<?xml version="1.0" encoding="UTF-8"?>        <rss version="2.0"
             xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
             xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
             xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
             xmlns:admin="http://webns.net/mvcb/"
             xmlns:rdf="http://www.w3.org/1999/02/22-rdf-syntax-ns#"
             xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/">
        <channel>
            <title>
									தொலைதூர வெளிச்சம் நீ - அருள்மொழி மணவாளன் - onlinetamilnovels.com Forum				            </title>
            <link>https://onlinetamilnovels.com/community/%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b2%e0%af%88%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80-%e0%ae%85%e0%ae%b0%e0%af%81/</link>
            <description>onlinetamilnovels.com Discussion Board</description>
            <language>en-US</language>
            <lastBuildDate>Sat, 12 Sep 2026 11:22:31 +0000</lastBuildDate>
            <generator>wpForo</generator>
            <ttl>60</ttl>
							                    <item>
                        <title>வெளிச்சம் - 43</title>
                        <link>https://onlinetamilnovels.com/community/topicid/332/</link>
                        <pubDate>Tue, 25 Aug 2026 14:05:27 +0000</pubDate>
                        <description><![CDATA[அத்தியாயம் 43 
&nbsp;
பார்வதி கைகூப்பி மன்னிப்பு கேட்டதும் அவரது கைகளை பிடித்துக்கொண்ட சிவன்யா &quot;ப்ளீஸ் ஆண்ட்டி இப்படி செய்து என்னை தர்ம சங்கடத்திற்குள் ஆளாக்காதீர்கள். நடந்தது நடந்து முடிந...]]></description>
                        <content:encoded><![CDATA[<p>அத்தியாயம் 43 </p>
<p>&nbsp;</p>
<p>பார்வதி கைகூப்பி மன்னிப்பு கேட்டதும் அவரது கைகளை பிடித்துக்கொண்ட சிவன்யா "ப்ளீஸ் ஆண்ட்டி இப்படி செய்து என்னை தர்ம சங்கடத்திற்குள் ஆளாக்காதீர்கள். நடந்தது நடந்து முடிந்து விட்டது. இதில் யார் தவறு என்று இனி ஆராய்ச்சி பண்ண அவசியம் இல்லை. இன்றுடன் அனைத்தும் முடிந்துவிடும். இதை அப்படியே விட்டு விடுங்கள்" என்று கூறினாள். </p>
<p>&nbsp;</p>
<p>அவளையே பார்த்துக் கொண்டு, நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நளினியை கண்டு புன்னகையுடன் தலையசைத்து தன்னிடம் வருமாறு அழைத்தாள் சிவன்யா. </p>
<p>&nbsp;</p>
<p>இவ்வளவு நேரம் தாயும் அன்னையும் பேசிக் கொண்டிருப்பதை கேட்டுக் கொண்டு அவர்களையே பார்த்துக் கொண்டே நின்றிருந்த நளினி அண்ணி அழைத்ததும் வேகமாக அவளது அருகில் வந்து நின்று, அவளை கட்டி அணைக்க முயன்றாள். </p>
<p>&nbsp;</p>
<p>ஆனால் அவளின் வேகத்திற்கு தடையாக அவளது வயிறு இருவருகளுக்கு இடையும் முட்டிக்கொண்டு நிற்க, அதை பார்த்து புன்னகைத்த சிவன்யா அவளை தன்னுடன் தோளுடன் அழைத்துக்கொண்டு, "எப்படி இருக்கிற நளினி. குட்டி பையன் என்ன சொல்றான்" என்று அவளின் வயிற்றைப் பார்த்துக் கொண்டே அவளது வயிற்றில் கை வைத்து கேட்டாள். </p>
<p>&nbsp;</p>
<p>"நான் நல்லா இருக்கேன் அண்ணி, நீங்க எப்படி இருக்கீங்க?" என்று கேட்டாலும் அவளது நிலைமை தான் கண்கூடாக தெரிகிறதே. மெலிந்த தேகம். ஒளி இழந்த கண்கள். இவை அனைத்துக்கும் காரணம் அவர்களுக்கு நடந்த திருமணம். அது நளினியின் கண்களிலும் வருத்தத்தை தோற்றுவிக்க, அவள் கைகளில் மெதுவாக அழுத்தம் கொடுத்து "நான் நல்லா இருக்கேன்" என்றாள் வெற்றுப் புன்னகையுடன். </p>
<p>&nbsp;</p>
<p>அதற்குள் இரு குடும்பங்களும் ஒருவருக்கு ஒருவர் என்ன பேசுவது என்று தெரியாமல் நல விசாரிப்புக்குள்ளுடன் அமைதியாக இருக்க, அதை கலைக்க விரும்பிய மேகநாதன் "எல்லோரும் காலையில சாப்டீங்களா?" என்றான் பொதுவாக. </p>
<p>&nbsp;</p>
<p>பெரியவர்கள் அமைதியாக இருக்க, "இல்லை அத்தான்" என்றாள் நளினி வேகமாக. </p>
<p>&nbsp;</p>
<p>நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நளினியை பார்த்த மேகநாதன், இவ்வளவு நேரம் சாப்பிடாமல் என்ன செய்கிறாய்" என்று சொல்லிவிட்டு, அவரது கணவனை பார்த்து "ஏதாவது வாங்கிக் கொடுத்து கூட்டிட்டு வந்திருக்கலாம்ல?" என்று சொல்லி, "சரி வாருங்கள் சாப்பிட போகலாம்" என்றான். </p>
<p>&nbsp;</p>
<p>பெரியவர்கள் "வேண்டாம் தம்பி" என்று மறுத்தனர். ஆனால் மேகநாதனோ பார்வதியையும் நளினியும் அவள் கணவனையும் அருகில் உள்ள ஹோட்டலில் ஏதாவது சாப்பிட்டு விட்டு வரலாம் என்று பிடிவாதமாக அழைத்துச் சென்றான். </p>
<p>&nbsp;</p>
<p> காலையிலேயே சிவன்யா மேகநாதனிடம் சொல்லிவிட்டாள். வழக்கு விசாரணையின் போது நளினியும் பார்வதியும் அங்கு இருக்க வேண்டாம் என்று. அதனால் தான் மேகநாதன் அவர்களை அழைத்துக் கொண்டு வெளியே சென்றான். அதுபோலவே அவர்கள் சென்றதும் வக்கீல் சிவன்யாவை உள்ளே அழைத்தார், அடுத்தது அவர்கள் கேஸ் தான் என்று.</p>
<p>&nbsp;</p>
<p>நீதிபதி இருக்கையில் அமர்ந்திருந்த பெண் நீதிபதிக்கு வணக்கம் கூறி, கேஸ் பற்றிய விவரங்களை கூறி, சிவன்யாவையும் தேவ் சார்பாக வந்திருக்கும் அவனது தந்தை விஸ்வநாதனையும் முன்னிறுத்தினார் வக்கீல். </p>
<p>&nbsp;</p>
<p>சரியாக அந்நேரம் வீடியோ காலில் தேவ்வும் நீதிபதியிடம் பேசி, தன் நிலைமை அனைத்தையும் கூறி, தான் விவாகரத்து செய்ய விரும்புவதையும் தெளிவாக கூறினான். </p>
<p>&nbsp;</p>
<p>நீதிபதி கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் தேவ் பதில் கூற, அனைத்திற்கும் சம்மதமாய் என்று சிவன்யாவைக் கேட்டார் நீதிபதி. அவளும் சம்மதம் கூற இருவருக்கும் விவாகரத்து வழங்குவதாக கூறிவிட்டார் நீதிபதி. </p>
<p>&nbsp;</p>
<p>அவருக்கு நன்றி கூறிய வக்கீல் அடுத்து செய்ய வேண்டிய அனைத்தும் முறைப்படி செய்து தொடங்கினார். அவர்கள் வெளியே வரவும் பார்வதியும் மேகநாதன் உணவு முடித்து அனைவரையும் அழைத்துக் கொண்டு வரவும் சரியாக இருந்தது பார்வதியை பார்த்ததும் விவாகரத்து முடிந்து விட்டது என்று கூறினார் விஸ்வநாதன். </p>
<p>&nbsp;</p>
<p>அவர் கூறியதும் அவ்விடம் ஒருவித அமைதி நிலவ, ஒருவருக்கொருவர் முகத்தை வேதனையாக பார்த்துக் கொண்டனர். </p>
<p>&nbsp;</p>
<p>"நல்லது" என்று முதலில் பேச்சை ஆரம்பித்தார் விஸ்வநாதன். </p>
<p>அவர் பேசியதும் அனைவரும் அவரது முகத்தை பார்க்க, அவரோ சிவன்யாவை பார்த்து, </p>
<p>"நடந்தது நடந்து விட்டது இப்பொழுது, அது முடிந்தும் விட்டது. கடந்த வருடம் உன் வாழ்க்கையில் இல்லை என்று நினைத்துக் கொள். நீ இப்பொழுது பழையபடிக்கு வெறும் சிவன்யா சிவநேசன் தான். </p>
<p>&nbsp;</p>
<p>உன் ஆசை பிரகாரம் நன்கு படித்து உன் வாழ்க்கையில் முன்னேற வேண்டும். நடந்தவற்றையெல்லாம் மாற்ற முடியாது, ஆனால் அதை மறக்க முடியும். நடந்தவற்றை மறந்து, எங்களையும் மன்னித்து விடும்மா! இதற்கு மேல் என்ன சொல்வது என்று எனக்கும் தெரியவில்லை" என்றார் கவலையாக. </p>
<p>&nbsp;</p>
<p>சிவன்யா என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் அப்படியே அமைதியாக நின்று இருக்க, சிவகாமி மேகநாதனிடம் கண்களால் ஏதோ கூறினார். </p>
<p>உடனே அவனும் "சரி இங்கு வந்த வேலை முடிந்து விட்டது. அடுத்து என்ன என்று பார்ப்போம். இங்கு நின்று பேச வேண்டாம், வாருங்கள்" என்று அனைவரையும் அழைத்துக் கொண்டு கார் நிற்கும் இடத்திற்கு வந்தான். </p>
<p>&nbsp;</p>
<p>அவனிடம் "நன்றி தம்பி, நாங்கள் இப்படியே கிளம்புகிறோம்" என்றார் விஸ்வநாதன். </p>
<p>"சரி கிளம்பலாம் அங்கிள். உங்களுக்கு நான் கார் புக் செய்து இருக்கிறேன்" என்று சொல்லிக் கொண்டு இருக்கும் பொழுதே மேகநாதன் புக் செய்த கார் அங்கு வந்து நின்றது. அதில் அவர்களை ஏற்றி அனுப்பி வைத்தான். அவர்கள் கார் கிளம்பியதும் அவனும் காரை எடுத்துக்கொண்டு, தன் குடும்பத்தினருடன் கிளம்பினான். </p>
<p>&nbsp;</p>
<p>காரில் ஏறியதும் பார்வதி "ஏங்க இப்படி அவசரப்படுறீங்க. கொஞ்ச நேரம் இருந்து அவர்களிடம் பேசிவிட்டு வரலாம்ல, இப்படி உடனே கிளம்புகிறேன் என்று சொல்லிட்டீங்க" என்று வருத்தப்பட்டார். </p>
<p>&nbsp;</p>
<p>"இதற்கு மேல் அவர்களிடம் பேச என்ன இருக்கிறது பார்வதி. நாம் அவர்கள் கூட இருந்தால் அவர்களுக்கு சங்கடமாகத்தான் இருக்கும். போதும் அவர்கள் பட்ட கஷ்டங்கள் அனைத்தும். இனிமேலாவது அவர்கள் நிம்மதியாக இருக்கட்டும்" என்று கூறி கண்களை மூடி அமர்ந்து விட்டார் விஸ்வநாதன். </p>
<p>&nbsp;</p>
<p>நளினியின் கணவனும் "ஆமாம் அத்தை, மாமா சொல்லுவதும் சரிதான்" என்று சொல்லிவிட்டு அழுது கொண்டிருக்கும் மனைவியை, தன் தொளில் சாய்த்து ஆறுதல் படுத்தினான். </p>
<p>&nbsp;</p>
<p>அனைவருமே சங்கடமான நிலையில் கண்மூடி அமர்ந்து விட்டனர். </p>
<p>காரின் அசைவு நின்றதும்தான் அனைவருமே கண் விழித்து பார்க்க, கார் சிவன்யாவின் வீட்டின் முன் நின்றது. </p>
<p>&nbsp;</p>
<p>அதில் அதிர்ந்த விஸ்வநாதன், கார் ஓட்டியிடம் "என்னப்பா? இங்கே வந்திருக்க? **** ஹோட்டலுக்கு தானே போகணும்" என்றார். </p>
<p>&nbsp;</p>
<p>அதிர்ந்த அவர் முகத்தைப் பார்த்த ஓட்டுநர், "இல்லை சார், இங்கே தான் புக் பண்ணி இருக்காங்க!" என்று குழப்பமாக சொல்லிக்கொண்டு இருக்கும் பொழுது, </p>
<p>மேகநாதனின் காரும் அங்கே வந்தது. காரில் இருந்து இறங்கிய சிவநேசனும் சிவகாமியும் அவர்களை வீட்டுக்குள் வரும்படி அழைத்தனர். </p>
<p>&nbsp;</p>
<p>பெரியவர்கள் தயங்கி நிற்க, "வாங்க விஸ்வநாதன்" என்று அவரை கைப்பிடித்து அழைத்துச் சென்றார் சிவநேசன். </p>
<p>தயங்கியபடியே அனைவரும் வீட்டிற்குள் வந்தனர். </p>
<p>வந்ததும் அவர்கள் அனைவருக்கும் குடிப்பதற்கு தண்ணீர் எடுத்துக் கொடுத்தால் சிவன்யா. </p>
<p>&nbsp;</p>
<p>"சிவன்யா, நளினியை உன் அறைக்கு அழைத்துச் செல். கொஞ்ச நேரம் ஓய்வு எடுக்கட்டும். காலையிலிருந்து நின்று கொண்டே இருக்கிறாள்" என்றான் மேகநாதன். </p>
<p>சரி என்று தலையாட்டிய சிவன்யா நளினியை அழைத்துக்கொண்டு அவளது அறைக்கு சென்றதும், விஸ்வநாதனின் கண்கள் கலங்கிவிட்டது. </p>
<p>&nbsp;</p>
<p>மீண்டும் கைகூப்பி கண்ணீர் மல்க "எங்களை மன்னித்து விடுங்கள். உங்களுக்கு இவ்வளவு கஷ்டத்தை கொடுத்த ஒருவனது குடும்பத்தை இப்படி கவனித்துக் கொள்கிறீர்களே" என்றார் மனசார. </p>
<p>&nbsp;</p>
<p>அவர் கையைப் பிடித்து இறக்கி விட்ட சிவநேசன், "போதும் விஸ்வநாதன், நீங்கள் மன்னிப்பு கேட்டதெல்லாம் போதும். சிவன்யா யாரின் மீதும் குற்றமோ, குறையோ சொல்லக்கூடாது என்று சொல்லிவிட்டாள். அவளே அதை வேண்டாம் என்று சொல்லும் பொழுது, நாங்கள் ஏன் அதைப் பிடித்துக் கொண்டு இருக்க வேண்டும். </p>
<p>&nbsp;</p>
<p>அதுவும் இல்லாமல் உங்கள் எல்லோருக்குமே சிவன்யாவின் மீது இருந்த பாசம் உண்மையானது என்பதை தான் நாங்கள் கண்கூடாக பார்த்திருக்கிறோமே! நளினி எப்படி சிவன்யாவின் மீது உயிராக இருந்தால் என்று எங்களுக்கு தெரியும். அப்படிப்பட்டவள் நிறை மாதமாக இருக்கும் பொழுது இங்கு இவ்வளவு தூரம் பயணித்து, அவளுக்காக வந்திருக்கிறாள். அவளை நன்கு கவனித்துக் கொள்ள வேண்டும் அல்லவா? அதைத்தான் நாங்கள் செய்கிறோம்" என்றார் அமைதியாக குரலில். </p>
<p>&nbsp;</p>
<p>"ஆமாம் அண்ணா, எதைப் பற்றியும் யோசித்து உங்கள் உடல் நிலையை கெடுத்துக் கொள்ளாதீர்கள். முன்பு போல் உரிமையாக இனிமேல் பேச முடியாட்டாலும், நட்பாக பேசிக்கொள்ள முயற்சி செய்வோம். </p>
<p>&nbsp;</p>
<p>நாங்களும் சிவன்யாவை அப்படியே விட்டுவிட போறதில்லை. அவள் விருப்பப்படி அவள் வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்று அவள் நினைக்கிறாளோ, அதன்படி நாங்களும் அவளுக்கு உறுதுணையாக இருப்போம். </p>
<p>&nbsp;</p>
<p>உங்கள் வீட்டில் நல்லது கெட்டது நடந்தால் எங்களுக்கு சொல்லுங்கள். அது போல் எங்கள் வீட்டில் நல்லது கெட்டதுஎல்லா விஷயத்தையும் உங்களுக்கு தெரிவிக்கிறோம். முடிந்தால் கலந்து கொள்ளலாம்" என்று பார்வதியின் கையைப் பிடித்துக் கொண்டே பேசி முடித்தார் சிவகாமி. </p>
<p>&nbsp;</p>
<p>"சரி சிவகாமி, வந்து இவ்வளவு நேரம் ஆகிவிட்டது, தண்ணீர் மட்டும் குடித்துவிட்டு உட்கார்ந்து இருக்கிறோம். சாப்பாடு எல்லாம் தயாரா? சாப்பிடலாமா? என்றார் சிவநேசன். </p>
<p>&nbsp;</p>
<p>"எல்லாம் தயார் தாங்க. நான் காலையில் கிளம்பும்போது சொல்லிவிட்டு தான் சென்றேன். எல்லாம் செய்து உணவு மேஜையில் வைத்திருக்கிறாள். வாருங்கள் சாப்பிடலாம்" என்று அனைவரையும் உணவு உண்ண அழைத்தார் சிவகாமி. </p>
<p>&nbsp;</p>
<p>- தொடரும்..</p>
<p>&nbsp;</p>
<p>- அருள்மொழி மணவாளன்..</p>]]></content:encoded>
						                            <category domain="https://onlinetamilnovels.com/community/%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b2%e0%af%88%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80-%e0%ae%85%e0%ae%b0%e0%af%81/">தொலைதூர வெளிச்சம் நீ - அருள்மொழி மணவாளன்</category>                        <dc:creator>Arulmozhi Manavalan</dc:creator>
                        <guid isPermaLink="true">https://onlinetamilnovels.com/community/topicid/332/</guid>
                    </item>
				                    <item>
                        <title>வெளிச்சம் - 42</title>
                        <link>https://onlinetamilnovels.com/community/topicid/331/</link>
                        <pubDate>Tue, 25 Aug 2026 13:57:19 +0000</pubDate>
                        <description><![CDATA[அத்தியாயம் 42 
&nbsp;
தன்னால் சிவன்யாவின் வாழ்க்கையில் பெரும் குழப்பமும் கஷ்டமும் வந்துவிட்டதை நினைத்து வருத்திக் கொண்டே வீட்டுக்கு வந்து சேர்ந்தார் விஸ்வநாதன். 
&nbsp;
நளினியும் பார்வதி...]]></description>
                        <content:encoded><![CDATA[<p>அத்தியாயம் 42 </p>
<p>&nbsp;</p>
<p>தன்னால் சிவன்யாவின் வாழ்க்கையில் பெரும் குழப்பமும் கஷ்டமும் வந்துவிட்டதை நினைத்து வருத்திக் கொண்டே வீட்டுக்கு வந்து சேர்ந்தார் விஸ்வநாதன். </p>
<p>&nbsp;</p>
<p>நளினியும் பார்வதியும் "என்ன ஆச்சு? சிவன்யா என்ன சொல்கிறாள்?" என்று கேள்வி மேல் கேள்வி கேட்டனர். </p>
<p>&nbsp;</p>
<p>"உன் மகனுக்கு சிவன்யாவுடன் வாழ பிடிக்கவில்லையாம். அதனால் விவாகரத்து வேண்டுமாம்" என்று மட்டும் கூறினார். </p>
<p>&nbsp;</p>
<p>"என்னங்க சொல்றீங்க? நான் வேண்டும் என்றால் தேவ்விடம் பேசுகிறேன். நல்ல பொண்ணுங்க" என்று தங்கள் பிள்ளைகளின் வாழ்க்கை வீணாகி விடக்கூடாது என்று கணவனிடம் கேட்டார் பார்வதி. </p>
<p>&nbsp;</p>
<p>"நீ எதுவும் பேச வேண்டாம். அவன் முடிவு எடுத்து விட்டான், அவன் இஷ்டம் போல் இருக்கட்டும். நாம் வற்புறுத்தி சேர்த்து வைத்தாலும் அவர்கள் வாழ மாட்டார்கள். அதற்கு விவாகரத்து வாங்கி விட்டாலாவது, சிவன்யா வேறு கல்யாணம் முடித்து சந்தோஷமாக இருப்பாள்" என்று சொல்லிவிட்டு "நான் விவாகரத்திற்கு எல்லா ஏற்பாடும் செய்து விட்டேன், விரைவில் விவாகரத்தும் கிடைத்துவிடும்" என்று சொல்லி வேலைக்கு கிளம்ப ஆயத்தம் ஆனார். </p>
<p>&nbsp;</p>
<p>நளினியும் பார்வதியும் அவர் கூறியதை கேட்டு அதிர்ந்து நின்றனர். நளினியின் கணவனோ அவளிடத்தில் "நானும் இப்பொழுது வேலைக்கு போகிறேன். சாயங்காலம் வந்து உன்னை கூட்டிட்டு போகிறேன்" என்று சொல்லிவிட்டு "எதைப்பற்றியும் யோசிக்காதீங்க அத்தை" என்று மாமியாரிடமும் சொல்லிவிட்டு கிளம்பி விட்டான்.  </p>
<p>&nbsp;</p>
<p>ஆண்கள் இருவரும் பேசியதை கேட்ட பெண்கள் அதிர்ந்து நின்றனர். "என்ன ஆயிற்று என்று தெரியவில்லையே நளினி. இரண்டு பேரும் இப்படி சொல்லிட்டு போறாங்க. தேவ் ஏன் சிவனியாவை வேண்டாம் என்றான்? அவளை விட நல்ல பெண் அவனுக்கு கிடைக்குமா! ஏன் ஒரு நல்ல வாழ்க்கையை இப்படி கெடுத்துக் கொள்கிறான்?" என்று புலம்பியபடி அமர்ந்து விட்டார். </p>
<p>&nbsp;</p>
<p>நந்தினிக்கும் தாய்க்கு என்ன ஆறுதல் சொல்வது என்று தெரியவில்லை. "கவலைப்படாதீங்க அம்மா, ஏதோ பெரிய விஷயம் நடந்திருக்கும். அப்பா நம்மிடம் சொல்ல மறுக்கிறார் என்று நினைக்கிறேன். அவர்களை சேர்த்து வைத்தால், இருவரது வாழ்க்கையும் வீணாக போய்விடும் என்று அப்பா சொல்கிறார் அல்லவா? அதனால் இருவரும் பிரிவதே மேல் என்றுதான் எனக்கும் தோன்றுகிறது. நடப்பது நடக்கட்டும் அம்மா நீங்கள் கவலைப்படாதீர்கள்!" என்று தனக்கு தெரிந்த வகையில் தாய்க்கு ஆறுதல் கூறினாள். </p>
<p>&nbsp;</p>
<p>"நான் சிவன்யா கிட்ட இப்பவே பேசுறேன். என்ன நடந்ததுன்னு கேட்கிறேன்!" என்று ஃபோனை எடுத்தார். </p>
<p>பள்ளிக்கூடம் செல்ல தயாராகி வந்த விஸ்வநாதன், மனைவி கையிலிருந்த ஃபோனை பிடுங்கி, "அவசரப்பட்டு சிவன்யாவிடம் பேசி அவளை சங்கடத்திற்கு உள்ளாக்காதே. கொஞ்சம் பொறுமையாக இருந்து. அந்தப் பிள்ளையின் நிலையும் யோசித்து பார், வேண்டாம் என்று சொன்னவுடன் வாழ முடியுமா? நான் சொல்வதை சொல்லிவிட்டேன். அதற்கு மேல் உன் இஷ்டம், என் சொல்பேச்சு கேட்டு நடப்பதும் நடக்காததும்" என்று சொல்லிவிட்டு ஃபோனை அவரிடம் கொடுத்து விட்டு வேகமாக வெளியேறினார். </p>
<p>&nbsp;</p>
<p>கணவன் கோபமாக சாப்பிடாமல் சென்றதும் பதட்டமான பார்வதி, "ஒரு நிமிஷம்ங்க, சாப்பிட்டு போங்க. நான் ஃபோன் பண்ண மாட்டேன்" என்று தான் செயலுக்கு மன்னிப்பு கேட்டு அவரை சாப்பிட வற்புறுத்தினார். </p>
<p>&nbsp;</p>
<p>அவர் சென்றதும் கணவன் சொன்னதை யோசித்தபடி அமர்ந்திருந்தார் பார்வதி. அவர் சாப்பிடாமல் இருந்ததால், நளினியும் சாப்பிடாமல் இருக்க வயிற்றுப் பிள்ளைக்காரி சாப்பிடாமல் இருக்க கூடாது என்று அவளுக்கும் ஊட்டி விட்டு தானும் உண்டார். </p>
<p>&nbsp;</p>
<p>"சிவன்யாவிடம் தானே பேசக்கூடாது என்று சொன்னார். நான் தேவ்க்கு ஃபோன் செய்து கேட்கவா?" என்று மகளிடம் கேட்டார் பார்வதி. </p>
<p>&nbsp;</p>
<p>"ம்மா, அப்பா கொஞ்ச நாள் அப்படியே விட சொல்லியிருக்கிறார்கள் இல்லையா? கொஞ்சம் பொறுமையாக தான் இருங்க அம்மா. எப்படியும் என்ன நடந்தது என்று அவர்கள் சொல்லத்தான் போகிறார்கள். அதற்குள் ஏன் இப்படி அவசரப்படுகிறீர்கள்?" என்றார் தந்தையின் சொல் கேட்காமல் தமையனிடம் பேசி ஏதாவது பிரச்சனை தன் தாய் தந்தையருக்கு வந்து விடக்கூடாது என்று பயந்து. </p>
<p>&nbsp;</p>
<p>"இல்லை நளினி, எனக்கு மனசு ஆற மாட்டேன் என்கிறது. எவ்வளவு அருமையான பிள்ளை. அவளை போய் வேண்டாம் என்று சொல்லி இருக்கிறானே! என்று" வருத்தமாக சொல்லிக் கொண்ட, மகனுக்கு ஃபோன் செய்தார். </p>
<p>&nbsp;</p>
<p>ஆனால் தேவ் எடுக்கவே இல்லை. மீண்டும் மீண்டும் ஃபோன் செய்து களைத்து போய் அமர்ந்து விட்டார். "பேசினால் தானே நடந்தது என்று தெரிந்து கொண்டு அதற்கு தீர்வு காண முடியும்" என்றார் சோர்வாக. </p>
<p>&nbsp;</p>
<p>"விடுங்கம்மா, கத்திரிக்காய் முற்றினால் கடைக்கு வரதானே செய்யும் அப்பொழுது பார்த்துக் கொள்ளலாம்" என்று சொன்னாலும் அவளுக்கு சிவன்யாவை நினைத்து கவலையாக தான் இருந்தது. வீட்டிற்கு சென்றதும் தன் கணவனிடம் கேட்டு அண்ணிக்கு ஃபோன் செய்து பார்க்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டால் நளினி. </p>
<p>&nbsp;</p>
<p>அப்படியே நாள்கள் கடந்தது. சிறிது நாள் கழித்து பார்வதி சிவன்யாவுக்கு அழைத்து பேசினார். சாதாரணமாக பேசிய சிவன்யா அவரிடம் எதையும் சொல்லாமல் வைத்து விட்டாள். </p>
<p>&nbsp;</p>
<p>நளினி கணவனிடம் பேசிப் பேசி ஓரளவுக்கு விஷத்தை புரிந்து கொண்டாள். அவளுக்கு அதிர்ச்சியாக இருந்தாலும், அதை தாயிடம் சொல்ல முடியவில்லை. </p>
<p>&nbsp;</p>
<p>கேஸ் விஷயத்தை தவிர மற்றபடி தேவ் தந்தைக்கு ஃபோன் செய்வது இல்லை. அவன் நேரில் வர மறுத்து, என்ன சொல்ல வேண்டுமோ அதை ஃபோனிலேயே சொல்லி விவாகரத்து பெறுவதாக சொல்லி விட்டான். வக்கீலும் அதற்கு பர்மிஷன் வாங்கி அதை செயல்படுத்த ஆரம்பித்து விட்டார். </p>
<p>&nbsp;</p>
<p>சிவன்யாவை பார்ப்பதற்கு சென்னைக்கு நேரில் செல்ல வேண்டும் என்று கேட்ட பார்வதியையும் நளினியையும் விஸ்வநாதன் தடுத்துவிட்டார். </p>
<p>&nbsp;</p>
<p>வக்கீல் சொல்லும் நாள் விஸ்வநாதன் மட்டும் தான் சென்னைக்கு வருவார். இப்படியாக இரண்டு மூன்று தடவை கோர்ட்டுக்கு சென்று வந்தார். வழக்கு இன்று கடைசி ஹியரிங்க்கு வந்துவிட்டது. இன்று அவர்களுக்கு விவாகரத்து கிடைத்துவிடும். </p>
<p>&nbsp;</p>
<p>நளினியும் பார்வதியும் விடாப்பிடியாக இன்று வருவேன் என்று அடம்பிடித்து வந்து விட்டார்கள். காலையில் நேராக சிவன்யா வீட்டுக்கு தான் செல்ல வேண்டும் என்று கூறினார் பார்வதி. ஆனால் என்றைக்கு விவாகரத்திற்கு என்று முடிவு செய்தாரோ, அதன் பிறகு விஸ்வநாதன் சிவன்யாவின் வீட்டிற்கு வருவதில்லை. </p>
<p>&nbsp;</p>
<p>சென்னை வரும் பொழுதெல்லாம் ஹோட்டலில் தான் தங்குவார். அதுபோலவே இன்று தனக்கும் தன் மகளுக்கும் ஆக இரண்டு அறை எடுத்து அங்கு தான் அழைத்துச் சென்றார் மனைவியையும் மகளையும். </p>
<p>&nbsp;</p>
<p>"சிவன்யாவை நேரில் பார்த்து விடலாம் என்று வந்தால், இப்படி ஹோட்டலுக்கு கூட்டிட்டு வந்துட்டீங்க" என்று கணவனிடம் வருத்தப்பட்ட பார்வதி வேகமாக குளித்து தயாரானார். </p>
<p>&nbsp;</p>
<p>அதே சுறுசுறுப்பு தான் நளினிடமும் இருந்தது. சீக்கிரம் தயாராகிவிட்டால் அண்ணி வீட்டுக்கு சென்று பார்க்கலாம் என்று நினைத்தாள். பெண்கள் இருவரும் சீக்கிரம் குளித்து தயாராகி ஆண்கள் இருவரையும் அவசரப்படுத்தினர், சிவனியாவின் வீட்டிற்கு செல்லலாம் என்று. </p>
<p>&nbsp;</p>
<p>நளினியின் கணவனோ மாமா என்ன சொல்றாங்களோ அப்படித்தான் நடக்கணும் என்று கண்டிப்புடன் சொல்லிவிட்டான். </p>
<p>&nbsp;</p>
<p>அனைவரும் தயாராகியதும் நேராக நீதிமன்ற வளாகத்திற்கு தான் அழைத்து வந்தார் விஸ்வநாதன். அது பெண்கள் இருவருக்கும் வருத்தமாக இருந்தாலும் சிவன்யாவை நேரில் பார்ப்பதற்காக ஆர்வமாகவே இருந்தனர். </p>
<p>&nbsp;</p>
<p>அங்கு வந்ததும் மருமகளைத்தான் தேடியது பார்வதியின் கண்கள். தூரத்தில் வேப்பமரத்தின் அடியில் இருந்த ஒரு கல்லில் எங்கோ வெறித்துப் பார்த்தபடி அமர்ந்து இருந்த சிவன்யா அவரது கண்களுக்கு தெரிந்தாள். வேகமாக அவள் இருப்பிடம் நோக்கி நடந்தார் பார்வதி. தன் ஒன்பது மாத வயிற்றை தூக்கிக் கொண்டு தாயின் வேகத்திற்கு இணை கொடுக்க முடியாமல் மெதுவாக அவர் சென்ற திசையை நோக்கி நடந்தாள் நளினி. </p>
<p>&nbsp;</p>
<p>"சிவன்யா" என்று சத்தமாக அழைத்தபடி ஓடி வந்த பார்வதியை கண்டு அதிர்ந்து எழுந்து நின்றாள் சிவன்யா. ஓடி வந்த வேகத்தில் அவளை இறுக்கமாக அணைத்துக் கொண்டார். </p>
<p>இவ்வளவு நாள் மனதில் இருந்த குமுறலில் உடல் குலுங்கி அழுதார் பார்வதி. அவர் அழுததும் தன்னை சமாளித்துக் கொண்ட சிவன்யா, அவர் முதுகை ஆதரவாக தடவி "ரிலாக்ஸாக இருங்க ஆன்ட்டி" என்றாள். </p>
<p>&nbsp;</p>
<p>ஏற்கனவே சிவன்யா ஒல்லியாக தான் இருப்பாள். ஆனால் முகம் களையாக பொலிவுடன் எப்பொழுதும் முகத்தில் ஒரு சிறு புன்னகையுடன் இருப்பாள். ஆனால் இன்று முகத்தில் ஜீவனே இல்லாமல் இருப்பதை கண்டு தான் அழுதார் பார்வதி. </p>
<p>&nbsp;</p>
<p>"என்னம்மா இப்படி இருக்கிற? உங்களுக்குள் என்ன நடந்தது என்று எனக்கு தெரியாது. அவரும் சொல்லவில்லை. தேவ் இதுவரை என்னிடம் பேசவில்லை. உன்னிடம் எல்லாம் கேட்டு தெரிந்து கொள்ளலாம் என்றுதான் வந்தேன். ஆனால் நீ ஏன் அம்மா இப்படி ஒளி இழந்து போய் இருக்கிறாய்? என்னால் இதை தாங்க முடியவில்லையே. இதற்கு காரணம் என் மகன் அல்லவா. </p>
<p>&nbsp;</p>
<p>ஒரு பெண்ணின் வாழ்க்கையை விளையாடிய ஒருவன் எனக்கு மகனே இல்லை. இனி அவனுடன் நான் பேசப் போவது இல்லை. அவன் ஏதோ தவறு செய்திருக்கிறான் என்று மட்டும் எனக்கு தெரிகிறது. அதனால் உன் வாழ்க்கை வீணாகிவிட்டது. அவனுக்காக நான் உன்னிடம் மன்னிப்பு கேட்கிறேன் அம்மா. </p>
<p>&nbsp;</p>
<p>நாங்கள் அவசரப்பட்டு உன் வாழ்க்கையை கெடுத்து விட்டோம்" என்று கதறி அழுதபடி கைகூப்பி அவளிடம் மன்னிப்பு வேண்டினார் பார்வதி. </p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p>- தொடரும்..</p>
<p>&nbsp;</p>
<p>- அருள்மொழி மணவாளன்..</p>]]></content:encoded>
						                            <category domain="https://onlinetamilnovels.com/community/%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b2%e0%af%88%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80-%e0%ae%85%e0%ae%b0%e0%af%81/">தொலைதூர வெளிச்சம் நீ - அருள்மொழி மணவாளன்</category>                        <dc:creator>Arulmozhi Manavalan</dc:creator>
                        <guid isPermaLink="true">https://onlinetamilnovels.com/community/topicid/331/</guid>
                    </item>
				                    <item>
                        <title>வெளிச்சம் - 41</title>
                        <link>https://onlinetamilnovels.com/community/topicid/330/</link>
                        <pubDate>Tue, 25 Aug 2026 13:50:10 +0000</pubDate>
                        <description><![CDATA[அத்தியாயம் 41 
&nbsp;
விஸ்வநாதனே புரிந்து கொண்டு விவாகரத்திற்கு ஏற்பாடு செய்யலாம் என்று சொன்னதும் நிம்மதி பெருமூச்சு விட்டான் மேகநாதன். 
&nbsp;
&quot;முதலில் நீங்கள் கொஞ்சம் அமைதியாக இருங்கள்...]]></description>
                        <content:encoded><![CDATA[<p>அத்தியாயம் 41 </p>
<p>&nbsp;</p>
<p>விஸ்வநாதனே புரிந்து கொண்டு விவாகரத்திற்கு ஏற்பாடு செய்யலாம் என்று சொன்னதும் நிம்மதி பெருமூச்சு விட்டான் மேகநாதன். </p>
<p>&nbsp;</p>
<p>"முதலில் நீங்கள் கொஞ்சம் அமைதியாக இருங்கள் விஸ்வநாதன். அனைத்தையும் செய்யத்தான் போகிறோம் அதனால் நீங்கள் கொஞ்சம் பொறுமையாக இருங்கள்" என்று விஸ்வநாதனிடம் சொல்லிவிட்டு, </p>
<p>"சாப்பாடு தயாராகி விட்டதா?" என்று மனைவியை பார்த்தார் சிவநேசன். அனைத்தையும் எடுத்து உணவு மேஜையில் வைத்து "சாப்பிடலாம் வாங்க" என்றார் சிவகாமியும். </p>
<p>&nbsp;</p>
<p>இருவரையும் சாப்பிட வரும்படி கூறி எழுந்த சிவநேசனிடம் "எனக்கு இப்பொழுது எதுவும் வேண்டாம்" என்றார் விஸ்வநாதன். </p>
<p>அவரை வலுக்கட்டாயமாக அழைத்து வந்து காலை உணவை கொடுத்து "எல்லாம் நம் கைமீறி போகிவிட்டது விஸ்வநாதன். அதை நினைத்து நாம் நம் உடல் நிலையை கெடுத்துக்க வேண்டாம். நன்றாக சாப்பிட்டு உடம்பை கவனித்துக் கொண்டால் தான் நடப்பவற்றை தாங்கிக் கொள்ள முடியும்" என்றார். </p>
<p>தாங்கள் பார்த்து பார்த்து செய்து வைத்த கல்யாணம் முடிவுக்கு வருவது நினைத்து அனைவருக்குமே அது வருத்தமாக தான் இருக்கிறது. ஆனால் வேறு வழி இல்லை. அனைத்தையும் ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும். மனதும் உடம்பும் தாங்க வேண்டும், அதற்காவது சிறிது சாப்பிட வேண்டும் என்று கூறி அனைவரையும் சாப்பிடும்படி கூறினார். </p>
<p>&nbsp;</p>
<p>ஆண்கள் சாப்பிட சிவனியாவிற்கு சாப்பாட்டை எடுத்துக் கொண்டு அவளது அறைக்கு சென்று விட்டார் சிவகாமி. அவள் உணவு உண்ண மறுக்க வற்புறுத்தி உணவை கொடுத்தார். </p>
<p>"இப்படியே இன்னும் எவ்வளவு நேரம் இங்கேயே உட்கார்ந்திருக்க போகிறாய்? எல்லோரும் வந்து இருக்கிறார்கள் அல்லவா! அவர்களிடம் பேச வேண்டாமா?" என்றார் மகளை பார்த்து. </p>
<p>&nbsp;</p>
<p>நான் அவர்களை எப்படி அம்மா பார்ப்பேன்?" என்று கலங்கினாள் சிவன்யா. </p>
<p>&nbsp;</p>
<p>"நீ ஏன் பயப்படுகிறாய்? நீ எந்த தவறும் செய்யவில்லை, தைரியமாக இரு. எல்லோரும் சாப்பிட்டு முடித்து இருப்பார்கள். நீ வெளியே வா" என்று அவளை வற்புறுத்தி அழைத்து வந்தார். </p>
<p>&nbsp;</p>
<p>சொன்னது போலவே அனைவரும் சாப்பிட்டு முடித்திருந்தனர். சிவன்யாவை பார்த்ததும் வேகமாக எழுந்து வந்த விஸ்வநாதன், அவளின் கையை பற்றி கொண்டு, </p>
<p>"சாரிமா, எனக்கு தேவ்வை பற்றி எதுவும் தெரியாது. நான் அவசரப்பட்டு உங்களுக்கு திருமணம் செய்து வைத்து விட்டேன். தவறும் முழுவதும் என்னுடையதுதான். தயவுசெய்து என்னை மன்னித்து விடுமா" என்று கூறி அவளது காலில் விழப் பார்த்தார். </p>
<p>&nbsp;</p>
<p>அவர் பேசிக்கொண்டு இருக்கும் பொழுது அனைவரும் எழுந்து அங்கு வந்து நின்றனர். கடைசியில் அவர் செய்யும் செயலில் சிவன்யா பயந்து விலகப் பார்க்க, மேகநாதன் அவரை கீழே விழாமல் பிடித்துக் கொண்டான். </p>
<p>&nbsp;</p>
<p>"என்ன செய்றீங்க அங்கிள்? அவள் சின்ன பிள்ளை, அவள் காலில் போய் விழப் போறீங்க?" என்றான் சற்று கோபமாக. </p>
<p>&nbsp;</p>
<p>அதற்குள் சிவகாமியோ பதறிவிட்டார். "ஏன்ண்ணா இப்படி செய்கிறீர்கள்? என்ன பாவம் செய்தோமோ, எங்கள் மகள் வாழ்க்கை இப்படி இருக்கிறது. அப்படி இருக்கும் பொழுது அவளது காலில் பெரியவர்களான நீங்க விழுந்து அதுவும் என் மகள் தலையில் தான் விழும்" என்று வாயை பொத்தி அழுதபடி கூறினார். </p>
<p>&nbsp;</p>
<p>"எனக்கு எப்படி மன்னிப்பு கேட்பது என்றே தெரியவில்லை, அதுதான்" என்ற விஸ்வநாதன், "மன்னிக்கும் படியான நிகழ்வுகள் உன் வாழ்க்கையில் நடக்கவில்லை மா. தயவுசெய்து எப்படியாவது எங்களை மன்னித்து விட்டு, இதை மறந்துவிடுமா" என்றார் வேதனையாக. </p>
<p>&nbsp;</p>
<p>"உங்கள் மீதும் என்ன தவறு? எல்லாம் நடக்க வேண்டும் என்று இருந்திருக்கிறது, அதான் நடந்து விட்டது" என்றாள் சோகமாக. தேவ் உடன் அவளுடைய வாழ்க்கை இனிமேல் இல்லை என்பதால் அவரை எப்படி அழைப்பது என்று தெரியாமல் வெறுமனே தன் வார்த்தையை முடித்துக் கொண்டாள். </p>
<p>&nbsp;</p>
<p>அதைப் புரிந்து கொண்ட விஸ்வநாதன் "நீயும் என்னை மேகநாதன் போல் அங்கிள் என்றே கூப்பிடுமா. இப்படி யாரோ ஒருவருடன் பேசுவது போல் பேசாதே" என்று மென்மையாக கூறிவிட்டு, </p>
<p>மேகநாதனிடம் "இங்கு உங்களுக்கு தெரிந்த வக்கீல் யாராவது இருந்தால் சொல்லுப்பா, போய் பார்ப்போம்" என்றார். </p>
<p>&nbsp;</p>
<p>மேகநாதனும் சிவநேசனும் தங்களுக்கு தெரிந்தவர்களிடம் பேசி சென்னையின் பிரபல வக்கீல் ஒருவரிடம் போகலாம் என்று முடிவு செய்தனர். அதன்படியே தியாகராஜ நகரில் இருந்த அவரது அலுவலகத்திற்குச் சென்று, தேவ் சிவன்யா திருமணம் பற்றி அனைத்தையும் கூறி, இன்று நடந்தது வரை அனைத்தையும் சொல்லி, </p>
<p>"இருவருக்கும் விவாகரத்துச் செய்யலாம் என்று முடிவு செய்து இருக்கிறோம். அதற்கு என்னென்ன செய்ய வேண்டும் என்று சொன்னீர்கள் என்றால் அதன்படியே நாங்களும் நடந்து கொள்வோம்" என்றார் விஸ்வநாதன். </p>
<p>&nbsp;</p>
<p>"இருவரும் ஒரு மனதாக பிரிய வேண்டும் என்று நினைப்பதால் விவாகரத்து கிடைத்துவிடும். ஆனால் குறைந்தது ஒரு வருடங்களாவது தனித்து வாழ்ந்திருக்க வேண்டுமென்று தான் சொல்வாங்க. ஆனால் தேவ் விஷயம் பற்றி யோசிக்கும் பொழுது விவாகரத்து சீக்கிரம் கிடைத்து விடும் என்று தான் தோன்றுகிறது" என்று கூறி இருவரிடமும் தேவையானவற்றை வாங்கி அன்றே நீதிமன்றத்தில் விவாகரத்திற்கு பதிவு செய்தனர் அவர்கள் வக்கீல். </p>
<p>&nbsp;</p>
<p>"எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் விவாகரத்து கிடைக்க ஏற்பாடு செய்கிறேன். தைரியமாக செல்லுங்கள். தேவ் இங்கு வருவது போல் இருக்கும். அவர் எப்பொழுது நேரில் வருவார் என்பதையும் கேட்டுச் சொல்லுங்கள்" என்று சொல்லி அவர்களை அனுப்பினார் வக்கீல். </p>
<p>&nbsp;</p>
<p>அனைத்தையும் முடித்துவிட்டு அவர்கள் வீட்டிற்கு வர சாயங்காலம் ஆகிவிட்டது. வந்ததும் இருவரும் குளித்து முடித்து உடனே ஊருக்கு கிளம்புவதாக கூற, இரவு உணவு உண்டு விட்டு செல்லும்படி கூறினார் சிவகாமி. </p>
<p>&nbsp;</p>
<p>அவரிடம் "இல்லம்மா உடனே கிளம்புகிறோம்" என்று தயக்கமாக கூறினார் விஸ்வநாதன். </p>
<p>&nbsp;</p>
<p>"பரவாயில்ல அங்கிள், உங்களுக்கு நான் டிக்கெட் போட்டுட்டேன். எட்டு மணிக்கு தான் ட்ரெயின். 7 மணிக்கு இங்க இருந்து கிளம்பினால் போதும். கொஞ்ச நேரம் ஓய்வெடுங்க" என்று சொல்லிவிட்டு, </p>
<p>"அம்மா, நீங்கள் அவர்களுக்கு இரவு உணவு தயார் செய்யுங்கள்" என்று கூறினான் மேகநாதன். </p>
<p>&nbsp;</p>
<p>சொன்னது போலவே 7:00 மணிக்கு அவர்களுக்கு இரவு உணவு கொடுத்து அவனே அழைத்துச் செல்ல தயாராக இருந்தான். காலையில் சிவன்யாவை பார்த்தது தான். சாயங்காலம் வந்ததிலிருந்து அவள் அறையில் இருந்து வெளியே வரவே இல்லை. </p>
<p>&nbsp;</p>
<p>தயக்கமாக "சிவன்யாவிடம் கொஞ்சம் பேசட்டுமா?" என்று சிவநேசனை பார்த்தார். அவரும் சரி என்று தலையாட்டி சிவன்யாவின் அறையை காண்பித்தார். </p>
<p>&nbsp;</p>
<p>சிவன்யாவின் அறைக் கதவைத் கட்டிக் கொண்டு, உள்ளே வந்த விஸ்வநாதன் கட்டிலில் சோகமாக அமர்ந்திருக்கும் சிவன்யாவை கண்டு வருந்தினார். </p>
<p>&nbsp;</p>
<p>இவரைப் பார்த்ததும் எழுந்து நின்ற சிவன்யாவிடம் "உட்காருமா" என்று அவளை கட்டிலில் உட்கார வைத்து, சற்று தள்ளி அவரும் அமர்ந்து கொண்டு, "நடந்ததை எல்லாம் மறந்து விட முயற்சி செய்ம்மா. நாங்கள் இன்று வக்கீலை பார்த்துவிட்டு வந்தோம். சீக்கிரம் உனக்கு இதிலிருந்து விடுதலை கிடைத்து விடும். அதன் பிறகு உன் விருப்பம் என்னவோ அதுபடி செய்ம்மா, எதற்கும் தயங்கி நிற்காதே. </p>
<p>&nbsp;</p>
<p>ஒரு பெண்ணின் வளர்ச்சிக்கு திருமணமோ விவாகரத்தோ தடைக்கல்லாக இருக்கக் கூடாது. உனக்கு மேலும் படிக்க வேண்டுமென்றால் படி. இல்லை, வேலைக்கு செல்ல வேண்டும் என்றால் செல். கொஞ்ச காலம் உன் மனதை மாற்றிக் கொண்டு அடுத்து நல்லதாக ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும்மா. அப்பொழுதுதான் எனக்கும் உங்க அத்.." அத்தைக்கும் என்று சொல்ல வந்து "பார்வதிக்கும் சங்கடம் இல்லாமல் இருக்கும். நிம்மதியாக இருப்போம், சரியா?" என்றார். </p>
<p>&nbsp;</p>
<p>படிப்பு வேலை எல்லாம் சரிதான். ஆனால் மற்றும் ஒரு திருமணமா? என்று பயந்தாள் சிவன்யா. </p>
<p>"இல்லை அங்கிள், எனக்கு கல்யாணம் எல்லாம் வேண்டாம்" என்று தரையைப் பார்த்துக் கொண்டு கூறினாள் சிவன்யா. </p>
<p>&nbsp;</p>
<p>அவரும் பெருமூச்சு விட்டு "இப்பொழுது அதைப் பற்றி பேச வேண்டாம் சிவன்யா. முதலில் மேற்கொண்டு படிக்க வேண்டும் என்றால் படி, இல்லையென்றால் வேலைக்கு செல்ல வேண்டும் என்றாலும் வேலைக்கு போ. இப்படியே வீட்டுக்குள் அடைந்து கிடைக்காதே, வெளியே சென்று அனைவருடனும் பழகினால் தான் தேவையில்லாதவற்றையெல்லாம் மறக்க முடியும், சரியா?" என்று சொல்லிவிட்டு, </p>
<p>&nbsp;</p>
<p>"நாங்கள் இன்று ஊருக்கு கிளம்புகிறோம். இனி வக்கீல் எப்பொழுது வர சொல்கிறாரோ அப்பொழுதுதான் வருவேன். நீ உன்னை நன்கு கவனித்துக் கொள்மா. நன்றாக சாப்பிடு, கண்டதையும் யோசிக்காமல் நன்கு தூங்கி ஓய்வெடு. அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று தெளிவாக சிந்தித்து செயல்படு. </p>
<p>&nbsp;</p>
<p>உனக்கு இனிமேல் எல்லாம் நல்லபடியாக நடக்க வேண்டும் என்று நானும் பார்வதியும் என்றைக்கும் இறைவனிடம் வேண்டிக் கொண்டே இருப்போம்" என்று அவள் தலையில் கை வைத்து ஆசீர்வதித்தார் விஸ்வநாதன். </p>
<p>&nbsp;</p>
<p>அவர் இன்றே கிளம்புவதாக கூறியதும் நளினிக்காக வாங்கி வந்தவற்றையெல்லாம், "இது நான் நளினிக்காகவும் உங்களுக்காகவும் வாங்கியது என்று" அவரிடம் கொடுத்தாள். </p>
<p>&nbsp;</p>
<p>அவர் அதை மறுக்கவில்லை. கண்களில் கண்ணீருடன் அதை வாங்கிக் கொண்டார். எவ்வளவு ஆசையாக அனைத்தையும் வாங்கி இருப்பாள் என்று அவருக்கு தெரியும். எப்படிப்பட்ட சூழ்நிலையில் இப்பொழுது இதை கொடுக்கிறாள் என்றும் தெரியும். </p>
<p>&nbsp;</p>
<p>"கண்டிப்பாக நான் இதை நளினியிடம் கொடுக்கிறேன். ஆனால் என்னால் நளினியிடமும் பார்வதியிடமும் தேவ்வை பற்றி, இப்பொழுது சொல்ல முடியுமா என்று தெரியவில்லைம்மா" என்றார் கண்களில் கண்ணீருடன். </p>
<p>&nbsp;</p>
<p>"பரவாயில்லை, அவர்களிடம் எதையும் சொல்லத் தேவையில்லை. ஆண்டியை பார்த்துக்கோங்க" என்றாள் வெறுமையாக. </p>
<p>&nbsp;</p>
<p>"சரி மா, நீயும் கவனமாக இரு. தெளிவான முடிவெடு" என்று சொல்லிவிட்டு "நாங்கள் கிளம்புகிறோம்" என்று கூறி அவளிடம் விடைபெற்றார் விஸ்வநாதன். </p>
<p>&nbsp;</p>
<p>- தொடரும்..</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p>- அருள்மொழி மணவாளன்..</p>]]></content:encoded>
						                            <category domain="https://onlinetamilnovels.com/community/%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b2%e0%af%88%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80-%e0%ae%85%e0%ae%b0%e0%af%81/">தொலைதூர வெளிச்சம் நீ - அருள்மொழி மணவாளன்</category>                        <dc:creator>Arulmozhi Manavalan</dc:creator>
                        <guid isPermaLink="true">https://onlinetamilnovels.com/community/topicid/330/</guid>
                    </item>
				                    <item>
                        <title>வெளிச்சம் - 40</title>
                        <link>https://onlinetamilnovels.com/community/topicid/303/</link>
                        <pubDate>Wed, 12 Aug 2026 17:33:55 +0000</pubDate>
                        <description><![CDATA[அத்தியாயம் 40 
&nbsp;
விஸ்வநாதன் வந்திருப்பதைப் பற்றி சிவன்யாவிடம் சொல்லிவிட்டு &quot;எப்படியும் அவர்கள் உன்னிடம் பேச வேண்டும் என்று தான் சொல்வார்கள் சிவன்யா. தைரியமாக பேசு. மனதில் இருப்பதை தெள...]]></description>
                        <content:encoded><![CDATA[<p>அத்தியாயம் 40 </p>
<p>&nbsp;</p>
<p>விஸ்வநாதன் வந்திருப்பதைப் பற்றி சிவன்யாவிடம் சொல்லிவிட்டு "எப்படியும் அவர்கள் உன்னிடம் பேச வேண்டும் என்று தான் சொல்வார்கள் சிவன்யா. தைரியமாக பேசு. மனதில் இருப்பதை தெளிவாக சொல்லிவிடு, சரியா?" என்று சொல்லிவிட்டு ஆறிப்போன காபியை எடுத்துக்கொண்டு வெளியே சென்றான் மேகநாதன். </p>
<p>&nbsp;</p>
<p>சிவன்யாவின் அறையை விட்டு மேகநாதன் வரவும், தங்களது ஓய்வறையை விட்டு விஸ்வநாதன் வெளியே வரவும் சரியாக இருக்க, சோபாவில் அமர்ந்திருந்த சிவநேசன், விஸ்வநாதனை தர்மசங்கரத்துடன் பார்த்து எழுந்து "வாங்க" என்று வரவேற்றார்.  </p>
<p>&nbsp;</p>
<p>தங்களது பிள்ளைகள் வாழ்க்கையில் நடந்த ஏதோ ஒரு வேண்டாத சம்பவம் பெரியவர்களுக்குள் பேசுவதற்கு தடையாக இருந்தது. "ஆமாம் சம்மந்தி" என்று சொல்லிக்கொண்டு எதிரில் இருந்த சோபாவில் அமர்ந்தார் விஸ்வநாதன். </p>
<p>&nbsp;</p>
<p>"சம்மந்தி என்று சொல்வதை முதலில் விடுங்கள் அங்கிள்" என்றான் மேகநாதன், தந்தையின் அருகில் அமர்ந்து கொண்டே. </p>
<p>&nbsp;</p>
<p>மாமா என்று இதுவரை அழைத்துக் கொண்டிருந்தவன் இப்பொழுது அங்கிள் என்று மூன்றாம் நபர் போல் அழைப்பதை கவனத்தில் கொண்ட விஸ்வநாதன், "அப்படி இல்லை தம்பி, ஏதோ ஒரு சிறு மனஸ்தவம் தானே. நாம் பேசி புரிய வைக்கலாம். தேவ் என்ன தவறு செய்தான் என்று சொல்லுங்கள், அவனை எப்படியாவது திருத்த முயற்சி செய்கிறேன்" என்றார் ஒரு தந்தையாக தன் மகனால் ஒரு பெண்ணின் வாழ்க்கை வீணாவதை தடுக்கும் பொருட்டு. </p>
<p>&nbsp;</p>
<p>"இது பேசி புரிய வைக்கும் விசயம் இல்லை விஸ்வநாதன்" என்றார். </p>
<p>&nbsp;</p>
<p>விஸ்வநாதனா! என்று அதிர்ச்சியாக பார்த்தார் விஸ்வநாதன். </p>
<p>ஏற்கனவே அப்பா அவரை சம்மந்தி என்று கூப்பிடாமல் பெயர் சொல்லி கூப்பிட்டது ஆச்சரியமாக தந்தையை பார்த்துவிட்டு, எதிரில் இருந்த விஸ்வநாதனை பார்த்தான் மேகநாதன். </p>
<p>&nbsp;</p>
<p>அவரின் அதிர்ந்த முகத்தை கண்டதும் அவரும் இதை எதிர்பார்க்கவில்லை என்று புரிந்து கொண்டான். ஆனால் இனி அதுதானே உண்மை என்று நினைத்து, "அப்பா சொன்னது உண்மைதான் அங்கிள். இது பேசி புரிய வைக்கும் விஷயம் அல்ல, உங்கள் மகனுக்கு சிவன்யாவை பிடிக்கவில்லையாம். ஜோவைதான் பிடித்திருக்கிறதாம்" என்றான் வெறுமையான குரலில். </p>
<p>&nbsp;</p>
<p>அவன் சொன்னதை கேட்டதும், ஜோவுடன் தன் மகன் நண்பனாக இருப்பது சிவன்யாவிற்கு பிடிக்கவில்லை போல என்று புரிந்து கொண்டு, "அவன் சொன்னால் புரிந்து கொள்வான் தம்பி. அங்கு தனியாக இருக்கும் போது உதவியதால் அவன் பிரண்டுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம். அது தவறுதான், இருந்தாலும் அவனிடம் நான் பேசுகிறேன்" என்றார் மொட்டையாக. </p>
<p>&nbsp;</p>
<p>மேகநாதனும் சிவநேசனும் முறைச்சொல்லி கூப்பிடாத போது தான் மட்டும் எப்படி சம்பந்தி மாப்பிள்ளை என்று கூப்பிடுவதற்கு சங்கடமாக இருந்தது. </p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p>அவர் பேசியதும் விரக்தியாக சிரித்தான் மேகநாதன். "உங்களுக்கு புரியல அங்கிள்" என்று சொல்லிவிட்டு நளினியின் கணவனை பார்த்து, "தேவ்வும் ஜோவும் ரிலேஷன்ஷிப்ல இருக்காங்க" என்று கூறி "இது உங்களுக்காவது புரிகிறதா?" என்று அவன் முகம் பார்த்தான். </p>
<p>&nbsp;</p>
<p>அதைக் கேட்டதும் அவனுக்கு அதிர்ச்சியாகி விட்டது. தலையை புரிகிறது என்று ஆட்டினாலும் "என்ன சொல்றீங்க?" என்ற வார்த்தை அவன் வாயில் அதிர்ச்சியாக வந்தது. </p>
<p>&nbsp;</p>
<p>ஆமாம் என்று தலையாட்டிய மேகநாதன், சிவன்யா கூறிய அனைத்தையும் கூறி "அவர்கள் இருவரும் அமெரிக்காவுக்குச் சென்று திருமணம் செய்து கொள்ள போகிறார்களாம். நீங்களே சொல்லுங்கள் ஒரு பெண் இரு ஆண்களை அந்த நிலைமையில் பார்த்த பிறகு அவளால் அங்கு இருக்க முடியுமா?" என்று வேதனையா கவலையா கோவமா என்று பிரித்துப் பார்க்க முடியாத உணர்வில் கேட்டான் மேகநாதன். </p>
<p>&nbsp;</p>
<p>நளினியின் கணவன் தன் மாமனாரை பார்க்க, அவரோ அதிர்ந்து அமர்ந்து இருந்தார். "என்ன சொல்றீங்க சம்மந்தி?" என்று நடுங்கும் குரலில் கேட்டார்.  </p>
<p>நெற்றியில் வியர்வை துளிகள் உருவாக தன் கைக்குட்டையால் முகத்தை ஒற்றி எடுத்துக் கொண்ட "என்னால் புரிஞ்சுக்க முடியலையே!" என்றார் படபடப்பாக. </p>
<p>&nbsp;</p>
<p>அவரின் நிலையை பார்த்ததும் சிவநேசனுக்கு கவலையாகி விட்டது. "இங்கே பாருங்க விஸ்வநாதன். டென்ஷன் ஆகாதீங்க" என்று எழுந்து அவர் அருகில் அமர்ந்து நடுங்கும் அவர் கையை இறுக்கமாக பிடித்துக் கொண்டார். </p>
<p>&nbsp;</p>
<p>ஆண்கள் பேசிக்கொண்டு இருக்கும் பொழுது, தாம் சென்றால் சங்கடமாக இருக்கும் என்று சமையல் அறையிலேயே நின்று, இவர்கள் பேசுவதை கவனித்து கொண்டிருந்த சிவகாமி விஸ்வநாதனின் நடுக்கத்தை பார்த்து விட்டார். வேகமாக தண்ணீரை எடுத்துக் கொண்டு வந்து கணவனிடம் கொடுத்து, "கொஞ்சம் குடிக்க சொல்லுங்க" என்றார். </p>
<p>&nbsp;</p>
<p>மேகநாதனுக்கும் அவரின் நிலைமை புரிந்தது. நளினியின் கணவன் மாமனின் நிலையை கண்டு பயந்துவிட்டான். "மாமா, என்னாச்சு மாமா?" என்று அவரின் முதுகை தடவி விட்டான். </p>
<p>&nbsp;</p>
<p>"அங்கிள் டென்ஷன் ஆகாதீங்க, ரிலாக்ஸா இருங்க" என்று பதட்டமாக கூறிய மேகநாதன், தந்தை சொன்னது போல் பொறுமையாக அவரிடம் பேசி இருக்கலாம். தாம் அவசரப்பட்டு விஷயத்தை நேரடியாக சொன்னது தவறோ என்று உணர்ந்து, "சாரி அங்கிள், இதை எப்படி உங்களிடம் பொறுமையாக சொல்வது என்று எனக்கு தெரியவில்லை. பாதிக்கப்பட்டிருப்பது சிவன்யாவின் வாழ்க்கை என்ற ஆதங்கத்தில் உங்களிடம் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் நாங்கள் இருக்கிறோம். ப்ளீஸ் ரிலாக்ஸ் ஆக புரிஞ்சுக்க முயற்சி பண்ணுங்க" என்று கவலையாக அவரின் முகம் பார்த்தான். </p>
<p>&nbsp;</p>
<p>கொஞ்சம் கொஞ்சமா தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்ட விஸ்வநாதன் "சம்பந்தி நீங்க சொன்னதெல்லாம் உண்மைதானா" என்றார் சிவநேசனின் முகத்தைப் பார்த்துக் கொண்டே. </p>
<p>அவரும் ஆமாம் என்று தலையை மட்டும் ஆட்டினார். விஸ்வநாதனின் கண்களில் கண்ணீர் வடிந்தது. அவருக்கு இதை எப்படி எடுத்துக் கொள்வது என்று தெரியவில்லை. </p>
<p>&nbsp;</p>
<p>இதுபோல் எத்தனையோ செய்திகளை தொலைக்காட்சியில் பார்த்திருக்கிறார், கேட்டிருக்கிறார். அப்பொழுதெல்லாம் இயற்கைக்கு மாறாக இப்படி இருப்பதை சட்டமும் சரி என்கிறதே என்று நினைப்பார். ஆனால் தங்கள் குடும்பத்தில் தன் மகனே இப்படி இருப்பதை கேட்டதும் அவருக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. சிறிது நேரம் அப்படியே அமைதியாக கண்களின் மூடி அமர்ந்து விட்டார். </p>
<p>&nbsp;</p>
<p>படித்தவரால் நடந்த நிலைமையை புரிந்து கொள்ள முடிந்தது. இயற்கைக்கு மாறாக நடப்பது தவறுதான் என்று அவருக்கு தெரிந்தாலும் அதை தடுக்கும் இடத்தில் அவர் இப்பொழுது இல்லை. </p>
<p>&nbsp;</p>
<p>தன் மகனா என்று நினைத்து வருந்தினார். எப்படி அவனை நான் கவனிக்காமல் விட்டுவிட்டேன்? ஊரில் உள்ள பிள்ளைகளுக்கு எல்லாம் ஒழுக்கமாக வாழ வேண்டும் என்று பாடம் நடத்தினேன். என் பிள்ளை இப்படி ஒரு தவறை செய்திருக்கிறானே என்றும் வருந்தினார். </p>
<p>&nbsp;</p>
<p>அது தவறு இல்லை என்று சட்டம் சொன்னாலும் அதை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் பலரைப் போல் அவரும் இல்லை. </p>
<p>&nbsp;</p>
<p>இது ஹார்மோன் செயல்பாடல் நடந்தது என்றாலும் கொஞ்சம் அவன் கவனமாக இருந்திருக்கலாமோ என்றும் எண்ணம் ஓடியது. அவனது நிலைமை மற்றும் சட்டம் என்று அனைத்தும் அவரது அறிவுக்கு தெரிந்தது ஆனால் அவரது மனமோ இதை ஏற்றுக்கொள்ள மறுத்தது. </p>
<p>&nbsp;</p>
<p>ஒரு ஆணும் பெண்ணும் திருமணம் செய்து இல்வாழ்க்கையில் இணைவது அடுத்த தலைமுறை உருவாக்கத்தான். அந்த வாழ்க்கைச் சங்கலியை முறிப்பது போல் இப்படி நடக்கிறது என்று வருந்தினார். </p>
<p>&nbsp;</p>
<p>கொஞ்சம் கொஞ்சமாக அவரது மனதை அறிவு ஆட்சி செய்ய ஆரம்பித்தது. இனியும் அவனுக்காக வருந்துவது பயனில்லை என்பதை உணர்ந்தார். நல்ல வேளையாக இப்பொழுதாவது தெரிந்ததே! சிவன்யாவின் வாழ்க்கையாவது இனிமேல் நிம்மதியாக இருக்கட்டும். </p>
<p>&nbsp;</p>
<p>தேவ் சொன்னது போல் உடனே விவாகரத்துக்கு ஏற்பாடு செய்வோம் என்று நினைத்து தன்னை தெளிவு படுத்திக் கொண்டார். கண்மூடி அமர்ந்திருந்த விஸ்வநாதனின் கன்னங்களில் வடிந்த கண்ணீரே அவரின் மனப்போராட்டத்தை மற்றவர்களுக்கு உணர்த்தியது. </p>
<p>&nbsp;</p>
<p>அவராகவே சமாளித்துக் கொள்ளட்டும் என்று அனைவரும் அமைதியாக அமர்ந்திருந்தனர். சிவகாமிக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. ஒருவேளை அவருக்கு உடம்புக்கு முடியாமல் போய்விட்டால் என்ன செய்வது என்று வருத்தமாக சமையலறை வாயிலில் இருந்து இவர்களையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தார். </p>
<p>&nbsp;</p>
<p>தன்னை தானே சமாதானப்படுத்திக் கொண்ட விஸ்வநாதன் மெதுவாக கண்களை திறந்தார். சிவநேசனின் கைகளை பிடித்துக் கொண்டு, "நடந்தது அனைத்திற்கும் நான் உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் சிவநேசன். தேவ் செய்த தவறுகளுக்காக தயவு செய்து எங்களை மன்னித்து விடுங்கள். </p>
<p>&nbsp;</p>
<p>எங்கள் மீதும் தவறுதான், நல்ல குடும்பத்தில் சம்பந்தம் வைத்தால் மகன் நலமாக வாழ்வான் என்று நினைத்தேனே தவிர, அவனுக்கு பிடித்திருக்கிறதா என்று ஒரு வார்த்தை கூட கேட்க தவறிவிட்டேன். என் தவறால் இன்று சிவன்யா இப்படி ஒரு நிலைமை வந்துவிட்டது. அதை நானே சரி செய்கிறேன்" என்று தன் கன்னங்களை துடைத்துக் கொண்டு மேகநாதன் பார்த்தார். </p>
<p>&nbsp;</p>
<p>அவனும் அவரை பார்த்துக் கொண்டு இருக்க "உடனே விவாகரத்திற்கு ஏற்பாடு செய்யுங்கள் மேகநாதன். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் விவாகரத்து செய்து விடலாம், அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று பாருங்கள். எங்கள் தரப்பில் இருந்து என்னென்ன வேண்டுமோ அனைத்தையுமே நான் உடனே செய்கிறேன். முடிந்தால் இன்றே ஒரு வக்கீலை பார்ப்போம்" என்று உறுதியாக கூறினார் விஸ்வநாதன். </p>
<p>&nbsp;</p>
<p>- தொடரும்.. </p>
<p>&nbsp;</p>
<p>- அருள்மொழி மணவாளன்..</p>]]></content:encoded>
						                            <category domain="https://onlinetamilnovels.com/community/%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b2%e0%af%88%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80-%e0%ae%85%e0%ae%b0%e0%af%81/">தொலைதூர வெளிச்சம் நீ - அருள்மொழி மணவாளன்</category>                        <dc:creator>Arulmozhi Manavalan</dc:creator>
                        <guid isPermaLink="true">https://onlinetamilnovels.com/community/topicid/303/</guid>
                    </item>
				                    <item>
                        <title>வெளிச்சம் - 39</title>
                        <link>https://onlinetamilnovels.com/community/topicid/302/</link>
                        <pubDate>Wed, 12 Aug 2026 17:27:59 +0000</pubDate>
                        <description><![CDATA[அத்தியாயம் 39
&nbsp;
சிவன்யா சென்னைக்கு வந்திருப்பதாக கேள்விப்பட்டதும் மகிழ்ச்சியாக வீட்டிற்கு வந்த நளினிக்கு, அங்கு சோகமாக அமர்ந்திருக்கும் தன் தாயைக் கண்டு குழப்பமாகியது. 
&quot;என்னாச்சும்ம...]]></description>
                        <content:encoded><![CDATA[<p>அத்தியாயம் 39</p>
<p>&nbsp;</p>
<p>சிவன்யா சென்னைக்கு வந்திருப்பதாக கேள்விப்பட்டதும் மகிழ்ச்சியாக வீட்டிற்கு வந்த நளினிக்கு, அங்கு சோகமாக அமர்ந்திருக்கும் தன் தாயைக் கண்டு குழப்பமாகியது. </p>
<p>"என்னாச்சும்மா? அண்ணி வந்திருக்காங்கன்னு இவர் சொன்னார், ஆனால் நீங்கள் கவலையாக உட்கார்ந்திருக்கிறீர்கள்!" என்று அவரின் அருகில் அமர்ந்தாள். </p>
<p>&nbsp;</p>
<p>அவளின் கேள்வியை வைத்தே, அவளிடம் இன்னும் எதுவும் சொல்லவில்லை என்பதை புரிந்து கொண்டார். "ஒன்னும் இல்லமா, தனியாக வந்திருக்கிறாள் அதுதான் கவலையாக இருக்கிறது" என்று மகளிடம் சொல்லிவிட்டு "வாங்க மாப்பிள்ளை" என்று மருமகனையும் வரவேற்றார். </p>
<p>&nbsp;</p>
<p>அவர்கள் வந்து சிறிது நேரத்திலேயே விஸ்வநாதனும் வந்துவிட, வந்ததும் வேகமாக சென்னை செல்வதற்கு கிளம்ப ஆயத்தமானார். </p>
<p>அவரிடமும் நளினி "அப்பா, அண்ணியை பார்க்க நானும் வருகிறேன் அப்பா" என்று ஆரம்பிக்க, </p>
<p>"நீ இப்பொழுது பயணம் செய்ய வேண்டாம்மா. நானும் மாப்பிள்ளையும் முதலில் போய் வருகிறோம்" என்று சொல்லிவிட்டு உடனே அங்கிருந்து கிளம்பினார்கள். </p>
<p>&nbsp;</p>
<p>புகை வண்டியில் செல்லலாம் என்று நளினியின் கணவன் எவ்வளவு கூறியும், "இரவு 8 மணிக்கு மேல் தான் ட்ரெயின் இருக்கு மாப்பிள்ளை, இப்பவே போனோம்னா ஏதாவது பஸ் புடிச்சு புடிச்சு சீக்கிரம் போயிடலாம்" என்று அவரை அவசரப்படுத்தி, முதலில் மதுரை செல்லும் பஸ்ஸில் ஏறி அமர்ந்தார்கள். </p>
<p>அதுபோல் மதுரை வந்ததும் அங்கிருந்து உடனே நேரடியாக சென்னைக்குச் செல்லும் பஸ் ஏறிவிட, கிட்டத்தட்ட பத்து மணி நேரம் பயணம் செய்து காலை 3 மணி அளவில் சென்னை வந்து விட்டார்கள். அங்கிருந்து உடனே ஆட்டோ பிடித்து சிவன்யா வீட்டிற்கு வந்து விட்டார்கள்.  </p>
<p>&nbsp;</p>
<p>வீட்டிற்கு வந்த பிறகுதான் சிறிது நேரம் பேருந்து நிலையத்திலேயே இருந்து விட்டு வந்திருக்கலாமோ! இன்னும் விடிய கூட இல்லையே! இப்பொழுதே வந்து விட்டோமே என்று வருந்தினார் விஸ்வநாதன். </p>
<p>வீட்டு வாசல் வரை வந்து விட்டு இப்பொழுது யோசித்து பயனில்லை என்று வீட்டின் அழைப்பு அணியை அழுத்தினார். சிறிது நேரத்திலேயே கதவு திறக்கப்பட்டது. </p>
<p>&nbsp;</p>
<p>அங்கு நின்றிருந்தவர்களை இந்நேரத்தில் எதிர்பார்க்காத மேகநாதன், அவர்களை குழப்பமாக பார்த்து "வாங்க" என்று வரவேற்று, "இவ்வளவு காலையிலேயே வந்து விட்டீர்கள்!" என்று முகத்தில் எந்தவித உணர்வும் இல்லாமல் கேட்டான். </p>
<p>&nbsp;</p>
<p>அவன் பேசுவதில் ஒட்டாத தன்மை இருப்பதைக் கண்ட விஸ்வநாதன் வருந்தி, "இல்ல தம்பி, அது வந்து, சிவன்யா" என்று தயங்கினார். </p>
<p>&nbsp;</p>
<p>என்னதான் தேவ்வின் மீது அவனுக்கு கோவம் இருந்தாலும், வயதானவரிடம் அதை காண்பிக்க அதனால் முடியவில்லை. "சரி, ரொம்ப தூரம் பயணித்து வந்திருக்கீங்க. கொஞ்ச நேரம் ஓய்வெடுங்க. எல்லோரும் தூங்கிக்கிட்டு தான் இருக்காங்க. விடிந்ததும் எல்லாவற்றையும் பேசிக்கலாம்" என்று அங்கிருந்த ஒரு அறையை காண்பித்து, இருவரையும் சிறிது நேரம் ஓய்வு எடுக்கும்படி சொல்லி, அவர்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுத்து, அப்படியே ஹாலில் வந்து அமர்ந்து விட்டான். </p>
<p>&nbsp;</p>
<p>சிவன்யா வந்ததிலிருந்து அவள் அறையை விட்டு வெளியே வரவே இல்லை. ஏதாவது பேசினாலே உடனே அழுது விடுகிறாள். சிவநேசன் அவளிடம் இப்போது எதையும் பேச வேண்டாம் என்று சொன்னதால், தாயும் மகனும் அவளிடம் எதைப் பற்றியும் பேசுவது இல்லை. சிவகாமி மகளுக்கு வேளாவேளைக்கு உணவு கொடுக்க, அதையும் சாப்பிட மறுத்தாள் சிவன்யா. </p>
<p>&nbsp;</p>
<p>அதட்டி உருட்டி அவளை எப்படியாவது சாப்பிடு வைத்து விடுவார் சிவகாமி. அவளாகவே நடந்தவற்றில் இருந்து வெளியே வரட்டும் என்று வீட்டில் இருந்தவர்களுக்கு அமைதியாக இருந்தனர். </p>
<p>மகளின் முன் தங்கள் சோகத்தை காண்பிக்காமல் இருந்தாலும், அவர்களும் மகளின் வாழ்க்கையை நினைத்து கவலை இருந்தது. அதை நினைத்து அவர்கள் உறக்கமும் போக, மகள் வந்து இரண்டு நாளிலேயே ஐந்து வயது கூடியது போல் ஆகிவிட்டனர் அவளது பெற்றவர்கள். </p>
<p>அதை பார்த்து கவலை பட்ட மேகநாதன் முதலில் அவர்கள் நன்றாக உறங்கட்டும் என்று, நேற்று இரவு அவர்கள் குடிக்கும் பாலில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து விட்டான். மாத்திரையின் விளைவாக சிவநேசனும் சிவகாமியும் நன்கு உறக்கத்தில் இருக்கும் பொழுது தான், விஸ்வநாதனும் அவர் மருமகனும் வந்திருக்கிறார்கள். </p>
<p>&nbsp;</p>
<p>இப்பொழுது பெற்றோரின் உறக்கத்தை கெடுக்க முடியாது. ஆகையால் வந்திருப்பவர்களை சிறிது நேரம் ஓய்வு எடுக்க அனுப்பிவிட்டான். விடிந்ததும் அவர்கள் சிவன்யாவை பார்ப்பார்கள். அவள் இவர்களை எப்படி எதிர்கொள்வாள். பார்த்த பிறகு எந்த நிலைமையில் இருப்பாள் என்று தெரியவில்லையே. அடுத்து என்ன முடிவு எடுப்பது என்று யோசனையோடு, ஹாலிலேயே அமர்ந்து விட்டான் மேகநாதன். </p>
<p>&nbsp;</p>
<p>விஸ்வநாதனுக்கும் பயணப்பட்டு வந்தது அலுப்பாக இருக்க, மேகநாதன் படுக்கச் சொன்னதும் உறக்கம் வருமா என்று யோசனையோடு தான் படுத்தார். ஆனால் அசதியில் நன்றாகவே உறங்கி விட்டார். </p>
<p>&nbsp;</p>
<p>சிவகாமியும் அவராக கண் விழிக்கும் போது மணி ஆறைக் கடந்து விட்டது. கண்களை கசக்கி 'என்ன? இன்று இவ்வளவு நேரம் உறங்கி விட்டோம்' என்று கணவனை பார்க்க, அவரும் உறங்கிக் கொண்டு இருந்தார். </p>
<p>பின்னர் எழுந்து தன் காலை வேலைகளை முடித்துக் கொண்டு வெளியே வர, ஹாலில் இருந்த பெரிய சோபாவில் மேகநாதன் படுத்து உறங்கிக் கொண்டு இருந்தான். </p>
<p>"என்ன இவன். ஹாலிலேயே உறங்குகிறான். அவனது அறைக்கும் சொல்லவில்லையா? என்று நினைத்துக் கொண்டு,‌ "மேக.." என்று முழுப்பெயர் சொல்வதற்குள்ளாக, அவன் கண் விழித்து பார்த்தான்.</p>
<p>&nbsp;</p>
<p>"என்னம்மா? அதுக்குள்ள எந்திரிச்சிட்டிங்க. இன்னும் கொஞ்ச நேரம் தூங்க வேண்டியதுதானே" என்று எழுந்து சோம்பல் முறித்துக் கொண்டே கேட்டான். </p>
<p>&nbsp;</p>
<p>"நீயேன்ப்பா இங்கேயே படுத்து விட்டாய். அறைக்குச் சென்று நன்றாக உறங்கி இருக்கலாமே!" </p>
<p>"சும்மா இங்கே உட்கார்ந்து இருந்தேன்ம்மா. அப்படியே உறக்கம் வந்துவிட்டது" என்று சொல்லிவிட்டு அவனது அறைக்குச் சென்று. வேகமாக காலை வேளைகளை முடித்து, குளித்துவிட்டு வந்தான். அவன் வந்ததும் சிவநேசனும் வர, இருவதற்கும் குடிப்பதற்கு காபியை கொடுத்துவிட்டு, சிவன்யா அறைக்கு சென்றார் சிவகாமி. </p>
<p>&nbsp;</p>
<p>அவளும் விழித்து தான் இருந்தாள். கட்டில் சாய்ந்து கால் நீட்டி உட்கார்ந்து, எங்கோ இலக்கில்லாமல் பார்த்து தொண்டு இருந்தாள். அவள் முகமே அவள் சரியாக உறங்கவில்லை என்று கூறியது. மகளின் தலையை மென்மையாக கோதிவிட்டு, "காபி குடி டா" என்று கொடுத்தார். பதில் ஏதும் கூறாமல் தாயின் கையில் இருந்த கப்பை வாங்கிக் கொண்டாள் சிவன்யா.  </p>
<p>&nbsp;</p>
<p>ஏதோ இந்த மட்டம் காபியையாவது மறுக்காமல் வாங்கிக் கொண்டாளே என்று நினைத்துக் கொண்டு வெளியேறினார் சிவகாமி. </p>
<p>அவர் ஹாலுக்கு வந்ததும் "தேவ்வோட அப்பாவும் மச்சானும் வந்திருக்கிறார்கள்" என்றான் மேகநாதன் பொதுவாக. </p>
<p>&nbsp;</p>
<p>பெற்றோர் இருவரும் அவனே பார்க்க, </p>
<p>"என்னப்பா சொல்ற? எப்ப வந்தாங்க?" என்றார் சிவநேசன்.  </p>
<p>&nbsp;</p>
<p>"விடியற்காலையில் வந்தார்கள். கொஞ்ச நேரம் ஓய்வு எடுங்கள் என்று சொல்லி இருக்கிறேன்" என்று அவர்கள் இருக்கும் அறையைப் பார்த்தான். . </p>
<p>&nbsp;</p>
<p>ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்த இருவரும் ஹாலில் இவர்கள் பேசும் சத்தம் கேட்டு எழுந்தனர். வேகமாக காலைக்கடன்களை முடித்துதனர் இருவரும்.</p>
<p>&nbsp;</p>
<p>வந்தவர்களுக்கு உணவு சமைப்பதற்காக சிவகாமி சென்றுவிட, தந்தையும் மகனும் விஸ்வநாதனிடம் என்ன பேசுவது என்று கலந்தாலேசித்துக் கொண்டு இருந்தனர். </p>
<p>&nbsp;</p>
<p>"அப்பா, நீங்கள் அவர்களிடம் முடிவாக சொல்லிவிடுங்கள். விரைவாக விவாகரத்திற்கு ஏற்பாடு செய்வோம்" என்றான்.  </p>
<p>&nbsp;</p>
<p>"டேய் பொறுமையாக சொல்லலாம்" </p>
<p>"என்ன பொறுமையாக அப்பா? தங்கச்சியோட வாழ்க்கையை நினைத்துப் பாருங்கள்" என்றான் சற்று கோபமாக.  </p>
<p>"அவரும் வயதானவர்ப்பா, இத்தனை தூரம் டிராவல் பண்ணி வந்திருக்கிறார். கொஞ்சம் யோசித்து பொறுமையா சொல்லலாம் என்று தாண்டா சொல்றேன்" </p>
<p>"போதும்ப்பா, யார்யாருக்காகவும் யோசித்து யோசித்து செய்ததெல்லாம் போதும். சிவன்யா நிலைமையும் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். இதற்கு மேலும் என்ன பொறுமை வேண்டி கிடக்கு. அவரது மகனை பற்றி அனைத்தையுமே சொல்லி விடுங்கள் ப்ளீஸ். உங்களால் முடியவில்லை என்றால் சொல்லுங்கள், நான் பேசிக் கொள்கிறேன்" என்றான்.  </p>
<p>&nbsp;</p>
<p>சிவன்யா வந்ததில் இருந்து. எதற்கெடுத்தாலும் கோபமாகவே பேசிக் கொண்டிருக்கிறான் மேகநாதன். அவனிடம் விஷயத்தை சொல்லச் சொன்னால் படபடவென்று எதையாவது சொல்லி, அவருக்கு ஏதாவது ஆகிவிட்டால் என்ன செய்வது என்று யோசித்த சிவநேசன், "சரி சரி, நீ ரொம்ப டென்ஷன் ஆகாத. நானே சொல்றேன். நீ முதலில் போய் சிவன்யாவிடம் அவர்கள் வந்திருப்பதை சொல்லிவிட்டு வா" என்றார் சிவனேசன்.  </p>
<p>&nbsp;</p>
<p>"ம்ம்" என்று பெருமூச்சு விட்ட மேகநாதன் "என்னமோ பண்ணுங்க" என்று எழுந்து தங்கையின் அறைக்குச் சென்றான். தாய் கொடுத்த காபியை கையில் வைத்துக் கொண்டே அமர்ந்திருந்தாள் சிவன்யா. </p>
<p>&nbsp;</p>
<p>"என்னடா? காபி குடிக்கலையா?" என்று கேட்ட அண்ணனையும் தன் கையில் இருந்த காபியையும் பார்த்தாள். பின்னர் "இதோ" என்று குடிக்க போக, </p>
<p>&nbsp;</p>
<p>"ஆறி போயிடுச்சு, இரு. நான் வேற எடுத்துட்டு வரேன்" என்று சொல்லி அவளிடம் இருந்து வாங்கி அருகில் இருந்த மேஜையில் வைத்துவிட்டு, "தேவ்வோட அப்பா வந்திருக்கிறார்" என்றான் அவளின் முகத்தை பார்த்தபடியே. </p>
<p>&nbsp;</p>
<p>முதலில் அமைதியாக இருந்த சிவன்யாவிற்கு விஸ்வநாதனை எப்படி எதிர்கொள்வது என்ற குழப்பம் வர, ஒரு வித படபடப்பு தோன்றியது அவளிடம்.  </p>
<p>&nbsp;</p>
<p>மென்மையாக அவள் கையைப் பற்றிக் கொண்டு, "ரொம்ப டென்ஷன் ஆகாத, அனைத்தையும் அவரிடம் சொல்வோம். நிச்சயம் அவர் புரிந்து கொள்வார். கவலைப்படாதே, இனிமேல் எல்லாம் நல்லதாக தான் நடக்கும் சரியா?" என்று மென்மையாக அவள் தலையை கோதி விட்டான் மேகநாதன். </p>
<p>&nbsp;</p>
<p>- தொடரும்..</p>
<p>&nbsp;</p>
<p>- அருள்மொழி மணவாளன்..</p>]]></content:encoded>
						                            <category domain="https://onlinetamilnovels.com/community/%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b2%e0%af%88%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80-%e0%ae%85%e0%ae%b0%e0%af%81/">தொலைதூர வெளிச்சம் நீ - அருள்மொழி மணவாளன்</category>                        <dc:creator>Arulmozhi Manavalan</dc:creator>
                        <guid isPermaLink="true">https://onlinetamilnovels.com/community/topicid/302/</guid>
                    </item>
				                    <item>
                        <title>வெளிச்சம் - 38</title>
                        <link>https://onlinetamilnovels.com/community/topicid/301/</link>
                        <pubDate>Wed, 12 Aug 2026 15:10:56 +0000</pubDate>
                        <description><![CDATA[அத்தியாயம் 38 
&nbsp;
இன்றைய விடியல் மகனின் வார்த்தையில் இடியாக இறங்கியது விஸ்வநாதனுக்கு. 
அதிர்ந்து அமர்ந்திருந்த கணவனின் தோளைத் தொட்டு &quot;என்னங்க, என்ன ஆச்சு? ஏன் இப்படி இடிஞ்சுபோய் உட்கா...]]></description>
                        <content:encoded><![CDATA[<p>அத்தியாயம் 38 </p>
<p>&nbsp;</p>
<p>இன்றைய விடியல் மகனின் வார்த்தையில் இடியாக இறங்கியது விஸ்வநாதனுக்கு. </p>
<p>அதிர்ந்து அமர்ந்திருந்த கணவனின் தோளைத் தொட்டு "என்னங்க, என்ன ஆச்சு? ஏன் இப்படி இடிஞ்சுபோய் உட்கார்ந்து இருக்கீங்க? தேவ் என்ன சென்னான்?" என்று கணவனின் நிலை கண்டு பயந்தபடி கேட்டார் பார்வதி. </p>
<p>&nbsp;</p>
<p>"என்னன்னு சொல்ல, என்ன காரணம் என்று சொல்லமாட்றான். விவாகரத்து செய்ய போறானாம்!" என்றார் அதிர்ந்து. </p>
<p>&nbsp;</p>
<p>"என்னங்க சொல்றீங்க?. விவாகரத்தா!" என்று அதிர்ந்தார் பார்வதியும். </p>
<p>&nbsp;</p>
<p>"ஆமாம் பார்வதி, ஏன் நம் குடும்பத்தில் இப்படி நடக்கிறது. நாம் என்ன பாவம் செய்தோம். கடவுளே அவர்களுக்கு என்னதான் நடந்தது, இருவரும் நலமாக வாழவேண்டும் என்று தானே திருமணம் செய்து வைத்தேன். ஆனால் இவன் இப்படி சொல்றானே" என்று தன் நிலை மறந்து புலம்பிக் கொண்டிருந்தார். </p>
<p>&nbsp;</p>
<p>நடுங்கும் அவரை கண்டு பயந்தார் பார்வதி. "ஒன்றும் இல்லைங்க, நீங்க கவலை படாதீங்க. என்ன என்று இருவரிடமும் பேசுவோம். சிவன்யா நல்ல பொண்ணுங்க. சொன்னா புரிஞ்சுக்குவா. நீங்க கலங்காதீங்க. தைரியமா இருங்க" என்று கணவனுக்கு ஆறுதல் சொல்வதுபோல் தனக்குத் தானே தைரியம் சொல்லிக் கொண்டு இருந்தார். </p>
<p>&nbsp;</p>
<p>பின்னர் "நான் வேண்டுமென்றால் மருமகளுக்கு ஃபோன் செய்து பேசட்டா?" என்று கணவனின் முகம் பார்த்தார். </p>
<p>&nbsp;</p>
<p>"வேண்டாம் பார்வதி. நிச்சயம் துபாயில் ஏதோ பெரிதாக நடந்திருக்கும். அதனால் தான் மருமகள் அப்படி சொல்லி இருக்கிறாள். இன்று தான் அவள் வந்து இருக்கிறாள். நடந்ததை எல்லாம் அம்மா அப்பாவிடம் சொல்லி அழுது இருப்பாள். </p>
<p>இப்போ தூங்க வைத்திருப்பார்கள். உன் மகன் ஏதோ பெரிய தப்பு செய்திருக்கிறான். இல்லையெனில் சம்மந்தி இவ்வளவு காலையில் ஃபோன் செய்திருக்க மாட்டார். </p>
<p>மேகநாதன் பேசுனதை கவனித்தாயா? ஒரு முறை கூட மாமா என்று உறவு முறை சொல்லி கூப்பிடவில்லை. அதிலேயே தெரிகிறது அவர்களுக்கு சிவன்யா தேவ்வுடன் வாழ்வதில் விருப்பம் இல்லை என்று. ஆகையால் இப்பொழுது அவளை தொந்தரவு செய்ய வேண்டாம். முடிந்தால் நான் அவளை நேரில் சென்று பார்த்துவிட்டு வருகிறேன், அதன்பிறகு என்ன என்று யோசிப்போம்" என்றார் அமைதியாக. </p>
<p>&nbsp;</p>
<p>"நீங்கள் சொல்வதும் சரிதாங்க, நானும் உங்க கூட வருகிறேன்" என்றார் பார்வதி. </p>
<p>&nbsp;</p>
<p>"இல்லை பார்வதி, நான் மட்டும் போயிட்டு வாரேன். நீயும் வந்தால் நளினி அவளும் வருவேன் என்று சொல்வாள். இந்த நேரம் அதிக பயணம் வேண்டாம் என்று மருத்துவர் சொல்லி இருக்கிறார்கள் இல்லையா?" என்றார் யோசனையாக. </p>
<p>&nbsp;</p>
<p>"ஆமாங்க, ஆனால் நீங்கள் மட்டும் தனியாக எப்படி போவீங்க. வேண்டுமென்றால் மாப்பிள்ளையிடம் சொல்வோம். அவரும் நீங்களும் போயிட்டு வாங்களேன்" என்றார் ஆலோசனையாக. </p>
<p>&nbsp;</p>
<p>"சரி பார்வதி, நன்றாக விடியட்டும். அதன் பிறகு நளினிக்கு ஃபோன் செய்வோம். காலையிலேயே அவளையும் கஷ்டப்படுத்த வேண்டாம்" என்று சொல்லிவிட்டு அப்படியே கண் மூடி சோபாவில் சாய்ந்து அமர்ந்தார். </p>
<p>&nbsp;</p>
<p>இனிமேல் அவருக்கு உறக்கம் வருமோ என்று தெரியவில்லை. தேவ் என்ன செய்திருப்பான் என்று குழப்பமாகவே இருந்தது. அவரை பொருத்தவரையில் இருவருமே தங்கமான பிள்ளைகள் தான். அவர் செய்த ஒரே தவறு தங்கை கல்யாணம் என்று வந்தவனுக்கு திருமணம் செய்து வைத்தது தான்.</p>
<p>&nbsp;</p>
<p>முதலில் மறுத்தாலும் திருமணத்திற்குப் பிறகு சந்தோஷமாக வாழ்வான் என்று தான் நினைத்தார். சிவன்யாவின் குடும்பமும் மிகவும் நல்ல குடும்பமாக இருந்ததால் மகனுக்கு ஒரு நல்ல இடத்தில் சம்பந்தம் கிடைத்ததில் மகிழ்ச்சியாக தான் இருந்தார். </p>
<p>&nbsp;</p>
<p>ஆனால் இன்று இருவரும் திருமணம் முடிந்து நான்கு மாதத்திற்கு விவாகரத்தை பற்றி பேசுவது வருத்தமாக இருந்தது. </p>
<p>என்ன நடந்திருக்கும் என்று யோசித்தபடியே கண்மூடி அமர்ந்திருந்தார் விஸ்வநாதன். </p>
<p>&nbsp;</p>
<p>ஏற்கனவே சுகரும் பிரஷரும் இருப்பதால் விடியல் காலையில் ஃபோன் அடித்து எழுந்ததில் பார்வதிக்கு உடலுக்கு அசதியாக தலை சுற்றுவது போல் இருக்க, "நான் கொஞ்ச நேரம் படுத்து எழந்துட்டு வரேன்ங்க" என்று சொல்லிவிட்டு படுக்கையில் சென்று படுத்து விட்டார். </p>
<p>&nbsp;</p>
<p>படுத்து கண் மூடினாலும் அவருக்கு சிவன்யாவின் நினைவு தான் ஓடியது. திருமணம் முடிந்து இங்கு வந்திருந்த பொழுது தன் குடும்பத்தினருடன் எவ்வளவு சகஜமாக பழகினாள். நளினியின் திருமணத்திற்கு எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்தாள். </p>
<p>&nbsp;</p>
<p>தேவ் ஊருக்கு போகும் வரை அவளிடம் சரியாக கூட பேசவில்லை. ஆனால் அதை எதையுமே அவள் முகத்தில் காண்பித்துக் கொள்ளவே இல்லை. போகப்போக தேவ் சரியாகி விடுவான் என்று தான் நினைத்தது போலத்தான் சிவன்யாவும் நினைத்து அவனுடன் வாழ்ந்தாள். </p>
<p>&nbsp;</p>
<p>அப்படி இருக்கும் போது, இப்பொழுது இருவரும் பிரிவதாக முடிவு செய்திருப்பதில் மிகவும் வருத்தமாக இருக்க, கணவன் வேறு தேவ் மீதுதான் தவறி இருக்கும் என்று உறுதியாக கூறுகிறார். </p>
<p>&nbsp;</p>
<p>தன் மகனால் ஒரு பெண்ணின் வாழ்க்கை கெட்டு விட்டதோ என்றும் வருத்தமாக இருக்க, அவருக்கு தலை வலிப்பது போல் இருந்தது. எதையும் யோசிக்காமல் கொஞ்ச நேரம் தூங்கி எழுந்தால் தான் நல்லது என்று, கடவுளிடம் இருவரது வாழ்க்கையையும் சரிபடுத்தும் படி வேண்டிக் கொண்டே படுத்திருந்த பார்வதி தன்னையும் அறியாமல் உறங்கி விட்டார். </p>
<p>&nbsp;</p>
<p>ஆனால் உறக்கம் இல்லாமல் கண் மூடி சாய்ந்திருந்த விஸ்வநாதன், நன்கு விடிந்ததும் மெதுவாக கண் திறந்து, அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்தார். பார்வதி சொன்னது போல நளினியின் கணவனை சென்னைக்கு அழைத்துச் செல்லலாமா? அது சரியா வருமா என்றும் யோசித்தார். </p>
<p>&nbsp;</p>
<p>காலையிலேயே சிவன்யா தனியாக சென்னை வந்த செய்தியை கூறினால் நளினி பதட்டப்படுவாளே! என்ன செய்வது? என்றும் யோசித்தார். ஆனால் இது மறைத்துச் செய்யும் விஷயம் இல்லை. எப்படியும் எல்லோருக்கும் ஒரு நாள் தெரிந்து விடும். ஆகையால் நளினியின் கணவனிடம் சொல்லி விடலாம் என்று அவருக்கு ஃபோன் செய்தார் விஸ்வநாதன். </p>
<p>&nbsp;</p>
<p>காலையிலேயே மாமா ஃபோன் செய்ததும் குழப்பமாகவே ஃபோனை எடுத்த நளினியின் கணவன், "சொல்லுங்க மாமா, என்ன விஷயம்? இவ்வளவு காலையிலேயே ஃபோன் செய்கிறீர்கள்?" என்று யோசனையாக கேட்டான். </p>
<p>&nbsp;</p>
<p>"அது" என்று தயங்கி பின்னர் "சிவன்யா தனியாக சென்னை வந்திருக்கிறாளாம் மாப்பிள்ளை. ஏதோ பிரச்சனை இருக்கும் என்று நினைக்கிறேன். என்ன என்று நேரில் சென்று கேட்டு வரலாம் என்று யோசிக்கிறேன். பார்வதியும் என்னுடன் வருகிறேன் என்கின்றாள். பார்வதி வந்தால் நளினியும் வருவேன் என்று அடம்பிடிப்பாள். அதுதான் முதலில் நான் மட்டும் தனியாக சென்று வரலாம் என்று முடிவெடுத்தேன்" என்று அவர் முடிக்கும் முன்பே, </p>
<p>&nbsp;</p>
<p>"ஏன் மாமா தனியாக போகிறீர்கள்? நானும் வருகிறேன்! இன்று கிளம்பலாம், கவலைப்படாதீர்கள். நளினியை அத்தை பார்த்துக்கொள்வார்கள். எனக்கு இங்கு கொஞ்சம் வேலை இருக்கிறது. அதை முடித்துவிட்டு மதியத்துக்குள் வருகிறேன், சாயங்காலம் கிளம்பலாமா?" என்றான். </p>
<p>&nbsp;</p>
<p>"சரி மாப்பிள்ளை, பார்வதியும் உங்களைத்தான் கூட்டிக்கொண்டு செல்ல சொன்னாள். சரி நீங்கள் உங்கள் வேலைகளை முடித்துவிட்டு வாருங்கள். எனக்கும் இன்று காலையில் முக்கியமான ஒரு வகுப்பு இருக்கிறது. அதை முடித்துவிட்டு விடுப்பு சொல்லிவிட்டு வருகிறேன், சாயங்காலம் கிளம்பலாம்" என்று கூறி வைத்தார். </p>
<p>&nbsp;</p>
<p>என்ன விஷயம் என்று கேட்ட தன் பெற்றோரிடம், மேலோட்டமாக விஷயத்தைச் சொல்லி, "நானும் மாமாவும் சென்று பார்த்துவிட்டு வருகிறோம் அம்மா. நளினியை அவர்கள் வீட்டில் விட்டுவிடுகிறேன்" என்று சொல்லிவிட்டு நளினியிடமும் சிவன்யா சென்னை வந்திருப்பதாக கூறி, தானும் மாமாவும் சென்று பார்த்துவிட்டு வருகிறோம் என்றான். </p>
<p>&nbsp;</p>
<p>"ஐ, அண்ணி வந்திருக்காங்களா? அப்போ நானும் வருவேன்" என்று குதூகலமாக கூறினாள் நளினி. </p>
<p>&nbsp;</p>
<p>"உன்னை டாக்டர் ரொம்ப தூரம் பயணம் செய்யக்கூடாது என்று சொல்லி இருக்காங்க, ஞாபகம் இருக்குதா!" என்றான். </p>
<p>&nbsp;</p>
<p>"அதெல்லாம் ஞாபகம் இருக்கு. அண்ணியை தானே பார்க்க போறேன். அதெல்லாம் ஒன்றும் ஆகாது" என்றாள் மகிழ்ச்சியாக. </p>
<p>&nbsp;</p>
<p>"முதலில் நானும் மாமாவும் போய் பார்த்துவிட்டு வருகிறோம். முடிந்தால் உன் அண்ணியையும் கூட்டிக்கொண்டு வருகிறோம், சரியா? இப்பொழுது மதியம் உங்க அம்மா வீட்டுக்கு போகணும், அதற்கு தயாராகு. சென்னைக்கு எல்லாம் உன்னை இப்பொழுது கூட்டிட்டு போக மாட்டேன்" என்று உறுதியாக கூறிவிட்டு தன் வேலைகளை முடித்து வர கிளம்பினான். </p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p>சொன்னபடியே தன் வேலைகளை முடித்து, தன் நிறுவனத்தில் தனக்கான விடுப்பையும் சொல்லிவிட்டு, தன் மனைவியை அழைத்துக்கொண்டு மாமனாரின் வீட்டிற்கு வந்தான். </p>
<p>&nbsp;</p>
<p>வீட்டிற்கு வந்து தன் தாய் கண்டதும் "அம்மா, அண்ணி வந்திருக்கிறார்களாமே?" என்று சந்தோஷமாக வீட்டிற்குள் நுழைந்த நளினிக்கு, அங்கு சோகமாக அமர்ந்திருந்த தாயை கண்டதும் குழப்பமாகிவிட்டது. </p>
<p>"என்னம்மா? அண்ணி வந்திருக்காங்க? நீங்க இப்படி சோகமா உட்கார்ந்து இருக்கீங்க?" என்று கேட்டபடி அவரின் அருகில் வந்து அமர்ந்தாள் நளினி. </p>
<p>&nbsp;</p>
<p>- தொடரும்..</p>
<p>&nbsp;</p>
<p>- அருள்மொழி மணவாளன்..</p>]]></content:encoded>
						                            <category domain="https://onlinetamilnovels.com/community/%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b2%e0%af%88%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80-%e0%ae%85%e0%ae%b0%e0%af%81/">தொலைதூர வெளிச்சம் நீ - அருள்மொழி மணவாளன்</category>                        <dc:creator>Arulmozhi Manavalan</dc:creator>
                        <guid isPermaLink="true">https://onlinetamilnovels.com/community/topicid/301/</guid>
                    </item>
				                    <item>
                        <title>வெளிச்சம் - 37</title>
                        <link>https://onlinetamilnovels.com/community/topicid/300/</link>
                        <pubDate>Wed, 12 Aug 2026 15:05:04 +0000</pubDate>
                        <description><![CDATA[அத்தியாயம் 37
&nbsp;
சிவன்யா கிளம்பிச் சென்ற பிறகு அப்படியே அமர்ந்து விட்டான் தேவ். தாம் செய்த தவறு சிவன்யாவின் வாழ்க்கை பாதிக்கப்பட்டதை நன்கு உணர்ந்துதான் இருந்தான். ஆரம்பத்தில் திருமணத்த...]]></description>
                        <content:encoded><![CDATA[<p>அத்தியாயம் 37</p>
<p>&nbsp;</p>
<p>சிவன்யா கிளம்பிச் சென்ற பிறகு அப்படியே அமர்ந்து விட்டான் தேவ். தாம் செய்த தவறு சிவன்யாவின் வாழ்க்கை பாதிக்கப்பட்டதை நன்கு உணர்ந்துதான் இருந்தான். ஆரம்பத்தில் திருமணத்தை எப்படியாவது தடுத்துவிடலாம் என்று தான் நினைத்தான். </p>
<p>&nbsp;</p>
<p>ஆனால் அவனால் அவன் தாய் தந்தையரின் ஆசையை கண்டு திருமணத்தை நிறுத்த முடியவில்லை. பின்னர் சிவன்யாவிடம் பேசி எப்படியாவது தடுத்துவிடலாம் என்றுதான் நினைத்தான். அதையும் அவனால் செய்ய இயலவில்லை. </p>
<p>&nbsp;</p>
<p>அவனைப் பொறுத்த வரையில் அவனுடைய செயல் தவறு இல்லை என்று தான் நினைத்தான். ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் எதிர் பாலினத்தின் இடையே ஏற்படும் ஈர்ப்பு இயற்கையானது. ஆனால் தேவ்விற்கு எதிர்பாலினத்தின் மீது ஏனோ ஈர்ப்பு ஏற்படவில்லை. </p>
<p>&nbsp;</p>
<p>ஆரம்பத்தில் தனக்கு தோன்றும் எண்ணத்தை கண்டு அதிர்ந்து வருந்தினான். பின் அதைப் பற்றிய செய்திகளை எல்லாம் இணைய தளத்தில் அலசி ஆராய்ந்தான். அதன்பிறகு தன்னால் ஒரு பெண்ணுடன் வாழ முடியாது என்பதை புரிந்து கொண்டான். தாய் தந்தையருடன் இருந்தால் திருமணத்திற்கு தன்னை கட்டாயப்படுத்துவார்கள் என்றுதான் வெளிநாட்டு வேலைக்கு வந்தான். </p>
<p>&nbsp;</p>
<p>இங்கு வந்தும் தான் உண்டு தன் வேலை உண்டு என்று தான் இருந்தான், ஜோவை பார்க்கும் வரை. கிட்டத்தட்ட அவனது நிலை தான் ஜோவிற்கும். இருவரும் எண்ணமும் ஒன்றாக இருந்தது. இருவரும் ஒன்றாக வாழ தொடங்கி விட்டார்கள். அவர்கள் இருக்கும் நாட்டில் ஓர் பால் உறவு என்பது சட்டத்திற்கு புறம்பானது. </p>
<p>&nbsp;</p>
<p>அதுபோல தேவ்வாலும் தன் பெற்றோரிடம் தன் உணர்வை பற்றி பேசுவதற்கு தயக்கமாக இருந்தது . இன்னுமே ஓர் பால் உறவை ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தில் பலர் இல்லையே. அதுபோல் தன் பெற்றோர்களும் தன்னை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று உறுதியாக நம்பினான் தேவ். </p>
<p>&nbsp;</p>
<p>ஆகையால் அவர்கள் ஜோவின் ஊரான அமெரிக்காவிற்கு சென்று விடலாம் என்று முடிவு செய்தார்கள். இருவரும் தங்களது வேலையை விட்டுவிட்டுஷ அமெரிக்க சென்று புது வேலை கிடைத்ததும் சட்டப்படி திருமணம் செய்து கொண்டு வாழலாம் என்று முடிவு செய்து இருந்தார்கள். அதற்கான வேலைகளைத்தான் கடந்த ஆறு மாதங்களாக செயல்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள். </p>
<p>&nbsp;</p>
<p>அதற்குள் தேவ்விற்கு தன் தங்கையை திருமணத்தை முடித்து விட வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. அந்த நேரத்தில்தான் அவன் தந்தை போன் செய்து நளினியன் திருமணத்தைப் பற்றி கூறினார். அதில் மகிழ்ந்து தங்கையின் திருமணம் நல்லபடியாக முடிந்து விட்டால், தான் நிம்மதியாக அமெரிக்கா சென்று விடலாம் என்று ஜோவிடம் தெரிவித்து விட்டு தான் இந்தியா வந்தான். </p>
<p>&nbsp;</p>
<p>ஆனால் அவன் நினைத்தது வேறு அங்கு நடந்தது வேறு. வந்ததும் பேச முடியாமல் திருமணத்தையும் முடித்துக்கொண்டான் தேவ்.  </p>
<p>திருமணம் முடிந்த பிறகு கூட அதனால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. அவளிடம் இருந்து எப்படியாவது விலகிவிட வேண்டும் என்றுதான் நினைத்துக் கொண்டேன் இருந்தான். ஆனால் எப்படி என்று தான் அவனுக்கு தெரியவில்லை. </p>
<p>&nbsp;</p>
<p>அனைவரிடமும் அலட்சியமாக நடந்து, மரியாதை இல்லாமல் பேசி விட்டு அங்கிருந்து கிளம்பி விடலாம் என்றும் நினைத்தான். பிறந்ததிலிருந்து அனைவருக்கும் மரியாதை கொடுத்து, அனைவரிடமும் அன்பாக பழகியவனால் அதையும் சரிவர செய்ய முடியவில்லை. என்ன செய்வது என்று தனக்குள்ளேயே கடந்து தவித்தான். </p>
<p>&nbsp;</p>
<p>முடிவாக ஜோ, உன்னுடைய இயல் தன்மையை மாற்றி, அவர்களிடம் வெறுப்பாக நடந்து கொண்டு வருவது சரி கிடையாது. நம் நிலைமையை உன் பெற்றோரிடம் சொல்லுவோம். அவர் கண்டிப்பாக புரிந்து கொள்வார்கள் என்று எவ்வளவோ கூறினான். தினமும் ஜோ அவனுக்கு ஃபோனில் மெசேஜ்ஜில் அவனுக்கு தைரியம் கூறிக் கொண்டே இருந்தான். </p>
<p>&nbsp;</p>
<p>முடிவாக அவன் அங்கிருந்து கிளம்புவது என்றும் உறுதியானது. இங்கு வந்து பிறகு உடனே தன் வேலைகளை முடித்துக் கொண்டு அமெரிக்கா சென்று விட வேண்டும் என்று முடிவு செய்து கொண்டு தான் துபாய்க்கு விமானத்தில் ஏறினான். </p>
<p>&nbsp;</p>
<p>ஜோவிற்கு வேலை சுலபமாக முடிவது போல் இருந்தது. ஆனால் தேவ்விற்கு வேலையை முடிக்க தாமதம் ஆகிக்கொண்டே இருந்தது.</p>
<p>சிவன்யா வருவதற்கு முன்பே அவனால் சிவன்யாவிடம் கூட தன்னைப் பற்றி சொல்ல முடியவில்லை. அப்படியே நாள்கள் கடக்க சிவன்யாவும் துபாய் வந்துவிட்டாள். </p>
<p>&nbsp;</p>
<p>சீக்கிரம் தங்களது வேலையை முடித்துவிட்டு அவளிடம் உண்மையை சொல்லிவிடலாம் என்று இருவரும் முடிவு செய்து இருக்க, எதிர்பாராமல் தேவ்வின் கைது நடந்து விட்டது. </p>
<p>&nbsp;</p>
<p>ஜோ நினைத்தால் அப்பொழுதே அவனை விடுதலை செய்திருக்க முடியும். ஆனால் அவன் வேலைகளை முடித்து அமெரிக்கா செல்ல தயாராக இருக்கும் பொழுது தேவ்வின் கேசில் சம்பந்தப்பட்டால், அவனால் வெளியே எங்கும் செல்ல முடியாது என்பதால், தேவ் அவனை ஒதுங்கி இருக்கும் படி சொல்லிவிட்டான். </p>
<p>&nbsp;</p>
<p>அந்த நாட்டில் தவறுகளுக்கு தண்டனை எப்படி இருக்கும் என்பதை நன்கு உணர்ந்த தேவ், தன்னை அவர்கள் எந்த விதத்திலும் தொந்தரவு பண்ணாமல் அமைதியாக இருப்பதில், தன் மேல் தவறு இல்லை என்பது நிர்வாகத்திற்கு தெரிந்திருக்கிறது என்றுதான் பொறுமையாக இருந்தான். </p>
<p>&nbsp;</p>
<p>அதற்குள் சிவன்யாவும் ஷேக் உடன் பேசி அனைத்தையுமே விரைவாக முடி முடித்துவிட்டாள். அதில் விடுதலையாகி வீட்டிற்கு வந்ததும் இத்தனை நாட்கள் பார்க்காமல் இருந்ததால் இருவரும் தங்களை மீறி உணர்ச்சி வசப்பட்டு விட்டார்கள். அதை சிவன்யாவும் பார்க்கும் படி ஆகிவிட்டது. </p>
<p>&nbsp;</p>
<p>அவளுக்காக தாம் எதுவும் செய்யாவிட்டாலும், தனக்காக போராடி தன்னை விடுவிக்க போராடியவள் சிவன்யா. அப்படிப்பட்ட நல்ல உள்ளம் கொண்டவளை இப்படி இவ்வளவு நாள்கள் ஏமாற்றிக் கொண்டிருக்கிறோமே என்று அவனுக்கும் வருத்தமாக தான் இருந்தது. </p>
<p>&nbsp;</p>
<p>ஆனால் எப்படியும் ஒரு நாள் அவளுக்கு தெரிய வேண்டிய விஷயம் தானே என்று தன் மனதை தேற்றிக் கொண்டான். ஜோவும் இரவு அமெரிக்கா கிளம்பிய பிறகு தனிமையில் இதுவரை நடந்த அனைத்தையும் யோசித்து பார்த்துக்கொண்டு இருந்தான். </p>
<p>&nbsp;</p>
<p>இந்நேரம் சிவன்யா வீட்டிற்கு சென்று இருப்பாள். அங்கு தன்னை பற்றி எல்லாம் தெரிந்திருக்கும். இனிமேல் நான் அவர்களை எதிர்கொள்வது மட்டும்தான் என்னுடைய வேலை என்று தன் மனதை திடப்படுத்திக் கொண்டு, இந்தியாவில் இருந்து வரும் போனிற்காக உறங்காமல் காத்திருந்தான் தேவ். </p>
<p>&nbsp;</p>
<p>சிவன்யாவின் தந்தையிடமிருந்து ஃபோன் வரும் என்று காத்திருந்த தேவ்விற்கு, தனது தந்தையிடம் இருந்து வந்தேன் ஃபோனை கண்டு, ஒரு மகன் தந்தையிடம் பேச தயங்கக்கூடிய விஷயத்தை அல்லவா செய்து விட்டான். அதில் தயக்கமாகவே எடுத்து, </p>
<p>"ஹலோ" என்றதும் </p>
<p>"என்னப்பா நடக்குது? சிவன்யா வீட்டிற்கு வந்துவிட்டாலாமே! ஏன் என்னாச்சுப்பா? அந்தப் பிள்ளை எதுனா தப்பா பேசிச்சா? அவர்கள் வீட்டிலிருந்து ஃபோன் வந்தது, எது என்றாலும் உன்னிடமே கேட்டு சொல்லிட்டாங்க. தயவுசெய்து சொல்லுப்பா, அப்பா மேல எதுவும் கோவமா இருந்துச்சுன்னா அதை அந்த பிள்ளை மேல காண்பிக்காதே! தங்கமான பிள்ளை" என்று கலக்கமாகவே பேசினார் விஸ்வநாதன். </p>
<p>&nbsp;</p>
<p>"சிவன்யாவின் மீது எந்த தவறும் இல்லை அப்பா, தவறு என் மீது தான்" என்றான் தேவ். </p>
<p>&nbsp;</p>
<p>"நான் நினைச்சேன் டா, இப்போ கல்யாணம் வேண்டாம் என்று சொன்ன உனக்கு வற்புறுத்தி திருமணம் முடித்து வைத்தேன். அதனால் நீ அந்த பிள்ளையை ஏதோ கஷ்டப்படுத்தி பேசியிருக்கிறாய், அதானே!" என்றார். </p>
<p>&nbsp;</p>
<p>"சிவன்யாவிடம் பேசினீங்களா? அவள் ஏதாவது சொன்னாளா? </p>
<p>&nbsp;</p>
<p>"அவளிடம் பேசவில்லை, மேகநாதன் தான் பேசினான். இனிமேல் சிவன்யா உன்னுடன் வாழ மாட்டாளாம், விவாகரத்துக்கு ஏற்பாடு செய்ய சொல்லி கூறினார்கள். இதுவரை மரியாதை பேசிய பையன். இன்று ஒரு வார்த்தை கூட முறை சொல்லி கூப்பிடுவதில்லை. அதிலேயே தெரிகிறது அவர்களுக்கு உன் மீது உள்ள கோபம். </p>
<p>&nbsp;</p>
<p>சொல்லு, அப்படி என்னதான் நடந்தது? என்னதான் செய்தாய் அந்த பிள்ளையை?" என்று சற்று கோபமாக கேட்டார் விஸ்வநாதன். </p>
<p>&nbsp;</p>
<p>பெருமூச்சு விட்ட தேவ் "அவர்கள் சொல்வது போலவே செய்து விடுங்கள் அப்பா" என்றான். </p>
<p>&nbsp;</p>
<p>"என்னடா சொல்ற!?" என்றார் அதிர்ச்சியாக</p>
<p>&nbsp;</p>
<p>"ஆமா அப்பா, விவாகரத்திற்கு ஏற்பாடு பண்ணுங்கள்" என்று கூறி ஃபோனை வைத்தான் தேவ். </p>
<p>&nbsp;</p>
<p>- தொடரும்..</p>
<p>&nbsp;</p>
<p>- அருள்மொழி மணவாளன்..</p>]]></content:encoded>
						                            <category domain="https://onlinetamilnovels.com/community/%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b2%e0%af%88%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80-%e0%ae%85%e0%ae%b0%e0%af%81/">தொலைதூர வெளிச்சம் நீ - அருள்மொழி மணவாளன்</category>                        <dc:creator>Arulmozhi Manavalan</dc:creator>
                        <guid isPermaLink="true">https://onlinetamilnovels.com/community/topicid/300/</guid>
                    </item>
				                    <item>
                        <title>வெளிச்சம் - 36</title>
                        <link>https://onlinetamilnovels.com/community/topicid/299/</link>
                        <pubDate>Wed, 12 Aug 2026 14:59:06 +0000</pubDate>
                        <description><![CDATA[அத்தியாயம் 36
&nbsp;
தேவ்வின் பெற்றோருக்கு விஷயம் தெரிந்தால் அவர்கள் வருந்துவார்கள் என்று கூறிய சிவன்யாவை முறைதான் மேகநாதன். 
&nbsp;
&quot;அவர்களை சொல்லி என்ன செய்வது, அவங்க சொன்னாங்க என்று அ...]]></description>
                        <content:encoded><![CDATA[<p>அத்தியாயம் 36</p>
<p>&nbsp;</p>
<p>தேவ்வின் பெற்றோருக்கு விஷயம் தெரிந்தால் அவர்கள் வருந்துவார்கள் என்று கூறிய சிவன்யாவை முறைதான் மேகநாதன். </p>
<p>&nbsp;</p>
<p>"அவர்களை சொல்லி என்ன செய்வது, அவங்க சொன்னாங்க என்று அவசரப்பட்டு கல்யாணம் பண்ணி வச்சோம்ல. நம்மளதான் சொல்லணும், படிச்சு முடிச்ச உடனே அடுத்து மேல் கொண்டு படிக்க விரும்புரியா என்னன்னு உன்கிட்ட கேட்காம, அவங்க இஷ்டத்துக்கு கல்யாணம் பண்ணி வச்சாங்க இல்ல, இவங்கள சொல்லணும்" என்று தன் பெற்றோர் மீது தன் தன் கோபத்தை திருப்பினான் மேகநாதன். </p>
<p>&nbsp;</p>
<p>"அண்ணா ப்ளீஸ், அப்பா அம்மாவையும் எதுவும் சொல்லாதீங்க. அவங்க என்ன எனக்கு கெடுதல் நடக்கணும் என்றா செஞ்சிருப்பாங்க. நான் நல்லா வாழனும் என்று தானே நினைத்திருப்பாங்க. ப்ளீஸ் அண்ணா அப்பாவையும் அம்மாவையும் திட்டாதீங்க" என்று தாயை அணைத்துக் கொண்டு அழுதாள் சிவன்யா.  </p>
<p>&nbsp;</p>
<p>சிவநேசனுக்கும் சிவகாமிக்கும் மகன் கூறிய வார்த்தை வலித்தாலும், அதுதானே உண்மை. படித்து முடித்த உடனே அவசரமாக நடந்தது போல் தானே இருந்தது கல்யாணம் என்று வருந்தினார்கள். அவர்களது வருத்தம் அவர்களது முகத்தில் பிரதிபலிக்க, தான் அவசரப்பட்டு பேசியதை உணர்ந்து வருந்தினான் மேகநாதன். </p>
<p>&nbsp;</p>
<p>"சாரிப்பா, கோவத்துல ஏதேதோ பேசிட்டேன். என்ன மன்னிச்சிடுங்க" என்று பொதுவாக சொன்னாலும் தாயின் கையை பற்றி கொண்டான்.  </p>
<p>&nbsp;</p>
<p>"அம்மா, தங்கையின் வாழ்க்கை இப்படி ஆனதற்கு நாமும் ஒரு விதத்தில் காரணம் தானே?" என்றான் கவலையாக. </p>
<p>&nbsp;</p>
<p>ஆம், திருமணம் முடிந்ததில் இருந்து தேவ் தங்களுடன் சரியாக பேசாமல் இருக்கும் பொழுதே சிவகாமிக்கு அந்த எண்ணம், அவரது மனதில் ஓடிக் கொண்டுதான் இருக்கும். இப்பொழுது மகள் அழுது கொண்டு வந்த பிறகு அந்த எண்ணம் வராமல் இருக்குமா? அவர் மௌனமாக இருக்க, </p>
<p>"நாம் கொஞ்சம் பொறுமையாக இருந்திருக்கலாம் அம்மா" என்றான் வருத்தமாக. </p>
<p>&nbsp;</p>
<p>எல்லோருக்குமே சிவன்யாவின் வாழ்க்கை குறித்து கவலையும் வருத்தமும் நிறைய இருந்தது. ஆனால் நடந்து முடிந்ததை நினைத்து வருந்தாமல், அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று யோசிக்க யோசிக்க என்ன செய்வது என்று அவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. </p>
<p>&nbsp;</p>
<p>இதை எப்படி விஸ்வநாதனிடம் தெரிவிப்பது என்ற குழப்பமாக இருந்தது சிவநேசனுக்கு. அதை வார்த்தையாக தன் மகனிடம் தெரிவிக்க, </p>
<p>"இப்படி மற்றவர் வருந்துவார்கள் என்று இனிமேலும் யோசித்துக்கொண்டு நம் தங்கையின் வாழ்க்கையை இன்னும் சிக்கல் ஆக்கி விடக்கூடாது அப்பா" என்று முடிவாக சொல்லிவிட்டான். </p>
<p>&nbsp;</p>
<p>"அவனுடன் வாழ முடியாது என்று சிவன்யாவும் சொல்லிவிட்டாள். அந்த முடிவில் எந்த மாற்றமும் இல்லை. அப்படி இருக்கும் பொழுது அதை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் நடத்தி விட்டால் தான் நல்லது. அப்பொழுதுதான் அவளுக்கு நம் வேறொரு நல்ல வாழ்க்கையை தேட முடியும்" என்றான்.  </p>
<p>&nbsp;</p>
<p>"எனக்கு வேறு வாழ்க்கை எதுவும் தேவையில்லை" என்று தாயைப் பிடித்துக் கொண்டு அழுதாள் சிவன்யா. </p>
<p>&nbsp;</p>
<p>"என்ன தேவையில்லை? உனக்கு என்ன வயசு ஆயிற்று? என்ன வாழ்ந்து விட்டாய் என்று வேறு வாழ்க்கை வேண்டாம் என்று சொல்கிறாய்?" என்றான் கோபமாக தன் தங்கையின் கையை பற்றி. </p>
<p>&nbsp;</p>
<p>"தயவு செய்து கோபப்படாதே மேகநாதா. முதலில் இதற்கு என்ன முடிவு என்று பார்ப்போம். அதன் பிறகு மற்றதை பற்றி யோசிப்போம். அவளுக்கும் கொஞ்சம் யோசிக்க வேண்டும் இல்லையா?" என்று மகனை கண்டித்து விட்டு, </p>
<p>&nbsp;</p>
<p>மகளின் கையைப் பற்றிக் கொண்ட சிவநேசன் "உனக்கு எப்படி ஆறுதல் சொல்வது என்று தெரியவில்லை அம்மா. உன் வாழ்க்கையை நானே கெடுத்து விட்டது போல் இருக்கிறது" என்றார் கண்ணீர் மல்க. </p>
<p>&nbsp;</p>
<p>"அப்பா" என்று அவரை வயிற்றுடன் அணைத்துக் கொண்டு "உங்கள் மேல் எந்தத் தவறும் இல்லைப்பா. எனக்கு நல்லது செய்யத்தான் நினைத்தீர்கள். என் தலையெழுத்து எப்படி ஒரு வாழ்க்கை அமைந்து விட்டது" என்று அழுதாள். </p>
<p>&nbsp;</p>
<p>"போதுமா, இனிமேல் அழாதே. நடந்தவற்றில் ஒரு தவறு கூட உன்னால் நடந்தது கிடையாது. தவறு செய்யாத நீ எதற்கு அழுது கலங்கி நிற்கிறாய்? எல்லாவற்றையும் மறந்துவிடு" என்று அவளின் தலையை மென்மையாக தடவி விட்டார்.  </p>
<p>&nbsp;</p>
<p>பின்னர் "இவ்வளவு தூரம் பயணப்பட்டு வந்திருக்கிறாய். போய் கொஞ்ச நேரம் தூங்கி எழு" என்று மகளிடம் சொல்லிவிட்டு, "அவளுக்கு ஏதாவது சாப்பிட கொடுத்து, அவளை தூங்க வை" என்று மனைவியிடம் முடித்தார். </p>
<p>&nbsp;</p>
<p>சிவகாமியும் கண்களை துடைத்துக்கொண்டு மகளுக்கு சாப்பாடு எடுத்து வர சமையலறை சென்றார். தாம் என்ன செய்தோம் தனக்கு இப்படி ஒரு வாழ்க்கை என்று யோசித்து யோசித்து களைத்துப் போயிருந்த சிவன்யாவிற்கும் சற்று ஓய்வு தேவைப்பட, தந்தை கூறியதும் சரி என்று தலையாட்டி, அவளது அறைக்கு சென்றாள். </p>
<p>&nbsp;</p>
<p>சிவகாமியும் வேகமாக மகளுக்கு உணவு தயாரித்து, மகளின் அறைக்கு செல்ல போக, "அவளை எப்படியாவது சாப்பிட வைத்து, உறங்க வை. நீயும் அவள் கூடவே இரு" என்று மனைவிக்கு சொல்லிவிட்டு, தந்தையும் மகனும் விஸ்வநாதர்க்கு ஃபோன் செய்ய முடிவு செய்தனர்.  </p>
<p>&nbsp;</p>
<p>வழக்கமாக இந்நேரத்தில் ஃபோன் செய்வது இல்லாததால் சந்தேகமாகவே போனை எடுத்தால் விஸ்வநாதன். "என்ன சம்பந்தி எல்லோரும் எப்படி இருக்கீங்க?" என்றார் பதட்டமாக. </p>
<p>&nbsp;</p>
<p>அவரது பதட்டத்தைக் கண்டதும் சிறிது நேரம் எதுவும் பேச முடியவில்லை சிவநேசனால்.  </p>
<p>மறுமுனையில் அமைதியாக இருக்க "சம்பந்தி, என்ன ஆச்சு? உடம்புக்கு ஏதும் பிரச்சனையா? இல்லை தங்கச்சிக்கு ஏதும் உடம்பு முடியலையா? என்று பதட்டமாக கேட்ட விஸ்வநாதனிடம், எப்படி விஷயத்தை சொல்வது என்றே ஒன்றும் புரியாமல் தயங்கினார். </p>
<p>&nbsp;</p>
<p>அந்தப் பக்கம் விஸ்வநாதனுக்கு பதட்டம் அதிகமாக, தந்தையும் பேச தயங்கி இருப்பதைக் கண்ட மேகநாதன், உடனே "யாருக்கும் உடம்புக்கு எந்த பிரச்சனையும் இல்லை" என்றான். </p>
<p>&nbsp;</p>
<p>அப்பொழுதுதான் நிம்மதி பெருமூச்சு விட்ட விஸ்வநாதன், "நல்லவேளை, காலையிலேயே ஃபோன் செய்து, சம்பந்தி பேசவில்லை என்றதும் ஏதோ தவறுதலாக நடந்து விட்டதோ! என்று நினைத்தேன்" என்று ஆசுவாசமாக மூச்சு எடுத்து விட்டார். </p>
<p>&nbsp;</p>
<p>"தவறு நடந்து தான் விட்டது. ஆனால் உடல் நிலையில் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை" என்றான். </p>
<p>&nbsp;</p>
<p>அதில் குழப்பமான, "என்ன என்று தெளிவாக சொல்லுங்கள் தம்பி, எனக்கு ஒன்றும் புரியவில்லை. பதட்டமாக இருக்கிறது" என்றார். </p>
<p>&nbsp;</p>
<p>"சிவன்யா வீட்டிற்கு வந்துவிட்டாள்" என்றான் மொட்டையாக. </p>
<p>&nbsp;</p>
<p>"என்ன தம்பி மருமகளா சென்னை வந்துவிட்டாளா? நேற்று பேசும் பொழுது கூட ஒன்றும் சொல்லவில்லையே! எப்பொழுது வந்தாள்? தேவ்வும் வந்திருக்கிறானா?" என்று கேள்வி மேல் கேள்வி கேட்க, </p>
<p>&nbsp;</p>
<p>"அவள் உங்கள் வீட்டு மருமகளாக வரவில்லை, எங்கள் வீட்டு பெண்ணாக, எங்கள் வீட்டிற்கு வந்து விட்டாள்" என்றான் பொறுமையாக. </p>
<p>&nbsp;</p>
<p>அவன் சொல்வதை புரிந்து கொள்வதற்கு அவருக்கு சிறிது நேரம் ஆனது. "என்னப்பா சொல்ற? உங்க வீட்டு பொண்ணா வந்துட்டாளா? அப்படி என்றால்?" என்றார் அதிர்ந்து. </p>
<p>&nbsp;</p>
<p>கணவன் பேசுவது சென்னையில் இருந்து ஃபோன் என்றதும் அவரது அருகில் வந்து நின்று அவர் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்த பார்வதிக்கும் கணவனின் பதட்டமான முகத்தைக் கண்டு வருத்தமாக, "என்னாச்சுங்க? சம்பந்தி வீட்ல என்ன சொல்றாங்க?" என்றார். </p>
<p>&nbsp;</p>
<p>"ஃபோனை கொஞ்சம் ஸ்பீக்கரில் போடுங்க" என்றான் மேகநாதன். </p>
<p>&nbsp;</p>
<p>அவரும் சரிப்பா என்று உடனே ஸ்பீக்கரில் போட, "கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி சிவன்யா எங்க வீட்டுக்கு வந்துட்டா" என்றான். </p>
<p>&nbsp;</p>
<p>அதற்குள் தன்னை கொஞ்சம் சமாளித்து இருந்த விஸ்வநாதன் "என் மருமக பொண்ணு வீட்டுக்கு வந்துட்டாளா? என் மகனால் எதுவும் தப்பு நடந்துருச்சா தம்பி? எது என்றாலும் சொல்லுங்க" </p>
<p>&nbsp;</p>
<p>"உங்க மகனால எந்த தப்பும் நடக்கல, உங்க மகனே தப்புதான். அவ்வளவுதான் என்னால இப்ப சொல்ல முடியும். இதுக்கு மேல எதுவும் தெரியனும்னா உங்க மகன்கிட்ட ஃபோன் பண்ணி கேட்டுக்கோங்க. எங்க வீட்டு பொண்ணு வாழ்க்கையில் எப்படி சரிப்படுத்தனும்னு எங்களுக்கு யோசிக்கணும். தயவு செய்து எங்கள தொந்தரவு பண்ணாதீங்க. எது என்றாலும் உங்கள் மகனிடம் கேட்டுக் கொள்ளுங்கள்" என்று ஃபோனை வைத்து விட்டான் மேகநாதன். </p>
<p>&nbsp;</p>
<p>தேவ்வின் பெற்றோருக்கு எதுவும் புரியவில்லை. இதுவரை அத்தை மாமா என்று வார்த்தைக்கு வார்த்தை பேசும் மேகநாதன், இன்று ஒரு வார்த்தை கூட அத்தை என்றும் மாமா என்றும் சொல்லவில்லை. எங்கள் வீட்டு பெண்ணின் வாழ்க்கையை சீரமைக்க வேண்டும் என்று பேசியதில், வேறு பெரிய தவறு செய்து விட்டான் தேவ் என்று தான் தோன்றியது. உடனே மகனுக்கு ஃபோன் செய்தார் விஸ்வநாதன். </p>
<p>&nbsp;</p>
<p>- தொடரும்..</p>
<p>&nbsp;</p>
<p>- அருள்மொழி மணவாளன்..</p>]]></content:encoded>
						                            <category domain="https://onlinetamilnovels.com/community/%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b2%e0%af%88%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80-%e0%ae%85%e0%ae%b0%e0%af%81/">தொலைதூர வெளிச்சம் நீ - அருள்மொழி மணவாளன்</category>                        <dc:creator>Arulmozhi Manavalan</dc:creator>
                        <guid isPermaLink="true">https://onlinetamilnovels.com/community/topicid/299/</guid>
                    </item>
				                    <item>
                        <title>வெளிச்சம் - 35</title>
                        <link>https://onlinetamilnovels.com/community/topicid/274/</link>
                        <pubDate>Thu, 06 Aug 2026 13:39:55 +0000</pubDate>
                        <description><![CDATA[அத்தியாயம் 35 
&nbsp;
சிவன்யா எப்படி விமானத்தில் ஏறினாள்? எப்படி பயணித்தாள்? என்று ஒன்றும் அவளுக்கு தெரியவில்லை. இரவு 12 மணிக்கு சென்னை விமான நிலையத்திற்கு வந்து இறங்கியது அவள் வந்த விமானம...]]></description>
                        <content:encoded><![CDATA[<p>அத்தியாயம் 35 </p>
<p>&nbsp;</p>
<p>சிவன்யா எப்படி விமானத்தில் ஏறினாள்? எப்படி பயணித்தாள்? என்று ஒன்றும் அவளுக்கு தெரியவில்லை. இரவு 12 மணிக்கு சென்னை விமான நிலையத்திற்கு வந்து இறங்கியது அவள் வந்த விமானம். </p>
<p>&nbsp;</p>
<p>விமானத்திலிருந்து எப்படி வெளியே வந்து தன் பொருட்களை எல்லாம் எடுத்துக் கொண்டு வாசலுக்கு வந்தாள் என்று கூட அவளுக்கு தெரியவில்லை. </p>
<p>விமான நிலையத்தின் வெளியே வந்து தன் ட்ராலியுடன் நின்று கொண்டிருந்த சிவன்யாவின் கைப்பையில் இருந்த அவளது ஃபோன் ஒலித்தது. </p>
<p>&nbsp;</p>
<p>ஃபோனை எடுத்து யார் என்று பார்க்க உன்னிகிருஷ்ணன் தான் அழைத்திருந்தான். அவள் எடுத்து எதுவும் பேசாமல் காதில் வைக்க, "சிவன்யா" என்றான்.</p>
<p>"ம்ம்" என்று மட்டும் அவள் கூற, "உன்னோட ஃபோன்ல இருந்து டாக்ஸி புக் பண்ணி வீட்டுக்கு போ" என்றான். அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. "என்னால் எப்படி கார் புக் பண்ண முடியும்? என் ஃபோன்தான் இங்கு வேலை செய்யாதே!" என்றாள், ஃபோனில் தான் பேசிக்கொண்டு இருக்கிறோம் என்று கூட தெரியாமல். </p>
<p>&nbsp;</p>
<p>"உன்னோட இந்தியா சிம் தான் உன் ஃபோனில் போட்டு இருக்கேன். நீ எப்போதும் போல புக் பண்ணு" என்றான் "சரி" என்று ஃபோனை வைத்துவிட்டு, டாக்ஸி புக் செய்து வந்ததும் காரில் ஏறி அமர்ந்தாள். </p>
<p>&nbsp;</p>
<p>அடுத்த பத்து நிமிடத்தில் மீண்டும் ஃபோன் செய்து "காரில் ஏறிட்டியா?" என்றான். ஆமாம் என்றவளிடம், "வீட்டுக்கு போனதும் ஃபோன் பண்ணி சொல்லு, சரியா?" என்றான். </p>
<p>&nbsp;</p>
<p>"ம்ம்" என்று மட்டும் சொல்லி ஃபோனை வைத்துவிட்டு, அப்படியே தலை சாய்ந்து கண்களை மூடி அமர்ந்து விட்டாள். </p>
<p>&nbsp;</p>
<p>அவர்கள் தெருவிற்கு கார் வந்ததும் "மேடம் இந்த வீடா?" என்றான் அவர்களின் வீட்டை காண்பித்து. </p>
<p>&nbsp;</p>
<p>ஆமாம் என்று தலையாட்டிய சிவன்யா, கார் நின்றதும் தன் உடமைகளை எடுத்து வைத்து அவனுக்கு எப்படி பணம் கொடுப்பது என்று யோசிப்பதற்குள், மீண்டும் ஃபோன் வந்தது. உன்னிகிருஷ்ணன் தான் ஃபோன் செய்தான். "வீட்டிற்கு போயிட்டியாம்மா?" என்றான். </p>
<p>"வந்துட்டேண்ணா" என்றதும், </p>
<p>"உன் கையபையில் இந்திய பணம் இருக்கும்" என்று சொல்லிவிட்டு "அப்பா அம்மாவிடம் பேசிவிட்டு முடிந்தால் எனக்கு போன் பண்ண சொல்லு" என்ற சொல்லிவிட்டு, சில விநாடிகள் கழித்து "முடிந்தால் எல்லாவற்றையும் மறந்திடுமா" என்று சொல்லி ஃபோனை வைத்தான் உன்னி கிருஷ்ணன். </p>
<p>&nbsp;</p>
<p>அவன் ஃபோன் வைத்ததும் கைப்பையை திறந்து ஓட்டுநருக்கு தேவையான பணத்தை எடுத்து கொடுத்துவிட்டு தன் உடைமைகளை தூக்கிக் கொண்டு வீட்டிற்கு வந்து காலிங் பெல்லை அடித்தாள் சிவன்யா. </p>
<p>&nbsp;</p>
<p>காலிங் பெல் சத்தத்தில் முதலில் கண்விழித்தது சிவன்யாவின் தாய்தான். இந்நேரத்தில் யார் வந்திருக்கிறார்கள் என்று எழுந்து கதவை திறக்க வருவதற்குள், மேகநாதன் எழுந்து வந்து விட்டான். </p>
<p>"நீங்கள் ஏனம்மா எழுந்தீர்கள்? நான் பார்க்கிறேன்" என்று சொல்லி "யார்?" என்று கேட்டுக் கொண்டே கதவை திறந்தான் மேகநாதன். </p>
<p>&nbsp;</p>
<p>தங்கையை கண்டதும் அதிர்ந்து பின்னர் மகிழ்ந்தான், "வா சிவன்யா" என்று அவளை தோளோடு நினைத்து வீட்டுக்குள் அழைத்து வந்தால் மகளைப் பார்த்ததும், "குட்டிமா" என்று கூறி அவளை இறுக்கமாக அணைத்து அவளின் நெற்றியிலும் கன்னத்திலும் முத்தம் பதித்து மகிழ்ந்தார் சிவகாமி. </p>
<p>&nbsp;</p>
<p>அவரின் உதட்டில் உப்பு நீரின் சுவை தெரிய, மகளின் முகத்தை ஏறிட்டு பார்த்து அவள் கண் கலங்கி இருப்பதில் கண்டு உள்ளுக்குள் பயந்தாலும், ஆனந்த கண்ணீராக இருக்கும் என்று நினைத்து "என்னடா ஏன் அழுகிறாய்?" என்றதும், </p>
<p>"அம்மா" என்று கதறி இறுக்கமாக தன் தாயே அணைத்துக் கொண்டாள் சிவன்யா. </p>
<p>&nbsp;</p>
<p>மகளின் கதறலில் ஏதோ தவறாக பட மனதை திறப்படுத்திக் கொண்டு, "ஒன்றும் இல்லைடா" என்று அவள் முதுகை தடவி விட்டார் சிவகாமி. </p>
<p>"என்னடா? என்ன ஆச்சு? மாப்பிள்ளை எங்கே? தனியாவா வந்த? இன்று காலை ஃபோன் பண்ணும்போது கூட வருகிறேன் என்று சொல்லவில்லையே!" என்று கேள்வி மேல் கேள்வி கேட்டார். </p>
<p>&nbsp;</p>
<p>மகளிடம் அழுகை மட்டுமே இருக்க, அவளை சோபாவில் அமர வைக்க, அவள் குடிப்பதற்கு தண்ணீரை எடுத்து வந்தான் மேகநாதன். அவளை தண்ணீர் குடிக்க வைத்து, கண்ணீரைத் துடைத்து விட்டான் அண்ணன். அதில் மேலும் கலங்கி தன் தாயின் மடியில் படுத்து அழ ஆரம்பித்தாள் சிவன்யா.  </p>
<p>&nbsp;</p>
<p>சத்தம் கேட்டு கண்விழித்த சிவநேசன், ஹாலில் சிவன்யாவின் குரல் போல் கேட்கிறதே என்று யோசித்துக் கொண்டே வர, மனைவியின் மடியில் படுத்து மகள் அழுது கொண்டிருப்பதை கண்டதும் பதறிவிட்டார். </p>
<p>"குட்டிமா வாடா, எப்படி வந்த? தனியாவா வந்த? ஏன் அழுகிறாய்?" என்று அவரும் கேள்வி மேல் கேள்வி கேட்க, தந்தையை கண்டதும் தாயை இறுக்கமாக அணைத்துக் கொண்டாள் சிவன்யா.  </p>
<p>&nbsp;</p>
<p>அவள் அழுவது அனைவருக்குமே வருத்தமாகவும் பயமாகவும் இருந்தது. "என்ன ஆச்சு என்று சொல்லுமா?" என்ற அவர்களின் கேள்விக்கு அவளிடம் அழுகையைத் தவிர வேற பதில் இல்லை. </p>
<p>"டேய் முதலில் மாப்பிள்ளைக்கு ஃபோன் போட்டு, என்ன என்று கேள்?" என்றார் சிவகாமி. </p>
<p>&nbsp;</p>
<p>"வேண்டாம்மா, அவருக்கு ஃபோன் பண்ணாதீங்க" என்று வாயை திறந்தாள் சிவன்யா.  </p>
<p>&nbsp;</p>
<p>"என்னம்மா? ரெண்டு பேருக்கும் ஏதாவது சண்டையா? அதுக்காக பேச வேண்டாம் என்கிறாயா? நாங்க என்னன்னு கேட்கிறோம்மா, எவ்வளவு பெரிய சண்டையா இருந்தாலும் பேசிட்டா சரிப்படுத்திடலாம். நீ கவலைப்படாத, அண்ணன் பொறுமையா பேசுவாங்க, சரியா?" என்று ஏதோ சிறு சண்டையில் மகள் கோபித்து விட்டு வந்திருக்கிறாள் என்று நினைத்துக் கொண்டு மகளிடம் கண்ணீரை துடைத்தபடி கூறினார் சிவகாமி. </p>
<p>&nbsp;</p>
<p>"இல்லை அம்மா, எங்களுக்குள்ள சண்டை எல்லாம் இல்லை. என்னால் அவர் கூட வாழ முடியாதும்மா" என்றாள். </p>
<p>&nbsp;</p>
<p>சொல்லாமல் கொள்ளாமல் வந்தது மட்டுமல்லாமல், வந்ததிலிருந்து அழுகை மட்டும்தான். அதில் பயந்து கொண்டு இருந்தவர்களின் தலையில் சிவன்யா கூறிய வார்த்தை பேரிடியாக விழுந்தது. </p>
<p>"என்னம்மா சொல்ற?" என்று படபடக்கும் குரலில் கேட்டார் சிவநேசன். </p>
<p>&nbsp;</p>
<p>"என்னால அவர் கூட வாழ முடியாதுப்பா. என்ன விட்டுடுங்க, எதுவும் கேட்காதீர்கள்" என்று கூறி மீண்டும் தாயின் மடியில் படுத்துக் கொண்டாள். </p>
<p>&nbsp;</p>
<p>"இப்படி மொட்டைக்கட்டையா சொன்னா என்னம்மா அர்த்தம். என்ன நடந்துச்சுன்னு சொல்லு! அப்பா பேசுறேன் டா!" என்று அவள் தலையை கோதிவிட, தான் பார்த்ததை எப்படி தாய் தந்தையிடம் சொல்வது என்று புரியாமல் தவித்தாள் சிவன்யா. </p>
<p>&nbsp;</p>
<p>வார்த்தைகளை தேடி தேடி "அவருக்கு என் கூட வாழ முடியாதாம்ப்பா. அவருக்கு ஜோவை தான் பிடித்திருக்கிறது. அவர்கள் இருவரும் கல்யாணம் பண்ணிக்க போறாங்களாம்" என்றாள். </p>
<p>&nbsp;</p>
<p>"என்னது? உன்ன விட்டுட்டு வேற பொண்ண கல்யாணம் பண்ண போறானா? அதை நாங்க எல்லாம் பாத்துட்டு சும்மா இருப்போம்ன்னு நினைக்கிறானா? அவனை இங்கே வரவைத்து உண்டு இல்லை என்றுஆக்குகிறேன் பார்" என்ற மேகநாதனிடம் </p>
<p>&nbsp;</p>
<p>"ஜோ பொண்ணு இல்லண்ணா, பையன்" என்றாள் அருவருப்புடன் அழுது கொண்டு. </p>
<p>&nbsp;</p>
<p>முதலில் அவள் சொன்னது மேகநாதனுக்கு புரிவதற்கு சில நிமிடங்கள் ஆனது. "என்ன சொல்ற?" என்றான் மீண்டும் அதிர்ச்சியாக. </p>
<p>&nbsp;</p>
<p>ஆமாம் என்று தலையாட்டி சிவன்யா, "அவருக்கு என்னை திருமணம் செய்வதில் சிறிதும் விருப்பமே இல்லை. அவரது பெற்றோருக்காக தான் என்னை கல்யாணம் செய்து இருக்கிறார்" என்று தங்கள் திருமணத்திலிருந்து இன்று தான் கண்ட காட்சி வரை அனைத்தையும் அழுதழுது கூறி முடித்தாள் சிவன்யா. </p>
<p>&nbsp;</p>
<p>அதைக் கேட்டதும் சிவன்யாவின் குடும்பம் திகைத்து அதிர்ந்து அப்படியே அவரவர் இடத்தில் அமர்ந்திருந்தனர். </p>
<p>வயதானவர்களான சிவநேசனும் சிவகாமிக்கும் இந்த செய்தி அதிர்ச்சியாகவும் ஏற்றுக்கொள்ள முடியாததாகவும் இருக்க, அவர்களால் எதுவுமே பேச முடியவில்லை. சிவகாமியும் இது எப்படி சாத்தியம் என்று கணவரிடம் கேட்டார். சிவநேசனுக்கு சில இடங்களில் இப்படி நடப்பது பற்றி செய்தி கேட்டிருந்ததால், அவருக்கு தேவ்வின் நிலைமை புரிந்தது. ஆனால் தன் மகள் வாழ்வு இப்பொழுது கேள்விக்குறியாக நிற்பதில் அதிர்ந்து அமர்ந்திருந்தார். </p>
<p>&nbsp;</p>
<p>அதை முதலில் புரிந்து கொண்டது மேகநாதன் மட்டும்தான். "அவன் எந்த கன்றாவியோ செய்து கொண்டு போகட்டும், உன் வாழ்க்கையை ஏன் அவன் கெடுத்தான். </p>
<p>&nbsp;</p>
<p>அவனுக்கு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள விருப்பம் இல்லை என்றால், அதை முன்பே அவன் பெற்றோரிடம் சொல்லி இருக்க வேண்டாமா? இப்பொழுது உன்னுடைய வாழ்க்கை அல்லவா வீணாகிவிட்டது" என்று கூறி </p>
<p>"இதை இப்படியே விடக்கூடாது. இப்பவே அவன் அம்மா அப்பாவிடம் கேட்கிறேன். மகனோட விருப்பு வெறுப்பு தெரியாம அவங்க இஷ்டத்துக்கு ஒரு பொண்ண கட்டி வைப்பாங்களா? இதை நான் சும்மா விடமாட்டேன்" என்று கோவமாக ஃபோனை எடுத்தான் மேகநாதன்.</p>
<p>&nbsp;</p>
<p>"அவர்கள் என்னண்ணா செய்வாங்க, நீங்க பாட்டுக்கு கோவப்பட்டு ஏதாவது சொல்லிடாதீங்க. அவங்களால தாங்கிக்க முடியாது, பாவம் வயசானவங்க" என்றாள் சிவன்யா அழுது கொண்டே.</p>
<p>&nbsp;</p>
<p>- தொடரும்..</p>
<p>&nbsp;</p>
<p>- அருள்மொழி மணவாளன் </p>]]></content:encoded>
						                            <category domain="https://onlinetamilnovels.com/community/%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b2%e0%af%88%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80-%e0%ae%85%e0%ae%b0%e0%af%81/">தொலைதூர வெளிச்சம் நீ - அருள்மொழி மணவாளன்</category>                        <dc:creator>Arulmozhi Manavalan</dc:creator>
                        <guid isPermaLink="true">https://onlinetamilnovels.com/community/topicid/274/</guid>
                    </item>
				                    <item>
                        <title>வெளிச்சம் - 34</title>
                        <link>https://onlinetamilnovels.com/community/topicid/273/</link>
                        <pubDate>Thu, 06 Aug 2026 13:33:21 +0000</pubDate>
                        <description><![CDATA[அத்தியாயம் 34
&nbsp;
காலை விடியல் மிகவும் மகிழ்ச்சியாக விடிந்தது சிவன்யாவிற்கு. நீண்ட நாள் கழித்து நேற்று உன்னிகிருஷ்ணன் சொன்னது போல் நிம்மதியாக உறங்கி இருந்தாள். 
&nbsp;
காலையில் மகிழ்ச...]]></description>
                        <content:encoded><![CDATA[<p>அத்தியாயம் 34</p>
<p>&nbsp;</p>
<p>காலை விடியல் மிகவும் மகிழ்ச்சியாக விடிந்தது சிவன்யாவிற்கு. நீண்ட நாள் கழித்து நேற்று உன்னிகிருஷ்ணன் சொன்னது போல் நிம்மதியாக உறங்கி இருந்தாள். </p>
<p>&nbsp;</p>
<p>காலையில் மகிழ்ச்சியாக எழுந்து காலை வேலைகளை முடித்தாள். இன்று மதியத்துக்கு மேல் தேவ் வீட்டிற்கு வந்து விடுவான் என்று நேற்று அவனது அலுவலகத்தில் கூறியதாக உன்னி கிருஷ்ணன் சொல்லியிருந்தான். </p>
<p>ஆகையால் இன்று அவனுக்கு பிடித்தது போல் சமையல் செய்யலாம் என்று மதிய உணவிற்காக காலை 7 மணியிலிருந்து சமையல் செய்ய தொடங்கி விட்டாள். </p>
<p>&nbsp;</p>
<p>இன்று இரவு ஜோவிற்கு விமானம் என்பதால் அவனும் இறுதிக்கட்ட பேக்கிங் முடித்து பெட்டிகள் அனைத்தையும் தயாராக வைத்தான். சிவன்யா கிச்சனில் வேலை செய்து கொண்டிருப்பதை பார்த்து அவளிடம் வந்து "இன்று இரவு நான் ஊருக்கு போய்விடுவேன்" என்று கூற, </p>
<p>அவளும் அவனுக்கு காபி கலக்கி கொடுத்துவிட்டு "பத்திரமா போயிட்டு வாங்க" என்றாள். </p>
<p>&nbsp;</p>
<p>அவள் கூறியதும் அவளிடம், "ஐ அம் சாரி" என்று மன்னிப்பு வேண்டினான். </p>
<p>&nbsp;</p>
<p>"எதற்கு சாரி சொல்றீங்க?" என்று அவனைப் பார்த்தாள் சிவன்யா. அவனோ பதில் ஏதும் சொல்லாமல் அவனது அறைக்குச் சென்று விட்டான். </p>
<p>இவளும் தோள்களை குலுக்கி விட்டு வேலை அனைத்தையும் முடித்து உன்னிகிருஷ்ணனுக்கு போன் செய்தாள். </p>
<p>&nbsp;</p>
<p>"சமையல் வேலை அனைத்தும் முடிந்து விட்டது. அவர் எப்ப வருவார் என்று ஏதாவது சொன்னார்களா?" என்றாள். </p>
<p>&nbsp;</p>
<p>"அனைத்து வேலைகளும் முடித்து வர, எப்படியும் சாயங்காலமாகும் என்று சற்று முன்புதான் சொன்னாங்க" என்று கூறி "நான் நாளைக்கு ஊருக்கு செல்வதால் கொஞ்சம் பொருட்கள் வாங்க வேண்டும். அதனால் நான் கடைக்குச் செல்கிறேன். அதனால் பின்னர் அழைக்கிறேன்" கூறி வைத்தான். </p>
<p>&nbsp;</p>
<p>வேலை அனைத்தும் முடிந்ததாலும், ஜோவும் அவனது அறையை விட்டு வெளியே வராதாலும், தனியே இருக்க சிவன்யாவிற்கு போர் அடித்ததால், </p>
<p>ஏற்கனவே உன்னிகிருஷ்ணன் ஊருக்கச் செல்லும் பொழுது சில பொருட்கள் வாங்கி தருவதாகவும். அவன் ஊருக்குச் சென்றதும் அவற்றை தங்கள் வீட்டிற்கு அனுப்பி விடுமாறும் கேட்டிருந்தாள். இந்த பத்து நாட்களும் தேவின் விஷயமாகவே அலைந்திருந்ததால் அதைப் பற்றி சுத்தமாக மறந்திருந்தாள். இப்பொழுது தேவ் எப்படியும் நேரம் ஆகும் என்பதால், உன்னிகிருஷ்ணனுடன் சென்று தேவையானவற்றை வாங்கி அவனிடமே கொடுத்து அனுப்பி விடலாம் என்று நினைத்து, மீண்டும் அவனுக்கு அழைத்து விஷயத்தை கூற அவனும் சரி தயாராக இரு சென்று வருவோம் என்று சொல்லிவிட்டான்.  </p>
<p>&nbsp;</p>
<p>சரியாக நேரம் அவளது தாயும் அவளுக்கு ஃபோன் செய்ய, அவரிடமும் மிகவும் மகிழ்வாக பேசினாள். </p>
<p>"என்ன சிவன்யா? இன்று உன் குரல் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது! ஏதாவது விசேஷமா?" என்ற சிவகாமி மகிழ்ச்சியாக. </p>
<p>&nbsp;</p>
<p>அவர் அப்படி கேட்டதும், அவளுக்கு இதுவரை கணவன் தன்னிடம் முகம் கொடுத்து கூட பேசவில்லையே என்ற வருத்தத்தையும் மீறி சிறிது வெட்கம் வந்தது. அதில் அவள் தாயிடம் "போங்கம்மா அதெல்லாம் ஒன்றுமில்லை, ஏன்? உங்கள் மகள் சந்தோஷமாக இருக்கக் கூடாதா?" என்றாள் கிண்டலாக. </p>
<p>&nbsp;</p>
<p>"நீ சந்தோஷமாக வாழ வேண்டும் என்று தானே நானும் அப்பாவும் தினமும் கடவுள்கிட்ட வேண்டிக்கிட்டு இருக்கோம்" என்ற தாயிடம் சிறிது நேரம் பேசிவிட்டு வைத்தாள். </p>
<p>&nbsp;</p>
<p>பின்னர் மகிழ்ச்சியாகவே உன்னிகிருஷ்ணனுடன் கிளம்பி தன் அம்மாவிற்காகவும் தன் குடும்பத்தினருக்காக மட்டுமல்லாது, நளினிக்காக குங்குமப்பூ, பேரீச்சம்பழம் போன்ற அனைத்தையும் வாங்கினாள். பின்னர் உன்னிகிருஷ்ணனின் மனைவி பிள்ளைகளுக்கும் சில பொருட்கள் வாங்கி அவனிடம் கொடுத்தாள். </p>
<p>&nbsp;</p>
<p>கை நிறைய பைகளையும், மனம் நிறைய மகிழ்ச்சியையும் சுமந்து கொண்டு வீட்டை நோக்கி கிளம்பினார்கள். </p>
<p>"நாளைக்கு இந்நேரம் நான் ஏர்போர்ட்டுக்கு போயிருப்பேன்" என்று மகிழ்ச்சியாக கூறினான் உன்னிகிருஷ்ணன்.  </p>
<p>&nbsp;</p>
<p>பின்னர் அவனது மனைவி குழந்தைகள் குடும்பம் என்று பேச்சு தொடர்ந்தது. அப்படியே இவளது குடும்பத்தின் பேச்சும் வர, "அண்ணா, நீங்கள் ஊருக்குச் சென்ற பிறகு, ஓய்வாக இருக்கும் பொழுது இவற்றை அனுப்பி விடுங்கள் போதும்" என்று மாமியார் வீட்டிற்கு ஒரு கவரும், தன் தாய் வீட்டிற்கு ஒரு கவரும் என்று இரு கவர்களை அவன் கையில் கொடுத்தாள். </p>
<p>&nbsp;</p>
<p>பின்னர் "நீங்கள் ஏற்கனவே உங்கள் வீட்டிற்கு என்று வாங்கியிருப்பீர்கள். அதனுடன் இதையும் எடுத்துச் செல்ல முடியுமா?" என்றா சந்தேகமாக. </p>
<p>&nbsp;</p>
<p>"அதெல்லாம் பரவாயில்லை, எடை அதிகமாக இருந்தால் அதற்குரிய பணம் கட்டிக் கொள்ளலாம், கவலைப்படாதே!" என்று பேசிக்கொண்டு இருக்கும் போதே அவர்களது வந்த டாக்ஸி அவர்கள் குடியிருப்புக்குள் நுழைந்தது. </p>
<p>&nbsp;</p>
<p>தாங்கள் வாங்கி வந்த பொருட்களை எல்லாம் எடுத்துக்கொண்டு டாக்ஸிக்கு பணம் செலுத்தினான் உன்னிகிருஷ்ணன். அந்நேரம் அவனுக்கு</p>
<p>ஃபோன் வந்தது. அவனது மனைவிதான் பேசினாள். உடனே "அண்ணி, கவலைப்படாதீர்கள், நாளைக்கு அண்ணன் அங்கு வந்துவிடுவார்" என்று கிண்டலாக சத்தமாக பேசிய சிவன்யா லிஃப்ட் நோக்கி நடந்தாள். </p>
<p>&nbsp;</p>
<p>அவளின் கிண்டலில் சிரித்தபடி ஃபோனில் மனைவியுடன் பேசிக்கொண்டே அவனும் மெதுவாக நடந்தான். முதலில் தங்கள் வீடு இருக்கும் தளத்திற்கு வந்தவள், கையில் இருந்த பைகளை சுவரில் சாய்த்து வைத்துவிட்டு, தன் கைப்பையில் இருந்து வீட்டுச் சாவியை எடுத்து திறந்த சிவன்யா, அங்கு கண்ட காட்சியில் அலறிவிட்டாள். </p>
<p>&nbsp;</p>
<p>அங்கே தேவ்வும் ஜோவும் அரைகுறை ஆடையில், அந்தரங்க நிலையில் இருந்தனர். அதை கண்ட சிவன்யா வேர்வை வழிய, உடல் நடுங்கியபடி தன் காலடியில் உள்ள பூமி பிளந்தது போல் கீழே விழ பார்த்தாள். அவளின் பின்னாடியே வந்த உன்னிகிருஷ்ணன் அவளை தாங்கி பிடிக்க, அவள் கண்ட காட்சியில் அருவருத்து அப்படியே வாந்தி எடுத்து விட்டாள். </p>
<p>&nbsp;</p>
<p>என்ன நடந்தது என்று ஒன்றும் புரியாமல் அவளை கைத்தாங்கலாக அமர வைத்த உன்னிகிருஷ்ணன் வேகமாக அடைத்த ஜோவின் அறையை வைத்து ஓரளவுக்கு யூகித்து விட்டான். அவனுக்கும் அது தர்ம சங்கடமாக இருக்க, அவளை கவலையாக பார்த்தான். அவளோ எங்கோ வெறித்து பார்த்தபடி அமர்ந்திருக்க, "சிவன்யா" என்றான் மென்மையாக. </p>
<p>&nbsp;</p>
<p>அவள் சங்கடமாக உன்னிகிருஷ்ணனை பார்க்க, "உள்ளே போய் உட்காருமா" என்று அவளை தூக்கி விட குனியும் பொழுது, வேகமாக பின் நகர்ந்தாள் சிவன்யா. அவளது செயல் அவனுக்கு வருத்தமாக இருக்க, </p>
<p>"நீ உள்ளே போமா, நான் இங்கே கிளீன் பண்ணிட்டு வாரேன்" என்று அவளை பார்க்க, வேகமாக எழுந்த சிவன்யா தனது அறைக்குச் சென்று கதவை அடைத்துக் கொண்டு கதறி அழுதாள் . </p>
<p>&nbsp;</p>
<p>அவள் அழும் சத்தம் வெளியே கேட்க, பெருமூச்சு விட்ட உன்னிகிருஷ்ணன் கொண்டு வந்த பைகளை எடுத்து வீட்டினுள் வைத்து விட்டு தரையை சுத்தப்படுத்தினான். </p>
<p>&nbsp;</p>
<p>அவன் வேலையை முடிக்கவும் தேவ் வெளியே வரவும் சரியாக இருக்க, "உனக்கு எத்தனை தடவை சொன்னேன், அவளிடம் சொல்லிவிடு என்று. கேட்டாயா! பார், எந்த நிலைமையில் அவளை வைத்திருக்கிறாய்" என்று சிவன்யாவின் அறையை காண்பித்து கோபமாக திட்டினான். </p>
<p>&nbsp;</p>
<p>தேவ் மௌனமாக தலை குனிந்து நின்றான். </p>
<p>"உங்கள் சுயநலத்திற்காக, நீயும் உன் குடும்பமும் சேர்ந்து ஒரு சின்ன பெண்ணோட வாழ்க்கையை வீணடித்திருக்கிறீர்கள்" என்று சொல்லிவிட்டு "இப்பொழுது என்ன செய்வதாக உத்தேசம்" என்றான் கோபமாக.  </p>
<p>&nbsp;</p>
<p>"நான் என்னடா செய்வேன்? நான் சொல்வதை அப்பா கேட்டா தானே!" என்றான். </p>
<p>&nbsp;</p>
<p>"எவ்வளவு சுலபமாக சொல்லிவிட்டாய்? கொஞ்சம் உன்னைப் பற்றி உன் அப்பா கிட்ட சொல்லி இருந்தா, இந்த கல்யாண பேச்சையே எடுத்து இருக்க மாட்டார் இல்ல, சிவன்யா வாழ்க்கையாவது தப்பித்து இருக்கும்" என்றான் அதற்கும் கோபமாக. </p>
<p>&nbsp;</p>
<p>"இதை எப்படிடா அப்பா கிட்ட சொல்றது? அவங்க எல்லாம் அந்த காலத்து ஆள். அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது" </p>
<p>&nbsp;</p>
<p>"அதை எப்படி நீ முடிவு செய்தாய்? அவர்களும் படித்தவர் தானே! நிச்சயம் புரிந்து இருப்பார். அட்லீஸ்ட் கல்யாணத்தையாவது நடத்தாமல் விட்டிருப்பார்" என்றான் சோகமாக. </p>
<p>&nbsp;</p>
<p>அவனுக்கு ஒரு பெண்ணின் வாழ்க்கையை வீணாக்கி விட்டார்களே என்ற ஆத்திரம். சிவன்யா இங்கு வந்ததிலிருந்து தேவ்விடம் எப்படியாவது அவளிடம் சொல்லி, சீக்கிரம் இங்கிருந்து அனுப்பு. அப்பத்தான் அவளுக்கு வேறு வாழ்க்கையாவது அவர்கள் வீட்டில் அமைத்துக் கொடுக்க முடியும். நாட்கள் சென்றால் இன்னொருவனோடு வாழ்ந்தவளுக்கு திருமணமா? என்று வரன்கள் தட்டிப் போகும் என்று, கூறிக் கொண்டே தான் இருந்தான். </p>
<p>&nbsp;</p>
<p>நேரம் பார்த்து சொல்வதாக தேவ்வும் சொல்லிக் கொண்டு இருக்க, கடைசியில் கண்கூடாக சிவன்யாவே பார்த்து விட்டாள். </p>
<p>&nbsp;</p>
<p>பெருமூச்சு விட்ட உன்னிகிருஷ்ணன், "இனி என்ன செய்வதாக உத்தேசம்" என்றான் தேவ்வை அழுத்தமாகப் பார்த்து. </p>
<p>&nbsp;</p>
<p>- தொடரும்..</p>
<p>&nbsp;</p>
<p>- அருள்மொழி மணவாளன்..</p>]]></content:encoded>
						                            <category domain="https://onlinetamilnovels.com/community/%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b2%e0%af%88%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80-%e0%ae%85%e0%ae%b0%e0%af%81/">தொலைதூர வெளிச்சம் நீ - அருள்மொழி மணவாளன்</category>                        <dc:creator>Arulmozhi Manavalan</dc:creator>
                        <guid isPermaLink="true">https://onlinetamilnovels.com/community/topicid/273/</guid>
                    </item>
							        </channel>
        </rss>
		