<?xml version="1.0" encoding="UTF-8"?>        <rss version="2.0"
             xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
             xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
             xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
             xmlns:admin="http://webns.net/mvcb/"
             xmlns:rdf="http://www.w3.org/1999/02/22-rdf-syntax-ns#"
             xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/">
        <channel>
            <title>
									தகிக்கும் நிலவொன்று -Praveena Thangaraj - onlinetamilnovels.com Forum				            </title>
            <link>https://onlinetamilnovels.com/community/%e0%ae%a4%e0%ae%95%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%b5%e0%af%8a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-praveena-thangaraj/</link>
            <description>onlinetamilnovels.com Discussion Board</description>
            <language>en-US</language>
            <lastBuildDate>Mon, 27 Jul 2026 04:40:15 +0000</lastBuildDate>
            <generator>wpForo</generator>
            <ttl>60</ttl>
							                    <item>
                        <title>தகிக்கும் நிலவொன்று-17</title>
                        <link>https://onlinetamilnovels.com/community/%e0%ae%a4%e0%ae%95%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%b5%e0%af%8a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-praveena-thangaraj/%e0%ae%a4%e0%ae%95%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%b5%e0%af%8a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-17/</link>
                        <pubDate>Mon, 27 Jul 2026 02:10:27 +0000</pubDate>
                        <description><![CDATA[அத்தியாயம்-17
   ஆஷா மெதுவாக ஷ்ரத்தாவை நோக்கி நகர்ந்தாள். அவளது சேலையின் மடிப்புக்குள் மறைத்து வைத்திருந்த கூர்மையான கத்தி விரல்களுக்குள் நழுவியது.
&#039;இன்னும் இரண்டு அடி..&#039; நெருங்கினால் போது...]]></description>
                        <content:encoded><![CDATA[<p>அத்தியாயம்-17</p>
<p>   ஆஷா மெதுவாக ஷ்ரத்தாவை நோக்கி நகர்ந்தாள். அவளது சேலையின் மடிப்புக்குள் மறைத்து வைத்திருந்த கூர்மையான கத்தி விரல்களுக்குள் நழுவியது.</p>
<p>'இன்னும் இரண்டு அடி..' நெருங்கினால் போதும். குழந்தையோடு இருந்த ஷ்ரத்தாவை ஒரே குத்தில் முடித்துவிடலாம்.</p>
<p>அந்த நேரம் "ஆஷா." என்ற கார்த்திகாவின் குரல் பின்னால் ஒலித்தது. ஆஷா திடுக்கிட்டு திரும்பினாள்.</p>
<p>ஒரு நொடி பதறியவள், எதுவும் தெரியாதது போல கத்தியை மறைக்க முயன்றாள்.</p>
<p>ஆனால் கார்த்திகாவின் கண்கள் அதற்குள் அதை பார்த்துவிட்டிருந்தது.</p>
<p>"என்ன மறைக்கிற?" என்று மெதுவாக நடந்து வந்தாள்.</p>
<p>ஆஷா ஒரு கணம் தயங்கினாள்.</p>
<p>அடுத்த நொடியே அட்டம்ட் பெயிலானால் அதுவேறு தனக்கு இழிவென, கார்த்திகாவை புறம் தள்ளி 'சாவுடி!" என்று கத்திக்கொண்டு நேராக ஷ்ரத்தாவை நோக்கி பாய்ந்தாள்.</p>
<p>அவள் எதிர்பார்க்காத ஒன்று நடந்தது. அடுத்த நொடியில் மூன்று பெண் கைதிகள் ஒரே நேரத்தில் ஷ்ரத்தாவின் முன்னால் சுவராக வந்து நின்றனர். கிட்டதட்ட அரணாக.</p>
<p>ஒருத்தி ஆஷாவின் கையை முறுக்கினாள். மற்றொருத்தி அவளது இடுப்பில் ஓங்கி உதைத்தாள். மூன்றாவது கைதி அவளது கால்களை வாரிவிட,</p>
<p>ஆஷா சமநிலை இழந்து தரையில் விழுந்தாள். எழுந்திருக்க முயன்றவளை மூவரும் சேர்ந்து மண்டியிட வைத்தனர். அவளது கையில் இருந்த கத்தி தரையில் விழுந்து உருண்டது.</p>
<p>அந்த நேரம் கார்த்திகா மெதுவாக அருகில் வந்தாள்.</p>
<p>அவளது முகத்தில் கோபமோ பதற்றமோ எதுவுமில்லை.</p>
<p>மாறாக பதட்டமில்லாத அமைதி மட்டும் இருந்தது.</p>
<p>ஆஷாவின் முகத்தை பார்த்தவள் மெதுவாக குனிந்தாள். "என்ன போட்டு தள்ள வந்தியா?" என்று கேட்டாள்.</p>
<p>ஆஷா மாட்டிக் கொண்டதற்கிணங்க நிற்க "முதல்ல.. இந்த ஜெயிலுக்குள்ள யாரை கொல்ல வர்றேன்னு தெரிஞ்சிட்டு வரணும். ஆங்" என்று அதட்டினாள்.</p>
<p>பிறகு அந்த மூன்று கைதிகளையும் பார்த்து கண் காட்டியபடி, "பாத்ரூம்ல... கால் தடுக்கி கீழ விழுந்து... பின்மண்டை உடைஞ்சு செத்திருக்கணும். டெத் ரிப்போர்ட் எடுத்தா.. அப்படித்தான் வரணும். காட் இட்" என்றதும் மூவரும் அமைதியாக தலையசைத்தனர்.</p>
<p>ஆஷாவின் வாயை இறுக பொத்தி இழுத்துச் சென்றனர்.</p>
<p>ஆஷா இதற்கு தண்டனை தான் வரும பார்த்தால் மரணமா? என்று பயந்தாள். ஆனால் கதறல் கூட வெளியில் கேட்கவில்லை.</p>
<p>அத்தனை நேரமும் தள்ளி நின்றபடி ராயனுக்கு பால் புகட்டிக் கொண்டிருந்த ஷ்ரத்தா மட்டும் ஒன்றும் நடக்காதது போல அமைதியாக இருந்தாள்.</p>
<p>குழந்தை பால் குடித்து முடித்ததும், அவனை தோளில் போட்டுத் தட்டிக் கொடுத்தபடி கார்த்திகாவை நோக்கி நடந்தாள்.</p>
<p>"தேங்க்ஸ்..." என்றாள். கார்த்திகா திரும்பிப் பார்த்தாள்.</p>
<p>"எதுக்கு?" என்று புருவம் சுருக்கினாள். </p>
<p>"எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம் இருந்தது. இன்னைக்கு புது கைதி ஆஷா வந்து அதை தீர்ந்து வச்சிட்டாங்க." என்றாள். </p>
<p>"நீங்க... வினோத் அண்ணா மூலமா... என்னை பார்த்துக்கணும்னு இங்க வேலைக்கு வந்தவங்க தானே? நீங்க... அந்த மூணு கைதிகளும், அதே காரணத்துக்காகத் தானே உள்ள இருக்கிங்க." என்று கேட்டாள்.</p>
<p>கார்த்திகா சில நொடிகள் அமைதியாக இருந்தாள்.</p>
<p>பிறகு தலையிலிருந்த தொப்பியை சரி செய்தவள்</p>
<p>"சாரி டூ சே... வினோத் சாரை... இப்ப யாராலயும் பார்க்க முடியாது. அவரை தொடர்பு கொள்ள முடியாத நிலையில இருக்கார்னு. ஹரிணி சொன்னாங்க. அதுக்கு மேல... எனக்கும் எதுவும் தெரியாது."</p>
<p>சிறிது இடைவெளி விட்டாள் "ஆனா... எங்க குடும்பத்தோட செட்டில்மெண்ட்... மாத வருமானம்... எல்லாமே முன்கூட்டியே ஏற்பாடு செய்யப்பட்டிருக்கு... அது யாருனு தனியா சொல்ல தேவையில்ல.. அதனால‌‌.. உங்களையும் உங்க குழந்தையையும் பாதுகாப்பா வைத்திருக்கறது. எங்க பொறுப்பு." என்று குரலை சற்றுக் கடினப்படுத்தினாள்.</p>
<p>"இதை அட்வான்டேஜா எடுத்துட்டு... என்னை கேள்வி கேட்டு தொந்தரவு பண்ணாதிங்க.. மத்தவங்களுக்கு எங்க மேல சந்தேகம் வராம இருக்கறதும்,  எங்க வேலைதான். சோ... நீங்க தள்ளியே நில்லுங்க மேம். நாங்க.. தள்ளி போகமாட்டோம். என்று கூறிவிட்டு திரும்பிச் சென்றாள்.</p>
<p>அவள் சென்ற பின்பும், ஷ்ரத்தா அங்கேயே நின்றாள்.</p>
<p>தன்னையோ, தன் குழந்தையையோ, கொல்ல வந்தவர்கள் இங்கே இருப்பது கூட அவளுக்கு புதிதல்ல.</p>
<p>ஆனால் அவர்களை தடுக்க, ஏற்கனவே இத்தனை பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டிருப்பது.</p>
<p>இன்று தான் முழுமையாக புரிந்தது. இதை செய்ய சத்ரியன் எந்தளவு யோசித்திருப்பான். ஐரீனை காப்பாற்ற முற்படும் முன்பே அதற்கு பின்னால் நேரும் ஆபத்தும் இழப்பும் அறிந்தவனாக பாதுகாப்பு செய்து விட்டு சென்றவனை எண்ணி வியந்தாள்.</p>
<p>அதன்பிறகு ராயனை வளர்ப்பதில் இருந்த பயம் மெதுவாக குறைய ஆரம்பித்தது. அவனை மற்றவர்களிடம் கொடுத்து விட்டு சில நேரமாவது நிம்மதியாக தூங்க கற்றுக்கொண்டாள்.</p>
<p>அடுத்த நாள் பேப்பரில் ஆஷா என்ற கைதி பாத்ரூமில் வழுக்கி விழுந்து மரணம் என்ற சின்னதான கட்ட செய்தியுடன் ஆஷா சேப்டர் முடிவடைந்தது.</p>
<p>நாட்கள்.. மாதங்களாக மாறின.</p>
<p>ராயன்... சின்ன சின்ன சிரிப்புகளை சிரிக்க ஆரம்பித்தான். கால்களை எட்டி உதைத்து விளையாடினான். குப்புற படுத்து தலையை தூக்க முயன்றான். அவன் செய்த ஒவ்வொரு அசைவும்...</p>
<p>ஷ்ரத்தாவுக்கு வாழ வேண்டிய காரணமாக மாறியது.</p>
<p>எல்லாருக்கும் அவன்...</p>
<p>'ராயன்.' என்றாலும் ஷ்ரத்தாவுக்கு மட்டும்...</p>
<p>'ரியன்.' ஆனான். சத்ரியனின் பெயரின் கடைசி ஒலி.</p>
<p>அவள் உயிராய் நேசித்த மனிதனின் நினைவு.</p>
<p>"ரியன்..." என்று அழைத்தாலே... சத்ரியனையே அழைப்பது போல இருந்தது.</p>
<p>அப்படியே... ராயன் உட்கார கற்றுக்கொண்டான்.</p>
<p>தவழ்ந்தான். பிறகு மெல்ல மெல்ல எழுந்து நிற்க முயற்சி செய்தான்.</p>
<p>ஒவ்வொரு நாளும அவன் சிறைக்குள்ளே வளர்ந்தான். அவனோடு ஷ்ரத்தாவின் தாய்மையும் வளர்ந்தது.</p>
<p>யதுநந்தன் மாதம் இரண்டு முறை தவறாமல் வந்தான். குழந்தைக்கு தேவையான பொருட்களை வாங்கி வந்து கொடுத்தான்.</p>
<p>ஷ்ரத்தா எடுத்த புகைப்படங்களை ஹரிணிக்கு அனுப்பிக் கொண்டிருந்தான். ஹரிணி அதற்கெல்லாம் பதில் கூட அனுப்பவில்லை. </p>
<p>ருத்ரன் கூட வாரமிரு முறை வந்தான். ஆனால் ஷ்ரத்தா ருத்ரனிடம் அதிகம் பேசவில்லை. "கீர்த்தனா அம்மா வரலையா?" என்று மட்டும் கேட்பாள்.</p>
<p>கீர்த்தனா தான் ருத்ரனின் விருப்பம் தெரிந்து ஷ்ரத்தாவின் பெயரையே அவர் நினைவிலிருந்து மீட்க நினைத்தார். அதனால் சிறைக்கு வந்து பார்ப்பதை அறவே விட்டுவிட்டார்.‌</p>
<p>ருத்ரன் ஷ்ரத்தா கேட்கவும் "ரிலேட்டிவ் ஃபங்க்ஷனுக்கு போயிருக்காங்க."</p>
<p>"உடம்பு சரியில்ல."</p>
<p>"உன்னை பார்த்துட்டு வர சொல்லியிருந்தாங்க."</p>
<p>என்று ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு புது காரணம் சொல்லி சமாளித்தான்.</p>
<p>வாரம் ஒரு முறை ருத்ரனும், மாதம் இரண்டு முறை</p>
<p>யதுநந்தனும், இருவரும் மாறி மாறி வந்து சென்றனர்.</p>
<p>கீர்த்தனா மட்டும் வரவே இல்லை. அது ஷ்ரத்தாவுக்கு சிறிய சந்தேகத்தை கொடுத்தாலும். அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.</p>
<p>குழந்தை ராயன் அவளது உலகம். அவனது உலகை காக்கா அங்கே மூன்று பெண் கைதி இருக்க, கார்த்திகா இருக்க சிறைசாலைக்குள்ளே அவளது வீடாக உணர்ந்தாள். </p>
<p>ஒருநாள் கார்த்திகா கேட்டதற்கிணங்க, ஹரிணி மட்டும் வந்தாள். ஷ்ரத்தாவின் முதல் கேள்வியே... "வினோத் அண்ணா எங்க ஹரிணி?" என்று ஆசையாக கேட்க, ஹரிணியின் கண்கள் கலங்கின.</p>
<p>மெதுவாக 'ஒரு நாள் வெளியே போனார். அதுக்குப் பிறகு திரும்ப வரலை. அதனால தான் அவர் இல்லாம நான் வர தயங்கியது' என்ற வாசகத்தை தட்டச்சு செய்து காட்டினாள். </p>
<p>  அந்த ஒரு வார்த்தை ஷ்ரத்தாவின் இதயத்தை மீண்டும் உடைத்தது.</p>
<p>பேச்சை மாற்றுவதற்காக ஹரிணியே, ஒரு தூரிகை புகைப்படத்தை எடுத்து நீட்டினாள் ஹரிணி.</p>
<p>அதில் ஷ்ரத்தா. ராயன் அவர்களுக்கு அருகில். </p>
<p>சத்ரியன். உயிரோடு நின்றது போல தத்ரூபமாக வரையப்பட்டிருந்தான்.</p>
<p>"எப்படி வரைஞ்ச?" என்று அதிர்ச்சியுடன் கேட்டாள் ஷ்ரத்தா. ஹரிணி மெதுவாக விரக்தியாக சிரித்தாள்.</p>
<p>"சத்ரியன்... என்னை நெருங்கினப்ப, என்னால கத்த முடியல. ஆனா... அவரை பார்த்துக்கிட்டே இருந்தேன். ஒரு உருவத்தை... பத்து நிமிஷத்துக்கு மேல பார்த்தா... அதை அப்படியே வரைய முடியும். அதான்... அவரோட உணர்வையும் இதுல வரைஞ்சேன்." என்று போனில் தட்டச்சு செய்து கூறினாள். </p>
<p>ஷ்ரத்தா அந்த ஓவியத்தை மார்போடு அணைத்துக் கொண்டாள்.</p>
<p>அதே நேரம்... ஹரிணியிடம் சத்ரியன் அத்துமீறிய நினைவும்... வினோத் மீண்டும் வருவாரா இல்லையா.. என்ற கேள்வியும் ஷ்ரத்தா மனதை மீண்டும் நொறுக்கியது.</p>
<p>ஹரிணி சென்ற பிறகு. அந்த ஓவியத்தை தனது உடமைகள் வைக்கப்பட்டிருந்த இடத்தில் பாதுகாப்பாக வைக்கச் சொல்லி சிறை அதிகாரியிடம் தந்துவிட்டாள். </p>
<p>ராயனின் கையை பிடித்தபடி,</p>
<p>மெதுவாக சிறைக் கம்பிகளை நோக்கி நடந்தாள்.</p>
<p>  இன்னமும் அவளது தண்டனை காலம் இருக்கின்றதே..!</p>
<p>நாட்கள் நகர, வெளியுலகில் ருத்ரனை வீட்டில் இறக்கிவிட்டு திரும்பிய சேகர், டிரான்ஸ்பார்மரில் மோதி விபத்தில் இறந்துவிட்டதாக தகவல் வந்தது. </p>
<p>ராயன் கொஞ்சம் வளர்ந்திருந்தான்.</p>
<p>சிறைக்குள் இருந்தாலும்...</p>
<p>அவன் சிரிப்பு மட்டும் அந்த இடத்தின் இருளையே விரட்டும் அளவுக்கு இருந்தது.</p>
<p>"ரியன்... ஓடாத!" என்று ஷ்ரத்தா கத்தினாள். ஆனால் அவனோ இப்பொழுது எல்லாம் கேட்பது போலவே இல்லை.</p>
<p>சிறை வளாகம் முழுக்க தளதளவென்று ஓடிக் கொண்டிருந்தான்.</p>
<p>பின்னால் இரண்டு பெண் கைதிகள், "டேய் குட்டி... நில்லுடா!" என்று சிரித்தபடி துரத்திக் கொண்டிருந்தனர்.</p>
<p>ராயன் மட்டும் கலகலவென்று சிரித்தபடி ஓடினான்.</p>
<p>நேராக கார்த்திகாவின் முன்னால் வந்து நின்றான்.</p>
<p>"கார்த்தி." என்று அவன் அழைக்க, "மேம் சொல்லு." என்று கம்பீரமாக முகத்தை வைத்துக் கொண்டு கேட்டாள் கார்த்திகா.</p>
<p>"இல்ல." என்று தலையாட்டியவன், சட்டென்று அவளது போலீஸ் தொப்பியை எடுத்து தன் தலையில் போட்டுக் கொண்டான்.</p>
<p>"நான் போலீஸ்!" என்று கத்தினான். அங்கிருந்த அனைவரும் சிரித்தனர்.</p>
<p>"அடேய்... ராயன் என் தொப்பியை குடு." என்று கார்த்திகா பிடிக்க வர, "என்னை பிடிக்கவே முடியாது." என்று மீண்டும் ஓடினான்.</p>
<p>ஓடிக்கொண்டே, "எல்லாரும் லைன்ல நில்லுங்க..." என்று கார்த்திகாவை போல கையை காட்டி கட்டளை போட்டான்.</p>
<p>பெண் கைதிகளும் அவனுக்காக வரிசையாக நின்றனர். "சார்... இப்போ போதுமா?" என்று ஒருவர் கேட்க,</p>
<p>ராயன் கம்பீரமாக கைகளை பின்னால் கட்டிக் கொண்டு நடந்தான்.</p>
<p>ஒவ்வொருவரையும் பார்த்து, நல்ல பிள்ளையா இருக்கணும். காட் இட்" என்று அறிவுரை சொல்ல, அந்த இடமே சிரிப்பில் மூழ்கியது.</p>
<p>அதே நேரம் கார்த்திகா பின்னாலிருந்து மெதுவாக வந்து, அவனை அப்படியே தூக்கிக் கொண்டாள்.</p>
<p>"அய்யோ... பிடிச்சிட்டாங்க! அம்மா" என்று ராயன் கத்த,</p>
<p>"போலீஸ்கிட்டயே போலீஸ் விளையாட்டு விளையாடுறியா?" என்று அவன் கன்னத்தை கிள்ளினாள்.</p>
<p>"தொப்பி..." என்று அவள் கையை நீட்ட, "முத்தம் குடுத்துட்டு எடுத்துக்கோங்க." என்று பேரம் பேசினான்.</p>
<p>"அப்படியா?" என்று சிரித்த கார்த்திகா, அவன் இரு கன்னங்களிலும் மாறிமாறி முத்தமிட்டாள். உடனே தொப்பியை கழற்றி அவளது தலையில் வைத்தான்.</p>
<p>"குட் பாய்." என்று கார்த்திகா சொல்ல, "நான் குட் பாய் இல்ல..." என்று தலையசைத்தான்.</p>
<p>"அப்ப?"</p>
<p>"நான்... சத்ரியன் அப்பாவோட லிட்டில் பாய்!" என்று பெருமையாக சொல்லிவிட்டு சிரித்தான்.</p>
<p>அந்த ஒரு வார்த்தை ஷ்ரத்தாவின் கண்களை கலங்க வைத்தது. அவளுக்கே தெரியாமல் கண்கள் ஈரமானது.</p>
<p>கார்த்திகாவும் சில நொடிகள் அமைதியாக ராயனை பார்த்தாள்</p>
<p>அவனுக்கு தான் தந்தையின் முகமே தெரியாது.</p>
<p>ஆனால் தன் தாயின் வாயிலிருந்து தினமும் கேட்ட அந்த பெயரை மட்டும் பெருமையாக சொல்லக் கற்றுக் கொண்டிருந்தான்.</p>
<p>-தொடரும். </p>
<p>-பிரவீணா தங்கராஜ்.</p>
<p>&nbsp;</p>]]></content:encoded>
						                            <category domain="https://onlinetamilnovels.com/community/%e0%ae%a4%e0%ae%95%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%b5%e0%af%8a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-praveena-thangaraj/">தகிக்கும் நிலவொன்று -Praveena Thangaraj</category>                        <dc:creator>Praveena Thangaraj</dc:creator>
                        <guid isPermaLink="true">https://onlinetamilnovels.com/community/%e0%ae%a4%e0%ae%95%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%b5%e0%af%8a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-praveena-thangaraj/%e0%ae%a4%e0%ae%95%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%b5%e0%af%8a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-17/</guid>
                    </item>
				                    <item>
                        <title>தகிக்கும் நிலவொன்று-16</title>
                        <link>https://onlinetamilnovels.com/community/%e0%ae%a4%e0%ae%95%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%b5%e0%af%8a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-praveena-thangaraj/%e0%ae%a4%e0%ae%95%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%b5%e0%af%8a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-16/</link>
                        <pubDate>Sun, 26 Jul 2026 01:52:17 +0000</pubDate>
                        <description><![CDATA[அத்தியாயம்-16
    கார்த்திகா ஷ்ரத்தாவை சில நொடிகள் ஆழமாக பார்த்தாள்.
&quot;உன் பாதுகாப்புக்காகத் தான் நான் இருக்கேன் ஷ்ரத்தா. ஆனா நீயா ஏதாவது கற்பனை பண்ணிக்கிட்டா அதுக்கு நான் பொறுப்பில்லை. பிக...]]></description>
                        <content:encoded><![CDATA[<p>அத்தியாயம்-16</p>
<p>    கார்த்திகா ஷ்ரத்தாவை சில நொடிகள் ஆழமாக பார்த்தாள்.</p>
<p>"உன் பாதுகாப்புக்காகத் தான் நான் இருக்கேன் ஷ்ரத்தா. ஆனா நீயா ஏதாவது கற்பனை பண்ணிக்கிட்டா அதுக்கு நான் பொறுப்பில்லை. பிகாஸ் இங்கிருக்கற கைதிகள் கூட என் பாதுகாப்பில் இருக்கறவங்க. பை தி வே... போய் உன் வேலையை பாரு." என்று சுருக்கமாக கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள்</p>
<p>அவள் சென்ற திசையையே பார்த்தபடி நின்ற ஷ்ரத்தா,</p>
<p>'இவங்க... உண்மையிலேயே சத்ரியன் ஏற்பாடு பண்ணி அனுப்பின ஆளா? இல்லை... ஜெயிலில் உள்ள கைதிகளை பாதுகாக்கும் ஒரு அதிகாரி தானா?' என்று மனதிற்குள் மீண்டும் கேட்டுக் கொண்டாள்.</p>
<p>அன்று முதல் கார்த்திகாவை இன்னும் உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்தாள்.</p>
<p>அடுத்தடுத்த நாட்களில் அவளுக்கு சில விஷயங்கள் தெளிவாக தெரிய ஆரம்பித்தது.</p>
<p>குழந்தையை எல்லார் கையிலும் தான் கொடுத்தாலும், கார்த்திகா கொடுக்கவே விடமாட்டாள்.</p>
<p>ஒரு குறிப்பிட்ட கைதிகள், அவர்களிடம் மட்டும் தயக்கமின்றி குழந்தையை ஒப்படைப்பாள்.</p>
<p>  சொல்லப்போனால் ஒருத்தி குளிப்பாட்டுவாள். ஒருத்தி துணி மாற்றுவாள். மற்றொருத்தி தூங்க வைப்பாள்.</p>
<p>ஆனால் அவர்களும் கூட அதிக நேரம் குழந்தையை வைத்திருக்க அனுமதி இல்லை.</p>
<p>கொஞ்ச நேரத்தில் மீண்டும் கார்த்திகாவே வாங்கிக் கொள்வாள்.</p>
<p>சிலரை தவிர வேறு யாராவது குழந்தையை தூக்க முயன்றாலே, எங்கிருந்தாலும் "வேண்டாம் குழந்தையை எல்லாரும் தூக்கி விளையாடாதிங்க. உடல்நிலை மோசமான அதுவேற பிரச்சனை" என்று ஒரே வார்த்தையில் தடுத்து விடுவாள்.</p>
<p>அது ஏதோ சாதாரண கண்டிப்பு போன்றும் தெரியவில்லை. பாதுகாப்பு வளையம் போல இருந்தது. அதை பார்த்த ஷ்ரத்தாவுக்கு, கார்த்திகா மீது இருந்த சந்தேகம் கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்தது.</p>
<p>ஒருநாள் "கார்த்திகா..." என்று தயக்கத்துடன் அழைத்தாள்.</p>
<p>"என்ன?" </p>
<p>"ஹரிணியாவது வந்து பார்க்க முடியாதா? நான்... ரொம்ப பார்க்கணும்னு ஆசைப்படுறேன்." கார்த்திகா பெருமூச்சு விட்டாள்.</p>
<p>"உங்க லாயர் யதுநந்தன் சாரிடம் சொல்லியிருக்கிங்க தானே?" அவர் சொன்னதுக்கு வரலையே" என்றாள் ஷ்ரத்தா.</p>
<p>"அவர் சொன்னா கூட வரலை. நான் சொன்னா மட்டும் வந்துடுவாங்களா?" ஷ்ரத்தா கெஞ்சும் குரலில், "நீங்க சொன்னா வருவாங்கன்னு தோணுது... ஒரு தடவை ட்ரை பண்ணுங்க." என்றாள்.</p>
<p>கார்த்திகாவோ ''பார்க்கிறேன்."</p>
<p>என்று மட்டும் சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றாள்.</p>
<p>இப்படியிருக்கும் பட்சத்தில் ருத்ரன் வீட்டில். அவன் அறைக்குள் மொபைலில் ஷ்ரத்தாவின் புகைப்படத்தை பார்த்துக் கொண்டிருந்தான்.</p>
<p>அவள் ராயனை தூக்கி சிரித்துக் கொண்டிருக்கும் படம்.</p>
<p>அந்த படத்தை மீண்டும் மீண்டும் பெரிதாக்கி பார்த்தான்.</p>
<p>ஷ்ரத்தாவின் முகத்தை, கண்களை, புன்னகையை...</p>
<p>மீண்டும் மீண்டும் ரசித்தான்.</p>
<p>அவன் உதடுகளில் தன்னை அறியாமல் புன்னகை மலர்ந்தது. அந்த நேரம் கதவு திறந்து மகனை சாப்பிட அழைக்க வந்த கீர்த்தனா உள்ளே வந்தார்.</p>
<p>மகன் ஒரு பெண்ணின் புகைப்படத்தை பார்ப்பதை கண்டு ஆர்வமாக வந்தவர், அந்த புகைப்படம் ஷ்ரத்தா என்றதும் ஆச்சரியம். இதில் மகன் மையலோட பார்க்க அதிர்ச்சியடைந்தவராக "ருத்ரா..." என்ற சத்தம் கேட்டதும், ருத்ரன் பதறி மொபைலை பின்னால் மறைத்தான். "என்னடா பண்ற?"</p>
<p>"அது... போன்ல இருக்குற போட்டோஸ் பாத்துட்டு இருந்தேன்ம்மா." என்று தடுமாறினான்.</p>
<p>கீர்த்தனா அவன் முகத்தையே பார்த்தார். "போட்டோஸ் பார்த்தா... எதுக்கு இப்படி பயந்து பின்னால மறைக்கற?"</p>
<p>ருத்ரன் பதில் சொல்லவில்லை.</p>
<p>"ஷ்ரத்தா போட்டோவ தானே ஜூம் பண்ணி பாத்துட்டிருந்த?"</p>
<p>என்று நேராக கேட்டார்.</p>
<p>ருத்ரன் தலையை குனிந்தான்.</p>
<p>"அதெல்லாம் இல்லம்மா... ஜஸ்ட்... ஸ்டோரேஜ் க்ளியர் பண்ணினப்ப அவ போட்டோ முன்னால வந்துடுச்சு. அவளை பார்த்தேன்" என்று சமாளித்தான். </p>
<p>"போதும்." என்று கீர்த்தனா நிறுத்தினார்.</p>
<p>"நீ சும்மா பார்த்திருந்தா இந்த தடுமாற்றமே இருக்காது. நான் வர்றப்ப ரசிச்சு சிரிச்சுட்டு இருந்த. உன் கண்ணுல வேறொரு ரசனை இருந்துச்சு‌. உன் மனசுல தப்பான எண்ணம் இருக்கிறதால தான் பயப்படுற. இது சரியில்லை." என்றதும் ருத்ரன் மெதுவாக தலையை குனிந்தான்.</p>
<p>சில நொடிகள் கழித்து... "எனக்கு... அவளை பிடிச்சிருக்கு அம்மா." என்றான்.</p>
<p>கீர்த்தனா அதிர்ச்சியில் அவனை பார்த்தார்.</p>
<p>"என்னடா சொல்ற? ஷ்ரத்தாவையா.." என்று பதறினார். ருத்ரன் ஆமென்று தலையாட்டினான். </p>
<p>"அவ கல்யாணமானவ டா! குழந்தையும் இருக்கு." என்று ஏதோ தெரியாத விஷயம் சொல்வதாக எடுத்துரைத்தார். </p>
<p>"அவ கல்யாணமானவளா இருக்கலாம். குழந்தை இருக்கட்டும். ஆனா...</p>
<p>சத்ரியன் இல்லையே." என்றான்.</p>
<p>"டேய்... நீதானடா அவன் உயிரோட இருக்கலாம்னு சொன்ன?" என்று மகனின் பேச்சை கேட்டு ஆடித்தான் தடுக்க முனைந்தார்.</p>
<p>"இல்லம்மா... இப்ப நான் விசாரிச்ச வரைக்கும்...</p>
<p>அவனுக்கு உயிரோட இருக்க வாய்ப்பே இல்ல." அவன் மெதுவாக அமர்ந்தான்.</p>
<p>"அவன் தொட்டிருக்குற கேங்...வேர்ல்ட் லெவல் நெட்வொர்க்.</p>
<p>அதுல மாட்டினவங்க உயிரோட வந்த வரலாறே இல்ல. ஏன் எங்க டிப்பார்ட்மெண்ட் கூட தொட முடியாத இடம். அதனால... அவன் உயிரோட இருக்க முடியாது. ஷ்ரத்தா விடோ." என்றான். </p>
<p>கீர்த்தனாவின் முகம் கோபத்தில் சிவந்தது. "அதனால நீ அவளை கட்டிக்கணுமா?" என்றார். </p>
<p>"அம்மா.. ஏன் அதுல தப்பென்ன?." என்றான்.‌</p>
<p>"நீ அவ மேல பாவம் பார்க்க வேண்டிய அவசியம் என்னடா. ருத்ரா இது பெரிய தப்பு" என்றார்.</p>
<p>"அப்போ... நீயே ஏன்ம்மா அவளுக்கு வளைகாப்பு வளையல் போட்ட? குழந்தை பிறந்தப்ப கூடவே இருந்த?</p>
<p>அவளுக்காக ஓடின? அதெல்லாம் அவளையும் என்னையும் கனெக்ட் பண்ணுதும்மா" என்றான</p>
<p>"டேய் அது மனிதாபிமானம்டா" என்றார்.</p>
<p>"இல்லைம்மா... அவளை விதி நம்மளோட தொடர்புப்படுத்தி, வச்சதே.. நானும் அவளும் இணைய தான். எனக்கு நேசம் பிறந்த மாதிரி அவளுக்கும் ஒரு நாள் என்‌ மனசை திறந்து காட்டுவேன்." என்றதும் மகனது அபத்தமான பேச்சை கேட்டு கீர்த்தனா கண்களை மூடிக் கொண்டார்.</p>
<p>"உனக்குன்னு ஒரு நல்ல பொண்ணை நான் பார்த்து கல்யாணம் பண்ணணும்.</p>
<p>அதை செய்யாததால...</p>
<p>இப்ப பார்த்த பொண்ணு மேல ஆசை வந்துருக்கு. இது காதல் இல்லை.." என்று மறுத்தார். </p>
<p>"அது ஆசை இல்லம்மா." ருத்ரனின் குரல் உறுதியானது.</p>
<p>"அது நேசம். காதல் தான்‌</p>
<p>அவளை நேசிப்பதை கொச்சைப்படுத்தாதிங்க." என்றான் கோபமாக.</p>
<p>"நீயே உன்னை கொச்சைப்படுத்திக்கிற.. இந்த எண்ணத்தோடதான் அவ முன்னாடி நின்னு உதவி செஞ்சியா? உனக்கு வெட்கமா இல்ல?" என்று கோபமாக மாறினார் கீர்த்தனா. </p>
<p>ருத்ரன் சில நொடிகள் அமைதியாக இருந்தான். பிறகு மெதுவாக, "நீங்க வேற பொண்ணு பார்க்க ஆரம்பிச்சா. யாராயிருந்தாலும் சபைக்கு நேராவே பிடிக்கலன்னு சொல்லிடுவேன்.</p>
<p>எனக்கு... ஷ்ரத்தாவும் ராயனும் போதும்." என்றான்.</p>
<p>அந்த வார்த்தை கீர்த்தனாவை உடைத்தது. "எப்படிடா...</p>
<p>இப்படி ஒரு முடிவு எடுத்து பேசமுடியுது" என்று கீர்த்தனா அதே கோபத்துடன் கேட்டார்.</p>
<p>"எப்ப எடுத்தேன்னு தெரியல.ஆனா... மாத்த முடியாது அம்மா" என்று சொல்லிவிட்டு வெளியே சென்றான்.</p>
<p>தன் பிறகு இரண்டு நாட்கள் தாயும் மகனும் சரியாக பேசவே இல்லை.</p>
<p>கீர்த்தனா மனதிற்குள், 'இன்னும் மூணு வருஷம் ஷ்ரத்தா ஜெயில்ல இருப்பா. அதுக்குள்ள என் பையன் மறந்துடுவான். மறக்கடிக்கற மாதிரி ஒரு பொண்ணை பார்க்கணும்.'</p>
<p>என்று தன்னைத் தானே சமாதானப்படுத்திக் கொண்டார். அதனால் தெரிந்தவர் தெரியாத தரகர் என்று எல்லோரிடமும் நல்ல வரனை பார்க்க கூறியிருந்தார். </p>
<p>ருத்ரன் மட்டும்... தனக்குள் வேறு உலகத்தில் இருந்தான். 'ஷ்ரத்தா என்னை ஏற்றுக்க மாட்டான்னு நல்லா தெரியும். ஆனா... ஒருநாள்... என் மனச புரிஞ்சுக்குவா.' என்று நினைத்து தனியாக சிரித்துக் கொண்டிருந்தான்.</p>
<p>அதை பார்த்த சேகர், "என்ன சார்? தனியா சிரிக்கறீங்க?" என்று கேட்டான்.</p>
<p>"ஒன்னுமில்லை சேகர்." என்றவன் பேச்சை மாற்றினான்.</p>
<p>"சார்... கேட்கணும்னு இருந்தேன்.. இப்பல்லாம் அந்த கேங்லீடர் சத்ரியன் விஷயம் பத்தி எந்த தகவலும் சேகரிக்க போகலையா சார். சத்ரியன் விஷயம் என்னாச்சு சார்?" என்று சேகர் ஆவலாக கேட்டான். ஒரு பிளாட் கிடைக்கும் யோகம் தள்ளிக் கொண்டே செல்கின்றதே. </p>
<p>"என்னை விட ரொம்ப ஆர்வமாயிருக்க?" என்றதற்கு, தலையை சொரிந்து, 'உங்களுக்கு காரோட்டிட்டு இருக்கறப்ப போரடிக்கும். நீங்க என்னிடம் ஷேர் பண்ணுவதால தெரிந்துக்க ஆசை சார்" என்று சந்தேகம் வராது கூறினான்.‌</p>
<p>ருத்ரனோ "சத்ரியன் செத்துப் போயிருப்பான் சேகர்"  என்று உறுதியாக சொன்னான் ருத்ரன்.</p>
<p>"அவன் கப்பல்... நடுக்கடலில். சிதறடிக்கப்பட்டிருக்கு. இங்க ஷ்ரத்தா கையால சாகடிக்கப்பட்டு இறந்த அன்னிக்கு தான். </p>
<p>இங்க இறந்ததா நியூஸை கிரியேட் பண்ணிட்டு, அவனோட கப்பல்ல பயணம் செய்திருக்க பிளான் பண்ணிருக்கலாம்‌. சத்ரியன் தொட்ட இடம் ரொம்ப பெரிய நெட்வொர்க் அதுல ஏதோவொரு குரூப் சத்ரியன்  கப்பலில் தப்பிப்பதை கணிச்சிருக்கும். கப்பலையே பிளாஸ்ட் பண்ணிருக்காங்க. அந்த நெட்வொர்க் ஆட்களிடமிருந்து,</p>
<p>தப்பிச்சிருக்க வாய்ப்பே இல்ல. ஏன்னா நம்ம டிபார்ட்மெண்ட் சிலரை முழுங்கி ஏப்பமிட்ட இடம். ஐரீன் கேஸ் விஷயமா கேட்டப்ப படுபயங்கரமா சொன்னானுங்க."</p>
<p>  சேகர் அதையெல்லாம் சேகரித்தவனாக, அந்த தகவலை அப்படியே சேகர்.</p>
<p>தனக்கு மேலிருந்த மர்ம நபரிடம் தெரிவித்தான்.</p>
<p>அவனும் சில நொடிகள் அமைதியாக இருந்தான்.</p>
<p>"தீயில சாகலன்னாலும்... இப்படி செத்ததா சொல்லிட்டு கப்பலில் புறப்பட்டு அந்த கப்பல்லயே செத்திருக்கலாமோ" என்று யோசித்தான். ஏனெனில் குழந்தைகள் அந்த கப்பலில் ஏற்றிய பதிவு, அந்த கப்பல் வெடித்த போதும் கிடைத்தது. </p>
<p>   அப்படியென்றால் குழந்தைகளோடு சத்ரியன் அதில் மாண்டிருப்பானோ? என்று சிந்தித்தனர்</p>
<p>பிறகு மெதுவாக, 'ஷ்ரத்தாவுக்கு குழந்தை பிறந்திருக்கும் போது,</p>
<p>சத்ரியன் உயிரோட இருந்தா, நிச்சயமா அவர் உயிர்ல முளைச்ச குழந்தையை வந்து பாத்திருப்பான் இல்லையா? இப்ப வரை பார்க்க வரலை.' என்று சிந்தித்தான்.</p>
<p>மறுநொடியே அவன் கண்கள் கூர்மையானது. 'ஒரு வேலை...ஷ்ரத்தாவுக்கு ஆபத்து வந்தா. அந்த சத்ரியன் வெளியே வர்றானான்னு சோதிச்சிட்டா?' என்ற சந்தேகம் முளைக்க, 'ஆஷாவை அனுப்பிப் பாருங்க." என்றான் தனக்கு கீழேயுள்ளவர்களுக்கு. </p>
<p>சிறைச்சாலைக்குள் ஆஷா செல்வதற்கான திட்டங்களும், </p>
<p>ஷ்ரத்தாவை கொல்லும் திட்டமும் அமைதியாக ஆரம்பிக்கப்பட்டது.</p>
<p>ஆஷா அதனால் வரதட்சணை தரமறுத்ததால் கணவரும் மாமியாரும் கொடுமைப்படுத்துவதாக கொன்றுவிட்டு வந்த வழக்கில், கொலை செய்ததற்கான தண்டனைப் பெற்று சிறைக்குள் வந்தாள். </p>
<p>  ஷ்ரத்தா அறையில் அவளிருக்கும் பிரிவில், வராண்டாவில் ஏற்கனவே கைதிகள் இருக்க, ஆஷா சிறைச்சாலைக்குள் ஷ்ரத்தாவோடு நெருங்கி, வருகைக்கு காத்திருந்தாள். </p>
<p>  பெரும்பாலும் குளியலறையிலும் சமையலறையிலும் எல்லாம் பிரித்து தந்து வேலை வாங்கும் அதிகாரிகளால் பொதுவான சந்திப்பு அமைவது சாப்பிடும் நேரம் மட்டுமே. </p>
<p>  அதுவும் அவரவர் குழுவாக தான் அமர்ந்து கொள்வார்கள். </p>
<p>  அரிதாக தான் ஒருத்தி மற்றொருத்தியுடன் நேரம் செலவிடுவார்கள். </p>
<p>  ஆஷா ஷ்ரத்த வையோ அல்லது குழந்தையையோ அழிக்க நேரம் பார்த்து திரிந்தாள். </p>
<p>  அன்று காமராஜர் பிறந்தநாள் என்று அந்த வாய்ப்பு தாராளமாகவே அமைந்தது.</p>
<p>  கைதிகளை வரிசையாக இடைவெளியிட்டு அமர வைத்து அங்கே வந்திருந்த விருந்தினர்கள் பேசினார்கள். </p>
<p>  ஷ்ரத்தா அடிக்கடி பீடிங் கொடுப்பதால் கடைசியில் தான் அமர்ந்திருந்தாள். குழந்தை அழவும், தனித்து சென்று அமுதமூட்ட சென்றாள். </p>
<p>  ஆஷா உடனே எழுந்து ரெஸ்ட்ரூம் போவதாக கையை காட்டிவிட, கார்த்திகா 'ஞானாசூன்யம் போய் தொலை' என்று அனுப்பி வைத்தாள். </p>
<p>   ஆஷா சிறையில் ஆங்காங்கே பதுக்கி வைத்த பொருட்களை கையில் எடுத்துகொண்டு மறைத்தபடி ஷ்ரத்தாவை நெருங்கினாள். </p>
<p>&nbsp;</p>
<p>-தொடரும். </p>
<p>-பிரவீணா தங்கராஜ்</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>]]></content:encoded>
						                            <category domain="https://onlinetamilnovels.com/community/%e0%ae%a4%e0%ae%95%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%b5%e0%af%8a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-praveena-thangaraj/">தகிக்கும் நிலவொன்று -Praveena Thangaraj</category>                        <dc:creator>Praveena Thangaraj</dc:creator>
                        <guid isPermaLink="true">https://onlinetamilnovels.com/community/%e0%ae%a4%e0%ae%95%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%b5%e0%af%8a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-praveena-thangaraj/%e0%ae%a4%e0%ae%95%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%b5%e0%af%8a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-16/</guid>
                    </item>
				                    <item>
                        <title>தகிக்கும் நிலவொன்று-15</title>
                        <link>https://onlinetamilnovels.com/community/%e0%ae%a4%e0%ae%95%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%b5%e0%af%8a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-praveena-thangaraj/%e0%ae%a4%e0%ae%95%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%b5%e0%af%8a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-15/</link>
                        <pubDate>Sat, 25 Jul 2026 02:05:45 +0000</pubDate>
                        <description><![CDATA[அத்தியாயம்-15
குழந்தை பிறந்து அன்று முப்பதாவது நாள். குழந்தைக்கு பெயர் வைக்கும் நாளாக இருந்தது.
     யதுநந்தன் மெதுவாக ஷ்ரத்தாவின் அருகில் வந்து நின்றான்.
&quot;ஷ்ரத்தா...&quot; அவள் முகம் நிமிர்ந்...]]></description>
                        <content:encoded><![CDATA[<p>அத்தியாயம்-15</p>
<p>குழந்தை பிறந்து அன்று முப்பதாவது நாள். குழந்தைக்கு பெயர் வைக்கும் நாளாக இருந்தது.</p>
<p>     யதுநந்தன் மெதுவாக ஷ்ரத்தாவின் அருகில் வந்து நின்றான்.</p>
<p>"ஷ்ரத்தா..." அவள் முகம் நிமிர்ந்து பார்த்தாள்.</p>
<p>"யது சார்... வினோத் அண்ணாவை குழந்தைக்கு பெயர் வைக்க வரச் சொல்லிட்டிங்க தானே? ஹரிணியும்... வினோத் அண்ணாவும் வருவாங்க தானே? ஒருவேளை... வினோத் அண்ணாவே ஏதாவது பெயர் யோசிச்சு வச்சிருப்பாரா? அவங்க ஏர்போர்ட் ரீச் ஆகிட்டாங்களா?" என்று ஒரே மூச்சில் கேட்டாள்.</p>
<p>    யதுநந்தனின் முகம் மாறியது.</p>
<p>"நிறைய ட்ரை பண்ணேன் ஷ்ரத்தா... வினோத்தை இன்னும் கான்டாக்ட் பண்ண முடியலை. ஹரிணியும் சில காரணங்களால வர முடியாதுன்னு சொல்லிட்டாங்க." அவன் சற்றே புன்னகைக்க முயன்றான்.</p>
<p>"நீயே குழந்தைக்கு பெயர் வை. நாம எல்லாருக்கும் சாக்லேட் கொடுத்து இந்த நாளை சந்தோஷமா கொண்டாடலாம்." என்றதும் அந்த வார்த்தை முடிந்த அடுத்த நொடியே,</p>
<p>ஷ்ரத்தாவின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது.</p>
<p>உயிரே உடைந்து போனது போல அழ ஆரம்பித்தாள்.</p>
<p>"ஷ்ரத்தா." என்று கார்த்திகா பதறினாள். ஆனால் ஷ்ரத்தா அழுகை மட்டும் அதிகரித்தது.</p>
<p>"என்னால என் குழந்தைக்கு பெயர் வைக்க முடியாது." என்று தலையசைத்தாள்.</p>
<p>அப்போது கீர்த்தனா அவளருகில் வந்து அமர்ந்தார்.</p>
<p>"என்னம்மா... ஏன் இப்படியெல்லாம் அழற?"</p>
<p>ஷ்ரத்தா பதில் சொல்ல முடியாது தவித்தாள். கீர்த்தனா மெதுவாக அவள் கையை வருடினார்.</p>
<p>"உங்க வினோத் அண்ணாவுக்கு ஏதாவது முக்கியமான வேலை இருந்திருக்கலாம். அவர் ஒன்னும் உன் சொந்த அண்ணா இல்லையேம்மா.. அவருக்கும் வாழ்க்கை இருக்கு. அதனால வர முடியாம போயிருக்கலாம்." என்றதும், அதைக் கேட்ட ஷ்ரத்தா வேகமாக தலையசைத்தாள்.</p>
<p>"உயிர் போற வேலையா இருந்தாலும், அவர் இங்க வந்திருப்பார் அம்மா. அவருக்கு ஏதோ ஆகிடுச்சோனு பயமாயிருக்கு" அறை முழுவதும் அமைதியாகியது.</p>
<p>கார்த்திகா மெதுவாக முன்வந்தாள். "லுக் ஷ்ரத்தா... உடம்பை கெடுத்துக்காதீங்க. குழந்தைக்கு பெயர் வச்சிட்டு... நல்லபடியா இந்த நாளை முடிப்போம்." என்றாள். </p>
<p>ஆனால் ஷ்ரத்தா மறுபடியும் அழ ஆரம்பித்தாள்.</p>
<p>"எல்லாரும்... என்னை விட்டு போயிட்டாங்க... எனக்கு யாருமே இல்ல... நான் மட்டும் ஏன் வாழணும்... என் குழந்தைக்கு ஏன் இந்த நிலைமை." என்று தேவையின்றி கதறினாள்.</p>
<p>அவ்வளவு நேரம் அமைதியாக நின்றிருந்த ருத்ரன் திடீரென்று முன் வந்தான்.</p>
<p>"இப்ப யாரு உன்னை விட்டு போனது? உன் கூட தானே இருக்காங்க" என்றவன் குரல் சற்றே அதட்டலாக இருந்தது.</p>
<p>ஷ்ரத்தா அழுதபடியே பார்த்தாள். ருத்ரன் மெதுவாக அவள் முகத்தை தன் பக்கம் திருப்பினான்.</p>
<p>"அன்னைக்கு... என்னிடம் என்ன சொன்ன?" ஷ்ரத்தா குழப்பமாக பார்த்தாள்.</p>
<p>"சத்ரியன் உயிரோட இருக்கார்னு நினைச்சா.. உயிரோட இருக்கார். உன் மனசுல. உயிரோட இல்லன்னு நினைச்சா... இல்ல. அப்படின்னு நீதானே சொன்ன."</p>
<p>ஷ்ரத்தாவின் கண்கள் மெதுவாக விரிந்தன.</p>
<p>"இப்ப சொல்லு... உன் மனசுல... சத்ரியன் உயிரோட இருக்காரா?" என்று பார்க்க ஒரு நொடி... அவள் கண்களை மூடினாள்.</p>
<p>பிறகு மெதுவாக...</p>
<p>"ஆமா. என் சத்ரியன் என் மனசுல உயிரோட வாழறார்." என்று தலையசைத்தாள்.</p>
<p>"அப்ப." ருத்ரன் குழந்தையை பார்த்தான். "அவரோட மகனுக்கு... பெயர் வை." என்றான்.</p>
<p>அந்த ஒரு வார்த்தை ஷ்ரத்தாவின் மனதை அமைதிப்படுத்தியது.</p>
<p>அவள் கண்ணீரை துடைத்தாள். குழந்தையை கைகளில் வாங்கினாள்.</p>
<p>சிறிது நேரம் அவன் முகத்தை பார்த்துக் கொண்டிருந்தாள்.</p>
<p>பிறகு மெதுவாக "சத்ரியனுக்கும் எனக்கும் பிறந்த குழந்தைக்கு நான் ராயன்-னு பெயர் வைக்கறேன்." என்றாள்.</p>
<p>அங்கிருந்த அனைவரும் அவளை பார்த்தனர்.</p>
<p>"ராயன்." என்று மீண்டும் சொன்னாள்.</p>
<p>"தலைவன் அரசன்... ராயன் என்ற பெயருக்கு அதுதான் அர்த்தம் ம்ம்.. சூப்பரா தான் பெயர் வைக்கற" என்றான் ருத்ரன்.</p>
<p>கீர்த்தனா குழந்தையின் நெற்றியில் முத்தமிட்டார்.</p>
<p>"ராயன்.. நல்லாயிருக்கு." என்றார். அதிலும் மகன் ஷ்ரத்தாவை அதட்டி தொட்டு நிறுத்தி, ஏதேதோ பேசி அவளை சாந்தப்படுத்தியதை கண்டு ஆச்சரியப்பட்டார். </p>
<p>  இத்தனை நாட்களாக ருத்ரன் ஷ்ரத்தாவை அளவுக்கதிகமாக கோபத்துடன் அல்லவா பார்த்து திட்டி தீர்த்தான். </p>
<p>  குழந்தை பிறந்தப்பிறகு அதிகப்படியாக தான் மென்மை காட்டுகின்றானோ? ஆனால் முன்பு அடிக்கடி வந்து அவளை ஏறிட்டவன் இந்த இடைப்பட்ட நாட்களில் அதிகம் தன்னுடன் வராமல் தவிர்த்துவிட்டு இன்று தான் வந்துள்ளதில் சந்தேகம் கூடவில்லை. மாறாக மகனுக்கும் கனிவுடன் பேச வந்துவிட்டதாக முடிவுக் கட்டினார்.‌</p>
<p>கார்த்திகா உடனே இனிப்புப் பெட்டியை திறந்தாள்.</p>
<p>"சரி... இனிப்பு கொடுக்கலாமா?" என்று சிரித்தாள்.</p>
<p>யதுநந்தன் சாக்லேட்டுகளை எடுத்துக் கொண்டு அனைவருக்கும் வழங்க ஆரம்பித்தான். கீர்த்தனாவோ யதுநந்தனின் செய்கையை கண்டவர் ஏதோ புரிந்தவராக நின்றார். </p>
<p>குழந்தைக்கு ராயன் என்ற பெயரிட்ட காட்சியை அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தான் ருத்ரன்.</p>
<p>ஒரு காலத்தில் 'எந்த கூட்டத்துக்கு தலைவன்?' என்று கிண்டல் கூட செய்திருப்பான்.</p>
<p>ஆனால் இன்று ஷ்ரத்தாவை மீண்டும் அழ வைக்க விரும்பவில்லை. கொஞ்ச நேரம் முன் அழுததே அவனால் தாங்கயியலவில்லை‌. அதனால் அமைதியாகவே நின்றான்.</p>
<p>யதுநந்தனும் அமைதியாக ஷ்ரத்தாவை பார்த்துக் கொண்டிருந்தான்.</p>
<p>'முதல் கரு கலைந்தப்போ சத்ரியன் ரொம்ப உடைஞ்சு போயிட்டார்னு சொன்னா. அதே ஷ்ரத்தா தான்... குழந்தையை கொல்ல வந்ததால சத்ரியனை சுட்டேன்னு சொன்னா...</p>
<p>இரண்டும் ஒன்றுக்கொன்று பொருந்தவில்லை.</p>
<p>உண்மை... வேறு எங்கோ இருந்தது. ஒருவேளை... சத்ரியன் வேறு காரணத்திற்காக சிக்கியிருக்கலாம். அல்லது...</p>
<p>ருத்ரன் சந்தேகப்படுவது போல...</p>
<p>சத்ரியன் இன்னும் உயிரோடு கூட இருக்கலாம். ஆனால்... அந்த உண்மையை தெரிந்துகொள்ள...</p>
<p>ஷ்ரத்தாவின் காயத்தை மீண்டும் கீற அவனுக்கும் மனமில்லை.</p>
<p>அவளுக்கு திவாகரின் மகளாக பாதுகாப்பு கொடுத்தாலே போதும் என்று நினைத்தான்.</p>
<p>ருத்ரனின் மனமும் வேறொரு போராட்டத்தில் இருந்தது.</p>
<p>தென்கிழக்கு ஆசிய தீவுகளின் குற்றவலை பற்றி அவன் சேகரித்த தகவல்கள். அதில் சிக்கியவர்கள் உயிரோடு திரும்பிய வரலாறே இல்லை.</p>
<p>அதனால் சத்ரியன் இறந்திருக்கலாம் என்று அவன் நம்பினான். அதனால்தான்...</p>
<p>இனி ஷ்ரத்தாவிடம் சத்ரியனைப் பற்றி கேட்டு காயப்படுத்தக்கூடாது என்று அவனும் முடிவு செய்தான்.</p>
<p>ஆனால் அவள் பக்கம் நகரும் தன் மனதை மட்டும் அவனால் நிறுத்த முடியவில்லை. அவளது வெறுப்பை மாற்ற வேண்டும்.</p>
<p>குறைந்தபட்சம் அவள் தன்னை மனிதனாக ஏற்றுக்கொள்ள வேண்டும். அந்த முயற்சியின் முதல் அடியாக இன்று அவளிடம் மென்மையாக பேசியிருந்தான்.</p>
<p>பெயர் வைத்துக் கொண்டாட்டம் முடிந்ததும்,</p>
<p>குழந்தை பலரது கைகளில் சுற்றி இறுதியில் மீண்டும்.</p>
<p>அம்மாவின் மார்பில் வந்து அமைதியாக உறங்கிக் கொண்டான்.</p>
<p>  யதுநந்தனோ 'குழந்தையை வளர்ப்பதில் கஷ்டமிருக்கா?' என்று கேட்க இல்லை என்று தலையாட்டியவள், "வினோத் அண்ணா ஹரிணியை நான் சந்திக்க ஆசைப்படறேன்னு சொல்லறிங்களா.. எ..என்னால அவங்களை பார்க்காம இருக்க முடியலை. கிட்டதட்ட ஆறேழு மாசமாகுது. சும்மாவாது வந்து பார்க்க சொல்லுங்க." என்று கோரிக்கையை வைத்தாள். </p>
<p>யதுநந்தனோ ''நான் வந்து பார்க்கறேன்னே ஷ்ரத்தா அது போதாதா?" என்று கேட்டான். ஷ்ரத்தா அமைதியாக சொல்ல முடியாது தவிக்க, "வினோத் உங்க சத்ரியனிடம் வேலை பார்த்தவன். அவனை அண்ணன்னு அழைச்சதால இந்த பாசமா? இல்லை... வினோத் மூலமா உங்களுக்கு ஏதாவது தகவல் தெரியணுமா?" என்று லாயர் மூளை லேசாக கேள்விக் கேட்டு விட்டது. </p>
<p>  ஷ்ரத்தாவோ "நீங்க எந்த மாதிரி பதில் வேண்டும்னு என்னிடம் வினாத் தொடுக்கறிங்களே அதுக்கான பதிலாகவே நினைச்சிக்கோங்க." என்றாள். </p>
<p>   யதுநந்தனோ மனதிற்குள், 'நான் லாயர் திவாகரோட பொண்ணை நேசிக்கறேன் ஷ்ரத்தா. அவ என் நேசிப்பை வெறுக்காம ஏற்றுப்பானு நம்பறேன். என்னைக்காவது மனதிலிருப்பதை சொல்வேன். அப்ப எஸ் சொல்லு' என்றது போல நின்றான்.‌</p>
<p>"திரும்ப வருவேன் ஷ்ரத்தா. முடிந்தா ஹரிணியை அழைச்சிட்டு வர்றேன்." என்று யதுநந்தன் கடிகாரத்தை பார்த்து கிளம்பினான். </p>
<p>கீர்த்தனாவோ "அம்மாடி நாங்களும் கிளம்பறோம். குழந்தையை ராயனை நல்லபடியா பார்த்துக்கோ. அதென்னவோ வீட்டுக்கு போனா கூட கண்ணுக்குள்ளயே நிற்கறான்." என்று முத்தமிட்டார். </p>
<p>"ருத்ரா.. போலாமா?" என்று கேட்க, தலையாட்டினான்.</p>
<p>  இரண்டெட்டு கீர்த்தனாவுடன் நடந்தவன், ''ஒன் செகண்ட் மா இதோ வந்துடறேன்'' என்று ஷ்ரத்தா முன் வந்தான். </p>
<p>    ''உன்கிட்ட நிறைய பேசணும்னு தோணுது. ஆனா முடியலை. நான் ஏதாவது பேசினா நீ அழுவற.   </p>
<p>    அடிக்கடி அழுது அழுமூஞ்சி அம்மாவா ராயனுக்கு இருக்காத. பீ போல்ட். உனக்கு சத்ரியன் கன் சூட் பண்ண கத்து தந்தான்னு சொன்ன. அதே போல சூழ்நிலையை எப்படி கையாளனும்னு சொல்லி தந்திருப்பான். சோ.. கொஞ்சம் யோசி. உன் குழந்தை பெயர் சூட்டு விழா. இந்த நேரம் எப்படி சந்தோஷமா சிரிச்சு இருக்க வேண்டாம். </p>
<p>  வளைகாப்பு போட்டோவுல எல்லாம் ஸ்மெல் பண்ணி அழகாயிருந்த. இன்னிக்கு பாதிக்கிட்ட அழுதுட்ட. குட் மெமரிஸா மாத்தறதுக்குள்ள போதும் போதுமாயிடுச்சு.</p>
<p>   இப்பவும் சொல்லறேன்..‌ சத்ரியனை நீ கொன்றுயிருக்க மாட்ட. வேண்டுமின்னா.. அவன் உனக்காக சாக தயாராக இருப்பான். ஏன்னா.. உன் முகம் வாடினா யாராயிருந்தாலும் மனசு கேட்காது.'' என்றான்.‌</p>
<p>   அதில் நீ முகம் வாடினா எனக்குமே தாங்கமுடியவில்லை என்று கூற நா எழுந்தது.</p>
<p>  ராயனை தொட்டு தடவி, 'ஸ்வீட் பாய்.. நல்லா பார்த்துக்கோ. நீ..நீயும் உடம்பை பார்த்துக்கோ. மனசுல கண்டதும் போட்டு குழப்பிக்காத" என்று அவளை பார்த்தவாறு பின்னால் நடந்து சென்றான்.</p>
<p>  கார்த்திகாவோ "சார்... முன்னால பார்க்காம பின்னாடி நடக்கறிங்க.. பார்...த்..த்து இடிச்சிட போறிங்க" என்றாள் நக்கலாய். </p>
<p>  ருத்ரனோ புன்முறுவலுடன் அவ்விடம் விட்டு சென்றதும் கதவு சாற்றப்பட்டது. </p>
<p>ஷ்ரத்தாவுக்கு ருத்ரன் கூறியதோ பேசியதோ புரிந்தும் புரியாமலும் இருக்கும் மனநிலையில் இருந்தாள். </p>
<p>முன்பு ருத்ரனே, 'என்ன சத்ரியன் சொல்லி தந்தானா</p>
<p>யாரிடம் எப்படி பேசணும் சமாளிக்கணும்'னு என்று கூறுவான். அதில் ஒரு ஏளனம் கேலியும் இகழ்ச்சியும் இருக்கும். இன்றும் அதே வார்த்தை ஆனால் சில முன்னும் பின்னும் வார்த்தை கனிந்து கூறுகின்றான்.‌</p>
<p>   ஆனால் ஏதோ பூடகமான உணர்வை வெளிப்படுத்துவதை கவனித்தாள். </p>
<p>  தனக்கு தான் தவறாக தெரிகின்றதா இல்லை எப்படி என்று புரியாமல் திகைத்தாலும், ராயன் வேறு உறங்கவும், குழந்தையை அணைத்துக் கொண்டு, வானத்தை பார்த்தாள். </p>
<p>  "சத்ரியா... ராயன்னு பெயர் வச்சிருக்கேன். உன்னால காப்பாற்றப்பட்ட குழந்தைக்கு இவன் ஒரு நல்ல தலைவனா நின்று வழிநடத்த போறவனாக. பெயர் நல்லாயிருக்கா?' என்று மனதிற்குள் மறுகினாள். </p>
<p>  கார்த்திகா முன்னே வந்து, "ரெம்ப நேரம் வெயில்லயோ, பனியிலயோ நிற்காத. உள்ள போங்க" என்று அதட்ட, அதற்கேற்றவாறு அறைக்குள் அடைக்கலமானாள். </p>
<p>முதல் முறை கார்த்திகா எதிரியின் குழுவிலிருந்து வந்தவளாக இல்லாமல், சத்ரியனுக்காக தங்களை காக்கா வந்திருக்கும் பெண்ணாக இருப்பாளோ என்று யோசித்தாள். ஏனெனில் ஒரு நொடி அதிகமாக வெயிலில் இருந்தாலும் கூட தன்னையும் தன் குழந்தையையும் காத்திடும் முடிவில் பாதுகாக்கின்றாள். </p>
<p>அதனாலோ என்னவோ தயங்கியபடி, 'கா..கார்த்..கார்த்திகா. நீங்க வினோத் அண்ணா மூலமா வேலைக்கு சேர்ந்தவங்களா?" என்றாள். </p>
<p>கார்த்திகாவின் அந்த ஒரு நொடி தடுமாற்றமே, அவள் மனதில் புதிய சந்தேகத்தை ஏற்படுத்தியது. </p>
<p>-தொடரும். </p>
<p>-பிரவீணா தங்கராஜ்</p>
<p>&nbsp;</p>
<p>‌</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>]]></content:encoded>
						                            <category domain="https://onlinetamilnovels.com/community/%e0%ae%a4%e0%ae%95%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%b5%e0%af%8a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-praveena-thangaraj/">தகிக்கும் நிலவொன்று -Praveena Thangaraj</category>                        <dc:creator>Praveena Thangaraj</dc:creator>
                        <guid isPermaLink="true">https://onlinetamilnovels.com/community/%e0%ae%a4%e0%ae%95%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%b5%e0%af%8a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-praveena-thangaraj/%e0%ae%a4%e0%ae%95%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%b5%e0%af%8a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-15/</guid>
                    </item>
				                    <item>
                        <title>தகிக்கும் நிலவொன்று-14</title>
                        <link>https://onlinetamilnovels.com/community/%e0%ae%a4%e0%ae%95%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%b5%e0%af%8a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-praveena-thangaraj/%e0%ae%a4%e0%ae%95%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%b5%e0%af%8a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-14/</link>
                        <pubDate>Fri, 24 Jul 2026 03:48:57 +0000</pubDate>
                        <description><![CDATA[அத்தியாயம்-14
ஷ்ரத்தா இருந்த சிறைப்பிரிவின் பொறுப்பு முழுவதும் கார்த்திகாவிடமே இருந்தது.
அதுவும் இப்போது கைதியாக மட்டுமல்ல. பிறந்த சில நாட்களே ஆன குழந்தையுடன் இருந்த தாயாக என்பதால், அவளது ...]]></description>
                        <content:encoded><![CDATA[<p>அத்தியாயம்-14</p>
<p>ஷ்ரத்தா இருந்த சிறைப்பிரிவின் பொறுப்பு முழுவதும் கார்த்திகாவிடமே இருந்தது.</p>
<p>அதுவும் இப்போது கைதியாக மட்டுமல்ல. பிறந்த சில நாட்களே ஆன குழந்தையுடன் இருந்த தாயாக என்பதால், அவளது கவனம் முழுவதும் ஷ்ரத்தாவையும், குழந்தையையும் சுற்றியே இருந்தது.</p>
<p>இரவானதும் குழந்தை அழ ஆரம்பித்தால், ஷ்ரத்தா வலியால் எழுந்து நிற்கக்கூட தடுமாறுவாள்.</p>
<p>"ஷ்ரத்தா... நீ எழுந்துக்காத" என்று கார்த்திகா உடனே குழந்தையை அவளிடமிருந்து வாங்கிக் கொள்வாள்.</p>
<p>"நான் பார்த்துக்கறேன்." என்று குழந்தையை தோளில் போட்டுக் கொண்டு மெதுவாக தட்டிக் கொடுத்து நடந்தபடியே தூங்க வைப்பாள்.</p>
<p>ஷ்ரத்தாவை மட்டும் மீண்டும் படுக்கையில் படுக்க வைத்து,</p>
<p>கதவை பூட்டி விட்டு,வெளியே குழந்தையுடன் அமர்ந்திருப்பாள்.</p>
<p>குழந்தை நிம்மதியாக உறங்கிய பிறகு தான் மீண்டும் ஷ்ரத்தாவின் அருகில் கொண்டு வந்து படுக்க வைப்பாள்.</p>
<p>அதைப் பார்த்த ஷ்ரத்தாவின் மனம் நெகிழ்ந்தது.</p>
<p>கண்களை மூடியபடி படுத்திருந்தவள். கடந்த சில நாட்களை நினைத்துப் பார்த்தாள்.</p>
<p>யதுநந்தன், ருத்ரன் இருவருமே குழந்தையை கையில் வாங்கிய விதம் இன்னும் கண்முன்னே வந்தது.</p>
<p>அவ்வளவு நேரமும் அந்தச் சிறிய உயிரை ரசித்துக் கொண்டிருந்தனர்.</p>
<p>குழந்தையை காணும் போது இருவரின் முகத்திலும் வன்மம் இல்லை. பகையும் இல்லை. சிரிப்பு மட்டும் இருந்தது. தன்னிடமும் அவர்கள் இருவரும் இதுவரை இல்லாத அளவுக்கு நிதானமாகவே நடந்துகொண்டனர்.</p>
<p>யதுநந்தன் அப்படித்தான். ஆனால்... ருத்ரனின் மாற்றம்தான் அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது.</p>
<p>முன்பெல்லாம் பார்வையில் சந்தேகம், குரலில் முழுவதும் கோபம். இப்போது அதே பார்வையில் வேறோரு அர்த்தம் இருந்தது. அந்தப் பார்வைக்கு அர்த்தம் தேடினாள்.</p>
<p>யதுநந்தனின் பார்வையிலும்... அதே மென்மை. 'இது... என்ன பார்வை?' என்று தனக்குத் தானே கேட்டுக்கொண்டாள்.</p>
<p>பதில் மட்டும் கிடைக்கவில்லை.</p>
<p>கீர்த்தனா ருத்ரனின் தாய் வேறு. சொந்தம் இல்லாதவளாக இருந்தும்... ஒவ்வொரு நொடியும் தாயைப்போல் பார்த்துக் கொண்டார். அதை நினைத்ததும் ஷ்ரத்தாவின் கண்கள் கலங்கின. ஆனால் ஆயிரம் பேர் அருகில் இருந்தாலும் அவளது சத்ரியன் மட்டும் இருந்திருந்தால், அது வேறொரு உலகம். அவன் அருகில் இருந்தாலே,</p>
<p>எந்தப் பிரச்சினையையும் பார்த்து சிரித்திருப்பாள்.</p>
<p>முதல் முதலாக அவனை விட்டு பிரிய வேண்டும் என்று நினைத்தவள். இன்று...</p>
<p>அந்தப் பிரிவையே தாங்க முடியாமல் தவித்தாள். கண்ணீர் அமைதியாக வழிந்தது. அதை கவனித்த கார்த்திகா. "ஷ்ரத்தா." என்று மெதுவாக அழைத்தாள்.</p>
<p>"குழந்தை தூங்கிட்டான்." என்று கூறி அவனை மீண்டும் ஷ்ரத்தாவின் அருகில் படுக்க வைத்தாள்.</p>
<p>குழந்தையின் முகத்தை பார்த்தவள் மெதுவாக அவனது கன்னத்தை வருடினாள்.</p>
<p>சில நொடிகள் கழித்து.. "மேம்..."என்று கார்த்திகாவை அழைத்தாள்.</p>
<p>"சொல்லுங்க." என்றாள் கார்த்திகா. </p>
<p>"நீங்க... இன்னும் வீட்டுக்கே போகலையா?" என்றதும் கார்த்திகா சிரித்தாள்.</p>
<p>"போகணும்.. ஆனா எனக்குன்னு ஒரு வீடு வேணுமே?" என்றாள்.‌</p>
<p>"அப்போ...‌ உங்க குடும்பம்?" என்று கேட்டாள்.</p>
<p>கார்த்திகாவின் முகத்தில் அந்த நொடி ஒரு மெல்லிய மாற்றம் தோன்றியது. ஆனால் உடனே மறைத்துக் கொண்டாள்.</p>
<p>"அதெல்லாம்... ஒரு நாளைக்கு சொல்றேன். அதுக்கு நேரம் வரும்." என்று மட்டும் சொல்லிவிட்டு பேச்சை முடித்தாள்.</p>
<p>அந்த ஒரு பதில் ஷ்ரத்தாவுக்குள் மீண்டும் பழைய எச்சரிக்கையை எழுப்பியது.</p>
<p>'126 குழந்தைகள்...' அந்த எண்ணிக்கை மீண்டும் நினைவுக்கு வந்தது.</p>
<p>இன்னும் அவர்களை தேடிக் கொண்டிருப்பவர்கள் இருக்கிறார்கள்.</p>
<p>அப்படியிருக்க... கார்த்திகா மட்டும் யார்? அவளுக்கும் அந்த ரகசியத்துக்கும் கூட ஏதாவது தொடர்பு இருந்தால்? என்று ஒரு நொடி சந்தேகம் தோன்றியது.</p>
<p>அடுத்த நொடியே மனதில் அலாரம் அடிக்க, மேற்கொண்டு அந்த எண்ணத்தை தள்ளிவிட்டாள். யாரை நம்புவது யாரை நம்ப கூடாதென்று அறியாமல் திணறினாள்‌ </p>
<p>ஒரு நிம்மதியான இரவாக மாறியது. கொசுவலையினுள்...</p>
<p>குழந்தை அமைதியாக உறங்கிக் கொண்டிருந்தான்.</p>
<p>கொசுக்கடி கூட இல்லாமல்... சின்னஞ்சிறு கைகளை விரித்தபடி தூங்கிய அவனை பார்த்துக்கொண்டே</p>
<p>ஷ்ரத்தாவின் மனமும் சற்றே அமைதியானது.</p>
<p>அடுத்தடுத்த நாட்களில், குழந்தையை பார்க்க சிறைக்கைதிகள் பலரும் வந்தனர்.‌ சிறையில் இருந்த பெண் கைதிகள் ஆசையாக</p>
<p>"ஒரு தடவை குழந்தையை கொடுங்க மேடம்." என்று ஆசையுடன் வாங்கி கொஞ்சினர்.</p>
<p>அதைப் பார்த்த கார்த்திகா உடனே தடுத்தாள். "எல்லார் கையிலயும் கொடுக்காதீங்க ஷ்ரத்தா" என்று கடிந்தாள். "ஏதாவது ஆகிடப் போகுது." என்று கண்டித்தாள்.</p>
<p>பிறகு ஷ்ரத்தாவுடன் ஒரே அறையில் இருந்த சில கைதிகளை மட்டும் காட்டி,</p>
<p>"இவங்ககிட்ட மட்டும் கொடுங்க. தீபா, நந்திதா, லட்சுமி இவங்க நம்பிக்கையான கைதிங்க. இதுவும் ஒரு விதமான பாதுகாப்புதான்." என்று விளக்கினாள்.</p>
<p>அதன் பிறகுதான் ஷ்ரத்தாவும் விழிப்புடன் இருக்க ஆரம்பித்தாள்.</p>
<p>'இங்க கூட யாராவது... என் குழந்தைக்கு ஏதாவது பண்ணிடுவாங்களோ...? சத்ரியன் வாரிசு என்று அழிக்க வந்தால்.' என்ற பயம் வந்தது.</p>
<p>கார்த்திகா கூடயிருந்ததால் அந்த பயம் நீண்ட நேரம் நிலைக்கவில்லை.</p>
<p>இந்த நாட்களில் கீர்த்தனா இரண்டு முறை குழந்தையை பார்க்க வந்தார். குழந்தையை கையில் வாங்கியவர், "இவனை பார்த்தாலே... வீட்டுக்கு கூட்டிட்டு போயிடணும்னு தோணுது." என்று சிரித்தார்.</p>
<p>  "என்னோட இருக்கணும்னு அவனுக்கும் விதிம்மா" என்றாள் ஷ்ரத்தா.   </p>
<p>  "பெயர் யோசிச்சிட்டியா ஷ்ரத்தா?" என்று கேட்க, கார்த்திகாவோ "அதெல்லாம் முப்பதாம் நாளில் அம்சமா வச்சிடலாம். வளைகாப்பு மாதிரி இந்த முறை வச்சிட்டா போச்சு" என்றதும், ஷ்ரத்தாவோ "கார்த்திகா... என் பேங்க் பேலன்ஸ்ல யதுநந்தன் சாரை பணத்தை எடுக்க சொல்லிட்டு, அன்னிக்கு கைதிகளுக்கு பிரியாணி போடணும். என் செலவுல பண்ணுவோம்" என்றதும், "யதுநந்தன் சாரிடம் அப்ப பேசிடலாம்" என்றாள் கார்த்திகா. </p>
<p>  கீர்த்தனாவோ "ம்ம்... அப்ப அதுவரை பொடி பையன்னு கூப்பிடவா" என்று சிரித்தார். </p>
<p>  ஷ்ரத்தாவும் அப்படியே அழைக்க போவதாக கூறினாள்.</p>
<p>  கீர்த்தனா சென்றப்பின்  யதுநந்தனிடம் கார்த்திகா ஷ்ரத்தாவின் விருப்பத்தை தெரிவித்தாள். </p>
<p>யதுநந்தனும் "பெயரை மட்டும் ஷ்ரத்தாவை முடிவெடுக்க சொல்லுங்க. குட்டி பையன் பெயர் சூட்டுவிழா அப்ப சமையல் வினியோகிச்சிடலாம் அதற்கான பார்மாலிடிஸ் பண்ணிடுவோம்" என்றான். </p>
<p>   அதற்குபின் யதுநந்தன் இரண்டு முறை சிறைக்கு வந்து குழந்தையையும் ஷ்ரத்தாவையும் பார்த்து பேசி திரும்பினான். ஷ்ரத்தா வினோத்தையும் ஹரிணியையும் அன்று வந்து கலந்துக்க கொள்ளும் விதமாக தன்னை காண மட்டும் வரக்கூறினாள். </p>
<p>யதுநந்தனோ ஹரிணியிடம் வினோத்தை பற்றி கேட்டு வைக்க, அவளோ வினோத் பற்றி மழுப்பலாகவே சாட்டில் தெரிவித்தாள். </p>
<p>   யதுநந்தன் வீடியோ காலில் பிடித்து, குறுட்டுத்தனமாக 'வினோத்துக்கு என்னங்க ஆச்சு? ஏதாவது மறைக்கறிங்களா?' என்று கூட கேட்டுவிட்டான். </p>
<p>  ஹரிணி உடைந்து அழதவள் சட்டென வீடியோவையும் அமர்த்திட, யதுநந்தன் குழம்பினான். அதை ஷ்ரத்தாவிடம் தெரிவிக்கவும் அஞ்சினான்.‌</p>
<p>ஷ்ரத்தாவுக்கு இருக்கும் ஒரே உறவாக வினோத் என்று நம்பியிருக்க, ஏதோ அசம்பாவிதம் நிகழ்வதை கண்டு, யதுநந்தன் வெறும் சாதாரண நலன் விசாரிப்புடன் பேசியதாக தெரிவித்து வந்தான். </p>
<p>  அதிலும் ஷ்ரத்தாவிடம் இந்த தாய்மை கோலம், பூரிப்பு என்று இருக்க வினோத் பற்றி ஒன்றும் பாதியுமாக தெரிந்து கூறுவதை மறைத்துவிட்டான்</p>
<p>இதில் ருத்ரன் ஷ்ரத்தாவை காண வரவில்லை. அவன் வேண்டுமென்றே வரவில்லை. தனக்குள் பிறந்திருந்த அந்தப் புதிய உணர்வுக்கு ஷ்ரத்தா மீது பரிதாபமா? ஆசையா? காதலா? காமமா? என்று அவனுக்கே புரியவில்லை. அந்தக் குழப்பத்தோடு ஷ்ரத்தாவை சந்திக்க பிடிக்காமல், தானாகவே விலகி நிற்க முயன்றான்.</p>
<p>  ஓரளவு விலகியும் இருந்தான். அதற்கேற்றது போல புது கேஸ் பல பிடிப்பட்டது. </p>
<p>   இதில் ஸ்டெல்லாவை வேறு தேடினான்.‌ லாயர் திவாகர் இறந்தப்பொழுது ஸ்டெல்லா கூடவேயிருந்திருக்கின்றாள். நிரோஷ் புட் பாய்ஸனால் அனுமதிக்கப்பட்ட மருத்துவமனையில் ஸ்டெல்லா சத்ரியன் பேசியதாக கூறியதும், அதன் பின் ஸ்டெல்லா தன் மகள் காணாமல் போனதும் நேராக சத்ரியன் இல்லாத போது காண சென்று திரும்பி வந்ததும் அறிந்திருக்க, ஸ்டெல்லாவின் மகள் ஐரீன் காணாமல் போன விவாகாரம் பதிவான ஸ்டேஷனில் நேரில் சென்று விவரம் வேறு கேட்க, "சார் அது பெரிய விவகாரம். அதுல நாம தலையிட முடியாது.' என்ற பதில் வந்தது. </p>
<p>  கூடுதலாக 'இப்படி தான் சார் சத்ரியனோட பி.ஏ யோகேஷ் வந்து டீட்டெயில் கேட்டார்.  அப்பறம் டீட்டெயில் எல்லாம் கேட்டுட்டு போயிட்டார்." என்று கூறினார்கள். </p>
<p>  யோகேஷ் எதுக்கு அதை விசாரிக்கணும்?" என்று கேட்க 'தெரியலை சார்." என்றார்கள்.</p>
<p>ருத்ரனோ திகிலுடன் "சத்ரியன் சைல்ட் கிட்னாப்பிங் செய்திருக்கானா?" என்று கேட்க, "சார்... சத்ரியன் அவனோட மோதறவங்க உயிரை தான் எடுப்பாரே தவிர, தேவையில்லாம அடுத்தவங்க உயிரோட விளையாடி பணம் சம்பாதிக்க மாட்டார்" என்று கறாராக கூறினான்.‌</p>
<p>  ''இதெல்லாம் தென்கிழங்கு ஆசிய தீவுகளில் இருக்கறவங்க செய்யற பிசினஸ் சார். வோர்ட் லெவல்ல... நம்ம டிபார்ட்மெண்ட் மோப்பம் பிடிச்சி போனவங்க ஒன்னு பணம் வாங்கிட்டு வருவாங்க. இல்லை பிணமா கிடைப்பாங்க." என்று கூற ருத்ரனுக்கு குழப்பமானது. அதில் குழப்பம் நீளவும், அதை பற்றி அதிகம் நோண்ட ஆரம்பித்தான்</p>
<p>   ருத்ரன் மூளையோ ஸ்டெல்லா ஷ்ரத்தாவோட அப்பா டெத் அப்ப ஆம்புலன்ஸில இருக்கா. அவளை நிரோஷ் சேர்த்த ஹாஸ்பிடல்ல சந்திச்சு சத்ரியனோட பேசியிருக்கா. அடுத்த இரண்டாவது நாளே ஆதிகேசவ் நிர்மல் இறந்திருக்காங்க. </p>
<p>  சோ... ஸ்டெல்லா அப்ப ஆதிகேசவ் மூலமா திவாகர் இறந்ததை சொல்லியிருக்கணும். பட்.. அவங்க ஐரீன் குழந்தை காணாம போனதும் சத்ரியனை ஏன் தேடி வர்றாங்க. அப்ப.. அப்ப.. போலீஸால முடியலை என்றதும் சத்ரியனிடம் உதவி கேட்டிருக்கலாமோ? </p>
<p>   ஷ்ரத்தா அன்னிக்கு பிரசவ வலியோட ஏதோ சொன்னாளே... ஐரீன் ஸ்டெல்லாவை பார்த்தா கேளு. சத்ரியனை கடவுளா கும்பிடுவாங்கனு‌ அப்ப... சத்ரியன் ஒரு வருஷத்துக்கு மேலாக அந்த கேங்கல எப்படியோ போய் குழந்தையை மீட்டிருக்கணும். பட் 126 குழந்தை.? என்றவனுக்கு பளிச்சிட்டது. </p>
<p>  அப்ப... அந்த போராட்டத்தில 126 குழந்தைகளை காப்பாத்தியிருந்தா? அந்த கேங்க சத்ரியனை சும்மா விடுவாங்களா?' என்று யோசிக்க ருத்ரனுக்கு வேர்த்துவிட்டது. சத்ரியனை கொன்றதா சொல்லிட்டு தண்டனை அனுபவிக்கற ஷ்ரத்தா, ஒரு வேளை கொல்லாம அது டிராமாவா இருந்து, சத்ரியன் அந்த 126 குழந்தைகளை காப்பாற்ற அவனோட பிரைவேட் கப்பல்ல பயணிச்சிருந்தா? அந்த கப்பல் தான் பிளாஸ்ட் ஆகியிருந்தது.' என்று மீண்டும் அதேயிடத்துக்கு வந்து நின்றான். </p>
<p>  'அப்ப... ஷ்ரத்தா சத்ரியனை விரும்பி மணந்து அவனில்லாம வாழற. அதனால தான் சத்ரகயனை பத்தி ஏதாவது தப்பா சொன்னாலும் உடனே கோபப்படறா. 'என்ன மாதிரி மனசுல பிக்ஸ் ஆகியிருக்கான். அவ மனசுல இருந்து சத்ரியன் நினைவை அழிப்பது கஷ்டம் தான் ருத்ரன்' என்று மனசாட்சி எடுத்துரைத்தது. </p>
<p>   அதனால் இப்பொழுது எல்லாம் சத்ரியன் உயிரோடு இருக்கின்றானா இல்லையா என்ற வேட்டைக்கு மூடுவிழா போட்டுவிட்டான். பத்திரிக்கையாளராக நடித்த போலீஸ் டிரைவர் சேகரோ சத்ரியன் தேடும் கூட்டத்தில் இருப்பவனிடம் "சார்.. சத்ரியன் உயிரோட இருக்கானா இல்லையானு நாம ருத்ரனை பாலோவ் பண்ணினா. அவன் உங்க மடியிலயே கை வைக்க பார்க்கறான். சைல்ட் கிட்னாப் கேஸை பத்தி விசாரிக்கறான்" என்றான்.</p>
<p>"யூ இடியட்.. அவன் எங்களை பத்தி விசாரிக்கறான் என்றாலே சத்ரியனை பத்தி தான் விசாரிக்கறான். சத்ரியன் உயிரோட இருக்கானா இல்லையானு விரைவில் கண்டுபிடிச்சிடுவான். மேபீ.. எங்களை ஸ்மெல் பண்ண நினைக்கலாம். ஆனா தனியொரு போலீஸா அவனால ஒன்னும் கிழிக்க முடியாது. அது அவனுக்கும் தெரியும். அதனால அது பெரிய மேட்டர் இல்லை. சத்ரியன் இருக்கானா இல்லையா.. அந்த பதிலை மட்டும் தேடி தரட்டும். அப்பறம் 126 குழந்தைங்க டீட்டெயில் கிடைச்சாலும் வேண்டும்." என்றான்.‌</p>
<p>  "சார் வினோத் என்ன ஆனான்." என்று கேட்க, "டேய்... நான் கேட்கறதுக்கு தான் நீ பதில் தரணும். நீ திரும்ப கேள்வி கேட்க கூடாது. இது உனக்குன்னு இல்லை. எனக்கும் அதே விதி தான். எனக்கு மேலயிருக்கறவன் பதில் சொல்லமாட்டான்." என்று தெரிவிக்க மறுபுறம் வாங்கிய காசை தாண்டி வினாத்தொடுத்து அமைதியானான் சேகர்.‌</p>
<p>   "நீ மட்டுமில்லை... ருத்ரன் ஷ்ரத்தாவை கண்கானிக்கற நம்ம ஆட்களுக்கும் இதே பதில் தான். </p>
<p>  யாருக்காவது சத்ரியன் பற்றியோ குழந்தைகள் பற்றியோ விவரம் தெரிந்து தகவல் தர்றவங்களுக்கு ஒரு பிளாட் பம்பர் பரிசு. அது நீயா இருந்தா சந்தோஷப்படு." என்றான்.‌</p>
<p>"சரிங்க சார் சரிங்க" என்று அணைத்துவிட்டு சொந்தமாய் வீடு கிடைத்தால் நன்றாக இருக்குமென்ற கனவுக்குள் மூழ்கியிருந்தான் பத்திரிக்கையாளர் வேடமிட்டு வந்த போலீஸ் சேகர். </p>
<p>     'ம்ம்... நாமும் ருத்ரனுக்கு காரோட்டிட்டு இருக்கோம். இதுல ருத்ரனே பத்திரிக்கையாளரா நடிக்க கூப்பிட்டு ஷ்ரத்தாவை வேற மீட் பண்ண வச்சார். அந்த பொண்ணு சத்ரியனை பற்றி வாயை திறக்கும்னு பார்த்தா செய்யலை. சரி ருத்ரனாவது பெத்த அப்பனை கொன்றவங்களை கண்டுபிடிக்க ராவு பகலா தேடி சத்ரியனை பத்தி தெரிந்து நம்மிடம் சொல்லவோ, இல்லை போற இடம் சந்தேகப்பட்டா சொல்லலாம்னா அதுவும் இல்லை. போலீஸ்காரணுக்கு காரோட்டி எப்ப வீடு வாங்க. சத்ரியா.. எங்கப்பா இருக்க? இருக்கியா செத்துட்டியா?</p>
<p>  இங்க சில நாய்ங்க செத்தாலும் பிணத்தை தேடி ஆராயற கூட்டத்துல வேட்டைக்காரங்க போல உன்னை தேடிட்டு இருக்காங்க தெரியுமா? தெரியாதா?  </p>
<p>  இல்லை சாகாம நீயே வேட்டையாடறியா? இதுல என்னை மாதிரி எவன் எவளுங்க இங்க சுத்தறாங்களோ? உன் பொண்டாட்டி பிள்ளைங்க கூட' என்று புலம்பியபடி, நடையை கட்டினார். </p>
<p>   -தொடரும். </p>
<p>-பிரவீணா தங்கராஜ்</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>]]></content:encoded>
						                            <category domain="https://onlinetamilnovels.com/community/%e0%ae%a4%e0%ae%95%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%b5%e0%af%8a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-praveena-thangaraj/">தகிக்கும் நிலவொன்று -Praveena Thangaraj</category>                        <dc:creator>Praveena Thangaraj</dc:creator>
                        <guid isPermaLink="true">https://onlinetamilnovels.com/community/%e0%ae%a4%e0%ae%95%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%b5%e0%af%8a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-praveena-thangaraj/%e0%ae%a4%e0%ae%95%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%b5%e0%af%8a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-14/</guid>
                    </item>
				                    <item>
                        <title>தகிக்கும் நிலவொன்று-13</title>
                        <link>https://onlinetamilnovels.com/community/%e0%ae%a4%e0%ae%95%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%b5%e0%af%8a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-praveena-thangaraj/%e0%ae%a4%e0%ae%95%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%b5%e0%af%8a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-13/</link>
                        <pubDate>Thu, 23 Jul 2026 03:54:48 +0000</pubDate>
                        <description><![CDATA[அத்தியாயம்-13 
கீர்த்தனா இந்த நான்கு நாளில் மருத்துவமனையிலேயே இருந்து ஷ்ரத்தாவையும் குழந்தையையும் பார்த்துக் கொண்டார்.
குழந்தைக்கு டயப்பர், பால் பாட்டில், துணிகள், ஷ்ரத்தாவுக்கு தேவையான பொ...]]></description>
                        <content:encoded><![CDATA[<p>அத்தியாயம்-13 </p>
<p>கீர்த்தனா இந்த நான்கு நாளில் மருத்துவமனையிலேயே இருந்து ஷ்ரத்தாவையும் குழந்தையையும் பார்த்துக் கொண்டார்.</p>
<p>குழந்தைக்கு டயப்பர், பால் பாட்டில், துணிகள், ஷ்ரத்தாவுக்கு தேவையான பொருட்கள் என ஏதாவது தேவைப்பட்டாலே, "ருத்ரா... இதையும் வாங்கிட்டு வா." என்று கூறி வாங்கிடுவார்.‌</p>
<p>கீர்த்தனா சொல்லவும் மறுப்பே இல்லாமல் வாங்கி வந்து வைத்தான் ருத்ரன்.</p>
<p>அதை கவனித்த ஷ்ரத்தா, "அம்மா... யதுநந்தன் சார்கிட்ட சொல்லியிருக்கலாமே. எதுக்கு இவரை அலைய விடுறீங்க? இல்லைன்னா.. என் கார்ட் இருக்கும். நான் பின் நம்பர் சொல்லறேன். அவரை யூஸ் பண்ண சொல்லுங்க" என்று மெதுவாகக் கேட்டாள்.</p>
<p>அதற்கு முன்பே ருத்ரன் கையில் இருந்த பையை மேசையில் வைத்துவிட்டு, "பரவாயில்லை... உங்க லாயர் சார் தனியா வாங்கிட்டு வர்றாரு.</p>
<p>எங்கம்மா கேட்டத நான் வாங்கிட்டு வந்தேன்." என்றான்.</p>
<p>ஷ்ரத்தா உடனே முகத்தைத் திருப்பி கண்களை மூடிக் கொண்டாள்.</p>
<p>   அதைப் பார்த்த கீர்த்தனாவோ"ருத்ரா... நீ உன் வேலையை பாரு." என்று அதட்டினார்.</p>
<p>ருத்ரன் எதுவும் பேசவில்லை. ஷ்ரத்தாவை புலியை போல நோட்டவிட்டபடி சென்றான்.‌</p>
<p>அதே நேரம் யதுநந்தனும் வெளியிலிருந்து உள்ளே வந்தான். அவன் கையிலும் இரண்டு பெரிய பைகள். "இதெல்லாம் குழந்தைக்கு.. இதுல டிரஸ், பவுடர், ஆயில்... இதுல ஷ்ரத்தாவுக்கு தேவையானது." என்று நீட்டினான்.</p>
<p>அதைப் பார்த்த கார்த்திகா சிரித்தாள். "என்ன சார்...</p>
<p>ரெண்டு பேரும் போட்டி போட்டுக்கிட்டு வாங்கிட்டு வர்றீங்களே!" என்றாள்.</p>
<p>ருத்ரன் உடனே, "ஹலோ கார்த்திகா... நான் எங்கம்மா சொன்னதை வாங்கிட்டு வந்தேன்." என்றான்.</p>
<p>யதுநந்தன் சிரித்தபடி, ''நான்... எங்க லாயர் திவாகர் சாரோட பொண்ணுக்கு உரிமையா வாங்கிட்டு வந்தேன்." என்றான்.</p>
<p>'உரிமை...' அந்த ஒரு வார்த்தை... ருத்ரனின் காதில் மட்டும் தனியாக அமிலம் போல ஒலித்தது. அவன் முகம் இறுகியது.</p>
<p>ஒரு வார்த்தை கூட பேசாமல் வெளியே நடந்தான். மருத்துவமனை வராண்டாவில் வந்து நின்றவன், இரு கைகளையும் பின்னால் கட்டிக் கொண்டான்.</p>
<p>'உரிமையா...? அவனுக்கு என்ன உரிமை... வேண்டி கிடக்கு' என்று மனம் அனத்தியது.</p>
<p>   அடுத்த நொடியே, 'அவள்கிட்ட உரிமையா இருக்க வேண்டியது... நான் தானே...' என்ற எண்ணம் மின்னல் போல உள்ளே தோன்றியது. அடுத்த நொடியே "ச்சே..."என்று தலையை உலுக்கியவன், 'என்ன நினைக்கிறேன்' என்று தன்னைத் தானே கடிந்துக் கொண்டான். ஆனால் அந்த எண்ணம் மனதை விட்டு போகவில்லை. மாறாக... இதயத்தில் வேர் பிடிக்க ஆரம்பித்தது.</p>
<p>'ஒருவேளை...‌எனக்கு... ஷ்ரத்தா மேல... சாப்ட் கார்னர் வந்துடுச்சா? என்று அவன் கண்கள் மெதுவாக விரிந்தன.</p>
<p>இதுவரை எந்த பெண்ணையும் அந்த பார்வையில் பார்த்ததில்லை. காதலிக்க வேண்டும் என்ற எண்ணமே வந்ததில்லை.</p>
<p>இப்போது ஷ்ரத்தாவை நினைத்தாலே ஏன் மனம் வேகமாக துடிக்கிறது?</p>
<p>ஏன்... அவளைப் பார்க்க தினமும் ஏதாவது காரணம் தேடுகிறேன்? ஏன்... அவள் அழுதால் மனசு கஷ்டப்படுது? ஏன்... அன்று அவளுக்கு வலி வந்ததற்கு நான் தான் காரணமோ என்று குற்றவுணர்ச்சி தோன்றினாலும், அவளை அள்ளிக்கொண்டு ஓடி வந்தேன்? ருத்ரனின் மனதில் உதித்த கேள்விகளுக்கு எல்லாமே ஒரே பதிலை நோக்கித்தான் போய்க் கொண்டிருந்தது.</p>
<p>'இல்ல..' என்று மீண்டும் மறுத்தான்.‌'அவ.. ஒரு விதவை." என்ற எண்ணம் வந்தது.</p>
<p>அடுத்த நொடியே 'அப்படியிருந்தா என்ன? உலகத்துக்கு தான் சத்ரியன் செத்துட்டான். அவனைக் கொன்னது ஷ்ரத்தா தான். </p>
<p>  நான் போலீஸ்காரன்.. கணவனை இழந்தவளை, நான் ஏன்... அவளை நேசிக்கக் கூடாது?' என்ற விபரீதமான எண்ணம் மனசாட்சியால் ஆதரவு கரம் எழுப்பி உள்ளே குரல் எழுப்பியது.</p>
<p>ருத்ரனே திடுக்கிட்டான். 'இல்ல... இது தப்பு..." என்று சொல்லிக் கொண்டாலும் அவன் இதயம் அமைதியாக இல்லை.</p>
<p>அப்போது மனம் இன்னொரு கேள்வி கேட்டது. 'அப்படின்னா வாரம் வாரம் ஏன் ஷ்ரத்தாவை பார்க்க வந்த? அதுவும் காரணம் ஏதாவது பாக்கெட்லயே வச்சிட்டு' அந்தக் கேள்விக்கு...</p>
<p>ருத்ரனால் பதில் சொல்ல முடியவில்லை.</p>
<p>சில நிமிடங்கள் கழித்து,</p>
<p>மற்றொரு எண்ணம் தோன்றியது. 'நான் மட்டும் தானா காரணம் ஒன்னை பிடிச்சிட்டு ஷ்ரத்தாவை பார்க்க வர்றேன். யதுநந்தனும் வர்றான். அப்ப அவனுக்கும் ஷ்ரத்தா மேல நேசமிருக்க?' என்று சந்தேகமாக நினைத்தான்.</p>
<p>  அவன் எப்போதும் ஷ்ரத்தாவோட பேசிக்கிட்டே இருப்பான். அவளுக்காக சண்டை போடுறான்.</p>
<p>அன்று கூட அவளுக்காக என்னையே அறைந்தான்.</p>
<p>'ஒருவேளை... அவன் மனசுல என்ன இருக்கும்?' என்று அறிய முடியாமல் நின்றான்.</p>
<p>  ருத்ரனை குழப்பவாதியாக மாற்றிவிட்ட யதுநந்தனோ அறைக்குள் யதுநந்தன் தனது மொபைலை ஷ்ரத்தாவிடம் நீட்டினான்.</p>
<p>"வினோத்தை தொடர்பு கொள்ள முடியலை... ஆனா... ஹரிணிகிட்ட இருந்து மெசேஜ் வந்திருக்கு. அவங்களால் பேச முடியாதுல்ல அதனால மெயில்ல இதை அனுப்பியிருக்காங்க." என்று காட்ட ஷ்ரத்தா திரையைப் பார்த்தாள்.</p>
<p>  *Congratulations... The hunters see you. Be brave Sharattha* என்றிருந்தது.</p>
<p>யதுநந்தனோ "வாழ்த்தும் வார்த்தையும் ஏதாவது கோட் வேர்டா?" ஷ்ரத்தா சில விநாடிகள் யோசித்தாள்.</p>
<p>பிறகு மெதுவாக சிரித்தாள். "ஆமாம் வேட்டைக்காரங்க...</p>
<p>எப்பவும் பார்த்துக்கிட்டே இருப்பாங்க... தைரியமா இருன்னு சொல்றாங்க."</p>
<p>சிறிது இடைவெளிக்குப் பிறகு, "ருத்ரன் என்னை முதல் நாள் பார்த்ததிலிருந்து, இப்ப வரைக்கும் வேட்டைக்காரர் மாதிரி துரத்திக்கிட்டே இருக்காரே. கடைசியா பேசினப்ப சொன்னேன். அதனால இப்படி அனுப்பியிருக்கலாம்" என்றதும்</p>
<p>யதுநந்தனும் 'உண்மை தான்' என்று சிரித்தான். ஆனால் நம்பினானே இல்லையோ அது அவனே அறியேன். </p>
<p>பிறகு அவன் கொண்டு வந்த பைகளை அவள் அருகில் வைத்தான். "நாளைக்கு உன்னை ஜெயிலுக்கு கூட்டிட்டு போயிடுவாங்க. இதுல பேபிக்கு கொசுவலை... விளையாடுற பொம்மை... டிரஸ்...</p>
<p>இதுல மதர் ஹார்லிக்ஸ்... பழங்கள்... இதெல்லாம் உனக்கு."</p>
<p>ஷ்ரத்தாவின் கண்கள் மீண்டும் கலங்கின.</p>
<p>"என்னோட... என் பையனும்... ஜெயிலுக்கு வர்றான்ல சார்... முதல் முறையா... குழந்தை பெத்துட்டு... சிறைக்கு கூட்டிட்டு போறேன்... எந்த தாயும் இப்படி மகனை டே-அவுட் கூட்டிட்டு வந்து போகமாட்டாங்க" என்று உடைந்து அழுதாள்.</p>
<p>யதுநந்தன் அவளது தோளில் நட்புடன் கை வைத்தான். "டோண்ட் வொர்ரி... நாளைக்கு கிளம்புறதுக்கு முன்னாடி...</p>
<p>பக்கத்துல இருக்குற கோவிலுக்கு கூட்டிட்டு போறேன். கார்த்திகாகிட்ட நான் பேசுறேன். அவங்களும்...</p>
<p>இந்த ரெண்டு கான்ஸ்டபிள்ஸும் தான் கூட இருப்பாங்க. ஏற்பாடு பண்ணலாம்." என்றான். </p>
<p>அவனால் முடிந்த உதவியை அவன் செய்ய தயங்குவதில்லை‌.</p>
<p>ஷ்ரத்தாவின் கண்கள் நன்றியால் நிரம்பின.</p>
<p>"தேங்க்ஸ் சார். எங்க அப்பா... உங்களுக்கு என்ன உதவி பண்ணார்னு எனக்கு தெரியாது.</p>
<p>ஆனா... அதுக்காக... நீங்க எனக்கு செய்யற இந்த உதவியை... என் வாழ்நாள் முழுக்க மறக்க மாட்டேன்..." என்று கண்ணீருடன் கூறினாள்.</p>
<p>  இதை சற்று தூரத்திலிருந்து பார்த்த ருத்ரனுக்கு நெஞ்சமெல்லாம் காந்தியது. </p>
<p>  ஷ்ரத்தாவை காணும் பொழுதெல்லாம் கடித்து குதறாத குறயாக கத்திவிட்டு, சந்தேகப்பட்டு, அவளை உலுக்கி எடுத்தப்பின், இதோ.. மனம் அவளை நேசிக்க, அவள் அருகே செல்ல உந்துகிறது. ஆனால் இதற்கு முன் போட்ட எரிமலை வட்டம், இன்று அவனையே காயப்படுத்தவும், துவண்டான். </p>
<p>   ருத்ரனோ அன்னை அருகே வந்து, "ஏம்மா.. குழந்தையை நாம வேண்டுமென்றால் நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு போகலாமா?" என்று கேட்டான்.‌</p>
<p>"உனக்கு என்ன கிறுக்கு பிடிச்சிருக்கா ருத்ரா. பிறந்த குழந்தை அம்மாவிடம் பால் குடிக்குமே. எப்படி கூட்டிட்டு போவ? அதுவுமில்லாம உனக்கும் அவளுக்கும் ஒத்தே வராது. இதுல ஆடு பகை குட்டி உறவாடா?" என்று கேலி செய்தார். </p>
<p>'ஆடு பகைன்னு யார் சொன்னா?' என்றவன் மனமோ யாரிடமாவது அவன் எண்ணத்தை விதைக்க படாத பாடுபட்டான். </p>
<p>  கார்த்திகாவிடம் ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன் கூறிவிட்டு, அடுத்து குழந்தைக்கு தடுப்பூசி போடும் தேதிகளையும் குறித்து தந்து அனுப்பினார். </p>
<p>   அரசாங்க மருத்துவமனையில் சங்கரி தனி அறை தந்ததே அதிசயம். அதற்கும் ஷ்ரத்தா நன்றி தெரிவித்தாள். </p>
<p>  "இன்னோரு குட் நியூஸ் சொல்லட்டா.. இன்னிக்கு தமிழக முதலமைச்சர் நம்ம ஹாஸ்பிடலுக்கு வர்றார். தாய்மாமா மோதிரம் போடப்போறார்.‌ அதையும் வாங்கிட்டு போங்க. பட் அதுவும் சிறைசாலைக்கு போனதும் வாங்கி வச்சிப்பாங்க நீங்க ரிலீஸ் ஆகறப்ப தான் தருவாங்க" என்றார்.‌</p>
<p>"பாருங்களேன்.... ஷ்ரத்தா என்னவோ குழந்தைக்கு யாருமில்லைனு சொன்னிங்க. ஆனா உங்களுக்கு அண்ணாவா... குழந்தைக்கு மாமாவா, ஏன் சத்ரியனுக்கு மச்சானா.. முதல்வரே வர்றார்" என்று கேலியுடன் கூற பேரானந்தம் கொண்டார்.</p>
<p>ஷ்ரத்தா முகமும் கார்த்திகா கூறியதை கேட்டு சிரிக்க முயன்றாள்‌.</p>
<p>    ஷ்ரத்தா முதல் முதலில் வோட்டு போட்டதும் இந்த முதல்வருக்கே. அப்பொழுது சத்ரியன் ஆளுங்கட்சி மறுபடியும் வெற்றி பெறாது. புதுக்கட்சி தான் முன்னிலை வரும் என்று ஜம்பமாக ஹாலில் அமர்ந்து கூறியதும் எண்ணத்தில் வந்து போனது. இத்தனைக்கும் அப்பொழுது இருந்த ஆளாங்கட்சி பணப்பட்டுவாடா எல்லாம் செய்தது. ஷ்ரத்தா வீட்டுக்கு பக்கத்தில் உள்ள ஆன்ட்டி கூட பணத்தை வாங்கி உடைகளை வாங்கி தள்ளினார்.</p>
<p>  உண்மையில் சத்ரியன் தனக்கு குழந்தை பிறந்து மருத்துவமனையில் இருந்தால், முதல்வரும், ஏன் வேறு எவரும் கூட விஐபி வந்து செல்வது சாத்தியமாக நிகழ்ந்திருக்கும். ஆனால் இன்று இந்த செயல்கள் தொடர்வதை கண்டு 'வினோத் அண்ணா அப்ப இங்க தான் எங்கயோ இருக்காரா? இதெல்லாம் ஏற்பாடு செய்வதும் அவரா இருப்பாரா' என்று யோசித்தாள். </p>
<p>  அதன்பின் புயல் வேகத்தில் முதல்வர் வந்து வாழ்த்தி, மோதிரம் போட்டு நெகிழ்ந்து குழந்தைக்கு முத்தமிட்டு மோதிரம் மாட்டி செல்ல அனைத்தும் ஷ்ரத்தா பார்வையிட்டாள். மற்றவர்களுக்கு தான் அது பரவசமான நிகழ்ச்சி. ஷ்ரத்தாவோ அப்பொழுதும் ஏதேதோ எண்ணம் மோத கண்ணீருடன் கடந்தாள்‌.</p>
<p>  முதல்வர் சென்றதும் குழந்தையை அழைத்துக் கொண்டு, யதுநந்தன் காரில் ஏற, ருத்ரன் கோபமாக அவன் புக் செய்த கேப்பை அனுப்பி வைத்தான்.‌</p>
<p>  கீர்த்தனா யதுநந்தனுடன் குழந்தை வைத்து காரில் ஏறியவர் மருத்துவமனைக்கு முன் இருந்த வினாயகர் கோவிலுக்கு சென்று குழந்தையை வைத்து எடுத்தார்.</p>
<p>  யாருமற்ற இவளுக்கு எல்லாமே நீயாக வேண்டுமென்ற வேண்டுதலுடன் மீண்டும் சிறைச்சாலைக்கு புறப்பட்டனர்.‌</p>
<p>  ருத்ரனோ உற்றென்ற முகத்துடன் பைக்கில் முன்னால் சென்றான். </p>
<p>   இதையெல்லாம் அறியாத வினோத் சதிகார கும்பலிடம் சிக்கி கொண்டு, "எந்த குழந்தைங்கடா.. சத்ரியன் சாருக்கு தான் குழந்தை பிறக்க போகுது. நீங்க எந்த குழந்தைங்க கேட்கறிங்கனு தெரியலையே.'' என்று வாயில் ரத்தம் வழிய, கூறினான். </p>
<p>"ஓ.. எந்த குழந்தைங்கனு தெரியாதா? உன் கூட வேலை செய்யற யோகேஷ் எங்கடா? அவனும் அந்த தீவிபத்துல சத்ரியனோட செத்துட்டானா?" என்று கேட்க, "ஏன்.. அன்னிக்கு செய்தியை பார்க்கலையா? போய் மறுபடியும் பாரு. </p>
<p>'கிங்பின் சத்ரியன் இறப்பு'னு கூகுளில் தட்டு வரும்." என்றான் மாறாத நக்கலுடன்.‌</p>
<p>"ஆல்பெர்ட்.. இவன் இப்படி கேட்டா பதில் சொல்ல மாட்டான். அவன் தாங்கி தாங்கி நடக்கற காலை வெட்டிடு." என்றதும், ஆல்பெர்ட் அதற்கான வேலையில் இறங்கினான். </p>
<p>  வினோத் கண்ணில் பயம் தெரிந்தாலும், கண்ணை இறுக மூடிக் கொண்டான்.‌ இனி இறப்பே நிகழ்ந்தாலும், இது அவன் நேசிக்கும் சத்ரியனுக்கான காணிக்கை என்றும்</p>
<p>126 குழந்தைகளின் வாழ்வுமென முடிவுக் கொண்டான்.‌ ஒரு உயிருக்காக 126 உயிரினை காட்டி கொடுக்க இயலாதே. </p>
<p>தொடரும். </p>
<p>பிரவீணா தங்கராஜ்.</p>
<p>  சில இடத்துல சில சம்பவம் தேவையற்றுதுனு நினைக்கலாம். இல்லை..‌ நான் அந்த கேரக்டரை என் கதைக்கு லாஸ்ட்ல உபயோகப்படுத்த முடியுமானு யோசித்து தான் எழுதறேன்.‌ சோ.. என் கதைக்கு தேவைக்கு.... நீங்களா ஹேட்டர்ஸ் லவ்வர்ஸ்னு முடிவுப்பண்ணாதிங்கப்பா. </p>
<p> நமக்கு சிம்புவையே பிடித்தாலும் இஷ்டத்துக்கு பயர் விடமாட்டேன்</p>
<p> எல்லாமே லிமிட் வெர்ஷன் தான். சம்ஜே. (ஏதோ சிம்புவானு சொல்லக்கூடாது. மை பஸ்ட் க்ரஷ்)</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>]]></content:encoded>
						                            <category domain="https://onlinetamilnovels.com/community/%e0%ae%a4%e0%ae%95%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%b5%e0%af%8a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-praveena-thangaraj/">தகிக்கும் நிலவொன்று -Praveena Thangaraj</category>                        <dc:creator>Praveena Thangaraj</dc:creator>
                        <guid isPermaLink="true">https://onlinetamilnovels.com/community/%e0%ae%a4%e0%ae%95%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%b5%e0%af%8a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-praveena-thangaraj/%e0%ae%a4%e0%ae%95%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%b5%e0%af%8a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-13/</guid>
                    </item>
				                    <item>
                        <title>தகிக்கும் நிலவொன்று-12</title>
                        <link>https://onlinetamilnovels.com/community/%e0%ae%a4%e0%ae%95%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%b5%e0%af%8a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-praveena-thangaraj/%e0%ae%a4%e0%ae%95%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%b5%e0%af%8a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-12/</link>
                        <pubDate>Wed, 22 Jul 2026 01:12:34 +0000</pubDate>
                        <description><![CDATA[அத்தியாயம்-12
      லேபர் ரூம் கதவு மூடப்பட்டு கிட்டத்தட்ட ஒரு மணி நேரமாகிவிட்டது.
வெளியே இருந்த ஒவ்வொரு நிமிடமும் ருத்ரனுக்கும், யதுநந்தனுக்கும் ஒரு யுகமாகவே நகர்ந்தது.
ஷ்ரத்தா அழுகையின்...]]></description>
                        <content:encoded><![CDATA[<p>அத்தியாயம்-12</p>
<p>      லேபர் ரூம் கதவு மூடப்பட்டு கிட்டத்தட்ட ஒரு மணி நேரமாகிவிட்டது.</p>
<p>வெளியே இருந்த ஒவ்வொரு நிமிடமும் ருத்ரனுக்கும், யதுநந்தனுக்கும் ஒரு யுகமாகவே நகர்ந்தது.</p>
<p>ஷ்ரத்தா அழுகையின் வலியையும் இருவருமே வெளியேயிருந்து கேட்டனர்.   </p>
<p>  "வலிக்குது டாக்டர்... முடியலை டாக்டர். அம்மா" என்ற வார்த்தை மாற்றி மாற்றி வந்து அழுது கதறுவதை கேட்டு ருத்ரன் காதை மூடிக்கொண்டான்.‌</p>
<p>திடீரென்று குழந்தையின் அழுகுரல் முழு நடைபாதையையும் நிரப்பியது.</p>
<p>அந்த சத்தம் கேட்டவுடன் வெளியே நின்றிருந்த அனைவரும் ஒரே நேரத்தில் கதவைப் பார்த்தனர்.</p>
<p>ருத்ரனின் இதயம் வேகமாக துடித்தது. யதுநந்தனின் முகத்திலும் வேர்வை பூக்கள் பூத்திருக்க, தானாகவே ஒரு நிம்மதி தோன்றியது.</p>
<p>கதவு திறந்ததும் "ஆண் குழந்தை..." என்று புன்னகையுடன் கூறிய செவிலியரை பார்த்ததும், அனைவரின் முகத்திலும் நிம்மதி மலர்ந்தது.</p>
<p>"தாயும்... குழந்தையும் நல்லா இருக்காங்க." அந்த ஒரு வாக்கியம் அனைவரையும் ஆசுவாசப்படுத்தியது.</p>
<p>அதே நேரத்தில் அவசரமாக ஓடிவந்தார் கீர்த்தனா.</p>
<p>"எப்படி இருக்கா அந்த பொண்ணு?" என்று மூச்சு வாங்கியபடி கேட்டார்.</p>
<p>"நல்லா இருக்காங்க மா. ஏன்மா உடனே வரலை." என்றான் ருத்ரன். </p>
<p>  "டேய்... குழந்தை பிறந்தா தேவையானதை வாங்கிட்டு  வர கடைக்கு போனேன்." என்று குழந்தை பிறந்ததும் கையில் வாங்க ஒரு குட்டி மெத்தையை நீட்டினார்.</p>
<p>அதற்குள் செவிலியர் சிறிய வெள்ளைத் துணியில் சுற்றப்பட்டிருந்த குழந்தையை வெளியே கொண்டு வந்தார்.</p>
<p>"யாராவது வாங்கிக்கோங்க..." என்று சொல்லவும், கீர்த்தனா தன்னையறியாமல் இரு கைகளையும் மெத்தையோடு நீட்டினார்.</p>
<p>அந்த சின்னஞ்சிறு உயிர் அவரது கரங்களில் வந்து சேர்ந்தது.</p>
<p>"அம்மாடி... எவ்வளவு அழகா இருக்கான்..." என்று கீர்த்தனா கூறினார். </p>
<p>சிவந்த கன்னங்கள், சிறிய மூக்கு, மூடியிருந்த கண்கள், சுருங்கிய விரல்கள், சின்னஞ்சிறு உதடுகளை சப்பிக்கொண்டே தூங்கிக் கொண்டிருந்தான்.</p>
<p>"கடவுளே..." என்று அவனது நெற்றியில் முத்தமிட்டார் கீர்த்தனா. அருகில் நின்றிருந்த ருத்ரன் மெதுவாக அருகே வந்தான். "அம்மா..." என்றான்.</p>
<p>கீர்த்தனா சிரித்தபடி குழந்தையை அவனிடம் காட்டினார். முதலில் சத்ரியன் குழந்தை என்ற வெறுப்பு கூட இல்லை. குழந்தை என்றால் வெறுக்க தோன்றுமா? </p>
<p>   ருத்ரன் மெதுவாக ஒரு விரலை குழந்தையின் உள்ளங்கையில் வைத்தான்.</p>
<p>அடுத்த நொடியே அந்தச் சின்ன விரல்கள் அவனது விரலை இறுகப் பிடித்துக் கொண்டன.</p>
<p>ருத்ரன் தன்னையறியாமல் சிரித்தான். "அம்மா..." என்று மெதுவாக அன்னையை பார்த்தான்.</p>
<p>மறுபக்கம் நின்றிருந்த யதுநந்தனும் அருகே வந்தான்.</p>
<p>"நானும் குழந்தையை பார்க்கலாமா?" என்று கேட்டான்.</p>
<p>"பாருங்க." என்று கீர்த்தனா குழந்தையை சற்றுத் திருப்பிக் காட்டினார். யதுநந்தன் குழந்தையின் கன்னத்தை மெதுவாக வருடினான்.</p>
<p>"ஹாய் சாம்பியன் உலகத்தை பார்க்க வந்தாச்சா" என்று சிரித்தான். அவன் குரலைக் கேட்டதும் குழந்தை கண்களை சுருக்கி முகத்தை அசைத்தது. </p>
<p>மூவரின் முகத்திலும் தெரியாமல் சிரிப்பு வந்தது.</p>
<p>அந்த நிமிடம் ருத்ரனுக்கும் யதுநந்தனுக்கும் இடையே இருந்த சண்டை கூட மறைந்தது. இருவரின் கவனமும் அந்தச் சிறிய உயிரின் மீதே இருந்தது. </p>
<p>   "ஷ்ரத்தாவை பார்க்கலாமா?" என்று யதுநந்தன் செவிலியரிடம் கேட்டான்.</p>
<p>"ஒருத்தர் மட்டும் வாங்க." என்று கூறியதும், "போயிட்டு வாங்க தம்பி." என்று கீர்த்தனா கூற யதுநந்தன் உள்ளே சென்றான்.</p>
<p>ருத்ரன் அப்படியே கதவின் அருகே நின்றான். உள்ளே போக ஏனோ மனம் வரவில்லை.</p>
<p>'அவளை இஷ்டத்துக்கு கத்த வச்சி மனழுத்தம் தந்தது நான் தான். இப்ப நான் போய் அவளை பார்க்கவும் முடியுமா?' என்ற எண்ணம் மட்டும் மீண்டும் மீண்டும் மனதை அழுத்தியது.</p>
<p>'நான் அப்படி பேசாம இருந்திருந்தா... அவளுக்கு இவ்வளவு சீக்கிரம் வலி வந்திருக்காதோ...?' முதல் முறையாக தான் செய்த செயலுக்காக குற்றவுணர்ச்சி அவனை முழுவதுமாக ஆக்கிரமித்தது.</p>
<p>அறைக்குள் படுக்கையில் சோர்வாக படுத்திருந்தாள் ஷ்ரத்தா. முகம் வாடியிருந்தது.</p>
<p>ஆனால் தாய் ஆன ஒளி மட்டும் முகத்தில் மிளிர்ந்தது.</p>
<p>யதுநந்தன் மெதுவாக அருகே வந்தான். "கங்கிராட்ஸ் ஷ்ரத்தா..." என்று புன்னகைத்தான்.</p>
<p>ஷ்ரத்தாவும் சோர்வாக சிரித்தாள். "தேங்க்ஸ் சார்..."</p>
<p>கொஞ்ச நேரம் முன் தான் கார்த்திகா நடந்ததை முழுவதும் ஷ்ரத்தாவிடம் சொன்னாள்.</p>
<p>ஷ்ரத்தா மயங்கியதும், லேபர் பெயின் வர ஆரம்பிச்சதும் ருத்ரனே தூக்கிட்டு ஓடினாரு.</p>
<p>இங்க வந்ததும், யதுநந்தன் சார் ருத்ரன் சாரை அடிச்சிட்டார். கிட்டதட்ட சண்டை... ஆனா இந்த முறை ருத்ரன் சார் அமைதியா இருந்தார்'  என்று கூறியிருந்தாள்.‌</p>
<p>யதுநந்தன் வாழ்த்தவும், ஷ்ரத்தாவின் கண்கள் அவனை நோக்கின "எனக்காக... அவரை தாக்கியதா கார்த்திகா மேம் சொன்னாங்க" என்றாள். </p>
<p>"அது பெரிய விஷயமில்லைங்க." என்று தவிர்க்க முயன்றான்.</p>
<p>"இல்லை.. இருந்தாலும் தேங்க்யூ." என்றாள் ஷ்ரத்தா.</p>
<p>யதுநந்தன் பேச்சை மாற்றினான். "வினோத்துக்கு சொல்லணும்னு சொன்னிங்களாம். நான் கடந்த ஒரு வாரமா ட்ரை பண்ணிட்டு இருக்கேன். போன் ஸ்விட்ச் ஆஃப்தான் இருக்கு. கான்டாக்ட் பண்ணவே முடியலை." என்றான்.  அந்த வார்த்தை கேட்டதும் ஷ்ரத்தாவின் கண்கள் கலங்கின. கண்ணீர் மெதுவாக வழிந்தது.</p>
<p>"ஷ்ரத்தா..." என்று யதுநந்தன் பதறினான்.</p>
<p>"ஒ... ஒன்னுமில்லை..." என்று முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.</p>
<p>கார்த்திகா அருகில் வந்து, "மேடம்... அவர் வரலன்னா... ஏதாவது முக்கியமான வேலையில இருப்பார். என்னைக்கு என்றாலும்... உங்களை தேடி கண்டிப்பா வருவார்." என்றாள்.</p>
<p>ஷ்ரத்தா மெதுவாக தலையசைத்தாள். அந்த நேரம் கீர்த்தனா குழந்தையை கையில் ஏந்திக்கொண்டு உள்ளே வந்தார். "பாரும்மா உன் பையன். என்ன அழகா ராஜா மாதிரி இருக்கான்." என்று குழந்தையை காட்டினார்.</p>
<p>ஷ்ரத்தாவின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழிந்தது.</p>
<p>ருத்ரனும் அமைதியாக கதவின் அருகே நின்று அந்தக் காட்சியை பார்த்துக் கொண்டிருந்தான்.</p>
<p>"மேடம்... குழந்தைக்கு தடுப்பூசியும் டேக்கும் போடணும்." என்று செவிலியர் கூறவும், "இதோ கொண்டு வர்றேன்." என்று கீர்த்தனா குழந்தையுடன் வெளியே சென்றார்.</p>
<p>யதுநந்தனோ "குழந்தைக்கு என்ன பெயர் வைக்க ஐடியா. ஏதாவது யோசித்திங்களா? இல்லை.. இருந்த நேரமெல்லாம் குழந்தையோட அப்பாவை பத்தின நினைப்பா?" என்றதும் "அவரை மறந்தா தானே நினைக்க... சாரி.. பெயர் எல்லாம் யோசிக்கலை சார்" என்றாள்.‌</p>
<p>   "ஏதாவது நீங்களும் அவரும் பேசி வச்ச மாதிரி ஏதாவது பெயர் இருக்கா?" என்று கேட்க, பல்லை கடித்து, "முதல் முறை அபார்ஷன் ஆனாப்ப சத்ரியன் ரொம்ப உடைஞ்சு போயிட்டார். நான் ரொம்ப வருத்தமா சுத்திட்டு இருந்தப்ப சத்ரியன் தான் ஒரு குழந்தை தானே போச்சு.  இன்னொரு குழந்தை பெத்துக்கலாம்னு சொல்லி, என் மனசை மாத்த ட்ரை பண்ணினார்.‌ அப்ப தான் கப்பல்ல போனோம். பெரிய கப்பல்... நிறைய பேசினோமே தவிர, எந்த பெயரும் குறிப்பிட்டு வச்சி பேசினதில்லை." என்றாள்.‌</p>
<p>அந்த நேரம் யதுநந்தனுக்கு அந்த சந்தேகம் பிறந்தது. சத்ரியன் குழந்தையை அழிக்க வந்தான் நான் அவனை சுட்டு சாகடிச்சிட்டேன்னு சொன்னாளே. இப்பொழுது... முதல்ல கருவுற்ற போது அபார்ஷன் ஆகவும் ரொம்ப சத்ரியன் உடைஞ்சு போயிட்டார்னா என்ன அர்த்தம்?' என்று தேன்றியது. ஆனால் பிரசவம் முடித்து ஓய்ந்தவளிடம், சந்தேகப்பட்டு கேட்டால் நன்றாக இருக்காதே</p>
<p>அதுவுமில்லாமல் இதே காரணத்தால் தானே ருத்ரன் அவளை நோண்டி நோண்டி கேள்வி கேட்டு இம்சை தருவதாக தானே கண்டித்தது. இப்பொழுது அதையே நான் செய்ய இயலாது. எதுவானாலும் பொறுத்திருந்து பார்ப்போமென "நான் வெளியே வெயிட் பண்றேன் ஷ்ரத்தா" என்று கிளம்பினான்.</p>
<p>அறைக்குள்ளிருந்து யதுநந்தன் வரவும், ருத்ரன் அவசரமாக உள்நுழைய முற்பட்டான்</p>
<p>ஷ்ரத்தா மட்டும் இருக்க ருத்ரன் அறைக்குள் சில நொடிகள் அமைதியாக நின்றான்</p>
<p>"சாரி..." என்று முதலில் சொன்னது ருத்ரனே. ஷ்ரத்தா மெதுவாக கண்களைத் திறந்தாள்.</p>
<p>"ப்ளீஸ்... எனக்கு அடிவயிறு சுள்ளுனு இருக்கு. என்னால கத்தக்கூட முடியலை. உடம்புல சில சொல்ல முடியாத இடத்துல தையல் போட்ட மாதிரி இருக்கு.</p>
<p>நீங்க.. என்ன கேட்டாலும்... இப்ப என்னால பதில் சொல்ல முடியாது. அப்படியே சொன்னாலும் என் சத்ரியனை பத்தி எதுவும் என்‌ வாயிலருந்து வெளிய வராது.</p>
<p>சத்ரியன் உயிரோட இருக்கார்னு நினைச்சா... ஆமா... அவர் உயிரோட இருக்கார்... என் மனசுல... உயிரோட இல்லன்னு நினைச்சா ஆமா.. உயிரோட இல்லை... </p>
<p>  இது மனசு சம்பந்தப்பட்ட விஷயம் போதுமா?" என்றாள் </p>
<p>ருத்ரன் அமைதியாக நின்றான்.</p>
<p>  ஷ்ரத்தாவோ "சப்போஸ்.. ஸ்டெல்லா அவங்க பொண்ணு ஐரீனை... ஒருநாள் மீட் பண்ணுவீங்க. அப்ப...</p>
<p>அவங்ககிட்டயே கேளுங்க. என் சத்ரியன் யாருனு." அவளது கண்களில் பெருமை தெரிந்தது. "அவங்க சத்ரியனை கடவுளா கொண்டாடுவாங்க. அதர்வைஸ்.. என் சத்ரியன்.. பொட்ட இல்ல... கோழை இல்ல... அவர்.. அவர்.." சிறிது இடைவெளி விட்டாள். அடங்காத திமிர் அரசன்... தீ லீடர்." அந்த வார்த்தைகள் ருத்ரனுக்குள் ஏதோ ஒன்றை உலுக்கியது.</p>
<p>   அவன் மெதுவாக அங்கும் இங்கும் திரும்பி பார்த்து,  "தண்ணீர் இருந்தா எடுத்து தந்திருப்பேன்.‌ ரொம்ப தம் பிடிச்சி பேசிட்ட.. எமோஷனல் ஸ்பீச்... நான் சத்ரியனை பத்தி இனி உன்னிடம் பேச மாட்டேன். ப்ராமிஸ்.." என்றவன் கதவின் அருகே நின்று திரும்பிப் பார்க்காமல் சொன்னான்.</p>
<p>"முதல்ல உன்னை இந்த நிலைமையில் அதிகம் தொந்தரவுப்படுத்திட்டதுக்கு சாரி கேட்டேன். இப்ப..  கங்கிராட்ஸ்... பையன் பிறந்திருக்கான்ல அதுக்கு." என்றவன் இரண்டு அடிகள் நடந்தவன் மீண்டும் நின்றான்.</p>
<p>"ஆங்.. யதுநந்தனிடம் சொல்லிடு.. இனிமேலும் ஹீரோ மாதிரி சீன் போட்டா. போலீஸ்காரன் அடி எப்படி இருக்கும்னு... ஒருநாள் திருப்பி தருவேன். நான் ஒன்னும் அப்பா இறந்ததும் அவருக்கு பதிலா இங்க போஸ்டிங் வாங்கிட்டு வரலை. முறையா டிரைனிங் முடிச்சி வந்திருக்கறவன்" என்றதும் ஷ்ரத்தா சோர்வாக ஏளனமாக சிரித்தாள்.</p>
<p>கதவைத் திறக்கப் போனவன்... மீண்டும் ஒருமுறை திரும்பிப் பார்த்தான்.</p>
<p>"இன்னொரு விஷயம். நீ... எந்த அசெசரீஸும் போடலைன்னாலும்... அழகாத்தான் இருக்க. நேச்சுரல் ப்யூட்டி" அதைச் சொல்லிவிட்டு,  ஒரு நொடி கூட நிற்காமல் வெளியே சென்றான்.</p>
<p>ஷ்ரத்தா அப்படியே அவன் சென்ற கதவையே பார்த்துக் கொண்டிருந்தாள்.</p>
<p>ருத்ரன் தான் இவ்வளவு பேசியும் அமைதியாக சென்றுவிட்டான். இதில் தன்னை 'அழகான பெண்' என்று பாராட்டி இருக்கிறான்.</p>
<p>  இது நல்லதற்கா? அல்லது ஏன் இப்படி?  என்ற அந்த அதிர்ச்சியிலேயே அவளது விழிகள் மெதுவாக மூடியது. குழந்தை பெற்று எடுத்த அசதியில் நிதானமாக மூச்சை விட்டாள். </p>
<p>   இமை மூடியவளுக்குள், 'வினோத் அண்ணாவுக்கு சொல்லனும். அவரோட பாஸ் சத்ரியனுக்கு ஆண் வாரிசு பிறந்ததை தெரிந்தா சந்தோஷப்படுவாங்க. வினோத் அண்ணாவுக்கு எப்படி தெரிவிக்கறது. சத்ரியா.. உனக்கு ஆண் வாரிசு பிறந்திருக்கு... உனக்கு அதெல்லாம் தெரியுமா?' என்று இ</p>
<p>ல்லாதவனை நினைத்து நினைத்து வருந்தி பல்லை கடித்து இமை மூடினாள். </p>
<p>  அசதியின் காரணமாக சற்று நேரத்திலேயே கண் அயர்ந்தாள்.</p>
<p>-தொடரும். </p>
<p>பிரவீணா தங்கராஜ். </p>
<p>&nbsp;</p>]]></content:encoded>
						                            <category domain="https://onlinetamilnovels.com/community/%e0%ae%a4%e0%ae%95%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%b5%e0%af%8a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-praveena-thangaraj/">தகிக்கும் நிலவொன்று -Praveena Thangaraj</category>                        <dc:creator>Praveena Thangaraj</dc:creator>
                        <guid isPermaLink="true">https://onlinetamilnovels.com/community/%e0%ae%a4%e0%ae%95%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%b5%e0%af%8a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-praveena-thangaraj/%e0%ae%a4%e0%ae%95%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%b5%e0%af%8a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-12/</guid>
                    </item>
				                    <item>
                        <title>தகிக்கும் நிலவொன்று-11</title>
                        <link>https://onlinetamilnovels.com/community/%e0%ae%a4%e0%ae%95%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%b5%e0%af%8a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-praveena-thangaraj/%e0%ae%a4%e0%ae%95%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%b5%e0%af%8a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-11/</link>
                        <pubDate>Tue, 21 Jul 2026 01:15:53 +0000</pubDate>
                        <description><![CDATA[அத்தியாயம்-11
  கொஞ்ச வாரங்களாகவே ஷ்ரத்தாவின் உடலில் சிறுசிறு மாற்றங்கள் ஆரம்பித்திருந்தன.
சில நேரங்களில் வயிறு இறுகுவது போல, அடிவயிற்றில் இழுக்கும் வலி. இப்பொழுது அதிகமாகவே மூச்சு விடவே ச...]]></description>
                        <content:encoded><![CDATA[<p>அத்தியாயம்-11</p>
<p>  கொஞ்ச வாரங்களாகவே ஷ்ரத்தாவின் உடலில் சிறுசிறு மாற்றங்கள் ஆரம்பித்திருந்தன.</p>
<p>சில நேரங்களில் வயிறு இறுகுவது போல, அடிவயிற்றில் இழுக்கும் வலி. இப்பொழுது அதிகமாகவே மூச்சு விடவே சிரமமாக இருப்பது போல உணர்வு.</p>
<p>தினமும் சிறை மருத்துவர்கள் வந்து பரிசோதித்து சென்றனர்.</p>
<p>"குழந்தை எந்த நேரமும் பிறக்கலாம். உடம்புல ஏதாவது வித்தியாசமா தோணுச்சுன்னா உடனே சொல்லணும். தாமதம் பண்ணக்கூடாது." என்று மீண்டும் மீண்டும் எச்சரித்திருந்தார் மகப்பேறு மருத்துவர் சங்கரி.</p>
<p>அதனால் கார்த்திகாவும் அந்த நாட்களில் ஷ்ரத்தாவை தனியாக விடவில்லை.</p>
<p>   ஒரு அதிகாரியாக அல்ல... அக்காவாகவே அவளருகே இருந்தாள்.</p>
<p>அதே நேரம் ருத்ரனின் கை முழுமையாக குணமாகிவிட்டது.</p>
<p>கட்டைப் பிரித்து இரண்டு நாட்களாகிவிட்டதால், பல நாட்களுக்குப் பிறகு மீண்டும் தனது பைக்கை எடுத்தான்.</p>
<p>எஞ்சின் சத்தமே அவனுக்குள் இருந்த கோபத்தை கிளறியது.</p>
<p>நேராக மத்திய சிறைச்சாலையை நோக்கிப் புறப்பட்டான்.</p>
<p>"இன்ஸ்பெக்டர் வந்திருக்கார்." என்று காவலர் சொல்லவும், கார்த்திகாவின் முகம் சுருங்கியது.</p>
<p>'இப்ப எதுக்கு வந்திருக்காரு?' என்று நினைத்தபடியே வெளியே வந்தாள்.</p>
<p>ருத்ரன் பைக்கில் இருந்து இறங்கினான். "ஷ்ரத்தாவை பார்க்கணும்."</p>
<p>"அனுமதி இருக்கா சார்?" என்று கேட்க, "சத்ரியன் கேஸ் சம்மந்தம்மா ஒரு விஷயம் க்ளியர் பண்ண வந்திருக்கேன். கோர்ட் ஆர்ட்ர் இருக்கு" என்றான். </p>
<p>  தன் இஷ்டத்திற்கு வருவதற்கு தடங்கலாக தான் யதுநந்தன் தடையாக இருக்கின்றானே என்ற கடுப்புடன் ஷ்ரத்தாவை சத்திக்க அனுமதியுடன் முறையாக தான் வந்தான்.‌</p>
<p>" சார்... இன்னைக்கு வேண்டாம். அவங்க ஆல்ரெடி ரொம்ப சோர்வா இருக்காங்க" என்றாள். </p>
<p>"அவளை கூப்பிடுங்க. உங்க வேலை என்னவோ அதை மட்டும் பாருங்க. இது என் வேலை." என்றான்‌ அழுத்தமாக.</p>
<p>  அவன் குரலில் மறுப்புக்கு இடமே இல்லை. வேறு வழியில்லாமல் ஷ்ரத்தாவை அழைத்து வந்தார்கள்.</p>
<p>அவள் மெதுவாக வந்து நின்றாள். முகத்தில் கார்த்திகா கூறிய சோர்வே அப்பட்டமாக தெரிந்தது. </p>
<p>வயிறு மேலும் பெரிதாகி இருந்தது. அதை ஒரு நொடி பார்த்த ருத்ரன் உடனே பார்வையை மாற்றிக் கொண்டான்.</p>
<p>"என்ன விஷயம்?" என்று ஷ்ரத்தா அமைதியாக கேட்டாள்.</p>
<p>ருத்ரன் கைகளை கட்டிக்கொண்டான். "நான் நிரோஷையும், ஜானையும் பார்த்தேன்." என்றான்</p>
<p>அவளிடம் எந்த மாற்றமும் இல்லை. அடிக்கடி தன்னை சார்ந்தவர்களையும் இவன் விட்டு விடாமல் தொந்தரவு செய்வதை புரிந்துக் கொண்டான்.‌</p>
<p>"உன் பிரெண்ட்ஸ் கனி... மனிஷா.. அவங்க யாருக்கும் தெரியாத ஒரு ரகசியம் எனக்கு தெரிஞ்சிருச்சு." இந்த முறை ஷ்ரத்தாவின் புருவம் சுருங்கியது.</p>
<p>"என்ன தெரியும்?" என்று சலித்தபடி கேட்க, ருத்ரன் மெதுவாக சிரித்தான்.</p>
<p>"என்ன தெரியும்?" என்று அவள் மீண்டும் கத்தினாள்.</p>
<p>அவன் அவள் கண்களை நேராக பார்த்தான்.</p>
<p>"உங்க அப்பாவை... சத்ரியன் கொல்லலைன்னு தெரியும்." ஒரே நொடியில் ஷ்ரத்தாவின் முகம் வெளிறியது.</p>
<p>"உங்க அப்பாவை யார் கொன்னாங்கன்னும் தெரியும்." அவளது மூச்சு வேகமாயிற்று.</p>
<p>"எதுக்காக கொன்னாங்கன்னும் தெரியும்." அவள் தன்னையறியாமல் இரண்டு அடி பின்னால் சென்றாள்.</p>
<p>"அதுக்கு அப்புறம்..." ருத்ரனின் குரல் இன்னும் அழுத்தமானது. "அவங்களை உன் சத்ரியன் எப்படி கொன்னான்னும் எனக்கு தெரியும்."</p>
<p>"போதும்... உங்க இஷ்டத்துக்கு ஏதாவது பேசாதிங்க" என்று ஷ்ரத்தா கத்தினாள். அவளது கை தானாகவே வயிற்றை பற்றியது.</p>
<p>ருத்ரன் அதையும் கவனித்தான். ஆனால் நிற்கவில்லை.</p>
<p>"சத்ரியன் எங்கடி?" அவன் குரல் கர்ஜனையாக மாறியது.</p>
<p>"அவன் சாகலை. எனக்கு நல்லாவே தெரியும். ஏதோ ஒரு காரணத்துக்காக... பொட்ட மாதிரி ஒளிஞ்சிட்டு இருக்கான். சொல்லு டி.. எங்க இருக்கான்?" என்றதும் ஷ்ரத்தாவின் கண்களில் கண்ணீர் வழிந்தது.</p>
<p>"என்... சத்ரியன்.. ஆம்பளைடா. அசிங்கமா பேசாத" என்றவள் பற்களை கடித்தாள். அந்த ஒரு வார்த்தை ருத்ரனை ஒரு நொடி அமைதியாக்கியது.</p>
<p>அவன் எதிர்பார்த்த பதில் அது இல்லை. அவளது கண்களில் இருந்த கண்ணீர் வேறு அவனை சற்று தள்ளி நிறுத்தியது. ஆனால் அடுத்த நொடியே அவன் மீண்டும் கடினமானான்.</p>
<p>"ஆம்பளன்னு தான் உனக்கு குழந்தையையும் கொடுத்திருக்கானே ஆனா... என்னை பேஸ் பண்ண பயந்த கோழையவன்" என்று ஷ்ரத்தா உடனே நிமிர்ந்தாள்.</p>
<p>"அவர் வீரத்துக்கு என்ன குறைச்சல் கண்ட? அவரை நேர்ல பார்த்தவங்களிடம் கேளு. அவர்கிட்ட அடி வாங்கினவங்களிடம் கேளு. இப்பவும்... அந்த பெயரை கேட்டாலே சிலர் நடுங்குவாங்க." ருத்ரன் அமைதியாக அவளை பார்த்தான்.</p>
<p>உண்மைதான் நிரோஷ், ஜான் இருவருமே சத்ரியன் பெயரை சொன்னாலே கலங்கினார்கள்.</p>
<p>   'ஷ்ரத்தா பக்கம் தங்கள் பார்வை சென்றால், செத்தாலும் திரும்பி வந்து கொன்றுடுவான் சார்.' என்று கூட சொல்லியிருந்தார்கள்.</p>
<p>அந்த நினைவும் ருத்ரனுக்குள் ஓடியது. அவன் மீண்டும் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டான்.</p>
<p>"லுக்.. அவன் புகழ் பாட நான் இங்க வரல. எனக்கு நடந்தது என்னனு தெரியணும். ஸ்டெல்லா எங்கன்னு சொல்லு." ஷ்ரத்தா திடுக்கிட்டாள்.</p>
<p>"ஸ்டெல்லாவும்... சத்ரியனும்... ஒரே நேரத்துல இல்லை. சத்ரியன் இறந்ததா உலகம் நம்புது‌. அப்ப ஸ்டெல்லா..? ஸ்டெல்லாவோட பொண்ணு ஐரீன்" என்றவன் பேச பேச ஷ்ரத்தாவுக்குள் பல பூகம்பம் உண்டானது. </p>
<p>  "சொல்லு ஐரீன் எங்க? அன்னைக்கு நீ ஏதோ உளறின... 126 குழந்தைகள்'ன்னு அதுக்கும் என்ன சம்பந்தம்? சொல்லு." என்றதும் ஷ்ரத்தா பதில் சொல்லவில்லை.</p>
<p>ருத்ரன் தனது மொபைலை எடுத்தான். அதில் இருந்த புகைப்படத்தை அவள் முன் நீட்டினான்.</p>
<p>  "இங்க எங்கம்மா உனக்கு நடத்திய வளைகாப்பு நாளில் எடுத்த படம்.  வெள்ளைச் சேலையில், கண்ணாடி வளையல்கள், நெற்றியில் குங்குமம், காகித மல்லிப்பூ முழு சுமங்கலிக் கோலத்தில் நீயிருக்க ஷ்ரத்தா. இந்த பூ... பொட்டு... ஒன்னையும் நீ தடுக்கல. சத்ரியன் செத்துட்டான்னு நம்புறவ... அதை எல்லாம் தவிர்த்திருப்ப தானே? தெரியாம குங்குமம் பட்டதுன்னாலும்... அதை அழிக்க சொல்லியிருக்கலாம். ஆனா... நீ சிரிச்சு சந்தோஷமா இருந்த. ஏன்?" என்றதும் ஷ்ரத்தா புகைப்படத்தை பார்த்தாள்.</p>
<p>அவளுக்கு எவ்வித வார்த்தைகளும் வரவில்லை.</p>
<p>"உண்மையை சொல்லு. எப்ப பாரு... ஏதாவது கேட்டா.. மயங்கி விழுந்து நடிக்காத." என்று கூற, அந்த வார்த்தை முடிவதற்குள் ஷ்ரத்தா முகம் சுருங்கியது.</p>
<p>அடிவயிற்றை இரு கைகளாலும் அழுத்திப் பிடித்தாள்.</p>
<p>"அம்மா..." என்று கதறினாள்.</p>
<p>உடம்பே நடுங்க ஆரம்பித்தது. "ஷ்ரத்தா!" என்று கார்த்திகா ஓடிவந்தாள்.</p>
<p>ஒரே பார்வையில் அவளுக்கு புரிந்துவிட்டது. ஷ்ரத்தா காலடியில் தண்ணீர் பரவியது.</p>
<p>"சார்! பனிக்குடம் உடைஞ்சிருச்சு!" கார்த்திகாவின் குரல் முழு சிறையிலும் எதிரொலித்தது.</p>
<p>"என்ன சார் பண்ணிட்டீங்க? இன்னைக்கோ நாளைக்கோ குழந்தை பிறக்கற நிலையில இருக்காங்கன்னு நான் சொன்னேன்ல! இப்ப பாருங்க! உடனே ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போகணும். இல்லனா... அவங்க உயிருக்கும் குழந்தைக்கும் ஆபத்தானா அதுக்கு நீங்க தான் பொறுப்பு. பிறகு கடவுளே வந்தாலும் உங்களை காப்பாத்த முடியாது." என்றாள். </p>
<p>ருத்ரனின் முகம் வெளிறிப் போனது ஷ்ரத்தா நிலையால்...</p>
<p>ஒரு நொடி கூட யோசிக்கவில்லை. குனிந்து ஷ்ரத்தாவை இரு கைகளிலும் அள்ளிக்கொண்டான்.</p>
<p>வலியால் அவள் அவன் சட்டையை இறுகப் பற்றிக்கொண்டாள்.</p>
<p>"ஆம்புலன்ஸ்?" என்று ருத்ரன் வேகமாகக் கேட்டான்.</p>
<p>"போன் பண்ணிடறேன் ரெடியா இருக்கும் சார். அதுல போனா நேரா கவர்மெண்ட் ஹாஸ்பிட்டல்ல போயிடலாம்" என்றாள். </p>
<p>"பக்கத்துல பிரைவேட் ஹாஸ்பிடல் இருக்கே... அங்க போக முடியாதா?" என்று ஷ்ரத்தாவை பூவை போல தூக்கியபடி கேட்டான்.‌</p>
<p>"முடியாது சார். கைதிகளுக்கு அரசு மருத்துவமனை மட்டும் தான். பிரைவேட் கூட்டிட்டு போகக்கூடாது. சங்கரி மேடத்துக்கும் தகவல் சொல்லணும்." என்று கார்த்திகா போனை எடுக்க, ருத்ரன் வேகமாக நடந்தான்.</p>
<p>அவனது கைகளில் ஷ்ரத்தா வலியால் துடித்தாள். ஆம்புலன்ஸ் வண்டி வெளியே திறக்கப்பட்டிருந்தது.</p>
<p>உள்ளே ஏற்றும் முன்... அரை மயக்கத்தில் இருந்த ஷ்ரத்தா கண்களை திறந்தாள்.</p>
<p>"யது... யதுநந்தனுக்கு... கால்..." என்றவளுக்கு மூச்சு திணறியது. "வி... வினோத்... அண்ணாவுக்கும்..." என்று சொல்லும் பொழுதே அவளது தலை சாய்ந்தது.</p>
<p>"ஷ்ரத்தா!" என்று கார்த்திகா கத்தினாள். ருத்ரனின் இதயம் வேகமாக துடித்தது.</p>
<p>முதல்முறையாக... தன் விசாரணையை விட... ஷ்ரத்தாவுக்கும் அவள் வயிற்றில் இருந்த குழந்தையும், உயிரோடு இருக்க வேண்டும் என்று மனதார வேண்டிக் கொண்டான்.</p>
<p>ஆம்புலன்ஸ் சைரன் சத்தத்துடன் அரசு மருத்துவமனை வாசலில் நின்றது. "லேபர் கேஸ்... சீக்கிரம்!" என்று கார்த்திகா கத்திக்கொண்டே இறங்கினாள்.</p>
<p>ருத்ரன் ஸ்ட்ரெக்ச்சரில் இருந்த ஷ்ரத்தாவை கவனமாக இறக்கினான்.</p>
<p>மருத்துவர்கள் வேகமாக உள்ளே அழைத்துச் சென்றனர்.</p>
<p>"பேஷண்ட் ரெடி... சங்கரி மேமும் வந்துட்டாங்க" என்று கூறி  லேபர் ரூம் கதவு மூடப்பட்டது.</p>
<p>வெளியே நின்றிருந்த ருத்ரன் முதன்முறையாக தன் கைகள் வெறுமையாகி விட்டதை உணர்ந்தான். அவன் பார்வை அந்த மூடிய கதவிலேயே நின்றது.</p>
<p>அப்போது.. கார்த்திகாவின் மொபைல் ஒலித்தது.</p>
<p>திரையைப் பார்த்தவள் உடனே அழைப்பை ஏற்றாள்.</p>
<p>"ஹலோ சார்... எங்க இருக்கீங்க? ஷ்ரத்தா மேடத்துக்கு லேபர் பெயின் வந்துடுச்சு. அதனால உங்களை கூப்பிட்டாங்க. நீங்க போன் எடுக்கலை." என்றதும் மறுமுனையில் யதுநந்தன் பதட்டமாகக் கேட்டான்.</p>
<p>"சார்... கவர்மெண்ட் ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிட்டு வந்திருக்கோம்." என்றாள்.‌</p>
<p>"என்ன நா..நான் உடனே வர்றேன்" என்றவன் குரலே மாறியது. அழைப்பை துண்டிக்கப்பட்டதும், பத்து நிமிடங்களுக்குள் மருத்துவமனை வாசலில் ஒரு காரில் வேகமாக வந்து நின்றான்.‌</p>
<p>அதில் இருந்து யதுநந்தன் கிட்டத்தட்ட ஓடிக்கொண்டே உள்ளே வந்தான்.</p>
<p>"ஷ்ரத்தா எங்க?" என்று மூச்சு வாங்கியபடி கேட்டான்.</p>
<p>"உள்ளே சார்..." என்று கார்த்திகா சொல்லி முடிப்பதற்குள்... அவனது பார்வை ருத்ரன் மீது விழுந்தது. அடுத்த நொடி 'பளாரென' ஒரறை ருத்ரனின் கன்னத்தில் விழுந்தது.</p>
<p>சுற்றியிருந்தவர்கள் அதிர்ச்சியில் திரும்பிப் பார்த்தனர். ருத்ரன் அசையவில்லை.</p>
<p>யதுநந்தன் அவன் சட்டையைப் பிடித்து இழுத்தான். "உனக்கு அறிவிருக்கா? நிறைமாத கர்ப்பிணின்னு தெரிஞ்சும் வந்து விசாரணை பண்ணிறுக்கியே, கோர்ட் ஆர்டர் வாங்கினதும் போதலையா? இப்ப பாரு! அவ உயிருக்கு ஏதாவது ஆச்சு உன்னை கொன்னுடுவேன்" என்றான்.</p>
<p>ருத்ரன் அமைதியாகவே நின்றான். பதிலே பேசவில்லை.</p>
<p>"என்னடா சாதிச்ச? ஒரு கர்ப்பிணி பெண்ணை அழவச்சு... பயமுறுத்தி... இப்ப இந்த நிலைக்கு கொண்டு வந்திருக்க!" என்று சொல்லிவிட்டு மீண்டும் அவனை தள்ளினான்.</p>
<p>இந்த முறை ருத்ரன் இரண்டு அடி பின்னால் தடுமாறினான். இருந்தும், யதுநந்தனை திருப்பி அடிக்கவில்லை.</p>
<p>கார்த்திகா வேகமாக இருவருக்கும் நடுவே வந்தாள்.</p>
<p>"போதும் சார்! இது ஹாஸ்பிட்டல். நீங்க ரெண்டு பேருமே அரசு அதிகாரிங்க. இப்படி சண்டை போட்டா வெளியே அனுப்பிடுவாங்க." என்றாள்.‌</p>
<p>அந்த நேரமே பாதுகாப்பு காவலர்கள் இருவரும் அருகே வந்தனர். "சார்... சண்டை வேண்டாம்." என்றனர்.‌</p>
<p>      யதுநந்தன் ஆழமாக மூச்சை இழுத்தான். ஆனால் கோபம் இன்னும் குறையவில்லை.</p>
<p>"ஷ்ரத்தா... என்னை கூப்பிடதா தானே சொன்னிங்க. நான் இங்க இருப்பேன்." என்று அழுத்தமாகச் சொன்னான்.</p>
<p>பிறகு ருத்ரனை பார்த்தான்.</p>
<p>"இவனை வேண்டும்னா வெளிய அனுப்புங்க. எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை." என்று யதுநந்தன் பேச,</p>
<p>ருத்ரன் அவனை ஒரு நொடி பார்த்தான்.</p>
<p>எதுவும் பேசாமல் திரும்பி நடந்தான். மருத்துவமனை வராண்டாவின் கடைசி முனையில் சென்று நின்றான்.</p>
<p>தந்தை இறப்பிற்கு பிறகு ஒரு செயலால் செய்வதறியாது, என்ன செய்வது என்று தெரியவில்லை.</p>
<p>கைகளை பின்னால் கட்டிக்கொண்டு தலையை குனிந்து நின்றான்.</p>
<p>லேபர் ரூம் கதவை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தான். அங்கே ஷ்ரத்தா அலறுவதை கேட்க முடிந்தது. </p>
<p>'என்னால தானா...?' என்ற கேள்வி மீண்டும் மீண்டும் ருத்ரன் மனதை குத்தியது.</p>
<p>சில நொடிகள் கழித்து, மெதுவாக மொபைலை எடுத்தான். அதில் "அம்மா" என்ற பெயரை அழுத்தினான்.</p>
<p>இரண்டாவது ரிங்கிலேயே கீர்த்தனா எடுத்தார்.</p>
<p>"ருத்ரா.." என்று அழைக்க, அவன் பேசாமல் நின்றான்.</p>
<p>"என்னடா?" என்றார்.‌</p>
<p>"அம்மா." அவன் குரல் உடைந்தது.</p>
<p>"நீங்க... உடனே கவர்மெண்ட் ஹாஸ்பிட்டல் வாங்க.'' என்று</p>
<p>கீர்த்தனா பதறினார்.</p>
<p>"ஏன்டா? என்னாச்சு?" என்றார்.‌</p>
<p>"ஷ்ரத்தாவுக்கு லேபர் பெயின்...‌ நான் போய் விசாரணை பண்ணிட்டிருந்தேன்... அதுக்குள்ள...‌ அவளுக்கு... பனிக்குடம் உடைஞ்சிடுச்சு."</p>
<p>மறுமுனையில் சில விநாடிகள் அமைதி.</p>
<p>"எந்த ஹாஸ்பிட்டல்?"‌ என்று கீர்த்தனா அவசரமாகக் கேட்டார்.</p>
<p>ருத்ரன் மருத்துவமனையின் பெயரைச் சொன்னான். "நான் இப்பவே கிளம்புறேன்." என்று கூறிவிட்டு அழைப்பை துண்டித்தார். போனை வைத்த கீர்த்தனாவின் கைகள் நடுங்கின.</p>
<p>"கடவுளே.. அந்த பொண்ணுக்கும் குழந்தைக்கும் ஒன்னும் ஆகக்கூடாது"‌என்று  வேண்டிக் கொண்டபடியே அவசரமாக வீட்டை விட்டு வெளியே வவ்தார்.</p>
<p>மருத்துவமனை வராண்டாவில் ருத்ரன் மட்டும் மூடியிருந்த லேபர் ரூம் கதவையே வெறித்துப் பார்த்தபடி அசைவின்றி நின்றிருந்தான்.</p>
<p>தொடரும். </p>
<p>பிரவீணா தங்கராஜ்.</p>
<p>&nbsp;</p>]]></content:encoded>
						                            <category domain="https://onlinetamilnovels.com/community/%e0%ae%a4%e0%ae%95%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%b5%e0%af%8a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-praveena-thangaraj/">தகிக்கும் நிலவொன்று -Praveena Thangaraj</category>                        <dc:creator>Praveena Thangaraj</dc:creator>
                        <guid isPermaLink="true">https://onlinetamilnovels.com/community/%e0%ae%a4%e0%ae%95%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%b5%e0%af%8a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-praveena-thangaraj/%e0%ae%a4%e0%ae%95%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%b5%e0%af%8a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-11/</guid>
                    </item>
				                    <item>
                        <title>தகிக்கும் நிலவொன்று-10</title>
                        <link>https://onlinetamilnovels.com/community/%e0%ae%a4%e0%ae%95%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%b5%e0%af%8a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-praveena-thangaraj/%e0%ae%a4%e0%ae%95%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%b5%e0%af%8a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-10/</link>
                        <pubDate>Mon, 20 Jul 2026 03:42:00 +0000</pubDate>
                        <description><![CDATA[அத்தியாயம்-10
    யதுநந்தனை சந்தித்ததிலிருந்து இரண்டு நாட்கள் கடந்திருந்தது. அந்த இரண்டு நாட்களும் ருத்ரனின் மனம் அமைதியாக இல்லை.
யதுநந்தன் போட்டிருந்த நீதிமன்றத் தடை மற்றும் ஷ்ரத்தாவுக்கு...]]></description>
                        <content:encoded><![CDATA[<p>அத்தியாயம்-10</p>
<p>    யதுநந்தனை சந்தித்ததிலிருந்து இரண்டு நாட்கள் கடந்திருந்தது. அந்த இரண்டு நாட்களும் ருத்ரனின் மனம் அமைதியாக இல்லை.</p>
<p>யதுநந்தன் போட்டிருந்த நீதிமன்றத் தடை மற்றும் ஷ்ரத்தாவுக்கு ஏதாவது என்றால் உடனடியாக வந்து நிற்பதும் அவனுக்கு பிடிக்கவில்லை. </p>
<p>   அது வேறு மனதில் உறுத்த, அன்று ஜான் சென்னை வந்துவிட்டதாக தகவல் கிடைத்தது. அந்த தகவல் கிடைத்த அடுத்த அரை மணி நேரத்திலேயே, ருத்ரன் சேகர் உதவியுடன் காரில் கிளம்பிவிட்டான்.</p>
<p>  ஜானின் வீட்டுக்கு அருகே இருக்கும் காபி ஷாப்பில் சந்திக்க பேசியிருந்தான்.‌ மாலை நேரம் என்பதால், லேசான கூட்டமாக இருந்தது. </p>
<p>    கார் நின்றதும் ருத்ரன் இறங்கினான்.</p>
<p>அவனுடன் டிரைவர் சேகரும் உடன் வந்தான்.</p>
<p>"சார்... இவனும் நிரோஷ் மாதிரி எதுவும் தெரியாதுன்னு சொல்லிட மாட்டானே?" என்று சேகர் பூடகமாக கேட்டான்.</p>
<p>ருத்ரன் சிரிப்பில்லாமல், "தெரியல. ஆனா... ஒவ்வொருத்தனும் ஒரு சின்ன க்ளூவாவது விட்டுட்டு போறான்.‌ அந்த க்ளூவை சேர்க்கறது தான் நம்ம வேலை." என்றான்.</p>
<p>அவர்கள் நேராக கேன்டீனுக்குள் சென்றனர். முன்பே தகவல் கொடுத்திருந்ததால், ஜான் அங்கே காத்திருந்தான். ருத்ரனை பார்த்ததும் எழுந்து நின்றான்.</p>
<p>"குட் ஈவினிங் சார்." என்றான் மரியாதை நிமித்தமாக</p>
<p>"உட்காருங்க." என்றான் ருத்ரன்.</p>
<p>இருவரும் எதிரெதிரே அமர்ந்தனர். சேகரும் அமைதியாக கூடவே உளவு வேலையை செய்யும் நோக்கத்தில் அமர்ந்தான்.</p>
<p>சில நொடிகள் அமைதியாக இருந்தது. ருத்ரன் அவனை கவனித்தான்.</p>
<p>கொஞ்ச வருடங்களுக்கு முன்பு பார்த்த ஜானுக்கும், இப்போது எதிரே அமர்ந்திருந்த ஜானுக்கும் நிறைய வித்தியாசம் இருந்தது.</p>
<p>அப்போது இருந்த பயம் இல்லை. அவசரத்தனம் இல்லை.</p>
<p>பேச்சிலும் ஒரு முதிர்ச்சி தெரிந்தது. அதை உணர்ந்த ருத்ரன், "நீ மாறிட்ட போல..." என்று மெதுவாகச் சொன்னான்.</p>
<p>ஜான் சிரித்தான்.</p>
<p>"காலம் எல்லாரையும் மாத்திடும் சார். என்னையும் மாத்திடுச்சு."</p>
<p>ருத்ரன் தலையசைத்தான்.</p>
<p>"சரி... நேரா விஷயத்துக்கு வர்றேன். எனக்கு ஷ்ரத்தா சத்ரியனைப் பற்றி தெரிஞ்சிக்கணும். நீ அவங்களை பார்த்த முதல் ஒன்னுவிடாம நினைவுலயிருந்து சொல்லு.."</p>
<p>என்றதும், ஜான் ஒரு ஆழ்ந்த மூச்சை இழுத்தான்.</p>
<p>"சார்... இப்போ நினைச்சா எனக்கே வெட்கமா இருக்கு. காலேஜ்ல ஷ்ரத்தாவை முதல் முதலா பார்த்தப்ப, நான் ரொம்ப ராகிங் பண்ணிருக்கேன். அழகாயிருக்கானு நெருங்க நினைச்சு, சத்ரியன் மூலமா சீட் கிடைச்சி வந்தானு தெரியவும் அவளை அவமானப்படுத்திருக்கேன்." என்றான்.‌</p>
<p>சத்ரியனால தான் சீட் கிடைச்சதுனு உனக்கு எப்படி தெரியும்?" என்றான் ருத்ரன்</p>
<p>"எங்க கசின் ஒருத்தனுக்கு அந்த மெடிக்கல் சீட் கிடைக்க பணமெல்லாம் தந்து வச்சான் சார். ஆனா... அந்த சீட் ஷ்ரத்தாவுக்கு கிடைச்சிருச்சு. அதனால ஆரம்பத்துல இருந்தே அவ மேல கோபமாயிருந்தான். அதனால தெரியும்." என்றான்.‌</p>
<p>"கோபமாவா.. ஓகே.. அதுக்கப்புறம்..." அவன் தயங்கினான்.</p>
<p>"சொல்லு." என்று ருத்ரன் அழுத்தமாகக் கூறினான்.</p>
<p>"சத்ரியன் சார் கேஸை... லாயர் திவாகர் வாதாடினதுக்குக் கிடைச்ச பரிசு தான் அந்த சீட்டுன்னு... தெரியாம, நானே கதை கட்டி பேசினேன்."</p>
<p>ருத்ரனின் கண்கள் கூர்மையானது.</p>
<p>"அதாவது... ஷ்ரத்தா... சத்ரியனோட ஆசைக்கு இணங்கினதால தான் சீட் வாங்கினான்னு... காலேஜ் முழுக்க நானே பரப்பினேன் சார்." என்று தலைகுனிந்து சொன்னான்.</p>
<p>ருத்ரனுக்கு கோபம் உண்டானது. "ஒரு பொண்ணை பத்தி அசிங்கமா பேசறதுக்கு முன்ன யோசிக்க மாட்டியா?" என்று கடிய, "சார் அது அப்ப.. அந்த நேரம் விவரம் இல்லை சார். நீங்க சொன்ன மாதிரி  மெச்சூரிட்டி இல்லாம நடந்துக்கிட்டேன்." என்றான். </p>
<p>"அதுக்கப்புறம்... சத்ரியன் கார்டியன்னு தெரிந்தது. நான் அப்படி கேலி கிண்டல் பண்ணியது அவருக்கு தெரியவும், சத்ரியன் சார் என்னை அடிச்சார். </p>
<p>  அடின்னா... சாவே கண்ணுக்கு தெரிஞ்சிடுச்சு சார்... ஏன் அவரை கிங்பின்னு சொல்லறாங்கன்னும், இனி ஷ்ரத்தா விஷயத்துல தலையிடக்கூடாதுன்னும் அன்னிக்கு புரிந்தது." என்றதும், வெயிட்டர் ஒருவர் வந்து "சார்... போலீஸ் வண்டி காபி ஷாப் முன்ன இருக்கு. பார்க்கிங் பண்ணிடுங்க சார். ப்ளீஸ்." என்று கோரிக்கை வைக்க, "சேகர் அதை கவனிங்க" என்று ருத்ரன் அனுப்பிட சேகர் வலுக்கட்டாயமாக எழுந்தான்.  </p>
<p>சேகர் செல்லவும், "சொல்லு" என்றான்.‌</p>
<p>  ஜானோ "அதான் சார்.. அதுக்கப்பறம் ஷ்ரத்தா பக்கமே போகலை. ஆனா நிர்மல் அடிக்கடி வந்து ஷ்ரத்தாவை ஒரு மாதிரி பார்த்தான். அவன் காலேஜ்ல படிக்கலை. ஆனாலும் ஆதிகேசவ் சாரோட ரிலேட்டிவ் என்றதால வருவான். அப்படி வர்றப்ப ஷ்ரத்தாவை கோபமா பார்க்கவும்." என்றதும் ருத்ரன் வெயிட் வெயிட்.. இந்த நிர்மல் ஆதிகேசவ்... பெயரை எங்கயோ கேட்டிருக்கேன்.‌ ஆங்.. அது.." என்று ருத்ரன் சிந்திக்க, "எங்க காலேஜ் ஹாஸ்பிடல் அட்மினிஸ்ரேட்டர் சார். நிர்மல் அவரிடம் பணம் தந்து சீட் கேட்டு அவர் ஏமாற்றியதா இரண்டு பேரும் அடிச்சிட்டு இறந்துட்டதா பேப்பர்ல கூட நியூஸ் வந்துச்சே" என்றதும், ருத்ரனுக்கு நினைவு வந்தது. ஷ்ர்ததா கல்லூரி என்றதும் அதெல்லாம் கூட பார்த்து செய்தியை கத்தரித்து வைத்திருந்தான்.‌</p>
<p>  அந்த கொலை கூட சாதாரணமாக தெரியவில்லை. ஒரு கைதேர்ந்த கொலையாளியின் வண்ணம் அக்கொலையில் இருந்ததே. </p>
<p>  "அப்பறம்.. நிரோஷ் ஹாஸ்பிடல்ல இருந்தப்பிறகு கொஞ்ச நாள்ல இரண்டு பேரும் இறந்துட்டாங்க சார். </p>
<p>  நிர்மல் இறந்ததை சொல்ல நினைச்சு ஷ்ரத்தாவுக்கு கால் பண்ணினேன். அவ 'ஓ.. அப்படியா.'னு கேட்டுட்டு வச்சிட்டா. நான் தான் என்னடா இது இப்படியொரு கொலையானு அதிர்ந்தேன். </p>
<p>  மேபீ.. சத்ரியனோட இருந்ததால கொலை எல்லாம் அவ பார்த்து மூவ் ஆன் ஆகியிருக்கா. அதோட ஷ்ரத்தாவை காலேஜ் முடியவும் நல்லா படினு சொல்லிட்டு போயிட்டேன் சார். </p>
<p>  இப்ப சத்ரியன் சாரையே போட்டு தள்ளிட்டா என்றதும் நம்ப முடியலை சார். அவளுக்கு அவர்னா ரொம்ப பிடிக்கும்" என்றான். </p>
<p>  "இப்ப சிறையில என்ன பண்ணறாளோ? சந்திக்க ஆசையிருக்கு சார். ஆனா சத்ரியன் சார் அடிச்சது தான் நினைவிருக்கு. செத்துப்போன மனுஷன் பிறகு என்‌ ஷ்ரத்தாவை சந்திக்க வந்தியானு உயிரோட வந்தாலும் ஆச்சரியப்படறதுக்கு இல்லை." என்றான்.‌</p>
<p>ருத்ரனுக்கு அந்தப் பேச்சு இனிக்கவில்லை. </p>
<p>  வேறேதும் சொல்ல இல்லை சார்." என்றதும் சேகர் வரவும் சரியாக இருக்க, "ஓகே.. ஆர்டர் செய்த காபியை குடிச்சிட்டா கிளம்பு." என்று கூறிவிட்டு தனக்கு வந்த கோல் காபியை ஒரு மடக்கில் குடித்துவிட்டு எழுந்தான். சேகரும் அதே போல குடித்து ருத்ரனை பின் தொடர்ந்தான். </p>
<p>ஜான் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் ருத்ரனின் மூளையில் சுற்றிக்கொண்டே இருந்தது.</p>
<p>சேகர் "ஏதாவது சொன்னானா சார்" என்று கேட்க "வண்டியை எடுங்க சேகர்" என்று கத்தினான். </p>
<p>  அதிலேயே சேகருக்கு எதுவும் ஆவதற்கு இல்லை என்று புரிந்து கொண்டு வண்டியை இயக்கினான்.‌</p>
<p>ருத்ரனோ 'நிர்மல்... ஆதிகேசவ்...' போனை எடுத்து, எஸ் நோட்டில் எழுதியதில் சிவப்பு வண்ணத்தால் தனித்து காட்டும் விதமாக மாற்றி அடிக்கோடிட்டிருந்தான்.</p>
<p>  அவன் கண்களில் பட்டது. "மருத்துவக் கல்லூரி மாணவன் நிர்மல் மரணம். மெடிக்கல் சீட்டிற்கு பல லட்சத்தை ஆதிகேசவிடம் தந்தும் சீட் கிடைக்காமல், அதே நேரம் பணமும் திரும்ப கிடைக்காமல் கோபத்தில் இருவரது கொலை நிகழ்ந்ததை சிந்தித்தான். </p>
<p>ருத்ரன் புருவம் சுருங்கியது.</p>
<p>"ஒருவேளை..." என்று முணுமுணுத்தவன் மீண்டும் சிந்திக்க ஆரம்பித்தான். ஜான் செல்லியதில் நிர்மல் சீட்டை ஷ்ரத்தாவுக்கு கொடுக்கப்பட்டிருக்க, நிர்மல் கோபமாக கேண்டீனில் சுற்றி ஷ்ரத்தா சாப்பிடும் உணவில் விஷம் கலந்திருந்தால்.... </p>
<p>நிரோஷ் விஷம் கலந்த உணவை சாப்பிட்ட சம்பவம், அதற்குப் பிறகுதான் நிர்மல் இறந்தான்.</p>
<p>அப்படியென்றால் ஷ்ரத்தாவை கொல்ல முயன்றது நிர்மலாக இருந்து, அதை தெரிந்துகொண்ட சத்ரியன் பழிவாங்கினானா?</p>
<p>அப்படியென்றால்... சத்ரியன் ஏன் அதற்கு முன்பே நிர்மலை கொல்லவில்லை?</p>
<p>ருத்ரன் ஆழமாக மூச்சை இழுத்தான்.‌ "இல்ல... ஏதோ மிஸ் ஆகுது." சேகர் காரை ஓட்டிக்கொண்டே,</p>
<p>"என்ன சார்?" என்று கேட்டான்.</p>
<p>  "காவல் நிலையத்துக்கு போ‌" என்றான்</p>
<p>காவல் நிலையம் வந்ததும்,</p>
<p>ருத்ரன் நேராக பழைய கேஸ் கோப்புகளை எடுத்தான். சத்ரியனை கொல்ல துப்பாக்கி சூடு நடந்தது ஏன் ஷ்ரத்தாவுக்கான குறியாக இருக்க கூடாது. அதென்ன ஷ்ரத்தா சேர்ந்த பிறகு கொல்ல துடித்தது? அவள் கல்லூரியில் சேரும் முன் சாகடிக்க திட்டமிட்டிருந்தால்? அப்பொழுது மனிஷாவிடம் விசாரணை செய்த விஷயமும் நினைவு வந்தது. </p>
<p>  திவாகர் இறந்த சில நாளில் ஷ்ரத்தாவை கொல்ல ஆட்கள் வந்து அவள் சத்ரியனிடம் சென்று உதவி கேட்டது. </p>
<p>  அப்படின்னா ஷ்ரத்தா தனியா இருந்தப்பவே கொல்ல முயன்று இருக்காங்க. </p>
<p>  அதுயேன் ஷ்ரத்தாவை கொல்ல.. திவாகரை கொல்ல முயன்றதும் இநாத சீட் பிரச்சனைக்காக இருந்தா?' என்று யோசனை சென்றது. </p>
<p>  தனது தந்தையை கொன்றவனோடு எந்த பெண்ணும் ஆசைக்காதலியாக இருக்க மாட்டாள். அதுவும் ஷ்ரத்தா போன்ற பெண் நிச்சயம் இருக்க மாட்டாள். அதை மீறி சத்ரியன் குழந்தையை ஈன்றெடுக்க துடிக்கின்றாளென்றால், சத்ரியன் அவளது தந்தையை கொன்றுயிருக்க வாய்ப்பில்லை. மாறாக ஆதிகேசவ் நிர்மல் யாராவது, திவாகரை கொன்றியிருந்து, அதன் காரணம் இருவரை கொன்றது சத்ரியனாக இருந்தால், ஷ்ரத்தா அவனோடு இணங்கி நடக்க வாய்ப்புண்டு.</p>
<p>திவாகர் இறந்த மருத்துவமனை. நிரோஷ் அனுமதிக்கப்பட்ட மருத்துவமனை. இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்தவன்,</p>
<p>ஒரே பெயரில் பார்வை நின்றது. இதில் நிரோஷ் உச்சரித்த ஸ்டெல்லா என்ற பெயர்.' ஸ்டெல்லா வேலை செய்த மருத்துவமனைக்கு காவல் நிலையத்தில் உள்ள போன் மூலமாக அழைத்தான். உடனே அந்த மருத்துவமனைக்கு தொடர்பு கொண்டான்.</p>
<p>தன்னை பற்றி அறிமுகம் செய்து "ஸ்டெல்லா நர்ஸிடம் பேசணும்." என்று கேட்டான்.</p>
<p>மறுமுனையில் இருந்த நிர்வாக அதிகாரி போலீஸ் என்றதும் பதிலளித்தார்.</p>
<p>"இல்ல சார்... அவங்க ரொம்ப  மாசமா வேலைக்கு வரலை." என்றதால அவங்களை வேலைவிட்டு எடுத்துட்டோம்." என்றார்.</p>
<p>"ஏன் வரலை?" என்றான்.</p>
<p>"அவங்களோட ஒரே பொண்ணு காணாம போயிட்டா. அதுக்கப்புறம் ரொம்ப மனசு உடைஞ்சு இருந்தாங்க. அப்புறம் திடீர்னு எங்கயோ போயிட்டாங்க. வீட்டுக்கு கூட போனோம். இப்ப வரைக்கும் எந்த தகவலும் இல்லை."</p>
<p>ருத்ரன் நிமிர்ந்து அமர்ந்தான்.</p>
<p>"வீட்டு அட்ரஸ் இருக்கா?"</p>
<p>"இருக்கு சார்." முகவரியை குறித்துக் கொண்டான். வீட்டிற்கு செல்லும் வழி என்பதால, சேகரை வரவேண்டாமென கூறிவிட்டான். </p>
<p>சேகர் எப்பொழுதும் வீடு வரை கொண்டு விடுவான். சில நேரம் இன்று போல நானே போயிடறேன் என்பான் ருத்ரன். அதனால் ருத்ரன் போக கூறியதில் காரணம் கேட்கவில்லை. </p>
<p>அன்று இரவு ஏழு மணி அளவில் ஸ்டெல்லாவின் வீட்டுக்குப் போனான்.</p>
<p>பழைய வீடு பூட்டு போட்டு இருக்கும் என்று எண்ணியதற்கு மாறாக வேறொரு குடும்பம் அங்கே இருந்தது. அவர்களுக்கு ஸ்டெல்லாவை தெரியவில்லை. </p>
<p>  அருகில் இருந்த வீட்டுக்காரரிடம் விசாரித்தான்.</p>
<p>"ஸ்டெல்லா நர்ஸா? பாவம் சார்... நல்ல மனுஷி. ஞாயிறு சர்ச் தவறாம போவாங்க. ஊர்ல யாருக்காவது உதவி வேணும்னாலும் முதல்ல ஓடி வர்றது அவங்கதான். ஆனா... அவங்களோட பொண்ணு ஐரீன் காணாம போனதுக்கப்புறம் வாழ்க்கையே மாறிடுச்சு. உயிரோட நடைப்பிணமா இருந்தது. அதுக்கப்புறம் ஒரு நாள் வீட்டையே பூட்டிட்டு போயிட்டாங்க திரும்ப வரலை. வாடகை வரும்னு பார்த்து பார்த்து, ஸ்டெல்லாவும் தொடர்புக் கொள்ள முடியாம போகவும், ஹவுஸ் ஓனர் வீட்டுல இருந்த சாமானெல்லாம் வெளியே தூக்கிப் போட்டுட்டார். சிலதை அரை விலைக்கு வித்துட்டாரு." ருத்ரன் மெதுவாக கண்களை மூடினான்.</p>
<p> ஆக ஸ்டெல்லா இல்லை.' என்றதும் மெதுவாக நடந்து வந்தான். ஸ்டெல்லா காணாமல் போன நாட்களும், சத்ரியன் இறந்ததாக அறிவிக்கப்பட்ட நாளும் இரண்டுமே கிட்டத்தட்ட ஒன்றாக இருந்தது.</p>
<p>'இது வெறும் தற்செயலா.. இல்ல... இதுக்குள்ள ஏதாவது தொடர்பு இருக்கா?' என்று மனதில் பெரிய கேள்விக்குறி போட்டான்.</p>
<p>   ஏதோ 'ஐரீன் குழந்தை.' என்றதும், ஷ்ரத்தா வாயிலிருந்து உதிர்த்த '126 குழந்தைகள்' என்றதும் தற்போது நெருங்கியது போல ஒரு மாயை. ஆனால் விடை அறிய வேண்டுமாயின் ஷ்ரத்தா வாய் திறக்க வேண்டும். இங்கே அவள் கல்லை திண்றவள் போல அல்லவா தன்னை எரித்து பார்ப்பாளென ஸ்டெல்லாவை தேட நினைத்தான். </p>
<p>---</p>
<p>மறுபக்கம் யதுநந்தன் தனது அலுவலகத்தில் இருந்து தொடர்ந்து வினோத்துக்கு அழைத்துக் கொண்டிருந்தான்.</p>
<p>"The number you are calling is switched off." என்ற குரல் மட்டுமே திரும்பத் திரும்ப ஒலித்தது.</p>
<p>'எங்க போனாங்க.' என்று முணுமுணுத்தவன் கார்த்திகாவுக்கு அழைத்தான்.</p>
<p>"ஷ்ரத்தா கேட்டதுக்காக வினோத்தை தொடர்பு கொள்ள முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கேன். ஆனா... ஒரு தடவைக்கூட லைன்ல கிடைக்கலை." என்றதும், கார்த்திகா அமைதியாகி விட்டாள்.</p>
<p>"பரவாயில்லை சார்.. நீங்களும் கைதி ஷ்ரத்தாவுக்காக ஏதாவது நல்லது செய்ய முயற்சி செய்யறிங்க. ஆனா கடவுள் முடிவெடுக்கணும் சார். பார்ப்போம்.. குழந்தை பிறக்கும் போது வினோத் வரலாம்" என்றாள். </p>
<p>    யதுநந்தனோ ''என்னால முடிந்தவரை கான்டெக் பண்ணிட்டேன் கார்த்திகா. ஏனோ ஷ்ரத்தா கேட்கும் போது அவங்களை சந்திக்க வைக்க ஆசைப்பட்டேன். என்னால முடியலை. பார்ப்போம்.. நீங்க சொன்ன மாதிரி குழந்தை பிறந்தா வருவாங்க. அப்பறம் ஷ்ரத்தாவுக்கு ஏதாவது லேபர் பெயின்னா உடனே கால் பண்ணுங்க. வர்றேன்." என்றான். கார்த்திகாவும் ஓகே சார்"  என்று துண்டித்தாள். </p>
<p>அதை ஷ்ரத்தாவுக்கும் தெரிவித்தாள். ஷ்ரத்தாவோ குழந்தை பிறக்க இன்னும் எத்தனை நாட்கள் உள்ளதென எண்ணி பார்த்தாள்.</p>
<p>-தொடரும். </p>
<p>-பிரவீணா தங்காஜ்.</p>]]></content:encoded>
						                            <category domain="https://onlinetamilnovels.com/community/%e0%ae%a4%e0%ae%95%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%b5%e0%af%8a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-praveena-thangaraj/">தகிக்கும் நிலவொன்று -Praveena Thangaraj</category>                        <dc:creator>Praveena Thangaraj</dc:creator>
                        <guid isPermaLink="true">https://onlinetamilnovels.com/community/%e0%ae%a4%e0%ae%95%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%b5%e0%af%8a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-praveena-thangaraj/%e0%ae%a4%e0%ae%95%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%b5%e0%af%8a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-10/</guid>
                    </item>
				                    <item>
                        <title>தகிக்கும் நிலவொன்று-9</title>
                        <link>https://onlinetamilnovels.com/community/%e0%ae%a4%e0%ae%95%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%b5%e0%af%8a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-praveena-thangaraj/%e0%ae%a4%e0%ae%95%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%b5%e0%af%8a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-9/</link>
                        <pubDate>Sun, 19 Jul 2026 02:59:25 +0000</pubDate>
                        <description><![CDATA[அத்தியாயம்-9
பெண் காவலர்கள், ஜெயிலர், என அனைவரும் ஷ்ரத்தாவை அழைத்து வந்திருந்தனர். அவள் ஏன் எதற்கு என்று குழம்பிய நின்றிருந்த சமயம் கீர்த்தனா முன்னே வந்து நின்றார். 
   ஷ்ரத்தாவை ஆலமரத்தடி...]]></description>
                        <content:encoded><![CDATA[<p>அத்தியாயம்-9</p>
<p>பெண் காவலர்கள், ஜெயிலர், என அனைவரும் ஷ்ரத்தாவை அழைத்து வந்திருந்தனர். அவள் ஏன் எதற்கு என்று குழம்பிய நின்றிருந்த சமயம் கீர்த்தனா முன்னே வந்து நின்றார். </p>
<p>   ஷ்ரத்தாவை ஆலமரத்தடியில் அமர வைத்து, அவளுக்கு முன் வளைகாப்பு விழாவுக்கான உணவும், வளையலும் எடுத்து வைத்தார்.</p>
<p>"அன்னிக்கு சொன்னேன். இன்னிக்கு அதை நிவர்த்தி செய்ய வந்துட்டேன்" என்றதும் ஷ்ரத்தா கீர்த்தனாவை கட்டி முடித்தாள். </p>
<p>   ஜெயிலர் வேடிக்கை பார்க்க, கார்த்திகா கீர்த்தனா கொண்டு வந்த பையை சரிப்பார்த்து, தட்டிலிருந்த பச்சை, சிவப்பு கண்ணாடி வளையல்களை ஒன்றன்பின் ஒன்றாக அடுக்கி வைத்தாள். </p>
<p>  ஐந்து வகை சாதமும் முன்னே வைத்திருக்க, கூடவே சந்தனமும் குங்குமம் விபூதி என்று இருந்ததை எடுத்து வைத்தாள். </p>
<p>   ஷ்ரத்தாவின் கைகளில் அணிவிக்க கீர்த்தனா தயங்க, ஜெயிலர் பெண்மணியோ "அட இதுக்கெல்லாம் அமங்கலி சுமங்கலினு யோசிப்பிங்களா? பூவும் பொட்டும் நாம பிறந்ததிலருந்து வச்சிட்டு வர்றோம். நீங்க போடுங்கம்மா" என்று ஊக்கினார்.‌ முதலில் கீர்த்தனா தயங்கி அணிவிக்க வந்தவர், அதன் பின்னே ஷ்ரத்தாவுமே சத்ரியன் இறந்தால் விதவை பெண்ணல்லவா? என்று சிந்தித்தார். சற்று முன் ஜெயிலர் பெண்மணி பேசியது மீண்டும் எண்ணிப்பார்த்தார். பூவும் பொட்டும் நம்ம பிறந்ததிலருந்து வைக்கறோம் என்றாரே. தன்னை வைக்க கூறியது போல, ஷ்ரத்தாவுக்கும் வயது 20 அல்லது 21 இருக்குமா? அவளும் பொட்டு வைப்பதில் தவறென்ன என்று எண்ணி வளைகாப்பு நலங்கு வைக்க ஆரம்பித்தார். </p>
<p>  கீர்த்தனா மனதில் எண்ணங்களை ஒதுக்கி 'கிளிங்... கிளிங்.'. என்ற ஓசையுடன் வளையல்கள் ஒன்றோடொன்று உரசிய சத்தம் அந்த அமைதியான அறையில் இனிமையாக ஒலித்தது.</p>
<p>ஷ்ரத்தாவின் கண்கள் கலங்கின.</p>
<p>"நான்... இதையெல்லாம் மறுபடியும் அனுபவிப்பேன்னு நினைக்கலம்மா..." என்று உடைந்த குரலில் சொன்னாள்.</p>
<p>கீர்த்தனா அவளது தலையை வருடினார்.</p>
<p>"சந்தோஷமா இரு. குழந்தை நல்லபடியா பிறக்கணும். இதெல்லாம் உன்னை விட உன் குழந்தைக்கு தான்." என்றார்.‌</p>
<p>அருகில் இருந்த ஒரு பெண் காவலர் சிரித்தபடி,</p>
<p>"மேடம்... சந்தனமும் குங்குமமும் வச்சிடுங்க..." என்று தட்டை நீட்டினார்.</p>
<p>கீர்த்தனா குங்குமத்தை நெற்றியில் வைத்து, சந்தனத்தை எடுத்து ஷ்ரத்தாவின் கன்னத்தில் பூசினார். </p>
<p>  அங்கிருந்த ரோஜாப்பூவின் உதிரி இதழ்களால் மேலே தலையில் ஆசிர்வாதம் போல தூவினார்.‌</p>
<p>  ஷ்ரத்தா மனமுவந்து ஆசியை ஏற்றவளாக அமர்ந்திருந்தாள். </p>
<p>  அதே போல மற்ற ஜெயிலரும் செய்தார். </p>
<p>அடுத்து கார்த்திகா என்ற பெண் அதிகாரியும்  குங்குமத்தை எடுத்து வைக்கும்போது, அந்த நேரத்தில் ஷ்ரத்தா முகத்தை சற்று குனிந்திட, கார்த்திகா விரலில் இருந்த சிறிதளவு குங்குமம், நெற்றிப் பொட்டுக்கு மேலே வகிட்டில் மெல்ல பதிந்துவிட்டது.</p>
<p>"அடடா..." என்று கீர்த்தனா பதறி விரலை நீட்டினார். அழித்திட எண்ணி கையை உயர்த்தியவர்,</p>
<p>ஒரு கணம் தயங்கி நின்றார்.</p>
<p>அந்தச் சிறிய சிவப்பு கோடு ஏனோ அவருடைய மனதை ஏதோ செய்தது. அவர் எதுவும் பேசாமல் கையை மெதுவாக இறக்கிக் கொண்டார்.</p>
<p>அந்த காட்சியை தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த ருத்ரன்.</p>
<p>எதுவும் சொல்லாமல் தனது மொபைலை மீண்டும் எடுத்தான்.</p>
<p>க்ளிக்... ஒரு புகைப்படம் எடுத்த சப்தம் கேட்டது. ஷ்ரத்தா திரும்பிப் பார்த்தாள்.</p>
<p>"எதுக்கு... போட்டோ எடுத்தீங்க?" என்று கோபமாக கேட்டாள். ருத்ரன் அமைதியாக மொபைலை அவளிடம் நீட்டினான்.</p>
<p>"முதல்ல பாரு." ஷ்ரத்தா திரையை பார்த்தாள்.</p>
<p>"ஏதாவது அப்நார்மலா தெரியுதா?" என்று கேட்டான்.</p>
<p>ஷ்ரத்தா புகைப்படத்தை உற்றுப் பார்த்தாள்.</p>
<p>தன் முகம், கண்ணாடி வளையல்கள், நெற்றிப் பொட்டு</p>
<p>பக்கத்தில் கீர்த்தனா ஆன்ட்டி எல்லாமே இயல்பாகத்தான் இருந்தது.</p>
<p>"எனக்கு எதுவும் தெரியல்லையே" என்று குழப்பமாக தலையசைத்தாள்.</p>
<p>உள்ளுக்குள் மட்டும் 'மறுபடியும் என்னை அவமானப்படுத்த ஏதாவது காரணம் தேடுறாரோ? என்று பதற்றமடைந்தாள்.</p>
<p>"ருத்ரா..." என்று கீர்த்தனா அழைத்தார். அவன் அருகே வந்தான். "என்னடா ஏதாவது பிரச்சனை பண்ணறியா?" என்றார்.‌</p>
<p>"அம்மா... நெற்றி வகிட்டுல..." என்று மொபைலை காட்டி கிசுகிசுத்தான். அப்போது தான் கீர்த்தனாவும் கவனித்தது போல, துடைக்க கையை நீட்டினார்.</p>
<p>ருத்ரன் மெதுவாக சொன்னான்.</p>
<p>"அம்மா... ஜெயிலர் மேடம் தான் குங்குமம் வைக்க சொன்னாங்க. அவங்க முன்னாடியே இப்ப அதை அழிச்சா... ஏதோ தப்பா நினைப்பாங்க இருக்கட்டும் அவங்க தானே சொன்னாங்க. பூவும் பொட்டும் பிறந்ததிலருந்து வைப்பது தானேனு.." கீர்த்தனா குழப்பமாக நின்றார்.</p>
<p>"அப்ப என்ன பண்ண?"</p>
<p>"இப்ப ஒன்னும் பண்ண வேண்டாம்."‌அவன் அமைதியாக அருகிலிருந்த தட்டைக் காட்டினான். </p>
<p>  "அம்மா... பூவும் வாங்கியிருக்கீங்களா." என்று அப்போது தான் கார்த்திகா கேட்க கீர்த்தனா கூடையில் இருப்பதை கவனித்தார்.</p>
<p>வளையல் கடைக்காரர் கொடுத்திருந்த இரண்டு முழம் காகித மல்லிப்பூ அங்கே இருந்தது.</p>
<p>இது என் பக்கத்துல இருந்த பொண்ணு வாங்க விலை கேட்டுச்சு. கடைக்காரர் எனக்கும் சேர்த்து பில் போட்டுட்டாரா?' என்று சிந்தித்தார். </p>
<p>அதற்குள் கார்த்திகா "வாம்மா." என்று ஷ்ரத்தாவின் முடியில் அந்த மல்லிப்பூவை மெதுவாக சூட்டினார். ஷ்ரத்தாவின் கண்கள் மீண்டும் கலங்கின.</p>
<p>அந்த நேரத்தில் தட்டை எடுத்த மற்றொரு பெண் காவலர் தவறுதலாக இடறினார்.</p>
<p>சந்தனமும் குங்குமமும் சிறிது ஷ்ரத்தாவின் வெள்ளைச் சேலையில் சிதறியது.</p>
<p>"சாரி... சாரி..." என்று பதறினார். ஆனால் கீர்த்தனா சிரித்துவிட்டார்.</p>
<p>"பரவாயில்லை மேம்." என்று ஷ்ரத்தா தன் கையாலேயே சந்தனத்தை சற்று சரிசெய்தாள்.</p>
<p>குங்குமமும் ஆங்காங்கே பதிந்திருந்தது.</p>
<p>காகித மல்லிப்பூ, பச்சை சிவப்பு வளையல்கள்,  நெற்றியில் சந்தனம், வெள்ளைச் சேலையில் மஞ்சளும் சிவப்பும் கலந்த நிறங்கள். சில நிமிடங்களுக்கு முன்பு கைதியைப் போல இருந்த ஷ்ரத்தா.</p>
<p>இப்போது எளிமையான சுமங்கலிக் கோலத்தில் மின்னினாள். </p>
<p>"ருத்ரா... நாலைந்து போட்டோ எடுடா நான் எடுத்தா ஷேக் ஆகுது." என்றதும் ருத்ரன் மொபைலை வாங்கினான்.</p>
<p>முதலில் முகத்தை மட்டும் எடுக்க முயன்றான். நலங்கு போல வைத்தவர்களையும் எடுக்க முனையும் பொருட்டு சற்று பின்னால் நின்றான்.</p>
<p>அந்த நேரத்தில் அவன் பார்வை, ஷ்ரத்தாவின் நிறைமாத வயிற்றின் மீது நின்றது.</p>
<p>அறியாமலேயே, அந்த வயிற்றையும் சேர்த்து புகைப்படம் பதிவு ஆனது.</p>
<p>அதைப் பார்த்தவனே ஒரு நொடி அமைதியாக நின்றான்.</p>
<p>அந்தப் படத்தில் ஒரு குற்றவாளியாக ஷ்ரத்தா தெரியவில்லை.</p>
<p>ஒரு கர்ப்பிணித் தாய் மட்டுமே அவன் கண்ணுக்கு தெரிந்தாள். மேலும் அவனுக்கு தோன்றிய உணர்வை உடனே மனதுக்குள் புதைத்துவிட்டு, "அம்மா... நான் வெளியே இருக்கேன்..." என்று திரும்பி நடந்தான்.</p>
<p>அதே நேரத்தில் எதிரே வேகமாக நடந்து வந்தான் அட்வகேட் யதுநந்தன்.</p>
<p>ருத்ரனை பார்த்ததும் அவன் நடை நின்றது. முதலில் பேசியது யதுநந்தன் தான். "கோர்ட் ஆர்டர் வாங்கின பிறகும் இங்க வந்திருக்கீங்களா?" என்றதும் ருத்ரன் சிரித்தான்.</p>
<p>"நான் அதிகாரியா வரலை. என் அம்மா கூட வந்திருக்கேன்." என்றான் தெனாவட்டாக.</p>
<p>"பொய் சொல்லாதிங்க. இந்த பொய்யை கோர்ட்டும் கேட்காது." என்றார் யதுநந்தன். </p>
<p>"கேட்காட்டி போகட்டும்."</p>
<p>ருத்ரன் ஒரு அடி முன்னே வந்தான்.</p>
<p>"உங்க கிளையண்டை நான் இன்னிக்கு விசாரிக்கலை. அதான் உண்மை" என்றான்.‌</p>
<p>"அதை நான் பார்த்துக்கறேன்." என்றார் யதுநந்தன். </p>
<p>"வேணும்னா நீங்களே போய் கேளுங்க." என்றான் ருத்ரன்.</p>
<p>யதுநந்தன் குரல் கொஞ்சம் கடினமானது.</p>
<p>"என் கிளையண்ட் ஏழு மாத கர்ப்பிணி. தீர்ப்பு வந்த பிறகும் வாரம் வாரம் வந்து மனஅழுத்தம் கொடுக்கிறதை சட்டம் அனுமதிக்காது. அதோட அவங்க வயிற்றில் வளருற குழந்தைக்கும் பாதிக்கும்" என்றதும் ருத்ரன் சிரிப்பை நிறுத்தினான்.</p>
<p>"நீங்க ஷ்ரத்தா மீது ரொம்ப அக்கறை காட்டுறீங்க மிஸ்டர் யதுநந்தன்" என்றான். </p>
<p>"அது என் வேலை. கடமை அதனால உங்களுக்கு என்ன?" என்றான் யதுநந்தன்.</p>
<p>"வேலையா... கடமையா.. இல்ல வேற ஏதாவது காரணமா?"</p>
<p>யதுநந்தன் நேராக அவன் கண்களை பார்த்தான்.</p>
<p>"வேற காரணம்னா.. வாட் யூ மீன். நான் ஷ்ரத்தாவை காண வருவதும், பாதுகாப்பாக அவங்களுக்காக யோசிப்பதற்கும் யார்கிட்டயும் விளக்கம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை." என்றான் யதுநந்தன். பிறவியிலேயே யதுநந்தன் அமைதியான சுபாவம் கொண்டவன். ஆனால் அவன் குரல் ருத்ரனிடம் அதிகபட்ச கோபக்காரனின் அனலே வீசியது.</p>
<p>ருத்ரன் கைகளை  கட்டிக் கொண்டான். "லாயர் திவாகர் சாரோட பொண்ணு என்பதால கேஸுக்காக வாதாடினிங்க. அது முடிஞ்சு பல நாளாச்சு. இன்னும் ஒரு கைதிக்காக இவ்வளவு ஓடுறது... கொஞ்சம் ஓவரா தெரியலையா? அப்ப என்னனு சொல்லறதாம்" என்றதும் யதுநந்தன் சிரித்தான்.</p>
<p>"நேர்மையான மனிதர்களுக்கு கடமைன்னு ஒரு வார்த்தை இருக்கு இன்ஸ்பெக்டர். அதோட ஷ்ரத்தாவை பற்றி யோசிக்க இங்க நான் ஒருத்தன் இருக்கேன். தேவையில்லாம வார்த்தை விடாம இருப்பது உங்களுக்கு நல்லது"</p>
<p>"அது எல்லாருக்கும் புரியாது."</p>
<p>ருத்ரனின் புருவம் சுருங்கியது.</p>
<p>"என்ன சொல்ல வர்றீங்க? ஒரு கர்ப்பிணிப் பெண்ணை குற்றவாளின்னு தீர்ப்பு வந்த பிறகும் தினமும் வந்து கேள்வி கேட்டு மனசை உடைக்கிறதுக்கு பதிலா... சட்டப்படி பாதுகாக்கறது தான் நான் செய்தது. உங்களோட அப்பா இறந்ததுக்கு நீங்க இவங்க மேல கோபமா சுத்தறதும் வதைக்கறதும் தடுக்கறேன்னு  உங்களுக்கு என் மேலயும் கோபமா இருக்கு." என்றார்.</p>
<p>ருத்ரனோ "நீங்க ஒன்னுமில்லாத விஷயத்துக்கு மனு போட்டீங்க. ஒரு போலீஸ் அதிகாரியோட வேலையை தடுக்க பிளான் பண்ணறிங்க." என்றான்.</p>
<p>  "எது.. வாரம் வாரம் நாள் தவறாம வந்து என் கிளையண்டிடம் ஏதாவது பேசி அழவச்சிட்டு போறது தான் உங்க வேலையா.?" என்று யதுநந்தன் வார்த்தைகளை அழுத்தமாக உச்சரித்தான்.</p>
<p>ருத்ரனோ "என் விசாரணை இன்னும் முடியலை. அது கோர்ட்டுக்கும் தெரியும். சத்ரியன் கேஸ்ல இன்னும் நிறைய கேள்விகள் இருக்கு." என்றான்.</p>
<p>  யதுநந்தனோ "அதுக்காக சட்டத்தை மீற முடியாது." என்றார் அவரும். </p>
<p>"நான் ஒரு நாள் உண்மையை கண்டுபிடிப்பேன்." என்று ருத்ரன் ஆக்ரோஷமாய் கூற "நானும் அதைத்தான் விரும்புறேன்." என்று யதுநந்தன் அமைதியாகச் சொன்னான்.</p>
<p>மேலும் "ஆனா அந்த உண்மையை தேடுற பேர்ல ஒரு கர்ப்பிணிப் பெண்ணோட மனநிம்மதியை அழிக்கக்கூடாது. இப்ப அவங்களுக்கு தேவை மனநிம்மதி. பிரசவ காலத்தில் ஏற்படுற உடல்நிலை மாற்றமே அவங்களால் அக்சப்ட் பண்ண நேரமெடுக்கும். இதுக்கு நடுவுல உங்களை கண்டதும் வர்ற பிரஷர் பீபி, தேவையில்லாம எக்ஸ்ட்ரா உடல்நிலையை கெடுக்கும். ஏன்னா நீங்க இருந்தாலே ஷ்ரத்தா பதட்டமாகறாங்க" என்றதும்</p>
<p>இருவரின் பார்வையும் மோதியது.</p>
<p>அந்த நேரத்தில் உள்ளிருந்து ஷ்ரத்தாவின் குரல் கேட்டது.</p>
<p>"யது சார்..." இருவரும் திரும்பிப் பார்த்தனர்.</p>
<p>வளையல் அணிந்து, காகித மல்லிப்பூ சூடி, சந்தனமும் குங்குமமும் பூசி, வெள்ளைச் சேலையில் மஞ்சளும் சிவப்பும் கலந்திருந்த ஷ்ரத்தாவைப் பார்த்ததும், யதுநந்தன் சில நொடிகள் பேச முடியாமல் மெய்மறந்து நின்றான்.</p>
<p>அவனது பார்வையில் ஆச்சரியமும் நிம்மதியும் மட்டுமே இருந்தது.</p>
<p>அதைப் பார்த்த ருத்ரன் ஷ்ரத்தாவிடம் "சத்ரியன் இல்லன்னா கூட,  உன்னை  பாதுகாக்க யாராவது வந்துடறாங்க போல...." என்று கிண்டலாக சொல்லிவிட்டு, அவள் முகம் சுணங்க, உற்றுப் பார்த்தான்.</p>
<p>கீர்த்தனாவோ "அம்மாடி.. நாங்க அப்ப கிளம்பறோம். நீ உடலை கவனிச்சிக்கோ.. ருத்ரா.. வா போகலாம்" என்று மகனை இழுத்து சென்றார். ருத்ரன் வேண்டுமென்றே சண்டையிடுவதை தவிர்த்தார் எனலாம்</p>
<p>  யதுநந்தன் ருத்ரனை கண்டு ஷ்ரத்தாவிடம், "இப்படி உங்களை பார்க்க ரொம்ப அழகாயிருக்கு." என்று பாராட்டினான்.‌</p>
<p>ஷ்ரத்தாவோ "இந்த சந்தோஷத்துக்கு எல்லாம் காரணம் கீர்த்தனா ஆன்ட்டி. " என்று கூறினார்.‌</p>
<p>"யூ மீன்.. ருத்ரனோட அம்மாவா?" என்று யதுநந்தன் கேட்டான். </p>
<p>ஆமோதிப்பதாக ஷ்ரத்தா தலையாட்டி, "அங்கிள் இறந்தநாளுக்கு உணவு வினியோகிச்சாங்க. அப்ப வளையல் போட்டு சின்னதா வளைகாப்பு நடத்துவதா சொல்விட்டு போனாங்க. இன்னிக்கு வந்து அந்த வாக்கை நிறைவேத்தினாங்க." என்று விவரித்தாள்.‌</p>
<p>  "ஆனா.. இந்த ருத்ரன் உங்களை ரொம்ப எரிச்சல்படுத்தறதா கேள்விப்பட்டு தான் கோர்ட்டில் மனு எழுதி போட்டேன். இனி அவர் அடிக்கடி வரக்கூடாதுனு. அதை மீறி வந்திருக்காரேனு கத்தினேன். ஒரு மார்க்கமா பேசிட்டு போறார்." என்று கூறினான். </p>
<p>  சத்ரியன் இல்லைன்னா யதுநந்தன் வந்து பராமரிப்பதாக அல்லவா பேசிவிட்டு சென்றான். </p>
<p>  "அவர் பேசியதை மனசுல வச்சிக்காதிங்க யதுநந்தன். சில உண்மைகள் தெரிய வந்தா.. ஏன் பேசினோம்னு வருத்தப்படலாம்." என்று பூடகமாக பேசினாள். </p>
<p>  'இந்த நிமிஷம் எனக்கொரு அம்மா கூடவே இருந்திருக்கலாம்னு தோணுதுங்க." என்றதும் ஷ்ரத்தா ஏன் என்பது போல பார்க்க, "அவங்களை அழைச்சிட்டு வந்து உங்களுக்கு வளைகாப்பு நடத்திருப்பேன்.‌" என்று கூற, ஷ்ரத்தாவோ ''என்ன மாதிரி சிறைக்குள் சுத்திட்டு இருக்கற ஆளுக்கு இதெல்லாம் குறைச்சல்." என்று கையை தூக்க, கண்ணாடி வளையல் சப்தமிட்டது. </p>
<p>  "உண்மையிலேயே திவாகர் சார் இருந்தா உங்க ரேஞ்சே வேறங்க. அவருக்கும் இப்ப தான் நினைவு நாள் போச்சுல?" என்றவன் துக்கம் தொண்டையை அடைக்க, </p>
<p>  "ஆனாலும் இந்த கோலம் ரொம்ப அழகாயிருக்கு. இங்க ருத்ரன் வந்ததா கேள்விப்பட்டதும் ஓடி வந்துட்டேன். எனிவே.. குழந்தை நல்லபடியா பிறக்க வாழ்த்துகள்‌. யார் கண்டா சாரே உங்க வயிற்றில் பிறக்கலாம்" என்றான்.‌</p>
<p>  அதற்குள் போன் அடிக்கவும், யதுநந்தன் 'பச்.. ஒரு கிளையெண்ட் வர்றதா சொன்னாங்க. அதை மறந்து இங்க ஓடி வந்துட்டேன்.‌ சாரி ஷ்ரத்தா நான் அவசரமா போறேன். மன்னிச்சிடுங்க... நான் தான் போறேன். நினைவு எல்லாம் இன்னிக்கு இங்க தான் சுற்றும்." என்று புறப்பட்டான்.  </p>
<p>   ஷ்ரத்தாவோ 'அப்ப.. இங்க இவரும் ஏதோ ஒரு ஸ்பையை வச்சியிருக்கார்.‌ ருத்ரன் வர்றது எப்படியாவது அவருக்கு தெரியுது. ஒருவேளை தந்தையோட வழில இவர் அணுகினா 126 குழந்தைகளை பத்தி நான் இவரிடம் உலறுவேன்னு யாராவது முயற்சிக்கறாங்களா? ஏற்கனவே வாய்தவறி ருத்ரனிடம் உலற வந்தேன். அவர் அதே கவனிச்சாரா தெரியலை. இப்ப யதுநந்தன் அப்பாவோட ஜீனியர் என்றதால இவரிடம் உலறிடக்கூடாது. எதுனாலும் வினோத் அண்ணா வரட்டும். நம்பிக்கையான உறவுன்னா.. இப்ப வினோத் அண்ணா மட்டும் தான். ஆனா யதுநந்தனுக்கு அப்பாவோட நினைவு நாள் வரை நினைவில் வச்சி பழகறார். அவரு</p>
<p>க்கு அப்பா மேல ரொம்ப மரியாதை இருக்கும் போல. அப்பா இவரை போல நல்ல மனிதரையும் பெற்றிருப்பது சந்தோஷமா இருக்கு‌' என்றவள் கைகள் வளையலில் அகமகிழ்ந்து போனாள். </p>
<p>-தொடரும்.</p>
<p>-பிரவீணா தங்கராஜ்</p>
<p>&nbsp;</p>]]></content:encoded>
						                            <category domain="https://onlinetamilnovels.com/community/%e0%ae%a4%e0%ae%95%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%b5%e0%af%8a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-praveena-thangaraj/">தகிக்கும் நிலவொன்று -Praveena Thangaraj</category>                        <dc:creator>Praveena Thangaraj</dc:creator>
                        <guid isPermaLink="true">https://onlinetamilnovels.com/community/%e0%ae%a4%e0%ae%95%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%b5%e0%af%8a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-praveena-thangaraj/%e0%ae%a4%e0%ae%95%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%b5%e0%af%8a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-9/</guid>
                    </item>
				                    <item>
                        <title>தகிக்கும் நிலவொன்று-8</title>
                        <link>https://onlinetamilnovels.com/community/%e0%ae%a4%e0%ae%95%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%b5%e0%af%8a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-praveena-thangaraj/%e0%ae%a4%e0%ae%95%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%b5%e0%af%8a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-8/</link>
                        <pubDate>Sat, 18 Jul 2026 00:49:10 +0000</pubDate>
                        <description><![CDATA[அத்தியாயம்-8
இரண்டு நாட்கள் கழித்து ருத்ரனுக்கு நிரோஷின் எண்ணும் கிடைத்தது.
  உடனே அவனை தொடர்பு கொண்டான் &#039;ஹலோ... நிரோஷா?&quot; என்றான்.
&quot;எஸ் சார்... நான் நிரோஷ் பேசுறேன்.&quot;
&quot;நான் இன்ஸ்பெக்டர் ...]]></description>
                        <content:encoded><![CDATA[<p>அத்தியாயம்-8</p>
<p>இரண்டு நாட்கள் கழித்து ருத்ரனுக்கு நிரோஷின் எண்ணும் கிடைத்தது.</p>
<p>  உடனே அவனை தொடர்பு கொண்டான் 'ஹலோ... நிரோஷா?" என்றான்.</p>
<p>"எஸ் சார்... நான் நிரோஷ் பேசுறேன்."</p>
<p>"நான் இன்ஸ்பெக்டர் ருத்ரன்."</p>
<p>என்றதும் மறுமுனையில் சில நொடிகள் அமைதி நிலவியது.</p>
<p>"சொல்லுங்க சார்..." என்றான்‌ நிரோஷ். </p>
<p>"உங்களை சந்திச்சு சில விஷயம் பேசணும். பார்க்க முடியுமா?" என்று கேட்க, நிரோஷ் தயங்கிவிட்டு சரி என்றான். </p>
<p>   ஷ்ரத்தா படித்த கல்லூரியில் பைனல் இயர் படித்துக் கொண்டிருக்க, மப்டியில் ருத்ரன் வந்திருந்தான். </p>
<p>  நிரோஷிற்கு லேசான பதட்டமிருந்தாலும் மிக இயல்பாக உன்னை பார்க்க வந்த உறவினராக பார்த்து செல்கின்றேன். பதட்டமோ பயமே வேண்டாமென்று ருத்ரன் கூறியிருந்தான். </p>
<p>அதனால் நிரோஷ் பவ்யமாக கேன்டீனில் அமர்ந்திருக்க ருத்ரன் அவன் முன் இருந்தான். </p>
<p>"சத்ரியனைப் பற்றி சில விஷயங்கள் கேட்கணும்." என்று நேரிடையாக ருத்ரன் ஆரம்பிக்க, நிரோஷ் ஆழமாக மூச்சை இழுத்தான்.</p>
<p>"சார்... உண்மையை சொல்லணும்னா... எனக்கு சத்ரியன் சாரைப் பற்றி பெருசா எதுவும் தெரியாது.</p>
<p>காலேஜ்ல நான் ஷ்ரத்தாவை ஒன் சைடா விரும்பினேன்.</p>
<p>அதனால அவங்க பின்னாடி சுத்திக்கிட்டு இருந்தேன்.</p>
<p>ஒருநாள் ஜான் அண்ணா அவங்களை தொந்தரவு பண்ணியது சத்ரியன் சார் கவனத்துல விழுந்து, எங்கிருந்தோ வந்தார்.</p>
<p>ஒரே இழுப்புல ஜானை கீழே தள்ளி அடிச்சது இன்னைக்கும் என் கண்ணுல இருக்கு சார்."</p>
<p>ருத்ரனின் புருவம் உயர்ந்தது.</p>
<p>"நான் கூட அதை மறைந்திருந்து வீடியோ எடுத்தேன் சார். பயந்து போய் அப்பறம் டெலிட் பண்ணிட்டேன். அதுக்கப்புறம் எனக்கு விழ வேண்டிய அடின்னு என் பிரெண்ட்ஸ் கூட கிண்டல் பண்ணி சொன்னாங்க. </p>
<p>  ஆனா... ஷ்ரத்தா ஆர்டர் செய்த உணவை அவ கேன்சல் செய்தப்பிறகு நான்தான் சாப்பிட்டுட்டேன்.</p>
<p>அதனால ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆனேன். ஷ்ரத்தாவை அப்பவே பாடிகார்ட்ஸ் அழைச்சிட்டு கிளம்பிட்டாங்க.  இன்பெக்ட் நான் உயிருக்கு போராடி ஹாஸ்பிடல்ல இருந்தது ஷ்ரத்தாவுக்கு தெரியவும்</p>
<p>  ஷ்ரத்தா அதுக்கு சத்ரியன் சாரிடம் அழுது, என்னை பார்க்க வந்தா" என்றதும், </p>
<p>"ஷ்ரத்தா உன்னை பார்க்க வந்தாளா?" என்று கண்கள் ஈடுங்க கேட்டான்.‌</p>
<p>"வந்தாங்க சார். சத்ரியன் சார் கூடத்தான் வந்தாங்க." ருத்ரன் உட்கார்ந்திருந்த விதமே மாறியது.</p>
<p>"ஏன்.. உன்னை பார்க்க வந்தா அதுவும் சத்ரியனே கூட்டிட்டு வந்தான்?" என்று கேட்க, "முதல்ல ஷ்ரத்தாவுக்கு என்‌மேல சாப்ட் கார்னர் இருக்கும். அதனால வந்தானு நினைச்சேன் சார்." என்றதும் ருத்ரன் பல்லை கடிக்கும் சத்தம் கேட்டிருக்க மாட்டான் நிரோஷ்.</p>
<p>  "ஆனா அது அப்படியில்லை.. ஒரு உயிர் என்னால சாகற வரை போகுதுனு துடிச்சு போய் வந்ததா ஷ்ரத்தா சொன்னா." என்றான் சோகமாக. </p>
<p>  "வேற ஏதாவது சத்ரியன் ஆக்டிவிட்டிஸ் வித்தியாசமா இருந்ததா?" என்று கேட்க, "இல்லை சார்.. எரிச்சலோட ஹாஸ்பிடலில் ஸ்மோக் பண்ணிட்டு இருந்தார் ஆங்... ஒரு விஷயம் மட்டும் ஞாபகம் இருக்கு சார்.</p>
<p>சத்ரியன் சார் ஹாஸ்பிடல் வெளியே நின்னு சிகரெட் பிடிச்சிட்டிருந்தார்.</p>
<p>அதுக்கு ஸ்டெல்லானு ஒரு நர்ஸ் ரொம்ப திட்டினாங்க. அங்கிருப்பது சத்ரியன் என்று தெரிந்ததுக்கு அப்புறம் ஸ்டெல்லா நர்ஸ் அவர்கிட்ட தனியா ஏதோ ரகசியமா பேசினாங்கன்னு மத்த நர்ஸ்கள் பேசிக்கிட்டிருந்தாங்க."</p>
<p>ருத்ரன் வேகமாக மனமெனும் நோட்டில் குறித்துக் கொண்டான்.</p>
<p>"வேற?" என்றான்.‌</p>
<p>"அவ்வளவுதான் சார்.</p>
<p>அதுக்கப்புறம் சத்ரியன் சாரை நான் பார்த்ததே இல்ல. ஷ்ரத்தா அவரை காதலிக்கிறாங்கன்னு எனக்கு அப்புறம் தான் தெரிஞ்சது. அதை தெரிஞ்சதும் நான் மொத்தமா ஒதுங்கிட்டேன்.</p>
<p>   மலையோட மோத முடியுமா? ஷ்ரத்தாவை அதுக்குபிறகும் நான் நேசிக்கறதா இருந்தா 'செத்த உடலுக்கும் உயிர் வந்து சாகடிக்க வந்து நிற்க மாட்டார்." என்றதும் ருத்ரனோ அடக்கப்பட்ட கோவத்துடன், 'செத்ததுக்கு பிறகும் வருவானா' என்று ஏளனமாக இருந்தான்.</p>
<p>  "அவங்களும் அதுக்கப்புறம் யார்கிட்டயும் சரியா பேசவே இல்ல. எப்பவும் சோகமாவே இருப்பா. உண்மையிலேயே...</p>
<p>ஷ்ரத்தா சத்ரியன் சாரை கொன்னாங்கன்னு கேட்டப்ப...</p>
<p>எனக்கே அதிர்ச்சிதான் சார்." ருத்ரன் கண்களை மூடிக் கொண்டான். சத்ரியன் புராணம் அவனுக்கு கேட்பதற்கே சலிப்பானது. </p>
<p>மீண்டும் வெறும் கைகளே விடையாக கிடைத்த உணர்வு. </p>
<p>"தேங்க்ஸ்." என்று மட்டும் கூறி கிளம்பினான்.</p>
<p>காருக்குள் ஏறி அமைதியாக அமர்ந்தான். டிரைவர் சேகர் ரியர் மிரரில் ருத்ரன் முகத்தை பார்த்தான்.</p>
<p>"என்னாச்சு சார்? ரொம்ப டல்லா இருக்கீங்க." ருத்ரன் சோர்வாக சிரித்தான்.</p>
<p>"எங்க போனாலும்... ஒரு முட்டு வந்துடுது சேகர். ஒருத்தன்கிட்ட ஒரு க்ளு கிடைக்கும்னு நினைச்சா... அவனும் 'எனக்கு எதுவும் தெரியாது'ன்னுதான் சொல்றான்." சேகர் காரை மெதுவாக இயக்கினான்.</p>
<p>"விடுங்க சார். ஒருநாள் இல்ல ஒருநாள்... ஏதாவது க்ளு கிடைக்கும்." சில நொடிகள் கழித்து டிரைவரே கேட்டான்.</p>
<p>"சார் உண்மையாவே கிங்பின் சத்ரியன் உயிரோட இருக்கார்னு நம்பறீங்களா?" என்றதும், ருத்ரன் ஜன்னல் வழியே வெளியே பார்த்தான்.</p>
<p>"தெரியல சேகர்... என் கண்ணால... அவன் உடலை பார்த்தேன். ரத்தம் வெள்ளத்தில, புகை மண்டலத்துல.. அவன் செத்தொழிந்ததா பார்த்தேன்.</p>
<p>ஆனா... மனசு மட்டும்... 'இது முடிவு இல்ல'ன்னு சொல்லிக்கிட்டே இருக்கு." என்றதும் சேகர் யோசித்தான்.</p>
<p>"சார்... ஒருவேளை அவர் உயிரோட இருந்தா... ஏன் உலகத்துக்கே செத்துட்டதா நம்ப வைக்கணும்?" ருத்ரன் மெதுவாக தலையசைத்தான்.</p>
<p>"அதுக்குத்தான் பதில் கிடைக்கலை. ஆமா அன்னிக்கு செய்தியாளரா வேஷம் போட்டு உன்னை கூட்டிட்டு போனா நீ என்ன நிஜமான செய்தியாளரா கேள்வி கேட்கற" என்றதும் "சாரி சார்" என்றான் சேகர். </p>
<p> காருக்குள் மீண்டும் அமைதி.</p>
<p>ருத்ரனின் எண்ணம் ஷ்ரத்தாவிடம் சென்றது.</p>
<p>'அவளை அழுத்தி விசாரிச்சா... உண்மை சொல்ல வாய்ப்பு இருக்கு. ஆனா சத்ரியனுக்காக உயிரையே கொடுக்க தயாரா இருக்கிறவ... உண்மையை மட்டும் சொல்லிடுவாளா? அதே பல்லவி பாடுவா.' என்று </p>
<p>அவனுக்கே பதில் தெரிந்திருந்தது.</p>
<p>"ச்சே..." என்று எரிச்சலுடன் இடது கையை பார்த்தான்.</p>
<p>இன்னும் முழுமையாக குணமாகவில்லை. 'இந்த கை வேற... இப்பவே ஜானை நேர்ல போய் விசாரிக்கணும்னு தோணுது. பைக்கே எடுத்துட்டு போக முடியல.' அவன் பற்களை கடித்தான்.</p>
<p>அந்த நேரம் இரண்டு நாட்களுக்கு முன்பு ஷ்ரத்தா உளறிய வார்த்தை மீண்டும் நினைவுக்கு வந்தது.</p>
<p>'என் சத்ரியன்... 126 குழந்தைகளை.' அதற்குப் பிறகு அவள் அமைதியாகி விட்டாள்.</p>
<p>'126 குழந்தைகளா? என்ன அர்த்தம்? அது ஏதாவது கேஸா? இல்ல... வேற ஏதாவது ரகசியமா?' என்று மனதிற்குள்  முணுமுணுத்தபடி நகத்தை கடித்தான். </p>
<p>அதே நேரத்தில் ஜானும் இன்னும் இரண்டு நாட்களில் சென்னை வருவதாக தகவல் வந்திருந்தது.</p>
<p>'ஜானாவது ஒரு துருப்பு கொடுக்கணும்.' என்று மனதிற்குள் வேண்டிக் கொண்டான் ருத்ரன்.</p>
<p>   இரண்டு நாட்கள் கழித்து...</p>
<p>     மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம்.</p>
<p>ருத்ரன் தன் மேசையில் இருந்த கோப்புகளை புரட்டிக் கொண்டிருந்தான்.</p>
<p>அப்போது ஒரு கான்ஸ்டபிள் உள்ளே வந்தான். "சார்... கோர்ட்டிலிருந்து ஆர்டர் வந்திருக்கு." ருத்ரன் கோப்பை வாங்கிப் புரட்டினான்.</p>
<p>முதல் வரியைப் படித்ததும் அவன் புருவம் சுருங்கியது.</p>
<p>'மனுதாரர்-அட்வகேட் யதுநந்தன்.' என்று போட்டிருக்க, அடுத்தடுத்த வரிகளைப் படிக்கப் படிக்க... ருத்ரன் முகம் இறுகியது.</p>
<p>'கைதி ஷ்ரத்தா ஏழு மாத கர்ப்பிணி. தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னரும் இன்ஸ்பெக்டர் ருத்ரன் அடிக்கடி சிறைச்சாலைக்கு வந்து என் கட்சிக்காரருக்கு மனஅழுத்தம் கொடுத்து வருகிறார். குழந்தை பிறக்கும் வரையில் தேவையற்ற நேரடி விசாரணைக்கு தடை விதிக்க வேண்டுமென விண்ணப்பித்து இருப்பான் போல. </p>
<p>கடைசி பக்கத்தைப் பார்த்தான்.</p>
<p>நீதிமன்ற உத்தரவும் இருந்தது. </p>
<p>'அவசர விசாரணை இல்லாத பட்சத்தில் கைதி ஷ்ரத்தாவை நேரடியாக சந்தித்து விசாரணை நடத்தக் கூடாது. விசாரணை அவசியமெனில் நீதிமன்ற அனுமதியுடனும் சிறை அதிகாரிகள் முன்னிலையிலும் யதுநந்தன் முன்னிலையில்  மட்டுமே நடத்த வேண்டும்." என்றிருக்க கோப்பை படாரென்று மேசையில் போட்டான்.</p>
<p>"டேம் இட்..." என்று பற்களை கடித்தான். 'ஒரு போலீஸ் அதிகாரியையே கோர்ட் கட்டுப்படுத்துதா? என்றவன் நாற்காலியில் இருந்து எழுந்து ஜன்னலருகே சென்றான்.</p>
<p>"யதுநந்தன்..." அவன் பெயரை அழுத்தமாக உச்சரித்தான்.</p>
<p>'இவன் ஏன் ஷ்ரத்தாவை பாதுகாக்கறான்?' அந்த சந்தேகம் மீண்டும் அவனுக்குள் எழுந்தது.</p>
<p>  இதற்காகவே மதுநந்தனை கோபப்படுத்தவே வேண்டுமென்றே ஷ்ரத்தாவை நேரில் சந்திக்க நினைத்தான். ஆனால் கோர்ட் ஆர்டரை தாண்டி, சென்றால் வேலைக்கு வேட்டும் வைத்திட வாய்ப்புண்டு என்று காரணம் ஏதவாது தேடினான்.  </p>
<p>அந்த மாலை வீட்டிற்கு வந்தான். அவனுக்கு ஏற்றது போல சமயம் கிடைத்தது. </p>
<p>சோபாவில் அமைதியாக அமர்ந்திருந்த கீர்த்தனா அவனை பார்த்தார்.</p>
<p>"ருத்ரா..." என்று கீர்த்தனா அழைக்க, </p>
<p>"என்னம்மா?"</p>
<p>"நாளைக்கு அந்த பொண்ணுக்கு வளையல் வாங்கப் போகணும்' என்றதும் ருத்ரன் நிமிர்ந்து பார்த்தான்.</p>
<p>"யாருக்கு?" என்றான். வளையல் என்றதுமே அது இவன் நெஞ்சில் குடையும் ஷ்ரத்தாவுக்கு என்று கணித்துவிட்டான். </p>
<p>"ஷ்ரத்தாவுக்கு." என்று கீர்த்தனா கூறவும் அவன் முகமே மாறியது.</p>
<p>"அம்மா... இன்னும் அதையே நினைச்சிட்டு இருக்கீங்களா?அதெல்லாம் வேண்டாம்மா..." என்று சொல்லியிருந்தாலும், மனம் வேறு ஒரு கணக்கை போடத் தொடங்கியது.</p>
<p>"நான் வாக்கு கொடுத்துட்டேன் ருத்ரா." அமைதியாகச் சொன்னார்.</p>
<p>"வாக்கு கொடுத்தா... கண்டிப்பா போகணுமா?" என்று கேட்க, </p>
<p>"வாக்கை காப்பாத்தணும்</p>
<p>அவ்வளவு தான்." என்று கூற, ருத்ரன் எரிச்சலாகச் சிரித்தான்.</p>
<p>"அவ... சத்ரியனோட காதலிம்மா. அதோட அவளை அடிக்கடி சந்திச்சு விசாரணை செய்ய கூடாதுனு கோர்ட்ல எனக்கு ஆர்டர் வந்திருக்கு. " கீர்த்தனா மெதுவாக மகனை பார்த்தார்.</p>
<p>"சத்ரியன் மனைவினு எனக்கும் தெரியும்." என்றார்.</p>
<p>"அப்புறமும் போனா என்ன அர்த்தம்?" என்றான்.</p>
<p>"அவ ஒரு கர்ப்பிணிடா." ஒரே வரியில் பதில் வந்தது.</p>
<p>"அவளுக்கு இப்ப தேவை... அன்பு... தண்டனைக்கான தீர்ப்பு இல்லை." ருத்ரன் அமைதியாக நின்றான்.</p>
<p>கீர்த்தனா மீண்டும் சொன்னார். "நான் தனியா போயிடுறேன்." என்றார்.</p>
<p>"இல்ல. நானும் வர்றேன்" என்று ருத்ரன் உடனே மறுத்தான்.</p>
<p>"நான் கூட்டிட்டு போறேன்." கீர்த்தனா அவனை ஆச்சரியமாக பார்த்தார்.</p>
<p>"கோர்ட் என்னை அவளை விசாரிக்கக் கூடாதுன்னுதான் சொல்லிருக்கு.</p>
<p>உங்களை கூட்டிட்டு போகக்கூடாதுன்னு சொல்லலை." என்றவன் உதட்டில் மெல்லிய சிரிப்பு.</p>
<p>"நீங்க வளையல் போடுங்க...</p>
<p>நான் வெளியில இருப்பேன்."</p>
<p>அதை கேட்ட கீர்த்தனா எதுவும் பேசவில்லை.</p>
<p>மகன் மனதில் இன்னும் ஏதோ ஓடிக் கொண்டிருப்பது மட்டும் புரிந்தது.</p>
<p>அடுத்த நாள் கீர்த்தனா நகரத்தில் இருக்கும் வளையல் கடைக்குச் சென்றார்.</p>
<p>பச்சை, சிவப்பு கண்ணாடி வளையல்களை தேர்ந்தெடுத்தார்.</p>
<p>"கர்ப்பிணி பொண்ணுக்கு இதுதான் நல்லா இருக்கும்." என்று கடைக்காரர் கொடுத்தவற்றை எல்லாம் வாங்கினார்.</p>
<p>பூ, மஞ்சள், குங்குமம், சந்தனம், எல்லாவற்றையும் கேளாமலேயே வளைகாப்பு விழாவிற்கென வைத்தார் கடைக்காரர்.</p>
<p>வீட்டிற்கு வந்ததும் தன் கையால் ஐந்து வகை சாதங்களை சமைத்தார்.</p>
<p>எலுமிச்சை சாதம், தேங்காய் சாதம், தயிர் சாதம், புளியோதரை, சர்க்கரை பொங்கல் ஒவ்வொன்றையும் தனித்தனியாக பாத்திரங்களில் அடுக்கினார்.</p>
<p>அவற்றைப் பார்த்த ருத்ரன்</p>
<p>எதுவும் பேசாமல் நின்றிருந்தான்.</p>
<p>காலையில் அனுமதி பெற்று ரீத்ரனும் கீர்த்தனாவும் மத்திய சிறைச்சாலைக்குள் நுழைந்தனர்.</p>
<p>வாசலில் ஜெயிலர் வரவேற்றார்.</p>
<p>"வாங்க மேடம். எல்லா ஏற்பாடும் பண்ணிட்டோம்." கீர்த்தனா நன்றி கூறினார்.</p>
<p>பெண் கைதிகள் இருக்கும் பகுதியின் சிறிய மண்டபத்தில்,</p>
<p>ஒரு நாற்காலி மட்டும் போடப்பட்டிருந்தது.</p>
<p>அங்கே ஷ்ரத்தாவை அழைத்து வந்தனர். அவள் ஆச்சரியமாக சுற்றிப் பார்த்தாள். அவளுக்கு  இது சொல்லாமல் ஆச்சரியமூட்ட நினைத்தனர்.‌</p>
<p>"என்ன மேடம்?" என்று ஜெயிலரிடம் கேட்டாள். கீர்த்தனா தோளில் கையை வைத்து புன்னகைத்தார்.</p>
<p>"நான் வாக்கு கொடுத்தேன்லம்மா." என்றதும் </p>
<p>ஷ்ரத்தாவின் கண்கள் கலங்கின.</p>
<p>ருத்ரன் மட்டும், சற்று தள்ளி, கைகளை கட்டிக்கொண்டு அமைதியாக நின்றிருந்தான்.</p>
<p>அவள் முகத்தை விட்டு பார்வையை திருப்ப முடியாமல் நின்றான். அது வெறுப்பா விசாரணைக்கான ஆர்வமா? இல்ல மனசுக்கே புரியாத வேறொரு ஈர்ப்பா ருத்ரனுக்கே பதில் தெரியவில்லை.</p>
<p>-தொடரும். </p>
<p>-பிரவீணா தங்கராஜ்</p>
<p>&nbsp;</p>]]></content:encoded>
						                            <category domain="https://onlinetamilnovels.com/community/%e0%ae%a4%e0%ae%95%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%b5%e0%af%8a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-praveena-thangaraj/">தகிக்கும் நிலவொன்று -Praveena Thangaraj</category>                        <dc:creator>Praveena Thangaraj</dc:creator>
                        <guid isPermaLink="true">https://onlinetamilnovels.com/community/%e0%ae%a4%e0%ae%95%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%b5%e0%af%8a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-praveena-thangaraj/%e0%ae%a4%e0%ae%95%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%b5%e0%af%8a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-8/</guid>
                    </item>
							        </channel>
        </rss>
		