<?xml version="1.0" encoding="UTF-8"?>        <rss version="2.0"
             xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
             xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
             xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
             xmlns:admin="http://webns.net/mvcb/"
             xmlns:rdf="http://www.w3.org/1999/02/22-rdf-syntax-ns#"
             xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/">
        <channel>
            <title>
									தொலைதூர வெளிச்சம் நீ - அருள்மொழி மணவாளன் - onlinetamilnovels.com Forum				            </title>
            <link>https://onlinetamilnovels.com/community/%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b2%e0%af%88%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80-%e0%ae%85%e0%ae%b0%e0%af%81/</link>
            <description>onlinetamilnovels.com Discussion Board</description>
            <language>en-US</language>
            <lastBuildDate>Mon, 27 Jul 2026 03:38:05 +0000</lastBuildDate>
            <generator>wpForo</generator>
            <ttl>60</ttl>
							                    <item>
                        <title>வெளிச்சம் - 17</title>
                        <link>https://onlinetamilnovels.com/community/%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b2%e0%af%88%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80-%e0%ae%85%e0%ae%b0%e0%af%81/%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d-17/</link>
                        <pubDate>Sun, 26 Jul 2026 13:44:19 +0000</pubDate>
                        <description><![CDATA[அத்தியாயம் 17
இன்று சாயங்காலம் ஊருக்கு செல்வதற்கான ஏற்பாடுகளை எல்லாம் செய்து கொண்டிருந்த சிவகாமியின் அங்கு அமைதியாக அமர்ந்திருந்த நளினியை கண்டார். 
&nbsp;
&quot;என்ன ஆயிற்று நளினிக்கு? ரொம்ப அ...]]></description>
                        <content:encoded><![CDATA[<p>அத்தியாயம் 17</p>
<p>இன்று சாயங்காலம் ஊருக்கு செல்வதற்கான ஏற்பாடுகளை எல்லாம் செய்து கொண்டிருந்த சிவகாமியின் அங்கு அமைதியாக அமர்ந்திருந்த நளினியை கண்டார். </p>
<p>&nbsp;</p>
<p>"என்ன ஆயிற்று நளினிக்கு? ரொம்ப அமைதியாக இருக்கிறாள்!" என்று பார்வதியிடம் கேட்டபடியே நளினியின் அருகில் வந்து அமர்ந்த சிவகாமி, அவள் நாடியை பிடித்து தன்னை பார்க்கச் செய்து, "என்ன ஆயிற்று நளினி?" என்றார். </p>
<p>&nbsp;</p>
<p>அவரைப் பார்த்ததும் அவளது கண்கள் கண்ணீரில் குளம் கட்டிக் கொண்டது. அதை கண்டு பதறிய சிவகாமி, "என்ன ஆயிற்றுடா? ஏன் அழுகிறாய்?" என்று தன் முந்தானைக் கொண்டு அவளது கண்ணீரை துடைத்து விட்டார். </p>
<p>&nbsp;</p>
<p>"நீங்கள் ஊருக்கு போவது எனக்கே மிகவும் வருத்தமாக இருக்கிறது. அப்படி என்றால் அண்ணிக்கு எவ்வளவு கஷ்டமாக இருக்கும்? அதை நினைத்து தான் அழுகிறேன் அத்தை" என்று அவரை வயிற்றுடன் கட்டி அணைத்துக் கொண்டாள். </p>
<p>&nbsp;</p>
<p>அதில் புன்னகைத்த சிவகாமி, அப்பொழுது அங்கு வந்த சிவன்யாவையும் தன் அருகில் வரவைத்து அணைத்து கொண்டார். சிவன்யாவின் பின்னாடியே அனைவரும் குடிப்பதற்கு மோர் எடுத்துக்கொண்டு வந்த பார்வதி சிவகாமி, அனைத்து நிற்கும் இரு பெண்களையும் பார்த்து புன்னகைத்தபடி, "என்ன அண்ணி? ரெண்டு பேரும் உங்க கிட்ட இப்படி ஒட்டிக்கிட்டு நிக்கிறாங்க?" என்று கேட்டபடியே மோரை எடுத்து அவர் கையில் கொடுத்தார். </p>
<p>&nbsp;</p>
<p>"எல்லாம் கல்யாணம் முடிந்த பிறகு பெண்களுக்கு வரும் கவலைதான் அண்ணி" என்று சொல்லியபடியே தன் கையில் இருந்த மோரை நளினிக்கு கொடுத்து குடிக்கும்படி சொல்லிவிட்டு, மகளுக்கும் கொடுத்து விட்டு தானும் ஒன்றை எடுத்து அவர்கள் இருவருக்கும் நடுவில் அமர்ந்து கொண்டார். </p>
<p>&nbsp;</p>
<p>"நம் கலாச்சாரத்தில் திருமணத்திற்குப் பிறகு பெண்கள் கணவன் வீட்டில் செல்ல வேண்டும் என்பது ஒரு முறையாகி விட்டது. இது மேலோட்டமாக பார்த்தால் ஒரு சாதாரண நிகழ்ச்சி போலத்தான் இருக்கும். இவ்வளவு நாள் உன் அப்பா அம்மா கூட இருந்த, இப்ப இங்க என் வீட்ல இருக்க போற, என்று ஆண்களால் சாதாரணமாக சொல்லிவிட முடியும். ஆனால் உண்மையில் ஒரு பெண்ணிற்கு இது ஒரு சவாலான காலம். ஓர் இடத்தில் வாழ்ந்த வளர்ந்த செடியை பிடுங்கி, மற்றொரு இடத்தில் நட்டு வைத்தால், அந்தச் செடி எப்படி இருக்கும்?" என்று நளினியை பார்த்து கேட்டார் சிவகாமி. </p>
<p>&nbsp;</p>
<p>மோர் குடித்துக் கொண்டிருந்த நளினி நிமிர்ந்து அவரை பார்க்க மோரில் இருந்த வெள்ளை நுரை, அவள் மேலுதட்டில் மீசை போல் ஒட்டிக் கொண்டிருப்பதை கண்டு புன்னகைத்து, "நளினிக்கு வெள்ளை மீசை முளைத்து விட்டதே!" என்று கிண்டல் அடித்தார். </p>
<p>&nbsp;</p>
<p>தன் புறங்கையால் தன் மேல் வாயை துடைத்துக் கொண்ட நளினி, "செடி வாடி போய்விடும் அத்தை" என்றாள் அவர் கேட்ட கேள்விக்கு பதிலாக. </p>
<p>&nbsp;</p>
<p>"ஆமாம், முதலில் செடியின் வாடி தான் போகும். அதை கவனமாக பார்த்துக் கொண்டால், அந்த மண்ணில் நன்றாக வேர் பிடித்துக் கொண்டு செழித்து வளர்ந்து பூத்து காய்க்க தொடங்கி விடும், இல்லையா?" என்றார் இரு பெண்களையும் பார்த்து. </p>
<p>&nbsp;</p>
<p>"ஆமாம்" என்று இருவருமே மௌனமாக தலையாட்டினார்கள்.</p>
<p>&nbsp;</p>
<p>"அதுதான் இப்பொழுது உனக்கு நடக்கிறது" என்று சிவன்யாவின் நாடி பிடித்து கூறினார். "இன்னும் கொஞ்ச நாளில் உனக்கு நடக்கும்" என்று நளினியிடமும் கூறினார். </p>
<p>&nbsp;</p>
<p>"நாம் பிறந்து வளர்ந்த இடத்தில் நம் பழக்க வழக்கங்கள் ஒரு விதமாக இருக்கலாம். நாம் திருமணம் முடித்து செல்லும் வீட்டில் உள்ள பழக்கவழக்கங்கள் ஒருவிதமாக இருக்கலாம். நான் இப்படித்தான் இருப்பேன் என்று முரண்டு பிடித்துக் கொண்டு இருந்தால், நான் அந்த இடத்தில் தான் வளர்ந்தேன், அதே மண்ணில் தான் இருப்பேன், இந்த மண்ணை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று, செடியின் வேர் மணலுடன் ஒட்டாமல் இருந்தால் அந்தச் செடி வாடிவிடும். </p>
<p>&nbsp;</p>
<p>அதை விட்டுவிட்டு புது மண்ணில் உள்ள புது சத்துக்களை எடுத்துக்கொண்டு தன்னை வளர்த்துக் கொள்ள முயன்றால், அச்செடி நன்றாக வளர்ந்து செழிக்கும். அதுபோலத்தான் நாமும், இதுவரை நான் இப்படி இருந்தேன், இனிமேலும் இப்படித்தான் இருப்பேன் என்று முரண்டு பிடித்துக் கொண்டிருந்தால், நம் வாழ்க்கை சிறப்பாக இருக்காது. ஆனால் புது இடத்திற்கு நுழைந்ததும் அவர்களது பழக்கவழக்கங்களையும் தனது பழக்க வழக்கங்களாக ஆக்கி கொண்டால், நீண்ட நாட்கள் நிம்மதியாக வாழலாம் இல்லையா?" என்று மீண்டும் இருவரையும் பார்த்தார். இருவருக்கும் புரிந்தது போல் தலையாட்டினர். </p>
<p>&nbsp;</p>
<p>"அப்படி என்றால் நமக்கென்று எந்த விருப்பு வெறுப்புமே இருக்கக் கூடாதா அத்தை?" என்று கவலையாக சிவகாமியை பார்த்தாள் நளினி. </p>
<p>&nbsp;</p>
<p>"அப்படி இல்லடா, உன் விருப்பு வெறுப்பு போலவே உன் துணையின் விருப்பு வெறுப்புக்கும் கொஞ்சம் செவி சாய்க்க வேண்டும் என்றுதான் சொல்கிறேன். உன்னுடைய சுயம் அனைத்தையும் தொலைத்து விட்டு, உன் துணையை சார்ந்து இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. உன் விருப்பு வெறுப்போடு, உன் துணையின் விருப்பு வெறுப்பையும் புரிந்து கொண்டு, அவருக்கு இணையாக, அவருடன் பயணிக்க வேண்டும் என்றுதான் சொல்கிறேன். </p>
<p>&nbsp;</p>
<p>கணவன் மனைவிக்குள் எந்த ஒளிவு மறைவும் இருக்கக்கூடாது. உனக்கு தோன்றுவதை, உங்கள் கணவனிடத்தில் சொல்ல வேண்டும். அதற்கு அவர் கூறும் பதில்களையும் கவனமாக உள்வாங்கிக் கொள்ள வேண்டும். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழ்ந்தால் இல்லறம் செழிப்பாக இருக்கும். அதை புரிந்து கொள்ள வேண்டும். ஆரம்பத்தில் அது மிகவும் கடினமாக தான் இருக்கும். ஆனால் அந்த குடும்பத்தில் உள்ள எல்லோரையுமே உங்கள் பிறந்த குடும்பத்தில் உள்ளவர்கள் போல் பார்க்க ஆரம்பித்து விட்டால், எல்லாமே சுலபம்தான்" என்று இருவருக்கும் பொதுவாக அறிவுரை கூறிய சிவகாமி,</p>
<p>&nbsp;</p>
<p>"நளினிக்கு பக்கத்து ஊரு தான். அரை மணி நேரத்தில் நினைத்ததும் அவள் அவள் தாயைப் பார்க்க வந்துவிடுவாள். பார்வதிக்கும் மகளைப் பார்க்க வேண்டும் என்று தோன்றினால் உடனே சென்று பார்த்து விடலாம். ஆனால் எனக்கும் உனக்கும் அப்படி இல்லை. ஆகையால் நளினியை விட நீ தைரியமாக இருக்கணும். உன் கணவன் குடும்பத்தை உன் குடும்பமாக ஏற்றுக் கொண்டால் உனக்கு என்னை பார்க்க வேண்டும் என்ற எண்ணமே வராது" என்று புன்னகைத்து கூறினார் மகளைப் பார்த்து. </p>
<p>&nbsp;</p>
<p>சிவன்யா தாயை அணைத்துக் கொண்டு, "நான் உங்களை ரொம்ப மிஸ் பண்ணுவேன் அம்மா" என்று கூறி அவரது கன்னத்தில் முத்தம் கொடுத்தாள். </p>
<p>&nbsp;</p>
<p>"நானும் அத்தை" என்று அவரின் மறுபுறம் நின்று அணைத்துக் கொண்ட நளினி, அவரின் மற்றொரு கன்னத்தில் முத்தம் கொடுக்க, இரு கன்னங்களையும் துடைத்துக் கொண்ட சிவகாமி "அதற்கு இப்படி தான் எச்சில் பண்ணுவீங்களா" என்று விளையாட்டாக கோபித்துக் கொண்டார். </p>
<p>&nbsp;</p>
<p>இவ்வளவு நேரம் அவர் கூறியது அனைத்தையும் கேட்ட பார்வதி "சரியாக சொன்னீங்க அண்ணி. ஆண்களுக்கு குடும்பத்தை பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற பொறுப்பு இருந்தாலும், பெண்களுக்கு இரு குடும்பத்தையும் சீராக இணைக்கும் கூடுதல் பொறுப்பு இருக்கத்தான் செய்கிறது. எனக்கு சிவன்யாவை பற்றி கவலை இல்லை. நான் பார்த்தவரைக்கு ரொம்ப பொறுப்பா எல்லாவற்றையும் கவனித்துக் கொள்கிறாள். ஆனால் இவளை நினைத்தால் தான் பயமாக இருக்கிறது. ஒரு வேலையும் செய்வது இல்லை. இவள் மாமியாரிடம் போய் என்னென்ன திட்டுகள் வாங்க போகிறாளோ?" என்று கவலையாக சொல்லியபடியே அவளின் தலையில் செல்லமாக ஒரு கொட்டும் வைத்தார். </p>
<p>&nbsp;</p>
<p>தலையை தடவிக் கொண்ட நளினி "நான் எதற்கு வேலை செய்யணும்? அத்தை வீட்ல தானே இருக்காங்க! அவங்க எல்லாத்தையும் பார்த்துப்பாங்க" என்று கூறி "இல்லையா அண்ணி?" என்று சிவன்யாவையும் தன் பேச்சுக்கு கூட்டு சேர்த்துக் கொண்டாள் நளினி .  </p>
<p>&nbsp;</p>
<p>அவளது செயலில் சிவன்யாவிற்குமே சிரிப்பு வந்துவிட்டது. சிரித்துக் கொண்டே தன் தாயைப் பார்த்தாள் சிவன்யா. மகளின் முகத்திலிருந்த புன்னகையை பார்த்து, தானும் புன்னகைத்த சிவகாமி, சிவன்யாவை தோளுடன் அணைத்துக் கொண்டு "திருமணத்திற்கு பிறகு தாய் தந்தையரை பிரிந்து தான் ஆக வேண்டும். நாங்கள் ஊருக்குச் செல்லும் பொழுது நீ அழுதால் எங்களால் தாங்கிக் கொள்ள முடியாது. அதுவும் உன் அப்பாவால் கொஞ்சம் கூட தாங்கிக்க முடியாது, நொறுங்கி போய்டுவார். அதனால அப்பா முன்னாடி அழுதுவிடாதேடா!" என்று அவளின் நாடி பிடித்து செல்லமாக ஒரு வேண்டுகோளையும் வைத்தார். </p>
<p>&nbsp;</p>
<p>"சரி அண்ணி, நீங்க கொஞ்ச நேரம் ஓய்வெடுங்க" என்று சிவகாமியிடம் சொல்லிவிட்டு, </p>
<p>"அம்மா கூட பேசிகிட்டு இருமா" என்று சிவன்யாவிடம் சொல்லிவிட்டு, </p>
<p>அவர்களுக்கு தனிமை கொடுக்க நினைத்து, "நீ வா, நாம் மதிய உணவுக்கு அண்ணன் சொல்லி விட்டானா? என்று கேட்போம்" என்று நளினியையும் அழைத்துக் கொண்டு வெளியே வந்தார் பார்வதி. </p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p>- தொடரும்..</p>
<p>&nbsp;</p>
<p>- அருள்மொழி மணவாளன்..</p>
<p>&nbsp;</p>]]></content:encoded>
						                            <category domain="https://onlinetamilnovels.com/community/%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b2%e0%af%88%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80-%e0%ae%85%e0%ae%b0%e0%af%81/">தொலைதூர வெளிச்சம் நீ - அருள்மொழி மணவாளன்</category>                        <dc:creator>Arulmozhi Manavalan</dc:creator>
                        <guid isPermaLink="true">https://onlinetamilnovels.com/community/%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b2%e0%af%88%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80-%e0%ae%85%e0%ae%b0%e0%af%81/%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d-17/</guid>
                    </item>
				                    <item>
                        <title>வெளிச்சம் - 16</title>
                        <link>https://onlinetamilnovels.com/community/%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b2%e0%af%88%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80-%e0%ae%85%e0%ae%b0%e0%af%81/%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d-16/</link>
                        <pubDate>Sun, 26 Jul 2026 13:36:49 +0000</pubDate>
                        <description><![CDATA[அத்தியாயம் 16
மலர்ந்த முகமாக பதிலுக்கு காலை வணக்கம் சொல்லிய தங்கையின் முகத்தை புன்னகையாக பார்த்துக் கொண்டே அமர்ந்தான் மேகநாதன். 
&nbsp;
&quot;இரவு மண்டபத்தில் இருந்து வருவதற்கு நேரம் ஆகிவிட்டத...]]></description>
                        <content:encoded><![CDATA[<p>அத்தியாயம் 16</p>
<p>மலர்ந்த முகமாக பதிலுக்கு காலை வணக்கம் சொல்லிய தங்கையின் முகத்தை புன்னகையாக பார்த்துக் கொண்டே அமர்ந்தான் மேகநாதன். </p>
<p>&nbsp;</p>
<p>"இரவு மண்டபத்தில் இருந்து வருவதற்கு நேரம் ஆகிவிட்டதா அண்ணா?" என்று கேட்டுக் கொண்டே அவன் குடிப்பதற்கு காபி எடுத்து வர இருக்கையில் இருந்து எழும்பொழுது, அங்கு வந்த பார்வதி மேகநாதனின் கையில் காபியை கொடுத்தார். </p>
<p>&nbsp;</p>
<p>புன்னகையுடன் நன்றி சொல்லி வாங்கிய மேகநாதன் தங்கையின் அருகில் அமர்ந்து கொண்டு காபியை குடித்துக்கொண்டே அவளுடன் பேசலானான்.</p>
<p>&nbsp;</p>
<p>அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே, சிவன்யாவின் தாயும் தந்தையும் அங்கு வந்துவிட, வேலையை முடித்து பார்வதியும் வந்து அமர்ந்தார். </p>
<p>&nbsp;</p>
<p>காலை தினசரி வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்த விஸ்வநாதன், அனைவரும் ஹாலில் கூடியிருப்பதை கண்டு, "என்ன எல்லோரும் உட்கார்ந்து கதையடித்து கொண்டிருக்கிறீர்களா?" என்று கேட்டுக் கொண்டே அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தார். </p>
<p>&nbsp;</p>
<p>தந்தை வந்ததும் எழுந்து அவர் கையில் இருந்த நாளிதழை வேகமாக வாங்கி கொண்டு வந்து அமர்ந்து படிக்க ஆரம்பித்தாள் நளினி. </p>
<p>&nbsp;</p>
<p>"பரவாயில்லையே, வாய் ஓயாமல் பேசிக் கொண்டிருந்தாலும் தினசரி படிக்கும் பழக்கம் வைத்திருக்கிறாயே என்று அவளை பாராட்டினான் மேகநாதன். </p>
<p>&nbsp;</p>
<p>"அட போங்க தம்பி நீங்க வேற, கடைசியில சினிமா பக்கத்தை தான் எடுத்து பார்த்துட்டு உட்கார்ந்து இருப்பா. அதை தவிர நியூஸ் பேப்பர்ல எதையும் பார்க்க கூட மாட்டா" என்று அவளை கலாய்த்தபடி நக்கலாக கூறினார் பார்வதி. </p>
<p>&nbsp;</p>
<p>"அம்மா" என்ற சிணுங்கிய நளினி அவர் கூறியது போலவே சினிமா பக்கத்தை மட்டும் பார்த்துவிட்டு, தினசரியை மடித்து தந்தையின் கையில் கொடுத்துவிட்டு அவருக்கு அருகிலேயே அமர்ந்து கொண்டாள். </p>
<p>&nbsp;</p>
<p>அவளின் செயல் கண்டு அனைவரும் புன்னகைத்து கொண்டிருக்க, "மாமா இன்று சாயங்காலம் நாங்கள் ஊருக்கு கிளம்பலாம் என்று இருக்கிறோம்" என்றான் மேகநாதன். </p>
<p>&nbsp;</p>
<p>அதில் அதிர்ந்த சிவன்யா "என்னண்ணா சொல்றீங்க? நான்கு நாட்கள் இருப்பதாக தானே சொன்னீர்கள். அப்படித்தானே டிக்கெட்டும் எடுத்து இருந்தீர்கள்?" என்று அதிர்ச்சியாக கேட்டாள். </p>
<p>&nbsp;</p>
<p>தங்கையை சங்கடமாக பார்த்த மேகநாதன், "அப்படித்தான் எடுத்திருந்தேன் குட்டிமா. ஆனால் அலுவலகத்தில் கொஞ்சம் அதிக வேலை இருக்கிறது. என் விடுப்பை ரத்து செய்துவிட்டு வரும்படி சொல்லிவிட்டார்கள்" என்றான் தயக்கமாக. </p>
<p>&nbsp;</p>
<p>அண்ணன் அப்படி கூறியதும் அவளுக்கு தன்னால் கண்களில் கண்ணீர் முட்டியது. எழுந்து தாயின் அருகில் சென்று அமர்ந்து கொண்டு "அம்மா, அண்ணன் என்னம்மா இப்படி சொல்றாங்க? நீங்களாவது சொல்லுங்கம்மா? ஒரு நான்கு நாட்கள் இருந்துவிட்டு செல்லுங்கள் என்று கண்ணீருடன் தாயின் கைகளை பிடித்துக் கொண்டாள். </p>
<p>&nbsp;</p>
<p>மகள் அழுவது பெற்றோருக்கு வருத்தமாக இருக்க, "அழாதே குட்டிமா. எப்படியும் நாங்கள் நளினி கல்யாணத்திற்கு வருவோம் தானே! அப்பாவிற்கும் முக்கியமான வேலை ஒன்று வந்து விட்டது. அண்ணனுக்கும் விடுமுறை இல்லை. அதனால் நாங்கள் இப்பொழுது போய்விட்டு நளினி கல்யாணத்திற்கு இரண்டு நாட்கள் முன்னதாகவே வர பார்க்கிறோம்" என்று மகளின் தலையை தடவி விட்டபடியே கூறினார் சிவனேசன். </p>
<p>&nbsp;</p>
<p>சிவன்யாவிற்கு திடீரென்று தான் தனித்து விட்டது போல் தோன்றியது. தந்தையின் தோளில் அமைதியாக சாய்ந்து கொண்டாள். </p>
<p>&nbsp;</p>
<p>இவ்வளவு நேரம் கலகலப்பாக இருந்த வீடு சற்று என்று அமைதியாகிவிட்டது. அதில் பார்வதிக்கும் சங்கடமாகி போய்விட்ட, "நான் காலையிலேயே சொன்னேன் அண்ணி. பாருங்கள் இப்பொழுது சிவன்யா முகம் வாடிவிட்டது" என்றார் மருமகளின் வாடிய முகத்தை கண்டு வருந்திய படியே.</p>
<p>&nbsp;</p>
<p>"அவர்களுக்கும் மகளை விட்டு பிரிந்து செல்வதற்கு விருப்பமா என்ன? அவசர வேலை என்று தானே உடனே கிளம்புகிறார்கள். நீ வேறு ஏதாவது பேசி மருமகளையும் அவர்களையும் சங்கடப்படுத்தாதே!" என்று மனைவியிடம் சொல்லிவிட்டு, </p>
<p>"உன்னுடன் இருப்பதற்காக தான் அவர்கள் வந்திருக்கிறார்கள். ஏதோ அவசர வேலை என்று உடனே கிளம்புகிறார்கள். நீ இப்படி வருத்தப்பட்டு கொண்டு இருந்தால் அவர்களும் நிம்மதியாக கிளம்ப முடியுமா? நீ கொஞ்சம் தைரியமாக இருமா. உன் அப்பா அம்மா போல நானும் உன் அத்தை உன்னை நன்கு கவனித்துக் கொள்வோம். நீ சந்தோஷமாக இருந்தால் தான் அப்பாவும் அம்மாவும் அங்கு நிம்மதியாக இருப்பார்கள்" என்று சிவன்யாவிற்கு ஆறுதல் கூறினார் விஸ்வநாதன். </p>
<p>&nbsp;</p>
<p>இவர்கள் பேசிக்கொண்டு இருக்கும் பொழுது தேவ் எழுந்து வந்தான். மேகநாதனின் அருகில் "என்ன எல்லோரும் சீரியஸா ஏதோ பேசிக்கிட்டு இருக்கீங்க போல?" என்ற படியே அமர்ந்தான். </p>
<p>&nbsp;</p>
<p>"அது ஒன்றும் இல்லை மாப்பிள்ளை. எனக்கும் மேகநாதனுக்கும் முக்கியமான வேலை ஒன்று வந்து விட்டது. அதனால் இன்று சாயங்காலம் ஊருக்கு கிளம்பலாம் என்று முடிவு செய்தோம். அதைப்பற்றி தான் பேசிக்கொண்டு இருக்கிறோம்" என்றார் மருமகனிடம் சிவனேசன். </p>
<p>&nbsp;</p>
<p>"ஓ" என்று மட்டும் சொல்லிவிட்டு தன் தாயைப் பார்த்த தேவ், "அம்மா டிபன் ரெடி ஆயிடுச்சா? மணி ஒன்பதாக போகிறதே!" என்றான். </p>
<p>&nbsp;</p>
<p>அவன் சிவனேசன் கூறியதற்கு எந்த மறுப்போ, காரணமோ கேட்காமல் சாப்பாட்டை பற்றி கேட்டதில் பார்வதியும் சற்று அதிர்ந்து விட்டார். அந்த அதிர்ச்சி குறையாமல் தலையை மட்டும் ஆட்டிவிட்டு, எழுந்து உணவை எடுத்து வைக்க சென்று விட்டார். </p>
<p>&nbsp;</p>
<p>அவன் அப்படி மொட்டையாக பேசியது அனைவருக்குமே அதிர்ச்சியாக தான் இருந்தது. அவனின் அலட்சியம் சிவன்யாவின் கண்களில் கண்ணீரை உற்பத்தி செய்தது. மென்மையாக தன் மகளை பார்த்த சிவனேசன் எதுவும் பேசாமல் அவளது கண்ணீரை துடைத்து விட்டார். அவருக்கும் தேவ்வின் செயல் வருத்தமாக இருந்தாலும் தன் வருத்தத்தை மகளின் முன் காண்பிக்க கூடாது என்று அமைதியாக அழாதே என்று மறுப்பாக மகளிடம் தலையாட்டினார். </p>
<p>&nbsp;</p>
<p>அனைவரும் முகத்திலும் ஒருவித இறுக்கம் தோன்றியது. சூழ்நிலை மோசமாவதை உணர்ந்த விஸ்வநாதன், "என்ன தேவ்? அவர்கள் இரண்டு நாட்கள் கழித்து தான் ஊருக்கு செல்வதாக இருந்தது, இப்பொழுது திடீரென்று கிளம்புவதால் சிவன்யா வருத்தமாக இருக்கிறாள். அதனால் அவளுக்கு ஆறுதல் சொல்லும் படி ஏதாவது சொல்வாய் என்று நினைத்தேன். அதுமட்டுமின்றி அவர்களை இன்னும் கொஞ்ச நாள் இருக்க சொல்லலாம் அல்லவா? அதை விட்டுவிட்டு இப்படி அமைதியாக இருந்தால் என்ன அர்த்தம்?" என்று மகனின் அலட்சியத்தை பொறுக்காத விஸ்வநாதன், கண்டிக்கும் பாணியில் அவனிடம் கேட்டார். </p>
<p>&nbsp;</p>
<p>"இதில் என்னப்பா இருக்கிறது? அவர்கள் நான்கு நாட்கள் இருக்க வேண்டும் என்று திட்டம் தீட்டி தானே வந்தார்கள்? அவசர வேலை என்று கிளம்புகிறார்கள். அவர்களை எப்படி தடுக்க முடியும்? அது மட்டுமல்லாது பத்து மணிநேர பயணம் தானே! வேலை முடிந்தால் மகளைப் பார்க்க விரைந்து வரப்போகிறார்கள். இதில் நான் பார்மாலிட்டேசிற்காக பேசுவதற்கு என்ன இருக்கிறது?" என்று சொல்லிவிட்டு, "வாங்க எல்லோரும் ஒன்றாக சாப்பிடலாம்" என்று உணவு மேசை நோக்கி நடந்தான். </p>
<p>&nbsp;</p>
<p>முதலில் அவனது செய்வதில் வருந்திய சிவநேசன், தேவ் கூறியதை கேட்டு நிம்மதி அடைந்தார். மருமகன் நிலவரத்தை புரிந்து கொண்டு சகஜமாக இருப்பதில் மகிழ்ந்த சிவநேகன், "அதைத்தான் நான் சிவன்யாவிடம் சொல்லிக் கொண்டு இருந்தேன் மாப்பிள்ளை. அவள் தான் அழுது கொண்டு இருக்கிறாள்" என்று நிலைமையை சீராக்கும் பொருட்டு சொல்லிக்கொண்டு, மகளை சாப்பிட அழைத்து வந்தார். </p>
<p>&nbsp;</p>
<p>அனைவரும் சுற்றி அமர்ந்து விட, பார்வதியும் சிவகாமியும் பரிமாற ஆரம்பித்தனர். "ஏன் அத்தை? எல்லோரும் பக்கத்தில் தானே இருக்கிறோம். நீங்களும் உட்காருங்கள் எல்லோருமே ஒன்றாக சாப்பிடலாம்" என்று சிவகாமியிடம் ஆரம்பித்து "உட்காருங்கள் அம்மா" என்று தன் அருகில் இடத்தை தன் தாய்க்கு காண்பித்து முடித்தான்.</p>
<p>&nbsp;</p>
<p>அதன் பிறகு அனைவரும் சாதாரணமாக அவரவர்களே பரிமாறி உண்டுகொள்ள, "சாப்பாடு சூப்பர் அத்தை" என்றான் மேகநாதன். </p>
<p>&nbsp;</p>
<p>"நீங்கள் தான் அனைத்தையும் செய்தீர்களா அம்மா?" என்றான் தேவ் தாயை பார்த்து. </p>
<p>&nbsp;</p>
<p>அவரும் ஆமாம் என்று தலையாட்ட, "இன்று சிவன்யாவோட அப்பா அம்மா ஊருக்கு கிளம்புகிறார்கள் அவர்களிடம் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருங்கள். மதிய உணவை வெளியே வாங்கிக் கொள்ளலாம், சரியா?" என்று தாயிடம் சொல்லிவிட்டு, "அப்பா, எந்த ஹோட்டலில் சாப்பாடு நன்றாக இருக்குமோ அங்கு மதியத்திற்கு சாப்பாடு சொல்லிவிடலாம்" என்றான் தந்தையிடம்.</p>
<p>&nbsp;</p>
<p>அவருக்கும் மகன் சொல்லுவது சரியாகப்பட்டது. சரிப்பா, என்று தலையாட்டி காலை உணவை அனைவரும் பேசி உண்டு முடித்தனர். </p>
<p>ஆண்கள் அப்படியே ஹாலில் உட்கார்ந்து பேச, </p>
<p>சிவகாமி "நான் துணிகளை எல்லாம் எடுத்து வைக்கணும் அண்ணி" என்று சொல்லி அவர்களது அறைக்குச் செல்ல, </p>
<p>பின்னாடியே பார்வதியும் அவருக்கு உதவி செய்வதற்காக சென்றார். </p>
<p>&nbsp;</p>
<p>துணிகளை எல்லாம் எடுத்து அடுக்கி மடித்து வைத்துக் கொண்டு இருக்கும் பொழுது, அங்கு அமைதியாக இருந்த நளினியை பார்த்தார் சிவகாமி. </p>
<p>&nbsp;</p>
<p>- தொடரும்..</p>
<p>&nbsp;</p>
<p>- அருள்மொழி மணவாளன்..</p>]]></content:encoded>
						                            <category domain="https://onlinetamilnovels.com/community/%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b2%e0%af%88%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80-%e0%ae%85%e0%ae%b0%e0%af%81/">தொலைதூர வெளிச்சம் நீ - அருள்மொழி மணவாளன்</category>                        <dc:creator>Arulmozhi Manavalan</dc:creator>
                        <guid isPermaLink="true">https://onlinetamilnovels.com/community/%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b2%e0%af%88%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80-%e0%ae%85%e0%ae%b0%e0%af%81/%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d-16/</guid>
                    </item>
				                    <item>
                        <title>வெளிச்சம் - 15</title>
                        <link>https://onlinetamilnovels.com/community/%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b2%e0%af%88%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80-%e0%ae%85%e0%ae%b0%e0%af%81/%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d-15/</link>
                        <pubDate>Fri, 24 Jul 2026 14:09:28 +0000</pubDate>
                        <description><![CDATA[அத்தியாயம் 15
&nbsp;
முழு அலங்காரத்துடன் தயாராகி இருந்த சிவன்யாவை பார்த்த பார்வதி, &quot;ரொம்ப அழகாக இருக்கிறாய் டா. என் கண்ணே பட்டுரும் போல&quot; என்று திருஷ்டி நொடித்தார். 
&nbsp;
அவர்கள் ஒவ்வொர...]]></description>
                        <content:encoded><![CDATA[<p>அத்தியாயம் 15</p>
<p>&nbsp;</p>
<p>முழு அலங்காரத்துடன் தயாராகி இருந்த சிவன்யாவை பார்த்த பார்வதி, "ரொம்ப அழகாக இருக்கிறாய் டா. என் கண்ணே பட்டுரும் போல" என்று திருஷ்டி நொடித்தார். </p>
<p>&nbsp;</p>
<p>அவர்கள் ஒவ்வொருவரின் செயலிலும் அவளுக்கு மேலும் வெட்கம் உண்டாக, அது அவளை மேலும் அழகாக காட்டியது. அவளது தாய் தந்தையர் கூட அவளை ரசனையாக பார்த்தனர். </p>
<p>&nbsp;</p>
<p>ஆனால் அவளை ரசிக்க வேண்டிய தேவ்வோ, கோட் சூட் அணிந்து கையில் வாட்சை கட்டியபடியே "நான் ரெடி, போகலாமா?" என்றான் யாரையுமே பார்க்காமல். </p>
<p>&nbsp;</p>
<p>அவனது செயலில் பார்வதிக்கும் வருத்தமாக இருந்தது. மருமகள் அழகை எல்லோரும் பார்த்து ரசிக்க மகன் எதுவுமே சொல்லாமல் இருப்பதை கண்டு மகனை ஆராய்ச்சியாக பார்த்தார். "என்ன கண்ணா? சிவன்யா தயாராகி இருக்கிறாள், நீ எதுவுமே சொல்லவில்லையே?" என்று ஆதங்கமாக மகனை பார்த்தார். </p>
<p>&nbsp;</p>
<p>அதன் பிறகு தான் நிமிர்ந்து சுகன்யாவை பார்த்த தேவ், அவளைப் பார்த்துக் கொண்டே "அவளுக்கு என்ன குறைச்சல் மா? அலங்காரம் இல்லாமலே அவள் அழகாக தானே இருப்பாள். இப்போது சொல்லவும் வேண்டுமா? ரொம்ப அழகா இருக்கா" என்று கூற, அதில் மகிழ்ந்தனர் பார்வதி மற்றும் குடும்பத்தினர். ஆனால் அவன் பேச்சு உணர்வுபூர்வமாக இல்லை என்பதை கண்டு கொண்டாள் சிவன்யா.  </p>
<p>&nbsp;</p>
<p>இவ்வளவு நேரம் அவளுக்குள் இருந்த மகிழ்ச்சி சற்றென்று வடிந்தது. புன்னகையாக இருந்த தங்கையின் முகத்தில் திடீரென்று மாறியதைக் கண்ட மேகநாதன், தங்கையின் அருகில் வந்து "என்னாச்சு குட்டிமா? ஏன் ஒரு மாதிரி இருக்கிறாய்?" என்று அவளின் அலங்காரத்தை சரி செய்வது போல தனது கைக்குட்டை கொண்டு நெற்றியில் ஒற்றியபடி, மெதுவாக அவளுக்கு மட்டும் கேட்குமாறு கேட்டு அவள் முகம் பார்த்தான். </p>
<p>&nbsp;</p>
<p>"ஒன்றும் இல்லை அண்ணா" என்று வலுக்கட்டாயமாக புன்னகையை வரவழைத்துக் கொண்டாள் சிவன்யா.</p>
<p>இருவரையும் சாமி கும்பிட வைத்து மண்டபத்திற்கு அனுப்பி வைத்து அனைவரும் கிளம்பினார்கள். </p>
<p>&nbsp;</p>
<p>அனைவரும் மண்டபத்திற்குச் சென்றதும் ஒவ்வொரு சொந்தங்களாக வர தொடங்க, இனிமையாக தொடங்கியது தேவ் சிவன்யாவின் வரவேற்பு நிகழ்ச்சியும். </p>
<p>&nbsp;</p>
<p>வந்திருந்த சுற்றமும் நட்பும் மணமக்களை வாழ்த்தி புகைப்படம் எடுத்து விருந்துண்டு கிளம்பினார்கள். விருந்தினர் அனைவரும் கிளம்பிய பிறகு மணமக்களுடன் வீட்டினர் அனைவரும் அமர்ந்து ஒன்றாக உணவு உண்டார்கள். தேவைக்கு அதிகமாக எதுவும் தேவ் சிவன்யாவுடன் பேசவில்லை. </p>
<p>அனைவரும் உண்டு முடித்ததும் விஸ்வநாதன் மண்டப வேலையை முடித்துவிட்டு வருவதாகவும், மற்றவர்களை வீட்டிற்கு செல்லும்படி கூறினார். மேகநாதனும் அவருக்கு துணையாக நின்று கொண்டான். </p>
<p>&nbsp;</p>
<p>மணமக்களை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்த பார்வதி இருவருக்கும் ஆரத்தி எடுத்து வீட்டுக்குள் வரவேற்றார்.</p>
<p>தூக்க கலக்கத்தில் இருந்த நளினி எனக்கு தூக்கம் வருகிறது என்று சொல்லிவிட்டு அவளது அறைக்கு சென்று விட்டாள். தேவ்வும் அவனது அறைக்கு சென்று விட, சிவன்யாவிற்கு ஒரு நொடி என்ன செய்வது என்று தெரியாமல் அப்படியே நின்றாள். </p>
<p>&nbsp;</p>
<p>அவளின் தோளைத் தொட்டு தன் புறம் திருப்பிய பார்வதி, "உன்னுடைய உடைமைகளை எல்லாம் தேவ்வோட அறையில் வைத்திருக்கிறேன் ம்மா. இதில் சூடா பால் இருக்கு, ரெண்டு பேரும் குடிச்சுக்கோங்க" என்று புன்னகையுடன் கூறி அவளை தேவ்வின் அறைவாசலில் சென்று விட்டார்.</p>
<p>&nbsp;</p>
<p>ஒரு நொடி தயங்கி நின்ற சிவன்யா தன் தயக்கத்தை ஒதுக்கி வைத்து விட்டு மெதுவாக கதவை திறந்த உள்ளே சென்றாள். </p>
<p>முதல் இரவுக்கான பூ அலங்காரங்களுடன் ஒரு கட்டில் இருந்தது. அருகிலேயே ஒரு பீரோ ஒரு பக்கம் குளியலறை ஒரு சிறிய டிரெஸ்ஸிங் டேபிள் மற்றும் ஒரு மேஜை நாற்காலியும் இருந்தது. </p>
<p>&nbsp;</p>
<p>சுற்றி பார்த்த சிவன்யா, தேவ் இல்லாததை கண்டாள். குளியலறையில் சத்தம் கேட்க குளிக்கிறார் போலருக்கு என்று நினைத்து, தன்னுடைய பெட்டியைத் திறந்து இரவு உடையை எடுத்து வைத்து தயாராக நின்றாள். </p>
<p>&nbsp;</p>
<p>அப்பொழுது குளித்து முடித்து வெளியே வந்தான் தேவ். அங்கு நின்ற சிவன்யாவை பார்த்து லேசாக புன்னகைத்து விட்டு, தலையை துவட்டியபடியே கட்டில் சென்று அமர்ந்து கொண்டான். </p>
<p>தனக்கு தேவையானவற்றை எடுத்துக்கொண்ட சிவன்யா குளியலறை சென்று குளித்து உடைமாற்றி வந்தாள். அவனிடம் எப்படி பேசுவது என்று தயங்கிக் கொண்டே தான் இருந்தாள். இவள் வரும்பொழுது அவன் ஃபோன் பார்த்துக் கொண்டு இருக்க, பார்வதி கொடுத்த பாலை அவனிடம் கொடுத்தாள் சிவன்யா. </p>
<p>&nbsp;</p>
<p>மறுப்பு ஏதும் சொல்லாமல் வாங்கி குடித்துவிட்டு, "எனக்கு கொஞ்சம் வேலை இருக்குது. அதை முடித்துவிட்டு தான் உறங்குவேன். நீ தூங்கு" என்று கட்டிலின் மறுபுறம் அவளுக்கு காண்பித்து விட்டு, லேப்டாப்பை எடுத்துக் கொண்டு அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டான். </p>
<p>&nbsp;</p>
<p>அவளும் எதுவும் சொல்லவில்லை, பேசாமல் சென்று படுத்து விட்டாள். நேற்று இரவு சென்னையில் இருந்து ரயில் பயணம், இன்று பகல் முழுவதும் சொந்தக்காரர்களுடன் பேசிக் கொண்டிருந்தது, சாயங்காலம் ரிசப்ஷனில் நின்று கொண்டிருந்தது என்று உடல் அவளுக்கு அசதியாக இருக்க, படுத்த சிறிது நேரத்திலேயே ஆழ்ந்து உறங்கி விட்டாள். </p>
<p>&nbsp;</p>
<p>அவள் கண் விழித்து பார்க்கும் பொழுது அறைக்குள் வெளிச்சமாக இருந்தது. திடுக்கிட்டு எழுந்து மணியை பார்க்க மணி 7 ஆகியிருந்தது. வேகமாக எழுந்து பார்த்தாள். தேவ்வும் உறங்கிக் கொண்டுதான் இருந்தான். நல்லவேளை என்று உடுத்துவதற்கு உடைய எடுத்துக் கொண்டு வேகமாக குளியல் அறைக்குள் நுழைந்து கொண்டாள். </p>
<p>&nbsp;</p>
<p>சிவகாமி சிவன்யாவிடம் "சென்னை போல் ஊர் இருக்காது. திருமணமான பெண்கள் விடியல் காலையில் எழுந்துவிட வேண்டும். குறைந்தது ஆறு மணிக்காவது எழுந்துவிடு" என்று சொல்லி தான் இருந்தார். ஆனால் உடல் அலுப்பில் அசந்து தூங்கிவிட்டாள். அம்மா என்ன சொல்லுவாச்களோ என்று பயந்த படியே வேகமாக குளித்து புடைவையை கட்டிக்கொண்டு வெளியே சென்றாள். </p>
<p>&nbsp;</p>
<p>இன்னும் தேவ் உறங்கிக் கொண்டு இருக்க தயங்கியபடி அறையை விட்டு வெளியே வந்தாள் சிவன்யா. </p>
<p>&nbsp;</p>
<p>நல்ல வேளையாக வரவேற்பு அறையில் யாரும் இல்லாமல் இருக்க, சமையல் அறைக்குச் சென்றாள். அங்கே பார்வதி காலை உணவு தயார் செய்து கொண்டு இருந்தார். </p>
<p>&nbsp;</p>
<p>"என்ன அத்தை? காலையிலேயே சமையல் செய்ய ஆரம்பித்து விட்டீர்களா? என்னை எழுப்பி இருக்கலாமே! அம்மாவையே இங்கே காணும்?" என்று கேள்வி கேட்ட மருமகளை புன்னகையுடன் திரும்பி பார்த்த பார்வதி,</p>
<p>"வழக்கமா நான் செய்யும் வேலை தானே டா, எதற்கு உதவி? அம்மா இப்பொழுது தான் அப்பாவிற்கு காபி எடுத்துட்டு போனாங்க. தேவ் எழுந்துட்டானா?" என்று மருமகளிடம் கேட்டார்.</p>
<p>&nbsp;</p>
<p>அவள் இல்லை என்று தலையாட்ட, அவள் கையில் ஒரு காபியை கொடுத்து, "நீ போய் உட்கார்ந்து குடிமா. இன்னும் பத்து நிமிஷத்துல வேலை முடிந்திடும்" என்று சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது நளினி வந்தாள், "அம்மா காபி" என்று. </p>
<p>&nbsp;</p>
<p>"பார், அண்ணி காலையிலேயே குளிச்சிட்டாங்க. நீ இன்னும் குளிக்காம இருக்கிற. பொய் குளிச்சிட்டு வந்து காபி குடி" என்று அவளை விரட்டினார் பார்வதி. </p>
<p>&nbsp;</p>
<p>"அம்மா" என்ற சிணுங்கியபடி சிவன்யாவின் தொளில் சாய்ந்து கொண்டு, "அண்ணி நீங்களாவது காபி தாங்க" என்றாள். </p>
<p>&nbsp;</p>
<p>அவள் கையில் இருந்த காபியை அவளிடம் கொடுக்க, "நீ குடிமா, அவ குளிச்சிட்டு வந்து குடிப்பா" என்று மகளை கண்டித்தார். </p>
<p>"பரவாயில்லை அத்தை" என்று கூறி தனக்கு காபி கலந்து கொண்டு, நளினியையும் அழைத்துக் கொண்டு ஹாலில் வந்து அமர்ந்தாள். </p>
<p>நளினி ஏதேதோ பேசிக்கொண்டு இருக்க, புன்னகையுடன் கேட்டபடியே காபி முடித்து முடித்தனர். </p>
<p>அந்நேரம் இருவருக்கும் குட் மார்னிங் சொல்லிவிட்டு அங்கு வந்து அமர்ந்தான் மேகநாதன்.</p>
<p>&nbsp;</p>
<p>- தொடரும்..</p>
<p>&nbsp;</p>
<p>- அருள்மொழி மணவாளன்..</p>]]></content:encoded>
						                            <category domain="https://onlinetamilnovels.com/community/%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b2%e0%af%88%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80-%e0%ae%85%e0%ae%b0%e0%af%81/">தொலைதூர வெளிச்சம் நீ - அருள்மொழி மணவாளன்</category>                        <dc:creator>Arulmozhi Manavalan</dc:creator>
                        <guid isPermaLink="true">https://onlinetamilnovels.com/community/%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b2%e0%af%88%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80-%e0%ae%85%e0%ae%b0%e0%af%81/%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d-15/</guid>
                    </item>
				                    <item>
                        <title>வெளிச்சம் - 14</title>
                        <link>https://onlinetamilnovels.com/community/%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b2%e0%af%88%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80-%e0%ae%85%e0%ae%b0%e0%af%81/%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d-14/</link>
                        <pubDate>Fri, 24 Jul 2026 13:16:23 +0000</pubDate>
                        <description><![CDATA[அத்தியாயம் 14
&nbsp;
நாளை சாயங்காலம் தேவ் சிவன்யா வரவேற்பு. தேவ்வின் ஊரில். அதற்காக இன்று அனைவரும் அவனது ஊருக்கு ரயிலில் பயணித்துக் கொண்டு இருக்கிறார்கள். 
மேகநாதன் தன் தாய் தந்தையருக்கு ...]]></description>
                        <content:encoded><![CDATA[<p>அத்தியாயம் 14</p>
<p>&nbsp;</p>
<p>நாளை சாயங்காலம் தேவ் சிவன்யா வரவேற்பு. தேவ்வின் ஊரில். அதற்காக இன்று அனைவரும் அவனது ஊருக்கு ரயிலில் பயணித்துக் கொண்டு இருக்கிறார்கள். </p>
<p>மேகநாதன் தன் தாய் தந்தையருக்கு ரயிலின் படுக்கையை விரித்துக் கொடுத்து, அவர்களை உறங்கச் சொல்லிவிட்டு, தங்கையிடமும் உறங்குவதாக சொல்லி அவனது படுக்கையில் படுத்து விட்டான். </p>
<p>&nbsp;</p>
<p>சிவன்யா தேவ் படுக்கட்டும் என்று காத்திருக்க, அவனோ "உனக்கு தூக்கம் வந்தால் உறங்கு" என்று சொல்லிவிட்டு போனில் மெசேஜ் செய்ய ஆரம்பித்து விட்டான். </p>
<p>&nbsp;</p>
<p>சிறிது நேரம் அமர்ந்திருந்த சிவன்யா, எதுவும் சொல்லாமல் அவளும் உறங்கலாம் என்று தனது படுக்கையில் படுத்துக் கொண்டாள். அவளுக்கு எதிர் இருக்கையில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டு ஃபோன் பார்த்து கொண்டு இருந்தான் தேவ். நேரம் கடக்க தேவ் போனில் மெசேஜ் அனுப்பி கொண்டே இருந்தானே தவிர உறங்கவில்லை. விடியல் நேரத்தில் தான் உறங்கினான் </p>
<p>&nbsp;</p>
<p>அவனையே சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தாள் சிவன்யா. ஃபோனை விட்டு அவனது கவனம் சிறிதும் நகரவில்லை. ஒரு முறையாவது அவளை பார்ப்பான் என்று நினைத்த சிவன்யாவிற்கு, தன்னை அவன் பார்க்காதது வருத்தமாக இருந்தது. </p>
<p>&nbsp;</p>
<p>பெருமூச்சுவிட்டு, கண்கள் மூடி படுத்த சுகன்யாவிற்கு உறக்கம் வர மறுத்தது. அனைவரிடத்தும் நன்றாக பேசும் தேவ், தன்னிடம் மட்டும் ஒதுங்கி இருப்பது போல் தோன்றியது. உண்மையில் அவருக்கு என்னை பிடிக்கவில்லையா? எல்லோரிடமும் சகஜமாக தானே பேசுகிறார்.</p>
<p>என்னிடம் மட்டும் தான் சரியாக பேசவில்லை. அவருக்கு என்னை பிடிக்க வில்லை போல. போக போக பிடிக்குமா என்றும் தெரியவில்லையே? ஒருவேளை கடைசிவரை பிடிக்கவே இல்லை என்றால் என்ன செய்வது. </p>
<p>இல்லை அப்படியெல்லாம் இருக்காது. தங்கைக்கு திருமணம் என்று தானே சொல்லி இருப்பார்கள். அதற்கு தான் லீவு எடுத்து இருந்ததாக சொன்னாறே. </p>
<p>இப்போது திடீரென்று அவருக்கும் திருமணம் என்றதும் அவருக்கு இதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை போல, என்று பலவாறு எண்ணங்கள் அவளுக்குள் ஓடிக்கொண்டே இருந்தது. </p>
<p>&nbsp;</p>
<p>இடையிடையே அவள் விழித்து பார்க்கும் பொழுதெல்லாம் அவன் ஃபோன் பார்த்து கொண்டு தான் இருந்தான். தனக்குள் வந்த குழப்பமான எண்ணங்களுடனேயே, எப்பொழுது உறங்கினோம் என்று தெரியாமல் தூங்கி விட்டாள் சிவன்யா.</p>
<p>&nbsp;</p>
<p>மறுநாள் விடியற்காலையில் தேவின் ஊருக்கு வந்து இறங்கினார்கள். அவர்கள் இறங்கியதும் வேகமாக ஓடி வந்த நளினி, சிவன்யாவை அணைத்துக் கொண்டு "வெல்கம் அண்ணி" என்றாள் புன்னகையுடன் </p>
<p>&nbsp;</p>
<p>"உங்கள் அண்ணியை மட்டும் தான் வரவேற்பாயா? நாங்களெல்லாம் அப்படியே கிளம்பி விடட்டுமா? என்று நிற்கும் ரயிலில் ஏறப்போனான் மேகநாதன். </p>
<p>&nbsp;</p>
<p>"அச்சோ அப்படி இல்லை அத்தான். வாங்க வாங்க, அத்தை வாங்க, வாங்க மாமா, வாங்க அண்ணா, வாங்க" என்று எல்லோரையும் கையெடுத்து கும்பிட்டு, ஒவ்வொருவரின் முன்பும் குனிந்து குனிந்து வரவேற்றாள் நளினி. </p>
<p>&nbsp;</p>
<p>அவளது செயலில் அனைவரும் புன்னகைத்து கொள்ள, அவள் தலையில் செல்லமாக கொட்டிய தேவ், "உன் வால்தனத்தை இன்னும் நீ விடவில்லையா?" என்று சொல்லிக் கொண்டே, தன்னுடைய பெட்டியை எடுத்துக்கொண்டு நகன்றான். </p>
<p>&nbsp;</p>
<p>மேகநாதன் தங்கள் உடைமைகளை எல்லாம் எடுத்துக்கொண்டு ரயில் நிலையத்தின் வாயிலை நோக்கி செல்ல அப்பொழுதுதான் விஸ்வநாதன் அவர்களை எதிர்கொண்டு வரவேற்றார். </p>
<p>&nbsp;</p>
<p>நளினியை பார்த்து, "பொறுமையா போ என்று சொன்னேன் இல்லையா?" என்று முறைத்து விட்டு, "வண்டியை நிறுத்தி விட்டு வருவதற்குள் ஓடி வந்து விட்டாள் சம்மந்தி" என்று சிவநேசனிடம் கூறி, அனைவரையும் அழைத்துக் கொண்டு தங்கள் வீட்டிற்கு வந்தார்.</p>
<p>&nbsp;</p>
<p>இரயில் நிலையத்தில் இருந்து கால் மணி நேர பயணம். அனைவரிடமும் பயணம் நல்லபடியாக அமைந்ததா என்று கேட்ட விஸ்வநாதன், அனைவரும் அமர்ந்ததும் அவர்களது வீட்டிற்குச் செல்ல சிறிது நேரம் ஆகும் என்று கூறி சிவநேசன் அருகில் அமர்ந்து கொண்டார். </p>
<p>&nbsp;</p>
<p>முன் இருக்கையில் தனியே தேவ் அமர்ந்து கொண்டான். அவனுக்கு பின் இருக்கையில் சிவன்யா ஜன்னலோரம் அமர்ந்து கொண்டு வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டு வர, அவள் அருகில் அமர்ந்த நளினி, அவளுக்கு அவர்களின் ஊரின் பெருமையை பற்றி பேசிக்கொண்டே வந்தாள். </p>
<p>&nbsp;</p>
<p>அவள் கூறுவது வேனில் இருந்த அனைவருக்குமே தெளிவாக கேட்க, அனைவருமே புன்னகையாக வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தார்கள். சுற்றிலும் பசுமையான வயல்வெளிகள். சாலையின் இருபுறமும் உயரமான புளிய மரங்கள் சாலைக்கு நிழல் தர அழகாக இருந்தது. </p>
<p>&nbsp;</p>
<p>எங்க நோக்கினும் பசுமையாக காட்சியளித்தது அது மனதிற்கு மிகவும் இனிமையாக இருந்தது. </p>
<p>"சென்னையில் எங்கும் வாகன நெரிசல்களும் வாகனச் சத்தங்களும் கேட்டுக்கொண்டு இருக்கும். இங்கு சுத்தமான காற்றும், கண்ணுக்கு குளிர்ச்சியான பசுமையான வயல்வெளிகளும் இருக்குது" என்று வாய் திறந்து கூறிய மேகநாதன், அந்த இயற்கையை மிகவும் ரசித்துக்கொண்டே பயணித்தான். </p>
<p>&nbsp;</p>
<p>ஒவ்வொருவரும் ஏதாவது பேசிக் கொண்டு வர, அந்த வேனில் அமைதியாக இருந்தது தேவ்வும் சிவன்யாவும் மட்டுமே. தேவ் வேடிக்கை பார்ப்பதும், போனை பார்ப்பதுமாக இருந்தான். </p>
<p>சிவன்யாவின் கண்கள் இயற்கையை ரசித்துக் கொண்டே இருந்தாலும், மனம் ஏதோ ஒரு வித அழுத்தம் இருப்பது போலேயே இருந்தது. </p>
<p>அவளது மன ஓட்டத்தை கவனிக்காத நளினி ஏதேதோ பேசிக்கொண்டே வந்தாள். </p>
<p>&nbsp;</p>
<p>சிறிது நேரத்தில் விஸ்வநாதன் தான் நளினியை "கொஞ்ச நேரம் அமைதியா இருடா" என்று அமைதி படுத்தினார். </p>
<p>அவர் கூறியதும் ஒரு நிமிடம் அமைதியாக இருந்த நளினி, மீண்டும் "அண்ணி" என்று சிவன்யாவிடம் பேச ஆரம்பித்தாள். </p>
<p>அவளின் செயலை கண்டு சிரித்துக் கொண்ட மேகநாதன் "அவள் ஓட்டை வாயை யாராலும் மூட வைக்க முடியாது மாமா" என்று சிரித்துக் கொண்டே கூறினான். </p>
<p>&nbsp;</p>
<p>அப்படியே கலகலப்பாக பேசிக்கொண்டு இருக்க, தேவ்வின் வீட்டில் அருகில் வந்து விட்டார்கள். வண்டி அவர்களது வீட்டின் முன்பு நின்றதும் ஆரத்தி தட்டுடன் தன் மகனையும் மருமகளையும் வரவேற்க தயாராக நின்றார் பார்வதி.</p>
<p>&nbsp;</p>
<p>அதுவரை தயக்கத்தில் இருந்த சிவன்யா, தனது அத்தையின் மலர்ந்த முகத்தை கண்டு அவளும் புன்னகைத்துக் கொண்டாள். ஆரத்தி எடுத்து புதுமண தம்பதியரை வீட்டிற்குள் அழைத்து வந்தார். </p>
<p>&nbsp;</p>
<p>தேவ், சிவன்யா இருவரையும் சாமி கும்பிட வேண்டும் ஆகையால் சீக்கிரம் குளித்து வரும்படி கூற, தேவ் அவனது அறைக்கு சென்று விட்டான். எங்கே சென்று குளிக்க வேண்டும் என்று தயங்கி நின்ற சிவன்யாவின் அருகில் வந்த நளினி, "வாங்க அண்ணி" என்று தனது அறைக்கு அழைத்து சென்றாள். </p>
<p>&nbsp;</p>
<p>தனது அத்தை கூறியதை மனதில் வைத்துக் கொண்டு விரைவாக குளித்து வந்தாள் சிவன்யா. அவள் வரவும், தேவ்வும் வர, இருவரையும் சாமி அறைக்கு அழைத்துச் சென்று, சிவன்யாவை விளக்கேற்ற வைத்தார் பார்வதி. பின்னர் சாமியின் முன்பும், வீட்டில் இருந்த பெரியவர்கள் முன்பும் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டார்கள் தம்பதியர். </p>
<p>&nbsp;</p>
<p>அதன் பிறகு காலை உணவு பரிமாற, உணவு உண்ட பிறகு தேவ் அவனது அறைக்குச் சென்று விட்டான். இங்கு வந்து பிறகு கூட தன் கணவன் தன்னுடன் பேசாதது சிவன்யாவிற்கு வருத்தமாக இருந்தது. சற்று நேரம் என்ன செய்வது என்று தடுமாறியவள், தன் கலக்கத்தையும், தேவ்வை பற்றிய எண்ணங்களையும் ஒதுக்கி வைத்து விட்டு, அங்கு வந்திருந்த விருந்தினர்களுடன் பேசிக் கொண்டு,  தன் அத்தைக்கு உறுதுணையாக, அவரின் அருகிலேயே நின்று கொண்டு தன்னை சமன்படுத்திக்கொள்ள முயன்றாள். </p>
<p>&nbsp;</p>
<p>அந்த வீட்டின் பொறுப்பான மருமகளாக, மாமியார் சொல்லும் வேலை அனைத்தையும் செய்து, வந்தவர்களை நன்றாக கவனித்துக் கொண்டாள். அன்று இரவே வரவேற்பு இருப்பதால், அவளை ஓய்வு எடுக்கும்படி நளினியை கூப்பிட்டு சொல்லி, அவளுடன் அனுப்ப முயன்றார் பார்வதி. </p>
<p>&nbsp;</p>
<p>இருந்தாலும் "பரவாயில்லை அத்தை" என்று கூறி, அவர்களுடனே இருந்து அனைத்தையும் செய்த சிவன்யாவை வந்திருந்த சொந்தக்காரர்கள் அனைவருக்கும் மிகவும் பிடித்து விட்டது. </p>
<p>&nbsp;</p>
<p>"சென்னையில் வாழ்ந்தாலும் மிகவும் பொறுப்பாக இருக்கிறாள் உன் மருமகள்" என்று சிவன்யாவை அனைவரும் புகழ்ந்து கூறினார்கள். தன் மருமகளை பற்றி அனைவரும் நல்ல விதமாக பேசியதில் மிகவும் மகிழ்ந்தார் பார்வதி. </p>
<p>&nbsp;</p>
<p>அப்படியே நேரம் கடக்க, மதிய உணவு நேரம் வந்தும், அங்கு இருந்த அனைவருக்கும் விருந்து பரிமாறப்பட்டது. சாப்பிட்டு முடித்ததும் மருமகளை ஓய்வெடுக்க கூறினார் பார்வதி. </p>
<p>&nbsp;</p>
<p>நளினியின் அறைக்கு வந்த சிவன்யாவுடன், அவள் வயது ஒத்த பெண்கள் சுற்றி அமர்ந்து கொண்டார்கள். அதில் முக்கால்வாசிக்கு மேல் அவர்கள் கிராமத்தைத் தாண்டி வெளியே எங்கும் சென்றதில்லை. அவர்களிடம் சென்னையை பற்றி நளினி கூறியதை வைத்து, </p>
<p>"அங்கு பெரிய கடல் இருக்குதாமே! பெரிய பெரிய சாலைகளில் எந்நேரமும் வாகனங்கள் போய்க்கொண்டும் வந்து கொண்டும் இருக்குமாமே! பெரிய பெரிய கடையில் எல்லாம் சிலுசிலுன்னு ஏசி போட்டு வச்சிருப்பாங்களாமே!" என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான கேள்விகளை அவளிடம் கேட்டு அவளை குடைந்து கொண்டு இருந்தார்கள். </p>
<p>&nbsp;</p>
<p>அவர்கள் ஒவ்வொருவருக்கும் பொறுமையாக பதில் கூறிக் கொண்டிருந்தாள் சிவன்யா. அவளின் புன்னகை முகத்தை கண்டு "நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க" என்று அவள் கன்னத்தில் விழும் குழியில் விரல் வைத்து தொட்டுப் பார்த்தார்கள். </p>
<p>&nbsp;</p>
<p>அவர்களது செயலில் சற்று வெட்கம் உண்டானது சிவன்யாவிற்கு. "நீங்கள் எல்லோருமே அழகா தான் இருக்கிறீங்க" என்று ஒவ்வொருவரையும் பார்த்து புன்னகையுடன் கூறினாள் சிவன்யா.  </p>
<p>&nbsp;</p>
<p>சற்று நேரத்தில் அங்கு வந்த பார்வதி, "மருமகள் கொஞ்ச நேரம் ஓய்வு எடுக்கட்டும் என்று அனுப்பினால், அவளிடம் பேசிக்கொண்டு அவளை தொந்தரவு செய்து கொண்டிருக்கிறீர்களா?" என்று அங்கிருந்தவர்களை பார்த்தார்.</p>
<p>&nbsp;</p>
<p>"இல்லை அத்தை, இல்லை சித்தி" என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக கூற, </p>
<p>"நேரம் ஆயிடுச்சு, எல்லோரும் வரவேற்பு கிளம்புற வழிய பாருங்க" என்று அனைவரையும் அனுப்பிவிட்டு, சிகன்யாவிடம் "நீ ஒரு அரை மணி நேரமாவது படுத்து ஓய்வெடுமா" என்று கூறி அவளை தனியாக விட்டுவிட்டு அனைவரையும் இழுத்துக் கொண்டு "பரவாயில்லை அத்தை" என்று அவள் கூறுவதை கேட்காமல் வெளியே சென்றார்.</p>
<p>&nbsp;</p>
<p>அவர்கள் அனைவரும் சென்றதும் என்ன செய்ய என்று தெரியாமல் அப்படியே கட்டிலில் சாய்ந்து படுத்த சிவன்யா, அவளையும் அறியாமல் அப்படியே கண் உறங்கியும் விட்டாள். </p>
<p>சொன்னது போல அரை மணி நேரம் கழித்து அவள் குடிப்பதற்கு சூடாக எடுத்துக் கொண்டு அவளை எழுப்பினார் பார்வதி. </p>
<p>எழுந்ததும் வரவேற்பு தேவையான உடுப்பை கொடுத்து "குளித்து தயாராகி விடுமா" என்று கூறிச் சென்றார். </p>
<p>&nbsp;</p>
<p>நேரமாகியதை உணர்ந்து குளித்து அவர் கொடுத்த புடவையை அணிந்து கொண்டு தன்னை தானே ஒப்பனை செய்து கொண்டாள் சிவன்யா. அவள் தயாராகியதும் கதவை திறக்க அவளுக்காக காத்துக் கொண்டிருந்த நளினியும் அவளது குழுவினரும் அறைக்குள் வேகமாக வந்து, அவளை பார்த்து "ரொம்ப அழகாக இருக்கிறீங்க" என்று சொல்லி, ஆளாளுக்கு சிறிது அவளுக்கு ஒப்பனை செய்து மேலும் அவள் அழகை ஏற்றினார்கள். </p>
<p>&nbsp;</p>
<p>அனைத்தும் முடிந்ததும் தேவதை போல் இருந்த சிவன்யாவை பார்த்து ரொம்ப அழகா இருக்கீங்க அண்ணி என்று திருஷ்டி நொடித்தாள் நளினி. </p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p>- தொடரும்..</p>
<p>&nbsp;</p>
<p>- அருள்மொழி மணவாளன்..</p>
<p>&nbsp;</p>
<p>தாமதத்திற்கு மன்னிக்கவும்.</p>
<p>தனிப்பட்ட வேலை காரணமாக தொடர்ந்து கதை கொடுக்க முடியவில்லை.</p>
<p>விரைவாக அடுத்த அத்தியாயம் போட முயற்சிக்கிறேன்.</p>
<p>தொடர்ந்து படித்து ஆதரவு தாருங்கள் &#x1f60a;&#x1f60a;</p>
<p>&nbsp;</p>]]></content:encoded>
						                            <category domain="https://onlinetamilnovels.com/community/%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b2%e0%af%88%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80-%e0%ae%85%e0%ae%b0%e0%af%81/">தொலைதூர வெளிச்சம் நீ - அருள்மொழி மணவாளன்</category>                        <dc:creator>Arulmozhi Manavalan</dc:creator>
                        <guid isPermaLink="true">https://onlinetamilnovels.com/community/%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b2%e0%af%88%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80-%e0%ae%85%e0%ae%b0%e0%af%81/%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d-14/</guid>
                    </item>
				                    <item>
                        <title>வெளிச்சம் - 13</title>
                        <link>https://onlinetamilnovels.com/community/%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b2%e0%af%88%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80-%e0%ae%85%e0%ae%b0%e0%af%81/%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d-13/</link>
                        <pubDate>Fri, 24 Jul 2026 13:07:34 +0000</pubDate>
                        <description><![CDATA[திருமணம் முடிந்த அடுத்த நாள் விஸ்வநாதன் தன் மனைவியையும் மகளையும் அழைத்துக் கொண்டு ஊருக்கு செல்வதாக இருந்தது. 
&nbsp;
அதில் மிகவும் வருத்தம் அடைந்த நளினி சிவன்யாவிடம் தன் கவலையை சொல்லிக் கொ...]]></description>
                        <content:encoded><![CDATA[<p>திருமணம் முடிந்த அடுத்த நாள் விஸ்வநாதன் தன் மனைவியையும் மகளையும் அழைத்துக் கொண்டு ஊருக்கு செல்வதாக இருந்தது. </p>
<p>&nbsp;</p>
<p>அதில் மிகவும் வருத்தம் அடைந்த நளினி சிவன்யாவிடம் தன் கவலையை சொல்லிக் கொண்டிருக்க, சிவன்யாவோ "அப்படி என்றால் நீ இங்கேயே இருந்து விடு. நானும் உங்கள் அண்ணனும் வரும்பொழுது ஒன்றாக போகலாம்" என்றாள். </p>
<p>&nbsp;</p>
<p>அதுவும் சரிதானே என்று ஒரு புறம் ஆசை இருந்தாலும், "வேண்டாம் அண்ணி, உங்கள் ரிசப்ஷன் வேலை எல்லாம் இருக்குது. அப்பாவும் அம்மாவும் வெளி வேலைகளை பார்த்துக் கொண்டால், வீட்டை நான் பார்த்துக் கொள்ள வேண்டுமல்லவா? எப்படியும் இரண்டு நாளில் வந்துவிடுவீர்கள் தானே!" என்று சொல்லி சமாளித்தாள். </p>
<p>&nbsp;</p>
<p>அவளின் சிறுபிள்ளைத்தனமான செயலில் புன்னகை தோன்றியது சிவன்யாவிற்கு. </p>
<p>&nbsp;</p>
<p>மதிய உணவு அசைவம் செய்ய இருப்பதால், சிவகாமி தன் மகளை அழைத்து இருவரும் அருகில் உள்ள கோயிலுக்கு சென்று வரும்படி கூறினார். </p>
<p>&nbsp;</p>
<p>'தேவ் கோயிலுக்கு வருவாரா தெரியவில்லையே?' என்று நினைத்துக் கொண்டு தயங்கி தயங்கி, </p>
<p>"அம்மா நம்ம ரெண்டு பேரையும் பக்கத்துல இருக்குற கோயிலுக்கு போயிட்டு வர சொன்னாங்க" என்றாள் சிவன்யா. </p>
<p>&nbsp;</p>
<p>அவனும் சாதாரணமாக தோள்களை குலுக்கிக் கொண்டு "ஓகே" என்று எழுந்தான். </p>
<p>&nbsp;</p>
<p>உடனே நளினியும் ஓடி வந்து, "நானும் வருகிறேன் அண்ணி" என்க, </p>
<p>&nbsp;</p>
<p>பார்வதியோ, "அவர்கள் இருவரும் போயிட்டு விரட்டும். நீ பேசாமல் இரு" என்று அவளை தடுத்தார் பார்வதி. </p>
<p>&nbsp;</p>
<p>உடனே நளினியின் முகம் வாடி விட, அதை பார்த்த சிவன்யா, "பக்கத்திலே தானே அத்தை, அவளும் வரட்டும். நான் அடிக்கடி செல்லும் கோயிலை அவளும் பார்த்தது போல் இருக்கும் அல்லவா?" என்று பார்வதியை பார்த்து சொல்லிவிட்டு, "நீ வா நளினி" என்று அவளின் கைப்பற்றி அழைத்தாள். </p>
<p>&nbsp;</p>
<p>அவளோ தயக்கமாக தாயின் முகத்தை பார்க்க, போய் வரும்படி செய்கை செய்தார் பார்வதி. உடனே மகிழ்ந்து அண்ணியின் கையைப் பிடித்துக் கொண்டு, வீட்டில் இருந்த அனைவரிடமும், சென்று வருவதாக சொல்லி கிளம்பினாள் நளினி. </p>
<p>&nbsp;</p>
<p>சந்தோஷமாக குதித்து குதித்து தன் மகளுடன் செல்லும் நளினியின் முதுகை பார்த்தவரே "இன்னும் ஒரு மாசத்துல அவளுக்கு கல்யாணம் னு சொல்றீங்க, ஆனா அவள் சின்ன பிள்ளை போல நடந்துக்கிறா" என்றார் சிவகாமி. </p>
<p>&nbsp;</p>
<p>"ஆமா அண்ணி, புகுந்த வீட்ல போயிட்டு என்னென்ன அட்டகாசம் பண்ண போறாளோ தெரியல. அவரின் சித்தப்பா மகள்தான் இவளுக்கு மாமியார். சிறுவயதில் இருந்தே நளினியை நன்கு தெரிந்தவர் தான். அது ஒன்றுதான் எனக்கு நிம்மதியாக இருக்கிறது. அவர்களுக்கு நளினியை ரொம்ப பிடிக்கும். அதனால் அவளை நன்றாக பார்த்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. அது மட்டுமல்ல இரண்டு தெரு தள்ளி தான் அவர்கள் வீடும், அதனால் அவள் நாமும் கொஞ்சம் பார்த்துக் கொள்ளலாம்" என்று மகிழ்வாக கூறினார். </p>
<p>&nbsp;</p>
<p>"பரவாயில்லை அண்ணி, உங்களுக்கு பக்கத்து தெருவில்லையே சம்பந்தம் அமைந்து விட்டது" என்று சற்று சோகமானார் சிவகாமி. </p>
<p>&nbsp;</p>
<p>"நீங்க கவலைப்படாதீங்க அண்ணி. சிவன்யாவை நான் நளினி போல கவனிச்சுக்குவேன்" என்று சிவகாமியின் கையை பிடித்துக் கொண்டு கூறினார். </p>
<p>&nbsp;</p>
<p>"நீங்க நல்லா கவனித்துக் கொள்வீர்கள் என்று தெரியும் அண்ணி. எனக்கு அதெல்லாம் ஒரு குழப்பமும் இல்லை. ஆனால் நளினியின் திருமணம் முடிந்த பிறகு, மாப்பிள்ளை இவளை அழைத்துக்கொண்டு துபாய் சென்று விடுவாரே! உங்கள் வீட்டில் இருந்தாலாவது நினைத்ததும் வந்து பார்த்துவிட்டு வரலாம். வெளிநாடு போயிட்டாள் என்றால் எப்படி நினைத்தபோதெல்லாம் சென்று வர முடியும்" என்று சோகமானார் சிவகாமி. </p>
<p>&nbsp;</p>
<p>ஒரு தாயாக மகளை கட்டிக் கொடுத்தால் எவ்வளவு வருத்தம் இருக்கும் என்பதை உணர்ந்த பார்வதி, சிவகாமிக்கு எப்படி ஆறுதல் சொல்லுவது என்று தெரியவில்லை. இருந்தாலும் "தேவ் அவளை நன்றாக கவனித்துக் கொள்வான் அண்ணி, கவலைப்படாதீர்கள்" என்று சொல்லிவிட்டு, "நேரில் சென்று பார்த்தால் தான் பார்த்தபடியா? இப்பொழுதுதான் நினைத்தவுடன் வீடியோ கால் செய்து பேசி விடலாமே! அதிலே உங்களுக்கு அவளை பார்த்தது போல் இருக்கும். அதையும் மீறி நேரில் பார்க்க வேண்டுமென்றால், நினைத்தவுடன் போய் பார்த்துவிட்டு வாருங்கள். ஐந்து மணி நேர பயணம் தானே!" என்று சிவகாமிக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தார் பார்வதி. </p>
<p>&nbsp;</p>
<p>இப்படியே அவர்கள் பேசிக் கொண்டு, தேவ்விற்கு என்ன உணவு பிடிக்கும் என்று கேட்டு, அவனுக்கு பிடித்தபடியே மதிய உணவை செய்ய கூறினார் சிவகாமி. </p>
<p>&nbsp;</p>
<p>தடபுடலாக மதிய உணவு தயாராகிக் கொண்டிருக்க, கோயிலில் மனம் உருகி வேண்டிக் கொண்டிருந்தாள் சிவன்யா. 'அவருக்கு விருப்பமில்லாத திருமணம் தான். ஆனால் நீ மனசு வைத்தால், சீக்கிரமாக அவர் மனதை மாற்றி என்னை மனதார ஏற்றுக்கொள்ள வைக்க முடியும். என் வாழ்க்கையே உன் கையில் தான் இருக்கிறது தாயே! தயவு செய்து எங்கள் இருவருக்கும் நலமான வாழ்க்கையை தா" என்று வேண்டிக் கொண்டாள். </p>
<p>&nbsp;</p>
<p>சாமி கும்பிட்டு முடித்ததும் கோயிலைச் சுற்றி வந்து, ஓரிடத்தில் சிறிது நேரம் அமர்ந்திருக்க, நளினி தான் ஓயாமல் இருவரிடமும் ஏதாவது பேசிக்கொண்டே இருந்தாள். </p>
<p>&nbsp;</p>
<p>"கொஞ்சம் அமைதியா இருக்கியா? லொட லொடண்ணு பேசிக்கிட்டே இருக்க" என்று ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து கூறினான் தேவ். </p>
<p>&nbsp;</p>
<p>அவளும் ஒருசில விநாடிகள் அமைதியாக இருந்துவிட்டு, மீண்டும் ஏதோ பேச ஆரம்பித்து விட்டாள்" </p>
<p>&nbsp;</p>
<p>"ஊஃப்" என்று பெருமூச்சு விட்டு தோள்களை குலுக்கி, "உன்னை திருத்தவே முடியாது" என்று சொல்லிவிட்டு எழுந்து விட்டான் தேவ். </p>
<p>&nbsp;</p>
<p>அவன் எழுந்ததும் சிவன்யாவும் எழுந்து விட, அவர்கள் கூடவே நளினியும் மீண்டும் எழுந்தாள். </p>
<p>மீண்டும் ஒருமுறை சுவாமியை பார்த்து கும்பிட்டு விட்டு வெளியே வந்தாள் சிவன்யா. </p>
<p>&nbsp;</p>
<p>வரும்பொழுது அவ்வளவாக வெயில் இல்லாததால் நடந்தே வந்து விட்டார்கள். ஆனால் இப்பொழுது வெயில் சுளீர் என்று அடிக்க, "ஆட்டோ பிடித்து விடலாமா?" என்றான் தேவ். </p>
<p>&nbsp;</p>
<p>இரண்டு தெரு போவதற்கு ஆட்டோவா என்று யோசித்த சிவன்யா என்ன சொல்வது என்று தெரியாமல் அமைதியாக இருக்க, </p>
<p>"பக்கத்து தெருவுக்கு போறதுக்கு ஆட்டோ புடிக்கணுமா? வாங்க நடந்தே போகலாம் என்று முன்னால் விறுவிறுவென்று நடந்தாள் நளினி. </p>
<p>&nbsp;</p>
<p>"ஏய் நளினி, மெதுவா போ" என்று அவளை பிடிப்பதற்காக சற்று வேகமாகவே சிவன்யாவும் நளினியின் பின்னால் செல்ல, 'இந்த பொம்பள பிள்ளைங்க, ஏதாவது சொல் பேச்சு கேட்குதா?' என்று மனதில் நினைத்துக் கொண்டு அவர்கள் பின்னே நடந்தான் தேவ்வும். </p>
<p>&nbsp;</p>
<p>வேகமாக முன்னால் சென்ற நளினி அங்கிருந்த ஐஸ் கிரீம் கடைக்கு முன்பு வந்து நின்று விட்டாள். </p>
<p>"ஏன் இங்கே நிற்கிறாய்? வா போகலாம்" என்று அழைத்த சிவன்யாவிடம், </p>
<p>"அண்ணி, ஐஸ்கிரீம்!" என்று கடையை காண்பித்தாள். </p>
<p>&nbsp;</p>
<p>அவளின் செய்கையில் சிரித்துவிட்ட சிவன்யா, பின்னால் திரும்பி தேவ்வை பார்க்க, </p>
<p>"ஊஃப்" என்று பெருமூச்சு விட்டு, "இதற்கு தான் நீ முன்னால் வந்தாயா?" என்று கேட்டுக் கொண்டே கடைக்குள் நுழைந்தான். </p>
<p>&nbsp;</p>
<p>"ஆமாம், பின்ன நீங்க பாட்டுக்கு ஆட்டோ புடிச்சிட்டீங்கன்னா, ஐஸ்கிரீம் எப்படி சாப்பிடுவது" என்று சொல்லிவிட்டு, தனக்குத் தேவையான ஐஸ்கிரீமையும் கூறினாள். </p>
<p>&nbsp;</p>
<p>சிவன்யாவிற்கும் என்ன வேண்டும் என்று கேட்டு, மூவருக்கும் ஐஸ்கிரீம் வாங்கி வந்து அமர்ந்தான் தேவ். </p>
<p>மிகவும் ரசித்து ரசித்து சாப்பிட்டாள் நளினி. </p>
<p>சாப்பிட்டு முடித்ததும், "நீங்க மெதுவா போய்கிட்டு இருங்க. நான் காசு கொடுத்துட்டு வருகிறேன்" என்று கூறி கடைக்காரனிடம் சென்றான் தேவ். </p>
<p>&nbsp;</p>
<p>"எல்லோரும் ஒன்றாகவே போகலாமே!" என்று சிவன்யா சொல்ல, </p>
<p>"அண்ணன் தான் சொன்னாங்கல்ல அண்ணி. நீங்க வாங்க, நாம மெதுவா நடந்துகிட்டு இருப்போம். அதுக்குள்ள அவர்களும் வந்து விடுவார்" என்று சொல்லி சிவன்யாவை பிடித்து இழுத்துக் கொண்டு வந்தாள் நளினி.  </p>
<p>&nbsp;</p>
<p>இவர்கள் பேசிக்கொண்டே மெதுவாக நடந்து வீட்டு வாசலுக்கு வருவதற்குள், அவர்களின் பின்னாடியே வந்து விட்டான் தேவ். </p>
<p>"பத்திங்களா அண்ணி, நான் சொன்னேனே! அண்ணன் வேகமா நடக்கும்" என்று சொல்லிவிட்டு, அவன் கையில் இருந்த பையை பார்த்து "ஐ, அண்ணா ஐஸ்கிரீம் வாங்கிட்டு வந்தீங்களா?" </p>
<p>&nbsp;</p>
<p>"நாம மட்டும் சாப்பிட்டோமே! வீட்டில் உள்ளவர்களுக்கு வாங்கிக் கொண்டு வரவில்லையே! என்று எனக்கு தோணவே இல்லை பாருங்கள்" என்று அண்ணனின் கையில் இருந்த கவரை வாங்கினாள் நளினி. </p>
<p>&nbsp;</p>
<p>அவள் கையில் கொடுத்து, அவள் தலையில் லேசாக கொட்டி விட்டு, "அந்த எண்ணம் எல்லாம் உனக்கு ஏன் வரப்போகுது? நாம மட்டும் சாப்பிட்டால் போதும், அப்படித்தானே!" என்று புன்னகையுடன் சொல்லிக் கொண்டே வீட்டுக்கு வந்தார்கள். </p>
<p>&nbsp;</p>
<p>வேகமாக சமையல் அறை சென்று குளிர்சாதன பெட்டியில் ஐஸ் கிரீமை வைத்துவிட்டு, அத்தையிடம் "அத்தை மதியானம் சாப்பிட்டதும், ஐஸ்கிரீம் சாப்பிடலாம்" என்று சொல்லி மகிழ்ந்தாள். </p>
<p>&nbsp;</p>
<p>மதிய உணவு தயாராக இருக்க அனைவரையும் உணவு உண்ண அழைத்தார் சிவகாமி. </p>
<p>&nbsp;</p>
<p>ஒற்றுமையாக. குடும்பமாக அனைவரும் பேசி மகிழுந்து உணவு உண்டனர். அப்படியே நேரம் கடக்க? சாயங்காலம் விஸ்வநாதன் குடும்பம் கிளம்பும் நேரம் வந்தது. </p>
<p>&nbsp;</p>
<p>நளினி சோகமாக கிளம்ப, பெரியவர்கள் அனைவரிடமும் விடை பெற்று, மருமகளை அழைத்துக் கொண்டு பத்திரமாக வரும்படி மகனிடமும் சொல்லிவிட்டு, "எல்லோரும் ரிசப்ஷனுக்கு வந்துடுங்க" என்று சொல்லி ரயில் நிலையத்திற்கு கிளம்பினார்கள். </p>
<p>&nbsp;</p>
<p>இரண்டு கார்களில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்துக்கு அனைவரும் கிளம்பி விஸ்வநாதன் பார்வதி நளினியை பத்திரமாக ரயில் ஏற்றி விட்டு, வீட்டிற்கு வந்தார்கள். </p>
<p>&nbsp;</p>
<p>மறுநாள் இனிமையாக விடிய, சிவநேசனும், மேகநாதனும் பத்து நாட்கள் விடுப்பு எடுத்திருந்ததால் வீட்டில் இருக்க, "சிவன்யாவை அழைத்துக் கொண்டு எங்காவது சென்று வாருங்கள் மாப்பிள்ளை" என்றார் சிவநேசன். </p>
<p>&nbsp;</p>
<p>"கொஞ்ச நாளில் இவள் துபாய் வந்துவிடுவாள் அல்லவா? அதுவரை அவள் உங்களுடன் நேரம் செலவழிக்கட்டும் மாமா" என்று, சரிதானே என்பதுபோல சிவன்யாவை பார்த்தான் தேவ். </p>
<p>&nbsp;</p>
<p>சிவன்யாவின் பெற்றோருக்கு அவனது செயல் மகிழ்ச்சியாக இருந்தது. அங்கு இருந்த இரண்டு நாட்களும், அவன் தன் மாமனார் மாமியாருடனும் மேகநாதனுடனும் அதிக நேரம் செலவழித்தான். </p>
<p>&nbsp;</p>
<p>மற்ற நேரங்களில் எப்பொழுதும் கையில் ஃபோனுடனோ அல்லது லேப்டாப் உடனோ இருந்து விடுவான். சிவன்யாவுடன் பேசும்போது மட்டும் ஒற்றை வார்த்தையில் பதில் சொல்லி விடுவான். </p>
<p>&nbsp;</p>
<p>அவள் அவன் அருகில் அமர்ந்தால் கூட நாசூக்காக விலகி அமர்ந்து கொள்வான். அவனது செயல், அவளை அவனுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை என்று அப்பட்டமாக தெரிந்தது. அவளுக்கு வருத்தமாக இருந்தாலும் தன் பெற்றோர்களிடத்தில் அவன் நல்லவிதமாக பேசுவதை கண்டு மகிழ்ச்சியாகவே இருந்தது. </p>
<p>&nbsp;</p>
<p>இப்படியே ஊருக்குச் செல்லும் நாளும் வர, எல்லோரும் இருக்கும் பொழுது தன்னுடன் நல்லவிதமாக பேசுபவன், தனியாக இருக்கும் பொழுது தன்னை விட்டு ஒதுக்கமாக இருப்பதைக் கண்டு குழப்பமாகவே, ஊருக்கு கிளம்பினாள் சிவன்யா. </p>
<p>&nbsp;</p>
<p>- தொடரும்..</p>
<p>&nbsp;</p>
<p>- அருள்மொழி மணவாளன்..</p>]]></content:encoded>
						                            <category domain="https://onlinetamilnovels.com/community/%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b2%e0%af%88%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80-%e0%ae%85%e0%ae%b0%e0%af%81/">தொலைதூர வெளிச்சம் நீ - அருள்மொழி மணவாளன்</category>                        <dc:creator>Arulmozhi Manavalan</dc:creator>
                        <guid isPermaLink="true">https://onlinetamilnovels.com/community/%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b2%e0%af%88%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80-%e0%ae%85%e0%ae%b0%e0%af%81/%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d-13/</guid>
                    </item>
				                    <item>
                        <title>வெளிச்சம் - 12</title>
                        <link>https://onlinetamilnovels.com/community/%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b2%e0%af%88%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80-%e0%ae%85%e0%ae%b0%e0%af%81/%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d-12/</link>
                        <pubDate>Fri, 24 Jul 2026 13:00:30 +0000</pubDate>
                        <description><![CDATA[அத்தியாயம் 12
&nbsp;
திருமணத்திற்கு வந்தவர்கள் எல்லோரும் ஊருக்கு கிளம்பி விட சிவநேசன் குடும்பமும் விஸ்வநாதன் குடும்பமும் மட்டுமே அங்கு இருந்தார்கள். 
&nbsp;
எல்லோரும் ஊருக்கு போய் விட்டத...]]></description>
                        <content:encoded><![CDATA[<p>அத்தியாயம் 12</p>
<p>&nbsp;</p>
<p>திருமணத்திற்கு வந்தவர்கள் எல்லோரும் ஊருக்கு கிளம்பி விட சிவநேசன் குடும்பமும் விஸ்வநாதன் குடும்பமும் மட்டுமே அங்கு இருந்தார்கள். </p>
<p>&nbsp;</p>
<p>எல்லோரும் ஊருக்கு போய் விட்டதால், வீட்டைப் பார்க்க வெறுமையாக இருந்தது. "ரெண்டு நாளா நிறைந்து இருந்த வீடு, இப்பொழுது காலியாக இருக்குது" என்று வருடத்துடன் கூறிய சிவகாமி, "நாளைக்கு இவளும் போயிட்டானா? நாங்க மூணு பேரும் தான்" என்று சோகமானார். </p>
<p>&nbsp;</p>
<p>தாயின் கையை இறுக்கமாக பற்றிய சிவன்யாவிற்கும் கண்கள் கலங்கியது. மனைவியை முறைத்த சிவனேசன், "கல்யாணம் முடிந்து இப்ப தான் வீட்டுக்கு வந்திருக்கா. அதுக்குள்ள பிள்ளைய கண்கலங்க வைக்கிறியா? பொம்பள புள்ளைய பெத்தா, கட்டி கொடுத்து மாப்பிள்ளை வீட்டுக்கு அனுப்ப தானே செய்யணும்!" என்று மனைவியை கண்டித்தார். </p>
<p>&nbsp;</p>
<p>"அது தெரியுங்க, திடீர்னு வீடு வேறுச்சுன்னு ஆனதால சொல்லிட்டேன்" என்று மகளின் கையை பிடித்துக் கொண்ட சிவகாமி, "அம்மா ஏதோ உணர்ச்சிவசப்பட்டு சொல்லிட்டேன்டா! முதலில் கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கும், நீ சந்தோஷமாக வாழ்வதை பார்க்கும் போது நாங்க நிம்மதியா ஆயிடுவோம்" என்று சொல்லிவிட்டு இரவு சடங்கிற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி பேச வேண்டும் என்று நினைத்து, அங்கு நளினி இருப்பதைக் கண்டு தயங்கினார். </p>
<p>&nbsp;</p>
<p>நாளை மகளை பிரிய வேண்டும் என்ற கவலையில் பேசிக் கொண்டிருக்கிறார் என்பதை புரிந்தவர், அடுத்து சிவகாமி தயங்குவதை கண்டு அவர் என்ன பேச நினைக்கிறார் என்பதை புரிந்து கொண்டு, "இரண்டு நாளா நீயும் சரியா தூங்கி வில்லை அல்லவா? போய் கொஞ்சம் தூங்கலாமே!" என்று மகளிடம் கேட்டார் விஸ்வநாதன்.</p>
<p>&nbsp;</p>
<p>எப்படா நம்மள தூங்க போக சொல்லுவாங்க என்று நினைத்துக் கொண்டிருந்த நளினி, "ஆமா, எனக்கு தூக்கம் வருது. நாளைக்கு ஊருக்கு போகணுமே, அண்ணிகிட்ட கொஞ்ச நேரம் பேசலாம்னு நினைச்சேன். ஆனா என்னால முடியலை. நான் போய் தூங்குறேன், அண்ணி நாளை காலைல வந்து உங்க கிட்ட பேசுறேன்" என்று சொல்லிவிட்டு எல்லோருக்கும் குட் நைட் சொல்லிவிட்டு உறங்க சென்று விட்டாள். </p>
<p>&nbsp;</p>
<p>அவள் சென்றதும் விஸ்வநாதன் இரவு சடங்கை பற்றி பேச, "அப்பா, டிராவல் செய்தது எனக்கும் கொஞ்சம் ஓய்வு தேவை. ஊருக்கு போய் அதை பார்த்துக் கொள்ளலாம்" என்றான் தேவ். </p>
<p>&nbsp;</p>
<p>பெண்ணை பெற்றவர்களாக முதல் இரவு சம்பிரதாயம் தள்ளிப் போவது வருத்தமாக இருந்தாலும், கணவன் மனைவி உறவுக்குள் தலையிட விரும்பாத சிவகாமியும் சிவநேசனும், "அது உங்கள் இஷ்டம்" என்று சொல்லிவிட்டு, "எல்லோருக்குமே ஓய்வு அவசியம் தானே, போய் உறங்கலாமா?" என்று பொதுவாக கேட்டார் சிவநேசன். </p>
<p>&nbsp;</p>
<p>"ஆமாம்" என்று சோம்பல் முறித்தப்படி எழுந்த தேவ், எங்கு சென்று உறங்குவது என்று சுற்றும் முற்றும் பார்த்தான். </p>
<p>அவன் எழுந்ததும், "சிவன்யா, மாப்பிள்ளையை உன் அறைக்கு அழைத்துச் சென்று, ஓய்வெடுக்க ஏற்பாடு செய்" என்று மகளை அவர்களது அறைக்கு அனுப்பி வைத்த சிவகாமி, "குடிப்பதற்கு சூடா ஏதாவது வேண்டுமா? மாப்பிள்ளை" என்று கேட்கவும் தவறவில்லை. </p>
<p>&nbsp;</p>
<p>"இல்லை அத்தை, வயிறு ஃபுல்லா இருக்கு. தூங்கி எழுந்தாலே போதும்" என்றதும், சிவன்யா அறையை நோக்கி நடந்தாள். அவளின் பின்னாலே சென்றான் தேவ். </p>
<p>அவர்கள் உறங்கச் சென்ற சிறிது நேரத்திற்கு எல்லாம் மேகநாதன் வந்து விட்டான். அனைவரையும் பத்திரமாக அனுப்பிவிட்டதை கூற, விஸ்வநாதன் "எனக்கு ரொம்ப சந்தோஷம் மாப்பிள்ளை. எங்கள் குடும்பத்தையும் ரொம்ப சிறப்பா கவனிச்சுக்கிட்டீங்க. உங்களை உங்க அப்பா ரொம்ப நல்லா வளர்த்திருக்கிறார்" என்று சிவநேசனை பார்த்தார். </p>
<p>&nbsp;</p>
<p>அதற்குள் சிவகாமி சங்கருக்கு கொடுக்க வேண்டிய பலகாரங்களை கொடுத்து அனுப்பினார். சிறிது நேரம் எல்லோரும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்க, நாளை விஸ்வநாதன் பார்வதி நளினி மூவரும் ஊருக்கு செல்வதால், "நீங்களும் நாளைக்கு கிளம்ப வேண்டும் அல்லவா சம்மந்தி. ஆகையால் கொஞ்சம் போய் ஓய்வு எடுக்கலாமே!" என்றார் சிவநேசன். </p>
<p>&nbsp;</p>
<p>அனைவருக்குமே ஓய்வு தேவைப்பட வேறு எதுவும் கூறாமல், உறங்கலாம் என்று எழுந்தனர் விஸ்வநாதன் பார்வதி இருவரும். </p>
<p>&nbsp;</p>
<p>அவர்களுக்கு தேவையானவற்றை எடுத்துக் கொடுத்துவிட்டு, மேகநாதனையும் நல்ல தூங்கி ஓய்வெடுப்பா என்று அனுப்பினார் சிவகாமி. மகளிர் திருமணம் முடிந்த மகிழ்ச்சி சிவநேசன் சிவகாமி முகத்தில் தெளிவாக தெரிய, மகிழ்ச்சியாகவே கடவுளுக்கு நன்றி சொல்லிவிட்டு உறங்கினார்கள். </p>
<p>&nbsp;</p>
<p>அறைக்கு வந்ததும் "இவ்வளவு நாள் நான் உன்னுடன் பேசவில்லையே, அதற்கு என் மேல் ஏதும் வருத்தமா?" என்று மொட்டையாக ஆரம்பித்தான் தேவ். </p>
<p>&nbsp;</p>
<p>அவனுக்கு படுக்கை விரிப்பை சரிப்படுத்திக் கொண்டே, "அதெல்லாம் ஒன்றும் இல்லை" என்று சாதாரணமாக பதில் சொன்னாள் சிவன்யா.  </p>
<p>&nbsp;</p>
<p>"முதலில் தங்கையின் திருமணம் மட்டும் தானே என்று, நான் பத்து நாட்கள் லீவு கேட்டு இருந்தேன். ஆனா அப்பா திடீர்னு எனக்கும் கல்யாணம்னு சொல்லிட்டாரு" என்று அவள் முகத்தைப் பார்த்தான். </p>
<p>&nbsp;</p>
<p>அவளும் மேலும் அவனே சொல்லட்டும் என்று அவன் முகத்தைப் பார்த்து அமர்ந்தாள். </p>
<p>&nbsp;</p>
<p>"எனக்கும், இப்பொழுது ஒரு பெண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டு, குடும்பம் நடத்தும் எண்ணம் கொஞ்சம் கூட இல்லை. நான் எவ்வளவோ அப்பாவிடம் சொன்னேன். ஆனால் அவர் ஜாதகம் பொருத்தம் நல்லா பொருந்தி இருக்கு, இப்பொழுது கல்யாணத்தை விட்டால் இனி உனக்கு கல்யாணம் நடக்க ரொம்ப தாமதமாகும். அதனால கல்யாணம் பண்ணிக்கோ என்று ரொம்ப வற்புறுத்தினார். அதனாலதான் இந்த கல்யாணத்துக்கு வேண்டா வெறுப்பா தான் சம்பாதித்தேன்" என்று அவள் முகத்தை பார்த்தான். </p>
<p>&nbsp;</p>
<p>அவளுக்கு அவன் பேசியது வருத்தமாக இருந்தாலும், அதை அவள் முகத்தில் காண்பித்துக் கொள்ளவில்லை. அமைதியாகவே இருந்தாள். </p>
<p>&nbsp;</p>
<p>அவளது அமைதியை கண்டு, என்ன தோன்றியதோ? "எனக்கு உன்னை ஏற்றுக் கொள்வதற்கு சிறிது காலம் வேண்டும். அவசர அவசரமாக கல்யாணம் முடிஞ்சது போல, அவசரமாக வாழ்க்கையையும் தொடங்க வேண்டாம் என்று நினைக்கிறேன்" என்று அவளையே பார்த்துக் கொண்டு இருந்தான் தேவ் . </p>
<p>&nbsp;</p>
<p>அவளும் சரி என்பது போல் தலையாட்டி விட்டு, "எனக்கு தூக்கம் வருது, நீங்களும் தூங்குங்கள்" என்று அவனுக்கு முதுகு காட்டி படுத்துக்கொண்டாள். </p>
<p>&nbsp;</p>
<p>'என்ன இவள். பதில் ஏதும் சொல்லாமல் படுத்து விட்டாள்' என்று யோசித்துக் கொண்டு இருந்தான் தேவ். </p>
<p>&nbsp;</p>
<p>படுத்த சிவன்யாவிற்கோ அழுகை முட்டிக்கொண்டு வந்தது. அவன் முன்பு அழுது விடக்கூடாது என்று தான் உடனே படுத்து விட்டாள். ஆனால் அவன் பேசியது அவளுக்கு மிகவும் அழுத்தமாக இருந்தது. வேண்டா வெறுப்பாக திருமணம் செய்து கொண்டதாக கூறியதைக் கேட்டு. </p>
<p>அவன் பேசியதை நினைத்து அழுது கொண்டே, எப்பொழுது உறங்கினோம் என்று தெரியாமல் உறங்கி விட்டாள் சிவன்யா. </p>
<p>&nbsp;</p>
<p>மறுநாள் காலை இனிமையாக விடிய, காலையில் எழுந்த சிவகாமி, அனைவருக்கும் தேவையானவற்றை செய்ய ஆரம்பித்தார். சிறிது நேரத்தில் அங்கு வந்த பார்வதி, "ஏன் அண்ணி காலையிலேயே எழுந்து இப்படி வேலை செய்கிறீர்கள்? கொஞ்ச நேரம் இன்னும் கொஞ்ச நேரம் ஓய்வு எடுத்திருக்கலாமே!" என்றார். </p>
<p>&nbsp;</p>
<p>"வழக்கமா எழும் நேரம் தான் அண்ணி" என்று கூறிய சிவகாமி அவர் குடிப்பதற்கு சூடாக காபி கலக்கி கொடுத்து, இருவரும் அமர்ந்து குடிக்க ஆரம்பித்தனர் பின்னர். </p>
<p>&nbsp;</p>
<p>ஆண்கள் ஒவ்வொருவராக எழுந்து வர, கடைசியாக வந்த நளினி அம்மாவின் தோளில் சாய்ந்தபடி உட்கார்ந்து கொண்டு, "இன்னும் அண்ணி வரவில்லையாமா?" என்றாள். </p>
<p>&nbsp;</p>
<p>அனைவருக்கும் தேவையானவற்றை செய்து கொடுத்த சிவகாமி, நளினிக்கும் சூடாக ஹார்லிக்ஸ் கலந்து கொடுத்தார். </p>
<p>"அத்தைன்னா அத்தைதான். எனக்கு பிடிச்சத செஞ்சு கொடுப்பாங்க" என்று வாங்கி குடித்தபடி கூறினாள் நளினி. </p>
<p>&nbsp;</p>
<p>அதற்குள் வீட்டு வேலை செய்யும் பெண் வந்துவிட, காலை உணவாக என்ன வேண்டும் என்று கேட்டு அதை செய்யச் சொல்லி அனுப்பினார். அனைவரும் அமர்ந்து ஹாலில் பேசிக் கொண்டிருக்க, சிவன்யாவும் தேவ்வும் அங்கு அவர்களுடன் வந்து அமர்ந்தார்கள். </p>
<p>&nbsp;</p>
<p>காலையில் முதலில் எழுந்தது சிவன்யா தான். தேவ் எழுதுவதற்கு முன்பே எழுந்து குளித்துவிட்டு வர, அப்பொழுதுதான் சோம்பல் முறித்து எழுந்தான் தேவ். குளித்து இருக்கும் சிவன்யாவை பார்த்து "குட்மார்னிங் சிவன்யா" என்று சொல்லிவிட்டு, "நானும் சீக்கிரம் குளிச்சிட்டு வரேன், ரெண்டு பேரும் சேர்ந்தே போகலாம்" என்றான். </p>
<p>&nbsp;</p>
<p>அவளும் சரி என்று அவன் வரவிற்காக படுக்கையை சரி செய்துவிட்டு காத்திருந்தாள். தேவ் குளித்ததும், இருவரும் ஒன்றாகவே வெளியே வந்தார்கள். அங்கு அனைவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருப்பதை கண்டு, தனது தந்தையின் அருகில் அமர்ந்தான் தேவ். மகளையும் மருமகனையும் பார்த்ததும் சிவகாமி எழுந்து அவர்களுக்கு குடிப்பதற்கு எடுக்கச் சென்றார்.  </p>
<p>&nbsp;</p>
<p>அவரின் பின்னாடியே சென்ற சிவன்யாவும் தனக்குத் தேவையானவற்றை தானே கலக்கிக் கொண்டு, தேவ்விற்கு தாய் கொடுத்த காபியையும் எடுத்துவந்து, அவனுக்கு கொடுத்துவிட்டு, தன் தந்தையின் அருகில் அமர்ந்து கொண்டாள். </p>
<p>&nbsp;</p>
<p>இரவு தேவ் சொன்ன வார்த்தை அவள் மனதில் வருத்தத்தை உண்டு பண்ண, அது அவள் முகத்தில் தெளிவாக தெரிந்தது. தாய் தந்தை முன்பு கவலைப்பட கூடாது என்று நினைத்தாலும் அவள் முகத்தில் ஒரு சோகம் இருப்பதை கண்டு கொண்டார் சிவநேசன்.  </p>
<p>&nbsp;</p>
<p>மகளின் மனதில் இருக்கும் குழப்பத்தை தனியாக பேசி, தெரிந்து, தீர்க்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டு அவரின் அருகில் இருந்த அவளது கையை மென்மையாகி அழுத்தம் கொடுத்தார் சிவநேசன். </p>
<p>&nbsp;</p>
<p>தந்தை தன் கையில் அழுத்தியதும், ஏதோ ஒரு பாதுகாப்பு உணர்வு தோன்றியது போல் அவளுக்கு இருந்தது. தந்தையின் முகத்தை காண, அவர் கண்மூடி நான் இருக்கிறேன் என்பது போல் சொல்லவும், சிவன்யாவின் முகம் சுச்சு போட்ட விளக்கு போல் பிரகாசமாகியது. </p>
<p>&nbsp;</p>
<p>தந்தையின் பாதுகாப்பு மட்டும் அவளுக்கு முகத்தில் பிரகாசத்தை கொடுக்கவில்லை. அங்கு அமர்ந்து பேசிக் கொண்டிருந்த தேவ்வும் தான். ஆமாம், அவளிடம் விருப்பமில்லாத திருமணம் என்று பேசியவன், இப்பொழுது சிவகாமியிடம் கலகலப்பாக பேசிக்கொண்டு இருந்தான். அதுமட்டுமல்லாது மேகநாதனிடமும் உரிமையாக "மச்சான்" என்று சொல்லி பேசியதை கேட்டதும் சிவன்யாவிற்கு நிம்மதியானது. 'அவர் திருமணம் இவ்வளவு சீக்கிரமாக நடந்தது விருப்பமில்லை என்று சொல்லி இருப்பார்' என்று நினைத்து தன்னை தேற்றிக் கொண்டாள்.  </p>
<p>&nbsp;</p>
<p>நளினியும் சிவன்யாவின் அருகில் வந்து அமர்ந்து ஏதேதோ பேசிக் கொண்டிருக்க, காலை உணவு தயாராகி விட்டது என்று வேலைக்கார பெண் வந்து சொன்னதும், சிவகாமி அனைவரையும் உணவு உண்ண அழைத்தார். இரு குடும்பமும் மகிழ்வாக பேசியபடி காலை உணவை உண்டார்கள். நளினி "நாங்க இன்னைக்கு சாயங்காலம் ஊருக்கு போகிறோம் அண்ணி" என்றாள் சோகமாக.  </p>
<p>&nbsp;</p>
<p>அவளின் பாவமான முகத்தைக் கண்டு சிரிப்பு வந்து விட்டது சிவன்யாவிற்கு. "இப்ப எதற்கு மூஞ்சை எப்படி தூக்கி வைத்துக்கொண்டு இருக்கிறாய்? இன்னும் ரெண்டு நாள்ல நாங்களும் வந்துருவோம் இல்ல! ரொம்ப கவலையா இருந்துச்சுன்னா, நீ வேண்டுமானால் இங்கேயே இருந்துவிடு. அத்தையும் மாமாவும் மட்டும் ஊருக்கு போகட்டும்" என்றாள் சிவன்யா.</p>
<p>&nbsp;</p>
<p>- தொடரும்..</p>
<p>&nbsp;</p>
<p>- அருள்மொழி மணவாளன்..</p>]]></content:encoded>
						                            <category domain="https://onlinetamilnovels.com/community/%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b2%e0%af%88%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80-%e0%ae%85%e0%ae%b0%e0%af%81/">தொலைதூர வெளிச்சம் நீ - அருள்மொழி மணவாளன்</category>                        <dc:creator>Arulmozhi Manavalan</dc:creator>
                        <guid isPermaLink="true">https://onlinetamilnovels.com/community/%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b2%e0%af%88%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80-%e0%ae%85%e0%ae%b0%e0%af%81/%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d-12/</guid>
                    </item>
				                    <item>
                        <title>வெளிச்சம் - 11</title>
                        <link>https://onlinetamilnovels.com/community/%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b2%e0%af%88%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80-%e0%ae%85%e0%ae%b0%e0%af%81/%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d-11/</link>
                        <pubDate>Thu, 23 Jul 2026 15:27:55 +0000</pubDate>
                        <description><![CDATA[அத்தியாயம் 11 
&nbsp;
நிச்சயம் முடிந்து வந்திருந்த விருந்தினர் அனைவரும் சென்ற பிறகு, மீதம் இருந்த மணமகன் மணமகள் வீட்டினர் மட்டுமே உணவு உண்ண அமர்ந்தனர். அப்பொழுது தேவ் அனைவரிடமும் மகிழ்ச்சி...]]></description>
                        <content:encoded><![CDATA[<p>அத்தியாயம் 11 </p>
<p>&nbsp;</p>
<p>நிச்சயம் முடிந்து வந்திருந்த விருந்தினர் அனைவரும் சென்ற பிறகு, மீதம் இருந்த மணமகன் மணமகள் வீட்டினர் மட்டுமே உணவு உண்ண அமர்ந்தனர். அப்பொழுது தேவ் அனைவரிடமும் மகிழ்ச்சியாக பேசினான். </p>
<p>&nbsp;</p>
<p>சிவன்யாவின் குடும்பத்தில் உள்ள மூவருக்குமே இத்தனை நாள் அவன் பேசாமல் இருந்த வருத்தம் எல்லாம் மறைந்து, அவனுடன் மகிழ்வாகவே பேசினார். </p>
<p>&nbsp;</p>
<p>பேசியபடியே சாப்பிட்டு முடிக்க, நேரம் பன்னிரெண்டு நெருங்கிக் கொண்டு இருந்தது. காலையில் சீக்கிரம் எழ வேண்டுமே என்று, சிவன்யாவையும் நளினியையும் சென்று உறங்கும்படி கூறினார் சிவகாமி. </p>
<p>&nbsp;</p>
<p>அவர்கள் இருவரும் தலையாட்டி எழ, அவளின் அருகில் இருந்த தேவ், "குட் நைட் சிவன்யா" என்றான் புன்னகைத்து. </p>
<p>&nbsp;</p>
<p>அவளும் அவனைப் பார்த்து "குட் நைட்" என்று புன்னகையுடன் சொல்லிவிட்டு, நளினியுடன் அவளது அறைக்கு செல்ல, அவர்களுக்கு துணையாக மேகநாதன் எழுந்து "நான் போய் விட்டு விட்டு வருகிறேன்" என்று அவர்களை பின்தொடர்ந்தான். </p>
<p>&nbsp;</p>
<p>திரும்பி வந்த மேகநாதன் "எல்லோருமே போய் கொஞ்சம் ஓய்வு எடுக்கலாமே!" என்றான். </p>
<p>&nbsp;</p>
<p>தேவ்வும், "நானே சொல்லலாம் என்று தான் இருந்தேன். கொஞ்சம் எனக்கு ரெஸ்ட் வேணும், காலையில் எத்தனை மணிக்கு எழுந்திருக்கணும்மா?" என்று தன் தாயிடம் கேட்டான். </p>
<p>&nbsp;</p>
<p>"நீ கொஞ்சம் சீக்கிரம் எழுந்து வா தேவ். உனக்கு நலுங்கு எல்லாம் வைக்க வேண்டுமே!" என்றார். </p>
<p>"ஏன்மா? அதெல்லாம் பண்ணனுமா? அதான் ஐயர் வைத்து தானே திருமணம் செய்கிறோம்! எல்லா சடங்கும் அதிலேயே வருமே!" என்று தயக்கமாக கேட்டான் </p>
<p>&nbsp;</p>
<p>விஸ்வநாதனும் "விடு பார்வதி, இரண்டு நாட்களுக்கு முன்னால் வந்திருந்தாலாவது, அனைத்தையும் செய்யலாம். இன்று காலையில் தான் வந்து இறங்கி இருக்கிறான். அவனை எதற்கு தொந்தரவு செய்கிறாய்? நன்றாக தூங்கி எழுந்தால் திருமணத்திற்கு பொழிவாக இருப்பான்" என்று மனைவியிடம் ஆரம்பித்து "நீ போய் தூங்கு பா" என்று மகனிடம் முடித்தார். </p>
<p>&nbsp;</p>
<p>அவனுக்கு பக்கத்து அறை தான் மேகநாதன் உடையது என்பதால், அவனும் "சரி அப்பா அம்மா, நீங்களும் போய் தூங்குங்கள். உங்கள் அறைக்கு வந்து உங்களை விட வேண்டுமா?" என்று கேட்டான். </p>
<p>&nbsp;</p>
<p>"இல்லை நான் பார்த்துக் கொள்கிறேன்" என்று கூறிய சிவநேசன், மருமகனிடம் "நல்லா துங்கி ஓய்வெடுங்க மாப்பிள்ளை" என்று கூறி அனுப்பினார். </p>
<p>&nbsp;</p>
<p>தேவ்வும், மேகநாதனும் அங்கிருந்து கிளம்பியதும், விஸ்வநாதனின் கையை பற்றி கொண்ட சிவநேசன், "இப்பதான் எனக்கு நிம்மதியாக இருக்கு சம்பந்தி. மாப்பிள்ளை மதியம் வரை பேசாமல் இருந்தது, எனக்கு ரொம்ப வருத்தமாக இருந்தது. ஆனால் இப்போ நல்ல கலகலன்னு பேசுறாரு. என் பொண்ணு நல்லா பார்த்து பாருன்னு எனக்கு நம்பிக்கை வந்து விட்டது" என்றார் உணர்ச்சிவசமாக. </p>
<p>&nbsp;</p>
<p>"ரொம்ப நன்றி சம்பந்தி. உங்கள் வாயிலிருந்து இந்த வார்த்தை இப்பொழுதாவது வந்ததே! என்று எனக்கு சந்தோஷமாக இருக்கிறது.</p>
<p>என்னதான் நீங்கள் எங்களுடன் சிரித்து பேசினாலும், உங்கள் முகத்தில் ஒரு கவலை இருந்து கொண்டே இருந்தது. அதற்கு காரணம் தேவ் தான் என்று எங்களுக்கு நன்கு தெரியும். அவனிடமும் நான் பலமுறை சொல்லியிருந்தேன், உங்களிடமும் எல்லோரிடமும் பேசும்படி, ஆனால் அவன் ஏதாவது காரணம் சொல்லி தட்டிக் கழித்துக் கொண்டே இருந்தான். </p>
<p>&nbsp;</p>
<p>நேற்று இரவு கூட மேகநாதன் தம்பி ரொம்ப வருத்தப்பட்டார். அதுவும் எனக்கு கஷ்டமாகத்தான் இருந்தது. இப்போ உங்க எல்லாரும் முகத்திலும் சிரிப்பை பார்த்த பிறகு தான் எனக்கு நிம்மதியாக இருக்கிறது" என்றார். </p>
<p>&nbsp;</p>
<p>"சரிங்க சம்பந்தி, இப்படியே பேசிக் கொண்டிருந்தால் நேரம் போவதே தெரியாது. காலையில் சீக்கிரம் எழ வேண்டும். வாங்க போய் தூங்குவோம்" என்று உறங்குவதற்கு அவரவர் அறைக்கு சென்றார்கள். அடுத்தடுத்த அறை என்பதால் ஒன்றாகவே சென்றார்கள். </p>
<p>&nbsp;</p>
<p>மறுநாள் இனிமையாக விடிந்தது. காலையில் எழுந்த சிவகாமி விரைவாக தன் மகளை எழுப்பினார். அலங்காரம் செய்யும் பெண்கள் வருவதற்குள் குளித்து தயாராக இருக்கும்படி சொல்லிவிட்டு இருவருக்கும் குடிப்பதற்கு வாங்கி கொடுத்தார். </p>
<p>&nbsp;</p>
<p>சூடாக பால் உள்ளே சென்றதும் சற்று சுறுசுறுப்படைந்த பெண்கள் இருவரும் ஒருவர் மாற்றி ஒருவர் குளித்து, பியூட்டிஷியன் வரவிற்காக காத்திருக்க, சிறிது நேரத்திற்கெல்லாம் அவர்களும் வந்து, மணப்பெண் அலங்காரத்தை தொடங்கி விட்டார்கள். </p>
<p>&nbsp;</p>
<p>முகூர்த்த நேரம் நெருங்க ஒவ்வொருவராக வர தொடங்கினார்கள். மேகநாதன் தன் நண்பன் சங்கருக்கு போன் செய்து, வீட்டில் உள்ளவர்கள் எல்லோரும் தயாராகி விட்டார்கள் என்றால், அழைத்து வரும்படி சொல்லி, இங்கு வருபவர்களை கவனிக்க தொடங்கினான். </p>
<p>&nbsp;</p>
<p>மேடையில் ஐயர் கேட்கும் பொருட்களை சிவகாமியும், பார்வதியும் எடுத்துக் கொடுத்துக் கொண்டு இருந்தார்கள். குறித்த நேரத்தில் திருமணத்திற்கு உரிய சாஸ்திர சம்பிரதாயங்கள் எல்லாம் ஆரம்பம் ஆகியது. பெண்ணையும் மாப்பிள்ளையையும் அழைத்து, மண உடையை கொடுத்து அனுப்பிய ஐயர், முகூர்த்தத்திற்கான ஏற்பாடை செய்ய தொடங்கினார். </p>
<p>&nbsp;</p>
<p>முதலில் தயாராகி வந்த தேவ்வை அமர்த்தி, திருமணத்திற்கான மந்திரங்களை சொல்லி கொண்டு இருக்க, கல்யாணம் பெண்ணை அழைச்சிட்டு வாங்க என்று ஐயர் சொன்னதும், நளினியும், உறவுக்கார பெண்களும் சென்று, சிவன்யாவை அழைத்து வந்தார்கள். </p>
<p>&nbsp;</p>
<p>தேவதை போல தோழிகளுடன் நடந்து மண மேடைக்கு வந்தாள் சிவன்யா. </p>
<p>&nbsp;</p>
<p>சபையினரை வணங்கி, தேவ்வின் அருகில் சிவன்யா அமர்ந்ததும், திருமணத்திற்கு உரிய மந்திரங்களை ஐயர் சொல்லிக்கொண்டே, மணமக்கள் இருவரையும் செய்ய வேண்டிய சடங்குகளை செய்ய வைத்தார். </p>
<p>&nbsp;</p>
<p>நல்ல நேரம் நெருங்க, மாங்கல்யம் வந்திருந்த பெரியவர்கள் ஆசீர்வதித்து மேடைக்கு கொண்டு வந்தததும், ஐயர் கெட்டி மேளம் கெட்டி மேளம் என்று சொல்ல, மங்கல வாத்தியங்கள் உச்சஸ்தாணியில் முழங்க, ஐயர் கூறியபடி தேவ் பொண் தாலியை எடுத்து சிவன்யாவின் கழுத்தில் அணிவித்து தன் மனைவியாக ஏற்றுக் கொண்டான். </p>
<p>&nbsp;</p>
<p>இரு கரங்கள் கூப்பி வணங்கி, தலை கவிழ்ந்து தேவ் அணிவித்த தங்கத் தாலியை ஏற்று, அவனை தன் கணவனாக உளமார ஏற்றுக் கொண்டாள் சிவன்யா. </p>
<p>&nbsp;</p>
<p>தேவ் சிவன்யா கழுத்தில் தாலி அணிவிக்கும் பொழுது வந்திருந்த சொந்தம் பந்தம் அனைவரும் அட்சதை தூவி ஆசீர்வதித்து மகிழ்தனர். </p>
<p>&nbsp;</p>
<p>சிவன்யாவின் அருகில் இருந்த அவளது தோழிகளோ "ஓஹோ" என்று கத்தி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி, மணமக்கள் இருவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்தனர். </p>
<p>அடுத்தடுத்து செய்ய வேண்டிய அனைத்து சடங்குகளையும் ஐயர் சொல்லச் சொல்ல மணமக்கள் ஸ்ரத்தையாக செய்தார்கள். </p>
<p>&nbsp;</p>
<p>திருமணம் என்று முடிவாகியதிலிருந்து இன்று வரை, சிவன்யாவை பார்க்கும் வரை அவன் ஒரு வார்த்தை கூட பேசியது கிடையாது. ஆனால் இன்று அவளுடன் மிக சகஜமாக சாதாரணமாகவும் பேசுவது அவளுக்கு ஆச்சரியமாகவும் நிம்மதியாகவும் இருந்தது. </p>
<p>&nbsp;</p>
<p>அவளுக்குத்தான் அவனுடன் பேசுவதற்கு வெட்கமாகவும் தயக்கமாகவும் இருந்தது. இப்படியே அனைத்து சம்பிரதாயங்களும் முடிய, வந்திருந்த சொந்தங்களும் பந்தங்களும் இருவருக்கும் வாழ்த்து சொல்லி, புகைப்படம் எடுத்துக் கொண்டு மதிய உணவையும் முடித்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பினார்கள். </p>
<p>&nbsp;</p>
<p>நல்ல நேரத்தில் மணமக்களை வீட்டிற்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று நினைத்திருந்த சிவன்யாவின் பெற்றோர்கள், அவர்களை வரவேற்பதற்காக தான் முதலில் சென்று விடுவதாக சிவகாமி கூறினார். </p>
<p>அதன்படி சிவகாமியும் சிவநேசனும் முதலில் வீட்டிற்குச் சென்று விட, மணமக்களை அழைத்துக் கொண்டு விஸ்வநாதன் பார்வதி நளினி மூவரும் ஒரு காரில் வீட்டிற்கு கிளம்பினார்கள். </p>
<p>&nbsp;</p>
<p>ஹோட்டலில் முடிக்க வேண்டிய கணக்கு இருக்க, நண்பன் சங்கரை அனைவரையும் அழைத்துக் கொண்டு வீட்டிற்கு செல்லும்படி கூறிவிட்டு, திருமண செலவு கணக்கை ஹோட்டலில் முடித்துவிட்டு வருவதாக கூறினான் மேகநாதன். </p>
<p>ஏற்கனவே சிவன்யாவின் குடும்பங்கள் சொந்தங்கள் வீட்டில் இருக்க அவர்கள் மணமக்களை வரவேற்பதற்கு தயாராக ஆழம் கரைத்து வைத்திருந்தனர். </p>
<p>&nbsp;</p>
<p>சற்று நேரத்திற்கெல்லாம் மணமக்கள் வந்துவிட, அவர்களை ஆரத்தி எடுத்து வரவேற்று அமர வைத்து, பாலும் பழமும் கொடுத்து, மற்றும் வீட்டில் செய்ய வேண்டிய சில சம்பிரதாயங்களை செய்தார் சிவகாமி. பின்னர் தேவ்வை பார்த்து "நீங்க வேண்டுமென்றால், கொஞ்ச நேரம் ஓய்வு எடுத்துக்கோங்க தம்பி" என்றார் மருமகனிடம். </p>
<p>&nbsp;</p>
<p>அவனுக்கும் ஓய்வு தேவைப் பட்டாலும், இன்று அவர்களின் சொந்தங்கள் உடனே ஊருக்கு கிளம்புவதால், "பரவாயில்லை அத்தை. எல்லோருடன் பேசிக் கொண்டிருக்கிறேன்" என்றான். </p>
<p>&nbsp;</p>
<p>ஒரு மணி நேரத்தில் மேகநாதனும் தன் வேலைகளை முடித்துக் கொண்டு வீட்டிற்கு வந்து விட, அனைவருக்கும் இரவு உணவு தயார் செய்து, அவர்களை வழி அனுப்ப ஏற்பாடு செய்து கொண்டிருந்தார் சிவகாமி. </p>
<p>&nbsp;</p>
<p>"எதற்கு அண்ணி நீங்கள் இப்படி கஷ்டப்படுறீங்க. நாங்கள் ரயில்வே ஸ்டேஷனிலேயே ஏதாவது வாங்கி சாப்பிட்டு கொள்வோமே!" என்றார் விஸ்வநாதனின் சொந்தங்களில் ஒருவர். </p>
<p>&nbsp;</p>
<p>"இதில் என்ன இருக்கிறது. பயணத்திற்கு இலகுவாக இட்லி தான் தயார் செய்ய சொல்லி இருக்கிறேன். வழியில் ஏதாவது வாங்கி சாப்பிட்டு, சிறுவர்களுக்கு ஒத்துக் கொள்ளவில்லை என்றால் என்ன செய்வது?" என்ற சிவகாமி, அனைவருக்கும் தேவையான அனைத்தையும் எடுத்து வைத்துவிட்டு, அடிக்கடி வாருங்கள் என்று அவர்களை அனுப்பி வைக்க, மேகநாதனின் நண்பன் சங்கர் வழக்கம் போல் அவர்களை ஏற்றிக் கொண்டு, ரயில் நிலையத்தில் விட்டு வருவதாக கிளம்பினான். </p>
<p>&nbsp;</p>
<p>மேகநாதன் அவன் கூடவே கிளம்ப, "நீங்கள் எதற்கு தம்பி அலைகிறீர்கள். அதான் சங்கர் தம்பி எங்க கூட வராரு இல்ல, அதுவே போதும். நீங்கள் கொஞ்சம் ஓய்வெடுங்கள்" என்று பெரியார் ஒருவர் கூற, </p>
<p>&nbsp;</p>
<p>"அதெல்லாம் பரவாயில்லை சித்தப்பா. ஸ்டேஷன் வரை வரவில்லை என்றால் எனக்கும் மனசுக்கு ஒரு மாதிரி இருக்கும். இனிமேல் அவ்வளவாக வேலை இல்லையே! ஓய்வு தானே, மெதுவாக எடுத்துக் கொள்ளலாம்" என்று தாய் தந்தையரிடமும் சொல்லிவிட்டு, அவர்களுடனே ரயில் நிலையம் சென்று அனைவரையும் பத்திரமாக வண்டியில் ஏற்றிவிட்டு, வண்டி கிளம்பியதும் நண்பனுடன் அங்கிருந்து கிளம்பினான். </p>
<p>&nbsp;</p>
<p>ஒரு வண்டி மட்டும் நேராக வீட்டிற்கு வந்து மேக நாதனே இறக்கி விட, சங்கரிடம் "நாளைக்கு உன் ஆபீஸ்க்கு வந்து எவ்வளவு என்று கணக்கு பார்த்து தருகிறேன் டா" என்றான். </p>
<p>&nbsp;</p>
<p>"ஒன்றும் அவசரம் இல்லைடா. உன் வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு மெதுவா வா" என்று சொல்லிவிட்டு அவனும் கிளம்புவதாக கூற, வீட்டிற்கு அழைத்து வந்த மேகநாதன், தாயிடம் சங்கர் கிளம்புவதை பற்றி கூறினான். </p>
<p>&nbsp;</p>
<p>அவனுக்கு சில பலகாரங்களை, "வீட்டிற்கும் உன் அலுவலகத்தில் பணிபுரிவர்களுக்கும் கொடு" என்று கொடுத்து அனுப்பினார் சிவகாமி.</p>
<p>&nbsp;</p>
<p>- தொடரும்..</p>
<p>&nbsp;</p>
<p>- அருள்மொழி மணவாளன்..</p>]]></content:encoded>
						                            <category domain="https://onlinetamilnovels.com/community/%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b2%e0%af%88%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80-%e0%ae%85%e0%ae%b0%e0%af%81/">தொலைதூர வெளிச்சம் நீ - அருள்மொழி மணவாளன்</category>                        <dc:creator>Arulmozhi Manavalan</dc:creator>
                        <guid isPermaLink="true">https://onlinetamilnovels.com/community/%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b2%e0%af%88%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80-%e0%ae%85%e0%ae%b0%e0%af%81/%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d-11/</guid>
                    </item>
				                    <item>
                        <title>வெளிச்சம் - 10</title>
                        <link>https://onlinetamilnovels.com/community/%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b2%e0%af%88%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80-%e0%ae%85%e0%ae%b0%e0%af%81/%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d-10/</link>
                        <pubDate>Mon, 13 Jul 2026 07:50:50 +0000</pubDate>
                        <description><![CDATA[அத்தியாயம் 10
தேவ்விடம் பேசிவிட்டு வந்த பிறகு மிகவும் மகிழ்ச்சியாகவே இருந்தனர் சிவன்யாவின் குடும்பத்தினர். மேகநாதனுக்கு இருந்த குழப்பங்கள் அனைத்துமே ஒரு நொடியில் பறந்து விட்டது, தேவ்வின் நட...]]></description>
                        <content:encoded><![CDATA[<p>அத்தியாயம் 10</p>
<p>தேவ்விடம் பேசிவிட்டு வந்த பிறகு மிகவும் மகிழ்ச்சியாகவே இருந்தனர் சிவன்யாவின் குடும்பத்தினர். மேகநாதனுக்கு இருந்த குழப்பங்கள் அனைத்துமே ஒரு நொடியில் பறந்து விட்டது, தேவ்வின் நடவடிக்கைகளை பார்த்து. </p>
<p>&nbsp;</p>
<p>அது போலவே சிவநேசன், சிவகாமி இருவருக்கும் இதுவரை உள்ளத்திற்குள் அழுத்திக் கொண்டிருந்த அழுத்தம், குறைந்தது போல் இருந்தது. </p>
<p>"மாப்பிள்ளை நன்றாக பேசுகிறார், இல்லைங்க" என்று கணவனை பார்த்தார் சிவகாமி. </p>
<p>அவரும் ஆமாம் என்று தலையாட்டி விட்டு, "இதுவரை அவர் பேசாததால் மனசுக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது. ஆனால் இப்பொழுது ஏதோ லேசாகி பறப்பது போல் உணர்கிறேன்" என்று கூறி, </p>
<p>"எல்லோரும் வர ஆரம்பிக்கிறார்கள். அவர்களை வரவேற்கும் வழியை பார்ப்போம்" என்று சொல்லிவிட்டு, </p>
<p>"சிவன்யா தயாராக ஆரம்பித்து விட்டாளா? ஆறரை மணிக்கு நிச்சயதார்த்தம் ஆரம்பித்து விட வேண்டும்" என்றார். </p>
<p>&nbsp;</p>
<p>"ஆமாங்க, முன்பே பியூட்டிசியன் வந்துட்டாங்க. எதற்கும் நான் போய் பார்த்துவிட்டு வந்துவிடுகிறேன். அதுவரை நீங்கள் கொஞ்சம் முன்புறம் நின்று, வருபவர்களை வரவேறுங்கள்" என்று சொல்லிவிட்டு, மகள் தங்கியிருக்கும் அறைக்கு சென்றார்.</p>
<p>&nbsp;</p>
<p>சிவன்யாவின் அறைக்கு வந்த சிவகாமி, அங்கு மூன்று பியூட்டிஷியன் தன் மகளுக்கும் நளினிக்கும் அலங்காரம் செய்து கொண்டிருப்பதை பார்த்தார். இருவரையும் பார்த்து "ரொம்ப அழகாக இருக்கிறீர்கள்?" என்று சொல்லிவிட்டு, </p>
<p>பியூட்டிஷியனிடம் "முடிந்து விட்டதா?" என்று கேட்டார். </p>
<p>&nbsp;</p>
<p>"ஆமாம்மா. எல்லாம் முடிஞ்சிடுச்சு. இன்னும் கொஞ்சம் பைனல் டச் தான்" என்றதும், </p>
<p>"நல்லா பண்ணி இருக்கீங்க" என்று அவர்களை பாராட்டிய சிவகாமி, </p>
<p>தன் மகளை லேசாக அணைத்து, "ரொம்ப அழகாக இருக்கிறாய்டா!" என்று நெற்றியில் பட்டுப்படாமல் முத்தம் கொடுத்தார். </p>
<p>&nbsp;</p>
<p>"அண்ணி மட்டும்தான் அழகாக இருக்கிறார்களா?" என்று போலி சோகத்துடன் சிவகாமியை பார்த்தாள் நளினி. </p>
<p>&nbsp;</p>
<p>"உனக்கு என்ன ராஜாத்தி. நீ என் பொண்ணை விட ரொம்ப அழகா இருக்குற" என்று அவளின் நாடியை லேசாக பிடித்து கொஞ்சி அணைத்துக் கொண்டார்.  </p>
<p>&nbsp;</p>
<p>அப்பொழுது அங்கு வந்த மேகநாதன், அலங்காரத்தில் ஜொலிக்கும் தன் தங்கையையும், அவளுக்கு இணையாக இருக்கும் நளினியையும் பார்த்து "இருவருமே ரொம்ப அழகா இருக்கீங்க" என்று பொதுவாக கூறிவிட்டு, </p>
<p>தாயைப் பார்த்து "அம்மா, நிச்சயதார்த்தம் ஆரம்பிக்க வேண்டுமாம். அய்யர் உங்களை வர சொன்னார்" என்று சொல்லிவிட்டு, </p>
<p>நளினியை பார்த்து, "இன்னைக்கு என் தங்கச்சிக்கு தான் நிச்சயதார்த்தம், நீ என்ன அவளை விட இவ்வளவு மேக்கப் போட்டிருக்க!" என்று அவளை கிண்டல் செய்தான். </p>
<p>&nbsp;</p>
<p>அவளோ பயந்து, "அச்சோ அத்தான், ரொம்ப அதிகமா இருக்கா? நான் வேணா தொடச்சிக்கட்டுமா?" என்று அங்கிருந்து டிஷ்யூவை எடுத்து துடைக்க போக, </p>
<p>அவள் கையை வேகமாக பற்றிய சிவன்யா, "அண்ணன் சும்மா விளையாட்டுக்கு சொல்றாங்க. அதுக்காக இவ்வளவு அழகா இருக்குற மேக்கப்பை களைப்பியா நீ?" என்று செல்லமாக கடிந்து கொண்டாள். </p>
<p>&nbsp;</p>
<p>மேகநாதன் விளையாட்டுக்குத்தான் கூறினான். ஆனால் அவள் உடனே துடைக்க செல்லவும் ஒரு நொடி பயந்துவிட்டான். தங்கை தடுத்ததும் நிம்மதி அடைந்தவன், "அம்மா தாயே நான் சும்மா உன்கிட்ட விளையாடினேன். மேக்கப் தொடச்சி முகத்தை விகாரம் ஆக்கிடாதே!" என்று சொல்லிவிட்டு வேகமாக அங்கிருந்து சிரித்துக் கொண்டே சென்று விட்டான். </p>
<p>&nbsp;</p>
<p>"பாருங்க அண்ணி, அத்தான் நான் மேக்கப் இல்லனா, விகாரமா இருப்பேன்னு சொல்லிட்டு போறாங்க" என்று ஒரு காலை தரையில் உதைத்து சினுங்கினாள் நளினி. </p>
<p>&nbsp;</p>
<p>இவர்களின் செல்ல சண்டையை அங்கிருந்த பியூட்டிஷன்கள் கண்டு மென்மையாக சிரித்துக் கொண்டார்கள். </p>
<p>&nbsp;</p>
<p>மேகநாதன் சென்ற சிறிது நேரத்திற்கெல்லாம் அங்கு வந்த ஒரு பெண்மணி, முதலில் நளினியை பார்த்து "நீ ரொம்ப அழகா இருக்க!" என்று அவருக்கு திருஷ்டி நொடித்தார். பின்னர் சிவன்யாவை பார்த்து, உன்னை மேடைக்கு கூப்பிட்டாங்கம்மா" என்று சொல்லிவிட்டு, நளினியிடம் "உன் அண்ணியை அழைத்துக்கொண்டு மேடைக்கு வா" என்று சொல்லி முன்னே சென்று விட்டார். </p>
<p>&nbsp;</p>
<p>அவர் சென்றதும் "அவங்க என்னோட அத்தை அண்ணி. அவங்க பையனுக்கு தான்" என்று வெட்கமாக கூற, </p>
<p>&nbsp;</p>
<p>"ஓ.. உன் வருங்கால மாமியாரா?" என்றாள் சிவன்யா.  </p>
<p>&nbsp;</p>
<p>அதற்குள் இரு சொந்தங்களில் உள்ள பெண்கள், சிவன்யாவை அழைத்துச் செல்ல அங்கு வந்தார்கள். வந்தவர்கள் பியூட்டிஷியனிடம் "கொஞ்சம் நேரம் பொறுங்க, நிச்சயதார்த்த புடவை கொடுப்பாங்க. அதை கட்டிவிட வேண்டும்" என்று சொல்லிவிட்டு சிவன்யாவை அழைத்துக் கொண்டு மேடைக்குச் சென்றார்கள். </p>
<p>&nbsp;</p>
<p>மேடைக்குச் சென்றதும் அங்கே இருந்த இரு சொந்தங்களையும் கண்டு வழங்கினாள். அப்படியே வந்திருந்த அனைவருக்கும் வணக்கம் சொல்லி, ஐயர் காட்டிய மணையில் அமர, அவர் சில சாஸ்திரங்கள் செய்து விட்டு புடவையை எடுத்து கொடுக்கும்படி விஸ்வநாதன், பார்வதி தம்பதியிடம் கூற, அவர்களும் அதன்படியே புடவையை எடுத்து சிவன்யாவிடம் கொடுக்க, அவளுடன் சேர்ந்து அவரது தாயும் அதை வாங்கிக் கொண்டு அவளை அழைத்துக் கொண்டு மணப்பெண் அறைக்கு சென்றார். </p>
<p>&nbsp;</p>
<p>பியூட்டிஷியனிடம் புடவையை கொடுத்துவிட்டு, "கொஞ்சம் சீக்கிரம் கட்டி அனுப்புங்க அம்மா" என்று சொல்லி மேடைக்கு சென்று விட்டார். அதன்படியே அவர்கள் கொடுத்த புடவையை, சிவன்யாவிற்கு அழகாக கட்டி விட்டார்கள் பியூட்டிஷியன். </p>
<p>&nbsp;</p>
<p>பத்து நிமிடத்திலேயே சிவன்யா தயாராகி விட, நளினி வேகமாக வந்து, "அண்ணி உங்களை கூப்பிடுறாங்க, போகலாமா?" என்றாள். </p>
<p>பியூட்டிஷியன்சும் அழைத்துச் செல்லலாம் என்று சொல்ல, இரண்டு அடி பின்னால் சென்று தன் அண்ணியை, மேலும் கீழும் பார்த்தாள். </p>
<p>"அண்ணி, இந்த மேக்கப், இந்த புடவைக்கு ரொம்ப செட் ஆகி, ரொம்ப அழகா இருக்கீங்க!"'என்று அவளை இறுக்கமாக அணைத்து விடுத்தாள். </p>
<p>&nbsp;</p>
<p>அதில் பதறிய பியூட்டிஷியன், புடவை கசங்கி விட போகிறது என்று படபடத்தார்கள். </p>
<p>&nbsp;</p>
<p>"அதெல்லாம் ஒன்னும் ஆகாது" என்று அவளே புடவையை லேசாக சரி செய்து, வாங்கண்ணி போகலாம்" என்று அழைத்துக் கொண்டு மணமேடைக்குச் சென்றாள். </p>
<p>&nbsp;</p>
<p>அங்கு அதன் பிறகு சில சாஸ்திர சம்பிரதாயங்களுடன் நிச்சயதார்த்தம் நடந்தது. நிச்சயம் முடிந்ததும் மணமகனையும் அழைத்து, மணமகள் அருகே நிற்க வைத்தனர். </p>
<p>&nbsp;</p>
<p>சிவன்யாவோ குனிந்த தலை நிமிராமல் இருந்தாள். பக்கத்தில் நிற்கும் தேவ்வை அவள் நிமிர்ந்து பார்க்கவே இல்லை. தனக்குள் இருந்த ஆர்வத்தை மறைத்துக் கொண்டு வெட்கப்பட்டு கொண்டே இருக்க, அவளது தோழிகள் ஒவ்வொருவராக வந்து, அவளின் அருகில் நின்று மாப்பிள்ளை பற்றி கூறி, "பார் டி, பாருடி" என்று அவள் நாடி பிடித்து நிமிரச் செய்தார்கள். </p>
<p>&nbsp;</p>
<p>இருந்தும் அவள் தலை குனிந்து இருக்க, தோழிகளின் பேச்சும் அவளின் செய்கையும் அருகில் இருந்த தேவ்விற்கு மிகத் தெளிவாகவே கேட்டது. இருந்தும் அவன் எதையும் சட்டை செய்து கொள்ளாமல் புன்னகைத்துக் கொண்டு, வரும் சொந்தங்கள் கொடுக்கும் பரிசுகளையும் வாழ்த்துகளையும் வாங்கிக் கொண்டு புகைப்படம் எடுத்து கொண்டு இருந்தான். </p>
<p>&nbsp;</p>
<p>ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த சிவன்யாவின் தோழிகள், "என்ன மாப்பிள்ளை சார்? வந்ததிலிருந்து நீங்க ரொம்ப பிசியா ஃபோட்டோக்கு போஸ் கொடுத்து கொண்டே இருக்கிறீங்க? எங்க ஃபிரண்ட பாக்கவும் மாட்டீங்க? அவள் கூட பேசவும் மாட்டேங்கறீங்க? என்று அவனிடம் கேள்வி கேட்க, </p>
<p>&nbsp;</p>
<p>அவனும் தன் ஒற்றைப் புருவம் உயர்த்தி, "நீங்க இத்தனை பேர் சுத்தி நிக்கும் போது, நான் எப்படி அவள் கிட்ட பேச முடியும்?" என்றான். </p>
<p>&nbsp;</p>
<p>"ஓஹோ.. இப்ப நாங்க இங்க நிக்கிறதுதான், அவருக்கு பிரச்சனையாம்டி" என்று கோரசாக இரண்டு தோழிகள் பேச, "சும்மா இருங்கடி" என்று சிவன்யா அவர்களை தடுத்தாள். </p>
<p>&nbsp;</p>
<p>"நாங்க இல்லன்னா, நீங்க சிவன்யா கிட்ட நல்லா பேசுவீங்களோ! அப்ப நாங்க எல்லாம் போயிடட்டுமா?" என்று கேள்வியாக இடுப்பில் கை வைத்துக் கொண்டு அவனிடம் கேட்க, </p>
<p>&nbsp;</p>
<p>இன்னைக்கும் நாளைக்கும் மட்டும்தான் நீங்க அவ கூட இருக்க முடியும். அப்படி இருக்கும் போது நான் உங்களை போகச் சொல்வேனா? அதனால இந்த ரெண்டு நாள் நீங்க அவ கூட தாராளமா பேசி மகிழ்ந்துக்கோங்க, அதுக்கப்புறம் நான் அவள் கிட்ட பேசிக்கிறேன்" என்று சகஜமாகவே பேசினான். </p>
<p>&nbsp;</p>
<p>சிவன்யா தன் தோழிகளை தான் கண்டித்தாள். "ஏன் சும்மா அவர்கிட்ட போய் வம்பு இழுத்துகிட்டு இருக்கீங்க?" என்று. </p>
<p>&nbsp;</p>
<p>"உன் வருங்கால புருஷனை சொன்னதும், கோபம் வருகிறதோ!" என்று அதற்கும் கிண்டல் செய்தனர் தோழிகள். </p>
<p>&nbsp;</p>
<p>நிச்சயம் முடிந்ததும் வந்திருந்தவர்கள் புகைப்படம் எடுத்து உணவு உண்டு கிளம்பினார்கள். </p>
<p>&nbsp;</p>
<p>சிவன்யாவின் தோழிகளும் காலையில் வருவதாக சொல்லி கிளம்பிவிட்டு, தேவ்வை பார்த்து, "நாங்க கிளம்பிட்டோம், இனிமேலாவது எங்க சிவன்யாவுடன் பேசுங்க" என்று கூற, </p>
<p>&nbsp;</p>
<p>"உங்க சிவன்யாவா?" என்று அவர்கள் சொன்னது போலவே கூற, </p>
<p>&nbsp;</p>
<p>சிரித்த தோழிகள் "நாளை காலை, நீங்க அவள் கழுத்தில் தாலி கட்டும் வரை எங்க சிவன்யா தான். அதன் பிறகு தான் உங்க சிவன்யா ஆவாள்" என்று சொல்லிவிட்டு நாள் காலை பார்ப்போம் என்று கிளம்பினர். </p>
<p>&nbsp;</p>
<p>அவர்கள் கிளம்பியது "உஃப்" என்று மூச்சு விட்டு, அப்பா மழை பெய்து ஓய்ந்தது போல இருக்கு" என்று சொல்லி சிவன்யாவை பார்த்தான். </p>
<p>&nbsp;</p>
<p>அவளும் அவனை வெட்கத்துடன் பார்க்க, "ரொம்ப நேரமா நின்று கொண்டே இருக்கிறோமே! உனக்கு கால் வலிக்கிறதா?" என்றான் அவள் முகம் பார்த்து.</p>
<p>&nbsp;</p>
<p>"இல்லை" என்று காற்றுக்கு கூட வலிக்காதவாறு கூறி தலை கவிழ்ந்தாள். </p>
<p>&nbsp;</p>
<p>'ரொம்ப வெட்கப்படுவா போல இருக்கே' என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டே, "கேட்கலை" என்றான். </p>
<p>&nbsp;</p>
<p>உடனே நிமிர்ந்து, அவன் முகம் பார்த்து, மறுப்பாக தலையாட்டினாள். </p>
<p>&nbsp;</p>
<p>"சரி, ஆல்மோஸ்ட் எல்லாருமே கிளம்பிட்டாங்க. நம்ம சாப்பிட போகலாமா?" என்றான், மேலும் அவளிடம் பேசும் சாக்கில். </p>
<p>&nbsp;</p>
<p>அவளோ சரி என்று தலையாட்டி விட்டு, சுற்றும் முற்றும் பார்த்தாள். </p>
<p>&nbsp;</p>
<p>மேடையில் அவர்கள் மட்டுமே இருக்க, அந்த ஹாலில் ஆங்காங்கே சிலர் உட்கார்ந்து பேசிக்கொண்டும், ஐஸ்கிரீம் சாப்பிட்டுக் கொண்டும் இருந்தார்கள். சிவன்யாவின் கண்களோ தன் தாயை தேடியது. </p>
<p>&nbsp;</p>
<p>அப்பொழுது வேகமாக அங்கு வந்த மேகநாதன், இருவரையும் பார்த்து புன்னகைத்து, "சாப்பிட போகலாமா மச்சான்" என்று தேவ்வை பார்த்தான்.</p>
<p>&nbsp;</p>
<p>"போகலாம், இப்பொழுதுதான் சிவன்யா கிட்டயும் கேட்டுக்கிட்டு இருந்தேன்" என்று சொல்லியபடியே தன் மாலையை கழட்டப் போக, </p>
<p>அப்பொழுது அங்கு வந்த பார்வதி "நீயாவே கலட்டக்கூடாதுப்பா" என்று சொல்லி மேக நாதனை கழட்டும்படி சொல்லிவிட்டு, சிவன்யா அணிந்திருந்த மாலையை அவர் கழட்டி, அவர்கள் உட்கார்ந்து இருந்த சோபாவில் வைத்துவிட்டு, "வாங்க போய் சாப்பிடலாம்" என்று அவர்களை அழைத்துக் கொண்டு, சாப்பிடும் இடத்திற்கு சென்றார். </p>
<p>&nbsp;</p>
<p>அதற்குள் சிவநேசனும் சிவகாமியும் வந்திருப்பவர்களை எல்லாம் வீட்டிற்கு அனுப்பி விட்டு, அவர்களும் சாப்பிட வந்தார்கள். பெரிய வட்ட மேஜையில் இரு குடும்பங்களும் சுற்றி அமர்ந்து கொள்ள, அவர்களுக்கு தேவையானதை ஹோட்டல் ஊழியர்கள்</p>
<p>பரிமாறினார்கள். எல்லோரும் பேசி மகிழ்ந்து சாப்பிட்டு முடித்தனர். </p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p>- தொடரும்..</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p>- அருள்மொழி மணவாளன்</p>
<p>&nbsp;</p>]]></content:encoded>
						                            <category domain="https://onlinetamilnovels.com/community/%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b2%e0%af%88%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80-%e0%ae%85%e0%ae%b0%e0%af%81/">தொலைதூர வெளிச்சம் நீ - அருள்மொழி மணவாளன்</category>                        <dc:creator>Arulmozhi Manavalan</dc:creator>
                        <guid isPermaLink="true">https://onlinetamilnovels.com/community/%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b2%e0%af%88%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80-%e0%ae%85%e0%ae%b0%e0%af%81/%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d-10/</guid>
                    </item>
				                    <item>
                        <title>வெளிச்சம் - 09</title>
                        <link>https://onlinetamilnovels.com/community/%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b2%e0%af%88%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80-%e0%ae%85%e0%ae%b0%e0%af%81/%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d-09/</link>
                        <pubDate>Sat, 11 Jul 2026 14:31:58 +0000</pubDate>
                        <description><![CDATA[அத்தியாயம் 09
&nbsp;
தங்கையின் திருமணத்திற்காக ஊரில் இருந்து வந்திருந்த விருந்தினர்களை, சென்னையைச் சுற்றி காண்பிக்க அழைத்துச் சென்றான் மேகநாதன். 
அதன்படியே சென்னை கடற்கரையை காண்பித்து, இர...]]></description>
                        <content:encoded><![CDATA[<p>அத்தியாயம் 09</p>
<p>&nbsp;</p>
<p>தங்கையின் திருமணத்திற்காக ஊரில் இருந்து வந்திருந்த விருந்தினர்களை, சென்னையைச் சுற்றி காண்பிக்க அழைத்துச் சென்றான் மேகநாதன். </p>
<p>அதன்படியே சென்னை கடற்கரையை காண்பித்து, இரவு உணவை ஹோட்டலில் முடித்துவிட்டு அனைவரும் வீட்டிற்கு வந்தார்கள். </p>
<p>&nbsp;</p>
<p>மேக நாதனை பற்றி விஸ்வநாதனிடம் புகழ்ந்து தள்ளினார்கள் மாப்பிள்ளை வீட்டினர். மேக நாதன் தம்பியும், அவருடைய நண்பர்களும் எங்களை ரொம்ப நல்லா பாத்துக்கிட்டாங்க. இப்படிப்பட்ட குடும்பத்துல பெண் எடுப்பதற்கு நீ கொடுத்து வச்சிருக்கணும் என்று.</p>
<p>அவரும் தன் சொந்தக்காரர்களின் கூற்றில் மகிழ்ந்தார்</p>
<p>அன்றைய பொழுது அப்படியே அனைவருக்கும் மகிழ்ச்சியாக கழிந்தது</p>
<p>&nbsp;</p>
<p>இரவு விஸ்வநாதனிடம், "நாளை காலை நாம் இருவரும் சென்று, மாப்பிள்ளையை அழைத்து வரலாம், மாமா" என்றான். </p>
<p>&nbsp;</p>
<p>அவரோ தயக்கமாக "இல்லை தம்பி, அவன் நேராக ஹோட்டலுக்கு சென்று விடுவதாக கூறுகிறான். யாரையும் வந்து அலைய வேண்டாம் என்றும் சொல்கிறான்" என்றார் தயக்கமாக. </p>
<p>&nbsp;</p>
<p>"இதில் என்ன அலைச்சல் இருக்கு மாமா. வீட்டிற்கு முதன் முதலில் வரும் மாப்பிள்ளையை நேரில் சென்று வரவேற்பது எங்களது கடமைதானே" என்றான்.  </p>
<p>&nbsp;</p>
<p>அவரோ தயக்கமாக பார்க்க, </p>
<p>'மாப்பிள்ளைக்கு தங்கள் வீட்டில் இருந்து வருவதை விரும்பம் இல்லை போல' என்று நினைத்துக் கொண்டு, </p>
<p>"அப்படி என்றால் என் நண்பன் சங்கரிடம் சொல்கிறேன் மாமா. அவன் டிராவல்ஸ் தான் வைத்து இருக்கிறான். காலையில் உங்களையெல்லாம் அழைத்து வர வந்தானே" என்று கூற, அவரும் ஆமாம் என்று தலையாட்டினார். </p>
<p>&nbsp;</p>
<p>"அவன் சென்று மாப்பிள்ளையை அழைத்து, ஹோட்டலில் விட்டு விடுவான். இதற்கும் அவர் ஒத்துக் கொள்ளவில்லை என்றால், அவ்வளவாக சரியாக இருக்காது என்று நினைக்கிறேன்" என்று தன் வருத்தத்தை வெளிப்படையாகவே கூறிவிட்டான் மேகநாதன். </p>
<p>&nbsp;</p>
<p>அவருக்கும் இதற்கு மேல் மறுப்பது தவறாக பட, "சரி தம்பி, நான் அதை அவனிடம் சொல்லிவிடுகிறேன்" என்று கூறிவிட்டு அவனுக்கு ஃபோனில் வாய்ஸ் மெசேஜ்ல் சங்கர் நம்பரையும் அனுப்பிவிட்டார். </p>
<p>&nbsp;</p>
<p>சிறிது நேரம் அங்கு அமைதியாகவே நின்று இருந்தான் மேகநாதன். அவனின் தோளில் கைவைத்த விஸ்வநாதன், "என்ன தம்பி?" என்றார் அமைதியாக. </p>
<p>&nbsp;</p>
<p>ஒன்றும் இல்லை என்று தலையாட்டிய மேகநாதன், "நாளைக்கு ஹோட்டலுக்கு வந்த பிறகாவது எங்கள் கிட்ட பேசுவாரா?" என்று சந்தேகமாக கேட்டான். </p>
<p>&nbsp;</p>
<p>அதில் வருந்திய விஸ்வநாதன் "எனக்குமே அவன் ஏன் இப்படி செய்கிறான் என்று தெரியவில்லை தம்பி? இதற்கு முன்பு எல்லாம் அவன் எல்லோரிடமும் கலகலவென்று தான் பேசுவான். துபாய்க்கு வேலைக்கு போகும் போது கூட முதலில் விருப்பம் இல்லாமல் தான் சென்றான். ஆனால் இப்பொழுது அவனுக்கு இங்கு வருவதற்கு விருப்பமே இல்லை. எங்களிடமும் அதிகம் அவனாக பேசுவதில்லை. நாங்களா பேசினாக்கா, கேட்டதற்கு பதில் சொல்லிவிட்டு வைத்து விடுவான்" என்றார் சோகமாக. </p>
<p>&nbsp;</p>
<p>'தேவ் இயற்கை குணமே இப்படித்தான் போல' என்று நினைத்துக் கொண்ட மேகநாதன், விஸ்வநாதன் முகத்தில் இருந்த கவலையை கண்டு, தாமும் அவரை மேலும் கவலை படுத்தி விட்டோமே என்று வருந்தினான். </p>
<p>"சாரி மாமா, நான் கேட்டது உங்களை கஷ்டப்படுத்தி இருந்தால் மன்னிச்சுக்கோங்க? மனசுக்குள்ள இருந்ததை அப்படியே கேட்டுட்டேன்!" என்றான் அவரை மன்னிப்பாக பார்த்தபடி. </p>
<p>&nbsp;</p>
<p>"இதில் என்ன தம்பி இருக்கு? அதெல்லாம் பரவாயில்லை! எனக்குமே அவன் செயல் வருத்தமாக தானே இருக்கிறது" என்ற படி, </p>
<p>"சரி தம்பி நீங்களும் கல்யாண வேலையா அலைந்து கொண்டுதான் இருக்கிறீர்கள். நேரம் கிடைக்கும் பொழுது சற்று ஓய்வெடுங்கள்" என்று கூறி அவனை உறங்குவதற்கு அனுப்பினார். </p>
<p>&nbsp;</p>
<p>மறுநாள் அனைவருக்குமே இனிமையாக விடிய, மதியம் வரை அனைவரும் மகிழ்ச்சியாக பேசிக்கொண்டு நேரத்தை ஓட்டி, மதிய உணவிற்கு பிறகு ஒவ்வொருவரும் நிச்சயத்திற்கு கிளம்ப சென்றனர். </p>
<p>&nbsp;</p>
<p>மதியம் உணவிற்கு பிறகு சிவன்யாவுடன் நளினி சிவசாமி மற்றும் பார்வதி அனைவரையும் ஹோட்டலுக்கு அனுப்பி விட்டான் மேகநாதன். </p>
<p>&nbsp;</p>
<p>விஸ்வநாதன் சிவநேசன் இருவரும் வீட்டில் இருப்பவர்களுக்கு தேவையானவற்றையெல்லாம் ஏற்பாடு செய்துவிட்டு, அவர்களும் சாயங்காலம் போல ஹோட்டலுக்கு கிளம்பி விட்டார்கள். </p>
<p>&nbsp;</p>
<p>விஸ்வநாதனின் உறவினர் ஒருவரிடம், வீட்டில் இருப்பவர்களை அழைத்துக் கொண்டு ஹோட்டலுக்கு வரும்படியும், கவனமாக வீட்டை பூட்டிவிட்டு வாருங்கள்" என்று பொறுப்பை ஒப்படைத்து, தனது டூவீலரில் நிச்சயதார்த்தம் நடக்கும் ஹோட்டலுக்கு கிளம்ப பார்த்தான். </p>
<p>&nbsp;</p>
<p>பொறுப்புகளை வாங்கியவர், "நேற்று வரை உங்கள் முகத்தில் இருந்த மகிழ்ச்சி எப்பொழுது இல்லையே! ஏன் தம்பி?" என்று மேகநாதன் முகத்தை பார்த்து கேட்டார். </p>
<p>&nbsp;</p>
<p>"அப்படியா?" என்று அங்கு சுவற்றில் மாட்டியிருந்த கண்ணாடியில் தன் முகத்தை இருபுறமும் பார்த்து, "தெரியலையே சித்தப்பா, ஒருவேளை அலைச்சலாக இருக்கும்" என்று சொல்லிவிட்டு, "பத்திரமாக எல்லோரையும் கூட்டிட்டு வாங்க" என்று மீண்டும் கூறி கிளம்பினான்.  </p>
<p>&nbsp;</p>
<p>அவன் மனம் முழுவதும், இன்று காலை சங்கர் சொல்லிய விஷயத்தை ஓடிக்கொண்டு இருந்தது. நேற்று விஸ்வநாதனிடம் சங்கர் சென்று மாப்பிள்ளையை அழைத்துக் கொள்வான் என்று விஷயத்தை சொல்லிய பிறகு, சங்கருக்கு அழைத்து, நாளை காலை, மூன்று மணி அளவில் ஏர்போர்ட்டுக்கு போய், மாப்பிள்ளையை அழைத்து. ஹோட்டல் அறையில் விட்டு விடும்படி கேட்டான். </p>
<p>&nbsp;</p>
<p>"அதில் உனக்கு எதுவும் சிரமம் இல்லையே சங்கர்?" </p>
<p>&nbsp;</p>
<p>"டேய், இதுல என்ன சிரமம் இருக்கப் போகிறது. நம்ம தங்கச்சிக்காக செய்றேன். அது மட்டும் இல்லாம, என்னுடைய வேலையே அதானே!" என்றவன்.  </p>
<p>&nbsp;</p>
<p>சொல்லியபடியே மூன்று மணிக்கு ஏர்போர்ட் சென்று விட்டான். அங்கு தேவ்வையும் பார்த்தான். பார்த்தவுடன் அவனுக்கு பிடித்து விட்டது. சிவன்யாவிற்கு சிறந்த ஜோடி தான் என்று நினைத்துக் கொண்டான். </p>
<p>&nbsp;</p>
<p>புன்னகையுடன் "தான் மேகநாதனின் நண்பன் சங்கர்' என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ள, </p>
<p>அவனும் முகத்தில் எந்த ஒரு சிறு புன்னகை கூட இல்லாமல், தலையை மட்டும் ஆட்டி, காரில் ஏறி அமர்ந்து கொண்டான். </p>
<p>&nbsp;</p>
<p>என்ன இவர் எதுவும் பேசாமல் இருக்கிறாரே! என்று அவன் கொண்டு வந்த இரண்டு பெட்டிகளையும் வண்டியில் ஏற்றிவிட்டு, அவன் வண்டியை ஹோட்டலுக்கு நோக்கி செலுத்தியபடியே, தேவ்விடம் பேசிக் கொண்டே வந்தான்.  </p>
<p>&nbsp;</p>
<p>அவன் கேட்கும் கேள்விகளுக்கு மட்டும் ஆம், இல்லை என்ற பதில் மட்டும் தான் வரும். அல்லது வெறுமனே தலையாட்டல் இருக்கும். சங்கருக்கு ஒரு கட்டத்தில் அவனுடன் பேசுவதற்கே வெறுப்பாகிவிட்டது. </p>
<p>&nbsp;</p>
<p>'பார்த்ததும் தங்கைக்கு ரொம்ப பொருத்தமாக இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் இவர் வாயை திறந்து பேசவே இவ்வளவு யோசிக்கிறாரே? சிவன்யாவோ கலகலவென்று பேசும் பெண். எப்படி பொருத்தமாக இருக்கும்?' என்று நினைத்து, தேவ்வை மேலும் கீழும் பார்த்தான். </p>
<p>&nbsp;</p>
<p>சற்று நேரத்திற்கு எல்லாம் அவர்கள் தங்க வேண்டிய ஹோட்டல் வந்துவிட, செக் இன் செய்து, அவனது அறையில் விட்டு விட்டு, "எது என்றாலும் எனக்கு ஃபோன் பண்ணுங்க" என்றான். </p>
<p>&nbsp;</p>
<p>அவனும் சரி என்று தலையை மட்டும் ஆட்டி, "நான் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கணும், யாரையும் ஃபோன் பண்ண வேண்டாம் என்று சொல்லிடுங்க" என்று கூறி கதவை சட்டென்று மூடிவிட்டான். </p>
<p>&nbsp;</p>
<p>மேக நாதன் காலை எழுந்ததும், சங்கரிடம் மாப்பிள்ளை பற்றி விசாரிக்க, அவன் அனைத்தையும் சொல்லிவிட்டு, "எப்படிடா நம்ம தங்கச்சி அவன் கூட வாழ்வா? பேசக்கூட காசு கேட்பார் போல இருக்கே?" என்று வருத்தப்பட்டான். </p>
<p>&nbsp;</p>
<p>நண்பன் கூறியது அவனது மனதிற்குள் ஓடிக்கொண்டே இருக்க, அவன் முகம் சற்று பொலிவிழந்து போயிட்டு. அதை சரியாக கண்டுபிடித்து ஒருவர் கேட்டு விட, தன் குழப்பத்தை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, 'நேரில் சென்று பார்த்துக்கொள்வோம். ஒருவேளை சங்கர் என்றதால் பேசாமல் இருந்திருக்கலாம்' என்றும் ஒரு பக்கம் நினைத்துக் கொண்டான். </p>
<p>&nbsp;</p>
<p>திருமணம் நடக்கும் ஹோட்டலுக்கு மேகநாதன் நுழைந்ததும், சிவநேசன் அவனை, "மாப்பிள்ளை சென்று பார்த்து வரலாம்" என்று அழைத்துக் கொண்டு சென்றார். </p>
<p>சிவன்யாவையும் நளினியையும் அறையில் விட்டுவிட்டு, இருவரது பெற்றோரும் மேகநாதனும் தேவ்வின் அறைக்குச் சென்றார்கள். </p>
<p>&nbsp;</p>
<p>"அவனின் அறைக்குச் சென்று கதவை தட்ட, கதவை திறந்த தேவ், தாய் தந்தையரை பார்த்து புன்னகைத்து, "வாங்க" என்றான். </p>
<p>அவன் பின்னால் நின்ற, சிவநேசன் சிவகாமி மற்றும் மேகநாதன் அவர்களை குழப்பமாக பார்த்தான். </p>
<p>&nbsp;</p>
<p>முன்னால் சென்ற விஸ்வநாதன், "இவர் தான் பெண்ணின் அப்பா சிவநேசன், அம்மா சிவசங்கரி, அண்ணன் மேகநாதன்" என்று மூவரையும் அறிமுகப்படுத்த, அனைவரையும் பார்த்து புன்னகைத்த தேவ், பெரியவர்களை கையெடுத்து கும்பிட்டு "வணக்கம்" கூறி வணங்கி, மேகநாதன் கைப்பற்றி குலுக்கி "ஹாய் மச்சான்" என்றான். </p>
<p>&nbsp;</p>
<p>அவன் பேசியதில் அனைவருக்குமே மிகவும் மகிழ்ச்சியாகி விட்டது. அவன் எப்படி தங்களிடம் பார்ப்பான், பேசுவான், பழகுவான் என்று யோசித்துக் கொண்டே தான் மூவரும் இருந்தார்கள். அவன் வெகு இலகுவாக மேகநாதனிடம் பேசியதில், அவனும் அவன் அருகில் அமர்ந்து கொண்டு, "சாரி மச்சான், உங்களிடம் முன்பே பேசணும் என்று நினைத்தேன். ஆனால் அப்பா ஃபோன் பண்ணும் போது கூட நீங்கள் எடுக்கவில்லையாம். அதுதான் என்று தயங்கினான்" மேகநாதன். </p>
<p>&nbsp;</p>
<p>"ஆமாம், அங்கு எனக்கு வேலை கொஞ்சம் அதிகம். திருமணத்திற்கு மற்றும் தங்கையின் திருமணம் என்று வரிசையாக இருபது நாட்களுக்கு மேல் விடுப்பு எடுப்பதால், அதற்குரிய வேலைகளை எல்லாம் முடித்து விட்டு வர வேண்டிய கட்டாயம். அதனால் தான்" என்றான் அவனும் மென்மையாகவே.  </p>
<p>&nbsp;</p>
<p>"ஆமாம் மாப்பிள்ளை, வேலையை முடித்துவிட்டு வந்தால் தானே நிம்மதியாக இங்கு இருக்கும் நாட்கள் இருக்க முடியும்!" என்று கூறிய சிவநேசன், "நீங்கள் நன்றாக ஓய்வெடுத்தீர்களா? பயண களைப்பு ஏதும் இருக்கிறதா?" என்றார். </p>
<p>&nbsp;</p>
<p>"இல்லை மாமா, நல்லா தூங்கி எழுந்திருச்சிட்டேன். தொந்தரவு இல்லாம இருக்கணும்னு தான் யாருக்குமே ஃபோன் பண்ணலை. இப்ப கொஞ்சம் பரவாயில்லை!" என்றான்.  </p>
<p>&nbsp;</p>
<p>தேவ். மூவரிடமும் நல்ல விதமாக பேச, சிவன்யாவின் குடும்பத்திற்கு இவ்வளவு நாள் இருந்த அழுத்தம் கொஞ்சம் குறைந்தது போல் இருந்தது. அவர்களும் நிச்சயதார்த்த நேரம் சொல்லி, "அப்பொழுது தயாரானால் போதும், அதுவரை நீங்கள் கொஞ்சம் ஓய்வெடுங்கள்" என்று சொல்லிவிட்டு நிச்சயதார்த்தத்திற்கு அவன் அணிய வேண்டிய உடுப்புகளை கொடுத்துவிட்டு சென்றார்கள். </p>
<p>&nbsp;</p>
<p>அவர்கள் சென்ற பிறகு விஸ்வநாதன் மகனிடம் கடிந்து கொண்டார். "இப்பொழுது இப்படி பேசுபவன், அவர் ஃபோன் பண்ணும் பொழுது எடுத்து பேசி இருக்கலாம் இல்லையா. அவரும் கொஞ்சம் நிம்மதியாக கல்யாண வேலையை பார்த்திருப்பார் இல்லையா?" என்று மகனை கண்டித்தார்.  </p>
<p>&nbsp;</p>
<p>"அதனால் என்னப்பா? இப்பொழுது தான் அவங்க கிட்ட நல்லா பேசினேனே. அவங்களுக்கும் அது சந்தோஷமா தானே எடுத்துக்கிட்டாங்க. முடிந்ததை விடுங்க, நிச்சயதார்த்த வேலை எதுனா பார்க்க வேண்டியது இருந்தால் போய் பாருங்க. நான் கொஞ்ச நேரம் ஓய்வெடுக்கிறேன்" என்று கூறி, தாய் தந்தையரை அறையில் இருந்து வெளியேற்றினான் தேவ். </p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p>- தொடரும்..</p>
<p>&nbsp;</p>
<p>- அருள்மொழி மணவாளன்..</p>]]></content:encoded>
						                            <category domain="https://onlinetamilnovels.com/community/%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b2%e0%af%88%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80-%e0%ae%85%e0%ae%b0%e0%af%81/">தொலைதூர வெளிச்சம் நீ - அருள்மொழி மணவாளன்</category>                        <dc:creator>Arulmozhi Manavalan</dc:creator>
                        <guid isPermaLink="true">https://onlinetamilnovels.com/community/%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b2%e0%af%88%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80-%e0%ae%85%e0%ae%b0%e0%af%81/%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d-09/</guid>
                    </item>
				                    <item>
                        <title>வெளிச்சம் - 08</title>
                        <link>https://onlinetamilnovels.com/community/%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b2%e0%af%88%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80-%e0%ae%85%e0%ae%b0%e0%af%81/%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d-08/</link>
                        <pubDate>Fri, 10 Jul 2026 09:44:27 +0000</pubDate>
                        <description><![CDATA[அத்தியாயம் 08
&nbsp;
மணமகனின் குடும்பம் வீட்டிற்கு வந்ததும் கல்யாண வீடு பரபரப்பாகியது போல் தோன்றியது. அனைவரையும் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர் சிவநேசன் சிவகாமி தம்பதியினர். 
&nbsp;
அவர்கள் அ...]]></description>
                        <content:encoded><![CDATA[<p>அத்தியாயம் 08</p>
<p>&nbsp;</p>
<p>மணமகனின் குடும்பம் வீட்டிற்கு வந்ததும் கல்யாண வீடு பரபரப்பாகியது போல் தோன்றியது. அனைவரையும் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர் சிவநேசன் சிவகாமி தம்பதியினர். </p>
<p>&nbsp;</p>
<p>அவர்கள் அனைவரும் குளித்து தயாராக இடங்களை காண்பித்த மேகநாதன், "எல்லோரும் கொஞ்சம் சீக்கிரம் தயாராகி வந்தீங்கன்னா, அப்படியே பந்தக்கல் நடும் வேலையை ஆரம்பித்து விடலாம்" என்றான். </p>
<p>&nbsp;</p>
<p>அவர்களும், சரி தம்பி சீக்கிரம் வந்துவிடுகிறோம் என்று கூறி தயாராக சென்றார்கள். </p>
<p>&nbsp;</p>
<p>அவர்கள் ஒவ்வொருவராக குளித்து தயாராகி வர, அனைவருக்கும் குடிப்பதற்கு சூடாக பானம் கொடுக்கப்பட்டது. முதலில் தயாராகி வந்த விஸ்வநாதன் பார்வதி மற்றும் நளினி மூவரும், மருமகள் சிவன்யாவைச் சென்று பார்த்து வந்தார்கள். பின்னர் பந்தக்கல் நடுவேலையை ஆரம்பிக்க, ஒவ்வொருவராக வந்து அனைவரும் கலந்து கொள்ள, பந்தக்கால் நடும் சடங்கு மிகவும் சிறப்பாக முடிந்தது. </p>
<p>&nbsp;</p>
<p>மாப்பிள்ளை வீட்டிலிருப்பவர்கள், சென்னை வருவதால், ஐந்து நாள் கணக்கில் முன்பே தேவ்வின் வீட்டில் பந்தத்தால் நடும் விழா முன்றைய தினமே முடிந்திருந்தது. </p>
<p>&nbsp;</p>
<p>விஸ்வநாதன் உடன் வந்த அவனது சொந்தங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அதில் ஒருத்தர் "அண்ணா, நாங்க பொண்ணு வீட்டுக்காரங்களாக ஆகிட்டது போல இருக்கு" என்று கூறி சிரித்தார். </p>
<p>&nbsp;</p>
<p>"இதுல என்ன இருக்கு மா? திருமணத்திற்கு பிறகு எல்லோரும் ஒரே குடும்பம் தானே!" என்று அவரும் மகிழ்ந்தார். </p>
<p>அனைவருக்கும் காலை உணவு தயாராகி கொண்டிருக்க, மணப்பெண்ணிற்கு நலுங்கு வைக்க வேண்டும் என்று கூறிய சிவகாமி, அவர்கள் வீட்டு ஹாலிலேயே அதற்கான ஏற்பாடுகள் செய்து வைத்திருந்தார். போட்டோகிராஃபரும் காலையிலேயே வந்திருக்க, நீல நிற புடவையில் அழகாக மயில் போல் வந்து அம்மா சொன்ன மணையில் அமர்ந்தாள் சிவன்யா. </p>
<p>&nbsp;</p>
<p>சிவனேசன் சிவகாமி வீட்டில் நெருங்கிய சொந்தங்களும் மற்றும் மாப்பிள்ளை வீட்டில் நெருங்கிய சொந்தங்களாக அவர்களது வீடு நிறைந்து இருந்தது. </p>
<p>&nbsp;</p>
<p>சிவன்யாவின் தோழிகள் சிலரும் வந்திருக்க அவர்களுடன் சேர்ந்து கொண்ட நளினி சிவன்யாவை ஏதேதோ கேலி பேசி மகிழ்ந்தாள். இப்படியே மகிழ்ச்சியாக மணப்பெண்ணிற்கு நலங்கு வைக்கும் சடங்கும் தொடங்க, அனைத்தையும் புகைப்படக்காரர் புகைப்படங்களாக எடுக்க, அதற்கு முன்னரே நளினி ஒவ்வொன்றையும் எடுத்து அவளது அண்ணனுக்கு அனுப்பி வைத்தாள். </p>
<p>&nbsp;</p>
<p>நலுங்து வைக்கும் சடங்கு சிறப்பாக முடிந்ததும், அனைவரையும் காலை உணவு உண்ண படி வீட்டின் பக்கத்தில் போட்டிருக்கும் பந்தலுக்கு அழைத்துச் சென்றான் மேகநாதன். திருமண ஏற்பாடுகளை எல்லாம் பார்த்த விஸ்வநாதன், மேகநாதன் பாராட்டினார். </p>
<p>&nbsp;</p>
<p>"எல்லாம் சிறப்பாக செய்திருக்கிறீர்கள் தம்பி. உங்கள் அப்பா மிகவும் கொடுத்து வைத்தவர். அவருக்கு வேலை செய்ய நீங்கள் இருக்கிறீர்கள்" என்று மகிழ்வாக கூறினார். </p>
<p>&nbsp;</p>
<p>"இதில் என்ன இருக்கு மாமா, மாப்பிள்ளையும் இங்கு இருந்தால் உங்களுக்கு துணையாக இருந்திருப்பார். அவர் வெளிநாட்டில் அல்லவா இருக்கிறார்?" என்று சொல்லிவிட்டு "அவர் எப்பொழுது வருவார் மாமா?" என்று அவரின் முகம் பார்த்தான். </p>
<p>&nbsp;</p>
<p>"இன்று பின் இரவு அங்கிருந்து கிளம்புவதாக கூறினான். எப்படியும் நாளை விடியற்காலைக்கு வந்து விடுவான். நாளை இரவு தானே நிச்சயதார்த்தம்" என்று மேகநாதன் பார்த்த விஸ்வநாதன், "அவன் உங்களிடமும் பேசவில்லையா தம்பி" என்று கவலையாக கேட்டார். </p>
<p>&nbsp;</p>
<p>அவனும் இல்லை என்று மறுப்பாக தலையாட்டி, "ஃபோனில் பேசுவதற்கு தயங்கி இருக்கலாம மாமா, நாளை காலை தான் வந்து விடுவாரே! அப்பொழுது நேரிலேயே பேசிக் கொள்கிறேன்" என்று சொல்லிவிட்டு, "அனைவரும் நன்றாக சாப்பிட்டீர்களா?" என்று விசாரித்தான். </p>
<p>&nbsp;</p>
<p>விஸ்வநாதன் குடும்பத்தின் நெருங்கிய சொந்தங்கள் மட்டும் இன்று வந்திருக்க, அவர்களை தங்கள் வீட்டின் மாடியிலேயே தங்க வைத்து விட்டார் சிவநேசன். </p>
<p>நாளை மற்றவர்கள் எல்லாம் ஊரிலிருந்து வருவார்கள் என்று சொல்லி இருக்க அவர்களுக்கு திருமணம் நடக்கும் ஹோட்டலுக்கு அருகில் உள்ள இடங்களில் தங்குவதற்கு ஏற்பாடு செய்து இருந்தார். </p>
<p>&nbsp;</p>
<p>மணமகனுக்கு திருமணம் நடக்கும் ஹோட்டலிலேயே அறை ஏற்பாடு செய்திருக்க, அவன் நண்பர்களுக்கு அறை எதுவும் வேண்டுமா என்று மேகநாதன் கேட்கும் பொழுது, "யாரும் வரவில்லையாம் தம்பி. அவனுக்கு மட்டும் ஒரு அறை போதும் என்று சொல்லிவிட்டான்" என்றார். </p>
<p>&nbsp;</p>
<p>முந்திய நாள் இரவு நிச்சயதார்த்தம் மிகவும் எளிமையாக நடக்க வேண்டும் என்று தேவ் கூறி இருப்பதாக சொல்லப்பட்டதால், நெருங்கிய சொந்தங்கள் மட்டுமே நிச்சயத்திற்கு அழைக்கப் பட்டிருந்தார்கள். </p>
<p>&nbsp;</p>
<p>நிச்சயம் முடிய எப்படியும் இரவு தாமதம் ஆகிவிடும். அதன் பிறகு மணப்பெண்ணை கூட்டிக்கொண்டு அலைய வேண்டாம் என்று ஒரு ஐந்து அறைகள் அங்கேயே புக் செய்திருந்தான் மேகநாதன். அதில் ஒன்று மணமகனுக்கு கொடுத்து விட, ஒன்றில் தன் தாய் தந்தையை இருக்க சொல்லலாம் என்று நினைத்திருந்தான். </p>
<p>&nbsp;</p>
<p>சிவன்யாவிற்கும் இரண்டு நேரத்திலும் மேக்கப் போட இருப்பதால், அவர்களுக்காக தனி அறையை ஒதுக்கி இருந்தான். நளினியும் அவளுடனேயே தங்கிக் கொள்வதாக சொல்லியிருக்க, அவர்கள் தாய் தந்தையருக்கும் ஒரு அறை மற்றும் தனக்கும் தன்னுடைய நண்பர்களுக்கு என ஒரு அறை, என்று முடிவு செய்து வைத்திருந்தான். </p>
<p>&nbsp;</p>
<p>அதைப்பற்றி அன்று மதியம் அனைவரும் இருக்கும் பொழுது தன் தந்தையிடமும் விஸ்வநாதனிடமும் தெரியப்படுத்த, அவரும் அதற்கு சம்மதம் சொல்லி தங்கள் சொந்தத்திடம் விளக்கினார். </p>
<p>&nbsp;</p>
<p>அவர்கள் சொந்தங்களுமே "அதுவும் சரிதான், நிச்சயம் முடிந்ததும் நாங்கள் இங்கு வந்து விடுகிறோம். எல்லோரும் அங்கு தங்க வேண்டுமென்றால் இன்னும் பல அறைகள் எடுக்க வேண்டியது இருக்கும். அதற்கே குறைந்தது லட்ச ரூபாய்க்கிட்ட ஆகும். வீடு தான் இவ்வளவு பெரிதாக இருக்கிறதே. அதை விட்டுவிட்டு வீம்புக்கு என்று ஹோட்டலில் அறை எடுத்து எதற்கு தங்க வேண்டும்? தம்பி சொல்வது போல் நீங்கள் மட்டுமே அங்கு இருங்கள். நீங்கள் தானே சீக்கிரமாக தயாராக வேண்டும். நாங்கள் எல்லோரும் முகூர்த்த நேரத்திற்கு முன்பு வந்து விடுவோம்" என்று கூறி அதற்கு சம்மதித்தார்கள் </p>
<p>&nbsp;</p>
<p>சிவநேசனுக்கு வந்திருந்த சொந்தங்களை கண்டு உண்மையில் மனமகிழ்ச்சியாக இருந்தது. மாப்பிள்ளை வீடு சொந்தங்கள் நாங்கள் என்று முறுக்கிக் கொள்ளாமல் எளிமையாக எல்லாவற்றிற்கும் அனுசரித்துப் போவதே நினைத்து மகிழ்ந்தார்.  </p>
<p>&nbsp;</p>
<p>அதை விஸ்வநாதனிடம் பேசும் பொழுது மகிழ்ச்சியாக தெரிவிக்க, </p>
<p>"யாருடைய பணமாய் இருந்தால் என்ன சம்பந்தி? அனாவசியமாக செலவு செய்வது எனக்கு பிடிக்காது. மண்டபம் கிடைத்திருந்தால் எல்லோரும் மண்டபத்திலேயே தங்கி இருப்போம். இந்த செலவு கூட உங்களுக்கு இருந்திருக்காது. </p>
<p>&nbsp;</p>
<p>எனக்கு பணத்தை அனாவசியமாக செலவு செய்வது பிடிக்காது சம்பந்தி. அந்த பணம் இருந்தால் நம் பிள்ளைகளுக்கு ஏதாவது செய்யலாம் என்று தான் எனக்கும் தோன்றும். அது மட்டும் அல்ல, இங்கு போல் எங்கள் ஊரில் எதுவும் ஆடம்பரமாக செய்ய வேண்டிய அவசியம் இருக்காதே. </p>
<p>&nbsp;</p>
<p>திருமணம் மண்டபத்தில் நடந்தாலும் சொந்த பந்தம் என்று கூடினாலும் தேவையில்லாமல் ஆடம்பரமாக எந்த ஒரு செலவும் இருக்காது. எனக்கு நீங்கள் ஹோட்டலில் அறை எடுத்து இருப்பது கூட வருத்தமாகத்தான் இருக்கிறது" என்றார் சற்று கவலையாக.</p>
<p>&nbsp;</p>
<p>"ஐயோ சம்மந்தி, அதெல்லாம் ஒன்றும் இல்லை கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். எப்படியும் அந்த ஹோட்டலுக்கும் நம் வீட்டிற்கும் குறைந்தது முக்கால் மணி நேர பயணம் செய்யணும். இரவு நிச்சயம் முடிந்து அனைவரும் கிளம்பிய பிறகுதான் அங்கிருந்து நம்மால் வெளியே வர முடியும். பின்னர் காலையில் எல்லோரும் வருவதற்கு முன்பு நாம் தயாராக அங்க போய் இருக்க வேண்டும். அப்படி என்றால், நாம் போவது, வந்து கிளம்புவது இப்படித்தான் ஓய்வில்லாமல் இருக்கும். அதற்காகத்தான் மேகநாதன் நம்மை அங்கே தங்கச் சொல்லி இருக்கிறான்" என்றார் சிவநேசன். </p>
<p>&nbsp;</p>
<p>"புரிகிறது சம்பந்தி, அதற்கு ஒன்றும் சொல்லவில்லை. பொதுவாக அனாவசிய செலவு பண்ண வேண்டாம் என்றுதான் சொல்கிறேன்" என்றார் அவரும்.  </p>
<p>&nbsp;</p>
<p>நாளை சாயங்காலம் தான் நிச்சயதார்த்தம் என்பதால், ஊரில் இருந்து வந்திருப்பவர்களை மெரினா கடற்கரைக்கு அழைத்து சென்று வரலாம் என்று மேகநாதன் ஏற்பாடு செய்திருக்க, அதை விஸ்வநாதனிடம் தெரிவித்தான். </p>
<p>&nbsp;</p>
<p>"இந்த திருமண வேலையில் இதை வேற நீங்க ஏன் தம்பி இழுத்துப்போட்டு செய்றீங்க?" என்று அவர் சங்கடப்பட்டார். </p>
<p>&nbsp;</p>
<p>"இதில் ஒன்றும் கஷ்டமில்லை மாமா. எல்லோருக்கும் சென்னை சுற்றி பார்க்க வேண்டும் என்று ஆசை இருக்க தானே செய்யும். ஏதாவது வீட்டு விசேஷம் என்று வரும் பொழுது தானே அவர்களும் சென்னைக்கு வருகிறார்கள். திருமணம் முடிந்ததும் அன்று சாயங்காலத்திற்கே அனைவரும் கிளம்புவதாக சொல்கிறார்கள். அதனால் தான் இன்று போய் வரலாம் என்று சொல்கிறேன்" என்றான் மேகநாதன் </p>
<p>&nbsp;</p>
<p>அவரும் அவர்கள் ஊரில் இருந்து வந்தவர்களிடம் கேட்க, அனைவருக்கும் மகிழ்ச்சியாக இருந்தது. நண்டு சிண்டு எல்லாம் கடற்கரைக்கு போகிறோம் என்று ஒரே குதியாக குதிக்க, மகிழ்ச்சியாக கடற்கரைக்குச் செல்ல கிளம்பினார்கள். </p>
<p>&nbsp;</p>
<p>நளினிக்கு கடற்கரைக்கு செல்ல ஆசை இருந்தாலும், சிவன்யாவை விட்டு விட்டுச் செல்ல வேண்டும் என்று தயங்கின்படி இருக்க, </p>
<p>&nbsp;</p>
<p>"திருமணத்திற்கு பிறகு நான் உன் கூட தானே இருக்க போகிறேன். நீ இன்று அவர்களுடன் போயிட்டு வா. அதுதான் அவர்களுக்கும் மகிழ்வாக இருக்கும் " என்று சொல்லி அனுப்பி வைத்தால் சிவன்யா.  </p>
<p>&nbsp;</p>
<p>மேகநாதனும் அவனது நண்பர்கள் இருவரும் இரு வேன்களில் வந்திருப்பவர்களை அழைத்துக் கொண்டு மெரினா பீச்சுக்கு சென்றார்கள். </p>
<p>&nbsp;</p>
<p>அதிலிருந்த பெரியவர்கள் எம்ஜிஆர் சமாதி கலைஞர் சமாதிக்கும் செல்ல வேண்டும் என்று சொல்ல, இளையவர்களோ கடலில் விளையாட வேண்டும் என்றனர். </p>
<p>&nbsp;</p>
<p>வெளிச்சமாக இருக்கும் பொழுது சுற்றிப் பார்க்கும் இடங்களை பார்த்துக் கொள்ளலாம் என்று கூறிய மேகநாதன், அதன்படியே முதலில் சமாதிகளை காண்பித்து விட்டு, உழைப்பாளர் சிலைகளுக்கு அருகே இருந்து அனைவரும் புகைப்படம் எடுக்க வைத்து, பின்னர் கடைகளை எல்லாம் காண்பித்து கடற்கரைக்கு அழைத்து வந்தான். </p>
<p>&nbsp;</p>
<p>வந்திருப்பவர்கள் சிலருக்கு முதல் முறை கடற்கரை அனுபவமாக இருக்க அவர்கள் மிகவும் மகிழ்ந்து ரசித்தனர்.  </p>
<p>&nbsp;</p>
<p>அவர்களின் வெகுளித்தனமான பேச்சையும், ரசனையையும் கண்டு மேகநாதனும் அவனது நண்பர்களுக்கும் மிக வியப்பாகவும் ஆச்சரியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. </p>
<p>&nbsp;</p>
<p>அதில் இருந்தவர்கள் அனைவரையுமே நண்பர்கள் இருவருக்கும் பிடித்து விட, ஒவ்வொருவருக்கும் தேவையானதை கேட்டு கேட்டு பார்த்து செய்தார்கள். </p>
<p>&nbsp;</p>
<p>மேகநாதனின் நண்பர்களையும் கண்டு மகிழ்ந்த பெரியவர்கள், 'உண்மையில் உனக்கு மிகவும் நல்ல நண்பர்கள் கிடைத்திருக்கிறார்கள் தம்பி" என்று வாழ்த்தி மகிழ்ந்தனர். </p>
<p>&nbsp;</p>
<p>- தொடரும்..</p>
<p>&nbsp;</p>
<p>- அருள்மொழி மணவாளன் </p>]]></content:encoded>
						                            <category domain="https://onlinetamilnovels.com/community/%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b2%e0%af%88%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80-%e0%ae%85%e0%ae%b0%e0%af%81/">தொலைதூர வெளிச்சம் நீ - அருள்மொழி மணவாளன்</category>                        <dc:creator>Arulmozhi Manavalan</dc:creator>
                        <guid isPermaLink="true">https://onlinetamilnovels.com/community/%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b2%e0%af%88%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80-%e0%ae%85%e0%ae%b0%e0%af%81/%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d-08/</guid>
                    </item>
							        </channel>
        </rss>
		