font-size: 14pt">  செழியனும் அவரருகே வந்து சேர்ந்தான்.‌</span></p>
<p data-p-id="84423787c4c9a30b8c1d5f76c811642a"><span style="font-size: 14pt">சாமி கும்பிட்டு இளப்பாரும் விதமாக ஒரத்தில் அமர்ந்தனர்.‌</span></p>
<p data-p-id="98f330d67df8e82af495e6db8069d7fa"><span style="font-size: 14pt">  "நானே சந்திக்கணும்னு நினைச்சேன் மாமா. நீங்களே வந்துட்டிங்க. கல்யாண பத்திரிக்கை அடிக்க மண்டம் பேரு தெரியலைனு கேட்டதா அப்பா சொன்னார்." என்று கேட்டான்.</span></p>
<p data-p-id="64d7843e57ec33f3883e728d8b9246fd"><span style="font-size: 14pt">  "ஆமா மாப்பிள்ளை... இந்த பக்கம் வர்ற வேலை இருந்தது. அப்படியே சம்பந்தியிடம் கல்யாண மண்டபம் பெயர்ல குழப்பம் இருந்ததா நேர்ல கேட்டுடலாம் வந்தேன்." என்று பத்திரிக்கைக்காக எழுதி வைத்ததை காட்டினார்.‌</span></p>
<p data-p-id="724a81bc8ef30eda5909e8c8456fe499"><span style="font-size: 14pt">  செழியன் அதை வாங்கி வாசித்து, "வெங்கி கல்யாண மண்டபம்' தான் மாமா." என்று திருத்தி கொடுத்தவன் கண்ணில் வர்ஷினி பெயர் பார்த்து வருடினான்.‌</span><br /><span style="font-size: 14pt">பக்கத்தில் எம்.பி.பி.எஸ் என்ற பெயருக்கு பதிலாக பி.பார்ம் என்று இருக்கவும், "மாமா... வர்ஷினி எம்.பி.பி.எஸ் எம்.டி தானே வரணும். இதென்ன பி.பார்ம் போட்டிருக்கு?' என்று கேட்டான்.</span><br /><br /><span style="font-size: 14pt">  "என் மக பி.பார்ம் தானே மாப்பிள்ளை‌ படிச்சிருக்கா. அவ வேலை செய்யற மெடிக்கல் ஷாப்புக்கு பக்கத்துல இருக்கற ஹாஸ்பிடல்ல தான் வர்ஷினினு டாக்டர் இருக்காங்க." என்று இலகுவாய் கூறினார்.</span></p>
<p data-p-id="7958b975033b60175dc5fa192cc90d5f"><span style="font-size: 14pt">  ''மாமா அப்ப வர்ஷினி டாக்டருக்கு படிக்கலையா?" என்று அதிர்ந்தான்‌.</span></p>
<p data-p-id="ee0c16df8749260862f1360c0bde56a9"><span style="font-size: 14pt">  அதை கேட்டு வரதராஜனோ "என்ன மாப்பிள்ளை இப்படி கேட்கறிங்க. அவ மெடிக்கல் ஷாப்ல வச்சியிருக்கா." என்று குறிப்பிட்டார்.</span></p>
<p data-p-id="ea6733fa4c3896798272c1f0dbc15fa4"><span style="font-size: 14pt">  செழியனோ ஜாதகத்தை போட்டோ எடுத்து வைத்ததால் அதை போனில் கேலரியிலிருந்து எடுத்துக்காட்டி, "இதுல டாக்டர்னு போட்டிருக்கு" என்று எடுத்து காட்டினான்.</span></p>
<p data-p-id="d3969874f4ab678ad24785b717ee2b6d"><span style="font-size: 14pt">"தம்பி.. அம்மா அப்பா பெயர்ல விஸ்வநாதன் ஜானகினு இருக்கு பாருங்க. இது நம்ம வர்ஷினி ஜாதகம் இல்லை." என்று அவரிடமிருந்த மகள் வர்ஷினி ஜாதகத்தை எடுத்து காட்டினார்.‌</span></p>
<p data-p-id="d4e35364644018e845975beb66f61f69"><span style="font-size: 14pt">  அப்பா பெயரில் விஸ்வநாதன் என்றிருக்க, குலதெய்வ பெயராக வரதராஜன் இருக்குமென்றா அல்லவா நினைத்து விட்டான்.</span></p>
<p data-p-id="acd8fa3130efd2b1040bf2a46e4d721d"><span style="font-size: 14pt">  செழியன் முகம் வெளிறியது. அதை விட, வரதராஜனோ "என்ன மாப்பிள்ளை இப்ப வந்து இப்படி கேட்கறிங்க. உங்களுக்கு முன்ன தெரியாதா? என் மக டாக்டர் இல்லைனு. அச்சோ.. டாக்டர் பையன் டாக்டர் பொண்ணு என்பதால தான் வர்ஷினியை கல்யாணம் செய்ய வீடு தேடி வந்திங்களா? இப்ப என் மக அப்படியில்லைன்னா என்னாகும்.</span></p>
<p data-p-id="e6811435c09fd13b8071eff0463c011c"><span style="font-size: 14pt">  என் பொண்ணுகிட்ட தினமும் பேசுவிங்களே அவகூட சொல்லலையா?" என்று கண்ணீரை சுரந்து புலம்பினார்.‌</span></p>
<p data-p-id="ba938fe4285770f1865cd00b5ae801de"><span style="font-size: 14pt">  "கல்யாண பத்திரிக்கை வரை வந்துடுச்சே.. கல்யாணம் நின்றா அசிங்கமாச்சே... அய்யோ.. வெளியே தெரிந்தா என்னவோ நாங்க உங்களை டாக்டர் பொண்ணுனு சொல்லி மோசடி செய்ததா இல்லையா பேச்சு வரும்" என்று இடைவிடாமல் பதறி அழுதார்.</span></p>
<p data-p-id="d72780e1d02c08ae448901ea87db7092"><span style="font-size: 14pt">-தொடரும்.</span><br /><br /><span style="font-size: 14pt">பிரவீணா தங்கராஜ்</span></p>]]></content:encoded>
						                            <category domain="https://onlinetamilnovels.com/community/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%88-%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%ae%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%b5%e0%ae%be-praveena-thangaraj/">நின் பார்வை தவமல்லவா!- Praveena Thangaraj</category>                        <dc:creator>Praveena Thangaraj</dc:creator>
                        <guid isPermaLink="true">https://onlinetamilnovels.com/community/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%88-%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%ae%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%b5%e0%ae%be-praveena-thangaraj/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%88-%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%ae%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%b5%e0%ae%be-5/</guid>
                    </item>
				                    <item>
                        <title>நின் பார்வை தவமல்லவா!-4</title>
                        <link>https://onlinetamilnovels.com/community/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%88-%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%ae%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%b5%e0%ae%be-praveena-thangaraj/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%88-%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%ae%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%b5%e0%ae%be-4/</link>
                        <pubDate>Fri, 03 Jul 2026 07:50:35 +0000</pubDate>
                        <description><![CDATA[அத்தியாயம்-4
  பத்து வருடத்திற்கு முன்....
தலையில் விறகு சுமந்து வந்து வீட்டின் பின் பக்கம் இருந்த மாட்டு தொழுவத்தில் அதை இறக்கி வைத்தார் ஜானகி.
  &quot;வர்ஷினி... வர்ஷினி&quot; என்று கூப்பாடு போட்...]]></description>
                        <content:encoded><![CDATA[<p data-p-id="16558097bdfd3e4861514b488879ed63"><span style="font-size: 14pt"><b>அத்தியாயம்-4</b></span></p>
<p data-p-id="33793c9c78e582fbd06da83a14604f9f"><span style="font-size: 14pt">  பத்து வருடத்திற்கு முன்....</span></p>
<p data-p-id="633eb99122991683599fdde987006db6"><span style="font-size: 14pt">தலையில் விறகு சுமந்து வந்து வீட்டின் பின் பக்கம் இருந்த மாட்டு தொழுவத்தில் அதை இறக்கி வைத்தார் ஜானகி.</span></p>
<p data-p-id="d19b5b94f28a058bdb687932e4d028b6"><span style="font-size: 14pt">  "வர்ஷினி... வர்ஷினி" என்று கூப்பாடு போட்டு, "கழுதை இன்னும் வீட்டுக்கு வரலை." என்று மண்அடுப்பில் விறகை நுழைத்து மண்ணெண்ணெய் ஊற்றி பற்ற வைத்தார்.</span></p>
<p data-p-id="60b35eb00e4f3a8149fc54f75b154d09"><span style="font-size: 14pt">  அதில் புகை மண்டலமாக மாறி இருமினார்.</span></p>
<p data-p-id="b3c4fdca9625a929a6f53cbb988945d6"><span style="font-size: 14pt">  "எத்தனை முறை சொல்லறது? கேஸ் ஸ்டாவ் இருக்கு இன்டக்ஸ் ஸ்டவ் இருக்கு, அதுலயே அப்பாவுக்கு சுடதண்ணி வைம்மானு. இன்னமும் கேஸை மிச்சப்படுந்தறேன், கரண்ட் பில்லை மிச்சப்படுத்தறேன்னு கரிஅடுப்புல உட்கார்ந்துட்டு இருக்கிங்க." என்று அம்மாவை திட்டியபடி, வர்ஷினி வந்தாள்.</span></p>
<p data-p-id="7385359fe233d91f57bc0dc511a509d0"><span style="font-size: 14pt">  "ஏன்டி... இருமலுக்கு மாத்திரை கேட்டேன். வாங்கி வந்தியா இல்லையா? வந்ததும் வராததும் ஆரம்பிக்கற?" என்று ஜானகி சலித்தார்.‌</span></p>
<p data-p-id="07a560a6e8ca8e129c873725365121f9"><span style="font-size: 14pt">  ''நான் பி.பார்ம் படிச்சது யாருக்கு வசதியோ இல்லையோ, உனக்கு நல்லா வசதியா போச்சு. இருமல், தலைவலி, மேல்வலி, கால்வலி, வயிற்றுவலினு என்னிடமே மாத்திரை வாங்கிட்டு வர சொல்லற. அதுவும் நான் வேலைப் பார்க்கற இடத்துலயே எடுத்துட்டு வர சொல்லற." என்று மாத்திரையை அங்கே அன்னை முன் வைத்துவிட்டு, முகமலம்பி கைகால் கழுவினாள் வர்ஷினி.</span></p>
<p data-p-id="607287d35b6d0078e7d1eb7ab02dcb21"><span style="font-size: 14pt">  "இந்த கேஸ் விலை எவ்வளோ தெரியுமா? ஆயிரத்துக்கு ரவுண்டா கொண்டாந்துட்டான்.‌ கரண்ட் பில்லு... ஏதோ சொந்த வீடுன்னு குறைவா இருக்கு. இதே வாடகை வீடுன்னு வை. அவ்ளோ தான்.</span></p>
<p data-p-id="09d672a39f7a570c7190c13af087600d"><span style="font-size: 14pt">  கழினி காட்டுக்கு காலார நடந்து போயிட்டு, வர்றப்ப விறகு பொறுக்கிட்டு வந்தா இதுலயே சுடத்தண்ணி வச்சிடுவேன். கால் காசு செலவு இல்லை.</span><br /><span style="font-size: 14pt">இந்த தண்ணில குளிக்கறது ஒரு சுகம். உங்கப்பா கால் வலிக்க பாடம் நடத்திட்டு வந்து இந்த தண்ணில குளிச்சார்னு வை. உடம்பு வலியெல்லாமா அப்படியே பறந்துடும்." என்று கூற வர்ஷினி அன்னையை முறைத்து கொண்டு, "நான் வேலைப் பார்க்குற மருந்துக்கடைக்கு பக்கத்துல, டாக்டர் வி.வர்ஷினி எம்பிபிஎஸ் இருக்கு. அவங்க அப்பா விஸ்வநாதன்.</span><br /><span style="font-size: 14pt">ஆனா அது நான் இல்லை. நான் வி.வர்ஷினி வரதராஜன். என்னமோ மாத்திரை போட்டா சரியாகிடும்னு என்னை டாக்டர் படிக்காம உனக்கு வைத்தியம் பண்ண வைக்காத. என்ன தான் இந்த வலிக்கு இந்த மாத்திரைன்னு எனக்கு தெரிந்தாலும், டாக்டரிடம் காட்டி அதுக்கு ஏற்றது போல தான் மாத்திரை மருந்தை எடுத்துக்கணும்." என்று கறித்துக் கொட்டி உடை மாற்ற சென்றாள்.</span></p>
<p data-p-id="6aa4cb0a0446ef16dcd608713f2f55e6"><span style="font-size: 14pt">   "ஆமா... அங்க போனா ஒன்னும் இருக்காது. டாக்டர் பீஸ் அழுவணும். போடி" என்று ஜானகி கரி அடுப்பிற்கு தீயை திகுதிகுவென எரிய வைத்தார்.</span><br /><span style="font-size: 14pt">‌</span><br /><span style="font-size: 14pt">    "ஜானகி ஜானகி" என்று கூப்பிட்டபடி வரதராஜன் வந்தார்.‌</span></p>
<p data-p-id="3991be1a64628eab8f9670b640832cb4"><span style="font-size: 14pt">  "இந்தா இங்க இருக்கேங்க. வெண்ணீ ரெடி. குளிக்க கொண்டு போய் ஊத்தவாங்க" என்று கேட்க, தோட்டத்துக்கே வந்து நின்றார் வரதராஜன்.‌</span></p>
<p data-p-id="dc93b41eeb24d6fb199a358490ecaae2"><span style="font-size: 14pt">  "வெந்நீரை அப்பறம் கலக்கு. நம்ம பாப்பாவோட போட்டோ, நல்லா இருந்தா கொண்டுவா. நம்ம பி.டி வாத்தியார் கேட்டார். எப்பவும் போல மதியம் சாப்பாடு சாப்பிட்டு பேசிட்டு இருந்தேன். நம்ம பொண்ணு படிச்சி முடிச்சி வேலைக்கு போகுது. நல்ல இடம் வந்தா கல்யாணம் செய்து கொடுக்கலாம்னு பேச்சு போக, அவருக்கு தெரிந்தவங்க ஒருத்தங்க இருக்காங்க. நம்ம சாதி சனம் தான். பிடி வாத்தியார் நம்ம வர்ஷினிக்கு அந்த வரன் செட்டாகும்ன்னு போட்டோ கேட்டார். அவர் வெளியே தான் இருக்கார்." என்று கூற, "அட என்னங்க நீங்க.. எல்லாம் நெஞ்சுவரை இருக்கற போட்டோவா இல்லை இருக்கு. முழுசா இல்லை... பரவாயில்லை இருங்க அதை கொண்டாந்து தர்றேன். " என்று அவசரமாய் ஓடினார்.</span></p>
<p data-p-id="dfa3f483c882a3bdee21aeb9abaf6b6c"><span style="font-size: 14pt">  ''ஏதோ ஒன்னு கொண்டுவா." என்று அவசரம் காட்டினார். பிடி வாத்தியார் வண்டியை கூட அணைக்காமல் வாசலில் நிற்பதால்...</span></p>
<p data-p-id="2a50e72b80e99c89594c6732bbd80b71"><span style="font-size: 14pt">  அறைக்குள் சுடிதாரை கழட்டி, நைட்டி அணிந்த வர்ஷினி காதில் துல்லியமாக இவர்கள் பேச்சுவிழ அவசரமாய் 'போட்டோ கொடுக்காதிங்க' என்று கூற நினைத்தாள். ஆனால் அம்மா வேகம் அப்பா அவசரத்தில்  போட்டோ பிடி வாத்தியார் உதவியால் கொடுக்கப்பட, அவரும் அவளது போட்டோவும் அங்கிருந்து சென்று விட்டது.</span></p>
<p data-p-id="50f0e78abdab44afc99673f137977d19"><span style="font-size: 14pt">  "யாரை கேட்டு என் போட்டோ கொடுத்திங்க? இப்ப நான் கல்யாணம் பண்ணி வையுங்கன்னு கேட்டேனா?" என்று கடுகு போல பொரிந்து வந்தாள் வர்ஷினி.</span></p>
<p data-p-id="068c4ef17852ad72738b734ff743ca75"><span style="font-size: 14pt">  "யாரை கேட்கணும்... கல்யாண வயசு ஆயிடுச்சு... படிச்சு முடிச்சி வேலையில் சேர்ந்துட்ட. ஒரே பொண்ணு.. இன்னமும் என்ன?" என்று ஜானகி கேட்க, "நான் லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கறேன்னே" என்று தந்தை அருகே அமர்ந்தாள்.</span></p>
<p data-p-id="f1968caef639a071174271566cf30ab9"><span style="font-size: 14pt">  அவரோ சட்டையை ஹாங்கரில் மாட்டி, "அம்மாவுக்கு பிபி ஏற்றி விளையாடாத" என்று கண்டித்து குளிக்க சென்றார் வரதராஜன்.‌</span></p>
<p data-p-id="e459c9537f9c72baecfceba1c0f62c0f"><span style="font-size: 14pt">  "உண்மையா சொல்லறேன்ப்பா. நான் விளையாடலை." என்று வர்ஷினி கத்தினாள்.‌</span></p>
<p data-p-id="4ffece036e15244f4a57bedb677db132"><span style="font-size: 14pt">  "ஆங்... மொசைப்பிடிக்கற மூஞ்சு, மூஞ்சியை பார்த்தா தெரியும். நீ காதலிக்க போறியா. இத்தனை வருஷம் வராத காதல், இப்ப கல்யாண பேச்சு எடுத்ததும் தொபுக்கடீர்னு வந்துடும். போடி அங்குட்டு" என்று ஜானகி டீ போட சென்றார்.</span></p>
<p data-p-id="d17a32591974d824ebc89c66842cd595"><span style="font-size: 14pt">  குளித்து முடித்து வந்ததும் வரதராஜனுக்கு சூடான டீ கையில் கொடுத்திடுவது ஜானகி வழக்கம்.</span></p>
<p data-p-id="7669036d054a7974f9de7570bd711e82"><span style="font-size: 14pt">  "அம்மா." என்று அன்னையின் முந்தானை பின்னால் சென்றாள் வர்ஷினி.</span></p>
<p data-p-id="5ac95413039489c8eff47ed95b060087"><span style="font-size: 14pt">  "இந்த டீயையும் கரி அடுப்புல வைக்க வேண்டியது தானே." என்று அன்னை வெந்நீர் மட்டும் அதில் பயன்படுத்த இடக்காய் பேசினாள்.</span></p>
<p data-p-id="2b5064a5ac5d51dd710cc318446f993e"><span style="font-size: 14pt">  "டீ வச்சிடலாம்... ஆனா கரிப்புகை வாடை, டீயில வரும். உங்காப்பாவுக்கு டீ குடிக்கிற சுவையே மறந்துடும்." என்று சூடாக ஆற்றினார்.‌</span></p>
<p data-p-id="95522d281661c5e3c59b6a20d4718657"><span style="font-size: 14pt">  வரதராஜன் வரவும், கையில் கொடுத்துவிட்டு அம்மா மகள் என்று அழகான குடும்பமாக கேலி கிண்டலுடன் படம் பார்த்து சிரித்து, தோசை ஊற்றி சாப்பிட்டு வெட்டியாக வானத்தை பார்த்து ஊர்க்கதை பேசி முடித்து உறங்குவார்கள்.</span></p>
<p data-p-id="41ebd6c8b2f471a7f9bfe719405c8461"><span style="font-size: 14pt">  அழகான அளவான குடும்பம். மிகவும் ரம்மியமாக வாழ்ந்து வந்தார்கள்.</span></p>
<p data-p-id="e6589d6cd096daec7034dff6bb90be76"><span style="font-size: 14pt">  அப்படி சென்றுக் கொண்டிருக்கும் தருணம், பிடி வாத்தியார் கொண்டு சென்ற புகைப்படம் திரும்பி வரவில்லை ஆனால் மாப்பிள்ளையை விட வர்ஷினி உயரம் என்று நிராகரிக்கப்பட்டது.</span></p>
<p data-p-id="d61098eac3f8ff4a3db752671ce56272"><span style="font-size: 14pt">  அதில் உச்சப்பட்ச கோபமாக 'இனி யாருக்காவது போட்டோ தந்திங்க அவ்ளோ தான்' என்று அதட்டினாள்.</span></p>
<p data-p-id="efcfa29e76c8916cdc27c6dc75c8f6f8"><span style="font-size: 14pt">    அதன் பின் தரகர் மூலமாக வரன்கள் பார்க்கப்பட்டது.</span><br /><span style="font-size: 14pt">  இந்த பெண் குழந்தைகளை பெற்றவர்களுக்கு கல்யாணத்திற்கு என்று மகளது வயது நெருங்கும் வரை அதை பற்றி யோசிக்க மாட்டார்கள். ஆனால் யாரேனும் பொண்ணு பார்த்தோ அல்லது திருமணத்திற்கு கேட்டு நிராகரிக்கப்பட்டாலோ, அடுத்த வரன் அமையுமோ அமையாதோ என்ற அச்சம் பிறக்க, தரகரிடம் இஷ்டத்திற்கு மகளின் ஜாதகத்தை கொடுத்து திணிப்பார்கள். தரகர்களுமே ஒரு ஜாதகம் கை மாற்றிவிட பணத்தை கறந்துவிடுவார்கள். அந்த ஜாதகம் முடிவாகின்றதோ இல்லையோ அது பெற்றவர்களின் தலையெழுத்து.</span></p>
<p data-p-id="33ea48c1d8ba8ac71722fd0ff5cb9f20"><span style="font-size: 14pt">இப்படி தான் வர்ஷினி ஜாதகம் பறந்தது.</span></p>
<p data-p-id="531229ac10f5dac3dab0867c520cabe3"><span style="font-size: 14pt">அப்படி பறந்து வந்ததில் தான் செழியன் வீட்டு டீப்பாயில் நிறைந்தது.</span></p>
<p data-p-id="4b1b95298d4dc397453aebed4e8d1841"><span style="font-size: 14pt">அதில் சிறு மாற்றமாக, வர்ஷினி மருந்துக்கடையில் வேலைபார்க்கும் பக்கத்தில் உள்ள டாக்டர் ஜாதகமும் வந்திருந்தது.</span></p>
<p data-p-id="fe1639750d8f3e88c835121395b45698"><span style="font-size: 14pt">  "என்ன தரகர்யா.. என் பையனுக்கு வாயை கட்டி வயித்தை கட்டி, டாக்டர் படிக்க வச்சிருக்கேன். அவனுக்கு ஏற்றவளா டாக்டர் படிச்ச பொண்ணு தான் வேண்டும். இந்த ஜாதகம் வேண்டாம்" என்று வர்ஷினி வரதராஜன் என்ற பெயரை நிராகரித்துவிட்டார்கள். ஆனால் வர்ஷினிபோட்டோ டாக்டர் வர்ஷினியின் ஜாதகத்தோடு இணைந்துக்கொண்டது.</span></p>
<p data-p-id="77dff1ff3c20899fb161e0c3e2a71590"><span style="font-size: 14pt">   "நம்ம செழியனுக்கு இந்த பொண்ணை தான் பார்க்கணும். ஏற்கனவே அந்த சுற்றுவட்டார இடத்துல டாக்டர் வர்ஷினி எப்படினு விசாரிச்சு வைக்கணும்" என்று சுகந்தி அள்ளி முடித்த கூந்தலை கொண்டயிட்டார்.</span></p>
<p data-p-id="30e36fb2cd2752a0c9f67cd5c5a558fc"><span style="font-size: 14pt">  சுகந்தி பற்றி சிறு அறிமுகம். மழைக்கு கூட பள்ளிக்கூடம்  ஒதுங்காத படிப்பறிவு இல்லாத தாயார். பையன் நன்றாக படிக்கவும் அதுவும் டாக்டர் ஆக வேண்டும் கலெக்டர் ஆகவேண்டுமென்று, கணினியில் கைகள் விளையாட வேண்டும் என்று ஏக்கத்துக்கு கணக்கிட்டு கனவுக்காணும் பெண்.</span><br /><span style="font-size: 14pt">  மகன் டாக்டர் படிக்க முடிவெடுத்ததும் நகை நட்டு விற்று, படிக்க வைத்ததில் மும்முரமாக இருந்தார்.</span></p>
<p data-p-id="a95868945741b8a794de8c9d29610f93"><span style="font-size: 14pt">   அனைத்தையும் வட்டி முதலுமாக மருமகளிடம் வாங்கிடலாமென்ற மிதப்பு. அப்படியில்லை என்றாலும் மகனை போலவே மருமகளையும் டாக்டராகவே பார்த்து மணம் முடித்திடும் கணக்கு.</span></p>
<p data-p-id="0cad92fac150e4f23c9a32dcd0e465e7"><span style="font-size: 14pt">   கிருபானந்தன் ஓரளவு பத்தாவது படித்தவர். அந்தக்காலத்தில் அவரது பரம்பரையில் அதிகம் படித்தவராக மதிக்கப்பட்டவர். ஆனாலும் பெரும்பாலான உறவுகள் எல்லாம் படிப்பறிவு அதிகமில்லாதவர்கள்.</span><br /><span style="font-size: 14pt">   அதன் காரணமோ என்னவோ மகனிடம் டாக்டர் வர்ஷினியை பற்றி கூறியதோடு சரி. போட்டோவுக்கு பின்னால் போன் நம்பர் இருந்திடவும் அவனாக வரதராஜனுக்கு அழைத்தார்.</span></p>
<p data-p-id="36a138463b54b6e1d05467f48386848c"><span style="font-size: 14pt">"சார் என்னுடைய பெயர் செழியன். நான் எம்.பி.பி.எஸ். எம்.டி முடிச்சிருக்கேன். வீட்ல பொண்ணு பார்த்துட்டு இருந்தாங்க. உங்க பொண்ணு ஜாதகம் போட்டோ அனுப்பியிருந்தாங்க. ஜாதகம் செட்டாகியிருக்கு" என்று அறிமுகமானான்.‌ கையில் வர்ஷினி போட்டோ வைத்திருந்தான். அவளை புகைப்படத்திலேயே செழியனுக்கு பிடித்துவிட்டது.</span></p>
<p data-p-id="69b2af4a752229fb0e1eb4145748856e"><span style="font-size: 14pt">"தம்பி... டாக்டரா?" என்று வியந்தவருக்கு, தங்கள் நிலைமையை விட இந்த வரன் அதிகம் அல்லவா? என்று தோன்றியது.</span><br /><span style="font-size: 14pt"> </span><br /><span style="font-size: 14pt">  எதிர்தரப்பில் செழியன் அதற்கும் சேர்த்து, "டாக்டர் என்றதும் ரொம்ப பெரிய இடம்னு நினைச்சிடாதிங்க சார். அதெல்லாம் இல்லை. எங்க பேமிலில கஷ்டப்பட்டு படிக்கறேன்னு என்னை டாக்டர் படிக்க வச்சியிருக்காங்க. மத்தபடி நாங்களும் உங்க அளவுக்கு மிடில் கிளாஸ் பேமிலி." என்று பதில் தந்தான்.‌</span></p>
<p data-p-id="215d38b6777b131eb7983a3dd62f863f"><span style="font-size: 14pt">  அதனால் தான் என்னவோ வரதராஜனுக்கு அந்த சந்தேகம் துளிர்க்கவில்லை.</span></p>
<p data-p-id="c60cfcf062c2f1190e9035e929a87e9f"><span style="font-size: 14pt">டாக்டர் படித்தவர் பிபார்ம் படித்த பெண்ணை மணக்க முன் வந்துள்ளார் என்று நினைத்து கொண்டார்.</span></p>
<p data-p-id="346dd66f23c77fda247c72a2bd3f1b1e"><span style="font-size: 14pt">   "தம்பி நான் காலேஜ் பிள்ளைங்களுக்கு பாடம் நடத்தறவன். சொந்தமா வீடு வாசல் நிலம் இருக்கு. அதை தவிர பொண்ணை படிக்க வச்சியிருக்கேன். என்னால சீர்செனத்தி இவ்ளோ தான் செய்ய முடியும். ஜாதகம் கூட நாங்க பார்க்கறது இல்லை... நல்ல குடும்பத்து மனுஷங்களா என்பதை மட்டும் தான் விசாரிக்கறோம்" என்று பேசவும், செழியனுக்கு வரதராஜன் பேச்சு பிடித்திருந்தது.</span></p>
<p data-p-id="64502dad128439ebd05e5c4f3287b7a1"><span style="font-size: 14pt">  "சார்... நான் டாக்டர்னா வரதட்சனை கேட்பான்னு நீங்களா தப்பா எடுத்துக்கறிங்களே. எனக்கு உங்க பொண்ணை மட்டும் கொடுங்க." என்று பேசினான்.</span><br /><br /><span style="font-size: 14pt">   வரதராஜனுக்கு "போனில் பேசியதை காட்டிலும், அப்பா அம்மாவை நேரில் கூட்டிட்டு வாங்க தம்பி மற்றது பேசலாம்." என்று முடித்துக் கொண்டார்.</span></p>
<p data-p-id="0417d638fa396cba5e3650cfb25ef9fb"><span style="font-size: 14pt">  செழியனுக்கு வர்ஷினியை பார்த்த பரவசம், அவளோடு மணக்கோலத்தில் கரம் பற்றிகனவுக் காண அடுத்த நாளே சென்னையிலிருந்து நேராக வருவதாக வாக்கு தந்தான்.</span></p>
<p data-p-id="5ea8310f16a6e0c10aa017eb76b5a2c3"><span style="font-size: 14pt">   வீட்டிலிருந்தவர்களில் அப்பா அம்மாவை மட்டும் அழைத்து கொண்டு பொண்டு பார்க்க சென்றான். மற்றவர்களை அழைத்து சென்றால் கண்ணுப்படும் என்று சுகந்தி, மகன் வந்ததும் அவனையும் கணவரோடு கமுக்கமாய் பொண்ணு பார்த்து பேசி வர புறப்பட்டார்கள்.</span></p>
<p data-p-id="65f1d0394413f86b24008b45990897db"><span style="font-size: 14pt">செழியன் கிளம்பும் போதே "உங்க பேச்சை குறைச்சுக்கோங்க. ஏதாவது தப்பும் தவறுமா, பேசி குழப்பப்படுத்தாதிங்க. அந்த பொண்ணிடம் டீசண்டா பிஹேவ் பண்ணுங்க. அவங்க அப்பா காலேஜ் லெக்சரர். மரியாதை இல்லாம பேசி வரனை தட்டி கழிக்காதிங்க" என்று சொல்லி அழைத்து வந்தான்.  வர்ஷினியை அவனுக்கு அந்தளவு பிடித்திருந்தது.</span></p>
<p data-p-id="ab7b80a8d953a4ec9803fa763c6b2546"><span style="font-size: 14pt">   தங்கள் வசதிக்கு டாக்டர் மருமகள் கிடைப்பதே அதிசயம். அதில் விரைவில் கிடைத்து விட்டாள். மகனுக்கும் பிடித்ததாக கூறிவிட்டான். ஏதேனும் பேசி தட்டிக் கழிக்காமல் மிதமாக பேசுவதாக வந்தார்கள். அவர்கள் செய்த தவறு அது தான்.</span></p>
<p data-p-id="a0bc51fce7a665baf3b3a8af77644e45"><span style="font-size: 14pt">-தொடரும்.</span></p>
<p data-p-id="a0bc51fce7a665baf3b3a8af77644e45"><span style="font-size: 14pt">பிரவீணா தங்கராஜ் </span></p>]]></content:encoded>
						                            <category domain="https://onlinetamilnovels.com/community/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%88-%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%ae%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%b5%e0%ae%be-praveena-thangaraj/">நின் பார்வை தவமல்லவா!- Praveena Thangaraj</category>                        <dc:creator>Praveena Thangaraj</dc:creator>
                        <guid isPermaLink="true">https://onlinetamilnovels.com/community/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%88-%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%ae%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%b5%e0%ae%be-praveena-thangaraj/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%88-%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%ae%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%b5%e0%ae%be-4/</guid>
                    </item>
				                    <item>
                        <title>நின் பார்வை தவமல்லவா!-3</title>
                        <link>https://onlinetamilnovels.com/community/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%88-%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%ae%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%b5%e0%ae%be-praveena-thangaraj/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%88-%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%ae%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%b5%e0%ae%be-3/</link>
                        <pubDate>Fri, 03 Jul 2026 07:48:52 +0000</pubDate>
                        <description><![CDATA[அத்தியாயம்-3
செழியன் &#039;வர்ஷினிக்கு கல்யாணமாகிடுச்சா&#039; என்று ஆர்யனிடம் கேட்க,ஆர்யனோ &quot;அதெல்லாம் தெரியலையேடா. அந்த புள்ள படிக்க உதவி கேட்டது பத்து வருஷத்துக்கு முன்ன. அதுவும் அவ அப்பா தான் வந்தா...]]></description>
                        <content:encoded><![CDATA[<p data-p-id="657dd66cdadd2751786e334ba16259ca"><span style="font-size: 14pt"><b>அத்தியாயம்-3</b></span></p>
<p data-p-id="4b1c9820721f66b6f743da8660acdf01"><span style="font-size: 14pt">செழியன் 'வர்ஷினிக்கு கல்யாணமாகிடுச்சா' என்று ஆர்யனிடம் கேட்க,ஆர்யனோ "அதெல்லாம் தெரியலையேடா. அந்த புள்ள படிக்க உதவி கேட்டது பத்து வருஷத்துக்கு முன்ன. அதுவும் அவ அப்பா தான் வந்தார். எங்கப்பா கொஞ்சம் படிப்புக்கு என்றதும் மெடிக்கல் சீட் வாங்கி தர சொன்னார். நான் உதவியது.</span><br /><span style="font-size: 14pt">   அதுக்கு பிறகு இதே போல இரண்டு கான்பரன்ஸ்ல பார்த்தேன். இது மூனாவது முறை. அந்த பொண்ணுக்கு கல்யாணமாகிடுச்சான்னு எல்லாம் நான் கேட்டதில்லையே. அவ நம்பர் எல்லாம் நான் சேவ் கூட பண்ணிவைக்கலை. வர்ஷினி கூட வந்த பொண்ணு அனிதாவிடம் கேளு சொல்வா. ஒரு வேளை சொல்லலாம்" என்று கூறியவன் யோசனை சட்டென சுடரிட்டது.</span></p>
<p data-p-id="a4de4f181a6fb5dc51f51cef21ad11e4"><span style="font-size: 14pt">  "செழியன்... அந்த பொண்ணு தான் இந்த பொண்ணா?" என்று கேட்க, செழியன் வலியோடு ஆமென்றான்.</span></p>
<p data-p-id="5e931c394decc49b4003b8e0c18cb902"><span style="font-size: 14pt">  "என்னடா நீ... இத்தனை வருஷத்தை வேஸ்ட் பண்ணின ஓகே. இப்ப என்ன தடுக்குது. அந்த பொண்ணிடம் ஒரு வார்த்தை கேட்டிருக்கலாம்ல? என்னிடம் வந்து கேட்கற. சரியான முட்டாள்டா நீ" என்று திட்டினான்.</span></p>
<p data-p-id="9c75e33dc4d27c92cfbf2b8448f0d873"><span style="font-size: 14pt">  செழியனோ "நான் கிளம்பறேன் ஆர்யன். அவளுமே டேபோடில்ஸ் பேரடைஸ்ல ஸ்டே பண்ணியதா பேச்சு வாக்குல சொன்னா. நான் முடிஞ்சா இன்னொரு முறை சந்திச்சு பேசறேன்." என்று மகிழ்ச்சியாக கிளம்பினான்.</span></p>
<p data-p-id="a776a08285a698e6189c4397667d2cfd"><span style="font-size: 14pt">  ஆர்யனோ "என்னவென்றாலும் எனக்கு போன் பண்ணுடா" என்று கூறி வழியனுப்பினான் ஆர்யன்.</span></p>
<p data-p-id="8b76dcb392977d3a688dd7794bcde500"><span style="font-size: 14pt">செழியன் அவனுக்கான கேப் புக் செய்து காரில் ஏறியதும், "ரூம் நம்பரை கூட கேட்கலை?' என்று மனதோடு புலம்பினான்.</span></p>
<p data-p-id="0ec44a890d1ec80b8994e6f8c4716061"><span style="font-size: 14pt">  இங்கு காலையில் வந்தப்பொழுது இருந்த மனநிலைக்கு மாறாக, இன்று அவளோடு உணவருந்திய தருணத்தை நினைத்து நினைத்து பார்த்து மகிழ்ந்தான். வாழ்நாள் எல்லாம் உன்னோட உட்கார்ந்து உன் கையால சமைச்ச சாப்பாட்டை சாப்பிடணும்.' என்ற வார்த்தைகள் எல்லாம் கனவில் நடந்தது போல பெருமூச்சை வெளியிட்டான். அவளோடு இணக்கமாக பேசியது எல்லாம் போன ஜென்மத்தில் நடந்தது போல அல்லவா காலம் மாற்றிவிட்டது. இப்பொழுது யாரோ எவரோ என்ற ரீதியில் அல்லவா பேசி சென்றுவிட்டாள். அப்படியெனில், அவளுக்கு திருமணம் நடந்து முடிந்திருந்தால்... மனசாட்சி இதையே சொல்லி மிரட்டி பிறகு அதுவே, 'முதலில் அவளிடம் பேசி தெளிவு பெற்றுக்கொள்' என்றது.</span></p>
<p data-p-id="c14b387beaa636b77962e7f227bf411e"><span style="font-size: 14pt">  அவசரமாய் தங்கிய ஹோட்டலில் நுழைந்தவன், கீழே ரிசப்ஷனில் அவளது பெயரை கூறி, அவளது ரூம் நம்பரை விசாரிக்க, "சாரி சார்.. எந்த கஸ்டமரோட டீட்டெயிலும் நாங்க தரக்கூடாது" என்று கூற தயங்கினார்கள் ஹோட்டல் நிர்வாகிகள். </span></p>
<p data-p-id="26b1de7031247d7f3e33d879a8543064"><span style="font-size: 14pt">  செழியனோ விடாமல்,''அந்த பொண்ணு பேரு வர்ஷினி. அவளும் டாக்டர் நானும் டாக்டர்.</span><br /><span style="font-size: 14pt">  அவளும் நானும் ஒரே கான்பிரன்ஸ்கு  தான் போனோம்‌. சந்திச்சு பேசினோம்‌. பட் போன் நம்பர் வாங்க மறந்துட்டேன்" என்று கெஞ்சாத குறையாக கேட்க, அப்பொழுதும் கொடுக்க மறுத்தனர்.</span></p>
<p data-p-id="2cc626fcc733b7d63dc677f35567543a"><span style="font-size: 14pt">  ஒருவர் அனுமதியில்லாமல் ஹோட்டல் நிர்வாகம் தரயியலாதே. "சார்... அவங்களிடம் நாங்க பேசி அவங்களா உங்களிடம் நம்பர் தர சொன்னா அப்ப தர்றோம்" என்றார்கள். தங்கியிருந்த அறைக்கு போனில் அழைக்க, அங்கே அனிதா பேசியபடி இருந்ததால் எடுக்கமுடியாமல் சதி செய்தது.</span></p>
<p data-p-id="9cbfd5dcae10c2b4f071761cb0c3aa69"><span style="font-size: 14pt">  ''அந்த மேடம் போன் எடுத்தா, உங்களை பற்றி சொல்லறேன். உங்க நம்பருக்கு கனெக்ட் பண்ணி கூட தர்றோம்" என்று கூறிடவும் சம்மதமாய் செழியன் அறைக்கு சென்றான்.‌</span></p>
<p data-p-id="6659e5002cc5219462b21825577bd36c"><span style="font-size: 14pt">  அனிதாவோடு காரில் ஏறிய வர்ஷினி செழியனை சந்தித்த ஆனந்தத்தோடு ஒருவித சோகமும் கலந்து வந்தாள்.</span></p>
<p data-p-id="76895321b1d5531602b999b02e056ee6"><span style="font-size: 14pt">  "ஏதோ எங்க ஊர் வந்தா எனக்கு நடுக்கும், அங்க யாராவது பார்த்தா வருந்தமா இருக்கும். நீ என் கூடவேயிருப்பியா அனிதானு கேட்ட. இன்னிக்கு சாப்பிடும் போது அந்த செழியனோட போனது. ரிட்டர்ன் வரும் வரை மேடம் டீப்பா அந்த பர்டிக்குலர் டாக்டர் கூட மட்டும் பேசின. யார் அவரு?" என்று கேட்டாள்.</span></p>
<p data-p-id="e1980dcfe934768fe9e346b49e599996"><span style="font-size: 14pt">  "தெரிந்தவர்... அப்பாவுக்கு தெரிந்தவர்" என்று கூறவும் அனிதா அதன் பின் காரில் வாய்திறக்கவில்லை. வர்ஷினி அப்பா என்ற வார்த்தை எடுத்தாலே அமைதியாகிவிடுவாள்.</span><br /><span style="font-size: 14pt">  அதனால் தந்தை என்ற டாபிக்கை பேசும் போது அனிதாவும் தவிர்த்து கொள்பவள்.</span></p>
<p data-p-id="b317ed25cedeb99a9afeb236c00b17f5"><span style="font-size: 14pt">  இப்பொழுது அறைக்கு வந்தப்பின்னும் அதையே கடைப்பிடித்தாள்.</span></p>
<p data-p-id="8ca525125c6a31b9a589f7eab35dc399"><span style="font-size: 14pt">   அனிதாவுக்கு அவளது குடும்பத்தினரிடம் தொலைப்பேசியில் வந்ததிலிருந்து பேச, வர்ஷினி அவளுக்கான அறைக்குள் வந்தாள்.</span></p>
<p data-p-id="060eac01c5e11238a8676bdf0132dff9"><span style="font-size: 14pt">   'அவர் இங்க தான் தங்கியிருக்கார். அவருக்கு இன்னமும் கல்யாணமாகலை. அவரிடம் அதிகமா பேசினா, என்னை மீறி அவர் தோளில் சாய்ந்து அழுதுடுவேன்.</span><br /><span style="font-size: 14pt">   உடனே ஓடி வந்தது தான் சரி." என்று முடிவெடுத்தாள்.</span></p>
<p data-p-id="0017fd435f7da491e5b72cfba4639884"><span style="font-size: 14pt">   செழியனோ அறைக்கு வந்தவன், 'இங்க தான் ஏதோவொரு ரூம்ல வர்ஷினி இருக்கா. அவளிடம் மறுபடியும் பேசணும்.' என்றவன்  இன்விடேஷனை தேடினான்.</span><br /><span style="font-size: 14pt">   அதில் கலந்துக்கொள்ள வந்தவரின் பெயர் பட்டியலை வாசித்தான்.</span></p>
<p data-p-id="d0db8b943744ac5620a30804c5fc0e6b"><span style="font-size: 14pt">  'V.Varshini M.B.B.S M.D என்ற பெயரை கவனித்தான்.</span></p>
<p data-p-id="0ba5f7f37a9ae18a5b01ed59991897d6"><span style="font-size: 14pt">  இந்த பெயரால் எத்தனை குழப்பம். முதலில் அவளது எண்ணை எப்படி கண்டறிய?' என்றவனுக்கு சிரமம் கொடுக்காமல் வர்ஷனியே அழைத்து விட்டாள்.</span></p>
<p data-p-id="897d3091e38332c1dd1548332138a709"><span style="font-size: 14pt">  அவளுக்கு ஆர்யனின் எண் அவளது அலைப்பேசியில் பதிவு செய்திருந்ததால், உடனடியாக ஆர்யனுக்கே நம்பரை போட்டு, செழியன் எண்ணை கேட்டு இதோ அழைத்துவிட்டாள்.</span><br /><span style="font-size: 14pt">ஆர்யனுக்கு இவளது எண் தெரியாது. அதனால் செழியன் கேட்டப்போது கொடுக்க முடியவில்லை‌. தற்போது வர்ஷினியே கேட்டதும் ஆர்யன் ஏன்? எதுக்கு? என்ற காரணமின்றி கொடுத்துவிட்டான். அவன் தான் செழியனின் விவரம் அறிந்தவன் ஆயிற்றே.</span></p>
<p data-p-id="369ee0b053535fe86f4f799eedff0cd5"><span style="font-size: 14pt">  செழியன் புது எண் என்று போனை எடுத்ததும். "ஹலோ டாக்டர் செழியன் இயர்" என்றதும், "நான் வர்ஷினி பேசறேன். ஆர்யன் அண்ணாவிடமிருந்து நம்பரை வாங்கினேன்." என்று படபடவென உரைத்தாள்.</span></p>
<p data-p-id="f3d22671325fb9c127ef31b1c7d3b287"><span style="font-size: 14pt">  "வர்ஷினி... இது உன் நம்பரா?" என்று கனவா நினைவா என்பதாக கேட்டான்.‌</span></p>
<p data-p-id="d6180aaa329c32edab9e9a902ad35ed8"><span style="font-size: 14pt">  முன்பு போலவே "ஆமா... என் நம்பர். பழைய நம்பர் நான் உபயோகப்படுத்தறது இல்லை." என்றாள். அது தான் செழியனுக்கு நன்றாக தெரியுமே. எத்தனை முறை அழைத்து பார்த்து, சலித்து, அவள் மட்டுமாவது நன்றாக இருக்கட்டுமென்று நினைத்தான்.</span></p>
<p data-p-id="304492ccfbda4db4b170d3a626964530"><span style="font-size: 14pt">   "சாரி... பேசிட்டே இருந்துட்டு அப்படியே அனிதா கூப்பிடவும் வந்துட்டேன். என்னை தப்பா எடுத்துக்காதிங்க." என்று மன்னிப்பு கேட்டாள் வர்ஷினி.</span></p>
<p data-p-id="083b5bd51020ca948789a12a56a263ef"><span style="font-size: 14pt">  "பரவாயில்லை... நீயும் இங்க தானே தங்கியிருக்க? சந்திக்கலாமா?" என்றான்‌ செழியன்.</span></p>
<p data-p-id="fd9104e4fc006dcb67fb173797f75bef"><span style="font-size: 14pt">  அவளிடம் பேசியபின்னே தவறாக கேட்டுவிட்டோமோ? அவளுக்கு கணவன், குழந்தை என்று இருந்தால்?</span></p>
<p data-p-id="e154fdb5adca4356a5a6ed6bfc8b3cc1"><span style="font-size: 14pt">  ஆனால் தான் தவறாக எண்ணி சந்திப்பை நாடவில்லை என்ற உண்மையும் எடுத்துரைத்தது‌ மனம். நீண்ட வருடமாக பார்க்காதவளை பார்த்ததில் செழியன் கேட்டதில் தவறில்லையே. அவன் வாழும் இந்த உப்பு சப்பில்லாத வாழ்க்கை, இந்த சந்திப்பால், மாறினாலும் மாறுமே.</span></p>
<p data-p-id="7fe9af49dffe806d031d3934cf1413cd"><span style="font-size: 14pt">  வர்ஷினியோ "அதுவந்து... ஈவினிங் வேண்டுமின்னா சந்திக்கலாம். இப்ப உடனே உடனேனா... அனிதா என்னை ஆயிரம் கேள்வி கேட்பா" என்று தன்னிலையும் விவரித்தாள்.</span><br /><span style="font-size: 14pt"> </span><br /><span style="font-size: 14pt"> செழியனும் அவளது நிலைமை புரிந்து, "இட்ஸ் ஓகே... நாம ஈவினிங் சந்திக்கலாம்." என்று கூறி, பரஸ்பரமாக போனை துண்டித்து கொண்டனர்.</span></p>
<p data-p-id="1af63ba454f0dedd740e99d987400ddc"><span style="font-size: 14pt">வர்ஷினி போனை துண்டித்தப்பின், 'இதுக்கு முன்ன எத்தனை முறை அவரிடம் உரிமையா பேசியிருக்கேன்.  அப்ப எல்லாம் பட்டர்பிளை பறக்கற மௌமெண்ட்ஸ்.</span><br /><span style="font-size: 14pt">   எங்களுக்கு கல்யாணம் பேசி முடிச்சியிருக்க, எப்படியெல்லாம் பேசியிருக்கோம். அதெல்லாம் மறந்து சாதாரணமா அவரிடம் என்னால எப்படி பேச முடிந்தது.</span></p>
<p data-p-id="20456faf6610ea9bbe3c5cf5fa0477c3"><span style="font-size: 14pt">  கல்யாணம் குழந்தை... அதுவும் இரண்டு குழந்தை வேண்டும்னு அவர் எவ்ளோ ஆசையா என்னிடம் கேட்டு பேசியிருக்கார்.</span></p>
<p data-p-id="bcd31598174e68445a227b3856de749e"><span style="font-size: 14pt">தானுமே வெட்கமில்லாமல் 'செழியன் நீங்க ரொம்ப மோசம்  போனை வையுங்க' என்று சிணுங்கி உச்சரித்து போனை துண்டிக்காமல் குழைவாக கிறக்கமாக எத்தனை கதை பேசியது. அந்த நாட்கள் எல்லாம் மறந்து, அவரை மறந்து இத்தனை வருடம் எப்படி கடத்தினேன்.' என்று கண்ணாடியில் தன் பிம்பத்தை கண்டாள்.</span></p>
<p data-p-id="8450764faad459af6c5c52961a28ad98"><span style="font-size: 14pt">அனிதாவுக்கு தனியறை, தனக்கும் தனியறை என்பதால் தன்னிலை யாருமறியாது மனதோடு அல்லவா உறவாடுகின்றது.</span></p>
<p data-p-id="a58c72a095d892afe3e8f7bbeb578165"><span style="font-size: 14pt">  இன்று அளவிற்கு அதிகமாக உன் முகம் ஆனந்தம் கொள்கின்றது. கனவில் உறவாடி பேசி மகிழ்ந்தவனோடு நேரில் நீண்ட வருடம் கழித்து பேசினேன். ஏனோ மனம் இறகு போல இதமாக உணர்கின்றது.</span></p>
<p data-p-id="ab03ce63e0c4be9474c01600c645c200"><span style="font-size: 14pt">   அவருக்கு இன்னமும் மணமாகவில்லை.' என்று மகிழ, அடுத்த நொடியே 'எப்படி திருமணம் அமையும். அவரது வாழ்க்கையை தான் மேடை போட்டு அவமானம் படுத்திவிட்டாயே' என்று எண்ண அங்கிருந்த மேஜையில் அமர்ந்து குலுங்கி அழுதாள்.</span></p>
<p data-p-id="0839fefe4021353b81237eae2928edcc"><span style="font-size: 14pt">   எத்தகைய அவமானம் ஒரு ஆண்மகனை அந்த இடத்தில் நிற்க வைத்து அவமானப்படுத்தியிருக்க கூடாது.</span></p>
<p data-p-id="d234179ba43e55c4c2a727916d370e2e"><span style="font-size: 14pt">   அவர் அதை அவமானமாக கருதினாலும், தன்னை ஒருவார்த்தை கடியவில்லையே. தன் தந்தையை உயர்த்தி மதிக்கின்றார். ஆனால் அவரது குடும்பத்தோடு வாழவில்லை என்றாரே. அவருடைய அம்மாவிடம் பேசி பத்து வருடத்திற்கு மேலானது என்றாரே ஏன்?</span></p>
<p data-p-id="6e357d889fa1e97e730b8649830e3bfb"><span style="font-size: 14pt">  பத்து வருடமென்றால் அது என்னால் மட்டுமே. இதுக்கூட புரியாதவளா நான்.</span></p>
<p data-p-id="db6740665cee23fac739328970fc3ce0"><span style="font-size: 14pt">   இந்நேரம் செழியன் சந்தோஷமாக வாழ்வார் என்று எண்ணியதற்கு மாறாக அவரும் என்னை போல மனம் வருந்தி வாழ்ந்து வருகின்றாரோ. எங்களை ஏன் இந்த விதி மீண்டும் சந்திக்க வைத்தது.</span><br /><span style="font-size: 14pt">  நானும் அவரும் பேசியதை அவர் அம்மா அறிந்தால், பிரச்சனை மீண்டும் வெடிக்குமோ?</span><br /><span style="font-size: 14pt">  </span><br /><span style="font-size: 14pt">  என்னயிருந்தாலும் அன்று கடைசியாக அவர் பேச்சை கேளாது இறங்கி வந்தது நான்.</span></p>
<p data-p-id="276e531dc1d47c24979f27a3abbcbd2f"><span style="font-size: 14pt">  அவர் வீட்டுக்கு வந்தப்பொழுது அப்பாவிடம் பேசிய நேரம், "என்னை என் பெயரிட்டு அழைத்தார். அப்பொழுதும் வெளிவராமல் புதைந்து கொண்டது நான். அம்மா இறப்பில் அவரை திட்டி அனுப்பி இருந்தேன்.</span></p>
<p data-p-id="dc2282ecfa1c60bd83796282ce0a3a48"><span style="font-size: 14pt">   என்‌ மீது தான் தவறு. அவர் வாழ்வு இத்தனை காலம் மலராமல் வாடியதற்கு நான் மட்டுமே காரணம் என்று துடித்தாள்.</span></p>
<p data-p-id="2cc73a789834dde35de30307a2eb8e32"><span style="font-size: 14pt">கண்ணாடியில் இருந்த அவளது உருவமோ கேலியாக நகைத்து, "அவர் வாழ்க்கை தனிமரமாக நிற்கறார்னு புலம்பறியே, இங்கே உன் வாழ்க்கை மட்டும் வசந்தமாய் அல்லவா மணக்கின்றது. நீயுமே கடனே என்று கடமைக்கு என்று வாழ்கின்றாய். நீயும் தான் தனிமரமாய் தவ வாழ்வில் மிதக்கின்றாய்.</span></p>
<p data-p-id="a24e0b0f0b4e5d2648b25d565f1c37d2"><span style="font-size: 14pt">  இந்த இடைப்பட்ட காலத்தில் காதல் என்று அருகே வந்தவர்களிடம் கூட, 'ப்ளீஸ் நான் யார் காதலையும் ஏற்க முடியாது.' என்று மறுத்துவிட்டாயே.</span><br /><span style="font-size: 14pt"> </span><br /><span style="font-size: 14pt">  கல்லூரியில் மட்டுமா? இதோ பணிப்புரியும் இடத்தில் கூட, 'நம்ம கல்யாணம் பண்ணிக்கலாமா வர்ஷினி?' என்று மொய்தீன் கேட்டார்.</span></p>
<p data-p-id="de3aa75baba22b556e1591486e6ec7f6"><span style="font-size: 14pt">  மதத்தை காரணம் காட்டி அழகாக தப்பிக்க பார்த்தாயே. ஏன்.. ஏன்... செழியனை தவிர வேறொருவனை ஏற்க மனமின்றி இப்பொழுது வரை தனியாக நின்று கண்ணாடியோடு பிதற்றுகின்றாய்.' என்று மனசாட்சி அதட்டியது.</span></p>
<p data-p-id="88550055a2e213d751b91718775e21c6"><span style="font-size: 14pt">  காலம் முழுக்க தனியாக வாழ்வதில் தவறில்லை. ஆனால் அவர் ஏன் தனியாக வாழணும். எனக்கு தான் அதட்டி மிரட்டி கல்யாணத்தை செய்து வைக்க தந்தை இல்லை. அவருக்கு தாய் தந்தை இருந்தும், அவர்கள் என்ன செய்கின்றார்கள்.</span></p>
<p data-p-id="5150a971f417088e0f7c5862cf2c6259"><span style="font-size: 14pt">  அந்த பெரிய மண்டபத்தில் வாய் கிழிய பேசி எங்களை பிரித்தவருக்கு மகனின் வாழ்க்கைக்கு அவரிடம் மல்லுக்கட்டி பேசியிருக்க வேண்டாமா? பத்து வருடம்... பத்துவருடம் சாதாரண விஷயமா? என்றவளுக்கு பழைய நினைவுகள் வரிசை கட்டி வந்தது.</span></p>
<p data-p-id="d72780e1d02c08ae448901ea87db7092"><span style="font-size: 14pt">-தொடரும்.</span><br /><br /><span style="font-size: 14pt">பிரவீணா தங்கராஜ் </span><br /><br /><br /><br /></p>]]></content:encoded>
						                            <category domain="https://onlinetamilnovels.com/community/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%88-%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%ae%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%b5%e0%ae%be-praveena-thangaraj/">நின் பார்வை தவமல்லவா!- Praveena Thangaraj</category>                        <dc:creator>Praveena Thangaraj</dc:creator>
                        <guid isPermaLink="true">https://onlinetamilnovels.com/community/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%88-%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%ae%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%b5%e0%ae%be-praveena-thangaraj/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%88-%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%ae%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%b5%e0%ae%be-3/</guid>
                    </item>
				                    <item>
                        <title>நின் பார்வை தவமல்லவா!-2</title>
                        <link>https://onlinetamilnovels.com/community/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%88-%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%ae%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%b5%e0%ae%be-praveena-thangaraj/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%88-%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%ae%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%b5%e0%ae%be-2/</link>
                        <pubDate>Fri, 03 Jul 2026 07:43:24 +0000</pubDate>
                        <description><![CDATA[அத்தியாயம்-2
   நீண்ட நாட்களுக்கு பின், அல்ல.. அல்ல... நீண்ட வருடங்களுக்கு பின் செழியன் மனதார முறுவலித்து &quot;அப்பா எப்படியிருக்கார்?&quot; என்று ஆர்வமாய் கேட்டான்.
  &quot;அப்பா... மூனு வருஷத்துக்கு ம...]]></description>
                        <content:encoded><![CDATA[<p data-p-id="0cc4e4bd7a1c8784464298418e701dc7"><span style="font-size: 14pt"><b>அத்தியாயம்-2</b></span></p>
<p data-p-id="50443b512b92c36080f0f97b88238d8e"><span style="font-size: 14pt">   நீண்ட நாட்களுக்கு பின், அல்ல.. அல்ல... நீண்ட வருடங்களுக்கு பின் செழியன் மனதார முறுவலித்து "அப்பா எப்படியிருக்கார்?" என்று ஆர்வமாய் கேட்டான்.</span></p>
<p data-p-id="2941970707b0088fbd961464ff7e214b"><span style="font-size: 14pt">  "அப்பா... மூனு வருஷத்துக்கு முன்ன இறந்துட்டார்." என்று கூறியவள் தண்ணீரை பருகி முடித்தாள் வர்ஷினி.</span></p>
<p data-p-id="0c956baa8fe5ab1ae3552baece19fe34"><span style="font-size: 14pt">  செழியன் இதை எதிர்பார்க்கவில்லை‌‌. "சாரி." என்றான்.‌</span></p>
<p data-p-id="43dd84e4498f5127b9d37424d4d3d158"><span style="font-size: 14pt">  "இட்ஸ் ஓகே. ரொம்ப வருஷம் கழிச்சு அப்பாவோட நலனை பத்தி விசாரிக்கவும், அவரை பத்தி பேசற வாய்ப்பு அமைந்தது." என்று கூறினாள். அவள் பேசியபடி தட்டிலிருந்த உணவை சுவைத்தவள், "சாப்பிடுங்க" என்று செழியனையும் சாப்பிட ஊக்கினாள்.</span></p>
<p data-p-id="c108b6063dc4942b328a1934e423a68f"><span style="font-size: 14pt">  "ரொம்ப நல்ல மனிதர். அவரிடம் பழகிய சந்தர்ப்பம் குறைவு என்றாலும், நான் உயர்வா மதிப்பு வச்சியிருக்கற பட்டியலில் உங்கப்பாவும் ஒருத்தர்." என்று பெருமையாக பேசினான்.</span></p>
<p data-p-id="2afbc255c053467c4eb9734e579e60b6"><span style="font-size: 14pt">  அவன் பேசிவிட்ட பொழுதிலும், மனதிற்குள், இவ பேச்சுலர் ஆஃப் பார்மஸில படிச்சா? இப்ப டாக்டரா முன்னாடி வந்து நிற்கறா? அதை பத்தி கேட்போமா?' என்று மூளை கேட்டது. மனமோ 'அவ படிப்பை வச்சி தானே இத்தனையும்.. இதை வேற அவளிடம் கேட்கணுமா? இந்த இடைப்பட்ட பத்து வருடத்தில் எம்.பி.பி.எஸ் முடிச்சிருக்கா. இதை யூகிக்க முடியாதா? அதோட அவ படிச்சதுக்கு காரணம் வேற உனக்கு புளி போட்டு விளக்கணுமா?</span></p>
<p data-p-id="c5e1a46411b549d2973be9337dd3c98d"><span style="font-size: 14pt">  ஒன்னும் ஒன்னும் இரண்டுனு கணக்கு போட தெரியாது' என்று திட்டாத குறையாக எடுத்தெறிந்து பேசியது.</span><br /><span style="font-size: 14pt">  அவன் இதயம் இந்த விஷயத்தில் எத்தனை அவமதிப்பாக கூறினாலும் தாங்கிக்கொள்ள வேண்டும். உண்மையில் மூளை கூட சில நேரம் மூளையற்று சிந்திக்கும். இந்த இதயம் என்றுமே நியாயமாய் பேசுமே என்று செழியனுக்குள் பேசிக்கொண்டிருக்க, எதிரே அமர்ந்தவள் மட்டும் என்ன தட்டில் உள்ள பன்னீரை ஸ்பூனால் குத்தி எதையும் மனதோடு பேசாமல் இருப்பாளா?!</span></p>
<p data-p-id="6336ca02e8d8f875bfde55dccd63a2f4"><span style="font-size: 14pt">  'இவருக்கு கல்யாணமாகிடுச்சா? அவர் பெர்ஸனலை பற்றி கேட்டா தப்பா எடுத்துப்பாரா? அப்பவே அவருக்கு வலை வீசி பொண்ணு தேடினாங்க. இப்பவரை திருமணமாகாம விட்டு வைப்பாங்களா அந்த ஆன்ட்டி.</span></p>
<p data-p-id="18ea9c51a298f40d77fe9dcdd1019e94"><span style="font-size: 14pt">  ஆன்ட்டி... என்று மரியாதை அதிகப்படியோ? தான் பார்க்கும் மருத்துவ தொழிலுக்கு அநாகரிகமாய் பெயர் வைக்க கூடாது.</span></p>
<p data-p-id="520fb5ffdcb03cbb3d2d49f92cbb8c28"><span style="font-size: 14pt">  'மற்றவர்கள் எப்படியோ, நம்ம விஷயத்தில் நாம நல்லவங்களா இருக்கணும் வர்ஷினி.' என்ற தந்தை வரதராஜனின் வார்த்தை இன்று ஒலிப்பது போல கேட்டது.</span></p>
<p data-p-id="31ba714b39b94581fa8eb6021cc7f9a3"><span style="font-size: 14pt">  தந்தையை எண்ணியதும் முனுக்கென்ற கண்ணீர் துளி எட்டிப்பார்க்க, "சாரி" என்று அங்கிருந்த டிஸ்ஸு பேப்பரை எடுத்து, பட்டும் படாமலும் ஒற்றி எடுத்தாள் வர்ஷினி.</span></p>
<p data-p-id="95254619099052b081e1fe379aaf62b1"><span style="font-size: 14pt"> வர்ஷினி எழவும், "கிளம்பறியா?" என்று அவசரமாய் சற்று வார்த்தை பக்கத்து டேபிளில் இருப்பவர் காதுவரை கேட்டுவிட்டான்.</span></p>
<p data-p-id="7c8f76ef601801490321f4d8d7a8edd7"><span style="font-size: 14pt">  வர்ஷினி "இ..இல்லை.. பன்னீர் டிஸ் வாங்க எழுந்தேன்" என்று சமாளித்தாள். அவளுமே ஒரு ஞாபகத்தில் எழுந்துவிட்டாள்‌. ஆனால் சாப்பிடாமல் கொள்ளாமல் எழுந்து சொல்வதாக காட்டிக்கொண்டால் 'இவள் எதையும் மறக்கவில்லை' என்று செழியன் நினைக்க வாய்ப்புண்டு என்று சமாளித்தாள்.</span></p>
<p data-p-id="7b2517c6181efda82c1a6488bb86a4ba"><span style="font-size: 14pt">  செழியன் ஒரு புன்னகை உதிர்க்க அவள் பஃப்பே இடம் நோக்கி நடந்தாள்.</span></p>
<p data-p-id="d0915e5773bcab2fc1fafe2671e58131"><span style="font-size: 14pt">   இப்படியே பார்த்து முடித்தால் போதுமா? அவள் எழுந்து இதே போல சென்றுவிட்டாள் என்ன செய்ய போகின்றாய். அவள் எங்கே இருக்கின்றாளென்று கேட்டு வை' என்று மனசாட்சி அவசரப்படுத்தியது.</span></p>
<p data-p-id="a24513ef8aaa709c0a8e2d6da7f3e17a"><span style="font-size: 14pt">   வெகு இயல்பாய் காட்டிக்கொள்ள செழியன் மெனக்கெட, வர்சினியும் அவ்வாறே தன்னிலையை சமன்படுத்த துவங்கினாள்.</span></p>
<p data-p-id="6cd4db75efe38baed3854b883d2dceff"><span style="font-size: 14pt">  அவர் முன்ன அழுது தொலைக்காதே இதயமே என்று இறைஞ்சிக் கொண்டாள்.</span></p>
<p data-p-id="30b72c794eacb53f3aba8353abef3fa3"><span style="font-size: 14pt">   வர்சினி வரவும், "எங்க இருக்க? அதே வீட்லயா?" என்று கேட்டான்‌.</span></p>
<p data-p-id="ab80efa359d221e7bbcaecebf76f7380"><span style="font-size: 14pt">  வர்சினியோ, "இல்லை... அந்த வீட்டை விற்றுட்டோம். வீடுன்னு இல்லை... அங்க இருந்த நிலமும் விற்றுட்டோம். வீடு, நிலம், சேவிங்க்ஸ்ல போட்ட பணம், கல்யாணத்துக்கு வாங்கின நகை" என்றவள் எச்சிலை விழுங்கி "எல்லாத்தையும் வச்சி தான் அப்பா டாக்டருக்கு படிக்க வச்சார்.</span></p>
<p data-p-id="c87dc9590ad0dfa4e5678622b35e849f"><span style="font-size: 14pt">  எம்.பி.பி.எஸ் சீட்டு கிடைக்க யார் யார் கால்லயோ விழுந்தார். அப்ப தான் ஆர்யன் அண்ணாவை சந்திக்க வாய்ப்பு கிடைச்சது. ஆர்யன் அண்ணா தான் மெடிக்கல் படிக்க சீட் வாங்கி தந்து உதவினார்.</span><br /><span style="font-size: 14pt"> </span><br /><span style="font-size: 14pt">    மற்றது எல்லாம் அப்பா பார்த்துக்கிட்டார். அப்பா நினைச்ச மாதிரியே என்னை டாக்டர் படிக்க வச்சிட்டார். அதுக்கு பிறகு தான் இறந்துட்டார்.</span></p>
<p data-p-id="a5a974e3236497b18be9e3d9054870f6"><span style="font-size: 14pt">  ஒருவேளை வைராக்கியமா படிக்க வைக்க ஆசைப்பட்டதை நடத்தி காட்டிட்டு, இனி வாழ்வது போதும்னு போயிட்டார்.</span><br /><span style="font-size: 14pt">  என்னை தனியா விட்டுட்டு போயிட்டார்." என்றவளால் கண்ணீரை கட்டுப்படுத்த முடியாது டிஸ்ஸு பேப்பரால் துடைத்தாள்.</span></p>
<p data-p-id="93f186e6803a29d432a14a59f98a98db"><span style="font-size: 14pt">  "சாரி... நானும் அழக்கூடாதுன்னு தான் முயற்சி பண்ணறேன். ஆனா முடியலை. அப்பா இறப்பு அந்தளவு மனசோட ஒன்றிடுச்சு.</span><br /><span style="font-size: 14pt">   என்ன கேட்டிங்க... எங்க தங்கியிருக்கிக்கன்னா..‌ சென்னையில ஓரகடத்து இருக்கேன். என்னை பத்தி விடுங்க. உங்களை பத்தி சொல்லுங்க." என்று உற்சாகமாக மாற முயன்றாள்‌.</span></p>
<p data-p-id="926aa5d6b944f5d33bd89762e009ad85"><span style="font-size: 14pt">"நான் சென்னை திருமங்கலத்துல இருக்கேன்." என்றான்.</span></p>
<p data-p-id="509131e6fbd279c54465ab67bec3703e"><span style="font-size: 14pt">  இடத்தை மட்டும் கூறிவிட்டு உணவை சுவைக்க, "ம்ம்ம் குடும்பம்... குழந்தை.. ஆ..ஆன்ட்டி எப்படியிருக்காங்க. அங்கிள் எல்லாம் இங்க இருக்காங்களா? இல்லை உங்களோட சென்னையில இருக்காங்களா?" என்று ஆவலாக கேட்டாள்.</span></p>
<p data-p-id="f411d5e724d0f11202de16e719773b21"><span style="font-size: 14pt">  அவள் கேட்ட தோரணையில் அவனை பற்றி அறியும் ஆவல் அதிகமாக இருந்தது.</span><br /><span style="font-size: 14pt">  அழகான மனைவி அன்பான குடும்பம், எட்டு வயதிற்குள், செழியனின் முக அமைப்பில், ஒரு குழந்தையை எதிர்பார்த்து ஆசையாக கேட்டாள்.</span></p>
<p data-p-id="6f82b2e9c2d72addb79f1e1a764df5f8"><span style="font-size: 14pt">  அவளை போலவே நிதானமாக, "அப்பா அம்மா என் கூடயில்லை. பத்து வருஷத்துக்கு முன்னவே அவங்களை சில காரணத்தால் விலகி நிறுத்திட்டேன். அப்பாவோட மந்த்லி இரண்டு முறை பேசுவேன். அம்மாவிடம் பேசி பத்து வருஷத்துக்கு மேல ஆகுது. ஏன் இங்க வந்தும் பத்து வருஷத்துக்கு மேல ஆகுது. இப்ப தான் வர்றேன். 'மலர் பேரடைஸ்ல தங்கியிருக்கேன்‌. இந்த காண்பரான்ஸ் முடியவும் இன்னிக்கு நைட் கிளம்பணும்" என்றான். நாசூக்காய் அவன் அம்மாவுக்கு அவனால் வழங்கப்பட்ட தண்டனையை எடுத்துரைத்தான்.</span></p>
<p data-p-id="7fa8efa55494712a3dd17b9e2ab2c9b9"><span style="font-size: 14pt">  வர்ஷினி சிறிது நேரம் பேசுவதை நிறுத்தினாள். பத்து வருடம் முன் நிகழ்ந்ததுக்கு இப்பொழுது வரை பேசாமல் இருக்கின்றாரா? அப்படியெனில் அதற்கு காரணம்? என்று நெஞ்சை தொட்டு இருக்கையில் சாய்ந்தாள்.</span></p>
<p data-p-id="73e4b5406bf89630357ff6c18fe50cb2"><span style="font-size: 14pt">  "குழந்தை எல்லாம் இல்லை." என்றான் மொட்டையாக.</span></p>
<p data-p-id="1bae42530944d3ce3c5c00f466deff7f"><span style="font-size: 14pt">  ''ஏன்." என்றாள்.</span></p>
<p data-p-id="2a65ff2fe9ca6e46d4611377da7b102a"><span style="font-size: 14pt">'குழந்தை என்றால் கொள்ளைப் பிரியம் எனக்கு இரண்டு குழந்தை வேணும் வர்ஷூ' என்றானே குழைவாக. அந்த குரல் இன்னமும் தன்னை ஆட்கொண்டு வதைக்குமே.</span></p>
<p data-p-id="4f6d5fda3d8d1fbd2130fcc09b24a1d3"><span style="font-size: 14pt">''ஏன்னா... எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலை. கல்யாணம் பண்ணாம குழந்தை இல்லையே." என்றான் செழியன்.</span></p>
<p data-p-id="d00ef38d3f25378fd1d734d7e67f3b03"><span style="font-size: 14pt">  அதிர்ச்சிக்காட்டி "ஏன்" என்று விழிகளை உருட்டி கவலைத்தோய்ந்து கேட்டாள்.</span></p>
<p data-p-id="5838c5447838ddcafe824b753c448647"><span style="font-size: 14pt">   "ஏன்னா... தெரியலை.. மனசுல கல்யாண ஆசையே ஓடிப்போயிடுச்சு" என்று விரக்தியாக சிரித்தான்.</span></p>
<p data-p-id="10aa52100b5b5448d359ca947a8fdfbd"><span style="font-size: 14pt">    இம்முறை தன்னை சமாளிக்க, "ஹாண்ட்வாஷ் பண்ணிட்டு வந்துடறேன்" என்று காலி தட்டை காட்டி வைத்துவிட்டு வருவதாக உரைத்தான் செழியன்.</span></p>
<p data-p-id="824298dd3274b7e6bb95f242009a6815"><span style="font-size: 14pt">  சாப்பிட்ட தட்டை அதற்குண்டான இடத்தில் வைத்துவிட்டு, ரெஸ்ட் ரூம் வந்தான்.</span></p>
<p data-p-id="ad400aad67c55ccc9b7c766b6dcea4d1"><span style="font-size: 14pt">  எதிரே பெரிய கண்ணாடி இருந்தது. முகத்தை கண்டான். நீண்ட வருடம் கழித்து முகம் தெளிவாக இருப்பதாக உணர்ந்தான்.</span></p>
<p data-p-id="477944749ce22065ae33208a354ac2db"><span style="font-size: 14pt">  'அவளுக்கு கல்யாணமாகிடுச்சான்னு தெரியலையே" என்று கையை அலம்பி, அங்கே உடனடியாக கையை உலரவைப்பதற்கு டிரையரில் கையை நீட்டினான்.‌</span><br /><span style="font-size: 14pt">  நொடியில் சிறு சப்தம் கொடீத்து கையை ஈலர வைத்தது அந்த இயந்திரம். </span></p>
<p data-p-id="20a280ec40edb2e50bbef73fe7e2d628"><span style="font-size: 14pt">  தன் கையை பேண்ட் பேக்கெட்டில் நுழைத்து, வர்ஷினி நோக்கி வந்தான்.</span></p>
<p data-p-id="f58727dbbef0933dccc54fecba5b36a0"><span style="font-size: 14pt">  அவளுக்குமே சாப்பிட பிடிக்காமல் தட்டை அதன் இடத்தில் வைத்து ஸ்பூனால் அள்ளி விழுங்கியதால் டிஸ்ஸு பேப்பரால் உதட்டை துடைத்து நீரை அருந்தினாள்.</span></p>
<p data-p-id="64d7cb329431d62fb64cec77d75cbd36"><span style="font-size: 14pt">  கழுத்து பகுதி தூக்கியபடி தண்ணீர் பொத்தனிலிருந்து‌ தண்ணீரை குடிக்க, அவளது சங்கு கழுத்தில் தாலியை தேடினான்.</span></p>
<p data-p-id="ebf98a2bd217d88064919c1b9a649d8d"><span style="font-size: 14pt">     ஸ்வீட் பீடா, இனிப்பு சீரகமும் கொடுக்க, அவனோ அவளுக்கென்று பனிக்கூழை கொண்டு வந்து நீட்டினான்.‌</span></p>
<p data-p-id="4f178a250906eaea5db3fcb7eabe828b"><span style="font-size: 14pt">  'உனக்கு மேரேஜ் ஆயிடுச்சா?' என்று உடனடியாக கேட்க சங்கடமாய் இருந்தது. அதனால் "ஒரகடத்துல யார் இருக்கா?" என்றான்.‌</span></p>
<p data-p-id="159d7fc542db3e9bfdc8dae61cd7795e"><span style="font-size: 14pt">  கணவர் குழந்தையோட இருப்பதாக உரைப்பாளென்று கேட்க அவளோ ''அங்க தான் சாரதா ஹாஸ்பிடல்ல ஒன் ஆஃப் த டூயூட்டி டாக்டரா ஒர்க் பண்ணறேன்" என்றாள்.</span></p>
<p data-p-id="1db925fb1494b7fead3d7e0c565a7672"><span style="font-size: 14pt">  'கூட யாரிருக்கா?' என்று கேட்க கோபம் வந்தது. ஆனால் இருந்த ஒரே அப்பா என்ற உறவும் உன்னால் தொலைத்துவிட்டேன். யாரை கேட்கற?' என்று கத்தி விட்டால் செழியனால் தாங்க இயலாது.</span></p>
<p data-p-id="0fd5f529054b428fdbec136ff509e98e"><span style="font-size: 14pt">   "இப்ப எங்க தங்கியிருக்க?" என்றான் செழியன்.</span></p>
<p data-p-id="785cea2d59d54aeda29847be6d7c106c"><span style="font-size: 14pt">"டாபோடில் பேரடைஸ் ஹோட்டல்ல தான். நேத்து ஈவினிங் வந்தேன்." என்றாள்‌ தலை கவிழ்ந்து.</span></p>
<p data-p-id="e9e9f2610e85f093f0fa4e561c50e8f6"><span style="font-size: 14pt">"ஏ... நானும் அங்க தான் தங்கியிருக்கேன். எப்படி பார்க்காம போனோம்" என்று ஆச்சரியப்பட்டு போனான்.</span></p>
<p data-p-id="c2708a63bf98ba4321225546bae8b950"><span style="font-size: 14pt">  "நான் நேத்து அறைக்கு வந்துட்டு வெளியவே வரலை. காலையில் இயர்லி மார்னிங்‌ அப்படியே சன் ரைஸ் பார்த்துட்டு குயிக்கா இங்க வந்துட்டேன்." என்றாள்.</span></p>
<p data-p-id="64ef5f55cf79a1537a6e4ff71751fff7"><span style="font-size: 14pt">  "ஓ... நான் இன்னிக்கு மார்னிங் ஜஸ்ட் இங்க வருவதற்கு முன்ன தான் நாகர்கோவிலுக்குள்ளயே நுழைந்தேன்." என்றான்.‌</span></p>
<p data-p-id="b7e3e3a08da7ca9b3884ed49ed1fcd5e"><span style="font-size: 14pt">  இவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருக்க இன்னும் சிலர் நடுநடுவே வந்து கைகுலுக்கி பேசி சென்றனர். அதற்கு இடைப்பட்ட நேரத்தில் வர்ஷினி கழுத்தை கண்டவனுக்கு பெருத்த ஏமாற்றம். அவள் கழுத்தில் எந்த செயினும் அவன் கண்ணுக்கு தட்டுப்படாத வகையில் முழுமையாக மறைக்கப்பட்டிருந்தது அவளது உடை.</span></p>
<p data-p-id="4c9add445da6a13c6ff7de3ee66f995d"><span style="font-size: 14pt">  சிலர் செமினார் முடியவும் அவரவர் செல்ல, இவளோடு வந்த அனிதாவோ, "ஏ ஹர்ஷு கேப் புக் பண்ணிடவா? இல்லை நேரமாகுமா?" என்று கேட்க, "பீக் பண்ணு அனிதா. இதோ சொல்லிட்டு வந்துடறேன்" என்று பேசியவள் செழியனிடம், "நான் கிளம்பறேன்.. நீங்க உடம்பை பார்த்துக்கோங்க." என்று சொல்லிவிட்டு நகர, தடுத்து நிறுத்தும் திறணியின்றி அவளுக்கு விடைக்கொடுத்து வேடிக்கை பார்த்தான் செழியன்.</span></p>
<p data-p-id="5d7f5fff9594be0d404762372de30c5b"><span style="font-size: 14pt">   வர்ஷினியோ ஆர்யனிடம் நன்றி நவில்ந்து புறப்பட்டாள். அப்படியிருந்தும் செழியனை திரும்பி திரும்பி பார்த்தே கேப்பில் ஏறினாள்.</span></p>
<p data-p-id="185d71eb6bbe757d514f3b71ce3d27af"><span style="font-size: 14pt">   "இன்னமும் வேடிக்கை தான் பார்ப்பியா? நீயும் கிளம்பு." என்று ஆர்யன் கூற, 'அதானே.. நானும் சேம் ஹோட்டலுக்கு இல்லை போகணும்.' என்றவன் "ஆர்யா... அவ யார் தெரியுமா?" என்று செழியன் நண்பனிடம் வர்ஷினி பற்றி கூற துடித்தான்.‌</span><br /><span style="font-size: 14pt">"எங்க ஊரு பொண்ணு. கொஞ்ச வருஷம் முன்ன அப்பாவிடம் படிக்க உதவி கேட்டு வந்தார். உனக்கே தெரியுமே. எங்கப்பா படிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கறவர்.</span><br /><span style="font-size: 14pt">  அதனால என்னிடம்  மெடிக்கல் சீட் மட்டும் வாங்கி தர சொன்னார்‌. செய்தேன். வேற விவரம் எதுவும் தெரியாது. அந்த பொண்ணு நன்றி கடனா கும்பிடும். அவ்ளோ தான்‌. ஏன்ல.. உனக்கு தெரிந்த புள்ளையா?" என்று கேட்டான்.</span><br /><span style="font-size: 14pt"> </span><br /><span style="font-size: 14pt">  ஆர்யன் செல்வாக்கு மிக்கவனின் பையன். அதோடு அவனுமே டாக்டர். கூடுதலாக  வர்ஷினிக்கு உதவியதால் அந்த நன்றி கடனில் பார்ப்பாள்.</span></p>
<p data-p-id="a85a3c5c42e1c7cf8354f8ebe9e614ea"><span style="font-size: 14pt">'அவ தான்... அவ தான் அவ' என்று செழியன் சொல்ல தவித்தவனாய் திணறினான்.‌</span></p>
<p data-p-id="a92935f5704e9ba9f0c5c2761190bb7b"><span style="font-size: 14pt">  "ஆர்யன்... வர்ஷினிக்கு கல்யாணமாகிடுச்சா?" என்று நண்பனுக்கு தெரியுமோ என்னவோ என்று கேட்டான்.</span></p>
<p data-p-id="79e260c28b87168ab3923381a4d57418"><span style="font-size: 14pt">  -தொடரும். </span><br /><br />பிரவீணா தங்கராஜ் <br /><br /><br /><br /><br /><br /><br /></p>]]></content:encoded>
						                            <category domain="https://onlinetamilnovels.com/community/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%88-%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%ae%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%b5%e0%ae%be-praveena-thangaraj/">நின் பார்வை தவமல்லவா!- Praveena Thangaraj</category>                        <dc:creator>Praveena Thangaraj</dc:creator>
                        <guid isPermaLink="true">https://onlinetamilnovels.com/community/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%88-%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%ae%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%b5%e0%ae%be-praveena-thangaraj/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%88-%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%ae%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%b5%e0%ae%be-2/</guid>
                    </item>
				                    <item>
                        <title>நின் பார்வை தவமல்லவா!-1</title>
                        <link>https://onlinetamilnovels.com/community/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%88-%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%ae%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%b5%e0%ae%be-praveena-thangaraj/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%88-%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%ae%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%b5%e0%ae%be-1/</link>
                        <pubDate>Fri, 03 Jul 2026 07:41:42 +0000</pubDate>
                        <description><![CDATA[அத்தியாயம்-1
தமிழகத்தின் 12வது பெரிய மாநாகரம் என்ற பெயரை பெற்றது &#039;நாகர்கோவில்&#039;. அதிலும் &#039;இயற்கை மாநகரம்&#039; என்று நாகர்கோவிலை சிறப்பாக கூறவார்கள்.
  இங்கே பெரும்பான்மையாக தென்னைமரம், பனைமரம்,...]]></description>
                        <content:encoded><![CDATA[<p data-p-id="0259f54afce54ab5b23843593f105852"><span style="font-size: 14pt">அத்தியாயம்-1</span></p>
<p data-p-id="ded736739e8b88150f54c95f95b3ae1a"><span style="font-size: 14pt">தமிழகத்தின் 12வது பெரிய மாநாகரம் என்ற பெயரை பெற்றது 'நாகர்கோவில்'. அதிலும் 'இயற்கை மாநகரம்' என்று நாகர்கோவிலை சிறப்பாக கூறவார்கள்.</span></p>
<p data-p-id="f23fa80278eb1df9f5382590c545e605"><span style="font-size: 14pt">  இங்கே பெரும்பான்மையாக தென்னைமரம், பனைமரம், பாக்குமரம், மா,பலா, வாழை, தானியம், போன்றவற்றிலிருந்து காய், கனிகளை பெற்று ஏற்றுமதி செய்யவும், தென்னை நார் தயாரிப்பு, கயிறு திரித்தல், தென்னை ஓலைமுடைதல், பனை ஓலை முடைதல், பூ வணிகம் செய்தல், கைத்தறி நெசவு, இரப்பர் பொருட்கள் தயாரிப்பு, உணவு பதனிடுதல், ஆடு, மாடு, கோழி வளர்த்தல், சுற்றுலா தளங்களை மேம்படுத்தல் மற்றும் பேணி காத்தல், காற்றாலை மூலம் மின் உற்பத்தி செய்தல், காடு, மேடுகளை செம்மைப்படுத்தி பாதுகாத்தல், திருத்தலங்களையும் அதன் வழிபாட்டு முறைகளையும் செவ்வனே பண்டைய முன்னோர்கள் வழிமுறையை கடைபிடித்து பாரம்பரிய முறையை நிலைநாட்டுதல், நாடு தழுவிய முறையை உலகிற்கு ஓர் சான்றாக பறைசாற்றுதலும், இம்மாநகரத்தின் தொழிசார்ந்து அமைந்துள்ளது.</span></p>
<p data-p-id="b6f5f975a72b2a038ef5eb5ea2dbced6"><span style="font-size: 14pt">  அத்தகைய பெருமைக்குரிய ஊரில் பிறந்து வளர்ந்தவன் டாக்டர்.செழியன். எம்.பி.பி.எஸ். எம்.டி.</span></p>
<p data-p-id="fac77d39a7efe115c85c72cb1f5f4642"><span style="font-size: 14pt">  நாகர்கோவிலில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலின் பெயரை கூறி அதற்கு வழியை கூறி சொந்த ஊரில் பயணித்தவனுக்கு, சில இடங்களை கண்டு தன்னை தொலைத்தபடி, கடைசியாக இங்கே நடந்த நிகழ்வை எண்ணி பார்த்து கலங்க, "சார் ஹோட்டல் வந்துடுச்சு" என்று டிரைவரின் குரல் அவன் நினைவை கலைத்தது.</span></p>
<p data-p-id="37a3436e535533c1dea6b119baeb0bf2"><span style="font-size: 14pt">  "ஆங்." என்று ஹோட்டலை கவனித்து காரிலிருந்து இறங்கினான்.</span></p>
<p data-p-id="9f1c91a62a72455f5918e7a36af853e6"><span style="font-size: 14pt">    லேசாக எட்டி பார்த்த, சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் ஐயர்ன் செய்த உடையில் கசங்காமல் இறங்கினான். ஆறடி உயரமும் அதற்கேற்ற உடற்கட்டும்  அவனுக்கு முப்பத்தியெட்டு வயது என்று கூறினால் நம்ப மாட்டார்கள். சில இடத்தில் இருந்த வெள்ளை முடியை கூட இளநரையாக கூறுவார்கள்</span><br /><span style="font-size: 14pt">ஆனால் வாழ்க்கையில் தொலைக்க கூடாத வைரத்தை தொலைத்தவனாக ஒரு சோகம், அவன் முகத்தில் உன்னிப்பாக காண்பவர்களுக்கு மட்டும் கருத்தில் பதியும். செழியனின் முகத்தில் புதர்தாடியை தாண்டி அச்சோகம் எதிராளி கவனித்து, மனதில் பதிந்து பார்வையிட்டால் வயதின் ஏற்றத்தை ஒப்புக் கொள்ளலாம்.</span></p>
<p data-p-id="183b3ad2fe9c5162759de754e28f51a8"><span style="font-size: 14pt">  டிரைவர் லக்கேஜை இறக்கி, ரிசப்ஷன் வரை கொண்டு வந்து விடுவதாக உரைத்திடவும், கவனம் கலைந்து பணத்தை தந்து, நன்றி நவில்ந்து முன்னே சென்றான்.</span></p>
<p data-p-id="d847d9c7d4e24385a5d5da52b189ed67"><span style="font-size: 14pt">  ரிசப்ஷன் அறையிலிருந்த பெண்மணியிடம், டாக்டர் செழியன் என்ற பெயரை கூறி, ஒரு மாதம் முன், இந்த ஹோட்டலில் அறையை முன்பதிவு செய்ததாக கூறினான்.</span></p>
<p data-p-id="7620fd5f81dbebc6fb901814be53f179"><span style="font-size: 14pt">ரிசப்ஷன் பெண்ணும் காத்திருக்க கூறி, கணினிக்குள் தலையை விட்டு, அறையை முன்பதிவு செய்யும் பெயர் பட்டியலில் செழியன் பெயரை பார்த்து, "எஸ் சார் உங்க நேம்ல ரூம் புக் பண்ணிருக்கிங்க. அமௌண்ட் கூட அப்பவே பே பண்ணியதா காட்டுது" என்று கூறினாள்.</span></p>
<p data-p-id="a1fe8da51195d0dac95562612bfad1e9"><span style="font-size: 14pt">   "எஸ்... ரூம் நம்பர் என்ன? கீ கொடுக்க முடியுமா?" என்று ஆங்கிலத்தில் கேட்டான். அவனுக்கு தெரிந்தவர் யாரேனும் காண்பதற்குள்  அறைக்குள் முடங்கும் உத்தேசத்தில் கேட்டான்.</span></p>
<p data-p-id="5502bdcaf65010bb54c9eee8b8d17a0c"><span style="font-size: 14pt">  அந்த பெண்ணும் சாவியை நீட்டினாள். கூடவே துணைக்கு அறையை காட்ட ஹோட்டல் சிப்பந்தியை அனுப்பினாள்.</span></p>
<p data-p-id="7d6dc8eb8cf0ee0c9db37b2bfb882f9c"><span style="font-size: 14pt">  அங்கிருந்த சிப்பந்தியும் செழியனின் லக்கேஜை எடுத்து வருவதாக கூறி லிப்டில் செல்ல, பிறந்து வளர்ந்த ஊரில், தன் சொந்த வீடு இருந்தும், யாருமில்லாதவன் போல ஹோட்டலில் தங்குவதை எண்ணி மெதுவாக லிப்டில் ஏறினான்.</span></p>
<p data-p-id="a98ae30e434a8b6258b9fdc0afd359b0"><span style="font-size: 14pt">   "நாகர்கோவிலுக்கு இதுக்கு முன்ன வந்திருக்கிங்களா சார்? ரொம்ப அழகான ஊர் சார். இயற்கையை ரசிக்க நிறைய இடமிருக்கு. இங்க வந்தா மனபாரம் எல்லாம் நீங்கும்னு வந்து போனவங்க சொல்வாங்க" என்று சிப்பந்தி பணிவாய் கேட்டு அவனது அனுபவத்தை பகிர்ந்தான்.</span><br /><span style="font-size: 14pt">செழியனோ "இங்கே வந்திருக்கேன்" என்று மென்னகைத்தான்.</span></p>
<p data-p-id="449f2f09b545ab44a287a5cf6aff9ee6"><span style="font-size: 14pt">சொந்த ஊர் என்று கூறினால் யார் என்ன என்ற விவரத்தை ஆராயலாமென பேச்சை நறுக்கு தெரித்து பேசினான்.‌</span></p>
<p data-p-id="bb6073aa7a26ad1211b25597ef572527"><span style="font-size: 14pt">சிப்பந்தியோ ஹோட்டல் அறைக்கு வந்து கதவை திறந்து, "உங்களோட ரூம். காற்றோட்டமா வெளிச்சமா இருக்கும் சார். உங்களுக்கு ஏதாவது வேண்டுமென்றால் போன்ல சொல்லுங்க எல்லாம் நாங்களே கொண்டு வந்து தருவோம்" என்று பணிவாக கூற, அவனுக்கு பணத்தை தந்து அனுப்பினான் செழியன்.</span><br /><span style="font-size: 14pt">  சிப்பந்தி பணத்தை பெற்று நன்றி கூறி அகன்றதும், நிம்மதியாக பெருமூச்சை விடுத்து, பால்கனி பக்கம் சென்றான்.</span></p>
<p data-p-id="b6c92936b1f294a2adc17895776fca27"><span style="font-size: 14pt">   இதமான காற்று அவனை அணைத்தது.</span></p>
<p data-p-id="45e7723be768fb85ea0e407323a6b253"><span style="font-size: 14pt">   அவனுமே அந்த அணைப்பில் தன்னை தொலைக்க, இடது பக்கமிருக்கும் திசையை வெறித்தான்.</span></p>
<p data-p-id="60efc548cda89f4b45f5a60529a13327"><span style="font-size: 14pt">அவ்வழி பாதையில் சில கிலோ மீட்டர் சென்றால் அவனது வீடு. ஆனால் செழியன் செல்ல மாட்டான். அந்தளவு மனகட்டுப்பாடு விதித்து கொண்டான்.</span></p>
<p data-p-id="686d12ec4a2b0cf9247f0f385c0ab655"><span style="font-size: 14pt">   இத்தனைக்கும் அவனுக்கு கூடபிறந்த உறவுகள் என்று யாருமில்லை. அப்பா அம்மாவிற்கு ஒரே பிள்ளை‌. அப்பாவிடம் மாதம் இரு முறை போனில் பேசுவான். அம்மாவிடம் பேசி பத்து வருடமிருக்கும்.</span></p>
<p data-p-id="37ad0739c231ef4928eae029f2a41a23"><span style="font-size: 14pt">  தேதியை நினைவேட்டிலிருந்து புரட்ட, ஆம் பத்து ஆண்டுகளுக்கு மேலாக இருக்குமென்று மூளை எடுத்துரைத்தது.</span></p>
<p data-p-id="034702f9c7fb0efc63ac0e8a9752a6c4"><span style="font-size: 14pt">     அந்த நாள், இந்த ஊர், அவன் வாழ்வில் புரட்டி போட்டுவிட்டது. அப்படியிருந்தும் செழியன் இங்கே கால் பதித்து உள்ளது அவனது தொழில் சம்பந்தமாக.</span></p>
<p data-p-id="9a27cd0f14c3be922c4379cff830bc67"><span style="font-size: 14pt">இங்கே நடைப்பெறும் மருத்துவ மாநாட்டிற்கு தான் செழியன் தவிர்க்க இயலாமல் வந்துள்ளான்.</span></p>
<p data-p-id="c814280f2eebfa793a2277b1353086d3"><span style="font-size: 14pt">  NCMHS - National Conference on Medical Health Sciences</span></p>
<p data-p-id="cfbfb032cee2cda22b103e68896a0197"><span style="font-size: 14pt">    இங்கிருந்து ஆறு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஹோட்டல் 'டாபோடில்ஸ் பேரடைஸ்' இடத்தில் நடைப்பெறுகின்றது. </span></p>
<p data-p-id="680becbff888d3f68a67fa0af0df95b6"><span style="font-size: 14pt">மருத்துவ மாநாடு என்பது மருத்துவத் துறையில் உள்ளவர்கள், மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் ஆகியோர் கலந்து கொள்ளும் ஒரு நிகழ்வு. மருத்துவ மாநாடுகளில், புதிய மருத்துவ தொழில்நுட்பங்கள், ஆராய்ச்சி முடிவுகள், சிகிச்சை முறைகள், சுகாதார விளைவுகள் ஆகியவை பற்றி விவாதிக்கப்படும்.</span><br /><span style="font-size: 14pt">இதன் நோக்கம் தொழில் முன்னேற்றம், நோயாளி சிகிச்சை மேம்பாடு, சுகாதார விளைவுகளை மேம்படுத்துதல்,</span><br /><span style="font-size: 14pt">புதிய மருத்துவ தொழில்நுட்பங்களை கற்றுக்கொள்ளுதல், புதிய திறன்களைப் பெறுதல்,</span><br /><span style="font-size: 14pt">மருத்துவத் துறையில் உள்ள முக்கியமானோருடன் சந்திப்பு, ஆராய்ச்சி முடிவுகளை வெளியிடுதல், புதிய தொழில் வாய்ப்புகளைப் பெறுதல் போன்ற பல்வேறு காரணத்தால் நடைப்பெறும்.</span></p>
<p data-p-id="d2e732d07bc56cfda63a29e5cd533c69"><span style="font-size: 14pt">   அதில் கலந்துக் கொள்ள பல டாக்டர்  வருவதில் இவனும் இணைந்திட வந்துள்ளான்.</span><br /><span style="font-size: 14pt">  ஏற்கனவே ஒரிரு முறை தவிர்த்ததால், இந்த முறை இவனை கண்டிப்பாக வர கூறி அவனது நண்பன் ஆர்யனின் வேண்டுக்கோள்.</span></p>
<p data-p-id="3d9a53cee8a1b01de329571c806c9d15"><span style="font-size: 14pt">   கடிகாரத்தில் நேரத்தை கவனித்தான் செழியன். அதிகாலை இறங்கி வந்ததால் யூகித்தது போல நேரத்திற்கு வந்துவிட்டான்.</span><br /><span style="font-size: 14pt">  இனி குளித்து முடித்து சாப்பாட்டை வரவழைத்து, மாநாடு நடைப்பெறும் ஹோட்டலுக்கு செல்ல வேண்டும்.</span></p>
<p data-p-id="2d1801fe66671d61e2283b888d8d93d4"><span style="font-size: 14pt">  தற்போது இருக்கும் மனநிலைக்கு சாப்பாடு உள்ளே இறங்காது. அதனால் தன்னை தூய்மைப்படுத்திக் கொண்டு செல்வதில் மும்முரமானான்.</span><br /><br /><span style="font-size: 14pt">  ஷவரில் குளித்து முடித்து அலைப்பாயும் கேசத்தை ஜெல் கொண்டு அடக்கினான்.</span></p>
<p data-p-id="2f1122804975a838282a75b3d7b3dd84"><span style="font-size: 14pt">என்ன தான் தலைவாறினாலும், க்ளீன் ஷேவ் செய்யாததால், முட்புதர் தாடியை ட்ரிம் செய்தான். ஒரளவு காடு போல இல்லாமல் அடிக்கடி செய்யும் தொழிலுக்கு ஏற்றார் போல கவனித்து கத்தரிப்பான். இல்லையேல் தேவதாஸிற்கு தோழனாக காட்சி அளிப்பான். அழகாக அளவாக கத்தரித்து இருந்ததால் மஜ்னுவாக தான் திகழ்ந்தான் செழியன்.</span></p>
<p data-p-id="d942f5d3ca813ad8fc015376c5575b41"><span style="font-size: 14pt">  தன் கைபட்டனை சரிசெய்து கோர்ட் அணிந்தவன், கதவை பூட்டிவிட்டு லிப்டில் இறங்கினான்.</span></p>
<p data-p-id="958ace3f0244e13e6a255849d0f16059"><span style="font-size: 14pt">எதிரே காலையில் சந்தித்த சிப்பந்தி "சார் பிரேக்பஸ்ட் சாப்பிடலையா. இங்க நம்ம ரெஸ்டரண்ட்ல கூட சாப்பிடலாம்" என்று சுட்டிக்காட்ட, ''நோ தேங்க்ஸ்" என்று ஹோட்டலிலிருந்து புறப்பட்டான்.</span></p>
<p data-p-id="707f775929f84c63a97eb8133804e24d"><span style="font-size: 14pt">ஏற்கனவே கேப் புக் செய்த காரணத்தால் வாசலில் நிற்க, ஓடிபி சொல்லவும் அவனை ஏற்றிக்கொண்டு ரதம் பறந்தது.</span></p>
<p data-p-id="22502e3f8cae9e1816ae0a87112b1445"><span style="font-size: 14pt">  மணி பத்தாகவும் அவன் இறங்கி, அவன் செல்ல வேண்டிய இடத்தில் நுழையவும் நேரம் சரியாக இருந்தது. பத்து முப்பதுக்கு மருத்துவ மாநாடு துவங்கியது. ஒவ்வொருத்தரும், தங்கள் கற்றறிந்த மருத்துவத்தின் பயனை பேசினார்கள். புதிது புதிதாக வரும் நோயை பற்றியும் அதை தடுக்கும் விதமும் பலரும் பேசப்பட்டது. இதில் செழியன் சந்திக்க விரும்பிய தொழில் நண்பர்களும் பேசினார்கள்.</span></p>
<p data-p-id="95e68d0889141f754f698856bf8fbbf9"><span style="font-size: 14pt">  இவ்வாறு நேரங்கள் நகர, மாநாடு முடிந்தது. அடுத்து ஃபப்பே முறையில்  உணவு பக்கத்து அறையில் வழங்கப்பட்டது.</span><br /><span style="font-size: 14pt">  அதுவும் பெரிய அறை, ஆங்காங்கே நான்கு ஐந்து இருக்கையை கொண்ட மேஜைகள் போகும் வழியெல்லாம் இருந்தது.</span></p>
<p data-p-id="00942883eeba80b3ac20a0179b0e3ccb"><span style="font-size: 14pt">உணவை வாங்கிக் கொண்டு அமர்ந்து சாப்பிடும் முறை என்றதால், செழியன் நண்பன் ஆர்யனோடு நகர, எதிரே அவன் இத்தனை நாட்களாக காண துடித்த பெண் இவனை கடந்து  நடந்து சென்றாள்.</span><br /><br /><span style="font-size: 14pt">  செழியனுக்கு சிறகில்லாமல் வானத்தில் மிதப்பது போல உணர்வு வந்தது.</span><br /><span style="font-size: 14pt">  ஆனால் அவள் எப்படி இங்கே? என்றும், அவளிடம் பேசும் பேராசையும் சேர்ந்து அவளருகே அவசரமாய் நடந்தான்.‌ எதிரே இடைப்புகுந்தவர்களிடம் மன்னிப்பு கேட்டபடி செல்ல, அவளும் செழியனை கண்டு கால்கள் அவ்விடத்திலேயே வேரூன்றியது போல சிலையாக நின்றாள்.</span></p>
<p data-p-id="2ef455b15b4160f2821c43c6ba7cc39a"><span style="font-size: 14pt">  "ஹாய்... நீங்க வர்ஷினி தானே?" என்று கேட்க, "ஆமா வர்..ஷினி தான்." என்று கூறியவளுக்கும் ஏதோ அதிர்ச்சி தாக்கி, கொஞ்சம் நிதானப்படுத்தி சமனிலை அடைவதை செழியனால் உணர முடிந்தது.</span></p>
<p data-p-id="78fdedf3f1a57ccbf166a4991c01e0d1"><span style="font-size: 14pt">  "நீங்க எங்க இங்க?'' என்றவன் முகத்தில் புதையலை கண்ட மகிழ்ச்சி.</span><br /><span style="font-size: 14pt">   இந்த மருத்துவ மாநாட்டில் கலந்துக்கொள்ள அனுமதிக்கும் பயனியர் அட்டை போல அவளது கழுத்தில் தொங்கியதை கண்டு வியந்தான்.</span></p>
<p data-p-id="5d31f9314d7cccb6fe5b9be8a00c16cf"><span style="font-size: 14pt">  "ஆர்யனோ... ஹே செழியன்.. இவங்க டாக்டர் வர்ஷினி. எங்க ஊர் பொண்ணு தான்‌. உனக்கு முன்னவே தெரியுமா?" என்று கேட்டு நின்றான்.</span></p>
<p data-p-id="cd170318da0bc43000c9cb3591fc5e1a"><span style="font-size: 14pt">  செழியனும் ஆர்யனும் சென்னையில் படித்த நண்பர்கள். செழியன் சென்னையில் பெரிய ஹாஸ்பிடலில் வேலை பார்க்க வேண்டுமென்றது செழியனின் தாயார் சுகந்தியின் பேராசை.</span><br /><span style="font-size: 14pt"> </span><br /><span style="font-size: 14pt">  "ம்ம்ம்.. தெரியும்" என்றவன் வர்ஷினியை காயப்பட்ட வலியுடன் பார்வையிட, "ஓகே ஓகே.. அப்ப பேசிட்டு இருங்க. நான் சீப் கெஸ்ட்டா வந்தவங்களை கவனிச்சிட்டு வந்துடறேன்." என்று சென்றான்.</span></p>
<p data-p-id="32223ed884cb2076a6b3c4d5c49a1cae"><span style="font-size: 14pt">  ஆர்யன் சென்றதும் செழியன் வர்ஷினி மட்டும் உணவை வாங்கி தனியாக அமர்ந்தனர்.</span></p>
<p data-p-id="12a60cedc9c0127a0bc65817423a2424"><span style="font-size: 14pt">    "பைனலி... உன்னை பத்து வருஷம் கழிச்சு சந்திச்சு இருக்கேன். அதுவும்  டாக்டரா சந்திச்சிருக்கேன். நல்லாயிருக்கியா?" என்று பேசினான்.</span></p>
<p data-p-id="fbd2ca3270264aaca952f48c1d733a27"><span style="font-size: 14pt">  ஹர்ஷினியோ ஸ்பூனால் சாதத்தை எண்ணிக் கொண்டிருந்தவள், "நல்லாயிருக்கேன்.‌‌ நீங்க.." என்றவளுக்குள் தொண்டையை யாரோ பிடித்துக் கொண்டு பேச சொல்வது போல வலி.</span></p>
<p data-p-id="23e264481665690ccb0f61b0d51b58e5"><span style="font-size: 14pt">  மனதிலிருந்து வார்த்தை வெளிவர மிகவும் பிரம்ம பிராயத்தனப்பட்டாள்.</span></p>
<p data-p-id="e984c5d2b59efb9e64b601070555ca22"><span style="font-size: 14pt">"ம்ம்ம் ஃபைன்." என்றவன் அவசரமாய் அவளது சங்கு கழுத்தை ஆராய நினைத்தான். ஆனால் தன்னை அளவிடும் விதமாக, வர்ஷினி தன் முகத்தையே பார்க்கும் போது அவளது பார்வையை தாண்டி கழுத்துக்கு கண்களை கொண்டு செல்ல தயங்கினான்.</span></p>
<p data-p-id="40e7da0ba84fd5ee541f5a7c282cd4bf"><span style="font-size: 14pt">அதோடு காலர் வைத்த சுடிதார் வேறு, அவனை இம்சித்தது.</span></p>
<p data-p-id="6b084c47326deff8eed4e6440477416b"><span style="font-size: 14pt">   "உன்னை இங்க சந்திப்பேன்னு நினைக்கலை" என்று அவனும், "உங்களை இங்க சந்திப்பேனு நினைக்கலை" என்று அவளும் பேசினார்கள்.</span></p>
<p data-p-id="d19476fb49fd9dad652f2b3a0949f2b7"><span style="font-size: 14pt">  "நீங்க இங்க வருவிங்கன்னு தெரியாது" என்று அவளும், "நீ இங்க வருவன்னு எதிர்பார்க்கலை" என்று அவனும் ஒரே நேரத்தில் பேசிட, இருவரும் லேசான முறுவலை பகிர்ந்தார்கள்.</span></p>
<p data-p-id="d72780e1d02c08ae448901ea87db7092"><span style="font-size: 14pt">-தொடரும்.</span></p>
<p data-p-id="d72780e1d02c08ae448901ea87db7092"><span style="font-size: 14pt">பிரவீணா தங்கராஜ்</span></p>
<p data-p-id="d72780e1d02c08ae448901ea87db7092"><span style="font-size: 14pt">kindly register &amp; login to Read Thank u  </span></p>]]></content:encoded>
						                            <category domain="https://onlinetamilnovels.com/community/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%88-%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%ae%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%b5%e0%ae%be-praveena-thangaraj/">நின் பார்வை தவமல்லவா!- Praveena Thangaraj</category>                        <dc:creator>Praveena Thangaraj</dc:creator>
                        <guid isPermaLink="true">https://onlinetamilnovels.com/community/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%88-%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%ae%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%b5%e0%ae%be-praveena-thangaraj/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%88-%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%ae%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%b5%e0%ae%be-1/</guid>
                    </item>
							        </channel>
        </rss>
		