<?xml version="1.0" encoding="UTF-8"?>        <rss version="2.0"
             xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
             xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
             xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
             xmlns:admin="http://webns.net/mvcb/"
             xmlns:rdf="http://www.w3.org/1999/02/22-rdf-syntax-ns#"
             xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/">
        <channel>
            <title>
									தகிக்கும் நிலவொன்று -Praveena Thangaraj - onlinetamilnovels.com Forum				            </title>
            <link>https://onlinetamilnovels.com/community/%e0%ae%a4%e0%ae%95%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%b5%e0%af%8a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-praveena-thangaraj/</link>
            <description>onlinetamilnovels.com Discussion Board</description>
            <language>en-US</language>
            <lastBuildDate>Sat, 12 Sep 2026 11:22:28 +0000</lastBuildDate>
            <generator>wpForo</generator>
            <ttl>60</ttl>
							                    <item>
                        <title>தகிக்கும் நிலவொன்று-50 (முடிவுற்றது)</title>
                        <link>https://onlinetamilnovels.com/community/topicid/338/</link>
                        <pubDate>Fri, 28 Aug 2026 08:44:38 +0000</pubDate>
                        <description><![CDATA[அத்தியாயம்-50
ருத்ரனின் நிச்சயதார்த்தம் பெரிய அளவில் ஆடம்பரமாக இல்லாமல், மிகவும் எளிமையாகவே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நெருங்கிய உறவினர்கள், கீர்த்தனாவுக்கும், இறந்து போன ராகவனுக்கும் நெ...]]></description>
                        <content:encoded><![CDATA[<p>அத்தியாயம்-50</p>
<p>ருத்ரனின் நிச்சயதார்த்தம் பெரிய அளவில் ஆடம்பரமாக இல்லாமல், மிகவும் எளிமையாகவே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.</p>
<p>நெருங்கிய உறவினர்கள், கீர்த்தனாவுக்கும், இறந்து போன ராகவனுக்கும் நெருக்கமானவர்கள், ருத்ரனின் சில நண்பர்கள், அவ்வளவுதான்.</p>
<p>அந்த சிறிய விழாவின் ஏற்பாடுகள் அனைத்தையும் முன்னின்று கவனித்துக் கொண்டிருந்தவன் யதுநந்தன்.</p>
<p>ருத்ரனுக்கு துணையாக அவன் இல்லாத வேலை எதுவுமே தற்போது இல்லை.</p>
<p>கீர்த்தனா பெண் வீட்டாருக்குக் கொடுக்க வேண்டிய நிச்சயதார்த்த சேலை மற்றும் வளையல் பூக்கள் இத்யாதி பொருட்கள் அனைத்தும் தயாராகிக் கொண்டிருந்தது.</p>
<p>சேலை, நகைகள், இனிப்பு, பழங்கள் எல்லாவற்றையும் மேடையில் சரிபார்த்துக் கொண்டிருந்த கீர்த்தனா, நேரம் கூடவும், தாய்மாமன் முறையில் உள்ளவரை அழைத்து, கார்த்திகாவுக்கான சேலையை எடுத்துக் கொடுக்க மணப்பெண் அறைக்குச் சென்றாள்.</p>
<p>ஆம் ருத்ரனுக்காக கீர்த்தனா பார்த்த பெண் கார்த்திகா.</p>
<p>காக்கி சீருடையில், முடியை கொண்டையாக கட்டி, தொப்பி அணிந்து, காதோரத்தில் சிறிய கம்மலும் நெற்றியில் சின்ன பொட்டுமாக ஐந்து முறை பார்த்திருந்த அதே பெண். </p>
<p>சிறையில் கைதிக்கு உணவளிக்க சென்ற நாள், ஷ்ரத்தாவுக்கு வளைகாப்பு விழா செய்த நாள், பிரசவம் ஆனதும் ராயனை கையில் ஏந்திய பொழுதும், ராயனின் இரண்டாவது பிறந்தநாளிலும் சந்தித்து இருந்தார். அதனாலேயே முகம் காக்கி உடையில் பதிந்திருக்க, புகைப்படத்தில் முழுக்க வேறொரு தோற்றத்தில் இருந்தாள். தலைவிரித்து, மல்லிப்பூ சூடி, பட்டுச் சேலையில்... மணப்பெண் அலங்காரத்தில் புகைப்படத்தில் கண்டதும் கீர்த்தனாவுக்கு எங்கேயோ பார்த்த நினைவு மட்டுமே. </p>
<p>பிறகு ருத்ரனே "அம்மா..‌ இது கார்த்திகா ஜெயில்ல ஷ்ரத்தாவை பார்க்க போறப்ப பார்க்கலையா'' என்று கேட்க, "என் போக்கஸ் எல்லாம் ஷ்ரத்தா தானடா இருந்தா. அதுவும் இல்லாம இந்த பிள்ளை இப்ப தானே சேலையில் பார்க்கேன்" என்றார்.</p>
<p>"அவளை பிடிச்சிருக்குனு சொல்லு" என்று அழுத்தம் தர, தன் காதல் படுத்தோல்வி என்று தெரிந்தப்பின் அன்னையிடம் ''நான் ஷ்ரத்தாவை ஒன்சைடா லவ் பண்ணி பின்னாடி சுத்தியது இவளுக்கு தெரியும். முதல்ல அவ நோ சொல்வா.. தேவையில்லாம அசிங்கப்படாதிங்க" என்றான். </p>
<p>"ஒருவேளை ஓகே சொன்னா" என்று கீர்த்தனா கேட்க, "ஓகே.. சொன்னா.. வேற என்ன பண்ண? ஓகே சொல்லறேன்" என்றான் வேறு வழியின்றி. </p>
<p>அதன்பிறகு கார்த்திகா சம்மதித்தாக கேள்விப்பட்டு மடமடவென நிச்சயதார்த்த வேலை ஆரம்பமானது. ஒருமுறை மட்டும் ருத்ரன் வந்து, "நான் ஷ்ரத்தாவை விரும்பியும் ஏன் என்னை அக்சப்ட் பண்ணின?'' என்று கேட்டான். </p>
<p>"எங்க அக்கா கல்யாணமாகி தனியா இருக்காங்க. வீட்ல நான் மட்டும் தான். வீட்டுக்குப் போய் ரிலாக்ஸா இருக்கவே பிடிக்காம தான் ஜெயிலுக்குள்ளேயே அதிக நேரம் இருந்தேன்.</p>
<p>ஆனா இப்ப... எனக்குனு ஒருத்தரை கல்யாணம் பண்ணிக்கிட்டு... குடும்பம்.. குழந்தை... இப்படி வாழணும்னு ஆசை வந்திருக்கு.</p>
<p>எங்க அக்கா வீட்டுக்காரர்தான் பொண்ணு மாதிரி லட்சணமா சேலை கட்டி தரகர் போட்டோ கேட்டதா சொன்னார். அதான் போட்டோ அப்படி கொடுத்தேன்.</p>
<p>எப்படியும் ஷ்ர்த்தாவை நீங்க திரும்ப காதலிக்க முடியாது‌. சீசீ இந்த பழம் புளிக்கும்னு யாரையாவது கட்டிக்க போறிங்க. எனக்கு தெரிந்த முகம் என்றதும், எப்படி சிக்கியிருக்க பார்த்தியானு தோணுச்சு. சோ.. இதெல்லாம் நினைச்சு பார்த்து சிரிக்க, உங்களை ஓட்டறதுக்கு நல்லா இருக்கும்னு தோணுச்சு." என்றாள். </p>
<p>ருத்ரனோ அதன்பின் இப்பொழுது தான் நிச்சயதார்த்தம் என மணப்பெண்ணை காண போகின்றான்.‌ </p>
<p>கார்த்திகாவை பார்த்த கீர்த்தனாவின் முகத்தில் நிறைவாக மலர்ந்தது.</p>
<p>அதே நேரம் விழா நடைபெறும் இடத்தில் ருத்ரனும் யதுநந்தனும் வாசலை நோக்கிப் பார்த்துக் கொண்டிருந்தனர்.</p>
<p>"ஷ்ர்த்தா இன்னும் வரலையே..." என்று ருத்ரன் கடிகாரத்தைப் பார்த்தான்.</p>
<p>யதுநந்தன் சிரித்தபடி, தாடை பற்றி மேடை பக்கம் காண வைக்க, அங்கே கார்த்திகா பட்டுயுடுத்தி நடந்து வந்தாள். </p>
<p>ருத்ரனோ மேலிருந்து கீழ்வரை பார்த்து முடித்து, ஷ்ரத்தாவிற்கு போனை போட்டான்.</p>
<p>ஷ்ரத்தாவின் போன் ஒலித்தது. "சொல்லு ருத்ரா" என்றாள் </p>
<p>"என் ஃபங்ஷனுக்கு வருவியா? மாட்டியா?" அந்தக் குரலைக் கேட்டதும் ஷ்ரத்தா கண்களை மூடினாள்.</p>
<p>"டார்ச்சர் கேரக்டர் டா நீ! வரமாட்டங்க... அதுக்குள்ள என்ன அவசரம்?" என்றாள். அவள் பேசிக் கொண்டிருக்கும் போதே அருகில் இருந்த தியாவோ "டேடி... நாம எங்க போறோம்?" என்று கேட்டாள். </p>
<p>அதற்கு ராயன் உடனே, "ருத்ராக்கு எங்கேஜ்மெண்ட்னு அம்மா சொன்னாங்க" என்று சொல்லிவிட்டான்.</p>
<p>அந்த வார்த்தை ருத்ரனின் காதில் தெளிவாக விழுந்தது.</p>
<p>அவன் முகத்தில் உடனே நிம்மதி. "வந்துட்டு இருக்காளா" என்று யதுநந்தன் கேட்க ஆமோதிப்பாய் தலையசைத்து சிரித்தான்.</p>
<p>யதுநந்தன் அவனைப் பார்த்து சிரித்துவிட்டு, மீண்டும் ருத்ரனின் தாடையைப் பிடித்து அவனது முகத்தை கார்த்திகா பக்கம் திருப்பினான்.</p>
<p>"அங்க பாரு." ருத்ரன் புரியாமல் திரும்பிப் பார்த்தான்.</p>
<p>மணப்பெண் அலங்காரத்தில் கார்த்திகா நிற்க, அந்தப் பக்கம் வந்து கொண்டிருந்தாள்.</p>
<p>ருத்ரனின் அம்மா கீர்த்தனா "அவனையும் மேடையில போகசெல்லுப்பா‌" என்றார். </p>
<p>அந்த நேரத்தில் விழா நடக்கும் இடத்தின் வாசலில் கார்கள் வந்து நின்றன. சத்ரியனும் ஷ்ரத்தாவும் பாதுகாப்பு படையுடன் இறங்கினர்.</p>
<p>அவர்களுடன் ராயனும் தியாவும். யதுநந்தன் அவர்களைப் பார்த்ததும் சிரித்தான்.</p>
<p>"நீ மாப்பிள்ளை டா இங்கயே இரு." என்று ருத்ரனிடம் சொல்லிவிட்டு, "நான் போறேன்." என்று ஷ்ரத்தாவை நோக்கி நடந்தான்.</p>
<p>சத்ரியன், ஷ்ரத்தா இருவரும் கைகளில் குழந்தைகளை பிடித்துக் கொண்டு உள்ளே வந்தனர்.</p>
<p>தியாவோ யதுநந்தனை பார்த்ததும், "ஹாய் யது!" என்று ஓடினாள்.</p>
<p>ராயன் "ஏய் ருத்ரா!" என்று ஓடினான். அந்த நேரத்தில்தான் ருத்ரனை கார்த்திகாவுக்கு மோதிரம் போட மேடைக்கு அழைத்தனர்.</p>
<p>ராயன் அவனிடம் ஓடிவந்ததும், ருத்ரன் அவனை தூக்கிக் கொண்டே மேடைக்குச் சென்றான்.</p>
<p>மேடையில் நின்றதும், ராயனின் பார்வை கார்த்திகாவிடம் சென்றது.</p>
<p>அவன் ருத்ரனின் சட்டையை பிடித்து வேகமாக இழுத்தான்.</p>
<p>"நீ கார்த்திகாவைத்தான் கல்யாணம் பண்ணப் போறியா?" என்று கேட்டதும் ருத்ரன் சிரித்தான்.</p>
<p>"ஆமா. ஏன்? அவளை பிடிக்கலையா?" என்று ருத்ரன் கேட்க ராயன் உடனே தலையசைத்தான்.</p>
<p>"நோ... நோ பிடிச்சிருக்கு. நான் ஹாஸ்டல்ல இருந்தப்ப கார்த்திகா எனக்கு போலீஸ் கேப் தருவாங்க. நான் மாட்டிப்பேன்."</p>
<p>அவங்க என்னோட பிரெண்ட் தெரியுமா?" என்றதும் ருத்ரன் சிரித்தான்.</p>
<p>"தெரியும்." என்றான் ருத்ரன்</p>
<p>"அப்படின்னா இப்போ போட்டோவுக்கு போஸ் கொடுப்போம்." என்று ராயனை அருகில் நிறுத்தி காதலர் சிம்பளை காட்டினான்.</p>
<p>அந்த காட்சியை பார்த்த ஷ்ரத்தா, "ராயன்... இங்க வா." என்று அழைத்தாள். போட்டோவுக்கு ஒரு போஸ் தந்துவிட்டு, ராயனும் மேடையில் இருப்பதே தெரியாதவன் போல மெதுவாக நழுவி கீழே இறங்கிவிட்டான்.</p>
<p>சுற்றிலும் உறவினர்கள் சிரித்தபடி புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.</p>
<p>சில நிமிடங்களுக்குப் பிறகு யதுநந்தன் தியாவிடம் பேசிக் கொண்டிருந்தான்.</p>
<p>சத்ரியன் கடிகாரத்தைப் பார்த்தான். "டென் மினிட்ஸ்ல கிளம்புவேன். போகலாம்" என்றான். </p>
<p>ஷ்ரத்தா உடனே அவனைப் பார்த்தாள். "ஏன்டா? நானே வீட்டுக்கு வந்து குளிச்சிட்டு அப்படியே ஓடி வர்றேன். உடனே போகணுமா? மரியாதையா கொஞ்ச நேரம் இரு. ப்ளீஸ்." என்றதும் சத்ரியன் அவளை பார்த்தான்.</p>
<p>அவள் கேட்ட விதத்தில் மறுக்க முடியாமல் அமைதியாக நின்றான்.</p>
<p>அதற்குள் மோதிரம் மாற்றும் நிகழ்ச்சி முடிந்தது. உறவினர்கள் அனைவரும் சாப்பிடச் செல்ல ஆரம்பித்தனர்.</p>
<p>ருத்ரனும் கார்த்திகாவும் புகைப்படங்களுக்காக அழைக்கப்பட்டனர். அதையும் கடனேயென நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டான் சத்ரியன்</p>
<p>சத்ரியன் மீண்டும், "ஷ்ரத்தா... கிளம்பலாமா?" என்று கேட்டான்.</p>
<p>"சாப்பிடாம போனா... அந்த டார்ச்சர் இருக்கானே... நீங்க எல்லாம் என் வீட்டுக்கு வந்தா சாப்பிடாம போவிங்கனு பேசுவான் சத்ரியா. அதனால சாப்பிட்டுட்டு போகலாம். எதிரி வீட்ல தான் கை நனைக்க மாட்டாங்க. அவன் உன்னை எதிரியா பார்க்கலை" என்றாள். </p>
<p>சத்ரியன் பெருமூச்சு விட்டான். ருத்ரனும் கார்த்திகாவும் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டிருந்தனர்.</p>
<p>யதுநந்தன் அருகில் நின்று தியாவுடன் பேசிக் கொண்டிருந்தான்.</p>
<p>ஷ்ரத்தா ராயனை அழைத்துக் கொண்டிருந்தாள்.</p>
<p>அந்தச் சிறிய விழா.. அந்த நேரத்தில்... முழுமையாக இயல்பாகத்தான் இருந்தது.</p>
<p>ஆனால்... சத்ரியனின் கண்கள் மட்டும் அந்த கூட்டத்துக்குள் சில முகங்களை கவனித்துக் கொண்டிருந்தன.</p>
<p>அவன் மெதுவாக ஷ்ரத்தாவிடம் திரும்பினான். "இங்க இருக்கிற சில பேர் என்னை கொலைகாரனா பார்க்கிறாங்க."</p>
<p>ஷ்ரத்தா அவனைப் பார்த்தாள்.</p>
<p>"ஐ ஹேட் திஸ்." அவனது குரல் சற்று தாழ்ந்தது.</p>
<p>"ராகவனை கொன்றது நான். அப்படியிருக்க... இந்த ஃபங்ஷனுக்கு நான் தேவையில்லாதவன். ஏன்டி என்னை இங்க கூட்டிட்டு வந்த?" என்று அந்த வார்த்தைகள் முடிவதற்குள் கூட்டத்துக்குள் இருந்து ஒரு பெண் வேகமாக அவனை நோக்கி வந்தாள்.</p>
<p>அவளது கையில் ஏதோ ஒன்று மின்னியது. ஷ்ரத்தாவுக்கு அது புரியும் முன்பே... அந்தக் கை சத்ரியனின் வயிற்றை நோக்கி பாய்ந்தது. சத்ரியன் ஒரு கணத்தில் சுதாரித்தான். அவன் ஷ்ரத்தாவை தன்னிடமிருந்து தள்ளிவிட்டான். அவனும் ஒரு அடி பின்னால் நகர்ந்தான்.</p>
<p>ஆனால் அந்தப் பெண்ணின் கை மீண்டும் அவனது வயிற்றை நோக்கி வந்தது.</p>
<p>இந்த முறை தப்பிக்க அவனுக்கு நேரமில்லை. சத்ரியன் வயிற்றை கிழித்தது. </p>
<p>சத்ரியனோ தன் ஷர்டை தீண்ட அது கிழிப்பட்டிருந்தது. கையை வைத்து முடிக்க அதில் சிவப்பாக ரத்தம் வெளிப்பட்டது. </p>
<p>யதுந்நதனோ 'ஓ மை காட்" என்று பதற, சத்ரியனோ அவ்விடத்தை கலவரமாக்காமல் பக்கத்து அறையான மணமகன் அறைக்குள் ஷ்ரத்தாவை குழந்தையை தள்ளி உள்ளே சென்றான்.‌</p>
<p>யோகேஷ் அதற்குள் அந்த பெண்ணை பிடித்து அறைந்து கையை கட்டினான். </p>
<p>கீர்த்தனா வந்தவரை வரவேற்று உபசரித்து, பிஸியாக இருக்க, ருத்ரனும் கார்த்திகாவும் அப்பொழுது தான் வந்தவர்கள் போட்டோ எடுத்து சென்றதும் தனித்து இருக்க, சரியாக சத்ரியன் பதட்டமாக ஷ்ரத்தாவை அறைக்குள் தள்ளியதை கவனித்து, வேகமாக வர, கார்த்திகாவும் உடன் வந்தாள். </p>
<p>''அய்யோ... சத்ரியா... ரத்தம்." என்று பதறி அழுதாள் ஷ்ரத்தா. </p>
<p>"உஸ்ஸ்... வாயை மூடறியா?" என்று அதட்டினான். </p>
<p>யோகேஷ் கை வளைவில் இருந்த பெண்ணோ, "வலிக்குதா... எங்கப்பா பைரவை கொல்லும் போது எனக்கும் இப்படி தான் வலிச்சது" என்று கத்தினாள். </p>
<p>"யார்டா.. பைரவ்?" என்று யோகேஷை கேட்டு முடிக்க, "தெ..தெரிலை பாஸ்" என்றான். </p>
<p>ருத்ரனோ "கணக்கு வழக்கில்லாம கொலை செய்து சாகடிச்சா.. இப்படி தான். யாருனே தெரியலை.. எல்லாம் உன்னை கைது பண்ண எங்கப்பாவிடம் அப்ரூவரான டிரைவர் பைரவ்" என்றதும், "உப்ஸ்... அவனா.. அப்ப இந்த ரிவேன்ஜ் உன்னோட திட்டமா?" என்று சத்ரியனின் ருத்ரனிடம் கேட்க, ருத்ரனோ "இந்த நிலையிலும் இப்படி தான் யோசிப்பியா? ஷ்ரத்தாவை மீண்டும் பொட்டு இல்லாம நிற்க வைக்க எனக்கென்ன பைத்தியமா?" என்றான் கோபமாக.</p>
<p>"தீபா நந்திதா.. நீங்க இரண்டு பேரும் ராயனையும் தியாவையும் அழைச்சிட்டு அந்த தடுப்புக்கு பின்னால போங்க. லட்சுமிக்கா.. நீங்க நம்ம கார்ல என்னோட மெடிக்கல் டூல் இருக்கும் எடுத்துட்டு வாங்க" என்று கட்டளையிட்டாள்.</p>
<p>அந்த பொண்ணோ மூச்சு வாங்க, "அந்தண்ணாவை திட்டாத. நான் தான்... நான் தான் நீ உயிரோட இருக்கனு கேள்விப்பட்டதுலயிருந்து உன்னை கொல்ல சந்தர்ப்பம் பார்த்தேன். இந்த அண்ணாவிடம் உதவி கேட்க வந்தேன். ஆனா உன் மனைவியோட நட்பா பேசவும், உதவி கேட்கலை. ஆனா இவங்களை கவனிச்சப்ப ருத்ரன் அண்ணா நிச்சயத்திற்கு இவங்களும் நீயும் வருவேனு தான் இங்க சமையக்காரியா கொல்ல வந்தேன்." என்றாள். </p>
<p>சத்ரியனோ நிதானமாக கேட்டுவிட்டு, "உங்கப்பாவுக்கு சொந்தமா.. வீடு கொடுத்திருந்தேன். கொடுத்தேனா இல்லையா?" என்றதும் அந்த பெண்ணோ 'கொடுத்திருந்திங்க" என்றாள். </p>
<p>"சம்பளமே அதிகமா தந்தேனா இல்லையா?'' என்று கேட்க அப்பெண் அமைதியாக இருந்தாள். வீடும் நல்ல சம்பளமும் தந்தப்பின் துரோகி ஆனது அவர் தந்தையின் தவறாயிற்றே என்றதை சுட்டிக்காட்டினான். </p>
<p>"அப்பறம் என்ன மயிருக்கு உங்கப்பன் எனக்கு விசுவாசமா இல்லாம பணத்துக்கு விலை போனான்.. ஆங்." என்றுதும் பயந்து கத்தியை இன்னும் இறுக்கமாக பிடித்தாள். </p>
<p>"இந்த நிமிஷம்... நீ ஒரு பையனா இருந்தா இந்த இடத்துலயே நடக்கறதே வேற" என்றவன் அவள் முன் கையை கொண்டு சென்றான். அடுத்த நொடி அவள் கையிலிருந்த கத்தி சத்ரியன் வசமானது எப்படியோ?!. "இதே கத்தியால குத்தி குடலை உருவி இருப்பேன். பட் நீ பொண்ணா போயிட்டா இந்த ரிவேன்ஜ் எல்லாம் எடுக்கறதை மூட்டை கட்டிட்டு உயிர் பிழைச்சேன்னு தப்பிச்சு ஓடு" என்று அதட்ட வேகமாய் கதவை நோக்கி ஓடினாள். </p>
<p>"ஓய்... இன்னொரு முறை சப்போஸ்.. ரிவேன்ஜ் எடுக்கறேன்னு எங்கயாவது உன்னை பார்த்தேன். அப்ப இதே போல போனு சொல்லிட்டு வேடிக்கை பார்க்க மாட்டேன். யோகேஷ் அடுத்த செகண்ட் என்னை கேட்கணும்னு கூட உனக்கு அவசியமில்லை போட்டு தள்ளிடு" என்று கூற அந்த பெண் மறுப்பாய் தலையசைத்து திருப்பி பாராது ஓடினாள்.</p>
<p>இதற்கிடையே ஷ்ரத்தா சத்ரியனின் சட்டையை அப்புறப்படுத்த, கத்தி கிழித்ததை கவனித்தாள். </p>
<p>முன்பு புல்லட் தோட்ட இறங்கிய அன்று பதறி அழுதது போல இல்லாமல் காயத்தை கவனித்தாள். </p>
<p>"புல்லட் ப்ரூப், ஆர்மர் எல்லாம் எனக்கு மட்டும் தானா? நீ ஒன்னும் போடமாட்ட. இடியட் இடியட்.</p>
<p>எனிவே.. தேங்காட் ஆழமா இஞ்சுர் ஆகலை‌ ஆனாலும் தையல் போடணும்" என்று திட்டியபடி லட்சுமி கொண்டு வந்த மெடிக்கல் டூல் பாக்ஸிலிருந்து தேவையானதை எடுத்தாள். </p>
<p>"மயக்கமருந்து இல்லை.. அப்படியே தையல் போட்டா வலிக்குமே நாம ஹாஸ்பிடல் போகலாம்" என்று யதுநந்தன் கூற, "அதெல்லாம் துப்பாக்கி தோட்டாவையே கத்தி வச்சி எடுத்து போட்டுட்டு சவகாசமா இருந்தவன் இவன். எல்லாத்தையும் தாங்குவான்" என்று சத்ரியனை முறைத்தபடி, அமர கூறினாள்‌ ஷ்ரத்தா. </p>
<p>ஆளாளுக்கு ஷ்ரத்தா சத்ரியனுக்கு தையலிடுவதை காண பயந்தனர். </p>
<p>ருத்ரன் கூட, "வலிக்கும்னு நினைக்கறேன்." என்று கூற ஷ்ரத்தாவோ முதல் தையலிட சத்ரியனோ "அவுச்.. வலிக்குடி" என்றான். </p>
<p>அவள் பார்த்த முறைப்பில் கப்சிப் என்றானவன், அவளது சேலையை எடுத்து பல்லால் கடித்து வலியை பொறுத்தான். அவளோ மடமடவென தையலிட்டாள். </p>
<p>சத்ரியன் வலியால் துவள்வதையும், அதே நேரம் வலியை பொறுத்துக் கொண்டு, புஸுபுஸுவென மூச்சு வாங்குவதையும் அங்கிருந்தவர்கள் கவனித்தனர்.</p>
<p>செதுக்கி வைத்த உடலுடன் வயிற்றில் கட்டு கட்ட, சிற்சில முறைப்போடு, "எப்ப எமனோட வாக்குவாதம் நிகழ்த்தி, எவன் வந்து எந்த பக்கம் போட்டு தள்ளுவான்னு வயிற்றுல நெருப்பை கட்டிட்டு இருக்கேன். நீ ஜாலியா துப்பாக்கி தோட்டா, கத்தி குத்து எல்லாத்தையும் விழுங்கி ஏப்பமிடு" என்று கூற சத்ரியன் லேசாக சிரிக்க முயன்றான். </p>
<p>"சிரிச்சா உதைப்பேன்டா" என்றதும், என்று தோளைக் குலுக்கினான் உத்தமனான வில்லன். </p>
<p>இதை கண்ட ருத்ரனோ யதுநந்தனிடம், "வீராப்பு, கெத்து ஆட்டிடியூட், மாஸ் கிங்பின் என்ற பெயர், அடுத்தவங்களை பார்த்து அனலை விழுங்கறான். ஆனா கடைசில ஷ்ரத்தாவோட பார்வைக்கு பம்மறான் டா." என்று சிரித்தான்.‌</p>
<p>யதுந்தனோ "ஊருக்கே ராஜா ஆனாலும் தாயுக்கு பிள்ளை தானேனு சொல்வாங்க. இவன் ஊருக்கே கிங்பின்னா இருக்கலாம். ஆனா ஷ்ரத்தாவுக்கு அவளோட சத்ரியன். நல்லாவே திட்டு வாங்கட்டும்." என்று கூற, ருத்ரனோ "பார்டா.. உனக்கும் அவன் திட்டு வாங்கறது குளுகுளுனு இருக்கு தானே" என்றான்.‌</p>
<p>"நீ அங்க திரும்பி பாரு" என்று கூற கார்த்திகாவோ ருத்ரனை கண்டு புன்னகைக்க முயன்றாள். </p>
<p>அதற்குள் சத்ரியனோ "ஷ்ரத்தா‌... இதுக்கு முன்ன ஒருமுறை நான் குண்டடி பட்டப்ப நீ அழுது பதறி ஆட்டோவுல தூக்கிட்டு வந்த நினைவிருக்கா. அப்ப காலேஜ் ஜாயின் ஆன புதுசுல. ரத்தம் வெளிய தெறிக்கவும் அப்படி அழுத. அப்ப நான் உங்கப்பாவை கொன்றவன்னு நீ நினைச்சிருந்த. ஆனாலும் எனக்காக துடிச்ச.</p>
<p>இப்ப என்னடி நான் உன் புருஷன். தாலி எல்லாம் கட்டியிருக்கேன். எனக்காக சொட்டு கண்ணீர் கூட வரலை‌. சட்டையை திறந்ததும் காயத்தை பார்த்ததும் கண்ணீரை நிறுத்திட்ட" என்றான்.</p>
<p>"ம்ம்ம்.. அப்ப நான் ஸ்டூடண்டாக்கும். இப்ப எம்.பி.பி.எஸ் முடிக்க போறேனாக்கும். அதோட மிஸ்ஸஸ் சத்ரியன் நான். கழுதைக்கு வாக்கப்பட்டா உதைக்க கத்துக்கணும்" என்றாள். </p>
<p>  சத்ரியனோ 'பொண்டாட்டி திட்டினா காதுலயே விழாத மாதிரி இருந்துக்கணும். யூனிவெர்சல் பிட்டர் ட்ரூத்' என்று முனங்க, அங்கிருந்தவர்கள் சிரிக்க, அவ்விடம் இயல்பானது‌. "சாரி ருத்ரா உன் நிச்சயதார்த்தம் அப்ப இப்படி ஒரு மெமரிஸ் வந்துடுச்சு. அவர் அப்பவே கிளம்பலாம்னு சொன்னார்‌. நான் தான் கேட்கலை. எனிவே.. நான் கிளம்பறேன்." என்று கூற, "இப்ப எதுக்கு சாரி கேட்கற. ஆக்சுவலி என்னால இங்க வந்து இப்படி ஆனதுக்கு நான் சாரி கேட்கறேன். ஏன்னா.. தொந்தரவு பண்ணிட்டேன். சில இடத்துக்கு நீ குழந்தைகள் உன் ஆளு வர்றது சேப்டி இல்லை தான்." என்று கூறினான்.‌</p>
<p>"ஓகே ஓகே.. சாப்பிடுவோம்" என்று சென்றார்கள். </p>
<p>ஏற்கனவே உணவு எல்லாம் சரிபார்த்து விட்டதாக யதுநந்தன் கூற, நினைவு வைத்து சிரித்தாள். </p>
<p>"தேங்க்ஸ் யது" என்றாள்‌.</p>
<p>அடுத்து தீபா நந்திதா இருவரும் ராயனை தியாவை அழைத்து வந்தனர்.</p>
<p>யோகேஷ் பீட்டர் குழுவெல்லாம் விருந்து சாப்பிட அமர்ந்தனர். </p>
<p>கீர்த்தனா பார்த்து பார்த்து கவனித்தார். அவருக்கு அந்த நேரம் சத்ரியனுக்கு ஏற்பட்ட கொலை முயற்சி பற்றி, எந்த விஷயம் கூறவில்லை. மகன் நிச்சயதார்த்தம் நல்லபடியாக முடியவே தாயுள்ளம் பூரித்தது. </p>
<p>கார்த்திகாவுமே ருத்ரனிடம் "எங்கக்கா கல்யாணம் ஆகறப்ப வரதட்சனை எல்லாம் பெருசா கேட்டாங்க. அந்த நேரம் தான் சத்ரியன் சார் ஷ்ரத்தா மேடத்தை பார்த்துக்க கேட்டு வீடும் காரும் தந்து அக்கா கல்யாணத்தை செட்டில் பண்ணினார். அதனால தான் ஷ்ரத்தாவை நான் ஜெயிலில் நல்லபடியா கவனிக்க பேவர் பண்ணினேன். அதோட தீபா நந்திதா லட்சுமி மூன்று பேரும் உள்ள வந்தப்பவும் கண்டுக்காம மேற்பார்வையிட்டேன். யது சார் ரொம்ப ரெக்வஸ்ட் பண்ணி தான் ஷ்ரத்தாவை ரிலிஸ் பண்ண கேட்டார். அப்ப நானும் ரிலீஸுக்கு எழுதிட்டேன்." என்றாள்‌. </p>
<p>"இதை கெஸ் பண்ணிருந்தேன். யாரோ உள்ள உதவுவதா." என்றவன், புகைப்படக்காரர் ஊட்டி விட கூறும் முன் ஊட்டி விடவும், கார்த்திகா ஆச்சரியப்பட, 'என்ன பார்க்கற நீ கேட்ட அக்கறை..'' லேசாய் புன்னகை மலர்ந்து கூறினான்.</p>
<p>   ருத்ரன் அவனது காதலில் ஏற்க ஆரம்பித்தான். எப்படியும் தன்னை போலவே டிபார்ட்மெண்ட் பெண் என்பதால் தங்களுக்கு வசதியாக தான் பேச்சும் செயலும் அமையும். காதலும் அமைவது கடவுள் அருளால் நிகழ்ந்துவிட்டதே.</p>
<p>இங்கு யதுநந்தனுக்கு இரண்டு மூன்று முறை கால் வரவும், எடுத்து பார்த்தான். </p>
<p>"யாரு யது?" என்று கேட்க, "இவ ஒருத்தி நாளைக்கு வர்ற கேஸ்ல பாயிண்ட்ஸ் எல்லாம் ரெடியாம். நாளைக்கு மண்ணை கவ்வுவனு எனக்கு மெஸேஜ்ல சவால் விடறா?" என்று முனங்கினாள். ருத்ரன்‌ யாரென கேட்டதும் இதை கூறிவிட்டு, "எல்லாம் ஆர்த்தி தான் அன்னிக்கு ஹோட்டல பார்த்தியே அவ தான்‌." என்றான்.‌</p>
<p>"பேசாம அவளை மேரேஜ் பண்ணிக்கோ" என்று ருத்ரன் சிரிப்புடன் கூற, யதுநந்தனோ "வேற வேலை இல்லை. கோர்ட்டில ஆர்க்கியூமென்ட் பண்ணினது போதாதா? இதுல வீட்லயும்" என்றான். </p>
<p>"ஏன்டா.. அங்க ஜாப் என்பதால ஆர்கியூமெண்ட் பண்ணிக்கோ. வீட்டுக்கு வந்து சமாதானம் செய்துடு. நீ தானே முன்ன சொன்ன. கணவன் மனைவின்னா சண்டை வரும். அட்தே சேம் சமாதானம் நடக்கும்னு" என்று கூற, யதுநந்தனோ மறுத்து பேசாமல், பச் வாயை மூடுடா.' என்றான். </p>
<p>இங்கே மறுபுறம் ஷ்ரத்தா சாதம் எடுத்து இரண்டு வாய் வைத்ததும், ஒவ்வாமை உணர்வு தந்தது.என்னாச்சு? சமையலில் ஏதாவது.." என்று பயந்தார்கள். சத்ரியனை கொல்ல சமையல்காரியாக தானே அந்த பெண் வந்தாள் என்ற பயத்தில் மற்றவர் இருக்க, சத்ரியனோ மெதுவாக தலையை மறுப்பாக ஆட்டி, கையில் சப்புக் கொட்டி "பருப்பு மம்மம் வேலை செய்துடுச்சோ" என்று பதட்டமின்றி ஷ்ரத்தாவின் வயிற்றை கண்டு அவளிடம் கேட்டான். </p>
<p>ஷ்ரத்தாவோ வெட்கத்துடன் தலைகுனிந்து, நாட்களை எண்ணி பூரிக்க, பதட்டமாய் அவளை கண்டவருக்கு, பதில் சொல்ல தயங்கினாள். </p>
<p>பிறகு சத்ரியனே "தீபா நீங்க தியாவை பார்த்துக்கோங்க. நந்திதா நீங்க ராயனை பார்த்துக்கோங்க. லட்சுமி நீங்க அடுத்து வளர்ந்துட்டு இருக்கற குழந்தை உங்க பொறுப்பு" என்றான் அதிகாரத்துடன். அதிலேயே ஷ்ரத்தாவின் தாய்மை செய்தி பகிர்ந்தான். </p>
<p>அந்த இடமே ''ஏ... யாகூ.. சூப்பர்" வாவ். ஷ்ரத்தா கங்கிராஜிலேஷன்." என்ற வார்த்தைகளாலும் வாழ்த்துகளாலும் மகிழ்ச்சியில் பொங்கியது அவ்விடம். </p>
<p>சத்ரியன் என்ற ஒற்றை பலமுடையவனுக்கு, மகளென தியாவும், மகனென ராயனும் இருக்க, வயிற்றில் மூன்றாவதாக ஒரு உயிரும் வளர்ந்து ஷ்ரத்தா-சத்ரியனின் காதலின் ஆழத்தை உரைத்தது. </p>
<p>அடங்காத திமிர் அரசன் ஷ்ரத்தாவின் காத்திருந்த காதலுக்கும் அன்புக்கும் (தலைவன்)லீடர் ஆனான்.</p>
<p> 'தகிக்கும் நிலவொன்று' என இருந்தவளுக்கு அவளது வானமே வசப்பட்டது‌ </p>
<p>~சுபம்~</p>
<p>-பிரவீணா தங்கராஜ்.</p>
<p>சத்ரியன் திலீடர்ல இறந்துட்டு நிஜமாவே இறந்துட்டு, குழந்தைகளை காப்பாத்தி விட்டு அவங்க இருக்கற இடமே தெரியாம முடிவடைந்திடணும் என்றும் இரண்டாம் பாகம் எல்லாம் எழுத எண்ணமில்லாம இருந்தேன்.</p>
<p>ஒரு பெண் கைதியா இருந்து அவளை போலீஸ் வக்கீல் காதலிக்க அவ யாரை தேர்ந்தெடுக்கறா என்று தான் வேற கதை எழுத நினைச்சேன். ஆனா ஷ்ரத்தாவையே வச்சி எழுதினா எத்தனை அத்தியாயம் எழுதலாம்னு யோசிக்கவும் மடமடனு ஒரே நாள்ல நாலு அத்தியாயம் எழுதிட்டேன். அப்பறம் யோசித்து சரி ஷ்ரத்தா வச்சியே சத்ரியன் இருக்கானா இல்லையானு வச்சி போலீஸ் லாயரை போடுவோம்னு யோசித்தேன். எப்படியும் ராகவனை கொன்றதால அவன் பையன் ருத்ரன் வரட்டும் என்றும், ஷ்ரத்தாவை காப்பாற்ற அல்லது தாங்க திவாகரோட ஜூனியர் வரட்டும்னு கதை வேகவேகமா எழுத வந்துச்சு. </p>
<p>இதுல ட்விஸ்ட் என்னன்னா கதை எழுத ஆரம்பிச்சப்ப நான் சத்ரியன் இறந்ததாகவே காட்டிட்டு ருத்ரன் யதுநந்தன் இரண்டில் ஒருவரை தேர்ந்தெடுக்க நினைச்சுன். </p>
<p>ருத்ரனுக்கு ஆன்ட்டிஹீரோ ரேஞ்சுல நெருக்கமும் கடுப்பும் காட்ட நிறைய சீன் இருந்தது. யதுநந்தன் மென்மையானவனா வந்துட்டு போற மாதிரி இருந்துச்சு</p>
<p>ஆனா எனக்கு ஷ்ரத்தாவுக்கு ஜோடியா, தந்தை தேர்ந்தெடுத்தவனை தான் ஷ்ரத்தா தேர்ந்தெடுக்கற மாதிரி கொண்டு போகணும். ஏன்னா சத்ரியன் குழந்தை ராயன். ருத்ரனின் அப்பாவை அழிச்சது சத்ரியன் இந்த சிங்கில் அப்பாவா ருத்ரன் இருந்தா ஏற்கப்படுமானு யோசனை. என்ன தான் இருந்தாலும் அது சங்கடத்துல இன்னும் சங்கடம். அதனால யதுநந்தனையே ஜோடியா போட நினைச்சேன். </p>
<p>அதென்னவோ எழுத எழுத சத்ரியன் எப்ப வருவான்னு ஒரு பக்கம். வருவானா மாட்டானானு ஒரு பக்கம். </p>
<p>சத்ரியனை கொண்டு வந்து ருத்ரனை வச்சி போட்டு தள்ளிடலாமானு ஒரு‌பக்கம் மை மைண்ட் தான். ஹாஹா எப்படியோ யோசித்து, அந்த நேரம் என்ன எழுத மனசு சொல்லுதோ அதை அப்பறம் எழுதிட்டேன். </p>
<p>இந்த கதையும் முடிச்சிட்டேன். </p>
<p>சைட்ல படிக்க </p>
<p>ரெஜிஸ்டர் செய்து </p>
<p>லாகின் செய்து </p>
<p>கமெண்ட்ஸ் செய்து எனக்கு ஆதரவு தரும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சிஸ்டர். நிஜமா... நான் டவுன் ஆகறப்ப எல்லாம் நீங்க தான் கருத்திட்டு என்னை ஊக்கப்படுத்தறிங்க. </p>
<p>  சப்போஸ் புது ரீடராகவோ, அல்லது ரெஜிஸ்டர் பண்ணாம வாசிக்கறிங்களா? ரெஜிஸ்டர் பண்ணுங்க. கமெண்ட்ஸ் பண்ணுங்க. </p>
<p>லிங்க் தொடர்ச்சியா பெற வாட்சப் சேனலில் மற்றும் முகநூல்குழுவில் இணைந்திடுங்கள்.</p>
<p>அடுத்து மொஹபத் கதை ஸ்லோவா தான் வரும். அதுல மதம் சார்ந்து எதுவுமா தவறாக எழுதிடக்கூடாதுனு சிலதை யோசித்து தான் எழுதறேன். காதல் வர்ற வரை கதை ஸ்லோவாக கூட போகலாம். </p>
<p> அடுத்து பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம் கதை வெளியாகலாம். இணைந்திருங்கள். மேபீ நடுவுல ஒரு குறுநாவல் போட்டாலும் போடுவேன். </p>
<p>அன்பையும் ஆதரவை மட்டும் எதிர்பார்க்கறேன் என்பேன் இப்ப உங்க கமெண்ட்ஸ் ரிவ்யூவும் எதிர்பார்க்கலாமா? </p>
<p>நன்றி.</p>
<p>பிரவீணா தங்கராஜ்‌</p>
<p>&nbsp;</p>]]></content:encoded>
						                            <category domain="https://onlinetamilnovels.com/community/%e0%ae%a4%e0%ae%95%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%b5%e0%af%8a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-praveena-thangaraj/">தகிக்கும் நிலவொன்று -Praveena Thangaraj</category>                        <dc:creator>Praveena Thangaraj</dc:creator>
                        <guid isPermaLink="true">https://onlinetamilnovels.com/community/topicid/338/</guid>
                    </item>
				                    <item>
                        <title>தகிக்கும் நிலவொன்று-49</title>
                        <link>https://onlinetamilnovels.com/community/topicid/337/</link>
                        <pubDate>Fri, 28 Aug 2026 01:15:31 +0000</pubDate>
                        <description><![CDATA[அத்தியாயம்-49
காலம் வேகமாக ஓடிக் கொண்டிருந்தது. சில மாதங்களுக்கு முன்பு இருந்த குழப்பங்களும், பயங்களும் மெதுவாக பின்னால் சென்று கொண்டிருந்தன.
சத்ரியனின் உலகமும் மீண்டும் அவன் கட்டுப்பாட்டு...]]></description>
                        <content:encoded><![CDATA[<p>அத்தியாயம்-49</p>
<p>காலம் வேகமாக ஓடிக் கொண்டிருந்தது. சில மாதங்களுக்கு முன்பு இருந்த குழப்பங்களும், பயங்களும் மெதுவாக பின்னால் சென்று கொண்டிருந்தன.</p>
<p>சத்ரியனின் உலகமும் மீண்டும் அவன் கட்டுப்பாட்டுக்குள் இயல்பாக நகர ஆரம்பித்திருந்தது.</p>
<p>பணம்... ஆள்பலம்... அதிகார பலம்... என எட்டுத் திக்கிலும் மீண்டும் சத்ரியனின் கொடி பறக்க ஆரம்பித்தது.</p>
<p>அவனது ஒரு வார்த்தைக்காக காத்திருக்கும் ஆட்கள். அவன் உத்தரவுக்காக நகரும் வியாபாரங்கள். அவனது பெயரை கேட்டாலே பாதையை மாற்றிக் கொள்ளும் எதிரிகள்.</p>
<p>சத்ரியன் மீண்டும் சத்ரியனாகவே மாறியிருந்தான்.</p>
<p>ஆனால் ஷ்ரத்தாவைப் பொறுத்தவரை மட்டும் அவனது உலகம் கொஞ்சம் மாறியிருந்தது. அவள் வேலை செய்யும் மருத்துவமனையில் கூட அவனது பாதுகாப்பு நிழல் போல தொடர்ந்து வந்தது. அவளுக்கு தெரியாமல்...</p>
<p>   தூரத்தில் பல பாடிகார்ட்ஸ் நின்று கண்காணித்துக் கொண்டிருப்பார்கள்.</p>
<p>யார் உள்ளே வருகிறார்கள்? யார் வெளியே செல்கிறார்கள்? ஷ்ரத்தாவிடம் யார் அதிக நேரம் பேசுகிறார்கள்? அவளை சந்திக்க வரும் நோயாளி யார்?</p>
<p>அவருடன் வருபவர்கள் யார்? எல்லாமே கவனிக்கப்படும். ஒரு சாதாரண நோயாளி கூட ஷ்ரத்தாவை சந்திக்க வந்தால்...</p>
<p>அவனைப் பற்றிய அடிப்படை தகவல்கள் கூட முன்கூட்டியே சரிபார்க்கப்படும்.</p>
<p>அதனால் ஷ்ரத்தா மருத்துவமனைக்குச் சென்றாலும் வீட்டிலிருந்து வெளியே சென்றாலும், எங்கு சென்றாலும் அவளது பாதுகாப்பில் மட்டும் எந்த குறையும் இருக்கவில்லை. </p>
<p>   இதில் ஷ்ரத்தா கீர்த்தனா ஆன்ட்டியோடு பேசிசென்ற பிறகு தாலியை பற்றி வாயை திறத்து கேட்டதற்கு இணங்க, சத்ரியனும், இரண்டு குழந்தைகள் இருக்க, தாலியை அங்கீகாரமாக அணியாமல் ஷ்ரத்தாவை நடமாட வைப்பது அவனுக்கு அபத்தமாக தோன்றியது. அதனால் தாலி வாங்கி வீட்டில் உள்ள பூஜை அறையில் அவனது அன்னை தந்தையின் புகைப்படத்துடன், ஷ்ரத்தாவின் அன்னை தந்தை புகைபடமும், மேலும் எல்லாவிதமான கடவுள்களின் புகைப்படம் முன் அவளுக்கு தாலி அணிவித்தான். தன் வீட்டில் பூஜை அறையெல்லாம் இடம் பிடித்ததை சத்ரியன் அப்பொழுது தான் கவனித்தான். </p>
<p>  "எதுக்கு இத்தனை சாமி?" என்றவாறு தாலி அணிவித்தவனிடம், "நீ செய்யற வேலைக்கு, ஏதாவது ஒரு சாமியாவது காப்பாத்தட்டுமேனு தான்" என்று மார்பில் தொங்கிய தாலியை கண் வைக்காமல் பார்த்தாள். </p>
<p>   "ஆனந்த கண்ணீர் எல்லாம் வரலையா?" என்றான். </p>
<p>"ம்கூம்.. இதை உன்னை கட்ட வைக்கறதுக்குள்ள ரத்த கண்ணீரே வந்துடுச்சு. ஆனந்த கண்ணீராம்." என்று நகர பார்த்தவளிடம், "தாலி கட்டியாச்சு‌.. பஸ்ட் நைட்" என்று கேட்டவனிடம், நெஞ்சில் குத்தி, "போடா... தினமும் இதே வேலையா போச்சு" என்று ஓடாத குறையாக சென்றாள். </p>
<p>  சத்ரியன் விடுபவனா... பின்னாலே சென்று அவளை தன் இஷ்டத்திற்கு ஆட்டி படைத்தான். </p>
<p>   அன்று மாலையே ஷ்ரத்தா தாலி மற்றவர் பார்வைக்கு பளிச்சிட்டது. ஆனால் எதுவும் கேட்காமல் மகிழ்ச்சி அடைந்தனர். ராயனும் தியாவும் 'இதென்னமா... புதுசா செயின் போட்டிருக்க? முன்ன அந்த பெரிய ஹாஸ்டல்ல இருந்தப்ப எதுவுமே போடலை தானே?" என்று கேட்டான். </p>
<p>  அவனிடம் ஜெயிலென்று பதிய வைக்க முடியாது ஹாஸ்டல் என்று பதிய வைத்திருக்க, அங்கே சீருடை போல எந்த அசசரிஸும் போடக்கூடாது என்று கூறியிருந்தாள். இன்று நம் வீட்டில் போட்டுள்ளதாக விளக்கம் வேறு தந்தாள். </p>
<p>தினம் தினம் விளக்கம் வெவ்வேறு பேச்சுக்கு விளக்கம் தந்தே ஷ்ரத்தாவுக்கு விழி பிதுங்கியது. </p>
<p>  நடுவில் மனிஷா திருமணத்திற்கு ஷ்ரத்தா சென்று வந்தாள். அன்று சத்ரியன் கூடவரவில்லை. யோகேஷை தான் கூட அனுப்பியிருந்தான். மிஞ்சி மிஞ்சி பதினைந்து நிமிடம் மனிஷா திருமணத்தில் இருந்துவிட மட்டுமே சத்ரியன் அனுமதி அளித்திருந்தான். அதனால் திருமணத்திற்கு வந்த கனிமொழியிடமும் முன்கூட்டியே, மணப்பெண் மனிஷாவுமே வற்புறுத்தவில்லை. ஏற்கனவே சத்ரியன் இறந்தான் என்றார்கள். இப்பொழுது அது சில ஏய்ப்பாளர்களுக்காக நடத்தப்பட்ட நாடகமென மட்டும் கூறினாள். </p>
<p>  கனிமொழி தான் "ஜெயிலுக்கு எல்லாம் போனியேடி" என்று வாயை பிளக்க, "பச் அது என் பாதுகாப்புக்கு" என்று கூறியிருந்தாள்.  </p>
<p>  மேலும் விவரம் கேட்டால் கூறமுடியாத வகையில் தான் ஷ்ரத்தா இருந்தாள். ஆனால் அவர்கள் என்னவோ சொல்லற. பட் சத்ரியன் சார் வந்துட்டார். உன் முகத்துல சந்தோஷம் இருக்கு. அது போதும் எங்களுக்கு" என்று கூறினார்கள். </p>
<p>   இப்படியாக அழகாக சென்ற பொழுது, கீர்த்தனா ஆன்ட்டியும், அந்த புகைப்படத்தை ருத்ரனிடம் காட்டி, 'இந்த பொண்ணு பார்க்க லட்சனமா இருக்கா. எனக்கு எங்கயோ பார்த்த மாதிரி இருக்கு. பொண்ணோட பெயரும் ஜாதகமும் கேட்டிருந்தேன். அதுக்குள்ள அந்த தரகர் பாலுவோட நெட்கார்ட் போயிடுச்சும்மா. காசு போட்டதும் செண்ட் ஆகும்னு சொன்னார்." ஒன்று போனை நீட்ட, "அம்மா.. சும்மா.. பொண்ணு பொண்ணுனு.." என்று சலித்தவன், முகத்தை பார்த்து போனை வாங்கினான்.‌</p>
<p>   ''என்ன விளையாடறிங்க? இந்த பொண்ணு யாருனு தெரியலை'' என்று தாம்தூம் குதித்தான்.</p>
<p>  "என்னடா விளையாடியது?  இந்த பொண்ணு யாருனு நினைவு வரலை." என்றார். </p>
<p>  ருத்ரனோ கடுப்புடன் செல்ல, யதுநந்தனிடம் கீர்த்தனா புகார் பட்டியலை வாசித்தார். </p>
<p>  "யதுநந்தா கொஞ்சம் அவனுக்கு புத்திமதி சொல்லி இப்ப பார்த்த பொண்ணை கட்டிக்க சொல்லுயா?" என்றார். </p>
<p>  "சரிம்மா.." என்றவன் ருத்ரனை மதியம் தாண்டி சந்திக்க வந்தப்போது, 'யார்டா பொண்ணு.. அம்மா ஏதோ ஏற்கனவே பார்த்த மாதிரி இருக்கு. ஜென்ம பந்தமா இருக்குமோனு பயங்கரமா பில்டப் பண்ணறாங்க" என்று பிரியாணி ஆர்டர் செய்துவிட்டு இருவருமா மதிய விருந்தை சொன்னை கோர்ட் வாசலுக்குள் வெளியே இருக்கும் தலைபாக்கட்டு பிரியாணி கடைக்குள் இருந்தவாறு கேட்டான்.‌</p>
<p>"எல்லாம் தெரிந்த பொண்ணு தான்‌. அம்மா இரண்டு மூன்று முறை பார்த்திருக்க வாய்ப்பிருக்கு. அதனால அப்படி யோசிக்கறாங்க. பொண்ணோட பயோடெட்டா வந்ததும் அலறிட்டு வேண்டாம்னு சொல்ல வாய்ப்பிருக்கு" என்றான். </p>
<p>"அலறிட்டா... யாரு பொண்ணு" என்று கேட்க, ருத்ரனோ தன்‌ போனில் ஷ்ரத்தா கூடயிருந்த அவளை சுட்டிக்காட்டினான்.</p>
<p>யதுநந்தனோ இருக்குமிடம் மறந்து பக்கென்று சிரித்துவிட்டான். </p>
<p>  அருகேயிருந்த பக்கத்து டேபிள் பெண்ணோ "இன்டீசெண்ட் பெல்லோ" என்று முனங்கிட, யதுநந்தனோ "ஹலோ... என்ன‌ இன்டீசெண்டா நடந்தேன். ரொம்ப பண்ணாத.. முதல் கேஸே தோல்வி என்பதால மத்தவங்க மகிழ்ச்சியை பார்த்து வயிறு எரியாத" என்றான். </p>
<p>ருத்ரனோ இதென்ன யதுநந்தன் கோபமாக ஒரு பெண்ணிடம் பேசுகின்றானென பார்வையிட, "ஜெனி... நாம வேற ஹோட்டலுக்கு போலாம்." என்றாள் அந்த பெண். </p>
<p>"ஏய்.. சாப்பாடு ஆர்டர் தந்துட்டு எழுந்தா எப்படிடி. முதல்ல உட்காரு. சாரி மிஸ்டர் யதுநந்தன்." என்றாள். </p>
<p>"ஜெனி... வக்கீல்னா முதல் கேஸா ஜெயிச்சே ஆகணும்னு இல்லை. வெற்றியின் முதல் படி தோல்வியா இருக்கலாம். உங்க பிரெண்டுக்கு சொல்லுங்க." என்று கூறிவிட்டு, ருத்ரனிடம் திரும்பினான். </p>
<p>ருத்ரனோ 'என்னடா இது?' என்ற ரீதியில் பார்க்க, "அவனிடம் எதுக்கு சாரி கேட்ட. பில் பே பண்ணிட்டு கிளம்பலாம்." என்றாள் ஆர்த்தி. </p>
<p>  கொஞ்ச நேரம் முன்பு தான் யதுநந்தனும் அவளும் கோர்டில் வாதாடி அவள் தோல்வியை சந்தித்து வாடி வதங்கி தோழி ஜெனியுடன் இங்கு வந்து பிரியாணியுடன் சோகத்தை மறக்க வந்தாள். </p>
<p>  இங்கு எதிர்பாராவிதமாக ருத்ரன் முன்பே வந்து யதுநந்தனுக்காக ஆர்டர் தந்துவிட்டு அமர, இவர்களும் உணவை ஆர்டர் தந்து பக்கத்து டேபிளில் அமர்ந்தார்கள். </p>
<p>யதுநந்தனோ ருத்ரன் முன் உணவும் அவனிடம் பேசவும் அமர்ந்திட, ஆர்த்தியால் வெளிநடப்பு செய்ய முடியாது தவித்தாள். </p>
<p>இதில் யதுநந்தன் வேறு பக்கென்று சிரிக்க, தன்னை தான் தோற்றதாக கூறி சுட்டிக்காட்டி சிரிப்பதாக தவறாக நினைத்து கொதித்தாள். </p>
<p>ஆர்த்தியை எல்லாம்  மறந்தவனாக ருத்ரனிடம், "ஏ.. பொண்ணுக்கு ஓகே சொல்லலாமே." என்று யது கேட்க, ருத்ரனோ "பச்.. பயோடொட்டா வந்தா அம்மாவே ரிஜெக்ட் பண்ணிடுவாங்க. நீ வேற.. ஆமா.. நீயென்ன புதுசா கோபப்படற? நான் பார்த்தவரை நீ அமைதியான ஆளு. எதையும் நிதானமா கையாளுவ" என்று சீண்டினான்.‌</p>
<p>யதுநந்தனோ பின்னால் திரும்பி பார்த்து, "அவளுக்கு முதல் கேஸ். நான் எதிர்த்து வாதடி நான் ஜெயிச்சிட்டேன். வர்றப்பே முகம் அஷ்டகோணலா மாறி சுழிச்சா. நான் சிரிச்சா அதுக்கும் கத்தினா, அதான் கத்தி விட்டேன்.</p>
<p>   ஏன் எனக்கெல்லாம் கோபம் வராதா? டேய் ஷ்ரத்தா டெலிவெரி அப்ப உன்னை அடிச்சி அறைஞ்சிருக்கேன்." என்று நினைவுக்கூறினான்.‌</p>
<p>   இவர்களோ பேசியபடி, சாப்பிட்டு கிளம்பியிருந்தனர். போதும்டா.. உன் பெருமை. நீ ஹீரோ தான்.' என்று இரு நண்பர்களும் பேசி சாப்பிட்டனர்.‌</p>
<p>   கீர்த்தனா அந்த பெண்ணின் ஜாதகத்தில் மற்ற விவரம் கண்டதும், ஷ்ரத்தாவுக்கு தான் அழைத்தார். </p>
<p>"அம்மாடி... ருத்ரனுக்கு ஒரு பொண்ணு அமைஞ்சது. இப்ப தான் கவனிச்சேன். அது உனக்கு தெரிந்தவ தான். </p>
<p>  அவங்க வீட்டு ஆட்களும், அவளை பத்தியும் சொல்லேன். ருத்ரனுக்கு இந்த பொண்ணு அமைந்தா கூட எனக்கு சந்தோஷம்" என்றார். </p>
<p>ஷ்ரத்தாவோ போட்டோ அனுப்புங்க ஆன்ட்டி. நான் பார்த்து அவனிடம் பேசறேன்." என்று கூறி அணைத்தாள். </p>
<p>ருத்ரன் யதுநந்தன் ஷ்ரத்தா நட்பு ஆரேஞ்சு வண்ண கோட்டில் தான் பயணிக்கின்றது. போலீஸ்-வக்கில்-டாக்டர் என்று மூவரும் நட்புடன் பேசுவதுண்டு. கிங்பின் நட்புறவு நீட்டுவானென எதிர்பார்க்க கூடாது. அவன் நிச்சயம் இவர்களோடு ஒன்ற மாட்டான். </p>
<p>   ஷ்ரத்தாவுக்கு யது தான் நல்ல நெருக்கமானவன். தந்தையின் ஜூனியர் என்ற முறையில் நல்லது கெட்டது எல்லாமே அவனிடம் பகிர்கின்றாள். </p>
<p>அப்படி பகிரும் போது ருத்ரன் ஒருமுறை கூடயிருக்க, "ஆன்ட்டி ஆசிரமம் வந்தப்ப இன்னும் தாலி கட்டலையானு கேட்டாங்க. சத்ரியனிடம் தாலி கட்ட கேட்டதும், சிம்பிளா பூஜையறையில் பேரண்ட்ஸ் போட்டோ முன்ன கட்டிட்டான்." என்று கூற ருத்ரனோ "இதை எங்கம்மாவிடம் சொல்லலையா. யதுவிடம் சொல்லற" என்று கூறி, 'ஏன் என்கிட்ட பிரெண்ட்லியா பேசமாட்டியா?' என்று அதற்கும் டார்ச்சர் செய்தே நட்பை வேண்டினான்.  </p>
<p>காதலை தான் தர முடியாது. நட்பை யாசிக்க நண்பனாக என்ன தயக்கமென 'சரிடா இனி ஷேர் பண்ணறேன். நம்ம பிரெண்ட்ஸ் போதுமா' என்று கூறியிருந்தாள். </p>
<p>அதன் பொருட்டு கீர்த்தனா ஷ்ரத்தாவிடமும் ருத்ரனுக்காக அப்பெண்ணை பற்றி கேட்க, "சரி ஆன்ட்டி.. எல்லாம்.. கேட்டு சொல்லறேன்" என்று வாக்கு தந்தாள். </p>
<p>அதன் பொருட்டு ருத்ரனுக்கு அப்பெண் நிச்சயம் பேசப்பட்டது. முதலில் தயங்கி மறுத்தவனிடம், அந்த பெண்ணே வந்து பேசவும், திருமணத்திற்கு சம்மதித்திருந்தான் ருத்ரன். </p>
<p>அதற்கு கூட ஷ்ரத்தா தான் 'என்னையே நினைச்சிட்டு இருக்கேன்னு சொன்ன... சத்ரியன் சூட் பண்ணிடுவான்.  மரியாதையா.. என்னை இழுக்காத. அவளும் உன்னோட பேசணுமாம். ஓகேன்னா அப்பாயின்மென்ட் ஓதுக்கி நீயே பார்த்து பிக்கப் பண்ணு. உனக்கு பிடிச்சிருந்தா லவ் டார்ச்சர் கொடு. உனக்கு அதான் கை வந்த கலையாச்சே." என்று கூறியிருந்தாள். </p>
<p>  அதெல்லாம் பேசி முடித்து தான் அன்று நிச்சயதார்த்தம் என்று ஷ்ரத்தாவை அழைத்திருந்தான். </p>
<p>ஷ்ரத்தா வலுக்கட்டாயமாக சத்ரியனை அழைத்து சென்றாள்.</p>
<p>-தொடரும். </p>
<p>-பிரவீணா தங்கராஜ். </p>
<p> ருத்ரனுக்கு யார் ஜோடினு கெஸ் பண்ணுங்க. அப்பறம் யதுநந்தனுக்கு தனி கதையா போடலாமா இல்லை அடுத்த எபிக்கோட அவனையும் முடிச்சி விடலாமா யோசனையில் இருக்கேன். </p>
<p>இன்னொரு எபிக் மட்டுமே உண்டு. </p>
<p>&nbsp;</p>]]></content:encoded>
						                            <category domain="https://onlinetamilnovels.com/community/%e0%ae%a4%e0%ae%95%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%b5%e0%af%8a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-praveena-thangaraj/">தகிக்கும் நிலவொன்று -Praveena Thangaraj</category>                        <dc:creator>Praveena Thangaraj</dc:creator>
                        <guid isPermaLink="true">https://onlinetamilnovels.com/community/topicid/337/</guid>
                    </item>
				                    <item>
                        <title>தகிக்கும் நிலவொன்று-48</title>
                        <link>https://onlinetamilnovels.com/community/topicid/335/</link>
                        <pubDate>Thu, 27 Aug 2026 00:59:00 +0000</pubDate>
                        <description><![CDATA[அத்தியாயம்-48மாலை நேரம் வீட்டின் முன் அடுத்தடுத்து சில கார்கள் வந்து நின்றன.சத்ரியன் காரிலிருந்து இறங்கியதும், அவனுடன் வந்த ஆட்கள் பெரிய பெரிய பைகளையும் பெட்டிகளையும் ஒன்றன்பின் ஒன்றாக இறக்க...]]></description>
                        <content:encoded><![CDATA[<p>அத்தியாயம்-48<br /><br />மாலை நேரம் வீட்டின் முன் அடுத்தடுத்து சில கார்கள் வந்து நின்றன.<br /><br />சத்ரியன் காரிலிருந்து இறங்கியதும், அவனுடன் வந்த ஆட்கள் பெரிய பெரிய பைகளையும் பெட்டிகளையும் ஒன்றன்பின் ஒன்றாக இறக்க ஆரம்பித்தனர்.<br /><br />சில நிமிடங்களில் வீட்டின் ஹாலே ஒரு சிறிய பொம்மைக் கடை போல மாறியது.<br /><br />பெரிய பலூன்கள், சாக்லேட் பாக்ஸ்கள், பல்வேறு வகையான விளையாட்டுப் பொருட்கள் என்று ராயன் தூரத்தில் நின்றபடியே அவற்றைப் பார்த்தான்.<br /><br />அவனது சின்னஞ்சிறிய கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தன.<br /><br />"வாவ் டேடி." என்று வாயை திறந்து பார்த்தவன், உடனே ஓடிவந்து ஒரு பெரிய பலூனை தொட்டுப் பார்த்தான்.<br /><br />"டேடி... இதெல்லாம் எங்களுக்கா?" என்றவனது முகத்தில் இருந்த சந்தோஷத்தை பார்த்த சத்ரியனின் உதட்டில் மெல்லிய சிரிப்பு தோன்றியது.<br /><br />"உங்களுக்கு பிடிச்சதெல்லாம் எடுத்துக்க." அந்த ஒரு வார்த்தை போதும்.<br /><br />ராயன் அங்கே இருந்த ஒவ்வொரு பொருளையும் ஆராய ஆரம்பித்தான்.<br /><br />அதே நேரத்தில், தியாவுக்காக தனியாக கொண்டு வரப்பட்ட பொருட்கள் ஹாலின் இன்னொரு பக்கத்தில் அடுக்கப்பட்டுக் கொண்டிருந்தன.<br /><br />ஒரு பெரிய கரடி பொம்மை. வெள்ளை நிற முயல் பொம்மை, மிக்கி மவுஸ், அவள் கார்ட்டூனில் அடிக்கடி பார்த்துக் கொண்டிருக்கும் சிறிய பொம்மைகள், சில பேசும் பொம்மைகள், சில இசை எழுப்பும் பொம்மைகள்.<br /><br />அதோடு வண்ண வண்ணமான சாக்லேட்டுகளும். தியா அவற்றைப் பார்த்ததும் கண்கள் முழுவதும் சந்தோஷமாக மாறியது.<br /><br />"டேடி!" என்று ஓடிவந்தாள். சத்ரியன் அவளை நோக்கித் திரும்பினான்.<br /><br />"இந்த கார்ட்டூன் எல்லாம் என்னோட பேவரிட்!" அவள் ஒவ்வொன்றாக சுட்டிக் காட்டினாள்.<br /><br />"இது... இதுவும்... இதுவும்..." அவளது உற்சாகத்தை பார்த்த சத்ரியன் எதுவும் பேசாமல் தலையசைத்தான். "தேங்க்யூ டேடி..." என்று சொல்லிவிட்டு அவன் கன்னத்தில் முத்தமிடுவதற்காக அருகில் வந்தாள்.<br /><br />ஆனால் அவன் ஏற்கனவே திரும்பி அறையை நோக்கி நடந்துவிட்டான்.<br /><br />தியாவின் முகத்தில் இருந்த சந்தோஷம் ஒரு நொடி மங்கியது. அவள் அவன் பின்னால் பார்த்துக் கொண்டிருந்தாள். அடுத்த நொடியே அந்த சின்ன கால்கள் மீண்டும் அவனை நோக்கி ஓடின.<br /><br />சத்ரியன் அறைக்குள் சென்று கதவை முழுவதுமாக மூடுவதற்குள் தியா உள்ளே வந்துவிட்டாள்.<br /><br />அவன் நாற்காலியில் அமர்ந்து தலையில் கை வைத்தபடி சில நொடிகள் கண்களை மூடியிருந்தான்.<br /><br />அவனது விரல்கள் நெற்றியை அழுத்திக் கொண்டிருந்தன.<br /><br />"டேடி..." தியாவின் குரல் மெதுவாக கேட்டது. சத்ரியன் கண்களைத் திறக்கவில்லை.<br /><br />"என்ன?" அவள் அருகில் வந்து அவன் தலையை பார்த்தாள்.<br /><br />"தலைவலிக்கா?" அவன் பதில் சொல்லவில்லை. தியா உடனே அவனை அணைத்துக் கொண்டாள்.<br /><br />"அம்மாவுக்கும் அடிக்கடி தலைவலி பிடிக்கும்." சத்ரியனின் கண்கள் மெதுவாக திறந்தன. "அப்போ..." அவள் அவனது மார்பில் முகத்தை வைத்துக் கொண்டு சொன்னாள். "அம்மா அழுவாங்க. அப்போ கையில உங்க போட்டோ இருக்கும்." சத்ரியனின் உடல் ஒரு நொடி இறுகியது.<br /><br />தியா தொடர்ந்து பேசினாள். "நான் அப்போ ஹக் பண்ணுவேன். கிஸ் தருவேன். அம்மா சிரிச்சிட்டே என் கன்னத்துல முத்தம் தருவாங்க." என்று சொல்லிவிட்டு அவள் சத்ரியனின் கன்னத்தில் மெதுவாக முத்தமிட்டாள்.<br /><br />அந்த முத்தம் சத்ரியனை எதிர்பாராத விதமாக அமைதியாக்கியது. அவன் சில நொடிகள் அந்த குழந்தையை பார்த்துக் கொண்டிருந்தான்.<br /><br />அவன் இல்லாத நேரங்களில், ஷ்ரத்தா தன்னை நினைத்து அழுதிருக்கிறாள். அந்த நேரங்களில் இந்த குழந்தை அவளை அணைத்திருக்கின்றாள்.<br /><br />அவளது கண்ணீரை துடைத்திருக்கின்றாள். அவளுக்கு ஆறுதலாக இருந்திருக்கின்றாள்.<br /><br />இன்று அதே குழந்தை தன்னையும் அணைத்து ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்கின்றாள். அந்த உணர்வு அவனுக்குள் எங்கோ சென்று குத்தியது.<br /><br />ஆனால் அதை வெளியில் காட்ட அவனுக்கு பழக்கமில்லை. "ஓகே..." என்று மெதுவாக அவளை விலக்க முயன்றான்.<br /><br />"ஓகே... ஓகே.. கீழே இறங்கு. என்னை விடு." என்று சொன்னபடி அவளை மெதுவாக தன்னிடமிருந்து பிரித்தான்.<br /><br />தியா கீழே இறங்கினாள். ஆனால் அவளது முகத்தில் சோகமில்லை. சத்ரியன் கத்தாமல் பேசியதே அவளுக்கு போதுமானதாக இருந்தது.<br /><br />அவள் சிரித்தாள். "டேடி..." என்று மீண்டும் அழைத்தாள். சத்ரியன் அவளை பார்த்தான்.<br /><br />அறைக்குள் வேறு யாரும் இல்லை என்பதை உறுதி செய்துகொண்டான்.<br /><br />பிறகு மெதுவாக அவளை உற்றுப் பார்த்தான். முதல் முறையாக அந்த குழந்தையை அவன் கவனமாக பார்க்க ஆரம்பித்தான்.<br /><br />அவளது கண்கள், அந்த சிறிய மூக்கு, உதடுகள், நெற்றியின் வடிவம், முடி ஒவ்வொன்றாக அவனது பார்வை நகர்ந்தது.<br /><br />ஹரிணிக்கு இருந்தது சுருள் முடி. ஆனால்... தியாவின் முடி அப்படியில்லை. அவளது முகத்தில் கூட எங்கும் ஹரிணியின் சாயல் தெரியவில்லை. அவன் மெதுவாக எச்சிலை விழுங்கினான்.<br /><br />மீண்டும் ஒருமுறை அவளது முகத்தை பார்த்தான்.<br /><br />இல்லை. எங்கும் ஹரிணி சாயல் இல்லை. அந்த நிமிடத்தில்தான் அவனது மார்புக்குள் இருந்த இறுக்கம் சற்றே தளர்ந்தது.<br /><br />அவன் அறியாமலேயே ஒரு பெருமூச்சை வெளியேற்றினான். தியா அவனை பார்த்துக் கொண்டிருந்தாள்.<br /><br />"டேடி..." அவன் பார்வை அவளை சந்தித்தது.<br /><br />"நீ வெளியே போ. தம்பிக்கூட விளையாடு. டேடி... அப்புறம்..." என்று சொல்லிவிட்டு மீண்டும் கண்களை மூடினான்.<br /><br />அந்த வார்த்தையை தன் வாயாலேயே 'டேடி' என்று சொல்லியதை உணர்ந்ததும் அவனுக்குள் ஏதோ ஒரு சங்கடம்.<br /><br />"வெளியே போயேன்." என்று சற்று கடுமையாக சொன்னான்.<br /><br />தியா சிரித்தாள். அவளுக்கு அவனது குரலில் இருந்த கடுமை புரியவில்லை. அவளுக்கு தெரிந்தது ஒன்றுதான். அவன் தன்னை முன்பு போல விரட்டவில்லை.<br />அதுவே அவளுக்கு போதுமானதாக இருந்தது.<br /><br />"ஓகே டேடி." என்று சொல்லிவிட்டு கதவை நோக்கி ஓடினாள்.<br /><br />கதவு மூடப்பட்டதும் சத்ரியன் மட்டும் தனியாக இருந்தான்.<br /><br />சில நொடிகள் அவன் எதுவும் செய்யாமல் அப்படியே அமர்ந்திருந்தான்.<br /><br />பிறகு தன் கன்னத்தை மெதுவாக தொட்டுப் பார்த்தான். அங்கே இன்னும் அந்த குழந்தையின் முத்தத்தின் வெப்பம் இருந்தது. அவன் கண்களை மூடினான். "டேடி..." அந்த ஒரு வார்த்தை மீண்டும் சத்ரியன் காதுக்குள் ஒலித்தது.<br /><br />அவனது முகத்தில் வழக்கமான கடினம் திரும்பி வந்தாலும், இந்த முறை, அந்த கடினத்தின் அடியில், ஒரு சிறிய இடத்தில் மட்டும், பாசம் ஏற்கனவே வேர்விட ஆரம்பித்திருந்தது.<br /><br />சத்ரியன் அறையிலிருந்து தியா திரும்பிய சில நிமிடங்களிலேயே, தீபா, நந்திதா, லட்சுமி மூவரும் கவனித்திருந்தனர்.<br /><br />ஆனால் சில நிமிடங்களுக்குப் பிறகு தியா மட்டும் அமைதியாக வெளியே வந்து பொம்மைகளுடன் விளையாட ஆரம்பித்ததும், மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.<br /><br />அவர்களது முகத்தில் நிம்மதி இல்லை. பயம் மட்டும் இருந்தது. "மேம் வரட்டும்..." என்று லட்சுமி மெதுவாக சொன்னாள்.<br /><br />"பாஸ் ஏதாவது சொல்லிட்டாரோ?" என்று நந்திதா சந்தேகமாக கேட்டாள்.<br /><br />"தியா அழுதுகிட்டு வெளியே வந்திருந்தா நமக்கே தெரிஞ்சிருக்கும்..." என்றாள் தீபா.<br /><br />ஆனால் தியா அழவில்லை. முகம் வாடவும் இல்லை. மாறாக அவள் புதிதாக வந்திருந்த பொம்மைகளை ஒவ்வொன்றாக எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.<br /><br />சில நேரம் கழித்து ஷ்ரத்தா மருத்துவமனையிலிருந்து திரும்பி வந்தாள். வழக்கம்போல மேலே செல்லும் முன் குழந்தைகளைப் பார்த்தாள்.<br /><br />தியா புதிய பொம்மைகளுக்கு நடுவே அமர்ந்திருப்பதை பார்த்ததும் அவளது பார்வை ஒரு நொடி நின்றது.<br /><br />"இவ்வளவு டாய்ஸ் எல்லாம் புதுசா இருக்கு?" என்று கேட்டாள்.<br /><br />தீபா, நந்திதா, லட்சுமி மூவரும் ஒரே நேரத்தில் ஒருவரை ஒருவர் பார்த்தனர். "என்ன ஆச்சு?" என்று ஷ்ரத்தா புருவத்தை சுருக்கினாள்.<br /><br />நந்திதா மெதுவாக, "மேம்... பாஸ் வந்ததும் தியா அவங்க ரூமுக்குப் போனாங்க. அதனால..." என்று பீடிகை போட, "என்ன?" என்று ஷ்ரத்தா உடனே கேட்டாள்.<br /><br />"அவர் ஏதாவது சொல்லிட்டாரா... தியா அழுதுட்டு வருதா...ன்னு பயந்தோம்." ஷ்ரத்தா தியாவை பார்த்தாள்.<br /><br />குழந்தையோ சந்தோஷமாக ஒரு பெரிய கரடி பொம்மையை கட்டிக்கொண்டு இருந்தாள்.<br /><br />"அழுதாளா?" "இல்ல மேம்."<br /><br />"சத்ரியன் கத்தினாரா?" என்று கேட்டாள்.<br /><br />"இல்ல மேம்."<br /><br />"அப்புறம் ஏன் பதட்டம்?" என்றாள்.<br /><br />"உள்ள போயிட்டு வந்தா. அவர் திட்டினாரா இல்லையானு தெரியலை மேம்." சிறிது நேரம் அமைதியாக இருந்த ஷ்ரத்தா,<br /><br />"சரி... நான் பார்த்துக்கறேன்." என்று சொல்லிவிட்டு மேலே சென்றாள்.<br /><br />சத்ரியன் அப்போது குளித்து முடித்திருந்தான்.<br /><br />வழக்கம்போல மருத்துவமனையிலிருந்து வந்ததும் குளித்து உடை மாற்றுவது ஷ்ரத்தாவின் பழக்கமும் கூட. அதனால் அவளும் குளித்து முடித்து அறைக்குள் வந்தபோது, சத்ரியன் அலமாரி அருகே நின்று சட்டையை மாற்றிக் கொண்டிருந்தான்.<br /><br />ஷ்ரத்தா அவனை சில நொடிகள் பார்த்தாள்.<br /><br />பிறகு இயல்பாக,<br /><br />"சத்ரியா..."<br /><br />"ம்ம்ம்?"<br /><br />"தியாவை ஏதாவது சொன்னியா?" என்றாள். சத்ரியன் திரும்பிப் பார்த்தான்.<br /><br />அவனது முகத்தில் எரிச்சலோ கோபமோ இல்லை.<br /><br />"இல்ல. அவ உன் ரூமுக்குப் வந்ததா தீபா நந்திதா லட்சுமி சொன்னாங்க" என்றாள்.<br /><br />"ஆமா வந்தா." என்றான். ஷ்ரத்தாவின் ஸ்டாப் கொக்கியை அவன் மாட்டி விட்டபடி அவளருகே நெருக்கமாய் நின்றான். <br /><br />"அப்போ?" சத்ரியன் அவள் சட்டையின் பட்டனை மாட்டிக்கொண்டே பெருமூச்சு விட்டான்.<br /><br />"என்னத்த சொல்ல?" அவன் குரலில் இருந்த சலிப்பு ஷ்ரத்தாவுக்கு சிரிப்பை வரவழைத்தது. ''ஆசிரமத்துல இருந்த பல குழந்தைகள்ல ஒருத்தியா தான் அவ இன்னும் என் கண்ணுக்குத் தெரியுறா." சிறிது இடைவெளிக்குப் பிறகு,<br /><br />"ஆனா..." அவன் வார்த்தையை தேடுவது போல நின்றான். "என்னை அடிக்கடி 'டேடி'ன்னு ஓட்டிக்கிட்டே இருக்கா." அந்த வார்த்தையை சொல்லும்போதே அவனது முகத்தில் ஒரு சிறிய சங்கடம் தோன்றியது.<br /><br />"அதுவும்... இப்படி..." என்று சொல்லிவிட்டு தோள்களை சற்றே குலுக்கினான். அவனது செயலில் கோபம் இல்லை. வெறுப்பும் இல்லை.<br /><br />மாறாக... என்ன செய்வதென்று தெரியாத ஒரு மனிதனின் தடுமாற்றம் மட்டுமே இருந்தது.<br /><br />ஷ்ரத்தா அமைதியாக அவனை பார்த்தாள். அவள் எதிர்பார்த்தது வேறு.<br /><br />தியாவை சத்ரியன் ஏதாவது கடுமையாக பேசியிருப்பான் என்று நினைத்திருந்தாள்.<br /><br />ஆனால் அவன் அவளைப் பற்றி குறை சொன்னாலும். அவளை காயப்படுத்தவில்லை. அதுவே அவளுக்கு போதுமானதாக இருந்தது.<br /><br />அப்போது சத்ரியன் திடீரென்று, "அந்த பொண்ணுக்கு..." என்று சொல்லிவிட்டு நின்றான்.<br /><br />ஷ்ரத்தா அவனை பார்த்தாள். "அந்த பொண்ணு இல்லை. தியா..‌ நம்ம பொண்ணு" என்றாள். <br /><br />"சரி.. தியாவுக்கு அந்த ஃபேஸ் கட் இல்ல." அவனது குரலில் ஒரு விதமான நிம்மதி.<br /><br />"தேங்க் காட்." என்று பெருமூச்சு விட்டான். ஷ்ரத்தாவின் முகத்தில் மெதுவாக ஒரு புன்னகை மலர்ந்தது.<br /><br />அவன் ஏன் அந்த முகத்தை இவ்வளவு கவனமாக பார்த்தான் என்பதை அவள் புரிந்துகொண்டாள்.<br /><br />ஹரிணியின் சாயலைத் தேடியிருக்கிறான். கிடைக்கவில்லை. அதனால் தான் அவன் நிம்மதி அடைந்திருக்கிறான்.<br /><br />ஆனால்... அந்த தேடலுக்கிடையில் தியாவை அவன் முதன்முறையாக உண்மையான குழந்தையாகவும் பார்த்திருக்கிறான். அவளது கண்கள், அவளது சிரிப்பு, அவள் அழைக்கும் "டேடி" அவற்றில் எதுவுமே அவனை கோபப்படுத்தவில்லை.<br /><br />மாறாக அவனுக்குள் ஏதோ ஒன்றை அசைத்திருக்கிறது. ஷ்ரத்தாவின் புன்னகை இன்னும் சற்றே விரிந்தது.<br /><br />"என்ன?" என்று சத்ரியன் அவளை பார்த்தான். "ஒன்னுமில்லை." என்று மழுப்பினாள்.<br /><br />"எதுக்கு சிரிக்கற?" என்றான்.<br />"சும்மாதான்." அவள் திரும்பிச் செல்ல முயன்றாள்.<br /><br />"ஷ்ரத்தா..." என்றவன் அழைத்தான். அவள் திரும்பிப் பார்த்தாள்.<br /><br />சத்ரியன் சில நொடிகள் அவளை பார்த்துவிட்டு, நான் இல்லாதப்ப என்‌ போட்டோவை வச்சி அழுதியாம். தியா சொன்னா." என்று கட்டிக்கொண்டான்.‌<br /><br />அவனில்லாத நேரம் ஷ்ரத்தா துவண்டிருப்பாளென்று அவனுக்கு தெரியும். ஆனால் சின்ன பெண் அவள் கூறும் அளவிற்கு தன்னை ஷ்ரத்தா தேடியதை எண்ணி அவளை கட்டிக் கொண்டான். <br /><br />அந்த அணைப்பில் காதல் காமம் இரண்டை தாண்டி நேசம் வெளிப்பட்டது. <br /><br />-தொடரும்.<br />-பிரவீணா தங்கராஜ்.<br /><br /></p>]]></content:encoded>
						                            <category domain="https://onlinetamilnovels.com/community/%e0%ae%a4%e0%ae%95%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%b5%e0%af%8a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-praveena-thangaraj/">தகிக்கும் நிலவொன்று -Praveena Thangaraj</category>                        <dc:creator>Praveena Thangaraj</dc:creator>
                        <guid isPermaLink="true">https://onlinetamilnovels.com/community/topicid/335/</guid>
                    </item>
				                    <item>
                        <title>தகிக்கும் நிலவொன்று-47</title>
                        <link>https://onlinetamilnovels.com/community/topicid/333/</link>
                        <pubDate>Wed, 26 Aug 2026 01:49:07 +0000</pubDate>
                        <description><![CDATA[அத்தியாயம்-47
மதுவை தொண்டையில் சரித்தபடி, ஷ்ரத்தாவைத்தான் தேடிக் கொண்டிருந்தான் சத்ரியன்.
அவள் இல்லாத ஒவ்வொரு நொடியும் அவனுக்கு எரிச்சலாக இருந்தது. &quot;ஷ்ரத்தா...&quot; அவன் குரல் அறை முழுவதும் அத...]]></description>
                        <content:encoded><![CDATA[<p>அத்தியாயம்-47</p>
<p>மதுவை தொண்டையில் சரித்தபடி, ஷ்ரத்தாவைத்தான் தேடிக் கொண்டிருந்தான் சத்ரியன்.</p>
<p>அவள் இல்லாத ஒவ்வொரு நொடியும் அவனுக்கு எரிச்சலாக இருந்தது. "ஷ்ரத்தா..." அவன் குரல் அறை முழுவதும் அதிர்ந்தது.</p>
<p>"ஏய்... ஷ்ரத்தா!" அந்த சத்தம் கேட்டு ஓடி வந்த லட்சுமி, "மேம்... பாஸ் உங்களை கூப்பிடுறாரு." என்று அவசரமாக சொல்ல, அப்போது தான் ராயனுக்கு உணவு ஊட்டிக் கொண்டிருந்த ஷ்ரத்தா எழுந்தாள்.</p>
<p>"நீங்களே பார்த்துக்கோங்க." என்று ராயனை நந்திதாவிடம் ஒப்படைத்தாள். "தியாவையும் பார்த்துக்கோங்க." என்று தீபாவிடம் சொல்லிவிட்டு வேகமாக சத்ரியனின் அறைக்குச் சென்றாள்</p>
<p>கதவைத் திறந்தவுடன், அறைக்குள் மதுவின் வாடை அடித்தது. சத்ரியன் அவளை பார்த்ததும் கண்கள் சற்றே சிவந்த நிலையில் எழுந்தான்.</p>
<p>"எங்கடி போன?" அவன் குரலில் கோபமும் இருந்தது. அதே நேரத்தில் அவளை காணாமல் இருந்ததற்கான உரிமையும் இருந்தது.</p>
<p>"என்ன தேடிட்டு இருந்த? எப்பவும் என் கூடதானே இருக்கணும்?" அவள் அருகில் வந்ததும், "நானே கூப்பிடுற அளவுக்கு என்னை லோன்லியா விட்டுட்டு போற?" என்று அதட்டியவன், "வாடி இங்க." என்று கையை நீட்டினான்.</p>
<p>ஷ்ரத்தா அவனை முறைத்தாள். "என்னதான் பிரச்சனை உனக்கு? குழந்தைக்கு சாப்பாடு ஊட்டி தூங்க வைக்கிறதுக்குள்ள கத்தற. உன் குரல் கேட்டாலே குழந்தைகள் பயப்பட மாட்டாங்களா?" என்று மனைவியின் தோரணையில் அதட்டி, குழந்தைக்கு அன்னையாக அக்கறைப்பட்ட அவளை, சத்ரியன் சில நொடிகள் பார்த்தான்.</p>
<p>பிறகு அவளது கையை பிடித்து அருகில் இழுத்தான். "நானே... குழந்தை, குட்டி, வொர்க், பிசினஸ்னு முட்டி மோதி.. எல்லாம் உதறிட்டு, என் பொண்டாட்டியோட மடியை தேடி வந்திருக்கேன்." என்று சொல்லிக்கொண்டே அவள் கையில் இருந்த குழைவான பருப்பு சாதத்தை கவனித்தான்.</p>
<p>அதை அவளது விரல்களில் இருந்து நாவால் நக்கி சுவைத்தான். ஒவ்வொரு விரலாகவும் சாப்பிட்டு முடித்தவன், "பச் கையை கூட கழுவாம ஓடி வந்தேன்." என்றாள்.</p>
<p>அவள் சேலையில் கையை துடைக்க முயன்றாள். அவனோ அந்த சேலையை அவனை நோக்கி இழுத்தான்.</p>
<p>"சத்ரியா!" என்று அவள் பதறவும், அவன் சிரித்தான்.</p>
<p>"எனக்கு பயங்கரமா பசிக்குது. முதல்ல எனக்கு விருந்து வைடி" அவனது கண்களில் குறும்பு தெரிந்தது.</p>
<p>"மணி ஏழுதான் ஆகுது." என்றவள் தயங்க, சத்ரியனின் புருவம் உயர்ந்தது.</p>
<p>"சோ வாட்? இந்த சத்ரியனுக்கே நேரம் சொல்லறியா?" அவனது குரலில் போதையின் மயக்கமும், வழக்கமான திமிரும் கலந்திருந்தது.</p>
<p>ஷ்ரத்தா பெருமூச்சு விட்டாள். இவனிடம் இப்போது பேசிப் புரிய வைப்பது வீண் என்று முடிவு செய்தவளாக அவனை மெதுவாக மெத்தையில் தள்ளி விட்டு, அவனருகில் படுத்துக் கொண்டாள்.</p>
<p>அடுத்த சில நொடிகளில்... அவள் கண்களை மூடியதுதான் நினைவில் இருந்தது.</p>
<p>அதற்குப் பிறகு. இரவு எப்போது கடந்தது என்பதே தெரியவில்லை.</p>
<p>சூறாவளியை போல அவளை ஆக்கிரமித்து விடுவித்து எப்பொழுது கண்ணயர்ந்தார்கள் என்று அவளுக்குமே தெரியவில்லை. </p>
<p>அதிகாலை ஜன்னல் வழியாக வந்த வெளிச்சம் முகத்தில் விழுந்தபோது தான் ஷ்ரத்தா கண்களைத் திறந்தாள்.</p>
<p>சோம்பலை முறித்தபடி எழுந்தவள், நேரத்தை பார்த்ததும் வேகமாக எழுந்தாள்.</p>
<p>சத்ரியன் இன்னும் உறங்கிக் கொண்டிருந்தான். அவனை எழுப்பாமல், அவசரமாக குளித்து முடித்து, வேறு உடை அணிந்து, தலைமுடியை கிளிப்பால் அடக்கிக் கொண்டு குழந்தைகளை தேடி கீழே வந்தாள்.</p>
<p>அவள் வந்ததும் தியா ஓடிவந்தாள். "குட் மார்னிங் மம்மி!" என்று மலர்ந்த முகத்துடன் சொல்ல, ஷ்ரத்தாவும் "குட்மார்னிங்" என்று  சிரித்தாள்.</p>
<p>"குட் மார்னிங் கண்ணா." என்று ராயனுக்கு கூற, ராயன் மட்டும் முகத்தைத் திருப்பிக் கொண்டான்.</p>
<p>ஷ்ரத்தா அதை கவனித்தாள். "என்ன ராயன்?" என்று அருகில் சென்றாள்.</p>
<p>"நந்திதாக்கா..." என்று அவளை பார்த்தாள்.</p>
<p>"என்ன ஆச்சுக்கா?" என்றாள். </p>
<p>"தெரியலை மேம். இவ்வளவு நேரம் பால் கொடுத்தோம். சமத்தா குடிச்சாரு குட்டி பாஸ்." ஷ்ரத்தா ராயனின் அருகில் அமர்ந்தாள்.</p>
<p>"என்னடா? அக்கா ஏதாவது விளையாட்டு பொருள் தரமாட்டேன்னு சொல்லிட்டாங்களா?" என்றாள். ஏனெனில் அடிக்கடி நடக்கும் குட்டி சண்டை அது தான். </p>
<p>ராயன் முகத்தைத் திருப்பிக் கொண்டே, "அக்கா குட் கேர்ள். சிறிது இடைவெளிக்குப் பிறகு, "நீ தான் பேட் கேர்ள்." என்றான்.</p>
<p>அங்கே இருந்த தீபா, நந்திதா, லட்சுமி மூவரும் புரியாமல் பார்த்துக் கொண்டார்கள்.</p>
<p>ஷ்ரத்தா அவனை தூக்கிக் கொண்டு, "என்னடா கண்ணா? அம்மா மேல என்ன கோபம்?" என்று கேட்டாள்.</p>
<p>ராயன் அவளது கழுத்தை சுற்றி கைகளை போட்டான்."நீங்க எனக்கும் தியாக்காவுக்கும் அம்மாவா மட்டும் இருந்தீங்க பட்..  டேடி வந்ததும் டேடி கூட தான் இருக்கிங்க" என்றதும் அந்த வார்த்தை கேட்டதும், தீபா நந்திதா லட்சுமி மூவரிடமிருந்தும் அடக்கப்பட்ட சிரிப்பு வெளியேறியது.</p>
<p>ஷ்ரத்தா நாணத்துடன், "அப்படியெல்லாம் இல்லையே. அம்மாவுக்கு நீங்கதான் இம்பார்ட்டெண்ட்." என்றாள். </p>
<p>ராயன் உடனே மறுத்தான். "நோ மம்மிக்கு டேடிதான் இம்பார்ட்டெண்ட்." அவன் குற்றப்பத்திரிகையை தொடர்ந்தான்.</p>
<p>"நேத்து பப்பு மம்மம் பாதி ஊட்டிட்டு அப்படியே போயிட்டீங்க. என் ஸ்டமக் ஃபுல்லா ஆச்சான்னு கூட பார்க்கலை. குட்நைட் கிஸ் தரலை.</p>
<p>  டேடிக்கு மட்டும் குட்நைட் கிஸ்ஸா" என்றான்.</p>
<p>ஷ்ரத்தா வாயடைத்துப் போனாள். இரண்டு வயதை தாண்டிய குழந்தை இப்படி கணக்கு வைத்துக் கொண்டிருக்கிறதே என்று நினைத்து சிரிக்கவும் முடியவில்லை.</p>
<p>அந்த நேரத்தில் பின்னால் இருந்து சத்ரியனின் குரல் கேட்டது. "ஆமாடா... அவளுக்கு நான் தான் முக்கியம். நான் தான் ஃபர்ஸ்ட் பிளேஸ்." என்று அழுத்தமாய் பதில் தந்தபடி, குளித்து முடித்து, புத்துணர்ச்சியுடன் அறையிலிருந்து வெளியே வந்திருந்தான் சத்ரியன்.</p>
<p>"எனக்குத்தான் குட்நைட் கிஸ்." என்று சட்டையின் பட்டனை சரிசெய்தபடி வந்தவன் ராயனை பார்த்து சிரித்தான்.</p>
<p>நேற்றைய மதுவின் வாசனை முழுவதும் மறைந்திருந்தது.</p>
<p>ராயன் உடனே, "பார்த்தீங்களா!" என்று ஷ்ரத்தாவை பார்த்தான்.</p>
<p>சத்ரியன் பார்க்க அவனை முறைத்தாள் ஷ்ரத்தா. "ஏன் இப்படி எரியிற நெருப்புல எண்ணெய் ஊத்துற?" என்றபடி ஷ்ரத்தா சத்ரியனை நோக்கி அனல் பார்வை வீசினாள்.</p>
<p>அந்த நேரமே சத்ரியனே எதிர்பாரா விதமாக "டேடி!" என்று தியா ஓடிவந்தாள்.</p>
<p>சத்ரியன் அந்த குரலை கேட்டதும் திடீரென்று திரும்பினான். அவள் தன்னிடம் ஓடி வருவாள் என்று அவன் எதிர்பார்க்கவில்லை.</p>
<p>அதிலும் அவள் மீண்டும் தன்னை கட்டிக்கொள்ள முயல்வாள் என்று நினைக்கவே இல்லை. அவன் இயல்பாகவே ஒரு அடி பின்னால் நகர்ந்தான்.</p>
<p>ஆனால் தியா அவனிடம் தாவிவிட்டாள். வேறு வழியில்லாமல் அவளை பிடித்துக் கொண்டான்.</p>
<p>அந்த நொடியே ராயனும் ஓடி வந்தான். சில நொடிகளுக்கு முன்பு வரை கோபமாக இருந்தவன், தியா தந்தையின் கைகளில் இருப்பதை பார்த்ததும், "டேடி!" என்று கத்திக் கொண்டு அவனிடம் ஓடி வந்தான்.</p>
<p>சத்ரியன் சிரித்தான். "ஏன்டா? என்னை பிடிக்காத மாதிரி பேசினியே? இப்ப ஏன் வந்த?" ராயன் உடனே, "நோ டேடி." என்று தலையசைத்தான்.</p>
<p>"நீங்களும் எங்களைதான் லவ் பண்ணணும். மம்மியும் எங்களைதான் லவ் பண்ணணும்." சிறிது யோசித்தவன்,</p>
<p>"பட்... மம்மி உங்களை லவ் பண்ணக்கூடாது." சத்ரியன் புருவத்தை உயர்த்தினான்.</p>
<p>"அது சரி... முதலுக்கே மோசம் வைக்கறான் பாரு." என்று முணுமுணுத்தவன், தியாவை மெதுவாக ஷ்ரத்தாவிடம் ஒப்படைத்துவிட்டு ராயனின் கன்னத்தை கிள்ளினான்.</p>
<p>ராயன் சிரித்தான். ஆனால்... தியாவை தூக்கியபோது சத்ரியனின் கைகளில் ஏதோ ஒன்று மீதமிருந்தது. அது குழந்தையின் எடை மட்டும் அல்ல. அந்த சிறிய கைகள். அவனை சுற்றிய விதம்... 'டேடி' என்று அழைத்த குரல்., அவனது மனதில் இன்னும் ஒலித்துக் கொண்டிருந்தது.</p>
<p>அவன் தன் இரு கைகளையும் பார்த்தான்.</p>
<p>ஒரு கணம் அந்த கைகளில் தெரியாத வண்ணத்துப்பூச்சியின் நிறங்கள் ஒட்டிக் கொண்டிருப்பது போல உணர்ந்தான். அந்த எண்ணத்தை உடனே தள்ளிவிட்டவன், "திரும்ப மதியத்துக்கு மேல ஆகும். நீ ஹாஸ்பிடல் கிளம்பு. குழந்தைங்க இவங்க பார்த்துப்பாங்க." என்று மட்டும் சொல்லிவிட்டு கிளம்பினான்.</p>
<p>மறுபுறம் ஷ்ரத்தாவும் மருத்துவமனைக்குச் செல்ல தயாரானாள். அவளது இன்டர்ன்ஷிப் நாட்கள். கல்லூரி வாழ்க்கையின் கடைசி கட்டம்.</p>
<p>பல வருடங்களாக தந்தையின் கனவாக அவள் சுமந்து வந்த மருத்துவப் படிப்பின் நிறைவு நெருங்கிக் கொண்டிருந்தது.</p>
<p>தீபாவிடம் தியாவை ஒப்படைத்தாள். "அவளுக்கு கொஞ்சம் படிப்பு சொல்லிக் கொடுங்க." என்று கூறிவிட்டு ராயனை நந்திதாவிடம் விட்டாள்.</p>
<p>லட்சுமி அவளுடன் மருத்துவமனைக்குப் புறப்பட்டாள். காரில் அமரும்போது, ஷ்ரத்தாவின் முகத்தில் முன்பிருந்த அந்த சோகத்தின் நிழல் இல்லை.</p>
<p>பல வருடங்களாக தன்னை விட்டு பிரிந்திருந்த சத்ரியன் திரும்பி வந்திருந்தான்.</p>
<p>ராயன் அவளருகில் இருந்தான். தியா மெதுவாக அந்த வீட்டின் ஒரு பகுதியாக மாறிக் கொண்டிருந்தாள்.</p>
<p>அவளது மருத்துவக் கனவும். இன்னும் சில மாதங்களில் நிறைவேறப் போகிறது.</p>
<p>அவளது தந்தை ஒருநாள் கண்ட கனவின் கடைசி படிக்கட்டில், இப்போது ஷ்ரத்தா நின்று கொண்டிருந்தாள்.</p>
<p>மருத்துவமனை வாசலில் கார் நின்றது. அவள் கதவைத் திறந்து இறங்கினாள்.</p>
<p>முகம் முழுவதும் புன்னகை. கண்களில் நம்பிக்கை.</p>
<p>முன்பு போலவே உடைக்கு உள்ளே புல்லட் ப்ரூப் போன்ற பாதுகாப்பு ஆர்மர் அணிந்து தான் வந்திருந்தாள். ஆனால் முன்பு போல பயமில்லை. அவளுக்கு சத்ரியன் வந்தப்பின் அவளது நிழலையும் யாராலும் நெருங்க இயலாதென்ற கர்வம் இருந்தது. </p>
<p>அந்த கர்வத்திற்குரியவனோ தனது இன்டர்நேஷனல் டீலிங்கை பேசி தீர்க்கும் முடிவுடன் கிங்பின் வாழ்க்கைக்கு எப்பொழுதும் போல தாவியிருந்தான்.</p>
<p>சத்ரியன் உலகம் மாறவில்லை. அவன் மாறியிருந்தாலும், அவனது தொழில் மாறவில்லை.</p>
<p>கிங்பின் வாழ்க்கை என்பது அவனுக்கு வெறும் பெயர் அல்ல. அது சத்ரியனின் சுவாசம்.</p>
<p>கிங்பின் வாழ்வு என்றாலும், குழந்தைகளை வைத்து எந்த பிசினஸும் அவன் காதுக்கு வரக்கூடாது. அதை தவிர மற்ற தொழில் என்றாலும், அது சட்டத்திற்கு உட்பட்டதா, வெளியிலோ என்ற கேள்வியே அவனுக்கு பெரிதாக இருக்கவில்லை.</p>
<p>பணம், அதிகாரம், ஆட்கள்...அவனது உலகத்தில் எல்லாமே ஒரு கணக்குதான். தமிழ்நாட்டின் அரசியல் முதல் சர்வதேச வியாபாரம் வரை...அவனது நிழல் எங்கே விழுகிறது என்பதை பலருக்கே தெரியாது.</p>
<p>  இப்பொழுது கூட தமிழ்நாட்டில் முதலமைச்சருக்கு எதிராக கோஷமிட ஆட்களை வண்டி வண்டியாக இறக்கிவிட ஆணையிட்டு, முதலமைச்சருடன் பிரேக்பஸ்ட் முடித்தான். எந்த ஆட்சியிலும் ஆட்களை இறக்குவது பெரிய விஷயமில்லை. எல்லாம் பணம் பேசும் விஷயம் அவ்வளவே. </p>
<p>  அடுத்து வண்டி வண்டியாக கன்டெய்னர் பணத்தை அனுப்பிவிட்டு, மத்திய அரசுக்கு பணவுதவி செய்துவிட்டே, இன்டர்நேஷல் விஷயமாக பேங்க் மூலமாக சிலரின் பணத்தை கருப்பு பணமாக இல்லாமல் மாற்றி தரும் வித்தையை கண்ணசைப்பில் முடித்து விட்டான். </p>
<p>தனஞ்செயனோ இவனின்றி தான் அந்த பதவிக்கு வந்ததாக நினைத்து நடத்திய அனைத்தும் சத்ரியன் வழியாக மட்டுமே ஆளப்பட்டதை அறிந்து, ரிதுராஜை போல சாகாமல், பாட்னராகவே இருந்துக் கொண்டான். </p>
<p>   அதிலும் அந்த தீவு ஆட்களிடமே முட்டி மோதி எண்பது தொன்னூறு விழுக்காடு மரணத்தை பரிசளித்து வந்ததை அறிந்து எட்டியே நிற்கின்றான். </p>
<p>  என்ன வினோத் இறந்துவிட்டது மட்டும் கொஞ்சம் கஷ்டமானதாக அமைந்தது. சத்ரியனிடம் ஏதாவது காரியம் ஆகவேண்டுமென்றால் வினோத்திடம் அணுகினாலே போதும். இனி யோகேஷ் பீட்டர் எந்தளவு தங்களுக்கு செவி சாய்ப்பனரோ? அவர்கள் எல்லாம் சத்ரியன் சொல்லை தாண்டி எதையும் காதில் வாங்காதவர்களாயிற்றே. </p>
<p>சத்ரியன் கடிகாரத்தை பார்த்து, எல்லோரிடமும் தலையசைப்பை தந்துவிட்டு வீட்டை நோக்கி பறந்தான். அவனது சின்னஞ்சிறு உலகத்தை காண... </p>
<p>-தொடரும். </p>
<p>-பிரவீணா தங்கராஜ்.</p>
<p>&nbsp;</p>]]></content:encoded>
						                            <category domain="https://onlinetamilnovels.com/community/%e0%ae%a4%e0%ae%95%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%b5%e0%af%8a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-praveena-thangaraj/">தகிக்கும் நிலவொன்று -Praveena Thangaraj</category>                        <dc:creator>Praveena Thangaraj</dc:creator>
                        <guid isPermaLink="true">https://onlinetamilnovels.com/community/topicid/333/</guid>
                    </item>
				                    <item>
                        <title>தகிக்கும் நிலவொன்று-46</title>
                        <link>https://onlinetamilnovels.com/community/topicid/329/</link>
                        <pubDate>Tue, 25 Aug 2026 01:18:16 +0000</pubDate>
                        <description><![CDATA[அத்தியாயம்-46
தியாவின் அந்த ஒரு வார்த்தை &#039;லவ் யூ டேடி.&#039; அந்த முத்தம் இரண்டுமே சத்ரியனின் காதுகளுக்குள் மீண்டும் மீண்டும் ஒலித்தது.
அவனது கழுத்தை சுற்றியிருந்த அந்த சின்னக் கைகள் மட்டும் அச...]]></description>
                        <content:encoded><![CDATA[<p>அத்தியாயம்-46</p>
<p>தியாவின் அந்த ஒரு வார்த்தை 'லவ் யூ டேடி.' அந்த முத்தம் இரண்டுமே சத்ரியனின் காதுகளுக்குள் மீண்டும் மீண்டும் ஒலித்தது.</p>
<p>அவனது கழுத்தை சுற்றியிருந்த அந்த சின்னக் கைகள் மட்டும் அசையாமல் இருந்தன. அவளை கீழே இறக்க வேண்டும் என்று நினைத்திருந்தவன். கீழே இறக்கியும், அந்த பிஞ்சு கைகள் அவன் கழுத்தை உடும்பு போல பற்றியிருந்தது. </p>
<p>அவனது பார்வை மெதுவாக தியாவின் முகத்தில் நிலைத்தது. அவள் கண்களில் எந்த பயமும் இல்லை. அவன் முன்பு கத்தியதையும், அவளை வெறுத்ததையும், அவளை தன்னிடம் இருந்து விலக்க முயன்றதையும், குழந்தை மனதில் எதையும் நினைவில் வைத்துக் கொள்ளவில்லை போல இருந்தது.</p>
<p>அவளுக்கு தெரிந்தது ஒன்று அவன் அவளுடைய அப்பா என்றது மட்டுமே. சத்ரியனின் தொண்டைக்குள் ஏதோ அடைத்தது.</p>
<p>தொலைவில் நின்ற ஷ்ரத்தா அதை பார்த்துக் கொண்டிருந்தாள். அவளது கண்களில் கண்ணீர் தேங்கியது.</p>
<p>  ஷ்ரத்தாவை பார்த்து "வந்து தூக்குடி' என்ற கர்ஜனையும் கோபமும் அவன் கண்ணில் தெரிந்தது. ஆனால் ஷ்ரத்தா வேண்டுமென்றே அவன் கண்களை தவிர்ப்பது போல நாடகமாடினாள். </p>
<p>இங்கு கமிஷனர் எதிரிலோ அல்லது மற்ற குழந்தைகள் எதிரிலோ தன் அக்னி கோலத்தை காட்டவும் முடியாமல் திண்டாடினான்.</p>
<p>வேறு வழியின்றி ஒரு கட்டத்தில், அம்மாவை தேடி தவித்த, அவன் நிலையே அவனுக்கு நினைவு வந்தது. </p>
<p>என்ன தான் தந்தையோடா ராஜா போல இருந்தாலும், குழந்தைக்கு இரு உறவு வேண்டுமே. அவனுக்கு அன்னையின் ஆதரவும் ஏங்கினான். அது குழந்தை பருவமோ? பெரியவனோ அம்மா வேண்டுமே. </p>
<p>அதே போல இந்த குழந்தைக்கு அப்பா வேண்டுமென்று எண்ண வைத்துக் கொண்டிருந்தாள் தியா. </p>
<p>   அவள் மீது தவறில்லை..‌ தன் ரத்தத்தில் உதித்தவள். தான் மட்டுமே தவறானவன். ஒரு ஊமை பெண்ணை கற்பழித்து, குழந்தையையும் தந்திருக்கின்றான். அவளது உயிர் கேட்பாரற்று போனதற்கும், தன்னை தேடி அவளிடம் 'சத்ரியன் எங்கே?' என்று சீரழித்ததிற்கும், ஏன் கடைசியில் அவள் இறப்புக்குமே தான் ஒரு காரணம் என்பதை யாரும் சொல்லாவிட்டாலும் மனசாட்சி குத்தி கொன்றது.</p>
<p>அவளது சிறிய விரல்கள் இன்னும் அவனது சட்டையை இறுக்கமாக பிடித்திருந்தன. அந்த விரல்களை பார்த்தபோது, ஹரிணியின் ஜாடை கூட இல்லை. அவன் சாயல் தான். </p>
<p>நல்லவேளை ஹரிணியின் முக சாயலில் தியா வந்து தன்னை இன்னமும் கொல்லவில்லை என்ற நிம்மதி வந்தது. அவன் பார்வை தியாவின் முகத்தில் விழுந்தது.</p>
<p>சத்ரியனின் விரல்கள் மெதுவாக தியாவின் தலைமுடியை வருட நடுங்கியது. அவனுக்கு தான் தயக்கமே தவிர தியாவுக்கு இல்லையே. தந்தை தன்னை கண்டு கத்தி கூச்சலிடாமல், இன்னமும் அணைத்து தூக்கியிருக்க, தியா உடனே அவனது மார்பில் முகத்தை புதைத்துக் கொண்டாள்.</p>
<p>அவனது மனதில் ஏதோ ஒன்று உடைந்தது.. சிறிதாக இருக்கும் இதயத்தின் பிளவுக்குள்... பாசம் மெதுவாக நுழைய ஆரம்பித்தது.</p>
<p>"சத்ரியா..." ஷ்ரத்தாவின் குரல் கேட்டது. அவன் அவளை பார்த்தான்.</p>
<p>அவள் எதுவும் சொல்லவில்லை. அவளது கண்கள் மட்டும் 'அவளை விடாதே.' என்று கெஞ்சிக் கொண்டிருந்தது.</p>
<p>சத்ரியன் அவளை சில நொடிகள் பார்த்தான். பிறகு தியாவை பார்த்தான்.</p>
<p>அடுத்த நொடி.. யாரும் எதிர்பார்க்காத விதமாக அவளது கையில் ஒப்படைத்து கோர்ட்டை சரிப்படுத்தும் விதமாக பெருமூச்சை வெளியிட்டான்.</p>
<p>ஷ்ரத்தாவின் கண்களில் கண்ணீர் வழிந்தது.</p>
<p>தியாவோ தந்தை அன்னையிடமே தந்துவிட்டதை காட்டிலும், இத்தனை நேரம் தந்தையின் கையில் தவழ்ந்ததை எண்ணி சிரித்தாள்.</p>
<p>"டேடி..." அந்த வார்த்தை மீண்டும் வந்தது. சத்ரியன் முகத்தில் இருந்த கடினம் கொஞ்சம் கரைந்தது.</p>
<p>மற்றவர்களை கவனிப்பது போல அவ்விடம் விட்டு தனித்து போனான். </p>
<p>"அவன் திருந்த மாட்டான். குழந்தையை இறக்கிட்டான். இவனுக்கெல்லாம் கடவுள் இந்த குழந்தைனு பொசுக்குனு கொடுத்துடறார். </p>
<p>பெர்டிலிட்டி சென்டர்ல குழந்தைக்காக தலைகீழா குட்டிக்கரணம் அடிக்கறவனுக்கு வெயிட்டிங் லிஸ்ட்ல தர்றார் கடவுள். </p>
<p>  ம்ம்ம். இதெல்லாம் எதுல சேர்த்தியோ?" என்று ருத்ரன் தான் யதுநந்தனிடம் புலம்பினான். </p>
<p>யதுநந்தனோ, "நீ அவன் தியாவை கீழே இறக்கிட்டானேனு பார்க்கற. நான் இவ்ளோ நேரம் தூக்கி வச்சிருந்தானேனு ஆச்சரியப்படறேன்." என்றான். வக்கீல் அல்லவா.. பாயிண்டை எடுத்து பேசினான். </p>
<p>"பச்.. என் கண்ணுல குற்றம் தான் பதியுது" என்றான் ருத்ரன். </p>
<p>யதுநந்தனோ "நீ போலீஸ்டா. குற்றம் கண்ணுக்கு தெரியுது. நான் வக்கீலாச்சே என்ன பாயிண்ட் இருக்குனு யோசிச்சேன்" என்று தோளைக் குலுக்கினான். </p>
<p>  "என்ன சொல்லு.. ஷ்ரத்தாவை முறைச்சிட்டே சுத்தறான். கடவுள் ட்ரூ லவ்வை சேர்த்து வைப்பார்னு நினைச்சேன். ம்கூம்.. புஸ்ஸுனு ஆக்கிட்டார்" என்று கவலையாக பேசினான் ருத்ரன். </p>
<p>"நீ பார்த்தியா.. தியா இல்லாத நோரம் எல்லாம் சத்ரியன் இரண்டு நொடிக்கு ஒருமுறை ஷ்ரத்தாவை தான் பார்க்கறான்.</p>
<p>  அதுவும் இல்லாம நீயும் நானும் அவளை ட்ரூவா தான் லவ் பண்ணினோம். ஆனா ஒன் சைட் லவ். கடவுள் என்ன யோசித்திருப்பார். </p>
<p>  இந்த பக்கம் இரண்டு தடியனுங்க. இரண்டு பேரும் ட்ரூவா லவ் பண்ணறாங்க. பட் ஒன் சைட். </p>
<p>   அந்த பக்கம் சத்ரியன் ஷ்ரத்தா இரண்டு பேரும் காதலிக்கறாங்க. இதுவும் ட்ரூ லவ் அப்ப இவனையே கோர்த்து விடுவோம்னு முடிவெடுத்து உயிரோட அனுப்பிட்டார்." என்று எடுத்துக் கூறினான். </p>
<p>ருத்ரனோ "கடவுளே காதலுக்கு வழிவிட்டாலும் உனக்கு பொறுக்காது போலயே.. சரி நீ எப்ப கல்யாணம் பண்ணப்போற." என்று அக்கறையாக கேட்டான்.</p>
<p>  "உனக்காவது அம்மா இருக்காங்க. கல்யாணத்துக்கு பொண்ணு தேட, எனக்கு யார் இருக்கா.. பட் தேடணும்... ஏய்.. பேசாம உங்க அம்மாவிடம் எனக்கும் பொண்ணு தேட சொல்லு." என்று கூறினான். </p>
<p>"சொல்லு சொல்லு நாளைக்கே ஒருத்தியை தலையில கட்டுவாங்க. கையில அவ்ளோ வரன். போன்ல பாரு விதவிதமா ரக ரகமா சும்மா தளதளனு பொண்ணுங்க போட்டோ" என்று கூற, "ஐய்யா சாமி உன் வர்ணனையை நிறுத்து. ஆன்ட்டி வர்றாங்க. போலீஸ் மாதிரியாடா பேசற ரகரகமா தளதளனு.." என்றான். </p>
<p>  கீர்த்தனாவுடன் ஷ்ரத்தாவும் வந்தாள். "நீங்க இரண்டு பேரும் சாப்பிடலையா?" என்று கேட்க, யதுநந்தனோ "சாப்பிடணும்" என்று திணறினான். </p>
<p>  சத்ரியன் கூர்மையான அம்பு போல் பார்வையை வீச பேச தயங்கி திணறினான்.  ஷ்ரத்தாவோ "ஆசிரமத்துக்கு டொனேஷன் தந்ததா கேள்விப்பட்டேன்" என்று ருத்ரனிடம் கேட்டாள். </p>
<p>"இன்னிக்கு எங்கப்பாவுக்கு நினைவு நாள். அதனால இன்னிக்கு புட் ஸ்பான்ஸர் பண்ண நினைச்சேன். ஆனா இன்னிக்கு உன் ஆளு இங்க விருந்தே வைக்கவும், டொனேஷனா போட்டுட்டேன்." என்றான் ருத்ரன். </p>
<p>  அவனுக்கு சத்ரியன் இருப்பது எல்லாம் பெரிய திணறலை தரவில்லை. அவன் குணமே இது தானே. </p>
<p>   சாப்பிட அழைத்து செல்லவும், ருத்ரன் யதுநந்தனை நன்றாக கவனித்தாள். ஸ்டெல்லாவிடம் மனம் விட்டு பேசினாள். </p>
<p>  யோகேஷ் பீட்டர் எல்லாம் நீண்ட வருடங்களுக்கு பிறகு சத்ரியன் ஷ்ரத்தா அவர்கள் குழந்தை என்று கண்டதற்கே மகிழ்ந்தனர். அவர்களும் இன்றிலிருந்து சத்ரியனுடன் அல்லவா வந்துவிடுவார்கள். </p>
<p>  இப்படியாக நேரம் நன்றாக கழிந்தது.</p>
<p>  ருத்ரனிடம் ராயனும், யதுந்நதனிடம் தியாவும் கொஞ்சிக்கொண்டு நிறைய பேசினார்கள். </p>
<p>   கீர்த்தனாவோ ஷ்ரத்தாவிடம்  'சில நாள் நிறைய திட்டியிருக்கேன். என் குங்குமத்தை அழிச்சவன் உயிரோட இருக்கானேனு. இனி என்னால சபிக்க கூட முடியாது. முன்ன நான் சொன்ன வார்த்தைகள் எல்லாம் காற்றில கரைந்துடணும்னு வேண்டறேன். நல்லபடியா வாழு ஷ்ரத்தா. நான் ஏதாவது காயப்படுத்தியிருந்தாளோ, அல்லது ருத்ரன் காயப்படுத்தியிருந்தாலும், அவன் தான் காயப்படுத்தினானே‌. மன்னிச்சிடும்மா. நீ தீர்க்க சுமங்கலியா..." என்றவர் கழுத்தை அளவிட, ஷ்ரத்தாவோ "தாலி அவர் கட்டலைம்மா. கப்பல்ல இருந்தப்ப மோதிரம் மாத்தியிருந்தோம்" என்றாள். </p>
<p>  "அட... இதுநாள் தாலி இல்லாம இருக்கலாம். இனியாவது கட்டிக்கோங்க. வீட்டுக்கு போ... தாலி வாங்கி சாமி முன்ன வச்சி கட்டி விட சொல்லு." என்று கூற சத்ரியனை கண்டு சரியென்றாள். </p>
<p>  வீட்டிற்கு சென்றால் தியாவை தூக்கி தந்ததிற்கு என்ன சொல்லி திட்டுவாரோ. இதில் தாலியை கேட்டு அடம்பிடித்தால் தன்னை வெறுப்பாரா? முன்போ ஆசைநாயகி என்ற அடைமொழியை அல்லவா சுமந்தாள்.</p>
<p>  "சரிம்மா.. நாங்க கிளம்பறோம். சில நேரம் விதி வித்தியாசமான சந்திப்பையும் பகையாளியையும் சொந்தக்காரங்க மாதிரி பேச வச்சி அனுப்பிடும். நம்ம நிலை அப்படி தானோ என்னவோ. உடம்பை பார்த்துக்கோ" என்று கூறிவிட்டு புறப்படவதற்காக ருத்ரனை வேறு கூப்பிட்டார். </p>
<p>  யதுநந்தனும் புறப்படுவதாக கூற, ருத்ரனையும் யதுவையும் மாறி மாறி பார்த்து "தேங்க்ஸ்" என்று கூறினாள். </p>
<p>  அவள் கூறும் பொழுதே கண்ணீர் துளிர்க்க, ருத்ரன் யதுவும் கீர்த்தனா ஆன்ட்டியுடன் சென்றார்கள். மறுபுறம் கமிஷனரும் இடையிலேயே ஆசிரமத்தின் பாதுகாப்பையும், குழந்தைகளையும் பார்த்துவிட்டு நலன் விசாரித்து, சிட்டாய் பறந்துவிட்டார். அதனால் தங்கள் கூட்டிற்கு திரும்ப சத்ரியனும் ஆளாய் பறந்தான்.</p>
<p>   ராயனும் தியாவும் தீபா லட்சுமியுடன் நந்திதாவுடன் சென்றியிருக்க, சத்ரியன் ஷ்ரத்தா மட்டும் தனியாக காரில் பயணம் செய்தார்கள்.</p>
<p>  முன்னும் பின்னும் யோகேஷ் பீட்டர் பழைய ஆளுமையுடன் சத்ரியனை பின் தொடர்ந்தார்கள். </p>
<p>சத்ரியனோ "காதலிக்கறேன்னு டார்ச்சர் செய்தவனுக்கு எல்லாம் ரொம்ப தான் வரவேற்பும் உபசரிப்பும் தர்ற‌" என்றான். </p>
<p>  யதுநந்தன் ருத்ரன் இருவருமே ஷ்ரத்தாவை விரும்பியவர்கள். ஆனால் சத்ரியன் தற்போது குறிப்பிடுவது ருத்ரனை என்று புரிந்து, "அவர் என்னை பாதுகாக்க கொட்டற மழையில நின்றுயிருக்கார். ராயன் பிறந்தப்ப அவர் தான் உதவியது. நான்.. நான் தேடறப்ப வராதவர் என்னை எவனாவது சாகடிக்கறப்ப தான் நீ வருவியா? யதுநந்தன் அவருமே என்னை பாதுகாத்தவர் " என்று குமைந்தாள். </p>
<p>"பேசி வச்சது எல்லாம் மறந்துட்டியா? என்னை கொன்றதுக்காக மினிமம் மூன்று வருஷமாகும்னு சொன்னேன். அந்த முட்டாள் யது உன்‌மேல சாப்ட் கார்னார்ல வெளியே எடுத்துட்டான். </p>
<p>  இந்த ருத்ரன் அவன் நெருங்கினா நான் வெளியே வருவேன்னு டார்ச்சர் பண்ணிருக்கான்.‌</p>
<p>நான் சொல்லிட்டு தானடி போனேன். என்னை கொல்ல வர்றவங்க யாரா இருந்தாலும் நான் மறைந்திருந்து அவங்களை தேடி அழிக்க, எனக்கான நேரம் தேவைப்படும்னு.</p>
<p>அப்ப கூட நீ வெளியே வந்தது தெரியாது. உன்னை யாரு ஹரிணி டெத்துக்கு எல்லாம் போக சொன்னது. அதுலயிருந்து தான் உன்னை தொடவே அந்த கேங்குக்கு ஐடியா வந்திருக்கும். மூடிட்டு நீ பாட்டுக்கு டாக்டர் படிச்சிட்டு இருந்தா இங்க யாரும் நெருங்கியிருக்க மாட்டாங்க" என்று கத்தியவன் "ஆமா.. அதென்ன.. நைஸா.. அந்த குழந்தையை என்னிடம் திணிக்கற. அத்தனை பேர் பார்க்க கையில கொடுத்துட்டு என்ன‌ ரியாக்ஷன் தருவேன்னு வேற பயந்தப்பாரு.. உன்னை எல்லாம் அப்பவே கொன்னுயிருப்பேன். </p>
<p>  அங்க நான் ஒரு குழந்தையை தூக்கி எறிந்தா அத்தனை குழந்தைகள் மனசுல ஏதாவது பதியவா? என்ன நினைச்சிட்டு இருக்க? அந்த தியா... என்னை கிஸ் பண்ணி அப்பானு கழுத்தை கட்டிக்கிட்டா. ஒரு செகண்ட் நாக பாம்பை கழுத்துல சுத்தின ஃபீல்." என்று நெஞ்சு விம்ப கூறினான். </p>
<p>"ஹரிணி இருந்திருந்தா ஏன்டா என்னை கெடுத்து குழந்தை தந்தனு உன்னை கேட்டிருக்க மாட்டா சத்ரியா. ஏன்னா அவ என்னை விட க்ளியரா இருந்தா. உன்னை விட்டு போனது, வினோத் அண்ணாவை ஒதுக்கியது. குழந்தைக்கு வினோத் அண்ணாவை இன்ஷியலா போடலை. அவங்க அவங்க பாவம் அவங்க அவங்க தான் சுமக்கணும்னு நினைச்சா.</p>
<p>  தியாவை தண்டனைனு நினைச்சா தண்டனை. இல்லை... அவ உன் குழந்தை.. இல்ல.. நம்ம குழந்தைனு நினைச்சா நம்ம குழந்தை.  </p>
<p>  வினோத் அண்ணாவுக்கும் ஹரிணிக்கும் இறந்தப்பிறகும் நீ உதவனும்னு நினைச்சி, அவங்களிடம் மன்னிப்பு கேட்க தோன்றினா. அவளை வளர்க்கணும்னு முடிவெடு. அவளை பத்தி அவளுக்கு எதுவும் சொல்லாம‌" என்று கூறியவள் வீடு வந்ததும் இறங்கி ராயன் தியாவை தேடி சென்றாள். </p>
<p>சத்ரியன் சில நொடி கடந்து மெதுவாக அறைக்கு வந்தவன் கையில் மதுவை தான் தேடி எடுத்தான்.‌</p>
<p>    ஷ்ரத்தா அவனது கோலத்தை கண்டு ராயன் தியாவை அந்த பக்கமே அழைத்து வர வேண்டாமென கூறி அவளுக்கான அறையில் இருந்தாள். </p>
<p>-தொடரும். </p>
<p>-பிரவீணா தங்கராஜ். </p>
<p>&nbsp;</p>]]></content:encoded>
						                            <category domain="https://onlinetamilnovels.com/community/%e0%ae%a4%e0%ae%95%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%b5%e0%af%8a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-praveena-thangaraj/">தகிக்கும் நிலவொன்று -Praveena Thangaraj</category>                        <dc:creator>Praveena Thangaraj</dc:creator>
                        <guid isPermaLink="true">https://onlinetamilnovels.com/community/topicid/329/</guid>
                    </item>
				                    <item>
                        <title>தகிக்கும் நிலவொன்று-45</title>
                        <link>https://onlinetamilnovels.com/community/topicid/328/</link>
                        <pubDate>Mon, 24 Aug 2026 01:37:12 +0000</pubDate>
                        <description><![CDATA[அத்தியாயம்-45இரண்டு மூன்று நாட்கள் கடந்த நிலையில் இன்று காலை வீட்டில் வழக்கத்தைவிட சற்றே பரபரப்பு அதிகமாக இருந்தது.  தியாவின் காய்ச்சல் குறைந்திருந்தது. ராயனை கூட கவனிக்காமல் தியாவை தான் அதி...]]></description>
                        <content:encoded><![CDATA[<p>அத்தியாயம்-45<br /><br />இரண்டு மூன்று நாட்கள் கடந்த நிலையில் இன்று காலை வீட்டில் வழக்கத்தைவிட சற்றே பரபரப்பு அதிகமாக இருந்தது.<br /><br />  தியாவின் காய்ச்சல் குறைந்திருந்தது. ராயனை கூட கவனிக்காமல் தியாவை தான் அதிகம் கவனித்தாள் ஷ்ரத்தா. <br /><br />நன்றாக குணமானதும் ராயனோடு விளையாட தியா சென்றாள். குழந்தைகள் மறந்திடுவார்களே. <br /><br />சத்ரியனும் அதிகாலையிலேயே எழுந்து தயாராகிக் கொண்டிருந்தான்.<br /><br />கருப்பு சட்டை பேண்ட். அதன் மேல் கோட். கையில் விலையுயன்ந்த வாட்ச்... கழுத்தில் சூரியனை வடிவமைத்திருந்த டாலர் மின்னியது. எப்போதும் போல கம்பீரமான தோற்றத்தில், அவனை பார்த்தபடி நின்ற ஷ்ரத்தா மெதுவாக ஏறிட்டாள். <br /><br />   "இன்னைக்கு எங்கப்பாவோட நினைவு நாள்." என்றாள்.<br /><br />சத்ரியன் அவளை நோக்கிப் பார்த்தான். "தெரியும்." என்றான் மிதப்பாக. <br /><br />"ராயன் எங்க? டிரஸ் மாத்திட்டானா?" என்று கோர்ட் பட்டனை சரிசெய்து கேட்க, ''அவனை அனுப்பி விடறேன். நீயே ரெடிப்பண்ணு" என்று கோபமாக அவ்விடம் விட்டு செல்ல, "போடி புருஷன் இல்லாதப்ப எப்படா வருவான்னு ஏங்கறது. உயிரோட இருக்கானா செத்தானானு அழுதழுது கடந்த. இப்ப கண் முன்ன நடமாடினா திமிரா மூஞ்சியை தூக்கறது." என்று முனங்கினான். <br /><br />   ஷ்ரத்தாவோ தியா இருந்த அறைக்கு வந்ததும் குட்டி குழந்தையை வருடினாள். <br /><br />''அம்மா.. நானுமா நீங்களும் ஓரே டிரஸ் போடப்போறோமா?" என்று லட்சுமி கொண்டு வந்ததை காட்டி கேட்க, "ஆமா தியா." என்றவள் தீபாவிடம் தலை மட்டும் வாறி டச் அப் செய்ய கூறிவிட்டு, தன்னை அலங்காரம் செய்யும் பொழுது யதுந்நதன் ஷ்ரத்தாவுக்கு போன் காலில் அழைத்தான்.‌<br /><br />"யது கால் பண்ணறார்" என்று கூறி எடுத்தாள்.‌<br /><br />"சொல்லுங்க யது" என்றதும், "அது.. இன்னிக்கு திவாகர் சாரோட நினைவு நாள். அதனால கால் பண்ணினேன்." என்றான்.‌<br /><br />  "ஆமா யது. அப்பா நினைவு நாள். அதோட இன்னிக்கு ஆசிரமத்துக்கு போறோம்?" என்றாள்.‌<br /><br />"அப்படியா..? எங்க?" என்று கேட்டதும், சிறிது இடைவெளிக்குப் பிறகு ஷ்ரத்தா தயக்கத்துடன் கூறினாள்.<br /><br />"யது.. அந்த 126 குழந்தைகள் இருக்கற ஆசிரமம். இப்போ அங்க நூற்று இருபத்தாறு குழந்தைகள் மட்டும் இல்ல. புதுசா காப்பாத்தப்பட்ட குழந்தைகளும் இருக்காங்க.. <br />அதனால... இன்னைக்கு அங்க போகறோம். யது நீங்களும் வர்றிங்களா?" என்று கேட்டாள். <br /><br />யதுநந்தன் சில நொடிகள் ருத்ரனை பார்த்தான். ருத்ரன் அங்கு தான் இருந்தான். <br />யதுநந்தன் தயங்க, "நானும் வரலாமா?" என்று ருத்ரன் கேட்டான்.<br /><br />"யாரு.. ருத்ரனா?" என்று துள்ளலாய் கேட்டாள். "என் குரல் கூட அவளுக்கு அடையாளம் தெரியாம நடிக்கறாடா" என்று குறைப்பட, <br /><br />யதுநந்தனோ "பச் சும்மாயிருடா. எங்க இருக்கு ஷ்ரத்தா அந்த ஆசிரமம். லோகேஷன் அனுப்பு. நானும் ருத்ரனும் வர்றோம்" என்றதும் ஷ்ரத்தா முகவரியை சொன்னாள்.<br /><br />யதுநந்தன் அதை தனது போனில் குறித்துக் கொண்டான்.<br />"ஷ்ரத்தா... ருத்ரனையும் கூட்டிட்டு வரலாமா. நீ எதுவும் பதில் சொல்லலையே. <br />    அவனோட அப்பாவுக்கும் இன்னைக்கு நினைவு நாள்." என்று கூறினான்.<br /><br />"அவனையும் கூட்டிட்டு வாங்க. எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை." என்றாள்.<br /><br />யதுநந்தன் சிரித்தான். "அப்போ கிளம்பலாமா?" என்று ருத்ரன் குரலில், ஷ்ரத்தா ஏதோ சொல்லப் போக, சத்ரியன் அங்கு வந்தவனாக, "கிளம்பாம என்னடி பண்ணிட்டு இருக்க?" என்று அதட்டினான்.<br /><br />"கிளம்பிட்டு தான் இருக்கேன்." என்றவள் திரும்பிப் பார்த்தாள்.<br /><br />"கிளம்பிட்டா வெயிட் பண்ணு... இல்லைன்னா.. தியாவுக்கு நீ ப்ராக் போட்டு விடுறியா? நான் இன்னும் குயிக்கா கிளம்பிடுவேன்." என்றதும், சத்ரியன் எதுவும் சொல்லாமல் அவளை ஒரு அனல் பார்வை பார்த்தான்.<br /><br />அடுத்த நொடி பளார்!' என்று கதவு சத்தமாக மூடப்பட்டது.<br /><br />போனில் லைனிலிருந்த அச்சத்தம் கேட்டு யதுநந்தனும் ருத்ரனும் ஒருவரை ஒருவர் பார்த்தனர்.<br /><br />யதுநந்தன் மெதுவாக சிரித்தான். "இவனுக்கு கோபம் வந்தா கதவுதான் பாவம்." ருத்ரன் புருவத்தை உயர்த்தினான்.<br /><br />"கதவை அப்படி சாத்துறான். போன்ல அப்படி கேட்குது. பாவம் ஷ்ரத்தா. காலேஜ் கூட முடிக்கலை. அவன்கிட்ட மாட்டிட்டு முழிக்கறா." என்று கவலைக் கொள்ள, யதுநந்தன் ருத்ரனை பார்த்து சிரித்தான்.<br /><br />"அவளைப் பத்தி கவலைப்படுற அளவுக்கு இன்னும் காதல் இருக்கா?" என்று கேட்க ருத்ரன் அவனை முறைத்தான்.<br /><br />"அது காதல் இல்ல. அன்புனு மாத்திக்கிட்டு இருக்கேன் போதுமா" என்று கூற "சரி... சரி" யதுநந்தன் சிரித்தபடி விட்டுவிட்டான்.<br /><br />சில நொடிகள் கழித்து "திவாகர் சார் இறந்தப்போ ஷ்ரத்தாவுக்கு பதினெட்டு வயசு கூட இல்லை. அந்த வயசுல இருந்தே சத்ரியன்கிட்டதான் இருக்கா?" ருத்ரன் திடீரென்று ஏதோ கணக்கு போட்டான்.<br /><br />சத்ரியனோட டேட் ஆஃப் பர்த் என்று முன்பு அவனது கேஸ் பைலை கண்டு, போனை எடுத்துப் பார்த்தான்.<br /><br />"இதோ இருக்கு. ஓ மை காட்!" என்று ருத்ரனின் முகம் மாறியது. "அவனை விட பன்னிரெட்டு வயசு சின்ன பொண்ணு..." சிறிது இடைவெளிக்குப் பிறகு, "என்னை விடவும் உன்னை விடவும் வயசுல பெரியவன்." என்று கூறினான். <br /><br />"இப்ப அது ரொம்ப முக்கியமா?" என்று யதுநந்தன் சலித்தான்.<br /><br />"கிளம்பு. கீர்த்தனா ஆன்ட்டியை வேற பிக்கப் பண்ணணும். போலாம் டா" என்று பேசினார்கள். இடைப்பட்ட நாளில் போலீஸும் வக்கீலும் நண்பர்களாக மாறியதை தனியாக கூறவேண்டுமா என்ன? <br /><br />இங்கு வீட்டுக்குள் ஷ்ரத்தா தியாவை தயார்படுத்திக் கொண்டிருந்தாள்.<br /><br />சின்ன பெண்ணுக்கு அழகான எளிமையான உடையை அணிவித்து விட்டாள்.<br /><br />அப்பாவும் மகனும் ஒரே மாதிரியான உடையில் வந்து நின்றனர். அதை பார்த்த ஷ்ரத்தாவின் முகத்தில் தானாக ஒரு சிரிப்பு வந்தது.<br /><br />"ரெண்டு பேரும் ஒரே மாதிரி இருக்கீங்க." ராயன் உடனே, "அம்மாவும் அக்காவும் சேம் டிரஸ்!" என்று மழலை குரலில் சொல்லி சிரித்தான்.<br /><br />ஷ்ரத்தா தியா கையை பிடித்துக் கொண்டாள். சத்ரியனின் பார்வை ஒரு நொடி அவர்கள்மீது விழுந்தது.<br /><br />எதுவும் சொல்லவில்லை. அவன் நேராக காரை நோக்கி நடந்தான்.<br /><br />பின்னால் தீபா, நந்திதா, லட்சுமியும் குழந்தைகளின் பாதுகாப்புக்காக வந்தனர்.<br /><br />நாலைந்து உயர்ரக கார்களின் அணிவகுப்பில் சத்ரியன் ஷ்ரத்தாவோடு வந்தான்.<br /><br />ஆசிரமத்தின் முன் கார்கள் ஒன்றன்பின் ஒன்றாக வந்து நின்றன.<br /><br />கதவு திறந்ததும்... யோகேஷ், பீட்டர், ஸ்டெல்லா மூவரும் ஓடி வந்தனர். சத்ரியன் காரிலிருந்து இறங்கியதும் வரவேற்று ராயனை தூக்கிக் கொண்டான்.<br /><br />"லிட்டில் பிரின்ஸ்..." என்று ஆளாளுக்கு ராயனை பார்த்து  பேசி மகிழ, அவன் தந்தையின் கழுத்தை கட்டிக் கொண்டான்.<br /><br />அந்த நேரத்தில் ஸ்டெல்லாவின் பார்வை ஷ்ரத்தாவை கண்டது.<br /><br />அவள் ஓடிவந்து ஷ்ரத்தாவை கட்டிக்கொண்டாள்.<br /><br />சில நொடிகள்.. அவளால் பேசவே முடியவில்லை. கண்ணீர் மட்டும் வழிந்தது. ஷ்ரத்தாவும் அவரது முதுகை வருடினாள். <br />ஸ்டெல்லா அவளது முகத்தை பார்த்தாள். என் மக கிடைத்ததுக்கு நீ தான் மா காரணம்." என்றவரால் அதற்கு மேல் பேச முடியவில்லை. ஷ்ரத்தா அவளை அணைத்துக் கொண்டாள்.<br /><br />யோகேஷ் அருகில் வந்து, "எப்படி இருக்கீங்க மேம்?" என்று கேட்டான்.<br /><br />ஷ்ரத்தா சிரிக்க முயன்றாள். "நல்லா இருக்கேன் அண்ணா" என்றவளது கண்களில் பெருமை.<br /><br />"பாருங்க மேம்.. இத்தனை குழந்தைகள். நம்ம பாஸ் இல்லன்னா இவங்க யாருமே இப்ப உயிரோடவும் மானத்தோடவும் இருந்திருக்க மாட்டாங்க." அவன் சுற்றிலும் காட்டினான்.<br /><br />அங்கே... நூற்றுக்கணக்கான குழந்தைகள். சிலர் விளையாடிக் கொண்டிருந்தனர். சிலர் வகுப்பறைக்குள் அமர்ந்திருந்தனர். சிலர் ஓடிவந்து சத்ரியனை சுற்றிக் கொண்டனர்.<br /><br />சத்ரியன் ராயனை யோகேஷிடம் கொடுத்தான். யோகேஷும் பீட்டரும் ராயனை மாறி மாறி தூக்கிக் கொண்டாடினர்.<br /><br />"லிட்டில் பாஸ் வந்துட்டாரு ஹே.." என்றதும் ராயனுக்கு என்ன புரிந்ததோ சிரித்தான்.<br /><br />அந்த காட்சியை தியா அமைதியாக ஷ்ரத்தாவின் கைகளில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தாள்.<br /><br />அவளது கண்களில் ஒரு சிறிய ஏக்கம். ஷ்ரத்தா அதை மட்டும் தவறவிடவில்லை.<br /><br />மெதுவாக அவளை அணைத்து நின்றாள். அந்த நேரம் யதுநந்தனும் ருத்ரனும் கீர்த்தனாவுடன் வந்து சேர்ந்தனர்.<br /><br />அவர்களை பார்த்த ஷ்ரத்தா உடனே சென்று வரவேற்றாள்.<br /><br />"வாங்க. வாங்க" என்றாள். <br /><br />"பரவாயில்லையே.. இந்த இடமே அழகா இருக்கு. குழந்தைகளா பார்க்கறப்ப பட்டாம்பூச்சி உலகத்துக்கு வந்தது போல இருக்கு.." கீர்த்தனா கூறினார்.<br /><br />யதுநந்தன் தியாவை பார்த்ததும் அருகில் சென்றான்.<br /><br />"வா குட்டி..." என்று அழைக்க தூக்கிக் கொண்டான்.<br /><br />தியா முதலில் தயங்கினாள். பிறகு அவனது தோளில் தலை வைத்துக் கொண்டாள். சத்ரியன் தூக்காமல் இருக்கவே யதுநந்தனின் அரவணைப்பு அவளுக்கு தேவைப்பட்டது.<br /><br />கீர்த்தனாவும் அருகில் வந்தார்.<br /><br />அவர் ஏற்கனவே தியாவைப் பற்றி ருத்ரனிடம் கேட்டுத் தெரிந்திருந்தார்.<br /><br />குழந்தையை பார்த்ததும் ஒரு நொடி ஷ்ரத்தாவை பார்த்தார். அந்த பார்வையில் கேள்வியும் இல்லை. ஒரு புரிதல் இருந்தது.<br /><br />யாரோ ஒருத்தரோட குழந்தைன்னு விட்டுடாம... தன் கணவனோட உயிர்நகல்னு பிறந்த குழந்தைன்னு ஏற்றுக்கிட்டு வளர்க்கிறாளே. என்ற பெருமை. ஆனால் சத்ரியனை பார்த்ததும் கீர்த்தனாவின் முகத்தில் சிறிய மாற்றம் அடைந்தது.<br /><br />அவளது கணவரின் மரணத்தின் பின்னால் நின்ற மனிதனும் இவன் தானே. அவனை நேராக எதிர்கொள்ள மனம் தயாராகவில்லை. அதுவும் இந்த நாளில்... அதனால் அமைதியாக விலகிச் சென்றார். ருத்ரன் அதை கவனித்தான். அதனால் தாயை வற்புறுத்தவில்லை.<br /><br />ஸ்டெல்லா மட்டும் கீர்த்தனாவை அழைத்துக் கொண்டு ஆசிரமத்தின் குழந்தைகளை காட்ட ஆரம்பித்தாள்.<br /><br />"இவங்க எல்லாரையும் பாருங்க. எத்தனை பேரோட வாழ்க்கை நாசமாகி இருந்திருக்கும். இவங்கள்ல சில குழந்தைகள் எத்தனை பேரால சீரழிக்கப்பட்டாங்க தெரியுமா? இப்ப தான் குழந்தைகள் குழந்தைகளா உணர்ந்து விளையாடறாங்க. இதுக்கெல்லாமா காரணம் எங்க பாஸ் சத்ரியன்'' என்றதும் கீர்த்தனாவின் கண்கள் கலங்கின.<br /><br />"இப்பதான் இந்த குழந்தைகள் மனசார வாழ கத்துக்கிட்டு இருக்காங்க. சாப்பாடு... உடை... படிப்பு... பாதுகாப்பு... எல்லாத்தையும் சத்ரியன் பார்த்துக்கறார். எங்க பாஸ் இல்லன்னா... இந்த குழந்தைகளுக்கு வாழ்க்கையே இருந்திருக்காது."<br /><br />கீர்த்தனா அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தார்.<br /><br />அவரது பார்வை மெதுவாக சத்ரியனை நோக்கி திரும்பியது. உண்மையில் இதற்காகவே இவனை மன்னிக்கலாம் என்றது அம்முதிய பெண்மணியின் மனம். ஆனால் தன் கணவனையும் கொன்று விட்டானே!<br /><br />மறுபுறம்... ருத்ரன் சத்ரியனை பார்த்துக் கொண்டிருந்தான். ஸ்டெல்லாவின் வார்த்தைகள் அவனது காதில் மீண்டும் மீண்டும் ஒலித்தன.<br />ஒருமுறை ஷ்ரத்தா கூட 'ஐரீனையும் ஸ்டெல்லாவையுமா பார்த்தா அவங்க சொல்வாங்க. சத்ரியனை கடவுளா வந்து என் மகளை காப்பாத்தினார்னு.' என்றது நினைவு வந்தது. <br /><br />அவன் திவாகரின் மரணத்தையும்... தன் தந்தையின் மரணத்தையும் நினைத்தான். பிறகு ராயனை சுற்றி குழந்தைகள் ஆர்ப்பாட்டம் செய்வதை பார்த்தான். அந்த குழந்தைகள் சத்ரியனை எப்படி பார்த்தனர் என்பதையும் கவனித்தான்.<br /><br />ஒரு கிங்பின்னாக இல்லை. ஒரு பயங்கரமான மனிதனாக கொலைகாரனாக இல்லை. அவர்களுக்கு... அவன் ஒரு பாதுகாப்பு, ஒரு நம்பிக்கை தந்திருப்பதை கண்கூடாக கவனித்தான்.<br /><br />ருத்ரனின் பார்வை ராயனிடம் நிலைத்தது. 'பிறக்கும்போதே பணத்தில் பிறந்தவன். விரும்பிய வாழ்க்கையை வாழ வேண்டியவன். ஆனா... சிறையில் இருந்தான்.' என்றதே ஆச்சரியமாக பார்த்தான். <br /><br />சத்ரியனை தனக்கு பிடிக்காவிட்டாலும் 'தன் வாழ்க்கையை மறைத்து வைத்து இத்தனை குழந்தைகளுக்காக வாழ்ந்திருக்கிறான்.' அவனது மனதில் ஏதோ ஒரு உணர்வு எழுந்தது.<br /><br />'கெட்டவனோ... நல்லவனோ... இறுதியில் ஒரு தியாகத்தை செய்திருக்கான். அந்த நேரத்தில் சத்ரியன் குழந்தைகள் நடுவே நடந்து வந்தான். அவனைச் சுற்றி நான்கு பேர். அவன் நடந்து வரும் கம்பீரம்... அந்த இடத்திலேயே ஒரு தனி அதிகாரத்தை உருவாக்கியிருந்தான்.<br /><br />ருத்ரனுக்கு அதை மறுக்க முடியவில்லை.<br /><br />"யது." என்று அழைத்து வக்கீல் நண்பனிடம் "இத்தனையும் பண்ணிட்டு... கையை கட்டி திமிரா நின்னு கன்னை என் முன்ன நகர்த்தி, என்னை கொன்னுடறதா இருந்தா கொன்னுக்கோனு வேற நின்றான்.." யதுநந்தன் சத்ரியனை பார்த்தான்.<br /><br />"மனுஷன் ஒரே மாதிரி இருக்க மாட்டாங்க ருத்ரா. யாருக்காவது நல்லவனா இருந்துட்டு போறான்." என்று யதுநந்தன் கூற ருத்ரன் பதில் சொல்லவில்லை.<br /><br />அந்த நேரத்தில் ஒரு கார் ஆசிரமத்திற்குள் வந்து நின்றது. அதிலிருந்து கமிஷனர் தர்ஷன் இறங்கினார். சத்ரியன் அவரை பார்த்ததும் உடனே முன்னே சென்றான்.<br /><br />"நீங்க வந்ததுக்கு நன்றி" என்று இதயத்தில் கை வைத்து கூறினான். <br /><br />"நான் ஒன்னும் நல்லவனிடம் இத்தனை குழந்தைகளை அனுப்பலையே. என்‌ திருப்திக்கு சேப்பா இருக்காங்களானு, நானா வந்து எல்லாம் சரியா இருக்கானு பார்க்கறேன்." என்றார். சத்ரியன் தோளைக்குலுக்கி, "ஒரு சிறு திருத்தம். நீங்க அனும்பின குழந்தைகளுக்கும் முன்ன இங்க 126 குழந்தைகள் காப்பாற்றி வச்சிருந்தேன். சோ... நீங்க அனுப்பிய குழந்தைகள் இன்னமும் சேப்பா தான் இருப்பாங்க" என்று கோடிட்டு காட்டினான்.<br /><br />ருத்ரன் தூரத்திலிருந்து கமிஷனரை பார்த்ததும் ஆச்சரியப்பட்டான்.<br /><br />ருத்ரன் சல்யூட் அடிக்க தர்ஷன் ருத்ரன் தோளைகத்தட்டி சிரித்தார்.<br /><br />"அம்மாவும் வந்திருக்காங்க." என்று கீர்த்தனாவை நோக்கி காட்டி அறிமுகப்படுத்தினான்.  மரியாதையுடன் நலம் விசாரித்து தலையசைத்தார்.<br /><br />மதிய நேரம் ஆசிரமம் முழுவதும் விழா போல இருந்தது.<br /><br />குழந்தைகளுக்காக சிறப்பு உணவு தயாரிக்கப்பட்டிருந்தது. சத்ரியன் அனைவருடனும் அமர்ந்து பேசினான்.<br /><br />பிறகு குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. புதிய உடைகள், புத்தகங்கள், பொம்மைகள், பள்ளி பொருட்கள். ஒவ்வொரு பரிசையும் பெற்ற குழந்தைகளும் சத்ரியனை கட்டிக்கொண்டு மகிழ்ந்தனர்.<br /><br />சில குழந்தைகளை அவனே தூக்கிக் கொண்டு முத்தமிட்டு கீழேயிறக்கி, சிலரது தலையை கலைத்து விட்டு வருடினான்.<br /><br />அந்த காட்சியை பார்த்த ஷ்ரத்தாவின் மனம் மெதுவாக நிறைந்தது. அவள் தியா பக்கம் திரும்பிப் பார்த்தாள்.<br /><br />குழந்தை அமைதியாக அந்த காட்சியை எல்லாம் ஏக்கமாய் பார்த்துக் கொண்டிருந்தாள். தியாவின் கண்கள் சத்ரியனையே வட்டமிட்டு கொண்டிருந்தன. இத்தனை பெரிய இடத்தில் தன் தந்தை எல்லோரையும் அரவணைக்க, தன்னை மட்டும் தூக்குவதற்கு தயங்கினால் குழந்தைக்கு எப்படியிருக்கும். அதிலும் தந்தையை பலரும் ராஜாவாக பாவிக்க... பெருமையில் திளைத்தாள். <br /><br />ஷ்ரத்தா சில நொடிகள் தயங்கினாள்.<br /><br />பிறகு சத்ரியன் என்ன எதிர்வினை ஆற்றினாலும் பரவாயில்லை என்று, தியாவின் கையை பிடித்துக் கொண்டு சத்ரியன் இருக்கும் இடத்தை நோக்கி நடந்தாள்.<br /><br />அவள் அருகில் சென்றதும் சத்ரியன் எதிர்பாராத நேரத்தில்  தியாவை அவன் கையில் தூக்கி கொடுத்தாள்.  <br /><br />   இங்கிருக்கும் ஒரு குழந்தை தான் என்று கவனமின்றி, முத்தமிடும் வரை சென்றவன், ஷ்ரத்தா அணிந்த அதே உடை என்றதும் மூளை அலாரமிட்டது.<br /><br />  சத்ரியன் முகம் கொஞ்சம் கொஞ்சமாய் மாறியது. ஷ்ரத்தாவோ சங்கடமாய் அவளையும் ஏற்றுக்கொள் என்ற ரீதியில் கெஞ்ச, முத்தமிட முடியாது தடுமாறி, கீழே இறக்கிவிட முயன்றான். <br /><br />தியாவோ அவன் கழுத்தை பிடித்து அவன் தயங்கிய முத்தத்தை கன்னத்தில் தந்து, "லவ் யூ டேடி" என்று கட்டிக்கொண்டாள். <br /><br />சத்ரியனுக்கு வெளிப்படுத்த முடியாத உணர்வும், ஒருவிதமான திகைப்பான நிலையுடன் தியாவின் கண்களை சந்தித்தான். <br /><br />-தொடரும்.<br />-பிரவீணா தங்கராஜ்.<br /><br /></p>]]></content:encoded>
						                            <category domain="https://onlinetamilnovels.com/community/%e0%ae%a4%e0%ae%95%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%b5%e0%af%8a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-praveena-thangaraj/">தகிக்கும் நிலவொன்று -Praveena Thangaraj</category>                        <dc:creator>Praveena Thangaraj</dc:creator>
                        <guid isPermaLink="true">https://onlinetamilnovels.com/community/topicid/328/</guid>
                    </item>
				                    <item>
                        <title>தகிக்கும் நிலவொன்று-44</title>
                        <link>https://onlinetamilnovels.com/community/topicid/327/</link>
                        <pubDate>Sun, 23 Aug 2026 04:17:04 +0000</pubDate>
                        <description><![CDATA[அத்தியாயம்-44
ஷ்ரத்தாவை அழைத்து வந்தப்பின் அவள் பெரிதாக சத்ரியனை கடியவில்லை. அவளுக்கு தெரியும் சத்ரியனை பற்றி... 
  ஏதோ ருந்ரன் யதுநந்தனிடம் பேசியது மனதில் நிம்மதியானது. 
அடுத்த ஒரு வாரமு...]]></description>
                        <content:encoded><![CDATA[<p>அத்தியாயம்-44</p>
<p>ஷ்ரத்தாவை அழைத்து வந்தப்பின் அவள் பெரிதாக சத்ரியனை கடியவில்லை. அவளுக்கு தெரியும் சத்ரியனை பற்றி... </p>
<p>  ஏதோ ருந்ரன் யதுநந்தனிடம் பேசியது மனதில் நிம்மதியானது. </p>
<p>அடுத்த ஒரு வாரமும் பகல் நேரங்களில் ஷ்ரத்தா மருத்துவப் படிப்பில் மூழ்கிக் கிடந்தாள்.</p>
<p>இரவு வந்ததும் பல வருடங்களாக பிரிந்திருந்த இருவரின் ஏக்கமும், காதலும் அவர்களை மீண்டும் மீண்டும் ஒருவருக்குள் ஒருவர் தொலைத்துக் கொண்டிருந்தனர். சத்ரியன் அவளை மோகத்தில் மூழ்கடித்தான்.</p>
<p>அப்படியே நாட்கள் ஓடின. ராயனோ தந்தையின் கைகளுக்குள்ளேயே சுற்றிக் கொண்டிருந்தான்.</p>
<p>சத்ரியன் வீட்டிலிருந்தபடியே பெரும்பாலான வேலைகளை போனிலேயே முடித்துக் கொண்டான். அவன் கட்டளைக்கு பிறந்த அதிகார வர்க்கத்தினன்.</p>
<p>ஒரு அழைப்பு, சில கட்டளை என்று கிங்பின் வாழ்க்கை மீண்டும் ஆரம்பத்தை நோக்கியது முன்பு அவனது வட்டம் இந்திய எல்லைக்குள் இருந்திருக்க, தற்போது இன்டர்நேஷனல் அளவிற்கு தன்னை வளர்த்துக் கொள்வதில் தீவிரமானான். நம் எதிரியின் அளவை பொறுத்து நமது நிலை உயர்ந்தாக வேண்டும், உயர்த்திக்க வேண்டுமே. </p>
<p>அவனது உலகம் மீண்டும் அவனைச் சுற்றி சுழல ஆரம்பித்திருந்தது. ஆனால் அந்த உலகத்திற்குள் ஒரு சிறிய உயிரை மட்டும் அவனால் சேர்த்துக்கொள்ள முடியவில்லை.</p>
<p>தியா.</p>
<p>அன்று மதியம் சத்ரியன் தனது அறையில் அமர்ந்து போனில் முக்கியமான ஒரு பேச்சில் இருந்தான்.</p>
<p>ராயன் அவனருகில் விளையாடிக் கொண்டிருந்தான். அவனுக்கு அருகில் தியா வந்துவிடக் கூடாது என்பதற்காக ஏற்கனவே ஒரு விதிமுறையையே வைத்திருந்தான்.</p>
<p>"தீபா... நந்திதா... யாராக இருந்தாலும் சரி. தியா என் ரூமுக்குள்ள வரக்கூடாது." என்று திட்டவட்டமாக சொல்லியிருந்தான்.</p>
<p>ஆனால்... குழந்தைகளுக்கு விதிமுறைகள் எங்கே புரியும்?</p>
<p>ராயனைத் தேடி வந்த தியா அவனோடு சேர்ந்து சத்ரியனின் அறைக்குள்ளேயே வந்து விட்டாள்.</p>
<p>சத்ரியன் போனில் பேசிக் கொண்டிருந்தபடியே அவளை பார்த்தான். அவனது முகம் உடனே இறுகியது.</p>
<p>"தியா..." அவனது குரலில் இருந்த எச்சரிக்கையை குழந்தை புரிந்து கொள்ளவில்லை. ராயனின் பின்னால் நின்றபடி அவனை பார்த்துக் கொண்டிருந்தாள்.</p>
<p>அடுத்த நொடி...  சத்ரியனின் அழைப்பில் பயந்தவளாக அவளது கை தவறி மேசையின் ஓரத்தில் இருந்த விலையுயர்ந்த கண்ணாடிப் பொருள் தட்டிவிட, கீழே விழுந்தது.</p>
<p>'டங்!' கண்ணாடி உடைந்து சிதறியது. அதே நேரத்தில் ஏதோ சத்தம் கேட்டு தந்தையை தேடி ராயன் ஓடி செல்ல, அவனது காலில் ஒரு சிறிய கண்ணாடித் துண்டு குத்தியது.</p>
<p>"ஆஆ..." என்று குழந்தை அழுதது. காலில் இருந்து ரத்தம் எட்டிப்பார்த்தது. அந்த காட்சியை பார்த்த சத்ரியனின் கோபம் வெடித்தது.</p>
<p>"எத்தனை தடவை சொன்னாலும் புரியாதா?" அவன் தியாவை நோக்கி கத்தினான். தியா பயந்து பின்னால் நகர்ந்தாள். அவளது கண்களில் உடனே கண்ணீர் நிரம்பியது.</p>
<p>"நான்... நான்..." என்று சொல்ல முயன்றாள். ஆனால் குரல் அழுகைக்குள் கரைந்து போனது.</p>
<p>"வெளியே போ!" என்றவனது கர்ஜனையில் குழந்தை தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தாள்.</p>
<p>அந்த நேரத்தில்... நந்திதா அறைக்குள் வந்தாள்.</p>
<p>காட்சியை பார்த்தவுடன் முதலில் ராயனை பார்த்தாள்.</p>
<p>"ராயன்." என்று காலில் ரத்தமிருக்க கவனிக்க செல்ல,  அதைக் கண்டவள் உடனே அவனை தூக்கிக்கொள்ள முயன்றாள்.</p>
<p>ஆனால் சத்ரியன் அவளை தடுத்தான். "முதல்ல அந்த பொண்ணை இங்கிருந்து கூட்டிட்டு போ" என்று கூறி கர்ஜித்தான்.</p>
<p>"ஓகே பாஸ்" என்று நந்திதா அழைத்து சென்றாள். ஆனால் குழந்தை அழுதழுது தேம்பி காய்ச்சலை இழுத்துக் கொண்டாள். இருக்காதா பின்னே சத்ரியன் கர்ஜித்தால் ஷ்ரத்தாவே அதிர்ந்து போவாளே. சிறுப்பிள்ளை பயந்ததில் ஆச்சரியப்படவில்லை. </p>
<p>ஷ்ரத்தா வந்து காணும் போது, அவளுக்கு ஹை ஃபீவரில் இருந்தாள். </p>
<p>தியா இன்னும் அழுதுகொண்டே இருந்தாள். அவளது உடல் சூடாக இருந்ததை ஷ்ரத்தா தொட்டுப் பார்த்ததும் உணர்ந்தாள். நந்திதா லட்சுமி சத்ரியன் பேசியதையும் தியா அழுதழுது இவ்வாறு ஆனதையும் கூறினார்கள். </p>
<p>"தியா..." அவளை தூக்கிக்கொண்டாள். குழந்தை அழுதபடியே ஷ்ரத்தாவின் கழுத்தை கட்டிக்கொண்டாள்.</p>
<p>ஷ்ரத்தா மருந்து கொடுத்து, காய்ச்சலை கட்டுப்படுத்த முயன்றாள்.</p>
<p>அதே நேரத்தில் சத்ரியன் ராயனை தூக்கிக் கொண்டு வந்தான். "என் பையனோட கால்ல காயம் முதல்ல பெத்த குழந்தையை கவனிக்க வந்தியா?." என்று கூறியவன் அவளை தனது அறைக்குள் அழைத்து இழுத்துச் சென்றான்.</p>
<p>சில நேரத்தில் ராயன் மருந்து போட்டுக் கொண்டு சோர்வாக தூங்கிவிட்டதை காட்டினான்.</p>
<p>சத்ரியன் அவனது தலையை வருடிக் கொண்டிருந்தான்.</p>
<p>ஷ்ரத்தா தியாவை பார்த்துவிட்டு சத்ரியனின் அறைக்குள் வந்ததால், அவள் ராயனை பார்த்தபடியே பேச ஆரம்பித்தாள்.</p>
<p>"ஏன் சத்ரியா இப்படி இருக்க?" என்றாள். </p>
<p>"ஏய்.. என் பையன் சாப்பிடாமலேயே தூங்கிட்டான்." என்று கத்திவிட்டு சிறிது நேரம் அமைதியாக இருந்தான்.</p>
<p>பிறகு.. ''அந்த பொண்ணை ஏதாவது போர்டிங் ஸ்கூல்ல சேர்த்துடு." ஷ்ரத்தா அவனை பார்த்தாள்.</p>
<p>"இல்லன்னா... யாராவது பாதுகாப்பான இடத்துல கேர்டேக்கர் மாதிரி வச்சு தனியா வாழ வழி பண்ணு. இங்க என் பங்களாவுல அவ இருக்கக்கூடாது." அந்த வார்த்தைகள் ஷ்ரத்தாவுக்குள் ஏதோ ஒன்றை உடைத்தன.</p>
<p>"ராயன் சாப்பிடாம இருந்தது பசிக்காகத்தானே..." என்றாள் அவள் மெதுவாக. "உன் குழந்தைக்கு நீ சாப்பாடு கொடுத்திருக்கலாமே." என்றதும் சத்ரியன் அவளை பார்த்தான்.</p>
<p>"அதுக்கு பதிலா அந்த குழந்தையை ஏன் இப்படி தள்ளி வைக்கிற?" என்று வினாத்தொடுக்க அவனது முகம் இறுகியது.</p>
<p>"நீ முன்னாடி கெட்டவனா இருந்திருக்க. நிறைய தப்பு செய்திருக்க. அப்போ கூட உன் மேல எனக்கு இந்தளவு கோபம் வரல." சத்ரியன் ஷ்ரத்தாவை பார்வையிட, "ஆனா இப்ப..." அவளது கண்களில் கண்ணீர் திரண்டது.</p>
<p>"நீ தியாவை வெறுக்கறதை பார்க்கும்போது தான் எனக்கு உன் மேல கோபம் வருது. அந்த குழந்தை என்னடா பாவம் பண்ணுச்சு?" என்றதற்கு சத்ரியன் பதில் சொல்லவில்லை.</p>
<p>"சரி." ஷ்ரத்தா தன் குரலை அடக்கிக் கொண்டாள்.</p>
<p>"ஒத்துக்கறேன். தியாவைப் பார்த்தா... நீ ஹரிணியிடம் நடந்த தப்பை நினைச்சுக்கற. உனக்கு விசுவாசமா இருந்த வினோத் அண்ணாவுக்கு செய்த துரோகமா உனக்கு தோணுது. அதனால அவளைப் பார்க்க முடியல. ஆனா..." அவள் அவனை நேராக பார்த்தாள்.</p>
<p>"அவளை மறைச்சிட்டா நீ செய்த தப்பு அழிஞ்சிடுமா?" சத்ரியனின் பார்வை அசைந்தது. "அவளை ஏத்துக்காம இருக்கற ஒவ்வொரு நாளும்... இன்னொரு தப்பை நீயே செய்றேன்னு அர்த்தம்." அவன் எதுவும் பேசவில்லை.</p>
<p>"உனக்கு புரியல சத்ரியா. செய்த தப்புக்கு தண்டனை இல்லாம யாராலையும் தப்பிக்க முடியாது." ஷ்ரத்தாவின் குரல் மென்மையானது. சத்ரியன் அந்த தண்டனையை ஏற்றுக் கொள்ள வேண்டுமா என்ற ரீதியில் துடித்தான்.</p>
<p>"குழந்தைகள் நல்லவங்களாகத்தான் பிறக்கிறாங்க. அவங்க வளர்ற இடம்... அவங்களுக்கு கிடைக்கிற அன்பு... அவங்க பார்க்கிற மனிதர்கள்... அதுதான் அவங்களை நல்லவங்களாவும் கெட்டவங்களாவும் உருவாக்கும்." அவள் தியாவின் அன்னையாக பேசினாள்.</p>
<p>"நீ அவளை போர்டிங் ஸ்கூல்ல சேர்த்துட்டா... யாரோட பாதுகாப்புல விட்டுட்டா... அவளுக்கு என்ன குறை இருக்கும்னு தெரியுமா? அன்பு கிடைக்காது. ஒரு நாள் அந்த அன்புக்காக ஏங்குவா. அந்த ஏக்கத்துல யாராவது தப்பானவங்க கையை பிடிச்சா? டிரக்ஸ் எடுத்துக்கிட்டா? குடிக்க பழகிட்டா?, கண்டவனோட காதல் கீதல்னு ஹோட்டல்ல ரூம் போட்டா..? ஏன்.. உன் எதிரிகளோட சேர்ந்துக்கிட்டு உன்னை பழிவாங்கினா.. இதெல்லாம் நீ அந்த குழந்தையை நிராகரிச்சா அந்த குழந்தை தடம் மாறிடற விஷயம் சத்ரியா." சத்ரியன் மெதுவாக அவளை பார்த்தான்.</p>
<p>"அப்போ நீ என்ன செய்வ?" அவனிடம் எதற்கும் பதில் இல்லை.</p>
<p>"அவளை நல்லபடியா நம்ம கூட வச்சு வளர்த்திருக்கலாமேன்னு நீ நினைக்குற நேரத்துக்கு... காலம் கடந்திருக்கும்." அவளது குரல் உடைந்தது.</p>
<p>"ராயன் எப்படி நம்ம பையனோ... அப்படியே தியா நம்ம பொண்ணு. இதுல எந்த மாற்றமும் இல்லை. ஏன்னா அந்த குழந்தை முகத்துல ஹரிணி சாயல் இல்ல. நான் உன் சாயலை பார்த்திருக்கேன்" அந்த வார்த்தை சத்ரியனின் நெஞ்சில் நேராக இறங்கியது.</p>
<p>"தேவையில்லாம... தியாவை நீ  இன்னொரு முறை காயப்படுத்தினா... நான் என் அப்பா வீட்டுக்குப் போயிடுவேன்." சத்ரியன் அதிர்ச்சியுடன் அவளை பார்த்தான்.</p>
<p>"ராயனை தரலன்னாலும்... நான் தியாவை மட்டும் கூட்டிட்டு போயிடுவேன். ஏன்னா.. எனக்கு தியா ஹரிணியோட பொண்ணுனு நான் பார்க்கலை. உன்னோட மறுவுருவமா பார்க்கறேன். அவளை என் பொண்ணா தான் பார்த்துட்டு வர்றேன்.." அவ்வளவு சொல்லிவிட்டு வேறு எதுவும் பேசாமல் தியாவின் அறைக்குச் சென்றாள்.</p>
<p>அவளருகில் படுத்துக் கொண்டு குழந்தையின் நெற்றியில் கை வைத்தாள்.</p>
<p>தியா காய்ச்சலின் மயக்கத்தில் கூட ஷ்ரத்தாவின் விரல்களை இறுக்கமாக பிடித்துக் கொண்டாள்.</p>
<p>அந்த இரவு ராயன் தந்தையின் அறையிலேயே தூங்கிக் கொண்டிருந்தான். ஆனால் சத்ரியனுக்கு மட்டும் உறக்கம் வரவில்லை.</p>
<p>அவன் கண்களை மூடினான். ஷ்ரத்தா சொன்ன வார்த்தைகள் மீண்டும் மீண்டும் காதில் ஒலித்தன. யாருக்காக மலையோடு மோத சென்று மலையை காட்டிலும் பெரியதாக மாறி நிற்கின்றான். அப்படியிருக்க ஷ்ரத்தா பட்ட அவஸ்தைகள் கொஞ்சம் நஞ்சமா? அதெல்லாம் மீண்டு இணைந்தது எதற்காக? இப்படி பிரிவை பேசுவதற்காகவா?</p>
<p>"ராயன் எப்படி நம்ம பையனோ...  தியாவும் நம்ம பொண்ணு."</p>
<p>அவன் திரும்பிப் படுத்தான். மறுபுறம் புரண்டு புரண்டு திரும்பினான். கண்களை மூடினான்.</p>
<p>பல வருடங்களுக்குப் பிறகு... அவன் மனதில் மறந்து விட்டதாக நினைத்த ஒரு கதவு திறந்தது.</p>
<p>அவன் சிறுவனாக இருந்த காலம். அவன் அப்பா அம்மா சண்டையிட்டு பிரிந்திருந்த காலம், அம்மா தாத்தா வீட்டிற்கு சென்றிட, சத்ரியன் தந்தையின் பாதுகாப்பில் வாழ்ந்தான்.</p>
<p>தந்தையின் வீட்டில் அவன் கழித்த இரவுகள். அவனுக்கென வீடு இருந்தது, பணம் இருந்தது, வேலையை செய்ய ஆட்கள் இருந்தார்கள். ஆனால்... அம்மாவின் மடியில் கிடைத்த அந்த ஒரு பாதுகாப்பு மட்டும் இல்லை.</p>
<p>அன்புக்காக ஏங்கிய அந்த சிறுவனின் முகம்... இன்று திடீரென்று அவனுக்குள் ராயன் தியா இருவரின் முகமாக தோன்றியது.</p>
<p>அவன் கண்களை இறுக்கமாக மூடினான்.</p>
<p>"இல்ல..." என்று தனக்குத்தானே முணுமுணுத்தான்.</p>
<p>ஆனால் மனம் கேட்கவில்லை. தியா அவனை என்ன செய்தாள்? எதுவும் இல்லை. அவள் செய்தது ஒரே ஒரு தவறு. ஹரிணி வயிற்றில் உதிர்த்து விட்டாள்.  அதற்காக அவள் தண்டனை அனுபவிக்க வேண்டுமா? ஹரிணியை தீண்டியது தன் கைகள் தானே. </p>
<p>அவன் திரும்பிப் பார்த்தான். அருகில் தூங்கிக் கொண்டிருந்த ராயனை பார்த்தான்.</p>
<p>பிறகு தியாவின் முகம் நினைவுக்கு வந்தது. அவன் கத்தியதும் பயந்து அழுத அந்தக் கண்கள். எப்பொழுதும் ஷ்ரத்தாவை பார்த்ததும் ஓடி சென்று ஒட்டிக் கொண்ட அந்த சிறிய உடல். அவனது உள்ளுக்குள் ஏதோ மெதுவாக அசைந்தது.</p>
<p>"நான் தியாவை ஏத்துக்கிட்டா..." அவன் நினைத்தான். "நான் செய்த தப்பை ஏத்துக்கிட்ட மாதிரி ஆகிடுமா?" அதுதான் அவனை அதிகமாக பயமுறுத்தியது. ஆனால்... அதே நேரத்தில் இன்னொரு கேள்வி அவனை துரத்தியது. "நான் அவளை ஏத்துக்காம விட்டுட்டா... நான் மேலும் மேலும் தவறு செய்தவனா மாறிடுவேன். குழந்தையை கொடுத்துட்டு ஏமாத்தின பாவியா இருப்பேன். அந்த பாவத்தை வேற சுமக்கணுமா? </p>
<p>ஷ்ரத்தா தியாவோட போயிட்டா, ராயன் நிலை? ராயன் என்னை போல அம்மாயின்றி தவிப்பானா?'</p>
<p>சத்ரியனின் மனதில் தோன்றும் பல்வேறு கேள்விக்கு அவனிடம் பதில் இல்லை. முதல் முறையாக... எதிரிகளை எதிர்கொள்ளும் போது கூட நடுங்காத சத்ரியன்... ஒரு சிறிய குழந்தையை எப்படி நேசிப்பது என்று தெரியாமல் தடுமாறிக் கொண்டிருந்தான்.</p>
<p>அந்த இரவு முழுவதும்... ராயன் அவன் அருகில் அமைதியாக தூங்கிக் கொண்டிருந்தான். ஷ்ரத்தா ராயனை காண கூட வரவில்லை‌.</p>
<p>சத்ரியனின் கண்களுக்கு அதனால் உறக்கம் வரவில்லை. தியாவை ஏற்றுக்கொள்ள மனம் மறுத்தது. அவளை நிராகரிக்க மனசாட்சியும் அனுமதிக்கவில்லை.</p>
<p>இரண்டிற்கும் நடுவில் ஒரு தந்தையாக மாற வேண்டிய பாதையில், சத்ரியன் முதல் முறையாக தனியாக முடிவெடுக்க தெரியாதவனாக நின்றிருந்தான்.</p>
<p>-தொடரும். </p>
<p>-பிரவீணா தங்கராஜ். </p>
<p>&nbsp;</p>]]></content:encoded>
						                            <category domain="https://onlinetamilnovels.com/community/%e0%ae%a4%e0%ae%95%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%b5%e0%af%8a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-praveena-thangaraj/">தகிக்கும் நிலவொன்று -Praveena Thangaraj</category>                        <dc:creator>Praveena Thangaraj</dc:creator>
                        <guid isPermaLink="true">https://onlinetamilnovels.com/community/topicid/327/</guid>
                    </item>
				                    <item>
                        <title>தகிக்கும் நிலவொன்று-43</title>
                        <link>https://onlinetamilnovels.com/community/topicid/324/</link>
                        <pubDate>Sat, 22 Aug 2026 01:31:55 +0000</pubDate>
                        <description><![CDATA[அத்தியாயம்–43
சத்ரியன் கிளம்புவதற்காக தயாராகிக் கொண்டிருந்தான்.
கருப்பு சட்டையின் மேல் கோட்டை அணிந்து, கையில் கடிகாரத்தை சரி செய்தவன் கதவை நோக்கி நடந்தான்.
அவனை பார்த்தபடி நின்ற ஷ்ரத்தாவி...]]></description>
                        <content:encoded><![CDATA[<p>அத்தியாயம்–43</p>
<p>சத்ரியன் கிளம்புவதற்காக தயாராகிக் கொண்டிருந்தான்.</p>
<p>கருப்பு சட்டையின் மேல் கோட்டை அணிந்து, கையில் கடிகாரத்தை சரி செய்தவன் கதவை நோக்கி நடந்தான்.</p>
<p>அவனை பார்த்தபடி நின்ற ஷ்ரத்தாவின் மனதிற்குள் மீண்டும் ஒரு பயம் எழுந்தது.</p>
<p>இத்தனை வருடங்கள்... அவன் உயிரோடு இருக்கிறானா இல்லையா என்று தெரியாமல் தவித்தவள்.</p>
<p>இப்போது மீண்டும் அவன் வெளியே செல்கிறான்.</p>
<p>"எ... எங்க..." என்று கேட்கத் தொடங்கியவள், வார்த்தையை அப்படியே நிறுத்திக் கொண்டாள். சத்ரியன் திரும்பிப் பார்த்தான்.</p>
<p>அவளது கண்களில் இருந்த கேள்வியை அவன் புரிந்து கொண்டான். "புது கமிஷனரோட எனக்கு சில டீலிங் இருக்கு." என்றான் அமைதியாக.</p>
<p>"இத்தனை கேங்லையும் எந்தத் தடயமும் இல்லாம அழிக்க முடிஞ்சதுக்கு அவரோட சப்போர்ட்டும் இருக்கு. என்னோட நோக்கம் வேறொரு மார்க்கமா இருக்கலாம். ஆனா... அவரோட நோக்கம் அவரோட கடமையில பெர்பெக்ட்  "</p>
<p>சிறிது இடைவெளிக்குப் பிறகு அவளை பார்த்தான். "நான் திரும்பி வந்ததை வச்சி, என் மேல எந்த ஒரு சின்ன கேஸ்கூட இருக்கக்கூடாதுன்னு சொல்லி இருக்கேன். பழைய கேஸ் ஏதாவது தோண்டி துருவி, செத்தவன் உயிரோட வந்தான்னு யாரும் மூக்கை நீட்டக்கூடாதுல" என்றதும் ஷ்ரத்தா அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தாள்.</p>
<p>"நாளைக்கு பின்னாடி அவரே கூட பட்டுன்னு ஒரு என்கவுண்டர்ல என்னை போட்டுட்டாங்கன்னா..." அவன் தோளை லேசாக குலுக்கினான்.</p>
<p>"அதுக்கான விலைன்னு... இங்க காப்பாத்தப்பட்ட குழந்தைகளோட எதிர்காலத்தை பாதுகாப்பா வைக்கணும். இத்தனை நாள் அந்த நூற்று இருபத்தாறு குழந்தைகளோட தலைமறைவா இருக்க முடியும். இனிமேல் அப்படி இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அதனால அந்த ஆசிரமம் எல்லாருடைய கண்ணிலும் படணும். </p>
<p>அங்க ஒரு சின்ன தப்பு நடந்தாலும்... உலகமே திரும்பிப் பார்க்குற மாதிரி அந்த இடத்தை மாற்றணும்." ஷ்ரத்தா அவனை பார்த்துக் கொண்டிருந்தாள்.</p>
<p>"அதனால..." அவன் அவளது கன்னத்தை மெதுவாக தட்டினான். ''ஆசிரமத்தை வெளியே தெரியப்படுத்திட்டா. அதோட அவர் மீட்ட குழந்தைகளையும் பொண்ணுங்களையும் அங்க தங்க வைக்க ஏற்பாடு நடக்குநான் போயிட்டு வந்துடறேன்." அவளது கண்களை நேராக பார்த்தான்.</p>
<p>"நீ பயப்படுற மாதிரி யாராலையும் என்னை ஒண்ணும் பண்ண முடியாது." என்று கூறிவிட்டு ராயன் பக்கம் சென்றான்.</p>
<p>அவனை அள்ளி தூக்கியவன், மீசையும் தாடியும் குத்தும் அளவுக்கு கன்னத்தில் முத்தமிட்டான்.</p>
<p>"மை லிட்டில் பிரின்ஸ்..." என்றதும் ராயன் சிரித்தான். தியா மட்டும் சற்றுத் தள்ளி நின்றபடி அந்த காட்சியை பார்த்துக் கொண்டிருந்தாள்.</p>
<p>அவளது கண்களில் இருந்த ஏக்கத்தை ஷ்ரத்தா மட்டும் கவனித்தாள்.</p>
<p>"அப்புறம்..." சத்ரியன் மீண்டும் ஷ்ரத்தாவை பார்த்தான்.</p>
<p>"நீயும் காலேஜ் கிளம்பு. இன்னும் ஒன் இயர் இருக்கு." அந்த பழைய அதிகாரத்தோடு கூறிவிட்டு வெளியேறினான்.</p>
<p>சத்ரியன் சென்றதும் ஷ்ரத்தாவின் மனதில் ஒரே ஒரு எண்ணம் தோன்றியது அது சரியா தவறா தெரியவில்லை.  ருத்ரனை பார்க்க வேண்டும் என்பது தான்.</p>
<p>அவன் இத்தனை வருடங்கள் தன்னைப் பற்றி என்ன நினைத்திருந்தான். தான் சத்ரியனுக்காக காத்திருந்தது இணைந்தப்பின், அவன் எப்படி எடுத்துக் கொண்டிருப்பான். அவன் தன் உயிருக்கு ஆபத்தென்று கொட்டும் மழையில் நின்று பிடிவாதம் பிடித்து அன்றைய இரவு தனியாக விடமனமில்லை என்று கூறினாரே. அதுவும் அன்பு தானே. காதல் என்று எடுக்காது அன்பை நினைத்தாள். </p>
<p>அதற்காகவாது அவனை ஒரு முறை பார்த்து பேச வேண்டும் என்று தோன்றியது.</p>
<p>கல்லூரி முடிந்ததும் சந்திக்கலாம் என்று முடிவு செய்தாள். கிளம்புவதற்கு முன் ராயனையும் தியாவையும் முத்தமிட்டாள். "நல்லா படிங்க." பிறகு தியாவை பார்த்து, ராயனுக்கு மட்டும் இல்ல... தியாவுக்கும் பாடம் சொல்லித்தரணும்." என்று கூறிவிட்டு சென்றாள். அடுத்து தியா தானே பள்ளிக்கு செல்ல வேண்டியவள். </p>
<p>மறுபுறம் அதிகாலையிலேயே யதுநந்தன் போட்டுக் கொடுத்த தேநீரை கையில் வைத்தபடி ருத்ரன் அமர்ந்திருந்தான்.</p>
<p>அவன் முகமே சரியில்லை. யதுநந்தன் அவனை பார்த்தான்.</p>
<p>ருத்ரன் திடீரென்று "சண்டை போட்டு ஷ்ரத்தாவை ஏதாவது செய்தானானு தெரியலை.? மனசெல்லாம அவளுக்கு என்ன ஆச்சோனு பதறுது." என்றான். </p>
<p>யதுநந்தன் அவனை சில நொடிகள் பார்த்துவிட்டு சலிப்புடன் சிரித்தான்.</p>
<p>"நீ என்ன அவனை மிருகம்னு நினைச்சிட்டியா?" என்றான் யதுநந்தன். "உனக்கும் எனக்கும் வலிக்கற மாதிரி ஒனு சொல்லவா?"</p>
<p>ருத்ரன் அமைதியாக அவனை பார்த்தான்.</p>
<p>"அவங்க கணவன் மனைவி." சிறிது இடைவெளிக்குப் பிறகு, "நீண்ட நாள் பிரிவை ஈடுகட்ட... மஜாவா இருந்திருப்பாங்க." என்று கூற, ருத்ரன் முகத்தை சுளித்தான்.</p>
<p>யதுநந்தன் அவனை பார்த்து சிரித்தான்.</p>
<p>அடுத்த நொடியே... ருத்ரன் எழுந்து அவனை இறுக்கமாக அணைத்துக் கொண்டான். பல வருட நண்பர்களைப் போல. இருவருக்கும் இடையில் வார்த்தைகள் இல்லை.</p>
<p>சில வலிகள்... பேசாமல் அணைப்பிலேயே முடிந்து விடும். அப்படி தான் ருத்ரன் புறப்பட, யதுநந்தன் வழியனுப்பினான்.‌</p>
<p>ருத்ரன் நேராக தன் வீட்டிற்கு வந்தான். வீட்டில் கீர்த்தனா காலை உணவை தயாரித்துக் கொண்டிருந்தார்.</p>
<p>"வந்துட்டியா ருத்ரா. நேத்தெல்லாம் பெரிய மழைடா." என்று புலம்பிக் கொண்டிருந்தார். "இடி அப்படி இடிச்சது... ஏதோ தலையில யாரோ போட்டு அழுத்துற மாதிரி." ருத்ரன் மெதுவாக, "ம்ம்." என்றான்.</p>
<p>"என் தலையிலேயே இடியே விழுந்தது." என்று ருத்ரன் சோகமாய் கூற கீர்த்தனா அவனை பார்த்தார்.</p>
<p>"என்னடா சொல்ற?"</p>
<p>"ஒன்னுமில்ல." என்று கூறிவிட்டு குளித்து, காக்கி சீருடையில் வந்தான்.</p>
<p>ஷூ அணிந்து கொண்டிருந்தபோது கீர்த்தனா அவனுக்கு உணவை ஊட்டிக் கொண்டிருந்தார்.</p>
<p>அப்போது ருத்ரன் திடீரென்று சொன்னான்.</p>
<p>"அம்மா..."</p>
<p>"ம்ம்?"</p>
<p>"அவன் வந்துட்டான்." என்றான். </p>
<p>கீர்த்தனா புரியாமல் பார்த்தார்.</p>
<p>"யாருடா வந்துட்டா?"</p>
<p>ருத்ரன் முகத்தை தொங்கவிட்டபடி, "அதான்... அவன் ராயனோட அப்பன். தி கிங்பின். ஷ்ரத்தாவோட காதல் கணவன்." என்றான்.</p>
<p>கீர்த்தனாவின் கை அப்படியே நின்றது. "ருத்ரா..." என்று அவனை நேராக பார்த்தார்.</p>
<p>அவனது கண்கள் கலங்கியிருந்தன. "லவ் பெயிலியர்மா உன் பையன்." பெருமூச்சு விட்டான்.</p>
<p>"இனி நீ பயப்பட வேண்டியதில்லை. எங்க பையன் இரண்டு குழந்தை வச்சிருக்கிற விதவையை கட்டிப்பானோன்னு பயந்துட்டிருந்தியே... இனி தாராளமா சந்தோஷப்படு. உன் பையன் விதவையை கட்டிக்க மாட்டான். அத்தோட அவ விதவையும் இல்லை." என்று கூற கீர்த்தனா அவனை அமைதியாக பார்த்தார்.</p>
<p>"நல்லதுதானேடா. நீ நேசிச்சவளோட வாழ்க்கை சீராகுதுன்னா... நீ சந்தோஷப்படணும். அவ பூவும் பொட்டுமா தானே இருக்கா" என்றார். ருத்ரன் சில நொடிகள் அமைதியாக இருந்தான்.</p>
<p>பிறகு தாயை கட்டிக்கொண்டான். "லேசா வலிக்கும்மா..." குரல் உடைந்தது கூறினான்.</p>
<p>"ஏதோ... அவனை கண்டுபிடிச்சு போட்டு தள்ளத்தான் அவளை ரொம்ப டார்ச்சர் பண்ணினேன். அவ எதுவும் சொல்லாதப்ப, காதலிப்பதா நடிச்சேன். ஆனா நிஜமாவே கடைசில நானே அவளை காதலிச்சிட்டேன்மா. அதுவும் ட்ரூவா.. இதயம் வலிக்குது." கீர்த்தனா அவன் முதுகை வருடினார்.</p>
<p>"என் காதல்... மத்தவங்க பார்வைக்கு டார்ச்சரா மட்டும் போயிருக்கும்ல. அது ரொம்ப வலிக்குதும்மா." கீர்த்தனா அவன் முகத்தை பார்த்தார்.</p>
<p>"போலீஸ் டிரஸ் போட்டா நீ அழமாட்டேன்னு ஒரு முறை சொன்னியே ருத்ரா. இதென்ன அழுகை" என்றதும் ருத்ரன் உடனே முகத்தைத் துடைத்தான்.</p>
<p>"நான் அழல. ஆனால்." அந்த வார்த்தையோடு அவனது குரல் உடைந்து போனது.</p>
<p>கீர்த்தனா அவனை அணைத்துக் கொண்டார். "வேலையை கவனி ருத்ரா. காலம் நல்ல மருந்து" என்று தட்டிக் கொடுத்தார்.</p>
<p>ருத்ரன் தலையசைத்துவிட்டு பைக்கை உயிர்ப்பித்தான்.</p>
<p>அதே நேரம் கமிஷனர் தர்ஷனின் மருமகனின் பைவ் ஸ்டார் ஹோட்டலில், அவனுக்கு எதிரே அமர்ந்திருந்தான் சத்ரியன்.</p>
<p>கமிஷனர் தர்ஷன் சுற்றிலும் பார்த்துவிட்டு, "சீ... நீ போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தா மீடியாவுக்கு தெரிந்திடும்னு தான் இங்க வர சொன்னது. பட் இங்க உயிரோட நீ வந்ததும் தெரிஞ்சா மீடியா எங்கயும் படையெடுக்கும். சாதாரணமாவே என்ன நியூஸ் கிடைக்கும்னு நாயா பேயா அலையறாங்க. நீ போன்லேயே சொல்லிட்டல்ல. வேற என்ன?" என்று சலிப்புடன்கூற சத்ரியன் அமைதியாக அவரை பார்த்தான்.</p>
<p>"இல்லை சார். உங்க டிபார்ட்மெண்ட் ஆள் ஒருத்தருக்கு ஒரு சான்ஸ் கொடுக்க வந்திருக்கேன். வரச்சொல்லி இருப்பிங்களே அவன் தான்" அந்த நேரத்தில் கதவு திறந்தது.</p>
<p>ருத்ரன் உள்ளே வந்து சல்யூட் அடித்து நின்றான். கமிஷனர் இங்கே சந்திக்க கூறி ஸ்டேஷனில் தகவல் தந்திருக்க இங்க வந்திருந்தான். ஆனால் இங்கே சத்ரியன் எதிர்பார்க்கவில்லை. </p>
<p>கமிஷனரோ "இந்த போலீஸ் அதிகாரி ருத்ரனா?" என்றதும் சத்ரியன் தலையசைத்தான். ருத்ரன் சத்ரியனை பார்த்ததும் ஒரு நொடி உறைந்தான். ஆனால் உடனே தன்னை சமன்ப்படுத்திக் கொண்டான்.</p>
<p>சத்ரியன் மெதுவாக பேச ஆரம்பித்தான். "சார்... சுத்தி வளைச்சி பேசிட்டு நேரத்தை எடுக்க மாட்டேன். இவனோட அப்பாவை கொன்றது நான் தான்." ருத்ரனின் முகம் இறுகியது.</p>
<p>"ராகவன் மோதிலாலிடம் பணம் வாங்கி என்னை உள்ள தள்ள முயன்றார். அது உண்மை. அவங்க வீட்டுல இருந்த கட்டுகட்டான பணமே அதுக்கு சாட்சி." சில நொடிகள் அமைதியானது.</p>
<p>"பட்..." சத்ரியன் ருத்ரனை பார்த்தான். "ராகவனை சாகடிச்சதுக்காக இவனுக்கு என் மேல கோபம் இருந்தா... என்னை இப்பவே கொல்ல சொல்லுங்க. மீடியாவுக்கு நீங்க எப்படி நியூஸ் சொல்லணுமோ சொல்லிக்கோங்க. ஐ டோன்ட் மைண்ட். பட்... இவன் அந்த செயலுக்கான பதிலா இன்னிக்கு சொல்லணும்." என்று சத்ரியன் கூறினான். </p>
<p>   ருத்ரனோ மெதுவாக சிரித்தான். "அதான் எல்லாத்தையும் உனக்கே சொந்தமாக்கிட்டியே. என்னிடம் நியாயத்தை கேட்கிற." என்றதும் சத்ரியன் அமைதியாக பார்த்தான்.</p>
<p>ருத்ரன் தொடர்ந்தான். "எங்கப்பா நல்லவரோ... கெட்டவரோ.. அப்பா இல்லாத வலி மகனுக்கு கஷ்டமானது." என்று கலங்கியவன். "முடிஞ்சா... உன் குழந்தைகளுக்கு நல்ல அப்பாவா நீ இரு."சிறிது இடைவெளி. "இரண்டு குழந்தைகளுக்கும்.. ஏன்னா இரண்டும் உன்னோட குழந்தைகள்." என்று ருத்ரன் ஊமைக்குத்தாக குத்த, சத்ரியனின் பற்கள் இறுகின.</p>
<p>அவன் பதில் சொல்லவில்லை. தர்ஷன் இடையில் பேசினார். "மிஸ்டர் ருத்ரன்... முடிஞ்சதை மட்டும் பேசலாம். ஆனா... கடமை தவறாத ஒருத்தரா தான் நான் உங்களை மதிக்கிறேன். சத்ரியன் ஒரு ஆஃபர் தந்திருக்கார்." என்று கூறி மேசையில் இருந்த துப்பாக்கியை ருத்ரன் பக்கம் நகர்த்தினார். "நீங்க நினைக்கலாம் இந்த கமிஷனர் அத்தனை கொலை செய்தவனை விட்டுட்டாரேனு நீங்க நினைச்சா தண்டனை தாங்க. நான் இதை வேற மாதிரி கேங்க் இறந்ததா கூட கணக்கு காட்டிப்பேன்." என்று கூலாக கூறினார்.</p>
<p>ருத்ரன் அதை பார்த்தான். சில நொடிகள். பிறகு தலையசைத்தான். "வேண்டாம் சார். என்னால ஷ்ரத்தாவை விதவை ஆக்க முடியாது. ராயனுக்கு அவன் அப்பாவை கண் முன்ன நிறுத்தறேன்னு சொல்லியிருந்தேன். அப்படியிருக்க‌. நான் அவன் அப்பாவை கொன்னுட்டா அந்த பிஞ்சு நாளைக்கு வளர்ந்த பின்ன என்னை மன்னிக்காது." அந்த ஒரு வார்த்தை சத்ரியனின் கண்களில் ஏதோ மாற்றத்தை ஏற்படுத்தியது.</p>
<p>ருத்ரன் கமிஷனருக்கு சல்யூட் அடித்துவிட்டு வெளியேறினான். சத்ரியன் அவனை பார்த்துக் கொண்டிருந்தான். ருத்ரன் மீது இருந்த கோபத்தின் பின்னால், ஒரு சிறிய மரியாதையும் உருவாகியிருந்தது.</p>
<p>ருத்ரன் வெளியேறியதும் சத்ரியன் கமிஷனர் தர்ஷனை நோக்கி திரும்பினான்</p>
<p>"நீங்க காப்பாத்திய சிறுமிகள் எல்லாரும் ஆசிரமத்துல பாதுகாப்பா சேர்ந்துட்டாங்களானு செக் பண்ணுங்க சார். அப்புறம்... எப்பவும் விசிட் பண்ணி எந்த உயிருக்கும் ஆபத்து இல்லன்னு உறுதி பண்ணிக்கோங்க. நான் அடுத்த வாரம் அங்க போறேன். முடிஞ்சா நீங்களும் வாங்க.. கலந்துக்கோங்க." என்று கூறி எழுந்தான்.</p>
<p>கமிஷனர் தர்ஷனுக்கு வணக்கம் தெரிவித்து வெளியேறினான் வில்லன்.</p>
<p>மதியம்... கல்லூரியில் இருந்த ஷ்ரத்தாவின் மனம் மட்டும் பாடத்தில் இல்லை. வெளி பேஷண்டையும் சரியாக ஏறிடமுடியவில்லை.</p>
<p>சத்ரியன் போனதும், ருத்ரனை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் கூடுதலாய் வலுத்தது.</p>
<p>இறுதியில் அவள் வகுப்பை பாதியில் முடித்துக் கொண்டாள். தன் போனை எடுத்து, முதலில் யதுநந்தனை அழைத்தாள்.</p>
<p>"யது... உங்களை சந்திக்கணும்." அவன் இடத்தை கேட்டான். ஷ்ரத்தா ஒரு பொது இடத்தின் முகவரியை சொன்னாள். "சரி. வர்றேன்." என்றான் யதுநந்தன்.</p>
<p>அடுத்த அழைப்பு ருத்ரனுக்கு அழைத்தாள். அவன் சில நொடிகள் போனையே பார்த்துக் கொண்டிருந்தான்.</p>
<p>ஷ்ரத்தாவின் பெயர். அவன் மனம் மீண்டும் ஒரு முறை துடித்தது. அழைப்பை எடுத்தான்.</p>
<p>"ஹலோ..." அவளது குரல் கேட்டதும்... அடக்கி வைத்திருந்த காதல் மீண்டும் நெஞ்சை அழுத்தியது.</p>
<p>"ருத்ரா..." என்றாள் உரிமையாக.</p>
<p>"ம்ம்ம்." என்றான்.</p>
<p>"உன்னை சந்திக்கணும்." என்றாள். அவன் கண்களை மூடினான். எங்கே என்று இடத்தை கேட்டுக் கொண்டான். "நான் வர்றேன்." என்று விட்டு அழைப்பை துண்டித்தான்.</p>
<p>யதுநந்தன் ஷ்ரத்தா சொன்ன இடத்திற்கு, அங்கே வந்து சேர்ந்தான். அதற்குப் பிறகு... ருத்ரனும் வேகமாக பைக்கில் வந்து இறங்கினான்.</p>
<p>இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். கொஞ்ச  காலத்திலற்கு முன் ஷ்ரத்தாவை அடைய போட்டியிட்டவர்கள்.</p>
<p>இப்போது அவளைப் பாதுகாப்பாக பார்த்துக் கொண்டிருக்க வேண்டியவர்கள். ஆனால்... அவர்களின் காதல் மட்டும் கரைந்து நேசம் மட்டுமே எஞ்சியது. எஞ்ச வேண்டியிருந்தது.</p>
<p>தொலைவில் கார் நின்ற சத்தம் கேட்டது. ஷ்ரத்தா இறங்கி வந்தாள். அவள் இருவரையும் பார்த்தாள். அவள் குரலில் தயக்கம் இருந்தது.</p>
<p>அவள் என்ன சொல்லப் போகிறாள் என்பதை அறியாமல் இருவரும் அமைதியாக அவளை பார்த்துக் கொண்டிருந்தனர்.</p>
<p>  "நான் உங்க இரண்டு பேரிடமும் மன்னிப்பு கேட்டுக்கறேன். நேத்து சத்ரியன் உங்களை லேட் நைட்ல வெளிய அனுப்பியது‌ ரொம்ப கஷ்டமாயிருந்தது. நீங்க இரண்டு பேருமே என்னோட நலனுக்காக என்னை பாதுகாக்க வந்திங்க. ஒரு நன்றி கூட தெரிவிக்காம, அவர் காயப்படுத்தி பேசி அனுப்பிட்டார். </p>
<p>  அவருக்காக நான் மன்னிப்பு கேட்டுக்கறேன்." என்றாள். </p>
<p>  "நன்றி சொல்லிட்டு மன்னிப்பு கேட்க வந்தியா?" என்றான். "ம்ம்" என்றாள். </p>
<p>  "சொல்லிட்டியா.. கிளம்பு" என்றான் ருத்ரன். "பாருங்க யது.. எப்படி பேசறார்னு." என்று ஆதரவு கேட்டாள். </p>
<p>யதுந்நதனோ "நாங்க என்னனு பதில் தர ஷ்ரத்தா. இவன் அப்பாவை சத்ரியன் கொன்னானு தெரிந்தும், இவனுக்கும் ராயனுக்கும் ஒரு அழகான பாண்டிங் உருவாக்கியது கடவுளோட தவறு.  </p>
<p>  இவன் நிலையை விவரிக்கற அளவுக்கு எனக்கு என்ன இருக்கு." என்று யதுந்நதன் பேசினான். </p>
<p>ருத்ரனோ இடைப்புகுந்து  "இவன் மட்டும் என்னவாம்.. உங்கப்பா திவாகர் சாரோட ஜூனியர். உன்னை பார்த்து உனக்கே தெரியாம காதலிச்சான். நீ படிச்சு முடிச்சதும் காதலை சொல்லலாம்னு காத்திருந்தா, திவாகர் சார் இறந்துட்டார். நீயும் சத்ரியனோட கட்டுப்பாட்டில் இருந்த. வில்லனையே காதலிச்சிட்ட, ராயனும் பிறந்துட்டான், தியாவையும் கூட்டிட்டு வந்த. இவன் உன்னை மெச்சூர்டா பாதுகாத்தப்ப எனக்கே பொறாமை வந்தது. தியாவுக்கும் இவனுக்கும் கூட நல்ல பாண்டிங் தெரியுமா?</p>
<p>விதி... கடைசில எங்களை கோமாளியா மாத்திடுச்சு" என்று வருந்தி பேசினான். </p>
<p>  ஷ்ரத்தாவோ "நீங்க இரண்டு பேருமே காதலோட என்னை பார்த்திங்க. நான் உங்க இரண்டு பேரிடமும் மதிப்பு மரியாதையுமா பார்க்கறேன். அப்படியிருக்க உங்களை கோமாளியா நினைப்பதா நீங்க நினைச்சா அதுக்கு நான் என்ன செய்ய. என் மனசுல இரண்டு பேரையும் நான் உயர்ந்த இடத்துல வச்சியிருக்கேன் ருத்ரா. </p>
<p>  காதலை பத்தி பேசி என்னை கஷ்டப்படுத்தாதிங்க. நான் ஆரம்பத்துலயிருந்து சொன்னேன். சத்ரியன் இருந்தாலும் இல்லாட்டியும் நான் மனசுல வேறொருத்தனை நினைக்க மாட்டேன்னு. </p>
<p>  வாழ்க்கையில சாகற அளவுக்கு விரக்தி வந்துட்டு, இப்ப தான் திரும்ப சத்ரியனோட ரொம்ப நாள் வாழணும்னு ஆசைப்படறேன்." என்றாள். </p>
<p>    இருவரும் எதர்சயமாக, "நீ சந்தோஷமா இரு. நாங்க காதலிக்கறோம்னு தொல்லை தரலை." என்றார்கள்.  ருத்ரனோ "சத்ரியன் வெயிட்டிங்" என்று சுட்டிக்காட்ட, அந்த திசையில், அங்கே.. சத்ரியன் வந்திருந்தான். </p>
<p>சத்ரியனோ "போதும் பேசியது. உன்னை படிக்க அனுப்பினா ஊர்சுத்தற ஷ்ரத்தா" என்று கடிந்தபடி கையை பிடித்து அழைத்து நடந்தான் வில்லன். </p>
<p>-தொடரும்‌</p>
<p>-பிரவீணா தங்கராஜ். </p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>]]></content:encoded>
						                            <category domain="https://onlinetamilnovels.com/community/%e0%ae%a4%e0%ae%95%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%b5%e0%af%8a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-praveena-thangaraj/">தகிக்கும் நிலவொன்று -Praveena Thangaraj</category>                        <dc:creator>Praveena Thangaraj</dc:creator>
                        <guid isPermaLink="true">https://onlinetamilnovels.com/community/topicid/324/</guid>
                    </item>
				                    <item>
                        <title>தகிக்கும் நிலவொன்று-42</title>
                        <link>https://onlinetamilnovels.com/community/topicid/323/</link>
                        <pubDate>Fri, 21 Aug 2026 01:26:02 +0000</pubDate>
                        <description><![CDATA[அத்தியாயம்-42  ஷ்ரத்தா அறை வாங்கி சரியவும் ருத்ரனுக்கு சினம் துளிர்த்துவிட்டது. &quot;உனக்காக காத்திருந்தவளை போய் அடிக்கறியே மனுஷனாடா நீ?&quot;ருத்ரனின் குரல் அறை முழுவதும் அதிர்ந்தது.சத்ரியன் மெதுவாக...]]></description>
                        <content:encoded><![CDATA[<p>அத்தியாயம்-42<br /><br />  ஷ்ரத்தா அறை வாங்கி சரியவும் ருத்ரனுக்கு சினம் துளிர்த்துவிட்டது. "உனக்காக காத்திருந்தவளை போய் அடிக்கறியே மனுஷனாடா நீ?"<br /><br />ருத்ரனின் குரல் அறை முழுவதும் அதிர்ந்தது.<br /><br />சத்ரியன் மெதுவாக அவனை நோக்கித் திரும்பினான்.<br /><br />அவன் கையில் இன்னும் ராயன் இருந்தான். ஆனால் முகத்தில் இருந்த அமைதி மட்டும் காணாமல் போயிருந்தது.<br /><br />"நான் உயிரோட இருக்கேனா இல்லையான்னு தெரியாம... கர்ப்பமா இருந்த என் ஷ்ரத்தாவை கீழே தள்ளிவிட்டு, அவளுக்கு மன அழுத்தம் கொடுத்தவன் நீ." அவன் ஒவ்வொரு வார்த்தையையும் அழுத்தமாக சொன்னான்.<br /><br />"நீ என்னை மனுஷன்னானு கேட்கறியா?" சத்ரியன் பற்களை கடித்தான்.<br />ருத்ரனே "அது வேற விஷயம்." என்று மழுப்ப "இல்ல அன்னிக்கு நீ மனுஷனா இல்லை. அவ கர்ப்பமா இருக்கானு தெரிந்தே அவளிடம் என்னை பத்தி கேட்டு என்னை அழிக்க நோண்டிட்டே இருந்த.<br />பட் இவ என்னோட ஷ்ரத்தா." அவன் குரலில் உரிமை இருந்தது.<br /><br />"ஊரறிய தாலி கட்டல. பட்... மோதிரம் மாத்தி, என் வாழ்க்கையில அவளுக்குரிய இடத்தை நான் கொடுத்திருக்கேன்." அவன் பார்வை மீண்டும் ருத்ரனை துளைத்தது.<br /><br />"நான் அவளை எப்படி நடத்தணும்னு... அது புருஷன் பொண்டாட்டிகுள்ள இருக்கற விஷயம். அதுல தலையிட உனக்கு எந்த உரிமையும் இல்லை." ருத்ரன் ஏதோ சொல்ல வாயைத் திறக்க, "கெட் அவுட்." என்று சத்ரியனின் குரல் கர்ஜனையாக மாறியது. <br /><br />யதுநந்தன் உடனே ருத்ரனின் கையைப் பிடித்தான். "வா ருத்ரா." என்று கூறினான்.<br /><br />"யதுநந்தன் அவன் பேசறதை கேட்டும் அமைதியா இருக்க. நீயும் தானே ஷ்ரத்தாவை விரும்பின. அப்படியிருக்க அவளை அடிக்கறான்." என்று கேட்டான்.<br /><br />"இப்ப எதுவும் பேச வேண்டாம். நாம இதுல இனி தலையிட முடியாது. இல்லை... தலையிட கூடாது." அவன் மெதுவாக இழுத்துச் சென்றான்.<br /><br />வாசலை நோக்கி நடந்துக் கொண்டிருந்த போதும் ருத்ரனின் பார்வை ஷ்ரத்தாவை விட்டு நகரவில்லை.<br /><br />அவளது முகத்தில் இருந்த கண்ணீர் அவனுக்கு உள்ளுக்குள் ஏதோ செய்தது.<br /><br />ஆனால்... இனி அவளுடைய வாழ்க்கையில் தங்களுக்கு இடம் இல்லை என்பதை இருவருமே உணர்ந்திருந்தனர்.<br /><br />ஷ்ரத்தா மெதுவாக சத்ரியனை நோக்கித் திரும்பினாள்.<br /><br />"சத்ரியா... ருத்ரனும் யதுவும் நீ இல்லாத நேரத்துல எனக்கு உதவினாங்க." என்று அவன் கொடுமைப்படுத்துவதை மட்டுமே அளிந்து வைத்திருப்பானென நல்லதையும் கூறினாள்.<br /><br />"தெரியும்." அந்த ஒரு வார்த்தையில் கோபம் இல்லை.<br /><br />"அதோட... தியா யாருன்னு தெரிந்தும் ஒதுக்கற" என்றாள்.<br />ஷ்ரத்தாவின் இதயம் ஒரு நொடி துடிப்பை நிறுத்தியது.<br /><br />சத்ரியன் முகத்தில் வலி தெரிந்தது.<br /><br />"ஒதுக்காம என்ன டிசெய்ய சொல்லற" அவன் மெதுவாக சொன்னான்.<br /><br />"நான் செய்த பாவத்தோட மிச்சம் இவ" என்றதும் 'சத்ரியா' என்று ஷ்ரத்தா அதிர்ச்சியுடன் அழைத்தாள்.<br /><br />"ஐ அம் சாரி, ஷ்ரத்தா. என்னை மீறி நடந்த அந்த தப்புக்காக நான் ஏற்கனவே உன்னிடம் மன்னிப்பு கேட்டாச்சு. அதோட வினோத்தை உயிரோட விட்டுட்டேன். அவங்களுக்காக.. பேவரா அதை பண்ணிட்டேன்.  இப்ப இரண்டு பேரும் உலகத்துல இல்லாததுக்கு நான் என்ன செய்ய?" அவன் பார்வை மீண்டும் தியாவை நோக்கி சென்றது.<br /><br />"இப்ப முன்ன செய்த தப்பு இவ்வளவு பெரிய உருவத்துல என் முன்னாடி நிக்கும்னு நான் நினைக்கவே இல்லை." ஷ்ரத்தாவின் கண்களில் கண்ணீர் திரண்டது.<br /><br />"அவளை..." அவன் வார்த்தையை முடிக்க முடியாமல் நின்றான்.<br /><br />"அவளை அப்போதே... என்ன செய்ய வேண்டுமோ அதை செத்துப்போனவ  செய்திருக்கணும்." ஷ்ரத்தா அதிர்ச்சியுடன் அவனை பார்த்தாள்.<br /><br />"அதுக்கு பதிலா பெத்துட்டா. இதுல என் இன்சியலை போட்டு ஆசிரமத்துல சேர்த்து விட்டு, உன்னை நேக்கா கார்டியன் பெயர்ல போட்டுட்டா. இப்ப... அவளையும் என் தலையில கட்டிட்டு நிற்கிற மாதிரி இருக்கு." அவன் கண்களை மூடிக்கொண்டான்.<br /><br />"எனக்கே என்னை சகிக்க முடியல. என்னை விட்டுடு." என்றான்.  ஷ்ரத்தாவின் கண்ணீர் வழிந்தது.<br /><br />"சத்ரியா..." என்றாள்.<br /><br />"நான் சந்தோஷமா வந்தேன் ஷ்ரத்தா. நீயும் ராயனும் இருப்பீங்கன்னு நினைச்சேன். ஆனா இங்க..." அவன் தியாவை பார்த்தான். "எனக்கே ஒரு பெரிய அதிர்ச்சி" என்றவன் சொன்ன வார்த்தைகள் வாசல் வரை சென்று கொண்டிருந்த ருத்ரனுக்கும் யதுநந்தனுக்கும் தெளிவாகக் கேட்டன.<br /><br />இருவரும் ஒரு நொடி நின்றனர்.<br />திரும்பிப் பார்க்கவில்லை. எதுவும் பேசவில்லை. ஏனெனில்... இனி ஷ்ரத்தா யாருடைய வாழ்க்கையில் இருக்கிறாள் என்பதற்கான பதில் அவர்களுக்கு தெளிவாகிவிட்டது.<br /><br />அவர்கள் மெதுவாக வெளியேறினர்.<br /><br />வாசலுக்கு வெளியே... சில ஆட்கள் இன்னும் தாக்குதலில் இறந்தவர்களின் உடல்களை அகற்றிக் கொண்டிருந்தனர்.<br /><br />ருத்ரன் அந்தக் காட்சியை பார்த்தான். அவன் முகம் இறுகியது. ஆனால் காவலதிகாரியாக எதுவும் சொல்லவில்லை.<br /><br />சில நொடிகள் கழித்து தலையை குனிந்தபடி நடந்தான். யதுநந்தன் அவனை பார்த்துக் கொண்டே வந்தான்.<br /><br />"ருத்ரா..."<br /><br />"ம்ம்ம்."<br /><br />"எங்க போற மிட்நைட்ல உங்க அம்மாவுக்கு தொந்தரவு தந்து பேசாம என் வீட்டுக்கு வா." என்றான்.<br /><br />"இந்த நேரத்துலயா?" என்றாலும் ருத்ரன் பதில் சொல்லவில்லை.<br /><br />"இன்னைக்கு மட்டும் தனியா இருக்காத." என்று யதுந்நதன் காரில் ஏற, ருத்ரன் மெதுவாக அவனை பார்த்தான்.<br />  <br />   அவனுமே மழைவிட்டு வெறிந்த வானத்தை கண்டு பைக்கை எடுத்தான். <br /><br />இருவரும் யதுந்நதன் வீட்டுக்கு சென்றனர்.<br />அங்கே ருத்ரனோ "அவனுக்காகத் தானே அவ சிறையில இருந்தா... அவனுக்காகத்தானே அவள் இவ்வளவு வருஷம் காத்திருந்தா... அவளை இப்படி கஷ்டப்படுத்துறான்." என்று ருத்ரன் புலம்ப, யதுநந்தன் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தான்.<br /><br />"அந்த குழந்தை தியா." அவன் திடீரென்று திரும்பிப் பார்த்தான்.<br /><br />"அவளை ஏத்துக்கறதுல அவனுக்கு என்ன கஷ்டம்?" யதுநந்தன் பதில் சொல்லவில்லை.<br /><br />"அந்த பங்களா முழுக்க எத்தனை ஆட்கள்? எத்தனை லேடி ஸ்டாஃப்? எத்தனை பேருக்கு சத்ரியன் சாப்பாடு போடுறான்?<br />  126 குழந்தைகளை தனியா வைத்து வளர்க்கிறான்." ருத்ரனின் குரல் மெதுவாக உயர்ந்தது. "அவங்களுக்கு ஷ்ரத்தா சொன்ன மாதிரி கடவுளா இருக்கிறான். குழந்தையை வளர்க்க என்னவாம்? <br /><br />முகம் தெரியாத பிஞ்சு குழந்தைகளுக்காக உயிரையே பணயம் வைச்சான்.. ஆனா... சொந்தக் குழந்தைன்னு தெரிஞ்சதும் மட்டும் ஏன் இப்படி ஆகுறான்? ருத்ரன் கண்களில் கோபமும் குழப்பமும் கலந்தது.<br /><br />யதுநந்தன் நீண்ட மூச்சு விட்டான். "அதுதான் அவனோட காயம் ருத்ரா." என்று நிதானமாக கூறினான்.<br /><br />"என்ன பெரிய காயம்?" என்றான் அலட்சியமாக. <br /><br />"தியா அவனுக்கு ஒரு குழந்தை மட்டும் இல்ல."‌ யதுநந்தன் மெதுவாக விளக்கமாக சொன்னான்.<br /><br />"அவன் செய்த ஒரு தப்புக்கு உயிரோட நிற்கற சாட்சி. அதை சத்ரியனால் ஏத்துக்க முடியல." ருத்ரன் அமைதியாகிவிட்டான்.<br /><br />அடுத்த நொடியே "ஷ்ரத்தா ஏத்துக்கிட்டாளே. அவளுக்கு தியாவை ஏதாதுக்க மனசு இருக்கே" என்று ருத்ரன் கூற யதுநந்தன் சற்று கசப்பாக சிரித்தான்.<br /><br />"அவனுக்கும் மனசு இருக்கு. ஆனா... அந்த மனசுக்குள்ள அவன் கட்டி வைத்திருக்கிற கோட்டை ரொம்ப பெரியது. இந்த குழந்தையால அவன் தன் வாழ்க்கையில செய்த நல்லதை மாத்த நினைச்சாலும் முடியாம நிற்கறான்." என்று யதுந்நதன் கூறவும் ருத்ரன் புரியாமல் நின்றான்.‌<br /><br />  "இத்தனை குழந்தைகளை காப்பாத்தி ஆசிரம் கட்டி, காப்பாத்தியது பெருமையா சொல்லப்படலாம். ஆனா நீ செய்த தவறு உன் பக்கத்துல நிற்கறப்ப அந்த பெருமையை எப்படி ஏத்துப்ப? அந்த நிலையில தான் சத்ரியன் தியாவை கண்டு தள்ளி போறான். மேபீ... இது அவங்க பிராப்ளம். ஷ்ரத்தா தியாவை அம்போனு விடமாட்டா. ஐ நோ. அவ இலகிய மனசு கொண்டவ. <br />   அதுவும் சத்ரியனோட குழந்தையா, அவன் சாயலா இருக்கற பட்சத்தில் அவ தியாவை ராயனை விட கூடுதலா தான் பார்த்துப்பா." என்று ருத்ரன் தோளில் தட்டி, ''நாளைக்கு போலீஸ் அதிகாரியா என்ன செய்யணுமோ அதை யோசி தூங்கு." என்று கூற ருத்ரன் மெதுவாக தலையசைத்தான்.<br /><br />ருத்ரன் யதுந்நதனின் வீட்டு ஹாலிலேயே படுத்தான். யதுந்நதனும் சோபாவிலேயே சரிந்து இமை மூடினான். இவர்கள் இருவரும் பேசிக்கொள்ளாத வலியும் உள்ளதே. அது ஷ்ரத்தா மீதான காதல் படுத்தோல்வி அடைந்துவிட்டதை பேசிக்கொள்ள முடியாமலேயே உறங்க பாடுபட்டனர். <br /><br />அதே நேரத்தில் பங்களாவுக்குள் குழந்தைகளை தீபா, லட்சுமி, நந்திதா வேறு அறைக்கு அழைத்துச் சென்றனர்.<br /><br />ஷ்ரத்தா மட்டும் மெதுவாக சத்ரியனை பின்தொடர்ந்தாள்.<br /><br />அவன் அறைக்குள் நுழைந்ததும் கதவு தானாக மூடிக் கொண்டது.<br /><br />சில நொடிகள் இருவரும் எதுவும் பேசவில்லை.<br /><br />ஷ்ரத்தா அவனை பார்த்தாள். பல வருடங்களாக கனவில் மட்டும் பார்த்த முகம். இன்று அவள் முன் உயிரோடு இருந்தது. அவள் மெதுவாக அவனருகில் சென்றாள்.<br /><br />"சத்ரியா..." அவன் திரும்பிப் பார்த்தான்.<br /><br />அடுத்த நொடி... அவளை தன்னருகில் பேயை போல இழுத்துக் கொண்டான். பல வருடங்களாக அடக்கி வைத்திருந்த ஏக்கம் இருவரையும் மீண்டும் ஒன்றாக்கியது.<br /><br />வார்த்தைகள் தேவையில்லை. அந்த இரவில் அவர்கள் பேசியதை விட. ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்த பார்வைகளே அதிகமாக பேசின. அவனோ அவளை அள்ளி மெத்தையில் போட்டு பேச முடியாத வகையில் முத்தங்களால் வாயடைத்தான்.‌<br />முதலில் இவனது ஆசைக்கு இணங்கி பிறகு பேசுவோமென காத்திருந்தாள் ஷ்ரத்தா.<br /><br />இரண்டாம் உலகபோர் போல இருவரும் மெத்தையில் முத்தபோரில் மூழ்கியிருந்தனர்.<br />சத்ரியனோ அசுரத்தனமாக வன்முறையால் அவளை ஆள்பவனாக, எலும்புகள் உடைந்திடும் அளவிற்கு வேகமும் அழுத்தமும் கூட்டி பெண்ணவளை அள்ளிட முனைந்தான்.‌<br />இத்தனை நாளின் பிரிந்த இணையின் வேகம் அது.<br /><br />இப்படியாக இருவரம் நள்ளிரவு தாண்டிய இருளை விரட்டி அதிகாலை வந்தும் மோகத்தை தன்னோடு இறுத்தி கொண்டனர்.<br /><br />பிரிவின் வலி... காத்திருப்பின் வேதனை. உயிரோடு இருக்கிறானா என்ற பயம். மீண்டும் கிடைத்த சந்தோஷம்.<br /><br />எல்லாமே அந்த இரவின் அமைதிக்குள் நெடுநேரம் பேசி, இணைந்து, கரைந்து அடுத்த நாள் விடிய, அவன் ரோமத்தில் விரலால் கோலமிட்டபடி, "ரொம்ப நாளாச்சு சத்ரியா. இப்படி நிம்மதியா தூங்கி, இப்படி என் பெண்மையை உணர்ந்து, என் தாபம் மோகம் தீர்ந்து, உன்னை பார்த்ததும் உயிரே திரும்ப வந்துடுச்சு" என்று அவனை கட்டிக்கொண்டு அழுதாள்.‌<br /><br />"பச்.. அழாத ஷ்ரத்தா. ஒவ்வொரு கண்ணீரும், என்‌மேல வெந்நீரா இறங்குது. உன்னை விட்டு போனதுக்கான மிகப்பெரிய தண்டனையா தெரியுது." என்று கண்ணீரை துடைத்தான்.‌<br /><br />உதடு வீங்கி, கழுத்தெல்லாம் சிவப்பு தடமாக, சத்ரியனின் புஜத்திலும் மார்பிலும் ஷ்ரத்தாவின் நககீறலை கண்டு, பேசலாமா வேண்டாமா என்று மனதிற்குள் பட்டிமன்றம் வைத்தாள். <br /><br />  நேற்று வந்தவனுக்கு இன்னும் என்னென்ன வேலைகள் பாக்கி உள்ளதோ அந்த ஸ்டீபன் வேறு பதுங்கிவிட்டதாக அல்லவா கூறினான்.' என்று திடுக்கிட்டு எழுந்தாள். <br /><br />'என்னாச்சு?" என்று கேட்க, ரா..ராயன் எழுந்திருப்பான்<br />போய் பார்த்துட்டு வர்றேன்." என்றாள். <br /><br />"குளிச்சிட்டு கொஞ்சம் பிரெஷா போ" என்று அவளை அள்ளிக்கொண்டு பாத்டப்பில் இறக்கினான். <br /><br />அங்குமே பேச்சு இல்லை. எல்லாமே முத்தகவிதையும் மொத்த கவிதையும் வாசித்திருந்தனர்.‌<br /><br />  இன்டர்காமில், ராயன் அம்மா.." என்று அழைத்திடவும் தான் வேகவேகமாய் உடையை அணிந்தாள். <br /><br />  முழங்கை வரை கையும், காலர் வைத்த பிளவுஸ், சேலை என்று அணிந்து அவசரமாக கதவை திறந்தாள். <br /><br />அங்கே ராயன் தியாவுக்கு ஹாலில் டைனிங் டேபிளில், இட்லியை ஊட்டினார்கள். <br /><br />  சத்ரியன் வரவும், ஷ்ரத்தா தானே பரிமாறுவதாக பரிமாறினாள். <br /><br />   தியா இருக்குமிடம் தாண்டி ராயனருகே அமர்ந்தான். <br />"மை லிட்டில் பிரின்ஸ் என்ன சாப்பிடறிங்க" என்று கேட்க, "இட்லியை எடுத்து ராயன் சத்ரியனுக்கு ஊட்டினான். <br />தியாவும் அதே போல செய்ய எழவும், ஷ்ரத்தாவோ "தியா.. நீங்க அம்மாவுக்கு ஊட்டுங்க" என்று குழந்தையை தடுத்துவிட்டாள். <br />  <br />  சத்ரியன் கழுத்து நரம்பு புடைத்து கர்ஜித்தால் குழந்தை தியா மனநிலை எப்படி மாறுமோ என்று முன்கூட்டியே சங்கடங்களை தவிர்த்தாள். <br /><br />-தொடரும்.<br />-பிரவீணா தங்கராஜ்<br />  <br /><br /></p>]]></content:encoded>
						                            <category domain="https://onlinetamilnovels.com/community/%e0%ae%a4%e0%ae%95%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%b5%e0%af%8a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-praveena-thangaraj/">தகிக்கும் நிலவொன்று -Praveena Thangaraj</category>                        <dc:creator>Praveena Thangaraj</dc:creator>
                        <guid isPermaLink="true">https://onlinetamilnovels.com/community/topicid/323/</guid>
                    </item>
				                    <item>
                        <title>தகிக்கும் நிலவொன்று-41</title>
                        <link>https://onlinetamilnovels.com/community/topicid/321/</link>
                        <pubDate>Thu, 20 Aug 2026 01:23:55 +0000</pubDate>
                        <description><![CDATA[அத்தியாயம்-41
   ஷ்ரத்தா ராயனைப் பார்த்தபடி சந்தோஷத்தில் கண்ணீர் துளிர்த்துக் கொண்டிருந்தாள்.
அவனோ சத்ரியனின் கழுத்தை கட்டிக்கொண்டு சிரித்துக் கொண்டிருந்தான். அந்தக் காட்சியைப் பார்த்துக் ...]]></description>
                        <content:encoded><![CDATA[<p>அத்தியாயம்-41</p>
<p>   ஷ்ரத்தா ராயனைப் பார்த்தபடி சந்தோஷத்தில் கண்ணீர் துளிர்த்துக் கொண்டிருந்தாள்.</p>
<p>அவனோ சத்ரியனின் கழுத்தை கட்டிக்கொண்டு சிரித்துக் கொண்டிருந்தான். அந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த தியா மட்டும் சற்றுத் தள்ளி நின்றபடி, நெருடலுடன் சத்ரியனை பார்த்துக் கொண்டிருந்தாள்.</p>
<p>ஷ்ரத்தாவின் பார்வை அந்த பிஞ்சு மீதும் விழுந்தது.</p>
<p>"தியா..." என்று அழைத்தாள்.</p>
<p>குழந்தை மெதுவாக அம்மாவை பார்த்தது. "வா கண்ணா..."என்று அவளது கையை பிடித்து சத்ரியனுக்கு அருகில் அழைத்து வந்தாள்.</p>
<p>சத்ரியன் ராயனை ஒரு கையில் வைத்தபடியே தியாவை பார்த்தான். அவளது கண்கள் அவனை விட்டு நகரவே இல்லை. ஷ்ரத்தா சிரித்தபடி,</p>
<p>"சத்ரியா... இந்தக் குழந்தை யாரை மாதிரி இருக்குன்னு பார்த்தியா?" சத்ரியனின் பார்வை தியாவின் முகத்தில் நிலைத்தது.</p>
<p>"இந்தக் குழந்தை..." என்று அவள் சொல்ல ஆரம்பித்த அந்த நொடியில், சத்ரியன் ராயனை தூக்கிக்கொண்டே மறுபுறம் திரும்பினான்.</p>
<p>"தீபா.." என்றவனது குரல் திடீரென்று மாறியது.</p>
<p>"லட்சுமி."</p>
<p>"நந்திதா." மூவரும் உடனே அவனை நோக்கினர்.</p>
<p>"இங்க ஒரு துளி ரத்தக்கறையோ... வாசனையோ இருக்கக்கூடாது." அவன் பார்வை அறை முழுவதும் சுற்றியது. "பங்களா முழுக்க க்ளீன் பண்ணுங்க. எல்லா ஆயுதங்களையும் எடுத்துட்டு போங்க." என்றான்.</p>
<p>ஒரு நொடி இடைவெளி. "காய்ஸ்..." அவனது குரல் இன்னும் அழுத்தமானது.</p>
<p>"வெளியே கன்டெய்னர் இருக்கு. அதுல கெமிக்கல் டேங்க் ரெடியா இருக்கு. அதுல இந்த ஆட்களோட தடயமே இல்லாத மாதிரி பார்த்துக்கோங்க." என்றவன் குரலில் எந்த உணர்ச்சியும் இல்லை.</p>
<p>"இங்கிருந்து எதிராளியோட ஒரு துளி சதை... ரத்தம்... எதுவுமே வெளியே போகக்கூடாது. காட் இட்?" என்று கர்ஜிக்க, "எஸ் பாஸ்!" என்று பாடிகார்ட்ஸ் ஒரே குரலில் முழங்கினர்.</p>
<p>அந்த நேரத்தில் ருத்ரனின் கோபம் போலீஸ் அதிகாரியாக வெடித்தது.</p>
<p>"நீ தப்புக்கு மேல தப்பு பண்ணிக்கிட்டே இருக்க!" என்று குரல் தந்தான்.‌</p>
<p>சத்ரியன் மெதுவாக அவனை பார்த்தான். "இத்தனை பேரை கொன்னுட்டு சட்டத்துக்கு முன்னாடி எப்படி தப்பிக்கப் போற?" ருத்ரன் கேட்டதும், சத்ரியன் ராயனை இன்னும் ஒரு கையால் அணைத்துக் கொண்டபடி ருத்ரனை கண்டு சிரித்தான்.</p>
<p>அந்த சிரிப்பில் கேலி இருந்தது.</p>
<p>"முதல்ல உன்னைதான் அந்த டேங்க்ல தூக்கி போடணும்னு நினைச்சேன்." என்று இலகுவாக சத்ரியன் கூற ருத்ரனின் முகம் இறுகியது.</p>
<p>"ஷ்ரத்தாவை ஜெயில்ல பிரகனென்டா இருந்தப்ப கீழே தள்ளினவன் நீதானே? அப்பவே உன்னை தூக்கி எமலோகத்துக்கு அனுப்பியிருப்பேன்." சத்ரியன் பார்வை கூர்மையானது.</p>
<p>"என்னசெய்ய உங்கப்பாவை நான் கொன்னதுக்காக பழிவாங்குறேன்னு நினைச்சு,  உனக்கு ஒரு லேசான விபத்து மட்டும் நடக்கட்டும்னு விட்டேன்." ருத்ரன் பதில் சொல்லவில்லை.</p>
<p>சத்ரியனின் பார்வை ஷ்ரத்தாவை தொட்டது.</p>
<p>"அதோட நீயே ஷ்ரத்தாவை தூக்கிட்டு ஹாஸ்பிடலுக்கு ஓடின. அதையும் சிசிடிவில பார்த்தேன். அந்த ஒரு காரணத்துக்காகத்தான் நீ இன்னும் உயிரோட இங்க இருக்க. இல்லன்னா... அவளை லவ் பண்ணுறேன்னு சொல்லி டார்ச்சர் பண்ணினதுக்கே நீ முதல் ஆளா செத்திருப்ப." என்றான் சத்ரியன்.‌</p>
<p>ருத்ரனின் கைகள் முஷ்டியானது. "எஸ்.. உன்னை கேட்டு அவளை டார்ச்சர் பண்ணி அவளை மன அழுத்தத்துக்கு தள்ளினா. நீ வெளிய வருவனு நினைச்சேன். ஆனா நீ வரலை. அதான்.. காதலிப்பதா டார்ச்சர் செய்தா நேர்ல வருவேன்னு நினைச்சேன்." என்றான் ருத்ரன்.</p>
<p>சத்ரியன் மெதுவாக சிரித்தான். "ஷ்ரத்தாவை காயப்படுத்தினா, அவளை காப்பாத்துறதுக்காக நான் வெளிய வருவேன்னு தெரிஞ்சுதானே அவளை நீ இம்சை செய்தது எனக்கும் தெரியும். ஆனாலும் அவளுகாகு வெளியே சேப்டி இல்லை.. அதுக்கு நீ பண்ணற கூத்தை வேடிக்கை பார்த்தேன்." என்றான் சத்ரியன் அலட்சியமாக.</p>
<p>மேலும் "இப்போ நேர்ல உன் முன்ன நிற்கறேன். இத்தனை பேரை கொன்னு குவிச்சிருக்கேன். என்ன புடுங்க முடியுமோ புடுங்கிக்கோ. போடா" என்றான் அனலாக. </p>
<p>"சத்ரியா." ஷ்ரத்தா உடனே இடையில் வந்தாள்.</p>
<p>"ப்ளீஸ்." அவள் அவனது கையை பிடித்தாள்.</p>
<p>"சண்டை போடாத."</p>
<p>சத்ரியனின் பார்வை உடனே அவளிடம் மாறியது.</p>
<p>"நீ இங்க வர்றதுக்கு முன்னாடி... இதே ருத்ரன் எனக்கு ஏதும் ஆகக்கூடாதுன்னு தான் இங்க இருந்தார். இப்பவும் என்னை பாதுகாப்புக்கு தான் இங்க இருக்கார்."  என்று விவரிக்க சத்ரியன் ருத்ரனை பார்த்தான்.</p>
<p>சத்ரியனோ "தெரியும். இத்தனை பேர்ல ஒருத்தன் உன்னை நெருங்கியிருந்தா. இவன் துப்பாக்கி சும்மா இருந்திருக்குமா? இங்க கிடந்த தோட்டாக்களில் பாதியை இவன் வீணாக்கியிருப்பான் தானே.. அதென்னடா.. நான் கொன்னா மட்டும் சட்டத்துக்கு முன்னாடி தப்ப முடியாதா? என்ன பேசறான் இவன். இவன் அப்பனையே தூக்கி முழுங்கி ஏப்பமிட்டவன் நான்.</p>
<p>நான் நினைச்சிருந்தா... இவங்க எல்லாருடைய தடயத்தையும் இங்கிருந்து முழுசா அழிச்சிருக்க முடிந்தது போல இவனையும் அழிக்க முடியும். ஆனா இவனுக்கு சட்டம் முக்கியம். எனக்கு ஷ்ரத்தா உயிரோட இருக்கணும்."</p>
<p>அந்த வார்த்தையில் மட்டும் அவனது குரலில் கோபம் இல்லை. அன்பு இருந்தது.</p>
<p>பிறகு ருத்ரனை பார்த்தபடி,"நான் செத்துட்டேன்னு உலகத்துக்கே நியூஸ் லீக் பண்ணியிருக்காங்க. உங்க டிபார்ட்மெண்ட் அதுக்காக உங்க முன்னாள் கமிஷனர் நெல்சன்... பல கோடி வாங்கியிருக்கான் தெரியுமா?" என்றதும் ருத்ரனின் முகத்தில் லேசான அதிர்ச்சி. அப்பொழுதே சந்தேகம் கூடியது. சத்ரியன் பாடி போஸ்ட் மாட்டம் எதையும் அவர் நெருங்கவிடவில்லை. </p>
<p>ருத்ரன் தான் அந்த நேரம் அவன் கவனம் ஷ்ரத்தாவிடம் செல்ல கவனிக்க தவறினான்.</p>
<p>"இப்ப சொல்லு ருத்ரா... என் கேஸ் ஃபைல் சுத்தமா இருக்குறப்ப... என்னை சட்டத்துக்கு முன்னாடி என்ன பண்ணுவ?" ருத்ரன் பதில் சொல்லாமல் நின்றான்.</p>
<p>அப்போது யதுநந்தன் மெதுவாக முன்னால் வந்தான்.</p>
<p>"இங்க பாருங்க... நீங்க சரியான நேரத்துல இங்க வந்திருக்கலாம். ஆனா ஷ்ரத்தாவுக்கு நல்லது செய்யணும்னு நினைச்சு நின்ன மனிதர்கள்ல ருத்ரனும் ஒருத்தன். அவனை இப்படி  பேசறது சரியில்லை." என்றான். </p>
<p>சத்ரியன் சில நொடிகள் யதுநந்தனை பார்த்தான்.</p>
<p>பிறகு அவனது முகத்தில் இருந்த கடுமை சற்றே தளர்ந்தது.</p>
<p>"தேங்க்ஸ்." என்றான் சத்ரியன். யதுநந்தன் புரியாமல் பார்த்தான்.</p>
<p>"சிங்கப்பூர்ல ஷ்ரத்தாவை காப்பாத்தினதுக்கு. ஆக்சுவலி...‌ என் பிளான்ல சிங்கப்பூர் ட்ரிப் எதுவுமே இல்லை. ஹரிணி செத்ததால ஷ்ரத்தா அங்க போக வேண்டிய சூழ்நிலை வந்தது. இல்லன்னா... ஷ்ரத்தாவுக்கு உதவ யாரையாவது நான் அங்கயும் அனுப்பியிருப்பேன்.</p>
<p>ஆனா நீ... அங்க என் உயிரையே காப்பாத்திட்ட. என் ஷ்ரத்தாவையும்.. என் மகனையும். காப்பாத்தின" என்றதற்கு யதுநந்தன் அமைதியாக நின்றான்.</p>
<p>"அதுக்காக..." சத்ரியனின் பார்வை மீண்டும் யதுநந்தனை சந்தித்தது.</p>
<p>"ஷ்ரத்தாவை போட்டி போட்டுக்கிட்டு நீ காதலிச்சதை... இப்ப என்னால ஆக்சப்ட் பண்ண முடியாது. அதுவும் உனக்கே தெரியும்."</p>
<p>யதுநந்தன் தலை குனிந்தான்.</p>
<p>"என் பிளான்படி... ஷ்ரத்தா இன்னும் ஆறு மாசம் ஜெயில்ல இருக்க வேண்டியது."</p>
<p>ருத்ரனும் யதுநந்தனும் அவனை பார்த்தனர்.</p>
<p>"அவள் தண்டனை முடிஞ்சு வெளிய வர்ற நேரத்துக்குள்ள...</p>
<p>இந்த கிட்னாபிங் கூட்டத்துக்கு நான் முடிவு கட்டியிருப்பேன். மொத்தமா... ஆனா... அவளை வெளியே எடுக்க நீ நல்லொழுக்க அடிப்படையில அவசரம் காட்டின. கார்த்திகாவிடம் பிரஷர் கொடுத்து ஷ்ரத்தாவை வெளியே கொண்டு வந்த.</p>
<p>யூ இடியட். அவளை ஜெயில்ல அனுப்பியதே பாதுகாப்புக்காகத் தான்டா.</p>
<p>உன்னை யாரு அந்த பாதுகாப்புக்கு முன்னாடியே அவளை வெளியே கொண்டு வரச் சொன்னது?" என்று கோபமாக கத்தவும்,</p>
<p>யதுநந்தன் தலை கவிழ்ந்தான். </p>
<p>  ஷ்ரத்தா சிறையில் இருப்பதை காண சகிக்காமல் யதுந்நதன் தான் மேலிடத்திற்கு பிரஷர் தந்து மனுவையும் கார்த்திகாவையும் தொல்லை செய்தது. ஆனால் சத்ரியன் போட்ட திட்டத்தை அவனுக்கு தெரியாதே. </p>
<p>"இப்ப... இவளை பாதுகாக்கணுமா? இல்ல... ஸ்டீபன் கேங்கை அழிக்கணுமா? என்ன பண்றதுன்னு என்னை அல்லாட வச்சது நீ தான்டா முட்டாள்." என்று கர்ஜித்து கத்தவும் யதுநந்தனின் முகத்தில் குற்ற உணர்வு தெளிவாக தெரிந்தது.</p>
<p>அவசரப்பட்டு தான் செய்த நல்ல காரியம்... இப்போது ஷ்ரத்தாவுக்கு எவ்வளவு பெரிய ஆபத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை அவனுக்குப் புரிந்தது.</p>
<p>சத்ரியன் ருத்ரனை பார்த்தான்.</p>
<p>"ஸ்டீபன் கேங்க்ல தொண்ணூறு சதவீதம்... முடிச்சிட்டேன். தனியா தகவல் திரட்டி, அழிச்சது ஒருபுறம் இருந்தாலும், உங்க புது கமிஷனரிடமும் உதவி நாடினேன். அவர் தான் ஏற்கனவே 126 குழந்தைகளை காப்பாத்திட்டு இப்ப அந்த கேங்கை அழிக்க நான் செய்த விஷயத்துக்கு ஆதரவு தந்தார். </p>
<p>அதனால தான் சட்டபூர்வமா சில இடத்துக்கு நேக்கா நுழைய முடிந்தது. ஆனாலும் ஸ்டீபன் தப்பிச்சுட்டான். அமெரிக்காவுக்கு ஓடிட்டான். இனி யாரிடம் அங்க உதவி கேட்பான்?</p>
<p>யாருக்குத் தெரியும்?  அங்கிருக்க சிலரிடம் வளர்ந்து நம்பிக்கை பெற்று, திரும்பி வந்து ரிவெஞ்ச் எடுக்கலாம். பட்...  நௌ... எவரிதிங் இஸ் ஓகே அவன் மட்டும் தான் ரேஞ்சை இன்கிரிஸ் பண்ணுவானா? என்னோட ரேஞ்சும் இன்டர்நேஷனலுக்கு வளர்த்திருக்கேன்." என்றான்.</p>
<p>ருத்ரன் அமைதியாக நின்றான்.</p>
<p>சமீபகாலமாக தங்களது டிபார்ட்மெண்டில் பரபரப்பாக நடந்த குழந்தை கடத்தல் வழக்குகள்.. தனிப்படை அமைத்து மீட்கப்பட்ட குழந்தைகள்... பெண்கள்...</p>
<p>அந்த கேஸின் பின்னால் இருந்த பெயர் தெரியாத ஆதரவு...</p>
<p>எல்லாமே அவன் மனதில் ஒன்றோடொன்று இணைந்தது.</p>
<p>அது சத்ரியனா? மறைந்து கொண்டே ஒவ்வொரு ஆளாக போல்ஸ் உதவியுடன் இவன் களையெடுத்தானா?</p>
<p>ருந்ரன் ஆச்சரியம் தாளாமல் சத்ரியனை பார்த்துக் கொண்டிருந்தான்.</p>
<p>அப்போது... "அப்பா..." என்ற ராயனின் சின்ன குரல் கேட்டது.</p>
<p>சத்ரியன் மகனை திரும்பி பார்த்தான்.</p>
<p>ராயன் இத்தனையும் தந்தை கைகளில் ஒய்யாரமாய் இருந்து கேட்டதால் "ருத்ரா அங்கிளை திட்டாதிங்கப்பா" என்றான். அவனுக்கு காரணம் எதுவும் விளங்காவிட்டாலும் தந்தை ருத்ரனை திட்டுவதாக ம்டடுமே ஆதரவளித்தான்.</p>
<p>  அடுத்த நொடி தியா யதுநந்தனின் கையை பிடித்துக்கொண்டு, </p>
<p>"அப்பா.. யதுவும் குட் பாய் தான் அப்பா" என்று ராயன் போலவே அப்பா என்று சொல்லிவிட்டு சத்ரியனின் காலை கட்டிக்கொண்டு பார்த்தாள் தியா.</p>
<p>அந்த இரண்டு குழந்தைகளின் குரலும்... அறையில் இருந்த பதற்றத்தை ஒரு நொடி உடைத்தது.</p>
<p>சத்ரியன் மெதுவாக கண்களை இறுக மூடினான். அவன் உள்ளுக்குள் எரிந்து கொண்டிருந்த நெருப்புக்கு மேல்... தியாவின் அந்த சின்ன வார்த்தை இன்னொரு வலியை சேர்த்தன.</p>
<p>"ஷ்ரத்தா..." அவளை நோக்கி திரும்பினான். "இவளை தூக்கு." என்று கத்தாத குறையாக கூற, ஷ்ரத்தா குழம்பி அவனை பார்த்தாள்.</p>
<p>"அவளை என்னை டச் பண்ண வேண்டாம்னு சொல்லு." அந்த வார்த்தையை சொல்லும் போது சத்ரியனின் தன்னிலையில் இல்லை.</p>
<p>ஷ்ரத்தாவை தவிர மற்றவர்கள் சங்கடமாக, அவன் ஏன் இப்படி பேசுகிறான் என்பதை புரிந்து கொண்டாள். அதற்காக தியாவை உடனே தூக்கவில்லை. </p>
<p>  "அவ.. அவ உன்னோட பொண்ணு ரியன்." என்று கூற, ஷ்ரத்தா அறை வாங்கி கீழே சரிந்திருந்தாள். </p>
<p>"அம்மா" என்று தியா ஓட, ராயனும் சத்ரியனிடமிருந்து நழுவி அன்னையை நோக்கி நகர்ந்தான். தியா தன்னிலிருந்து நகர்ந்ததும் தான் சத்ரியன் நிம்மதியுற்றான். ஒரு பார்வை மற்றவரை ஏறிட, அங்கிருந்த பாடிகார்ட்ஸ் எல்லோரும் இறந்தவர்களை தூக்கிக் கொண்டு எலும்பு கூட எஞ்சாத வகையில் அமிலத்தில் போடுவதற்கான வேலையில் இருந்தனர். தீபா நந்திதா லட்சுமி கூட இவர்கள் பேச்சை கேட்டு வீட்டை சுத்தம் செய்ய மற்றவர்களை ஏவினார்கள். </p>
<p>  ஷ்ரத்தா கீழே விழவும் அம்மூவரும் வந்தார்கள். </p>
<p>ருத்ரன் யதுநந்தனும் கூட 'இவன் என்ன மிருகமா? இத்தனை நாள்இவனுக்காக துடித்து தவித்தவளை வந்தவுடன் கை நீட்டி அறைந்துவிட்டானே என்று ஷ்ரத்தாவை நோக்கி சென்றனர்.‌</p>
<p>- தொடரும். </p>
<p>-பிரவீணா தங்கராஜ்.</p>
<p>யாரெல்லாம் ருத்ரன் யது திட்டு வாங்கறப்ப ஈஈஈஈனு சிரிச்சிட்டு படிச்சிங்க‌&#x1f606;&#x1f606;&#x1f606;</p>]]></content:encoded>
						                            <category domain="https://onlinetamilnovels.com/community/%e0%ae%a4%e0%ae%95%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%b5%e0%af%8a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-praveena-thangaraj/">தகிக்கும் நிலவொன்று -Praveena Thangaraj</category>                        <dc:creator>Praveena Thangaraj</dc:creator>
                        <guid isPermaLink="true">https://onlinetamilnovels.com/community/topicid/321/</guid>
                    </item>
							        </channel>
        </rss>
		